Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘College’ Category

Women in Politics – DMK, Thamizhachi, Thankam Thennarasu, Mu Ka Azhagiri

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

Host unlimited photos at slide.com for FREE!
அரசியலில் குதிக்கும் அமைச்சரின் அக்கா

தி.மு.க.காரர்களுக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தேர்தலில் தாய்மார்களின் ஆதரவு அவர்களுக்குக் கணிசமாக இல்லாதிருப்பதும், அவர்களின் பொதுக் கூட்டம், மாநாடுகளுக்குப் பெண்கள் திரளாக வராததும், அவர்களை அடிக்கடி கவலைக்குள்ளாக்கும். வாக்குப் பதிவு நாளன்று ‘தாய்மார்கள் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்’ என்று செய்தி வந்தால் உடன்பிறப்புகளுக்குக் கலக்கம் வந்துவிடும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி.ஆர். தனிக் கட்சி கண்ட
பிறகு கலக்கமும் வருத்தமும் அவர்களுக்கு இன்னமும் அதிகமாயின. தி.மு.க.விலும் சத்தியவாணி முத்துவுக்குப் பிறகு பெயர் சொல்லும்படியான ஒரு முன்னணித் தலைவர் வரமுடியவில்லை. அண்ணா காலத்தில் பூங்கோதை – அருள்மொழி என்கிற இரு பெண்கள் தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சொற்சிலம்பம் ஆடி கட்சியை வளர்த்தார்கள்.

  • அலமேலு அப்பாத்துரை,
  • சற்குண பாண்டியன்,
  • சுப்புலட்சுமி ஜெகதீசன் (அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்)

ஆகியோர் தி.மு.க.வில் குறிப்பிடத்தக்க பெண் பிரமுர்கள். பல்வேறு கட்டங்களில், பெண் களுக்கு ஆதரவாகப் பல சட்டங்களை கருணாநிதி கொண்டு வந்தாலும் தாய்மார்களிடம் ஆதரவு பெருகவில்லை. இந் நிலையில்தான் அரசியலில் நேரடியாகக் குதித்தார் கனிமொழி. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு நடந்த மகளிர்இட ஒதுக்கீடு பேரணியில் கணிசமாகவே பெண்கள் திரண்டு வந்திருந்தனர். இப்போது கனிமொழிக்குத் தோள் கொடுக்கும் தோழியாக அரசியல் களத்தில் குதித்திருக்கிறார் கவிஞர் தமிழச்சி. சேர்ந்தவுடனேயே, நெல்லை இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பு தமிழச்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்கால அரசியலில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைவிட, அவரது அரசியல் எதிர் காலம் என்பது தி.மு.க. அதிகார மையங்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைய விருக்கிறது. ஆனால், படித்த, நல்ல பொறுப்பில் இருந்த தமிழச்சி, அரசியலில் குதித்ததை கவிஞர்கள், படைப்பாளிகள் இருகரம் தட்டி வரவேற் கிறார்கள்.

“நமது அரசியலில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நிறைய வர வேண்டும். அதுவும் கல்வியைப் பின்புலமாகக் கொண்டவர்கள் வந்தால், மக்கள் பிரச்னைகளைச் சுலபமாகப் புரிந்துகொள்வதுடன் தீர்வும் காண முடியும். காலப்போக்கில் பொரிய மாற்றம் வரும். பல நாடுகளில் படைப்பாளிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழச்சியின் அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே” என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

தி.மு.க. நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்க வேண்டுமென்று முனைந்து, இப்போது துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார் சற்குண பாண்டியன். மாவட்ட அளவிலும் பல பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஸ்டாலின் முன்னணிக்கு வரும்போது, கனிமொழிக்குத் துணைப் பொதுச் செயலாளர் அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வகையில் ஏற்றத்தைக் கணிக்கும்போது தமிழச்சிக்கும் நல்வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

“தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாகவே முரசொலியில் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதிக் கொண்டிருக்கிறார். பல தலைவர்கள், புரட்சியாளர்கள் செய்த தியாகங்களை எடுத்து வைத்து, அவர்களை இளைய தலைமுறை வழிகாட்டிகளாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த எழுச்சியூட்டும் கடிதங்கள் தமிழச் சியை உடனடியாக அரசியலில் குதிக்கத் தூண்டியிருக்கலாம். அவரைப் போன்ற அறிவுஜீவிகள், படைப்பாளிகள் அரசியலுக்கு வந்துகொண்டே இருக்க வேண் டும்” என்கிறார் கவிஞர் சல்மா.
—————————————————————————————————-

எந்தவிதப் பின்புலமும் இல்லாத தனிப்பட்ட பெண்கள், ஏன் ஆண்களேகூட அரசியலில் முன்னணிக்கு வர முடிவதில்லை. தி.மு.க. அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள் ஆகியோ¡ரின் மகன், மகள், பேரன், பேத்திகள் ஆகியோர்தான் இளைய தலைமுறை பிரமுகர்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் வலம் வருகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அரசியல் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பொரியவர்களானவுடன் அரசியலில் நுழைவது எளிதாக இருக்கிறது.

“தமிழச்சி போன்று அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு வேறுவிதமான போராட்டங்கள் இருந்திருக்கும். தமிழச்சி அறிவுசார்ந்த துறையிலிருந்து அரசியலுக்கு வருகிறார். இது மிக நல்ல விஷயம். இவரைப் போல் நிறைய பேர் வரணும். அரசியல் கட்சிகளும், பெண்களுக்குப் பொறுப்புகளில் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்” என்கிறார் கவிஞர் இளம்பிறை.

“அரசியல் பின்னணி, ஒருவர் முன்னுக்குவர உதவியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒருவர் தமது சொந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளா விட்டால், நிலைத்து நிற்க முடியாது என்பதையும் உணர வேண்டும். தங்கம் தென் னரசு தான் அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று இப்போது நிரூபித்து விட்டார். அதேபோல, தமிழச்சிக்கும் செயல்படும் வகையில், முடிவுகள் எடுக்கும் பொறுப்புக் கொடுத்தால் அசத்துவார்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

“அரசியல் முகம் வன்முறைமயமாகத் தோற்றமளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ¨தாரியமாகக் களம் இறங்கியுள்ள தமிழச்சி பாராட்டுக்கு¡ரியவர். தி.மு.க. போன்ற பொரிய இயக்கங்கள் நிர்வாகப் பொறுப்பு மற்றும் கொடியேற்றும் கௌரவத்தைப் பெண்களுக்குக் கொடுப்பது மற்ற இயக்கங்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்” என்றும் சொல்கிறார் அவர்.

தமிழச்சி பேராசி¡ரியர் பதவியை ராஜி ¡மா செய்துவிட்டு அரசியலில் குதித்தது, வேறுவிதமான கவலையை ராணிமோரி கல்லூ¡ரி ஆங்கிலத் துறை பேராசி¡ரியர்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.

“எங்கள் துறையில் 32 பேர் இருந்தோம். இப்போது பதினான்கு பேர்தான் இருக்கிறோம். மற்றபடி சுமதி ஒரு நல்ல கவிஞர்; பழகுவதற்கு இனியவர். கடந்த இரண்டு வருடங்களாகப் பாடம் எடுப்பதை நிறுத்திவிட்டு ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருக்கிறார். நல்ல வாய்ப்பு வரும்போது அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்லி வந்தார். அவருக்குப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் என்கிறார்கள்” பேராசி¡ரியர்களான மாலதியும், மாலினியும்.

– ப்¡ரியன்
———————————————————————————————–

மு.க.அழகி¡ரி மதுரைக்குப் போய் செட்டிலான 1980களின் இறுதியில், உள்ளூர் தி.மு.க. தலைவர்கள் ‘எதிர்காலத்தில் இவர் எப்படி வருவாரோ?’ என்று தொரியாமல் அவரைவிட்டுக் கொஞ்சம் தூரம் மாரியாதையுடன் தள்ளி நின்றனர். அந்தச் சமயத்தில் அழகி¡ரியிடம் பாசம் காட்டிப் பழகிய சிலாரில், சுமதி என்கிற தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியனும் ஒருவர்.

ராமநாதபுரம் (விருதுநகரம் உள்ளடக்கிய) மாவட்டத்தில் கழகத்தை வளர்த்ததில் சுயமாரியாதைக்காரரான தங்கபாண்டியனுக்கு முக்கிய இடம் உண்டு. தங்கபாண்டியன் குடும்பத்துக்கும், அழகி¡ரி குடும்பத்துக்கும் இடையே உண்டான பாசம் கலந்த நட்பு இன்றுவரை தொடர் கிறது. தங்கபாண்டியன் மறைவுக்குச் சில காலத்துக்குப் பின் தங்கம் தென்னரசுவை அரசியலில் கொண்டு வந்து அமைச்சராக அழகு பார்த்தார் அழகி¡ரி.

இன்று அவரது அக்கா தமிழச்சிக்கும் அரசியலில் ஒரு நல்ல தளத்தை உருவாக்கும் விதத்தில், பின்னணியாக இருக்கிறார்.

