Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Govt’ Category

Kalki Therthal Editorial: India Parliament Elections 2009

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 15, 2009

அச்சுறுத்தும் இரட்டை அபாயம்! – கல்கி தலையங்கம்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுள் ஒன்றுகூட, நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை களைக் குறித்துப் பேசவில்லை. முதல் பிரச்னை பொருளாதார வளர்ச்சியில் அபாயகரமான பின்னடைவு. இரண்டாவது பிரச்னை, அண்டை நாடான பாகிஸ்தானில் வளர்ந்து வரும் தலிபான் ஆதிக்கம்.

உலகம் முழுவதுமே பொருளாதார நலிவைச் சந்தித்து வருவதால் அது குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என நம் அரசியல் கட்சிகள் முடிவு செய்துவிட்டன போலும்! அதனால்தான் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பற்றியோ வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கான திட்டங்கள் குறித்தோ பேசுவதற்குப் பதிலாக, மேலும் பல இலவசங்கள், மானியங்கள், சலுகைகள் பற்றி அறிக்கைகள் வருகின்றன.

கடந்த பிப்ரவாி மாதத்தில் மட்டுமே ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 22 சதவிகிதம் குறைந்துள்ளன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அடைந்து வரும் நஷ்டத்தால் இதுவரை பத்து மில்லியன் நபர்கள் வேலை இழந்துள்ளனர். இவ்வெண்ணிக்கை மேலும் துாிதமாக அதிகாிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதமாகக் குறையும் என்றும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதல பாதாளத்துக்குச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இவை யாவுமே, சராசாி இந்தியனின் வாழ்க்கை, சொல்ல முடியாத அளவுக்குக் கடினமாகப் போகிறது என்பதற்கான அறிகுறிகள். ஆனால் இவை பற்றியெல்லாம் ஆலோசிக்க நமது அரசியல்வாதிகளுக்கு ஏது நேரம்? அவர்கள் தங்களுடைய சகிப்புத்தன்மையற்ற பேச்சிலும் நடத்தையிலும் தலிபானுடன் போட்டி போடத் தயாராகிவிட்டார்கள்!

தலிபான், பாகிஸ்தானில் காலூன்றியிருப்பதால் நாம் எதிர்கொள்ளப் போகும் அபாயம் என்னவென்று நம் அரசியல்வாதிகள் சிந்திக்காவிட்டாலும் நாம் விழிப்புற்று எச்சாிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் தலிபான் கை ஓங்கினாலும் இந்தியாவுக்கு ஆபத்து (ஏற்கெனவே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியில் அவர்கள் ஊடுருவி விட்டார்கள்); அந்நாட்டில் தலிபான் ஒடுக்கப்பட்டாலும் நமக்கு ஆபத்து – அங்கிருந்து விரட்டப்படுவோர் அண்டை நாடான இந்தியாவுக்குத்தான் வேகமாக வந்து சேர்வர்.

சகிப்புத்தன்மைக்கே இடங்கொடாத, அடிப்படைவாதமும் பிற்போக்குச் சிந்தனையும் வன்முறையும் காட்டுமிராண்டிச் சட்டங்களும் கொண்ட தலிபான், இந்த நாட்டின் அழகான மதச்சார்பின்மை கவசத்தை நொடியில் தகர்த்துவிடும். இங்கு தழைக்கும் பலமத கலாசாரத்தை நாசமாக்கிவிடும்.

ஒரு பக்கம் பொருளாதாரச் சீர்குலைவு அச்சுறுத்தல்; இன்னொரு பக்கம் இந்தத் தலிபான் அபாயம். இதை உணர்வதற்கு, பாிெய தீர்கதாிசனமெல்லாம் தேவையில்லை; சராசாி கவனமும் எச்சாிக்கை உணர்வும் போதும். ஆனால், நம் அரசியல்வாதிகளிடம் அதைக்கூட இனி எதிர்பார்க்க முடியாது போலிருக்கிறது.

ஒரே தீர்வுதான் உள்ளது: இந்தியாவெங்கிலும் உள்ள மூத்த சான்றோர்கள் ஒன்றுகூடி, நாட்டு நலனில் அக்கறை உள்ள ஐம்பது தனி நபர்களை, அரசியல் ஆதாய நோக்கு இன்றி தேர்தலில் நிறுத்தி, அவர்கள் மூலம் நாட்டுக்கான நல்ல திட்டங்களை எடுத்துரைக்கலாம். அந்த நேர்மையாளர் களுள் 25 பேர் வென்றால்கூட அது இந்திய அரசியலில் திருப்புமுனையாக அமையும். ஊழலில் ஊறிப்போன சுயநல அரசியல்வாதிகளுக்கு ஓர் எச்சாிக்கையாகவும் விளங்கும்.

Posted in Economy, Govt, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

டிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.

இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »

‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ – Pazha Nedumaran on 14 dead

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

14 பேர் உயிரிழந்ததற்கு மத்திய அரசே பொறுப்பு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர்களுக்காக 14 பேர் தீக்குளித்து இறந்ததற்கு மத்திய அரசுதான் பொறுப்பாளி என்று குற்றம்சாட்டினார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

அரியலூர் மாவட்டம், தத்தனூர் கீழவெளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை, இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளித்து இறந்த பாமக தொண்டர் செ. ராஜசேகரனின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பழ. நெடுமாறன் மேலும் பேசியது:

“”தியாகிகளின் தியாகங்களை மதிக்காவிட்டாலும் கொச்சைப்படுத்தக்கூடாது.

தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் 14 பேரின் உயிரிழப்புக்கும் பொறுப்பாளி மத்திய அரசுதான். இதன் விளைவு வரும் மக்களவைத் தேர்தலில் உணர்த்தப்படும். ராஜசேகரனின் மரணம் ஈடுசெய்ய முடியாததுதான் என்றாலும், அவரது குடும்பச் சூழல் கருதி சிறு உதவியாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் விரைவில் வழங்கப்படும்” என்றார் பழ. நெடுமாறன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்: “”இவையெல்லாமும் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்றாலும்கூட, தீயில் வெந்து சாக வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவு, அவர்களது மன வேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

பாமக தலைவர் கோ.க. மணி: முத்துக்குமார் தொடங்கி ராஜசேகரன் வரை தீக்குளித்து உயிரிழந்தவர்களின் நோக்கங்கள் நிறைவேறும் வரை வீரமுள்ள, மானமுள்ள தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

Posted in Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

Reporters Woes in covering the upcoming India Elections 2009: Media Pass from EC

Posted by Snapjudge மேல் மார்ச் 18, 2009

நிருபர்களுக்கு தடை போடுகிறது தேர்தல் ஆணையம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளை அமல்படுத்தி வருகிறது.

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை நியாயமாக, நேர்மையாக நடக்கிறதா என்பதற்கு பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் சாட்சி. ஆனால், மே மாதம் நடக்கும் மக்களவைத் தேர்தலில் அந்த சாட்சிகள், முன்பு போல வாக்குச் சாவடிக்குள்ளோ, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள்ளோ எளிதில் சென்று எதையும் பார்க்க முடியாது.

