Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூலை, 2007

Raman Raja – Triple Play, VOIP, Apple iPhone, Wi-fi: State of the art Technologies

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெட்டில் சுட்டதடா…: மூவாட்டம் என்று ஒரு போராட்டம்!

ராமன் ராஜா

இந்த வாரம் கொஞ்சம் டெக்னாலஜி பேசுவோமா? டெலிகாம் எனப்படுகிற தொலைத் தொடர்புத் துறையில் லேட்டஸ்ட் முன்னேற்றம் என்ன என்று அடிக்கடி என்னிடம் உசாவுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை மழைக்காலக் கொசுக் கூட்டம் மாதிரி பெருகியிருப்பதுதான் ஆச்சர்யமான செய்தி. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் புது செல்போன் வாங்குகிறார்கள். உலகத்திலேயே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் செல்போன் மார்க்கெட் அமெரிக்காவோ, ஜப்பானோ அல்ல; இந்தியாதான்!

சமீபத்தில் மயிலாப்பூர் கோவில் போயிருந்தபோது, குளத்தங்கரையில் பட்டைச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாமியாரின் காவித் துணி மூட்டைக்குள்ளிருந்து சுப்ரபாதம் ரிங் டோன் ஒலித்தது. சாமியார் இடது கையால் மூட்டைக்குள் துழாவி, அருமையான பன்னிரண்டாயிரம் ரூபாய் எரிக்ஸன் போன் ஒன்றை எடுத்துப் பேச ஆரம்பித்தார்; என் பழைய கறுப்பு வெள்ளை நோக்கியா வெட்கித் தலை குனிந்தது.

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாமம் என்னவென்றால் ஆங்கிலத்தில் Convergence என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுவது. தமிழில் குவிப்பு, குவிமம், குவியாட்டம் என்று ஏதாவது வைத்துக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால், இந்நாள் வரை டெலிபோன், டி.வி. கம்ப்யூட்டர் எல்லாம் தனித் தனியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன; இனிமேல் இவை எல்லாமே ஒரே டப்பா வழியாக வரப் போகின்றன. நாம் ஒரே பில்லில் பணம் அழப் போகிறோம். அதுதான் குவிமம். இப்போதே இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குவிய ஆரம்பித்து விட்டதை டெக்னாலஜி ஆர்வலர்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக எட்டணா செல்போன்களில் கூட எஃப்.எம். ரேடியோவும் இருக்கிறது, எம்.பி-3 பாட்டும் கேட்க முடிகிறது. ஒரு அவசரம் என்றால் போட்டோவும் பிடிக்கலாம். அதை உடனே மல்ட்டி மீடியா எஸ்.எம்.எஸ். வழியே யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் என்று அகலமான செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் பயங்கர ஹிட்! ஐ-போனில் பாட்டு, வீடியோ, காமிரா, இண்டர்நெட் எல்லாம் உண்டு; கொசுறாக செல்போனும் பேசிக் கொள்ளலாம். ஆஸ்துமா மீன் வைத்தியத்துக்கு ஹைதராபாத்தில் கூட்டம் கூடுகிற மாதிரி எல்லாரும் கியூ வரிசையில் நின்று வாங்கினார்கள். சட்டைப் பைக்குள் நெட் இணைப்பு இருந்தால் என்னென்ன சாத்தியங்கள் திறக்கின்றன என்று பாருங்கள். செல்போனிலேயே சென்னை தியேட்டர்களின் வலை மனைகளை அலசி, ஸ்ரேயா நடித்த படம் எங்கே ஓடுகிறது என்று தேடலாம். அதிலேயே படத்தின் வீடியோ ட்ரெய்லரை வரவழைத்துப் பார்த்து, கொடுக்கிற காசு செரிக்குமா என்று முடிவு செய்யலாம். ஆம் எனில் ஒரு பட்டனை அழுத்தி டிக்கெட்டை முன் பதிவு செய்துவிட்டு, கடன் அட்டை மூலம் பணமும் செலுத்தலாம். கடைசியில் நண்பர்கள் கேங்கிற்கு “”எல்லாரும் சாயங்காலம் பால் காவடி எடுத்துக்கிட்டு தியேட்டருக்கு வந்துடுங்கப்பா” என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் சுலபம்.

வரும் வருடங்களில் நாம் அதிகம் கேள்விப்படப் போவது, ஐ.பி. ( IP) என்ற ஒரு வி.ஐ.பி. பற்றித்தான். இண்டர்நெட் வழியே கம்ப்யூட்டர்கள் பேசிக் கொள்வதற்காக ஏற்பட்ட சில சுலபமான விதி முறைகளுக்குத்தான் ஐ.பி. என்று பெயர். நெட்டில் இணைக்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும்- அது கம்ப்யூட்டரோ, காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினோ- ஒரு தனிப்பட்ட ஐ.பி. முகவரி தேவை. நம் டெலிபோனுக்கும் ஒரு ஐ.பி. எண் கொடுத்து அதை நெட்டில் இணைத்துவிட்டால் என்ன என்ற கில்லாடி சிந்தனை, பொல்லாத சிலருக்குத் தோன்றிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு “வாய்ப்’ ( VOIP) என்று பெயர். ஆரம்பித்த புதிதில் அசட்டுப் பிசட்டு என்றுதான் இருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் லைன் கட் ஆகிவிடும். அல்லது எதிர்முனையில் பேசுபவரின் குரல்வளைப் பிசையப்படுகிறதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு வெட்டி வெட்டி இழுக்கும். இப்போது மிகவும் உடல் நலம் தேறி, சாதாரண போன் போலவே ஒலிக்கிறது. “வாய்ப்’ அளித்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கைப் போன்ற கம்பெனிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டன. இதில் செüகரியம், நீங்கள் எந்தக் குக்கிராமத்தில் இருந்தாலும் உலகின் எந்த ஊர் டெலிபோன் நம்பரையும் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக சென்னையில், என் அலுவலக மேஜை மேல் இருக்கும் டெலிபோனுக்கு அமெரிக்க நம்பர்தான். அதில் அமெரிக்காவில் யாரைக் கூப்பிட்டாலும் லோக்கல் கால்! பேசுவதற்கு ஆகும் செலவோ, தூசு!

வாய்ப் தொழில்நுட்பம், திரேதா யுகத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த மாதிரி ஒரு யுத்தத்தையே ஆரம்பித்து வைத்து விட்டது: உலகத்தில் பாரம்ரியமாக டெலிபோன் கம்பெனிகள்தான் இண்டர்நெட் இணைப்பும் கொடுப்பது வழக்கம். கேபிள் டி.வி. நிறுவனங்கள் மெகா சீரியல்களை மட்டுமே வழங்கி வந்தன. பிறகு அவர்கள் “”நாங்களே உங்கள் வீட்டுக்கு இண்டர்நெட்டும் கொடுக்கிறோமே” என்று மெல்ல ஒட்டகம் போல் மார்க்கெட்டில் தலை நீட்டினார்கள். கேபிள் மோடம் என்ற சிறு கருவியை வாங்கி வைத்துக் கொண்டு நெட்டை மேய்கிற வசதி இது. (நம் ஊரிலும் வந்துவிட்டது). இதற்குப் பிறகு டெலிபோன்காரர்களுக்கு அவர்கள் அடித்ததுதான் பயங்கர டபுள் ஆப்பு!

திடீரென்று ஒரு காலைப் பொழுதில், “”இனி நாங்களே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு “வாய்ப்’ மூலம் டெலிபோன் பேசும் வசதியும் கொடுத்து விடுகிறோம். எனவே நீங்களெல்லாம் கடையை மூடிக்கொண்டு நடையைக் கட்டலாம்” என்று அறிவித்துவிட்டார்கள். ஆடிப்போய்விட்டார்கள் டெலிபோன்காரர்கள். Triple play  (மூவாட்டம்) எனப்படுவது இதுதான்: போன், நெட், வீடியோ மூன்றையுமே ஒரே கேபிள் வழியே அனுப்புவது.

எதிரி தட்டியில் நுழைந்தால் கோலத்தில் நுழைகிற டெலிபோன்காரர்கள், கேபிள் டிவியை வேரறுக்க அவசரமாக என்ன செய்யலாம்? என்று யோசித்தார்கள். கடப்பாறையை எடுத்துக் கொண்டு தெருவெல்லாம் பள்ளம் தோண்டி வீட்டுக்கு வீடு ஒயர் இழுத்தார்கள். ஃபைபர் எனப்படும் கண்ணாடி இழைகளை வீட்டு வரவேற்பறை வரை நீட்டிவிட்டார்கள். இதில் கேபிளை விட நல்ல தரத்தில் வீடியோ கொடுக்க முடியும். “”நீ என் வியாபாரத்தில் கை வைக்கிறாயா, நான் உன் பிளக்கையே பிடுங்கி விடுகிறேன்” என்று தாங்களும் போட்டிக்கு மூவாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். வார்னர், டிஸ்னி போன்ற சினிமா கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான சானல்களை வெள்ளக் காடாக வீட்டுக்குள் பாய்ச்சினார்கள்; குழந்தைகள் படிப்பு மேலும் குட்டிச் சுவராகியது. இதுதான் குவிமம் பிறந்த கதை.

இப்போது ஒயர்மெஸ் தொழில் நுட்பத்தையும் இதில் கலந்து நாலாட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். டிவி அல்லது கம்ப்யூட்டர் முன்னால் ஆணி அடித்த மாதிரி உட்கார்ந்திருக்கத் தேவையில்லாமல் அவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டில் எங்கே வேண்டுமானாலும் சுற்றலாம். இதற்குத் தேவையானது “வை-ஃபை’ ( wi-fi்) எனப்படும் வாண வேடிக்கை. கொத்தவரங்காய் மாதிரி ஒரு சின்னஞ் சிறிய ஆண்டென்னாவை வைத்துக் கொண்டு கம்பிகள் இல்லாமலே கம்ப்யூட்டர், டிவி, ஆட்டுக்கல் எதை வேண்டுமானாலும் இணைக்க முடியும்.

சமீபத்தில் சுந்தர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் மனைவி “”உக்காருங்க. இவர் யாருக்கோ ஈ-மெயில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்” என்றாள். ஆனால் வீட்டில் சுந்தர் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்கே அவன் என்று கேட்டேன். மனைவி பதில் சொல்லாமல் தலையில் அடித்துக் கொண்டு “”கல்லுக் குடல். ஒருமணி நேரமாக உட்கார்ந்திருக்கிறார்” என்று புரியாமல் ஏதோ சொன்னாள். கடைசியில் சுந்தர் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான். அவன் கையில் ப்ளாக் பெர்ரி எனப்படும் சின்னஞ் சிறிய கம்ப்யூட்டர்! வை-ஃபை தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஒய்ஃபை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறான்.

இனிமேல் சுந்தரிடமிருந்து எந்த மின்னஞ்சல் வந்தாலும் பினாயில் ஊற்றி அலம்பி விட்டுத்தான் படிக்க வேண்டும்.

Posted in Apple, broadband, Browser, Browsing, cable, Calls, computers, Dish, DSL, Entertainment, fiber, fibre, Information, InfoTech, International, Internet, iPhone, IT, Kathir, LD, Mobile, Net, Optical, Optics, phone, Raman Raja, Ramanraja, Technologies, Technology, Telecom, Television, Triple Play, TV, Voip, Web, Wi-fi, Wifi | Leave a Comment »

Computer Keyboard for the Visually Challenged – Contest Winner details

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

இது புதுசு: புதிய வெளிச்சங்கள்!

அருவி

கருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்?

புதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:

“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.

கம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து

வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.

மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.

இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும்? அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.

பார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

ஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.

ஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்!

அருவி

Posted in America, Blind, Braille, Challenged, College, Competition, Computer, Contest, Details, Development, Disabled, Dvorak, Engg, Eyes, Feel, Gadget, Handicapped, Indicators, Information, InfoTech, Invention, IT, Keyboard, Keyboards, Keys, Mice, Mouse, Physically, Professors, Project, QWERTY, Research, School, Shorthand, Sight, Steno, stenographers, Student, Tamil, Teachers, Technology, Touch, University, US, USA, Vision, Winner | 2 Comments »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Konrai

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

மூலிகை மூலை: தோல்-வியாதிகளைத் துரத்தும் மூலிகை!

விஜயராஜன்

நீளமான சதுர வடிவில் சிறகுக் கூட்டு இலைகளையும் சரம்சரமாய் தொங்கும் மஞ்சள் நிறத்தில் பளிச்சிடும் பூங்கொத்துளையும் கொண்டது கொன்றை. நீண்ட உருளை வடிவத்தில் காய்களையும் உடைய இலையுதிர் மர இனமாகும். பட்டை, பூ, காய் வேர் மருத்துவக் குணம் உடையது. நோயை அகற்றி உடலைத் தேற்றி காய்ச்சலைத் தணிக்கும். வாந்தியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கி உடலிலுள்ள தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும். நுண்புழுக்களைக் கொல்லும். மலச்சிக்கலைப் போக்கும். காயிலுள்ள சதை மலச்சிக்கலைப் போக்கும் குணம் உடையது. தமிழகம் எங்கும் பரவலாகத் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள் : கொன்றை, கொண்ணை, பெருங்கொன்றை, கிருதாமல், தாமம், இதழி, கடுக்கை, ஆக்குவதம்.

வகைகள்: கருங்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, நரிக்கொன்றை, புலிநகக் கொன்றை, மந்தாரக்கொன்றை, முட்கொன்றை, செம்மயிர்க்கொன்றை, பொன்மயிர்க்கொன்றை.

ஆங்கிலப் பெயர் : Cassie fistula, linn, caesalpiriaceae

மருத்துவக் குணங்கள் : சரக்கொன்றைக் கொழுந்தை கைப்பிடியளவு எடுத்து அவித்துப் பிழிந்த சாறு 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்துக் குடிக்க வயிற்றில் உள்ள நுண்புழுக்கள், பூச்சிகள் வெளியேறும்.

சரக்கொன்றை பூவை எலுமிச்சப்பழச் சாறுவிட்டு அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் வைத்து இருந்து குளிக்கச் சொறி, கரப்பான் தேமல் குணமாகும்.

சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கிக் குடித்து வர பிரிமியம், வெட்டை, காமாலை, பாண்டு குணமாகும்.

சரக்கொன்றைப் பூவை வதக்கித் துவையலாக்கி உணவுடன் உண்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் வெளியேறி நோய் அகலும். நீடித்துக் குடித்து வர மதுமேகம் குணமாகும்.

சரக்கொன்றை வேர்ப்பட்டை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் திரிகடுகுச் சூரணம் 5 கிராம் சேர்த்து 2 வேளை 100 மில்லியளவு குடித்து வரக் காய்ச்சல் தணியும். இதய நோய் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர மேக நோய்ப் புண்கள், கணுச்சூலை குணமாகும். (ஒருமுறை மலம் கழியுமாறு மருந்து அளவைத் திட்டப்படுத்திக் கொள்ள வேண்டும்.)

சரக்கொன்றை காயில் மேலுள்ள ஓட்டைப் பொடியாக்கி, குங்குமப்பூ சர்க்கரை சமஅளவாக எடுத்து பன்னீரில் அரைத்துப் பெரிய பட்டாணி அளவுகளாக மாத்திரைகளை உருட்டி உலர்த்தி, மகப்பேறின்போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் பத்து நிமிடத்திற்கு ஒரு மாத்திரை வீதம் கொடுத்து வர இறந்த குழந்தையை வெளியே தள்ளிவிடும்.

சரக்கொன்றை காயிலுள்ள சதைப்புளியை உணவுக்குப் பயன்படுத்துகின்ற புளியுடன் சேர்த்து உணவு செய்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.

சரக்கொன்றை சமூலத்தை பாலில் அரைத்து எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வர சொறி, கரப்பான், தேமல் குணமாகும்.

சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் அரைத்து எலுமிச்சப்பழம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர பிரிமியம், வெட்டை, காமாலை, பாண்டு குணமாகும்.

சரக்கொன்றை இலையைத் துவையல் செய்து சாப்பிட மலங்கழியும்.

சரக்கொன்றை இலையை அரைத்து தடவி வர படர்தாமரை, அழுக்குத் தேமல் போன்ற தோல் வியாதிகள் மறையும்.

சரக்கொன்றை பூவை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வயிற்று வலி, குடலைப் பற்றிய நோய்கள் குணமாகும்.

சரக்கொன்றைப் பூவை பாலுடன் கலந்து காய்ச்சி குடிக்க உள்ளுறுப்புகளை வன்மைப்படுத்தும். மெலிந்தோர்க்கும் தக்க பலன் தரும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, Doc, Herb, Herbs, Konrai, Medicine, Mooligai, Moolikai, Nammalvar, Nammalwar, Nammazhvar, Nammazhwar, Natural, Naturotherapy, PAK, Therapy, Tigerclaw, Tigerclaw tree, Yoga | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid skin rashes

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சேற்றுப்புண் போக்கும் கடுக்காய்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் அம்மாவுக்கு சுமார் 10 ஆண்டுகளாகப் பாதவிரல்களில் அதிக அளவில் சேற்றுப்புண் ஏற்படுகிறது. வலியும் எரிச்சலும் ஏற்படுகிறது. சேற்றுப்புண் மறைய மருந்து கூறவும்.

எல்.சிவா, திருத்தணி.

சேற்றுப்புண் வருவதற்கு முக்கியக் காரணமாக ஈரத்தரை, சேறு, சகதி, குழாயடி, கிணற்றடியிலோ எந்நேரமும் இருந்து வேலை செய்பவர்களுக்கு அங்குள்ள அழுக்கும் கிருமிகளும் காலின் விரல்களின் இடுக்கில் நுழைந்து புண் ஏற்படுத்துவதைக் குறிப்பிடலாம். கால்விரல்கள் அதிக இடைவெளியில்லாமல் மிக நெருக்கமாக இருப்பவர்களுக்குச் சேற்றுப் புண் எளிதில் ஏற்படுகிறது. இந்தப் புண் பார்ப்பதற்கு வெள்ளை நிறமாகவும் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதில் ஏற்படும் அரிப்பைப் போக்க கைவிரல்களை, கால்விரல்களின் இடுக்கில் செருகி “வரட், வரட்’ என்று தேய்க்க அதனால் ஏற்படும் சுகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆனால் அதன் பிறகு ஏற்படும் எரிச்சல், தீப்புண் போல பற்றி எரியும் தன்மை கொண்டதாக இருப்பதால், அப்போது ஏற்படும் வேதனையும் வார்த்தைகளால் கூற இயலாது.

சொறியச் சொறிய புண் வளர்ந்து கொண்டே போய் ஆழமான புண்ணாகப் பரவிவிடும். நொதநொதப்பான நிலையில் சுகம் தரும் இப் புண் காய்ந்த நிலையில் கடுமையான வலியை ஏற்படுத்தும், அலசம் என்று இந்த உபாதையை வர்ணனை செய்யும் ஆயுர்வேதம், கப-பித்தங்கள் கெடுவதால் அரிப்பையும் சவர்தண்ணீர் கசிவையும் ஏற்படுத்தவதாகக் கூறுகிறது. இந்த உபாதை மாற-

கடுக்காய்த் தோடு சிறிது எடுத்து விழுதாக அரைத்து இரவில் புண்களின் மீது பூசி, மறுநாள் காலையில் கழுவிவிட புண் விரைவில் ஆறிவிடும். கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு, இஞ்சிக்கு புறத்தே நஞ்சு என்பது பழமொழி. அதனால் கடுக்காய் விதையை உபயோகிக்கக் கூடாது. அதுபோல சமையலில் இஞ்சியின் தோலை நீக்கிய பிறகே சேர்க்க வேண்டும்.

கடுக்காய் தோலுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து அரைத்தும் பூசலாம்.

மருதாணி இலையை அரைத்தும் பூசலாம். சிந்தூராதிலேபம் எனும் ஆயிண்ட்மெண்ட் பூச, புண் விரைவில் ஆறிவிடும்.

மதுஸ்னுஹீ எனும் பறங்கிச் சக்கை உள்ளே சாப்பிடுவதற்கு நல்ல மருந்தாகும். மதுஸ்னுஹீ சூரணம் எனும் இம் மருந்தை 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) அளவில் எடுத்து 1 சொட்டுத் தேனும், 1 ஸ்பூன் (5மிலி) மஹாதிக்தகம் எனும் உருக்கி சூடு ஆறிய நெய்யையும் குழைத்து காலை, இரவு உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகத் தொடர்ந்து 2 வாரங்கள் சாப்பிட மிகவும் நல்லது. சேற்றுப்புண் மட்டுமல்ல, வேறு சிரங்கு சொறிகளும், கிருமி நோய்களும் எளிதில் குணமாக்கும் மருந்து இது.

விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை திரிபலாசூரணம் 5 கிராம், கருங்காலிக் கட்டை 5 கிராம் போட்டுக் காய்ச்சிய 1 கிளாஸ் தண்ணீரால் கழுவி, கால்விரல் இடுக்குகளைப் பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, வேப்பிலை, எள்ளு அரைத்துப் பூசிவர, புண் விரைவில் குணமாகிவிடும்.

நகத்தின் சதை இணைப்புப் பகுதிகளிலும், கால்விரல் இடுக்குகளிலும் தொடர்ந்து நால்பாமராதி தைலம், தினேச வில்லாதி தைலம் போன்றவற்றில் ஒன்றைப் பூசிவர சேற்றுப்புண் நம்மை அணுகாது பாதுகாத்துக் கொள்ளலாம். சேற்றுப்புண் உள்ளவர்கள் மீன், தயிர், கத்திரிக்காய், நல்லெண்ணெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. அடிக்கடி தண்ணீரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Chethuppun, Chethupun, cure, Dermatologists, Dermatology, Exposure, Herbs, itch, medical, Medicines, Natural, Psoriasis, Rash, Sethuppun, Sethupun, Skin, Swaminathan, Symptoms, Therapy, Water, Work | Leave a Comment »

Book Introductions in Jeya TV by A Ku Njaanasambandhan

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

படித்த புத்தகம்

ஜெயா டி.வி.யில் தினமும் காலையில் ஒளிபரப்பாகி வருகிறது “படித்த புத்தகம்’ பற்றிய செய்தியை சொல்லும் நிகழ்ச்சி.

இதில் அ.கு.ஞானசம்பந்தன் கூறும் நூல்கள், நூல் பற்றிய பின்னணி விளக்கங்கள், நூலாசிரியர் குறிப்புகள் எல்லாம் மிக்க உபயோகமாக உள்ளன.

“பார்க்கும் ஆவல்’ அதிகரித்து, “படிக்கும் ஆவல்’ குறைந்து விட்டதை சமன்படுத்த முயலும் தூண்டுகோலாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

சென்ற வாரம், த.நா. குமாரசாமி பற்றியும், அவரது சகோதரர் த.நா. சேனாபதி பற்றியும் கூறினார். த.நா. குமாரசாமியின் மொழித்தேடல், வடமொழிப் புலமை பெற்றது, ரவீந்தரநாத் தாகூருடன் பழகியது போன்ற தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. மொத்தத்தில் தொலைக்காட்சிகளில் வரும் சில உருப்படியான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!