தி.மு.க. குடும்பப் பின்னணி, இலக்கிய ஆர்வம் போன்றவை இயல்பாகவே கனிமொழியிடம் தமிழச்சிக்கு நெருக்கத்தைக் கொண்டு வந்தது. இன்று தி.மு.க.வில் இருக்கும் இரு அதிகார மையங்களுக்கிடையே, தமிழச்சி பாலமாக இருக்கிறார் என்று சொன்னால், அது மிகைப்படுத்தல் இல்லை. ‘வனப்பேச்சி’ மற்றும் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்கிற இவரது கவிதைத் தொகுப்புகள் வந்திருக் கின்றன.

இவருக்கு மேடை நாடகங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. பிரசன்னா ராமசாமியின் பல நவீன நாடகங்களில் நடித்திருக்கிறார் தமிழச்சி.

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் பற்றி டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் சந்திரசேகர், காவல் துறையின் நுண்ணறிவுத் துறையில் பணியாற் றும் அதிகா¡ரி. ஜெ. அரசு ராணிமோரிக் கல்லூ¡ரி இடத்தைத் தலைமைச் செயலகத்துக்காக எடுக்க முயன்ற போது நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டபின், ‘சிவகங்கைக்கு மாற்றிவிடுவோம்’ என்று பயமுறுத்திப் பார்த்தார்களாம்.

2006-ல் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் அரசு குடியிருப்பைக் காலி செய்ய அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். “நான் திடீரென்று அரசியலில் குதிக்கவில்லை. ஏற்கெனவே இடஒதுக்கீடு தொடர்பான மகளிர் பேரணி மற்றும் சேது சமுத்திரம் பிரச்னையில் உண்ணா விரதம் ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறேன். அரசியல் என் இரத்தத்திலேயே ஊறியதுதானே” என்று நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தமிழச்சி.

எதிர்கால தி.மு.க. அரசியலில் யார் யாருக்கு எந்தெந்த பாத்திரங்கள் என்று சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது போல் கழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சதுரங்கக் கட்டத்தில் ஒருவராக இணைந்து விட்டார் தமிழச்சி. இதுபோன்ற புதியவர்களின் வரவு கட்சியின் களப்பணியாளர்களிடையே அதிருப்தி, பி¡ரிவினை போன்றவற்றைத் தோற்றுவிக்க வாய்ப்புகள் அதிகம்.

அவற்றை எதிர்கொண்டு அனைவரையும் அரவணைப்பதுடன், இந்தப் படித்த புதுவரவுகள் லஞ்ச – ஊழலற்ற சூழலுக்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தினால்தான் தமிழகம் வாழ்த்தும்.

——————————————————————————————————————————————————

தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இன்று பேசுவோரும், அவர்களின் தலைப்புகளும்

திருநெல்வேலி:நெல்லையில் நடைபெறும் தி.மு.க., மாநில இளைஞரணி மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று மொத்தம் 28 சிறப்பு பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.

அது குறித்த விவரம்:

1.இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி திருச்சி சிவா எம்.பி.,

2. மகளிர் முன்னேற்றத்தில் தி.மு.க., கவிஞர் கனிமொழி எம்.பி.,

3. சேது சமுத்திரத்திட்டம் நுõற்றாண்டு கனவு சபாபதி மோகன்

4.கலைஞர் ஆட்சியில் சமூக நலப்பணிகள் ச.தங்கவேலு

5. கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா! குத்தாலம் அன்பழகன் எம்.எல்.ஏ.,

6. சமத்துவபுரங்களும் சாதி ஒழிப்பும் வி.பி.,இராசன்

7. உலகை குலுக்கிய புரட்சிகள் கோ.வி.,செழியன்

8. நீதிக்கட்சி தோன்றியது ஏன்? நெல்லிக்குப்பம் புகழேந்தி

9.இந்திய அரசியலில் தி.மு.க., புதுக்கோட்டை விஜயா

10. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு தாயகம் கவி

11. புதிய புறநானுõறு படைப்போம்! கரூர் கணேசன்

12.வீழ்வது நாமாக இருப்பினும்,வாழ்வது தமிழாக இருக்கட்டும்! தாமரை பாரதி

13.வர்ணாசிரமத்தால் வந்த கேடு தஞ்சை காமராஜ்

14. பெண்ணுரிமை பேசும் திருநாட்டில் தாட்சாயணி

15. திராவிட இயக்கப் பயணத்தில் ஈரோடு இறைவன்

16. சிறுபான்மை சமுதாய காவல் அரண் கரூர் முரளி

17. சமூக நீதிப்போரில் தி.மு.க., திப்பம்பட்டி ஆறுச்சாமி

18. அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம் சரத்பாலா

19. மத நல்லிணக்கமும், மனித நேயமும் சைதை சாதிக்

20. சாதி பேதம் களைவோம்! வி.பி.ஆர்., இளம்பரிதி

21. திராவிட இயக்க முன்னோடிகள் குடியாத்தம் குமரன்

22. அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்வோம்! சென்னை அரங்கநாதன்

23. உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கந்திலி கரிகாலன்

24. கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி! புதுக்கோட்டை செல்வம்

25. தமிழர் நிலையும் கலைஞர் பணியும் கனல் காந்தி

26. திராவிட இயக்கமும் மகளிர் எழுச்சியும் இறை.கார்குழலி

27.தீண்டாமையை ஒழிக்க சபதமேற்போம்! திருப்பூர் நாகராஜ்

28. மனித உரிமை காக்கும் மான உணர்வு! வரகூர் காமராஜ் >

——————————————————————————————————————————————————

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுச் சிறப்புகள்

> நெல்லையில் நேற்று (15.12.2007) தொடங்கிய தி.மு.க. இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் 31 மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணியினர் சீருடையில் அணிவகுத்துச் சென்றனர்.

> நெல்லை மருத்துவக் கல்லூரி மய்தானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர் ஆகும்.

> மாநாட்டுத் திடலில் முன் முகப்பு 60 அடி உயரத்தில், 500 அடி நீளத்தில் கோட்டை வடிவ முகப்பு போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் முன்பு கலைஞரின் வயதைக் குறிக்கும் வகையில் 84 அடி உயரக் கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தி.மு.க. கொடி பட்டொளி வீசிப் பறந்தது.

> மேலும் மாநாட்டின் முன்பு 84 அடி உயரம் 444 அடி அகலத்தில் பனை ஓலையால் வேயப்பட்ட பந்தல் முன் முகப்பு வடிவமைக்கப்பட்டுப் பேரழகுடன் திகழ்ந்தது.

> மாநாட்டுப் பந்தல் 500 அடி நீளம், 450 அடி அகலத்தில் மழை பெய்தால் ஒழுகாத வண்ணம் பிரம்மாண்ட இரும்புப் பந்தலாக உருவாக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்தது.

> பந்தலின் உள்புறம் வெல்வெட் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு செயற்கை மலர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.

> தலைவர்கள் பங்கேற்றுப் பேசும் மேடை 70 அடி நீளம், 60 அடி அகலம் 5. 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அதில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒரு நட்சத்திர மாளிகை போன்று மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

> மாநாட்டில் தொண்டர்களுக்கு 30 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சுற்றுப் புறங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு 120 ஏக்கர் நிலம் சீர் செய்யப்பட்டு அமைக்கப் பட்டிருந்தது.

> நெல்லை நகரில் கண்ணைக் கவரும் வகையில் 55 மின் ஒளிக் கோபுரங்களும், ஆர்ச் தகடும் வைக்கப்பட்டிருந்தன. இது தவிர ஊர்வலம் சென்ற பாதையில் பல்வேறு மாவட்டங்களின் சார்பில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

Posted in ADMK, Anna, Arulmoli, Arulmozhi, Arulmozi, College, DMK, Elections, Females, Ilampirai, Instructors, JJ, Kalainjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavinjar, Ladies, Lady, Literature, Manushyaputhiran, MGR, MK, Nellai, Poems, Poets, Polls, Poongothai, Poonkothai, Professors, QMC, Queen Marys, Raani Mary, Rani Mary, Rani Mary College, Ravikkumar, Ravikumar, Reservations, Salma, Sarguna pandian, Sarguna pandiyan, Sargunapandian, Sargunapandiyan, Sarhunapandiyan, Sathiavani Muthu, Sathiavanimuthu, Sathiyavani Muthu, Sathiyavanimuthu, She, Teachers, Thamilachi, Thamizachi, Thamizhachi, Thangam, Thangam Thennarasu, Thennarasu, Tirunelveli, Votes | Leave a Comment »

Dr MGR Engineering College & Research Institute – AC Shanumgam Educational Organizations to pay 80 lakhs

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2007

ஏ.சி.சண்முகம் கல்வி நிறுவனம் ரூ.80 லட்சம் செலுத்த உத்தரவு

சென்னை: புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ரூ. 80 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தினால், வீட்டு வசதி வாரிய வீடுகளில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு சொந்தமான டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் சார்பில் பொறியியல் கல்லுõரி, கலை மற்றும் அறிவியல் கல்லுõரி என சில கல்லுõரிகள் செயல்பட்டு வருகின்றன.

