Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sex’ Category

U Nirmala Rani: Women Rights – Perspectives, Timeline, Information

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

“இரும்புத் தாடை தேவதைகள்’

வழக்கறிஞர் உ . நிர்மலா ராணி

இன்று சர்வதேச பெண்கள் தினம். 1908ம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தப் போராட்டத்தின் இரண்டாவது முக்கிய கோரிக்கை தான் பெண்களுக்கு வாக்குரிமை!

அந்தக் காலத்தில் வாக்குரிமை என்பது வசதி படைத்தவர்கள் அதிலும் ஆண்களுக்குத்தான் ஓட்டுரிமை. சொத்து வைத்திருக்காத ஆண்கள், வேலையாட்கள், கிரிமினல்கள் இந்த வரிசையில் இறுதியாகப் பெண்கள். இவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை மறுக்கப்பட்டது.

பெண்களுக்கு வாக்குரிமை கோரி நடந்த ஒரு நூற்றாண்டுப் போராட்டம்கூட வரலாற்றில் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் மறைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த சமூகப் போராளி எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், லண்டனில் நடந்த அடிமை முறை எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது, பெண்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அடிமை எதிர்ப்பு மாநாட்டிலேயே பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவது கண்டு ஆத்திரமுற்ற எலிசபெத், 1848-ல் செனிகா ஃபால்ஸ் என்ற இடத்தில் பெண்களைத் திரட்டி கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டார். அது தான் அமெரிக்காவில் பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தின் முதல் வித்து!

ஆரம்பத்தில் வாக்குரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சாத்வீகமான போராட்ட வடிவங்களைக் கையாண்ட பெண்கள், கறுப்பின மக்களுக்கு சம உரிமையளித்த “”சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று விளம்பும் 14, 15 சட்ட திருத்தங்களிலிருந்து பெண்கள் மட்டும் விலக்கப்பட்டபோது பொங்கி எழுந்தனர்.

அமெரிக்காவில் எலிசபெத் கேண்டி ஸ்டாண்டன், சூஸன் பி ஆண்டனி, ஆலிஸ் பால் ஆகியோரும், இங்கிலாந்தில் எம்மலின் பாங்கர்ஸ்ட் மற்றும் அவரது 2 புதல்விகள் கிறிஸ்டபெல் மற்றும் சில்வியா ஆகியோரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. வாயில்களில் வாக்குரிமை கேட்டு பேனர் பிடித்தபடி நாள்கணக்கில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரி உமிழ்ந்தனர்.

கோபமடைந்த பெண்கள் அரசு அலுவலகக் கண்ணாடிக் கதவுகளை சரசரவென்று கல்லெறிந்து உடைத்து நொறுக்கினர். தந்தி வயர்களை வெட்டினர். அதிகாரிகளின் கார் கண்ணாடிகளைத் தூளாக்கினர். எரி குண்டுகளை வீசி அரசு அலுவலகங்களைத் தாக்கினர். கைதாகினர். சிறை சென்றனர். உண்ணாவிரதமிருந்தனர். சிறை அதிகாரிகள் வன்முறையை உபயோகித்த போதும் வாய் வழியாக அவர்களுக்கு உணவூட்ட இயலவில்லை. எனவே தான் இந்தப் பெண் போராளிகளுக்கு “இரும்புத் தாடை தேவதைகள்’ என்ற செல்லப்பெயர் சூட்டப்பட்டது. எனவே சிறை அதிகாரிகள் அவர்களைக் கட்டாயப்படுத்தி மூக்கின் வழியாக, குழாய் மூலமாக உணவைச் செலுத்தினர்.

உச்சகட்டமாக 1913 ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் எமிலி வைல்டிங் டேவிஸன் என்ற பெண்மணி பெண்களின் ஓட்டுரிமைக்காக யாரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார். புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானமான டெர்பியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் குதிரையான ஆன்மர், புயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது கையில் வாக்குரிமை கோரும் அட்டையுடன் குறுக்கே பாய்ந்தார் எமிலி! குதிரையின் கால்களில் மிதிபட்டு சின்னாபின்னமானார். வாக்குரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த ஒரே பெண் என்ற புகழையும் பெற்றார்.

இதையடுத்து இங்கிலாந்தில் 1918-ல் நிபந்தனையுடன் கூடிய வாக்குரிமையும், 1928-ல் முழுமையான வாக்குரிமையும் வழங்கப்பட்டது.

அமெரிக்காவிலும், 1919-ல் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மசோதா, 19-வது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க சட்ட விதிகளின்படி இந்தத் திருத்தம் சட்டரீதியாக்கப்பட வேண்டுமென்றால், 4-ல் 3 பங்கு மாகாணங்கள் அதாவது 36 மாகாண நாடாளுமன்றங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாகாண நாடாளுமன்றத்திலும் மசோதா நிறைவேற பெண்கள் போராட வேண்டியிருந்தது. மசோதா எதிர்ப்பாளர்கள் அதைத் தோல்வியடையச் செய்யும் பொருட்டு குறைந்தபட்ச கூட்ட வருகையை (கோரம்) தவிர்க்க இரவோடு இரவாக நாட்டை விட்டுப் பறந்தனர். கூட்டங்கள் நடத்த விடாமல் வெளிநடப்புச் செய்தனர். 35 மாகாணங்கள் அங்கீகரித்துவிட, கடைசி மாகாணமான டென்னிஸீயில் மசோதாவைத் தோற்கடிக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்ப்பாளர்கள் தேற்றி வைத்திருந்தனர். மசோதா ஆதரவாளர்கள் மஞ்சள் ரோஜாவையும் எதிர்ப்பாளர்கள் சிவப்பு ரோஜாவையும் அணிந்திருந்தனர். இதைக் கணக்கெடுத்துப் பார்த்தபோது மஞ்சள் ரோஜாவை அணிந்தவர்கள் 47 பேர் எனவும் சிவப்பு ரோஜாவை அணிந்தவர்கள் 49 பேர் எனவும் தெரியவந்தது.

வாக்கெடுப்பின் முதல் சுற்றில் குடியரசுக் கட்சியை சார்ந்த பேங்க் டர்னர், தான் அணிந்திருந்த சிவப்பு ரோஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு தடாலடியாக அணி தாவினர். இதனால் இரண்டாவது சுற்றில் ஆதரவும், எதிர்ப்பும் 48 – 48 என்று சம நிலையிலிருந்தது.

3-வது சுற்றில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அமெரிக்க பெண்களின் தலையெழுத்தையே மாற்றியது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 24 வயதான ஹாரிபர்ன் மசோதாவுக்கு எதிர்ப்பாளர். அவர் வாக்களிக்கப் போகும் இறுதி நொடியில் ஒரு துண்டுச் சீட்டு அவருக்கு வந்தது. அதைக் கண்ணால் ஸ்கேன் செய்த ஹாரிபர்ன் மசோதாவுக்கு ஆதரவாக கையைத் தூக்கி விட்டார். மசோதா நிறைவேற்றப்பட்டது. துண்டுச் சீட்டை அனுப்பியது அவருடைய தாயார் ஃபெப் என்ஸ்மிங்கர் பர்ன். அதில் “”நல்ல பையனாக நடந்து கொள்! பெண்கள் வாக்குரிமைக்கு ஆதரவாக ஓட்டுப்போடு” என்றிருந்தது. தாய் – தனயன் சென்டிமென்ட்தான் கடைசியில் அமெரிக்கப் பெண்களுக்கும் கைகொடுத்தது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதற்கான முதல் படியை பெண்கள் வெற்றிகரமாகக் கடந்த பிறகும் கூட தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மந்திரியாக நியமிக்கப்படுவது, அவர்களுக்கு வழங்கப்படும் துறைகள் வரை பெண்கள் இன்றும் பாரபட்சங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் பெண்களின் இடம் என்பது வீட்டின் மூலையில் ஒரு சமையலறையே தவிர நாடாளுமன்றம் அல்ல என்ற ஐயாயிரம் ஆண்டு மனப்போக்கு இன்னமும் மாறவில்லை.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து (1893). சமீபத்திய நாடு குவைத் (1995). இன்றும் வாக்குரிமை அளிக்க மறுப்பது சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளும்தான்!

உலகத்தின் முதல் பெண் மந்திரி 1917ல் ரஷியாவில் போல்ஷ்விக் கட்சியால் காபினெட் மந்திரியாக நியமிக்கப்பட்ட அலெக்ஸôண்டர் கோலந்தாய். இங்கிலாந்தில் கூட முதன்முறையாக 2006ல் தான் பரோனஸ் ஹேமேன் என்ற பெண்மணி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இண்டர் பார்லிமெண்டரி யூனியன் (ஐடம) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சர்வதேச அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 85 சதவீதம் ஆண்கள்தான்! உலக அளவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகம் கொண்டவை (40 சதவீதம்) நார்வே, ஸ்வீடன், டென்மார்க் எனும் ஸ்காண்டிநேவிய நாடுகள்தான். இதில் இந்தியாவின் நிலைதான் மிக மோசம்.

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 8.3 சதவீதம்தான். இதை சரிசெய்ய 1996ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடஒதுக்கீடு மசோதா இன்னமும் வெளிச்சத்தை காணவில்லை.

2002 – 2004ல் 20 சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட 2432 வேட்பாளர்களில் பெண்கள் 1525 பேர். அதாவது பாதிக்கு மேல்! ஆனால் ஜெயித்தது 137 பெண்கள்தான். இது 5.6 சதவீதம், 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்திருந்தால் இன்று 811 பெண் உறுப்பினர்கள் சட்டமன்றங்களில் இருந்திருப்பார்கள்.

பெண் போராளி úஸô ஹைட் – 1916-ல் கனடாவின் நாடாளுமன்றத்தில் வாக்குரிமை மனுவைத் தாக்கல் செய்து பேசியபோது “”கணவான்களே! வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் பெண்கள் சேர்க்கப்படுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நாங்கள் முட்டாள்களும் அல்ல! முடியாதவர்களும் அல்ல! நாங்கள் பெண்கள்! வாக்குரிமையில் நாங்கள் சமத்துவம் கேட்பது சலுகையின் அடிப்படையில் அல்ல! நியாயத்தின் அடிப்படையில்” என்று முழங்கினார்.

இந்தியப் பெண்களாகிய நாங்களும் கேட்கிறோம்! நாடாளுமன்றவாதிகளே! தயவுசெய்து பாலின சமத்துவ நீதியின் மொழியிலே பேசுங்கள்! 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்! இந்திய நாட்டில் சமத்துவத்தை விரும்பும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள்!

Posted in Disparity, Elections, Females, Freedom, Gender, History, HR, Independence, Info, MLA, MP, NirmalaRani, Oppression, Politics, Polls, Power, rights, Sex, She, Stats, Timeline, Vote, voters, Women | Leave a Comment »

Inter News Network consultant Dr. Jeya Sridhar Interview – State of HIV+ and AIDS patients

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

விழிப்புணர்வு: பயமுறுத்துவது பிரசாரமல்ல!

பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் “எய்ட்ஸ் எரிமலை’ என்னும் தலைப்பில் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் எழுதிய எயிட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல ஆய்வுகளுக்குக் காரணமாக இருந்தது.

