Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Kumarasamy’ Category

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Election Mela in Karnataka: Tracking Poll Expenses and Party Expenditure

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

கர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு! * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

மூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.

தரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.

குமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.

பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.

நேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.

கர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.

கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.

22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.

பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

Posted in Accord, Allegations, Alliance, Balance, Bangalore, Bengaluru, BJP, candidates, Clean, CM, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Coomarasami, Coomarasamy, Corruption, Crores, deal, Devegowda, EC, Economy, Election, Elections, Expenditure, Expenses, Forecasting, forecasts, Gowda, Income, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JD, Karnataka, kickbacks, Kumarasami, Kumarasamy, Lakhs, Mela, Minister, MLA, MLC, MP, P&L, parliament, Party, Politics, Poll, Polls, Profit, Projections, Rich | 1 Comment »

Book Introductions in Jeya TV by A Ku Njaanasambandhan

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

படித்த புத்தகம்

ஜெயா டி.வி.யில் தினமும் காலையில் ஒளிபரப்பாகி வருகிறது “படித்த புத்தகம்’ பற்றிய செய்தியை சொல்லும் நிகழ்ச்சி.

இதில் அ.கு.ஞானசம்பந்தன் கூறும் நூல்கள், நூல் பற்றிய பின்னணி விளக்கங்கள், நூலாசிரியர் குறிப்புகள் எல்லாம் மிக்க உபயோகமாக உள்ளன.

“பார்க்கும் ஆவல்’ அதிகரித்து, “படிக்கும் ஆவல்’ குறைந்து விட்டதை சமன்படுத்த முயலும் தூண்டுகோலாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

சென்ற வாரம், த.நா. குமாரசாமி பற்றியும், அவரது சகோதரர் த.நா. சேனாபதி பற்றியும் கூறினார். த.நா. குமாரசாமியின் மொழித்தேடல், வடமொழிப் புலமை பெற்றது, ரவீந்தரநாத் தாகூருடன் பழகியது போன்ற தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. மொத்தத்தில் தொலைக்காட்சிகளில் வரும் சில உருப்படியான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!

Posted in A Ku Njaanasambandhan, AK Njaanasambandham, AK Njaanasambandhan, Book, Books, Chenapathi, Chenapathy, Coomarasami, Coomarasamy, Introductions, Jaya, Jaya TV, Jeya, Jeya TV, Kumarasamy, Literature, Njaanasambandham, Njaanasambandhan, Njaanasambantham, Njaanasambanthan, Njanasambandham, Njanasambandhan, Njanasambantham, Njanasambanthan, Programme, Reader, Reviews, Senapathi, Senapathy, Television, TN Kumarasami, TN Kumarasamy, TV | Leave a Comment »

Congress Members Suspended from Legislative Council – Karnataka

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

மேலவை காங். உறுப்பினர்கள் 26 பேர் சஸ்பெண்ட்: அவைத் தலைவர் நடவடிக்கை

பெங்களூர், பிப். 14: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்கள் 26 பேர் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கர்நாடக சட்ட மேலவைத் தலைவர் பதவி கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. தாற்காலிகத் தலைவராக துணைத் தலைவர் சச்சிதானந்தா கோட் இருந்து வந்தார். இந்நிலையில் அண்மையில் நடந்த சாலை விபத்தில் கோட் காயம் அடைந்தார்.

இந்நிலையில் சட்ட மேலவைக்கூட்டம் கடந்த ஜனவரி 25-ம் தேதி துவங்கியது. இதையடுத்து மூத்த உறுப்பினர் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த என். திப்பண்ணாவை தாற்காலித் தலைவராக அரசு நியமித்தது.

ஆனால் இவரது நியமனத்தை ஏற்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. இந்நிலையில் மேலவைத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று மேலவை கூடிய ஜனவரி 25-ம் தேதி முதல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலவை கூட்டத்தை நடத்தவிடாமல் தர்ணா மேற்கொண்டுவந்தனர். இதனால் அவை நடந்த அனைத்து நாள்களும் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எச்.கே. பாட்டீல் தலைமையில் வழக்கம்போல எழுந்து நின்று தர்ணா மேற்கொண்டனர். இதற்கு ஆளும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்துப் பேசினர். அவையை நடத்தவிடாமல் தடுப்பதுசரியல்ல என்று அவர்கள் கூறினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

அவைத் தலைவர் திப்பண்ணா பலமுறை கேட்டுக் கொண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிய வண்ணமிருந்தனர். இதனால் பொறுமை இழந்த அவைத் தலைவர் திப்பண்ணா, காங்கிரஸ் உறுப்பினர்கள் 26 பேரையும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுவதாகக் கூறி அவையை மறுநாளைக்கு ஒத்திவைத்தார்.

Posted in Banaglore, Basavaraj Bommai, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), D H Shankaramurthy, Deve Gowda, H K Patil, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha Dal, JD(S), Karnataka, Koomarasamy, Kumarasami, Kumarasamy, Legislative Council, M P Nadagowda, MLC, N Thippanna, Politics, Secular Janata Dal, T N Chaturvedi | Leave a Comment »

Tiruppur, Coimbatore Electricity shutdowns – Power cuts & Textile Industry’s impact

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

ரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்

திருப்பூர்,பிப். 14: ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி மின் கட்டணம் செலுத்தும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நாள்தோறும் ஏற்படும் மின்தடையால் பனியன் தொழில் நிறுவனங்களில் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

திருப்பூர் நகருக்கு ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையம், கோவை அருகே உள்ள அரசூர் துணை மின் நிலையம் ஆகிய 2 இடங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு, நகரில் உள்ள 10 துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பூர் பகுதியில்,

  • வீட்டு இணைப்புகள் 99 ஆயிரத்து 450,
  • தொழிற்சாலை மின் இணைப்புகள் சுமார் 22 ஆயிரத்து 250,
  • மேலும் தெருவிளக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 157 மின் இணைப்புகள் உள்ளன.
  • ஒட்டு மொத்தமாக திருப்பூர் பகுதியிலிருந்து மாதம் தோறும் சுமார் ரூ.20 கோடி மின் கட்டணம் வசூலாகிறது.
  • ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி திருப்பூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்தும் நகரம் திருப்பூர்.

உற்பத்தி அடிப்படையில் கூலி பெறும் பனியன் தொழிலாளர்களுக்கு மின்வெட்டு காரணமாக கூலியில் வெட்டு விழுகின்றது.

பாதிப்பு குறித்து “”டிப்” சங்கத் தலைவர் அகில்மணி கூறியது:

உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பின்னலாடை இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் “”இன்வென்டர்” பழுதாகின்றன. டீசல் செலவு அதிகமாகிறது. அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகின்றது என்றார்.

நகரில், சாய ஆலைகள் அமைத்து வரும் சாயக்கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பனியன் தொழில் நிறுவனங்கள் தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும், எதிர்வரும் காலத்தில் பனியன் தொழிற்துறை உபயோகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.

மின் வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,

  • பல்லடம் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 முதல் 6 மாதங்களுக்கு இப்பணி முடிவடையும்.
  • இதன் பின் திருப்பூர் நகரில் பெருமளவில் மின் வெட்டு இருக்காது.
  • இதேபோல் பெருமாநல்லூர் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.
  • நகரில்
    • நொச்சிபாளையம்,
    • மங்கலம் சாலை,
    • அருள்புரம்,
    • மண்ணரை,
    • திருவள்ளுவர் நகர்,
    • மாதேஸ்வரா நகர்,
    • கே.ஜி.புதூர் கல்லூரி சாலை ஆகிய 8 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.

கர்நாடகத்தில் மின்தடை அமலாகிறது: முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு

பெங்களூர்,பிப்.23-

கர்நாடக மின்சார கழகத்தின் உயர்மட்ட குழு கூட்டமும், மின்சார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்காக மந்திரி சபை கூட்டமும் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் தீவிர மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். மத்திய தொகுப்பில் இருந்த 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டது.

மின் துண்டிப்பு செய்வது என்பது அரசின் நோக்கம் அல்ல. மாநில மக்களுக்கு சிறந்த மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை மின்சாரம் கிடைக்க வில்லை என்றால் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

மின்சார துறை மந்திரி ரேவண்ணா கூறியதாவது:-

தற்போது மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எப்படியாவது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கூறி உள்ளார். வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். மின்சாரத்தை துண்டிக்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. வருகிற மந்திரி சபை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மின் வினியோக கழகத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறுவது குறித்து பேசி வருகிறோம்.

இவ்வாறு மந்திரி ரேவண்ணா கூறினார்.

============================================================

செய்தி வெளியீடு எண்-193 நாள்-2.4.2007
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோருக்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு

  • வடசென்னை,
  • எண்ணூர்,
  • மேட்டூர் மற்றும்
  • தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்திட ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இவற்றைத் தவிர, நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயலாக்கி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்புத் திட்டங்கள் அதிக அளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி மின் செலுத்துகை மற்றும் விநியோகக் கட்டமைப்பினையும் வலிவாக்கும். மாநில மின்சார அமைப்பிற்கு (GRID)) மின்சாரத்தை ஏற்றுவதற்குத் தேவையான மின் செலுத்துப் பாதைகள் நிறுவுவதற்கான செலவு உட்பட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி அளித்திட ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation)) முன் வந்துள்ளது. இது ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள கடனுதவிகளில் மிகப் பெரியதாகும். இது தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, நிதித் தட்டுபாடின்றி அதன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்திட மின்சார வாரியத்துக்கும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)) ஏற்பட்டுள்ளது. இதில் 2.4.2007 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வாரியத் தலைவர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்களும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அனில் கே.லகினா அவர்களும் கையெழுத்திட்டனர்.

மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு நா.வீராசாமி அவர்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் மற்றும் சிறப்பு ஆணையர் திரு.கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆர்.சத்பதி, தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (கணக்கியல்), திரு.ச.கதிரேசன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (உற்பத்தி) திரு.ச.அருணாசலம், திரு.பால் முகுந்த், இயக்குநர் (தொழில் நுட்பம்), ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி, திரு ரமா ராமன், செயலாண்மை இயக்குநர், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்ச்சியின் பொழுது உடனிருந்தனர்.
***
வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

Posted in Arasoor, Arasur, Bangalore, Banian, Business, Coimbatore, Coomarasami, Coomarasamy, Diesel, Economy, Electricity, Engoor, Engore, Engur, Environment, Erode, Factory, Filtration, Garments, Generator, Incentives, Industry, Inverter, Karnataka, Kovai, Kumarasami, Kumarasamy, Palladam, Perumanalloor, Perumanallur, Pollution, Power, Power Cuts, Power Station, retail, Small Business, Textiles, Thiruppoor, Thiruppur, Tiruppoor, Tiruppur, UPS, Waste Water | 2 Comments »

Karnatka CM Kumarasamy’s son pelts stones and intimidates hotel workers

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 27, 2006

நான் முதல்-மந்திரி பையன்; ஓட்டலை தகர்ப்பேன்: ஊழியரை மிரட்டிய குமாரசாமி மகன்

அரசியல்வாதிகளின் மகன்கள் அவ்வப்போது பிரச்சினைகளில் சிக்கி மாட் டிக்கொள்வது வழக்கம். மறைந்த பாரதீயஜனதா பொதுச் செயலாளர் பிரமோத்மகாஜன் மகன் பிரவீன்மகாஜன், அரி யானா மந்திரி மகன் மனுசர்தா ஆகியோர் சமீபத் தில் பிரச்சினைகளில் சிக்கி னார்கள்.

இதே போல கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில்குமாரும் சர்ச் சையில் சிக்கினார். பெங்க ளூரில் உள்ள ஒருஓட்ட லில் அவர் தனது நண்பர் கள் மஞ்சுநாத், சையத் ஆகி யோருடன் சேர்ந்து தகராறு செய்தார். அதிகாலையில் சாப்பாடு இல்லை என்று கூறியதால் அவர்கள் ஓட் டல் மீது கல்வீசி ரகளை செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் முதல்-மந்திரி மகன் மீது தாக்கினார்கள். இருதரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில் நிகில்குமார் முதல்-மந்திரியின் மகன் என்று குறிப்பிடவில்லை.போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

நேற்று அதிகாலை ஓட்டலுக்கு வந்தபோது நிகில்குமார் கவுடா மற்றும் அவரது நண்பர்கள் குடி போதையில் இருந்து உள்ளனர். நான் முதல்-மந்திரி மகன் நான் நினைத்தால் ஓட்டலை தகர்த்து விடுவேன் அல்லது மூடி விடுவேன் என்று ஓட்டல் ஊழியரை மிரட்டியுள்ளார். இதை ஓட்டல் ஊழியர் தெரி வித்தார். நிகில் குமார் கல்லூரியில் ஏற்கனவே நீக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

Posted in abuse, Arrest, case, Chief Minister, CM, FIR, Food, Haryana, Hotel, Karnatka, Kumarasamy, Nikhil Kumar, Police, Power, Pramod Mahajan, responsibility, Syed | Leave a Comment »