Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Congress’ Category

Economic upliftment for the needy – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஏழைகளின் எதிரி யார்?

“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.

ஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன?

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.

தென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

  • மேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;
  • தனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.
  • கேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,
  • தனியார் துறையில் 5.39%.
  • தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,
  • தனியார் துறையில் 11.35%.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.

இந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே?

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dinamani, Economy, Editorial, Finance, GDP, Needy, Op-Ed, Poor, Prices, Rich, Wealthy | Leave a Comment »

Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2008

நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்துப் பேசினாலும் பிர சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்ற மாகும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்திலும் வெளியி லும் இடைவிடாது கூறி வருகிறார்.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன் றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புக ளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக ஜெயலலிதா விளங்குகிறார். ஜெயலலிதா வால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாள்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒரு வன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகி றேன்.

13.4.2002 அன்று சென்னை ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் மற்றும் நண்பர்களும் பிர பாகரனின் நேர்காணல் குறித்துப் பேசினோம்.

ஆனால் 26.4.2002 அன்று முதல்வர் ஜெயலலிதா தலை மைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பின்வருமாறு அறிவித்தார். “”விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்த பின்னர் சென்னையில் ஆனந்த் திரையரங்கத்தில் கூட்டம் நடத்தப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அன்றைக்கு சட் டவிரோதமாக எந்த நடவடிக்கையிலும் கூட்டம் நடத்திய வர்களோ அல்லது பேசியவர்களோ ஈடுபடவில்லை என்று அரசுக்குத் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

(தின மணி 27-4-2002) கூட்டம் நடந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி. அதற்கு 13 நாள் கள் கழித்து ஏப்ரல் 26-ஆம் தேதி இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசியதற்காக எங்கள் மீது ஆகஸ்ட் முதல் தேதி பொடா சட்டம் ஏவப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஜெயலலிதா அரசு சிறையில் அடைத் தது. ஆனந்த் திரையரங்கக் கூட்டத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை என அறிவித்த முதலமைச்சரே அது சட்டவிரோதமான கூட்டம் என்று கூறி எங்களைச் சிறையில் அடைக்கிறார்.

பொடா சிறையில் ஓராண்டு காலம் நாங்கள் இருந்த பிறகு எங்களைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டு மென்று பொடா நீதிமன்றத்தில் மூன்று முறை நாங்கள் தாக்கல் செய்த மனுக்களை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத் தில் பிணை கேட்டு நாங்கள் மேல்முறையீடு செய்தோம்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் பொடா சட்டம் குறித்து ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வை.கோ. மற்றும் தோழர்கள், நெடுமாறன் மற்றும் தோழர் கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம், மனித உரி மைகள் மற்றும் சமூக நீதிக்கான அனைத்திந்திய முன்னணி, ஜே.சாகுல் அமீது ஆகியோர் பெயரில் தாக்கல் செய்யப் பட்ட 5 மனுக்கள் குறித்து 16.12.2003 அன்று உச்ச நீதிமன் றம் விசாரித்தது.
இந்திய அரசு சார்பில் வாதாடிய அடர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி, “”திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசி யதும் அமைச்சர் கண்ணப்பன் விடுதலைப் புலிகளை ஆத ரித்துப் பேசியதும் பொடா சட்டத்தின் கீழ் வராது” என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் எஸ். இராசேந்திரபாபு, ஜி.பி. மாத்தூர் அடங்கிய ஆயம் நடத்திய விசாரணையின் இறுதியில் தங்கள் தீர்ப்பில் பின்வ ருமாறு அறிவித்தனர். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தெரிவித்து வெறுமனே பேசுவது பொடா சட்டப் படி குற்றம் ஆகாது. பொடா சட்டத்தின் கீழ் கைது ஆகி ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை வழக்க மான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம்” என்று குறிப்பிட்டனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து 3-1-2004 அன்று தினமணி எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது. “”நமது நாட் டில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றுக்கு வாய் மொழி ஆதரவு தெரிவித்து பேசுவதற்காகப் பொடா சட் டத்தை ஒருவர் மீது பயன்படுத்தக் கூடாது என்ற பொருள் செறிவு உடைய விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்து தனது கனிந்த விசாலமான சட்டநெறிப் பார்வையைப் புலப் படுத்தியது.” நாங்கள் சிறைப்பட்ட ஓர் ஆண்டிற்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எங்களுடைய பிணை மனுவை நீதியரசர் சிர்புர்கர், தணிகாசலம் ஆகியோர் அடங் கிய ஆயம் விசாரித்தது. அதன் பிறகு அவர்கள் அளித்த தீர்ப் பில் பின்வருமாறு கூறினார்கள். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தருவது, வெறுமனே பேசுவது பொடா சட் டப்படி குற்றம் ஆகாது என்றும் பொடா சட்டத்தில் கைதாகி ஓர் ஆண்டிற்கு மேலாகச் சிறையில் இருப்பவர் களை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நெடுமாறன் உள்பட நான்கு பேரை பிணை யில் விடுதலை செய்கிறோம்” என்று அறிவித்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் எனது பேச்சு முழுவதையும் ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து தரச்சொல்லி நீதியரசர் சிர்புர் கர் முழுமையாகப் படித்திருக்கிறார். அதைப் பற்றியும் நீதி மன்றத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “”பிர பாகரன் தந்த பேட்டியைப் பற்றித் தான் தனது பேச்சில் முழுக்க முழுக்க நெடுமாறன் பேசியிருக்கிறார்.
பிரபாகரன் பேட்டி பற்றிய பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் பொடா வழக்கு போடுவதாக இருந்தால் அந்தப் பேட் டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், செய்தியை வெளி யிட்ட பத்திரிகைகள் என எல்லோர் மீதும் வழக்குப் போட் டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை” என்று அர சுத் தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி அவர் கேட்டார்.

“”வெறுமனே கூட்டத்தில் பேசினார் இளைஞர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் நெடு மாறன் பேச்சைக் கேட்டு இந்த ஊரில் வன்முறையில் ஈடு பட்டனர். கலவரம் நடந்தது என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி யைச் சுட்டிக்காட்ட முடியுமா?” என்றும் நீதியரசர் சிர்புர் கர் கேட்டபோது அரசுத் தரப்பு வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தது.

“”நெடுமாறன் ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்திருக்கி றார். சட்டப்படி ஓர் ஆண்டில் பிணை வழங்கப்பட வேண் டும். அவர் ஓர் அரசியல்வாதி. அரசியல் கருத்துகளைக் கூட கூறக்கூடாது என்கிறீர்கள். பொடா சட்டத்தைப் பயன்ப டுத்தி தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள். இது போல் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந் தப் பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியது குறித்து நெடுமாறனின் மனு விசாரணைக்கு வரும்போது அரசு நடத்தை பற்றியெல்லாம் நாங்கள் விசாரிப்போம்” என்று காட்டமாகக் கூறினார்கள்.