தற்போது 55 நாடுகளில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு அளிக்கும் “இன்டர் நியூஸ் நெட்வொர்க்’ என்னும் உலகளாவிய அமைப்பின் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், அவர் சார்ந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு, விரிவாக அவர் அளித்த பதில்கள்…

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு கடந்த சில வருடங்களாக குறைந்திருப்பதால், இது குறித்த விழிப்புணர்வும் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய விளைவை இது ஏற்படுத்தும்?

இந்தியாவில் எத்தனையோ பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த காலத்திலும் அவர்களின் விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டதே இல்லை. குளிர்பானத்திற்கே விளம்பரம் முக்கியம் என்னும்போது, உயிரையே குடிக்கும் எய்ட்ஸýக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நாம் குறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இன்னமும் போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். குறைந்திருக்கிறது என்பதற்காக எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பிரசாரங்களை குறைத்துக் கொள்ளக்கூடாது. சமூகத்தில் எச்.ஐ.வி. குறித்த உண்மை நிலையைத் தொடர்ந்து பிரசாரங்களின் மூலமாகத்தான் அளிக்கமுடியும்.

பள்ளிகளில் வரப்போகும் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி இதற்குத் தீர்வாகுமா?

பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டமாக இதைக் கொண்டு வரவிருக்கின்றனர். முதலில் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளை மனதில் கொண்டு உருவாக்கியதற்குத்தான், நம் நாட்டில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டு கலாசாரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கியிருக்கும் இந்த முறைக்கு பரவலான ஆதரவு பெருகியுள்ளது. வளர் இளம் பருவத்தினருக்கு இத்தகைய விழிப்புணர்வு தேவையான ஒன்றுதான். அவர்களின் வயதுக்கே உரிய சந்தேகங்களை அனுசரிப்போடு கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களை விடச் சிறந்தவர்களாக யார் இருப்பார்கள்?

திருமணத்திற்குப் பின், எச்.ஐ.வி. பாதிப்புடன், கணவனையும் இழந்து தவிக்கும் இளம் விதவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தின் நம்பிக்கை மையங்கள் பரவலாகச் செயல்படுகின்றன. இங்கு முழுக்க முழுக்க இலவசமாகவே எச்.ஐ.வி. ரத்தப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முப்பது நிமிடங்களில் ரத்தப் பரிசோதனை செய்த முடிவுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கு முன்பே, ஆண், பெண் இருபாலரும் ரத்தப்பரிசோதனையைச் செய்து கொள்வது நல்லது. மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு முறை ஒருவர் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எச்.ஐ.வி. கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பணுக்கள் உருவாவதற்கான கால அளவைத்தான் சாளரக் காலம் என்கிறார்கள். இந்த சாளரக் காலத்திற்குள் ரத்தப் பரிசோதனை செய்யும்போது, அதில் எச்.ஐ.வி. எதிர்ப்பணுக்கள் தெரியாது.

அப்படியென்றால், சாளரக் காலத்திற்குள் ரத்த வங்கியிலிருந்து ஒரு நோயாளிக்கு ரத்தத்தை பயன்படுத்துவதில் எச்.ஐ.வி. பரவும் அபாயத்தை எப்படித் தவிர்ப்பது?

அரசு மருத்துவமனைகளில் காசுக்காக ரத்தத்தை விற்பவர்களை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எந்த மருத்துவமனையிலும் ரத்தத்தை விற்பவர்களை ஆதரிப்பதில்லை. மூன்று முறை எல்லிசா பரிசோதனை செய்வதன் மூலம், எச்.ஐ.வி. பாதிப்பில்லாத ரத்தம்தான் என்பதை தற்போது உறுதி செய்கின்றனர். அதோடு ரத்த வங்கியிலிருந்து முழுமையாக ரத்தம் ஒருவருக்கு ஏற்றப்படுவது குறைவு. தற்போது ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்ற கூறுகளை தனித்தனியாகப் பிரித்தே சேமித்து வைக்கின்றனர். இதுதவிர, ஹீட் ட்ரீட்மென்ட் போன்ற முறைகளால் வங்கியிலிருந்து பெறப்படும் ரத்தம் பரிசோதிக்கப்படுகிறது.

வெஸ்டன்-பிளாட் சோதனை செய்யும் வசதி தற்போது எல்லா மாவட்டத்திலிருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகளிலும் இருக்கிறதா?

இல்லை. மூன்று கட்டங்களாக எல்லிசா பரிசோதனையின் மூலமாகவே அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.

கூட்டு மருந்து சிகிச்சையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்பது என்ன?

எச்.ஐ.வி. கிருமி நம் உடலின் தற்காப்பு மண்டலத்தை செயலிழக்கவைப்பதால், பலவகையான நோய்கள் நம்மைத் தாக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், பலவிதமான நோய்களை எதிர்ப்பதற்கான மருந்தையும் சேர்த்து வழங்குவதுதான் கூட்டு மருந்து சிகிச்சை. இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு நாள், ஒரு வேளை கூட மறக்காமல் சாப்பிடவேண்டும். ஒரு வேளை தவறினாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். முதல் கட்ட சிகிச்சையைச் சரியாகத் தொடராதவர்களுக்குத்தான் இரண்டாவது கட்ட சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதல் கட்ட கூட்டு மருந்து சிகிச்சை தமிழகம் முழுவதும் பரவலாக இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தாண்டு அரசு பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் ஆலோசனையின் கீழ் செயல்படும் “இன்டர் நியூஸ் நெட்ஒர்க்கின்’ செயல்பாடுகள் என்ன?

எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய விழிப்புணர்வு அளிக்கும் செய்திகளாக இருந்தாலும் அதை முறையாக, எங்கள் அமைப்பில் பாதுகாத்து வருகிறோம். இந்த அமைப்பு முழுக்க முழுக்க பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர்களின் உதவியோடே செயல்படும் அமைப்பு. எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதாக இருந்தாலும் சரி, அல்லது வானொலி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு தேவையான ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும், எப்படிச் சேர்க்கலாம், எந்த மாவட்டத்தில் யாரைச் சந்திக்கலாம் என்பது போன்ற விவரங்களையும் எங்களின் அமைப்பின் மூலம் பெறலாம். கல்லூரிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வானொலிகளுக்கும் எச்.ஐ.வி. விழிப்புணர்வுக் கருத்துக்களை, நாடகம், இசைப் பாடல் போன்ற எந்த வடிவத்தையும் எங்களின் “மினி’ ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யும் வசதி உள்ளது.

பொதுவாகவே மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆங்கிலத்தில்தான் செய்திக் குறிப்புகளும், தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இந்தத் துறையில் எச்.ஐ.வி. குறித்த செய்திகளை தமிழில் எழுதும் போது எத்தகைய சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை தமிழ்ப் பத்திரிகையாளர்களைக் கொண்டு வரையறுத்த வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட இதழாளர்களுக்கான கையேடை நாங்கள் வெளியிட்டுள்ளோம். “ரிசப்டார்ஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு “ஏற்பி’ என்று தமிழில் வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற பத்து வார்த்தைகளை தமிழ்ப் பத்திரிகையாளர்களே உருவாக்கியிருக்கின்றனர்.

எச்.ஐ.வி. பாதித்தவர் என்ற காரணத்தால் ஆந்திராவில் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையும், கேரளத்தில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காமல் இருக்கும் செய்திகளையும் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

செய்தி, மக்கள் தொடர்புச் சாதனங்களிலும் ஊடகங்களிலும் “எய்ட்ஸ் அரக்கன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் விளைவுதான் இது. தவறான பிரசார யுக்திகளால் ஏற்படும் விளைவுகள் இவை. மக்களை பயமுறுத்துவது நல்ல பிரசார முறையாகாது.

எய்ட்சுக்கான மருந்தை எப்போது மருத்துவ உலகம், மனித குலத்துக்கு வழங்கப்போகிறது?

அதற்கான ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. எச்.ஐ.வி. தடுப்பு மருந்து பரிசோதனை கூட தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கின்றது.

Posted in activism, AIDS, Awareness, Bacteria, Blood, Campaigns, Checks, Condoms, cure, Disease, diseases, doctors, Donors, Education, HIV, Hospitals, Infection, Inn, Inter News Network, Interview, Jaya Sridhar, Jeya Sridhar, medical, Medicine, NGO, patients, Pharmaceuticals, Plasma, Red Ribbon, Sex, Sridhar, Tests, Transfusion, Trials, Virus | 1 Comment »

‘Uyir’ & ‘Mirugam’ director Sami vs Tamil Actress Padmapriya

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

டைரக்டருக்கு கீழ் பணியாதவர்
“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”
டைரக்டர் சாமி சொல்கிறார்


“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.

கணவன்-மனைவி கதை

`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.

அந்த படத்தை அடுத்து டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.

தகராறு

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரமானது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

தடை

அப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

சாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.

அதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.

கதாநாயகி மாற்றம்

கதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒரு நடிகை.

`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”

இவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.

Posted in abuse, Action, Actress, AIDS, Allegations, Andhra, AP, Apology, Ban, Callsheet, Cinema, Condemn, Director, Faces, Films, Hero, Heroine, Hit, HIV, Hype, Interview, Investigation, journalism, Kerala, Kisu Kisu, Kisukisu, Malayalam, Media, Mirugam, Mirukam, Mollywood, Movies, News, Padma priya, Padmapriya, Pathma priya, Pathmapriya, people, Product, Promotions, Protest, Reel, release, Reports, Rumor, Rumors, Rumour, Saami, Saamy, Sami, Samy, Sangeetha, Sangitha, Screenplay, Sex, Slap, Sorry, Strike, Telugu, Theater, Theaters, Theatres, Tollywood, Torture, Uyir, video | Leave a Comment »

The price of brides in Uttar Pradesh: Causes of the discrepancy in female-male Sex Ratio

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2007

விலை கொடுத்து வாங்கப்படும் மணமகள்கள்: உ.பி.,யில் அவல நிலை 

ஷாஜன்பூர்: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததைத் தொடர்ந்து, மணமகளை வேறு மாநிலங்களில் இருந்து விலை கொடுத்து வாங்கும் மாநிலங்கள் வரிசையில் அரியானா, ராஜஸ்தானைத் தொடர்ந்து உ.பி.,யும் சேர்ந்துள்ளது.உ.பி., மாநிலம் ஷாஜன்பூர் மாவட்டத்தில் தான் ஆண்களை விட, பெண்களின் விகிதம் மிகக்குறைந்து உள்ளது. இங்குள்ள நகர்ப்புறங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 678 என்ற விகிதத்தில் பெண்கள் உள்ளனர். கிராமப்புற நிலை இன்னும் படுமோசம்.

இங்கு ஆயிரம் ஆண்களுக்கு 535 பெண்களே உள்ளனர். இந்த மாவட்டத்தில் தான், நாட்டிலேயே ஆண்களை விட, பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.

இதனால், திருமண வயதுக்கு வரும் ஆண்கள், மணமகள் கிடைக்காமல் திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து விலை கொடுத்து மணமகளை வாங்கி, திருமணம் செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. ரூ. 7,000 முதல் ரூ.10ஆயிரம் வரை மணமகளுக்கு விலை கொடுக்கப்படுகிறது.