2005ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அடை மழையினால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரவாயலில் உள்ள இந்த கல்லுõரி விடுதியை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மாணவர்களை அங்கிருந்து காலி செய்து முகப்பேரில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். கல்லுõரி கட்டடங்களில் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அதனை இடித்தனர்.

தற்போது எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

கூவம் ஏரி படுகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதமாக எங்கள் கல்லுõரியின் சோதனைக் கூடம், விடுதி கட்டடங்கள் இடிக்கப்பட்டன. விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு மாற்று இடத்தை அளிக்க அப்போதைய முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி முகப்பேர் ஏரி திட்டத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் மாணவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 250 நடுத்தர குடியிருப்புகள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டன.

மாணவர்கள் தங்கியிருந்த வீடுகளில் 158 குடியிருப்புகளை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்து வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். விற்கும் வரை நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றும், 200708ம் கல்வியாண்டு முடியும் வரை மாணவர்கள் அங்கேயே தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினோம். 152 குடியிருப்புகளுக்கும் மாதம் வாடகையாக 12 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என்றும், மொத்த பாக்கித் தொகை ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று, வீட்டு வசதி வாரியம் எங்களுக்கு கடிதம் அனுப்பியது.

தற்போது மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது. அதனை ரத்து செய்ய வேண்டும். காலி செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார்.

நான்கு வாரங்களுக்குள் ரூ.80 லட்சத்தை வீட்டு வசதி வாரியத்துக்கு மனுதாரர் செலுத்தினால், வீடுகளை காலி செய்ய தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு டிசம்பர் மூன்றாம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வீட்டு வசதி வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Posted in Bhavans, Bhawans, Chennai, College, Cooum, Coovam, Courts, Dr MGR, Education, encroachments, Engineering, Floods, Homes, Hostels, Houses, Housing, Institute, Irrigation, Judges, Justice, Koovam, Lake, Land, Law, Madras, MGR, Natural, Order, Rain, Research, River, Sanumgam, Shanumgam, Shanumgham, Slums, Stay, Students, univ, University, Water | Leave a Comment »

The importance of Sanitary Inspections on Food joints – Health Hazards of Restaurants

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

தேவை விழிப்புணர்வு!

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவுவது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரே, இதுபோன்ற தொற்றுநோய்க்குப் பலியாகி இருப்பது என்பது எந்த அளவுக்கு நாம் விழிப்புணர்வு இல்லாமலும் கவனக்குறைவாகவும் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

ஒருபுறம் முறையாக நடத்தப்படும் உணவு விடுதிகள். மறுபுறம், “கையேந்தி பவன்’ என்கிற காரணப் பெயருடன் அழைக்கப்படும் தெருவோரக் கடைகள். போதாக்குறைக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் காளான்கள்போல முளைத்திருக்கும் துரித உணவகங்களும், “சாட் பண்டார்’ என்று அழைக்கப்படும் வடநாட்டு உணவகங்களும். அதிக வருமானமுள்ள பிரிவினருக்காகவே நடத்தப்படும் நவநாகரிக உணவகங்கள் இந்தப் பட்டியலிலேயே வராது.

மத்தியதர வகுப்பினர் குடும்பத்துடன் செல்கின்ற உணவு விடுதிகள் பெருகி இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் செயல்படும் விதமும் நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற உணவு விடுதிகளில் சராசரித் தமிழன் முப்பது ரூபாய் இல்லாமல் மதிய உணவு சாப்பிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஓரளவில் சுத்தமாகவும் தரமாகவும் இந்த விடுதிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற விடுதிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் கண்காணிப்புக்கு உட்பட்டு, இயன்றளவுக்கு அடிப்படைச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க முனைகின்றன என்பது உண்மை.

ஆனால், திரும்பிய இடத்திலெல்லாம் காளான்களாக முளைத்திருக்கும் துரித உணவகங்கள் எந்த அளவுக்குச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெருவோரக் கடைகள் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கின்றன என்பதை அந்தப் பகுதியில் குடியிருப்போரிடம் கேட்டால் தெரியும். துரித உணவகங்களும், தெருவோரக் கடைகளும் அவை செயல்படும் பகுதியின் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் நல்லாசியைப் பெற்றிருக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்.

வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிநீரைக்கூட இதுபோன்ற உணவகங்களும் கடைகளும் வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தரமோ, சுத்தமோகூட இருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. இவை அனேகமாக இரவு நேரக் கடைகள் என்பதாலும், “டாஸ்மாக்’ மதுபானக் கடையிலிருந்து வருபவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதாலும், தரமும், சுத்தமும் தேவையில்லை என்றேகூட நினைக்கிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் காணப்படும் இந்தப் போக்கு இப்போது தாலுகாக்கள் வரை காணப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம். தொற்று நோய்களின் ஊற்றுக் கண்களாகச் சாக்கடைகள் இருந்த காலம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விடுகின்றன இப்போது இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் உணவு விடுதிகள்.

உணவு விடுதிகளில் போய் சாப்பிடுவது என்பதே கௌரவக் குறைவான, இழிவான விஷயமாக நினைத்திருந்த காலம்போய், வெளியில் போய் சாப்பிடுவது என்பதுதான் நாகரிகம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறோம். அதேநேரத்தில்,தரமும் சுத்தமும் இல்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுவது நமது உடல் நலனுக்குக் கேடு என்பதை நமது அதிகரித்திருக்கும் கல்வி அறிவு ஏன் உணர்த்த மறுக்கிறது? முன்பு சிக்குன் குனியா, இப்போது “டெங்கு’ காய்ச்சல் பரவுவதாகத் தகவல். இதற்கெல்லாம் காரணம், அடிப்படைச் சுகாதாரக் குறைவும், நமது மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு இல்லாமையும்தான். இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டுமல்ல, 39 நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறது. இவ்வளவு நாள்கள், முறையான சுகாதாரக் கண்காணிப்பு இருக்கவில்லை என்பதுதானே இதன் பொருள்? கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது?

எத்தனைபேர் அவதிப்பட்டிருப்பார்கள்? எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்? சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டதே அரசு என்று ஆறுதல் அடைவதைத் தவிர என்னதான் வழி?

Posted in Anbumani, Awareness, Bacteria, bacterial, Clean, College, Consumers, dead, Dengue, Dine, Disease, Doc, doctors, Drinking, Eat, Eatery, Education, employees, Fever, Food, Germs, Hotel, Hygiene, Infection, Inspections, Kareema, medical, Mosquito, Nurses, Purity, Ramadas, Restaurants, Sanitary, SMC, Society, Stanley, Student, Treatment, Viral, Virus, Water, Welfare | Leave a Comment »

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »

Computer Keyboard for the Visually Challenged – Contest Winner details

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

இது புதுசு: புதிய வெளிச்சங்கள்!

அருவி

கருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்?

புதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:

“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.

கம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து

வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.

மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.

இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும்? அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.

பார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

ஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.

ஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்!

அருவி

Posted in America, Blind, Braille, Challenged, College, Competition, Computer, Contest, Details, Development, Disabled, Dvorak, Engg, Eyes, Feel, Gadget, Handicapped, Indicators, Information, InfoTech, Invention, IT, Keyboard, Keyboards, Keys, Mice, Mouse, Physically, Professors, Project, QWERTY, Research, School, Shorthand, Sight, Steno, stenographers, Student, Tamil, Teachers, Technology, Touch, University, US, USA, Vision, Winner | 2 Comments »

How to improve the Quality of output from Educational Instituitions

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

தரமென்னும் தாரக மந்திரம்!

இரா. வெங்கடேஷ்

ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் புதிய சிந்தனைகளும் புதிய வெளிப்பாடுகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

இதை அறிவுசார் சமூகம் உணர்ந்து ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படை ஆதாரம் கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மதிப்புற்று இருப்பதுதான்.

நாட்டின் எதிர்காலம் உயர்கல்வி கற்றவர் கையில்தான் உள்ளது என்ற நிலைமாறிவிட்டது. உயர்கல்வியின் எதிர்காலம் உயர்கல்வி நிறுவனங்களின் கையில்தான் உள்ளது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெருகிவரும் கல்வி நிறுவனங்கள் தரமான உயர் கல்வியை வழங்குகின்றனவா? அக் கல்வி சமூகப் பயன்பாட்டைச் சார்ந்துள்ளதா போன்ற வினாக்கள் எழுகின்றன.

லட்சியத்தை அடைவதற்கு வழிகாட்டியாகத் திகழும் உயர்கல்விக்கும், அக் கல்வியை வழங்கும் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

2005 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி

  • 357 பல்கலைக்கழகங்கள்,
  • 17,625 கல்லூரிகள்,
  • 4.72 லட்சம் ஆசிரியர்கள்,
  • சுமார் 67 லட்சம் மாணவர்கள்

என்று இந்தியாவில் உயர்கல்விச் சேவை பல துறைகளில் தொடர்ந்தாலும்

  • உயர்கல்வி பெறுவோர் வெறும் 7 சதவீதம் பேர் மட்டுமே.

