Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர், 2007

Ramar sethu, Minority Governments, Politics+Religion: ‘Thuglaq’ Cho Interview in Dinamani

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2007

Thuklaq Cho Interview Ramar Sethu Ram ADams Bridge BJPசேது சமுத்திரத் திட்டத்துக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அர சியல் ரீதியாக எழுப்பப்படும் சர்ச்சைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.
ராமர் பாலத்தை இடிப்பதற்குத்தான் தடை விதித்தி ருக்கிறது. வேறு மாற்று வழிகள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஏதா வது ஒன்றைத் தேர்ந்தெடுத்து சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் ஆட்சே பனை இருப்பதாகத் தெரியவில்லை. யாருமே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதபோது ஏதோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு, முக்கிய மாகத் திமுக தலைமை முயல்கிறது. ராமர் பாலத்தை இடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, சேது சமுத்திரத் திட்டத்தில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ராமாயணம் என்பது காவியம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அதற் குப் புனிதத்தன்மை உண்டா, இல்லையா என்ப தில்தானே விவாதமே? ராமாயணம் ஒரு புனிதமான நூல். அது ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் புனித நூல்களைப் பற்றியும் கேட்கலாம். உலகில் புனிதம் என்று கருதப்படும் எல்லா விஷயங்க ளைப் பற்றியும் கேட்கலாம். மற்ற மதங்களைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எப்படி மற்ற மதங்க ளின் நூல்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின் றனவோ அதேபோல இதுவும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். எப்படி மற்ற மத நூல்களை விமர்ச னம் செய்து அவர்களது மனம் புண்பட்டு விடக்கூ டாது என்று நினைத்துச் செயல்படுகிறார்களோ } முதல்வர் கலைஞர் எப்படிச் செயல்படுகிறாரோ – அதேபோல இந்துமத நம்பிக்கைகள் விஷயத்தி லும் செயல்பட வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலப் பிரச்னை யாக மாறி இப்போது ராமர் கடவுளா கட்டுக்க தையா என்று திசை திருப்பப்பட்டிருக்கிறதே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? யார் திசை திருப்பியது?

மத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ராமரும் மற்ற கதாபாத்திரங்க ளும் வெறும் கற்பனையே என்று குறிப்பிட்டது.

அதனால்தான் மத்திய அரசு தனது தவறை உணர்ந்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற்றது. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த விவாதம். இப்படி ஒரு விவாதத்தை ஆரம் பித்தது ஏன் என்று மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தீர ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று கூறலாமா? ஆராய்ந்தார்களா இல்லையா என்பது தெரி யாது. ஆனால், இதை நாங்கள் ஆராயத் தேவை யில்லை, அதனால் நாங்கள் ஆராய்ச்சி செய்ய வில்லை என்று இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India) கூறுகிறது.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் புவி இயல் துறை (Geological Survey of India) ஆராய்ச்சி செய்திருக்கிறது என்பது அவர்கள் வாதம். புவி இயல் துறை என்பது ஓர் இடம் அல் லது பொருள் எந்த அளவுக்குப் பழமையானது என்பதைத் தீர்மானிக்கும் துறை. கால நிர்ணயம் செய்வது மட்டும்தான் அவர்களது வேலை. மனித முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தீர் மானிக்கக் கூடிய வல்லுனர்களோ செயல்திறனோ அந்தத் துறைக்கு இல்லை என்பது பல நிபுணர்க ளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரே இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். புவி இயல் துறை யின் ஆராய்ச்சிப்படியே, இந்த ராமர் சேது பல்லா யிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது நமது நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் விஷயம்.

தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் இல்லாமல் இது வெறும் மணல் திட்டுகள் என்று கூறுவதை எப்படி விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி முடிவு என்று கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.

விஷயம் இப்போது திசைமாறி இறை நம் பிக்கை சார்ந்ததாக மாறிவிட்டது.

ராமர் காவிய நாயகன் மட்டும்தானா அல்லது கடவுளா? நீங் கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்போது எல்லா மதங்களாலும் வணங்கப்ப டும் கடவுள்கள் கடவுள்கள்தானா? ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை? ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன? அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன? கண்ணகியின் வரலாற் றில் இருப்பதெல்லாம் உண்மைதானா என்பதை எந்த விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது?

அது நம் பிக்கைதான். அந்த நம்பிக்கை எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதே போல மற்றவர்கள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏன் நினைப்பதில்லை? எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி? அந்த வாதமே பகுத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே? இன்றைக்கு நீங்களோ நானோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க முற்பட்டால் அப்போது, நாம் கூறுகிற விஷயங்கள் பற்றி ஆதாரம் கேட்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருக்கும் மத நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்டால் எப் படி?

வால்மீகி ராமாயணத்தில் சேது குறிப்பிடப்ப டுகிறது. பாலம் எப்படிக் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது, அந்த இடம் புனிதமானது என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நம்பினார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை பெருவாரியானவர் கள் நம்புகிறார்கள்.

வால்மீகி ராமாயணப்படி ராமர் சோமபானம் அருந்தினார், குடிகாரர் என்பது போன்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வால்மீகி ராமாயணத்தில் ராமர் குடிகாரர் என்று எங்கும், எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
“சோம’ என்கிற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறுதான் இந்தச் சோமபானம். இது அமுதத்துக்கு நிகரானது என்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அது போதை வஸ்து அல்ல. சோமபானம் பற்றி வேதங்களிலும், புரா ணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால், அந்த சோமபானத் தைக்கூட ராமர் அருந்தியதாக ராமாயணத்தில் எந்த இடத்திலும் கிடையாது. அனுமன் சீதையி டம் மாமிசம், மது இரண்டையும் ராமர் தொடுவ தில்லை என்று கூறுவதாக வருகிறது. ராமர் பிராம ணன் அல்ல, க்ஷத்திரியன். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அரச குடும்பத்தினர் மாமிசம் சாப்பிடு வதை எந்தத் தர்மமும் வேதமும் தடுக்கவில்லை.

ஆனால், வால்மீகி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகக்கூட எந்த இடத்திலும் இல்லை.
இந்த இடத்தில்கூட, மாமிசம் என்பதற்குப் பழங்க ளிலுள்ள சதைப்பிடிப்பான பாகங்கள் என்பதாகத் தான் அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.

மது அருந்துவதில்லை என்பதற்கு என்ன விளக்கம்? மது என்பது மலர்களில் இருந்து கிடைக்கும் மக ரந்தம். அதாவது, தேன் என்பது போதை வஸ்து என்கிற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. சமஸ் கிருதத்தில் மது என்பது தேன். தேன் என்றால் } மகரந்தம், தேன், பால், சுவையுள்ள ரசம் என்றெல்லாம் அர்த்தம். தமிழில் மது என்பது போதை வஸ்து. போதை வஸ்து சுராபானம் அல்லது பானம் என்றுதான் ராமாயணத்திலும் வட மொழி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.
நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்கள். அதனால் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்பதுதான் உங்கள் வாதம், சரிதானே? இதுவரை நான் ராமர், ராமர் சேது என்பதெல் லாம் நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்கள் என் றும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது, என்றும்தான் வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இன்று இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. “பாரத் க்யான்’ என்ற அமைப்பை நடத்துகிற டி.கே. ஹரி என்பவர் ஒரு பல் ஊடக விளக்கம் (Multi media presentation)- ஐ எனக்குக் காண்பித்தார். அதில் ராமர் வாழ்ந்ததற்கும், இந்த அணை கட்டப்பட்டதற்கும் பகுத்தறிவாளர்கள்கூட மறுக்க முடியாத வலு வான ஆதாரங்கள் உள்ளன. இது இன்னும் ஒரு சில நாட்களில் இணையத்தில் (Internet) கிடைக் கும் என்றும் அது இந்தப் பிரச்சினையில் தெளி வைத் தரும் என்றும் கூற விரும்புகிறேன்.

ராமர் பாலமா மண் திட்டா என்பது அல்ல பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டத்துக்குத் தடையாக இருப்பதை அகற்றுவ தில் என்ன தவறு?

கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டால் வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய மைதானம் கிடைக்கும். மைலாப்பூர் மாடவீதிகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம்.

எல்லா நகரங்களிலும் இருக்கும் கோயில்கள், மசூ திகள் மற்றும் மாதா கோயில்களை இடித்து விட் டால் போக்குவரத்து நெரிசலையும் இடப்பற்றாக் குறையையும் தீர்த்து விடலாம். இடித்துவிட வேண்டியதுதானே? செய்து விடுவார்களா? வளர்ச்சிதானே? அதே போல, இதுவும் இடிக்கப்ப டக் கூடாது. அதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். இதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷ யம். மக்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்தக் கூடாது.

இப்படி ஒரு ராமர் பற்றிய சர்ச்சை முதல்வரால் ஏன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவருக்கு மத்திய அரசின் மீது அசாத்திய கோபம். மத்திய அரசு முதல்வர் கலைஞரின் வழி காட்டுதலில் நடக்கும் அரசு என்று இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களும் ஆமோ தித்து வருகிறார்கள். இந்த நிலையில், தன் சொல்லை சேது சமுத்திர திட்ட விஷயத்தில் மத் திய அரசு கேட்கவில்லையே என்கிற கோபம் அவ ருக்கு. ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு.

திமுக கட்டாயப்படுத்தி இருந்தால் மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் அவரது கருத்துப்படி நடந்திருக்காது என்று நினைக்கிறீர்களா?

ஆதரவை வாபஸ் வாங்குகிறேன் என்று காங்கி ரஸ் சொன்னால் இவரது கதி என்ன? இவர் மத்தி யில் ஆதரவை வாபஸ் வாங்கினாலும், இடதுசாரி களின் ஆதரவு இருக்கும்வரை மன்மோகன்சிங் அரசு ஆட்சியில் தொடர முடியும். ஆனால், அதற் குப் பிறகு மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி திமுக ஆட்சியில் இருக்காது. தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கூட்டணி இவருக்குத் தேவை. அத னால் ஒருபோதும் மத்திய அரசை வற்புறுத்தவோ, ஆதரவை வாபஸ் வாங்கவோ முதல்வர் கலைஞர் துணியமாட்டார்.

வேதாந்தி என்பவர் முதல்வருக்கு விடுத்தி ருக்கும் கொலை மிரட்டல் பற்றி என்ன கூறுகிறீர் கள்?

அது காட்டுமிராண்டித்தனமான செயல். தனது கூற்றுக்கு அவர் பகவத் கீதையைத் துணைக்கு அழைத்திருப்பது அதைவிட அபத்தம். பகவத் கீதையில் எந்த இடத்திலும் கடவுளை நிந்தித்துப் பேசுபவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும், நாக் கைத் துண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட வில்லை. தவறாக எதையோ பேசிவிட்டு, அதற் குத் தவறாக ஒரு காரணத்தையும் கூறுகிறார் அவர். அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் நியாயம் என்று கருதுகி றேன்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன என்று நினைக்கிறீர்கள்?

என்னுடைய அபிப்பிராயத்தில், இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த ராமர் பிரச்னையை மேலும் தவறான அணு குமுறைகள் மூலம் பெரிதுபடுத்தாமல் இருக்கும் வரை, காங்கிரசைப் பொருத்தவரை பெரிய அள வில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஏனென்றால், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இன்னமும் உள்கட்சிக் குழப்பங்களில் சிக்கியிருக்கிறது.

அப்படியானால், இப்போது தேர்தல் நடந்தா லும் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு மீண்டும் அமைவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கிறது என்று கூறுகிறீர் கள், அப்படித்தானே?

காங்கிரஸ் கட்சி அமைத்திருப்பது ஒரு சிறு பான்மை அரசுதான். ஐக்கிய முற்போக்கு கூட் டணி என்பது இடதுசாரிகளின் தயவில் ஆட்சி அமைத்திருக்கும் ஒரு மைனாரிட்டி அரசு, அவ்வ ளவே. கூட்டணியிலுள்ள கட்சிகளும் சரி, பெரிய அளவில் எந்தக் கட்சியும் பலவீனம் அடைந்திருப் பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை, தேர்தல் என்று வந்தால் அரசியல் மாற்றங் கள் எப்படி ஏற்படும் என்று இப்போது சொல்ல முடியாது.

தமிழகத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவேளை, அதிமுக ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டால், திமுக கூட்டணி இங்கே ஒரு பெரிய சரிவைச் சந்திக்கக்கூடும். அதன் விளைவுகள் நிச்சயமாக மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதை நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அதற்கான வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறீர்களா?

ஏன் மாறக்கூடாது? தனக்குப் பலமான ஒரு கூட்டணி வேண்டும் என்று ஜெயலலிதா உணரமாட்டார் என்று ஏன் நினைக்க வேண்டும்? அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன? இந்த இரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது அவர்கள் அமைக்கும் பலமான கூட்டணிகள்தான் என்பது ஊரறிந்த உண்மை.

கருணாநிதி கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பது, கலந்தாலோசிப்பது என்று செயல்படுவது போல ஜெயலலிதா செயல்பட மாட்டார் என்று அவர்கள் கருதுகிறார்களே?

கலைஞர் மீது பாமகவுக்கும் சரி, இடதுசாரிகளுக்கும் சரி நம்பிக்கை இருப்பது உண்மையானால், இதுபோல அரசுக்கு எதிராக எதுவும் அவர்கள் பேச வேண்டிய அவசியமே இல்லையே! காங்கிரûஸ எடுத்துக்கொண்டாலும் சரி, இந்த ராமர் சேது பிரச்னைக்குப் பிறகு முதல்வர் கலைஞர் மீதும் திமுகவின் மீதும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்; வெளியில் சொல்ல முடியவில்லை, அவ்வளவுதான். முதல்வர் கலைஞர் தோழமைக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவார், மற்றவர்களைப் பேசவிடுவார், ஆனால் அவர்கள் சொல்வது எதையும் செய்ய மாட்டார். ஜெயலலிதாவிடம் அந்தத் தொந்தரவு எதுவும் கிடையாது. பேசவும் மாட்டார், பேசவிடவும் மாட்டார், அவ்வளவுதான்.

விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்?

சரத்குமாரின் பலம் என்ன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜயகாந்தின் தேமுதிகவைப் பொருத்தவரை, வேறொரு கட்சியின் கூட்டணியில் தனது பலத்தைச் சேர்க்க முடியுமே தவிர, தனித்து வெற்றி பெறுமளவுக்கு அவரது கட்சி பலமடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.

தேமுதிகவின் அடிப்படை அரசியலே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்று என்பதாக இருக்கும்போது அவர் எப்படி இந்தக் கட்சிகளின் கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும்?

இப்படிச் சொன்ன கட்சிகள் எல்லாமே, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கின்றன. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியுமானால், திமுகவும் மதிமுகவும் கூட்டணி அமைக்க முடியுமானால், தேமுதிக மட்டும் கூட்டணியில் சேர முடியாதா என்ன? தேமுதிக தனித்து நிற்பதால் எந்தப்பயனும் இருக்காது என்பதுதான் எனது கருத்து.

பாரதிய ஜனதா கட்சியின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பாரதிய ஜனதா முதலில் தனது உள்கட்சி குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்வானி வருவாரா, வாஜ்பாயி வருவாரா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இதுவரை வரவில்லை. நரேந்திர மோடியை காங்கிரஸ் தோற்கடிக்காவிட்டாலும் சரி, நாமே தோற்கடிப்பது என்பதில் பாஜகவிலேயே ஒரு கோஷ்டி முனைப்பாக இருக்கிறது. இதுபோன்ற உள்கட்சிப் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் தீர்த்துக்கொண்டு, பழையபடி கட்டுக்கோப்பான கட்சியாக மக்கள் மன்றத்தைச் சந்தித்தால் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கேட்டால், கட்சித் தலைமை எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்குச் சாத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி, காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி இரண்டுமே இல்லாத மூன்றாவது அணி மத்திய அரசியலில் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்படி காணப்படுகிறது?

நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவோ, பங்கேற்போ இல்லாமல் ஓர் ஆட்சி மத்தியில் அமைவது என்பது சாத்தியமே இல்லை. அப்படி ஓர் ஆட்சி அமைவதைவிட, காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சிதான் நிலையான ஆட்சியாக இருக்கும்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா?

என்னுடைய அபிப்ராயத்தில், ராகுல் காந்தியால் பெரிய அளவில் காங்கிரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிட முடியாது. ராஜீவ் காந்தியேகூட, இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையினால் ஆட்சி அமைக்க முடிந்ததே தவிர, தனிப்பட்ட செல்வாக்கால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு அங்கீகாரம் இருக்கும் என்பதும் கட்சிக்குப் புத்துணர்வு ஏற்படும் என்பதும் உண்மை. அதற்குமேல், இந்திய அரசியலில் ராகுல் காந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார் என்று நான் நம்பவில்லை. நேரு குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இப்போது நிச்சயமாக இல்லை. அப்படி இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி ஏன் மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டும்?

தமிழகத்தைப் பொருத்தவரை கருணாநிதி குடும்பத்தின் வாரிசுத் திணிப்பு எந்த அளவுக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

முதல்வர் கலைஞரின் குடும்ப அரசியல் நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். இது நிச்சயமாக அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய பிரசார ஆயுதமாக இருக்கும். எந்த அளவுக்கு அந்தப் பாதிப்பு திமுகவின் வெற்றி தோல்வியைப் பாதிக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.

கட்சியைப் பொருத்தவரை ஸ்டாலினை அவர்கள் வாரிசாக ஏற்றுக்கொண்டாகிவிட்டது. அவருக்கு எதிராகக் கட்சியில் யாருமே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஒரு தேர்தலுக்காவது நிச்சயமாக ஸ்டாலினின் தலைமை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்றெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆளும் கட்சியே இதுபோன்ற அடையாள வேலைநிறுத்தத்தை அறிவிப்பது தவறு என்று நீதிமன்றங்களே பல தீர்ப்புகள் அளித்திருக்கின்றன. ஆனால் அந்தத் தீர்ப்புகள் வந்தும்கூட இது போன்ற அறிவிப்புகள் தொடர்கின்றன என்பது வருத்தப்பட வைக்கும் விஷயம். தமிழக ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் அறிவித்திருக்கும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் வேடிக்கை என்னவென்றால் எதை எதிர்த்து இவர்கள் இந்த பந்த் அறிவிப்பைச் செய்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.

காரணம் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருக்கும் பந்த் இது என்கிறீர்களா?

சேது சமுத்திரத் திட்டத்தை அதிமுக, பாஜக உட்பட யாருமே எதிர்க்கவில்லை. நீதிமன்றமும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. சரி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த பந்த் என்று சொன்னால், இவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். மத்திய அரசிலும் அங்கம் வகிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக இருப்பது திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுதான். அப்படியிருக்க இப்படி ஒரு பந்த் அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும். மக்களை இம்சை செய்வது என்பதுதான் அது.

Posted in Adams, ADMK, BJP, Bridge, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPM, DMK, Governments, Govt, Interview, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, minority, Paalam, PMK, Politics, Ramar, Rameswaram, Religion, Sethu, Setu, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, TN, TR Baalu, TR Balu, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Chithra Lakshmanan series in Cinema Express – K Subramaniyam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

நெஞ்சம் மறப்பதில்லை – BBC Tamil

 

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்தவர்கள் பற்றிய தொடர்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மேதைகள்,சிரிக்க வைத்த சிந்தனையாளர்கள், நையாண்டி நாயகர்கள், நடிப்புச் சுடர்கள் மற்றும் சிந்திக்க வைத்த எண்ணற்ற இயக்குனர்கள் என்று, தமிழ் திரையுலகில் முத்திரை, பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், தமிழோசையில் ஒலிபரப்பாகும்.

இத் தொடரை பி பி சியின் முன்னாள் தயாரிப்பாளர் சம்பத்குமார் தயாரித்து வழங்குகிறார்.

பகுதி 1

முதல் பகுதியில் தியாகபூமி, சேவாசதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனரான கே சுப்பிரமணியன் அவர்களின் திரையுலக சாதனைகள் குறித்து அவரின் மகன் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்களை கேட்கலாம்.

————————————————————————————–

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

இயக்குனர்களின் முன்னோடி!

“பவளக் கொடி’யின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த முருகன் டாக்கீஸ் என்ற நிறுவனத்திற்காக கே. சுப்ரமணியம் அவர்கள் இயக்கிய படம் “நவீன சாரங்கதாரா’. அப்போதெல்லாம் ஒரே கதையைப் பல தயாரிப்பாளர்கள் படமாக எடுப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

அதே போன்று “”சாரங்கதாரா’ கதையையும் லோட்டஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தினர் படமாக்கிக் கொண்டிருந்ததால் தனது படத்திற்கு “நவீன சாரங்கதாரா’ என்று பெயரிட்டார் கே. சுப்ரமணியம். “பவளக் கொடி’யில் ஜோடிகளாக இணைந்த தியாகராஜ பாகவதரும், எஸ்.டி. சுப்புலட்சுமியும் இந்த படத்திலும் நாயகன் நாயகியாக நடித்தனர்.

இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான ஊதியத்தை முன்னதாகவே பெற்றுக்கொண்டு, அந்த பணத்தை மூலதனமாகக் கொண்டு “மதராஸ் யுனைடட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தை கே. சுப்ரமணியம் அவர்களும், எஸ்.டி. சுப்புலட்சுமி அவர்களும் கூட்டாகத் தொடங்கினர். அந்த பட நிறுவனத்தின் மூலம் சமூக சீர்திருத்தக் கதைகள் கொண்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தனர்.

“பவளக் கொடி’ படத்தில் பணியாற்றியபோதே ஒரு இயக்குனர் என்ற நிலையில் மட்டுமின்றி நற்குணங்கள் பலவற்றிற்கு சொந்தக்காரராக சுப்ரமணியம் அவர்கள் விளங்கியது சுப்புலட்சுமி அவர்களின் மனதைக் கவர்ந்தது. சுப்ரமணியம் அவர்களுடைய கலைத் திறனும், பெண்களை அவர் மதிக்கின்ற பாங்கும் அவர் மீது சுப்புலட்சுமி கொண்டிருந்த உயர்ந்த அபிப்ராயத்தை உறுதி செய்தன.

ஆகவே தன்னை அறிமுகப்படுத்திய அந்த கலை மேதையையே மணந்துகொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்தார் அவர். இருவரும் ஏற்கனவே கூட்டாக ஒரு பட நிறுவனத்தை நடத்தி வந்ததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட நெருக்கத்தால் சுப்ரமணியம் அவர்களும் சுப்புலட்சுமி அவர்களின் விருப்பத்திற்கு தடையேதும் கூறாமல் அவரை மணந்து கொண்டார்.

“நவீன சாரங்கதாரா’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன் சுப்ரமணியம் – சுப்புலட்சுமி தம்பதியர் தாங்கள் துவங்கியிருந்த நிறுவனத்தின் மூலம் “சதாரம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தனர். இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறவில்லை.

அதே நேரத்தில் லோட்டஸ் நிறுவனத்தினர் தயாரித்த “சாரங்கதாரா’ படமும் படு தோல்வியடைந்தது. இப்படத்தின் தோல்வியை பற்றி கவலைப்படாமல் “நவீன சாரங்கதாரா’வின் கதை முடிவில் சில மாற்றங்களைச் செய்து படமாக்கினார் கே. சுப்ரமணியம். படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அடுத்து “உஷா கல்யாணம்’, “கிழட்டு மாப்பிள்ளை’ ஆகிய இரண்டு கதைகளை ஒரே திரைப்படமாக எடுத்து வெளியிட்ட கே. சுப்ரமணியம் அதைத் தொடர்ந்து தனது சொந்த நிறுவனத்தின் சார்பில் “பக்த குசேலா’ படத்தை எடுத்தார். இப்படத்தில் கிருஷ்ண பகவானாகவும், குசேலரின் மனைவியாகவும் இரு வேடங்களில் நடித்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

ஆண், பெண் ஆகிய இரு வேடங்களில் படம் முழுவதிலும் நடித்த ஒரே பெண்மணி இன்றுவரை எஸ்.டி. சுப்புலட்சுமி ஒருவர் மட்டுமே. குசேலர் பாத்திரத்திற்கு அன்று நடித்துக் கொண்டிருந்த எந்த நடிகரும் பொருந்த மாட்டார்கள் என்று சுப்ரமணியம் அவர்கள் கருதியதால் தான் ஏற்கனவே பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியிருந்த பாபநாசம் சிவன் அவர்களையே அந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்தார்.

பாபநாசம் சிவன் அவர்களின் ஒல்லிய தோற்றம், இடுங்கிய கண்கள், ஒட்டிய வயிறு ஆகியவைகள் குசேலராகவே அவரை சுப்ரமணியம் அவர்களின் கேமரா கண்களுக்கு அடையாளம் காட்டியுள்ளன. “”நாடக மேடையில் நடித்து அனுபவம் பெற்ற நடிகர்களோ, நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்களோதான் சினிமாவில் நடிக்க தகுதியானவர்கள் என்றில்லை. கலை ஆர்வம் உள்ள எவராலும் நடிக்க முடியும்” என்ற கருத்தினைக் கொண்ட கே. சுப்ரமணியம் அவர்கள் திரை உலகின் எல்லா பிரிவுகளிலும் ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர்.

பின்னாளில் தொடர்ந்து பல புது முகங்களை கே. சுப்ரமணியம் அவர்களைப் போலவே பல துறைகளிலும் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற திரைப்பட இயக்குனர்களுக்கு முன்னோடி என்றே அவரை குறிப்பிட வேண்டும். அவர் அறிமுகப்படுத்திய கலைஞர்களின் பட்டியலை பின்னால் பார்ப்போம்.

“பக்த குசேலா’வைத் தொடர்ந்து அவர் தயாரித்த “பாலயோகினி’ திரைப்படம் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்தது. அந்தத் திரைப்படத்தில் பிராமண விதவைப் பாத்திரம் ஒன்றில் நிஜ வாழ்க்கையில் விதவையாக இருந்த ஒரு பிராமண பெண்மணியையே நடிக்கச் செய்தார் அவர்.

அதனால் பழைமையில் ஊறிய சிலர் கூடி அவரை பிராமண ஜாதியைவிட்டு தள்ளி வைத்தனர். அதனாலெல்லாம் அவர் மனம் தளரவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு மேலும் வேகமாகவும், அழுத்தமாகவும் சமுதாய சீர்திருத்தப் படங்களை எடுக்கத் தொடங்கினார். அவரை ஒரு “பிராமணப் பெரியார்’ என்றே சொல்லலாம் என்று “தமிழ்ப்பட உலகின் தந்தை’ என்ற நூலில் அதன் ஆசிரியர் வலம்புரி சோமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உருவாகி வெளியான “பாலயோகினி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

திறமையான தொழில் நுணுக்கக் கலைஞர்கள், தரமான லாபரெட்டரி, படமெடுக்க எல்லா வசதிகளும் கொண்ட ஸ்டூடியோ இப்படி எல்லா சூழ்நிலையும் சாதகமாக அமைந்திருந்ததால் தனது முதல் படத்திற்குப் பிறகு ஆறு படங்களை கல்கத்தாவிலேயே தயாரித்த சுப்ரமணியம் அவர்களுக்கு சென்னையில் எல்லா வசதிகளும் அமையப் பெற்ற ஒரு ஸ்டூடியோவை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமுள்ள சுப்ரமணியம் சில தயாரிப்பாளர்களை கூட்டாக சேர்த்துக்கொண்டு இப்போது ஜெமினி பார்சன் அப்பார்ட்மென்ட், பார்க் ஹோட்டல், பார்சன் காம்ப்ளெக்ஸ் ஆகியவை உள்ள இடத்தில் “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பைன்ஸ்’ என்ற நிறுவனத்தை நிறுவினார்.

அவர் ஸ்டூடியோவை நிறுவுவதற்கு முன்னால் அந்த இடம் “ஸ்பிரிங் கார்டன்ஸ்’ என்ற பெயரில் பெரும் காடாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் இந்த ஸ்பிரிங் கார்டன்ஸ் என்ற இடத்தில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு இந்தியாவில் அடிகோலிய ராபர்ட் கிளைவ் ஆட்சி புரிந்ததாக கூறப்படுகிறது. ஸ்டூடியோவை நிறுவியதும் கல்கத்தாவிலிருந்து சைலன்போஸ், கமால்கோஷ் ஆகிய ஒளிப்பதிவாளர்கள், திரன்தாஸ் குப்தா என்ற லாபரெட்டரி நிபுணர், சின்ஹா என்ற ஒலிப்பதிவாளர், ஹரிபாபு என்ற ஒப்பனைக் கலைஞர் என்று பல திறமைசாலிகளை சென்னைக்கு அழைத்து வந்தார்.

இவர்களில் பலர் அதற்குப் பிறகு சென்னை வாசிகளாகவே மாறி பல திரை படங்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். தனது சொந்த ஸ்டூடியோவில் தனது அடுத்த படமான “சேவா சதனம்’ திரைப் படத்தைத் தயாரித்தார் சுப்ரமணியம் அவர்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த “சேவா சதனம்’ கதையின் மூலக்கதை ஒரு ஹிந்தி நாவல்.

அந்த நாவல் மொழி பெயர்க்கப்பட்டு “சேவா சதனம்’ என்ற பெயரில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. இதை எந்த இடத்தில் கே. சுப்ரமணியம் அவர்கள் தயாரித்தாரோ அந்த “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பெனி’ என்ற ஸ்டூடியோவை பின்னாளில் வாங்கியவர் “ஆனந்தவிகடன்’ அதிபரான எஸ்.எஸ். வாசன் அவர்களே.

ஆகவே பின்னாளில் ஜெமினி ஸ்டூடியோ ஸ்தாபிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதலில் படமாக்கப்பட்ட கதையும் எஸ்.எஸ். வாசன் அவர்களின் ஆனந்த விகடனில் வெளியான கதைதான் என்பதை எண்ணிப் பார்க்கும்போது காலம் போகும் சில விசித்திர முடிச்சுகள் பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை.

“சேவா சதனம்’ படத்தில் இந்தியாவின் இணையற்ற இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அறிமுகமானதைப் பற்றி அவரது வாழ்க்கைக் குறிப்பில் விரிவாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதால் அதைத் தவிர்த்துவிட்டு பெரும் புரட்சியைத் தமிழ்ப் பட உலகில் உண்டு பண்ணிய “தியாக பூமி’யைப் பற்றி அடுத்து பார்ப்போம்.

அந்தப் படம் உருவான விதம் குறித்து கீழ்க்கண்டபடி தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் அந்த நூலின் ஆசிரியரான அறந்தை நாராயணன். “”டைரக்டர் கே. சுப்ரமணியமும், அப்போது “ஆனந்த விகடன்’ ஆசிரியராயிருந்த “கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் நண்பர்கள்.

தமிழிப் பத்திரிகை உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உருவாக்க இந்த நண்பர்கள் திட்டமிட்டார்கள். பாக்யராஜின் “மெüன கீதங்கள்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே படத்தின் ஃபோட்டோக்களுடன் “குமுதம்’ வார ஏட்டில் அதே கதை தொடர் கதையாக வெளி வந்ததே! நினைவிருக்கிறதா?

இந்தப் புதுமையைத் தமிழில் முதன் முறையாக செய்தவர்கள் டைரக்டர் கே. சுப்ரமண்யமும், கல்கி கிருஷ்ணமூர்த்தியும்தான். ஆனந்த விகடனில் தொடர் கதையாக வரத் தொடங்கியபோதே அந்தக் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வந்தது. திரைப்படத்தின் ஸ்டில் ஃபோட்டோக்களே தொடர் கதைக்கான படங்களாகப் பிரசுரிக்கப்பட்டன. சினிமாவுக்கென்றே அதுவும் எஸ்.டி. சுப்புலட்சுமி, பேபி சரோஜா, பாபநாசம் சிவன் ஆகிய நடிகர்களை மனதில் வைத்தே கல்கி இந்தக் கதையை எழுதினாராம்.

அந்தத் தொடர் கதைதான் திரைப்படமாக வெளிவந்த “தியாக பூமி’.
மே மாதம் 20-ஆம் தேதியன்று வெளியான “தியாக பூமி’ படம் நல்ல வெற்றி பெற்றது. தியாகபூமி புடவை, தியாகபூமி வளையல் என்றெல்லாம் பார்டர்களும், புடவைகளும், வளையல்களும் தோன்றின. அது மட்டுமல்ல, படத்தின் நாயகியான உமாராணி பேரிலும் பொருள்கள் விற்பனைக்கு வந்தன. “உமாராணி பார்டர், உமாராணி ஹேர் ஸ்டைல்’ ஆகியவையும் தோன்றின. பட்டிக்காட்டு சாவித்திரியாகவும், உமாராணியாகவும் இரு வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

“தியாக பூமி’ படத்தின் இறுதிக் காட்சிகளில் தேசியக் கொடியைக் கரங்களில் தாங்கியவாறு பெண்கள் ஊர்வலமாகப் போகிறார்கள்.

“”பந்தம் அகன்று நம் திருநாடு உயர்ந்திட வேண்டாமா?” என்று பாடியபடி அவர்கள் போகிறார்கள்.

சாவித்திரியின் இதயத்தில் இந்த ஊர்வலமும் இந்தப் பாடலும், புதிய உணர்ச்சியை, உத்வேகத்தை ஊட்டுகிறது.

தேசத்துக்காகப் பாடுபட புறப்படுகிறாள் சாவித்திரி.

“ஜெய ஜெய பாரதம்’ என்ற தேச பக்தர்கள் முழக்கத்துடன் போலீஸ்வேன் காராக்கிரகம் நோக்கிப் போகிறது.

“தியாக பூமி’ படத்தின் கதை இவ்வாறு முடிகிறது இந்தப் படம் ஓடலாமா? புகழ் பெறலாமா?

எனவே “தியாக பூமி’ படத்துக்கு தடையுத்தரவு தேடிவந்தது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

பிரச்சினைகளை எதிர்கொண்டே பழக்கப்பட்ட கே. சுப்ரமணியம் வெள்ளையர் ஆட்சி தடை விதித்தால் அடங்கி விடுவாரா? “தியாக பூமி’ படம் மக்களைச் சென்றடைய வேகமாக திட்டங்கள் வகுத்தார்.

cinemaexpress.com

Posted in Bhagyaraj, Bhakyaraj, Chithra, Chitra, Cinema, Director, Express, Films, History, Incidents, Kalki, Lakshmanan, Lashmanan, Laxman, Life, MKT, Movies, Papanasam Sivan, Pavalakkodi, Sarangadhara, Sarangathara, SD Subbulakshmi, Seva sadhanam, Sevasadhanam, Sevasathanam, Subramaniam, Subramaniyam, Subramanyam, Thyaga Bhoomi, Thyaga Boomi | Leave a Comment »

Oldeulandir Vunbella – Mooligai Corner – Imbooral

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

மூலிகை மூலை: விஷ முறிவுக்கு இம்பூரல்

விஜயராஜன்

இதன் இலைகள் சற்று ஊசி போன்று நடுவில் தடித்து காணப்படும். வெள்ளை நிறப் பூக்கள் இருக்கும். இது அரை அடிவரை வளரக் கூடியது. தரையோடு தரையாகப் படரக் கூடிய பூண்டு ரகத்தைச் சேர்ந்தது. தமிழகம் எங்கும் ஈரப்பாங்கான இடங்களில் தானாகவே வளரக் கூடியது.

வேறு பெயர்கள்: இம்பூறல், இம்பூரா, இன்புளு, சிறுவேர்

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

இம்பூரல் இலையை உணவுடன் சமைத்து உண்டுவர நுரையீரலில் உள்ள கபத்தைப் போக்கும். பித்தக் கபத்தால் ஏற்படும் வாந்தி, இருமும்போது வருகின்ற ரத்த சளியை கட்டுப்படுத்தும்.

இம்பூரல் இலையும், அரிவாள்மனைப் பூண்டு இலையும் சம அளவாக எடுத்து அரைத்து வெட்டுப்பட்ட காயத்தில் வைத்துக் கட்ட இரத்த ஒழுக்கு நிற்கும். இம்பூரல் வேரிலுள்ள பட்டை 1 கிலோ, ஏலக்காய் 30 கிராம், மிளகு 30 கிராம், நிலப்பனைக் கிழங்கு 100 கிராம் எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் பசும் பாலுடன் குடித்துவர காச நோய் குணமாகும். இம்பூரல் வேர் சிவப்பு சாயம் இறக்கப் பயன்படுகின்றது.

இம்பூரல் இலை, வேர், பூ வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி விஷம் தீண்டிய இடத்தில் வார்க்க விஷம் முறியும்.

இம்பூரல் வேரை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்துவர இரத்த வாந்தி, சளியில் இரத்தம் வருவது குணமாகும்.

இம்பூரல் வேரைத் தட்டிப் பசுவின்பால் விட்டு அரைத்து நெல்லிக்காயளவு வெந்நீருடன் இரண்டு வேளை சாப்பிட விக்கல், வயிற்று இரைச்சல், பித்தம் நீங்கும்.

இம்பூரல் இலையைப் பொடி செய்து 2 பங்கு அரிசி மாவுடன் கலந்து அடையாகச் செய்து சாப்பிட இரைப்பு, ஈளை குணமாகும். இம்பூரல் வேர் 10 கிராம் அதிமதுரம் 5 கிராம், எடுத்து இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி 50 மில்லியளவாக 4 வேளை குடித்து வர இருமல், இரைப்பு, இருமல், சளி குணமாகும்.

இம்பூரல் இலைச்சாறு 1 கரண்டியளவுடன் 1 டம்ளர் பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர மார்பு எரிச்சல் நீங்கும். இம்பூரல் இலையும் வேரும் வகைக்கு 100 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி நஞ்சுகடிகளினால் உண்டான புண்களைக் கழுவலாம். இந்த குடிநீர் 100 மில்லியளவு குடித்து வர இருமல், இரைப்பு, இளைப்பு நீங்கும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Embooral, Embural, Herbs, Imbooral, Imbural, Medicine, Mooligai, Moolikai, Natural, Nature | Leave a Comment »

Ayurvedha Corner – Pranayamam: Breathing Techniques

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவுக் கூர்மைக்குப் பிராணாயாமம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 32. சுமார் பத்து ஆண்டுகளாக ஓடும்போதும் சைக்கிள் மிதிக்கும்போதும் மாடிப்படி ஏறும்போதும் மூச்சு வாங்குவதுடன் மார்புப் பகுதியில் கடுமையாக வலியும் ஏற்படுகிறது. மேலும் நடுமுதுகுப் பகுதியில் தொடர்ந்து வலி ஏற்படுகிறது. அதிகமாக வியர்க்கிறது. குதிகால் வலி, பாத வெடிப்பு உள்ளது. தகுந்த மருந்து கூறவும்.

மனித உடலில் ஐந்து வகையான வாயுக்கள் உயிர் உள்ளவரை செயலாற்றுகின்றன. அவற்றுக்கு பிராணம்- உதானம்- வியானம்- ஸமானம்- அபானம் என்று பெயர். பிராணவாயு தலையைத் தங்குமிடமாகக் கொண்டது. தொண்டையிலும் மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலை நிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட் செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும்.

உதான வாயு மார்பில் இருந்து கொண்டு தொண்டை மூக்கு முதல் தொப்புள் வரை உலவும். பேசுதல், செயலில் முயற்சி, புஷ்டி, வலிவு, நிறம், உடல் உட்புறக் குழாய்களை தெளிவாக வைத்திருத்தல், அறிவு, தைரியம், நினைவாற்றல், மனதிற்கு உணர்வுகளைத் தெரிவித்தல் ஆகியவை இதன் செயல்களாகும்.

இந்த இருவாயுக்களும் தங்கள் விஷயத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளன என்று தாங்கள் கூறும் அறிகுறிகள் மூலம் தெரிகிறது. சரியான முறையில் பிராணாயாமம் செய்பவர்களுக்குப் பிராணவாயுவின் செயல்திறன் மேம்பட்டு அவர்களின் அறிவுக் கூர்மை, மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற திடமான உள்ளத்தை அவர்கள் அடைந்திருப்பதைக் காண முடிகிறது.