ஷாஜன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் கிராமத்தில் வசிக்கும் 250 குடும்பத்தில் 60 சதவீதத்தினர் இது போலத் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த கிராமத்தில் விசாரித்த போது பலரது, “சோகக் கதைகள்’ தெரியவந்தது. ஒரிசாவில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவரை, உ.பி., மாநிலம் ஷாஜன்பூர் மாவட்டம் ஷாகஞ்ச் கிராமத்தை சேர்ந்த மகிந்தர் என்பவர், ரூ.7,500 விலை கொடுத்து மணமகளாக வாங்கி வந்தார். மாமியாரையும் அழைத்து வந்து வீட்டில் உட்கார வைத்து சோறு போட்டு வருகிறார்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். கணவருடன் அனிதா சரிவர பேசுவதில்லை. காரணம்: இருவருக்கு இடையே உள்ள பாஷை பிரச்னை தான். மகிந்தர் பேசும் ஹிந்தி அனிதாவுக்கும், அனிதா பேசும் ஒரிய மொழி மகிந்தருக்கும் புரிவது இல்லை. பீகாரைச் சேர்ந்த மீரா தேவி என்ற பெண்ணின் கதை இன்னும் மோசம். இரண்டரை ஆண்டுக்கு முன் ராஜிவ் என்பவர் ரூ.8 ஆயிரம் விலை கொடுத்து மணமகளாக கொண்டு வந்தார். மீரா இன்னும் கர்ப்பம் தரிக்காததால், “வீணாக செலவு செய்துவிட்டோமோ’ என்று ராஜிவின் குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர்.

இந்த கிராமத்தில், மனைவியை இழந்த பிராமணர், நாராயண் லால், மறுமணம் செய்து கொள்ளவிரும்பினார். ஆனால், மணமகள் கிடைக்கவில்லை. தேடித்தேடிப் பார்த்து, இறுதியில் கோல்கட்டாவை சேர்ந்த ஆஷா தேவி என்ற 45 வயது விதவையை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்தார். அந்ததொகை ஆஷாதேவியின் மகனுக்கு கொடுக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக இவருடன் தான் குடும்பம் நடத்தி வருகிறார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோல்கட்டா சென்று தன் மகனை பார்த்து விட்டு வருகிறார் ஆஷா தேவி. இவருக்கு சரளமாக இந்தி பேச வராது. இருப்பினும், நாராயண் லாலின் குடும்பத்தினர் படித்தவர்கள் என்பதால், பெங்காலி மொழி பேசும் ஆஷா,, என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்கின்றனர்.

இதே போல, ராம்பஜன் என்பவரும் கோல்கட்டாவில் இருந்து அனிதா என்ற பெண்ணை, நான்கு ஆண்டுக்கு முன் ரூ.10 ஆயிரம் விலை கொடுத்து வாங்கினார். இவரும் விதவை தான். திருமணத்துக்கு பின் அனிதாவின் பெயரை ராம் லாலி என்று மாற்றிவைத்தார் ராம் பஜன். “”இந்த வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியாகவே உள்ளது. விதவையாக வீட்டில் முடங்கிக்கிடந்த எனக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. என் கணவர் கொடுத்த பணம், குடும்பத்தாருக்கும் உதவியாக உள்ளது,” என்கிறார், ராம் லாலி என்கிற அனிதா. சமூக சேவை அமைப்பைச் சேர்ந்த நீலம் சிங் என்பவர், “அடுத்து வரும் ஆண்டுகளில், பெண்சிசுக் கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்காவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிப்போகும்’ என்று கூறினார்.

Posted in Bridegrooms, brides, Death, Discrepancy, Economy, Female, male, Marriage, Price, Rates, ratio, sales, Sell, Sex, Society, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Utharpradesh, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Wedding | Leave a Comment »

Teacher Suicide – Students, Sex Abuse, Law & Order

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2007

கேமிரா செல்போனில் குளிப்பதை படம் பிடித்ததால் ஆசிரியை தற்கொலை

நகரி, ஆக. 24-

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிவானந்த புரத்தை சேர்ந்தவர் சுனிதா (27). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நிரஞ்சன் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மேல்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திரகுமார் ஆகியோர் பக்கத்து வீட்டு மாடியில் ஒளிந்திருந்து கேமிரா செல்போனில் படம் பிடித்த

னர்.பின்னர் அவர்கள் இருவரும் சுனிதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், “எங்களுக்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும். இல்லை யென்றால் நீங்கள் குளித்த போது எடுத்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடு வோம்” என்று எழுதி இருந்தனர்.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சி யடைந்த அவர் உடனே கணவரிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சின்ன சவுக்னார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்து அனுப்பி விட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்யவில்லை.

இந்த நிலையில் ஆசிரியை சுனிதா தன்னை மாணவர்கள் நிர்வாணமாகபடம் எடுத்து விட்டார்களே என்று வேதனை யில் அழுதபடியே இருந்தார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

——————————————————————————————–

வீடியோ-செல்போனில் ஆசிரியையை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டல்: பல்கலைக்கழக பேராசிரியர் கைது

டேராடூன், ஆக. 24-

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் குருகுல் கங்கிரி சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது. 105 ஆண்டு பாரம் பரியமிக்க இந்த பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் அவ மான சம்பவம் நடந்தது.

இங்கு பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அருண் குமார், ராஜீவ் சர்மா, மனோஜ்குமார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து குருகுல் பெண்கள் கல்லூரியில் பணி யாற்றும் ஆசிரியை ஒருவரை நிர்வாணப்படம் எடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.

ஆசிரியையின் நிர்வாணப் படத்தை அவர்கள் சி.டி.க் களாக தயாரித்தனர். செல் போனிலும் அதை படம் பிடித்து எம்.எம்.எஸ்.மூலம் மற்றவர்களது செல்களுக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேராசிரியர்களில் ஒரு வரது மனைவி தனது கணவரின் செல்போனில் பெண்ணின் ஆபாசபடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த படத்தில் இருப்பது கணவரது பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியின் ஆசிரியை என் பது தெரியவந்தது.

உடனே அவர் செல்போனில் இருந்த ஆபாச படத்தை சம்பந் தப்பட்ட ஆசிரியையிடம் காட்டி `உன்னை எப்படி என் கணவர் படம் எடுத்தார்’ என்று கேட்டு சண்டை போட்டார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு கல்லூரி முதல்வர் வரை சென்றது.

அவர் இது பற்றி சமஸ்கிருத பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் துணைவேந்தர் ஸ்வாந் திர குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களும் உடன டியாக சஸ்பெண்டு செய்யப் பட்டனர். இவர்களில் ராஜீவ்குமார் என்பவர் தற்காலிக பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். நிர்வாணப்படத்தில் வரும் ஆசிரியையிடம் துணைவேந்தர் விசாரணை நடத்தினார்.

நிர்வாணப் படத்தில் வரு வது நான் இல்லை என்றும் தனது முகத்தை கிராபிக்ஸ் மூலம் நிர்வாண படத்துடன் இணைத்துள்ளனர் என்றும், இந்தப் படங்களை காட்டி தன்னை 3 பேராசிரியர் களும் பல்வேறு விதத்தில் “பிளாக் மெயில்” செய்து மிரட்டி னார்கள் என்றும் கூறினார்.

பல்கலைக்கழக குழு விசாரணைக்குப் பின் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இதற்குள் 3 பேராசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களில் மனோஜ்குமார் என்பவர் போலீசில் பிடி பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார் கள்.

இதற்கிடையே இந்தசம் பவம் பல்கலைக்கழகம் முழு வதும் பரவியது. 3 பேராசி ரியர்களையும் கைது செய் யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது 3 பேராசிரி யர் களின் கொடும்பாவியும் எரிக் கப்பட்டது.

Posted in abuse, Bath, Bathe, Bathing, Camera, Cell, Cellphone, Crime, Education, Exposure, Female, Hidden, Law, male, MMS, Mobile, Naked, Order, phone, Pressure, Professor, Se, Sex, Sexual, Sick, Society, Students, Suicide, Teacher, Torture, University, video | Leave a Comment »

Female Infanticide – Gender selections & Abortions in India: Law

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

பிறப்பது எங்கள் பிறப்புரிமை!

உ . நிர்மலா ராணி, வழக்கறிஞர்

கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு தம்பதி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தாய், மூன்றாவது ஆண் குழந்தை பெற விரும்புவதில் என்ன தவறு என்று வினவியிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு போடப்பட்ட ஓரிரண்டு தினங்களுக்குள் ஹைதராபாதின் ஒரு பகுதியில் தனது எட்டாவது மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி அதை, அப்துல் ரஹீம் என்பவர் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் நடந்திருக்கிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் கை வெளியே தெரிந்ததைப் பார்த்து, விவசாயி ஒருவர் காப்பாற்ற, அக்குழந்தை அதிசயமாய் உயிர் பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது சம்பவத்தில் குற்றம் நடந்து விட்டது. முதல் சம்பவத்தில் குற்றம் செய்ய கோர்ட் அனுமதி கேட்கப்படுகிறது. இவை இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் – மக்கள்தொகையில் பெண்ணினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் காரணிதான் அது.

மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 1901-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் இருந்தன. 1991-ல் 945 ஆக குறைந்து 2001-ல் 927-க்கு சரிந்துவிட்டது. பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.

“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொள்ளை நோய்களாகக் கருக்கொலைகளும், சிசுக்கொலைகளும் சமுதாயத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன. இந்த நோய்களை உற்பத்தி செய்யும் விஷக்கிருமிகள் நமது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் புரையோடிப் போயிருக்கின்றன.

வரதட்சிணை என்ற பெயரிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரிலும், பெண்கள், பெற்றோர்களால் ஒரு பொருளாதாரச் சுமையாகவே கருதப்படுகிறார்கள். சொத்துரிமையும் பெற்றோருடனே வாழும் உரிமையும், இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும், ஆண்களுக்கே அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆண்குழந்தைகளை விரும்பும் மனப்பாங்கும் நியாயப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள தில்லியில் பெண்களின் விகிதம் 868. மகாராஷ்டிரத்தில் 1991-ல் 946 ஆக இருந்த விகிதம் இன்று 913 ஆக மாறிவிட்டது. மகாபாரதப் புகழ் குருஷேத்ரத்தில் பாலின விகிதம் 770. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

“”பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பம் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம்” 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஸ்கேன் மையங்கள் அரசிடம் பதிவு செய்யப்பட வேண்டும். கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இதைப் பற்றி விளம்பரம் செய்தாலும் அது குற்றம். முதல் 10 ஆண்டுகளுக்கு எவ்வித அசைவுமில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடப்பட்டுள்ளது.

“”ஆணும் பெண்ணும் சமம்” என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமே தவிர சமூகச் சட்டத்தை அல்ல. ஒரு சட்டம் எந்தப் பின்னணியில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் எதிர்மறையான கருத்துகளைக் கூறும்போது சமூகத்தில் குற்றத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அவை ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.

சீனாவிலும் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2020-க்குள், திருமணம் செய்ய முடியாத 3 கோடி ஆண்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது. அங்கும் பாலினத் தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “”நாமிருவர் நமக்கொருவர்” போன்ற திட்டங்களைக் கடைப்பிடித்ததில் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாததால் பிரச்னை இல்லை. கரு உருவாவதற்கு முன்னரே பாலினத்தைத் தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் முறைப்படி, வர்ஜினியாவில் 11 பெற்றோர்களில் 10 பேர் பெண் குழந்தையைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பல, பாலினத் தேர்வு செய்யும் முறையைத் தடை செய்துள்ளன.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.