ஒரு தொகுதிக்கு ஒரு நிருபர், ஒரு புகைப்படக்காரர் என்ற அளவில் முன்பு தேர்தல் ஆணையம் அங்கீகார அட்டை கொடுத்ததால் பல பகுதிகளுக்குச் சென்று செய்தி சேகரிக்க முடிந்தது. நிருபர்கள், புகைப்படக்காரர்கள் நடமாட்டம் இருக்கும் என அரசியல் கட்சிகளும் சற்று கவனமாகவே இருந்தன.

ஆனால், இப்போது ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர் அல்லது புகைப்படக்காரர் மட்டும்தான் இந்த அங்கீகார அட்டை பெற முடியும்.

சென்னை மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை வெவ்வேறு இடங்களில் நடக்கும். ஆனால் ஒருவர் மட்டும் எல்லா இடங்களையும் பார்ப்பது சிரமம்.

இது அரசியல் கட்சிகளுக்கு மிகவும் வசதியான ஏற்பாடாக அமைந்துவிடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதிலும்கூட தொலைக்காட்சிகளுக்கு இரண்டு பேருக்கு அங்கீகார அட்டை தர முன்வந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

நியாயமான, நேர்மையான தேர்தல் நடப்பதை உறுதி செய்கிறோம் என்று கூறி, வேட்பாளருடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு, செலவுக்கு வரம்பு, பிரசாரத்துக்கு வரம்பு என அறிவித்துவிட்டு, அதைக் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும் செய்தியாளர்களுக்கு தடை விதித்ததைப் போன்ற நிலையை உருவாக்குவது சரியில்லை என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையம் இதுபற்றி மறு பரிசீலனை செய்து முன்புபோல தாராளமாக வாக்குச் சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை தருவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கலாமே தவிர, எண்ணிக்கையைக் குறைப்பது சரியாக இருக்காது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

Posted in Govt, India, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 1 Comment »

Election 2009 caste vote: Tamilnadu MPs forced to find new constituencies after delimitation

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2009

மறுவரையறை தொகுதிகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள்

தொகுதி மறுவரையறைப்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதிகளால் அரசியல்வாதிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை சரிசமமாக இருக்கும் வகையில் சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்துள்ளது.

இதனால் இதுவரை இருந்த

  1. செங்கல்பட்டு,
  2. திருப்பத்தூர்,
  3. வந்தவாசி,
  4. திண்டிவனம்,
  5. ராசிபுரம்,
  6. திருச்செங்கோடு,
  7. கோபிசெட்டிபாளையம்,
  8. பழனி,
  9. பெரியகுளம்,
  10. புதுக்கோட்டை,
  11. சிவகாசி,
  12. திருச்செந்தூர்,
  13. நாகர்கோவில்

ஆகிய மக்களவைத் தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. திருவண்ணாமலை,
  4. ஆரணி,
  5. விழுப்புரம்,
  6. கள்ளக்குறிச்சி,
  7. நாமக்கல்,
  8. ஈரோடு,
  9. திருப்பூர்,
  10. தேனி,
  11. விருதுநகர்,
  12. தூத்துக்குடி,
  13. கன்னியாகுமரி

ஆகிய மக்களவைத் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 7 தனித் தொகுதிகளில்

  1. ஸ்ரீபெரும்புதூர்,
  2. பொள்ளாச்சி,
  3. பெரம்பலூர்,
  4. ராசிபுரம்

ஆகிய தொகுதிகளுக்குப் பதிலாக

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. நீலகிரி

ஆகிய தொகுதிகள் புதிதாக தனித் தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

  1. சிதம்பரம்,
  2. நாகை,
  3. தென்காசி

தொகுதிகள் தொடர்ந்து தனித் தொகுதிகளாகவே நீடிக்கின்றன.
இப்படி பல தொகுதிகள் உருமாறியுள்ளதால் தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் போட்டியிட முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைப்பதே அரிதாகியுள்ளது.

மத்திய அமைச்சர் ஆ. ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நீலகிரி தனித் தொகுதியானதால் அங்கு 5 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். பிரபு வேறு தொகுதி தேட வேண்டிய நிலையில் உள்ளார்.

  • மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்ற கோபிசெட்டிப்பாளையம்,
  • வைகோவுக்கு சாதகமான சிவகாசி,
  • முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் செங்கல்பட்டு,
  • பாஜக தலைவர் சு. திருநாவுக்கரசருக்குச் சாதகமான புதுக்கோட்டை

ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் புதிய தொகுதிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாமகவுக்கு சாதகமான

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. சிதம்பரம்

ஆகிய தொகுதிகள் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளதால் கூட்டணியில் எந்தத் தொகுதியை கேட்டுப் பெறுவது என்று அக்கட்சி தடுமாற்றத்தில் உள்ளது.
புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிகளால் அரசியல்வாதிகளில் பலர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Posted in Govt, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Dec: Sri Lanka, LTTE, Eezham: News Updates: War, Attacks, Dead

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2008

இலங்கையை விட்டு வெளியேற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஞாயிறு காலை தான் இந்தியாவிற்கு பயனம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார்.

தான் ஏற்கனவே தீர்மானத்திபடி வைத்திய சிகிசைக்காக செல்லவிருந்ததாகவும், அனால் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டட நிலையில் தனது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருத்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என தனக்கு தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன குறிப்பிடுகின்றார்


இலங்கையின் அம்பாறையில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

பாதுகாப்பு காரணங்களக்காக இக்கட்டுப்பாடு என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களைப் பொறுத்த வரை இதனால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

இக்கட்டுப்பாடு காரணமாக ஒருவரின் உறவினர்கள் உட்பட பெயரில் பதிவு செய்யப்ப்டுள்ள மோட்டார் சைக்கிளை மற்றுமொருவர் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக பொலிஸ் மா அதிபதிக்கு அவசர கடிதமொன்றை தான் அனுப்பி வைத்துள்ளதாக கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராஜா, இது மனித உரிமை மீறல் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலேயே இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

புளியங்குளத்தில் அரசப்படையினர்
புளியங்குளத்தில் அரசப்படையினர்

இலங்கையின் வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

பரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

வவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


மன்னம்பிட்டியில் பயணிகளில் விபரங்கள் பதியப்படும் புதிய நடைமுறை

மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)
மட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் ஊடாக பயணம் செய்பவர்கள் மன்னம்பிட்டி என்னும் இடத்தில் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமலுக்கு வந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இப்படியாக விபரங்கள் ஒவ்வொருவராக பதியப்படுவதால், பெரும் காலதாமதம் ஏற்படுவதாகவும், அத்துடன் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு பதியப்படுவதாகவும் பயணிகள் குறை கூறுகிறார்கள்.

மன்னம்பிட்டியில் பயணிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதன் மூலம் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் ஒப்புக்கொள்ளும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான ரஞ்சித் குணசேகர அவர்கள், ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் மாத்திரந்தான் அப்படியாக பதிவு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தினுள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள நிவாரண உணவுப் பொருட்களின் முதல் தொகுதி 60 ட்ரக் வண்டிகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இதுபற்றி கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள், இந்தப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.