பிராண- உதான வாயுக்களின் போக்குவரத்துக்குத் தடை ஏதும் ஏற்படா வண்ணம் நீங்கள் தலை மற்றும் மார்புப் பகுதியை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும். அதற்கான சில எளிய வழிகள்-

1. காலையில் பல் துலக்கியதும் வாயை வெதுவெதுப்பான தண்ணீரால் சுத்தப்படுத்தவும், அணுதைலம் எனும் மூக்கில் விடும் மூலிகை எண்ணெய்யை இரண்டு சொட்டு விட்டுக் கொள்ளவும். அதன்பிறகு வாயினுள் வரும் இந்த எண்ணெயைத் துப்பிவிடவும். வெதுவெதுப்பான நல்லெண்ணெய் இரண்டு காதுகளிலும் விட்டுக் கொண்டு பஞ்சால் காதை அடைத்து வைக்கவும். பிறகு காதினுள் உள்ள அழுக்கைத் துடைத்து விடவும். மூளைப் பகுதியை இணைக்கும் இந்த இரு துவாரங்களைச் சுத்தப்படுத்துவதன் விளைவாக பிராண வாயுவின் சஞ்சாரம் தங்கு தடையின்றி நடைபெறும்.

2. யோகாசனப் பயிற்சிகளை தகுந்த ஒரு குருவின் கீழ் கற்றுணர்ந்து, பிராணாயாமத்தை ஆசனப் பயிற்சிகளுக்குப் பிறகு செய்யவும். நுரையீரல் பகுதி வலுப்பட பிராணாயாமம் உதவுவதால் மார்புப் பகுதியைச் சார்ந்த உதான வாயுவின் ஓட்டமும் சீராக இருக்கும்.

தலை மற்றும் மார்புப் பகுதிகளை இணைக்கும் நரம்புகளும் தசைப் பகுதிகளும் வலுப்படுவதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த உபாதை நீங்க வழி உள்ளது. ஒவ்வொரு பிடிச் சோற்றுடன் மருந்தைக் கலந்து உண்பது ஸ்க்ராஸம் என்ற முறையாகும். க்ராஸôந்தரம் என்பது ஒரு பிடிச்சோற்றுக்கும் மற்றொரு பிடிச் சோற்றுக்கும் நடுவில் மருந்து அருந்தும் முறை. இந்த இருமுறைகளும் பிராண வாயுவின் கோளாறினால் ஏற்பட்ட நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் காலை பலகாரம் சாப்பிடுவதற்குப் பதிலாகச் சூடான சாதத்துடன் ஹங்கு வசாதி எனும் சூரணம் 1/2 ஸ்பூன் அளவில் கலந்து 1 டீ ஸ்பூன் (5மிலி) இந்து காந்தம் கிருதம் எனும் நெய் மருந்தையும் கலந்து ஒவ்வொரு பிடியாகச் சிறிய அளவில் சாப்பிடவும். ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நடுவில் விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை 5 மிலி அளவில் வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிடவும்.

உதான வாயுவின் செயல்திறன் மேம்பட மாலை உணவுக்குப் பிறகு மருந்து சாப்பிட மிகவும் நல்லது. அந்த வகையில் நீங்கள் தசமூலாரிஷ்டம் 30 மிலி, தான்வந்திரம் குளிகை எனும் மாத்திரை இரண்டுடன் சாப்பிட உகந்தது.

இவ்விரு வாயுக்களின் சீற்றத்தை அதிகப்படுத்தும் வாயுப் பண்டங்களாகிய கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு, மொச்சக் கொட்டை, அவரைக்காய், வேர்க்கடலை, கொத்தவரங்காய், காராமணி போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டாம். குளிப்பானங்களைத் தவிர்க்கவும். தசமூலரஸôயனம் எனும் லேகியத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட தலை மற்றும் தசைப்பகுதிகள் நன்கு வலுப்படும். குதிகால் வலி, பாதவெடிப்பு நீங்க பிண்டதைலம் எனும் எண்ணெய்யை வெது வெதுப்பாகக் கால்களில் தடவிவிடவும்.


(பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771)

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Breath, Diet, Exercise, Food, Gayathri, Gayatri, Healing, Medicine, Morning, Natural, Nature, Pranayama, Pranayamam, Therapy, Walk, Yoga | Leave a Comment »

iscribe.co.in – Help for visibility Impaired

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

உதவும் கரம்… இணைக்கும் தளம்!

ஞாயிறு

கையையே கரும்பலகையாக்கிக் கொண்டு மொழிகளைக் கற்றவர் ஹெலன் கெல்லர். ஒருவித விஷக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பிறந்த பத்தொன்பது மாதங்களிலேயே பார்க்கிற, கேட்கிற, பேசுகிற புலன்களை இழந்து தவித்தவருக்கு, அவரது அம்மாவைப் போலவே கிடைத்த ஆசிரியைத்தான் மிஸ்.சலிவன். மொழியின் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு வார்த்தையையும் ஹெலன் கெல்லருக்குப் புரிய வைப்பதற்கு சலிவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் சோம்பலில்லா உழைப்பின் அடையாளங்கள்.

தண்ணீர் என்கிற வார்த்தையை எப்படிப் புரிய வைத்தார் தெரியுமா? கொட்டுகிற தண்ணீரில் ஹெலனை நிறுத்தி வைத்து அவரது கைகளில் ‘ர-அ-ப-உ-த’ என்று எழுதிக் காட்டியுள்ளார்.

ஹெலன் பிற்காலத்தில் தனது ஊனத்தை ஊனப்படுத்திவிட்டு உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்காக முழு மூச்சாகப் பாடுபட்டு உலகில் உள்ள எல்லோருக்கும் தன்னம்பிக்கையைப் பரிசளித்தார்.

“என் கதை’ என்கிற அவரது சுயசரிதையில் ஹெலன் தன் ஆசிரியையைப் பற்றிச் சொன்னார்:

“”என் வாழ்க்கையில் நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு காலடியும் அவருடையதே. என்னுடைய எல்லாச் சிறப்புகளும் அவருக்கே சொந்தமானவை. அவருடைய அன்பான ஸ்பரிசத்தால் விழிப்படையாத எந்த ஒரு திறமையோ அல்லது உத்வேகமோ அல்லது ஒரு சந்தோஷமோ என்னிடம் கிடையாது”

ஹெலனுக்குக் கிடைத்த ஆசிரியை போல் பல ஆசிரியர்கள் புலன்களை இழந்தவர்களுக்காக இப்போது வந்துவிட்டார்கள். புதியபுதிய கருவிகளும் அவர்களுக்காக வந்துகொண்டு இருக்கின்றன. எப்போதும் போல் இப்போதும் அவர்களுக்கு இருக்கிற குறைகளில் ஒன்றாகத் தொடர்ந்து கொண்டே இருப்பது தேர்வு எழுத முடியாத நிலைதான். பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோர் பிறர் உதவியுடன்தான் தேர்வு எழுத முடியும். அப்படி உதவி செய்ய வருகிறவர்களுக்குத்தான் பெரும் பற்றாக்குறை. சிலர் உதவுவதற்கு முன் வந்தாலும் யாரை? எப்படி அணுகுவது? என்று தெரியாத நிலை இருக்கிறது. இந்தக் குறையைப் போக்குகிற வகையில் வித்யாசாகர் ஊனமுற்றோருக்கான சட்ட மையமும், ராஷ்ட்ரிய லைஃப் சேவிங் சொûஸட்டியின் தமிழகச் செயலாளர் வாசவி சுந்தரும் சேர்ந்து ஓர் இணையதளம் தொடங்கி உள்ளனர். இந்த இணையதளத்தின் முகவரி: iscribe.co.in ் ஆசிரியர் தினமான கடந்த 5-ந்தேதி இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் பயோடெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் வாசவி சுந்தரத்திடம் இணையதளம் குறித்துப் பேசினோம்:

“”இரண்டு வருடங்களாகப் பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்காகத் தேர்வு எழுதி வருகிறேன். கடந்த ஆண்டு லயோலா கல்லூரியில் கை, கால் ஊனமுற்ற ஒருவருக்காகத் தேர்வு எழுதுவதற்குப் போயிருந்தேன். அவர் பெயர் ராஜீவ் ராஜன். அப்போது இவரைப் போலவே இரண்டு மூன்று பேர் தேர்வு எழுதுவதற்கு யாரும் இல்லாததால் தவித்ததைப் பார்த்தேன். இது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. எனது தோழிகளிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, “என்னை அழைத்திருந்தால் வந்திருப்பேனே’ என்று பலர் சொன்னார்கள். தோழிகள் சொன்ன பிறகுதான், “உதவி தேவைப்படுகிற ஊனமுற்றோருக்கும், உதவி செய்யத் தயாராக இருக்கிறவர்களுக்கும் பெரும் இடைவெளி இருப்பதை உணர்ந்தேன்.

இந்த இடைவெளியைப் போக்குவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தபோதுதான் இணையதளம் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதனையடுத்து வித்யாசாகர் அமைப்போடு சேர்ந்து இந்த இணையதளத்தை உருவாக்கி உள்ளேன்.

ண்என்பது கண்களைக் குறிக்கும் வகையிலும், நஸ்ரீழ்ண்க்ஷங் என்பது தேர்வு எழுதுவதற்கு உதவுகிறவர்களைக் குறிக்கிற வகையிலும் சேர்த்து iscribe.co.in ்என்று இணையதள முகவரிக்குப் பெயர் வைத்துள்ளோம்.

இணையதளம் தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு உள்ளாகவே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பார்வையற்றோரும், அவர்களுக்கு உதவுவோரும் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர். இணையத்தில் பதிவு செய்வதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகத்தான் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ளவர்களும் பதிவு செய்துகொள்ளலாம்.

உதவி தேவைப்படுவோர் தங்களைப் பற்றிய முழு விவரத்தையும் தெரியப்படுத்த வேண்டும். பெயர், முகவரி, தொலைபேசி எண், தேர்வு எழுத வேண்டிய தேதி, நேரம் உட்பட அனைத்து விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும். இதைப்போல உதவி செய்ய முன் வருபவர்களும் அவர்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், இ.மெயில் முகவரி, கல்வி என்று தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவு செய்யவேண்டும்.

கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேவைப்படுவோரும், உதவி செய்ய முன்வருவோரும் தாங்களாகவே தொடர்பு கொண்டு பேசிக்கொள்கிறார்கள். தொலைபேசி வசதியோ மற்ற வசதியோ இல்லாதவர்கள் வித்யாசாகர் அமைப்பைத் தொடர்பு கொண்டு பேசினாலும், இருசாரரும் சந்தித்துப் பேசுவதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தருகிறார்கள்.

ஊனமுற்றோருக்காகத் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்று எதுவும் இல்லை. கையெழுத்து அழகாக இருந்தால்தான் எழுதுவதற்கு வரவேண்டும், தேர்வு எழுத வருகிறவர்கள் என்ன படிக்கிறார்களோ, அதே துறையில் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சொல்வதை எழுதத் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான். எந்தக் கல்லூரியில் தேர்வு எழுதுகிறார்களோ, அந்தக் கல்லூரியில் அனுமதி வாங்கிக் கொண்டால் போதுமானது. மற்றபடி வேறு தகுதி எதுவும் தேவையில்லை. இதுபோன்ற தேர்வு எழுதுவதற்கு யாரும் கட்டணமும் வாங்க மாட்டார்கள். சேவை மனப்பான்மையுடன்தான் எல்லோரும் உதவிச் செய்வார்கள்.

இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையற்றோர்களாக இருக்கிறார்கள். கை, கால் ஊனமுற்று எழுதமுடியாமல் தவிப்போரையும் இந்த எண்ணிக்கையில் சேர்த்தோமானால் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். ஆனால் இவர்களில் தேர்வு எழுதுவோருக்கு உதவி புரிய முன் வருவோர்களின் எண்ணிக்கை மிகச் சொற்ப அளவிலேயே இருக்கிறது. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த எல்லோருமே பார்வையற்றோருக்கு உதவிச் செய்ய முன் வரவேண்டும்” என்கிறார் ஹெலன் கெல்லர் ஆசிரியை மிஸ்.சலிவன் பார்வையுடன் மிஸ்.வாசவி சுந்தரம்.

Posted in Amitabh, Black, Blind, Dictate, Disabled, Exams, Helen, Help, Impaired, iscribe, Rani, scribe, visibility, Vision, Volunteer, Write | Leave a Comment »

Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007

ஊருக்கு இளைத்தவன்…

உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.

உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.

10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.

வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.

யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.

கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.

கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.

இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.

கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.

மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.

Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »

Bush announces new sanctions on Burma – Buddhist monks, nuns lead pro-democracy protests

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

பர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்

பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.

அரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

தற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

மேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.

 


யார் இந்த பர்மா ஜெனரல்கள்?

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்

பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.

அரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.

இந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.

பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே
பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே

பர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.

பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.

எப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.

தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே
தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே

தான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.

இந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.

1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.


பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை

அதிபர் புஷ்
அதிபர் புஷ்

பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.

பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.

முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.


புத்தம் சரணம் கச்சாமி!

மியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள்! அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.

புத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.

யாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.

எதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்!

Posted in activism, Activists, Airforce, Army, Arrest, Aung, Aung San, Aung San Suu Kyi, Ban, Bangkok, Buddha, Buddhism, Buddhist, Burma, Bush, civilians, Corruption, crowd, Curfew, dead, defence, Defense, Democracy, Demonstration, demonstrators, Fight, Fighter, Freedom, General, Government, Govt, HR, Jail, kickbacks, Kingdom, Kyi, Leaders, Mandalay, march, marches, Military, Mob, Monarchy, monks, Myanmar, Navy, Nobel, nuns, Opposition, Oppression, Pakokku, Peace, Prison, Protests, Rangoon, Republic, rights, Rule, Ruler, San, sanctions, Sathyagraha, Satyagraha, Tianamen, Tiananmen, tiananmen square, Torture, US, USA | 1 Comment »

Elephantiasis gene secrets mapped – BBC Tamil

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள்

உலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.

இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in aanaikkaal, aanaikkal, Bacteria, Biotech, Blockbuster, Burkina Faso, Cases, Challenged, Chemists, China, cure, disability, Disabled, Disease, DNA, doctors, Drugs, Elephantiasis, eradicate, Eradication, genes, Genetic, Genetics, genitals, genome, immunisation, India, infected, Infection, legs, Medicine, Mosquito, parasite, R&D, Research, RnD, Science, Scientists, Sri lanka, Srilanka, Treatment, Vaccines, Viral, Virus, worms, yaanaikkaal, Yaanaikkal | Leave a Comment »

Self-suffiency in Foodgrain Production – KB Prabhakaran

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

உணவு தன்னிறைவு… நிஜமா?

கே.பி. பிரபாகரன்

நாடு விடுதலையடைந்து 60 ஆண்டுகளான நிலையில், உணவுத் துறையில் திட்டமிடுதல் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்த நிலையில் “இந்தியா உண்மையிலேயே உணவு தன்னிறைவுடன் உள்ளதா?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

நாட்டு மக்களுக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லையெனில் “விடுதலை’ என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா பெருமளவில் கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது.

எந்த ஒரு தன்மானமிக்க நாடும் இறக்குமதி செய்யப்பட்ட உணவைக் கொண்டு வாழ்வதில்லை; அதிலும் – நாமே நமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது உணவுப் பற்றாக்குறையால் மட்டுமே அப்போதைய வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது என்ற புனைவு சரியல்ல. இந்தியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட உணவை, தங்களது போர் நடவடிக்கைகளுக்காகக் கொண்டு சென்றதாலும் எந்த இடத்தில், எந்த நேரத்தில் உணவு தேவையோ அங்கு உணவுப் பொருள்களை அளிக்காததாலுமே அந்தப் பஞ்சம் ஏற்பட்டது. இதேபோலத்தான் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், ஒரிசா போன்ற பகுதிகளில் பட்டினியால் மக்கள் வாடிக் கொண்டிருந்த போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு விற்கும் விலையைவிடக் குறைந்த விலையில் கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி ஒரு மோசடி நடவடிக்கை.

1980 ஆம் ஆண்டுகளில் 2.85 சதவிகிதமாக இருந்த உணவு தானிய உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1990-களில் 1.6 சதவிகிதமாகக் குறைந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் முதல் முறையாக, உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதிகரிப்பது நிகழ்ந்தது. இருப்பினும், உணவு உற்பத்தியில் இந்தியாவின் “தன்னிறைவு’ குறித்து மார்தட்டிக் கொள்ளும் வேளாண் வல்லுநர்கள் இந்த மோசமான நிலையை பார்க்கத் தவறிவிட்டனர். இந்தச் சிக்கல் உலகமயத்தால் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒரேநேரத்தில் 2,000 பொருள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கியது; இதில் பெரும்பான்மையானவை வேளாண்மை சார்ந்தவை. இதனால், பெருநகரங்களில் பல்பொருள் அங்காடிகளில் அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆப்பிள்கள் குவிந்தன; மலிவு விலையிலான வியத்நாம் மிளகு, குவாதமாலா ஏலம் ஆகியவையும் இந்தியச் சந்தைகளில் குவிந்தன.

விளைபொருள்கள் வருவாயிலிருந்து, இடுபொருள் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலைக்கு இந்தியாவின் சிறு, குறு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

450 கிராம் பி.டி. ரக பருத்தி விதைகளை ரூ.1,950 என்ற விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட விதர்பா பகுதி விவசாயிகள், மகசூல் வெகுவாகக் குறைந்தபோது, ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டனர்.

வேளாண் வளர்ச்சி 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில் தேக்கமடைந்தது. வேளாண்மையில் ஏற்பட்ட இந்த மிகப் பெரிய நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பிரதமர் மன்மோகன் சிங், 2005 நவம்பரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் “வேளாண்மையில் அறிவாற்றல் முன்முயற்சி’ என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை மையமாகக் கொண்டது.

உணவுப் பற்றாக்குறையைப் போக்க மரபணு மாற்றுப் பயிர்கள் தீர்வு அல்ல. நாட்டின் 14.2 கோடி ஹெக்டேர் பயிர்ச் சாகுபடி பரப்பில் பாசன வசதி பெற்ற 4.7 கோடி ஹெக்டேர் நிலத்திலிருந்து 56 சத உணவு தானியம் கிடைக்கிறது. மீதமுள்ள 9.5 கோடி ஹெக்டேர் பரப்பு வானம் பார்த்த பூமியாகும்.

பெருமளவு முதலீடு செய்திருந்த போதிலும், நீர்ப் பயன்பாடு குறித்த தவறான திட்டமிடல் காரணமாக, மானாவாரிப் பகுதிகள் அளிக்கும் வாய்ப்புகள் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை. பிரம்மாண்டமான பாசனத் திட்டங்களுக்குத் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்ததே இதற்குக் காரணம்.

இதற்கு மாற்றாக, தண்ணீர் சேகரிப்பை உள்ளடக்கிய, அந்தந்தப் பகுதி நீர் வளத்தை மையப்படுத்திய, பரவலாக்கப்பட்ட சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான வேளாண் அறிவியல் மையங்களை 0.9 சத விவசாயிகளே பயன்படுத்துகின்றனர் என்பது கவலை தரும் அம்சம். வேளாண் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அறியாமல் உள்ள ஏறத்தாழ 50 ஆயிரம் கிராம, வட்டார விரிவாக்க அலுவலர்கள், அரசுக்கு நிதிச் சுமையாக உள்ளனரே தவிர, அவர்களால் பயன் ஒன்றும் இல்லை.

இவர்களுக்கு நேர் எதிராக, சீனாவில் 15 லட்சம் வேளாண் தொழில்நுட்ப முகவர்கள், விவசாயிகளின் வயல்களில் அவர்களுடன் தோளோடு தோளாக வேலை செய்து கொண்டே, அந்நாட்டு மண்ணின் மகசூல் அதிகரிக்க புதுமைகளைப் புகுத்திய வண்ணம் உள்ளனர். இந்தியாவில் நிலைமை, இதற்கு நேர்மாறு.

இந்தியாவின் வேளாண் கொள்கை தானியங்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். சீனாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கோதுமை விலை நமக்கு அபாய அறிவிப்பு செய்கிறது; ஒரே ஆண்டில் 80 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டு நமது துறைமுகங்களுக்கு வந்து சேரும் கோதுமையின் விலை டன்னுக்கு ரூ. 14,000-க்கு குறையாது. இந்த நிலையில், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 900-க்கும் அதிகமாக விலை தருவதற்கு யோசிக்கிறது மத்திய அரசு.

உணவுத் துறையில் முறையான திட்டமிடல் மூலம், நாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில், மத்திய அரசு தொடர்ந்து அதிக விலைக்கு கோதுமையை இறக்குமதி செய்வது, நமக்கு அவமானம்.

ஆயிரக்கணக்கான தென்னிந்தியக் குடும்பங்களில் அரிசி உணவின் இடத்தை சப்பாத்தி பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரைவை ஆலை உரிமையாளர்கள் கோதுமையைக் கொள்முதல் செய்ய அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அரைவையாளர் கூட்டமைப்பில் சேர்த்து, சிறப்பு கோதுமை மண்டலங்களில் கோதுமை உற்பத்தியில் ஈடுபடுத்தினால் என்ன?

கிழக்கு இந்தியாவில், குறிப்பாக பிகாரில், பயன்படுத்தப்படாமல் உள்ள வளமான நிலப் பகுதியை கோதுமை சாகுபடிக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தலாமே!

——————————————————————————————————————-

வேளாண்மை மேம்பட..!

சி. வேழவேந்தன்

நமது நாடு தொழில் வளர்ச்சியில் 9 சதவிகித அளவை எட்டிவிட்டாலும், வேளாண் துறை வளர்ச்சியில் 2.8 சதவிகிதமாகவே உள்ளது. விவசாயிகளுக்குக் குறைந்தவட்டியில் தேவையான அளவு கடன் வழங்குவதே வேளாண்மை மேம்பாட்டுக்கு அடிப்படைத் தேவை.

கிராமங்களில் விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பருவ மழை தவறுவதும், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததும், மத்திய, மாநில அரசுகளின் தவறான வேளாண் கொள்கைகளும்தான்.

நஷ்டமானாலும் பரவாயில்லை, தமது நிலத்தை உழவுசெய்யாமல் போடக்கூடாது என்பதே இன்றைய விவசாயிகளின் உணர்வோட்டமாக உள்ளது.

இன்று விவசாயிகள் முன் உள்ள பெரிய பிரச்னை கடன்தான். விதர்பா பகுதியில் நடப்பதைப்போல, தற்கொலை என்ற தவறான முடிவுக்கு இதுவரை தமிழக விவசாயிகள் வரவில்லை. விவசாயமும் கடனும், நகமும் சதையும்போல பிரிக்க முடியாதவை. சிறிய விவசாயிகளுக்கு சிறிய அளவிலும், பெரிய விவசாயிகளுக்கு அதிக அளவிலும் கடன் உள்ளது.

விவசாயிகளின் கடன்சுமையைப் போக்குவதற்காகத் தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்தது. இதனால், கிராமப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் பெரிதாகப் பயனடையவில்லை.

கட்சி வேறுபாடு இல்லாமல் கூட்டுறவு வங்கியில் தொடர்புடையவர்களும், அவர்களின் உறவினர்களுமாக “பெரிய விவசாயிகள்’ ஒவ்வொருவரும் வாங்கிய பல லட்சம் மதிப்புள்ள கடன்கள்தான் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய விவசாயிகளுக்கு இதனால் பெருமளவில் பலன் ஏற்பட்டதாகக் கூறமுடியாது.

இந்தக் கடன் தள்ளுபடியால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்பட்டுள்ளன. இன்று தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. கடன் தள்ளுபடியான பின்னர் கூட்டுறவு வங்கிகளால் டெபாசிட் செய்திருந்தவர்களுக்கு முதிர்வு காலத்திற்குப் பின்னரும் வைப்புத்தொகையை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

விவசாயிகள் இதற்கு முன் மற்ற வங்கிகளை விட, கூட்டுறவு வங்கிகளிலேயே தங்களது நகைகளை அடகுவைத்து கடன்பெற்றனர். இன்று நகைக்கடன்களுக்குக்கூட பணம் கொடுக்க முடியாமல் அவ்வங்கிகள் திணறுவதைக் காணமுடிகிறது.

நிலவள வங்கிகளை மூட அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலவள வங்கிகள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு மட்டும் பயனளித்து வந்த வங்கிகள். நிலவள வங்கிகள் செய்த பணியை தற்போது கூட்டுறவு வங்கிகளும், மற்ற வங்கிகளும் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் விவசாயிகளுக்குக் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உண்மையாக எத்தனை வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்கொடுக்க முன்வருகின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

குடும்பம் குடும்பமாகக் கிராமங்களை விட்டு நகரங்களைநோக்கி விவசாயிகள் இடம் பெயர்வதால் விவசாயத்தின் நிலை சில ஆண்டுகளில் என்ன ஆகுமோ என்ற பேரச்சம் ஏற்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு உளுந்து விலை ஏற்றம் விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்தது. 20 – 30 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்த விவசாயிகள் கூட இதுவரை எந்தப் பயிரிலும் அதிக லாபம் பார்த்ததில்லை.

இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி இந்த ஆண்டு தொடருமா என்பது கேள்விக்குறியே. காரணம் வெளிநாடுகளுக்கு உளுந்து போன்ற பயறுவகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைதான்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு இன்றைய முக்கியத் தேவை, போதிய அளவில் வங்கிக்கடன்தான்.

சில விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கினால் திருப்பிச்செலுத்த வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர் என்பது உண்மையே. இதைப்போக்க விவசாயிகளுக்கு முதலில் சிறிய தொகையைக் கடனாகக் கொடுக்கலாம். அதை முறையாகத் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், அந்தத் தொகையை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.

விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் போதுமான அளவு வங்கிகள் கடன் அளித்து, புதிய விஞ்ஞான முறைகளைப் புகுத்தினால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் வகையில் வேளாண்மைத் துறையில் வளர்ச்சியைக் காண முடியும்.

Posted in Agriculture, Apples, Arid, Australia, Bengal, China, Commerce, Dhal, Drought, Eat, Economy, Farmer, Farming, Flood, Food, Foodgrain, Foodgrains, GDP, Grains, Grams, Growth, GWB, Loans, Orissa, Policy, Poor, Rains, rice, Rich, Storage, Sudeshi, Sudesi, Sudheshi, Sudhesi, Suicides, Swaminathan, Tamil, Tariffs, Tax, Vidharba, Vidharbha, Vietnam, Vitharba, Vitharbha, War, WB, Wheat | Leave a Comment »

Tamil Nadu Reservations for the Minority – Benefit Analysis by Dinamalar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

.யாருக்கு பாதிப்பு?

தமிழக மக்கள் தொகையில் 11 சதவீதம் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏழு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், தமிழக அரசு ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மொத்தம் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் உள்ளனர்.

  1. இதில், இந்துக்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 88.1 சதவீதத்தினர் இந்துக்கள்.
  2. முஸ்லிம்கள் மக்கள் தொகை 34 லட்சத்து 70 ஆயிரத்து 647. மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம்.
  3. கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 37 லட்சத்து 85 ஆயிரத்து 60. இது 6.06 சதவீதம்.

தற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில்,

  • ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவீதமும்,
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,
  • பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும்

பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து

  • ஏழு சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும்,
  • கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு

அளிக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது

.தற்போதுள்ள 37 லட்சம் கிறிஸ்தவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் மதம் மாறிய ஆதிதிராவிடர்கள். இவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் போராடி வருகின்றனர். இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளும் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பிரிவினரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். எனவே, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அதிகமானதாகி விடும்.

இதேபோல, முஸ்லிம்களிலும் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5.5 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என பிரித்து அவர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அந்த மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது போலாகும்.

அதன்படி பார்த்தால், இந்துக்கள் 88.1 சதவீதத்தினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 23 சதவீத இடஒதுக்கீடு தான் கிடைக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்துக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

தற்போதைய தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது போல, இந்துக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

Posted in AA, AathiDravidar, ADMK, Affirmative, Affirmative Action, Analysis, Anthropology, BC, Benefit, Brahmins, Calculations, Caste, Castes, Census, Christianity, Christians, Community, Demography, Dinamalar, DMK, Dravidian, Education, Employment, FC, Islam, Jobs, MBC, minority, Muslims, OBC, Observations, OC, Op-Ed, Opportunity, Percentage, Population, Reservation, Reservations, SC, Social, Sociology, ST, Stats, Tamil Nadu, TamilNadu, TN | Leave a Comment »

The Future of Public Sector Undertaking – Govt, Private Organizations & Management

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்காலம்

எஸ். கோபாலகிருஷ்ணன்
(முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

உணர்வுபூர்வமாக பொதுத்துறை நிறுவனங்களை உயர்த்திப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது, நிறுவனங்களின் செயல்பாடு, திறன், லாப – நஷ்டக் கணக்கு ஆகிய அம்சங்களைப் பொருத்துதான், அவற்றின் பயன்பாடு மதிப்பிடப்படுகிறது.

1931-ம் ஆண்டில் – இந்திய தேசிய காங்கிரஸின் கராச்சி மாநாடு ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது. “”பொதுத்துறை மூலமே, இந்தியா தொழில் வளம் பெற்றிட இயலும்” என்பதே அது.

இதற்கேற்ப, நாடு சுதந்திரம் அடைந்தபோது, தொழில் வளர்ச்சியிலும் அறிவியல், தொழில் நுட்பத்திலும் மிகவும் பின்தங்கியிருந்தது. தொழில், விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான சாதனங்களையும், தளவாடங்களையும் தயாரிக்க நம் நாட்டில் தொழிற்சாலைகள் அப்போது இல்லை. தனியாரிடம் அத்தகைய தொழில் கூடங்களை அமைப்பதற்கான முதலீடோ, அனுபவமோ இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அரசுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார்.

கனரக இயந்திரங்கள் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருள்கள்வரை, அனைத்தும் தட்டுப்பாடில்லாமல் நியாயமான விலைக்குக் கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

1951-ல் 5 நிறுவனங்களே பொதுத்துறையில் இருந்தன. முதலீடு ரூ. 29 கோடி. 1961-ல் 48 நிறுவனங்களாகவும், 1971-ல் 100 ஆகவும் 1983-ல் 209 ஆகவும் இவை வளர்ந்தன. இப்போது கிட்டத்தட்ட 250 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு சுமார் ரூ. 3 லட்சம் கோடி.

இந்நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சியும் கணிசமான அளவு வேலைவாய்ப்புகளும் பெருகின. 1970-களில் 27 சதவிகித வேலைவாய்ப்புகளும் 1980களில் 37 சதவிகித மேலைவாய்ப்புகளும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைத்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றோருக்கும் வேலைவாய்ப்பு அளித்து சமூக நீதி காப்பதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்னிலை வகித்தன.

இறக்குமதிப் பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சுமார் 250 நிறுவனங்களில் 125 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன. மற்றவை நஷ்டத்தில் இயங்குகின்றன. இத்துறையில் அரசு செய்துள்ள மிகப்பெரிய முதலீட்டுத் தொகையிலிருந்து வெறும் 3.5 சதவிகித லாபம்தான் கிடைக்கிறது.

திறமையின்மை, மெத்தனப்போக்கு, ஊழல், ஊதாரித்தனம், தேவையற்ற தாமதம் ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களின் அடையாளங்களாக அமைந்துவிட்டன. பல நிறுவனங்கள் 75 சதவிகித உற்பத்தித் திறனுடன்தான் இயங்குகின்றன.

இவை போதாதென்று, அரசு அதிகாரிகளின் கெடுபிடி, அரசியல்வாதிகளின் தேவையற்ற குறுக்கீடுகள், உள்ளூர்ப் புள்ளிகளின் தலையீடு ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களின் செம்மையான செயல்பாட்டுக்குக் குந்தகமாக உள்ளன.

இவற்றையெல்லாம்மீறி மிகச்சில நிறுவனங்கள் திறம்படச் செயல்பட்டு “நவரத்தினங்களாக’ மிளிருகின்றன. ஆனால் அவை அனேகமாக ஏகபோக நிறுவனங்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

“”பவர் கிரிட் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா” (டர்ஜ்ங்ழ் எழ்ண்க் இர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஐய்க்ண்ஹ) என்னும் நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகள், சில தினங்களுக்கு முன், பொதுச் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டன. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு, பங்குகளின் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் போல் 64 மடங்கு அதிகமாக தொகை வந்து குவிந்தது.

இதில் சரித்திரம் படைத்த விஷயம், இதுவரை வேறு எந்த இந்திய பங்குகளின் விற்பனைக்கும் இல்லாத அளவு வெளிநாடுகளிலிருந்து வந்து குவிந்த தொகைதான்! அதாவது 30 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் நூறு கோடி) இத்தனைக்கும் இந்த நிறுவனம் ஒரு முழு “”நவரத்தினம்” அல்ல; “”மினி நவரத்தினம்”தான்.

இந்நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகளின் விற்பனை மூலம் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ. 994.81 கோடி கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் உள்ளார்ந்த வலுவைக் காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் திறம்படச் செயல்பட வேண்டுமெனில், சில வணிகரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்திப் பொருள்களை மாற்றி அமைத்தல்; உற்பத்தி முறைகளை நவீனமயமாக்குதல்; தாமதங்களைத் தவிர்த்து பணவிரயத்தைக் குறைத்தல்; தேவைக்கு அதிகமான மூலப்பொருள்களை இருப்பில் வைத்து கோடிக்கணக்கான பணத்தை முடக்குவதைத் தவிர்த்தல்; தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகம் செய்தல்; ஊழியர்களின் ஊதியத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துகையில், கூடவே உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்கு வழிவகை காணுதல்; ஊழல் மற்றும் நிதி விரயத்தைக் களைவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட செயல்திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் கொண்டுவர வேண்டும்.

நிறுவனங்களின் தலைவர்களாக, சாதனை வேட்கை கொண்ட துடிப்பான நிர்வாகிகளையே நியமிக்க வேண்டும். அவர்கள் எம்.பி.ஏ. போன்ற மேலாண்மை படிப்பும் பயிற்சியும் கொண்டவர்களாக இருப்பது பொருத்தமாக இருக்கும்.

பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பணிஓய்வு பெற்ற பின், உடனுக்குடன் புதிய தலைவர்களை நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்தும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சிறப்பான சாதனைகளுக்கு பதவிஉயர்வு போன்ற ஊக்குவிப்பு; தோல்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்பு ( அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) என்ற நியதி, மூத்த நிர்வாகிகளுக்கும், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது தனியார் துறையில் மூத்த நிர்வாகிகளின் சம்பளங்கள் உச்சத்தில் உள்ளன. அந்த அளவுக்கு அரசுத்துறையில் கொடுக்க முடியாது எனினும், தகுதிமிக்க நிர்வாகிகளுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதில் சற்று தாராளம் காட்டலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தேவையற்ற குறுக்கீடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமற்ற குறுக்கீடுகளுக்கு அண்மைக்கால உதாரணம் – பி.எஸ்.என்.எல். நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். அதற்கு முன்பு ஓ.என்.ஜி.சி.யில் நிகழ்ந்ததையும் குறிப்பிடலாம்.

என்ன செய்தாலும், சில பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்க இயலாது. நஷ்டத்தையும் தவிர்க்க முடியாது. அவற்றால் எந்த பொதுநன்மையும் ஏற்படாது என்ற நிலையிருந்தால், அவற்றை மூடுவதில் தவறில்லை. அதேசமயம் லாபத்தில் இயங்கும் சிறப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.

கடந்த ஜூலை மாதம், பிரதமர் மன்மோகன் சிங், ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுய அதிகாரம் வழங்கி, அவை சிறப்பாகச் செயல்பட வழி செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். பிரதமரின் இந்த யோசனை பரவலாக வரவேற்கப்பட்டது. ஆனால், பிரதமர் அவ்விதம் கூறி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், இந்த இலக்கில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாடு வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

Posted in acquisition, Assets, Balance, Commerce, Compensation, Consultant, Contractors, Corporations, Corruption, Economy, employees, Employment, Fulltime, GDP, Govt, Growth, Hire, Industry, Investment, Jobs, kickbacks, Lethargy, Loss, Machinery, Management, markets, ONGC, Organizations, Permanent, Power, Private, Productivity, Profits, PSU, PSUs, Public, Reservation, rights, Science, Shares, Society, Stocks, Tamil, Tech, Technology, Undertaking | Leave a Comment »

Ayurvedha Corner: Solutions for Lichen – Ascomycetes

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாத வெடிப்புக்கு மூலிகை தைலம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் மனைவி ஆண்டாளுக்கு வயது 73. இரண்டு கால்களின் பாதங்கள் மற்றும் நகச் சந்துகளிலும், பாத ஓரங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுகிறாள். அவள் பூரண குணமடைய மருந்துகள் கூறவும்.

அதிக நேரம் தண்ணீரில் நின்று கொண்டு துணி துவைத்தல், சமையல் அறையில் தண்ணீர் விட்டு தரையைச் சுத்தப்படுத்திய பிறகு காய்ந்த துணியால் துடைக்காமல், சிமென்ட் தரையில் அதிக நேரம் நின்று கொண்டே சமையல் செய்தல், இரவில் கால்களை அலம்பித் துடைத்த பிறகு பசு நெய் அல்லது விளக்கெண்ணெய் பூசாதிருத்தல், உடல் காங்கை எனப்படும் உடற்சூட்டைக் குறைக்க சூரத்தாவாரை, ரோஜா மொக்கு, காய்ந்த திராட்சை, கடுக்காய்த் தோல் போட்டு ஊறிய தண்ணீரைக் குடிக்காமல் அசட்டையாக இருத்தல், உணவில் உட்புற வறட்சி தரும் கசப்பு, துவர்ப்புச் சுவையை அதிகம் சேர்த்தல், செருப்பு அணியாமல் பல இடங்களுக்கும் வெறும் கால்களுடன் நடந்து செல்லுதல் போன்ற சில காரணங்களாலும், உடல் பருமனாயிருத்தல், பகல் தூக்கம் போன்றவற்றால் கிளறப்படும் பித்த சீற்றம் ஆகியவற்றாலும் பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். இதைப் போக்க ஓர் எளிய வழியுண்டு.

பூங்காவி, இந்துப்பு, வெள்ளைக் குங்கிலியம், குக்கில், வெல்லம் இவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்துக் கொள்ளவும். பசுவின் நெய்(கிடைக்காவிட்டால் தேங்காய் எண்ணெய்) 120 மி.லி. எடுத்து உருக்கி அதில் குக்கிலையும் வெள்ளைக் குங்கிலியத்தையும் போட்டுக் கரைந்ததும் சூட்டுடனிருக்கும்போதே தேன்மெழுகு 20 கிராம் போட்டு இறக்கிவைத்து அதில் பூங்காவி இந்துப்பு வெல்லம் இந்த மூன்றையும் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். காலை அலம்பித் துடைத்த பின் இந்தக் களிம்பைத் தடவ வெடிப்பு மறையும். தங்கள் மனைவிக்கு வெடிப்பு நிறைய உள்ளதால் கால் பாதங்களை முதலில் வென்னீர் விட்டு ஒத்தடம் கொடுத்தபின் இதை உபயோகிக்கவும்.

இதெல்லாம் செய்வதற்கு நேரமில்லை, தயாரித்து விற்கப்படும் களிம்பு ஏதேனும் இருக்கிறதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கும் பதிலுண்டு. ஜீவந்த்யாதி யமகம் எனும் பெயரில் மூலிகைத் தைலம் விற்கிறார்கள். அதை வாங்கி, பஞ்சில் முக்கி, பாதங்களை நன்கு சுத்தப்படுத்திய பிறகு வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தடவி விடவும். வெடிப்பின் உட்புறப் பகுதிகளில் முழுவதுமாக இந்த எண்ணெய் ஊற ஊற தோல் மிருதுவாகி அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து விடும். பஞ்சில் முக்கி எடுத்த இந்த எண்ணெய்யை அப்படியே பாதங்களில் வைத்து ஒரு கைத்தறித் துணியால் கட்டியும் வைக்கலாம். காலை இரவு உணவிற்கு முன்பாக சுமார் 1 மணி நேரம் ஊற விடவும். அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் கால்களைக் கழுவி விடவும். அரிசி வடித்த கஞ்சியினால் கழுவி, அதன் பின்னர் தண்ணீரால் அலம்ப, பாதங்கள் மிருதுவாகிவிடும். வெடிப்பு இடுக்குகளில் அழுக்குச் சேராத வகையில் பாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

வெடிப்புள்ள பகுதிகளில் எழுந்து நடக்கும் போது வலி இருந்தால் இரவில் படுக்கும் முன் பிண்ட தைலம் பூசி விடவும். இது சிறந்த வலி நிவாரணி மட்டுமல்ல, வெடிப்பையும் குணமாக்கும்.

