Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Jaya TV’ Category

ADMK Party general council Conference: Jayalalithaa announces formation of youth brigades

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

பொதுக் குழுவா..?மாநாடா..?

அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. உடன், (வலமிருந்து) கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் இ.மதுசூதனன், அரசியல் ஆலோசகர் பொன்னையன், எம்ஜிஆர் மன்றச் செயலாளர் டி.ஜெயக்குமார்.

சென்னை, பிப். 13: சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – செயற்குழுக் கூட்டம், பிரம்மாண்ட மாநாட்டைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது பேச்சிலேயே இதைக் குறிப்பிட்டுப் பேசினார். “கூட்டத்துக்கு வரும் வழியெங்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த போது இது மாநாடா? அல்லது பொதுக் குழுவா? என்ற வியப்பை ஏற்படுத்தியது’ என்றார்.

உண்மை தான். கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் செல்லும் வழியெங்கும் வாழைமரத் தோரணங்கள், டிஜிட்டல் போர்டுகள், கட்சிக் கொடி என பூந்தமல்லி நெடுஞ்சாலையே விழாக் கோலம் பூண்டிருந்தது.

மாநாடு நடைபெற்ற திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காலை 10.10 மணிக்கு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ஜெயலலிதா வந்தார். அங்கு அவருக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கேரளப் பெண்கள் போல இளமஞ்சள் நிற சேலை அணிந்த இளம் பெண்கள் வரிசையாக நின்று வரவேற்றனர்.

தாரை, தப்பட்டைகள் முழங்க, ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற பலூன்கள் வானில் ஏராளமாக பறக்க விடப்பட்டன.

ADMKசென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் பொதுக் குழு-செயற்குழுக் கூட்டத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர்  ஜெயலலிதாவை வரவேற்கத் தயாராக நிற்கும் குதிரைப் படையினர்.

50-க்கும் மேற்பட்ட குதிரைகள் அணிவகுத்து நின்று ஒருபுறம் வரவேற்பு கொடுக்க, மறுபுறம் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற்றன. இதுதவிர, மிக்கி மவுஸ், டொனால்ட் டக் கார்ட்டூன் சித்திரங்கள் போன்ற உடைகளை அணிந்த கலைஞர்களும் அரங்கத்தின் முன்பகுதியில் நின்று வரவேற்றனர்.

கொண்டாட்டத்தின் முன்னோட்டமோ? வரும் பிப். 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. ஆனால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வைத்த பேனர்களும், கட் – அவுட்களும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன. JJ Jayalalithaகொக்கிலி கட்டை ஆட்டம் ஆடி, ஜெயலலிதாவை வரவேற்ற அதிமுக தொண்டர்கள்.

கூட்டத்துக்குப் பின், கட்சியினரின் பசியைப் போக்க உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சைவம், அசைவ உணவுகள் பரிமாற தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

மதுரவாயல் செல்லும் சாலை ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலால் திணறும். இதில், புதன்கிழமை மாநாடு போல நடைபெற்ற அதிமுக செயற்குழு – பொதுக் குழுக் கூட்டத்துக்கு அதிகம் பேர் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலை நெடுங்கிலும் கட்சியின் தொண்டர்கள் வலம் வந்தபடி இருந்தனர். கூட்டம் முடிந்த பின்பு, பஸ், ஆட்டோ கிடைக்காதவர்கள் பல கிலோ மீட்டர் நடந்து சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தை அடைந்தனர். Elephants Conference
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.

போக்குவரத்து நெரிசல்:

கோயம்பேடு- மதுரவாயல்- வானகரம் செல்லும் சாலையில் காலை 8.45 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், இச் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்தப் போக்குவரத்து நெரிசலால் நீண்ட தூரத்துக்குச் சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

இதே போல பொதுக்குழுக் கூட்டம் முடிந்தபின் ஜெயலலிதா புறப்பட்டுச் சென்ற பின்னரும் நீண்ட நேரம் வாகன நெரிசல் நீடித்தது.

சசிகலா வருகை:

ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் இக் கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக் குழுக் கூட்டம் செல்லும் வழியில் போலீஸôரின் கெடுபிடி ஏதும் இல்லை.

செயற்குழு-பொதுக்குழு கூட்டத்துக்கு வராமல் பரபரப்பை  ஏற்படுத்திய சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி.சேகர்,  திடீரென கூட்டத்துக்கு வந்து பந்தியில் அமர்ந்து உணவருந்தினார்.

வந்தார், எஸ்.வி. சேகர்!

சென்னை வானகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டத்துக்கு எஸ்.வி. சேகர் தாமதமாக வந்து சேர்ந்தார்.

முன்னதாக இக் கூட்டத்துக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று கூறி, மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியை எஸ்.வி. சேகர் ராஜிநாமா செய்ய உள்ளதாக அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இதுகுறித்து எஸ்.வி. சேகர் பின்னர் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று ஜெயலலிதா புறப்படுவதற்கு சற்று முன்பு, அவரை எஸ்வி சேகர் சந்தித்துப் பேசினார்.

இதன்பின் கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து, அமர்ந்து எஸ்வி சேகர் மதிய உணவு சாப்பிட்டார்.

Posted in ADMK, AIADMK, brigades, Conference, Council, DMK, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, Jeyalalithaa, Jeyam, Opposition, Party, Sekar, Women, Youth | Leave a Comment »

ADMK & Jeyalalitha – Politics of Contradications & Alliances of Convenience :: Viduthalai Dravidar Kazhakam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2007

JJ ADMK Jeyalalitha Viduthalai Contradications Politics Alliances

Posted in Adams, ADMK, AIADMK, Alliance, Baalu, BJP, Bridge, CM, Construction, Contradications, Dam, Dhravidar, DK, DMK, Dravidar, Election, Fort, Govt, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, Manifesto, MDMK, Minister, parliament, Politics, Poll, Project, Ramar, Sethu, Ships, Srilanka, Thravidar, TR Baalu, VaiGo, Veeramani, Vidudhalai, Viduthalai | Leave a Comment »

J Jayalalitha vs MK Karunanidhi: ADMK & DMK Politics in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007


பீதிïட்டும் குற்றங்களை செய்து வருகிறார்
ஜெயலலிதா மீது வழக்கு
கருணாநிதி எச்சரிக்கை