இதற்குக் காரணம் உயர்கல்வியின் தரமின்மை குறைபாடா? அல்லது உயர்கல்வியின் மீது நாம் உரிய கவனம் செலுத்தவில்லையா?
இன்று அறிவு வளர்ச்சிக்குத்தான் உயர்கல்வி நிறுவனங்கள் என்ற நிலை மாறி அதிக வருவாய் ஈட்டத்தான் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றன. தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற சமூக உணர்வு குன்றிய நிலையில்தான் பெரும்பாலும் உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு ஒதுக்கிவரும் நிதியைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்ந்ததா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு தமிழக அரசு உயர்கல்விக்கு ஒதுக்கிய தொகை ரூ. 892 கோடி. இந்த ஆண்டு ரூ. 1,052 கோடி. ஏறத்தாழ ரூ. 160 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்சம் மாணவர்களின் கல்வியறிவை சர்வதேசத் தரத்தில் உயர்த்துவது, குறைந்த செலவில் தரமான உயர்கல்வியை அளிப்பது, வேலைவாய்ப்பு சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கல்வியை வழங்குவது, மாணவர்களை சுயசார்புடையவர்களாக உருவாக்குவது போன்ற அம்சங்களை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால் இன்றைய கல்வி நிறுவனங்கள் மதிப்பெண்களை அளவுகோலாகக் கொண்ட மனப்பாடக் கல்வியை வழங்குகின்றனவே தவிர எதிர்காலச் சமுதாயத்தினரின் சுயசிந்தனை வளர்ச்சிக்கும் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கும் வழிவகை செய்யாமல் தரம் குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது.

தரமான கல்வி வழங்குவது என்பது குழப்பம் நிறைந்ததாக உள்ளது. காரணம், நம் நாட்டில் பாடத்திட்டம் – நடைமுறை வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றிற்கிடையே பெரும் இடைவெளி உள்ளது. மாணவர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்த வாய்ப்பில்லை.

கல்வி என்பது வெறுமனே பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் உதவும் காரணி அல்ல. வருங்காலச் சமுதாயத்தை வார்த்தெடுக்கும் ஒரு பண்பாட்டு மூலதனம் என்ற அளவில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரசின் தேவையற்ற குறுக்கீடும் அரசியல்வாதிகளின் தலையீடும் குறைக்கப்பட வேண்டும். உயர்கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். நிகழும் மாற்றங்களுக்கேற்ப பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கும் – பாடத்திட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அறவே நீக்கப்பட வேண்டும்.

திறமையான, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்விக் கட்டண விகிதம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

உயர்கல்வியில் முறையான, தெளிவான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். கல்வித் தரம் தொடர்பான சுய மதிப்பீட்டு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதும், அதனைச் சோதனைக்குட்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தரமான உயர்கல்வி மட்டுமே நம்மைச் சிந்திக்கவும், திறமையான வகையில் செயல்பட வைக்கவும் முடியும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தரத்தை தாரக மந்திரமாகக் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட வேண்டும்.

உயர்கல்வித் துறையில் எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பக் கல்வியில் இந்திய இளைஞர்களின் திறமை உலக நாடுகளை வழிநடத்துகிறது. ஆனால் உயர்கல்வி தரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, நீடித்துவரும் குழப்பங்கள் இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடும் என அஞ்சப்படுகிறது.

எதிர்காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். அச்சூழலில் கல்வி நிறுவனங்களை நிறுவுவதும், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுப்பதும் மட்டுமே தங்கள் தலையாய கடமை என்ற நிலையில் செயல்படக் கூடாது.

உயர்கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இந்தியாவில் உயர்கல்வி உண்மையான பயன்பாட்டுக் கல்வியாக விளங்க முடியும்.

உயர்கல்வித்தரமும், மாணவர்களின் திறனும், செயலூக்கமும் பன்னாட்டு அளவில் ஒரு சவாலாக இருக்க வேண்டுமெனில் உயர்கல்வி நிறுவனங்கள் தரமென்னும் விதையை தகுதியான நிலத்தில் விதைத்தாக வேண்டுமே தவிர களர்நிலத்தில் அல்ல!

Posted in Admissions, Analysis, Backgrounder, College, Divide, Education, Expensive, Impact, Instituition, Instructor, Needy, Op-Ed, Opinion, Poor, Professor, Rich, School, solutions, Student, Teacher, University, Wealthy | Leave a Comment »

CPI(M) condemns Prime Minister Manmohan Singh’s request to Indian Businesses in People’s Democracy

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

முதலாளிகளைக் கெஞ்சுவதா? மார்க்சிஸ்ட் கோபம்!

புது தில்லி, ஜூன் 3: “விலைவாசியைக் குறைக்க உதவுங்கள், கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்காதீர்கள், அரசுடன் சேர்ந்து ஏழ்மையை ஒழிக்க சமூகக் கடமையை நிறைவேற்றுங்கள்’ என்று தொழில் அதிபர்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுப்பது அர்த்தமற்றது, பலன் தராதது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “பீப்பிள்ஸ் டெமாக்ரசி‘யில் எழுதப்பட்டுள்ள தலையங்கம் இந்தக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

“சுரண்டுவதை நிறுத்திவிடும்படி முதலாளிகளைக் கேட்பது என்பது சைவமாக மாறிவிடு என்று புலியை வேண்டிக் கொள்வதற்குச் சமம்.

ஏழைகள் மீது பிரதமருக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் அரசின் கொள்கைகளைத்தான் மாற்ற வேண்டும். தாராளமயம், உலகமயம் ஆகியவற்றைக் கைவிட்டு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும்.

வறுமை, கல்லாமை, ஊட்டச்சத்து குறைவு, சுகாதாரமின்மை ஆகியவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றுக்கும் மையமாக வேலையில்லாத் திண்டாட்டம் காணப்படுகிறது. எனவே மத்திய அரசு கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி நேரடியாகச் செலவு செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி என்றால் அது வறிய பிரிவினருக்கு பொருளாதார ரீதியான அதிகாரமளித்தலாக இருக்க வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூகநலத்துறைக்கு அதிகம் செலவிடுவோம், வறுமையை ஒழிப்போம், அரசுத்துறைகளில் முதலீட்டை அதிகப்படுத்துவோம், அரசுத்துறைகளுக்கு முக்கியத்துவம் தருவோம், அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க மாட்டோம், விலைவாசியைக் குறைப்போம், வேலைவாய்ப்பைப் பெருக்குவோம் என்றெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆனால் இவற்றில் எத்தனை அமல் செய்யப்பட்டன?

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு இந்தியாவின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பில் நாலில் ஒரு பங்கு, அதாவது 8 லட்சத்து 54 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்று கூறி, இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்று பெருமைப்படுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.

ஏழை, பணக்காரர் வேற்றுமை அதிகரித்து வருகிறது. ஏழைகள் படிப்புக்கும் வாழ்க்கைச் செலவுக்கும், மருத்துவத்துக்கும் செலவழிக்க முடியாமல் ஊட்டச் சத்து குறைந்தும், நோயில் வீழ்ந்தும், படிப்பைப் பாதியில் நிறுத்தியும் சிரமப்படுகின்றனர். கல்லூரிக் கல்வி, உயர் கல்வி என்பதெல்லாம் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது.

2001-02 பட்ஜெட்டில் சமூகநலத் துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 28.26% செலவிடப்பட்டது. 2006-07-ல் இது 27.19% ஆகக்குறைந்துவிட்டது’ என்று தலையங்கம் சாடுகிறது.

Posted in Business, CEO, College, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Condemn, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Divide, Economy, Education, Election, Employment, Expenses, Finance, GDP, Govt, Growth, Inflation, Jobs, Manmohan, Manmohan Singh, Needy, Op-Ed, Opinion, People's Democracy, PM, Polls, Poor, Recession, Rich, Schemes, Society, WB, Wealthy, Welfare | Leave a Comment »

It is either MBBS or BE – Decide whether to be a Doctor or Engineer – Ponmudi

Posted by Snapjudge மேல் மே 22, 2007

எம்.பி.பி.எஸ். அல்லது பி.இ.: பொன்முடி

சென்னை, மே 23: மருத்துவ சீட்டில் இடம் பெற்ற பிறகும் பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்கும் சிலர் அந்த இடத்தில் சேராமல் விடுகிறார்கள். இனி அவ்வாறு செய்ய இயலாது என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

சில மாணவர்கள் மருத்துவ கவுன்சலிங்கில் இடம் கிடைத்த பிறகும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கிலும் பங்கேற்று, பின்னர் அதில் சேராமல் கைவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் காலியாகிவிடுகின்றன.