Posted in A Ku Njaanasambandhan, AK Njaanasambandham, AK Njaanasambandhan, Book, Books, Chenapathi, Chenapathy, Coomarasami, Coomarasamy, Introductions, Jaya, Jaya TV, Jeya, Jeya TV, Kumarasamy, Literature, Njaanasambandham, Njaanasambandhan, Njaanasambantham, Njaanasambanthan, Njanasambandham, Njanasambandhan, Njanasambantham, Njanasambanthan, Programme, Reader, Reviews, Senapathi, Senapathy, Television, TN Kumarasami, TN Kumarasamy, TV | Leave a Comment »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

Director Tharani – Story behind the silver jubilee

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

ஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை

எத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’

தில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.

“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

தரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.

சின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.

விவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.

சினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான்! செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.

மணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.

அசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப

இதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.

ஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.

ஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.

இப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.

`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.

நடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.

பூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.

என்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே!

லயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.

அவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.

`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.

எனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.

எல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.

அந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான்! அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.

Posted in Backgrounder, Barathiraja, Bharadhiraja, Bharathiraja, Biography, Biosketch, Chat, Chennai, Cinema, DFTech, Dharani, Dhil, Dhool, Dil, Editing, Editor, Ejamaan, Ejaman, Esamaan, Faces, Filmmaker, Films, Gilli, Institute, Interview, jubilee, Killi, Kodambakkam, Kollywood, Life, Manirathnam, Maniratnam, Movies, people, Rajini, Rajni, RV Udhayakumar, RV Uthayakumar, Selvamani, Story, Student, success, Technology, Telugu, Tharani, Thil, Thirupathisami, Thirupathysamy, Thool, Tollywood, Vikram | Leave a Comment »

Sanjay Dutt sentenced to 6 years in prison – Film fraternity rallies behind & to appeal against verdict

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெற்றிக்கண்: சஞ்சய் தத் – கோடே

IdlyVadai – இட்லிவடை: சஞ்சய் தத்துக்கு 6 ஆ�

சற்றுமுன்…: பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

சற்றுமுன்…: சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

சிவபாலன்: நீயூஸ் மீடியாக்களை எத


பாதியில் சினிமா படம்: சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை, ஜுலை. 31-மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக, மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது

  1. மெகபூபா,
  2. தாமால்,
  3. கிட்நாப்,
  4. அலிபாக்,
  5. மிஸ்டர் பிராடு

ஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.
மிஸ்டர் பிராடு, அலிபாக், கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால், இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.

மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.

இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.

இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக “பீகேட்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
———————————————————————————————————-

14 ஆண்டுகளாக நடந்த விசாரணை

எதிர்பாராத திருப்பங்களையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.

257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸôர் யாகூப், எஸ்ஸô, யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸô, யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும், 7 ஆயிரம் பக்க ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6,700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38,070 கேள்விகள் கேட்கப்பட்டன.

குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.

———————————————————————————————————-
சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு!

சுநீல் தத், நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே, ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும், சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார்.

பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா, நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெüரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் (48).

சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.

பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.

தாயின் மரணம், மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத், ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.

இந் நிலையில்தான், மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய், யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு, அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.

அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெüரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

முன்னாபாய்: அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. “”முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.” என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட்டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல, முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————————————————————————————-

கண்டிப்பான நீதிபதி, கனிவான கனவான்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே (54) கண்டிப்பான நீதிபதி, கனிவான மனிதர்.

ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது, ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது, ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இசட் பிரிவு பாதுகாப்பு:

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே, குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.

ஆர்தர் சாலையில் உள்ள சிறையில், பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.

வேலையில் அக்கறை உள்ளவர்.

விடுமுறை எடுக்காதவர். 13,000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும், 7,000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும், 6,700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறையே எடுக்கமாட்டார்:

விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ, இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ, அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து, அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே, ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.

சாய் பாபாவின் பக்தரான கோடே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது, இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987-ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை, திறமை காரணமாக 1993-ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.

———————————————————————————————————-

சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல்

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் “தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.

“காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக, “பிஸ்டல்’ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும், “”ஏ.கே. 56” ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது, பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது, மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது, அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார்; அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள், அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

தவறு செய்துவிட்டேன்: நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள, தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார்.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத், நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன், “”14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன்; சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள்” என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து, “”எல்லோருமே தவறு செய்கிறார்கள்” என்றார்.

நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு (சஞ்சய் தத்) கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸôர் கைது செய்யவோ, சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

அதை நீதிபதி ஏற்று, சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸôருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு, அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.

நீதிபதி கோடே, சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி, ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.

சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.

யூசுப் நல்வாலா, கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும், வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.

கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா, அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.

சட்டவிரோதமாக ஒன்றல்ல, இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள், அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல, மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி; இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸôரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து, உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

“3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை’ என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.

வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத், உஜ்வல் நிகமிடம் சென்று, “”நன்றி ஐயா” என்று கூறி கையை குலுக்கினார்.

———————————————————————————————————-

சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு

மும்பை, ஆக. 1-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.

இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.

இந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2-வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.

ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.

இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.

இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.

முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.

அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க், கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.

இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
—————————————————————————————————–
கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை: தினசரி ரூ.40 சம்பளம்

முப்பை, ஆக. 2-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10-ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

ஒன்றாம் நம்பர் செல் “புத்தர் செல்” என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக, மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.

நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ, பிஸ்கட், ரொட்டி, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.

நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி, அரிசி உணவு, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.

நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா, நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள், டவல், சோப்பு, சீப்பு, பற்பசை, பவுடர், போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் ïசுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன், சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.

அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய், தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில், விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.

கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.

சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள், மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.

சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.

நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.
—————————————————————————————————–

சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்?

01 ஆகஸ்ட் 2007 – 14:43 IST

இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.

பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து, அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில், சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.

பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும், தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.

விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு, உடைகள், வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.

இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.

விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.

சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை, தோட்ட பராமரிப்பு, மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை, தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.

தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.

மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி, அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.

—————————————————————————————————–

என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்…?

புணே, ஆக. 4: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (48) வியாழக்கிழமை புணே “ஏர்வாடா’ சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை விதிகளின்படி,

  • ஜவுளி,
  • சலவை,
  • பேக்கரி,
  • பேப்பர் பிரிண்டிங்,
  • தச்சு வேலை,
  • பெயிண்டிங் ஆகியவற்றில்

ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.
“பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும்’ என்றார் உயரதிகாரி ஒருவர்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக, மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.

இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால், புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.

—————————————————————————————————–

ஜெயிலில் வேலை: பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத்

புனே, ஆக. 8-

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.

இதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.

அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.

அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.

இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
———————————————————————————————————————–

சல்மான்கான், சஞ்சய்தத் கைது: இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம்

மும்பை, ஆக. 30-

ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத், சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள். சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன், முன்னாபாய் சாலே அமெரிக்கா, அலிபாக், கிட்நாப், மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான், மெயின் யுவ்ராஜ், வாண்டட் டெட்அன்ட் அலைவ் (போக்கிரி ரீமேக்), ஹலோ, ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.

இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. “போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை” என்கிறார் போனிகபூர்.

இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.

Posted in abuse, Acquaintance, Actors, Actress, AK-47, AK47, Arms, Black, Blast, Bollywood, Bombay, Bombs, Bullets, cancer, Capital, case, Cash, Celebrity, Cinema, Cocaine, Compensation, Corrections, Cost, Courts, Crime, Currency, dead, Drugs, Dutt, Economy, Extremism, Extremists, Fame, Father, Films, Finance, Gode, Godey, guns, HC, Income, Jail, job, Judge, Justice, kalashnikov, Kodey, Kote, Law, Loss, Misa, Movies, MP, Mumbai, Munnabai, Munnabhai, Nargees, Nargis, Order, Police, POTA, Prison, Producer, Production, Profits, Punishment, release, revenue, Rifles, Rupees, Salary, Sanjai, Sanjay, SC, Sentence, Son, Sunil, Sunil Dutt, TADA, terror, Terrorism, terrorist, Terrorists, verdict, Violence, Weapons, Work | Leave a Comment »

Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan – Rukmani Arundale

Posted by Snapjudge மேல் ஜூலை 28, 2007

குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
ருக்மணி அருண்டேல்
திருவேங்கிமலை சரவணன்

25.07.07  தொடர்கள்


‘‘எங்க வீட்டுப் பெண் பரதநாட்டியம் கத்துக்கிறா’’ _ பொது நிகழ்ச்சியில் பட்டுப்புடவை சரசரக்கும் பெண் தன் செல்ல மகளை இன்னொரு பெண்மணிக்கு பெருமையுடன் அறிமுகப்படுத்துவதைப் பார்க்கலாம். இன்று பரதநாட்டியம் கற்றுக்கொள்வது என்பது மிகப்பெரிய கௌரவமாகி விட்டது. குறிப்பாக நகரங்களில் மாலை வேலைகளில் பல வீடுகளில் ‘தக திமி’ ‘தகதிமி’ என்று ஜோராக சலங்கை ஒலி கேட்க முடிகிறது. அது ஒரு இதமான அனுபவம். சொல்லப்போனால் ‘என், பெண் பரதநாட்டியம் ஆடுவாள்’ என்பது பெண் பார்க்கும் படலத்தின் போது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது. இன்று பரத நாட்டியம் ஒரு தெய்வீக கலையாக தமிழ்நாடு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஊடுறுவி விட்டது:

இந்தக் கலைக்கு மிகப்பெரிய அந்தஸ்தை தந்து தெய்வீக நிலைக்கு உயர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர்களில் முக்கியமானவர் ருக்மணி அருண்டேல் என்கிற அற்புதப் பெண்மணி!

‘‘பரதநாட்டியம் என்பது இந்திய பாரம்பரியத்தின் முக்கியமான அடையாளம்!’’ உலகத்தில் இருக்கிற அத்தனை கலை ஆர்வலர்களும் இப்படித்தான் சொல்வார்கள். ஆனால், முன்னொரு காலத்தில் பரதநாட்டியம் என்பது மிகப்பெரிய சமூக இழுக்காக கருதப்பட்டது. அந்தச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் ருக்மணி என்கிற சாதனைப் பெண்ணின் எதிர்நீச்சல் உங்களுக்குப் புரியும்!

‘கலா«க்ஷத்ரா’ என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி பரதநாட்டியத்துக்கு மறுபிறவி கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ருக்மணி அருண்டேல்.

நீலகண்ட சாஸ்திரி_சேஷம்மாள் தம்பதியினருக்கு 1904_ம் ஆண்டு பிப்ரவரி 29_ம் நாள் மதுரையில் பிறந்தவர் ருக்மணி. நீலகண்ட சாஸ்திரிகள் வடமொழியில் ஞானம் நிரம்பப் பெற்றவர். நிறைய வேதாந்தப் புத்தகங்கள் எழுதியவர்.