சென்னை, செப்.5-

`கிரிமினல் பிரிவுகளில் வழக்கை சந்திக்க வேண்டிய பீதிïட்டும் குற்றங்களை ஜெயலலிதா செய்து கொண்டே இருக்கிறார்’ என்று முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காழ்ப்புணர்ச்சி

கேள்வி:- ஜெயலலிதா அன்றாடம் வெளியிடும் அறிக்கைகளை கையெழுத்திட்டுத் தான் ஏடுகளுக்கு அனுப்புகிறார். அதிலிருந்து அவற்றுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்றுதான் அர்த்தம். திருமுட்டம் பேரூராட்சியில் மருத்துவமனை ஒன்று கட்ட அவர் ஆட்சிக் காலத்தில் 2004-ம் ஆண்டு பணம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அது கட்டி முடிக்கப்பட்ட பிறகும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தற்போது திறக்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்து போராட்டத்தை அறிவித்திருக்கிறாரே?

பதில்:- அந்தப் பேரூராட்சியில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு 2004-ம் ஆண்டே நிதி ஒதுக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிக்கையில் கூறிக் கொள்கிறார். அதற்குப் பிறகு இரண்டரை ஆண்டுக் காலம் அவர்தான் ஆட்சியிலே இருந்திருக்கிறார். அந்த மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு ஒன்றும் கோடிக் கணக்கிலே அல்ல. லட்சக்கணக்கிலே நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட வேண்டியதுதான். எனவே அவரது ஆட்சியிலேயே அதனைக் கட்டி முடித்து திறந்திருக்கலாம் அல்லவா? அதுமாத்திரமல்ல, அறிக்கை விடுவதற்கு முன்பு, முன்னாள் முதல்-அமைச்சராக இருந்தவர், இப்போதும் சில நாட்களில் பதவிக்கு வந்துவிடுவேன் என்று மக்களையெல்லாம் பயமுறுத்திக் கொண்டிருப்பவர் அந்தச் செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொண்டுவிட வேண்டாமா? திருமுட்டத்தில் உள்ள மருத்துவமனையை கடந்த 30-ந் தேதி கடலூரில் நடைபெற்ற விழாவில் நானே திறந்து வைத்த உண்மையைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் ஜெயலலிதா கதை அளந்திருப்பது எப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்தி என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.

அ.தி.மு.க.வினரே சிரிக்கிறார்கள்

கேள்வி:- திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் சரியில்லை என்று கூறி அதற்காகவும் ஒரு போராட்டம் நடத்தும்படி ஜெயலலிதா விடுத்த அறிக்கை பற்றி?

பதில்:- திண்டிவனத்திலே உள்ள அ.தி.மு.க.வினரில் சிலரே அதிகாரிகளிடம் கூறும்போது இதைப்பற்றி சிரித்து விமர்சனம் செய்தார்களாம். ஜெயலலிதாவின் அறிக்கையைப் பார்த்து அந்த நகராட்சியின் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு விசாரித்தால், அந்த ஆணையாளரே 1.9.2007 தேதியிட்டு கடிதம் எழுதியிருக்கின்றார். அந்தக் கடிதத்தில் “திண்டிவனம் நகரின் குடிநீர் விநியோகம் தென்பெண்ணை ஆறு கண்ரக்கோட்டை மற்றும் புளிச்சப்பள்ளம் ஆகியவைகளை நீர் ஆதாரமாக கொண்டதாகும். நகரில் தற்போதைய மக்கள் தொகை 67 ஆயிரத்து 737 ஆகும். தினசரி 35 லட்சம் லிட்டர் குடிநீர் ஒருநாள் விட்டு, ஒரு நாள் விநியோகம் செய்யப்படுகிறது. தற்பொழுது நீர் ஆதாரத்தை பொறுத்தமட்டில் அதிகபட்சமாகவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது குடிநீர் விநியோகத்தில் முந்தைய நிலையைவிட நகராட்சியால் முழு கவனம் செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக செய்யப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஒரு சிலர் தேவையற்ற போராட்டத்தை தற்பொழுது அறிவித்துள்ளனர்” என்று எழுதியிருப்பதில் இருந்தே, இந்த அறிக்கை பற்றிய உண்மையையும் புரிந்து கொள்ளலாம்.

பயிர்க்கடன்

கேள்வி:- தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்று கூறி, அதற்காக போராட்டம் நடத்தச் சொல்லி ஜெயலலிதா கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ஒரு அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்:- கடந்த 17.8.2007 அன்று இதே காரணத்தைக் கூறி, நாகப்பட்டினத்தில் போராட்டம் நடத்துமாறு கட்சிக்காரர்களுக்கு ஜெயலலிதா கட்டளையிட்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதற்கு விவரமாகவும், தெளிவாகவும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கூட்டுறவுத்துறை பொறுப்பை வகிப்பவருமான கோ.சி.மணி புள்ளிவிவரங்களோடு பதில் அளித்தார். ஆனால் ஜெயலலிதா அறிக்கைவிட்டதோடு தன் பணி முடிந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு, அந்தப் பதிலையே படிக்காமல், தற்போது தஞ்சை மாவட்டத்திலே அதே காரணத்திற்காகப் போராட்டம் நடத்துமாறு அறிக்கை விடுத்துள்ளார்.

7 ஆயிரம் கோடி கடன் ரத்து

அவர் தற்போது விடுத்துள்ள அறிக்கையிலே விவசாயிகளுக்கு இந்த அரசு எதுவும் நன்மைகளைச் செய்யவில்லை என்றும், பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லையா என்பதை விவசாயிகளே நன்கறிவார்கள். ஓரளவிற்கு பத்திரிகை படிப்பவர்கள் அனைவருக்கும் அது தெரியும். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட அதே நாளில் விவசாயிகள் வாங்கியிருந்த சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க் கடனை ரத்து செய்து ஆணையிட்டது. அ.தி.மு.க.வை சேர்ந்த பல விவசாயிகளே அந்தச் சலுகையை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவ்வாறு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய இயலாது என்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா, தி.மு.க. அரசின் இந்தச் சலுகைக்குப் பிறகு அதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை. மாறாக ஓராண்டு கழித்து இப்போது பயிர்க்கடன் வழங்க வில்லை என்கிறார். அதுவாவது உண்மையா?