கடந்த ஆண்டு ஒரு சில மாணவர்கள் அவ்வாறு செய்ததாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இதைத் தடுக்கும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்த மாணவர்கள் பி.இ., கவுன்சலிங்கில் பங்கேற்றால், “பி.இ. சீட் கிடைத்த பின் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைப்பேன்’ என்று உறுதிமொழி எழுதித் தர வேண்டும்.

இதன் மூலம் அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே சேர இயலும். மேலும், எம்.பி.பி.எஸ். சீட் காலியாகாமல் பின்னர் நடைபெறும் கவுன்சலிங்கில் நிரம்பிவிடும்.

கல்லூரி ஆசிரியர் நியமனம்: கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சில நடைமுறைகள் உருவாக்கப்படுகின்றன. அவர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தும்போது சில நடைமுறைகள் பின்பற்றப்படும்.

கல்லூரிகளில் தற்போது கெüரவ ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவோரில்

  • 7 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு 15 மதிப்பெண் தரப்படும்.
  • பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்;
  • எம்.ஃபில். முடித்து ஆசிரியர் பணித் தேர்வுகளை (ஸ்லெட், நெட்) எழுதி வெற்றி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்;
  • முதுநிலை மட்டும் முடித்து, ஸ்லெட், நெட் தேர்வுகளில் வெற்றிபெற்றிருந்தால் 5 மதிப்பெண்;
  • புத்தகங்கள், ஆய்வுகளைச் சமர்ப்பித்திருந்தால், 5 மதிப்பெண்;
  • நேர்காணலுக்கு 10 மதிப்பெண் தரப்படும்.
  • மொத்தம் 2,062 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார் அமைச்சர் பொன்முடி.

ஜூலை 2 முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்

மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கி, ஜூலை 8-ம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகே பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 9-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி நிறைவடைகிறது.

இந்த இரு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை பூர்த்தியான பிறகு தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சலிங் நடைபெறும். 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

——————————————————————————————-

சுமையாகலாமா கவுன்சலிங்?

பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு (கவுன்சலிங்) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடைபெறும். எனினும், பொதுமக்கள் வலியுறுத்தினால், வெவ்வேறு மையங்களில் கலந்தாய்வை நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி.

சில பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை லட்சக்கணக்கான ரூபாய்க்கு “விற்பனை’ செய்வது குறித்து யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார். சில சமூகப் பிரச்சினைகளில் மக்கள்தான் புகார் தர வேண்டும், மக்கள்தான் வலியுறுத்த வேண்டும் என்று மக்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள அரசு காத்திருப்பதில்லை.

நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் தர்ணா நடத்தவில்லை. ஊர்வலம் போகவில்லை. கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியதை ஏற்றுத்தானே அரசு தீவிரமாகப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்தது?

அதைப் போல், கலந்தாய்வு முறை குறித்தும், நன்கொடை குறித்தும் பத்திரிகைகள், அரசியல் பிரமுகர்கள் மூலம் வரும் புகார்களையே அடிப்படையாகக் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தபோது, கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு அறிவித்தது. அதை உறுதி செய்யும் வகையில், 65 ஆயிரம் பொறியியல் இடங்களுக்கு இதுவரை 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சில கேள்விகளை இப்போது எழுப்பியுள்ளது.

முன்பெல்லாம் 65 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்களில் கலந்தாய்வு முடிந்த பின் கிட்டத்தட்ட 6 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும். இந்த முறை 87 ஆயிரம் பேர் 65 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பிப்பதால், கடும் போட்டி நிலவும். அதை அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது?

ஒரே அண்ணா பல்கலைக்கழகம் இருந்த காலத்தில் நான்கு மையங்களில் கவுன்சலிங் நடைபெற்றது. தற்போது நான்கு அண்ணா பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது, ஒரே இடத்தில் மட்டும் கவுன்சலிங் நடத்துவதால் குழப்பம் நேராது என்று என்ன நிச்சயம்?

கிராமப்புற மாணவர்களுக்காக என்று கூறும் அரசு, விண்ணப்பப் படிவங்களின் விலையை ரூ.500 என்று நிர்ணயித்தது ஏன்? கலந்தாய்வுக் கட்டணத்தையும் ரூ.100 மட்டுமே குறைத்துள்ளது.

கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படுவதால், தொலைதூரத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும் அவர்களுடன் வரும் பெற்றோர் அல்லது துணைக்கு வருபவரின் பஸ் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. அது மட்டும் பலன் தருமா, சென்னையில் தங்குவதற்கு சுமார் ரூ.2000 வரை செலவு ஆகும். இவையெல்லாம் அவர்களுக்கு நிதிச் சுமை இல்லையா?

ஏராளமானோர் பி.இ. இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் மக்களுக்கு அதிகரித்து வரும் நாட்டமும் அதன் வேலைவாய்ப்புமே காரணம் என்பது தெரியும். ஆனால், ஆண்டுதோறும் பலரும் விழையாமல் இருக்கும் சிவில், மெக்கானிக்கல் படிப்புகளால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

சிலசமயம் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்த பிறகு, பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கிலும் சில மாணவர்கள் பங்கேற்கிறார்கள். அதில் இடம் கிடைத்த பிறகு சேராமல், எம்.பி.பி.எஸ். படிப்பையே தக்க வைத்துக் கொள்கிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் பி.இ. சீட் காலியாகவே போய்விடுகிறது. இதைத் தவிர்க்க, எம்.பி.பி.எஸ். கிடைத்த மாணவர்கள் “பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்றால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாட்டேன்’ என்று எழுத்து மூலம் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். அது வரவேற்கத் தக்கதே.

கடந்த ஆண்டுகளைப் போல் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையில் வழக்கு, விவகாரம் என்று இதுவரை அதிக குழப்பம் இல்லை என்பது உண்மை. குழப்பம் மட்டுமன்றி, சுமையையும் தவிர்ப்பது அரசின் கடமை.

பொதுமக்களின் கூக்குரலுக்கும், வலியுறுத்தலுக்கும் காத்திராமல் கவுன்சலிங்கை குறைந்தது நான்கு மையங்களிலாவது நடத்த அரசே முன் வரவேண்டும். அதுதான் நல்லாட்சிக்கு அழகு!

————————————————————————————————-

அரசின் அலட்சியத்தால் 300 எம்பிபிஎஸ் இடங்கள் இழப்பு: ஜெயலலிதா குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனால் 300 மருத்துவ இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“”மருத்துவர் ஆக வேண்டும் என மாணவர் சமுதாயம் தங்களின் நெடுநாளைய கனவுகளோடு இருக்கும் நிலையில் இத்தகைய அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெற்றோர் தங்களது பிள்ளைகளை மருத்துவராக உருவாக்கும் முயற்சிக்குத் திமுக அரசின் தவறான கொள்கை மற்றும் தெளிவற்ற தொலை நோக்குப் பார்வையே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

தமிழகத்தில் மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்புப் படித்து சிறந்த மருத்துவர்களாகத் திகழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2001 – 06 ஆண்டைய எனது ஆட்சிக் காலத்தில் தேனி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகளும் முடிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் தொடக்கி வைக்கப்பட்டன.

தற்போது திமுக அரசின் அலட்சியப் போக்கால் இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் போதிய அடிப்படை வசதிகள், குறிப்பாக பேராசிரியர்கள், கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதனை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து

  • 2004-ல் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிக்கும்
  • 2005-ல் வேலூர் மருத்துவக் கல்லூரிக்கும்
  • 2006-ல் உச்ச நீதிமன்ற ஆணை மூலம் தேனி மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டன.

இந்த 3 மருத்துவக் கல்லூரிகள் எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு கலந்தாய்வு முறையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் மருத்துவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வேறு எங்கும் மாறுதல் அளிக்காமல் தொடர்ந்து அதே மருத்துவக் கல்லூரியிலேயே பணியாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தேன்.

ஆனால் திமுக ஆட்சியில் இந்த மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாததுதான் முக்கிய காரணம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தனது ஆய்வு அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே திமுக அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 300 மருத்துவர்கள் உருவாவதைத் தடுத்து நிறுத்தி அவர்களுடைய வாழ்க்கையில் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 300 மருத்துவ இடங்களை இந்த ஆண்டே மீண்டும் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் இதற்கான முழுப் பொறுப்பையும் முதல்வர் கருணாநிதி ஏற்க வேண்டும்.”

Posted in Admissions, ADMK, AIADMK, Analysis, Anna, BE, Bribe, Bribery, BTech, Choice, City, College, Computer, Corruption, Counseling, Counselling, Dean, Decision, Doctor, DOTE, Education, Engg, Engineer, Engineering, Govt, Information, InfoTech, Instructor, IT, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Kanniakumari, Kanniyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, MBBS, medical, Minister, MS, Needy, Op-Ed, Ponmudi, Poor, Professor, REC, Rich, Rural, School, seat, solutions, Students, Suburban, Teacher, Tech, Technology, Theni, University, Vellore, Velore, Village, Wealth, Wealthy | Leave a Comment »

Saidapet REC Book Bank – Educational Lending Library

Posted by Snapjudge மேல் மே 21, 2007

கல்வி: மூணு லட்சம் புத்தகங்கள்! முன்னூறு ரூபாய்!