அந்தக் காலகட்டத்தில் பால்ய விவாகம்தான் நடைமுறையில் இருந்தது. சிறுமி ருக்மணிக்கும் குழந்தைத் திருமணம் நடத்த பெரியவர்கள் முற்பட்டார்கள். ஆனால், ருக்மணி ஸ்திரமாய் மறுத்து விட்டார். சின்ன வயதிலேயே கர்நாடக சங்கீதம் பயின்றார். அப்போதே அவருக்கு கலைகளின் மீது நாட்டம் வந்துவிட்டது.

ருக்மணியின் தந்தைக்கு சென்னையிலுள்ள தியாஸாஃபிகல் சொஸைட்டியில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ருக்மணிக்கு வயது ஏழு. தந்தையுடன் சேர்ந்து தியாஸாஃபிகல் சொஸைட்டியில் தானும் சேர்ந்து கொண்டார் ருக்மணி.

அங்கு அவர் வாழ்க்கை கலைகளை நோக்கித் திரும்புகிறது. வாழ்க்கையில் காதலும் வருகிறது. தியாஸாஃபிகல் சொஸைட்டியில் அருண்டேல் என்ற வெளிநாட்டுக்காரரும் பணியாற்றி வந்தார். அருண்டேல் தலை சிறந்த கல்வியாளர். ருக்மணி, அருண்டேல் இருவரின் மன எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தனது பதினாறாவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அருண்டேலுக்கு அப்போது வயது நாற்பது. பிறகு மும்பையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் ருக்மணி நிறைய பயணங்களை மேற்கொண்டார். ஒவ்வொரு இடத்திலும் தென்படும் ரசனையான விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதில் ருக்மணி கெட்டிக்காரர். அப்படித்தான் ரஷ்ய ‘பாலே’ டான்ஸரான ‘அன்னாபாவ்லா’ வின் நடனம் ருக்மணியை ஈர்த்தது. 1928_ல் அன்னாபாவ்லாவின் நடனம் மும்பையில் நடந்தது. தன் கணவருடன் மும்பைக்குச் சென்று பார்த்தார். பிறகு ருக்மணியும், அருண்டேலும் மும்பையிலிருந்து கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவிற்குப் பயணமானார்கள்.

அதிர்ஷ்டவசமாய் அருண்டேல் தம்பதிகள் சென்ற அதே கப்பலில் ‘அன்னாபாவ்லா‘வும் பயணம் செய்து கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட ருக்மணிக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. ‘அன்னாபாவ்லா’ வைச் சந்தித்து நடன விஷயங்களைப் பற்றி நிறைய பேசித் தெரிந்து கொண்டார்.

அப்போதுதான் ‘அன்னாபாவ்லா’ திடீரென்று ருக்மணியைப் பார்த்து, ‘‘நீங்கள் கலாரசனை உடையவராக இருக்கிறீர்கள். நடனத்திற்கேற்ற உடற்கட்டும் இருக்கிறது. நீங்கள் ஏன் டான்ஸ் கற்றுக் கொள்ளக் கூடாது?’’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய நடன குருவான ‘கிளியோநோர்டி’யை ருக்மணிக்கு ரஷ்ய நடனம் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். ஆக, ருக்மணி முதன் முதலில் ரஷ்ய நடனத்தைத்தான் கற்றார். ‘‘ரஷ்ய பாலே நடனத்தைத் தொடர்ந்து நாட்டியமும் கற்றுக் கொள்ளுங்களேன்…’’ என்று அன்னா பாவ்லாவே ருக்மணிக்கு ஆலோசனை கொடுக்க, ருக்மணியின் ஆர்வம் பரதம் பக்கம் திரும்பியது. அந்தச் சமயத்தில் பரதநாட்டியம் இந்தியாவில் அவ்வளவு பிரபலம் கிடையாது. நாட்டியங்களை பெண்கள் ஆடுவது இழுக்கு என்கிற தவறான எண்ணம் அப்போது மக்களிடையே இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1933 மியூசிக் அகாடமியில் ‘சதிர்’ எனும் நடனக் கச்சேரியை பந்தநல்லூர் ராஜேஸ்வரி, ஜீவரத்தினம் சகோதரிகள் நிகழ்த்தினார்கள் ‘சதிர்’ நடனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ருக்மணி அந்த நடனத்தைக் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்.

ஆனால், அவர் நினைத்த மாதிரி அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ள முடியவில்லை. பல பரதநாட்டிய ஆசிரியர்கள், ருக்மணியைப் பார்த்து. ‘‘நீங்கள் எல்லாம் புதுமை, புரட்சி என்ற பேரில் வருவீர்கள். இதெல்லாம் கலைக்கு உதவாது’’ என்று அவரை ஏளனமாக விமர்சித்தார்கள். ஆனால், ருக்மணிக்கு இந்தக் கலையை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம். பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சிஷ்யை ஆனார். சிறப்பாகக் கற்றார்.

தியாஸாஃபிகல் சொஸைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் சுமார் இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு முன்னிலையில் நடந்த பிரமாண்ட நடன நிகழ்ச்சியில் ருக்மணியின் பரதம் அரங்கேறியது. சீனிவாச சாஸ்திரி, ராமசாமி ஐயர், சிவஸாமி ஐயர் என்று ஏகப்பட்ட ஜாம்பவான்கள் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் ருக்மணியின் நடனத் திறமை பளீரென்று பளிச்சிட்டது.

ஜேம்ஸ் கஸின்ஸ் என்கிற பிரபலமான அயர்லாந்துக் கவிஞர் ருக்மணியின் அந்த நடனத்தை வெகுவாகப் பாராட்டினார். அது மட்டுமில்லாமல், ‘‘ருக்மணி தன்னுடைய இந்த அற்புதமான நடனத் திறமையை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்காக ஒரு நடன மையத்தை ருக்மணி ஏற்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். இந்த வார்த்தைதான் ருக்மணிக்கு நடன மையத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.

நினைத்ததோடு மட்டுமில்லாமல் செயலிலும் சுறுசுறுப்பாக இறங்கினார் ருக்மணி. ஆரம்பத்தில் தான் ஆரம்பித்த நடனப் பள்ளிக்கு ‘இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ்’ என்று பெயர் வைத்தார். பல முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடனப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே பின்னர் கலா«க்ஷத்ராவாக உருப்பெற்றது.

ருக்மணியின் நடன குருக்களான பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், அவரது மருமகனான சொக்கலிங்கப் பிள்ளையும் தான் கலா«க்ஷத்ராவின் முதல் நடன ஆசிரியர்கள். ஆரம்பத்தில் கலா«க்ஷத்ராவில் நடனம் கற்றுக் கொள்ள வந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் நான்குதான்.

துவக்க காலத்தில் ருக்மணி தேவியின் நடனத்திற்கு டாக்டர் பத்மாஸினியும், கமலா ராணியும்தான் பாடுவார்களாம். அப்போது வீடு வீடாகச் சென்று டிக்கெட்டுகளை விற்று நடன நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். ருக்மணி தேவியின் ஒரே குறிக்கோளே ‘நடனத்தில் இருக்கிற சர்ச்சைக்குரிய சில விஷயங்களை நீக்கினாலே மக்கள் எல்லோருமே நடனத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். நடனத்துக்கென்று ஒரு புனிதத் தன்மை இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்’ என்பதுதான்.

கொஞ்சம், கொஞ்சமாக நடனமும் ஓர் அற்புதமான கலைதான் என்பதை ருக்மணி அருண்டேல் எல்லோருக்கும் புரிய வைத்தார். கலா«க்ஷத்ராவை ருக்மணி தேவி கலைகளின் பிறப்பிடமாகவே நினைத்தார். அதனால்தான் கலா«க்ஷத்ராவில் நடனத்திற்கு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளுக்கும் முக்கியத்துவம் தந்தார். பல்வேறு சமூகப் பணிகளிலும் கலா«க்ஷத்ரா ஈடுபட்டது.

ருக்மணி அருண்டேல் தமிழ் மொழி மேல் அளவு கடந்த பற்று வைத்திருந்தார். உ.வே.சா. கண்டெடுத்த ஓலைச் சுவடிகளையெல்லாம் ஒன்று திரட்டி ‘டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் லைப்ரரி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் தமிழ் மக்களுக்குக் கிடைத்திட வழி செய்தார்.

1939_ல் மரியா மாண்டிஸோரி வரவழைத்து குழந்தைகள் பள்ளிகளை இந்தியாவில் பல இடங்களிலும் துவக்கினார். 1945_ல் ருக்மணியின் கணவர் அருண்டேல் இறந்த பிறகும் கூட இவரது சமூகப் பணிகள் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. பரத நாட்டியக் கலைஞர்களுக்கான ஆடைகளைச் சீரமைத்த பெருமை ருக்மணி அருண்டேலுக்கு உண்டு. நடனத்துக்காகவே பாடுபட்ட ருக்மணி விலங்குகளின் நேசிப்பாளர். பெண் குலத்திற்கே ஒரு ரோல்மாடலாக விளங்கிய இவர். தனது 82வது வயதில் 1986_ல் மறைந்தார். பரதநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும், அந்த மகா மேதையை உச்சரித்துக் கொண்டே இருக்கும்!.

Posted in Arundale, Biography, Biosketch, Faces, Females, Kumudam, Kumudham, Notable, Notes, people, Rukmani, Rukmani Arundale, Sarvanan, Series, She, Thiruvengimalai, Thiruvenkimalai, Women | 1 Comment »

Seven wonders of Tamil Nadu – Must see tourist spots & places by Kumudham

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

01.08.07 கவர் ஸ்டோரி

குற்றாலம்

பேரருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உட்பட சுமார் ஒன்பது அருவிகள் ஒரே இடத்தில் 170 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தோடி விழுகின்றன.அதுவும் நோய் தீர்க்கும் மூலிகை களோடு. நயாகரா உட்பட உயரமான பல அருவிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மக்கள் குளிக்க முடியாது. 170 மீட்டர் உயரமாக இருந்தும் மக்கள் குளிக்கக்கூடிய அருவி என்பது இதன் மற்றொரு சிறப்பு.

மலைக்கோட்டை

நீங்கள் திருச்சி செல்வதாக இருந்தால், அதை அடைவதற்கு பல கிலோமீட்டர் முன்பே உங்கள் முன் கம்பீரமாய் நின்று வரவேற்கும் திருச்சி மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இந்த மலை 273 அடி உயரமும் 344 படிகளும் கொண்டது.

மேட்டூர் அணை

தஞ்சை வயல்களுக்கு நீரளித்து விளையவைக்கும் அமுதசுரபி. 1934_ல் கட்டப்பட்ட மேட்டூர் அணையின் நீளம் மட்டும் 1700 மீட்டர். உயரம் 120 அடிகள். 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதுடன், 1,130 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விளைய வைக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆடல் அரசருக்கு சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட கம்பீர வீடு. 5_ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சிற்றம்பலத்தைக் கட்டியது பல்லவ மன்னன் இரண்யவர்மன். அதன் பின் பல மன்னர்களாலும் மாறி மாறி மெருகூட்டப்பட்ட இந்த ஆலயம் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

மகாபலிபுரம் சிற்பங்கள்

ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் தங்கள் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த செழிப்பையும் ஒரே இடத்தில் காட்ட தேர்ந்தெடுத்த இடம்தான் மகாபலிபுரம். பஞ்ச பாண்டவர் குகை, கடற்கரைக் கோயில், பாறை முழுதும் சிற்பங்கள் என்று ஒட்டுமொத்த கலை யழகும் கொண்டுள்ள இது சுற்றுலா வரை படத்தில் ‘செவன் பகோடாஸ்’ என்று புகழ்பெற்றுள்ளது.