முக்கால் ஸ்பூன் பசுநெய், கால் ஸ்பூன் தேன் குழைத்து காலை, இரவு உணவிற்கு முன்பாக நக்கிச் சாப்பிட, உடலின் வெளிப்புறத் தோலில் ஏற்படும் வெடிப்பு, ஆறாத புண் போன்றவை ஆறிவிடும். வயிற்றில் புண், வாய்ப்புண், ஆசனவாய் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போன்றவையும் குணமாகிவிடும்.

வெடிப்புகளில் அரிப்பு இருந்தால் சததெüத கிருதம் எனும் ஆயின்ட்மென்ட் தடவ மிகவும் நல்லது.

உணவில் தயிர், கத்தரிக்காய், புளிப்பான ஊறுகாய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம். புலால் உணவையும் தவிர்க்கவும்.

Posted in algae, Alternate, Ascomycetes, Ayurveda, Ayurvedha, Ayurvetha, Care, Crohns, Excema, Exposure, Feet, Foot, fungus, Lichen, Medicine, Nature, Pithavedippu, Sethupunn, Skin, skincare, Water | Leave a Comment »

Mooligai Corner – Vijayarajan: Thippili

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மூலிகை மூலை: திப்பிலி

விஜயராஜன்

திப்பிலி குறுகிய நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனமாகும். இதன் காய் முள் வடிவத்தில் நீண்டு இருக்கும். இதுவே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் வீடுகளிலும் தோட்டங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.

வேறு பெயர்கள்: உண்சரம், உலவை நாசி, சாமன், குடாரி, கோலகம், கோலி, கோழையறுக்கா, சரம்சாடி, துளவி, மாகதி, கணை, செüண்டி, சூண்டுகி, கணம், கலினி, பாணம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்து.

வகைகள் : ஆனைத் திப்பிலி, அரிசித் திப்பிலி.

ஆங்கிலத்தில் : Piperlongum, linn, Piperaceae

இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.

திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.

திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.

திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்.

திப்பிலிப் பொடி 50 கிராம், கடுக்காய்ப் பொடி 25 கிராம் எடுத்துத் தேனில் கலந்து 2 தேக்கரண்டி வீதம் 2 வேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும்.

திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.

திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாய்வு குணமாகும்.

திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvetha, Cough, cure, Dhippili, Dhippily, Herbs, Medicine, Mooligai, Moolikai, Nature, Syrup, Thippili, Thippily | 1 Comment »

Eraa Murugan: Dinamani Kathir Series: No.40 Rettai Theru

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

என்னமோ தெரியவில்லை, பெருமாள் கோவில் எப்போதும் அமைதியில் மூழ்கியிருக்கும். தொடர்ந்து அவதாரம் எடுத்து முடித்த அசதியோடு ஓய்வெடுக்க எங்கள் ஊரைத்தான் பெருமாள் தேர்ந்தெடுத்ததால் பண்டிகை, நாதசுவரம், அதிர்வேட்டு எல்லாம் வேணாம் என்று சொல்லிவிட்டு விச்ராந்தியாகச் சாய்ந்து படுத்துவிட்டதாகக் கேள்வி.

சிவனோ உற்சாகப் பிரியராக ஒன்று முடிந்து அடுத்த கொண்டாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருப்பார். முக்கியமாக மார்கழி வந்தால் போதும். மாதம் பிறக்க இரண்டு நாள் முந்தி வக்கீல் குமாஸ்தா வெங்கடேசனுக்குக் கனவிலோ அல்லது அவர் சதா சுமந்து கொண்டு நடக்கிற ஹோ அண்ட் கோ டைரியில் கொட்டை எழுத்தில் போட்டோ ஞாபகப்படுத்தி, பட்டு உத்தரீயத்தைத் தேடவைப்பார். வெங்கடேசன் அந்தப் பழைய உத்தரீயத்தை தியாகி டெய்லர் கடைக்கு எடுத்துப் போகும்போது கூடவே போகிற எங்களுக்கு வெண்பொங்கல் வாசனை மனதில் மிதந்து வரும்.

“அடுத்த வருஷமாவது புது முண்டாசு வாங்கிடுங்க, சாமிகளே. ஊசி நுழைய எடமே இல்லாமே ஒட்டுப்போட்ட நூல்தான் முழுக்க இருக்கு’, தியாகி டெய்லர் எப்படியோ தையல் இயந்திரத்தில் அந்தப் பட்டு உத்தரீயத்தை முன்னாலும் பின்னாலும் இழுத்துப் பிடித்து கிழிசலை அடைத்துத் தருவார். “பொழச்சுக் கிடந்து எங்க வக்கீலய்யாவுக்கு நல்லதா நாலு கேசு வரட்டும் பார்க்கலாம்’ குமாஸ்தாவுக்கு நம்பிக்கை இருந்தது.

மார்கழி விடிகாலையில் தலையில் அந்தப் பட்டுத் துணியை கம்பீரமான முண்டாசாகக் கட்டிக் கொண்டு மீசை இல்லாத பாரதியார் மாதிரி வெங்கடேசன் சிவன் கோவில் சந்நிதானத்துக்கு முன்னால் நிற்பார். திருப்பள்ளி எழுச்சியும், திருவெம்பாவையும் ஒவ்வொரு பாட்டாகப் பாடி நிறுத்த, சுந்தரேசக் குருக்கள் பின்னால் வளைந்த காலை உந்தி திருவாச்சி விளக்கில் தீபாராதனை கொளுத்தி சிவனுக்குக் காட்டுவார். மடைப்பள்ளியில் வெண்பொங்கல் தயாராகிற வாடை சுகமாகக் காற்றில் மிதந்து வர, நாங்கள் திருவெம்பாவை கவுண்ட்-டவுனில் கவனமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டு காத்திருப்போம். விடியற்காலம் சீக்கிரம் கிளம்ப வேண்டியிருப்பதால், சில நாள் குளிக்காமல் பிரசாதம் வாங்கப் போன குற்றத்துக்காகவும் இப்படிக் கன்னத்தில் போட்டுக் கொள்வது உண்டு.

“”போற்றி எல்லா உயிர்க்கும்” வெங்கடேசன் கடைசி திருவெம்பாவை பாடி முடிப்பார். உத்தரீயத்தை அவிழ்த்து ஜாக்கிரதையாக மடித்து அஞ்சால் அலுப்பு மருந்து பெயர் எழுதிய துணிப்பையில் அடைத்துக் கொண்டிருக்கும்போது கோவில் மடைப்பள்ளி சுயம்பாகி மாதேசுவரன் ஒரு வெங்கலப் பாத்திரத்தில் ஆவி பறக்க வெண்பொங்கலை, மேலே ஒரு செம்புத் தட்டால் மூடி எடுத்து வருவான். பிளாஷ் போட்டோ எடுக்கிறதுபோல் அரை வினாடிக்கும் குறைவாக அந்தத் தட்டைத் தூக்கிப் பிடித்து சிவனுக்கு உள்ளே இருக்கிற நைவேத்தியத்தைக் காட்டி டப்பென்று உடனே மூடிவிடுவான் மாது. உள்ளே இருந்தபடிக்கே கையை நீட்டிச் சிவனோ, குருக்களோ, முண்டாசை அவிழ்த்த திருப்பாவை குமாஸ்தாவோ தட்டோடு பிடுங்கிக்கொண்டு போய்விடலாம் என்ற பயம் காரணமாக இருக்குமோ என்னமோ.

உபயதாரர்களுக்கு ஆளுக்கு இரண்டு கட்டி பொங்கல். காளாஞ்சியாக வெற்றிலை, பாக்கு, ரொம்பவே கனிந்த இத்தணூண்டு பூவன் பழம், தினசரிப் பத்திரிகையை நீளவாக்கில் கிழித்து மடித்த பொட்டலத்தில் விபூதி, குங்குமம், பூமாலையில் நறுக்கிய நாலு ஜவந்திப்பூ எல்லாம் வழங்கும் வரை பொறுமையாகக் காத்திருப்போம். இலை நறுக்கில் வைத்து மாது எங்கள் கையில் தொப்பென்று போடுகிற அந்தப் பொங்கலின் ருசி வாழ்க்கையில் அப்புறம் வேறு எந்தப் பொங்கலிலும் கிடைத்தது இல்லை.

மார்கழி மாதம் பஜனைக் கோஷ்டிகளின் மாதம். முதல் பஜனை, கோவில் தாற்காலிக நிர்வாகி கந்தன் ஃபான்ஸி ஸ்டோர் ராமநாதன் வகையறாக்கள் கோவில் வாசலில் இருந்து தொடங்கி ஊர் முழுக்கச் சுற்றி வலம் வருவது. சிரஸ்தார் சேஷன், ரிடையரான வாத்தியார் சிவராமன், ஸ்டாம்ப் வென்டர் தாத்தா போன்ற “அறுபது பிளஸ்’ ஆத்மாக்களின் இந்த கோஷ்டியில் யாராவது ஒருத்தரே கையில் ஜால்ராவோடு லாகவமாக பிடியரிசிப் பெட்டியையும் வயிற்றோடு கட்டித் தூக்கிக்கொண்டு நடப்பார். ஒவ்வொருத்தரும் இழுக்கும் ராகம் ஒவ்வொரு திசைக்குமாகப் பறக்க, வேற்றுமையில் ஒற்றுமையாக “நாதன் நாமத்தை நான் மறவேனே, மறவேனே’ என்று இந்த கோஷ்டி ஒரு தேவாரத்தை உண்டு இல்லை என்றாக்கி முடித்து அடுத்த பயமுறுத்தலுக்குத் தயாராகும். பாதிப் பாட்டில் ராமநாதன் தனி சுருதியில் “ஹரி ஹரி’ என்று சத்தமாகச் சொல்வார். யார் வீட்டு வாசலிலோ அரிசி போடத் தயாராக யாரோ நிற்கிறதாக அர்த்தம். பிடியரிசிப் பெட்டிக்காரர் நாதன் நாமத்தில் மூழ்கி இருந்தால், அடுத்த வேண்டுகோள் “ஹரிசி-வா, ஹரிசி-வா’ என்று இன்னும் இரைச்சலாக வரும். இந்த இரைச்சல் இல்லாவிட்டால் தினசரி திருவெம்பாவை பாடிமுடித்ததும் கையில் வந்து விழும் பொங்கல் அளவு கம்மியாகிவிடலாம்.

“அரிசி’ பஜனைக்கு அடுத்தது ராஜூத் தெரு பஜனை. இந்தத் தெருவில் சகலரும் சதா தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருப்பார்கள். காரம் மணம் குணம் நிறைந்த பட்டணம் பொடி, பெப்ஸ் என்ற இருமல் மாத்திரை வில்லை, கோரோஜனை (அப்படி என்றால் என்ன?) என்று கலந்து கட்டியாக விற்கும் கங்காராஜ் அண்ட் கோ கடைக்காரர், எந்தக் காலத்திலேயோ பிரிண்டிங்க் பிரஸ் நடத்திய ஹிட்லர் மீசைப் பெரியவர், பம்புசெட் மோட்டார் ரிப்பேர் கடை முதலாளி என்று சங்கீதத்தோடு எந்த விதத்திலும் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியாத பெரிசுகள் மார்கழி வந்தால் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு, நெற்றி முழுக்க நாமத்தைப் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். நாலு ஆர்மோனியம், சிப்ளாக்கட்டை, அப்புறம் பிரம்மாண்டமாக ராமர் பட்டாபிஷேகப் படம். அதன் மேல் சன்னமான பட்டுத்துணி- திருவெம்பாவை குமாஸ்தா முண்டாசு மாதிரி கிழிசல் இல்லாதது- அலங்காரமாக வழிந்தபடி இருக்கும். அழகான தெலுங்கில் அற்புதமாகப் பாடியபடி இந்த ராஜூத் தெரு மனிதர்கள் நாலு வீதி சுற்றி முடிக்க நடுப்பகல் ஆகிவிடும். இந்தத் தன்னார்வக் குழுக்களோடு போட்டி போட தாசில்தார் பஜனை கோஷ்டி வந்து சேர்ந்தது. ஆர்.டி.ஓ. ஆபிசில் எங்கேயோ இருந்து ஒரு தாசில்தாரை ஊருக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள். குழந்தை குட்டி இல்லாத அந்த மனுஷர் ஆபீசில் சிவப்பு நாடா சுற்றிய ஃபைல்களை அப்படியும் இப்படியும் நகர்த்திய நேரம் போக, மிச்சப் பொழுதெல்லாம் பாடுவதிலேயே குறியாக இருந்தார். “பரிபாலித முதுகுந்தா, வேணும் தயை, நந்த நந்தன நந்தன முடிதன, அருள்வாய்’ என்று தமிழா, இல்லை பாலி, சுமத்ரா பாஷையா என்று முடிவாகச் சொல்ல முடியாத மொழியில் கீச்சுக் குரலில் பாடியபடி ஆபீஸ் விடுமுறையான ஞாற்றுக்கிழமைகளில் தாளத்தைத் தட்டிக் கொண்டு நகர்வலம் வருவார் இவர். தனியாக வந்தால் பிரச்சனை இல்லை. தாசில்தார் என்பதால் அவர் ஆபீசில் டவாலி சேவகர் தொடங்கி, லோயர், அப்பர் டிவிஷன் குமாஸ்தாக்கள், டென்-ஏ-ஒன் என்ற டெம்பரவரி கிளார்க்குகளில் பலபேரும் தாசில்தாருக்குப் பின்னால் மரியாதையான இடைவெளி கொடுத்துக் கூடவே நடந்து வருவார்கள். “மூன்றாவது சம்பளக் கமிஷன் தீர்ப்பை நடப்பாக்கு’ என்று அரசாங்கத்திடம் முறையிடும் என்.ஜி.ஓ. ஊர்வலம் மாதிரி இருக்கும் இது.

தாசில்தார் பதவி மாறிப் போகும்போது ரயில்வே ஸ்டேஷன் கொள்ளாத கூட்டம் இனிமேல் அவர் திரும்பி வரமாட்டார் என்று தீர்மானப்படுத்திக் கொண்ட என்.ஜி.ஓக்கள் “நந்த நந்தன நந்தன முனிதன’ என்று கையைத் தட்டிப் பாடியபடி திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

———————————————————————————————————————————

Sunday September 23 2007

ரெட்டைத் தெருவுக்கும் சாப்பாட்டுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. ஒன்றுக்கு மூன்றாக மெஸ்கள் தெருவில் அங்கங்கே இடத்தைப் பிடித்து நாள் முழுக்கச் சுகமான சாப்பாட்டு வாடையைப் பரப்பியபடி இருக்கும். தெரு மத்தியில் கர்னாடக சங்கீத மெஸ். சாப்பிட வருகிறவர்களுக்கு ஆகாரத்துக்கு முந்தியோ, அப்புறமோ ஒரு கீர்த்தனை சொல்லிக் கொடுக்கிற ஏற்பாடோ அல்லது சங்கீதம் கேட்டபடி சாம்பார் சாதத்தை ஒருகை பார்க்க வசதியோ எல்லாம் இல்லை. வீட்டம்மா மூணு வேளை சாப்பாடு போடுகிற மெஸ் நடத்தினாள். அவங்க வீட்டுக்காரர் பாட்டு வாத்தியார். திண்ணையில் சுருதிப் பெட்டியோடு உட்கார்ந்து சரிகம என்று ஸ்வரம் இழுத்துப் பாடச் சொல்லிக் கொடுத்தார். ஆத்திரம் அவசரத்துக்கு சங்கீதக்காரர் சமையல்கட்டில் பொடிமாஸ் செய்ய வாழைக்காயை அரிவாள்மணையில் நறுக்கிக் கொண்டிருப்பார். ஆனாலும், அவர் வீட்டுக்காரி திண்ணையிலோ, உள்கட்டிலோ பாட்டுப் பாடிக் கேட்டதில்லை.

என் அம்மாவுக்கு அடுப்புப் பக்கம் போகக் கூடாத நேரம், பாட்டியம்மா “ஒருபொழுது’ உபவாசம், திடுதிப்பென்று உறவினர் வருகை போன்ற நேரங்களில் கையில் இரண்டு எவர்சில்வர் தூக்குகளோடு மெஸ் படியேற என்னைத்தான் அனுப்புவார்கள். “ஓரகத்தியோட பேத்தி. ராமேஸ்வரத்திலே மட் ஒய்பா இருக்கா. உனக்கு அக்கா முறை ஆகணும்டா குழந்தே. மிஸ்ஸிலே போய் புது ஈடா நாலு இட்லி வாங்கி வா’. பாட்டி, மெஸ்ûஸ மிஸ்ஸôக்கி… மிட் ஒய்பை மட் ஒய்ப் ஆக்கினாலும் கர்னாடக சங்கீத மெஸ் இட்லியைப் பார்த்த மாத்திரத்திலேயே “உளுந்து போதாது’, “சரியா வேகலை’ போன்ற அழுத்தமான விமர்சனங்களை முன்வைத்துவிடுவாள். நானூறு பக்க நாவலைப் படிக்காமலேயே கிண்டிக் கிழித்துத் தோரணம் கட்டும் இந்தக் கால இலக்கிய விமர்சகர்களுக்கு அவளே முன்னோடி. ஆனாலும் மெஸ் இட்லிக்கும் அவளுக்கும் ஒரு லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப் இருந்தது. விமர்சகர்களும் இலக்கியமும் போல.

மெஸ் நடத்த பஞ்சாயத்து போர்ட் அனுமதி வாங்கவில்லை என்று ஒரு தடவை ஆபீசர் ஒருத்தர் வந்து தக்காளி ரசத்தையோ, தண்ணீர் ஏகத்துக்கு விளம்பிய அவரைக்காய் சாம்பாரையோ கண்ணாடிக் குடுவையில் அடைத்துக் கொண்டிருந்ததாக சீதரன் சொன்னான். இலையில் சாதத்தோடு சுடச்சுட வார்த்துப் பிசைந்து விழுங்க வேண்டிய சங்கதியை எல்லாம் சயின்ஸ் வாத்தியார் பிராணவாயு தயாரிக்கிற மாதிரி குடுவையில் நிரப்பிப் பரிசோதித்துக் கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனாலும், சீதரன் அறிக்கை வெளியான ஒரு வாரத்தில் பஞ்சாயத்து ஆபீசிலிருந்து கூட்டமாக சைக்கிள்களில் வந்திறங்கிய ஒரு கூட்டம் கர்னாடக சங்கீத மெஸ்ஸில் புகுந்தது. தம்புராவையும் இலைக்கட்டையும் ஒரு பக்கமாக நகர்த்திவிட்டு அவர்களுக்குக் கல்யாண சாப்பாடு மாதிரி பரபரப்பாகப் பரிமாறிக் கொண்டிருந்தபோது, நாலு இட்லி, கெட்டி சட்னிக்காக நான் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிப் போனது.

சங்கீத மெஸ் தவிர இன்னொரு நட்சத்திர மெஸ்ஸýம் தெருவில் உண்டு. நட்சத்திரம் என்றால் த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் அந்தஸ்து என்று அர்த்தம் இல்லை. சினிமா நட்சத்திரம் கிருஷ்ணையா நடத்திய மெஸ்ஸôக்கும் அது. “வஞ்சிக்கோட்டை வாலிப’னா அல்லது “மிஸ்ஸியம்மா’வா என்று தெரியாது. நான் சினிமா பார்க்க ஆரம்பிப்பதற்கு முந்தைய ஏதோ ஒரு ஜெமினி கணேசன் படம். ஜெமினி பி.பி.சீனிவாஸ் குரலில் ஏக்கத்தோடு பாடுவார். அப்புறம் மனதில் பதிந்த கதாநாயகியைப் படம் வரைய உட்காரும்போது வர்ணம், பிரஷ் போன்ற சமாச்சாரங்கள் இல்லாதது தெரியும். “யாரங்கே!’ அவர் கையைத் தட்ட, ஒரு தட்டில் வர்ணப்பொடி, தேங்காய்மட்டை பிரஷ் எல்லாம் வைத்து எடுத்துக் கொண்டு, சின்னதாக உச்சிக்குடுமியோடு கிருஷ்ணையாதான் கம்பீரமாக நடந்துவருவார்.

கட்டை, குட்டையாக, குடுமி, கடுக்கன் அலங்காரத்தோடு கிருஷ்ணையா மெஸ் வாடிக்கையாளர்களோடு எப்போதும் ஒரு பத்து வருடங்களுக்கு முந்திய தமிழ் சினிமா அல்லது அரசியல் பற்றி உரக்கப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் கோதுமை ரவை, உப்புமா, கோதுமை சப்பாத்தி, கோதுமை தோசை என்று பத்திய போஜனமாக உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்காக மட்டும் நடத்தும் மெஸ்úஸô என்னமோ தெரியாது, நான் போனபோதெல்லாம் “இட்லி தீர்ந்து போச்சு; ரவாதோசை வேணும்னா போடச் சொல்றேன்’. கிருஷ்ணையா ஜெமினி கணேசன் மாதிரி உள்ளே பார்த்துக் கைதட்டுவார். “மெஸ்ஸியம்மா’ தலை சமையலறை இருட்டுக்கு வெளியே ஒரு வினாடி தட்டுப்பட்டு மறையும். “பக்தவத்சலம் ஆட்சியிலே அரிசிக்கு ஆலாப் பறக்க வேண்டியிருக்கு. ராஜாஜி திரும்ப வரணும்’. கிருஷ்ணையா மெஸ்ஸில் ராஜாஜி என்ன, அறிஞர் அண்ணாவே வந்து ரூபாய்க்கு மூணுபடி அரிசி கொடுத்தாலும், ரவா உப்புமாதான் கிடைக்கும்.

இந்த இரண்டு மெஸ் தவிர தெருக் கோடியில் பொரிகடலைக் கடைக்கு எதிரில் செல்லூரார் மெஸ் உண்டு. பக்கத்தில் மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு வரும் கட்சிக்காரர்களுக்காக, பிரத்யேகமாக கல்தோசையும், உளுந்து வடையும், சுண்டலும் விற்கிற இந்த மெஸ், கோர்ட் விடுமுறை காலத்தில் தூங்கப் போய்விடும். பள்ளிக்கூடம் அரைப் பரீட்சை, முழுப் பரீட்சைக்கு அடைத்து லீவு விடுவதுகூடத் தாமதமாகலாம். கோர்ட், வக்கீல் ஆபீஸ் போன்ற பெரியவர்கள் புழங்கும் இடங்கள் நாள் நட்சத்திரம் தவறாமல் வெகேஷனுக்காக அடைத்துப் பூட்டப்படுவது வாடிக்கை.

பஞ்சாயத்து போர்ட் பிரசிடென்டாக இருந்த அண்ணவாரு ராதாகிருஷ்ணன் ரெட்டைத் தெருவாசிதான். அவர் மெஸ் எதுவும் வைக்கவில்லை. ஆனால், காந்திவீதியில் ஏழெட்டு பெஞ்ச் போட்டு உடுப்பி ஓட்டல் என்று நடத்திக் கொண்டிருந்தார். பெரியவர்கள் காப்பி குடிக்கப் படியேறும் இடம் இது. நாலு வீட்டில் தோசைக்கு அரைத்து, குடிதண்ணீர் கொண்டுவந்து ஊற்றி வரும் சொற்ப வருமானத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த குட்டி கிருஷ்ணனின் அம்மா இறந்தபோது அவனும் வீட்டுக்காரியும் அதே நாலுவீட்டிலும் அண்டையிலும் தகனத்துக்காக யாசகம் வாங்கிய பணத்தோடு படியேறிய இடம் இந்த ஓட்டல். அக்கம் பக்கத்துப் பெரியவர்கள் இதை இளக்காரமாகச் சொல்லும்போது பாட்டியம்மா சொல்வாள்- “பாவம், அகப்பை நோக்காடு. குத்தம் சொல்லக் கூடாது’.

மெஸ்கள், ஓட்டலைவிட ரெட்டைத் தெருக்காரர்களை அதிகம் ஆகர்ஷித்த சாப்பாட்டுக்கடை ஒன்றும் உண்டு. சிவன்கோயில் தெரு முனையில், கங்காராஜ் அண்ட் கோவுக்கு அடுத்து இடிந்து விழுந்து கொண்டிருக்கும் பழைய வீட்டுத் திண்ணையில், ராமராயர் பகல் நேரத்தில் பஜ்ஜிக்கடை போடுவார். மதியம் கோர்ட் இடைவேளியின்போது குதிரை வண்டியில் வீட்டுக்குப் போகிற வக்கீல்கள், சைக்களில் கேஸ்கட்டோடு வருகிற குமாஸ்தாக்கள், பள்ளிக்கூட வாத்தியார்கள் என்று ஒரு பெரிய கூட்டம் ஊரில் உண்டு. காலையில் எட்டு மணிக்கு இலை போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் போகிற விநோதப் பழக்கம் உள்ளவர்கள்.

மதியம் பட்டப் படைக்கிற வெய்யிலில் ராமராயர் எண்ணெய்ச் சட்டி வைத்து காரசாரமாக உற்பத்தி செய்து தள்ளுகிற பஜ்ஜி தவலைவடை, மற்றும் சுவியன், போளி வகையறாக்கள் அடுப்பை விட்டு வெளியே வந்த நிமிடமே எண்ணெய் கசிய பழைய தினசரியில் சுற்றி பரபரப்பாகச் சாப்பிட்டு முடிக்கப்படும். அருகருகே நின்று அன்னியோன்னியமாகப் பேசியபடி மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட வக்கீல்கள் அந்தக் காரம் குரலில் வழிய மாஜிஸ்ட்ரேட் கோர்ட் படியேறி எதிரும் புதிருமாகப் பொறிபறக்க வாதிடும்போது, ராமராயர் எண்ணெயைத் தூக்குப் பாத்திரத்தில் வழித்து ஊற்றிவிட்டு, மீதித் தவலைவடையைப் பிரம்புத் தட்டில் பரத்திக்கொண்டு, ஊருணிப் பக்கம் முன்சீப் கோர்ட்டை நோக்கி நடப்பார். அங்கேயும் நீதியை நிலைநாட்டத் தன்னாலான ஒத்தாசையைச் செய்கிற அவசரம் நடையில் தெரியும்.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

பங்குனி மாதம் பிறந்தால் சிவன் கோவிலில் கொடி ஏற்றுவார்கள். இது சுதந்திர தினத்துக்கு ஹெட்மாஸ்டர் ஏற்றி, பத்து நிமிஷம் காந்தி, நேரு என்று பேசிவிட்டு, வரிசையில் நிற்க வைத்து ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து அனுப்புகிற சமாச்சாரமில்லை. சிவன் கோவிலில் நடக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான கொடி. சிவனுக்கு இல்லை, சுப்பிரமணிய சுவாமிக்குத்தான் பத்து நாள் உற்சவம், திருக்கல்யாணம் அப்புறம் தேர். கிட்டத்தட்ட முழு வருடப் பரீட்சை லீவோடு இது சேர்ந்து வருவதால், பத்து நாளும் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட திருவிழா மண்டகப்படி நடக்கிற இடங்களில் சுற்றுகிறதுதான் அதிகமாக இருக்கும்.

பங்குனி உத்திரக் கொடியேற்றியதும், உள்ளூர்காரர்கள் வெளியூர்ப் பயணம் எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எந்தக் காலத்திலேயோ எழுதாத சட்டம் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் ஊருக்குப் போகாமல் இருக்க முடியாது. முக்கியமாக அப்பா. போட் மெயில் என்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில் வந்து இறங்கி, கான்வாஸ் பையோடு வீட்டுவாசல்படி ஏறுகிறவராகத்தான் அவர் இன்னும் என் நினைவுகளில் இருக்கிறார். அவர் அடுத்தபடி ஆபீஸ் டூர் போக ஆயத்தமாகும்போது கோவில் கொடியேற்றியிருக்கும் என்பதால், வீட்டில் ரேழிக்குப் பக்கத்து காமிரா அறையில் எப்போதும் ஒரு துணிப்பையில் ஒரு பழைய கதர் வேட்டி, கைவைக்காத பனியன், குற்றாலத் துண்டு அடைத்துத் தயாராக வைத்திருக்கும். அதாவது கோவில் உற்சவத்துக்கு முன்பே அவர் பிரயாணம் போகத் தயாராகி, ஊரின் எல்லையில் மூட்டை முடிச்சைக் கொண்டு சேர்த்துவிட்டாராம். அது எப்படி, குனிந்தால் தலை இடிக்கிற எங்கள் வீட்டு அறைக்குள் ஊர் எல்லை வந்து நுழைந்தது என்று தெரியாது.

பங்குனி உத்திரத்தின் பொழுது பத்து நாளும் சாமி புறப்பாடு உண்டு. சாயந்திரம் ஓலையைக் கொளுத்தி தெருத் தெருவாக இழுத்துப் போவதற்கு பையன்களுக்குள் உக்கிரமான போட்டி நடக்கும். சாமி வரும் தெருவைச் சுத்தப்படுத்தவாம் இது. கொளுத்திய ஓலையோடு பீடித் துண்டு, பல்பொடி மடித்த காகிதம் ரேஷன் அரிசி வாங்கினதற்கான ரசீது, ஜெயவிலாஸ் பஸ் டிக்கட் என்று தெருவோடு கிடக்கும் சகலமானதும் புகையைக் கிளப்பி எரிந்து கதம்ப வாடையைக் கிளப்பும்.

முதல் இரண்டு நாள் மண்டகப்படி உற்சவமும் சாமி புறப்பாடும் சாதாரணமாகத்தான் இருக்கும். பரம்பரை பரம்பரையாக சீரோடு வாழ்ந்து நொடித்துப் போன குடும்பங்கள் வீம்புக்காக இன்னும் விடாமல் நடத்துகிற உற்சாகம். ஒற்றைத் தீவட்டி, நிறைய இடம் விட்டுக் கட்டிய பூமாலை சார்த்திய பழைய பல்லக்கு, நகரா என்கிற ஒற்றை மேளம், சாமி பல்லக்கோடு கூட வேகுவேகுவென்று நடக்கிற குருக்கள் வீட்டுக் கடைசிப் பையன் என்று அதிசிக்கனமாக நடந்தேறும். இந்த ஊர்வலங்களுக்கு அப்புறம் காந்திவீதி, நேருவீதி வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு பெரிய தோதில் தினசரி மண்டகப்படி நடத்த ஆரம்பிப்பார்கள்.

மண்டகப்படி நடக்கிற இடத்தில் கூரைக் கொட்டகை போட்டு ராத்திரி சரியாக ஏழு மணிக்கு கச்சேரி வாடிக்கையாக இடம்பெறும். ஒரு வருடம் திருச்சியிலிருந்து நகாஸ் என்று ஒரு பாடகர் வந்து சீர்காழி, டி.எம்.எஸ் பாட்டு நாலைந்து பாடினார் சட்டென்று “சிங்காரவேலனே தேவா’ என்று அச்சு அசலாக எஸ்.ஜானகி குரலுக்குத் தாவி, தொடர்ந்து மூக்கை விரலால் பொத்திக் கொண்டு காருகுறிச்சி அருணாசலத்தின் நாதசுவர இசையையும் எடுத்து விட்டாரே பார்க்கலாம்! விசில் சத்தம் காதைப் பிளந்தது. இன்னொரு தடவை, அருமையாக ஆர்மோனியம் வாசித்தபடி “ஆடாது அசங்காது வா கண்ணா’ பாடிய பித்துக்குளி முருகதாஸிடம் “சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராவணன் பாடுகிற ராகமாலிகை பாடச்சொல்லித் துண்டுச் சீட்டு யாரோ அனுப்பியபோது அவர் முடியாது என்று மறுத்துவிட்டார்.

ஒருதடவை ஜவுளிக்கடைக்காரர்கள் மண்டகப்படிக்கு போலீசில் அனுமதி வாங்கி, நடுத்தெருவை அடைத்து வெள்ளைத்திரை வைத்து “நீலக்கடலில் நிம்மதியான உலகம்’ சினிமா போட்டார்கள். இங்கிலீஷ் படம். கடலுக்கு அடியில் எடுத்தது. வெள்ளைக்காரர்கள் சுறாமீனையும், திமிங்கிலத்தையும் காட்டி பேசிக்கொண்டே இருந்தார்கள். அதற்கும் சிவன்கோவில் திருவிழாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. என்றாலும் தியேட்டருக்கு வெளியே சினிமா, அதுவும் ஓசியில் என்பதால் சாயந்திரம் நாலுமணியிலிருந்து அந்தப் பிராந்தியமே அமளிதுமளிப்பட்டது. படத்தை அவ்வப்போது புரஜக்டரில் ரீல் மாற்ற நிறுத்தி, “புகையிலை வாங்கினால் காதித விசிறி இனாம்’ என்று அறிவிப்பு வேறே. புகையிலை விற்று, படம் முடிந்து ஊர்வலம் கிளம்ப சாமியும் பொறுமையாக ரதத்தில் காத்துக் கொண்டிருந்தார் பாவம்.

மண்டகப்படி விசேஷங்கள் முடிந்து ராத்திரி ஒன்பது மணிக்கு சாமி புறப்பாடாகும்போது, முன்னால் கரக ஆட்ட கோஷ்டி நையாண்டி மேளத்தோடு ஆர்ப்பாட்டமாகக் கிளம்பிப் போகும், நிறையப் பவுடர் ஒற்றி, ஜிகினாவை புருவத்தைச் சுற்றி ஒட்டிக் கண்மை இட்ட அந்தப் பெண்கள் கையில் தவறாது கைக்கடியாரம் காணப்படும். ஒவ்வொரு தெருமுனையிலும் பத்து நிமிடம் நிறுத்தி “மாமா மாமா மாமா’, “எலந்தப்பழம்’ போன்ற ஜமுனாராணி, எல்.ஆர். ஈஸ்வரி பாட்டுகளுக்குத் தலையில் கரகத்தோடு வியர்த்து வடிந்து அவர்கள் நடனமாடுவார்கள்.

புதிதாகத் தார் போட்ட தெரு நடுவில் வைத்த ஒரு ரூபாய்க் காசைத் தலையில் வைத்த கரகம் நழுவாமல் குனிந்து, கண் இமையால் பற்றி எடுப்பதைப் பார்க்க என்னமோ பாவமாக இருக்கும். “லஜ்ஜை கெட்ட கூத்தா இருக்கே’, முழுக்கப் பார்த்து முடிந்த பெரியவர்கள் மேல் துண்டைப் போர்த்திக்கொண்டு நடக்கும்போது நாங்கள் நாதசுவர கோஷ்டி பின்னால்.

தெருமுனையில் நின்று ராகம் இழுத்து வெளியூர் நாதசுவர கோஷ்டிகள் வாசிக்கும். எல்லாருக்கும் பிடித்த “தாமரை பூத்த தடாகமடி’, “கற்பகவல்லி நின் பொற்பதங்கள்’ போன்றவை கூட்டம் அதிகமான நாலுதெரு சந்திப்புகளில் வாசிக்கப்படும். ஒருதடவை தாளக்காரப் பையனை (எம் வயசுதான் அவனுக்கு) தூக்கக் கலக்கத்தில் தப்புத்தாளம் போட்டதற்காக நடுராத்திரி நேரத்தில் நாதசுவரக்காரர் பேயறை அறைந்ததைப் பார்த்தபின் நாதசுரம் கேட்கப் போகவே பிடிக்கவில்லை.

சலவைக்காரர்கள் மண்டகப்படி விசேஷமானது. முழுக்க முழுக்க பூவால் நிறைத்து அலங்கரித்த புஷ்பப் பல்லக்கில்தான் உலா. பல்லக்கு தெருவுக்கு வருவதற்கு முன்பே தூக்கலான பூவாடை எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும். மல்லிகை, ரோஜா, இருவாட்சி, தாழை, முல்லை, சம்பங்கி, பிச்சிப்பூ, கனகாம்பரம் என்று தழையத் தழையக் கட்டி ஊர்ந்து வரும் பல்லக்குக்கு முன்னால் சுந்தரேசுவரக் குருக்கள் மேல் துண்டால் மூக்கை சற்றே பொத்தியபடி நடப்பார்.

பூவாசனை தாங்காது ஒருதடவை தலைசுற்றி நடுத்தெருவில் விழுந்துவிட்டதற்கு அப்புறம் இது. இந்த மண்டகப்படிக்கு நன்கொடை வசூல் செய்து சீட்டுக் குலுக்கல் நடத்தி, சருவப்பானை, எவர்சில்வர் டிபன்காரியர் பரிசாகத் தருவது வழக்கம். ராமன் லாண்டரி குடும்பத்தில் யாருக்காவது வருடாவருடம் பரிசு கிடைக்கும். அநேகமாக டிபன் காரியராகவே அது இருக்கும்.

தேருக்கு முந்தைய நாள் சாயந்திரம் கோவிலில் பருப்புத் தேங்காய், அக்னி வளர்த்து ஹோமம், ஆரத்தி, மஞ்சள், குங்குமம், நலுங்குப் பாட்டு எல்லாம் சேர, திருக்கல்யாண உற்சவம் மங்களகரமாக நடக்கும். கல்யாணம் முடிந்த சுவாமி தம்பதி சமேதராக உலா போவது வரிசையாக மின்சார பல்ப் மாட்டிய ரதத்தில். முன்னால் நீண்டு போகும் இரண்டு வரிசையாக, கழியில் பளிச்சென்று எரியும் டியூப்லைட் மாட்டி வயர் இழுத்துப் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போது சகாயமாதா கோவில் திருவிழாவா, சுப்பிரமணிய உற்சவமா என்றே தெரியாது. எதற்குத் தெரியணும்? எல்லாமே சந்தோஷம்தான்.

——————————————————————————————————————–

Kathir – Oct 7 2007

பங்குனி உத்திரக் கொடி ஏற்றி பத்தாவது நாள் தேரோட்டம். ஸ்கவுட் மாஸ்டர் லூர்துசாமி வாத்தியார் பள்ளிக்கூட வாசலில் காக்கி நிஜார், தொப்பி, விசில் சகிதமாக நடுப்பகலுக்கே ஆஜராகிவிடுவார். சாரணர் இயக்கத்தில் இருக்கப்பட்ட பிள்ளைகள் எல்லாம் அவர் தலைமையில் பொதுஜன சேவைக்குக் கிளம்பும் நேரம் இது. தினசரி ஒரு நல்ல காரியமாவது செய்து குறிப்பேட்டில் எழுதி சபையில் படிக்கவேண்டிய கடமை சாரணர்களுக்கு உண்டு. ஒருதடவை முதல் பெஞ்சில் இருந்த நாலு பையன்களும், “அரண்மனை வாசல் பக்கம் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே வயதான ஒரு பெண்மணியைச் சாலையைக் கடக்க உதவினேன்’ என்று ஒரே குறிப்பு எழுதியிருந்தார்கள். என்ன விஷயம் என்று வாத்தியார் விசாரிக்க, “அந்தப் பாட்டியம்மா தெருவைக் கடக்க மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க’ என்று காரணம் சொன்னார்கள்.