பி.முரளிதரன்

சாதனை படைத்த மேதைகளின் பள்ளி, கல்லூரி பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அவர்களின் வறுமைப் பக்கங்கள் நம்மை வருத்தும். பாடப் புத்தகங்கள் வாங்க முடியாமலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாமலும் கஷ்டப்பட்டிருப்பர். இந்தக் கஷ்டத்தை வளரும் இன்றைய தலைமுறையினர் எவ்விதத்திலும் படக்கூடாது என்ற நோக்கில் செயல்பட்டு வருபவர் கணேசன்.

இதற்காக சென்னை சைதாப்பேட்டையில் ‘ஆர்.இ.சி. புக் பேங்க்’ என்ற பெயரில் புத்தக வங்கி ஒன்றை நடத்தி வருகிறார். இவ்வங்கி மூலம் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை வழங்கி வருகிறார். இதுதொடர்பாக கணேசன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

”தஞ்சாவூர் அருகில் உள்ள கோபாலபுரம் என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த எனக்கு, இளம் வயதிலேயே படிப்பில் ஆர்வம் அதிகம். அந்தக் கிராமத்தில் பத்தாவது வரை படித்த முதல் ஆள் நான்தான். அதன் பிறகு, சென்னையில் உள்ள விவசாயப் பொறியியல் துறையில் வேலை கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் வந்து நிரந்தரமாகத் தங்கினேன்.

கணிதம் பாடத்தில் எனக்கு ஆர்வம் இருந்ததால், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்தேன். முதலில் சிறு வகுப்புகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்த நான், நாளடைவில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் டியூஷன் சொல்லிக் கொடுக்கத் துவங்கினேன். குறிப்பாக, என்ஜினீயரிங் பயிலும் மாணவர்களுக்குக் கணிதப் பாடம் சொல்லிக் கொடுத்தேன்.

அப்போது, என்னிடம் படிக்க வந்த மாணவர்கள் சிலர் புத்தகம் வாங்க மிகவும் சிரமப்பட்டனர். என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்களின் விலை மிகவும் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம். இப்படிப்புகளுக்கான ஒரு புத்தகத்தின் மிகக் குறைந்தபட்ச விலையே ரூ.300-க்கு மேல் தான் உள்ளது.

இவ்வாறு சிரமப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு உதவுவதற்காக ஒரு புத்தக வங்கியைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதன்படி, 2000-ம் ஆண்டில் ‘ஆர்.இ.சி. புக் பேங்க்’ என்ற புத்தக வங்கியைத் துவங்கினேன். என்ஜினீயரிங் படிப்புகளான பி.இ., எம்.இ., பி.டெக்., எம்.டெக்., எம்.சி.ஏ., போன்ற பாடப் பிரிவுகளுக்கான பாடப் புத்தகங்கள் இந்த வங்கியில் உள்ளன.

துவக்கிய முதல் ஆண்டிலேயே சுமார் 500 பேர் இந்த வங்கியின் மூலம் பயனடைந்தனர். தற்போது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலன் பெற்றுள்ளனர். இந்தப் புத்தக வங்கியில் தற்போது ரூ.2 கோடி மதிப்புள்ள சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்தப் புத்தக வங்கியில் உறுப்பினர்களாகச் சேர, மாணவ, மாணவியர்களிடமிருந்து காப்பீட்டுத் தொகையாக (இஹன்ற்ண்ர்ய் ஈங்ல்ர்ள்ண்ற்) ரூ.1,800 வசூலிக்கப்படுகிறது. இந்தக் காப்பீட்டுத் தொகையை நான்கு ஆண்டு படிப்பை முடித்த பிறகு, அவர்களிடம் 50 சதவீதத்தை திருப்பிக் கொடுத்து விடுவோம். அத்துடன், ஒரு செமஸ்டருக்கு ரூபாய் 300 கட்டணமாக வசூலிக்கிறோம்.

இவ்வாறு வசூலிக்கப்படும் தொகைக்கு, ஒவ்வொரு செமஸ்டருக்கும் மாணவர்களுக்கு ரூ.2,000 ரூபாய் மதிப்புள்ள பாடப் புத்தகங்களை வழங்குகிறோம். இந்தப் புத்தகங்களை தங்களுடைய படிப்பு முடிந்த பிறகு திருப்பிக் கொடுத்தால் போதும். இடையில் தரத் தேவையில்லை. அத்துடன், நான்கு ஆண்டுகளுக்குள் படிப்பை முடிக்க முடியாமல், அரியர்ஸ் வைக்கும் மாணவர்களுக்கு அவர்கள் அத்தாள்களை மீண்டும் எழுதி பாஸôகும் வரையிலான காலத்திற்கும் இப்புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக, நாங்கள் கூடுதலாக எந்தவிதக் கட்டணமும் வசூலிப்பதில்லை.

மேலும், காப்பீட்டுத் தொகை கட்ட முடியாமல் கஷ்டப்படும் மாணவ, மாணவிகளுக்கு காப்பீட்டுத் தொகை இல்லாமலும் புத்தகங்களை படிப்பதற்கு அளிக்கிறோம். இதுதவிர, மாணவர்கள் தங்களுடைய கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, அவர்கள் படித்த பாடப் புத்தகங்களை எதிர்காலத் தேவைகளுக்காக தங்களிடமே வைத்துக் கொள்ள விரும்பினால், குறைந்த விலைக்கு அப்புத்தகங்களை அவர்களுக்கே விற்று விடுகிறோம்.

தமிழ்நாடு புக் ஹவுஸ் மற்றும் டெக்னிக்கல் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ஆகிய பதிப்பகங்களிடமிருந்து என்ஜினீயரிங் பாடங்களுக்கான புத்தகங்களை வாங்குகிறோம். இதைத் தவிர, பிரபல புத்தக நிறுவனங்களிடமிருந்தும் புத்தகங்களை கொள்முதல் செய்கிறோம். நடப்பு செமஸ்டர் வகுப்புகளுக்காக இதுவரை எங்களிடமிருந்து ஏழாயிரம் பேர் என்ஜினீயரிங் புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

மேலும், ஆண்டு தோறும் என்ஜினீயரிங் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் தலா பத்து பேருக்கு இலவசமாக பாடபுத்தகங்களை வழங்குகிறோம். இதுதவிர, கல்விக் கட்டணம் உள்ளிட்ட உதவிகளையும் அளிக்கிறோம். இதற்காக, எங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.50,000 செலவாகிறது.

தற்போதுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களுக்கு வேண்டிய பாடப் புத்தகங்கள் அவர்களுடைய கல்லூரி நூலகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை மாணவர்கள் வீட்டுக்கு கொண்டு வந்து படிக்க அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களே அவர்களிடம் உள்ளது. ஆனால், எங்களிடம் ஏராளமான புத்தகங்கள் இருப்பதால், அதை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கலாம்.

இதுதவிர, என்ஜினீயரிங் படிப்புகளுக்கான புத்தகங்கள் அனைத்தும் ஒரே கடையில் கிடைக்காது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க வேண்டி உள்ளது. ஆனால், எங்களுடைய புத்தக வங்கியில் அனைத்துப் பாடங்களுக்கான புத்தகங்களும் கிடைக்கின்றன. இதனால், மாணவ, மாணவியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அலைச்சல் மிச்சமாகிறது.

அத்துடன், மாணவர்கள் கேட்கும் சில புத்தகங்கள் எங்களிடம் இல்லையென்றால், உடனடியாக அவற்றை சம்மந்தப்பட்ட பதிப்பகத்திடமிருந்து வரவழைத்து தருகிறோம். இவற்றிற்கு எல்லாம் மேலாக, எங்கள் வங்கியில் உறுப்பினர்களாக உள்ள மாணவர்களுக்கு தங்களுடைய பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறோம். இதற்காக, அனைத்துப் பாடங்களிலும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்க் குழுவும் எங்களிடம் உள்ளது.

வெளியூர் மாணவர்களின் வசதிக்காக, தற்போது, நாங்கள் திருச்சியில் எங்களுடைய புத்தக வங்கியின் கிளையை தொடங்கியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் கோவையிலும் ஒரு கிளையைத் துவக்க உள்ளோம். மேலும், வெளியூர் மாணவர்களின் வசதிக்காக, தபால் மூலமாகவும் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம். லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல், மாணவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த வங்கியை நடத்தி வருகிறேன்” என்றார்.

Posted in Books, Chennai, College, Education, Library, Madras, Technical, University | Leave a Comment »

Tamil Nadu to set up electronics export center, TIDEL-III Park

Posted by Snapjudge மேல் மே 9, 2007

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 9: தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில்

  • சென்னை தரமணி,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும்.

ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர்,
  • பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.
  • கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும்
  • சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும்
  • திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும்
  • மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார் கருணாநிதி.

———————————————————————————–

புதிய ஜமீன்தார்கள்!