ஜெயலலிதா போராட்டம்

தி.மு.க. ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற 2006-07-ம் ஆண்டில் மட்டும், தமிழ்நாடு முழுவதிலும், கூட்டுறவு வங்கிகள், 6 லட்சத்து 31 ஆயிரத்து 283 விவசாயிகளுக்கு 1,251 கோடி ரூபாயை பயிர்க் கடனாக வழங்கியுள்ளது.

மீண்டும் இந்த ஆண்டு 2007-08-க்கு 1,360 கோடி ரூபாய் பயிர்க்கடன்கள் புதிதாக வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் காலாண்டுக்காக, பங்குத் தொகை உதவியாக 188 கோடி ரூபாயும், வட்டியாக 58 கோடி ரூபாயும் அரசு வழங்கியுள்ளது.

இதுவரை இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 791 விவசாயிகளுக்கு 255 கோடி ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா கூட்டுறவு பயிர்க்கடனே வழங்கப்பட வில்லை என்றும், விவசாயிகள் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்றும் அறிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா போராட்டம் அறிவித்துள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் 2005-06-ம் ஆண்டு அவரது ஆட்சியில் அளித்த கூட்டுறவுக் கடன் 66 கோடி ரூபாய் மட்டும்தான்.

2006-07-ம் ஆண்டுக்கு இந்த மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் தி.மு.க. ஆட்சியில் 167 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு விவசாயிகளைப் பற்றி அறிக்கைவிட எந்தத் தகுதியும் கிடையாது என்பதை இந்தப் புள்ளி விவரங்களே கூறும்.

தாமதம் இல்லை

கேள்வி:- ஜெயலலிதா விவசாயிகளுக்காக விடுத்த அறிக்கையில் விதை நெல் மற்றும் உரம் போன்றவை வழங்கப்படவில்லை என்கிறாரே?

பதில்:- நடப்பாண்டிற்கு இதுவரை தமிழகம் முழுவதிலும் 15 ஆயிரத்து 116 மெட்ரிக் டன் விதை நெல் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 33 ஆயிரத்து 607 மெட்ரிக் டன் விதை நெல் தமிழகம் முழுவதும் இருப்பில் உள்ளது. காவேரி டெல்டா பாசனப் பகுதியில் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்காக இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அதோடு, 58 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது. அதனால் உரப் பற்றாக்குறை என்பதே இல்லை. விவசாயிகளுக்கு தேவையான உரமும், தரமான விதை நெல்லும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. எந்த விவசாயிக்கும் விதை நெல் வழங்குவதிலும் உரம் வழங்குவதிலும் தடையோ, காலதாமதமோ இல்லை என்பதை விவசாயிகள் அனைவரும் நன்கறிவார்கள்.

பயங்கரவாத எச்சரிக்கை

கேள்வி:- இவ்வாறு ஜெயலலிதா வெளியிடும் அன்றாட அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- “தமிழக காவல் துறை தலைவரை அணுகி, மத்திய உளவுப் பிரிவிடம் இருந்து பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் அந்த அதிகாரி, “நான் பொறுப்புக்கு வந்து 3 நாட்கள்தான் ஆகிறது. இது போன்ற தகவல்கள் என் கவனத்துக்கு வரவில்லை” என்றும் பதிலளித்திருக்கிறார். இவர் இதுவரை காவல் துறையில்தானே இருந்தார்? தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் வரும் தகவல்களைக் கண்டு மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். உன்னிப்பாக இருக்கிறார்கள். கவனிக்கிறார்கள். ஆனால், காவல் துறைத் தலைவரோ விழிப்பாக இல்லை. முதல்-அமைச்சர் கருணாநிதியும் விழிப்பாக இல்லை. அப்படி என்றால் பொதுமக்கள் கதி என்ன? எண்ணிப் பார்க்கையில் அது பயங்கரமாக இருக்கிறது” என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை ஒரு பத்திரிகையில் வந்துள்ளது.

ஆனால் அதற்கு நேர்மாறாக மற்றொரு பத்திரிகையில் தீவிரவாதிகள் குறித்து டி.ஜி.பி. ராஜேந்திரன் திங்கட்கிழமை கூறியதாவது:-

“சென்னை போன்ற பெருநகரங்களில் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவில் வாகனங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து செல்லவும், சோதனைச் சாவடிகளை அமைத்துக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் மக்கள் அதிகமாகக் கூடும் வழிபாட்டுத் தலங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் எந்த இடத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. இதுகுறித்து எந்த விதமான தகவல் கிடைத்தாலும் போலீசார் மிகவும் முன்னுரிமை அளித்து தீவிரமாக செயல்படுவர். போலீசாரின் பட்டியலில் உள்ள தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தையும் போலீசார் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்” என்று வந்துள்ளது.

சட்டத்தை மீறும் செயல்

காவல் துறை தலைவர் ராஜேந்திரன் பற்றிய இரண்டு செய்திகளும் -இரண்டு பத்திரிகைகளில் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாக வருவதற்குக் காரணம் என்ன?

இன்னொரு அபாண்டமானதும்

இட்டுக்கட்டியதுமான செய்தி!

“உளவுப் பிரிவு, உண்மையிலேயே செயல்பட்டு, அந்தத் தகவல் அறிக்கைகளாக வெளிவரும்போது, அதனை முதல்-அமைச்சருக்கு அளிக்கத் தேவையில்லை என்று உள்ளாட்சியும், உயர்கல்வியும் மற்றும் சில காகஸ் கும்பலும் மறித்து பிடுங்கி கிடப்பில் போட்டு விடுவதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன” என்பதாகும்.

இவ்வாறு கிரிமினல் பிரிவுகளில் வழக்கைச் சந்திக்க வேண்டிய, பீதிïட்டும் குற்றங்களை ஜெயலலிதா செய்து கொண்டே இருக்கிறார்- இப்படிச் செய்திகள் பரப்புவதும்; அவற்றை வெளியிடுவதும்; சட்டத்தை அலட்சியப்படுத்தி, அவற்றை மீறும் செயல்களாகும்.

ஆட்சியில் இல்லாத ஆத்திரம்

கேள்வி:- “ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, சென்னையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டு வெடிப்பினை நிகழ்த்த 3 அல்லது 4 பயங்கரக் குழுக்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் குண்டுகள் வெடிக்கும் என்றும், அந்தக் குழுக்கள் தங்கள் மேலிடத்தின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் தகவல்கள் வந்து மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கருணாநிதி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று ஜெயலலிதா ஓர் அறிக்கையில் கேட்டு – அந்த அறிக்கை பத்திரிகைகளில் எடுப்பாக வெளியிடப்பட்டுள்ளதே?

பதில்:- யானையின் மீது உட்கார்ந்து கொண்டு “ஈ” நினைத்துக் கொள்ளுமாம், அந்த யானையை அந்த ஈயே ஓட்டிச் செல்வதாக! அப்படித்தான் ஜெயலலிதாவும் நினைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்; எல்லாவற்றிலும் தலையிட்டு “குட்டு” பெறுகிறார்; பாவம்-ஆட்சியில் இல்லையே என்ற அவஸ்தை! ஆதங்கம்! ஆத்திரம் -அதனால்தான் அன்றாடம் அறிக்கை!

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in ADMK, DMK, J, J Jayalalitha, J Jeyalalitha, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Politics, Tamil Nadu, TamilNadu | Leave a Comment »

TV wars of Tamil Nadu: DMK vs ADMK vs Congress vs PMK

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

அரசியல் சார்புடன் மேலும் 3 அலைவரிசைகள்: தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது “தொலைக்காட்சிப் போர்’

புதுதில்லி, ஆக. 13: அரசியல் சார்புடன் புதிதாக மேலும் 3 தமிழ் அலைவரிசைகள் ஒளிபரப்பாக உள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் போர் தீவிரமடைகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் தொடங்கும் “கலைஞர் டிவி’, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.வி.தங்கபாலு தொடங்க உள்ள “மெகா டிவி’ மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் தொடங்க உள்ள “வசந்த் டிவி’ ஆகிய மூன்றும் விரைவில் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளன. இவற்றில், “மெகா டிவி’ ஆகஸ்ட் 20-ம் தேதியும், “கலைஞர் டிவி’ செப்டம்பர் 15-ம் தேதியும் ஒளிபரப்பைத் தொடங்குகின்றன. இதையடுத்து தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்தனியே தமக்கென ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்றிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக ஏற்கெனவே ஜெயா டிவியை நடத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் குரலாக 2006 முதல் “மக்கள் தொலைக்காட்சி’ ஒளிபரப்பாகி வருகிறது.

“இந்தப் போக்கு ஆரோக்கியமானதும் அல்ல; போட்டிச் சூழலுக்கு உகந்ததும் அல்ல. அரசியல் கட்சிகளோ அவற்றின் தலைவர்களோ தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த முயற்சிகள் எதுவும் வணிக அடிப்படையில் வெற்றிபெறப் போவதில்லை.

தொலைக்காட்சி என்ற வலிமைமிக்க ஊடகத்தை, ஒரு குறிப்பிட்ட ஆள் அல்லது கட்சியின் கருத்துகளை பரப்புவதற்குத்தான் இந்த அலைவரிசைகள் பயன்படுத்தும். பார்வையாளர்கள் மத்தியில் தமது கருத்துகளைத் திணிப்பதற்கு இந்த அலைவரிசைகள் முயற்சி செய்யும்’ என பத்திரிகையாளர் சோ கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆசியுடன் “வசந்த் டிவி’ தனது ஒளிபரப்பைத் தொடங்கும் என்று கூறியுள்ளார் வசந்தகுமார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான இவர், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் அங்காடிகளை நடத்திவருகிறார்.

“ஒரு நாளுக்கு 6 முறை செய்தி ஒளிபரப்புடன் கூடிய, 24 மணி நேர பொழுதுபோக்கு அலைவரிசையாக வசந்த் டிவி இருக்கும். எமது செய்திகளில் காங்கிரஸ் தொடர்பான குறிப்பாக சோனியா காந்தி தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி அன்றாடம் இடம்பெறும்’ என்று கூறும் வசந்தகுமார், “தனது அலைவரிசை வணிக அடிப்படையிலும் வெற்றிபெறும்’ என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

திமுக மற்றும் அதிமுகவின் பிரசார பீரங்கிகளாக செயல்பட்டு வரும் சன் டிவியும் ஜெயா டிவியும் தொலைக்காட்சி மூலம் அரசியல் யுத்தம் நடத்தியுள்ளன. குறிப்பாக தேர்தல் நேரங்களில் பெரும் அரசியல் லாவணியை இவை நடத்தும்.

கருணாநிதியின் குடும்பத்துக்கும் மாறன் (கலாநிதி, தயாநிதி) சகோதரர்களுக்கும் இடையே வெடித்த குடும்பச் சண்டையால், மற்றொரு முன்னணி அலைவரிசையான ராஜ் டிவி திமுக ஜோதியில் ஐக்கியமாகியுள்ளது. ராஜ் டிவிதான் கலைஞர் டிவிக்கு வேண்டிய அனைத்து ஒளிபரப்பு ஒத்தாசைகளையும் செய்து வருகிறது.

“மக்களை ஏமாற்ற முடியாது. உண்மைக்கும், பொய்ச் செய்திக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பகுத்துப் பார்க்கும் திறன் அவர்களுக்கு உண்டு. செய்தியின் உண்மைநிலை ஐயத்துக்கிடமானதாக மாறும்போது உடனடியாக பார்வையாளர் வேறு அலைவரிசைக்குச் சென்று, உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்வார்’ என்கிறார் சோ.

“மக்கள் தொலைக்காட்சி, அரசியல் அலைவரிசை அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் மக்கள் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதில்லை. செய்தியை அரசியலுக்காகத் திரிப்பதில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் சமமுக்கியத்துவம் அளிக்கிறோம். மற்ற பிற அலைவரிசைகள் சீரழிக்கும் தமிழ்ப் பண்பாட்டை மக்கள் தொலைக்காட்சியில் உயர்த்திப் பிடிக்கிறோம். எங்களது நிகழ்ச்சிகளை குறிப்பாக செய்திகளை ஏராளமான மக்கள் விரும்புகின்றனர்’ என்கிறார் மக்கள் தொலைக்காட்சியின் மூத்த அலுவலர் ஒருவர்.

Posted in abuse, ADMK, Anbumani, Cho, Color TVs, Colour TV, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamalar, DMK, Entertainment, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya TV, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Makkal, Makkal TV, Manipulation, Media, MSM, News, PMK, Power, Ramadas, Ramadass, Ramadoss, Tamil Nadu, TamilNadu, Television, Thangabalu, Thankabalu, Thuglaq, TN, Vasanth, Vasanth&Co, Wars | Leave a Comment »

Book Introductions in Jeya TV by A Ku Njaanasambandhan

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

படித்த புத்தகம்

ஜெயா டி.வி.யில் தினமும் காலையில் ஒளிபரப்பாகி வருகிறது “படித்த புத்தகம்’ பற்றிய செய்தியை சொல்லும் நிகழ்ச்சி.

இதில் அ.கு.ஞானசம்பந்தன் கூறும் நூல்கள், நூல் பற்றிய பின்னணி விளக்கங்கள், நூலாசிரியர் குறிப்புகள் எல்லாம் மிக்க உபயோகமாக உள்ளன.

“பார்க்கும் ஆவல்’ அதிகரித்து, “படிக்கும் ஆவல்’ குறைந்து விட்டதை சமன்படுத்த முயலும் தூண்டுகோலாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

சென்ற வாரம், த.நா. குமாரசாமி பற்றியும், அவரது சகோதரர் த.நா. சேனாபதி பற்றியும் கூறினார். த.நா. குமாரசாமியின் மொழித்தேடல், வடமொழிப் புலமை பெற்றது, ரவீந்தரநாத் தாகூருடன் பழகியது போன்ற தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. மொத்தத்தில் தொலைக்காட்சிகளில் வரும் சில உருப்படியான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!

Posted in A Ku Njaanasambandhan, AK Njaanasambandham, AK Njaanasambandhan, Book, Books, Chenapathi, Chenapathy, Coomarasami, Coomarasamy, Introductions, Jaya, Jaya TV, Jeya, Jeya TV, Kumarasamy, Literature, Njaanasambandham, Njaanasambandhan, Njaanasambantham, Njaanasambanthan, Njanasambandham, Njanasambandhan, Njanasambantham, Njanasambanthan, Programme, Reader, Reviews, Senapathi, Senapathy, Television, TN Kumarasami, TN Kumarasamy, TV | Leave a Comment »

Madurai West Assembly by-poll: By-election details, campaign strategies, developments

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?

மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.

மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.

ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.

வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounders, By-election, by-poll, Campaign, Details, Developments, DMDK, DMK, Elections, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, JJ, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Madurai, Madurai West, News, Polls, Predictions, Primer, Strategy, Transfers, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Win, Winners | 5 Comments »

Battle royale in Tamil Nadu – Kodanadu estate: Jayalalitha vs Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

இன்ஸ்பெக்டர் உயிரோடு எரிப்பு: வானூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது கொலை முயற்சி வழக்கு- கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்

புதுச்சேரி, ஜுன். 8-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பற்றி தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி விமர்சனம் செய்ததை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. வினர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் வானூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணபதி தலைமையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது கருணாநிதியின் உருவ பொம்மையை அ.தி.மு.க. வினர் தீவைத்து எரித்தனர்.

தீயை அணைக்க போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள். இதனால் ஆவேசம் அடைந்த அ.தி.மு.க.வினர் பெட்ரோல் ஊற்றினார்கள். இந்த பெட்ரோல் ஆரோவில் இன்ஸ்பெக்டர் ஜவகர்லால் மீது பட்டு உடலில் தீப்பிடித்தது. படுகாயம் அடைந்த அவர், புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா உத்தரவின் பேரில் கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேரை ஆரோவில் போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவர். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கணபதி எம்.எல்.ஏ. உள்பட 28 பேர் மீதும்

  • 307(கொலை முயற்சி),
  • 143 (கலவரத்தில் ஈடுபட கும்பலாக கூடுதல்),
  • 147(கையில் ஆயுதங்கள் வைத்திருத்தல்),
  • 188(அரசு பேச்சை மீறுதல்),
  • 285 (தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு வருதல்),
  • 427(பொருட்களை சேதப்படுத்துதல்) மற்றும்
  • 332 (பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பது) ஆகிய 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

———————————————————————————————

இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 28 பேர் தவிர அ.தி.மு.க.வினர் அனைவரும் விடுதலை: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜுன். 9-

கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் தி.மு.க. வினருக்கும், அ.தி.மு.க. வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டசுமார் 12 ஆயிரம் அ.தி. மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள அ.தி.மு.க.வினர் தங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று ஜெயில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி, சேலம் மத்திய சிறைகளில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சிறையில் உள்ள அ.தி.மு.க.வினரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வானூர் இன்ஸ்பெக்டர் ஜவகரை உயிரோடு தீ வைத்து எரித்து கொல்ல முயன்றதாக கைதான 28 அ.தி.மு.க.வினர் தவிர மற்ற அனைவரையும் விடுவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

அரசுக்கு எதிராக அ.தி. மு.க.வினர் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் உரிய முன் அனுமதியும் பெறாமல் மாநிலம் முழுவதும் நடத்திய திடீர் போராட்டத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆரோவில் காவல் நிலைய குற்ற எண் 207-07-ல் இந்திய காவல் சட்டத்தின் பிரிவுகள் 143, 147, 188, 332, 426 மற்றும் 307 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள 28 பேரை தவிர்த்து மீதமுள்ள அனைவரையும் இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் விடுதலை செய்ய நட வடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு அரசு ஆணை யிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்படாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ள கணபதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 28 அ.தி.மு.க.வினரும் வானூர் இன்ஸ்பெக்டரை எரித்து கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. மனோகரன்,

2. கணபதி எம்.எல்.ஏ.,

3. ஒன்றிய செயலாளர் விசுவநாதன்,

4. முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கரன்,

5. கோட்டக்குப்பம் நகர செயலாளர் அம்ருதீன்,

6. இக்பால் பாஷா,

7. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சக்கரபாணி,

8. முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன்,

9. ஜெயலலிதா பேரவை ஒன்றிய தலைவர் முருகையன்,

10. எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் அறிவழ கன்

11. ஆகாசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன்,

12. மாவட்ட துணை செயலா ளர் நாகம்மாள்,

13. சிவக் குமார்,

14. ராமச்சந்திரன்,

15. முருகையன்,

16. ராஜி,

17. கண்ணன்,

18. அப்துல் ரசித்,

19. இப்ராகிம்,

20. பிரத்திவி ராஜ்,

21. ஜெயவேல்,

22. சுப்பு ராயன்,

23. அய்யப்பன்,

24. மற் றொரு கண்ணன்,

25, சந்திரன்,

26.வெங்கடேசன்,

27. பரசு ராமன்,

28. சிவமணி.