சாரணர்கள் பள்ளி வாசலில் லெஃப்ட் ரைட் போட்டு, விசில் ஊதிக்கொண்டு, கயிற்றில் விதவிதமாக முடிச்சுப் போட்டு அவிழ்த்து தேர்க்காலத்தில் ஊர்ப் பாதுகாப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும்போது, வீட்டில் இரண்டு விஷயம் இல்லாமல் போயிருக்கும். முதலாவது மின்சாரம். தேர் பிரம்மாண்டமாக நகர்ந்து எட்டு வீதியும் சுற்றித் தேரடிக்கு வரும்வரை, முன் ஜாக்கிரதையாகத் தேரோடும் வீதிகளில் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டிருக்கும். இன்னொரு சப்ளை நிறுத்தம் நல்லையா நடத்துவது. காலையில் அவர் வீடுவீடாகச் சந்தாதார்களுக்கு வினியோகிக்கிற தினசரி பத்திரிகை, வாரப் பத்திரிகை சமாச்சாரங்கள் அன்று வீட்டு வாசலில் வந்து விழாது. குடும்பத் தொழிலான பழவியாபாரத்திற்காகத் தேரடியில் கடைபோட்டு, நல்லையா கால்பரப்பி உட்கார்ந்து பலாப்பழத்தை எண்ணெய் தடவிய கத்தியால் அறுத்துக் கொண்டிருக்கும்போது, வென்னீர் குடித்த வக்கீல்கள் முந்தியநாள் பேப்பரைத் திரும்பப் படித்தபடி மனதில் நல்லையாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி இங்கிலீஷில் விசாரித்துக் கொண்டிருப்பார்கள். காலையில் பேப்பர் படித்து, காலைக் கடன் முடித்து, கிரமமாக நாளைத் தொடங்குவது தடைப்பட்ட கஷ்டம் அவர்களுக்கு.

கோயிலை ஒட்டிய தேரடியில் மரத் தேரைக் கழுவித் துடைத்து, ஜமுக்காளங்களை உருட்டி நீளமாகத் தழைகிற தோரணங்களை மாட்டி, பூவும், வாழையிலை, மாவிலையுமாக அலங்காரம் செய்யப்படும். நல்லையா கடையோடு நாலைந்து வளையல் கடை, கோலிசோடா கடை, பலூன்கடை என்று வரிசையாகத் தெருவோரமாக முளைத்திருக்கும். மலிவுவிலை சர்பத் கடையில் மூன்று பைசா நாணயங்கள் அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீரில் மிதந்தபடி சர்பத் விலையைச் சொல்லிக்கொண்டிருக்கும். சுதந்திர இந்தியா அதற்கு முன்போ பின்போ வெளியிட்ட வேறு எந்தக் காசும் மிதந்ததில்லை. கடையில் நீட்டினால், கண்ணாடி கிளாஸில் சாக்ரின் ஜாஸ்தியான, ஐஸ்கட்டி போட்ட சர்பத்தும் அப்புறம் மூணு பைசாவுக்குக் குடிக்கக் கிடைக்கவில்லை. சர்பத் கடைக்குப் பக்கத்தில் பொட்டல்வெளியில் கலர் கலராகக் கண்ணாடி வைத்து, சீரியல்செட் விளக்குப்போட்ட வண்டி. கரடு கரடாகத் திரண்ட கையும் காலுமாகக் கதாயுதத்தைத் தூக்கியபடி பயில்வான் தோரணையோடு நிற்கிற பீமசேனன் படம். எண்ணெயோ டால்டாவோ கசிந்து வழிகிற அல்வாவை மலைபோல் குவித்து வைத்துக்கொண்டு, “தேகபலம் தரும் பீமபுஷ்டி அல்வா சாப்பிடுங்கள்; வலிமைக்கு விலை இருபத்தைந்து பைசா மட்டுமே’ என்று சோனியாக ஒருத்தர் தொடர்ந்து கையில் ஒலிபெருக்கி வைத்து முழங்கிக் கொண்டிருப்பார். முறுக்குமீசை தவிர அவருக்கும் பீமசேனனுக்கும் வேறு ஒற்றுமை இருக்காது. அவ்வப்போது இருபத்தைந்து பைசா செலவில் உடனடியாகப் பீமசேனனாக உத்தேசித்து யாராவது காசை நீட்ட, பக்கத்தில் வைத்த ஒரு வாளால், அல்வா மலையிலிருந்து லாவகமாக ஐந்து சென்டிமீட்டர் நீள, அகலம் மற்றும் இரண்டு சென்ட்டிமீட்டர் கனத்தில் ஒரு துண்டை வெட்டி பூவரச இலையில் வைத்து அல்வாக்காரர் தருவார். வாங்கிச் சாப்பிட்டவர்கள் இலையை விட்டெறிந்துவிட்டு கம்பீரமாகப் பார்த்தபடி நடப்பார்கள். ஒரு இருபத்தைந்து காசு வீட்டுப் பெரியவர்கள் கொடுத்திருந்தால் நான் இன்னேரம் பயில்வானாகியிருப்பேன்.

ஊரில் தேரோட்டம் என்றால் எப்படியோ மாஸ்கோவில் செய்தி தெரிந்து, ஆளனுப்பித் தெப்பக்குளம் பக்கம் பனந்தட்டி வைத்து அடைத்து சோவியத் புத்தகக் கடை போட்டுவிடுவார்கள். வழுவழு காதிதம். புரட்டினால் சுகமான வாடை. ஐந்து ரூபாய்க்கு லெனின் வாழ்நாள் முழுக்க எழுதியது, பேசியது சகலமும் ஏழெட்டு வெல்வெட் தலையணை சைஸ் புத்தகமாகக் கிடைக்கும். பீமபுஷ்டி அல்வா வாங்க இருபத்தைந்து பைசா கொடுக்காத வீட்டில் லெனினுக்காக ஐந்து ரூபாய் எப்படிப் பெயரும்?

சுற்றி ஏழெட்டு கிராமத்திலிருந்து புறப்பட்டு, தாரை தப்பட்டை முழங்க வடம் பிடிக்க வருகிற கூட்டத்தோடு உள்ளூர்வாசிகளும் சேர, சாயந்திரம் ஐந்து மணிக்கு அதிர்வேட்டு சத்தம் காதைப் பிளக்கும். தேர் நிலையிலிருந்து நகர்ந்தாச்சு. இனி நாலு ஐந்துமணி நேரம் கழித்து அது நிலைக்குத் திரும்புவரை தேரடி வெறுமையாக, விடுமுறை விட்ட பள்ளிக்கூடம் போல் சுரத்தே இல்லாமல் இருக்கும். அப்போது போனால் அல்வா, பலாச்சுளை, சோவியத் புத்தகம் எல்லாம் இன்னும் மலிவாகக் கிடைக்கும் என்று பரவலாக நம்பிக்கை நிலவினாலும் யாரும் போவதில்லை.

தேர் ரெட்டைத் தெருவை அடைத்துக்கொண்டு ஆரவாரத்துக்கு நடுவே ஆயிரம் கைகள் வடம் பிடித்து இழுக்க மெல்ல நகரும்போது வீட்டுப் படியில் நின்றபடி ஒருவினாடி சாமி தரிசனம். பெரிசுகள் கன்னத்தில் போட்டுக்கொண்டு வேல் வேல் என்று கூட்டத்தோடு உரக்க முழங்கும் நேரம் பார்த்துச் சத்தம் போடாமல் கூட்டத்தில் கலந்து விடலாம். பின்னால் ஐநூறு பேர் தள்ள, முன்னால் இன்னொரு ஐநூறு பேர் மெல்ல நகர, கடகடத்து வரும் பெரிய மரச் சக்கரங்களைப் பார்த்தபடி, தேர்வடத்தை ஒரு வினாடி தொட்டு இழுத்து யாரோ பெரியவர்கள் அணைத்து அப்பால் அனுப்ப, அந்தப் பெரிய ஜனசமுத்திரத்தில் ஒரு துளியாகக் கரைவதில் இருக்கும் மகிழ்ச்சி இன்னொரு தடவை கிடைக்க என்ன வேணுமானாலும் தரலாம்.

நகர்கிற தேரில் இரண்டு புறத்திலும் நின்று கையை அசைத்து வடம் பிடிக்கும் கூட்டத்தை முன்னே செலுத்திக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் ரிடையர்ட் போலீஸ்காரர்களாக இருப்பார்கள்.. அவர்கள் பின்னால், தேரில் உட்கார்ந்தபடியே நாதசுரம் வாசித்து வருகிற நடேசன் நாயனக்காரர். பக்கத்தில், இரைச்சலுக்கு நடுவிலும் டமடம என்று தவிலை முழக்கியபடி கருப்பையாப் பிள்ளைவாள். “அளவா லேகியம் சாப்பிட்டா அம்சமா வாசிக்கலாம்’ என்று தவில்காரர் எங்களிடம் ஒருதடவை தேரோட்டம் முடிந்து சொன்னார். பீமபுஷ்டி அல்வா இல்லையாம் அது.

தேர் சிவன்கோவில் தெரு திருப்பத்தில் நிற்கும். குறுகிய திருப்பம். அது முடிவது வக்கீல் சுப்பண்ணா வீட்டு வாசலில். இன்னும் இருபது அடியில் அடுத்த கடைசித் திருப்பம். அது கடந்தால் தேரடிதான். இந்த வளைவில் தேரைக் கொண்டுவர, இரண்டு பக்கத்திலும் வடம் பிடித்து இழுப்பவர்கள் நீண்ட வரிசையாக சுப்பண்ணா வீட்டு முன்வாசல் கடந்து, கூடம் வரை நுழைந்து பிடியை விடாமல் இழுக்க, தேர் தளுக்கும் மினுக்குமாகத் திரும்பும். ஊர் முழுக்க சுப்பண்ணா வீட்டுக் கூடத்தில் ஐந்து நிமிடம் கூடவதும், அப்புறம் வந்த சுவடே தெரியாமல் அந்த இடம் திரும்ப அமைதியாவதும் வருடம் ஒருமுறை நடப்பது. சுப்பண்ணா காலமானபோது, “தேர்க்கூட்டம்தான்’ என்றார்கள் கலையாமல் அங்கே நின்ற கூட்டத்தைப் பார்த்தவர்கள்.

போனவருடம் ஊருக்குப் போனபோது தேரடியைப் பார்த்தேன். தேர் உளுத்துப்போய் நின்று கொண்டிருந்தது. அது நகராது. வக்கீல் வீட்டு வாசல் கடந்து வடம் பிடித்து இழுக்கக் கூட்டம் வராது. சின்ன வாசலும் நாலு மாடியுமாக அங்கே புதுக் கட்டடம் எழும்பி நிற்கிறது.
——————————————————————————————————————–

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

Sunday October 14 2007 00:00 IST

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

ராத்திரிக் கச்சேரி நடத்தும்போது பேங்க் ஏஜெண்ட் கிட்டு தவறி விழுந்ததற்கு இரண்டு மாதம் கழித்து ஊரில் சங்கீத சபா தொடங்கப்பட்டது. இப்படிச் சொன்னால் புரியாது. பேங்கு ஏஜெண்ட்டில் ஆரம்பிக்கலாம். கி.பி. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் வங்கி மேனேஜர்கள் என்ன காரணத்துக்காகவோ ஏஜெண்ட்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தொளதொளவென்ற பேண்ட் மாட்டிக்கொண்டு, சதா சிடுசிடுத்த முகத்தோடு இவர்கள் கிளார்க்கு, கேஷியர், டைப்பிஸ்ட் வகையறாக்களை கட்டி மேய்த்தபடி நாள்முழுக்க பேங்குக்குள் சுற்றிவருவார்கள். ராத்திரி ஏழுமணி போலத் தட்டுச் சுற்று வேட்டிக்கு மாறித் தெருமுனையில் ஜமா சேர்த்துக் கொண்டு வெற்றிலை போட்டபடி வம்பு பேசுவார்கள். பேங்க் ஏஜெண்ட் கிட்டு ராத்திரி ஜமா சேர்த்துக் கொண்டு சிவன்கோயில் தெருவில் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து கீர்த்தனம் பாடுவது வழக்கம். “பால கனகமய’ என்று தொடங்கி சுவரம் பாடி முடிப்பதற்குள் கூட இருக்கப்பட்ட நண்பர்களான பள்ளிக்கூட ஹெட்மாஸ்டரோ அல்லது எதிர்வீட்டு டாக்டரோ, கோடிவீட்டு என்ஜீனியரோ, “”அடானாவிலே இந்த சஞ்சாரம் வரலாமோ” என்று சந்தேகத்தைக் கிளப்புவார்கள். வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவியபடி, கட்டைக் குரலில் அடானா அதிகாரமாகத் தொடரும்.

ஏஜெண்ட் வீடு நல்ல உயரமான வீடு. அகலமான ஐந்து வாசல்படி. இரண்டு பக்கத்திலும் யானை முகம் போல சின்னதாகச் சுவர்கள் படிகளை அணைத்து, கோயில்

மண்டபவாசல் போல உயர்ந்திருக்கும். கச்சேரி செய்கிற ஏஜெண்ட் ஒரு பக்கத்துப் படிச் சுவர் உச்சியிலும், விமர்சகர்கள் எதிர்வசத்திலும் உட்கார்ந்திருப்பது வாடிக்கை. ராக ஆலாபனையின்போது ஐந்தாம்படி ஓரத்திலிருந்து தவறிப் பக்கத்துப் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார் ஏஜெண்ட். நல்லவேளை அடி பலமாக இல்லை. டாக்டர் உடனே போட்டுவிட்ட பெரிய பிளாஸ்திரியோடு முழங்காலுக்கு பேண்டை சுருட்டி மடித்துவிட்டுக்கொண்டு பத்துப் பதினைந்து நாள் சுற்றிவந்தார் அவர். நல்ல சங்கீதத்தைக் கேட்டு ரசிக்க ஊரில் நூறு பேராவது தேறுவார்கள் என்று அவருக்கும் சகபாடிகளுக்கும் அப்போது தோன்றியிருக்கலாம். சென்னையிலிருந்து ரிடையராகி வந்த காலேஜ் பிரின்சிபாலும் மெட்ராஸ் சபா நடவடிக்கைகளைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்து உற்சாகப்படுத்த, உள்ளூர் சங்கீத சபா சீக்கிரமே உதயமானது.

“மாசம் ஒரு கச்சேரி… அரியக்குடி.. செம்மங்குடி, குன்னக்குடின்னு வரிசையா வரப்போறாங்க. குடும்ப பாஸ் பத்து ரூபாய்தான்.’ ஊரின் பொதுநலத் தொண்டன் குப்பன் நிதானத்தில் இருக்கிற சாயங்கால நேரங்களில் வீடுவீடாக நோட்டீஸ் வினியோகிக்க, கொஞ்சம் பின்னால் ஏஜெண்ட், ஹெட்மாஸ்டர், டாக்டர், என்ஜீனியர் ஜமா தொடர்ந்து வந்து, சந்தா சேர்த்தது. இப்படி ஊர்ப் பெரிய மனுஷர்கள் எல்லா வீட்டில் நுழைந்து அழைக்க, நடுத்தெருவிலும், சிவன்கோவில், பெருமாள் கோவில் தெருக்களிலும் கிட்டத்தட்ட எல்லாக் குடும்பங்களும் சபா அங்கத்தினராகி விட்டார்கள். பஜ்ஜி ராயர் கூட மைசூர் செüடையா வயலின் கச்சேரி வைக்க வேணும் என்ற நிபந்தனையோடு, எகனாமி கிளாஸ் டிக்கட் எடுத்தார்.

சபா ஆரம்பித்த உடனே இப்படி வெளியூர் பெரிய கைகளை மேடையேற்ற அவகாசம் இல்லை என்பதால் முதல் மாத நிகழ்ச்சிகள் உள்ளூர் மற்றும் பக்கத்து ஊர்த் திறமைகளோடு தொடங்கின. ஹைஸ்கூல் ஆடிட்டோரியம்தான் சபா அரங்கு. நாயனம் நடேசனும், அவருடைய மருமகனான பக்கத்து ஊர்க் கோவில் நாதசுவரம் கிருஷ்ணனும் சேர்ந்து “கற்பகவல்லி நின் பொற்பதங்கள்’ பிடிக்க, கருப்பையா பிள்ளைவாள் மற்றும் அவர் சகலை முழக்கிய ஸ்பெஷல் தவுல் மற்ற சத்தத்தை எல்லாம் விழுங்கி ஆடிட்டோரியத்தை ஆட்டங்காண வைத்தது. பாலக்காட்டிலிருந்து குடியேறிய கல்யாண சமையல் தாணு மாஸ்டர் மகள் ஓமனக்குட்டி பாட்டு கற்றுக்கொண்டு ஆலப்புழை ஆகாசவாணியில் பாடப் போனாள். குரல் சரியில்லை என்று திருப்பி அனுப்பி விட்டதாகக் கேள்வி. மங்கள வாத்தியத்துக்கு அப்புறம் ஓமனக்குட்டி கச்சேரி. நலுங்கு, நவராத்திரி, வளைகாப்பு என்று எங்கே கூப்பிட்டாலும் ஓமனக்குட்டி “பாவயாமி ரகுராமம்’ தான் பாடுவாள். சபாவிலும் அவள் வழக்கம்போல் கண்ணை இறுக்க மூடிக்கொண்டு ராமன் பிறப்பில் ஆரம்பித்து பட்டாபிஷேகத்தை நோக்கி மிக மெதுவாக ராகமாலிகையாக நகர, சபையில் பொறுமை போனது. இந்த வேகத்தில் போனால் கச்சேரி முடிந்து அடுத்து ஆவலாக எல்லாரும் காத்திருக்கும் நிகழ்ச்சி தொடங்க விடிகாலை ஆகிவிடும். பேசாமல் கர்னாடக சங்கீத மெஸ்கார அண்ணாவையே பாட வைத்திருக்கலாம். ஆனால் அவருக்குப் பாடிக்கொண்டே வாழைக்காய் நறுக்க அரிவாள்மணையும் தேவை.

ஒருவழியாகத் தாடகை வதத்தோடு ஓமனக்குட்டியின் கச்சேரி ஒத்திவைக்கப்பட, காதைப் பிளக்கிற கரகோஷம். அடுத்தபடியாக, ஹைஸ்கூல் ஆசிரியரும், நாடக கர்த்தாவுமான கே.ஆர்.என் சார் எழுதி உள்ளூர் மக்களே முழுக்கப் பங்கு பெற்ற “விடை இல்லாத கேள்விகள்’ சமூக நாடகம் ஆரம்பம். பாங்க் ஏஜெண்ட் மகன் நரேந்திரபாபு கதாநாயகனாகக் காதலித்தபடி மேடையில் குறுக்கும் நெடுக்குமாக அலைய, பள்ளிக்கூடத்தில் எனக்கு நாலைந்து வருடம் சீனியரான கிருஷ்ணகுமார் தலையில் டோபா முடியோடு காதலியாகக் கீச்சென்று வசனம் பேசினான். கதாநாயகிக்கு இரட்டை வேடம் என்பதால், ஜிக்கி பாடிய “சின்னப் பெண்ணான போதிலே’ இசைத்தட்டுக்கு நடனம் வேறே சுழன்று சுழன்று ஆட, அடுத்த கைத்தட்டல் கதாநாயகியைப் பெண் பார்க்க ஹீரோ குடும்பத்தோடு வரும் காட்சியில் ஏஜெண்ட், டாக்டர், என்ஜீனியர் ஆகியோர் கவுரவ நடிகர்களாக மேடையில் தோன்றி ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு, ஆறி அவலாய்ப்போன ராயர் கடை பஜ்ஜியும் சொஜ்ஜியும் சாப்பிட்டபோது உற்சாகத்தின் எல்லைக்கே ரசிகர்கள் போயிருந்தார்கள்.

அடுத்தடுத்த “மாதக் கச்சேரிகளுக்கு ஆல் இந்தியா ரேடியோவில் பகல் நேரத்தில் அரைமணி நேரக் கச்சேரி செய்யும் வித்துவான்கள் வரிசையாக வரவழைக்கப்பட்டார்கள். செம்பை எங்கே, காருகுறிச்சி எங்கே என்று குரல் கேட்டு அலுத்துப் போய் உள்ளூர் ரசிகப்பெருமக்கள் ரேடியோவில் கேட்ட குரல்களை முகங்களோடு தரிசிக்கப் பழகிக் கொண்டார்கள். வானொலியில் கச்சேரி செய்வதோடு, அகில பாரத நாடகங்களில் “சிம்மாத்திரி, இந்தக் கடல் புறத்திலே உன் குரல் எனக்கு மட்டும் கேட்கிறதே’ என்று ஆந்திரக் கடலோரத்திலும், “பஜாஜ் சாப், ஹோலிக்கு வர்ணத் தண்ணீரை என்மேல் தெளிக்காதீங்க, நான் கருப்பாகவே இருந்துட்டுப் போறேன்’ என்று தில்லி குடியிருப்பிலும் குரலால் வசனம் பேசி நடந்த ஒரு வித்வான்-கம்-நடிகர் கச்சேரிக்கு வந்தபோது, வழக்கத்தைவிடப் பத்து பேர் கூடுதல். அப்போது ஹைஸ்கூல் ஆடிட்டோரியம் கிட்டாமல், பத்தாம் கிளாஸ் “ஏ’ மற்றும் “பி’ பிரிவுகளுக்கு இடையே இருந்த மர ஸ்கிரீன்களை நகர்த்திவிட்டு, பிதகோரஸ் தியரம் எழுதி விளக்கியிருந்த கரும்பலகைக்குக் கீழே கச்சேரி நடந்தது.

வாங்கிய டிக்கெட் வீணாக வேண்டாம் என்பதற்காக இந்தக் கச்சேரிகளுக்கு என் வீட்டிலிருந்து நானும் மற்ற வீடுகளிலிருந்து அதேபடி கூட்டாளிகளான பையன்களும் மட்டுமே கட்டாயமாக அனுப்பப்படுவது அதிகரித்தது. “ப்ரோவோ பாரமா’, “தேவி ப்ரோவ சமயமிதே’, “நன்னு ப்ரோவ நடாசி வச்சிதிவோ’ என்று கச்சேரிக்குக் கச்சேரி கேட்டு, ஏதோ ஒரு மொழியில் “ப்ரோவுதல்’ என்றால் கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தபோது சங்கீத சபா ஓய்ந்து போயிருந்தது.

அப்புறம் ஒரு ராத்திரி பாங்க் ஏஜெண்ட் திரும்ப வீட்டு வாசல்படி முகப்பில் “ஆத்மாராமா ஆனந்த ரமணா’ என்று கச்சேரி செய்வதைப் பார்த்தோம். டாக்டரும், என்ஜீனியரும் அவருக்கு இரண்டு பக்கத்திலும் பாதுகாப்பாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எதிர்ப்பக்கம் உட்கார்ந்திருந்தால், அடுத்த சங்கீத சபா ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.

———————————————————————————————————————————————-

Sunday October 28 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ,40 ரெட்டைத் தெரு

இரா. முருகன்

காலையில் பிரேயர் முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கியபோதே சண்டை ஆரம்பித்துவிட்டது. எலிமெண்டரி ஸ்கூல் என்பதால் சின்னப் பசங்களைச் சரியாகப் பிரார்த்தனை செய்யப் பயிற்சி தர, தினசரி ஒரு வாத்தியார் முதலில் பாட, பிள்ளைகள் தொடர்ந்து பாடுவது வழக்கம். நாலாவது வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணன் சார், “விவேகானந்தா உன்னை நான் மறவேன்’ என்று அன்றைக்குப் பாட நாங்கள் திரும்ப அதேபடி பிரார்த்தித்து விட்டு வகுப்பில் வந்து உட்கார்ந்தோம். மர ஸ்கிரீனுக்கு அந்தப் பக்கம் கனகவல்லி டீச்சர் எடுக்கும் ஐந்தாம் கிளாஸ்.

வகுப்பைச் சத்தம் போட விட்டுவிட்டு, நாலாங் கிளாஸ் உள்ளே கோபமாக எட்டிப் பார்த்தார் டீச்சரம்மா. “விவேகானந்தா உம்மை நாம் மறவோம்’ தான் சரியான பாட்டு என்பது அவருடைய வாதம். “வாத்தியாரே தப்பாச் சொல்லிக் கொடுத்தா, பிள்ளைங்க என்னத்தை ஒழுங்கா படிக்கும்?’ டீச்சர் இரைய, கிருஷ்ணன் சாருக்கோ சரியான பதில் கோபம். “உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க டீச்சர். தஞ்சாவூர் கிராமத்துலே வீட்டுக்காரம்மா புருஷனைக் கூப்பிடற மாதிரி விவேகானந்தரை நீர், உம்மைன்னு அரை மரியாதையோட கூப்பிடக் கூடாது; ஆண்டவன் போல ஒருமைதான் சரி’. கிருஷ்ணன் தஞ்சாவூர்க்காரர். நாலாம் கிளாஸ் வாத்தியார் என்பதால், ஐந்தாம் கிளாஸ் எடுக்கும் உள்ளூர் கனகவல்லி டீச்சரோடு ஒப்பிட்டால் ஒரு தட்டு கீழேதான்.

பள்ளி கரஸ்பாண்டெண்ட் சோமநாதன் சாவகாசமாக வீட்டில் பூஜை புனஸ்காரம் முடித்து சாப்பாட்டுக்கு அப்புறம் வாயில் தாம்பூலத்தோடு குடைபிடித்துக் கொண்டு பன்னிரண்டு மணி சுமாருக்கு நுழைந்தார். அவர் தலையைக் காணும் வரைக்கும். நாலாம் கிளாசிலும், ஐந்தாம் கிளாசிலும் அரைகுறையாகப் பாடம் நடந்தபடி இருக்க, “உம்மை’யா, “உன்னை’யா வாக்குவாதம் ஆவேசமாகத் தொடர்ந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நாங்கள் அவ்வப்போது ஒருவிரல், இரண்டு விரல் சைகைகளால் அனுமதி வாங்கி ஸ்கூல் வாசலில் கொடுக்காப்புளி வாங்க ஓடினோம்.

இந்தக் கொடுக்காப்புளி என்பது கொஞ்சம் வினோதமான தாவரவகை. இதை யார் வீட்டிலும் சமையல் செய்து பரிமாறிப் பார்த்ததில்லை. கொத்துக் கொத்தாக அவரைக்காய் மாதிரி கூறு கட்டி பள்ளிக்கூட வாசலில் கொடுக்காப்புளி விற்கிற பங்காரம்மா எங்கள் தலையைப் பார்த்ததும் “அரிசி இருக்கா?’ என்று ஆவலாக விசாரிப்பார். அரிசியோ குருணையோ கொடுத்தால், காசுக்குக் கிடைப்பதைவிட கொஞ்சம் அதிகமாகக் கொடுக்காப்புளி கிடைக்கும். அரிசிக்கு தமிழ்நாடு ஆலாகப் பறந்த நேரம் அது. எலிக்கறி சாப்பிடச் சொல்லி கவர்மென்ட் சிபாரிசு செய்ததாகக் கூடக் கேள்வி.

ரேஷன் அரிசி போதாமல், கொடுக்காப்புளிக்கும், ஈச்சம் பழத்துக்கும், இலந்தைப் பழத்துக்கும் அரை உழக்கு அரிசி பண்டமாற்று கிடைக்காதா, ஒருவேளை கஞ்சிக்கு வழிபிறக்காதா என்று ஊரைச் சுற்றியிருந்த கிராமப்புறத்து ஏழைகள் அலைந்து கொண்டிருந்தார்கள். கிருஷ்ணஜயந்திக்கு நாவல்பழம் வாங்க என்று பாட்டியம்மா கொஞ்சம் அரிசி எடுத்துவைப்பது உண்டு. ஆனாலும் கொடுக்காப்புளி வாங்க அரிசி எல்லாம் பள்ளிக்கூடம் போகிறபோது கிடைக்காது.

பாட்டியின் கிராம்புப் பையிலிருந்து மணக்க மணக்க கிளப்பிய ஓட்டைக் காலணா என்ற பழைய பைசா ரெண்டு, நல்லெண்ணெய் வாங்கி மீதி சில்லறையாகக் கிடைத்து வீட்டில் கொடுக்க “மறந்து’ புது ஒற்றை நயா பைசா இரண்டு என்று பங்காரம்மாவிடம் கொடுத்தால், ஒரு சின்னக் குவியல் கொடுக்காப்புளி கைமாறும். ஒவ்வொன்றாக உரித்து வாயில்போட, இனிப்பும் துவர்ப்புமாக சுவர்க்கம் தட்டுப்படும். நிஜார் பாக்கெட்டில் மீதி கொடுக்காப்புளியை அடைத்துக் கொண்டு மூன்றாம் வகுப்பு வழியாக உள்ளே ஓடினால் ஸ்தானிஸ்லாஸ் சார் வழிமறிப்பார்.

“கண்ட கருமாந்திரத்தையும் தின்னு வயத்தைக் கெடுக்கவா ஸ்கூலுக்கு வந்தீங்க’ என்ற கூச்சலோடு பதுக்கிக் கொண்டு வந்ததை கஸ்டம்ஸ் அதிகாரி போலப் பிடித்து ஓரமாக வைப்பார். ஸ்கூல் விட்டதும் ஜன்னலுக்கு வெளியே விட்டெறியவாம். அறிவியல் பாடப் புத்தகத்தில் “உடலுக்கு நலம் தரும் கீரை, வெண்டை, தக்காளி, வாழை’ வகையறாக்களோடு கொடுக்காப்புளியையும் புத்தகம் போட்டவர்கள் சேர்த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். “தினசரி பிரேயருக்கு முன்னால் ஒரு கொத்து கொடுக்காப்புளி சாப்பிட்டுவிட்டுத்தான் வரவேண்டும்’ என்று உத்தரவாகி, சாப்பிடாதவர்களை ஸ்டானிஸ்ஸôஸ் வாத்தியார் தண்டித்திருப்பார். (வாத்தியார் தட்டிப் பறித்த சரக்கை எல்லாம் விட்டெறிவதில்லை என்றும் வீட்டுக்கு எடுத்துப் போய் முழுக்கச் சாப்பிடுகிறார் என்றும் வதந்தி நிலவியதும் உண்மைதான்.)

எந்த கிளாஸ் ஆக இருந்தாலும் ஸ்தானிஸ்லாஸ் சார் தான் கைத்தொழில் ஆசிரியர். காதி போர்ட் கடையில் பளபள என்று பித்தளைச் சக்கரம் அடியில் மின்ன, மேலே நீளும் இரும்புக் குச்சியின் ஓரத்தில் அழகான வளைசலோடு வரும் தக்ளி கிடைக்கும். பதினாலு பைசாதான் விலை. எடுத்துக் கொடுக்க ஒருத்தர், தக்ளியை விட நீளமான காகித பில் போட ஒருத்தர், சரிபார்த்துக் கையெழுத்துப் போட ஒருத்தர், காசு வாங்கிக்கொண்டு வாங்கின பொருளைக் கையில் கொடுக்க இன்னொருத்தர் என்று இந்த பதினாலு காசு வியாபாரத்துக்குக் கடையில் நாலு பேர் இருப்பார்கள்.

தக்ளியில் நூற்கப் பஞ்சு இரண்டு பைசாவுக்கு ஒல்லியான கொடுக்காப்புளிக் கொத்து மாதிரி கங்காராஜ் கடையில் பில் இல்லாமல் கிடைக்கும். வாத்தியார் அழகாக தன்னுடைய பழைய தக்ளியில் சன்னமான நூல் நூற்பார். “இப்படி நூத்தே ரெண்டு மாசத்திலே நெஞ்ச வேட்டி’ என்று தன் வேட்டியைக் காட்டுவார். வழிமறித்துப் பறித்த கொடுக்காப்புளி கொடுத்த பலத்தில் நெய்ததாக இருக்கலாம். கொஞ்சம் பழுப்பேறி, ஒன்றிரண்டு இடத்தில் ஒட்டுப்போட்டு இருக்கும் அது.

கதர்க் கடையில் பாரதி புத்தகம் கிடைக்கிறது என்றும், எல்லாரும் உடனே வாங்கி வகுப்புக்கு எடுத்துவர வேண்டும் என்றும் உத்தரவானது. இதுவும் பதினாலு பைசாதான் விலை. என்ன காரணமோ, காதி, கதர்க்கடை விற்பனை சமாச்சாரங்களுக்கு இப்படிப் பதினாலு பைசா விலையை சர்க்கார் விதித்திருந்தது. கூட்டமாகப் போய், பில் போடுகிற, காசு வாங்குகிற சடங்கு எல்லாம் முடிந்து கையில் அந்தப் பதினாலு காசு பாரதி பாட்டுப் புத்தகம் கிட்டியது. அதன் அழகைச் சொல்ல சட்டென்று வார்த்தை வரமாட்டேன் என்கிறது. மொத்தம் பத்து பாட்டு. கனமான தாளில், பல வர்ணத்தில் ஒவ்வொரு பாட்டோடும் கோபுலு வரைந்திருந்த அழகான படங்கள். எதை எதையோ சேர்த்து வைத்த நான் அந்தப் பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்கத் தவறிவிட்டேன். பக்தவத்சலம் சர்க்காரை இந்த ஒரு புத்தகத்துக்காகவே, அரிசி சர்க்கரை ரேஷன், இந்தி திணிப்பை எல்லாம் மீறிப் பொறுத்துக் கொள்ளலாம்.

முழுவருடப் பரீட்சைக்கு நாலு நாள் முன்னால் நாலாங் கிளாஸ் மர ஸ்கிரீனுக்குப் பின்னால் இருந்து எட்டிப்பார்த்து கனகவல்லி டீச்சர் சொன்னார்- “”பசங்களா, அடுத்த செவ்வாய்க்கிழமை கல்யாணம். கோவில்லே வச்சு. வந்துடுங்க”. அவருக்குத்தான் கல்யாணம். மாப்பிள்ளை யார் என்று நாச்சம்மை கேட்டபோது, “உங்க சார்தான்’ என்றாள் டீச்சர் வெட்கத்தோடு சிரித்தபடி.

கோபுலு படம் போட்ட பாரதியார் பாட்டுப் புத்தகம் போல கனகவல்லி டீச்சர் முகம் அப்போது அழகாக இருந்தது. சம்பிரதாயமான பத்திரிகை வைத்து அழைக்காமல், அதுவும் சின்னப் பிள்ளைகள் கல்யாண விசேஷங்களுக்கு ஆஜராவது வீட்டில் தடை செய்யப்பட்டிருந்ததால், கல்யாணத்துக்குப் போகமுடியவில்லை. ஆனாலும் அடுத்த வாரச் சந்தை தினத்தில் காய்கறிப் பையோடு டீச்சர் வீட்டில் நுழைந்தோம். “கல்யாணக் கணக்கு எழுதின எம்ப்ளது பக்க நோட்டு எங்கே?’ வாத்தியார் தேடிக் கொண்டிருந்தார். “எம்ப்ளது இல்லே, எண்பது’ என்றாள் டீச்சர் அழுத்தந் திருத்தமாக. “உம்மை நாம் மறவோம்’ மாதிரி இன்னொரு போர் தொடங்கும் அபாயம் தட்டுப்பட்டது. ஆனால், ரெண்டு பேரும் சேர்ந்து சிரித்துக் கொண்டே “வாங்கடா பசங்களா’ என்றார்கள்.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு

Sunday November 4 2007 00:00 IST

பழைய தெரு முனையில் திரும்பும்போதே சிரிப்புச் சத்தம் காதில் விழும். எல்லோரும் பெண்கள். எனக்கு ஏழெட்டு வயசு பெரிய மூத்தவளில் இருந்து, கிட்டத்தட்ட என் வயதில், பாவாடை சட்டை போட்ட கடைக்குட்டி வரை மொத்தம் ஆறுபேர். வீட்டுத் தோட்டத்தில் கிணற்றடிப் பக்கம் துணி துவைத்துக் கொண்டும், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபடியும், வாளியில் சேந்திய தண்ணீரை மேலே தெளித்து விளையாடிக் கொண்டும் ஒரே நேரத்தில் அதில் நாலு பேராவது தட்டுப்படுவார்கள். ஒல்லியாக, வளர்த்தியாக, கண்ணில் மையும், தினசரி தலைகுளித்து நீண்ட தலைமுடியுமாகச் சிரிக்கும் முகங்களை ஒரு வினாடி அவசரமாகப் பார்த்து, சட்டென்று பார்வையை நேராகத் திருப்பித் தெருமுனையைக் கடப்பது வழக்கம்.

ஒரே வீட்டில் அடுத்தடுத்துப் பிறந்த ஆறு பெண்கள். ஊரில் சவுகரியமாக ஆறு புஷ்பம் என்று ஒற்றைப் பெயரில் அவர்களைக் கூப்பிடப் பழகியிருந்தார்கள். பழைய தெருமுனையிலே, “அதாம்பா ஆறு புஷ்பம் வீட்டுக்குப் பக்கம்’ என்பதுபோல் அடையாளம் சொல்கிற தகவல்கள் சகஜமாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அப்பா இல்லாத வீடு. ஆறு பெண்களையும் வளர்த்து ஆளாக்கும் அம்மா பெயர் என்ன? அவர்கள் ஒவ்வொருத்தியின் பெயர்தான் என்ன? யாரும் யாரையும் கேட்டதில்லை.

ஆனாலும் எனக்குக் கொஞ்சம் தெரியும். அதாவது கடைக்குட்டிப் பெண் பெயர் மட்டும். “”லட்சுமி, பராக்குப் பார்த்தபடி பல் தேய்ச்சு பேஸ்டை முழுங்கிடாதே. அப்புறம் பல்ப் போட்ட மாதிரி குடல் எரியும்”. தென்னை மரப் பக்கம் நின்று பல் விளக்கிக் கொண்டிருந்தவளிடம், துணி துவைத்துக் கொண்டிருந்த மூத்த அக்கா சத்தமாகச் சொன்னபோது நான் திரும்பிப் பார்த்தேன். லட்சுமி வாயெல்லாம் பேஸ்ட் நுரையோடு பெரிய கண்ணால் என்னைப் பார்த்துச் சிரித்தாள். முழங்காலுக்குக் கீழே தாழ்கிற அரைநிஜார் அணிந்த ஒரு பன்னிரண்டு வயதுச் சோனிப் பையன் முதன்முதலாக குறுகுறுப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்ட வினாடி அது.

ஆறு புஷ்பம் வீட்டில் மெஸ் நடத்தினார்கள். காலை நேரத்தில் தாவணி முந்தானையை இழுத்து, இடுப்பில் செருகிக் கொண்டு அம்பாரமாகக் குவித்த பத்துப் பாத்திரங்களைக் கழுவுகிறதும், தோட்டத்தில் கத்தரி, வெண்டை, கீரை பயிர் செய்வதும், தென்னை மரத்துக்குத் தண்ணீர் ஊற்றுவதும் மெஸ் சம்பந்தப்பட்டவை. நான் சொன்னபோது குண்டுராஜூ கள்ளச் சிரிப்புச் சிரித்தான். எட்டாம் கிளாசில் படித்தாலும் எனக்கு நாலு வயது சீனியர். அவனுடைய சைக்கிள் செயின் கழன்று போய் ஆறு புஷ்பம் வீட்டுக்கருகில் குனிந்து உட்கார்ந்து அதை மாட்டிக் கொண்டிருக்க, பின் சீட்டில் சவாரி செய்துவந்த நான் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தேன். ” நீ குழந்தைப் பிள்ளைடா’. குண்டுராஜூ சைக்கிள் நேரானதும் சிரிப்புச் சத்தம் கேட்கும் கிணற்றடியைப் பார்த்தபடி இருந்தேன். லட்சுமியைப் பார்க்க ஆசை இருந்தும் அடக்கிக் கொள்ள வேண்டிப் போனது.

பாட்டியம்மா இட்லி வாங்கி வர அனுப்பிய ஒரு ராத்திரியில் கர்னாடக சங்கீத மெஸ் மட்டுமில்லாமல் ரெட்டைத் தெரு முழுக்க மின்சாரம் காணாமல் போயிருக்க, நான் சட்டென்று தீர்மானமெடுத்து பழைய தெருப் பக்கம் திரும்பினேன். ஆறு புஷ்பம் மெஸ்ஸில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. “ராஜா மகள், ரோஜா மலர், என் ஆசை நிறைவேறுமா’ என்று கொஞ்சம் பழைய சினிமாப் பாட்டு வீட்டுக்குள் இருந்து வந்தது. “நாலு இட்லி, வெங்காயம் போடாத சட்னி’ லட்சுமியிடம் இதைச் சொல்வதை மனதில் ஒத்திகை பார்த்தபடி படியேறினேன். “”என்னடா தம்பி வேணும்?” எதிர்ப்பட்டது மூத்த அக்கா.. கிராம்பு மென்றபடி வந்து நின்றாள். பாவாடை தாவணியில் இல்லாமல் பாந்தமாகச் சேலை உடுத்தியிருந்தாள் அவள்.