கல்கி – Kalki 10.06.2007 (தலையங்கம்)

நந்தி கிராமில் டாடா நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை ஒதுக்கித் தந்து, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாயிற்று மேற்கு வங்க அரசு. கலவரம், உயிர்ச் சேதம் என்று பிரச்னை வளர்ந்து, கடைசியில் திட்டம் ரத்தாயிற்று.

உ.பி.யில் அதே விதமான நில ஒதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக முலாயம்சிங் அரசு செய்திருந்தது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்துவிட்டு, “தொழிலதிபர்கள் வேண்டுமானால் சந்தை விலைக்கு நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும்; அரசு கையகப்படுத்தி சலுகை விலையில் அவர்களிடம் விற்காது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழ்நாட்டில் விஷயம் நேர்மாறாக இருக்கிறது.

இராணிப்பேட்டையில் இரண்டு கொரிய நிறுவனங்களுக்கு ஆற்காடு வீராசாமி நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக வாக்களித்திருக்கிறார். இதற்காக அரசு மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும்! காஞ்சிபுரம் அருகே ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ, ஒரு துபாய் நிறுவனம் ஒன்று, 350 ஏக்கர் நிலம் வாங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது!

ஐம்பதாயிரம் பேருக்கு இந்த மண்டலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்கள். ஆனால், அதற்கு 350 ஏக்கர் நிலம் என்பது மிக மிக அதிகம். ஐ.டி. சார்ந்த தொழிலகங்கள் ஐம்பது ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் மீதி நிலம் வாழிடம், பள்ளி, ஷாப்பிங் மால் போன்றவற்றுக்கு என்றும் விவாரிக்கிறார்கள்!

பெரிய தொழிலதிபர்கள் சலுகை விலையில் அரசிடமிருந்து நிலம் பெறும் ஏற்பாட்டை இரு தரப்பினரும் துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிகார வர்க்கம் இலஞ்ச – ஊழலில் ஈடுபடுகிறது. தொழிலதிபர்களோ, தேவைக்கதிகமான நிலத்தை வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் அதன் விலை உயரும்போது, லாபம் சம்பாதிக்கிறார்கள். நிலத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயரவும் இவர்கள் காரணமாகிறார்கள். இது ஏழைகளையும் சராசாரி மக்களையும்தான் வதைக்கிறது.

‘உணவு உற்பத்தி, விவசாயப் பெருக்கம் நோக்கி அரசின் திட்டப் பணிகள் திசை திரும்ப வேண்டும்’ என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் என்ன செய்கிறார்…? விவசாயம் சார்ந்த பகுதியில், அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொழில்நுட்ப நிறுவனம் கிளை பரப்ப வழி செய்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குப் பலமான அஸ்திவாரம் அமைக்கிறார்.

ஒரு குடிசை அமைத்துக்கொள்ளக்கூட நிலமின்றி அவதிப்படும் இலட்சக்கணக்கானோர் வாழும் நாடு இது. இங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் பொதுமக்களின் சொத்து. அதைக் கண்ணை மூடிக்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்களுக்கு வாரி வழங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! தனியார் நிலமாயினும் பெரிய தொழிலதிபர்கள் 300 ஏக்கர் 500 ஏக்கர் என்று தேவைக்கு அதிகமாக வாங்கி, வளைத்துப் போட அனுமதிப்பது பெரும் அநீதி!

பெரிய தொழிலதிபர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏராளமான வேறு பல சலுகைகளையும் பெறுகிறார்கள். மொத்தத்தில், விவசாய ஜமீன்தாரி முறையையும் பெரிய மிராசுதாரர்களையும் ஒழிக்கப் போராடி சட்டமும் இயற்றிய நமது ஆட்சியாளர்கள், இன்றைக்குப் புதிய சலுகைகள் மூலம் நவீன ஜமீன்தாரி தொழிலதிபர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

Posted in 3, Ambathur, Ambattoor, Ambattur, Biotech, Chennai, Coimbatore, College, computers, Development, Education, Electronics, Employment, Export, Factory, Industry, InfoTech, IT, ITES, Jobs, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjipuram, Karunanidhi, Kottoor, Kottur, Kovai, Madras, Madurai, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MNC, multinational, Nellai, Orgadam, Paper, Perumpakkam, Research, Salem, Science, scientist, SEZ, SIPCOT, Software, Special, Sriperumputhoor, Sriperumputhur, Students, Tamil Nadu, TamilVU, Tax, Tech, Technology, Tharamani, Thiruchi, Thiruchy, Thirunelveli, Three, Thruchirappalli, TIDEL, TIDEL-III, TN, Trichirappalli, Trichy, University, Virtual, Virtual University, VU | Leave a Comment »

MGR Film University to spend Rs. 2.2 cr on Infrastructure Improvements

Posted by Snapjudge மேல் மே 4, 2007

எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள்

சென்னை, மே 4: சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று செய்தித் துறை செயலர் து. ராசேந்திரன் தெரிவித்தார்.

இந் நிறுவனத்தின் 47-வது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நவீன தொழில்நுட்ப சாதனங்கள், கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ. 1.50 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் டி.டி.எஸ். மற்றும் டால்பி டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கூடம் ரூ. 72 லட்சத்தில் அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும்.

இதே போல ரூ. 36 லட்சத்தில் ரி-ரெக்கார்டிங் தியேட்டர் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர நடப்பு ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அதிநவீன கேமிராக்கள்: ஒளிப்பதிவுத் துறை மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் கேமிராக்களில் அதிநவீன சினிமாஸ்கோப் லென்ஸ்கள் விரைவில் பொருத்தப்படும்.

இதுதவிர 6 ஸ்டில் கேமிராக்கள் மற்றும் ஒரு விடியோ கேமிரா வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் ராஜேந்திரன்.

முன்னதாக விழா சிறப்பு மலரை வெளியிட்டு, சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு விருதுகளை செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வழங்கினார்.

  • செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி. கோசலராமன்,
  • தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன்,
  • கல்லூரியின் முன்னாள் இயக்குநர் அமிர்தம்,
  • கல்லூரி முதல்வர் ந. ரமேஷ்,
  • மாணவர் பேரவைத் தலைவர் பா. நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Posted in 70MM, AC, Advanced, Amirtham, Awards, Camera, Cinema, Cinemascope, College, Courses, Digital, Dolby, DTS, Editing, Editor, Education, Gadgets, infrastructure, Instruments, iRaama Narayanan, MGR, Movies, Photography, Plans, Prizes, Raama Narayanan, Re-recording, Study, Technology, Television, Tharamani, TV, University, Varsity, video | Leave a Comment »

Free education & other Tamil Nadu Budget policy analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

கல்லூரிவரை கல்வி இலவசம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்டுள்ள பல அறிவிப்புகள், ஏற்கெனவே முதல்வர் கருணாநிதியால் பல்வேறு நிகழ்வுகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டவை.

உதாரணமாக, மனவளர்ச்சி குன்றியோருக்கும் ஊனமுற்றோருக்கும் உதவித்தொகை, புதிதாக இரு மருத்துவக் கல்லூரிகள், மேலும் 5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்க ரூ.100 கோடி, சிறுபான்மையினர் நலன்காக்க தனி இயக்ககம் போன்றவை.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் திமுக அரசில் எப்போதுமே உள்ளவை. மற்ற திட்டங்கள் நிர்வாக வளர்ச்சி சார்ந்தவை. இருப்பினும் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு மேலதிகமான கவனம் தரப்பட்டுள்ளது.

அரசுக் கலைக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உயர்கல்வி இன்றைய இன்றியமையாத் தேவை. இந்தச் சலுகையை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தினால் இத்திட்டம் நிறைவானதாக இருக்கும்.

பிளஸ்2 படிப்பு வரை தமிழ் வழியில் படிப்போருக்கு தேர்வுக் கட்டணம் மிகக் குறைவானது என்றபோதிலும் அதையும்கூட செலுத்த முடியாத ஏழைகள் பலர் கிராமங்களில் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலில் அரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் ஏழைகளுக்காகத்தானோ என்ற நிலைமை உள்ளதால் இந்தத் தேர்வுக் கட்டண ரத்து பயன் தரும்.

கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் சிறப்புப் பயிற்சிக்காக ரூ.1.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், இப் பயிற்சியில் மீண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கலாம். பதிலாக, சிறப்பாகச் செயல்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களை இத் திட்டத்தில் பயன்படுத்திக் கொண்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் புதிய ஆசிரியர்களின் புதிய பயிற்றுமுறையினால் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

பள்ளி, கல்லூரிப் பேருந்துகளுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கு இந்த நிர்வாகங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாக உள்ளன. வரியைக் குறைப்பதுடன் பள்ளி, கல்லூரி வாகனத்தில் செல்லும் மாணவர்களுக்கான கட்டணங்களையும் கணிசமாகக் குறைக்க யோசனை கூறினால் பெற்றோருக்குப் பயன் கிடைக்கும்.