வரும் வியாழக்கிழமை மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களைத் தங்கவைப்பதற்காக ஓமந்தை பாடசாலையில் புதிய இடைத்தங்கல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை குறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கிளிநொச்சியை ஒட்டிய கொக்காவிலை கைப்பற்றியிருப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச படைகள் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் முன்னேறி கொக்காவில் பிரதேசத்தை கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும், இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

கிளிநொச்சி நகருக்கு மேற்கில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று தளங்களின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி நகருக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பகுதியை நோக்கி இராணுவத்தினர் நடத்திய எறிகணை தாக்குதலில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டும், 31 வயதுடைய ஆண்மகன் ஒருவர் காயமடைந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கையின் வடக்கே வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது

இலங்கையின் வடக்கே சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமான வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இந்த மழை, வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர், கிட்டத்தட்ட 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கூறும் இலங்கை அரசு, வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.

1918ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இலங்கையின் வடபகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்று இலங்கை அரசின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உலக எய்ட்ஸ் தினம்: இலங்கையில் விழிப்புணர்வு ஊர்வலம்

வெலிக்கடை சிறையின் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் கைதிகள்

எய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது.

பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும், சுமார் 200 பேர் வரை மரணத்தினைத் தழுவியிருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தழிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஜனகன், இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே வசித்துவருகிறார்கள் எனவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாகவே எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கே மழைவெள்ளம்

இலங்கையில் வடக்கே மழை வெள்ளம்
இலங்கையின் வடக்கே மழை வெள்ளம்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீரினால் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்ததனாலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும், 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதிகளில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதிலும், வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்


மட்டக்களப்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 12 மணி நேரத்திற்கு பிறப்பிக்கப்பிட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிவிலியன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என 2000 க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுமார் 4103 வீடுகள், 56 வாகனங்கள் மற்றும் 11963 பேரை சோதனையிட்டுள்ளனர்.

இவர்களில் 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் நிலவும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டங்களின் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை வெளியிட்டுள்லார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உரையை தணிக்கை செய்ததாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்திர உரை குறித்த செய்திகளை வழங்கியபோது பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை ஒலிபரப்புகளை இலங்கை அரசு தணிக்கை செய்ததாக இலங்கையின் ஊகட அமைப்புகள் ஐந்து குற்றம்சாட்டியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை அன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்த செய்தித் தணிக்கை நடவடிக்கையானது, இலங்கை மக்களின் தகவல் அறியும் உரிமையையும், ஒரு முக்கிய விடயம் குறித்த மாற்றுக் கண்ணோட்டங்கள் தடையின்றி பரிமாறப்படுவதையும் தெளிவாக மீறியுள்ளது என்று கூறியுள்ளது.

பிரபாகரனின் உரை குறித்த செய்திகள் சென்ற வருடமும் தணிக்கை செய்யப்பட்டிருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் தரவில்லை.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 Comments »

Senior Al Qaeda member killed in US raid in Syria, officials say: Eight people dead after US attack on Syrian town, says Damascus

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 28, 2008


எட்டு பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு சிரியா கண்டனம்

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது

சிரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹெலிகாப்டரிலிருந்து நடத்தப்பட்டிருந்த ஒரு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென அமெரிக்காவிடமும் இராக்கிடமும் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வாலித் அல்மொஅல்லம் வலியுறுத்தியுள்ளார்.

எட்டு பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கர்கள்தான் நடத்தியதாக சிரியா பழிசுமத்தியுள்ளது.

இத்தாக்குதல் ஒரு குற்றச்செயல் என்றும் ஒரு பயங்கரவாத அடாவடித்தனம் என்றும் லண்டனில் பேசிய அமைச்சர் மொஅல்லம் வருணித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் மறுபடியும் நிகழுமானால், தனது நிலப்பரப்பை சிரியா தற்காத்துக்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றாலும் பெயர் வெளியிட விரும்பாத இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாஷிங்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள், இத்தாக்குதல் அல்கைதாவினருடன் தொடர்புடைய வெளிநாட்டு போராளிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேடப் படையினரால் நடத்தப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன.


Posted in Govt, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Angry north Indians torch train to protest attacks: Anti-MNS (Maharashtra Navnirman Sena) protesters go on rampage in Bihar: Raj Thackeray

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2008


பீஹார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைப்பு

தலைநகர் பாட்னாவில் ஆர்ப்பாட்டங்கள்
தலைநகர் பாட்னாவில் ஆர்ப்பாட்டங்கள்

இந்தியாவின் மும்பை நகருக்கு வேலை தேடி வந்த வட மாநிலமான பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பிகார் மாநிலத்தில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் மறியல் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். கல்லெரிந்த கலகக் காரர்களை கலைக்க காவல் துறையினர் ஒரு இடத்தில் துப்பாக்கிச் சூடு செய்துள்ளனர். ஒரு போலீஸ்காரர் உட்பட, ஒரு டஜனுக்கு மேற்பட்டோர் அங்கே காயமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மும்பைக்கு வருவதை எதிர்க்கும் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற வன்முறைகளை தூண்டியதாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


Posted in Economy, Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Chattisgarh naxal attack leaves 12 CRPF personnel dead

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 21, 2008


இந்தியாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் பொலிஸார் பலி

சத்தீஸ்கர் வனப் பகுதியில் தங்கி மாவோயிய கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

இந்தியாவின் மத்தியப் பகுதியிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அரசின் காவல் படையினர் மீது மாவோயிய கிளர்ச்சியாளர்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்தியதாக அந்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஏழை விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாகக் கூறும் அந்த கிளர்ச்சியாளர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் செயற்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இதுவரை இந்தத் தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை.

Posted in Economy, Finance, Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Oct 21: Eezham, LTTE: War Updates: South Asia: LTTE’s ‘last major defence’ overrun, says Sri Lanka

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 21, 2008

இந்திய உதவிகளை வன்னிக்கு அனுப்புவது குறித்து ஆராய்ந்த கூட்டத்தில் இந்தியத் தூதுவரும் கலந்துகொண்டார்

இலங்கையின் வடக்கில் போரினால் அவதியுறும் தமிழ் மக்களுக்காக இந்தியாவினால் அனுப்பப்படும் உதவிப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட உயர் மட்டக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையில் வடக்கே தற்போது அரசபடைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பாரிய மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கென, இந்தியா நல்லெண்ண அடிப்படையில் 800 மெற்றிக் தொன்கள் நிவாரணப் பொருட்களை இலங்கை அரசின் அனுசரணையுடன் அனுப்புவதாக கடந்த வார முற்பகுதியில் புதுடில்லியில் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவின் விசேட தூதுவராக டில்லி சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர், கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பஸில் ராஜபக்ஷ தலைமையில் வடக்கில் மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு மற்றும் வழங்கல் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டிருக்கிறார்.

இது குறித்து கருத்துவெளியிட்டுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் கலந்து கொண்டதனை உறுதிப்படுத்தியதோடு, இந்திய நிவாரணப்பொருட்கள் அனுப்படுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அங்கு கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.