ஹைஸ்கூலுக்குப் புதிதாக வந்த விஸ்வநாதன் வாத்தியார் உள்ளே வந்ததும், என்னைப் பார்த்து முறைத்தபடி(அப்படித்தான் நினைத்தேன்) கூடத்துக்குப் போனதும், ஆறில் ஒரு புஷ்பம் ஏதோ சொல்ல ரெண்டு பேரும் உரக்கச் சிரித்ததும், கிராம போனில் ஓய்ந்திருந்த ராஜா மகள் திரும்ப ஆசை நிறைவேறுமா என்று கேட்க ஆரம்பித்ததும் அப்புறம் நடந்தவை. “”விஸ்வநாதன் சார் ஆறு புஷ்பம் மெஸ்ஸிலே சாப்பிட்டு முடிச்சு நடுராத்திரிக்குத்தான் காந்திவீதியிலே தன்னோட ரூமுக்குத் திரும்பிப் போறார்” இதைச் சொல்லும் போதும் குண்டு ராஜூ கள்ளச் சிரிப்புச் சிரித்தான். அந்த வருஷ நவராத்திரி நேரத்தில் ஆறில் மூத்தவள், ராஜா சவுண்ட் சர்வீஸ் குருநாதனைக் காதல் கல்யாணம் செய்து கொண்டு ரெட்டைத் தெருக் கடைசி “வரதன் ஸ்டோர்’ வீடுகள் ஒன்றில் குடியேறினாள். வீடுவீடாகப் போய் நவராத்திரிக் கொலுவுக்கு அழைக்கிற தெருப் பெண்கள் தன் வீட்டுப் படியேறாததை அவள் கிராம்பு மென்றபடி ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த போது பின்னால் சன்னமாக ராஜா மகள் கேட்டது. சரஸ்வதி பூஜை சமயத்தில் அந்தப் பாட்டு எங்கள் வீட்டுக்கு ஏதிரே ரேடியோ ரிப்பேர்கார புஷ்பவனம் வீட்டுத் திண்ணையில் கரகரவென்று கேட்க ஆரம்பித்து , குரல்வளையை நெரித்தாற் போல் கிரீச்சிட்டுப் பாதியில் நின்றது. “பழைய ரேடியோ கிராம். இதுக்கு ஸ்பேர் பார்ட் கிடைக்காது. ரிப்பேர் கொஞ்சம் கஷ்டம்தான்.’ புஷ்பவனம் மாமா சொல்ல, அவள் கிராம போன் பெட்டியை சணல் பையில் அடைத்து எடுத்து வைக்க நான் உதவி செய்தேன். கிராம்பு மணக்காமல் சிரித்தாள் அக்கா.

அப்புறம் ஒரு நாள் நேருவீதி காதர் கடையில் ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கிக் கொண்டிருந்த போது ஆறில் இன்னொரு புஷ்பம் சைக்கிளில் வந்து இறங்கியதைப் பார்த்தேன். பெண்கள் ஓட்டுகிற அந்த சைக்கிளை “கல்யாணப் பரிசு’ திரும்ப டூரிங் தியேட்டருக்கு வந்த போது, “வாடிக்கை மறந்ததும் ஏனோ’ என்று பாடியபடி சரோஜாதேவி ஓட்டிப் பார்த்திருக்கிறேன். நேரில், அதுவும் என்னைவிட நாலைந்து வயது மட்டும் பெரிய பெண் ஒருத்தி லாவகமாக ஓட்டிவந்து நிறுத்திவிட்டு, காதர் கடைக்கு அடுத்த பேன்சி ஸ்டோரில் “ரெமி ஸ்நோ, டால்கம் பவுடர் தாங்க’ என்று கேட்டு வாங்கியது ஏதோ கனவில் நடக்கிறது போல் இருந்தது. அப்படியே அடுத்த தங்கப்பன் பழக்கடையிலும் நுழைந்து அவன் கொடுத்த பணத்தைக் கைப்பையில் வைத்தபடி நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டாள். “சித்தையா கம்பெனி’ என்ற லேவாதேவி கடையில் கடன் வசூல் உத்தியோகமாம். ஒரு பெண் படியேறிக் கேட்டால் வராத கடனும் வசூலாகும் என்பதால் சித்தையா அந்தக் காலத்திலேயே பெண் ஊழியர்களை நியமித்தது ஆறு புஷ்பம் வீட்டில் இருந்து தொடங்கியது.

வெய்யில் காலத்தில் பாட்டியம்மா அப்பளம் இடுவது வழக்கம். வருடம் தவறாமல் தானே செய்துவந்த இந்தக் காரியம், அவள் சுகவீனப்பட்ட காரணத்தால் காண்ட்ராக்டில் விடப்பட்டது. செல்லூர் மெஸ்ஸம்மாதான் சப்ளையர்.””உள்ளங்கையைவிடச் சித்தெ பெரிசா, சுட்டா சிவக்காம, பொறிச்சா எண்ணை குடிக்காம, நல்ல வட்டமா வரணும், பெரண்டைச் சாறு தூக்கலா வேணும்”. அப்பள உற்பத்திக்கு டிசைன் ஸ்பெசிபிகேஷன் கொடுத்த பாட்டியம்மாளிடம், “”தனியாப் போட கஷ்டம். கூட யாரையாவது சேத்துக்கறேன்” என்றாள் செல்லூரம்மா. அவளுடைய அசிஸ்டென்ட் ஆறு புஷ்பங்களின் அம்மா என்பது பாட்டிக்குத் தெரியாது.

சாத்தப்பன் ஊருணிப் பக்கம் நான் குரங்குப் பெடலில் சைக்கிள் ஓட்டிப் போன போது முன்னால் இரண்டு பேர் நடந்து கொண்டிருந்தார்கள். ஆறாவது புஷ்பம் லட்சுமியும் அவள் அம்மாவும் . லட்சுமி தாவணி போட்டிருந்தாள். அவள் கொத்தாக அள்ளிக் கையில் வைத்திருந்தது, பக்கத்துக் கரட்டுப் பூமியில் பறித்த பிரண்டை. “”ஊரெல்லாம் தெரிய தூக்கிட்டு வரணுமாடீ. இதை தாவணிக்குள்ளே மறைச்சுக்கோயேன்” அவளுடைய அம்மா சொன்னாள். “”நீயே உன் புடவைத் தலைப்புலே கத்திக்கோ. என்னைப் பெத்த வயத்துலே பிரண்டை அடைச்சுக்கலாம்” லட்சுமி பிரண்டையை அம்மாவிடம் கொடுத்த போது நான் சைக்கிள் மணியை அடித்து வழிகேட்டு அவர்களைக் கடந்து போனேன். அம்மாவும் பெண்ணும் சிரிக்கும் சத்தம் பின்னால் கேட்டபடி இருந்தது. அது சிரிப்பில்லை என்று தெரிய அப்புறம் எத்தனையோ காலமானது.

———————————————————————————————————————————————-

Sunday November 18 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

வாழ்க்கையிலேயே முதல் தடவையாகப் பேண்ட் போட்டுக் கொண்டபோது சத்திய சோதனை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. பத்து வயதுப் பையன்களுக்கு, இடுப்புக்கு மேலே வார் வைத்த நிஜார்தான் அனுமதிக்கப்பட்ட உடுப்பு. ஆனாலும், தீபாவளி நேரத்தில் அழுது புரண்டு அடம் பிடித்து புது பேண்ட்டுக்கான அனுமதி வீட்டில் கிடைத்தபோது என்னைவிட சந்தோஷப்பட்டவர் குருசாமி டெய்லராகத்தான் இருக்கவேண்டும். ஊரில் பேண்ட் போடுகிறவர்கள் சொற்பம். அவர்களும் மதுரைக்குப் போய்த் தைத்து வாங்கி வந்துவிடுவது வழக்கம். குருசாமி டெய்லருக்கு பேண்ட் தைத்துப் பழக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது நான்தான். என்னை நிற்கவைத்து இஞ்ச் டேப்பால் காலில் ஆரம்பித்து கழுத்தைச் சுற்றிக்கூட ஏகப்பட்ட அளவெடுத்துக் குறித்துக்கொண்டு, கெட்டியான பைஜாமா போல் தைத்து எடுத்து வந்து கொடுத்தார். இடுப்பிலிருந்து கால்வரை நீண்டு வந்த அதன் பெயர் பேண்ட்தான்.

“”யார்கிட்டே பேண்ட் இருக்கு?” பள்ளிக்கூட ஆண்டுவிழாவுக்கு மூன்று வாரம் முன்னால் கிருஷ்ணன் சார் வகுப்பில் விசாரித்தபோது நான் பெருமையோடு இரண்டு கையையும் உயர்த்த, சாயந்திரம் நாகப்பன் வாத்தியாரைப் பார்க்கச் சொன்னார் அவர்.

“”இதான் வரவேற்புரை. சொல்லி, நிகழ்ச்சியை நீதான் ஆரம்பிச்சு வைக்கறே.” நாகப்பன் நாலாக மடித்த ஒரு காகிதத்தை நீட்டினார். சென்னையில் ஏதோ பத்திரிகை ஆபீசில் ப்ரூஃப் ரீடர் என்ற உத்தியோகத்திலிருந்தாராம். “மதராஸில் ஜலக் கஷ்டம்’ என்று பத்திரிகையில் வழக்கமாக எழுதுகிற தொழிலாக இருக்கலாம் அது. வேலை பிடிக்காமலோ என்னமோ, டீச்சர் டிரெயினிங் போய் வாத்தியாரானவர்.

காகிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். “இன்று மார்ச் பதினைந்து! 1963-ம் ஆண்டு வெள்ளிக்கிழமை!! மாலை ஆறு மணி! வருக… வருக..வரவேற்கிறேன் உங்களை!’ என்று இரண்டு பக்கத்துக்கு இருந்தது அந்த வரவேற்புரை. இப்படி வார்த்தைக்கு வார்த்தை ஒற்றை, ரெட்டை, சமயத்தில் மூன்று ஆச்சரியக் குறிகளை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை. லேசாக, நடுவாந்திரம், அதிகமாக என்று பல தினுசில் ஆச்சரியப்பட மார்ச் பதினைந்தாம் தேதியில் என்ன விசேஷம் என்றும் புரியவில்லை. பத்திரிகையில் “மதராஸில் ஜலக் கஷ்டம்’ கூட ஒரு ஆச்சரியத்தோடுதான் முடிந்ததாக நினைவு. அந்த ஆச்சரியகரமான வரவேற்புரை பாடத்தை விடச் சீக்கிரமாக மனப்பாடம் செய்யப்பட்டு, கடகடவென்று சொல்ல இரண்டே நாளில் நான் தயார் ஆனேன்.

தினசரி சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டதும் நாலரை மணிக்கு ஒத்திகை. வருஷம் தவறாமல் “நேரு மாமா, ரோஜாவின் ராஜா, பஞ்சசீலம்’ என்ற வார்த்தைகளோடு ஒரு பாட்டு இருக்கும். அந்தந்த வருடம் பிரபலமான சினிமாப்பாட்டு மெட்டில் இதையும் நாகப்பன் சார்தான் எழுதிக்கொடுப்பார். அந்த வருடம் “பாட்டுப் பாடவா, பார்த்துப் பேசவா’ மெட்டில் நேரு மாமா வந்தார். இந்தப் பாட்டை கோஷ்டி கானமாக ஆமினா, கனகவல்லி, முத்தம்மா டீச்சர்கள் இசைக்க, நாலாவது மற்றும் ஐந்தாவது வகுப்புப் பெண்கள் கையைக் கோர்த்துக்கொண்டு வட்டமாகச் சுற்றி வந்து இப்படியும் அப்படியுமாகக் குதிப்பார்கள். எல்லோர் தலையிலும் கட்டாயமாக வளையல்கடையில் வாங்கிய பிளாஸ்டிக் ரோஜாப்பூவும் கழுத்தில் ரோல்ட் கோல்ட் நெக்லசும் இருக்கும். ஆடத் தேர்ந்தெடுத்ததுமே இந்த இரண்டையும் வீடுகளில் வாங்கச் சொல்லி, துணிப்பையில் போட்டுப் பெயர் எழுதிப் பள்ளிக்கூட மர அலமாரியில் அட்டனெஸ் ரிஜிஸ்தர்கள், சாக்பீஸ் டப்பாக்களோடு வைத்துவிடுவது வழக்கம்.

ஆண்டு விழாவுக்கு நாள் நெருங்க நெருங்க, பள்ளிக்கூடத்தில் பரபரப்பு அதிகமாகும். கடைசி நாலைந்து நாள் பாடம் நடத்துகிற நேரத்தை விட ஆண்டு விழா தயாரிப்புதான் முக்கிய வேலையாகிவிடும். பெரிய மூங்கில் தட்டிகளைத் தரையில் படுக்கப் போட்டு, மேலே வெள்ளைக் காகிதத்தைப் பசை காய்ச்சி ஒட்டி உலரவைத்துக் கொண்டிருப்பார் கிருஷ்ணன் சார். பசை காய்ச்ச, காகிதம் எடுக்க, கிட்டு கடையில் வாத்தியாருக்குக் கும்பகோணம் சீவலும் வெற்றிலையும் வாங்கிவர என்றமாதிரி எடுபிடி காரியங்கள் செய்வதில் வரும் இன்பம் சொல்லிமாளாது. அப்புறம் மண்சட்டியில் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்று கிருஷ்ணன் சார் சொல்லியபடிக்கு வர்ணம் கரைக்கிற வேலை. கரைத்து வைத்த வர்ணத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அவர் பென்சிலால் மூங்கில்தட்டியில் ஒட்டிய காகிதத்தில் காந்தி, பாரதி, மண்டி போட்டுக் கைகுவித்து வணங்குகிற பெண்கள் என்று படம் வரைவார். படத்தில் ஈஸ்ட்மென் கலரில் வர்ணம் பூசுகிற வேலை அடுத்தது. எல்லாப் படத்திலும் கைவிரல்கள் உடம்போடு ஒட்டாமல் கொடுக்காப்புளிக் கொத்து மாதிரி நீண்டிருப்பதோடு, எல்லா முகத்திலும் கனகவல்லி டீச்சர் போல் மூக்கு நீளமாக இருக்கும். அந்த வருடம் வரையப்பட்ட ஜான் கென்னடி பச்சை பேண்ட், நீலக் கோட்டோடு கனகவல்லி டீச்சர் மாதிரிப் பல்லைக் கடித்துக்கொண்டு சிரித்தார்.

ஆண்டு விழாவுக்கு ஒரு நாள் முந்தி உடுப்பு ஒத்திகை என்று சொல்லி ஆட, பாட, நடிக்கத் தேவையான உடுப்பு, உபகரணங்களோடு நிகழ்ச்சிகள் சரிபார்க்கப்படும். வாத்தியார், டீச்சர்கள், ஹெட்மாஸ்டர், கரஸ்பாண்டெண்ட் போன்றவர்கள் நிறைந்த சபை அது. புதுத்துணி வாடையடிக்கும் நீலப்பாவாடையோடு நேருமாமா பெண்கள் ஆடும்போது, டீச்சர்களின் இசைக்குழுவுக்குத் தபலாவில் தாளம்போட கெüரவ வித்வானாக, பாலாம்பா டீச்சரின் தம்பி அரிசிக்கடை சாமிநாதன் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கொஞ்சம் காது மந்தம் என்பதால், பாலாம்பா டீச்சர் கையை உயர்த்தித் தாழ்த்தி தாளம் பாட்டோடு நடக்க ஒத்தாசை செய்தார். அங்கவஸ்திரத்தைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு கிரிதரன் கடெüயேழு வள்ளல்களில் ஒருவரான குமணன் ஆகத் தமழுக்குத் தலைகொடுக்க நாலு திசையிலும் எச்சில் தெறிக்கச் சூளுரைத்தான். அடுத்த காட்சியில் காதிதக் கூழால் செய்த தலையைத் தாம்பாளத்தில் வைத்து எடுத்துக்கொண்டு புலவனாக குண்டுராஜா வரவேண்டும். அவசரமாக நடந்து வேட்டி தடுக்க, அவன் கையில் பிடித்த தலை தரையில் விழுந்து உள்ளேயிருந்து தேங்காய்மட்டை எட்டிப் பார்த்தது. உடனடியாகக் காகிதப்பசை காய்ச்சித் தலை ஆப்பரேஷனுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“”வரவேற்புரை யாரு, வா இங்கே.” படபடப்போடு போய் நின்றேன். “”டிரஸ் எங்கேடா?” அவசரமாகக் குனிந்து பார்த்தபோது, “”அசடே, பேண்ட் எங்கேன்னு கேக்கறேன்.” என்னத்தைச் சொல்ல? டிரஸ் ரிகர்சலுக்கு எல்லாம் பேண்ட் தரமுடியாது என்று வீட்டில் கட்டாயமாகச் சொல்லி அனுப்பப்பட்டிருந்தது. “அப்புறம் அதைத் திரும்பத் துவைக்கணும். இஸ்திரி போடணும், ஆண்டு விழாவுக்குன்னு ஏற்னவே ஒருரூபா அழுதாச்சு. இன்னும் பணம் செலவழிக்க முடியாதுன்னு போய்ச் சொல்லு’ சொல்ல முடியாது. “”சலவைக்கடையிலே இருந்து நாளைக்குத்தான் கிடைக்கும் சார்” வாழ்க்கையில் பொய் சொல்வது கூட ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் தான் ஆரம்பமாகிறது.

“இன்று மார்ச் பதினைந்து! 1963-ம் ஆண்டு! வெள்ளிக்கிழமை!’. நான் கடைசி ஒத்திகையாக ஆச்சரியப்பட ஆரம்பிக்கக் குரலே எழும்பவில்லை. பாலாம்பா டீச்சர் ஸ்கூல் தோட்டத்திலிருந்து திம்ஸ்கட்டையை எடுத்து வந்து முன்னால் நிறுத்தினார். “”இதான் மைக் அப்படீன்னு நினைச்சு உரக்கப் பேசு. சபைக் கூச்சம் ஓடிப்போகும்.” கட்ட மைக்குக்கு முன்னால் நின்று அன்றைக்குக் கத்த ஆரம்பித்ததுதான்.

அப்புறம் பேங்கில் வேலைபார்த்தபோது, பாலாம்பா டீச்சரின் பென்ஷனை அவர் வீட்டிலேயே போய்ப் பட்டுவாடா செய்யவேண்டி வந்தது. நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்தார் டீச்சர். “”வாடா வா, பென்ஷன் பணமா? காதுலே விழறது. மெதுவாச் சொல்லேன். கடப்பாறையை முழுங்கினியா சின்ன வயசிலே?” டீச்சர் பொக்கைவாயால் சிரித்தபடி செல்லமாகத் தலையில் குட்டினார். “”கடப்பாறை இல்லே, திம்ஸ்கட்டை” என்றேன் அவர் காதில் விழாமல் மெதுவாக.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

அந்த வீட்டைச் சாவு சுற்றிச் சுற்றி வந்தது. அப்படித்தான் நினைத்தோம். வருடம் தவறாமல் அங்கே யாராவது செத்துப் போனார்கள். பள்ளிக்கூடம் விடுமுறை விட்ட குளிர்கால ராத்திரியில் திடீரென்று அழுகைச் சத்தம் கேட்டால், வேதமய்யா வீடுதான் உடனடியாக மனதில் வரும். பெரும்பாலும் அது சரியாகவும் இருக்கும்.

அரண்மனை மாதிரி வீடு என்று சொல்வது வேதமய்யா வீட்டைப் பொறுத்தவரை பாதி பொருந்தும். பாழடைந்த அரண்மனை அது. வேதமய்யா என்ற ஒருத்தரை நாங்கள் மட்டுமில்லை; எங்கள் வீட்டுப் பெரிசுகளிலும் அநேகமாகப் பலபேர் பார்த்தது இல்லை. மூன்று தலைமுறைக்கு முன்னால் திவானாக இருந்தவராம். பாட்டி சின்ன வயதில் அம்பலப்புழையிலிருந்து வரும்போது மலையாளத்தில் அவளுடைய அம்மா, அப்பா பற்றி சம்சாரித்து, மிட்டாய் கொடுப்பாராம் வேதமய்யா. அவ்வளவு பழைய காலத்து மனுஷர். அவருக்கு அப்புறம் வாரிசு அருகிப் போனது. மிஞ்சியவர்களுக்குள் சண்டை, நிலபுலங்கள் கடனுக்காக அடமானம் வைத்து முழுகியது, வருமானக் குறைவு என்று அடுத்தடுத்த தலைமுறைகளில் இறங்குமுகமாகி, நான் பார்க்கும்போது இழுத்துப் பறித்துக்கொண்டு இறுதி மூச்சு விட்டபடி கிடந்தது வேதமய்யா வீடு.

வீடு முழுக்க பாட்டி, தாத்தா என்று வயதானவர்கள். கரண்ட் பில் கட்டாததால் ப்யூûஸப் பிடுங்கிப் போனதற்குப் பிறகு ராத்திரி லாந்தர் வெளிச்சம் முணுக் முணுக்கென்று அலைபாய வீட்டிலிருந்து இருமல் சத்தமும், வென்னீர் கேட்கிறதும், கொல்லைப் பக்கம் கையைப் பிடித்துக் கூட்டிப் போகச் சொல்லி மன்றாடுவதும் கேட்கும். “”கொஞ்சம் பொறுக்கணும். புனர்பாகமா சாதம் வடிச்சாறது”. வலது பக்கம் கோணலாகச் சாய்ந்த கழுத்தோடு அலமேலு கீச்சுக்கீச்சென்று இரைவதும் காதில் விழும். வேதமய்யாவின் பேரனுக்கோ, பேத்திக்கோ பிறந்த பெண் அலமேலு.

ராத்திரி தூங்கத் திண்ணையில் படுக்கை விரிக்கும்போது “”அத்தே, எங்களை விட்டுப் போய்ட்டீங்களா” என்று அலமேலு குரல் கேட்டால் அந்த வீட்டில் ஒரு இருமல் சத்தம் ஓய்ந்து போனதாக அர்த்தம். நடுராத்திரி வரை ஒற்றை பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பாடை முடைகிறவர்கள் உரக்கப் பேசியபடி இருப்பார்கள். விடிகாலையிலோ அல்லது இருட்டு பிரியும் முன்னரோ பிணம் எடுத்தபிறகு, பஞ்சாயத்து குழாயில் தகர வாளியில் பிடித்த தண்ணீரை செங்கல் உதிர்ந்த வீட்டுத் திண்ணையில் வீசிவீசி அலமேலு கழுவும்போது அவள் கழுத்து இன்னும் கோணலாக, தோளால் வாயைப் பொத்தியபடி அழுதுகொண்டிருப்பாள். ஒரு வருடம் மார்கழியில் வேதமய்யா வீட்டில் பத்து நாளைக்கு ஒன்றாக ராத்திரிச் சாவு தொடர, அந்த வீட்டு வாசலைக் கடந்து போகவே இனம் புரியாத மிரட்சியாக இருந்தது. ஆனாலும், வீட்டில் தொடர்ந்து இருமித் துப்பி வென்னீர் கேட்க இன்னும் ஆட்கள் இருந்தார்கள்.

கோணல் கழுத்தம்மா பொங்கலுக்கு முந்திய போகிப் பண்டிகை நாள் பகல் நேரம் எங்கள் வீட்டுப் படியேறி வந்தாள். கூடவே விசித்து விசித்து அழுதபடி அவளுடைய மகள் விமலியும். கொஞ்சம் பயத்தை எழுப்பும் பூனைக் கண் விமலிக்கு. ரெண்டாம் கிளாசில் படிக்கிறவள். பாதிப் பள்ளிக்கூடம் நடக்கும்போதே பைக்கட்டைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவாள். யாரும் ஒன்றும் சொல்வதில்லை.

“”உங்க வீட்டுக்கு வந்த பொங்கல் வாழ்த்தை இவ அவசரப்பட்டுப் பிரிச்சுட்டா. பம்பாய்லேருந்து வந்ததா நெனப்பு. இருக்கியா செத்தியான்னே கேக்காதவங்க வாழ்த்து எல்லாம் அனுப்ப மாட்டாங்கன்னு இந்த மூதேவிக்குத் தெரியலை”. நான் பார்த்துக் கொண்டிருக்க அலமேலு விமலி முதுகில் பலமாக அடிக்க, அந்தப் பெண் இன்னும் தீனமாக அழுதாள். பாட்டி சமாதானப்படுத்தி போளி கொடுத்து அனுப்பினாள்.

எப்போதாவது ரகு வாசல் படியில் உட்கார்ந்திருப்பான். கோணல் கழுத்தம்மா மகன். எங்கேயோ ஹாஸ்டலில் இருக்கிறதாகச் சொன்னார்கள். ரொம்பவே பூஞ்சையான உடம்பு. குண்டு ராஜூ வயசு அவனுக்கு. கொஞ்ச நாள் அவன்கூட இங்கேதான் படித்தானாம். நானும் ராஜூவும் அவனைக் கடந்து போகும்போது, “”பம்பாய்க்குப் போகலாமா?” என்று ராஜூவைக் கேட்பான். “”சாப்பிட்டு வந்துடரேன். அப்புறம் ராத்திரி போட்மெயில்லே போகலாம்” என்றபடி ராஜூ என்னை இழுத்துப் போவான்.

ஒரு சாயந்திரம் நாங்கள் தெருவில் பந்தும் மட்டையுமாகச் சுறுசறுப்பாக இருந்தோம். ரகு வீட்டு வாசலில் உட்கார்ந்து “”லண்டன் போகணும், டெல்லி போகணும், மெட்ராஸ் போகணும்” என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான். கோணல் கழுத்தம்மா விமலிக்காக ஒரு பென்சிலை இரண்டாக நறுக்கியபடியே, ஒவ்வொரு ஊர்ப் பேர் சொல்லியானதும், “”நாளைக்குப் போகலாம்” என்று உத்திரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தாள். “”பம்பாய் போகணும். வேணாம். அப்பா அயோக்கியன் கிட்டே போக வேணாம்” ரகு திடீரென்று குரலை உயர்த்தி அழ, அலமேலு அவனை மெல்ல உள்ளே கூட்டிப் போனதைப் பார்த்தோம். அந்தி சாய, அப்புறம் விளையாடவில்லை.

அன்றைக்கு ராத்திரிதான் ரகு செத்துப் போனது. கோணல் கழுத்தம்மாவும், விமலியும் கதறி அழுத சத்தம் இரண்டு தெருமுனை தாண்டிக் கேட்டிருக்கும். வழக்கம்போல் பாங்க் சுந்தரராமன் தான் பிணம் தூக்க வந்தது. ஏதோ பாங்கில் வேலை பார்த்து, மோசடி கேசில் ஜெயிலுக்குப் போய்த் திரும்பி, பிழைப்புக்காகப் பிணம் தூக்குவது என்றாகிப்போனது சுந்தரராமனுக்கு. “”சந்தானம் தாயாரை எரிச்சுட்டு வந்தா. நடுராத்திரியிலே வெட்டியான் வந்து வீட்டுக் கதவைத் தட்டற சத்தம். பாதியிலே அணைஞ்சு போச்சு. இன்னும் கொஞ்சம் விறகு வேணுமாம். ராத்திரியிலே விறகுக்கடை நாயக்கரை எழுப்பி…” சுந்தரராமன் எங்கள் வீட்டுத் திண்ணைப் பக்கம் புகையிலை போட்டபடி சக பிணம் தூக்கிகளிடம் சொல்லி உரக்கச் சிரித்தது அந்த ராத்திரியில் கலவரமாக மனதில் பதிந்துவிட்டது. அடுத்த நாள் காலை ஈரமாக இருந்த வெற்று வாசல் படியைப் பார்த்து “”பாவம்டா ரகு” என்றான் குண்டுராஜூ.

ரகு போன அடுத்த இரண்டு வருடங்களில் அந்த வீட்டிலிருந்து இன்னும் சிலர் இறுதிப் பயணமானார்கள். வீடு கிட்டத்தட்டக் காலியாகி, அலமேலுவும், விமலியும் மட்டும் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் வளைய வந்து கொண்டிருந்தார்கள். விமலி சூட்டிகையான பெண். ஆனாலும் திடீர் திடீரென்று அழ ஆரம்பித்துவிடுவாள். கோணல் கழுத்தம்மா இருமிக்கொண்டே அவளைச் சமாதானப்படுத்துவாள்.

அதற்கும் அடுத்த வருடம் பொங்கலுக்கு அடுத்த நாள் ராத்திரி விமலி அழுத சத்தம் அந்த வீட்டிலிருந்து கேட்டது. கோணல் கழுத்து அலமேலு செத்துப் போனதாகத் தெரிந்தது. திரும்பவும் பாங்கு சுந்தரராமன் சிரிப்பு. பெட்ரோமாக்ஸ் வெளிச்சம், பாடை முடைவது, இன்னும் கொஞ்சம் அழுகை, தூக்கிப் போகிறவர்கள் குரல், இனம் புரியாத சோகம். காலையில் அந்த வீட்டுத் திண்ணையை அலம்ப யாரும் இல்லை.

விமலியை யாரோ பம்பாய் கூட்டிப் போனார்கள். “”அவ அப்பனை வளைச்சுப்போட்ட படுபாவி இந்தக் குழந்தையை வேலைக்காரியா வச்சுக்காம சொந்தப் பொண்ணா வளர்க்கணுமே, அம்புலப்புழை கிருஷ்ணா”, பாட்டி மனமுருகப் பிரார்த்தித்தாள்.

எத்தனையோ வருடம் கழித்து ராத்திரியில் தாமதமாக தில்லியிலிருந்து பம்பாய் புறப்பட்ட விமானத்தில் “விமலி ரங்னேகர்’ என்ற பெயர் அட்டை குத்திய ஏர்ஹோஸ்டûஸப் பார்த்தேன். பூனைக் கண்ணி. “”பூல் கயீரே” (மறந்து போச்சு) என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் விமலியாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். விமலி என்றால் கட்டாயம் ஊரை மறந்திருப்பாள். மறப்பதில்தான் அவளுக்கு மகிழ்ச்சி. நினைப்பதில் எனக்கு இருப்பதுபோல.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

“என்னப்பனே, என் அய்யனே, பார்வதியாளின் பாலகனே, பன்னிருகை வேலவனே’ என்று உரத்த குரலில் பெங்களூர் ரமணியம்மாள் பாடும் இசைத்தட்டு எங்கேயாவது ஒலிக்கக் கேட்டால் இப்போதும் முதுகுத் தண்டில் ஒரு நடுக்கம் ஏற்படும். கூடவே கத்திரி வெய்யில் காய்கிற ஒரு மத்தியானப் பொழுது மனதில் விரியும். வீங்கின கன்னமும், அவமானமும், அடக்க முடியாத அழுகையுமாகப் பகல் சாப்பாட்டுக்கு அதோ, வீட்டுக்கு நடந்து கொண்டிருக்கிற பள்ளிக்கூடப் பையன் நான்தான்.

புது வாத்தியார். ராஜமன்னார்சாமி என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் பெயர். உயரமும், பெரிய மீசையும், சிவந்த கண்ணைக் கடந்து வழியும் சிடுசிடுப்பும். அடி வயிற்றிலிருந்து வருகிறது போன்ற சத்தமுமாக அவர் போலீஸ்காரர்போல்தான் இருந்தார். வகுப்புப் படியேறி உள்ளே வந்தவர் இரண்டாம் பெஞ்சில் நேரே எனக்கு முன்னால் வந்து நின்றார். மரியாதைக்காக நான் எழுந்திருக்க முயற்சி செய்வதற்குள் என் கன்னத்தில் இடி போல் அவர் கை இறங்கிய சத்தம் கிளாûஸக் கடந்து சாத்தப்பன் ஊருணிக்கரையில் எதிரொலித்திருக்கும்.

” பட்டன் போடுடா, திருட்டு ராஸ்கல்’ அடிக்கு மேல் அடுத்த அவமானமாக ஒரு வசவு. திருட்டு ராஸ்கல் நான்.

திங்கள் கிழமை என்பதால் காலையில் அவசரமாகச் சீருடையை எடுத்து மாட்டிக் கொண்ட போது , வெள்ளைச் சட்டையில் கழுத்துக்குப் பக்கத்துப் பொத்தான் உதிர்ந்து போயிருந்தது. காலை நேர அவசரத்தில் யாரிடம் ஊசியில் நூல் கோர்த்து, விபூதிச் சம்படத்துக்குள் வெள்ளை பட்டனைத் தேடி எடுத்து (வீட்டில் ஏனோ அங்கேதான் பொத்தான், ஊசி போன்ற சமாச்சாரங்களைச் சேமித்து வைப்பார்கள்) தைத்துக் கொடுக்கும்படி கெஞ்ச முடியும்? பாட்டியம்மா சரியென்று அதுவரை ருத்ராட்சத்தை உருட்டிய ஸ்கோரை “சம்போ அம்பத்துரெண்டு’ என்று உரக்கச் சொல்லிக் கொண்டு உதவிக்கு வருவாள். அவளுக்கு ஊசியில் நூல் கோர்க்க ஒத்தாசை செய்து தைத்து முடிப்பதற்குள் சாயந்தரமாகிப் பள்ளிக்கூடம் முடிந்துவிடும். பாதியில் நிறுத்திய அவளுடைய “சம்போ’ ஸ்கோர் ஆயிரத்தெட்டைத் தொட அரைவாசி தூரம் பின் தங்கி இன்னும் ஐந்நூற்று இரண்டிலேயே நிற்கும். முடிக்காமல் சாப்பிட மாட்டாள் அவள்.

சேஃப்டி பின் குத்திப் போகலாம் என்றால் அம்மா வேண்டும். அவள் கழுத்துச் சங்கிலியில் கோர்த்து வைத்து, தேவையானால் எடுத்துக் கொடுத்து அடுத்த நாள் ஞாபகமாகத் திரும்பப் பெறும் வஸ்து அது. பள்ளிக்கூடம் கிளம்பும் நேரத்தில் அம்மா பூஜையில் மும்முரமாக இருந்ததால் அதுவும் முடியாமல் போனது. எல்லாம் சேர்ந்து பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எனக்கு வாழ்க்கையிலேயே முதல் முறையாகத் திருட்டு ராஸ்கல் பட்டத்தை போலீஸ்கார வாத்தியாரிடம் வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் கன்னத்தையும் வீங்க வைத்துவிட்டது. அல்பமான பொத்தான் அது.

“சினிமாவுக்குப் போனா, உலகமே மறந்துடுமாடா நாயே’. ராஜமன்னார்சாமி கர்ஜித்த போது கண் இருண்டு வந்தது. இதெல்லாம் கனவு. இதோ முடிந்து எழுந்து பாயைச் சுருட்டி வைத்துவிட்டுப் பல் தேய்க்கப் போக வேண்டியதுதான் என்று மனம் சமாதானம் சொன்னது. ஆனால் அது கனவில்லை என்பது முதுகை வளைத்து அடித்த அடியாக விழுந்தது. வகுப்பில் கிட்டத்தட்ட முதல் அல்லது இரண்டாம் இடத்தில் இருக்கப்பட்ட ஒரு சாதுப் பையனை கூடப் படிக்கிறவர்கள் வில்லனைப் போல் பார்க்க ஆரம்பிப்பதைவிடப் பெரிய தண்டனை வேறே இல்லைதான்.

“”இந்த ஸ்கவுண்ட்ரல் நேத்துக்கு சாயந்திரம் சாத்தப்பன் ஊருணிக் கரை மேட்டிலே ஒரு தடியனோடு சைக்கிள் கேரியர்லே உட்கார்ந்து டென்ட் கொட்டகைக்குப் போய்ட்டு இருக்கான். நான் எதிர்த்தாப்பலே வரதை பாக்கறான் ராஸ்கல். இறங்கி மரியாதையோட சல்யூட் அடிச்சு குட் ஈவினிங் சார்னு சொல்லணும்னு தெரியலை. கால்மேல் கால் போட்டுக்கிட்டு துரை மாதிரிப் பார்த்துட்டுப் போறான். ரவுடிப்பயல்”

ஆக, அதுதான் குற்றப்பத்திரிகை. முந்தின நாள் சாயந்திரம் குண்டுராஜாவோடு டென்ட் கொட்டகையில் சினிமா பார்க்கப் போன போது இவர் எதிர்ப்பட்டது உண்மைதான். ஓடுகிற சைக்கிளில் இருந்து குதிக்கப் பயமாக இருந்ததால் உட்கார்ந்தபடியே கடந்து போனதும் உண்மைதான். அத்தனை பெரிய குற்றமா அது?

பைக்கட்டைத் தோளில் மாட்டியபடி வீட்டுக்கு நடந்தபோது உலகமே விலகிப்போய் என்னை வேடிக்கை பார்க்கிறதாகப் பிரமை. காது மடலிலிருந்து கால்வரை உஷ்ணம் பரவித் தகிக்க ஆரம்பித்தது. திருட்டு ராஸ்கல், நாய், புழுத்த நாய், ரவுடி, அர்த்தம் புரியாத ஸ்கவுன்ட்ரல். இதுக்கு அப்புறம் என்ன வாழ்க்கை மிச்சம் இருக்கிறது?

புதிதாகப் போட்ட தார் வெய்யிலில் உருகி அங்கங்கே திட்டுத் திட்டாகக் கசிந்திருந்த சந்தைக் கடை வீதி. யார் வீட்டிலோ கல்யாணமோ, பூப்புனித நீராட்டுவிழாவோ கோலாகலமாக நடக்கிறது. “மொய் எழுதியவர்கள் சாப்பிட்டுப் போகவும்’ என்று ஒலி பெருக்கியில் அறிவிப்பு. தொடர்ந்து பெங்களூர் ரமணியம்மால் இசைத்தட்டில், “என்னப்பனே..என் ஐயனே’ என்று குஷியாகத் தொடங்க, எனக்குத் திரும்ப அழுகை உச்சத்துக்கு வந்தது. “ஸ்கவுன்ட்ரல் என்றால் என்ன?’

அப்போது காய்ச்சலில் விழுந்தவன்தான். பத்துநாள் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை. டாக்டர் சர்டிபிக்கேட்டேடும், மனசு முழுக்க நடுக்கத்தோடும் பள்ளிக்கூடம் திரும்பியபோது, அங்கே ஒரு பெரிய ஸ்டிரைக் தொடங்கியிருந்தது. காந்திவீதி சப்பாத்தி ஸ்டால் கைலாசம் மாஸ்டர் மகன் மனோகரனை, பள்ளி நூலகத்துக்கு முன்னால் செம்மண்ணும் சரளைக் கல்லும் பரவிய பாட்மின்டன் பந்து விளையாட்டு மைதானம் முழுக்கத் துரத்தித் துரத்தி அடித்திருக்கிறார், ராஜமன்னார்சாமி. வகுப்பு நடக்கும் போது அவனைக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாராம். வலது கையில் இல்லாமல் இடது கையில் தம்ளரைப் பிடித்துச் சிந்தியபடி எடுத்து வந்ததாகக் குற்றச்சாட்டு. ஒரு சின்னப் பையனை வயிற்றில் மிதித்து, தலைமுடியைப் பற்றி இழுத்துச் சுவரில் மோதி, இரண்டு கன்னத்திலும் ஒரே நேரத்தில் பொறிபறக்க அறைந்து, புரட்டிப் புரட்டி அடித்து – சாடிஸ்ட் என்ற வார்த்தைக்கு ராஜமன்னார்சாமி வாத்தியார் என்று இன்றைக்கும் அர்த்தம் எனக்கு.

ஸ்கூல் ஆடிட்டோரியம் பக்கம் நிறுத்தியிருந்த மன்னார்சாமியின் சைக்கிளைச் சின்னாபின்னமாக்கினார்கள் மாணவர்கள். வேலிகாத்தான் செடி முள்ளால் டயர் பங்சர் ஆக்கப்பட்டது. இருப்பதிலேயே பெரிய முள்ளை குண்டுராஜுவுக்குக் காட்டியது நான்தான். ஊரில் ஒரு சுவர் விடாமல், “தேளுக்குக் கொடுக்கில் விஷம்’ என்று தொடங்கி அவரைத் திட்டும் கரிக்கட்டி வாசகங்கள் எழுதப்பட்டன. ஷாஜஹானின் அத்தா அசன் ராவுத்தர், வக்கீல் வெங்கடேசன், பாங்க் மேனேஜர் போன்ற ஊர்ப் பிரமுகர்களின் கோஷ்டி பள்ளிக்கூடத்துக்குப் போய் பயங்கரவாதி வாத்தியார்கள் பிள்ளைகளின் கல்வி, மனநல வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதைப் பற்றி ஹெட்மாஸ்டரிடம் விவாதிக்க, அடுத்த மாசம் ராஜமன்னார்சாமி அம்பேல்.