செட்டிநாட்டு வீடுகள்

சாதாரண வீடுகளைக் கூட கலைக்கோயிலாக மாற்றமுடியும் என்பதற்கு தமிழகம் கொடுத்துள்ள உதாரணம், செட்டிநாட்டு வீடுகள். மர வேலைகளுக்கு பர்மா தேக்குகள், தரைக்கு உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட ஆத்தங்குடி கற்கள், சுவர் களில் அந்தக் காலத்திலேயே இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியக் கற்கள் என்று வாங்கி, முட்டை கலந்த ‘செட்டிநாடு பிளாஸ்டரை’க் கலந்து குழைத்துக் கட்டியிருக்கிறார்கள்.

கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாட்டு அரண்மனை, காரைக் குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒவ்வொன்றும் நகரத்தாரின் கலைரசனையை எடுத்துச் சொல்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்க்க ஒருநாள் போதாது. உலகிலேயே செட்டிநாட்டில் மட்டும்தான் இத்தனை அழகான மாளிகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.

கைலாசநாதர் கோயில்

பல்லவர்களின் மற்றொரு பிரமாண்ட படைப்பு. கோயிலின் வாசலில் கம்பீரமாக மண்டியிட்டிருக்கும் நந்தியை வைத்தே கோயிலின் பிரமாண்டத்தை அறிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் அஜந்தா சிற்பங்களுக்கு இணையாகக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.

திருவள்ளுவர் சிலை

தமிழகத்தின் கலைவளங்களில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கும் விஷயம். முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலில் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அதிகாரத்துக்கு ஒரு அடி என்று 133 அடிகளில் இங்கே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரியகோவில்

பெயரைப் போல நிஜமாகவே பெரிய கோயில் தான். கோயில் மட்டுமல்ல, இங்குள்ள சிவலிங்கம், பிரமாண்ட நந்தி (இதன் எடை மட்டும் 17 டன்), கோபுரம் (70 மீட்டர்) என்று எல்லா விஷயங்களும் பெரியது.

வேலு£ர் கோட்டை

கிருஷ்ண தேவராயரின் தளபதிகள் பொம்மியும் திம்மண்ண ரெட்டியும் எழுப்பிய கோட்டை இது. 16_ம் நூற்றா ண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பல போர்களைச் சந்தித்தது. திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு, அவரது வாரிசுகள் சிறை வைக்கப்பட்டது இங்குதான்.

தமிழக அதிசயங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதிலிருந்து ஏழு இடங்களை வரிசைப்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதாவது இடங்கள் இருந்தால், அவற்றையும் சரியான காரணங்களுடன் விளக்கி எங்களுக்கு அனுப்புங்கள். கலைநயம், புராதனம், இயற்கை அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அதிசயங்களை சரியாக வரிசைப்படுத்தி அனுப்பும் 7 வாசகர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும். உங்கள் அதிசயப் பட்டியலை அஞ்சல் அட்டையில் அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழக அதிசயங்கள்
பி.எம்.சுதிர்,

Posted in Boating, Chennai, Chettinad, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Classic, Courtralam, Coutrallam, Culture, Dams, Districts, Falls, Forest, Forts, Guide, Heritage, hidamabram, Hidden, Hills, Horseback, Horsebackriding, Irrigation, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Kings, Kumudam, Kumudham, Kuthaalam, Kuthalam, Kutralam, Mahabalipuram, Mamallapuram, Mettoor, Mettur, Mountains, Projects, Rulers, Sidamabram, Sidhamabram, Specials, Tamil, Tamil Nadu, Tanjore, Thanchavoor, Thanchavur, Thanjavoor, Thanjavur, Thiruchendhoor, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Tips, TN, Tour, Tourist, Travel, Trichirappalli, Trichoor, Trichur, Trichy, Vellur, Velore, Visit, Water, Waterfalls, wonders | 2 Comments »

Tamil Nadu Cooperative Elections – Malpractices & Power Abuse (Savithri Kannan)

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

கொள்ளையடிப்பவர்களின் கூடாரமா கூட்டுறவுகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே :: சாவித்திரி கண்ணன்

குமுதம் 

25.07.07  தொடர்கள்   

வேறு வழியின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன கூட்டுறவு சங்கத் தேர்தல்கள்.

ஆளும் கட்சியினரைத் தவிர, வேறு யாரும் மனுதாக்கல் செய்ய முடியாமை, மீறி போட்டியிட்டால் அடிதடி, வெட்டுக்குத்து, தேர்தல் நடந்த ஒரு சில இடங்களிலும் ஓட்டுச் சீட்டுகளை கிழித்தெறிந்தது, ஓட்டுப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியது, வாக்கு எண்ணிக்கையில் தகராறு என ஏக களேபரம்.

இரண்டு மாத காலத் தேர்தல் ஏற்பாடுகள், கோடிக்கணக்கான பணம், நேரம், உழைப்பு அத்தனையும் விரயமானது.

கோடிகோடியாய் பணம் ஈட்டிவிட்ட கட்சித் தலைமைகள் எந்த வகையிலாவது கட்சிக்காரர்களுக்குச் சம்பாதிக்கும் வழியை சாத்தியப்படுத்தாவிட்டால் கட்சி நடத்த முடியாதென்று உருவாகிவிட்ட சூழலில், தள்ளிப்போடப்பட்ட தேர்தல் என்பது தாமதப்படும் அநீதியே அன்றி தடுக்கப்பட்ட அநீதியாகிவிடாது.

‘‘சுயக்கட்டுப்பாடு இல்லாத தன்னாட்சியையும், சுதந்திரத்தையும் நினைத்தும் பார்க்க முடியாது’’ என்றார் மகாத்மா காந்தி. நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இன்றைய அரசியல்.

கூட்டுறவு என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ, இடத்திலோ வாழும் மக்கள் ஒன்றாக இணைந்து தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களாலேயே அமைத்துக் கொள்ளப்படுவதே கூட்டுறவாகும். இங்கே அரசியல் கட்சிகளுக்கோ, அரசாங்கத்திற்கோ வேலையே இல்லை.

1904ல் கூட்டுறவு அமைப்புகள் உதயமானபோது பிரிட்டிஷ் அரசு, ‘‘அரசாங்கத்தின் அனுசரணை மற்றும் உதவிகள் இருக்குமே தவிர, தலையீடு இருக்காது’’ என்று தெளிவுபடுத்தியது.

கூட்டுறவு என்பது முழுக்க, முழுக்க மக்களின் தன்னிச்சையான கூட்டிணைந்த செயல்பாடு. இதில் அரசு தலையிடாமல் ஆதரவு அளித்தாலே போதுமானது. அது நாட்டை அகில உலக வல்லரசாக்கும் என்பதை விவசாயக் கூட்டுப் பண்ணைகளின் விஸ்வரூப வளர்ச்சியில் நிரூபித்தது சோவியத் யூனியன்! அப்படிப்பட்ட கூட்டுறவைத்தான் தமிழ்நாட்டில் தழைத்தோங்க விடாமல் கழக ஆட்சிகள் மாறி மாறி களங்கப்படுத்திவிட்டன.

கூட்டுறவுத் துறை வளர்ச்சி என்பது சோசலிஷ சமுதாயத்தின் அடித்தளம் என்பதை அறிந்திருந்த ஜவஹர்லால் நேரு, அரசு மற்றும் அரசியல் தலையீடுகளை அடியோடு ஒழித்து, கூட்டுறவு அமைப்புகளை கோயிலாகப் புனிதப்படுத்தினார். இதனால்தான் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி கூட்டுறவுத் துறையின் பொற்காலமாகப் பொலிந்தது. அன்றைய தினம் தமிழக கூட்டுறவு அமைப்புகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன் மாதிரியாய் விளங்கின.

1967ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., கூட்டுறவு அமைப்புகளின் ஆணி வேரையே அசைக்கத் துணிந்தது.

1976ல் கூட்டுறவு அமைப்புகளைக் கலைத்தார் கருணாநிதி. அப்போது கலைத்த கூட்டுறவு அமைப்புகளை இன்றுவரை தட்டியெழுப்ப முடியவில்லை.

‘கூட்டுறவு அமைப்புகள் கட்சிக்காரர்களின் வேட்டைக் களமாக மாறலாகாது’ என்ற பயத்தில் எம்.ஜி.ஆர்., அதிகாரிகளைக் கொண்ட கூட்டுறவுகளை நடத்தினார். இதனால் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக அதிகாரிகள் ஆட்டம் போட்ட அவலம் அரங்கேறியது! ஜெயலலிதா ஆட்சியிலும் இந்தச் சீர்கேடுகளே தொடர்ந்தது. இவையாவும் வெளியார் தலையீடுகள் கூட்டுறவுக்கு விரும்பத்தக்கவையல்ல என்பதை அப்பட்டமாய் நிரூபித்தன.

89ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ‘அதிகாரிகள் பிடியிலிருந்து கூட்டுறவை விடுவித்து, அதற்கு ஆக்ஸிஜன் ஏற்றி உயிர்ப்பிக்கிறேன்’ எனக் கூட்டுறவுத் தேர்தல்களை அறிவித்தார். கூட்டுறவு அமைப்புகளைக் கொள்ளையடிக்கத் துடித்த கட்சிக்காரர்களின் அளவற்ற பசி அந்தத் தேர்தலையும் அடிதடியில் ஆழ்த்தி அரைகுறையோடு நிறுத்தியது.

1996ல் மீண்டும் கருணாநிதி ஆட்சியில் கூட்டுறவுத் தேர்தல்கள் ரத்தக்களரிகளோடு அரங்கேறின. உடன்பிறப்புகள் உறிஞ்சிக் கொழுக்கும் வேட்டைக்களமாகின கூட்டுறவுகள்.

ஜெயலலிதா அணுகுமுறை, வெளிப்படை சர்வாதிகாரமாயிருந்தது என்றால், கருணாநிதி அணுகு முறை,ஜனநாயகத்தின் பெயரிலான சர்வாதிகாரமாக உணரப்பட்டது.

இதனால் இந்திய அளவில் அரசு மற்றும் அரசியல் தலையீட்டிலிருந்து கூட்டுறவை விடுவிக்கும் சிந்தனைகள் வலுப்பெற்றன. 1987ல் அர்த்தநாரீஸ்வரன் கமிட்டியும், 1990ல் பிரேம்பிரகாஷ் கமிட்டியும் கூட்டுறவுத் துறையை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கக் கோரின. இதன்படி 1991லேயே கூட்டுறவு அமைப்புகளுக்கான மாதிரி சட்டம் வடிவமைக்கப்பட்டது. இன்று ஆந்திரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் நவீன கூட்டுறவு சட்டத்தின்படி கூட்டுறவு அமைப்புகள் சிறப் பாகச் செயல்படுகின்றன. மத்திய அரசும் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்றவேண்டும் என்றது. இதை அமல்படுத்தினால் கட்சிக்காரர்களின் கை கட்டப்பட்டுவிடும் என்பதால், கருணாநிதியும் இதை இன்றுவரை அமல்படுத்த மறுக்கிறார். வற்புறுத்த வேண்டிய காங்கிரஸோ வாய்மூடி மௌனிக்கிறது. இனியும் அரசியல்வாதிகளின் அதிகார எல்லைகளை வரையறுக்காவிட்டால், ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றுக்குமே சாவு மணியடிக்கப்பட்டுவிடும். ஆகவே, மத்திய அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தும் தற்சார்பு கூட்டுறவு சட்டம் என்பது தமிழ்நாட்டிற்குத் தவிர்க்க முடியாததாகும்.

நடிப்புச் சுதேசிகள்!