ஆனாலும் இந்தக் கலந்துரையாடல் குறித்த மேலதிக விபரங்களை இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் வெளியிடவில்லை.

இந்த கூட்டம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலர் பாலித கோகன்ன தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

இதேவேளை, உள்ளூர் ஊடகங்களிற்குத் தகவல்வெளியிட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அங்கு போதியளவில் கையிருப்பில் இருப்பதாகவும், நிவாரணப்பொருட்கள் அனுப்பப்படுவதில் அவசரம் காட்டப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உலக உணவு ஸ்தாபனத்தின் நான்காவது உணவுத்தொகுதி நாளைய தினம் வன்னிக்கு அனுப்பப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.

சுமார் 29 லாறிகளில் 400 மெற்றிக் தொன்களிற்கும் அதிகமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படவிருப்பதாக தெரியவருகிறது.


வன்னியில் இருந்து கடல் வழியாக வெளியேறிய சிலர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்

வவுனியா முகாமில் உள்ள அகதிகள் சிலர்
வவுனியா முகாமில் உள்ள அகதிகள் சிலர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் உக்கிர சண்டைகள் காரணமாக அலம்பில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்த பின்னர், அங்கிருந்து கடல் வழியாக வெளியேறி, திருகோணமலை நோக்கிச் சென்ற 5 பேர் அடங்கிய குடும்பம் ஒன்றைக் கடற்படையினர் கடந்த வாரம் பிடித்து பொலிசார் மூலமாக வவுனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

வவுனியாவில் உள்ள சிவில் அதிகாரிகள் அவர்களைப் பொறுப்பேற்று தங்குமிடம் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கி பராமரித்து வருகின்றார்கள்.

முல்லைத்தீவு பகுதியின் பல்வேறு இடங்களி்லும் இடம்பெற்று வருகின்ற விமானத் தாக்குதல்கள் மற்றும் அந்த மாவட்டத்தி்ன் கிழக்குப் பகுதியில் இருந்து வரும் எறிகணை தாக்குதல்கள் காரணமாகவும் மற்றும் அங்கு நிலவுகின்ற கஷ்ட நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினாலும், அங்கிருந்து தாங்கள் வெளியேறி வந்ததாக அவர்கள் கூறுகின்றார்கள்.

வவுனியாவில் அவர்கள் யுத்த பயமின்றி இருந்த போதிலும், இங்குள்ள நிலைமைகளும் தமக்கு அச்சம் தருவதாகவும், நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இதுகுறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரஙகத்தில் கேட்கலாம்.


அடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் என்கிறார் கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது, நிவாரண உதவி திரட்டுவதோடு தமிழக முன்முயற்சிகள் நின்றுவிட்டன என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைகூறி இருப்பதற்கு பதிலளிக்கும் வகையில், இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில், கருணாநிதி போர் நிறுத்தம் உட்பட பல்வேறு கோரிக்களை அக்கூட்டத்தில் எழுப்பியதன் காரணமாகவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தன் சக்திக்கேற்றவாறு எடுத்துவருகிறது என்றும், இந்நிலையில் அதற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டால் இந்த அளவாவது இலங்கையை தட்டிக்கேட்பது யார் எனவும் அவர் வினவியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஆதரவைக்காட்டுவதிலும் வேகம் குறைந்தது, அந்த நிலையில் தமிழ் நாட்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எடுத்த முயற்சிகளுக்கும் முழுமையான பலன் கிடைக்கவில்லையென்றும் முதல்வர் வருந்தியிருக்கிறார்.

தவிரவும் அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்கள் படி தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் பதவி விலகமுன்வந்தார்கள் என்றும், எப்படியாயினும் சரி இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் அனைத்து தமிழர்களின் விருப்பம் என்றும், ஆனால் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதில்தான் வேறுபாடுகள் என்றும் கருணாநிதி மேலும் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இதனிடையே அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத்தமிழர்களுக்கு என திரட்டப்படும் நிதி மற்றும் பொருட்கள் விடுதலைப்புலிகளைச் சென்றடைந்துவிடுமோ என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதாகக் கூறி இருக்கிறார்.

தவிரவும் அரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து ஒரு நாள் சம்பளம் கட்டாயமாக பிடிக்கப்பட்டு இலங்கைத்தமிழர்க்கான நிதியில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆனால் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் நிதி திரட்டப்படக்கூடாது என்றோ அல்லது எவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு அவ்வுதவி திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது பற்றியோ எதையும் கூறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர் நோக்கர்கள்.


இலங்கை தமிழர்களுக்காக தமிழ் திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம்

முன்னணி தமிழ் திரைப்பட நடிகர்கள்

போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட நடிகர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

ஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்கள், நடிகர்கள் அனைவருமே இதில் கலந்துகொண்டனர் எனலாம். உண்ணாவிரதம் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.

கூட்ட முடிவில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. நிதி உதவி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசியவர்கள் இலங்கை அரசை கடுமையாக தாக்குவதை ஓரளவு தவிர்த்தாலும் கூட மத்திய அரசு பிரச்சினையில் தலையிடவேண்டுமென்று வற்புறுத்தினர்.

முன்னணி தமிழ் திரைப்பட நடிகர்கள்

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் போன்றோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தைப் பார்வையிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டோரை நேரில் சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ் கராத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் விடுதலைப்புலிகளை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க முடியாது என்று கூறினார்.


வடமராட்சி கடற்பரப்பில் பலத்த மோதல்

ஹோவர்கிராப்ட் கலம் ஒன்று
ஹோவர்கிராப்ட் கலம் ஒன்று

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பும் வெளியிடும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 5 முக்கிய உறுப்பினர்கள் உட்பட 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், கடற்புலிகளின் 4 தாக்குதல் படகுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதில் 5 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த மோதலையடுத்து, காலை 8.30 மணியளவில் செம்பியன்பற்று கடற்பரப்பில் காணப்பட்ட விடுதலைப்புலிகளின் படகுகள் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

ஆயினும் இந்தச் சம்பவத்தில் கடற்படையினரின் டோரா படகு ஒன்றும், ஹோவர் கிராவ்ட் எனப்படும் மிதக்கும் தரையிறக்கக் கடற்கலம் ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாகவும் நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தமது தரப்பில் 7 கடற்கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை தொடக்கம் நாகர்கோவில் வரையிலான கடற்பரப்பில் கடற்டையினரின் 20 டோரா படகுகள் சகிதம் இருந்த ஹோவர் கிராப்ட் எனப்படும் கடற்கலம் அடங்கிய படகு அணியின் மீது தாங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த மோதல்களின்போது, கடற்படையினருக்கு உதவியாக தரையிலிருந்து எறிகணை தாக்குதல்களும், விமானத் தாக்குதல்களும் மேற்கொண்ட போதிலும், தமது 20 படகுகளைக் கொண்ட கடற் தாக்குதல் அணி கடற்படையினருக்குச் சேதத்தை விளைவித்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வன்னிக் களமுனையில் ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி, கிளிநொச்சி நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் வேளையிலேயே வடகடலில் வடமராட்சி பகுதியில் கடற்படையினர் மீதான இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



இந்திய அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணிகிறது: ஜே.வி.பி.