“”வீட்டில் கொள்ளையடிக்க வந்தவனைச் சுட்டுக் கொன்ற ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரிண்டென்ட்” என்று சமீபத்தில் பத்திரிகையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். ராஜமன்னார்சாமி ஜாடையில் இருந்த அவர் சுட்டுக் கொன்றது நிஜமாகவே கொள்ளைக்காரனையா என்று தெரியாது.
———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு

Sunday December 9 2007 00:00 IST
காத்திருக்க வேண்டும். வீட்டுப் பெரியவர்கள் சினிமா நோட்டீசை ஆழமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிடம் முன்னால் தான் ஜெயராம் தியேட்டர் விளம்பர வண்டிக்குப் பின்னால் ஓடி கெஞ்சிக் கேட்டு வாங்கியது. சினிமா பார்க்கப் போவதற்கான அனுமதி கிட்டுவது இந்த நோட்டீஸ் சமர்ப்பிக்கப்படுவதில்தான் ஆரம்பமாகும். சில சினிமாப் படங்களின் பெயர்களைப் பார்த்ததுமே, வீட்டு சென்சார் கமிட்டி அனுமதியளிக்க மறுத்துவிடும். “காதலிக்க நேரமில்லை’ நோட்டீசைக் கையிலேயே வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள் அம்மா. முருகன் மேல் பாட்டு, பாரதி பாட்டு என்று சீர்காழி கோவிந்தராஜன் பாடிய எத்தனையோ கானங்கள் திருச்சி வானொலி மூலம் வீட்டுக்குள் சர்வ சுதந்திரமாக நுழையும்போது, “காதலிக்க நேரமில்லை’ என்று குஷியாகப் பாடியபடி அவர் உள்ளே வரத் தடை விதிக்கப்பட்டது.

பொதுவாக பீம்சிங் எடுத்த “பா’ வரிசைப் படங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, தியேட்டருக்குப் போவதற்கான நாள் குறிப்பதும் தொடங்கும். ” நான் வீட்டுக்கு வெளியே இருப்பேன்’. “நிக்கற நேரம்; திடீர்னு வந்து தொலையும்’ என்று அம்மா, அத்தை, சித்தி வகையறாக்கள் சங்கேத பாஷையில் பேசித் தீர்மானிக்கும் நாள் வரை சினிமாவை கொட்டகைக்காரர்கள் மாற்றாமல் இருக்க வேண்டும். இது தவிர, பள்ளிக்கூடத்தில் பரீட்சையை ஒட்டி வரும் எல்லாப் படங்களும் பாரபட்சமில்லாமல் நிராகரிக்கப்படும். போக முடிவெடுத்த தினத்தில் பத்து நிமிடம் சேர்ந்தாற்போல் நாலு தூற்றல் போட்டாலும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதும் உண்டு. தியேட்டருக்குள் குடை பிடித்தபடி படம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொன்னாலும், பத்து வயசுப் பையன் சொல்வது யார் காதிலும் ஏறாது. இதுதவிர, வாரநாள் பொதுவாக சினிமா பார்க்க விலக்கு என்பதால் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகள் சிலாக்கியமானவை.

எல்லாம் சரியாக இருந்து ஒன்பது கிரகமும் எதிர்பார்த்தபடி சஞ்சரித்தால், சாயந்திரம் சரியாக ஐந்து மணிக்கு உப்புமா கிண்டி முடித்து (ராத்திரி வந்து சாப்பிட), சீரக வென்னீர், ரஸ்க், பொரி, கடலை உருண்டை இத்யாதிகளோடு தியேட்டருக்குப் படையெடுப்பு நிகழும். தியேட்டரில் முதல் இருபது வரிசை பின்னால் சாய வசதி இல்லாத மொட்டை பெஞ்ச். அதற்கு முப்பத்தைந்து காசு டிக்கெட். அடுத்து இருபது வரிசை சாய்மானம் உள்ள பெஞ்ச். அறுபத்தைந்து பைசா டிக்கெட். அப்புறம் இரண்டு வரிசை மர நாற்காலி. ஒரு ரூபாய்க்கு அங்கே தொடர்ந்து மூட்டைப்பூச்சி கடிக்கிற வசதி இருப்பதால் தூங்காமல் பரபரப்பாகப் படம் பார்க்கலாம். நடுத்தரக் குடும்பம் என்பதால், அறுபத்தைந்து பைசா பெஞ்ச் தான் தேர்ந்தெடுக்கப்படுவது வாடிக்கை.

நான் மன்றாட வேண்டிய அவசியம் இல்லாமல், பாட்டியம்மா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிரடியாகத் தேர்ந்தெடுக்கும் படங்களும் உண்டு. டி.எம்.எஸ். பாடி நடித்த “அருணகிரிநாதர்’, “பட்டினத்தார்’ மாதிரி. அருணகிரிநாதர் முதல் சீனில் டி.எம்.எஸ். “ஆட வேண்டும் மயிலே’ பாடும்போது பின்னாலேயே அவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்கும் ஒல்லியான நபரை அத்தை காட்டி, “”யார்னு தெரியுதா? கலைவாணர் பிள்ளையாக்கும்” என்றாள். பாட்டி அப்புறம் என்.எஸ்.கே. கோலப்பன் வரும் சீனில் எல்லாம் சிரித்து, வாய் சுளுக்குகிற சந்தத்தில் டி.எம்.எஸ். “முத்தைத் தருபத்தித்திரு’ என்று இடைவேளைக்குப் பிறகு திருப்புகழ் பாடும்போது தூங்கிவிட்டாள்.

அம்பலப்புழையிலிருந்து அத்தை வந்தபோது கே.ஆர். விஜயா அறிமுகமான “கற்பகம்’ ஓடிக்கொண்டிருந்தது. “அத்தைமடி மெத்தையடி’ என்று பாடியபடி பேபி ஷகீலாவைக் கொஞ்சிக்கொண்டிருந்த கே.ஆர். விஜயாவைப் பார்த்து “ஆனாலும் ரொம்பப் பூஞ்சையான தேகவாகு இந்தப் பொண்ணுக்கு. புதுசா நடிக்க வந்தா, சாப்பாடெல்லாம் சரியாப் போடறதில்லே போலேயிருக்கு’ என்று பாட்டி விசனப்பட்டாள். அதே படத்தில் “பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்’ என்று பாடியாடியபடி (“”யேது கண்றாவி. இப்படியும் பாட்டா”) சாவித்திரி வந்தபோது, “பூசினாற்போல’ சாவித்திரி இருப்பதற்கு, அவர் சினிமாவில் நீண்டநாளாக இருப்பதே காரணம் என்பது பாட்டியம்மாவின் வாதம். விஜயா பிற்காலத்தில் கனமான கதாபாத்திரமானதைப் பார்க்க அவளுக்கு வாய்க்கவில்லை. சாவித்திரி மெலிந்து நலிந்துபோன சோகமும் அவள் அறியாதது.

வீட்டுக் காவலோடு இப்படிச் சினிமா பார்க்கிற நிலை மாறியது அதற்கு இரண்டு மூன்று வருடம் கழித்துத்தான். சந்தைக் கடைக்குப் போகிறது போல், பெரிய பையன்களோடு சேர்ந்து போக அனுமதி கிடைத்தது. மொட்டை பெஞ்ச் டிக்கெட்தான் எல்லோருக்கும். எம்.ஜி.ஆர் படம் என்றால் தங்கப்பா மரக்கடை சண்முகத்தோடு போவது வாடிக்கை. “”புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா?” என்று மழையில் நனைந்தபடி எம்.ஜி.ஆர் பாடிக்கொண்டு வரும்போது கூடவே பரிதாபமாக நடந்து வரும் கூட்டத்தில் ஒவ்வொரு துணை நடிகர் பெயரையும் (ஆட்டுக்குட்டி தவிர) அவனால் சொல்ல முடியும். “எங்க வீட்டுப் பிள்ளை’யில் “நான் ஆணையிட்டால்’ பாடுகிறபோது, எந்த அடியில், எந்தப் படியில் எம்.ஜி.ஆர் எப்படித் திரும்பி நின்று சவுக்கைச் சுழற்றுவார் என்பதைப் பதினாறாம் வாய்ப்பாடு போல ஒப்பிப்பான் அவன்.

சிவாஜியின் “கப்பலோட்டிய தமிழன்’ வந்தபோது பள்ளிக்கூடத்திலேயே காசு வசூலித்து ஒரு சனிக்கிழமை மதியம் கூட்டிப் போனார்கள். படத்தைப் பார்த்துவிட்டு “”நான் பார்த்த திரைப்படம்” என்று வீட்டுப்பாடமாகக் கட்டுரை எழுதி எடுத்துவரச் சொல்லி உத்தரவு போடப்பட்டதால், அந்த அற்புதமான படத்தை பாடப் புத்தகத்தைப் படிக்கிற ஜாக்கிரதையோடு பார்க்க வேண்டிப் போனது. வீட்டுப் பாடமாக எழுதி எடுத்துப் போனது என்னமோ “சம்பூர்ண ராமாயணம்’ பற்றிய கட்டுரைதான். ஏழெட்டு வருடம் முன்னால் இதேபடி உத்தரவு கிடைத்த யாரோ எழுதி, அடுத்தடுத்து வரும் இளைய தலைமுறைக்குப் புத்தம் புதிய காப்பியாகக் கைமாறிக் கொண்டிருந்தது அது.

அபூர்வமாக ஒரு இந்திப் படம்- ராஜ்கபூர் நடித்த “அரவுண்ட் த ஓர்ல்ட்’ ஊர்க் கொட்டகைக்கு வந்து சேர்ந்தது. “”உலகம் பூராக் காட்டறாங்க” என்று குண்டுராஜூ வீடுவீடாக சிபாரிசு செய்து கூட்டம் சேர்த்து படம் பார்க்கப் போனோம். இந்தியன் நியூஸ்ரீலில் புல்லாங்குழல் சோகமாக ஒலிக்க “பீகாரில் பஞ்சம்’, “ஒரிசாவில் வெள்ளம்’. அதுமுடிந்து, மெட்ரோ நியூஸ் ரீலில் சிங்கம் கர்ஜித்து, எலிசபெத் மகாராணி ஆஸ்திரேலியா பயணம். நாலு மாதம் முன்னால் பார்த்தபோதும் அவர் ஆஸ்திரேலியா போய்க் கொண்டிருந்தார். அப்புறம் ராஜ்கபூர் படம் ஆரம்பமானது. உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதைவிட கப்பலுக்குள் சுற்றிச் சுற்றி வந்து சாதனாவைப் பாட்டுப் பாடிக் காதலிப்பதில்தான் ராஜ்கபூர் ஆர்வமாக இருந்தார். ரொம்ப சிக்கனமாக உடுத்திய இரண்டு பெண்கள் ஹவாய் கடற்கரையில் காற்று வாங்கியபடி படுத்திருக்க, அந்த ரீலை மட்டும் திரும்பப் போடச் சொல்லி ஏகப்பட்ட கைகள் உயர்ந்தன.

படஇடைவேளையில் முதல் தடவையாக “டிரயிலர்’ என்ற ஐந்து நிமிட குட்டிச் சினிமா. இதுவும் இந்திப் படத்துக்காகத்தான். இண்டெர்வெல் நேரத்தில் “காது வளர்த்து, ஒட்ட வைக்க நுட வைத்தியசாலை’ கலர் ஸ்லைட் தான் வழக்கமாகப் போடப்படும். டிரயிலருக்கான கூச்சல் எழவே, காது வளர்த்து பாம்படம் போட வசதி செய்கிற விளம்பரம் போய், யாஹூ என்று டிரயிலரில் அவசரமாக ஷம்மி கபூர் தாவிக் குதித்தார்.

அதென்னமோ, அப்பாவுக்கும் சினிமாவுக்கும் ஏழாம் பொருத்தம். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் பூலோக ரம்பை தான் ஓடிக்கொண்டிருக்கும். ஜெயராம் தியேட்டர்காரர்கள் சொந்தத்தில் தேசல் பிரிண்ட் வாங்கி அவ்வப்போது இரண்டு சினிமாவுக்கு நடுவே இட்டு நிரப்ப உபயோகமானது அது. “நாலு வருஷமா பூலோக ரம்பை ஓடறது நம்ம ஊர்லே தாண்டா. ஹரிதாஸ் கூட மதுரை சிந்தாமணியிலே ஒரு வருஷம்தான் ஓடினது” என்றார் அப்பா.
———————————————————————————————————————————————-

Sunday December 16 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்
“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி’, நடு மத்தியானத்திலோ, ராத்திரியிலோ இந்தக் குரல் கேட்டால், “144 தடையுத்தரவு’ என்று தெரிந்துபோகும்.

என்னைப் பள்ளிக்கூடத்தில் போட்டபோது வெளியான பாட்டு இது என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ரோஜா மலர்களும், ராஜா மகள், ராஜகுமாரிகளும் இசைத்தட்டாகச் சுழன்ற காலம் முடிந்திருந்தாலும், தட்சிணா சவுண்ட் சர்வீஸில் புது ரிக்கார்ட் வாங்குவது வழக்கமில்லை. கடையின் பெயரைச் சரியாகச் சொன்னால் -தட்சிணா ஜூவல்லர்ஸ் அண்ட் சவுண்ட் சர்வீஸ். பெயரில் முதல் பாதியான நகைக்கடை தட்சிணா ஆச்சாரியார் வீட்டு வாசல் திண்ணையில் ஒரு சின்ன கண்ணாடி ஷெல்ப். கண்ணாத்தாள் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்த வெள்ளியில் செய்த சிறு “கண்மலர்’கள், பெண்கள் கால்விரலில் மாட்டுகிற மிஞ்சி, வெள்ளிக் கொலுசு, சின்னப் பெண் குழந்தைகளுக்கு உடுப்பும் நகையுமான அரசிலை என்று அடுக்கியிருந்த அந்த நகைக்கடைக்கு எப்போதாவது யாராவது வியாபாரம் செய்ய வருவதுண்டு. நகை ஷெல்ப் பக்கத்தில் இரண்டு கூம்பு ஒலிபெருக்கி கவிழ்த்து வைத்திருக்கும். மேலே அடைசலாக வயர்ச் சுருளும் பிடுங்கிப் போட்ட மைக்கும் சுவருக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும். “ரோஜா மலரே ராஜகுமாரி’ மற்றும் சில பழமையான இசைத்தட்டுகள் திண்ணையைக் கடந்து தட்சிணா ஆச்சாரியார் வீட்டு ஹாலில் மேஜை மேல் தூசிக்கு நடுவே போலீஸ்காரர் வரவுக்காகக் காத்திருக்கும்.

ரொம்பவே அமைதியான ஊர் எங்களுடையது என்றாலும் பக்கத்தில் எங்கேயாவது திருவிழா நேரத்தில் சண்டை, வயல் தகராறு, கோஷ்டி மோதல் என்று அவ்வப்போது நிலைமை உருவாகும்போது, உடையார் ஊருணி போலீஸ் ஸ்டேஷனில் ஊர் அமைதியைப் பாதுகாக்க முடிவெடுக்கப்படும். அதன்படி, காரியரில் சணல் கயிற்றால் லாட்டிக் கம்பை வைத்துக் கட்டிய பழைய ஹெர்குலிஸ் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வேகுவேகுவென்று ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் வாசலில் வந்து இறங்குவார். ஊரில் வேறு எத்தனையோ சவுண்ட் சர்வீஸ் இருந்தாலும் இந்த விஷயமாக ஏதாவது சர்க்கார் உத்தரவுப்படி இது இருக்கக்கூடும். காந்தி வீதி மாயழகு டீ ஸ்டாலில் ஆச்சாரியாரின் அசிஸ்டெண்ட் ராசப்பன் வாங்கி வந்த டீயைக் குடித்தபடி கான்ஸ்டபிள் காத்திருக்க, சவுண்ட் சர்வீஸ் மைக்குக்கு உயிர் வந்து உய்ங்ங்ங்க் என்று நாலைந்து விசிலடிக்கும். பிறகு பி.பி. சீனிவாஸ் ராஜகுமாரிக்கு அழைப்பு விடுப்பார். போலீஸ்காரர் சைக்கிளில் ஏறித் திரும்பப் போகும்போது பாட்டு முடிந்துபோய், ராசப்பன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்திருப்பான் -“”இதனால் அறிவிப்பது என்னவென்றால் ஊரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்களுக்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக நிற்பதும், பேசுவதும், நடப்பதும் சட்டப்படி குற்றமாகும். மக்கள் அமைதி காக்கும்படி வேண்டப்படுகிறார்கள்”. பத்து நிமிடம் கழித்து, ஒரு குதிரை வண்டிக்குக் கூம்பு ஒலிபெருக்கி அலங்காரம் செய்து, உள்ளே உட்கார்ந்து ராசப்பன் சர்க்கார் அறிவிப்பையும், ரோஜா மலரே ராஜகுமாரியையும் ஒலிபரப்பியபடி நகர்வலம் வருவான்.

சமயத்தில், பக்கத்து கிராமத்தில் காதுகுத்து வைபவத்துக்குப் போய்விட்டு தட்சிணா ஆச்சாரியார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பஸ் இறங்கும்போதே வழிமறித்து 144 தடையுத்தரவு காகிதத்தைக் கொடுப்பதுண்டு. அப்போது அவர் வேகவேகமாக தேசத் தொண்டு செய்யும் முனைப்போடு தன் வீட்டுக்கடைக்கு நடந்து வருவார். திடீரென்று தன் இடது தோள் வலதை விட அரை அடி தாழ்ந்து போயிருப்பதாகத் தோன்ற சட்டென்று அதை உயர்த்தி விட்டுக் கொள்வார். நாலடி நடப்பதற்கு ஒருமுறை இப்படித் தோள் உயரும். “”ஆச்சாரியார் ஆர்மியிலே இருந்தா, தோள்லே பிடிச்ச துப்பாக்கி நிமிசத்துக்கு ரெண்டு பேரைத் தன்பாட்டிலே சுட்டுத் தள்ளியிருக்கும், அதுவும் நம்ம ஆளாயிருக்கும்’ என்பான் மாயழகு. பழைய பட்டாளக்காரன் அவன்.”

ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் பெரும்பாலும் சர்க்கார் காரியத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதென்றால், காந்தி வீதி, நேரு வீதி, சவுண்ட் சர்வீஸ்கள் ஏனைய தனியார், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒலிபெருக்கி சேவை வழங்கின. புதிய பொரட்டா ஸ்டால் திறப்பு, ஜவுளிக்கடை ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் சர்வமத பிரார்த்தனை கீதங்களோடு தொடங்குவது வழக்கம். விடிகாலையிலேயே சீர்காழி, “வினாயகனே, வினை தீர்ப்பவனே’ என்று வேகவேகமாகப் பாடி முடிப்பார். பிறகு கனகம்பீரமாக “இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று நாகூர் ஹனீபா. இன்று தொடங்கப்பெறும் புதிய நிறுவனத்தின் பெருமைகள் குறித்து சவுண்ட் சர்வீஸ்காரரின் சிறப்புச் சொற்பொழிவு முடிந்து அவருடைய சொத்தான பத்துப் பாட்டும் திரும்பத் திரும்ப நாள் முழுக்க ஒலிபரப்பாகி ஊரை இரைச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும், நடுநடுவே கடை விளம்பரத்தோடு இலங்கை வானொலி ஸ்டைலில் நேரமும் சொல்லப்படும்.

சினிமாப் பாட்டுகளின் உலகம் தனியானது. சவுண்ட் சர்வீஸ் உலகமும்தான். செல்வம் சவுண்ட் சர்வீஸ்காரருக்கு “கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’ பாட்டில் அப்படி ஒரு ஈடுபாடு. ஒலிபெருக்க தேவை இல்லாதபோதுகூட சும்மா கட்டித் தங்கம் வெட்டிக் கொண்டிருப்பார். கணபதி சவுண்ட் சர்வீஸ் சதா “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்று தனக்குப் பிடித்த இடத்தில் எம்.ஜி.ஆர் படப்பாடலைத் தொடங்குவதில் ராஜா சவுண்ட் சர்வீஸ்காரருக்கத் தனி உற்சாகம். சிவப்பு ஸ்பீக்கர் ஜீவா சவுண்ட் சர்வீசில் எம்.பி. சீனிவாசனின் அபூர்வமான “சின்னச் சின்ன மூக்குத்தி’ அடிக்கடி தட்டுப்படும். மதுமதி இந்திப் படத்தில் சலீல் சவுத்ரியின் “ஆஜாரே பரதேசி’. மற்றும் அவர் இசையமைத்த மலையாள செம்மீனில் “கடலினக்கரெ போனாரே’ போன்ற கானங்களை ஒலிபரப்பி எங்கள் ரசனையை மொழி கடக்க வைத்தது இந்த சவுண்ட் சர்வீஸ்தான்.

டேப் ராஜமாணிக்கம் குரல் விசேஷமானது. “”உன்னைப்போல் ஒருவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே” என்று அவர் பாடினால் அது காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு. பெருந்தலைவர் காமராஜ் பற்றிய பாட்டு அது. ராஜமாணிக்கம் “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொடங்கினால் மேரி அச்சகம் திறப்புவிழா அல்லது திரவியம் ஸ்டூடியோ துவக்கம்.

அரண்மனை வாசலில் அரசியல் பொதுக்கூட்டம் என்றால் ராஜமாணிக்கம் பாட்டோடு, ஊர்கிற காரில் இருந்து சரமாரியாக பிட் நோட்டீஸ்கள் ஜன்னல் வழியாக வீசப்படும். “திருக்குறள் முனுசாமி அவர்களின் திருக்குறள் நகைச்சுவை தேசியச் சொற்பொழிவு கேட்க வருக’ என்று ஒரு நோட்டீஸ் இன்னும் நினைவில் இருக்கிறது. “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ பாட்டோடு விளம்பர வண்டி போனால், அனேகமாக தீப்பொறி ஆறுமுகம் கூட்டம் அல்லது மலையாளத் தமிழில் கேரளசுந்தரம் பிரசங்கம். கம்யூனிஸ்ட் மீட்டிங் என்றால் டி.எம்.எஸ். ஈஸ்வரி குரலில் “ஒன்று எங்கள் ஜாதியே’ அல்லது சீர்காழியின் “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ ஒலிக்கும். அறந்தை நாராயணனோ, மூத்த தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனோ மேடையில் பேசப்போவதில் பாதியை தெருக்கோடியில் நோட்டீஸ் கொடுப்பவர்களே பேசி முடித்துவிடுவார்கள்.

பாலு சவுண்ட் சர்வீஸ்காரர் எட்டு ரிக்கார்ட் “வாராய் என் தோழி வாராயோ’ வாங்கி வைத்திருந்தும் போதவில்லை என்று குறைப்படுவார். தை பிறந்தால் ஊர் முழுக்கக் கேட்டது எல்.ஆர். ஈஸ்வரி குரல்தான். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மணப்பெண்களுக்குப் பிரியமான கல்யாணத் தோழி அவர். தை மாதத்திற்கு முந்திய மார்கழிக்குக் குடிபெயர்ந்து இன்னும் அவர் எல்லா ஊரிலும் அதிகாலையில் கோயில் தோறும் மாரியம்மன் பாட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்கள் ஊர் பாலு சவுண்ட் சர்வீஸ் பற்றி சாவகாசமாக விசாரித்துச் சொல்கிறேன்.

———————————————————————————————————————————————-

Sunday December 16 2007 00:00 IST

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்
“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி’, நடு மத்தியானத்திலோ, ராத்திரியிலோ இந்தக் குரல் கேட்டால், “144 தடையுத்தரவு’ என்று தெரிந்துபோகும்.

என்னைப் பள்ளிக்கூடத்தில் போட்டபோது வெளியான பாட்டு இது என்று அம்மா சொல்லியிருக்கிறாள். ரோஜா மலர்களும், ராஜா மகள், ராஜகுமாரிகளும் இசைத்தட்டாகச் சுழன்ற காலம் முடிந்திருந்தாலும், தட்சிணா சவுண்ட் சர்வீஸில் புது ரிக்கார்ட் வாங்குவது வழக்கமில்லை. கடையின் பெயரைச் சரியாகச் சொன்னால் -தட்சிணா ஜூவல்லர்ஸ் அண்ட் சவுண்ட் சர்வீஸ். பெயரில் முதல் பாதியான நகைக்கடை தட்சிணா ஆச்சாரியார் வீட்டு வாசல் திண்ணையில் ஒரு சின்ன கண்ணாடி ஷெல்ப். கண்ணாத்தாள் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செலுத்த வெள்ளியில் செய்த சிறு “கண்மலர்’கள், பெண்கள் கால்விரலில் மாட்டுகிற மிஞ்சி, வெள்ளிக் கொலுசு, சின்னப் பெண் குழந்தைகளுக்கு உடுப்பும் நகையுமான அரசிலை என்று அடுக்கியிருந்த அந்த நகைக்கடைக்கு எப்போதாவது யாராவது வியாபாரம் செய்ய வருவதுண்டு. நகை ஷெல்ப் பக்கத்தில் இரண்டு கூம்பு ஒலிபெருக்கி கவிழ்த்து வைத்திருக்கும். மேலே அடைசலாக வயர்ச் சுருளும் பிடுங்கிப் போட்ட மைக்கும் சுவருக்கு அடுத்து உட்கார்ந்திருக்கும். “ரோஜா மலரே ராஜகுமாரி’ மற்றும் சில பழமையான இசைத்தட்டுகள் திண்ணையைக் கடந்து தட்சிணா ஆச்சாரியார் வீட்டு ஹாலில் மேஜை மேல் தூசிக்கு நடுவே போலீஸ்காரர் வரவுக்காகக் காத்திருக்கும்.

ரொம்பவே அமைதியான ஊர் எங்களுடையது என்றாலும் பக்கத்தில் எங்கேயாவது திருவிழா நேரத்தில் சண்டை, வயல் தகராறு, கோஷ்டி மோதல் என்று அவ்வப்போது நிலைமை உருவாகும்போது, உடையார் ஊருணி போலீஸ் ஸ்டேஷனில் ஊர் அமைதியைப் பாதுகாக்க முடிவெடுக்கப்படும். அதன்படி, காரியரில் சணல் கயிற்றால் லாட்டிக் கம்பை வைத்துக் கட்டிய பழைய ஹெர்குலிஸ் சைக்கிளில் ஒரு போலீஸ்காரர் வேகுவேகுவென்று ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் வாசலில் வந்து இறங்குவார். ஊரில் வேறு எத்தனையோ சவுண்ட் சர்வீஸ் இருந்தாலும் இந்த விஷயமாக ஏதாவது சர்க்கார் உத்தரவுப்படி இது இருக்கக்கூடும். காந்தி வீதி மாயழகு டீ ஸ்டாலில் ஆச்சாரியாரின் அசிஸ்டெண்ட் ராசப்பன் வாங்கி வந்த டீயைக் குடித்தபடி கான்ஸ்டபிள் காத்திருக்க, சவுண்ட் சர்வீஸ் மைக்குக்கு உயிர் வந்து உய்ங்ங்ங்க் என்று நாலைந்து விசிலடிக்கும். பிறகு பி.பி. சீனிவாஸ் ராஜகுமாரிக்கு அழைப்பு விடுப்பார். போலீஸ்காரர் சைக்கிளில் ஏறித் திரும்பப் போகும்போது பாட்டு முடிந்துபோய், ராசப்பன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்திருப்பான் -“”இதனால் அறிவிப்பது என்னவென்றால் ஊரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து நபர்களுக்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக நிற்பதும், பேசுவதும், நடப்பதும் சட்டப்படி குற்றமாகும். மக்கள் அமைதி காக்கும்படி வேண்டப்படுகிறார்கள்”. பத்து நிமிடம் கழித்து, ஒரு குதிரை வண்டிக்குக் கூம்பு ஒலிபெருக்கி அலங்காரம் செய்து, உள்ளே உட்கார்ந்து ராசப்பன் சர்க்கார் அறிவிப்பையும், ரோஜா மலரே ராஜகுமாரியையும் ஒலிபரப்பியபடி நகர்வலம் வருவான்.

சமயத்தில், பக்கத்து கிராமத்தில் காதுகுத்து வைபவத்துக்குப் போய்விட்டு தட்சிணா ஆச்சாரியார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பஸ் இறங்கும்போதே வழிமறித்து 144 தடையுத்தரவு காகிதத்தைக் கொடுப்பதுண்டு. அப்போது அவர் வேகவேகமாக தேசத் தொண்டு செய்யும் முனைப்போடு தன் வீட்டுக்கடைக்கு நடந்து வருவார். திடீரென்று தன் இடது தோள் வலதை விட அரை அடி தாழ்ந்து போயிருப்பதாகத் தோன்ற சட்டென்று அதை உயர்த்தி விட்டுக் கொள்வார். நாலடி நடப்பதற்கு ஒருமுறை இப்படித் தோள் உயரும். “”ஆச்சாரியார் ஆர்மியிலே இருந்தா, தோள்லே பிடிச்ச துப்பாக்கி நிமிசத்துக்கு ரெண்டு பேரைத் தன்பாட்டிலே சுட்டுத் தள்ளியிருக்கும், அதுவும் நம்ம ஆளாயிருக்கும்’ என்பான் மாயழகு. பழைய பட்டாளக்காரன் அவன்.”

ரெட்டைத் தெரு தட்சிணா சவுண்ட் சர்வீஸ் பெரும்பாலும் சர்க்கார் காரியத்துக்காகப் பயன்படுத்தப்பட்டதென்றால், காந்தி வீதி, நேரு வீதி, சவுண்ட் சர்வீஸ்கள் ஏனைய தனியார், பொது நிகழ்ச்சிகளுக்காக ஒலிபெருக்கி சேவை வழங்கின. புதிய பொரட்டா ஸ்டால் திறப்பு, ஜவுளிக்கடை ஆரம்பம் போன்ற நிகழ்ச்சிகள் சர்வமத பிரார்த்தனை கீதங்களோடு தொடங்குவது வழக்கம். விடிகாலையிலேயே சீர்காழி, “வினாயகனே, வினை தீர்ப்பவனே’ என்று வேகவேகமாகப் பாடி முடிப்பார். பிறகு கனகம்பீரமாக “இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று நாகூர் ஹனீபா. இன்று தொடங்கப்பெறும் புதிய நிறுவனத்தின் பெருமைகள் குறித்து சவுண்ட் சர்வீஸ்காரரின் சிறப்புச் சொற்பொழிவு முடிந்து அவருடைய சொத்தான பத்துப் பாட்டும் திரும்பத் திரும்ப நாள் முழுக்க ஒலிபரப்பாகி ஊரை இரைச்சலிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும், நடுநடுவே கடை விளம்பரத்தோடு இலங்கை வானொலி ஸ்டைலில் நேரமும் சொல்லப்படும்.

சினிமாப் பாட்டுகளின் உலகம் தனியானது. சவுண்ட் சர்வீஸ் உலகமும்தான். செல்வம் சவுண்ட் சர்வீஸ்காரருக்கு “கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’ பாட்டில் அப்படி ஒரு ஈடுபாடு. ஒலிபெருக்க தேவை இல்லாதபோதுகூட சும்மா கட்டித் தங்கம் வெட்டிக் கொண்டிருப்பார். கணபதி சவுண்ட் சர்வீஸ் சதா “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும். “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்’ என்று தனக்குப் பிடித்த இடத்தில் எம்.ஜி.ஆர் படப்பாடலைத் தொடங்குவதில் ராஜா சவுண்ட் சர்வீஸ்காரருக்கத் தனி உற்சாகம். சிவப்பு ஸ்பீக்கர் ஜீவா சவுண்ட் சர்வீசில் எம்.பி. சீனிவாசனின் அபூர்வமான “சின்னச் சின்ன மூக்குத்தி’ அடிக்கடி தட்டுப்படும். மதுமதி இந்திப் படத்தில் சலீல் சவுத்ரியின் “ஆஜாரே பரதேசி’. மற்றும் அவர் இசையமைத்த மலையாள செம்மீனில் “கடலினக்கரெ போனாரே’ போன்ற கானங்களை ஒலிபரப்பி எங்கள் ரசனையை மொழி கடக்க வைத்தது இந்த சவுண்ட் சர்வீஸ்தான்.

டேப் ராஜமாணிக்கம் குரல் விசேஷமானது. “”உன்னைப்போல் ஒருவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே” என்று அவர் பாடினால் அது காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்துக்கான அழைப்பு. பெருந்தலைவர் காமராஜ் பற்றிய பாட்டு அது. ராஜமாணிக்கம் “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொடங்கினால் மேரி அச்சகம் திறப்புவிழா அல்லது திரவியம் ஸ்டூடியோ துவக்கம்.

அரண்மனை வாசலில் அரசியல் பொதுக்கூட்டம் என்றால் ராஜமாணிக்கம் பாட்டோடு, ஊர்கிற காரில் இருந்து சரமாரியாக பிட் நோட்டீஸ்கள் ஜன்னல் வழியாக வீசப்படும். “திருக்குறள் முனுசாமி அவர்களின் திருக்குறள் நகைச்சுவை தேசியச் சொற்பொழிவு கேட்க வருக’ என்று ஒரு நோட்டீஸ் இன்னும் நினைவில் இருக்கிறது. “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ பாட்டோடு விளம்பர வண்டி போனால், அனேகமாக தீப்பொறி ஆறுமுகம் கூட்டம் அல்லது மலையாளத் தமிழில் கேரளசுந்தரம் பிரசங்கம். கம்யூனிஸ்ட் மீட்டிங் என்றால் டி.எம்.எஸ். ஈஸ்வரி குரலில் “ஒன்று எங்கள் ஜாதியே’ அல்லது சீர்காழியின் “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்’ ஒலிக்கும். அறந்தை நாராயணனோ, மூத்த தோழர் எம்.ஆர். வெங்கட்ராமனோ மேடையில் பேசப்போவதில் பாதியை தெருக்கோடியில் நோட்டீஸ் கொடுப்பவர்களே பேசி முடித்துவிடுவார்கள்.

பாலு சவுண்ட் சர்வீஸ்காரர் எட்டு ரிக்கார்ட் “வாராய் என் தோழி வாராயோ’ வாங்கி வைத்திருந்தும் போதவில்லை என்று குறைப்படுவார். தை பிறந்தால் ஊர் முழுக்கக் கேட்டது எல்.ஆர். ஈஸ்வரி குரல்தான். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மணப்பெண்களுக்குப் பிரியமான கல்யாணத் தோழி அவர். தை மாதத்திற்கு முந்திய மார்கழிக்குக் குடிபெயர்ந்து இன்னும் அவர் எல்லா ஊரிலும் அதிகாலையில் கோயில் தோறும் மாரியம்மன் பாட்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எங்கள் ஊர் பாலு சவுண்ட் சர்வீஸ் பற்றி சாவகாசமாக விசாரித்துச் சொல்கிறேன்.

———————————————————————————————————————————————-

Sunday December 23 2007

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டை தெரு

நவராத்திரி முழுக்கப் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யாராவது சொன்னால், அப்புறம் பேச என்னிடம் வேறே எதுவும் இல்லை என்று மூஞ்சியைத் திருப்பிக்கொள்ள வேண்டி வரும். மனதில் இன்னும் பத்து வயதில் இருக்கிற ஒரு சிறுவன் நவராத்திரியை ஆசையோடு திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

நவராத்திரி கொலு வைப்பதற்கென்றே தச்சு ஆசாரியார் எந்தக் காலத்திலோ செய்து கொடுத்த மரப்படிகள் சமையலறைக்கு இடம் பெயர்ந்தது நான் பிறந்ததற்கு முன்னால் நிகழ்ந்த ஒன்று. மாவடு ஊறும் கல்சட்டி, தோசைக்கு அரைத்து வைத்த பாத்திரம், இலைக்கட்டு, தேங்காய், காபி பில்டர், எண்ணெய்த் தூக்கு. பீங்கான் ஜாடியில் உப்பு என்று நித்தியப்படிக்குக் கொலு வைத்து ஊறுகாய் வாடையோடு இருக்கும் அந்தப் படிகள். நவராத்திரி கொலுவுக்கு அது தோதுப்படாது என்று பாட்டியம்மா தவிர மற்ற எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட, ராச் சாப்பாட்டுக்கு அப்புறம் கொலுப்படி அமைப்பதற்கான அவசர நடவடிக்கை தொடங்கும். இது நவராத்திரி தொடங்க சரியாக இருபத்து நாலு மணி நேரத்துக்கு முன்னால் வாடிக்கையாக நடப்பது.

வெங்கலப் பாத்திரம் அடைத்த சதுரமும் செவ்வகமுமான கள்ளிக்கோட்டைப் பெட்டிகள், மாடியில் அடுக்கிய தேக்குப் பலகை, வாசல் பெஞ்ச், தாத்தா காலத்து மேஜை என்று வீட்டில் அங்கங்கே இருக்கிறவை இடம்பெயர்ந்து கூடத்துக்கு வந்து, மேலே பளீரென்று சலவை செய்த எட்டு முழ வேட்டிகளைத் தழையத்தழைய விரித்ததும் அழகான ஏழு கொலுப்படிகள் ஆகிற மாயம் சொல்லிப் புரியவைக்கிற சமாசாரம் இல்லை, இது நடந்தேற பதினோரு மணி ஆகிவிடும். அப்படியும் கண்ணில் தூக்கத்தின் தடமே இல்லாமல் அடுத்த வேலைக்கு ஆயத்தமாவது வழக்கம்.

நாலைந்து பேர் அவசர அவசரமாகக் கொலுப் பெட்டிகளில் இருந்து பொம்மைகளை வெளியே எடுத்துப் பரப்பி வைத்தபின் வீட்டுக் கூடத்துக்குக் கல்யாண மண்டபம்போல் ஒரு தனிக் களை வந்துவிடும். ஒவ்வொரு பொம்மையாக எடுத்து கொலுப்படியில் அடுக்குவது சுலபமான வேலை இல்லை. ராமர் பட்டாபிஷேக பொம்மை செட் ஓரமாக ஒரு போலீஸ்காரர் பாரா கொடுத்தபடி நிற்க, அனுமார் மிஸ்ஸிங். அவர், தண்டிக்கு உப்புக் காய்ச்ச விரைவாக நடக்கிற மகாத்மா காந்தி பக்கத்தில் பவ்யமாக உட்கார்ந்திருப்பார். கல்யாண செட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய மாதிரி தவில்காரர் பாம்பு பிடாரன் முன்னால் கொட்டி முழக்கிக் கொண்டிருப்பார். பிடாரனுக்கு முன்னால் படம் விரித்து ஆட வேண்டிய பாம்பு, தொப்பியும் குடையுமாக ஒய்யாரமாக நடக்கிற பளிங்கு வெள்ளைக்காரனின் முழங்காலை ஒட்டி சாதுவாகக் கவிழ்ந்து கிடக்கும். பொம்மை மளிகைக் கடையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்க, பொறி பறக்கத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும் நாலு பட்டாளச் சிப்பாய்களுக்கு நடுவிலே கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் தொப்பையைத் தள்ளிக்கொண்டு மளிகைக் கடைக்காரர் ஓய்வாக அமர்ந்திருப்பார். தான் எந்த செட் என்ற தெரியாமல் கிரீடம் வைத்த ராஜா ஒருத்தர் அரக்கப்பரக்க விழித்தபடி தூணோரம் நின்றிருப்பார்.