கூட்டுறவுக்கு ஐந்து கட்ட தேர்தல்களை அறிவித்த முதலமைச்சர் கருணாநிதி, ‘‘கூட்டுறவுத் தேர்தல்கள் அரசியல் அடிப்படையில் நடைபெறக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு’’ என்றவர் அடுத்த வாக்கியத்திலேயே, ‘‘எனவே தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை ஜனநாயக மரபுப்படி தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி போட்டியிடுவது நல்லது’’ என்றார்.

அந்தந்த மாவட்டத்து அமைச்சர்கள் அதிகாரிகளை, ‘‘சொன்னபடி கேளு, இல்லாவிட்டால் விடுமுறை போட்டு வீட்டுக்குப் போ’’ என்று மிரட்டிய சம்பவங்கள் நடந்தேறின. இதனால் தி.மு.க.வினரின் விண்ணப்ப மனு மட்டுமே ஏற்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட 1921 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களில், 1,338 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து சுமார் 10,000 பேர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தினசரிகளில், ‘தகுதி படைத்த வேட்பாளருக்கு வேட்புமனு கிடைக்கவில்லை என முதல்வர் கவனத்திற்கு வந்துள்ளது. அப்படிக் கொடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அரசே விளம்பரம் வெளியிட்டது. 90 சதவிகித இடங்களில் அதிகாரிகள் அராஜகமாக நடந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஜனநாயகத்தின் பெயராலேயே ஜனநாயகத்தைக் கொல்லும் கலை, தி.மு.க.வினரைத் தவிர வேறு யாருக்கு வரும்?.

Posted in abuse, Analysis, Backgrounders, candidates, Coop, Cooperative, DMK, Elections, Electorate, Justice, Kumudam, Kumudham, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malpractices, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Op-Ed, Order, Polls, Power, Savithri Kannan, solutions, Tamil Nadu, voters | Leave a Comment »

Female Infanticide – Gender selections & Abortions in India: Law

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

பிறப்பது எங்கள் பிறப்புரிமை!

உ . நிர்மலா ராணி, வழக்கறிஞர்

கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு தம்பதி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தாய், மூன்றாவது ஆண் குழந்தை பெற விரும்புவதில் என்ன தவறு என்று வினவியிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு போடப்பட்ட ஓரிரண்டு தினங்களுக்குள் ஹைதராபாதின் ஒரு பகுதியில் தனது எட்டாவது மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி அதை, அப்துல் ரஹீம் என்பவர் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் நடந்திருக்கிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் கை வெளியே தெரிந்ததைப் பார்த்து, விவசாயி ஒருவர் காப்பாற்ற, அக்குழந்தை அதிசயமாய் உயிர் பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது சம்பவத்தில் குற்றம் நடந்து விட்டது. முதல் சம்பவத்தில் குற்றம் செய்ய கோர்ட் அனுமதி கேட்கப்படுகிறது. இவை இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் – மக்கள்தொகையில் பெண்ணினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் காரணிதான் அது.

மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 1901-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் இருந்தன. 1991-ல் 945 ஆக குறைந்து 2001-ல் 927-க்கு சரிந்துவிட்டது. பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.

“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொள்ளை நோய்களாகக் கருக்கொலைகளும், சிசுக்கொலைகளும் சமுதாயத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன. இந்த நோய்களை உற்பத்தி செய்யும் விஷக்கிருமிகள் நமது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் புரையோடிப் போயிருக்கின்றன.

வரதட்சிணை என்ற பெயரிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரிலும், பெண்கள், பெற்றோர்களால் ஒரு பொருளாதாரச் சுமையாகவே கருதப்படுகிறார்கள். சொத்துரிமையும் பெற்றோருடனே வாழும் உரிமையும், இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும், ஆண்களுக்கே அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆண்குழந்தைகளை விரும்பும் மனப்பாங்கும் நியாயப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள தில்லியில் பெண்களின் விகிதம் 868. மகாராஷ்டிரத்தில் 1991-ல் 946 ஆக இருந்த விகிதம் இன்று 913 ஆக மாறிவிட்டது. மகாபாரதப் புகழ் குருஷேத்ரத்தில் பாலின விகிதம் 770. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

“”பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பம் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம்” 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஸ்கேன் மையங்கள் அரசிடம் பதிவு செய்யப்பட வேண்டும். கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இதைப் பற்றி விளம்பரம் செய்தாலும் அது குற்றம். முதல் 10 ஆண்டுகளுக்கு எவ்வித அசைவுமில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடப்பட்டுள்ளது.

“”ஆணும் பெண்ணும் சமம்” என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமே தவிர சமூகச் சட்டத்தை அல்ல. ஒரு சட்டம் எந்தப் பின்னணியில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் எதிர்மறையான கருத்துகளைக் கூறும்போது சமூகத்தில் குற்றத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அவை ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.

சீனாவிலும் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2020-க்குள், திருமணம் செய்ய முடியாத 3 கோடி ஆண்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது. அங்கும் பாலினத் தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “”நாமிருவர் நமக்கொருவர்” போன்ற திட்டங்களைக் கடைப்பிடித்ததில் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாததால் பிரச்னை இல்லை. கரு உருவாவதற்கு முன்னரே பாலினத்தைத் தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் முறைப்படி, வர்ஜினியாவில் 11 பெற்றோர்களில் 10 பேர் பெண் குழந்தையைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பல, பாலினத் தேர்வு செய்யும் முறையைத் தடை செய்துள்ளன.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.

இந்நிலையில், இந்தியாவில் பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும். பாதகமான சமூகப் பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்க, அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை கருவிலே அழிக்கப்பட்டாலும், பூமிக்குள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் – ஃபீனிக்ஸ் பறவைகளாய்!

———————————————————————————————————————————————–

ஆண்டுக்கு 10 லட்சம் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன: மத்திய சமூகநல வாரியத் தலைவி தகவல்

புதுச்சேரி, நவ. 4: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் என்று மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில சமூக நல வாரியம் சார்பில் பெண் கரு பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் பேசியது:

21-ம் நூற்றாண்டில் நாம் இதுபோல் ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது குறித்து மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர். பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன்? தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம். தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.

இக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏ ஆர்.விசுவநாதன், புதுச்சேரி சமூக நல வாரியத் தலைவி ழான் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பொறுப்பும் செயல்திறனும் கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வாழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டன.

———————————————————————————————————————————————————–

ஆடாமல் நிற்குமா அரசுத் தொட்டில்?

எஸ். ஜெய்சங்கர்

உள்ளாட்சி முதல் உலக அளவில், பல நிலைகளில் பெண்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். பாரத நாட்டின் முதல் குடிமகள் முதல் நாட்டின் பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பாரதியின் கனவை நனவாக்க, விண்கலமேறி விண்வெளிக்குப் புறப்பட்ட கல்பனா சாவ்லா, திரும்பி வரும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், காற்றோடு கலந்தார். அவரது வரிசையில் சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பத்தையும் தாண்டி வெற்றி பெற்றார். இந்திய நாடே அவரைப் போற்றுகிறது. இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் செய்தி.

அண்டவெளியில், காற்றில்லா இடத்தில், காலடி எடுத்து வைத்து, நடைபழகிய பெண்கள் நம் பாரதப் பெண்கள் என எண்ணி மகிழ்ந்தாலும், தாயின் கருப்பை எனும் இருண்ட பிரதேசத்தில் தோன்றி, வெளிச்சத்தைப் பார்த்தும், பார்க்காமலும் கருகிய மொட்டுகள் நம் தமிழகத்தில் ஏராளம்.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், 1999 ஆம் ஆண்டு 657 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 439 பெண் சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டது. மற்ற மாவட்டங்களிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

தமிழகத்தின் ஆண் -பெண் குழந்தைகளின் விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல், பெண் சிசுக்கொலை ஆகியவை தமிழக அரசை கவலையடையச் செய்தது.

இதன் விளைவாக, 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், முழுவீச்சில் 2001 ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகும், தருமபுரியில் 2001 ஆம் ஆண்டு 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண் சிசுவைக் கொல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, விரும்பாத பெண் சிசுக்களை அரசுத் தொட்டிலில் போட்டுச் சென்றுவிட்டனர். அக்குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், விரும்புவோருக்குத் தத்து கொடுக்கிறது.

மேலும், 2-வது பிரசவத்தைக் கண்காணிப்பது, பெண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்குக் கவுன்சலிங் தந்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்துவது போன்றவற்றால் பெண் சிசுக்கொலைகள் படிப்படியாகக் குறைந்தன.

பெண் சிசுக்கொலை குறைந்தாலும், தொட்டிலுக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் 1000-மாவது தொட்டில் குழந்தையைப் பெற்றுள்ளது தருமபுரி அரசுத் தொட்டில் குழந்தைகள் மையம். இதில் சுமார் 120 குழந்தைகள் மட்டுமே ஆண் சிசுக்கள். ஆண் சிசுக்கள் தொட்டிலுக்கு வந்ததற்கும் சமுதாயச் சீர்கேடே காரணம்; தவறான உறவால் பிறந்த குழந்தைகளை வெளிக்காட்ட முடியாமல், அவை தொட்டிலில் போடப்பட்டன.

பெண் குழந்தை விஷயத்தில், அவர்களைப் படிக்க வைத்து, வரதட்சிணை, நகை எனச் செலவு செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்; ஆண் குழந்தையாக இருந்தால், மாற்றான் வீட்டுப் பெண் மூலம் குடும்பத்துக்கு வரவு என வரவு- செலவு கணக்கு பார்க்கும் எண்ணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களிடமும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம். அதனால், பெண் குழந்தை என்றால் வளர்ப்பது கடினம் என்ற சலிப்பு. தொட்டில் குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டு, தருமபுரியில் மட்டுமே 1000 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம் எனும் தகவல் பெண்ணினத்துக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. காரணம், பெண் சிசுவைக் கொன்றால் சிறைத்தண்டனை உறுதி என்ற பயம் மட்டுமே, சிசுக்கொலைகளைக் குறைத்து, அவற்றை அரசுத் தொட்டிலில் போடச் செய்திருக்கிறது.

சிசுக்கொலைகளைத் தடுக்கவும்; பெண் குழந்தைகளைத் தத்து பெறவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் முதல்கட்ட நடவடிக்கைகளே. பெண் குழந்தைகளைத் தத்து பெறுவதோடு தனது கடமை முடிந்தது என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அரசுத் தொட்டிலுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான, ஆக்கபூர்வ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் தேவை.

மேலும், பெண் குழந்தைகளை அரசுத் தொட்டிலில் போடுவதைத் தவிர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு வர வேண்டும். இதற்கு, சமூக, பொருளாதார மாற்றம் மிக அவசியம். பொருளாதார வசதி கொண்ட எவரும் தங்களது பெண் சிசுக்களைக் கொல்வதும், அரசுத் தொட்டிலில் போடுவதும் கிடையாது. வருவாயற்ற ஏழைகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

அரசின் முயற்சியாலும், பொதுமக்களிடையே ஏற்படும் மன மாற்றத்தாலும், “அரசுத் தொட்டிலுக்கு பெண் சிசுக்கள் வருவது நின்று 1000 நாள்களாகின்றன’ என்ற அறிவிப்பு வெளியாகுமானால், அது நிச்சயமாக பெண் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.