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன்

இந்தியாவின் அழுத்தங்களுக்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துவருகிறது என்றும், இந்தியா தனது சுயநலனுக்காக இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் பல்வேறு வழிகளில் தலையிடுவதாகவும் ஜே.வி.பி. எனப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கையின் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்தியா இப்படிப்பட்டத் தலையீடுகளைச் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் யுத்தத்தை நீட்டித்துக்கொண்டுபோகவே இந்தியத் தலையீடு வழிசெய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியா வழங்கிவரும் இராணுவ உதவிகளால் இலங்கை பயன்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

அதேநேரம் இந்தியா இலங்கையிடையிலான நட்பு உன்னதமானது என்றும் அது கவனமாகப் பேணப்பட வேண்டும் என்றும் இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஊடகச் சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகக் கண்காணிப்பு அமைப்புகள் விமர்சனம்

இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன.

செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

இலங்கைகான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியுள்ள இந்த சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் அங்கு செய்தியாளர்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறுகின்றன.

இலங்கையிலுள்ள தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களின் ஒலிபரப்பு உரிமங்களை ரத்து செய்ய இலங்கை அரசு எடுத்து வரும் நடவடடிக்கைகளையும் இந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன.

மேலும் இன, மத மற்றும் கலாச்சார ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டாலும் இந்த தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.



ஈபிடிபியினர் உதயன் பத்திரிக்கை விநியோகத்தை தடுத்ததாக குற்றச்சாட்டு

கடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பால் யாழில் வழமை நிலை பாதிக்கப்பட்டது
கடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பால் யாழில் வழமை நிலை பாதிக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடந்த முழு அடைப்பின்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் பிரதிகளை யாழ்ப்பாணம் நகருக்கு வெளியே கொண்டி செல்லவிடாமல் ஈபிடிபி அமைப்பினர் தடுத்ததாக இலங்கையில் இருந்து இயங்கும் சுதந்திர ஊடக அமைப்பு குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடந்த வாரம் 23 ஆம் தேதி ஈபிடிபியினர் நடத்திய முழு அடைப்பின்போது,
உதயன் பத்திரிகையை யாழ்பாணம் நகருக்குள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஆனால் பிற இடங்களில் பத்திரிக்கையை கொண்டு செல்ல பத்திரிக்கை விநியோகிஸ்தர்கள் ஈபிடிபியினரால் தடுக்கப்பட்டதாக பத்திரிக்கையின் உரிமையாளர் சரவணபவன் தமிழோசையிடம் கூறினார்.

இது குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இதுவரை இலங்கை அரசிடம் இருந்து பாதுகாப்பு உத்திரவாதம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். தமக்கு மறைமுக அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

மறுப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சரவணபவன் அவர்கள் கூறிய கருத்துக்களை ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தா மறுத்துள்ளார்.

இராணுவம் அந்தப் பத்திரிக்கை மீது கோபமாக உள்ளதாக சரவணபவனிடம் தாம் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உதயன் பத்திரிக்கையை யாழ்பாண நகருக்கு வெளியே விநியோகிக்கப்படுவதை தாமது அமைப்பினர் தடுக்கவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


புலிகளின் வான் தாக்குதல்களை முறியடித்ததாக இலங்கை ராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே மன்னாரிலும், தலைநகர் கொழும்பை அண்டிய களனிதிஸ்ஸ என்ற இடத்திலும் செவாய்க்கிழமை இரவு வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மூன்று இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் நகரில் உள்ள தள்ளாடி இராணுவ முகாம் மீது இரவு 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் 3 குண்டுகளைப் வீசியதாகவும், அதன் பின்னர் நள்ளிரவு நேர வாக்கில் கொழும்புக்கருகில் உள்ள களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் தெரிவித்திருக்கிறது.

புலிகளின் வான் தாக்குதல் சேதங்கள்
புலிகளின் வான் தாக்குதல் சேதங்கள்

இந்தத் தாக்குதல்கள் ஒரு மணித்தியால இடைவெளியில் அடுத்தடுத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மன்னார் தள்ளாடி இராணுவ முகாம் மீதும் களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீதும் வெற்றிகரமாகக் குண்டுத் தாக்குதல்களை நடத்திவிட்டுத் தமது விமானங்கள் பாதுகாப்பாக தமது தளத்தி்ற்குத் திரும்பியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


சர்வதேச நிதி நெருக்கடியால் இலங்கை தேயிலை தொழில் பாதிப்பு

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக, கடந்த வாரம் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவைப்பாடும், விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து பாதிப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை, குறிப்பாக நடுத்தர ரக தேயிலைகளை உற்பத்திசெய்யும் தோட்ட உரிமையாளர்களை உற்பத்தியின் அளவினைக் குறைக்கும்படி இலங்கை தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தேயிலைத்தொழில்
பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தேயிலைத்தொழில்

ஆனாலும் உயர்ந்தர தேயிலையைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்யும்படி அது வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி அவர்கள், இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றும், இந்தக் காலப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், முகாமையாளர்கள் தமது தோட்டங்களில் கப்பாத்து செய்தல், புதிய மரக்கன்றுகளை நாட்டுதல் போன்ற தோட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடலாம் என்றும் அறிவுரை கூறினார்.

இது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


கொழும்பு மன்னார் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

விடுதலைப் புலிகளின் வான் படையினர் செவ்வாய் இரவு மன்னார் மீதும் கொழும்பு மீதும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு 10.30 மணி அளவில், விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகே குண்டு வீசித்தாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை மன்னார், தள்ளாடி இராணுவத் தலமையகத்தின் அருகே வீசியதாகவும் இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் கொழும்பில் உள்ள இலக்கு ஒன்றின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரவு 11 மணி அளவில் கொழும்பில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் கொழும்பு தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.


இலங்கை அரச படை விமான குண்டுவீச்சில் பொதுமக்கள் மூவர் பலி: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு

இலங்கையின் வடக்கே கிளிநொச்சியின் புறநகர்ப்புறமாகிய பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் கிளிநொச்சி பிரதேசத்தில் இன்று விமானத் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என இராணுவம் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 18 வீடுகள் அழிந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

எனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவ தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் கிளிநொச்சி நகருக்கு மேற்குப் பகுதியில் உள்ள களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர், தீவிரத் தாக்குதல்களை மேற்கொண்டு புதிதாக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதற்கிடையில் ஐ.ஓ.எம். என்றழைக்கப்படும் ஐ.நா.வின் இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச உதவி அமைப்பின் மன்னார் அலுவலகத்தில் 2 கைத்துப்பாக்கிகளும், தோட்டாப் பெட்டிகளும் அலுவலக ஊழியர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.


‘மட்டக்களப்பு செங்கலடியில் டி.எம்.வி.பி. அலுவலகம் விடுதலைப் புலிகளால் தாக்குதல்’

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (டி.எம்.வி.பி.) அலுவலகம் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் டி.எம்.வி.பி. அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐந்து பேர் காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், தாக்குதலுக்கு உரிமை கோரியிருப்பதோடு, தாக்குதலின் பின்பு தாங்கள் ஆயுதங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், 6 பேர் சிறைப்பிடித்துக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் ஆட்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார்.