இந்நிலையில், இந்தியாவில் பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும். பாதகமான சமூகப் பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்க, அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை கருவிலே அழிக்கப்பட்டாலும், பூமிக்குள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் – ஃபீனிக்ஸ் பறவைகளாய்!

———————————————————————————————————————————————–

ஆண்டுக்கு 10 லட்சம் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன: மத்திய சமூகநல வாரியத் தலைவி தகவல்

புதுச்சேரி, நவ. 4: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் என்று மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில சமூக நல வாரியம் சார்பில் பெண் கரு பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் பேசியது:

21-ம் நூற்றாண்டில் நாம் இதுபோல் ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது குறித்து மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர். பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன்? தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம். தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.

இக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏ ஆர்.விசுவநாதன், புதுச்சேரி சமூக நல வாரியத் தலைவி ழான் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பொறுப்பும் செயல்திறனும் கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வாழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டன.

———————————————————————————————————————————————————–

ஆடாமல் நிற்குமா அரசுத் தொட்டில்?

எஸ். ஜெய்சங்கர்

உள்ளாட்சி முதல் உலக அளவில், பல நிலைகளில் பெண்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். பாரத நாட்டின் முதல் குடிமகள் முதல் நாட்டின் பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பாரதியின் கனவை நனவாக்க, விண்கலமேறி விண்வெளிக்குப் புறப்பட்ட கல்பனா சாவ்லா, திரும்பி வரும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், காற்றோடு கலந்தார். அவரது வரிசையில் சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பத்தையும் தாண்டி வெற்றி பெற்றார். இந்திய நாடே அவரைப் போற்றுகிறது. இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் செய்தி.

அண்டவெளியில், காற்றில்லா இடத்தில், காலடி எடுத்து வைத்து, நடைபழகிய பெண்கள் நம் பாரதப் பெண்கள் என எண்ணி மகிழ்ந்தாலும், தாயின் கருப்பை எனும் இருண்ட பிரதேசத்தில் தோன்றி, வெளிச்சத்தைப் பார்த்தும், பார்க்காமலும் கருகிய மொட்டுகள் நம் தமிழகத்தில் ஏராளம்.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், 1999 ஆம் ஆண்டு 657 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 439 பெண் சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டது. மற்ற மாவட்டங்களிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

தமிழகத்தின் ஆண் -பெண் குழந்தைகளின் விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல், பெண் சிசுக்கொலை ஆகியவை தமிழக அரசை கவலையடையச் செய்தது.

இதன் விளைவாக, 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், முழுவீச்சில் 2001 ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகும், தருமபுரியில் 2001 ஆம் ஆண்டு 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண் சிசுவைக் கொல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, விரும்பாத பெண் சிசுக்களை அரசுத் தொட்டிலில் போட்டுச் சென்றுவிட்டனர். அக்குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், விரும்புவோருக்குத் தத்து கொடுக்கிறது.

மேலும், 2-வது பிரசவத்தைக் கண்காணிப்பது, பெண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்குக் கவுன்சலிங் தந்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்துவது போன்றவற்றால் பெண் சிசுக்கொலைகள் படிப்படியாகக் குறைந்தன.

பெண் சிசுக்கொலை குறைந்தாலும், தொட்டிலுக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் 1000-மாவது தொட்டில் குழந்தையைப் பெற்றுள்ளது தருமபுரி அரசுத் தொட்டில் குழந்தைகள் மையம். இதில் சுமார் 120 குழந்தைகள் மட்டுமே ஆண் சிசுக்கள். ஆண் சிசுக்கள் தொட்டிலுக்கு வந்ததற்கும் சமுதாயச் சீர்கேடே காரணம்; தவறான உறவால் பிறந்த குழந்தைகளை வெளிக்காட்ட முடியாமல், அவை தொட்டிலில் போடப்பட்டன.

பெண் குழந்தை விஷயத்தில், அவர்களைப் படிக்க வைத்து, வரதட்சிணை, நகை எனச் செலவு செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்; ஆண் குழந்தையாக இருந்தால், மாற்றான் வீட்டுப் பெண் மூலம் குடும்பத்துக்கு வரவு என வரவு- செலவு கணக்கு பார்க்கும் எண்ணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களிடமும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம். அதனால், பெண் குழந்தை என்றால் வளர்ப்பது கடினம் என்ற சலிப்பு. தொட்டில் குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டு, தருமபுரியில் மட்டுமே 1000 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம் எனும் தகவல் பெண்ணினத்துக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. காரணம், பெண் சிசுவைக் கொன்றால் சிறைத்தண்டனை உறுதி என்ற பயம் மட்டுமே, சிசுக்கொலைகளைக் குறைத்து, அவற்றை அரசுத் தொட்டிலில் போடச் செய்திருக்கிறது.

சிசுக்கொலைகளைத் தடுக்கவும்; பெண் குழந்தைகளைத் தத்து பெறவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் முதல்கட்ட நடவடிக்கைகளே. பெண் குழந்தைகளைத் தத்து பெறுவதோடு தனது கடமை முடிந்தது என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அரசுத் தொட்டிலுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான, ஆக்கபூர்வ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் தேவை.

மேலும், பெண் குழந்தைகளை அரசுத் தொட்டிலில் போடுவதைத் தவிர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு வர வேண்டும். இதற்கு, சமூக, பொருளாதார மாற்றம் மிக அவசியம். பொருளாதார வசதி கொண்ட எவரும் தங்களது பெண் சிசுக்களைக் கொல்வதும், அரசுத் தொட்டிலில் போடுவதும் கிடையாது. வருவாயற்ற ஏழைகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

அரசின் முயற்சியாலும், பொதுமக்களிடையே ஏற்படும் மன மாற்றத்தாலும், “அரசுத் தொட்டிலுக்கு பெண் சிசுக்கள் வருவது நின்று 1000 நாள்களாகின்றன’ என்ற அறிவிப்பு வெளியாகுமானால், அது நிச்சயமாக பெண் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.

Posted in Abortion, Analysis, Backgrounders, Birth, Census, Child, Childbirth, Children, Conservative, Culture, Disease, Equal, Female, Feminism, Gender, Growth, Health, Infanticide, Insights, Kids, Law, Liberal, male, Malnutrition, Needy, Op-Ed, Opportunities, Opportunity, Order, parents, Poor, Population, ratio, Rich, rights, Sex, solutions, State, Stats, Statz, Values, Wealthy | Leave a Comment »

Vice President poll – Sonia announces Hamid Ansari: a diplomat, an academic and a writer

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

துணை ஜனாதிபதி தேர்தல் மனு தாக்கல் தொடங்கியது: காங்.கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி

துணை ஜனாதிபதி பைரோன்சிங் செகா வத்பதவிக் காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முடிகிறது.

புதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டு துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.

துணை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணி, 3-வது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். 3-வது அணி சார்பில் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் வேட்பாளராக அறி விக்கப் பட்டார்.

துணை ஜனாதிபதி தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமி, மதி.மு.க. எம்.பி.க்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.

காங்கிரஸ் கூட்டணியில் துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பொறுப்பை இடது சாரி கட்சிகளிடம் விட்டுள் ளனர். எந்த கட்சியையும்சேராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய இடது சாரி கட்சித் தலைவர்கள் தீர்மானித் துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று டெல்லியில் கூடி விவா தித்தனர்.

வரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப், பேராசிரியர் முஷ்ரூல் ஹசன், மேற்கு வங்க சபாநாயகர் ஹாசீம் அப்துல் ஹாலீம், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட சுமார் 10 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் எந்த இறுதி முடிவும் நேற்று எட்டப்படவில்லை.

வேட்பாளர் பெயரை விரைவில் அறிவிக்க இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இன்று காலை நடந்த ஆலோசனை யில் இடது சாரி கட்சி தலைவர் கள் ஹமீத் அன்சாரி பெயரை ஏகமனமதாக தீர்மானித்தனர். இதுபற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அவர்கள் முறைப்படி தெரி வித்தனர்.

எனவே ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி ஆவார் என்று உறுதியாகியுள்ளது.ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஹமீத் அன்சாரி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதா கூட்டணி யும், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உறுதியாக உள்ளது. வேட்பாளரை தேர்வு செய் யும் அதிகாரத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யிடம் விட்டுள்ளனர். 22-ந் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படும் என்று சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான 23-ந் தேதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மாஹெப்துல்லா, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

———————————————————————————————————
Hamid Ansari: a diplomat, an academic and a writer

New Delhi, July. 20 (PTI): Mohammad Hamid Ansari, who was today named the UPA-Left candidate for the post of Vice President, brings with him a wealth of experience as a distinguished diplomat, academic and a writer in a career spanning over four decades.

Considered an intellectual with Left-of-the-Centre inclination, Ansari has carved out a distinct place for himself as a diplomat, academician and a writer specialising in international issues.

Born in Calcutta in 1937, Ansari studied at Shimla’s St Edwards High School and St Xavier’s College in the West Bengal capital and Aligarh Muslim University.

Joining the Indian Foreign Service in 1961, Ansari has served as Indian ambassador to the United Arab Emirates, Afghanistan, Iran and Saudi Arabia.

He was also the Indian High Commissioner to Australia and New Delhi’s Permanent Representative to the United Nations in New York.

Awarded Padma Shree in 1984, Ansari was the Vice-Chancellor of Aligarh Muslim University before he was appointed chairman of the National Commission for Minorities (NCM) in March this year.

———————————————————————————————————

தெற்கு தேய்கிறதே, தெரிகிறதா?

முதன்முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பின்னணி நமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றாலும், மக்களாட்சியில் இறுதி முடிவெடுப்பது வாக்குப்பெட்டிதான் என்பதால் வெற்றியை வரவேற்கிறோம்.

பிரதிபா பாட்டீலின் வெற்றியைப் பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் வர்ணிக்கும்போதுதான் நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது. ஆவியுடனும் சாமியுடனும் பேசுவதுதான் பெரியாரின் கொள்கைகள் என்பது மிகவும் காலதாமதமாக இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. மகிழ்ச்சி.

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில் அனைவரது பார்வையும் அடுத்து நடக்க இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நிலைகொண்டிருப்பதில் வியப்பில்லை. மூன்று அணிகளுமே அவரவர் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார் என்பதும், வேட்பாளர்களில் யாருக்கு அதிகத் தகுதி என்பதும் நியாயமான கேள்விகள்.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரியும் சரி, பிரதான எதிரணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் சரி, அவரவருக்கென தனித்துவம்மிக்க மரியாதைக்குரிய நபர்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் அனுபவம்மிக்க அரசியல்வாதி. மூன்று அணியினருமே களத்தில் இருக்கிறார்கள் என்பதால், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

ஹமீத் அன்சாரியும் நஜ்மா ஹெப்துல்லாவும் இரண்டு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டகாலத் தலைவர்களின் வாரிசுகள். ஹமீத் அன்சாரி, 1927-ல் சென்னையில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த முக்தர் அஹ்மத் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நஜ்மா ஹெப்துல்லாவோ அபுல்கலாம் ஆசாதின் குடும்பத்தவர்.

நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பல ஆண்டுகள் மாநிலங்களவையை நடத்திய அனுபவம் உண்டு என்பது உண்மை. மாநிலங்களவையில் துணைத் தலைவராகச் செயல்பட்டவர் என்கிற பெருமையும், எல்லா கட்சியினரிடமும் நட்புப் பாராட்டுபவர் என்கிற நற்பெயரும் அவருக்கு உண்டு. அதேநேரத்தில், பதவிக்காகக் கட்சி மாறியவர் என்கிற அவப்பெயரை நஜ்மா சுமந்து கொண்டிருப்பதும், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு சந்தர்ப்பவாதி என்ற சாயம் பூசிக் கொண்டவர் என்பதும் அவரது மிகப் பெரிய பலவீனங்கள்.

ஹமீத் அன்சாரியைப் பொருத்தவரை அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக இருப்பவர் என்பதாலேயே இவர் மதவாதி என்றோ, ஒரு சார்பாகச் செயல்படுவார் என்றோ சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இவருடைய கருத்துகளில் பல, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லை, இருக்காது என்பதுதான் நிஜம். மேற்காசியப் பிரச்னையிலும் சரி, ஈரான், இராக் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் சரி, அன்சாரியின் கருத்துகள் அரசின் கண்ணோட்டத்திற்கு எதிராக இருப்பவை என்பது ஊரறிந்த உண்மை.

வெளிவிவகாரத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ஹமீத் அன்சாரியின் பலம். அதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த அனுபவமும் உள்ளவர். அன்சாரியா, நஜ்மாவா என்கிற கேள்வி எழுந்தால் அன்சாரிதான் என்று கண்ணை மூடிக்கொண்டு அடித்துச் சொல்லிவிடலாம். அன்சாரி போன்ற ஓர் அனுபவசாலி குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியக் குடியரசுக்குப் பெருமை சேரும்.

ஒரு சின்ன வருத்தம். இந்தியா குடியரசானது முதல் கடந்த தேர்தல் வரை, குடியரசுத் தலைவர் பதவியோ அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவியோ தென்னகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஒரு வேண்டுகோளே விடுத்ததாக ஞாபகம்.

வேட்பாளர் தேர்தலில் நம்மவர்கள் பங்குதான் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தென்னகம் வஞ்சிக்கப்பட்டதா, இல்லை இவர்கள் கோட்டை விட்டார்களா? தெற்கு தேய்கிறதே, தெரிகிறதா?

——————————————————————————————-

August 10, 2007

இந்தியாவின் புதிய குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தூதராக பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி, 455 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா, 222 வாக்குகளைப் பெற்றார். அதிமுக, தெலுங்குதேசம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட ரஷீத் மசூர் 75 வாக்குகளைப் பெற்றார்.

மொத்தமுள்ள 783 வாக்குகளில் 762 வாக்குகள் பதிவாயின. 10 வாக்குகள் செல்லாதவை.

இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதற்காக, கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

வெற்றி பெற்ற ஹமீத் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிறப்பாகச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.


Posted in academic, ADMK, Aligar, Aligarh, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Ansari, APJ, Aristocrat, Author, BJP, BSP, candidate, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), diplomat, Divide, DMK, Education, Elections, Hameed, Hamid, Iran, Kalam, Left, Marxist, Masood, minority, Mulayam, Muslim, Najma, National Commission for Minorities, NCM, NDA, Party, Politics, Poll, Polls, President, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Rasheed, Rashid, Religion, Reservation, Right, Samajvadi, Samajvadi Party, Samajwadi, Samajwadi Party, Sex, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, South, University, UNPA, UPA, vice-president, VicePresident, VP, Writer | Leave a Comment »

Dinamalar ‘Andhumani’ Ramesh vs Dinakaran & Sun TV Uma – Saga, Sexual Harassment

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

Full Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationசற்றுமுன்…: தினமலர் நிர்வாகி “அந்துமணி” ரமேஷ் மீது பாலியல் புகார்

சற்றுமுன்…: உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் – “தினமலர்” சட்டபூர்வமாக சந்திக்கும்

சற்றுமுன்…: “அந்துமணி” ரமேஷ் பாலியல் புகார் – சன் செய்திகள் வீடியோ

‘Andhumani’ in Abusive SMS Scam « Views and Reviews

Dinamalar strikes back refuting alleged charges as false claims on political moves « Views and Reviews

சும்மா டைம் பாஸ் மச்சி…..: தினமலர் ரமேஷ் சார்!

ஓசை செல்லாவின் செக்ஸ் SMS புகழ் அந்துமணி … பா.கே.ப.ஓ!!

காசிப்ஸ்: தினமலர் – தினகரன் மோதல் பிண்ணனி!

எனக்கு தெரிந்தது…: தினமலர், தினகரன், சன் டிவி நிறுவனஊழியர்களிடம் ஓர் “”மறைமுக” நேர்காணல்…

PRINCENRSAMA: ிழிந்து தொங்கும் ‘அந்துமணி’ முகமூடி!

real_not_ reel: முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா?

சற்றுமுன்…: தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை தினமலர் ரமேஷ் மீது நடவடிக்கை

மாதர்சம்மேளனம் இன்று ஆலோசனை

சென்னை, ஜூலை 17: தினமலர் நாளேட்டின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பற்றி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ரமேஷின் தொல்லை தாங்க முடியவில்லை
தினமலர் நாளிதழில் நிருபராக பணியாற்றிய உமா(28), அடையாறு காவல் நிலையத்தில் 13ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தினமலர் நாளிதழில் ஏழு ஆண்டுகளாக நிருபராக பணியாற்றினேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வந்து கொண்டே இருந்தது. தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் இவ்வாறு செய்துள்ளார். இவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இவரதுRamesh Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation தொல்லை தாங்காமல்தான் 3 மாதம் முன்பு ராஜினாமா செய்தேன். இப்போது தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். இப்போது, Ôஉன்னையும் உன் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன். உயிருடன் கொளுத்தி விடுவேன்Õ என்று மிரட்டுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பெண் ஊழியரை பத்திரிகை முதலாளியே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமலர் ஆசிரியரின் மகன் ரமேஷ§க்கு மகளிர் அமைப்புகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி கூறியதாவது:

7 மணி தாண்டிய பின்
விதிமீறிய போலீஸ்
யாரோ கொடுத்த ஏதோ ஒரு புகார் என்ற பெயரில் உமாவையும், எஸ்.டி.டி. பூத்தில் பணியாற்றும் பெண்ணையும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுவே தவறானது. இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதியை போலீசார் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பல அலுவலகங்களில் பாலியல் புகார் விசாரணைக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சட்டப்படியான இந்த ஏற்பாட்டில் பத்திரிகை அலுவலகங்களுக்கு விதிவிலக்கு கிடையாது.
முதலாளியை யார் மிரட்ட முடியும்?

ஒரு பத்திரிகையின் நிர்வாகிக்கும், அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் உமா கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. எந்தவித பண பலமும், செல்வாக்கும் இல்லாத ஒரு பெண்ணால், ஒரு பத்திரிகையின் முதலாளியை எப்படி மிரட்ட முடியும்? உமா மீதான இத்தகைய குற்றச்சாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

7 வருடமாக எப்படி நீடித்தார்?
உமா மனநிலை சரியில்லாதவர் என்று தினமலர் நிர்வாகத்தின் பெயரில் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண் அதை வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்ளும் கோழைத் தனத்தை உதறிவிட்டு, நீதி கேட்டு பகிரங்கமாகப் போராடத் துணிந்தால் அவள் நடத்தை கெட்டவள், மனநிலை சரியில்லாதவள் என்று எளிதில் குற்றம் சுமத்தி விடுவார்கள் என்பதை தொடர்ந்து பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அதுதான் நடக்கிறது. உமா மனநிலை சரியில்லாதவர் என்றால் தினமலர் நிருபராக 7 ஆண்டுகள் வேலை செய்ய அவரை எப்படி அனுமதித்தனர்? இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியுமா?

அதற்கும் இவரே
காரணமாவார்
தினமலர் நிர்வாகம் சொல்வதுபோல ஒரு வேளை உண்மையிலேயே உமாவின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லைதான் என்று கூறலாம். தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு கடுமையாக மனஉளைச்சல் ஏற்படும் என்பது எதார்த்தமானது. எனவே, உமா கொடுத்த புகார் மீது காவல்துறை தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு வாசுகி கூறினார்.

இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா கூறியதாவது:
பணியிடங்களில் பல பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. சில பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் வெளியே சொல்ல முன்வருகின்றனர். தினமலர் நிர்வாகியே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக உமா கூறியுள்ளார். இவ்வளவு தைரியமாக அவர் வெளியே சொல்லி இருக்கிறார் என்றால், அதில் நிச்சயம் உண்மை இருக்கும். இப்புகார் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி, ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பத்திரிகை முதலாளி மீது குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுசீலா கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி கூறியதாவது:
பாதுகாப்பு அளிக்க வேண்டும்
பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றி புகார் கொடுத்தால் காவல் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. மாதர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அதில் முடிவு எடுப்போம்.
இவ்வாறு பத்மாவதி கூறினார்.

————————————————————————————————————————-

மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதே இவர்களின் தொழில்

வேண்டாதவர்கள் மீது அவது£று பரப்புவது என்பது தினமலர் நிர்வாகத்துக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். பெண் நிருபர் உமா, தமக்கு தினமலர் உரிமையாளர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார் என்று புகார் கூறியதும், அதனை மறுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், புகார் கூறிய உமா மனநிலை சரியில்லாதவர் எUma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationன்று அவது£றுகளை பரப்புவதே இதற்கு உதாரணம்.

தமிழர் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். தொழில் போட்டியில் வெற்றிபெற முடியாத ஆத்திரத்தில், தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் என்ற ஒரே காரணத்துக்காக ஆதித்தனாரைப் பற்றி அவது£றாக கேலி செய்து செய்தி வெளியிட்டு பின்னர் தினமலர் வாங்கிக் கட்டிக்கொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

தினமலருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை கிண்டலான அடைமொழியோடு தினமலர் பல ஆண்டுகள் கேலி செய்து வந்தது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விளம்பரங்கள் தினமலருக்கு தரப்படவில்லை என்ற ஆத்திரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு பிளாக்மெயில் செய்ததும், பின்னர் துணைவேந்தரே தினமலரின் உள்நோக்கம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும் தினமலரின் விஷமத்தனத்தை அம்பலப்படுத்தியதும் தினமலரின் மோசடித்தனத்துக்கு ஒரு உதாரணம்.

கொள்கை ரீதியாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கட்சிகளையும் குறிப்பாக தமிழக தலைவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர்களின் பெயர்களை சுருக்கி அவர்களை கேலி கிண்டல் செய்வதும் தினமலருக்கு வாடிக்கையான ஒன்று.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியை பற்றி நீண்ட நெடுங்காலமாக அவது£று செய்திகளை வெளியிட்டு ஆனந்தப்பட்டது தினமலர்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்திருமாவளவன் போன்றவர்களை பற்றியும் அவது£று பரப்ப தவறியதில்லை.

தமிழகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவை இன்றுவரை ‘அண்ணாதுரை’ என்றே குறிப்பிட்டு எழுதும் தினமலர் நிர்வாகம், பலமுறை கண்டனங்கள் எழுந்தபோதும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரைப்பட கலைஞர்களும் தினமலரில் கேலி, கிண்டல், அவது£றுகளுக்கு தப்பவில்லை.

தொடர்ந்து தமிழ் திரைப்படக் கலைஞர்களை கேலி கிண்டல் செய்து அவர்களின் மனம் புண்படும்படி செய்திகளை வெளியிட்ட பெருமை தினமலருக்கு உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி சிபி வரைக்கும் அத்தனை கலைஞர்களையும் காயப்படுத்தி வருகிறது தினமலர்.

காலங்காலமாக தமிழ் தலைவர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அவது£றாக விமர்சித்து எழுதி வந்த தினமலர் தற்போது அந்தரங்க அசிங்கங்களை அம்பலப்படுத்திய உமா மீது அவது£றுகளை அள்ளிவீசுவதொன்றும் ஆச்சரியமில்லை.
பாரம்பரியமிக்க நிறுவனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு பத்திரிகை பலத்தை தவறாக பயன்படுத்தி வரும் தினமலர் நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி பாவ விமோசனம் தேடாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி விளக்கம் அளிப்பது பிரச்னையை திசை திருப்பி குற்றச்சாட்டில் இருந்து தப்பியோடும் முயற்சியாகும்.

மேலும், தினமலர் உரிமையாளரின் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தினகரனில் செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல தினகரன் அலுவலகத்தை தேடிவந்தன.

தினமலர் இதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பான வாரமலரில் அவ்வப்போது ‘தொழில் அதிபருக்கு பெண் கம்பேனியன் தேவை’ என்ற விளம்பரத்தின் மறுபக்க மர்மம் அவற்றில் ஒன்று.

இவ்வாறு வரும் விளம்பரங்களின் பின்னணியில் இருந்தது யார் என்பதும், போலி விளம்பரங்கள் கொடுத்து பல பெண்களை வளைத்த கதைகளும் எங்களின் நேரடி கவனத்திற்கே வந்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்த, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு, நிர்வாகியே நேரில் வந்து பெண் பார்த்த கதையையும் சம்மந்தப்பட்ட பெண்ணே நம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார்.

இது பற்றியும் நாம் விரிவாக விசாரித்து வருகிறோம். எனவே தினமலர் நிர்வாகம் இனிமேலாவது மற்றவர்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு தன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

——————————————————————————————————————

மாதர் சம்மேளனம் ஆதரவு

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம், சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ., மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு குறித்து தலைவர் சுசீலா கூறியதாவது:

தினமலர் பத்திரிகை உரிமையாளர் ரமேஷ், தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக அப்பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய உமா புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த விஷயம் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இப்பிரச்னையில் உமாவுக்கு ஆதரவு கொடுத்து போராடுவோம். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூடி விரைவில் முடிவு செய்வோம்.
இவ்வாறு சுசீலா கூறினார்.

——————————————————————————————————————

பட்டியலிட்டு உமா கண்ணீர் தினமலர் ரமேஷ் செய்த கொடுமைகள்

சென்னை, ஜூலை 18: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி கீழ்த்தரமான முறையில் தனக்கு பல கொடுமைகளை தினமலர் நிர்வாகி ரமேஷ் செய்ததாக முன்னாள் பெண் நிருபர் உமா கண்ணீருடன் பட்டியலிட்டுள்ளார். தினமலரில் பணியாற்றிய பலர் கசப்பான அனுபவங்களால்தான் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண் நிருபர் உமா புகார் கொடுத்திருக்கிறார். அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ரமேஷ் பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னதால் தினமும் என்னைப் பற்றிய அவதூறு தகவல்களை தினமலர் நிர்வாகம் பரப்பி வருகிறது.

தினமலரில் நான் பணியாற்றியபோது பல தவறுகளை செய்ததாகவும், அப்போதெல்லாம் அழுது மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், நான் சிறப்பாக பணியாற்றுகிறேன் என்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியே பல நேரங்களில் என்னை பாராட்டியுள்ளார். செய்திப் பிரிவிலும் எனக்கு நல்ல பெயர்தான் இருந்தது.

தினமலரில் நிருபர்களாக இருப்பவர்களுக்கு செய்தி சேகரிக்கும் பணியைவிட நிர்வாகத்தினரின் குடும்ப வேலைகளைத்தான் அதிகம் கொடுத்துள்ளனர். நானும் அப்படித்தான் அவர்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கே அதிக நேரம் வேலை செய்தேன். அங்கு முறையான வேலை நேரம் என்பது கிடையாது. ஒவ்வொரு வேலைகளையும் விசுவாசமாகத்தான் செய்து கொடுத்தேன்.

பணியில் தவறு செய்திருந்தால் எனக்கு மெமோ கொடுக்க வேண்டியதுதானே. இதுவரை நான் அங்கு எந்த மெமோவும் வாங்கியதில்லை. மெமோ கொடுக்காமல் எப்படி நான் மன்னிப்பு கேட்டதாக கூற முடியும்?

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஜெயா டி.வி.க்கு விண்ணப்பித்தேன் என்ற காரணத்துக்காக என்னை வடசென்னைக்கு டிரான்ஸ்பர் செய்தார்கள். 50 ஆண்டு பாரம்பரியம் என்று கூறும் தினமலரில் ஊழியர்கள் அடிமையாக நடத்தப்படுவதுதான் உண்மை.
ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததோடு ரமேஷ் நிற்கவில்லை.

வெளியில் சொல்லவே நா கூசுகின்ற பல கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கி என்னை நோகடித்திருக்கிறார். மேலும், என் வண்டியை பஞ்சர் செய்வது, வண்டியின் சீட்டை கிழிப்பது, செருப்பை பையில் போட்டு வண்டியில் மாட்டுவது போன்ற அற்பத்தனமான காரியங்களையும் அரங்கேற்றினார். வீட்டில் நான் என்ன பேசுகிறேன் என்று கண்காணிக்க ஆள் அனுப்புவது, என்னைப் பற்றி ஆபீசில் ஆபாசமாக பேசுவது, வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புவது என்று ரமேஷ் செய்த கொடுமைகள் ஏராளம்.

நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்தேன். ரமேஷின் தொல்லைகள் பற்றி செய்திப் பிரிவில் உள்ளவர்களிடம் பல முறை சொல்லி அழுதேன். அவர்களும், போராடுங்கள் என்று கூறி என்னை தேற்ற முயற்சி செய்வார்கள்.

தொல்லை எல்லை மீறி போனதால்தான் இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராஜினாமா செய்தேன். அப்போது Ôதொழில் தகராறு காரணமாகÕ என்று எழுதப்பட்ட 5 ஸ்டாம்ப் பேப்பரில் என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். பிரச்னை ஒழிந்தது என்று வேறு வேலைக்குச் சென்றால் அங்கு வந்தும் தொல்லை கொடுக்கின்றனர்.
செய்தி நிறுவனங்களில் பணி கிடைக்காததால்தான் மக்கள் தொடர்பு அதிகாரி வேலையில் நான் சேர்ந்ததாக கூறியுள்ளனர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவியை கேவலப்படுத்தும் செயல்.

Ôதினமலர் – உண்மையின் உரை கல்Õ என்று போஸ்டர் வைப்பது கண்துடைப்பு வேலை. அங்கு பணிபுரிபவர்களுக்கும், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் அந்துமணி ரமேஷ் ஆகியோரின் மனசாட்சிக்கு தெரியும் எது உண்மை என்று.
இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

உண்மையை சொன்னால் மனநிலை பாதித்தவள் என்பதா?

தினமலர் நிர்வாகி மீது அவதூறு வழக்கு

பெண் நிருபர் உமா பேட்டி

சென்னை, ஜூலை 16: ÔÔசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த உண்மையை சொன்னதால¢ என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறுகின்றனர். இதனால் தினமலர் நிர்வாகம் மற்றும் அந்துமணி ரமேஷ் மீது அவதூறு வழக்கு தொடருவேன்ÕÕ என்று தினமலரில் பணிபுரிந்த நிருபர் உமா கூறியுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:

தினமலர் நிர்வாகி அந்துமணி ரமேஷ் தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால்தான் பொறுமை இழந்து புகார் கொடுத்தேன். உண்மையை வெளிப்படுத்தியதால் என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். என் எதிர்காலத்தை சீரழிக்க நினைக்கும் அவர்களின் எண்ணத்தை முறியடிப்பேன். என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.

போன் மூலம் மிரட்டல் விடுத்தேன் என்று பொய்ப் புகார் கூறி என்னை விசாரிப்பதற்காக 2 போலீசார் மாலை 7 மணிக்கு என் அலுவலகத்துக்கு வந்தனர். Ôபுகாரை காட்டுங்கள், உங்களுடன் வருகிறேன்Õ என்றேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.
இரண்டு மணி நேரம் விசாரணை செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருந்தனர். காரணத்தைக்கூட சொல்லவில்லை. சட்டப்படி மாலை 6 மணிக்குமேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது. போலீசார் அந்த சட்டத்தை பின்பற்றவில்லை. விசாரணைக்கு தயார் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். மீடியா என்ற பலத்தை வைத்துக் கொண்டு காவல்துறையை என் மீது பிரயோகம் செய்கின்றனர். நாட்டின் 4-வது தூண் பத்திரிகை. அதில் வேலை பார்த்ததால் பிரச்னையை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், சராசரி மனிதர்களால் இவர்களின் பழிவாங்கும் போக்கை எப்படி சமாளிக்க முடியும். அவர்களுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு பழிவாங்கும் எண்ணமுடையவர்தான் அந்துமணி ரமேஷ்.

நிர்வாகம் சார்பில் இன்று தன்னிலை விளக்கத்தை அவர்கள் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கு நான் போன் செய்து மிரட்டினேன் என்று கூறியுள்ளனர். எனக்கு சிரிப்புதான் வருகிறது. அங்கு வேலை பார்ப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதி நான் வெளியேறினேன். வேலையை விட்டுவந்து 3 மாதங்கள் ஆகிறது. மேலும் ஸ்ரீபிரியாவோடு எனக்கு அவ்வளவு பழக்கமுமில்லை. தினமலரை மிரட்டினேனா அல்லது ஸ்ரீபிரியாவை மிரட்டினேனா என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும். ஸ்ரீபிரியாவை மிரட்டினேன் என்றால் அவர்தானே என் மீது புகார் கொடுக்க வேண்டும். அது எப்படி நிர்வாகம் ஆக முடியும்.

நான்தான் போன் செய்து மிரட்டினேன் என்கிறார்கள். எல்லாம் பொய். அங்கிருந்து வெளியேறிய பிறகு நான் எதற்கு அவர்களை மிரட்ட வேண்டும். தற்போது பணியாற்றும் அலுவலகத்தில் இருக்கும் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவர்களை மிரட்டுவது என் வேலையல்ல. அவர்களின் தன்னிலை விளக்கம் ஆதாரமில்லாமல் இருக்கிறது.

அங்கு 7 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். என்னுடைய குரல் அவர்களுக்கு தெரியாதா? எனவே போன் மூலம் நான்தான் மிரட்டினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். தொலைபேசி எண், தொடர்பு கொண்ட நாட்கள், நேரம் எல்லாவற்றையும் வெளியிடட்டும். மருத்துவமனையில் உள்ள பூத்தில் போலீசார் வந்து சோதனை செய்தபோது, டயல் செய்த நம்பர்களில் தினமலர் நம்பர் டயல் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.

அதனால்தான் விசாரணை செய்யாமல் என்னை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்டவை. ஆள் வைத்து பேசுவது, மிரட்டுவது இதெல்லாம் அவர்களுக்குத்தான் கைவந்த கலை. எனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லை. பத்திரிகை துறையில் இருந்தேன் என்பதற்காக மற்றDinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegation பத்திரிகைகள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அப்படியானால் ஏன் 7 வருடம் அங்கு வேலைக்கு வைத்து எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்? மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் எனக்கு எப்படி வேறு வேலை கிடைத்திருக்கும். இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றதால் தினமலர் நிர்வாகம் மீதும் அந்துமணி ரமேஷ் மீதும் அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.

தினமலரில் Ôபிளாக் மெயில் ஜர்னலிசம்Õ பிரசித்தி பெற்றது. அதைத்தான் எப்போதும் செய்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அங்கு வேலை செய்பவர்களை பலவகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். நான் பயந்து ஓடவில்லை. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு உமா கூறினார்.

——————————————————————————————————————

தினமலர் நாளிதழை பழிக்க இது தந்திரம் ஆதாரமற்ற புகாரைக் கூறும் உமா யார்?

சென்னை :தினமலர் நாளிதழில் பணியாற்றிய பெண் நிருபர் உமா நேற்று “குறிப்பிட்ட ஊடகத்தின்’ மூலம் அளித்த புகார் பேட்டியை உற்று நோக்கினால், இது உள்நோக்குடன் எழுந்த புகார் என்று புரியும்.

ஐம்பது ஆண்டுகளாகத் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய நாளிதழின் பங்குதாரரின் மகனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வேடிக்கையானது.

Resignation letter Uma Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationதினமலர் நாளிதழில் தற்போது இவர் பணியாற்றவில்லை. சிறிது காலம் முன்பு மணமுடித்துக் கொண்டார். இவர் போலீசில் ஏற்கனவே அளித்த புகார் மனு, இவருடன் பழகிய அருண் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசிடம் எழுதிக் கொடுத்த மனு ஆகியவை இவர் எவ்வித மனப்போக்கு கொண்டவர் என்பதைக் காட்டுபவை. ஏ.ஓ.அருண் என்பவர் தன்னிடம் உமா “ரிலாக்ஸ்’ ஆக இருப்பதற்காக பேசுவது உண்டு என்று போலீசாரிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.

உமாவும் தான் அளித்த புகாரில், “பணியில் மனப்பிரச்னை இருந்தது என்றும் அதனால் டைபாய்டு வந்தது’ என்றும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக நிருபர் பணி என்பது மிகவும் சவாலான பணி, அதை இவர் நிறைவேற்றுவதில் அடிக்கடி குறை ஏற்படுவதும், அதனால் மறுநாள் அந்தச் செய்தியின் உண்மையைப் போட வேண்டிய கட்டாயமும் செய்திப் பிரிவிற்கு ஏற்பட்டிருக்கிறது.

அது மட்டும் அல்ல, தற்போது மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் உமா, ஏன் தினமலர் பணியை விட்டு விலகிய பின் மூன்று மாதகாலம் காத்திருந்து, அடிப்படை இல்லாத “எஸ்.எம்.எஸ்’ கொண்டு ஆவேசப்படுகிறார் என்பதும் கேள்விக்குறி.கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தினமலர் அலுவலகத்தில் செய்திப்பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு அடிக்கடி போன் தொடர்பு கொண்டபோது, அதை தினமலர் நிர்வாகம் கண்டுபிடித்து “சைபர் கிரைம்’ போலீசார் விசாரித்த பின்பே இவ்வளவு மலிவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் உமா.

Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani lens mama imbroglio allegationஅதேசமயம் சைபர் கிரைம் போலீசார் உமாவை வெள்ளிக்கிழமை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகுதான் அவர் தினமலருக்கு எதிராக மனு கொடுத்துள்ளார்.ஆனால், தினமலர் நாளிதழைக் களங்கப்படுத்தும் வகையில், ஒரு தனியார் “டிவி’ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த சில நாளிதழ்கள் “மாஜி நிருபர்’ உமா புகாரை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வருவது வேதனை தருகின்றன.

சட்டத்தின் நியாயவழிப்படி உமா புகாரை சந்தித்து பொய் என்று நிரூபிக்கவும் தினமலர் தயங்காது. இச் செய்தியை இடை விடாது பரப்பும் ஊடகங்களுக்கும் தினமலர் சார்பில் மறுப்பு அறிக்கை முறைப்படி அனுப்பப்பட்டிருக்கிறது. மறுப்பை அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகும், அதை ஒளிபரப்பாமல் மீண்டும், மீண்டும் ஒருதரப்புச் செய்தியை ஒளிபரப்பியது அந்த “டிவி’ சானலின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

——————————————————————————————-

பெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை

உமா மீதும் வழக்குப்பதிவு தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு

சென்னை, ஜூலை 19: தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், தினமலர் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமா (28) என்பவர் சென்னை தினமலர் அலுவலகத்தில் ஏழாண்டுகள் நிருபராக பணியாற்றி, மார்ச் மாதம் அங்கிருந்து விலகி, தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

தினமலரில் பணியாற்றியபோது ஓராண்டு முன் என் செல்போனுக்கு திடீரென்று ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. பின்னர் அது தொடர்கதையானது. இதற்கு தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் காரணம் என்று தெரிந்தது. சக பத்திரிகையாளர்களிடம் இதை பலமுறை தெரிவித்தேன். அவர்களால் ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து அங்கேயே பணியாற்றினேன். தொல்லை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தேன்.

அதன்பின்னர், என் மீதும் குடும்பத்தினர் மீதும் கஞ்சா வழக்கு போடப்படும், கொலை செய்யப்படுவீர்கள் என்று மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. நான் மனநிலை சரியில்லாதவள் என்றும் ரமேஷ் தரப்பில் கேலி செய்தனர். இதுபற்றி மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தினமலர்தான் பொறுப்பு என்றும் அதில் கூறியிருந்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். எனக்கு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொந்தரவு கொடுக்கின்றனர்.

இவ்வாறு புகாரில் உமா கூறியிருந்தார்.

இந்தப் புகார் மீது நேற்றுவரை வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507 (மிரட்டுதல்), 509 (ஆபாசமாக பேசுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சைபர் கிரைம் போலீசில் தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், உமா மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507, 508 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு சிறை:

தினமலர நிர்வாகி ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.
இ.பி.கோ. 507 என்ற பிரிவில், 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 509 என்ற பிரிவில், 100 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.

——————————————————————————————-

முன் ஜாமீன் கேட்டு ரமேஷ் மனு

செக்ஸ் தொல்லை கொடுப்பதாக உமா கொடுத்த புகாரை ஏற்று, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

————————————————————————————————-

ஆபாச எஸ்.எம்.எஸ். கொடுத்து பாலியல் தொல்லை வழக்கு

காவல் நிலையத்தில் தினமலர் ரமேஷ் கையெழுத்திட வேண்டும்

முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு இதே நிபந்தனையுடன் உமாவுக்கும் முன்ஜாமீன்

சென்னை, ஜூலை 21: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ§க்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற பிறகு அவர், தொடர்ந்து 3 நாட்களுக்கு அடையாறு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.

தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரில் உமாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி, செக்ஸ் தொல்லை தந்ததாக போலீசில் முன்னாள் பெண் நிருபர் உமா புகார் கொடுத்தார். அதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், தினமலர் பெண் ஊழியர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதாக உமா மீது தினமலர் தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் உமா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இப்புகார்கள் தொடர்பாக ரமேஷ், உமா இருவரும் தனித்தனியாக முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ரமேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி ரகுபதி முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, Ôஉமாவுடன், ரமேஷ் சமரசம் செய்து கொள்ள தயாரா?Õ என்று கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக ரமேஷிடம் ஆலோசித்து பதிலளிப்பதாக அவரது வக்கீல் கோபிநாத் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ரமேஷ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவும், உமாவின் முன்ஜாமீன் மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் வருமாறு:

நீதிபதி: உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்திற்கு சென்று சமரசம் செய்து கொள்ள தயாரா என்று நேற்று கேட்டேன். அதுபற்றி உங்கள் பதில் என்ன?

தினமலர் ரமேஷின் வக்கீல் கோபிநாத்: இத்தகைய வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்று கருதுகிறோம். சமரசத்துக்கு நாங்கள் தயாராக இல்லை. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி (உமா வக்கீலை பார்த்து): உங்கள் வாதம் என்ன?

உமாவின் வக்கீல் சுதா ராமலிங்கம்: தினமலர் அலுவலகத்தில் நிருபராக 2001ம் ஆண்டு முதல் ஏழாண்டுகள் உமா பணியாற்றி உள்ளார். அப்போது, தினமலர் நிர்வாகி ரமேஷ் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். அதனால் உமா வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் ரமேஷ் தரப்பிலிருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

இப்போது அவர் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி, தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், உமாவை விசாரித்துக் கொண்டு அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அடையாறு போலீசார் வந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் சில தொலைபேசி எண்கள் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் தருமாறு கேட்டுள்ளனர்.

பின்னர் விசாரணைக்காக அடையாறு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு உமாவை அழைத்துள்ளனர். பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு உமா மற்றும் அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள எஸ்டிடி பூத்தில் பணியாற்றும் மல்லிகா என்ற பெண்ணும், அவரது தாயாரும் அடையாறு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு உமாவிடம் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல், வேண்டுமென்றே காக்க வைத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் துணை கமிஷனர் சேஷசாயி வந்த பிறகு தான், உமாவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார். உமாவை போலீசார் அலைக்கழித்ததற்கு காரணம் தினமலர் நிர்வாகத்தின் தூண்டுதல் தான். அவர்கள் உமா மீது பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்கள். எனவே உமாவுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

வக்கீல் கோபிநாத்: அவர்கள் புகாரில் கூறியிருப்பது பொய். அதை ஏற்க கூடாது.
நீதிபதி: இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தார்களா?

வக்கீல் சுதா ராமலிங்கம்: எங்களை மட்டும் தான் விசாரணைக்கு அழைத்தனர்.
வக்கீல் கோபிநாத்: நாங்கள் விசாரணைக்கு செல்லவில்லை. புகார் மட்டும் தான் கொடுத்தோம்.

நீதிபதி: நீங்கள் புகார் கொடுத்ததும் போலீசாரை வற்புறுத்தியிருப்பீர்கள். அதனால்தான் போலீசார் அவர்களை மட்டும் அழைத்து விசாரித்துள்ளார்கள். ஒருபத்திரிகை பெண் நிருபரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா (போலீஸ் தரப்பு): புகார் வந்தவுடன் போலீசார் உமாவை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி: மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் தருகிறேன். ரமேஷ், உமா இருவரும் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். முன்ஜாமீன் உத்தரவு நகல் பெற்ற உடன், ரமேஷ் சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து உமா முன்ஜாமீன் பெற வேண்டும். அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி தொடர்ந்து 3 நாட்களுக்கு கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
————————————————————————————————-

SMS Cellphones Mobile Abuse Uma Harassment Dinakaran Dinamalar Ramesh andhumani

————————————————————————————————-
பெண் நிருபருக்கு பாலியல் தொல்லை வழக்கு

தினமலர் ரமேசுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது

அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 20: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினமலர் நிர்வாகி ரமேஷ§க்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியின் மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நிருபர் உமா புகார் கொடுத்தார். இதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

ரமேஷ் தரப்பு மூத்த வக்கீல் கோபிநாத்: சமீபத்தில் தினமலர் அலுவலகத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்தன. பேசிய பெண், அங்கு சுருக்கெழுத்தாளராக பணியாற்றும் பெண்ணை மிரட்டியிருக்கிறார். விசாரணையில், அந்தப் பெண் தினமலரில் நிருபராக பணியாற்றி ராஜினாமா செய்த உமா என்பது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தோம். விசாரணைக்காக உமாவை போலீசார் அழைத்தனர். இதையடுத்து, ரமேஷ் மீது உமா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 507, 509 ஆகியவை ஜாமீனில் விடக் கூடிய குற்றம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் 4 வது பிரிவின் கீழும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவு. இருந்தாலும், உமா கொடுத்தது பொய் புகார் என்பதால் ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

நீதிபதி: சட்டப் பிரிவு 4க்கு என்ன தண்டனை என்று கூறப்பட்டுள்ளது?
வக்கீல் கோபிநாத்: குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம்.
நீதிபதி: பெண் நிருபரை எப்போது மிரட்டியதாக புகார் கூறியுள்ளார்?