அத்தியாவசியப் பண்டங்களின் மீது வரிக் குறைப்புகள் ஏதும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் வழங்க முடியும் என்று அரசு நம்புகிறது. இது எந்த அளவுக்குப் பயன்தரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சத்துணவில் அளிக்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களில் முட்டைகள் சிறியனவாகவும் அழுகியும் இருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. முட்டைக்குப் பதிலாக சத்துமாவு உருண்டை கொடுக்கலாம். இந்த சத்துமாவு உருண்டைகளை அந்தந்த சத்துணவுக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளின் தாய்மார்களைக் கொண்ட சுயஉதவிக் குழு மூலம் தயாரித்துப் பெறலாம். இந்தத் தாய்மார்களையே கோழி வளர்ப்பின் மூலம் முட்டையையும் வழங்கச் செய்யலாம்.

மருந்துகளின் விலை உயர்வும், தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளன. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த முயற்சியும் அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

Posted in Analysis, Budget, College, Commerce, Dean, DMK, doctors, Education, Educators, Engineering, Expenses, Finance, Free, Funds, Government, Govt, Guides, Health, Healthcare, Income, Instruction, Instructors, Karunanidhi, Loss, medical, Medicine, Medium, Op-Ed, Policy, Politics, Private, Professors, Profit, Public, Schools, Students, Tax, Teachers, Technology, TN, University, Votes | 3 Comments »

Balu Mahendra to start new Film Institute in Chennai for aspiring Tamil Cinema entrants

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

பாலுமகேந்திராவின் புதிய திரைப்படக் கல்லூரி: செப்டம்பர் முதல் சென்னையில் தொடக்கம்

சென்னை, பிப். 24: பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா சென்னையில் புதிய திரைப்படக் கல்லூரியைத் தொடங்குகிறார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பாலுமகேந்திரா கூறியதாவது:

சினிமா மீது எனக்கு ஏற்பட்ட வெறி காரணமாக நான் தேடித் தேடிச் சேகரித்த அறிவு, பணியாற்றத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த அனுபவம் போன்றவற்றை இளைய தலைமுறையினருக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் திரைப்படக் கல்லூரியைத் துவக்குகிறேன்.

பண லாபம் கருதி இக்கல்லூரியைத் துவக்கவில்லை. தற்போது என்னிடம் போதிய பண வசதி கிடையாது. ஆனாலும் தைரியத்தோடு களமிறங்கியிருக்கிறேன்.

என் நண்பர்களும், உறவினர்களும், சினிமாவை நேசிக்கும் நல்ல உள்ளங்களும், என்னோடு பணியாற்றியவர்களும் எனக்குக் கைகொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இக்கல்லூரி வரும் செப். 7-ம் தேதி முதல் சாலிகிராமத்தில் செயல்படும். இதில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ கோர்ஸ்) 12 மாதங்கள் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு ஆகிய துறைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு ஆகிய துறைகளுக்கு அடுத்த ஆண்டில் இருந்து பயிற்சியளிக்கப்படும்.

இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய துறைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் உள்ள 12 இடங்களில் 4 இடங்கள் வெளிநாட்டுத் தமிழ் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இக்கல்லூரியில் சிறுகதை, கவிதை, புதினம் ஆகியவற்றை உள்ளடக்கிய தற்கால இலக்கியமும் ஒரு பாடத்திட்டமாக இருக்கும்.

அனைத்துத் துறைகளிலும் அத்தியாவசிய தொழில்நுடப்க் கோட்பாடுகள், அதிக எண்ணிக்கையிலான செய்முறைப் பயிற்சிகள் இடம்பெறும். ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நானே நேரடியாகக் கற்றுக்கொடுக்கிறேன்.

தேசிய நாடகக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த கலைஞர் கோபாலி நடிப்புத்துறையின் முக்கிய ஆசிரியராக இருப்பார். கே. பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக வருகை தந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர் என்றார் பாலுமகேந்திரா.

1966 முதல் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் இருக்கும் பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகள், 8 மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றவர்.

இந்திய மற்றும் சர்வதேச அளவில் திரைப்படத்துறையின் முக்கியமான பல அமைப்புகளுக்கு தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

Posted in Admissions, Balu mahendra, Camera, Chennai, Cinema College, College, Courses, Degree, Degrees, dialogues, Diploma, Direction, Director, Editing, Gopali, Graduate, Institute, Madras, Photography, Post graduate, Screenplay, Story writing, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Technicians, Technology, Thamizh Movies, Thamizh padam, TV, University | Leave a Comment »

Vivekanandha College students strike – College gets closed by Management

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

மாணவர்கள் ஸ்டிரைக் எதிரொலி: விவேகானந்தா கல்லூரி மூடல்

சென்னை, பிப். 14: சென்னை மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடாததால், கல்லூரி காலவரம்பின்றி மூடப்படுகிறது. இதைக் கல்லூரி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இது குறித்து கல்லூரி செயலர் சுவாமி சத்தியப்பிரியானந்தா, முதல்வர் வ.வே.சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

கல்லூரி மாணவர்கள், குறிப்பாக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் கடந்த ஐந்து நாள்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதனிடையில், கல்லூரி மாணவர்கள், அதிலும் விடுதி மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளனர். கல்லூரியின் விலைமதிப்பற்ற சொத்துகளையும் சில ஆசிரியர்கள், ஊழியர்களின் தனிப்பட்ட பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

கடந்த 7-ம் தேதி விடுதி மாணவர்கள் உள்பட சில மாணவர்கள் முன்னறிவிப்பு எதுவும் இன்றி, திடீரென்று ஸ்டிரைக் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய போராட்டத்தில் இதர கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

கல்லூரி நிர்வாகத்தை நடத்தி வரும் ராமகிருஷ்ண மடத்தின் மூத்த அறங்காவலர் சுவாமி கெüதமானந்தா விடுதி மாணவர்களுடன் கடந்த 10-ம் தேதி பேசினார். தொடர்ந்து, விடுதி நிர்வாகத்துக்கு மாற்று ஏற்பாட்டையும் அவர் செய்தார்.

அதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்ததாக நிர்வாகம் கருதியது. ஆனால், மாணவர்கள் புதிய கோரிக்கைகளை திங்கள்கிழமை முன் வைத்தனர். ஆனால், அக்கோரிக்கைகளை ஏற்க இயலாத நிலையில் நிர்வாகம் உள்ளது. இது மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகக் குழுவின் பிரதிநிதிகள் சிலர், மாணவர்களுடன் பேச்சு நடத்தி, பிறகு கல்லூரி பணியாளர்களுடனும் விவாதித்தனர்.

ஆனால், நடைமுறைக்கு ஒத்துவராத கோரிக்கைகளை மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். போராட்டத்தைக் கைவிடும்படி மாணவர்களிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், தங்களது பிடிவாதத்தை அவர்கள் கைவிடவில்லை. எனவே, பகல் நேரக் கல்லூரி, மாலை நேரக் கல்லூரியுடன் விடுதியையும் கால வரம்பின்றி மூடுவது என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

விவேகானந்தா கல்லூரி நாளை திறப்பு

சென்னை, பிப். 27: சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியும் வித்யாபீடம் என்ற அதன் விடுதியும் புதன்கிழமை திறக்கப்படுகின்றன.

மாணவர் விடுதி செவ்வாய்க்கிழமை (பிப். 27) முதல் செயல்படும் என்று கல்லூரிச் செயலர் சுவாமி அபிராமானந்தரும், முதல்வர் வ.வே.சுப்பிரமணியனும் அறிவித்துள்ளனர். இக்கல்லூரியும், விடுதியும் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் காலவரம்பின்றி முடப்படுவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது

Posted in College, Re-open, Strike, Students, Swami Sathiyapriyanandha, Viveganandha College, Vivegkananda College, Vivekananda College, Vivekanandha College, Vivekanantha College | Leave a Comment »

Thanjavur Ponniah Ramajayam College’s Murugesan caught with Hawaala money

Posted by Snapjudge மேல் நவம்பர் 26, 2006

சென்னை விமானத்தில் வந்த தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி `ஹவாலா’ பணம் சிக்கியது

சென்னை, நவ. 26- சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 10.30 மணி அளவில் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை மேற் கொண்டனர்.

அப்போது டெல்லியில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சூட்கேசில் ரூ.1 கோடியே 2 லட்சம் ஹவாலா பணத்துடன் தொழில் அதிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவரது பெயர் முருகேசன் (வயது 45) என்பதும், இவர் தஞ்சாவூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் என்பதும் தெரிய வந்தது. இவர் பொன்னையா ராம ஜெயம் என்ற பெயரில் கல்லூரி நடத்தி வருகிறார்.

வருமான வரி துறை அதிகாரி களின் பிடியல் இருக்கும் தொழில் அதிபர் முருகேசனிடம் ரூ.1கோடி பணம் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள இவரது கல்லூரி அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சையில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரிதுறையினர் சோதனை நடந்தது.

Posted in Chennai, College, Hawala, Indian Airlines, Madras, Murugesan, New Delhi, ponniah ramajayam college, ponniah ramajeyam college, Tanjore, Thanjavur | 3 Comments »