இருந்தபோதும் இச்சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் என்று தேசியப் பாதுகாப்பு ஊடக மையமும் பாதுகாப்பு அமைச்சகமும் தகவல் வெளியிட்டுள்ளன.


இலங்கை மக்களுக்கு நிவாரணம் திரட்டும் பணி தமிழகத்தில் ஆரம்பம்

தமிழக முதல்வர்

இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரண நிதி, மற்றும், நிவாரணப் பொருட்களைத் திரட்டும் பணியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.

தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஏற்கெனவே மத்திய அரசு 800 டன் நிவாரணப் பொருட்களை தமிழர் பகுதிகளுக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்க்கு, உணவு, உடை மற்றும் மருந்துப் பொருட்களை விரைவில் அனுப்பவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் அனுமதியின் அடிப்படையில் அனுப்பப்படவிருக்கும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கியநாடுகள் மன்றம் போன்றவற்றின் உதவியுடன் வழங்கப்படும் எனவும் செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

இதற்காக முதல்வர் கருணாநிதியே பத்து லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். மற்ற பலரும் முன்வந்து 25 லட்ச ரூபாய்க்கும் மேல் திரட்டியிருப்பதாகவும் மற்றுமொரு செய்திக்குறிப்பு கூறுகிறது.

இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மத்திய அரசின் முன் முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.


கிளிநொச்சி நிலவரம் குறித்து அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவர் தகவல்

அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன்

கடந்த சில தினங்களாக கிளிநொச்சியில் தங்கியிருந்து தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ள அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன், வன்னிப் பிராந்தியத்தில் ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான ஏ- 9 நெடுஞ்சாலை மக்கள் நடமாட்டமின்றி ஒரு சூனிய பிரதேசமாக தற்போது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு அலுவலகங்கள் கூட தற்போது அங்கு இல்லை என்று அவர் கூறினார்.

யுத்த அனர்ததத்ததிற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சர்வதேச செஞசிலுவைச் சங்கம்மும் ஐ.நா. நிறுவனங்களும் நிவாரண உதவிகளை வழங்குகின்றன.

இதனைத் தவிர ஓரிரு திருச்சபைகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்தாலும், அது மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டம் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியத் தலையீட்டின் நல்ல துவக்கம்: டாக்டர் ராமதாஸ்

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தொடர்பாக தமிழோசையில் கருத்து வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வர் பின்வாங்குவதாக இதைக் கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சிகள் காரணமாக மத்திய அரசு தற்போது இலங்கைத் தமிழர்கள் குறித்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகவே இதனை ஒரு தொடக்கமாகத்தான் கொள்ளவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த இந்தியா முன்முயற்சிகளை எடுக்காவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகநேரிடும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கடந்த 14ம் தேதி நிறைவேற்றப்ட்ட தீர்மானம் இலங்கைப் பிரச்சினையை, இந்தியாவில் மீண்டும் முதன்மைப்படுத்தியிருந்தது.

திமுக ஆதரவுடன் செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இது ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஊகங்கள் நிலவின.

இந்த நிலையில், நேற்று ஞாயிறன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்சவை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விவாதித்த பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கமளித்திருந்தார்.

இனி இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று அதன் பின்னர் தமிழக முதல்வர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ஷ கருத்து

இந்திய வெளியுறவு அமைச்சரை ஞாயிறன்று சந்தித்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்

இலங்கை இனப்பிரச்சினை குறித்து இந்தியாவுக்கு வந்து இந்தியத் தலைவர்களை விவாதித்து சென்ற இலங்கை நாடளுமன்ற உறுப்பினரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தமது இந்தியப் பயணம் குறித்து தமிழோசையில் விபரம் வழங்கினார்.

இலங்கைக்கு இந்தியா வழங்குவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த உதவிப் பொருட்கள் எப்போது முதல் அனுப்பப்படும் என்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்றும், தேவைகளை பொறுத்து அவை முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது தொடர்பில் இந்தச் சந்திப்பில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

தற்போதைய ராணுவதாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்து வரும் கோரிக்கைகள் குறித்து இந்திய அரசு தரப்பில் தம்மிடம் எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


இலங்கைக்கு நிவாரணப்பொருட்களை இந்தியா அனுப்பவுள்ளது

இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, 800 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு புதுடெல்லி வந்த பஸில் ராஜபக்ஷ அவர்கள், இன்று காலை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.

பசில் ராஜபக்ஷ
பசில் ராஜபக்ஷ

சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த பஸில் ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்துக் கேட்டபோது, பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது என்றார்.

இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசிடம் ஏதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று அவரிடம் கேட்டபோது,
“எல்லா உத்தரவாதங்களையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதாவது, மனிதாபிமானத் தேவைகள் உள்பட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என உறுதியளித்திருக்கிறோம்’’ என்றார் பஸில் ராஜபக்ஷ அவர்கள்.

பின்னர் வெளியிட்பபட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வடக்கே நடைபெற்று வரு்ம் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் புலம் பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக இந்தியா தனது கவலைகளை வெளியிட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி சென்றடைய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் நலன் மற்றும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தொடர்பாக இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக பஸில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியத் தரப்பிடம் விளக்கினார். இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் 13 வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

நிலையான தீர்வு காண்பதற்கான அரசியல் நடைமுறைகளை மேற்கொள்வதில் இலங்கை ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் கிழக்கே ஜனநாயக நடைமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பஸில் ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.


தமிழக ஆதரவு விடுதலைப்புலிகளை காப்பாற்றிவிடக் கூடாது என்கிறார் கருணா

கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணாவும்
கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணாவும்

தமிழகத்தில் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள அலையானது விடுதலைப்புலிகளை காப்பாற்றுவதாக அமைந்துவிடக் கூடாது என்று விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் மட்டக்களப்பு நகரில் இன்று கூட்டம் ஒன்றில் முதன் முதலாக பேசிய கருணா, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை மீட்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்த கூட்டம் குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


காத்தான்குடியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று நடத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் ஒன்றில் 5 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிளிநொச்சி மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்

அதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் அந்த வைத்தியசாலையின் சுற்று மதில் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இந்தத் தாக்குதல் நடைபெற்றபோது வைத்தியர்கள் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளர்களும் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

ஆனாலும் அப்படியான எந்த தாக்குதலையும் இலங்கைப் படையினர் நடத்தவில்லை என்று இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.


புதுடில்லியில் இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ

பசில் ராஜபக்ஷ
பசில் ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்கள், சனியன்று புதுடில்லி வந்து சேர்ந்தார்.

