Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008
அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகளின் குழுவின் தீர்வுயோசனைகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசு விளக்கம்
 |
|
இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம |
இலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகாரப்பரவலாக்கல் ஊடான அரசியல் தீர்வினைக் காணும் நோக்கில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினால் நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் கையளிக்கப்பட்ட தீர்வு யோசனைகளை சர்வதேச சமூகத்திற்கு விளக்கிக்கூறும் நோக்கில் வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இன்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்பொன்றினை
நடத்தினார்.
அதன்பின்னர் பத்திரிகையாளர்கள் மாநாடொன்றினை நடாத்திய அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இனப்பிரச்சனைத் தீர்விற்கான முக்கிய யோசனைகளில் முக்கிய அங்கமாக இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தும்படி ஜனாதிபதிக்கு இந்த அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு விதந்துரை செய்திருப்பதாகத் தெரித்தார்.
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் என்பது 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின்மூலம் உருப்பெற்ற மாகாணசபைகளை சட்டரீதியாக உருவாக்க ஏதுவாக அமைக்கப்பட்ட சட்டமாகும்.
 |
|
இலங்கை அரசின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹுசைன் பைலா |
இது குறித்து பி.பி.சி தமிழோசைக்குத் தகவல் தெரிவித்த பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா இந்த தீர்வு யோசனகளில் கிழக்குமாகாண சபைக்கு உடனடியாகத் மாகாண சபைத்தேர்தல் ஒன்றினை நடாத்தும்படியும், வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடாத்தமுடியாத சூழ்நிலை காணப்படுவதால் அங்கு ஆளுனரிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் தற்காலிக அலோசனைக் கவுன்சிலொன்றும் உருவாக்கப்பட விதந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா வழங்கிய விசேடபேட்டியை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
அனைத்துக் கட்சிக் குழுவின் பரிந்துரைகளுக்கு இந்தியா ஆதரவு
 |
|
இந்திய அரசின் பேச்சாளர் சர்னா |
அதிகாரப்பரவல் மூலம் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக, அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, இடைக்காலப் பரிந்துரைகளை அளித்திருப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா
‘இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பகிர்வு வழிமுறைகள் மற்றும் ஆட்சிமொழி வழிமுறைகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் இடைக்காலப் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் தெரியப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள்தான் தீர்வு காண வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. அந்தத் தீர்வு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்’ என்றார்.
‘’இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை அரசுடனும், அந்நாட்டு மக்களுடனும் இந்தியா தொடர்ந்து செயலாற்றும். அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் பரிந்துரைகள் அப்படிப்பட்ட தீர்வுக்கு பங்காற்றுவதாக இருக்கும் நிலையில், அது வரவேற்கத்தகுந்த முதல் நடவடிக்கை” என்றும் தெரிவித்தார் இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான நவ்தேஜ் சர்னா.
கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் 16 உடல்கள் கண்டுபிடிப்பு
 |
|
இலங்கை போலீசார்- ஆவனப் படம் |
இலங்கையின் வடமத்திய பகுதியில் கெப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் உள்ள கிரிகெட்டுவௌ என்ற இடத்தில் 16 மனித சடலங்கள் இன்று பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
மண்குவியல் ஒன்றில் மனித கையொன்று தெரிந்ததைக் கண்ட சிவிலியன் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து பொலிசாருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற அனுராதபுரம் மாவட்ட நீதவான் சிவந்த மஞ்சநாயக்க அவர்களின் முன்னிலையில் அந்த இடத்தைத் தோண்டியபோது 10 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனருகில் காணப்பட்ட இன்னுமொரு மண்குவியலை சந்தேகத்தின் பேரில் தோண்டியபோது மேலும் 6 மனித சடலங்கள் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த 16 சடலங்களும் ஆண்களின் சடலங்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
முதல் 10 சடலங்களும் கடந்த இரண்டு தினங்களில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஏனைய 6 சடலங்களும் புதைக்கப்பட்டு சுமார் ஒரு வாரகாலம் இருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்திருக்கும் பொலிசார் இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.
நீதவானின் உத்தரவுக்கமைய இந்தச் சடலங்களை கெப்பிட்டிகொல்லாவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை கெப்பிட்டிகொல்லாவ பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
Posted in APRC, Eelam, Eezham, IPKF, LTTE, Mahinda, Rajapakse, Srilanka, Tamils | குறிச்சொல்லிடப்பட்டது: இந்தியா, இலங்கை, ஈழம், சிலோன், சுதந்திரம், தீவிரவாதம், பாதுகாப்பு, பிரபாகரன், போராட்டம், விடுதலைப் புலி | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007
போர்முனைக் “கேடயங்கள்’!
எஸ். ராஜாராம்
இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.
- புரூண்டி,
- காங்கோ,
- ருவாண்டா,
- லைபீரியா,
- சோமாலியா,
- சூடான்,
- உகாண்டா
உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.
ஆசியாவை பொருத்தவரை
- இலங்கை,
- ஆப்கானிஸ்தான்,
- மியான்மர்,
- இந்தியா,
- இந்தோனேஷியா,
- லாவோஸ்,
- பிலிப்பின்ஸ்,
- நேபாளம்
உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.
“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.
கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.
18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.
ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.
மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006
அன்டன் பாலசிங்கம் காலமானார்
 |
 |
அன்டன் பாலசிங்கம் |
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் இன்று இலண்டன் நகரில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கும் மேலாக விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றியதாகக் கருதப்படும் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள், இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகள் குழுவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் அவர் இருந்திருக்கிறார்.
பல ஆண்டு காலமாக இலண்டன் நகரில் வசித்து வரும் ஆண்டன் பாலசிங்கம் சில மாதங்களாகவே கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகளின் இரங்கல்
தமிழீழத்தின் ராஜகுருவாக திகழ்ந்த அன்டன் பாலசிங்கத்தை பிரிந்து தமிழ் இனம், ஆற்றுப்படுத்த முடியாத துயரில் மூழ்கியுள்ளது என்று அன்டன் பாலசிங்கத்தின் இல்லத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்டன் பாலசிங்கம் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் முழ்கியுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
விமர்சகர் கருத்து
பாலசிங்கத்தின் மறைவு விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் என்று கனடாவில் இருக்கும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.
 |
பாலசிங்கத்தின் மறைவால் தமிழ் தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது

விடுதலைப் புலிகள்
|
முதலில் இடது சாரி சிந்தனையாளராக இருந்த பாலசிங்கம், பிறகு தமிழ் தேசிய சிந்தனையாளராக மாறியதாகக் குறிப்பிட்ட டி பி எஸ் ஜெயராஜ், போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு சிக்கல்கள் வரும்போதெல்லாம், அந்த சிக்கலில் இருந்து புலிகளை அரசியல் ரீதியாக மீட்க பாலசிங்கம் பாடுபட்டார் என்றார்.
ஆனால் அதே சமயம், ஆயுதப் போராட்டத்தை அரசியல்ரீதியாக வழிநடத்துவதற்கு பதிலாக, ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டதாகவும் டி பி எஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.
Posted in Adele Ann, Anton Balasingham, Australia, bloodshed, British High Commission, cancer, cholangiocarcinoma, Colombo, diabetes, Eelam, Eezham, insulin, IPKF, Jaffna, journalist, London, LTTE, Marxism, moderate, Negotiator, Norway, Peace, Prabhakaran, Psychology, Rajiv Gandhi, Sri lanka, Stanislaus, strategist, Tamil Eelam, Tamil nationalism, Viduthalai Puli, Viduthalai Puligal | 2 Comments »