பொடா சிறையில் நான் இருந்த காலகட்டத்தில் என் மீது திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஆலந்தூர், வண்ணம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்க ளில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன், பிரி வினை வாதத்தைத் தூண்டினேன் எனக் குற்றங்கள் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாவற் றிலும் எனக்குப் பிணை அளிக்கப்பட்டால் தான் உயர் நீதிமன்றம் அளித்த பிணையின்படி நான் வெளியில் வரமு டியும். ஆகவே இந்த வழக்குகளில் எனக்குப் பிணை கிடைத்து விடாதபடி தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு மேற்கொண்டது.

மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட பொடா மறு ஆய் வுக் குழுவில் நீதியரசர் உஷாமித்ரா தலைவராகவும், கே.இராய்பால், ஆர்.சி.ஜா ஆகியோர் உறுப்பினர்களாக வும் இருந்து தமிழக பொடா வழக்குகள் குறித்து விசார ணையை நடத்தினார்கள். 15.4.2005 அன்று அவர்கள் அளித்த தீர்ப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் கள்.
“”13.4.2002 அன்று ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்கள் அரசியல் ரீதியா னவை. பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதோ அல்லது ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு வாயினால் ஆதரவு தெரிவிப்பதோ தடை செய் யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவதாகாது. மக்கள் பிரச் சினைகளுக்காகச் ஜனநாயக ரீதியில் போராடுவதாகவும் நெடுமாறன் தனது பேச்சில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் ஈழத் தமி ழர்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல உல கெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு விடிவைக் கொண்டு வரும் போராட்டமாக அவர்கள் அதைக் கருதுகிறார்கள்.

எனவே, இந்தப் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது தங்கள் வாழ் நாள் கடமை என்றும் அதற்காக அடக்குமுறைகளைச் சந் திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் படும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோ அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோ அதைப் புரிந்து கொள்ளுமாறு மற்றவர்களை வேண்டுவதோ பயங்கரவாதம் ஆகாது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக் கைக்கு ஆதரவு தருவதாகாது. எனவே, பொடா சட்டம் 21- வது பிரிவின் கீழ் அவர்களின் பேச்சுக்களைக் குற்றமாகக் கரு தமுடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சுக்களின் விளைவாக எத்தகைய வன்முறையும் எங்கும் நிகழவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தோற்றம் (டழ்ண்ம்ஹ ஊஹஸ்ரீண்ங்) எதுவும் இல்லை. பொடா நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் திரும்பப் பெற்ற வையாகக் கருதப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட 5 நபர்களுக்கும் எதிராக முன்தோற்றம் எதுவும் இல்லையென பொடா மறு ஆய்வுக்குழு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, பொடா சட்டத்தின் பிரிவு 2(3) ஆகியவற்றின் கீழ் உடனடி யாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அர சுக்கு இக்குழு ஆணை பிறப்பிக்கிறது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை மிகத் தெளிவாகவும் விளக்கமாக வும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசு வது பொடா சட்டப்படி குற்றம் இல்லை என்பதை தெளிவு படுத்திய பிறகும் முதலமைச்சராக இருந்த ஒருவர் எதையும் மதிக்காமல் திரும்பத் திரும்ப தவறான வாதங்களையே முன் வைப்பது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.

பொடா சட்டத்தை முன்தேதியிட்டு, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இச்சட்டத்தினால் பாதிக் கப்பட்டவர்கள், சட்ட வல்லுநர்கள், மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்திலும் பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட் டிருந்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற் றிய பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொடா சட்டத்தைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தியது. அது மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியை யும் பறித்ததுபோல் பொடா சட்டத்தை முன்தேதியிட்டு திரும்பப் பெறப்போவதில்லை என்றும் பொடா சட்டத் தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிதிகளின் படியே நடத்தப்படும் என்று முடிவு செய்தது. நாடெங்கும் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் பொடா சட்டத் தைத் திரும்பப் பெற முடிவு செய்து மன்மோகன்சிங் அரசு அதிலுள்ள பல கடுமையான பகுதிகளை இந்திய குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தில் இணைத்துவிட்டது. பொடா சட் டம் திரும்பப் பெறப்பட்ட போதிலும் அதனுடைய கொடும்கரங்கள் மறையவில்லை.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டு, தி.முக. ஆட்சி பீடம் ஏறிய பிறகும் கூட பலரின் மீதுள்ள வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க பொதுச் செய லாளர் வைகோ மற்றும் அவரது கட்சி தோழர்கள் எட்டு பேர், நான் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தோழர்கள், நக்கீரன் கோபால் மற்றும் முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 21 பேர் ஆக மொத்தம் 42 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். இவர்களில் நான் உட்பட எங்கள் 4 பேர் மீது உள்ள பொடா வழக்கு மட்டுமே தி.மு.க. ஆட்சி வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதுவும் பொடா மறு ஆய் வுக் குழு ஆணையை ஏற்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் அது நடந்தது.

ஆனாலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், வைகோ மற்றும் தோழர்கள், நக்கீரன் கோபால், முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த
… (Sunday Dinamani)
——————————————————————————————————————————————————————

உண்மையை மறைக்க முயல்கிறார் கருணாநிதி: பழ.நெடுமாறன் பதில்

சென்னை, மார்ச் 17: பொடா வழக்குகள் தொடர்பாக, நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், உண்மையை மூடி மறைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

என்னுடைய கட்டுரையில் பொடா சட்டத்தில் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை விவரமாகக் கூறியிருந்தேன். இறுதியாக, முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 பேர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், “42 பேரில் 4 பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு மீதி 21 பேர் தானா என்பதை அவரது கட்டுரையை படித்தவர்களே பார்த்துச் சிரிப்பார்கள்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறார். எந்தப் பிரச்னையையும் ஆழமாக அலசிப் பார்க்காமல் நுனிப்புல் மேயும் கலை அவருக்கே உரியது.

பொடா வழக்குகளை தமிழக அரசே நேரடியாகத் திரும்பப் பெற்று விட முடியாது. வழக்குகளை திரும்பப் பெறுவதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிறகும், நீதிமன்றத்தில் அவை நிலுவையில் இருப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என்று முதல்வர் உண்மைக்கு மாறான தகவலைக் கூறியிருக்கிறார்.

வைகோ மற்றும் தோழர்கள் வழக்கில் மறு ஆய்வுக் குழுவின் ஆணைப்படி, அரசு வக்கீல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக கொடுத்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்தது.

வைகோ சார்பில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அளித்த முறையீடு நிலுவையில் உள்ளது. எனவே, திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை அளித்தால் வைகோ மீதான வழக்குகள் முடிவுக்கு வரும். ஆனால், இதைச் செய்ய திமுக அரசு முன்வரவில்லை.

முன்தேதியிட்டு, பொடா சட்டம் திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அத்தனையும் முடிந்திருக்கும். மத்திய அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் இதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இதற்கு நேர்மாறாக மத்திய அரசு நடந்து கொண்டது.

பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தான் பாடுபட்டதாகக் கூறும் முதல்வர், தான் பதவியேற்ற பிறகும் அதைச் செய்யவில்லை என்பதுதான் என் கேள்வி.

உண்மைகளை தெரிந்து இருந்தும் அவற்றை மறைப்பதற்கு செய்யப்படும் முயற்சியாக இருக்க வேண்டும் அல்லது நிர்வாகம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆத்திரப்பட்டு அவதூறுகளை அள்ளி வீசுவதால் உண்மைகளை மறைத்துவிட முடியாது.

Posted in Arrest, Bail, BJP, Bonds, Congress, Correctional, Criminal, Eelam, Eezham, expression, Freedom, Gopal, Imprison, Independence, Inquiry, Jail, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Law, Liberation, LTTE, MDMK, Misa, MuKa, Nakkeeran, Nakkiran, Nedumaran, Order, POTA, Prison, Sri lanka, Srilanka, TADA, Tigers, VaiGo, VaiKo, Veerappan | 2 Comments »

BJP terms railway budget disappointing; Left opposes role for private players: Lalu’s last lap – Dinathanthi – Part 2

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

Part – 1 (Dinamani)
Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise « Tamil News

கட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்

மத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-

* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.

* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.

* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.

* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.
———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:
இந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வெளிநடப்பு

மத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-

இந்திய கம்ïனிஸ்டு

குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-

இந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.

ரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.

சமாஜ்வாடி கட்சி

சுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.

மோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.

பா.ஜனதா

சுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

வி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.

சிவசேனா

மனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.

இவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.

காங்கிரஸ்

ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்
சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

புதிய ரெயில் பாதைகள்

தமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

இது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

அகல ரெயில் பாதை

மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.

இந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.

இரட்டை ரெயில் பாதை

தமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.

பறக்கும் ரெயில்

காரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

சென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.

———————————————————————————————————————————————————————–

ரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது
பாராளுமன்றத்தில் ருசிகர காட்சிகள்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.

* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.

சோனியாவுடன் ஆலோசனை

* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.

* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.

கனிமொழி எம்.பி.

* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.

* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.

* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.

* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.

———————————————————————————————————————————————————————–


சென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
வாரம் ஒருமுறை இயக்கப்படும்

புதுடெல்லி, பிப்.27-

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.

ஏழைகள் ரதம்

பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.

இது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.

புதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-

* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(விருத்தாசலம் வழியாக இயக்கப்படும்)

* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)

* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)

* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)

* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்

* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை

* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை

* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்

* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை

இது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

பயணிகளுக்கு புதிய சலுகைகள்
60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்
சென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
மாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்
லாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்
கட்டணம் குறைப்பு


பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

புதுடெல்லி, பிப்.27-

2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.

சலுகைகள்

கடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கட்டணம் குறைப்பு

குளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.

குளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.

50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.

கூடுதல் படுக்கை வசதி

கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.

படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.

கல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’

தற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.

முதியவர்கள்

60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.

புதிய ரெயில்கள்

53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

எய்ட்ஸ் நோயாளிகள்

தற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.

பெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு

ரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.

ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.

தேயிலை

இந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.

சாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.

ரூ.52,700 கோடி திரட்ட இலக்கு

நடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

2 மணி நேரம் வாசித்தார்

லாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை

ரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’
ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து


புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரவேற்பும் எதிர்ப்பும்

லாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதுவும் இல்லை

இந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

ரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

மேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.

பேரழிவை தரும்

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

சிதம்பரம் பட்ஜெட்

இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்?… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.

* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.

* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.

* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.

* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.

* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.

* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.

* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.

* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.

* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.

* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.

* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.

* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.

* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.

* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.

* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

———————————————————————————————————————————————————————–

கட்டண குறைப்பு எவ்வளவு?

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-

தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு

100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1

200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2

300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3

400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4

500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5

700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7

900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8

குறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.

———————————————————————————————————————————————————————–

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை
செல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.

நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-

நீண்ட வரிசை இருக்காது

இன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.

பயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எந்திரங்கள் அதிகரிப்பு

முன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

இப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.

கம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.

இவ்வாறு லாலுபிரசாத் தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

சென்ற வருடம்:
Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion « Tamil News
Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely « Tamil News

2008022752331701.jpgஇந்திய ரயில்வே பட்ஜெட்

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே
லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே

குறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.

மூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.

12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.

ஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

 

எப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.

2008022752680101.jpgஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்

லாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்

ரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.


தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள்2008022752530601.jpgபுது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

ஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.

2008022752600701.jpgபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)

7.மதுரை-தென்காசி பாசஞ்சர் (தினசரி)

8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)

9.திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் (தினசரி)

2008022756941201.jpg10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)

14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை

2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை

3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்

4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை

நிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.
—————————————————————————————————————————————-
பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு

புதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

பயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

022708_07.jpgபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
—————————————————————————————————————————————-
என்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’

பாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.

2008022757960101.jpg“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.

நஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.

ரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

ரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

மாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.

—————————————————————————————————————————————-
ரூ.25 ஆயிரம் கோடி லாபம்

புதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

வரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.

அடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

பயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.

பயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.

ரூ.2.50 லட்சம் கோடி

முதலீடு

ரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.

எனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.

11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.

ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.

இணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

—————————————————————————————————————————————-
ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

புது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.

நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை

கர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை

பால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை

சேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”

இதுதான் அந்தக் கவிதை.

—————————————————————————————————————————————-
முக்கிய அம்சங்கள்

ரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை

சரக்கு கட்டணம் உயர்வு இல்லை

பெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்

இரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை

தாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்

முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.

வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்

காமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.

ஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல

சதவீத கட்டண சலுகை

—————————————————————————————————————————————-
லாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்

உயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு
சரக்கு கட்டண உயர்வு இல்லை
பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்

புதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.

புறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.

புறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.

பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.

தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

ரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.

பயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

பெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.

தாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’

இது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

தங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.

—————————————————————————————————————————————-
“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு

புதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:

17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.

எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

—————————————————————————————————————————————-
வட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி
புது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.

மக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.

தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.

இந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.

“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.

மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.

“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.

குஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).

மக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).

தனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.

காங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.

—————————————————————————————————————————————-

டிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்

புதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:

ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————-
ரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா?

சென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.

காச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.

இந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.

ஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.

மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.

—————————————————————————————————————————————-

AN EYE TO THE HUSTINGS

CUTS

FREIGHT

5% Petrol/diesel
14% Fly ash
6% Traffic to north-east
5% 2nd class fares for tickets >Rs 50
Re 1 Fares for tickets <Rs 50
7% AC 1st class
4% AC 2nd class
The Pay Commission’s impact
Operating ratio
07-08* 76.3
08-09** 81.4

Cash surplus

07-08* Rs 25,065 cr
08-09** Rs 24,782 cr
* Revised estimate ** Budget Estimate
 
 

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

Why Democracy survives in India? – N Vittal

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2008

ஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா?

என். விட்டல்

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.

விடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு?

அதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

உண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா? ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா?

60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.

முதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.

இந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.

ஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.

இந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.

இந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன? துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.

நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.

ஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.

அதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

எனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.

Posted in 144, Amartya, Bhutto, Churchil, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Culture, Democracy, Emergency, Epic, Federal, Freedom, Govt, Hindu, Hinduism, Hindutva, History, Independence, Indhra, India, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Law, Liberation, Mahabharatha, Misa, National, Naxal, Oppression, Order, Pakistan, Police, POTA, Republic, Sen, TADA, Tradition, Values, Vittal | Leave a Comment »

What is behind DMK’s war of words with Congress? – Dinamani ‘Ajathasathru’

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கருணாநிதி கோபப்படுவது ஏன்?

 அஜாத சத்ரு

காங்கிரஸ் கட்சியில் தமிழ்நாடு பொறுப்பாளர் அருண்குமார் தற்செயலாக சென்னை விமான நிலையத்தின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தும், அவருடன் ஒன்றாக விமானத்தில் பயணித்ததும் ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வு.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீங்கள் விஜயகாந்துடன் அரசியல் பேசினீர்களா என்கிற நிருபர்களின் கேள்விக்கு, “ஆமாம், அரசியல் பேசினோம். என்ன பேசினோம் என்பதை நேரம் வரும்போது வெளியிடுகிறேன்’ என்று சர்வசாதாரணமாக தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் சொன்ன பதிலிலும் எந்தவித அதிசயமோ ஆச்சரியமோ இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், இதை ஏதோ விபரீதமாகவும், அருண்குமார் இமாலயத் தவறு செய்துவிட்டது போலவும் திமுக தலைமை சித்திரிக்க முயல்வது ஏன் என்பதுதான் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடமிருந்து முதல் கண்டனம் வந்திருக்காது.

“”அருண்குமார் ஒரு பார்ப்பனர். அவர் மரியாதை நிமித்தம் முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காத நிலையில் விஜயகாந்தை மட்டும் சந்தித்துப் பேசுவது எப்படி?” என்கிற விதத்தில் கி. வீரமணியின் காட்டமான அறிக்கையால் விஷயம் முடிந்துவிட்டது என்று நினைத்தால், திமுகவின் நிர்வாகக் குழு தனது தீர்மானத்தில், காங்கிரசுக்கு எச்சரிக்கையும், அறிவுரையுமாகத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

இந்த அளவுக்கு திமுக ஒரு சாதாரண சம்பவத்தைப் பெரிதுபடுத்துவானேன்? அருண்குமார், விஜயகாந்த் சந்திப்புக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டா?

“”தலைவர்கள் சந்தித்துக் கொள்வது, பேசுவது என்பது சாதாரணமான விஷயம். சமீபத்தில் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டார்களே! இல. கணேசன் அடிக்கடி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கத்தானே செய்கிறார்? இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மரியாதைநிமித்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோபப்பட்டால் எப்படி?” என்று கேட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

1998 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மதுரையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகிய மூவரும் வந்ததாகவும், திமுக கூட்டணியில் இருந்தபோதும் த.மா.கா. தலைவர் மூப்பனார் ஜெயலலிதாவிடம் சிரித்துப் பேசியதை முதல்வர் கருணாநிதி விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கருணாநிதி பயப்படுவது ஏன் என்று புரியாமல் குழம்பும் காங்கிரசார்தான் அதிகம். “”யார் யாரைச் சந்தித்துப் பேசினாலும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, சோனியா காந்தி என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் கூட்டணி அமையும். பிறகு ஏன் இப்படி அலட்டிக் கொள்ள வேண்டும்?” ~ இப்படிக் கேட்பது மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர்.

விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி ஒரு கூட்டணிக்குக் காங்கிரஸ் சம்மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமல்ல, தேமுதிக – காங்கிரஸ் கூட்டணி என்பது திமுக மற்றும் அதிமுக அமைக்கும் கூட்டணிகளுக்கு மாற்றாகவோ, அந்த அளவுக்கு பலமானதாகவோ இருக்க முடியாது என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். இடதுசாரிகள் சேர்ந்தால் ஒருவேளை அந்தக் கூட்டணி பலம் பெறலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

“”எங்களைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுடன் கூட்டணி என்பதில் தெளிவாக இருக்கிறோம். இடதுசாரிகள் நிச்சயமாகக் காங்கிரசுடன் எந்தவிதக் கூட்டணியும் வைக்கப் போவதில்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையும் அதுதான் என்று உறுதிப்படுத்துகிறார் டி. ராஜா.

காங்கிரஸ், திமுகவின் தோழமைக் கட்சியாகத் தொடரும் என்பதில் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ஏன் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் இல்லை?

காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது எப்போதுமே திமுகவை ஏற்றுக்கொள்வதில்லை. திமுக எதிர்ப்பு என்பது இந்த காங்கிரஸ் அனுதாபிகளின் ரத்தத்தில் ஊறிய விஷயம்” என்று தெரிவிக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

சோனியா காந்தியைக் கடுமையாக விமர்சித்ததன் மூலம் காங்கிரஸ் அனுதாபிகளின் வெறுப்பை ஜெயலலிதா சம்பாதித்துக் கொண்டதால்தான் அவர்கள் திமுகவை ஆதரிக்க முற்பட்டிருக்கிறார்களே தவிர, அடிப்படையில் அவர்கள் திமுகவைவிட அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்புவார்கள் என்கிறார் அவர். அந்தப் பிரமுகர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கிய கட்சி என்கிற கோபமும், காமராஜரைத் தோற்கடித்த கட்சி என்கிற வெறுப்பும் பழைய தலைமுறை காங்கிரஸ்காரர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெறும் அளவுக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததையும், சுட்டிக்காட்டிய திமுக பிரமுகர் ஒருவர், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலையும் உதாரணம் காட்டினார். நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலில் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, திமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் பயம் அதுதான். இதுபோன்ற சந்திப்புகள், யூகங்களுக்கு இடமளிக்கும் என்பதால், காங்கிரஸ் வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சோனியா காந்தி இருக்கும்வரை தனது தனிப்பட்ட நெருக்கத்தின் மூலம் கூட்டணி தொடர்வதில் எந்தவிதத் தடையும் இருக்காது என்று முதல்வர் கருணாநிதிக்குத் தெரியும். ஆனால், காங்கிரசின் வாக்கு வங்கி முழுவதுமாகக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லாமல் போனால், கூட்டணி தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விடும்.

காங்கிரஸ் வாக்கு வங்கி சிதறி, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக பலமடைந்து விட்டால்? அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அதிமுகவின் தயவை நாடாது என்று என்ன நிச்சயம்?

கருணாநிதிக்கு ஏன் கோபம் வருகிறது என்பது இப்போது புரிகிறதா?

Posted in Ajathasathru, Alliance, Andhra, Andhrapradesh, AP, Arunkumar, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamani, Dismiss, DK, DMDK, DMK, Govt, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Modi, Sonia, support, Veeramani, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Paa Jeyaprakasam & Other new books in Chennai Book Fair – Tamil Literature, Fresh Arrivals

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா?

சென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.

1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.

  • ஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,
  • சோவின் “இந்துதர்மம்’,
  • பண்டித கல்யாணராமனின் “பாலராமாயணம்’,
  • ஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,
  • அ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

வெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூடம்:

இன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்

  • தஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,
  • பத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்
  • “ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.

பொன்னி புத்தகக் காட்சியகம்:

பொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக

  • கோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,
  • புவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா?’,
  • இந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.
  • இங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,
  • “வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.

வசந்தா பிரசுரம்:

வசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக

  • பட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,
  • பூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,
  • சௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.
  • “அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.

———————————————————————————————————————————————————

ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்!

சென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.

இதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன.17-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

விருது வழங்கும் விழா

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளுவர் கோட்டம்

இந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.

ஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அரசியல் லாபம் அல்ல

நேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.

எந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.

புறக்கணிக்கவில்லை

தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

பத்தாத பணம்

ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.

எனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.5 ஆயிரம்

இதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

அங்கீகாரம்

விழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.

அம்பேத்கார் விருது

முன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

நூலாசிரியருக்கு பரிசு

2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

அகரமுதலி வரலாறு

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Posted in Ambedkar, Announcements, Arrivals, Authors, Awards, Books, Chennai, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Critic, Criticism, Dictionary, Events, Exhibition, Fair, Fresh, Functions, Gatherings, Jeyapragasam, Jeyaprakasam, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Literature, Meetings, MK, Money, Nallakannu, Nallakkannu, Prizes, Tamil, Writers | Leave a Comment »

NREGA – National Rural Employment Gurantee Act: Job Guarantee Schemes – Corruption

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வீணாகும் வரிப்பணம்

மக்களின் நல்வாழ்வை முன்னிலைப்படுத்தி நிறைவேற்றப்படும் நல்ல திட்டங்கள் பல, ஒரு சிலரின் சுயநலத்தைப் பூர்த்தி செய்வதற்கும், அரசுப் பணத்தை இந்தத் திட்டங்களின் பெயரால் கொள்ளையடிப்பதற்கும்தான் பயன்படுகின்றன என்பதை சுதந்திர இந்தியா பலமுறை பார்த்தாகிவிட்டது. அந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் திட்டம்தான் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மிகப்பெரிய சாதனை என்றும், ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கை, காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னம் என்பதை உறுதிப்படுத்தும் திட்டம் என்றும் புகழப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு வழிவகுத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை. ஊழல் மற்றும் திறமையின்மை காரணமாக இந்தத் திட்டம் எதற்காக, யாருக்காக நடைமுறைப்படுத்தப்பட்டதோ அவர்களைப்போய் சேராமல், தேசிய அளவில் அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில அரசியல்வாதிகள் பயன்பட உதவி இருப்பதாக அந்த அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்தியாவின் 330 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆண்டொன்றுக்கு ரூ. 1,200 கோடி. இந்தத் திட்டத்தின்படி, கிராமப்புறத்தில் வேலையில்லாத எந்தவொரு குடும்பமும் ஆண்டில் நூறு நாள்கள் குறைந்தபட்சம் வேலைவாய்ப்புப் பெறும் என்கிற உறுதி அளிக்கப்படுகிறது. அதன் மூலம் கிராமப்புறத்திலுள்ள அத்தனை வேலையில்லாத குடும்பங்களுக்கும் ஆண்டொன்றுக்கு குறைந்தது 8,000 ரூபாய் வருமானம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் திட்டத்தின் லட்சியம்.

உன்னதமான லட்சியத்தாலும், கிராமப்புற மக்களுக்குக் “கை’ கொடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடனும் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து வேதனை தெரிவித்திருக்கிறது தேசிய தணிக்கை அறிக்கை. குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி செய்த, ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில்தான் மிக அதிகமான முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. பிப்ரவரி 2006 முதல் மார்ச் 2007 வரையிலான 14 மாதங்களில், வெறும் 18 நாள்கள்தான் சராசரியாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒரு குடும்பத்திற்குத் தரப்பட்ட சராசரி ஆண்டு வருமானம் வெறும் ரூ. 1,500 தான் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

முறையான ரசீது மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பல லட்சம் ரூபாய்கள் இந்தத் திட்டத்தின் பெயரால் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. ஹரியாணாவில் இத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் வேறு திட்டங்களுக்குச் செலவிடப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. வேலையே நடைபெறாமல் செலவுக் கணக்குகள் மட்டும் எழுதப்பட்ட இடங்கள் ஏராளம்.

மத்தியப் பிரதேசத்தில், பதிவேடுகள் எழுதப்படுவதற்கு முன்பே ஓரிடத்தில் ரூ. 10.68 லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில், வேலை கோரிய 40,587 குடும்பங்களுக்கு வேலை தரப்படவோ, ஊதியம் தரப்படவோ இல்லை. ஆனால், கணக்கு மட்டும் காட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவிதச் சிக்கலுமே இல்லை. இங்கே வேலையில்லாதவர்களே கிராமப்புறங்களில் இல்லை என்று அரசு தெரிவித்து, யாருக்குமே ஊதியம் வழங்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதைத் தணிக்கை அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.

இதுபோன்ற நல்ல திட்டங்கள் பல மத்திய அரசால் அறிவிக்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்தி அதன் பயனை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. மத்தியிலிருந்து கிடைக்கும் பணம் என்றாலே, கேள்வி கேட்க ஆளில்லாத அனாமத்து நிதியாதாரம் என்றுதான் மாநில ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கருதுகிறார்கள். விளைவு? இந்தத் திட்டங்களின் பயன் பொதுமக்களைச் சென்று சேராமல், இடைத்தரகர்களின் கஜானாக்களை நிரப்புகிறது.

முறையாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால், அகில இந்திய ரீதியில் மத்திய அரசின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, கிராமப்புற மக்களின் அவலமும் வறுமையும் சற்று குறைந்திருக்கும். சென்செக்ஸ் உயரவோ குறையவோ செய்யாது எனும்போது, அதைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை?

Posted in abuse, assurance, Bribery, Bribes, Budget, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, Employment, Govt, Guarantee, Gurantee, Haryana, households, job, kickbacks, Madhya Pradesh, MP, National, NREGA, Poor, Power, Rural, Schemes, Village, Women, Work | Leave a Comment »

Jan 12 – Peace Accord, LTTE, AK Anotony, Eelam, Sri Lanka Muslim Congress

Posted by Snapjudge மேல் ஜனவரி 13, 2008

போர் நிறுத்தத்தில் இருந்து இலங்கை அரசு விலகியிருப்பதால் உதவி வழங்கும் நாடுகள் வருத்தம்

இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டிருப்பதற்கு இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டின் இணைத்தலைமை நாடுகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளன. அத்தோடு இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் தீர்வினை ஒருபோதும் காணமுடியாது என்றும் அவை தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் போன்ற நான்கு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையொன்றில், பேச்சுக்களினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கு தமது முழு ஆதரவினையும் வழங்கதயாராக இருப்பதாகவும், நோர்வேயின் அனுசரணைப்பணி தொடரப்படவும் தமது ஆதரவினை வெளியிட்டுள்ளன.

நின்றுநிலைக்கக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டமொன்றினை பூர்த்திசெய்யும்படி இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள இணைத்தலைமை நாடுகள், சகலதரப்பினரும் சிவிலியன்களைப் பாதுகாப்பது தொடர்பாக சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருக்கின்றன.

இணைத்தலைமை நாடுகளின் சார்பில் இலங்கைக்கான நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் மனிதாபிமான தொண்டு நிறுவனங்களின் உதவிப்பணிகள் தேவைப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கு அனுமதிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

 


இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே நல்லது – இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே ஏண்டனி
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே ஏண்டனி

இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது என்றும் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஏண்டனி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இலங்கை அரசுக்கு இந்தியா உதவுமா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, “நமது அணுகுமுறை அடிப்படையானது. இலங்கை தனி இறையாண்மை கொண்ட, அண்டை நாடு என்ற முறையில் அந்த நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். அந்த நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான அனைத்து உரிமைகளும் அந்நாட்டு அரசுக்கு உண்டு. ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண்பதைவிட, அரசியல் தீர்வு காண்பதே அந்த நாட்டுக்கு நல்லது’’ என்றார் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஏண்டனி.

இதனிடையே, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரணாப் முகர்ஜி, “இலங்கைப் படைகளுக்கும் எல்டிடிஇ பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தைப் பொருத்தவரை, அதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. எந்த ஒரு நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும், அந்த நாட்டின் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு’’ என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

“அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளை, அந்த நாட்டின் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது’’ என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார்.


இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் உட்கட்சி பூசல்

அமைச்சர் அமீர் அலி
அமைச்சர் அமீர் அலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டமொன்று அமைச்சரொருவரின் பின்னணியில் குழப்பப்பட்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ள அக்கட்சியின் அரசியல் உயர் பீட உறுப்பினரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூட்டத்தை குழப்பிய குழுவினரால தமது வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றார்.

அரசாங்கம் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு ஜனநாயக விரோதப் போக்கை கடைப் பிடிப்பதாகவும் குறிப்பிடும் அவர், இது தொடர்பாக பொலிசிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

தன்னை தொடர்புபடுத்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால் தெரிவிக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் அமைச்சர் அமீர் அலி.

Posted in Accord, Anotony, Congress, defence, Defense, Eelam, Eezham, LTTE, Peace, SLMC, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Media distortion of News by Dinamalar & Thinamani: Viduthalai

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

நாட்டு நடப்பு: சோ – மோடி – பார்ப்பன ஏடுகள்

தினமலர்

பொதுத்தொண்டில் மிக நீண்ட காலம் பணியாற்றி பல்வேறு தியாகத் தழும்புகளைப் பதக்கங்களாக ஏற்றுப் பொலிவுறும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர் விருது வழங்கியிருப்பதானது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், தினமலர் பார்ப்பனப் புத்தி அதனை எப்படி பார்க்கிறது? எப்படி செய்தி வெளியிடுகிறது?
நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருது என்று மற்ற ஏடுகள் எல்லாம் தலைப்புக் கொடுத்திருக்க, தினமலர் எப்படி செய்தியை வெளியிடுகிறது? நல்லகண்ணுக்கு தமிழக அரசு ரூ.ஒரு லட்சம் என்று தலைப்புக் கொடுக்கிறது.
விருதையும், அண்ணல் அம்பேத்கரையும் பின்னுக்குத் தள்ளி, பணத்தை முன்னுக்கு வைக்கிறது தினமலர்!

செத்து சுடுகாடு போன பிறகும் ஆண்டுதோறும் திதி என்ற பெயரால் பணம் பறிக்கும் கருமாதிப் புத்தி தினமலரைவிட்டு எப்படிப் போகும்? அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே!


தினமணி

சோ ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஒன்றில், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி பங்கு கொள்கிறாராம். அது சென்னை – காமராசர் அரங்கில் நடைபெறுகிறதாம். மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை எப்படி வாடகைக்கு விடலாம் என்ற பிரச்சினைபற்றி எழுத வந்த தினமணியின் வைத்தியநாத அய்யர்வாள் சந்தடி சாக்கில் கந்தகப்பொடி தூவும் தம் நச்சு வேலையின் கொடுக்கைத் துருத்திக் காட்டியிருக்கிறார்.

பெரியார் திடலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிப்பதுபற்றி சொல்லிவிட்டு, திராவிடர் கழகத்தைப்போல காங்கிரஸ் கட்சி வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று சில காங்கிரஸ்காரர்கள் சொன்னதுபோல செய்தியாக வெளியிடுகிறது தினமணி.

அறிவு நாணயம் தினமணிக்கு இருக்குமானால், அப்படி சொன்னவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாமா?
துக்ளக் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட இந்தப் பார்ப்பன ரொட்டியான வைத்தியநாதய்யர் தினமணியின் ஆசிரியராக வந்ததுமுதல் துக்ளக்கின் மறுபதிப்பாகவே தினமணியை மாற்றிக் காட்டிவிட்டார். தன்னுடைய அந்தரங்க வெறுப்பை காங்கிரஸ் பேரால் ஏற்றிக் கூறுகிறார்.

மெமோரியல் ஹாலில் தந்தை பெரியார் பேசுவதற்கு இடம் தர முடியாது என்று சொன்ன நேரத்தில், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தாராளமாகக் கூறக்கூடிய பொதுமன்றம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று கருதிய தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம். இது திராவிடர் கழகத்தின் கொள்கை உறுதியையும், எந்தக் கருத்தையும் எதிர்கொள்ளும் துணிவையும் பறைசாற்றும். கடவுளையும், பக்தியையும் வியாபாரப் பொருளாக்கிய கூட்டம் அல்லவா? அதனால்தான் எதையும் வியாபாரக் கண்கொண்டு பார்க்கிறது.

இதுபற்றிப் பல தடவை விளக்கிக் கூறப்பட்ட பின்னரும், வைத்தியநாத அய்யர்கள் தங்கள் பூணூல் தனத்தைக் காட்டிக்கொண்டு இருப்பது அவாளின் பிறவிக்கோணல்புத்தி என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
சோவை அனுமதிப்பவர்கள் மோடியை அனுமதிப்பதில் என்ன தயக்கம்? சோவைப்போல் மோடியைத் தூக்கி வைத்து ஆடுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?

பார்ப்பனீய – இந்துத்துவா வெறியில் மோடி விஷம் என்றால், திருவாளர் சோ ராமசாமி அந்த விஷத்தின் ஊற்றாயிற்றே!

குஜராத்தில் சிறுபான்மை மக்களை வேட்டையாடிய மோடியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சோ கொஞ்சியதுபோல, வேறு யாராவது அவ்வளவுப் பச்சையாக வெறித்தனமாக நடந்துகொண்டது உண்டா?
ஆற அமரச் சிந்தித்தால் இதன் ஆழமும், அகலமும் நன்கு புரியுமே!

Posted in Ambedkar, BJP, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dhinamalar, Dhinamani, Dinamalar, Dinamani, distortion, DK, Gujarat, Journals, Magazines, Magz, Media, Modi, MSM, Nallakannu, News, Newspapers, papers, RSS, Thinamalar, Thinamani, Veeramani, Vidudhalai, Viduthalai, Vituthalai, Zines | Leave a Comment »

Rajaji’s predictions on Independent Indian Politics & Indo-Pak relations: Dr. HV Hande

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

நினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது!

டாக்டர் எச்.வி. ஹண்டே

வரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:

“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”

இந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

இதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:

“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”

இதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.

35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்! யாரும் கேட்கவில்லை.

அப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.

ராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.

எடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.

நீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.

அனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.

ஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”

நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது? என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

எது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

ராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.

எழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.

“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’

Posted in Anjali, Bribery, Bribes, Cong, Congress, Congress Party, Corruption, Diary, Forecasting, forecasts, Freedom, Gandhi, Hande, Handey, History, HV Hande, Independence, Independent, India, Indo-Pak, Jinna, Jinnah, kickbacks, Memoirs, MK, Notes, PAK, Pakistan, Politics, Predictions, Rajagopalachari, Rajagopalachariaar, Rajagopalachariar, Rajagopalachariyar, Rajaji, Relations, SAARC, Vision, Voices | Leave a Comment »

Is educational credential required for people’s representatives? – D Purushothaman

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

பள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்!

டி. புருஷோத்தமன்

எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.

பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.

மேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.

கேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.

ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.

குஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.

ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா!

பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.

துவக்கத்தில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.

உயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

பல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.

அரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா? அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Posted in Bengal, Bihar, BJP, BSP, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Citizen, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), credentials, Education, Election, eligibility, Gujarat, Haryana, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Kamaraj, kamarajar, Kamraj, Kerala, Lalloo, Laloo, Lalu, maharashtra, MLA, MP, people, Polls, Purushothaman, Qualifications, Requirements, RJD, Shiv Sena, Shivsena, Teachers, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Votes, WB, West Bengal, Yadav | Leave a Comment »

Analysis of Himachal Pradesh Assembly 2007 Election Results

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

அபாய எச்சரிக்கை

“வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட நூறாயிரம் பேர்; ஆனால், தோல்வியின் பழியைச் சுமக்க ஆளேயில்லை’ என்பார்கள். இமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று யாராவது கேட்டால், அதற்கு சரியான பதில் இதுதான்~கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்ன காரணமோ அதேதான் காரணம்!

பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் குஜராத்தைத் தொடர்ந்து இப்போது இமாசலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருப்பது, அந்தக் கட்சிக்குப் பெருகிவரும் ஆதரவைக் காட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இமாசலப் பிரதேச வெற்றிக்கு முக்கியமான காரணம் பாஜக ஆதரவு அலை என்பதைவிட காங்கிரஸ் எதிர்ப்பு அலை என்பதை மறந்துவிட முடியாது.

தேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றுவது என்கிற வழிமுறையை இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்காளர்கள் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம், எந்த ஆட்சியாலும் மக்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியாமல் இருப்பதா அல்லது வேறு வழியில்லாததால் ஆட்சியை மாற்றி மக்கள் தங்களது கோபத்தைக் காட்டுகிறார்களா என்று தெரியவில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாறுகிறதே தவிர காட்சிகள் மாறவில்லை என்பதுதான் உண்மை. சென்ற தடவை பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ, அதே ஊழல், நிர்வாகத் திறமையின்மை, உள்கட்சிப் பூசல்கள் போன்ற குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

இன்றைய இமாசலப் பிரதேசத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் டாக்டர் ஒய்.எஸ். பர்மார். சுமார் 17 ஆண்டுகள் தொடர்ந்து இமாசலப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர். அவர்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது மட்டுமல்ல, அவருக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக அமைந்த எந்த அரசுமே, அவரது ஆட்சியால் பெற முடிந்த மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை. அதற்குக் காரணம், அவரது கறைபடியாத கரங்களும், தன்னலமற்ற மக்கள்தொண்டும்தான்.

தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் ஆட்சியை மாற்றும்போது, வெற்றி பெற்றுவிட்டோம் என்கிற களிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், எந்த அரசியல் கட்சியும் தோல்வி அடைந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து பாடம் படிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இந்த விஷயத்தில், காங்கிரஸýம் சரி, பாஜகவும் சரி, மற்ற மாநிலக் கட்சிகளும் சரி, கொஞ்சமும் மாறுபாடே இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இமாசலப் பிரதேசத்திலும், குஜராத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்துகிறது. பாரதிய ஜனதா ஒரு மதவாத சக்தி என்று மேடைக்கு மேடை முழங்குவதால் காங்கிரஸ் கட்சி பலமடைந்துவிடாது என்பதுதான் அது. மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சியைத் தேடுகிறார்கள். தங்களது தேவைகளைப் புரிந்துகொண்ட, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியை விரும்புகிறார்கள். அதைத் தர முடியாத வரையில், மதவாத கோஷம் வெற்றியைத் தேடித் தராது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் வெற்றி, மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியைப் பிடிக்க உத்தரவாதம் அளிக்குமா என்று கேட்டால், உதட்டைப் பிதுக்குவதைத் தவிர வழியில்லை. அதேநேரத்தில், மாநிலங்களில் காணப்படும் ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி, மத்திய அரசின் மீதும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? விவசாயிகளின் மனக்குமுறலும், விலைவாசி உயர்வும், பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் மத்திய அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து வருகின்றன என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

பல தொகுதிகளில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைத் தடுத்திருக்கிறது என்பதையும், பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலம் என்று அதிகரித்து வருவதையும் இத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸின் இமாசலப் பிரதேசத் தோல்வி, அடுத்து தேர்தல் நடக்க இருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே ஓர் அபாய எச்சரிக்கை என்றுதான் கூற வேண்டும்.

Posted in 2007, Alliance, Analysis, Bahujan Samaj Party, Bharatiya Janata Party, BJP, BSP, Campaign, Citizen, Coalition, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dhumal, election commission, Elections, Gujarat, Himachal Pradesh, Himachal Vikas Party, HP, HVC, HVP, Polls, Prem Kumar Dhumal, PremKumar Dhumal, Results, Sonia, Sukh Ram, SukhRam, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttarakhand Kranti Dal, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Vijai Singh Mankotia, Vote, voters | Leave a Comment »

Row over Priyanka Vadra’s friend getting ‘ultra-special’ profs quarters – Jawaharlal Nehru University

Posted by Snapjudge மேல் திசெம்பர் 20, 2007

தவறான முன்னுதாரணம்!

பெரிய பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அதனால்தான், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்கிற பழமொழி வழக்கில் இருக்கிறது. மகாத்மா காந்தி உலகுக்கு வாழ்ந்து காட்டிய பாதை அதுதான். அவரது வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்களே அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, பொதுவாழ்வு எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

முக்கியமான தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. நேரு குடும்பத்தைப்போல, மிக அதிகமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்புத் தரப்படுவது அவசியம்தான். ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கேள்விப்படும்போது, பாதுகாப்பை விலக்கினால்கூடத் தவறில்லையோ என்று தோன்றுகிறது.

புதுதில்லியைப் பொருத்தவரை, ஏ.கே. 47 ஏந்திய காவலர்களுடன் பவனி வருவது என்பது பெருமைக்குரிய விஷயம். இதற்காக, வேண்டுமென்றே போலி அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி பாதுகாப்புப் பெற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, தலைநகர் தில்லியில் மட்டும் பாதுகாப்புத் தரப்படும் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 391. இதற்காக சுமார் 7000 சிறப்புக் காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினரை சில அரசியல் தலைவர்கள் நடத்தும் விதம், நாகரிக சமுதாயத்துக்கே ஒவ்வாதது என்று தகவல். தகுதி இல்லாதவர்களுக்கும் தேவை இல்லாதவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காகப் பாதுகாப்புக் கொடுப்பதுதான் அத்தனை கேலிக்கூத்துகளுக்கும் காரணம். ஆட்சிகள் மாறுகிறதே தவிர, சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் பயன்பாடு குறித்த தெளிவான அணுகுமுறை இதுவரை ஏற்படவில்லை என்பதுதான் வேடிக்கை.

சமீபத்தில் இன்னொரு சம்பவம். இந்தப் பிரச்னையில் சிக்கி இருப்பது பிரதமரின் அலுவலகம் என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு சராசரி விரிவுரையாளருக்கு, அனுபவமிக்க பேராசிரியருக்குத் தரப்படும் இருப்பிடம் வரம்புகளை மீறி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிகிறது.

பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பித்து ஒரு சாதாரண விரிவுரையாளருக்கு சிறப்பு இருப்பிடம் வழங்க வேண்டிய அவசியம் என்ன? மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு விடை சீக்கிரமே கிடைத்தது. அந்த விரிவுரையாளரின் மனைவி, பிரியங்கா வதேராவின் தோழியாம். பிரியங்கா வதேரா எப்போதாவது தனது தோழியைப் பார்க்க நினைத்தால்? பிரியங்காவின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் அலுவலகம் துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு செய்த ஏற்பாடுதான் இது!

அத்துடன் நின்றதா விஷயம் என்றால், அதுவும் இல்லை. அந்த விரிவுரையாளருக்குத் தரப்பட்டிருக்கும் பங்களா துணைவேந்தரின் பங்களாவுக்கு நிகராக எல்லா விதத்திலும் செப்பனிடப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது. எதற்காக? எப்போதாவது தனது தோழியைச் சந்திக்கப் பிரியங்கா வதேரா வருவார் என்பதற்காக!

பெரிய இடத்துத் தொடர்புகள் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதற்கு இது உதாரணமா, இல்லை நமது அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகம் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டா, இல்லை பிரதமர் அலுவலகம் தனது எஜமான விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்கு இது ஒரு மாதிரியா என்று தெரியவில்லை.

இப்படி ஒரு தவறான முன்னுதாரணத்துக்குப் பிரதமர் அலுவலகமே ஆட்படும்போது, நமது மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும், அதிகார துஷ்பிரயோகத்திற்கான “கின்னஸ்’ சாதனையே படைத்து விடுவார்கள் என்று நம்பலாம். வாழ்க, இந்திய ஜனநாயகம்!

Posted in Arun, Arun Singh, ArunSingh, Bhattacharya, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Education, Gandhi, Gandi, JNU, PMO, Priyanga, Priyanka, Professors, Protection, Security, Sonia, University, Vadhra, Vadra, Vathra, Z | Leave a Comment »

‘Indo-US accord on Nuclear deal is a must for growth’ – DMK chief Karunanidhi’s daughter Kanimozhi

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

அணுசக்தி ஒப்பந்தம் அவசியத் தேவை!: கனிமொழி

புதுதில்லி, டிச. 4: அமெரிக்காவுடனான “123′ ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதால் வரவேற்பதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.

கனிமொழி பேசியதாவது:

இந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, அணுசக்தி பயன்பாட்டு ஒப்பந்தத்தினை நமது நாடு ஏற்கத் தேவையில்லாத நிலையும் ஏற்படும் என்று நானும் எனது கட்சியும் நம்புகிறோம்.

இதன் மூலம் கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பது மட்டுமல்ல, ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

சிலர் இது முறையற்ற ஒருசார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், “நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நாளிதழ்கள் அமெரிக்கா நமக்கு அதிகச் சலுகை வழங்கியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை தம்மோடும் செய்து கொள்ள வேண்டுமென்ற பாகிஸ்தான் கேட்டிருக்கிறது. சீன ஏடுகளும் அமெரிக்கா அரசியல்வாதிகள் சிலரும் இந்தியாவை அணுசக்தி வல்லரசாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, இந்திய அரசு நமது நாட்டுக்கு நன்மை செய்திருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த 123 ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது; நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எங்கள் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

2020 ஆம் ஆண்டில் சீனா அணு மின்நிலையங்களின் மூலம் 40000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நமக்கு 2020 ஆம் ஆண்டு வாக்கில் 20000 மெகா வாட் அணு உலைகள் மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால், இந்த 123 ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.

நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், அதற்குப் பல காலம் பிடிக்கும்.

அரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த பிரச்னைகள் தவிர சுற்றுச்சூழல் பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. எரிசக்தியில் ஏறத்தாழ 85 சதவிகிதம் நிலக்கரி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் மூலமாகத்தான் உற்பத்தியாகிறது. இந்த பொருள்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை நாம் நமது வாயு மண்டலத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அதாவது, வினாடிக்கு 730 டன் என்ற அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது.

சில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால், அவற்றால் நமக்குத் தேவையான அளவுக்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

நான் இதுபோன்ற மின்உற்பத்தி நிலையங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவை நமது தேவையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.

அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்கிற கருத்தும் வாதமாக வைக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்களின் விபத்துகள் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் காட்டிலும் மிகக்குறைவான உயிரிழப்புக்களையே ஏற்படுத்தியிருக்கின்றன.

உலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் அதற்கான கச்சா பொருளையும் நாம் பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின்உற்பத்தி தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக நமக்குத் தேவையான எரிசக்தி கிடைக்கும் என்பது குறித்து பேசிய நான், ராணுவ அடிப்படையில் அமெரிக்காவோடு நாம் நெருங்க முடியும் என்ற கருத்தை வெளியிடவில்லை. புதிய நூற்றாண்டில் நுழைந்திருக்கும் நாம் நம்பிக்கையையும், சுய உறுதியையும் வளர்த்துக்கொண்டு நம்முடைய சுதந்திரத்தை இழக்காமல், கொள்கையிலும் செயல்பாட்டிலும் மற்ற நாடுகளோடு இணைந்து பணியாற்றும் வலிமை நமக்கு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும் உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ளத் தேவையில்லை.

இந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில்நுட்பத்தைத் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அரசாங்கம் இந்த அவைக்கு தெளிவு படுத்த வேண்டும்.

இந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது. இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க உருவாகியுள்ள கௌரவப் பட்டியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் கனிமொழி.

Posted in 123, Accord, America, Atom, Atomic, BJP, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), daughter, deal, DMK, Electricity, Growth, Indo-US, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Nuclear, Power, US, USA | 1 Comment »