இலங்கை இனப் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசும் இதுதொடர்பான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர், இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை நிலவரம் குறித்தும், இலங்கை அரசின் நிலை குறித்தும் எடுத்துரைக்கவும், இந்தியாவின் கவலைகளைத் தீர்ப்பது தொடர்பாக விவாதிக்கவும் பஸில் ராஜபக்ஷ அவர்கள் புதுடில்லி வந்திருக்கிறார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

மதுரை சிறையில் இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர்

இதற்கிடையில், ராமேஸ்வரத்தில் கடந்த 19 ஆம் திகதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் நடத்திய பேரணியின்போது, பிரிவினைவாதக் கருத்துக்களைப் பேசியதாக நேற்று மாலை கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகிய இருவரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனவே, இதே குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட வைகோவும், மதிமுகவின் அவைத் தலைவர் கண்ணப்பனும் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வைகோ மற்றும் திரைப்பட இயக்குநர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இலங்கை சிறுபான்மை கட்சிகளின் கூட்டுக்காக ரவூப் ஹக்கீம் முயற்சி

ரவூப் ஹக்கீம்
ரவூப் ஹக்கீம்

சிறுபான்மையின கட்சிகளின் பெரும் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிறுபான்மையின மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம், தேர்தல் சட்டங்களை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான முயற்சிகளை எதிர்த்தல் ஆகியவை உட்பட பல விடயங்களில் இந்த கூட்டணி சேர்ந்து செயற்படுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



இலங்கை நிலவரங்கள் கவலையளிக்கின்றன என்று இந்தியா நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

இலங்கையிலுள்ள நிலவரங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் சீர்குலைந்து வரும் மனிதாபிமான நிலமைகள் கவலையளிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் அவ்வாறானவர்களின் நிலை குறித்தும் இந்தியா கவலையடைந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கருத்து வெளியிட்டுள்ளார்.

பொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள்
உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள்

பொதுமக்களின் நலன்களும் பாதுகாப்பும் எப்படிப்பட்ட நிலையிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என நாங்கள் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அதுமட்டுமல்ல உணவும் இதர அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையின்றி அவர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நலன்களும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று இந்தியாவுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விவாதிக்க இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்

இராணுவத் தீர்வு கூடாது
இராணுவத் தீர்வு கூடாது

இனப்பிரச்சினைகளுக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதான வழியில், தமிழ் மக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் நியாயப்பூர்வமான உரிமைகளை மதித்து அதை உள்ளடக்கி எட்டப்படும் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி அவர்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தின் உரிமைகளும் நலன்களும் சிக்குண்டு போகக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஜனநாயக வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க இலங்கை அரசை இந்தியா ஊக்குவிக்கிறது என்றும் தெரிவித்த பிரணாப் முகர்ஜி அவர்கள், இவை மட்டுமல்லாமல் இந்திய மீனவர்களின் நலன் தொடர்பாகவும் இலங்கை அரசுடன் பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடல் எல்லைகளை கடக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கையின் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதை தவிர்க்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும், அதே சமயம் சர்வதேச எல்லையை இந்திய மீனவர்கள் கடக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இரண்டு கப்பல்களை கடற்புலிகள் தாக்கியுள்ளனர்

கடற்புலிகள்-பழைய படம்
கடற்புலிகள்-பழைய படம்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று காங்கேசன்துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்குவதற்காக நின்றிருந்த இரண்டு கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.

இன்று அதிகாலை 5.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்கொலை தாக்குதல் படகுஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் டி.கெ.பி. தசநாயக்கவை மேற்கோள்காட்டி இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றை தாக்கி மூழ்கடித்துள்ளதாகவும் மற்றொன்றை சேதப்படுத்தியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ் குடா நாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த பொருட்கள் மயிலிட்டி இறங்கு துறையில் இறக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மோதல் பிரதேசங்களுக்கு செய்தியாளர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இது தொடர்பான செய்திகளை பக்கசார்பற்ற முறையில் பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



வர்த்தகச் சலுகைக்காக ஐரோப்பிய மனித உரிமை விசாரணையை ஏற்க தயாரில்லை: இலங்கை அரசு

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கின்றன என்பதை விசாரித்து உறுதிசெய்த பின்னரே இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஏற்றுமதி தீர்வை முன்னுரிமை சலுகைகளை நீட்டித்துத் தரமுடியும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் வரிச்சலுகையான 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்காக இலங்கையின் இறையாண்மையையும், மதிப்பினையும் தன்மானத்தினையும் தாரைவார்த்துக் கொடுக்க அரசு தயாராக இல்லை என்று சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புத்துறை அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வரிச் சலுகையை இலங்கை இழக்க நேர்ந்தால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து யாழ் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் பேராசிரியர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அக்கராயன்குளத்தைக் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதாக இலங்கை அரச படையினரும், படையினரின் முன் நகர்வை முறியடித்துள்ளதாக புலிகளும் தெரிவித்துள்ளனர்

இலங்கை சிப்பாய்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தி்ல் உள்ள அக்கராயன்குளம் கிராமப்பகுதியை விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியில் படையினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

எனினும் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன்குளம் வரையிலான பகுதிகளில் ஆறு முனைகளில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உக்கிர தாக்குதல்களை நடத்தி படையினரின் முன்-நகர்வினை முடக்கியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

போர்முனைப் பகுதிகளுக்கு செய்தியாளர்களோ அல்லது மனிதாபிமான பணியாளர்களோ செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதனால், பக்கசார்பற்ற நிலையில் போர்முனைத் தகவல்களைப் பெறமுடியாதிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பில் ஹர்த்தால்

கடத்திக் கொல்லப்பட்ட சிப்பந்திகள் பணியாற்றிய வலம்புரி ஸ்டோர்ஸ் முடிக்கிடக்கிறது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக அப்பிரதேசங்களின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மட்டக்களப்பு நகரில் பொலிசாரால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்டப்டதாகக் கூறப்பட்ட கடைச் சிப்பந்திகள் இருவர் சடலமாக கண்டுபிடிக்கபட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் வகையிலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் வகையிலும் ‘கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் மூலம் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஹர்த்தால் காரணமாக பாடசாலைகள் ,அரசாங்க தனியார் காரியாலயங்கள் ,வங்கிகள் மற்றும் நீதிமன்றங்கள் எதுவும் இயங்கவில்லை.வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டிருந்தது.


Posted in Govt, India, Law, Order, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Russians ambushed in Ingushetia: Three soldiers killed in Caucasus ambush

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2008


இங்குஷெட்டியாவில் ரஷ்ய படையினர் மீது தாக்குதல்

இங்குஷெட்டியா வரைப்படம்
இங்குஷெட்டியா வரைப்படம்

பதட்டம் மிகுந்த வடக்கு காகசஸஸ் பகுதியான இங்குஷெட்டியாவில் ரஷ்ய இராணுவ வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு உள்ளூர் முஸ்லிம் பிரிவினைவாதிகளே காரணம் என ரஷ்ய அதிகாரவட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இங்குசெட்டியாவில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள், இந்த தாக்குதல் இங்குஷெட்டியாவின் பிராந்திய தலைநகரான நஸ்ரானிற்கு அருகே நடந்ததாகவும், இதில் நாற்பது ரஷ்ய படையினர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

உள்த்துறை அமைச்சக துருப்புகள் மீது எறிகுண்டுகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


Posted in Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

India: Violence against Christians: No let-up in Orissa, Karnataka mob attacks: Police station torched

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 17, 2008

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மத்திய அரசு கர்நாடகத்துக்கு அறிவுரை

கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை அனுப்பியிருக்கிறது.