————————————————————————————-

Sunday, June 10, 2007

சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.

சேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.

சுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.

தினமணி

————————————————————————————-

Saturday, June 9, 2007

சிறையில் இருக்கும் 38 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க. வினர் நேற்று நடத்திய மறியல், கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. பி.கே.சேகர்பாபு (ஆர்.கே.நகர்)
2. கு.சீனிவாசன் (பூங்கா நகர்)
3. கே.எஸ்.விஜயகுமார் (கும்மிடிப்பூண்டி)
4. பி.பல ராமன் (பொன்னேரி)
5. கோ.அரி (திருத்தணி)
6. கு.பாண்டு ரங்கன் (அணைக் கட்டு)
7. சி.வி.சண்முகம் (திண்டிவனம்)
8. இரா.குமரகுரு (திருநாவலூர்)
9. செல்வி ராமஜெயம் (புவனகிரி)
10. அருண்மொழித்தேவன் (சிதம்பரம்).

11. கணபதி (வானூர்)
12. சி.சண்முகவேலு (உடுமலைபேட்டை)
13. எஸ்.தாமோதரன் (கிணத்துகடவு)
14. ஏ.கே.சின்ன ராஜ் (மேட்டுப்பாளையம்)
15. ஆர்.பிரேமா (அவினாசி)
16. சி.பொன்னுதுரை (பெருந்துறை)
17. எல்.ரவிச் சந்திரன் (சேலம்-1)
18. பி.தங்க மணி (திருச்செங்கோடு)
19. கே.பி.அன்பழகன் (பாலக்கோடு)
20. ஆர்.டி.கணேசன் (தேனி)

21. ம.குணசேகரன் (மானாமதுரை)
22. மு.சந் திரா (ராஜபாளையம்)
23. அனிதா ஆர்.ராதா கிருஷ் ணன் (திருச்செந்தூர்)
24. எல்.ராதாகிருஷ்ணன் (கோவில் பட்டி)
25. பெ. மோகன் (ஓட்டப்பிடாரம்)
26. போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்)
27. மு.பரஞ்ஜோதி (ஸ்ரீரங்கம்)
28. செ.சின்னச்சாமி (மருங்காபுரி)
29. ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)
30. துரைக்கண்ணு (பாப நாசம்)

31. எஸ்.இளமதி சுப்பிர மணியன் (வலங்கைமான்)
32. ஆர்.கே.பாரதிமோகன் (திருவிடைமருதூர்)
33. வீர கபிலன் (பேராவூரணி)
34. ஆர்.நெடுஞ்செழியன் (புதுக் கோட்டை)
35. ந.சுப்பிர மணியன் (குளத்தூர்)
36. செந்தில் பாலாஜி (கரூர்)
37. மா.சந்திரகாசி (வரகூர்)
38. க.ராஜேந்திரன் (ஜெயங் கொண்டம்)

எம்.பி.க்கள்

  1. பெருமாள்,
  2. சையதுகான் தங்க தமிழ்ச் செல்வன்,
  3. காம ராஜ்,
  4. நாராயணன் கோவிந்த ராஜன்

மாலைமலர்

Posted in ADMK, AIADMK, Arrest, Attack, Burnt, dead, Effigy, Inspector, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya TV, Jeyalalitha, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Law, MLA, MP, Order, Protest, Torture, Vaanoor, Vaanur, Vanoor, Villupuram | 1 Comment »

Nilakkottai Local Body President & Muthalamman Temple Hundi Collections

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

வாண வேடிக்கைக்குப் பதில் துப்பாக்கிச்சூடு!, கற்பூரப் புகைக்குப் பதில் கண்ணீர்ப்புகை, கோலாட்டம், கும்மியாட்டத்துக்குப் பதிலாக தடியடி! இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா.

சுத்துப்பட்டியில் உள்ள

  • சித்தர்கள் நத்தம்,
  • நல்லி செட்டிபட்டி,
  • மட்டப்பாறை,
  • ராமராஜபுரம்,
  • எத்திலோடு,
  • பிள்ளையார் நத்தம்,
  • அணைப்பட்டி போன்ற பல ஊர்களுக்கு முக்கியக் கோயிலாக விளங்குவது விளாம்பட்டி முத்தாலம்மன் கோயில்தான்.

கடந்த ஏப்ரல் மாதம் கோயில் திருவிழா தொடங்கும் முன்பே அறங்காவலர்கள் நியமன பிரச்னை அங்கே ஆரம்பித்து விட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க. அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி

  • ஆவுடையம்மாள்,
  • திரிபுரசுந்தரி

என்ற இரண்டு அறங்காவலர்களை அதிரடியாக அறிவிக்க, மாணிக்கம் என்பவரது தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அப்போது ‘திருவிழா முடிஞ்சதும் பேசித் தீர்த்துக்கலாம். இப்ப பிரச்னை பண்ண வேண்டாம்’ என பெரியவர்கள் சொல்ல, பிரச்னை தாற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
ஊர்கூடி ஒன்றாக நோன்பு காப்பு கழற்றப்பட்டதும் முத்தாலம்மன் கோயில் இருதரப்பினர் முன்னிலையில் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டது. ‘‘இனி பேச்சுவார்த்தை முடிந்த பின்னால்தான் கோயில் திறப்பு’’ என முடிவு செய்து விளாம்பட்டி காவல்நிலையத்தில் கோயில் சாவி ஒப்படைக்கப்பட்டது.

மே 16_ம் தேதி!

முருகன் _ மணிமாலா தம்பதியரின் பத்து வயது மகள் அபிநிஷாவுக்கு திடீரென அம்மன் அருள் வந்து விட்டதாக விளாம்பட்டியே பரபரப்பானது. அம்மன்போல் அலங்கரித்துக் கொண்டு வெறும் மஞ்சள் நீரை மட்டும் ‘மடக் மடக்’ என்று குடித்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடியபடி குறிசொன்னாள் அபிநிஷா. ‘‘வைகாசி பொறந்தாச்சு. கோயிலைத் திறந்து எனக்கு பூசை பண்ணுங்கடா!’’ என்று அம்மன் வாய்ஸில் அபிநிஷா பேச, ஆத்தா உத்தரவால் அரண்டு போனது விளாம்பட்டி.

சிறுமி அபிநிஷாவை யாரும் போட்டோ கூட எடுத்துவிடாமல் பொத்திப் பொத்தி பாதுகாத்தனர் ஊர்க்காரர்கள். அதோடு, பேச்சுவார்த்தையை உடனே ஆரம்பித்து கோயிலைத் திறக்க வேண்டும் என்று பரபரத்தார்கள். ஆனால், விளாம்பட்டிக்காரர்களின் கூக்குரல் எதுவும் தி.மு.க. வினர் மற்றும் போலீஸார் காதில் விழவேயில்லை.

இந்த நிலையில் 29.05.07 அன்று அம்பாசிடர் கார்களில் ஆவுடையம்மாள், திரிபுர சுந்தரி ஆகியோருடன் சோழவந்தானைச் சேர்ந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளாம்பட்டிக்கு வந்தனர். ‘‘கோயில் உண்டியல் இரண்டு வருடமாகவே எண்ணப்படாமல் இருக்கிறது. பணத்தை எண்ணி பேங்க்கில் போட வேண்டும்’’ என்று கூறி, கோயில் சாவியை போலீஸாரிடம் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

அவர்கள் கோயிலைத் திறக்க முயன்றபோது கொதித்துப் போனார்கள் விளாம்பட்டி மக்கள். ‘‘பிரச்னை இன்னும் இருக்கும்போது ஏன் கோயிலைத் திறக்கிறீங்க? சாவி யார் தந்தது?’’ என்று சண்டைக்கு வந்த அவர்கள், இதன் பின்னணியில் நிலக்கோட்டை யூனியன் சேர்மன் (தி.மு.க.) கோட்டைசாமி இருப்பதாக ஊகித்துக் கொண்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அதுமட்டுமல்ல, அறங்காவலர்களையும், அதிகாரிகளையும் அள்ளிப்போய் விளாம்பட்டி காவல் நிலையத்தில் போட்டு போலீஸாரிடம் விளக்கம் அளித்தனர்.

போலீஸார் விளாம்பட்டி மக்களின் விளக்கம் எதையும் காதில் வாங்கவில்லை. அறங்காவலர்கள், அதிகாரிகள் மீண்டும் கோயிலைத் திறக்க வழியேற்படுத்தித் தந்தனர். கோயில் திறக்கப்பட்டது மட்டுமல்ல, ஊர் மக்கள் யாருமில்லாமல் உண்டியலும் திறக்கப்பட்டதால் கொதித்தெழுந்தனர் விளாம்பட்டியினர். அறங்காவலர்கள் வந்த அம்பாசிடர் கார்களை அப்பளம் போல் அடித்து நொறுக்கினர். கண்ணாடிகள் பறந்தன. காவல் நிலையம் மீதும் கல்வீச்சு நடந்தது.

திண்டுக்கல் எஸ்.பி. பாரிக்கு இந்தத் தகவல் தெரியவர அவர் ஆர்.டி.ஓ. பேச்சியம்மாள், நிலக்கோட்டை தாசில்தார் கந்தசாமி ஆகியோருடன் வந்து பேச்சு நடத்தினார். அப்போதும் மக்கள் அடங்கவில்லை. எட்டு போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களின் ஆவேசத்தைத் தாங்க முடியாமல் போலீஸ் திணற ஆரம்பித்தது. இந்த சந்தடியில் கோயில் உண்டியல் கொள்ளை போனது. தி.மு.க.வினர் மீதும் தாக்குதல் நடந்தது.

மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்து வந்த ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் ஆரம்பத்தில் தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு நடத்திவிட்டு, கடைசியில் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள். அதில் காயமடைந்த குணசுந்தரி, சிவபிரகாஷ் போன்றவர்கள் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு விடியட்டும் என்று காத்திருந்த போலீஸார் விடியும் தறுவாயில் விறுவிறுவென செயலில் இறங்கினார்கள். விளாம்பட்டியில் அங்கங்கே மின்சாரத்தை அணைத்து விட்டு வீடு புகுந்து ஆண்கள், பெண்கள் என்று பார்க்காமல் அனைவரையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள். வீடுகளில் இருந்த டி.வி. பீரோ, ஃபிரிட்ஜ்களை உடைத்துப் பந்தாடினார்கள். விளாம்பட்டி கிராமம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் போல ஆகியது.

இந்தத் தாக்குதலின் போது போலீஸாருக்கு ‘எதிர்சேவை’யும் நடந்தது. அதில் டி.எஸ்.பி.க்கள் ருத்ரசேகர், போஸ் மற்றும் மூன்று பெண் போலீஸார் காயமடைந்தனர். அதனால் ஆவேசமடைந்த போலீஸார் 30_ம் தேதி முடிவதற்குள் விளாம்பட்டி கிராமத்தை போட்டுப் புரட்டி ஆண்கள் அத்தனை பேரையும் அமுக்கிப் பிடித்தனர், அவர்களை நிலக்கோட்டை, திண்டுக்கல் போன்ற இடங்களுக்குக் கொண்டு சென்றனர். இப்படிப் பிடிபட்ட ஆண்களில் பெரும்பாலானோர் பிளஸ் டூ, பத்தாவது முடித்த மாணவர்கள் என்பதுதான் பரிதாபம். பிடிபட்டவர்களில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் அடங்குவார்கள். வேறு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக இவர்கள் உடனே விடுவிக்கப்பட்டனர்.

போலீஸாரின் ‘நள்ளிரவு வேட்டை முடிந்த பின்னர் புலம்பலுடன் விளாம்பட்டி கிராமத்தில் பொழுது விடிந்தது. தாசில்தார் கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகளாகக் கணக்குக் காட்டி அதில் எழுபது பேரை போÊலீஸார் 30_ம் தேதி ரிமாண்ட் செய்தனர்.

ஆண்கள் நடமாட்டமே இல்லாமல் ஏற்கெனவே வெறிச்சோடிக் கிடந்த விளாம்பட்டியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. நாம் விளாம்பட்டிக்குச் சென்று அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

‘‘எப்பவுமே முத்தாலம்மன் கோயில் உண்டியலை தண்டோரா போட்ட பிறகுதான் திறந்து எண்ணுவாக. ஆனால் இப்ப நிலக்கோட்டை யூனியன் சேர்மன் கோட்டைசாமி சொன்னார்னு ஆட்கள் வந்து திறந்ததால் பிரச்னை வந்திருச்சு. போலீஸில் புகார் சொன்னோம். அவுக காதிலேயே வாங்கலை. அப்புறம்தான் கலவரம் முத்திப் போச்சு. காரை அடிச்சாங்க. போலீஸ் ஸ்டேஷன் மீது கல் வீசினாங்க.

எங்க வீட்டிலேயிருந்த நாலு ஆம்பிளைகளை போலீஸ் அள்ளிட்டுப் போயிட்டாக. இங்கே இப்ப ஆம்பிளையே இல்லைன்னு சொன்னால், அப்புறம் உனக்கு எதுக்கு சேலைதுணின்னு அசிங்கம் பண்ணினாங்கனு வீட்டு சாமான், டி.வி. பொட்டி எல்லாத்தையும் போலீஸ் போட்டு உடைச்சுது. இவங்க பண்ணின தப்பை மறைக்க இப்படி வெறியாட்டம் போடுறாக’’ என்றார்.

முத்தாலம்மன் கோயில் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக கருதப்படும் நிலக்கோட்டை சேர்மன் கோட்டை சாமியிடம் பேசினோம்.

‘‘என் மேல் எந்தத் தப்பும் இல்லை. இருந்தும் என்னை கல்லால் அடித்து காயப்படுத்தி விட்டாங்க. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த ஊர்க்காரர்கள்தான். அவர்கள் எப்படியாவது அறங்காவலர் ஆகணும் என்கிற வெறியில் ஊரைத் தூண்டி விட்டு வன்முறையில் இறங்க வைத்துவிட்டாங்க.

கோயில் உண்டியலை, இப்போ திறக்க வேண்டாம் என்றுதான் நான் சொன்னேன். மீறித் திறந்ததால் இந்த விபரீதம் நடந்து போச்சு. இப்போது இந்த கலவரத்துக்கே நான்தான் காரணம் என்று கதை கட்டி விடுறாங்க!’’ என்றார் அவர்.

விளாம்பட்டியில் போலீஸ் நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் எஸ்.பி. பாரியிடம் நாம் கேட்டோம்.

‘‘இப்போது விளாம்பட்டியில் முழு அமைதி ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம். எழுபது பேரை கைது செய்திருக்கிறோம். விரைவில் மாமூல் நிலை திரும்பி விடும்’’ என்றார்.

30_ம் தேதி திண்டுக்கல் கலெக்டர் வாசுகியும் விளாம்பட்டிக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். அவரிடம் போலீஸார் செய்த அட்டூழியங்களை பொதுமுக்கள் புகாராகக் கூறியிருக்கிறார்கள்.

கோட்டையில் ராஜாங்கம் செய்தால் மட்டும் போதாது. கோயில்களிலும் ராஜாங்கம் செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பதால் விளாம்பட்டி போன்ற விபரீதங்கள் மேலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். விளாம்பட்டி இப்போது அமைதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது மயான அமைதி.

– மருது


Author – Unknown

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திலுள்ள விளாம்பட்டி கிராமம் கள்ளர் பிரிவைச் சேர்ந்த முக்குலத்தோர் அதிகம் உள்ள ஒரு கிராமம். கிராமத்தின் முக்கிய தெய்வமான முத்தாலம்மன் கோயில் திருவிழா வருடாவருடம் அமர்க்களமாய் நடக்கும் ஒன்று.

இந்த வருடம் நிலக்கோட்டை கவுன்ஸிலராக (?) இருக்கும் கோட்டைச்சாமி என்பவர் கோயில் உண்டியலை உடைத்து அனைத்து வசூலையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதை தடுத்தவர்களையெல்லாம் அடித்து விரட்டிவிட்டு இந்தச் செயலை செய்துள்ளார். போராட்டம் நடத்திய மக்கள்மேல் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து சிலர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த பிரச்சினையை தடுக்க விளாம்பட்டி கிராமத்திலுள்ள அனைத்து ஆண்களையும் பிடித்து சிறையில் அடைத்துவருகிறார்கள். விளாம்பட்டியிலுள்ள ஆண்கள் தப்பிப்பதற்கு வேறு ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள்.

கிராமத்திற்கு மின்சாரம், தண்ணீர் முதலானவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்களும் வேறு வழியின்றி உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

அதாவது ஒரு ஊரே, ஒரு கொள்ளையை தடுக்க இயலாமல் எதிர்த்ததால் ஊரைவிட்டு விரட்டப்படுகின்றனர்.

இந்த விஷயத்தைப் பற்றி ஜெயா டிவி மட்டுமே செய்திகள் வெளியிட்டு
வருகின்றது.

ஹிந்து சமுதாயத்திற்கும், ஆன்மீக விடுதலைக்கும் போராடுவதாகச்
சொல்லிக்கொள்ளும் எந்த ஹிந்து அமைப்பும் இந்த பிரச்சினையில்
தலையிட்டதாகத் தெரியவில்லை.

கோட்டைச்சாமி அவர்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவராக உள்ளார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Avadi Amman, AvadiAmman, Charitable, Charity, Corruption, Council, Councillor, DMK, Hindu, HR&CE, Hundi, Jaya TV, Jeya TV, Law, Local Body, Muthalamman, Nilakkottai, Nilakottai, Order, Police, President, Religion, Religious, Temple, Velasundur, Vilaampatti, Vilampatti, Vilampatty, Village, Violence | Leave a Comment »