Posted in Abortion, Analysis, Backgrounders, Birth, Census, Child, Childbirth, Children, Conservative, Culture, Disease, Equal, Female, Feminism, Gender, Growth, Health, Infanticide, Insights, Kids, Law, Liberal, male, Malnutrition, Needy, Op-Ed, Opportunities, Opportunity, Order, parents, Poor, Population, ratio, Rich, rights, Sex, solutions, State, Stats, Statz, Values, Wealthy | Leave a Comment »

Question & Answers with CPI(M) – Rich Party, Support for Govt

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

அரசியல்

கேள்வித் திருவிழா: டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

மத்திய அரசை மிரட்டுகிறோமா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை தொடர்ந்து மிரட்டி வரும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாட்டினை நியாயப்படுத்துகிறீர்களா…?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடதுசாரிகள் எப்போதுமே மிரட்டியது கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலனை உருவாக்குகின்ற சில திட்டங்களை அறிவித்திருக்கின்றன.

அவற்றின் மீது கூடுதலான அழுத்தம் கொடுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம், மக்களுடைய எதிர்காலம் செழிப்பாக இருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை வாழ வைக்க முடியும். எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உள்ள மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் கூறிவருகின்றன.

உதாரணமாக விலைவாசி உயர்வு பிரச்சினை. அதில் முக்கியமானது பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. இதைத் தடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.

அரசு அடிக்கடிப் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையுயர்வைத் தடுக்கலாம். ஏனென்றால் பெட்ரோல், டீஸல் விலை உயர்வு என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களில் இருந்து அத்தனை பொருள்களும் விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

ஆகவேதான் நாங்கள் விலையைக் கட்டுப்படுத்துங்கள் என்கிறோம். இதை மிரட்டல் என்று அருள்கூர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாது.

இந்திய நாடும் -அமெரிக்காவும் செய்யக்கூடிய அணு ஒப்பந்தம் என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அமெரிக்கா, தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தன்னுடைய ஆதரவு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசாராக் கொள்கை. அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. “சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை’ என்று குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கபட்ட பிறகும் அரசு அதிலிருந்து மாறுகிறது.

இதை சுட்டிக்காட்டி மக்களுக்கு விளக்குவதை அரசை நிர்பந்தப்படுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சி.பி.எம். கட்சிக்குத்தான் அதிக அளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது உண்மையா?

எஸ். கணேசன், கடலூர்.

உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் சி.பி.எம். தன்னுடைய கட்சியை நடத்துவதற்கும், மக்களை சந்திப்பதற்கும், கட்சி வளர்ச்சி ஏற்பாடுகளுக்கும் கட்சி இருக்கும் எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், சில கிளைகளிலும் கூட அலுவலகங்கள் வைத்திருக்கிறது.

அந்த அலுவலகத்திற்கான நிலம், கட்டிடம் போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிகச் சொத்து இருக்கக்கூடிய கட்சியினர் என்று கூறக்கூடாது. ஏனென்றால் அது மக்களுடைய சொத்தே தவிர சி.பி.எம். சொத்து அல்ல.

மற்ற கட்சிகளுக்கும், சி.பி.எம். கட்சிக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. மற்ற கட்சி களில் தலைவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஆனால் சி.பி.எம். கட்சியில், கட்சி வளமாக இருக்கிறது. அதில் இருக்கும் தலைவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.

சி.பி.எம். கட்சியில் ஊழியர்களின் சம்பள விகிதம் எப்படி?

பா.சு. மணிவண்ணன், திருப்பூர்.

சி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மாநிலத்துக்கு, மாநிலம் வித்தியாசப்படும். சி.பி.எம். கட்சியில் இருக்கக்கூடிய முழு நேர ஊழியர்களில் சொந்தமாக குடும்ப வருமான வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்கள் கட்சியிலிருந்து எந்தவிதமான ஊதியமும் எதிர்பார்க்காமல் பணியாற்றுகிறார்கள்.

கட்சியை மட்டும் நம்பி வாழ்கிறவர்கள், கட்சி கொடுக்கக்கூடிய சிறு அலவன்ûஸ மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அது கஷ்டமான வாழ்க்கைதான். கட்சியின் ஊழியர்களை எடுத்துக் கொண்டால் 500 ரூபாய் முதல், 4000 ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 4000 ரூபாய் என்பது மாநகரில் மட்டும் அல்ல, வட்டத்திலேயும் உண்டு. இது ஏதோ பதவி அடிப்படையில் என்றெல்லாம் இல்லை.

இரண்டாவது, சி.பி.எம்.மில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தை கட்சிக்காகவே கொடுத்து விடுகிறார்கள். கட்சி ஏற்கெனவே அவர்களுக்கு எவ்வளவு ஊதியத்தை நிர்ணயித்து இருக்கிறதோ அந்த ஊதியத்தை வழங்கும்.

ஆகவே மந்திரி என்று சொன்னாலோ, சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ அவரையும், அப்படியில்லாதவர்களையும் கட்சி வித்தியாசம் பார்க்காது. முதலமைச்சர் உள்பட அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பாணி எங்கள் கட்சியின் பாணி.

இது தவிர, பகுதி நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறவர்கள்தான் பகுதி நேர ஊழியர்கள். சிலர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சி.பி.எம்.மில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் உணர்வு செத்துப் போகவில்லை’ என கி. வீரமணி கூறியுள்ளாரே…!

அ. மாணிக்கம், ராமநாதபுரம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் உறுதியுடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே சி.பி.எம்.மின் நிலை. அங்கு தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், “அது ஒன்றுபட்ட இலங்கையில்தான் நடக்க முடியும்’ என்ற எங்களுடைய கருத்துக்கும், “தனி ஈழம் உருவாக வேண்டும்’ என்கிற கி. வீரமணியின் கருத்துக்கும் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது.

பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநிலம் கஹோத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாபுபாய் கடாரா தனது 3 குழந்தைகளுக்கு 6 பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து…?

வீரராகவன், மன்னார்குடி.

சமீப காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். வேறு பெண்ணை தன்னுடைய மனைவி என்கிற முறையில் வி.ஐ.பி. பாஸ்போர்ட்டுடன் அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவைகளெல்லாம் நம்முடைய அரசியல் கலாசாரச் சீரழிவிற்குக் காரணம். பி.ஜே.பி. ஒரு வித்தியாசமான கட்சி என்பதை அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை குண்டு வெடிப்பில் முன்னாள் சுங்க அதிகாரி சோம்நாத் தாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே…!

என். குமரன், வேளாங்கண்ணி.

நீதிமன்றம் பூரணமாக, வருடக் கணக்காக விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முழுத் தீர்ப்பையும் பார்த்துதான் அதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் ஆபத்தானவர்கள் மீது கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்குமேயானால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.

—————————————————————————————–

டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

* “”முல்லைப் பெரியாறில் கேரள அரசு அணைகட்டுவதற்கு தி.மு.க. அரசும் மறைமுகமாக உதவி செய்கிறது போலிருக்கிறது…” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாரே…!

க. ஜெகன், சிவகங்கை.

நதி நீர் பிரச்சினை என்பது இன்று பல்வேறு மாநிலங்களுக்கிடையே தாவாவை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனும் தாவா உள்ளது. நம்முடைய நியாயத்தை கோரிப் பெற, தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

தி.மு.க. அரசு அண்டை மாநிலங்களுடன் இப்படி மோதலற்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது பாராட்டத் தக்கது.

ஜூலை 26ஆம் தேதியும் டெல்லியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளார். அவரும் இது குறித்து இரண்டு முதல்வர்களையும் அழைத்துப் பேசுவதாக கூறியுள்ளார்.

முன்னாள் பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் போன்ற அறிவு ஜீவிகள், நதி நீர் இணைப்பு குறித்து ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மோதலற்ற போக்கை கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்த அணுகுமுறை நண்பர் பழ. நெடுமாறனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக, விவரங்களைத் தெளிவாகப் புரிந்த அவர், முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிப்பது நமக்கு ஏற்புடையதல்ல.

* ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக நினைக்கிறீர்களா?

என். செல்வம், நாகர்கோவில்.

“காம்ப்ரமைஸ்’ என்பது ஒரு தவறான வார்த்தை அல்ல. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோட்பாடு ரீதியான நிலையை மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்தது. இடது சாரிகள் அனைவருமே இணைந்து அதே நிலையைத்தான் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடியவர், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் அவர் ஓரளவுக்குப் பண்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆகவே மதசார்பற்ற, அரசியல் சட்டத்தைப் புரிந்திருக்கக்கூடிய, இன்றைய இந்திய நாட்டின் தேவையை உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக வருவது இன்றைய காலகட்டத்தில் நல்லது என்பதே எங்கள் கருத்து.

அந்தக் கருத்தை நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிடமும் சொன்னோம். அவர்கள் நிறுத்திய பிரதீபா பட்டீலை நாங்கள் ஆதரித்தோம்.

முதலில் இந்த நிலையை எடுக்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைக் கோரவுமில்லை; அப்படியொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதே போன்று ஏனைய இடதுசாரித் தோழர்களுக்கும் ஜனாதிபதி பதவி மீது கண்ணுமில்லை, விருப்பமுமில்லை.

* உங்களைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் பற்றி…?

க.நெடுஞ்செழியன், அய்யப்பன்தாங்கல்.

என்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்

  • தோழர் ராமமூர்த்தி,
  • தோழர் ஜீவா,
  • தோழர் கல்யாணசுந்தரம்,
  • உமாநாத்,
  • சங்கரைய்யா போன்றவர்கள்.

இந்தத் தலைவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியாக இருந்ததை நான் 64க்கு முன்னால் பார்த்தேன். அதற்குப் பின் கட்சி பிரிந்த பிறகு கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

அதன்பிறகு நான் ஏற்கெனவே சொன்ன சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக மாறிப்போனார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வருத்தமோ, வேதனையோ எனக்குக் கிடையாது.

மற்றபடி கொள்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்திய விஷயத்திலும், சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமையாக நடந்துகொண்ட விஷயத்திலும் மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் வரிசையில் எங்களுடைய அகில இந்தியத் தலைவர்கள்

  • இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,
  • பி.டி.ரனதேவே,
  • சுந்தரைய்யா போன்றவர்களைச் சொல்லலாம்.

இவர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் ஊழியனாகத்தான் நான் இருக்கிறேன்.
பெண் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள்,

  • பாப்பா உமாநாத்,
  • நர்மதா ரனதேவே,
  • விமலாராணி தேவி

ஆகியோர். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கத்திற்காகப் பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் என்று பார்க்கும்போது, மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களைச் சொல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறும், அவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளும் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தவை.

தமிழகத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் என்று காமராஜர் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்களைக் கூறலாம். இவர்களுடைய பணி, செயல்பாடுகள், அதிலிருக்கக்கூடிய பல்வேறு நல்ல அம்சங்கள் ஆகியவை என்னைக் கவர்ந்துள்ளன.

* அரசியல்வாதி என்பவர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர் என்று குற்றம் சாட்டுகிறேன். உங்களது பதில்….? (தயவு செய்து கோவிச்சுக்காதீங்க ஐயா)

பா. ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

எந்தக் கோபமும் இல்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியவர் எந்த அரசியல்வாதி என்று எனக்குத் தெரியாது. உங்களுடைய மனதைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இப்படியொரு அரசியல்வாதி நடந்திருந்தால் உங்கள் கோபம் நியாயமானதுதான்.

* ரஷ்யாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது ஸôர்?

இரா. கண்ணபிரான், சேலம்.

நான் ரஷ்யாவுக்கு சென்றதில்லை.

* “ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவைத் திருப்பியனுப்பியது மிகவும் கடுமையான சோதனையான காலகட்டம்’ என அப்துல் கலாம் தெரிவித்துள்ளாரே…?