ஒரிஸ்ஸா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் கடந்த சில தினங்களாக கிறிஸ்த தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நடந்துவருகிறது.

இந்து கடும்போக்கு அமைப்புக்கள் இதற்குக் காரணம் என்றும், ஆனால் பாஜக தலைமையிலான மாநில அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த பிரச்சினையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக மத்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா தெரிவித்தார்.

ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தின் 355-வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அனுப்பக்கூடும் என்று தில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநில அரசைக் கலைப்பதற்குப் பயன்படுத்தப்படும் 356-வது பிரிவுக்கு முந்தைய நடவடிக்கை இது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

மத்திய அரசின் இந்த உத்தரவு, வெறும் அறிவுரை மட்டும்தான் என்றும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.



இந்து – கிறிஸ்தவ மோதல்கள் இந்தியாவில் தொடர்கிறது

மோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்
மோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்

இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு இடையில் முருகல் நிலை தொடரும் பின்னணியில் மேலதிக வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே மோதல்கள் இடம்பெற்ற கந்தமால் மாவட்டத்தில், சுமார் 500 பேர் கொண்ட கும்பல் ஒன்று காவல் நிலையத்தை தாக்கி தீவைத்ததில் ஒரு காவலதிகாரி கொல்லப்பட்டார். மற்ற காவலர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடித்தப்பினார்கள்.

ஹிந்து மத தலைவர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதை தொடர்ந்து தற்போதைய மதக்கலவரங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த மோதல்கள் கடந்த சில தினங்களில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவுக்கும் பரவியிருக்கிறது.

Posted in Govt, India, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Hurricane Ike: Haiti in crisis after tropical Hurricane claims more than 500 lives – Floods caused by tropical storm Hanna

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2008

கரீபியன் தீவுகளைத் தாக்கிய சூறாவளி ஐக்

கரீபிய பிராந்தியத்தை தாக்கிய புதிய பலம் மிக்க சூறாவளியான ஹரிக்கேன் ஐக், கரீபிய தீவுகளை தாக்கியதில் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

தேர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் 80 வீதமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தங்குமிடத்துக்காக மக்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும், அந்த தீவுகளின் பிரதமர் கூறியுள்ளார்.

மிகவும் பயங்கரமான, வகை நான்கைச் சேர்ந்த சூறாவளியான ஹரிக்கேன் ஐக், மணிக்கு இருநூறு கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்துடன் தாக்கியதில், தாழ்வான பகுதிகளே முதலில் பாதிக்கப்பட்டன.

இந்த சூறாவளி காரணமாக கரீபியன் பிராந்தியத்தில் பெரும்பாலான பகுதிகளில் உசார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் தாக்கிய கடும் சூறாவளியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி மற்றும் கியூபா ஆகியவற்றின் ஊடாகவே இந்த சூறாவளி செல்லும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.


சூறாவளியினால் ஹெய்தியில் 500 பேர் பலி

சூறாவளியினால் சின்னாபின்னமான ஹெய்தி
சூறாவளியினால் சின்னாபின்னமான ஹெய்தி

ஹெய்தியில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில் ஹன்னா சூறாவளியினால் சுமார் 500 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏராளமானவர்கள் காணாமல் போயிருப்பதால், எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.

ஹெய்தியில் இருக்கும் ஐ.நா மனிதாபிமான பணிகள் ஒருங்கிணைப்பாளரான ஜோயல் போட்ரூ, மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரண உதவிகளை கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த சூறாவளி தற்போது அமெரிக்காவின் கிழக்கு கடற்பகுதியை தாக்கியுள்ளது.

இதற்கிடையே இன்னும் வலுவான சூறாவளியான எல்க்கி டர்க்ஸ்,காய்கோஸ் மற்றும் தெற்கு பஹாமாஸ் பகுதியை தாக்கும் வாய்ப்புகள் உள்ளதால், அங்குள்ளவர்கள் இடம்பெயர்கின்றனர்.

Posted in Economy, Govt | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

DMK Internal Squabbles: Govt told to pay relief for police apathy – Mu Ka Alagiri

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2008

முதல்வர் மகன் அழகிரி தொடர்பான வன்முறைக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி
முதல்வரின் புதல்வர் மு.க அழகிரி

2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திமுக தொண்டர்கள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து மதுரையில் நிகழ்ந்த வன்முறையின்போது தீக்கிரையான ஒரு தனியார் பேருந்திற்கான இழப்பீட்டை தமிழக அரசு வழங்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அப்பேருந்தின் உரிமையாளர்களான தனக்கன்குளம் வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சி கழகத்திற்கு 2 லட்ச ரூபாய் இழப்பீட்டை இன்னும் எட்டு வாரங்களுக்குள் செலுத்திவிடவேண்டுமென நீதிபதி சந்துரு கூறியிருக்கிறார்.

அழகிரிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் மோதல் முற்றிவந்த நேரத்தில் அழகிரியுடன் தொண்டர்கள் தொடர்பை துண்டித்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போது அழகிரி ஆதரவாளர்களின் எதிர்ப்பே பரவலான வன்முறையாக வெளிப்பட்டதாக செய்திகள் கூறின.

வெங்கடேஸ்வரா தொழிற்பயிற்சிக்கழகம் எரிக்கப்பட்ட பேருந்திற்கு வாகன காப்பீடு இல்லை என்று முறையிட்டும் அதற்கு எவ்வித இழப்பீட்டையும் வழங்க தமிழக அரசு முன்வரவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக அக்கழகத்தின் மனுவிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையிலேயே நீதிபதி சந்துரு தனது தீர்ப்பினை அளித்திருக்கிறார்.

அப்போது நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும், குடிமக்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்காதது குறித்தும் நீதிபதி கடும் அதிருப்தியினை தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு தனிநபரின் பிரச்சினைகளுக்காகவும் மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது, கும்பல்கள் வன்முறையில் இறங்கும்போது ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அரசு ஒதுங்கிக்கொள்ளமுடியாது என்று நீதிபதி சந்துரு கூறியிருக்கின்றார்.

Posted in DMK, Economy, Govt, Law, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

LTTE announces unilateral ceasefire during SAARC summit – PM will raise fishermen issue during his visit to Sri Lanka

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2008

விடுதலைப்புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்

பதினைந்தாவது சார்க் மாநாடு இலங்கையில் நடப்பதை முன்னிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிப்பதாக தாமாகவே முன்வந்து விடுதலைப்புலிகள் அறிவிப்பு. திங்கட்கிழமை இரவு விடுத்துள்ள அறிக்கையில் விடுதலைப்புலிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளுடனும், தெற்காசிய பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே தாம் விரும்புவதாகவும், இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருப்பதாகவும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு யூலை 26 முதல் ஆகஸ்ட் 04 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

சார்க் மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு தமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Posted in Govt, India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »