Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Student’ Category

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

இது நியாயமா?

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.

இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?

Posted in Center, Centre, Child, Children, City, Dharmapuri, Education, Employment, Exploit, Exploitation, Females, Food, girls, Govt, Hotels, Hunger, Hungry, Illiteracy, Income, juvenile, Kids, Labor, Labour, Literacy, Metro, Needy, Policy, Poor, Read, Restaurants, Rich, Rural, She, State, Student, Suburban, Tharmapuri, Village, Wealthy, Women, Work, Worker | Leave a Comment »

The importance of Sanitary Inspections on Food joints – Health Hazards of Restaurants

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

தேவை விழிப்புணர்வு!

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவுவது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரே, இதுபோன்ற தொற்றுநோய்க்குப் பலியாகி இருப்பது என்பது எந்த அளவுக்கு நாம் விழிப்புணர்வு இல்லாமலும் கவனக்குறைவாகவும் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

ஒருபுறம் முறையாக நடத்தப்படும் உணவு விடுதிகள். மறுபுறம், “கையேந்தி பவன்’ என்கிற காரணப் பெயருடன் அழைக்கப்படும் தெருவோரக் கடைகள். போதாக்குறைக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் காளான்கள்போல முளைத்திருக்கும் துரித உணவகங்களும், “சாட் பண்டார்’ என்று அழைக்கப்படும் வடநாட்டு உணவகங்களும். அதிக வருமானமுள்ள பிரிவினருக்காகவே நடத்தப்படும் நவநாகரிக உணவகங்கள் இந்தப் பட்டியலிலேயே வராது.

மத்தியதர வகுப்பினர் குடும்பத்துடன் செல்கின்ற உணவு விடுதிகள் பெருகி இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் செயல்படும் விதமும் நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற உணவு விடுதிகளில் சராசரித் தமிழன் முப்பது ரூபாய் இல்லாமல் மதிய உணவு சாப்பிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஓரளவில் சுத்தமாகவும் தரமாகவும் இந்த விடுதிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற விடுதிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் கண்காணிப்புக்கு உட்பட்டு, இயன்றளவுக்கு அடிப்படைச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க முனைகின்றன என்பது உண்மை.

ஆனால், திரும்பிய இடத்திலெல்லாம் காளான்களாக முளைத்திருக்கும் துரித உணவகங்கள் எந்த அளவுக்குச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெருவோரக் கடைகள் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கின்றன என்பதை அந்தப் பகுதியில் குடியிருப்போரிடம் கேட்டால் தெரியும். துரித உணவகங்களும், தெருவோரக் கடைகளும் அவை செயல்படும் பகுதியின் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் நல்லாசியைப் பெற்றிருக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்.

வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிநீரைக்கூட இதுபோன்ற உணவகங்களும் கடைகளும் வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தரமோ, சுத்தமோகூட இருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. இவை அனேகமாக இரவு நேரக் கடைகள் என்பதாலும், “டாஸ்மாக்’ மதுபானக் கடையிலிருந்து வருபவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதாலும், தரமும், சுத்தமும் தேவையில்லை என்றேகூட நினைக்கிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் காணப்படும் இந்தப் போக்கு இப்போது தாலுகாக்கள் வரை காணப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம். தொற்று நோய்களின் ஊற்றுக் கண்களாகச் சாக்கடைகள் இருந்த காலம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விடுகின்றன இப்போது இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் உணவு விடுதிகள்.

உணவு விடுதிகளில் போய் சாப்பிடுவது என்பதே கௌரவக் குறைவான, இழிவான விஷயமாக நினைத்திருந்த காலம்போய், வெளியில் போய் சாப்பிடுவது என்பதுதான் நாகரிகம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறோம். அதேநேரத்தில்,தரமும் சுத்தமும் இல்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுவது நமது உடல் நலனுக்குக் கேடு என்பதை நமது அதிகரித்திருக்கும் கல்வி அறிவு ஏன் உணர்த்த மறுக்கிறது? முன்பு சிக்குன் குனியா, இப்போது “டெங்கு’ காய்ச்சல் பரவுவதாகத் தகவல். இதற்கெல்லாம் காரணம், அடிப்படைச் சுகாதாரக் குறைவும், நமது மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு இல்லாமையும்தான். இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டுமல்ல, 39 நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறது. இவ்வளவு நாள்கள், முறையான சுகாதாரக் கண்காணிப்பு இருக்கவில்லை என்பதுதானே இதன் பொருள்? கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது?

எத்தனைபேர் அவதிப்பட்டிருப்பார்கள்? எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்? சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டதே அரசு என்று ஆறுதல் அடைவதைத் தவிர என்னதான் வழி?

Posted in Anbumani, Awareness, Bacteria, bacterial, Clean, College, Consumers, dead, Dengue, Dine, Disease, Doc, doctors, Drinking, Eat, Eatery, Education, employees, Fever, Food, Germs, Hotel, Hygiene, Infection, Inspections, Kareema, medical, Mosquito, Nurses, Purity, Ramadas, Restaurants, Sanitary, SMC, Society, Stanley, Student, Treatment, Viral, Virus, Water, Welfare | Leave a Comment »

Teachers Day Special – Radhakrishnan to APJ Abdul Kalam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம் வரை!

அ. கோவிந்தராஜு

(கட்டுரையாளர்: முதல்வர், டிஎன்பிஎல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கரூர்).

ஓர் ஆசிரியர் தம்மிடம் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆசிரியரின் நடை, உடை, சிந்தனை, சொல், செயல் அத்தனையும் மாணவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூறுகளாகும். பார்த்துக் கற்றல் என்னும் உளவியல் நிகழ்வு மாணவப் பருவம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணர்ந்து, தம் அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

வீட்டுச்சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நன்மாதிரியாக பின்பற்றத்தக்க ஆசிரியர்கள் அமைந்துவிட்டால், சேற்றில் முளைத்த செந்தாமரைபோல மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவார்கள்.

படித்து முடித்து, பணியில் சேர்ந்து, தம் தந்தையின் ஓராண்டு ஊதியத்தை ஒரே மாதத்தில் சம்பாதிக்கும் இளைஞர்கள், அறவாழ்வில் நாட்டமின்றி, மனம்போன போக்கில் வாழும் நிலைகெட்ட மாந்தர்களாக மாறுவதற்குக் காரணம் என்ன? படிக்கும் காலத்தில் பாடஅறிவைப் பெற்ற அளவுக்கு, மனிதநேயக் கல்வியைப் பெறவில்லை அல்லது ஆசிரியர்கள் தரவில்லை என்பதேயாகும்.

“வாடி மனம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள்’ செய்யும் இவர்கள், ஒருகாலத்தில் வகுப்பறையில் பாடம் கற்ற மாணவர்கள்தாம். நாற்றில் கோளாறா, நடப்பெற்ற சேற்றில் கோளாறா? கல்வி நிலையங்கள் எல்லாம் நாற்றங்கால்கள் ஆகும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியப் பெருமக்கள். நாற்றங்கால்கள் பழுதுபட்டால் ஒட்டுமொத்த சமுதாயமே பாழ்பட்டுவிடும். இதை நன்கு உணர்ந்தவர் டாக்டர். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன். வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை அவர் தம் மாணவர்களுக்குக் கற்பித்தார். வழிமுறைகள் சரியாக இருந்தால்தான் முடிவுகள் சரியாக இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர் அவர்.

உண்ணும் உணவு, ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என்கின்றனர் உடற்கூறு வல்லுநர்கள். உடுக்கும் உடை ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என உளவியலார் கூறுகின்றனர். இவ்விரண்டிலும் டாக்டர். ராதாகிருஷ்ணன் மிகுந்த கவனம் செலுத்தினார். 1950-ஆம் ஆண்டு ரஷிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டார். சர்வாதிகாரி ஸ்டாலின் ஆண்ட காலம்; கடுமையான குளிர்நிறைந்த அந்நாட்டில் அவர் எப்போதும்போல எளிய, தூய்மையான உடையணிந்து வாழ்ந்தார். ஒருபோதும் மது, மாமிசம் போன்றவற்றைத் தொட்டதும் இல்லை. சொல்லப்போனால் அந்நாட்டு மரபுப்படி, விருந்துகளில் மது அருந்தியாக வேண்டும். ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் பழச்சாறு மட்டும் அருந்துவார். எந்தவொரு தீயபழக்கமும் இல்லாத முன்மாதிரி பண்பாளர் அவர்.

புனிதமான ஆசிரியப் பணிக்குத் தம் தீயநடத்தை மூலம் களங்கம் சேர்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்ற துறைகளில் ஒரு தவறு நடந்தால் அது அந்தத் துறையை மட்டுமே பாதிக்கும்; ஆனால் கல்வித்துறையில் நடக்கும் தவறு ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும். மற்ற துறைகளின் செழுமையும் செயல்பாடும் கல்வித்துறையின் அறநெறிகளைப் பொருத்தே அமையும் என்பார் கல்வி நிபுணர் டர்க்ஹிம். ஆசிரியர் தினத்தையொட்டி, இவற்றையெல்லாம் ஆசிரியர் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியப் பணியை முதன்மைப் பணியாகக் கொண்டார். தூதராக, குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். இன்று, ஆசிரியர்களில் சிலர் ஆசிரியப் பணியைத் துணைத்தொழிலாகவும், விவசாயம், வணிகம் போன்றவற்றை முதன்மைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர். இவர்கள், சக்தி எல்லாம் தீர்ந்துபோய், சக்கையாக வகுப்பில் நுழைந்தால் எப்படி மாணவர் மனம் கவரும் வகையில் பாடம் நடத்த முடியும்? இந்த நிலை அடியோடு மாறும் நாள் எந்நாளோ?

1964-ல் அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி குழு, ஒழுக்கமும் பண்பாடும் உடையவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது எவ்வளவு இன்றியமையாதது என்பது ஆய்வு மாணவிகளின் சோகக்கதையைக் கேட்டால் புரியும். ஆய்வு ஏட்டில் சில வழிகாட்டிகளின் கையெழுத்தைப் பெறுவதில் சிரமங்கள் பல உள்ளன.

இவர்களை ஆசிரியர்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தம்மிடம் பயிலும் குழந்தைகளுக்கு தாம் இரண்டாவது பெற்றோர் என்பதை எப்போதும் உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

நேர்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு அரசும் சமுதாயமும் உரிய அங்கீகாரத்தை எப்போதும் தரும்; தரவும் வேண்டும். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரையும், ராமேசுவரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற ஆசிரியரையும் குடியரசுத் தலைவர்களாக அமர வைத்து அழகு பார்த்ததே நம் நாடு. இது சமுதாயம் தந்த அங்கீகாரம்தானே?

ஒரு குக்கிராமத்து ஆசிரியருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பற்றி அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். ஈரோடு மாவட்டத்தில் மலையப்பாளையம் என்னும் சிற்றூரில் ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்து ஓய்வு பெற்ற ஓர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு (சொ. அய்யாமுத்து) அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தம் வருவாயில் ஒரு பகுதியை அளித்து, 2400 சதுர அடியில் ஒரு நிலம் வாங்கி நன்றிக் கடனாக வழங்கினார்கள்.

எனவே, பண்டைய குருகுலத்தில் தொடங்கிய ஆசிரியப் பாரம்பரியம் – “சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம்’ வரை பேணிப் போற்றப்பட்ட அந்த ஆசிரியப் பாரம்பரியம் – தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். வணங்கத்தக்க நம் ஆசிரியப் பெருமக்கள் இனி இந்த உணர்வோடு, “இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் புத்துணர்வோடு நாளை வகுப்பிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். செய்வார்களா?

(இன்று ஆசிரியர் தினம்)

Posted in APJ, class, Classroom, Instructor, Kalam, President, Presidents, Professor, Radha, Radhakrishnan, Student, Teach, Teacher | Leave a Comment »

Computer Keyboard for the Visually Challenged – Contest Winner details

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

இது புதுசு: புதிய வெளிச்சங்கள்!

அருவி

கருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்?

புதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:

“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.

கம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து

வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.

மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.

இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும்? அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.

பார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

ஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.

ஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்!

அருவி

Posted in America, Blind, Braille, Challenged, College, Competition, Computer, Contest, Details, Development, Disabled, Dvorak, Engg, Eyes, Feel, Gadget, Handicapped, Indicators, Information, InfoTech, Invention, IT, Keyboard, Keyboards, Keys, Mice, Mouse, Physically, Professors, Project, QWERTY, Research, School, Shorthand, Sight, Steno, stenographers, Student, Tamil, Teachers, Technology, Touch, University, US, USA, Vision, Winner | 2 Comments »

Director Tharani – Story behind the silver jubilee

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

ஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை

எத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’

தில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.

“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

தரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.

சின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.

விவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.

சினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான்! செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.

மணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.

அசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப

இதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.

ஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.

ஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.

இப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.

`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.

நடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.

பூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.

என்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே!

லயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.

அவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.

`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.

எனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.

எல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.

அந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான்! அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.

Posted in Backgrounder, Barathiraja, Bharadhiraja, Bharathiraja, Biography, Biosketch, Chat, Chennai, Cinema, DFTech, Dharani, Dhil, Dhool, Dil, Editing, Editor, Ejamaan, Ejaman, Esamaan, Faces, Filmmaker, Films, Gilli, Institute, Interview, jubilee, Killi, Kodambakkam, Kollywood, Life, Manirathnam, Maniratnam, Movies, people, Rajini, Rajni, RV Udhayakumar, RV Uthayakumar, Selvamani, Story, Student, success, Technology, Telugu, Tharani, Thil, Thirupathisami, Thirupathysamy, Thool, Tollywood, Vikram | Leave a Comment »

Education: Master of Arts in Dance (Interview & Introduction)

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

கல்வி: எம்.ஏ.நாட்டியா!

அஞ்சலி

தமிழகத்தில் நாட்டியக் கலைக்குப் பட்ட மேற்படிப்பு பயிற்றுவிக்கும் ஒரே கல்லூரி என்ற சிறப்பு அடையாறு ஜானகி- எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரிக்கு மட்டுமே உண்டு. எம்.ஏ. நாட்டியா என்ற அந்த ஐந்தாண்டு படிப்பின் துறைத்தலைவராக இருப்பவர் ராஜஸ்ரீ வாசுதேவன். அவரைச் சந்தித்தோம்.

“”இந்த நாட்டியப் படிப்பில் நடனம், இசை, நாடகம் மற்றும் யோகா முக்கியப் பாடங்களாகப் போதிக்கப்படுகின்றன. வரலாறு, தத்துவம், இலக்கியம் ஆகியவை துணைப்பாடங்களாக உள்ளன. உதாரணத்துக்கு சிலப்பதிகாரத்தில் நாட்டியம், இசை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள பகுதிகளை இலக்கியப் பாடங்களாக வைத்திருக்கிறோம். அதே போல தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் கற்பிக்கிறோம். அதில் மெய்ப்பாடு பகுதி நவரசங்களையும் சொல்வதாக இருக்கிறது. வரலாறை எடுத்துக் கொண்டால் சோழ, சேர, பாண்டிய, பல்லவ, விஜயநகர கலைநுட்பங்களைச் சொல்லித் தருகிறோம். தத்துவப் பிரிவில் சைவ சித்தாந்தம், வேதகாலம் ஆகியவற்றில் மிளிரும் கலாபூர்வமான தத்துவக் கோட்பாடுகளைக் கற்பிக்கிறோம். நாட்டிய நாடகங்கள் குறித்த வகுப்புகளும் இருப்பதால் சிறந்த நடிகர்களின் வீடியோ கிளிப்பிங்க்ஸ் காட்சியின் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனிதாரத்னம் போன்றோர் அவர்கள் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பார்கள். அது எங்கள் மாணவிகளுக்குச் சிறந்த நேரடி பயிற்சி அனுபவம். இம் மாதிரி நாட்டிய நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவரும் மாணவர்கள் நிகழ்ச்சியைப் பற்றிய விமர்சனம் எழுதித் தரவேண்டும். அது மாணவர்களின் இன்டர்னல் மதிப்பெண் பட்டியலில் சேர்க்கப்படும்.

நாட்டுப்புறக் கலைகளுக்கும் இதில் முக்கியத்துவம் தரப்படுகிறது. தப்பாட்டம் போன்ற கலைகளும் பயிற்றுவிக்கிறோம்.

எம்.ஏ. படிப்பில் நிகழ்ச்சியை நடத்த தேவையான அரங்க ஏற்பாடுகள், லைட்ஸ், ஆடியோ பற்றியும் பாடங்கள் உள்ளன. இப்போதே எங்கள் கல்லூரி மாணவிகளுக்கு டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கு பெற அழைப்புகள் வருவது எங்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம். இக் கலைத்துறைப் படிப்புக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வெளிநாட்டில் பல கல்லூரிகள் எங்கள் மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கவும் தயாராக இருக்கின்றன” என்கிறார் ராஜஸ்ரீ.

இப் படிப்புக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒப்புதல் வாங்கி நடைமுறைப்படுத்தியவர் லதா ராஜேந்திரன். எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியின் முதல்வராகவும் இக் கல்லூரியின் தாளாளராகவும் செயல்பட்டுவரும் அவரிடம் மேலும் விவரங்களுக்காக அணுகினோம்.

* நாட்டியத்துக்காக இப்படி ஒரு பட்ட மேற்படிப்பை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நான் பத்மாசுப்ரமணியத்தின் நாட்டிய மாணவி. கலாஷேத்ராவில் டிப்ளமோ பயிற்சி நடப்பதுபோல் பட்டப்படிப்பை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். இதை ஐந்தாண்டு இன்டகரேட்டட் பட்ட மேற்படிப்பாக நடத்துவதற்கான முன்வடிவை பத்மாசுப்ரமணியம் உள்ளிட்ட நாட்டியக் கலைஞர்களிடம் விவாதித்தோம். சென்னை பல்கலைக் கழகத்தின் இசைத்துறை தலைவர் ப்ரமிளா குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் சிலபûஸ செழுமைப்படுத்தினோம். இப்படியாக இந்த நாட்டியப் படிப்பு முழுவடிவம் பெற்றது.

* சிலபஸ் தயாரானவிதம் எப்படி?

சென்னை பல்கலைக் கழகத்தின் போர்ட் ஆஃப் ஸ்டடீஸ் மூலம் நாட்டியத் துறையைச் சேர்ந்தவர்கள், நாடகம் வரலாறு, தத்துவவியல், தமிழ்த்துறை, சமஸ்கிருதத்துறை அறிஞர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றனர். ஐந்தாண்டு படிப்பாக இருந்தாலும் மூன்றாண்டு படிப்புக்குப் பிறகு பி.ஏ. இளங்கலையோடும் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் வேறு துறையில் பி.ஏ. முடித்தவர்கள் நாட்டியாவில் முதுநிலை (எம்.ஏ.) தொடர முடியாது.

* எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளியில் படிப்பவர்களுக்கு ஜானகி- எம்.ஜி.ஆர். கல்லூரியில் வாய்ப்பளிக்கிறீர்களா?

கண்டிப்பாக. எங்கள் பள்ளி மட்டுமன்றி மற்ற வாய் பேச

முடியாத, காது கேளாத மாணவர்களுக்கும் வாய்ப்பு தருகிறோம். நாட்டியப் படிப்பில் அவர்கள் பயில்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மற்ற துறைகளில் பயில்கிறார்கள். சென்ற ஆண்டில் மட்டும் இது போன்றவர்கள் 15 பேர் கல்லூரியில் சேர்ந்தனர்.

* உங்களுக்கும் மறைந்த எம்.ஜி.ஆருக்கும் என்ன உறவு?

என் கணவர் ராஜேந்திரன், ஜானகி அம்மாளின் தம்பி.

Posted in Analysis, Anita, Anita rathnam, Anita ratnam, Anitha, Anitha rathnam, Anitha ratnam, Arts, Bachelors, Backgrounder, Culture, Dance, Degree, Education, Graduate, Heritage, Interview, Introduction, M&A, MGR, Padma Subramaniam, Padmasubramaniam, School, Student, Study, Syllabus | Leave a Comment »

How to improve the Quality of output from Educational Instituitions

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

தரமென்னும் தாரக மந்திரம்!

இரா. வெங்கடேஷ்

ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் புதிய சிந்தனைகளும் புதிய வெளிப்பாடுகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

இதை அறிவுசார் சமூகம் உணர்ந்து ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படை ஆதாரம் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மதிப்புற்று இருப்பதுதான்.

நாட்டின் எதிர்காலம் உயர்கல்வி கற்றவர் கையில்தான் உள்ளது என்ற நிலைமாறிவிட்டது. உயர்கல்வியின் எதிர்காலம் உயர்கல்வி நிறுவனங்களின் கையில்தான் உள்ளது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெருகிவரும் கல்வி நிறுவனங்கள் தரமான உயர் கல்வியை வழங்குகின்றனவா? அக் கல்வி சமூகப் பயன்பாட்டைச் சார்ந்துள்ளதா போன்ற வினாக்கள் எழுகின்றன.

லட்சியத்தை அடைவதற்கு வழிகாட்டியாகத் திகழும் உயர்கல்விக்கும், அக் கல்வியை வழங்கும் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

2005 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி

  • 357 பல்கலைக்கழகங்கள்,
  • 17,625 கல்லூரிகள்,
  • 4.72 லட்சம் ஆசிரியர்கள்,
  • சுமார் 67 லட்சம் மாணவர்கள்

என்று இந்தியாவில் உயர்கல்விச் சேவை பல துறைகளில் தொடர்ந்தாலும்

  • உயர்கல்வி பெறுவோர் வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே.

இதற்குக் காரணம் உயர்கல்வியின் தரமின்மை குறைபாடா? அல்லது உயர்கல்வியின் மீது நாம் உரிய கவனம் செலுத்தவில்லையா?
இன்று அறிவு வளர்ச்சிக்குத்தான் உயர்கல்வி நிறுவனங்கள் என்ற நிலை மாறி அதிக வருவாய் ஈட்டத்தான் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றன. தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற சமூக உணர்வு குன்றிய நிலையில்தான் பெரும்பாலும் உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு ஒதுக்கிவரும் நிதியைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்ததா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு தமிழக அரசு உயர்கல்விக்கு ஒதுக்கிய தொகை ரூ. 892 கோடி. இந்த ஆண்டு ரூ. 1,052 கோடி. ஏறத்தாழ ரூ. 160 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் மாணவர்களின் கல்வியறிவை சர்வதேசத் தரத்தில் உயர்த்துவது, குறைந்த செலவில் தரமான உயர்கல்வியை அளிப்பது, வேலைவாய்ப்பு சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கல்வியை வழங்குவது, மாணவர்களை சுயசார்புடையவர்களாக உருவாக்குவது போன்ற அம்சங்களை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால் இன்றைய கல்வி நிறுவனங்கள் மதிப்பெண்களை அளவுகோலாகக் கொண்ட மனப்பாடக் கல்வியை வழங்குகின்றனவே தவிர எதிர்காலச் சமுதாயத்தினரின் சுயசிந்தனை வளர்ச்சிக்கும் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கும் வழிவகை செய்யாமல் தரம் குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

தரமான கல்வி வழங்குவது என்பது குழப்பம் நிறைந்ததாக உள்ளது. காரணம், நம் நாட்டில் பாடத்திட்டம் – நடைமுறை வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றிற்கிடையே பெரும் இடைவெளி உள்ளது. மாணவர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்த வாய்ப்பில்லை.

கல்வி என்பது வெறுமனே பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் உதவும் காரணி அல்ல. வருங்காலச் சமுதாயத்தை வார்த்தெடுக்கும் ஒரு பண்பாட்டு மூலதனம் என்ற அளவில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரசின் தேவையற்ற குறுக்கீடும் அரசியல்வாதிகளின் தலையீடும் குறைக்கப்பட வேண்டும். உயர்கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நிகழும் மாற்றங்களுக்கேற்ப பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கும் – பாடத்திட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அறவே நீக்கப்பட வேண்டும்.

திறமையான, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்விக் கட்டண விகிதம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

உயர்கல்வியில் முறையான, தெளிவான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். கல்வித் தரம் தொடர்பான சுய மதிப்பீட்டு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதும், அதனைச் சோதனைக்குட்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தரமான உயர்கல்வி மட்டுமே நம்மைச் சிந்திக்கவும், திறமையான வகையில் செயல்பட வைக்கவும் முடியும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தரத்தை தாரக மந்திரமாகக் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும்.

உயர்கல்வித் துறையில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பக் கல்வியில் இந்திய இளைஞர்களின் திறமை உலக நாடுகளை வழிநடத்துகிறது. ஆனால் உயர்கல்வி தரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, நீடித்துவரும் குழப்பங்கள் இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும் என அஞ்சப்படுகிறது.

எதிர்காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். அச்சூழலில் கல்வி நிறுவனங்களை நிறுவுவதும், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுப்பதும் மட்டுமே தங்கள் தலையாய கடமை என்ற நிலையில் செயல்படக் கூடாது.

உயர்கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இந்தியாவில் உயர்கல்வி உண்மையான பயன்பாட்டுக் கல்வியாக விளங்க முடியும்.

உயர்கல்வித்தரமும், மாணவர்களின் திறனும், செயலூக்கமும் பன்னாட்டு அளவில் ஒரு சவாலாக இருக்க வேண்டுமெனில் உயர்கல்வி நிறுவனங்கள் தரமென்னும் விதையை தகுதியான நிலத்தில் விதைத்தாக வேண்டுமே தவிர களர்நிலத்தில் அல்ல!

Posted in Admissions, Analysis, Backgrounder, College, Divide, Education, Expensive, Impact, Instituition, Instructor, Needy, Op-Ed, Opinion, Poor, Professor, Rich, School, solutions, Student, Teacher, University, Wealthy | Leave a Comment »

Knowledge Commission suggests to teach English from First Standard to Manmohan Singh

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

1-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்’ பிரதமருக்கு தேசிய கமிஷன் சிபாரிசு

புதுடெல்லி, ஜன.15-

தேசிய அறிவு கமிஷன் தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேற்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க ஆங்கில மொழி அவசியமானதாக இருக்கிறது. எனவே, இந்தியா முழுவதும் 1-ம் வகுப்பில் இருந்து, மாணவர்களுக்கு ஆங்கிலமும், தாய் மொழியும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்து வெளியே வரும் போது, 2 மொழிகளை சரளமாக பேசும் தகுதியை பெற்று விடுகிறார்கள்.

தற்போது 12-ம் வகுப்பு படித்து வெளியேறும் மாணவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச முடிவது இல்லை. ஒரு சதவீத மாணவர்களே சரளமாக பேசுகிறார்கள். 1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுத்தால், இது போன்ற நிலையை மாற்றி விடலாம்.

இது பற்றி, பிரதமர் மன்மோகன்சிங், மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். சாதாரண மாணவர்களும் ஆங்கிலம் பேசும் தகுதியை பெற வேண்டும். இதற்காக தரமான ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்போது உள்ள 40 லட்சம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும்.

1-ம் வகுப்பில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை இப்போதே தொடங்கினால், இன்னும் 12 ஆண்டுகளில், அனைத்து மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசும் தகுதியை பெற்று விடுவார்கள்.

தற்போது 9 மாநிலங்களிலும், 3 ïனியன் பிரதேசங்களிலும், 1-ம் வகுப்பு முதல், மாநில மொழியுடன் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எனவே மற்ற மாநிலங்களில்தான் இந்த திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

=================================================================
சமச்சீர் கற்பித்தலும் அவசியம்

சமச்சீர் கல்வி முறையைத் தமிழகத்தில் அறிமுகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இம்மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கவுள்ளது.

அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி கூறியிருப்பது நடுத்தர வருவாய் பிரிவினருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

பாடத்திட்டத்தில் மட்டும் சமச்சீர் கல்விமுறை என்று நின்றுவிடாமல், சமச்சீர் கற்பித்தல் முறை, சமச்சீர் கட்டணமுறை ஆகியவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், தனியார் பள்ளிகள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் பெயரும் புகழும் சம்பாதித்து பெற்றோர் தங்கள் பள்ளியில் இடம் கேட்டு அலைமோதும்படி செய்யவும், அதன்மூலம் அதிக கல்விக் கட்டணத்தை வசூலிக்கவும் எல்லா வகையிலும் முயல்கின்றன; ஆர்வம் காட்டுகின்றன. தங்கள் நிறுவன மாணவர்களில் சிலரேனும் மாவட்ட அளவில், மாநில அளவில் முதன்மை பெறவேண்டும் என்று ஆர்வம் காட்டுகின்றன. அத்தகைய திறமைமிக்க மாணவர்களைத் தக்கவைத்துக் கொள்ள கட்டணங்களை ரத்து செய்து, சலுகைகள் தந்து, கூடுதல் பயிற்சிகளையும் தருகின்றன. இந்த கூடுதல் கவனமும் அக்கறையும்தான் தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளையும் வேறுபடுத்தி, மிகப்பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டன.

எட்டாம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும் என்பது நியாயமானதுதான். ஆனால், கிராமப்புறப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரிடம், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவரின் திறனில் 50 சதவீதமாகிலும் உள்ளதா என்பதை சோதிப்பதும், திறன் குறைந்திருப்பின் தொடர்புடைய பள்ளி ஆசிரியர்களையும் பொறுப்பேற்கச் செய்வதும் அவசியம். இல்லையெனில், சமச்சீர் கல்விமுறையால் அரசு எதிர்பார்க்கும் பலன் ஏற்படாது.

தமிழ் வழிக் கல்வி அல்லது ஆங்கில வழிக் கல்வி எதுவென்றாலும் ஒரே விதமான பாடத்திட்டம் என்ற நிலையில், கட்டணங்களும் சமச்சீராக இருப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பத்தாம் வகுப்புக்கே ரூ.15 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தப் பள்ளிகள் உயர் வருவாய்ப் பிரிவினர், பணம்படைத்தோர் மட்டுமே அணுகக்கூடியவையாக உள்ளன. வசதிகள் அடிப்படையில் ஓட்டல்களுக்கு “ஸ்டார்’ அந்தஸ்து தருவதைப்போல, (கல்வியும் வியாபாரம் ஆகிவிட்டதால்) கல்வி நிறுவனங்களுக்கும் அவை பெற்றுள்ள வசதிகளுக்கேற்ப “ஸ்டார்’ அந்தஸ்து தந்து, அவர்கள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணங்களையும் அரசே நிர்ணயிக்கலாம்.

சமச்சீர் கல்வி முறையால் பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரேவிதமான பாடத்திட்டம் வகுக்கப்படும்போது, இவர்களுக்கான புத்தகங்களை வாங்குவதில் பெற்றோருக்கு அதிக சிரமம் இருக்காது. தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள், நிறைய புத்தகங்களை-அவர்கள் குறிப்பிடும் நிறுவன வெளியீடுகளை-வாங்கும்படி கட்டாயப்படுத்துகின்றன. புத்தகத்தின் விலையும் அதிகம். ஆனால் அவற்றில் பெரும்பகுதி பாடங்கள் தேவையில்லை என்று விலக்கப்படுகின்றன. இதனால் பெற்றோருக்குத்தான் தேவையற்ற கூடுதல் செலவு.

சமச்சீர் கல்விமுறை வரும்போது, வியாபார நோக்கமுள்ள கல்வி நிறுவனங்கள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை புகழ்ந்து, அதற்கு மாறி, பெற்றோரை தங்கள்பக்கம் இழுக்கும் அபாயமும் இல்லாமல் இல்லை. ஆகவே, பாடத்திட்டத்தை வகுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

=================================================================

Posted in Analysis, Children, Education, English, Equality, First Standard, GO, Govt, human resource development, Instruction, Kid, Knowledge Commission, Manmohan Singh, Matric, Matriculation, Medium, Mother-tongue, National Institute of Vocational Education Planning and, National Knowledge Commission, NIVEPD, Op-Ed, PM, Private, Schools, Society, Student, Tamil, Tamil Nadu, TamilNadu, Teacher, TN, vocational education and training | Leave a Comment »

AIIMS student failed due to Director Venugopal’s Vindictive action

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

“எய்ம்ஸ்’ மாணவர் அமைச்சர் அன்புமணியிடம் புகார்: தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது பாரபட்சம் என புகார் கூறியதால் தேர்வில் தோல்வி

புதுதில்லி, ஜன. 15: தில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இறுதி ஆண்டு படித்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் அஜய் குமார் சிங், இறுதித் தேர்வில் தம்மை வேண்டும் என்றே நிர்வாகத்தினர் தோல்வி அடையச் செய்துவிட்டதாக புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரும். எய்ம்ஸ் தலைவருமான அன்புமணிக்கும், யு.ஜி.சி. தலைவர் தொராட்டுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தாம் வெளிப்படையாகப் புகார் கூறியதால் தம்மை தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஆர்.கே.தேவ்ரால், அஜய் குமார் சிங்குக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தேர்வில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதுவதாக அது கருதப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அஜய் குமார் சிங், எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலுக்கும் டீன் ஆர்.சி.டேகாவுக்கும் மற்றொரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மறு தேர்வு டீன் தலைமையில் நடைபெற வேண்டும் என்றும் விடைத்தாள் பாரபட்சமற்ற குழு திருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக பிரச்சினையை எழுப்பினார் அஜய் குமார் சிங். இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை வேண்டும் என்றே தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டனர்’

என்று மருத்துவ விஞ்ஞானிகள் முற்போக்கு அமைப்பைச் சேர்ந்த ஆர்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

மறுதேர்வு நடத்த நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், தேர்வு அதிகாரிகள் பற்றி சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் பிரசாத் குறிப்பிட்டார்.

“எனினும் அஜய் குமார் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படும். இதற்கென தனி தேர்வு குழு அமைக்கப்படும். இது தொடர்பாக இயக்குநருக்கு பரிந்துரைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு வெளியிடப்படும்’ என்று டீன் டேகா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அஜய் குமார் சிங் இதற்கு முன்பு நடந்துள்ள தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். அப்படியிருக்கையில் இறுதித் தேர்வில் 3 பாடங்களில் அவர் தோல்வி அடைந்ததாக தெரிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.கே.பிரசாத்.

மறுதேர்வு நடந்தாலும் மீண்டும் என்னை தோல்வி அடையச் செய்துவிடுவார்கள். எனவே புதிதாக தேர்வு அதிகாரிகளை நியமித்து, புதிய பேராசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த அனுமதிக்க வேண்டும் என்கிறார் அஜய்குமார் சிங்.

குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மருந்துகள் ஆகிய 3 பாடங்களில் சிங் தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17-ம்தேதி சிங் உள்பட வேறு 7 பேருக்கும் சேர்த்து மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த 7 பேரில் 6 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

Posted in AIIMS, Ajay Kumar Singh, All-India Institute of Medical Sciences, Anbumani, Anbumani Ramados, anti-reservation, Dr. P. Venugopal, Education, Exam, fail, floating reservation, Progressive Medicos and Scientist Forum, Ramadas, RC Degha, Reservation, RK Devral, RK Prasad, SC/ST, Student, UGC, Venugopal | Leave a Comment »

No more Entrance Exams – Will it benefit Rural Students?

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

“”தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா?”

அ.கி. வேங்கடசுப்ரமணியன்

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் “”கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் (கங்ஸ்ங்ப் டப்ஹஹ்ண்ய்ஞ் ஊண்ங்ப்க்) உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதை எளிதாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கிராமப்புற நகர்ப்புற வேறுபாட்டைத் தவிர அரசு சார்ந்த பள்ளிகள், அரசு சாராத பள்ளிகள் என்ற வகையில் பெருத்த வேறுபாடு உள்ளது.

அரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்ற அரசு சார்ந்த பொதுத்துறை பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவையும் உள்ளன.

கிராமப்புறத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.5 லட்சம்.

தனியார் பள்ளியில் 1.01 லட்சம்.

நகர்ப்புறத்தில் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 0.82 லட்சம்.

தனியார் பள்ளியில் 1.76 லட்சம்.
கிராமம், நகரம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 சதவீத மாணவர்கள் அரசு சார்ந்த பொதுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.

பள்ளியிறுதி வகுப்பில் தேறியவர்களின் சதவீதம், கிராமப்புற, நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையில் சிறிதும், அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத பள்ளிகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகிறது.

2006ஆம் ஆண்டு இவ்வகையில் தேர்ச்சி சதவீதம் 2006ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர் சதவீதம்

கிராமப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 61. 14 சதவீதமும்,

தனியார் பள்ளிகள் 83.71 சதவீதமும்,

நகர்ப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 62.70 சதவீதமும்,

தனியார் பள்ளிகள் 85.76 சதவீதமும் பெற்றுள்ளன.
கிராமமோ, நகரமோ இரண்டிலுமே பொதுத் துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைவிட பெரிதும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பொதுத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். வசதி உள்ள குடும்பத்தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ படித்திருப்பார்கள். குழந்தைகளின் படிப்பிற்கும் வீட்டுப் பாடத்திற்கும் உதவி செய்வார்கள்.

ஆனால் பொதுத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே பெற்றோராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளும் குறைவு. அதைப் பற்றி சமூகத்தின் ஆர்வமும் அக்கறையும் குறைவு.

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களும் அவர்களுக்கு என வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளில் படித்துத் தேறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்ற 6300 மாணவர்களில், 5600க்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். இவர்களில் எத்தனை பேர் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

மொத்தம் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 3.84 லட்சம் பேரில் முதல் 10 சதவீதம் அதாவது முதல் 38400 இடங்களில் எத்தனை கிராமப்புற / நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும் இடங்களை ஒதுக்கினாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். இதற்கு என்ன செய்ய முடியும்?

முதலில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், நூலகங்களில் தேவையான புத்தகங்கள், ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான கருவிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநகராட்சியும் தான், வசூலிக்கும் கல்வி வரியை முழுவதுமாக கல்விக்காகச் செலவிட்டால், நிச்சயமாகச் சிறந்த தனியார் பள்ளிக்கு இணையாக பொதுத்துறை பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும்.

கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசே தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலே கூறியவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கியப் பிரச்சினையும் உள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் 17 வயது நிரம்பியவர்கள். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டு சுமார் 11.91 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மாநில பாடத்திட்ட மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.22 லட்சம்தான்.

மைய பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) எழுதியவர்கள் சுமார் 4500 பேர். எனவே 17 வயது நிரம்பியவர்களில் பாதிப்பேருக்கு மேல் பள்ளியிறுதித் தேர்வை எழுதவில்லை. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.

கிராமப்புற மக்கள்தொகை நகர்ப்புற மக்கள்தொகையைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகம் இருந்தாலும், கிராமப்புறங்களில் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தைவிட குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பள்ளிப் படிப்பை இறுதி வரை தொடராமல் இடையிலே விடுபடுதல்.

எனவே கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், இளைஞர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் இவை அனைத்தும் ஊராட்சியுடன் இணைந்து இந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள் இருக்கும் விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதேபோல் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதத்துக்கும், தரவரிசையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர வேண்டும்.

இவை இரண்டையும் செய்யாவிட்டால் நுழைவுத் தேர்வு ரத்து ஆனாலும், இட ஒதுக்கீடு இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் “”நுழைவுத் தேர்வு இல்லை. ஆனாலும் நுழைய முடியவில்லை” என்ற நிலையே தொடரும்.

தொலைநோக்குக் கல்வி

கி. இராசா

மக்களுக்குக் கல்வி வழங்குவதில் பல முறைகள் உள்ளன. நேரடியாக வகுப்பறையில் வழங்கப்படும் கல்விமுறை; அஞ்சல் வழியாக வழங்கப்படும் கல்விமுறை. அடிப்படைக் கல்வியை ஓரிரு ஆண்டுகள் தந்து உயர்கல்வி தரும் திறந்தநிலைக் கல்விமுறை.

இக் கல்விமுறைகள் அனைத்தும் “உயர்கல்வியைப் பரவலாக்குவது’ என்ற நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டவை. ஆனால் உயர்கல்வியைப் பெறுவதற்கு முன்பாகவே அதற்கு முந்தைய அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வி பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அடிப்படைக் கல்வி யாருக்கு வழங்கப்படுகிறதோ அந்தப் பயனாளிகளுக்கு அது சரியாகச் சென்று சேர்கிறதா? என்றும், அதனால் அவர்கள் பயன் பெறுகிறார்களா? என்றும் அக்கறையோடு மீள்பார்வை செய்வதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

இத்தகு மீள்பார்வை முறைகளோ, சுயமதிப்பீட்டு முறைகளோ இல்லையென்றால் “முழு எழுத்தறிவு இயக்கம்’ என்பது “வயலில் நிறுத்திய வைக்கோல் பொம்மை’ போலத்தான் பயன்தரும்!

ஒரு சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி வழங்கப்படுகிறது. ஆண் பெறுகின்ற கல்வி, அவனுக்கும் அவனையொத்த பிறருக்கும் பயன்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இப் பயன்பாடு அவன் வாழும் தலைமுறையால் உணரப்படுகிறது.

பெண் பெறுகிற கல்வியோ, வாழும் தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. வரலாற்றில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி இத்தகு தொலைநோக்குப் பயன்பாடு உடையது என்பதால்தான் இதனைத் “தொலைநோக்குக் கல்வி’ என்கிறோம்.

ஒரு சமுதாயம் வளமான சமுதாயமாகத் திகழ வேண்டுமென்றால் அங்கு பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில் அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்பதுவே இப்போதுள்ள குற்றச்சாட்டு.

அனைத்துலக மாணவர்களின் கல்வியறிவு பற்றிய மதிப்பீட்டறிக்கையில் தாய்மார்கள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்த தாய்மார்களின் பிள்ளைகள், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட தாய்மார்களின் பிள்ளைகளைவிட அறிவைப் பெறுவதில், பெற்ற அறிவைப் பயன்படுத்துவதிலும் பல நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அதேசமயத்தில் சமுதாயத்திலும் பணியிடத்திலும் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணம் விகிதாசாரக் குறைவாகும்.

1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் பெண்களுக்குக் கல்வி தருவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கையின் காரணமாக 15 சதவீதம் மட்டுமே உயர்த்த முடிந்தது. நாடு முழுவதும் இன்னும் 19 கோடி பெண்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலை. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 51 சதவீதமாக இருந்த இந்த நிலை 2001ல் 64 சதவீதமாக அதாவது 13 சதவீதம் – கூடுதல் பெற்றுள்ளது. இது தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி ஆகிய நான்கு கட்டக் கல்விகளைப் பெறுகின்ற மொத்தப் பெண்களின் விகிதாசாரமாகும்.

பெண்கள் அதிக அளவில் கல்வியறிவு பெற முடியாமல் போவதற்குச் சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் வயதுக்கு வந்து விடுவதாகும். இந்த இயற்கை நிகழ்வு அவர்களுக்குப் பாதகமாக அமைந்து விடுகிறது. முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கக்கல்வி பெறும் சிறுமியர்களில் 38 – 67 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கிராமப்புறங்களில் இது 10, 11 வயதுகளிலேயே நிகழ்ந்து விடுகிறது. இதையும் மீறி 8ஆம் வகுப்புவரை பயிலும் சிறுமியர்களில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் திருமணம் மற்றும் இதர காரணங்களுக்காக பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே முடித்து விடுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இவ்வாறு சிறுவயதில் பெண்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் போவதற்கு அவர்களின் பெற்றோரே முக்கியக் காரணமாகின்றனர். கல்வியறிவு பெறாத பெற்றோர்கள் அந்த நேரத்திற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார்களே ஒழிய, தங்கள் மகளைப் பற்றிய நெடுநோக்குப் பார்வை அவர்களுக்கு இல்லை. இதனால் பெண்ணைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின்ற அவலமும் நிகழ்ந்து விடுகிறது. கல்வி அறிவைப் பெறாத நிலையில் சிறுமியரின் வாழ்வு சீர்கேடாகிறது.

ஒரு நாடு, இன்றைய காலகட்டத்தில் அதிகமாகப் பேசப்படும் அல்லது வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதப்படும் அறிவுச்சந்தையில் சவால்களைச் சந்திக்க வேண்டுமென்றால் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெற வேண்டும் என்பதை அறிவு வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் இணைத்துப் பார்க்கும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு உயர்கல்வியில் “பெண்களுக்கு உகந்த படிப்பு இது; ஆண்களுக்கு உகந்த படிப்பு இது’ என்று பிரித்துப் பார்க்கும் “பால் மையக் கல்வி’ போக்கையும் கைவிட வேண்டும் என்று அவர்கள் உறுதிபடச் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் இன்றியமையாததாக “பால்வேறுபாடு கூடாது’ என்ற முழக்கம் கல்வி நிலையில் முதன்மைப்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் உண்மையான முழுக் கல்வியைப் பெற முடியும்.

இன்றைய நிலையில் கல்வி என்பது வகுப்பறையோடு நின்று விடுவதில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகும் அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இன்றைய கல்வியாளர்களால் வாழ்நாள் கல்வி என்று அழைக்கப்படுகிறது.

வாழ்நாள் கல்வியால் அறிவுப்புரட்சியையும் அதன்வழி, பொருளாதார நிலைபேற்றையும் ஒரு நாடு அடைய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கான சில செயல்முறைத் திட்டங்களை மேலும் காலம் தாழ்த்தாது இப்போதிருந்தே வகுக்க வேண்டும்.

இதன் முதற்கட்டமாக, வளமான எதிர்காலத்திற்கு ஒரு நாட்டை இட்டுச் செல்வதற்கான ஆற்றல் வாய்ந்த பெண் கல்வியில் தொடக்க நிலையிலிருந்தே குறைபாடுகள் களையப்பட வேண்டும். தொடக்கக் கல்வியில் சிறுமியர்கள் கல்வி “இடைவீழ்ச்சி’ அடைவதற்கான காரணங்கள் என்னவென்று கண்டறிதல் வேண்டும். கண்டறிந்த உண்மைகளின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கான முனைப்பு இயக்கம் ஒன்றை அந்தந்தப் பகுதிப் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

இது அரசு இயக்கமாக இல்லாமல் மக்களின் விருப்ப இயக்கமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக, கல்வி வழங்குவதில் பால்வேறுபாட்டைக் களைய வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக தாய்மார்களுக்குக் கல்வி வழங்குவதற்கென கல்வியாளர்களைக் கொண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொடக்கநிலையில் சிறுமியர்கள் பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் அவலம் தொலையும்.

இவ்வாறு தொலைநோக்குப் பார்வையோடு படிப்படியாகப் பெண்கல்வித்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் 15 ஆண்டுகளில் – அதாவது 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் நிலைபெற்ற நாடாகவும், அறிவுச்சந்தையில் வளம்பெற்ற நாடாகவும் உருவாகும் சூழல் வெகுதொலைவில் இல்லை.

(கட்டுரையாளர்: பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்).

Posted in Action Plan, Admissions, Advices, Age, Ak Venaktasubramanian, AK Venkatasubramanian, Bachelors, Children, City, Degree, Dinamani, Divide, Education, Engineering, Entrance Exam, Female, Girl, High School, Higher Studies, Human Resources, JEE, Ki Rasa, Kids, Kindergarten, Knowledge, Masters, medical, Money, Op-Ed, Opinion, Primary, professional, Rich vs Poor, Rural, Secondary, Strategy, Student, Students, Study, Suggestions, Tamil Nadu, Teacher, Technology, TN, TNPCEE, Urban, Village, Women | Leave a Comment »

Racial Crime kills Medical Student in Russia

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

மருத்துவ மாணவர் கொலை: இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ரஷியாவிடம் கோரிக்கை

புதுதில்லி, செப். 29: இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ரஷியாவில் நிறவெறியர்களால் கடந்த 4 நாள்களுக்கு முன்பு இனப்படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷிய அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

கொலை செய்யப்பட்ட இந்திய மருத்துவ மாணவர் நிதீஷ் குமார் சிங்கின் உறவினருடன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறது.

மெக்னிகோவ் மருத்துவ அகாதெமியில் நிதீஷ் குமார் சிங், இறுதியாண்டு மருத்துப் படிப்பு படித்து வந்தார். அவரது உடலைப் பெற இந்தியத் தூதரக அதிகாரிகள் அகாதெமியின் மாணவர்கள் தங்கும் விடுதிக்குச் சென்று உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

விடுதி அருகே நிதீஷ் குமார் சிங், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்திய மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டு ஏப்ரலில் இதே இடத்தில் இந்திய மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். ஆனால், அவர் உயிர்பிழைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Consulate, Doctor, Final year, Hate Crime, Hatred, Medicine, Nitish Kumar Singh, Racist, Russia, St Petersburg, Student, Tamil | 1 Comment »