யார் யார், எது எது எந்தெந்தக் குழுவைச் சேர்ந்தது என்று கடகடவென்று பொறுக்கி எடுத்துச் சேர்த்து வைத்துவிட்டால் அடுத்த வேலைக்குக் கிளம்பி விடலாம். வீட்டுப் பெரியவர்கள் சரியான குழுக்களாகப் பிரித்து வைக்கப்பட்ட பொம்மைகளை அததற்கான கொலுப்படிகளில் அமர்த்திக் கொண்டிருக்க, கொலுப் பெட்டிக்குள்ளே விரித்திருந்த பழைய செய்தித்தாள், பொம்மை சுற்றி வைத்த பத்திரிகைக் காகிதம் ஒன்றுவிடாமல் பத்திரமாக எடுத்துப் பிரித்து அடுக்க வேண்டும். கொலு முடிந்து பொம்மைகளை மறுபடி சுற்றி அடுத்த வருடம் வரை பாதுகாப்பாக வைக்க அவை தேவைப்படும். சராசரி ஐந்திலிருந்து பத்து வருடம் முந்தைய சற்றே மக்கிப்போன காகித உலகம் அது. அமிழ அமிழ அலுப்புத் தட்டாத அந்தப் பழைய பத்திரிகை வாசிக்கிற அனுபவத்துக்காகவே நவராத்திரியை எதிர்பார்ப்பது வழக்கமாயிருந்தது நன்றாக நினைவிருக்கிறது. நான் பிறந்த வருடத்து தினப் பத்திரிகை அது. ஐப்பானில் முதல்முதலாக டெலிவிஷன் அறிமுகமாகி, அதில் விளம்பரமும் ஒளிபரப்பான செய்தி. அதற்குப் பத்து வருடம் கழித்து வெளியான இன்னொரு பத்திரிகை. காந்தி பொம்மை சுற்றி வைத்தது. அமெரிக்கக் கறுப்பர் இனத்தின் குரலாக மராட்டின் லூதர் கிங் “எனக்கு ஒரு கனவு உண்டு’ என்று திரும்பத் திரும்ப முழங்கிய கவித்துவமான பிரசங்கம் அச்சடித்தது. போன வருடப் பத்திரிகையில் “சிவாஜி நடிக்கும் ஈஸ்ட்மென் கலர் சித்திரம் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் கர்ணன்’ படப்பிடிப்பு விவரம். கிருஷ்ணன் என்.டி.ராமாராவும் அர்ஜுனன் முத்துராமனும் ரதத்தில் நிற்கிற ஸ்டில். படம் ரசிகர்களால் பெருவாரியாக வரவேற்கப்படும் என்று பி.ஆர். பந்துலு கூறியதாகச் செய்தி. அவர் நம்பிக்கை பாவம் பொய்த்துப் போனது. ரீ-ரிலீஸ் ஆக பின்னால் எப்போது எங்கே வெளியிட்டாலும் ஹவுஸ்புல் ஆக ஓடிய “கர்ணன்’ முதலில் வெளியானபோது தோல்வியைத் தழுவியது மறக்க முடியாததுதான்.

இதுவும் நினைவிருக்கிறது. தினமணி சுடர் சினிமா பகுதியில் நல்ல படத்துக்கு இலக்கணமாகப் புகழ்ந்திருந்த திருமலை -மகாலிங்கத்தின் “ஆலயம்’ பட விமர்சனம். ஒவ்வொரு நவராத்திரிக்கும் படிக்கக் கிடைத்து மனப்பாடமானது அது. தசாவதார செட் சுற்றி வைத்திருந்த இந்த விமர்சனத்தை அப்போது வருடம் ஒரு முறை பார்க்கக் கிடைத்தாலும், “ஆலயம்’ படத்தை இதுவரை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

கொஞ்சம் சிறிய பொம்மைகளைச் சுற்றி வைத்த வாரப் பத்திரிகைப் பக்கங்கள் இன்னொரு சுவாரசியம். எப்போதோ, எந்தப் பத்திரிகையிலோ வெளியான ஏதோ சிறுகதை அல்லது தொடர்கதையின் துண்டு துணுக்கான அதெல்லாம் ஒன்றுவிடாமல் நினைவிருக்கிறது. “தில்லானா மோகனாம்பாள்’ தொடர்கதையில் ஒத்துக்கார தருமன் மூர்மார்க்கெட்டில் கறுப்புக் கண்ணாடி வாங்கிப் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பிப்பதற்குள் பக்கம் முடிந்திருக்கும். “அலுவலகத்திலிருந்து களைத்துத் திரும்பி வந்த சரளா, வீட்டுக்குள் முட்டமுட்டக் குடித்துவிட்டுப் படுத்திருந்த கணவனைப் பார்த்ததும் இனம் புரியாத’ என்று அரைகுறையாக முடிந்த சிறுகதையில் சரளாவுக்காக வருடாவருடம் அனுதாபப்பட நேர்ந்தது. வேறு ஏதோ மொழியிலிருந்து மொழிபெயர்ப்பாகி, பரபரப்பான தொடர்கதையாகப் படிக்கப்பட்ட “ரோஷன் எங்கே’ கதையில் பல்பீர் தில்லி சாந்தினி செüக்கில் நடந்துபோகும்போது கதாநாயகியைப் பார்த்துத் திகைத்துப் போய் பின் தொடர்வது மனதில் இன்னும் அப்படியே நிற்கிறது.

கலந்து கட்டியாக இப்படிப் படித்து ரசிப்பது பிற்காலத்தில் பின் நவீனத்துவ எழுத்தை ரசிக்கப் பயிற்சி கொடுத்தாலும், “பரீட்சை நேரத்துலே தூங்கு. இப்போ விடியவிடிய படி. உருப்பட்ட மாதிரிதான்.’ என்று பெரிசுகள் படுக்கைக்கு விரட்டுகிற அட்டூழியம் பொறுத்துக் கொள்ள வேண்டிய நவராத்திரி நேரக் கொடுமைகளில் ஒன்றாகும்.

நவராத்திரிக் கொலு பொம்மையை எடுத்துப் படியில் வைப்பதோடு முடிவதில்லை. கீழ்ப்படியை ஒட்டி நிறைய மணலைக் கொட்டி, பூங்கா உருவாக்க வேண்டியதும் என் வேலைதான். பூங்கா அட்டை பெஞ்சுகளில் உட்கார சின்னதாக பிளாஸ்டிக் கடைகடையாக ஏறி வாங்கி வந்தால், நாலு நாளில் உடைந்து போய்விடும். சைக்கிளில் போகிற தபால்காரர், நர்ஸ், குட்டி யானை, வெள்லைக்காரி, தவழும் குழந்தை இவர்களெல்லாம் அப்புறம் பூங்காவுக்கு இடம்பெயர்வார்கள். பூங்கா மணலில் தண்ணீர் தெளித்து தினசரி வெட்டினரி ஆஸ்பத்திரி பக்கமிருந்து புல் பறித்து வந்து நட்டு வைக்க வேண்டும். பூங்கா நடுவே பித்தளைத் தாம்பாளத்தை வைத்துச் சுற்றிச் சிமெண்டால் கட்டிய சுற்றுச் சுவரோடு லாஜிக்கே இல்லாமல் ஒரு குளம் அமைத்துத் தண்ணீர் நிரப்பும் வேலையும் கூடவே நினைவு வருகிறது. நளதமயந்தி செட்டிலிருந்து பிரித்த தமயந்திதான் எப்போதும் அந்தக் குளக்கரையில் நிற்பாள் என்பதும் மறக்கவில்லை. எதுதான் மறந்தது இப்போது புதிதாக நினைவில் வர? ஆமா, “ரோஷன் எங்கே’ துப்பறியும் தொடர்கதையில் பல்பீர் வில்லனா கதாநாயகனா?
———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

Sunday December 30 2007

நவராத்திரி முடிந்து விஜயதசமி காலையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்துக் கட்டாயத்தின் பேரில் படித்துக் கொண்டிருக்கும்போது ரெட்டைத் தெருவில் போகிற ஒவ்வொரு லாரியும் கவனத்தை ஈர்க்கும். ஊருக்குள் போவதால் மெதுவாகப் போகிற அவற்றில் ஒன்று மட்டும் ஊர்ந்தபடி வரும். அது தென்பட்ட நாலு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், தெருவில் இருக்கப்பட்ட ஏழிலிருந்து, பதினைந்து வயதுக்குட்பட்ட பையன்கள் கூட்டம் ரங்கன் வாத்தியார் வீட்டு வாசலில் கூடிவிடும்.

ரங்கன் வாத்தியாரைப் பள்ளிக்கூடத்தில் பார்த்ததைவிட, தீபாவளிக்காக வீட்டுத் திண்ணையை ஒட்டிப் பட்டாசுக்கடை வைத்து நாலு திசையிலும் சிப்பந்திகளை ஏவிக்கொண்டு மும்முரமாக வியாபாரம் செய்துவந்த கோலத்தில் தான் நினைவிருக்கிறது. தீபாவளிவரை தினசரி விளையாடக்கூடப் போவதில்லை. சாயந்திரம் தொடங்கி ராத்திரி ஒன்பது வரை வாத்தியாருடைய தீபாவளிப் பட்டாசுக் கடையின் கவுரவ உத்தியோகஸ்தர்கள் நாங்கள்தான். ஒரு பைசா ஊதியம் கூட எதிர்பார்க்காமல், பட்டாசுக் குவியலுக்குப் பக்கத்தில் நின்று, எண்ணிக் கொடுத்து, எடுத்துக் கொடுத்து, பொட்டலம் கட்டித் தருகிற வேலையில் இருக்கும் சந்தோஷத்துக்காக ரங்கவிலாஸ் பட்டாசுக்கடை வாலண்டியர் தேர்வுக்கு எக்கச்சக்கமான போட்டி. வீட்டில் முணுமுணுப்பு எழுந்தால் கண்டுக்கவே கூடாது.

ஒவ்வொரு வருடமும் கடை தொடங்குவதற்கு முன்னால் சில பிரத்தியேகச் சடங்குகள் நிறைவேற்றப்படும். வழக்கமான பிள்ளையார் படம், ஊதுவத்தி, பூ, பழுப்புச் சர்க்கரை நைவேத்தியத்தோடு ஏட்டையா ஆராதனை என்ற ஒரு நிகழ்ச்சியும் உண்டு. நாலு சிவப்பு வாளியில் உடையார் ஊருணிக் கரையிலிருந்து வாரி வந்த மணல், ஊருணித் தண்ணீர் இதெல்லாம் கடை வாசலில், திண்ணைக்கு இரண்டு பக்கத்திலும் போட்ட பெஞ்சுகளில் பிரதிஷ்டை செய்யப்படும். சுற்றி அவசரமாக ஒரு பந்தல் உயரும். வாத்தியார் வீட்டுக் கூடத்துத் தூணில் சுளகு, முறம், கோட் ஸ்டாண்ட் கோஷ்டிக்கு இடையே கூம்பு வடிவ தீயணைப்புச் சாதனம் ஒன்று மாட்டி இருக்கும். பாஷை புரியாத நாட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொண்ட அந்நியன் போல பரிதாபமாக நிற்கிற அது திண்ணைக்கு இஷ்ட மித்ர பந்துக்களான பட்டாசு, மணல் வகையறாக்களோடு இடம் பெயர்ந்து மூங்கில் கொட்டகைத் தூணைக் கம்பீரமாக அலங்கரிக்கும்.

இந்த ஏற்பாடெல்லாம் முடிந்த பிறகு, போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஏட்டையா சைக்கிளில் வந்திறங்குவார். எங்களைப் போல அவரும் அரை டிராயர்தான் போட்டிருப்பார். “”என்ன, பட்டாசுக் கடை போடறாப்பிலேயா சார்?” என்று விசாரித்தபடி பெஞ்சில் தண்ணீர் வாளிக்குப் பக்கமாக தொடுக்கினாற்போல் உட்கார்வார். முண்டாசா தொப்பியா என்று குழம்ப வைக்கும் தன் தலைக் கவசத்தைக் கழற்றி மடியில் வைப்பார். டிரவுசர் பாக்கெட்டில் இருந்து பொடிக்கறையோடு கைக்குட்டையை எடுத்து வழுக்கைத் தலை நடுவில் வியர்வையை அழுத்தத் துடைப்பார். பட்டாசுக் கடைதான் போடறோம். மூக்குப் பொடி விக்கறதுக்கா இப்படி வாளியில் மணல், ஊருணித் தண்ணி, தீயணைப்பு சாதனம் எல்லாம்?

மணலை முகர்ந்து பார்த்து, உள்ளங்கையில் எடுத்த தண்ணீர் உத்தேசமாக நாலடி முன்னால் தெளித்து, தீயணைப்பு சாதனம் மேல் கிறுக்கிய சர்டிபிக்கேட்டை சிரத்தையாகப் படித்தபடி அவர் காத்திருக்க, ரங்கன் வாத்தியார் ஒரு பழைய கவரை அவர் கையில் தருவார். அதைக் காக்கிச் சட்டைப் பையில் திணித்தபடி சைக்கிளில் ஏறுகிறதோடு ஏட்டையா ஆராதனை முடியும். இந்தக் கவர் தருகிற சடங்கை நாலுநாள் முன்னால் நவராத்திரி நேரத்தில் கொலுவுக்குக் கூப்பிட்டுப் பாட்டுப் பாடச் சொல்லி தெருப் பெண்களுக்கு சுண்டல், ரவிக்கைத் துணி தருகிற நேரத்திலேயே வாத்தியார் முடித்திருக்கலாம். ஏட்டையாவுக்குப் பாடத் தெரியுமா என்று தெரியவில்லை.

கொலுப்படி மாதிரியே ரங்கன் வாத்தியார் வீட்டுத் திண்ணையில் நாலைந்து மரப்படி வைத்து சாம்பிள் வெடிக்கட்டும் மத்தாப்பும் அங்கே நிறுத்தி வைக்கப்படும். மேல் வரிசையில் வெள்ளி நிறத்தில் மின்னும் கம்பி மத்தாப்பு. அடுத்து அங்கங்கே வெள்ளிப் பொறுக்கு தட்டிய ஸ்பெஷல் மத்தாப்பு. முதலாவதைக் கொளுத்தினால் குளுமையாக இருட்டுக்கு அழகைக் கொடுத்தபடி பூச்சிதறும். மற்றது பல வர்ணத்தில் ஆடம்பரமாக சினிமா வில்லி போல் சிரிக்கும். மத்தாப்பு அடைத்த அட்டை டப்பா மேலே ஒட்டிய படத்தில் சினிமா நடிகை சாயலில் ஒரு பெண் மத்தாப்பைக் கொளுத்திப் பிடித்துக் கொண்டிருப்பாள். போன வாரம் ஜெயராம் தியேட்டரில் பார்த்த “வல்லவன் ஒருவன்’ படத்தில், “பளிங்கினால் ஒரு மாளிகை’ என்று ஜெயசங்கரை மயக்க நடனமாடும் விஜயலலிதா போல் மத்தாப்புப் பெண் வெகு சிக்கனமாக உடுத்தியிருப்பாள்.

வரிவரியாகக் கோடு போட்டு நாலாக மடித்த மண்புழு போல் சாட்டை, அரை இஞ்ச் விட்டத்தில் ஆரம்பித்து தோசைக்கல் சைஸ் வரை வட்டவட்டமாகச் சுருண்ட தரைச் சக்கரம், எங்கே எப்படி வைத்துக் கொளுத்தினாலும் உய்ங்ங்ங்ங் என்று வீராப்பாகக் கிளம்பி மிகச் சரியாக ரேடியோ ரிப்பேர்காரர் வீட்டுத் திண்ணையில் போய் விழும் ஏரோப்ளேன் (ரேடியோக்காரர் அப்புறம் வால்வ் ரிப்பேரான ரேடியோ போல் அரைமணி நேரம் கொரகொரப்பார்), காலி பாட்டிலில் நிறுத்தி தீ வைத்தால் சில சமயம் ஆகாயத்துக்கு எழும்பி மற்றபடி தரையோடு ஊர்ந்து சிவன் கோயிலுக்குள் பிரதோஷ தீபாரதனை பார்க்க நுழையும் ராக்கெட், கொளுத்தினால் குப்பென்ற வாடையோடு கருப்பாக நீளும் பாம்பு மாத்திரை என்று மரப்படிகள் நிரம்பி இருக்கும்.

கீழ் இரண்டு படியிலும் அனைவருக்கும் பிரியமான பட்டாசுகள், ஒற்றைவெடிகளை மாலையாகக் கோர்த்த சரங்கள் கொண்ட பெரிய பாக்கெட்டுகளில் தில்லி செங்கோட்டை படம் தவறாமல் இடம் பெறும். காதைக் கிட்டத்தட்ட செவிடாக்கும் ஆட்டம் பாம் அட்டைப் பெட்டியில் தொங்கு மீசையோடு பட்டாளக்காரர்கள் போர்முனையில் இலக்கின்றி சுட்டுக் கொண்டிருப்பார்கள். கடைத் தூணில் பொம்மைத் துப்பாக்கிகள் சணலில் தொங்கும். அவற்றில் வைத்து வெடிக்க கேப் அம்பாரமாகப் பக்கத்தில் அடுக்கியிருக்கும். கைக்கு அடக்கமான குருவி வெடி ஐந்து ஐந்தாகச் சுற்றிய கண்ணாடிப் பேப்பர் மேல் இந்தி நடிகர் ஷம்மிகபூர் அல்லது ஒரு குரங்கு அல்லது இரண்டுமே அச்சடித்திருக்கும். குரங்கு கன கம்பீரமாக இருக்கும்.

வாடிக்கையாளர்களை வரவேற்பது, தேர்ந்த விற்பனையாளர்களாக கடைச் சரக்குகளின் மகத்துவத்தை விளக்குவது, பட்டாசு எடுத்துத் தருவது, குண்டுராஜூ போட்ட பில்லை திரும்ப சரிபார்ப்பது (நிச்சயம் நாலு தப்பாவது இருக்கும்), இப்படி ரங்கன் வாத்தியார் செய்ய வேண்டியதில் பாதியை நாங்களே கவனித்துக் கொள்ள, அவர் கடமையே கண்ணாகக் கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டு பெரிய தொகை பில்லை மட்டும் இன்னொரு தடவை சரிபார்ப்பார். ரங்கன் வாத்தியார் வீட்டம்மா அவ்வப்போது சீடை, முறுக்கு, நவராத்திரிக்கு வாங்கி மீந்த கடலைப் பொரி, நீர்க்கக் கரைத்த ஒண்டிப்புலி பிராண்ட் நன்னாரி சர்பத் என்று விநியோகித்து வியாபாரத்தை விருத்தி செய்யும் உதவியாளர்களை ஊக்குவிப்பார்.

“பிரபல ஹாலிவுட் அழகி மர்லின் மன்றோ லாஸ் ஏஞ்சல்ஸ் ஓட்டலில் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை’ செய்தி வெளியான பழைய தினசரியைக் கத்தரித்துச் செய்த காகிதப் பையில் பட்டாசுகளை வைத்து வாடிக்கையாளர்களுக்குத் தரும்போது இனம்புரியாத சந்தோஷம் ஏற்படும். அதே செய்திப் பக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் யாரோ நெல்சன் மண்டேலாவை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்த செய்தியும் பார்த்த நினைவிருக்கிறது. இந்த நாற்பத்தைந்து வருடத்தில் மர்லின் மன்றோ யாரோவாக மாறி, நெல்சன் மண்டேலா சிறைக்கு வெளியிலும் வெளிச்சத்துக்கு வந்து பிரபலமாவார் என்று அப்போது தெரியாது. நடக்கப் போவது தெரிந்தால் வாழ்க்கையில் என்ன உற்சாகம் பாக்கி இருக்கும்?

———————————————————————————————————————————————-

Sunday January 6 2008

ஞாபகம் வருதே…: நெ. 40, ரெட்டைத் தெரு

பள்ளிக்கூடம் விட்ட சாயந்திரங்களில் ரங்கவிலாஸ் பட்டாசுக் கடையோடு தீபாவளிக் காலம் ஆரம்பித்தாலும், அது சூடு பிடிக்கும்போது ஸ்கூல் என்ற சமாசாரம் சுத்தமாக மறக்கப்படும். தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும்போது, வாரப் பத்திரிகைகள் சவலைக் குழந்தைபோல் சோனியாக இருந்த நிலைமை திடீரென்று மாறி, பீமபுஷ்டி அல்வா சாப்பிட்ட கொழுகொழு சைஸþக்கு வளரும். அதில் சிலது அச்சு மை வாடையோடு செண்ட் வாடையும் கலந்து அசத்தலாகப் பூசி வரும். நல்லையா சைக்கிள் பின்னால் கட்டிய மரப்பெட்டியிலிருந்து அவை வீட்டுக்குள் வந்து விழும்போது பட்டாசு, பட்சண நெடியோடு, கனமான மரிக்கொழுந்து செண்ட் வாடையும் கும்மென்று தெரு முழுக்கச் சூழப் பண்டிகைச் சூழ்நிலை பரிபூரணமாகும்.

சில பத்திரிகைகள் வழுவழு காகிதத்தில் நானூறு பக்கத்துக்கு வெளியிடும் தீபாவளி மலர்களை வாங்குகிற குடும்பத்தில் அடுத்த ஜன்மத்திலாவது பிறக்க வேண்டும் என்று தீபாவளிக்கு முந்தைய நாள் சாயந்திரம் தோன்றும். மலர் கேட்டவர்களுக்குக் கையெழுத்து வாங்கிக்கொண்டு நல்லையா வக்கீல் வீடுகள் பலதிலும் மரியாதையோடு கையில் கொடுத்துவிட்டு வருகிற நேரம் அது. “” பதினைஞ்சு ரூபாய் கொடுத்து தீபாவளி மலர் வாங்க காசு கொட்டிக் கிடக்கலே, இந்த வருஷம் உனக்கு பேண்ட் தைச்சு எக்கச்சக்க செலவு” என்று வீட்டு பட்ஜெட்டில் பாதி எனக்கு உடுப்பு வாங்கிய வகையில் செலவானதாக நாசுக்காக வலியுறுத்தப்படும். லைப்ரரியில் அந்த தீபாவளி மலர்கள் புதுக்கருக்கு எல்லாம் அழிந்து, ஓரம் மடங்கி, அட்டையில் அப்பிய அழுக்கோடு என் கைக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட அடுத்த தீபாவளி வந்துவிடும். எல்லா மலரிலும் பம்ப்செட் மோட்டார் கம்பெனி, லுங்கி விளம்பரம், சவுந்தரா கைலாசம் கவிதை, ஆர்ட் பேப்பரில் ஆச்சாரியார்கள், சுத்தியலை மைசூர்ப்பாகால் உடைக்கிற ஜோக், பிரபல எழுத்தாளர்கள் அவசரத்தில் பிடித்த கொழுக்கட்டைக் கதைகள் என்று ஒரு வருட மலரை மற்ற வருடத்துப் புத்தகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட ஒன்றும் இருக்காது. இன்னும் அப்படித்தான்.

தீபாவளி மருந்து வாடை சுகமாக மூக்கில் ஏற ஆரம்பிக்கும் நொடியும் பத்திரிகை சென்ட் நெடியோடுதான் எப்போதும் சேர்ந்து வரும். திப்பிலி, சதகுப்பை, அதிமதுரம், வசம்பு போன்ற வினோதமான பொருள்களை தீபாவளி மருந்து கிளறும்போது சேர்க்க வாங்கிவர ஆவன்னா றூனா கடைக்கு ஓடவேண்டும். எண்ணெய்த் தூக்கோடு நிற்கிற கோர்ட் சிப்பந்திக்கு இருநூறு மில்லி காரல், கசப்பு இல்லாத நல்லெண்ணெயும், வாத்தியார் வீட்டம்மாவுக்குக் கடலைமாவும் வெல்லமும் வழங்கிக் கொண்டிருப்பார் ஆவன்னா றூனா… அல்லது, அடகுக்கடை பெரி.வயி. வகையறா வளவுக்கு அரைக்கிலோ முந்திரி, கால் கிலோ பாதாம், உலர்ந்த திராட்சை, ஊத்துக்குளி வெண்ணெய் என்று ராஜபோஜனத்துக்கான ஐட்டங்களாகப் பெரிய லிஸ்டை எடுத்து வைக்கக் கல்லாவில் ஆரோகணித்தபடி உரக்க ஆணையிட்டுக் கொண்டிருப்பார். அவர் என்னைக் கவனித்து திப்பிலி தேடக் குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்.

அதற்குள் காந்தி வீதியில் காதைப் பிளக்கும் இரைச்சலோடு வர்த்தக ஒலிபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும். எல்லா சவுண்ட் சர்வீஸ்காரர்களும் தீபாவளிக்கு முன்னால் கூட்டம் போட்டு ஒவ்வொருவருக்குமான ஒலிபெருக்கி நேரத்தைப் பங்கு பிரித்துக் கொள்வதால் ஒரு நேரத்தில் ஒரு கூச்சல் மட்டுமே கேட்டு இன்புறக் கிட்டும். வழக்கமான “தீபாவளிக்குப் புத்தம்புதிய ஜவுளிகள் குவிந்திருக்கும் தனலட்சுமி ஸ்டோர்’, “தரமான சுவையான இனிப்புகளுக்கு ஷண்முகம் ஸ்வீட் ஸ்டால்’, “நகைகளின் பேரில் குறைந்த வட்டியில் கடன் வாங்க ராம.பெரி. அழகு வட்டிக்கடை’, விளம்பரங்களோடு, “பசுமாடுகள் கன்று ஈன வெங்காயத்துரையை உடனே அணுகுங்கள்’ போன்ற ஸ்பெஷல் விளம்பரங்களும் இடம் பெறும். பத்து விளம்பரத்துக்கு ஒருதடவை சவுண்ட் சர்வீஸ்காரர் நகரப் பெருமக்களுக்குத் தன் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தபின், இசைத்தட்டு, “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்’ என்று கண்ணதாசன் எழுதியபடிக்கு டி.எம்.எஸ் சாபம் கொடுப்பார். “”இப்போது நேரம் சரியாக, சரியாக, வேலு, கடியாரத்தை எடுறா, சரியாக ஆறு மணி நுப்பது நிமிடம். வணக்கம் கோரி விடைபெறுவது உங்கள் ராஜா சவுண்ட் சர்வீஸ்”.

காதி, கதர்க்கடைகளில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் அதிகம் தட்டுப்படுவார்கள். தீபாவளித் துணி அங்கே வாங்காவிட்டால் தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் என்று சர்க்கார் உத்தரவு இருக்கலாமோ என சந்தேகத்தைக் கிளப்பியபோது, “துணி வாங்கி மாசாமாசம் சம்பளத்திலே கழிச்சுக்க ஜி.ஓ. வந்திருக்கும்’ என்றான் குண்டு ராஜூ. ஜி.ஓ. என்றால் என்ன என்று அவனுக்கும் தெரியாது. யாரோ சொன்னதாம்.

பஞ்சாயத்து போர்ட் ஆபீஸ் சங்கு தீபாவளி காலையில் நாலுமணிக்கு விசேஷமாக ஒலிக்கும். திருச்சி வானொலியில் நேயர்களுக்குத் தீபாவளி வாழ்த்து சொல்லி நாகசுரக் கச்சேரி தொடங்கும். எஸ்.எம்.ஆர் வக்கீல் வீட்டுப் பிள்ளைகள் போல் அவர்களும் தீபாவளி கொண்டாடாமல் வேலைக்கு வந்திருப்பார்கள் போலிருக்கிறது. எஸ்.எம்.ஆர். வக்கீல் வீட்டுக் கூடத்தில் சோவியத் புத்தகக் கடை மாதிரி லெனின், மார்க்ஸ் இன்னும் சில தாடிக்காரர்களின் படங்களைப் பார்த்ததுண்டு. அவர்கள் ஒட்டுமொத்தமாகச் சொன்னபடியோ எண்ணமோ, நாங்கள் எல்லாம் புதுத் துணியோடு பட்டாசு வெடித்துக் கொண்டிருக்க, தீபாவளி கொண்டாடாத அந்த வீட்டுப் பிள்ளைகள் இருப்பதிலேயே பழையதாக எடுத்து உடுத்திக் கொண்டு எங்களைத் துச்சமாகப் பார்த்தபடி ஒரு தெரு விடாமல் புரட்சிகரமாகச் சுற்றி வருவார்கள்.

எல்லா வீட்டிலும் படியேறி நடேசன் நாயன கோஷ்டி “உள்ளம் உருகுதையா’ பாதி பாட்டு வாசித்து தீபாவளி வெகுமதி வாங்கிப் போகும். பாட்டியம்மாவிடம் தீபாவளி மருந்தையும் கேட்டு வாங்குவார் தவில்கார கருப்பையா பிள்ளை. “இன்னிக்கு இந்த லேகியம் மட்டும்தான். அடடா என்னமா கமகமன்னு இருக்கு’ என்பார் நாயனக்காரர்.

வீட்டு வாசல் தோறும் குவிந்து கிடக்கும் பட்டாசுக் குப்பைக் காகிதத்தைப் பார்த்தால், போன வருடத்துத் தலைப்புச் செய்திகள் துண்டு துணுக்காகத் தெரியும். ஒரு தீபாவளிக்கு, சோவியத் ராக்கெட்டில் உலகிலேயே முதல் பெண்ணாக வாலண்டினா தெரஷ்கோவா வானில் வலம் வந்த செய்தி லட்சுமி வெடியிலிருந்து அரைகுறையாக வெளிப்பட்டது. பட்டாசுக்குத் தீவைத்துவிட்டு கொஞ்சம் பயத்தோடு பத்தடி முன்னால் ஓடுவதற்குள் வெடித்துச் சிதறினார் அந்த வீராங்கனை. “கீலர்- ப்ரப்யூமோ களியாட்’ என்ற பாதித் துணுக்கில் அடிபட்டது வாசனையான ஜப்பான்காரனான பெர்ப்யூமோ என்றான் குண்டுராஜூ. அவன் சொன்னால் சரிதான்.

தீபாவளிக் காலை நேரங்களை நினைக்கத் தெரிந்த மனமே, உனக்குத் தீபாவளிப் பகலை மறக்கத் தெரியாதா? ஊரே ஓய்ந்து போய், வர்த்தக ஒலிபப்பு, ரங்கன் வாத்தியார் வெடிக்கடை, இரைச்சல், வாடை எல்லாம் காணாமல் போய் சோர்வாக ஊறும் அந்தப் பகல். அது ராத்திரியில் முடியும்போது வானொலியில் வழக்கம்போல் “ஆகாசவாணி, செய்திகள்’ என்று பிரதமர் சாஸ்திரி அலகாபாதில் நிருபர்களிடம் உணவுப்பொருள் தட்டுப்பாட்டை நீக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிப் பேசிய விவரம் ஜலதோஷம் பிடித்த சர்க்கார் குரலில் வாசிக்கப்படும். தொடர்ந்து தீபாவளி விசேஷ இசைச் சித்திரமாக நிலையக் கவிஞர் எழுதி, நிலைய சீனியர் வித்துவான் இசையமைத்து, நிலைய வாத்திய கோஷ்டியின் பின்னணி இசையோடு மற்ற வித்துவான்கள் கோஷ்டி கானமாக இசைக்க “”தீபாவளி வந்ததே, தீபத் திருநாள் வந்ததே” போன்ற பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி. தீபாவளியோ, பொங்கலோ, இருபத்துநாலு மணி நேரமும் சினிமா நட்சத்திரங்களையே சுற்றிச் சுற்றி வரும் இந்தக்கால டெலிவிஷன் நிகழ்ச்சிகளைவிட அவை சுவாரசியமானவை.

———————————————————————————————————————————————-

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

1965எல்லா வருடத்தையும் போல பொங்கல், கரும்பு, வார்னிஷ் வாடை அடிக்கும் பொங்கல் வாழ்த்து, நாலு நாள் விடுமுறை என்று ஜனவரி நகர்ந்தது. மாசக் கடைசியில் குடியரசு தினம் வரும். ஜனாதிபதி ஆகாசவாணியில் சொற்பொழிவு, பள்ளிக்கூடத்தில் கொடியேற்றம், எல்லா இந்தியரும் என் சகோதர சகோதரிகள் என்று பிரதிக்ஞை (அப்பாவை அண்ணா என்று கூப்பிடும் வீடுகளில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம்), இனிப்பு வழங்குதல். பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால் அடுத்த இரண்டு மாதமும் பரபரப்பாக இருக்கப் போகிறது என்று பெரியவர்களுக்குத் தெரியுமோ என்னமோ எங்களுக்கு யாரும் சொல்லவே இல்லை.

ஜனவரி இருபத்து நாலாந்தேதி ஞாயிற்றுக்கிழமை தினசரியில் “சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவு இல்லை. சர்ச்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல், “சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது. பெரிசுகள் தான். இந்தி நாடு முழுக்க ஆட்சி மொழி ஆகப் போகிறதாம். தமிழ்நாட்டில் அப்போது பக்தவத்சலம் தான் முதலமைச்சர். சரியாகச் சொன்னால், மதராஸ் மாகாண முதல் மந்திரி அவர். “போ ரைட்’ என்று அவரும் இந்திக்குக் கை காட்டிவிட்டாராம். “”சும்மாக் கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கறதுலே இவங்களை மிஞ்ச ஆளே இல்லை” என்றான் லைபிரரிக்கு வெளியே நடந்து சைக்கிளில் ஏறிய எஸ்.எம்.ஆர் வக்கீல் மகன் சந்துரு. யாருக்கு சங்கு? ஏன்?

செவ்வாய்க்கிழமை குடியரசு தினம். பள்ளிக்கூடத்தில் கொடியேற்றத்தை ரத்து செய்துவிட்டதாக குண்டுராஜூ காலையிலேயே ஒருத்தர் பாக்கி விடாமல் தகவல் அறிவித்து விட்டான். தமிழ்நாடெங்கும் கலவரமாம். நிறையப் பேர் கைது, ஊர் முழுக்க பதற்றமான சூழ்நிலை. தெருமுனையில் ஏதோ கூட்டம். இந்தி

ஆட்சிமொழி ஆனதை ஆதரித்துத் தலையங்கம் எழுதிய பத்திரிகைகளையும், இந்தி பாடப் புத்தகங்களையும் குவித்து வைத்துக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். சீதரன் சொன்னான், “மணியன் வாத்தியாரை போலீஸ்காரங்க அரஸ்ட் பண்ணிட்டாங்கடா’. அவரையும் காகிதம் கொளுத்தியதற்காகத்தான் கைது செய்தார்களாம். அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்துவிட்டாராம். போனால் போகிறது, இன்னொரு காப்பி இல்லாமலா போய்விடும்? “மடையா, இனிமே நாம எல்லோரும் இந்தியிலே தான் பேசி, எழுதி, படிச்சு, இந்திக்காரனுக்குக் கைகட்டி நிக்கணும்னு சட்டம் போட்டிருக்காராம் சாஸ்திரி.’ எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வெüவால் தொங்குகிறதுபோல் வரிசையாகத் தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு மிச்ச வாழ்க்கையைத் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக்கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி.

“ரோஜா மலரே ராஜகுமாரி’ பாட்டு துணைக்கு வராமலேயே தட்சிணா ஆச்சாரியார் சவுண்ட் சர்வீஸ் மூலம் “144 தடையுத்தரவு’ போடப்பட்ட விஷயம் மூலைமுடுக்கு விடாமல் ஒலிபரப்பானது. சர்க்கார் போட்ட தடையுத்தரவு தவிர வீட்டிலும் அதைவிடக் கடுமையான தடைச்சட்டம் அமலாக்கப்பட்டது. சும்மா வெளியே எங்கேயும் போய்ச் சுத்திட்டுக் கிடக்காமல் பாடத்தை எடுத்துப் படிக்கச் சொல்லி உத்தரவு. பத்து நிமிடம் புத்தகத்தைத் திறந்து வைத்து சுமேரியர்கள் டேப்லெட்டில் அரசியல் சட்டத்தை எழுதி வைத்திருந்த அதிசயத்தை இன்னொரு தடவை கர்மமே என்று படித்தேன். டேப்லெட் என்றால் மாத்திரை இல்லையோ. சட்டத்தை எழுதி வைக்க காகிதம் கிடைக்கவில்லையா சுமேரியர்களுக்கு? அங்கேயும் இந்தி மாதிரி எதையாவது திணித்து, மணியன் வாத்தியாரோ அவர் மாதிரி ஊருக்கு ஊர் நிறையப் பேரோ படையாகத் திரண்டு வந்து எரிக்க முடியாமல் இப்படி மாற்று ஏற்பாடு செய்தார்களோ? டேப்லெட் என்றால் களிமண் பலகையும்தான் என்றார் அப்பா. அவருக்கும் இந்தியை வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்தது பிடிக்கவில்லை. நான் திண்ணைச் சுவரில் பென்சிலால் “இந்தி ஒழிக’ எழுதியபோது அவரைத் தவிர மற்றவர்கள் சத்தம் போட்டார்கள். இந்திக்கு ஆதரவாக இல்லை. புதிதாக சுண்ணாம்பு அடித்த சுவராம். உடனடியாக அழித்து இந்தியை வாழவைத்தார்கள்.

இந்தி அரக்கி படம் வரைந்து வைக்கோல் பொம்மையில் ஒட்டிப் பாடை கட்டி எரிக்க ஒரு கூட்டம் கிளம்பியது. கிருஷ்ணன் வாத்தியாரை வரையச் சொல்லலாம் என்று யாரோ ஆலோசனை சொன்னார்கள். கனகவல்லி டீச்சர் ஜாடையில் இந்தி இருப்பதைப் பார்க்க யாருக்கும் தைரியம் இல்லாததால், படம் இல்லாமலே அரக்கி பள்ளிக்கூட வாசலுக்குப் பாடையில் பவனி வந்தாள். எரிக்க முடியாமல் போலீஸ் எல்லோரையும் விரட்டிவிட்டது. பள்ளிக்கூடமும் பத்து நாள் லீவாகப் பூட்டப்பட்டது.

சிதம்பரத்தில் கல்லூரி மாணவர்களைத் துப்பாக்கி வைத்து சுட்டத்தில், ராஜேந்திரன் இறந்த தகவல் வந்தபோது ஊரே துக்கத்தில் முழுகியது. ஒவ்வொரு வீட்டிலும் சாவு ஏற்பட்ட வருத்தம் கனமாகக் கவிய, பேப்பரில் தினசரி செய்தி -துப்பாக்கிச் சூட்டில் சாவு, தடையை மீறி ஊர்வலம் போனவர்கள் கைது, பள்ளிகள் அடைப்பு நீடிப்பு.

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு கூட்டம் புகுந்து இந்தியில் பெயர் எழுதிய பலகைகளில் தார் பூசியது. “ராமேஸ்வரத்துக்கு வர்ற வடக்கத்திய பிரயாணிகள் கஷ்டப்பட மாட்டாங்களா?” என்று ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் வருத்தப்பட்டார். “காசிக்குப் போற நம்ம ஆளுங்க படற கஷ்டத்தை விடவா?” என்றார் இன்னொரு வயசாளி.

பிப்ரவரி பிறந்தும் தமிழ்நாடு முழுக்க காவு வாங்குவதில் இந்தி மும்முரமாக இருந்தது. சி.சுப்ரமணியம் மந்திரிசபையிலிருந்து ராஜினாமா என்ற செய்தியை ஆகாசவாணியில் கேட்டு என்ன என்று புரியாமலேயே கைதட்டினோம். பெங்களூரில் காரியக் கமிட்டி கூட்டம் என்று பத்திரிகைச் செய்தி. சாதாரணமாக இந்த மாதிரி தகவல் எல்லாம் திண்டு தலையணையில் சாய்ந்து காந்தி குல்லாய் வைத்தவர்கள் விவாதிக்கிற படத்தோடு வரும். இப்போது வெறும் செய்தி மட்டும்தான். இந்தி திணிப்பை வற்புறுத்த வேண்டாம் என்று நிஜலிங்கப்பா நிஜமாகவே மன்றாட, உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதாகச் செய்தி சொன்னது. அவருக்குச் சாய வாகாகக் காரியக் கமிட்டியில் திண்டு கொடுத்திருக்க மாட்டார்கள்.

இரண்டு மாதம் சென்று பள்ளிக்கூடம் மறுபடி திறந்தபோது, சர்க்கார் ஏதோ உத்தரவாதம் கொடுத்ததால் இந்தி அதிகாரமாக உள்ளே நுழையவில்லை. ஆனாலும், இந்தியை மூன்றாம் மொழியாகப் படிக்க வேண்டிப் போனது. பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சிக் கட்டளை கூட “அட்டென்ஷன்’. “ஸ்டாண்ட்-அட்-ஈஸ்’ போய், “சாவ்தான்’, “வீஸ்ராம்’ ஆக மாறியது. “சாவறான்; அழுகிப் போய் வாடை வீசுறான்’ என்று நாங்கள் ஒவ்வொரு தலைவர் பெயரையும் சொல்லிச் சபித்தபடி சாவ்தான் -வீஸ்ராமுக்கு மெல்ல நடைபோட, இரண்டு வருடத்தில் ஒரு ஆட்சியே மாறிப்போனது.

இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், “ஹிந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், “சரிதான் உட்காருடா’ என்று தலையில் தட்ட மனதில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்குக் கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்.
Sunday January 27 2008

———————————————————————————————————————————————

ஞாபகம் வருதே.: நெ.40, ரெட்டைத் தெரு

“மாடர்ன் ஃபேன்சி ஸ்டோர்’ வாசலில் தொடங்கியது அந்த க்யூ. அது வளைந்து நெளிந்து குடிதண்ணீர் ஊருணிக்கரை வரை நீண்டிருந்தது. அடகுக்கடை ராம.பெரி.அழகு, பஜ்ஜி ராயர், ஸ்தானிஸ்லாஸ் வாத்தியார், மாயழகு, மளிகைக் கடை அசன் ராவுத்தர் என்ற கலவையான இந்த வரிசையின் கோடியில் நானும் நிற்கிறேன். மத்தியானம் கடையை எடுத்து வைத்துவிட்டுப் பக்கத்தில் மடத்துத் தெருவில் வீட்டுக்குப் போயிருக்கிறார் மாடர்ன் ஸ்டோர்காரர். அவர் சாப்பிட்டு, குட்டித் தூக்கம் போட்டு, சாவகாசமாக வந்து திரும்பவும் கடை திறக்க வேண்டும். காத்திருக்கிறோம்.

ரேஷன் கடை தவிர இதுவரை வேறு எந்தக் கடை வாசலிலும் இப்படிக் கியூவில் காத்திருந்தது இல்லை. அதுவும் மாடர்ன் ஸ்டோரில். அதிகபட்சம் ஐந்து வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் நின்றால் அங்கே மும்முரமான விற்பனை என்று அர்த்தம். மந்தித் தோப்பு தைலம், காம்போசிஷன் நோட்புக், மர ஸ்கேல், நஞ்சங்கூடு பல்பொடி, வாய்ப்பாடு புத்தகம் என்று கடைக்கு உள்ளே எங்கோ இருட்டுக் குகைக்கு நடந்துபோய் ஒவ்வொன்றாக எடுத்துவந்து கடை சிப்பந்தி கொடுக்க, அடுத்த கஸ்டமராக “”இன்னிக்கு பேப்பர் போடலை” என்று எம்.ஆர்.ஆர்.வக்கீல் புகார் மனுவோடு நடுவில் நுழைவார். பெரும்பாலான ஆங்கில, தமிழ் தினசரிகள் மற்றும் வாராந்தர “குடும்பப் பத்திரிகை’களுக்கு மாடர்ன் ஸ்டோர்தான் வினியோகஸ்தர். நல்லையா மரப்பெட்டியில் வைத்து எடுத்துவந்து ஊர் முழுக்க வீடுவீடாக வீசிவிட்டுப் போகும் இவை அபூர்வமாக இடம் மாறி விழுந்துவிடுவதால் ஏற்படும் பிரச்சினை இது. லாட்டரி சீட்டு விற்க ஏஜென்சி கிடைத்ததும் இந்த வியாபாரம், விவகாரம் எல்லாம் தாற்காலிகமாகப் பின்னால் தள்ளப்பட்டு, கடைக்கே புதுக்களை வந்துவிட்டது.

“”வாசலை மறைக்காம நில்லுங்க. காசு நோட்டா ஒத்த ரூபா எடுத்து வச்சுக்குங்க. ஒருத்தருக்கு ஒரு சீட்டுத்தான் தரச்சொல்லி கவர்மென்ட் உத்தரவு”. ஷட்டரை ஏற்றிக் கொண்டே கடை சிப்பந்தி அறிவிக்க, முதலாளி கம்பீரமாக எல்லோரையும் பார்த்தபடி கடைக்குள் நுழைந்தார். முதல் லாட்டரிச் சீட்டு விற்பனை தொடங்கியது.

“செலவு ஒரு ரூபாய், வரவோ லட்ச ரூபாய்’. புது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு முழுக்க இந்தப் பரபரப்புதான். “”லட்ச ரூபாய் எப்படி இருக்கும்?” அசன் ராவுத்தர் வரிசையில் பின்னால் நின்ற அடகுக்கடை ராம.பெரி.அழகுவைக் கேட்டார். அவரும் பார்த்ததில்லையாம். “”நியூஸ் பேப்பரைப் பாதியாக் கிழிச்ச சைசிலே ஒத்த நோட்டா அடிச்சிருப்பாங்களோ” என்று பஜ்ஜி ராயர் சந்தேகத்தை வெளியிட்டார். “”சாமிகளே, உங்களுக்கு லாட்டரி விழுந்து அந்த நோட்டுக் கெடச்சா, ஆத்திர அவசரத்துக்கு அதையெடுத்து மொளகா பஜ்ஜி கட்டிடாதீங்க” என்றான் மாயழகு. வரிசைக் கோடிவரை இந்தக் கிண்டல் ஒலிபரப்பாகி, அலையலையாகச் சிரிப்பு எழுந்தபோது, வரிசையை உடைத்துக் கொண்டு கறிகாய்க்கடை ஜோதி நடந்தாள்.

“”பின்னாலே போம்மா” என்று அவளை வரிசைக் கடைசிக்கு அனுப்பப் பார்த்த சிப்பந்தியைத் தடுத்தாட்கொண்டு, “”முதல் சீட்டை ஜோதி வாங்கட்டும். சுபிட்சமாத் தொடங்கலாம்” என்றார் கடை முதலாளி. யாருக்குச் சுபிட்சம் என்று சொல்லவில்லை.

வரிசை மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. லாட்டரி சீட்டு கிடைத்தவர்கள் அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டு, ஜாக்கிரதையாக பையிலோ பர்ஸிலோ வைத்தபடி முகமெல்லாம் மகிழ்ச்சி தெரியக் கடை வாசல் படியிறங்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பசியும் தாகமும் உச்சத்தில் இருந்தது. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் காப்பியோ நொறுக்குத் தீனியோ உள்ளே போகாமல், நியூஸ்பேப்பர் கிடைக்காத எம்.ஆர்.ஆர். வக்கீல் போல் இரைந்தது வயிறு. சட்டைப் பையில் பொரிகடலை இருந்தாலாவது அசை போடலாம். அவசரமாகக் கிளம்பியாகிவிட்டது.

சாயந்திரம் வீட்டுக்கு வந்தபோது அங்கே மும்முரமான பாட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. லாட்டரிச்சீட்டு ஏன் வாங்க வேண்டும் என்று ஆணித்தரமான வாதங்களோடு பாட்டியம்மா விளக்கிக் கொண்டிருந்தாள். தாத்தா உயிரோடு இருந்தபோது யாரோ மாதாமாதம் பெங்களூரிலிருந்து வந்து குதிரைப் பந்தயத்தில் கட்ட அவரிடம் பணம் வாங்கிப் போவார்களாம். அடுத்தமாதம் அவர் வரும் போது காயா பழமா தெரியும். தான் சந்தித்தே இருக்காத எத்தனையோ குதிரைகளை நம்பித் தாத்தா கட்டிய பணத்தை அவற்றில் சிலவாவது ஐம்பது, நூறு ரூபாயாகத் திருப்பிக் கொடுக்க தாத்தாவின் பந்தய யோகமே காரணமாம். அவருடைய யோகம் முழுக்க எனக்கு வந்திருப்பதால் நான் போய் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்கி லட்சாதிபதியாக பாட்டியம்மா ஆசைப்பட்டாள். அம்மா, அத்தை இரண்டு பேரும் லாட்டரிக்கு எதிர்க்கட்சியில் உறுதியாக நிற்க, எப்போதுமே ஆளுங்கட்சியான பாட்டியின் யோசனை கடைசியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. “”ஒரே ஒரு தடவை வாங்கலாம்” என்றார் மாமா அசிரத்தையாக. ஒற்றை ரூபாயோடு காந்திவீதிக்கு நான் ஓடினேன்.

திருப்பதி தரிசன க்யூ மாதிரி மாடர்ன் ஸ்டோர் படிவாசலை நெருங்கிக் கொண்டிருந்தோம். பஜ்ஜி ராயர் படி ஏறும்போது தடுமாறி விழப் போக அசன்ராவுத்தர் தாங்கிப் பிடித்தார்.

“விழுந்தால் வீட்டுக்கு; விழாவிட்டால் நாட்டுக்கு’ என்று எங்கிருந்தோ அறிஞர் அண்ணா குரல். பின்னால் நின்ற மிமிக்ரி கணேசன் வாயைக் கைக்குட்டையால் மறைத்தபடி பேசியது அது. ராயரின் ரெகுலர் கஸ்டமர் அவன்.

நான் கொடுத்த ஒற்றை ரூபாய் நோட்டை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்துப் பார்த்து நடுவில் ஓட்டை இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, கடைக்காரர் லாட்டரி சீட்டைக் கிழித்துக் கொடுத்தார். நம்பரை மனதில் கூட்டிப் பார்த்தபடி வெளியே வந்தேன். ஒரு தடவை ஒற்றைப் படையாகவும் அடுத்தமுறை ரெட்டைப் படையாகவும் வந்தது. “”ஒத்தப்படைன்னா குறைஞ்சது நூறு ரூபாயாவது ப்ரைஸ் கிடைக்கும். ஏழு வந்தா பத்தாயிரம்” என்று குண்டுராஜூ நம்பகமானத் தகவலாகத் தெரிவித்திருந்ததால் வீட்டுக்கு நடந்தபடி இதைச் செய்தேன். வயிற்றில் பசி இல்லாமல் சாவதானமாக மறுபடி கூட்டி நான் லட்சாதிபதியா, நூறாவதுபதியா என்று பார்க்க வேண்டும்.

லாட்டரி முடிவு வெளியானதற்கு அடுத்த நாள் விடிகாலையில் நல்லையா வரவுக்காகத் தெருவே கையில் லாட்டரிச் சீட்டுக்களோடு காத்திருந்தது. எங்கள் வீட்டுச் சீட்டு இரும்பு அலமாரியில் ரெட்டைத் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டிப் பத்திரமாக வைக்கப்பட்டாலும், அதன் நம்பர் எனக்கு மனப்பாடமாகியிருந்தது. தெருமுனையிலேயே காத்திருந்து நல்லையாவிடமிருந்து கெஞ்சிக் கூத்தாடி பேப்பரை வாங்கி கங்காராஜ் ஸ்டோர் வாசலில் பரத்தினேன். லட்ச ரூபாய் பரிசு பெற்ற யாரோ பற்றிய விவரம் முதல் பக்கத்தில். நானில்லை. தினசரியைப் புரட்டி இரண்டு பக்கத்துக்கு வந்திருந்த பரிசு விவரத்தைக் கவனமாகப் படித்தேன். நூறு, ஐம்பது கூடப் பரிசு எங்கள் வீட்டுக்கு விழாமல், என் ஒற்றை ரூபாய் நாட்டுக்குப் போய்விட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா வீட்டு வாசலிலும் தீபாவளிப் பட்டாசு வெடித்துப் போட்ட மாதிரி காகிதக் குப்பை. பரிசு கிடைக்காத லாட்டரிச் சீட்டு அதெல்லாம்.

“”எதுக்கும் எல்லாத்தையும் பொறுக்கி எடுத்து வச்சு சாவகாசமாப் பார்க்கலாம்டா. சரியாக் கவனிச்சிருக்க மாட்டாங்க” என்ற குண்டுராஜூவிடம் ஒன்றும் பேசாமல் எங்கள் வீட்டு லாட்டரிச் சீட்டைக் கொடுத்தேன். பழைய தெருவில் ஆறு புஷ்பம் வீட்டில் வாங்கிய சீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்த செய்தி அதற்குள் ஊர் முழுக்கப் பரவியது. லட்சுமியைப் பார்க்க வேண்டும் என்று ஏனோ மனதில் சின்ன ஆசை.

“”லாட்டரி சம்மானமும் வேறொண்ணும் வேணாம். உள்ளது மதி” என்றாள் பாட்டி அடுத்த குலுக்குக்குச் சீட்டு விற்றபோது. ஆனாலும் மாடர்ன் ஸ்டோர் முன்னால் மலைப்பாம்பு போல நீள வளைந்து நின்ற க்யூவில் மாமாவும் இருந்தார்.

Sunday February 3 2008
———————————————————————————————————————————————

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

ரெட்டைத் தெருவாசியாக இருபது வருடத்துக்கு மேலே இருந்தும், தெருக்காரர்கள் பலரின் கண்ணில் படாமல் போயிருக்கக் கூடிய ஒருத்தர் மாத்திரம் உண்டு. தெருக்கோடி உமர்தீன் ரெடிமேட் ஹவுஸýக்கும், நல்லப்பா பெட்டிக் கடைக்கும் நடுவே கீகடமாகக் குறுக்குவெட்டில் நீளும் இத்தனூண்டு வீட்டுக்காரர் அவர். ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர். அவர் வீட்டை அடையாளம் காட்டக்கூட அவரை யாரும் உபயோகித்ததில்லை. “எருமைக்கார வீடு’. இந்தச் சிறப்பு அடையாளத்தை நியாயப்படுத்தும் விதமாக, தெருவிலேயே எருமை வளர்த்த ஒரே வீடு அவர் வீடுதான்.

வயதான போஸ்ட் மாஸ்டர், அவரை விட வயதான ஒரு அக்கம்மா (அதாவது அக்கா-அம்மா) அப்புறம் சுமார் ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க அவருடைய செல்லி. செல்லி என்றால் தெலுங்கில் தங்கை என்று அர்த்தம் என்று யாரோ சொன்னார்கள். அது சரியாக இருக்கலாம். விடிந்ததும் யாரையாவது “ஏண்டா எருமை’, “ஏண்டி எருமைச்சி’ என்று உச்சக்குரலில் கூப்பிட்டபடி தகரக் குடத்தோடு படியிறங்கிப் போகும் அந்தத் தாட்டியான அம்மாவைச் செல்லமாக யாரும் செல்லி என்று கூப்பிட்டிருக்க முடியாது. சொந்தத் தங்கை என்றாலும் ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் கூடத்தான்.

செல்லியம்மா, வீட்டில் வளர்ப்பு மிருகங்களான எருமைகளைத் தவிர மற்ற இனங்களை எருமை என்று சிறப்புப்படுத்தும்போது, அக்கம்மாவுக்கு அவர்கள் எல்லாரும் “உலக்கை’களாக மட்டும் தெரிவார்கள். “ஒலக்க்க்கை’ என்று ஏகப்பட்ட அழுத்தத்தோடு புடவைத் தலைப்பை இழுத்துச் செருகிக் கொண்டு தகரக் குடத்தை ஓரமாக வைத்துவிட்டு அவர் தெருவில் இறங்கினால், எதிர்ப்பட்ட ஆள் சட்னிதான். ஆக இந்த எருமைகளுக்கும் உலக்கைகளுக்கும் நடுவே ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் காணாமல் போய், வீட்டுப் படியிறங்காமல் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் உள்ளேயே அடைகாப்பதால், அவர் ஒல்லியா குண்டா, கறுப்பா சிவப்பா, குட்டையா நெட்டையா என்று தெரியாதவர்கள் தெருவிலும் ஊரிலும் அனேகம்.

ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர். இதை, ரி.போ.மா என்று சுருக்கிக் கொள்ளலாம். இந்த ரி.போ.மா பற்றித் தொடர்வதற்குள் தகரக் குடங்கள் பற்றி ரெண்டு வரியாவது சொல்லியாக வேணும். அக்கம்மாவும், செல்லியம்மாவும் தகரக் குடத்தோடு தெருவில் மற்ற வீடுகளின் கொல்லைக் கதவைத் தட்டுவது கழுநீருக்காக, அரிசி களைந்து, வடித்து ஊற்றிய நீரை எல்லா வீட்டிலும் முன் ஜாக்கிரதையாக, ஒரு பழம்பானையில் சேமித்து வைத்திருப்பார்கள். இப்படிப் பல வீட்டுக் கழுநீரைக் தகரக் குடத்தில் கலந்து எடுத்துப் போய்க் கொடுக்கிற கழுநீர் காக்டெய்ல், ரி.போ.மா வீட்டுப் பசு, எருமைகளுக்கு இஷ்டமான காலை பானம் என்று தெருவில் எல்லோருக்கும் தெரியும். வாங்கிய கழுநீருக்குப் பண்டமாற்றாக கொஞ்சம் ஊர் வம்பும், சாண வரட்டி இரண்டும் ரி.போ.மா சகோதரிகளால் வழங்கப்படுவது வாடிக்கை. குளிக்க வென்னீர் கொதிக்க வைக்கும் “வேம்பா’ என்ற கொஞ்சம் பெரிய சைஸ் டீக்கடை பாய்லர் சமாச்சாரத்துக்கு முக்கிய எரிபொருள் இந்த வரட்டிகள். ரி.போ.மா வீட்டு மாடுகளும் எங்கள் வீட்டுக் கழுநீரும், அந்தத் தகரக் குடங்களும் இல்லாமல் இருந்தால், நான் வருடக்கணக்காகக் குளிக்க முடியாது போயிருக்கும்.

இது இப்படியிருக்க, விடிந்ததும் அஞ்சால் அலுப்பு மருந்து வாங்க ஒரு நாள் என்னைத் துரத்திய இடம் நல்லப்பா பெட்டிக்கடை. வீட்டில் யாருக்கோ சள்ளைக் கடுப்பு. அது என்ன என்று இன்றுவரை எனக்குத் தெரியாத சமாசாரம். விழுந்து படுத்துப் போர்வையைப் போர்த்திக்கொண்டு காலை பத்து மணி வரை சும்மா புரண்டு கொண்டிருக்க வைக்கும் ஏதோ நோக்கோடு. இந்த அலுப்பு மருந்து விழுங்கினால் மதியத்துக்குள் நோய் தீர்ந்து வெங்காய சாம்பாரை ஒருபிடி பிடிக்க வலுக்கொடுக்கும். பள்ளிக்கூடம் போக வெறுப்பாக வரும் சில நாள்களில் நானும் இந்தச் சள்ளைக்கட்டு அஸ்திரத்தைப் பிரயோகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் தீனமான கோரிக்கைகள் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டு ஸ்கூலுக்குத் துரத்தப்படுவது வாடிக்கை.

அலுப்பு மருந்தோடு திரும்ப நடக்குபோது ரி.போ.மா வீட்டு வாசலில் கொரகொர என்று ஆகாசவாணியில் பஞ்சாபகேசன் அகிலபாரதச் செய்தி அறிக்கை வாசிக்கிறது கேட்டது. தர்மாம்பாள், சரோஜ் நாராயணசாமி என்று யார் டெல்லியிலிருந்து “பிரதமர் சாஸ்திரி நான்கு நாள் நல்லெண்ண விஜயமாக மாலத்தீவு போய்ச் சேர்ந்தார்’ ரக நாடு தழுவிய செய்திகளை வாசித்தாலும் எல்லார் குரலும் ஜலதோஷம் பிடித்துத்தான் கேட்கும். தில்லி ஆகாசவாணி ஸ்பெஷல் விஷயம் இது.

ரி.போ.மா பஞ்சாபகேசனுக்கு ஒத்தாசையாக ரேடியோ பக்கம் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அந்தப் பழைய வால்வ் ரேடியோவைத் தரையில் பள்ளம் தோண்டி துருப்பிடித்த ஒரு கம்பியால் இணைத்திருந்த இடத்தில் ஒரு பீங்கான் குவளை பொருத்தியிருந்தது. ஒரு டம்ளரில் இருந்து குவளைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரவ பதார்த்தமாக எதையோ புகட்டிக் கொண்டிருந்தார் ரி.போ.மா.

“”ஆகாசவாணிக்குக் காப்பி தரீங்களா தாத்தா?” என்று ஆவலோடு விசாரித்தேன். எருமை, உலக்கை என்ற வீட்டு பிரயோகங்கள் இல்லாமல், ரி.போ.மா “தண்ணிடா’ என்றார். “”அப்பப்போ விட்டுக்கிட்டு இருந்தா, எர்த் சரியா பிடிச்சு, கொரகொக்காம ரேடியோ கேக்கலாம்.” அவர் விளக்கம் பாதி புரிந்தாலும் பஞ்சாபகேசனின் ஜலதோஷம் இந்த ஊருணித் தண்ணி வைத்தியத்தில் இன்னும் கடுமையானது.

“”என்னய்யா போஸ்ட் மாஸ்டர் வேலை. வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஒருத்தன் கவுண்டர்லே எட்டிப் பார்த்துக் கட்டியாச்சான்னு அச்சானியமாக் கேட்பான். வெளியே போற தபாலை எல்லாம் ரயிலுக்கு எடுத்துப் போகச் சாக்குப் பையிலே கட்டறதை எப்பச் செஞ்சா இவனுக்கு என்ன? இவனுக்குக் கட்டியாச்சு, கட்டலேன்னு பதில் சொல்லி முடிக்கும்போது இன்னொருத்தன் எடுத்தாச்சான்னு விசாரிப்பான். கட்டறதுக்கும் எடுக்கறதுக்கும் நித்தியபடி சாவு விழுற இடமா என்ன?” ரி.போ.மா ஒரு தடவை அப்பாவிடம் தான் ரிடையர் ஆனபிறகு இந்தத் தொந்தரவுகள் இல்லாமல் அக்கம்மா, செல்லி, ஆகாசவாணி, எருமைகள் சகவாசத்தில் நிம்மதியாக இருப்பதை அழுத்திச் சொன்னார். கழுநீர் போக, ரேடியோவுக்குத் தண்ணீர் வார்க்க அவர் வீட்டில் இன்னொரு தகரக் குடம் இருந்திருக்க வேண்டும். அகில பாரதச் செய்தி, தென்கிழக்கு ஆசிய நேயர்களுக்காக அதே தர்மாம்பாள், பஞ்சாபகேசன், சரோஜ் நாராயணசாமி கூட்டணி நடத்திய தினசரி சேவை (“மலேயா பாங்கூர் ரப்பர் எஸ்டேட் முனியப்பன், ஆதினமிளகி வகையறாவுக்காக ஆலயமணியில் இருந்து “சட்டி சுட்டதடா கை விட்டதடா’ இதோ ஒலிக்கிறது’), மதியம் நிலைய வித்துவான் கோட்டு வாத்தியம், சாயந்திரம் “வாங்க கண்ணுச்சாமி, வாங்க சின்னச்சாமி’ இத்யாதி. முழுக்கமுழுக்க ஆகாசவாணி ஆதரவாளராக டம்ளரும் கையுமாக இருந்ததால், ரி.போ.மா தெருவில் இறங்கி நாலு பேரோடு சகஜமாகப் பழகியது அபூர்வமாகிப் போயிருந்தது. பஞ்சாபகேசன் மட்டும் தில்லியிலிருந்து வந்திருந்தால், வீட்டுத் திண்ணையிலிருந்தே நல்லப்பா கடையில் அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கிக் கொடுத்து ரெண்டு நிமிஷம் பேசி அனுப்பியிருப்பாராக்கும் எங்கள் ரிட்டையர்ட் போஸ்ட மாஸ்டர்.

என்றாலும் நான் பத்தாவது பாஸ் ஆனதைச் சொல்ல தேங்காய் சாக்லெட்டோடு போனபோது, அவர் எனக்கு ஒரு சன்மானம் கொடுத்தார். கட்டுக்கட கட்டுக்கட என்று தந்தி அடிக்க மோர்ஸ் கோட் பழக உதவி செய்யும் ஒரு கட்டைப் பலகை. மேலே, வளைந்து அழகான பிடியோடு பளபளவென்று பித்தளையில் ஒரு லீவர். “ஆகாசவாணி, அகில பாரத செய்தியறிக்கை’ என்று தந்தியடிக்க அவர் சொல்லிக் கொடுத்தது இன்னும் நினைவிருக்கிறது. எருமையும் உலக்கையும் எப்படி அடிப்பது என்று அவர் சொல்லவும் இல்லை. நான் கேட்கவும் இல்லை.
———————————————————————————————————————————————

ஞாபகம் வருதே…: நெ.40, ரெட்டைத் தெரு

இரா. முருகன்

சீரங்கத்தம்மா வீடு ரெட்டைத் தெருவில் இல்லை. ராஜூத் தெருவில் முதல் வீடு. அடுப்புக்கரி டிப்போவை அடுத்து, ரெட்டைத் தெருவுக்குச் செங்குத்தாக ஒரே வசத்தில் மட்டும் அமைந்த தெரு அது. ரெட்டைத் தெருவிலிருந்தே சீரங்கத்தம்மா வீட்டைப் பார்க்க, பேச முடியும் என்பதால் அவளும் எங்கள் தெருவாசியே.

சீரங்கத்தம்மா வீட்டுக்காரர் சுதந்திரப் போராட்ட தியாகி. கோலி சோடாவும் கலரும் உற்பத்தி செய்கிற சோடா கம்பெனி நடத்தியவர். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து வீட்டுக் கூடத்தில் கண்ணாடி பிரேம் செய்த ஓவல் சைஸ் கருப்பு வெள்ளைப் படத்தில் முண்டாசும் நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாகத்தான் உருட்டி விழித்துக் கொண்டிருக்கிறார். ஓய்ந்துபோன சோடா மிஷினை ராம. பெரி வகையறாவில் யாரோ வாங்கி, பக்கத்து பூங்குடி கிராமத்தில் “சோடா கலர் ஃபாக்டரி’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜெயராம் சினிமா தியேட்டரில் ஐம்பது காசுக்குக் கிடைக்கும் பச்சையும் மஞ்சளுமான கோலி சோடா அங்கேதான் தயாராகிறது. “சோடான்னா, அந்தக் கால கதர் சோடா மாதிரி குடிச்சதும் சுகமா வாய் வழியாக் காற்றுப் பிரிஞ்சு ஏப்பம் வரணும். இதுலே காத்தும் இல்லே. கலரும் இல்லே. சாக்ரின் தண்ணிதான் நுரைச்சுக்கிட்டு நிக்குது’. பூங்குடி சோடா குடித்த பெரிசுகள் ஏமாற்றத்தோடு பழைய கோலி சோடாவின் பொற்காலமாகக் காட்டும் கதர் சோடா காந்தி, கதர், கைராட்டினம் காலத்தில், சீரங்கத்தம்மா வீட்டுக்காரர் சுதேசிச் சரக்காக உற்பத்தி செய்தது. அது சென்னை, பெங்களூர், ஒங்கோல் என்று எல்லா ஊர் பொருட்காட்சியிலும் மெடல் வாங்கியதாம். சீரங்கத்தம்மாதான் ஒரு பகல் நேரத்தில் வீட்டுக்கு வந்து ஊர்க்கதை பேசும்போது சொன்னாள். பொற்காலத்தில் கோலி சோடாவுக்கெல்லாம் மெடல் கொடுத்துக் கவுரவித்தது ஏனென்று கேட்க நினைத்தாலும் தேசபக்தி காரணமாகச் சும்மா வாய் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பக்கத்துப் பட்டி தொட்டி கிராமங்களில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும், பிரசவ மருந்து கொடுப்பது சீரங்கத்தம்மா வீட்டில்தான். இந்த இலவச சேவையையும் கதர் சோடா காலத்தில் அமலில் இருந்ததாகக் கேட்டிருக்கிறேன். பழைய நினைவோடு யாராவது அவ்வப்போது வந்து, மருந்து கிடைக்காமல் பக்கத்து கங்கராஜூ கடையில் அதை விலைக்கு வாங்கி, சீரங்கத்தம்மா கையால் கொடுக்கச் சொல்லி எடுத்துப் போவார்கள். “வாவரசியா இருந்த மகராசி’ என்று வாயாரச் சொல்வார்கள் அவர்கள்.

சீரங்கத்தம்மா வீட்டில் எப்போதும் ஏதேதோ உறவுமுறை சொல்லிக்கொண்டு கூட்டம் நிரம்பி வழியும். வாரம் ஒருதடவை “தேங்காய்த்துருவி’ கடன் கேட்டு யாராவது அங்கிருந்து வருவார்கள். மனசேயில்லாமல் துருவியைக் கொடுத்தனுப்பிவிட்டுப் பாட்டியம்மா பதினைந்து நிமிடம் கூடத்தில் பித்துப் பிடித்ததுபோல் உலாத்திக் கொண்டிருப்பாள். அது முடிந்ததும் என்னைக் கெஞ்சுகிற பார்வை பார்ப்பாள். ஓடிப்போய் தேங்காய்த் துருவியைத் திரும்ப வாங்கிவா என்று அதற்கு அர்த்தம். சீரங்கத்தம்மா வீடு தினுசு தினுசான நபர்கள் புழங்குகிற இடம் என்பதால் அம்பலப்புழை தச்சன் இழைத்துக் கொடுத்து பாட்டியம்மா சீதனமாக எடுத்துவந்த துருவி காணாமல் போகவோ, ஊருக்குக் கிளம்புகிறவர்களால் கிளப்பிக் கொண்டு போகப்படவோ வாய்ப்பு உண்டு என்று அவள் நினைத்ததில் தப்பு ஏதுமில்லைதான்.

ரேஷன் ஆபீசில் வேலை பார்க்கிற ஒரு பிள்ளையும், மலேரியா கணக்கெடுத்து, எல்லா வீட்டு வாசல் சுவரிலும் பென்சிலால் சதுரம் போட்டு பால்காரி மாதிரி அவ்வப்போது அந்த சதுரத்துக்குள் ஏதோ குறித்துவிட்டுப் போகும் இன்னொரு மகனும் சீரங்கத்தம்மாவுக்கு உண்டு. கல்யாணம் ஆகியும் பிள்ளைகுட்டி இல்லாத இந்த இரண்டு பேரும் அம்மாவோடு அதே வீட்டில் இருந்தாலும், சீரங்கத்தம்மாவுக்கு தினசரி சாப்பாடு என்னமோ ஆனந்தபவன் ஓட்டலிலிருந்துதான் வரும். சர்வர் குருமூர்த்தி, நாலடுக்கு டிபன் செட், மேலே அலங்காரமாகச் சுருட்டி வைத்த வாழையிலை, அப்பளத்தோடு சீரங்கத்தம்மா வீட்டுப்படி ஏறும்போது தினம் ஓட்டல் சாப்பாடு சாப்பிடக் கொடுத்து வைத்த அந்தம்மாவைப் பற்றிப் பொறாமையாக இருக்கும். ராத்திரிக்கு மிச்சம் எடுத்து வைத்துவிட்டு அதைச் சாப்பிடுவாள் என்று கேட்டபோதுதான் பரிதாபமாக இருந்தது. பகலில் செய்து அனுப்பிய ஓட்டல் சாப்பாட்டை ராத்திரி சாப்பிடுவது போல் ஒரு தண்டனை வேறே உண்டா என்ன?

ரெண்டு பிள்ளைகள், மற்றும் மருமகள்களோடு தொடர்ந்த குடும்பச் சண்டை காரணமாகவும், சமையல் செய்ய முடியாமல் கண் பார்வை மங்கியிருந்ததாலும் சீரங்கத்தம்மா இப்படி ஓட்டல் சாப்பாட்டை நாட வேண்டிப் போனது. ஆனந்த பவன்காரர் குடும்ப நண்பர் என்பதால் மேற்படி போஜனம் அடக்க விலைக்கே அந்தம்மாவுக்குக் கிடைத்ததாம். தியாகி குடும்ப பென்ஷனாக சீரங்கத்தம்மாவுக்கு மாதாமாதம் கிடைத்து வந்ததில் கணிசமான பகுதி இதற்கே செலவாகியிருக்கும்.

ஆனந்தபவன் சாப்பாடு, குடும்பச் சண்டை, மூட்டை முடிச்சோடு வந்து சேர்ந்து தேங்காய்த் துருவி கடன் வாங்க அலைகிற உறவுக்காரர்கள் என்று எல்லாம் அலுத்துப்போய் சீரங்கத்தம்மா தீபாவளி கழிந்த அடுத்த நாள் திடுதிடுப்பென்று காசிக்குக் கிளம்பிவிட்டாள். மதுரையிலிருந்து யாரோ கூட்டிப் போவதாகச் சொல்லி, எல்லா வீட்டிலும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். பாட்டி பத்து ரூபாயும், மஞ்சள் துண்டில் முடிந்து வைத்திருந்த ராஜா தலைக்காசு எட்டணாவும் சீரங்கத்தம்மாவிடம் கொடுத்து, பணம் வழிச்செலவுக்கென்றும், மஞ்சள் துணிக் காணிக்கை காசி விசுவநாதர் கோவிலில் சேர்க்க எந்தக் காலத்திலோ எடுத்து வைத்திருந்தது என்றும் சொல்லியனுப்பினாள். சீரங்கத்தம்மா பற்றி அப்புறம் ஒரு வருடம் போல பேச்சே இல்லை. காசியில் அவள் காலமாகியிருக்கலாம் என்று வீட்டில் ராத்திரி சாப்பாட்டுக்குப் அப்புறம் பேச்சுக் கச்சேரியில் எப்போதாவது பேச்சு எழும். “உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம்’ என்று ஜெயராம் தியேட்டரில் “கலங்கரை விளக்கம்’ படத்துக்கு முன்னால் காட்டிய இந்தியன் நியூஸ் ரீலில், படகில் உட்கார்ந்து போகிற சீரங்கத்தம்மாவைப் பார்த்ததாக குண்டுராஜூ சொன்னதை யாரும் நம்பவில்லை.

அடுத்த தீபாவளிக்கு நாலு நாள் இருக்கும்போது சீரங்கத்தம்மா திரும்பி வந்திருந்தாள். இப்போதும் வீடுவீடாகப் படையெடுப்பு. காசி விபூதி கொடுக்கவும், கங்கைச் செம்பிலிருந்து இங்க் ஃபில்லரால் எடுத்து கங்கா தீர்த்தம் பிரசாதம் வழங்கவுமாக பத்து நாள் மும்முரமாக அலைந்தாள். பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு மருமகள்கள் குடும்பச் சண்டையை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்ததால், மறுபடியும் ஆனந்தபவனிலிருந்து டிபன் காரியர் அணிவகுப்பு.

“”காசியிலே போய் நின்னா, அங்கே ஜனம் பேசறது ஒரு அட்சரமும் புரியலே. அவுகளை அதான் தெய்வமா நிக்கறாரே எங்க வீட்டுக்காரர். அவுகளையும் காசிநாத சாமியையும் மனசுலே தியானிச்சுட்டு வாயைத் தொறந்தேன் பாருங்க. என்னையறியாமலேயே கடகடன்னு இந்துஸ்தானி கரைபுரண்டு நாக்குலே வந்துது. அப்புறம் என்ன, நம்ம ராஜ்ஜியம்தான்”. சீரங்கத்தம்மா சொன்னதை பாட்டி மட்டும் நம்பினாள்.

சீக்கிரமே சீரங்கத்தம்மா ஓய்ந்து போனாள். சர்வர் குருமூர்த்தி கொண்டு வரும் சாப்பாடைக் கையில் எடுத்துச் சாப்பிடக்கூட முடியவில்லை. அது வருவதும் நின்று போனது. மருமகள்கள் சண்டைக்கு நடுவில் கஞ்சி வைத்துக் கொடுத்தார்கள். ஊர்ந்தபடி வீட்டுக்குள் நகர்ந்த சீரங்கத்தம்மா உடுத்தப் பழம்புடவையை விட்டெறிந்தார்கள். வீட்டை விற்றுப் பாகப் பிரிவினையாகிக் காலி செய்து போனபோது இளைய மகன் நசுங்கின அண்டா, பாதாளக் கரண்டி, எலிப்பொறி, ஒட்டடைக்குச்சி இவற்றோடு கைவண்டியில் சீரங்கத்தம்மாவையும் ஏற்றி ஒரு கிழிந்த போர்வையைப் போர்த்தி உட்கார்த்தி வைத்துத் தள்ளிக் கொண்டு போனான். “”அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” என்றாள் பாட்டி. அவள் கண்கள் கலங்கியிருந்தன.

———————————————————————————————————————————————

Posted in Dinamani, Era Murugan, Era Murukan, Eraamu, Eramu, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Iraamu, Iramu, Kathir, Murugan, Murukan | 1 Comment »

Remove ban on milk powder exports

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பால் பௌடர் ஏற்றுமதி தடை நீங்க வேண்டும்!

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பௌடர் ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நுகர்வோர் நலன் கருதி விதித்த இத் தடையை, பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி இப்போது விலக்க வேண்டும்.

குளிர், மழைக்காலங்களில் பால் உற்பத்தி அதிகம் இருக்கும். அப்போது அன்றாடம் 24.10 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கோடைக்காலத்தில் 21.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாகிறது.

தமிழ்நாட்டில் சராசரியாக அன்றாடம் 22.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

எருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.14 வீதமும் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.12 வீதமும் கொள்முதல் விலை தரப்படுகிறது.

பாலைப் பொருத்தவரையில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், பாலுக்குத் தரும் கொள்முதல் விலையில் மூன்றில் இரு மடங்கு நேரடியாக பால் உற்பத்தியாளருக்கே கிடைக்கிறது.

விவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் கறவை மாடு வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு செலவுகளை ஈடுகட்ட முடிகிறது. கால்நடைத் தீவனங்களை அரசு சலுகை விலையில் அளித்தாலும் அதை வாங்கும் பொருளாதார வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும்.

ஒரு மாடு அல்லது இரு மாடுகளை வீட்டுத் தேவைக்காக வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. பாலை விற்க வேண்டும் என்ற நோக்கில் மாடு வளர்ப்பவர்கள் மட்டும்தான் இப்போது மாடு வைத்துக் கொள்கிறார்கள்.

“மாடு’ என்றால் “செல்வம்’ என்பார்கள். ஆனால் நவீன காலத்தில் “மாடு’ என்றால் “பெரும்பாடு’ என்றாகிவிட்டது. மாடுகளுக்குத் தண்ணீரும், மேய்ச்சல் நிலமும் தேவை. மாடுகளை மேய்க்கவும், பராமரிக்கவும் இடம் இல்லை. மாநகராட்சி எல்லைக்குள் மாடுகளை வளர்க்கக்கூடாது என்று மாநகர நிர்வாகத்தினரிடமிருந்து கெடுபிடி வேறு.

இலவச கலர் டி.வி., சிறு விவசாயிகளுக்கு இலவச நிலம் போன்றவற்றைத் தருவதுடன் இலவசமாக மாட்டையும் ஏழைகளுக்குத் தரலாம்.

தொடக்க காலத்தில் மாட்டைப் பராமரிக்கச் சிறிது உதவித்தொகையைக் கடனாக அளித்து, பிறகு பாலைக் கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அசலை கழித்துக்கொள்ளத் தொடங்கினால் கடன் வசூலிப்பும் எளிதாக இருக்கும். தமிழ்நாடெங்கும் உழைப்பையும் நேர்மையையும் மூலதனமாக வைத்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை இதில் ஈடுபடுத்தினால், பிற மாநிலங்களுக்கு இதிலும் தமிழகம் நல்ல வழிகாட்டியாகத் திகழலாம்.

கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு ஏற்கெனவே நன்கு பணியாற்றி வருகின்றன. மாடு வாங்கக் கடன் தருவதில் தமிழ்நாட்டு அரசுடைமை வங்கிகளும் நல்ல அனுபவம் உள்ளவை. எனவே மாடு வளர்ப்பையும் பால் பெருக்கத்தையும் தீவிர இயக்கமாக்கி முனைப்போடு செயல்படுத்தினால் தமிழ்நாடு இந்தியாவின் “”டென்மார்க்” ஆகத் திகழும்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான கணக்கெடுப்பின்படி மொத்தம் 7,662 பால்கொள்முதல் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 21.93 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அன்றாடம் 26.10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. மாநிலம் முழுக்க 36 பால் குளிரூட்டும் மையங்கள் செயல்படுகின்றன. பாலைப் பௌடராக்கும் பிரிவுகள் மாநிலத்தில் 4 உள்ளன.

அமைப்புரீதியான துறையில் அன்றாடம் 46 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தனியார் துறையில் 16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இத்தகைய செழிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, பால் பௌடர் ஏற்றுமதியை அனுமதித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Posted in Assets, Assistance, Commerce, Coop, Coops, Cows, dairy, Drink, Economy, Exports, Farming, Fees, Industry, Law, Liquid, Loans, Manufacturer, Manufacturing, Marketing, milk, Order, Powder, Price, quantity, retail, revenue, Skimmed, Surplus, Tariff, Tax | Leave a Comment »