தி. நாகேஷ், கோட்டப்பட்டினம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பொறுப்பு ஏதேனும் எடுத்துக் கொள்ளலாமா? அப்படியெனில் அது ஆதாயம் பெறும் பதவி எனக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பதுதான் பிரச்சினை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுந்தது. “எது ஆதாயம் தரும் பதவி?’ என்று அரசியல் சட்டத்தின் 102வது பிரிவு தெளிவாக விளக்கவில்லை. எந்தப் பதவிகளை ஏற்றால் பதவியைப் பறிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு எனத் தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உண்டு.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிறுவனங்களில் பொறுப்பேற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தச் சட்டங்கள் மூலம் நாடாளுமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம். கோரியது; ஆதாயம் தரும் பதவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் விவாதித்து முடிவு எடுக்க ஒரு நாடாளுமன்ற துணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியது.

நாடாளுமன்றமும், இருக்கும் சட்டத்திலிருந்து சில விதி விலக்குகளை அளித்து திருத்தச் சட்டம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அவர் தனக்குரிய உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி சில கேள்விகள் எழுப்பினார்; சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு திருப்பி அனுப்பினார்.

அது மறுபரிசீலனை செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்குரிய விசேஷ அம்சங்களை கணக்கிலெடுக்காமல் அப்பொறுப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுத்ததால் நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது.

பொது மக்கள் சேவையினை கருத்தில் கொண்டு சில அரசு நிறுவனங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்.மின் நிலை. இப்பொழுது உள்ள குழப்ப நிலை நீங்க, தெளிவானதொரு சட்ட விளக்கம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது.

* “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற உ.பி. முதல்வர் மாயாவதியின் யோசனை பற்றி…?

எஸ். உலகநாதன், திருவாரூர்.

“இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும்?’ என்று சொல்வதற்கு முன், அது செயல்படுத்த வேண்டிய அரசியல் பொருளாதார -சமூகப் பின்னணியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் பெரும் பிரிவினர் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையில் எழுந்ததுதான் அரசியல் சட்ட ரீதியான “இட ஒதுக்கீடு’ முடிவுகள்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ஆனால் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தும், வாழ்நிலையும் எப்பொழுது முழுமை பெறும்? அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டப்படுவதன் மூலமாகத்தான் அது முடியும்.

கிராமப் புறங்களில் வாழும் இந்தப் பிரிவினரில் பெரும்பான்மையான மக்கள் நலிந்த பொருளாதாரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைக் கொடுக்கும் செயல் திட்டம்தான் நிலச் சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வல்லது.

இது நாட்டின் இடதுசாரிகள் சொல்கிற கருத்து மட்டுமல்ல…! பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் இதை வலியுறுத்திச் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரள, மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில அரசுகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டே எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (நிலத்தைப் பங்கீடு செய்தது) அந்த மக்களுக்கு ஓரளவு பொருளாதார சக்தியினைக் கொடுத்திருக்கின்றன.

அவர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்திருக்கிறது. அதிகார அமைப்பில் அவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. இதை மண்டல் கமிஷன், மற்றும் திட்ட கமிஷன் கணக்கில் எடுத்துப் பாராட்டியும் உள்ளது.
வேறு ஒரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை (அரசின் கணக்கின்படி) 26 கோடி பேர். வறுமையில் வாடுவோர் அல்லது பொருளாதார பலம் ஏதுமின்றி வாழ்பவர்கள் சாதி, மதம், மொழி என்ற பண்பாட்டு வட்டங்களைத் தாண்டித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

அவர்களின் வாழ்நிலையினை உயர்த்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாயாவதி என்ன நோக்கத்தோடு அந்த யோசனையை முன் வைத்தார் என்று தெரியாது. ஆனால் பிரச்சினையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்லர்! நமது கவலைக்குரிய மனிதர்கள்தான்!

Posted in Alliance, Answers, APJ, Bachan, Badhuri, Baduri, Bathuri, Bhachan, Bhadhuri, Bhaduri, Bhardhan, Bhathuri, BJP, Center, Chat, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, DMK, Eezham, Elections, Faces, Finance, Gorbachev, Govt, Integration, Interview, Jaya, Jeya, Kalam, Karat, Leaders, Lenin, LTTE, Manmogan, Manmohan, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Masood, Masud, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, names, National, NDTV, Neta, Netha, Party, Patil, people, Politburo, Politics, Polls, Poor, Power, Prakash, Prathiba, Prathibha, President, Prez, Principles, Putin, Q&A, Questions, Rasheed, Rashid, Rich, River, Russia, Somnath, Sonia, Soviet, Sri lanka, Srilanka, Stalin, support, UP, US, USA, USSR, UttarPradesh, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Water, Wealthy | Leave a Comment »

Saravana Stores – Buy stuff & get beaten up: Intrusive surveillance

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

குமுதம் ரிப்போர்ட்டர்

சரவணா ஸ்டோர்ஸ் பயங்கரம்

ீஇங்கே  பொருள்களோடு அடி, உதையும் கிடைக்கும்

29.07.07  ஹாட் டாபிக்

தி.நகர் ரங்கநாதன் தெரு என்றாலே அங்கே திருவிழாக் கூட்டம் போல திரளும் மக்கள் நெரிசல்தான் நம் நினைவுக்கு வரும். அந்த ரங்கநாதன் தெருவில் பலதரப்பட்ட கடைகள். ‘எங்கள் கடையில் இல்லாத பொருட்களே இல்லை. எல்லாமே கிடைக்கும்’ என்று அங்குள்ள சில பிரபல கடைகள் பெரிதாக நீட்டி முழக்கும். அந்த, ‘எல்லாமே கிடைக்கும்’ என்பதில் ‘அடிஉதை’ என்பதையும் இனிமேல் சேர்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

அண்மையில் தி.நகர், ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள், இலங்கைத் தமிழர் ஒருவர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி, அவரை கை, மற்றும் முதுகுப் பகுதியில் ரத்தக் கட்டுகளை ஏற்படுத்தி, மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டனர். இந்த விவரம் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, இதுபற்றி நாமும் விறுவிறு விசாரணையில் இறங்கினோம்.

சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் தாக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் பெயர் இளஞ்செழியன். கடந்த பத்தாண்டுகளாக லண்டனில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், ‘விடுமுறையில் சென்னைக்கு வந்த இடத்தில்தான் இப்படியரு விபரீதம்.

மருத்துவமனையில் இளஞ்செழியனை சந்தித்துப் பேசினோம். நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார் அவர்.

‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.

லண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25_ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன் கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ§க்குச் சென்றோம்.

குழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.

அந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.

அப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.

பந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்!’’ என்று நான் சத்தம் போட்டேன்.

மறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.

என் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.

கடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தேன். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

என் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.

அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.

இந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

பத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா? லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.

இளஞ்செழியன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரைத் தாக்கியதாக கடை மேலாளர் லிங்கராஜன், ஊழியர்கள் வைகுண்ட பெருமாள், மூர்த்தி, சிவக்குமார், பாலமுருகன், ஜெகன், தம்பிராஜ் என்ற ஏழு பேரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சரவணா ஸ்டோர் சம்பவம் பற்றி சென்னையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம். பெயர், விவரம் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பேசிய அவர், ‘தி.நகரில் உள்ள ஒரு சில கடைகளில் இது போன்ற அடிஉதை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்தக் கடைகளுக்கு வரும் எல்லோரையும் தராதரம் இல்லாமல், திருடர்களாகவே பார்க்கிறார்கள். பெண் வாடிக்கையாளர்கள் மீது சந்தேகம் வந்தால் அவர்களை சோதனை போடவேண்டும் என்று ஆண் ஊழியர்கள் மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன.

பெரிய கடைகளில் பொருட்கள் திருட்டுப் போவதைத் தடுக்க நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. ஆனால் அவற்றின் விலை அதிகம் என்பதால் இந்த மாதிரி கடைகள் வாங்குவதில்லை.

‘மாம்பலம் காவல் நிலையமும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு மாதச் சம்பளத்தைவிட பலமடங்கு அதிக பணம் மாமூலாகக் கடைகளில் இருந்து கிடைத்து விடுகிறது. அதோடு விசேஷ நாட்கள் வந்தால் வீட்டுக்குத் தேவையான இனிப்பு, டிரஸ் எல்லாம் இலவசமாகக் கிடைத்துவிடுகிறது. அப்புறம் அவர்கள் ஏன் கடைக்காரர்களைத் தட்டிக்கேட்கப் போகிறார்கள்?

இப்படிப்பட்ட சில போலீஸாரின் துணை இருப்பதால்தான் கடை ஊழியர்கள் தெனாவெட்டாக நடந்து கொள்கிறார்கள். பூனைக்கு மணி கட்டும் வேலையை லண்டனில் இருந்து வந்த ஓர் இலங்கைத் தமிழர் செய்துள்ளார். இனியாவது இந்த அத்துமீறல்களுக்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டும்’’ என்றார்.

இளஞ்செழியன் விவகாரம் பற்றி தி.நகர் துணை ஆணையர் லட்சுமியிடம் கேட்டோம்.

‘‘நடந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி ஏழு பேரைக் கைது செய்துள்ளோம். தி.நகர் கடைகளுக்கு போலீஸார் ஆதரவாகச் செயல்படுவதாக இனி புகாரே வராது. அதன் ஆரம்பமாகத்தான் இளஞ்செழியனைத் தாக்கியவர்களைக் கைது செய்திருக்கிறோம்’’ என்றார் அவர்.

சரவணா ஸ்டோர் தரப்பிடம் பேச முயன்றோம். அவர்கள் சர்வ மௌனமாகி விட்டார்கள். நம்மிடம் எதுவும் பேச முன்வரவில்லை.

‘எங்கள் கடையில் எல்லாம் கிடைக்கும்’ என்பதற்கு அடி உதைகளும் உண்டு என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.

படங்கள்: ஞானமணி.
– வே. வெற்றிவேல்

Posted in Annaachi, Annachi, Chennai, Kumudam, Kumudham, Law, Madras, Maligai, Malikai, Mambalam, Order, Ranaganathan, Ranaganathan st, Ranaganathan street, Ranganathan street, Renaganathan, Renganathan street, Reporter, Saravana, Saravana Stores, SNEHA, Surveillance, T nagar, TNagar | Leave a Comment »

Cheating the state – Income Tax, Black Money, Business folks

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

வாட்டுது வருமான வரி!

“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.

மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உள்நாட்டிலேயே

  • வியாபாரிகள்,
  • தரகர்கள்,
  • சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
  • என்ஜினீயர்கள்,
  • வக்கீல்கள்,
  • ஆடிட்டர்கள்,
  • விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
  • லாரி உரிமையாளர்கள்,
  • சொந்தத் தொழில் செய்பவர்கள்,
  • வியாபாரிகள்,
  • சேவைத்துறையில் இருப்பவர்கள்

என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.

விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.

வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.

———————————————————————————————————

தமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்

சென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.

2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.

தமிழ்நாட்டில்

  • 2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,
  • 2004+05+இல் ரூ.8,344 கோடி,
  • 2005+06+இல் ரூ.10,861 கோடி,
  • 2006+07+இல் ரூ.14,891 கோடி.

இந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.

செய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.

———————————————————————————————————

 

Posted in Biz, Bonds, Bribery, Bribes, Budget, Bureaucracy, Business, Cheats, Chidamabram, Chidambaram, Chidhambaram, Commerce, Compensation, Corruption, Economy, Employment, Finance, Govt, Homes, Houses, Incentives, Income, Income Tax, Industry, IT, Jobs, Money, NCC, NSS, PC, Personal, Private, Rajini, Rajni, Sankar, Savings, Shankar, Shivaji, Sivaji, Small scale, SSI, Tariffs, Tax, Work, Worker | Leave a Comment »