வக்கீல் கோபிநாத்: 7 ஆண்டுகள் அவர் பணியில் இருக்கும்போது ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், ராஜினாமா செய்த பிறகும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். அது உண்மை என்றால் முன்பே புகார் கொடுத்திருக்க வேண்டும்.

அவர் மீது தினமலர் புகார் கொடுத்த பிறகுதான், போட்டிக்கு ரமேஷ் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே, ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: தினமலரில் பணியாற்றிய போது, ரமேஷ் 11 செல்போன் நம்பர்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்; பணியை விட்டு சென்ற பிறகும் அவரையும் அவர் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாகவும், உயிருடன் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார் என்று உமா கூறியுள்ளார். ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடந்துவருகிறது. எனவே ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.
நீதிபதி: நெருப்பு இல்லாமல் புகையாது. இருவருமே திருமணம் ஆனவர்களா?

அரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: உமாவுக்கு திருமணமாகி விட்டது.

வக்கீல் கோபிநாத்: ரமேஷ§க்கும் திருமணமாகி விட்டது.

நீதிபதி: இருவருமே திருமணமானவர்கள். போட்டி போட்டு புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்துக்கு சென்று சமரசம் செய்து கொள்ளலாமே? இது பற்றி மனுதாரர் ரமேஷிடம் கருத்து கேட்டு கூறுங்கள். விசாரணையை நாளை தள்ளி வைக்கிறேன்.

இவ்வாறு வாதம் நடந்தது.
————————————————————————————————-

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

kungumam dinakaran_uma andhumani ramesh dinamalar lawsuit harassment

———————————————————————————————-
தினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்

தினமலர் நிர்வாகிகளில் ஒருவரான அந்துமணி ரமேஷ் மீது, முன்னாள் நிருபர் உமா பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 நபர் ஜாமீன் பெற்று, விசாரணை அதிகாரி முன்பு 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த செய்திகளை எல்லாம், பெரிது பெரிதாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், எப்படியாவது கோர்ட்டில் ஆஜராகும் படத்தை எடுத்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தனது நிருபர்கள் நான்கு பேரை நியமித்திருந்தது. அவர்களுடம் சன் டி.வி. படக்குழுவினரும் கோர்ட்டில் கூடியிருந்தனர். வேறு எந்த பத்திரிகை நிருபர்களும் வரவில்லை.

ஆனால் அந்துமணி ரமேஷ் கோர்டுக்கு வரவே இல்லை. தினகரன் நிருபர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கீதா முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு சென்று விட்டார்.

இது எப்படி சாத்தியமானது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு கூறிய மறுநாளே, நீதிபதியை அனுகி, நீதி மன்றம் செல்லாமல் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக அனுமதி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொள்ளவே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டதாக தெரிகிறது.

இதன் அடிப்படையில் விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஆஜராகிவிட்டார், அந்துமணி ரமேஷ். இதுதெரியாத தினகரன், அவருக்காக கோர்ட்டில் காத்திருப்பது வேடிக்கை

————————————————————————————————–

Posted in Agenda, Allegation, Andhumani, Andumani, Anthumani, Bathmavathi, Bathmavathy, Blackmail, Broadcast, CEO, Challenged, channel, Claim, Compensation, Courts, Dailythanthi, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhinakaran, Dhinamalar, Dhinathanthi, Dinagaran, Dinakaran, Dinamalar, Disabled, DMK, Editor, Email, Ethics, Female, Feminism, Freedom, Harass, Harassment, HR, Images, imbroglio, Jokes, journalism, journalist, Justice, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Krishnamurthy, Law, Lawsuit, lens mama, Letter, Liberation, Mag, magazine, Management, Manipulation, Maran, MD, Media, Mental, MLA, Mogul, MSM, network, News, Order, paparazzi, Paprazzi, Pathmavathi, Pathmavathy, pension, Photos, Physical, Pictures, Police, Porn, Press, Process, Ramesh, Reference, Reporter, responsibility, Scam, Schizo, Schizophrenia, schizophrenic, Settlement, Sex, Sexual, SMS, Strategy, Sun, SunTV, tactics, Tamil, Thinagaran, Thinakaran, Thinamalar, Thinathanthi, TN, Torture, TV, Vaaramalar, Varamalar, Varamalara, Women, Work, Workplace | 41 Comments »

Sex, Pornography & Glamor in Tamil Cinema – TP Rajalakshmi to Sneha

Posted by Snapjudge மேல் ஜூலை 7, 2007

ஆபாசம் காட்டும் புதுமுகங்களுக்கு மத்தியில் கவர்ச்சி காட்டாமல் சாதனை படைத்த நடிகை: `சினேகா’ ஒரு சிறப்பு பார்வை 

1931-ல் முதன் முதலாக தமிழ் சினிமா பேசத் தொடங்கியது. படம்: “காளிதாஸ்”.

கண்ணையா கம்பெனி மூலம் முதன் முதலாக நாடக நடிகையாக ரசிகர்கள் முன்பு தோன்றிய டி.பி. ராஜலட்சுமிதான் தமிழ் சினிமா விலும் முதல் கதாநாயகி.

இதற்கு முன்பான காலகட்டத்தில் எல்லாம் ஏ.பி.நாகராஜன், வீராச்சாமி என பல ஆண்கள்தான் நாடகங்களில் பெண் வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“காளிதாஸ்” படத்தில் டி.பி. ராஜலட்சுமி அறிமுகமான போதே “மன்மத பானமடா… மார்பினில் பாயுதடா” என்ற பாடலுக்கு நெஞ்சை நிமிர்த்திக்காட்டி, காமிரா வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தார்.

இவரைப் போலவே தவமணிதேவி என்ற நடிகை பிராவே அணியாமல் தொள, தொள ஜாக்கெட்டுடன் மூடி மறைக்காமல் நடித்து “கவர்ச்சி பாம்” என்று பெயர் எடுத்தவர்.

கே.எல்.வி.வசந்தா என்ற நடிகைக்கு “ஒன்சைடு நடிகை” என்ற பெயரே உண்டு. புடவைத்தலைப்பால் ஒரு பக்கத்தை மூடி, மறுபக்கத்தை திறந்தே போட்டிருப்பதுதான் இவரது “ஸ்டைல்”.

இந்தக்கால கட்டத்தில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி. சுந்தரம்பாள், பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, அஞ்சலி தேவி என பல நடிகைகளை விட்டுவிட்டு இன்றைய நடிகைகள் அனைவருமே தவமணி தேவிகளாகவே காட்சி அளிக்கின்றனர்.

ஒருஜாண் டவுசரும், அரைஜாண் ஜாக்கெட்டும் தான் இவர்களது பிரதான “காஸ்ட்ïம்”கள்.

“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் மேற்படி காஸ்ட்ïம் களை அறிமுகப்படுத்தி, தொடை காட்டி, பெயர் எடுத்து, பிள்ளையார்சுழி போட்டவர் நடிகை ரம்பா.

ஜோதிலட்சுமி, ஜெய மாலினி, சில்க் சுமிதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நடிகைகளை `கடாசி’விட்டு இப்போது கதாநாயகிகளே ஆடைகுறைப்பிற்கு தயாராகி விட்டார்கள்.

ஆபாசம் என்பது புதிய சினிமாக்களின் சாபம் போலவே ஆகிவிட்டது.

இத்தனைக்கும் இடையில் தமிழ் சினிமாவில் காவியத்துவ மான ஒரு நடிகை இருக்கிறார். பெயர்: சினேகா.

பெயருக்கு ஏற்றாற் போலவே வேறெந்த நடிகைக் கும் இல்லாத அளவுக்கு ரசிகர்களுக்கு இவர் மீது தனி சினேகம் உண்டு.

பெயர் வாங்குவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் “இன்னமும் உடையை குறைத்துக்கொள்ள வேண்டுமாப” என்று கேட்கிற ஏராளமான நடிகைகளுக்கு மத்தியில், கதைக்கு தேவை என்று அடம்பிடித்தால்கூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்கிற தமிழ் கவுரவம் இன்றைய தேதியில் சினேகாவிடம் மட்டுமே!

இந்த ஒரே காரணத்தினால் சினேகாவின் கையை விட்டுப்போன படங்கள் ஏராளம். அதற்காக அவர் தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை.

சினேகாவை இன்ன மும் நிருபர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக் கிறார்கள்.

“நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?”

நானும் அதை விரும்ப வில்லை என்று. என் ரசிகர்களும் அதை எதிர்பார்க்க வில்லை” என்கிற பதில்தான் சினேகாவிடம்.

சினேகா பிறந்து வளர்ந்தது துபாயில் என்றாலும், பூர்வீகம் நம்ம “பண்ருட்டி”தான். அப்பா ராஜாராம். அம்மா பத்மாவதி.

ஷார்ஜாவில் உள்ள இந்தியன் ஹைஸ்கூலில் படித்து வந்த “சுகாசினி” “எங்கன நிலா பட்சி” என்ற மலையாளப் படம் மூலம்தான் சினேகாவாக சினிமாவுக்கு வந்தார். கதாநாயகன் “குஞ்சாக்கோ கோபன்”.

சினேகாவின் முதல் தமிழ்ப்படம் சுசி.கணேசன் இயக்கிய “விரும்புகிறேன்”. இந்தப்படம் சொன்ன தேதியில் ரிலீசாகி இருக்குமானால் முதல் படத்திலேயே சினேகா பரபரப்பாக பேசப் பட்டிருப்பார். அத்தனை யதார்த்தமான நடிப்பு!

சினேகாவை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடிக்க வைத்த படம் “லிங்குசாமி”யின் “ஆனந்தம்”. இதில்வரும் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” என்ற பாடலில் சினேகாவைப் பார்த்து முதன் முதலாக ரசிகர்கள் பரவசமடைந்தனர்.

என்னவளே, காதல் சுகமானது, பார்த்தாலே பரவசம், புன்னகைதேசம், பம்மல் கே.சம்பந்தம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என எந்தப் படத்திலும் சினேகா டூ பீஸ் உடையில் வரவில்லை. மனம் கிளுகிளுக்கும்படியாக மாராப்பையோ, தொப் புளையோ, தொடையையோ காட்டவில்லை.

இத்தனைக்கும் சினேகா “பார்த்திபன் கனவு” படத்தில் “சத்யா” என்ற 2-வது வேடத்தை முற்றிலும் மேக்அப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்.

சினேகாவின் மிகப்பெரிய பிளஸ் அவரது வசீகர “ஹேதம்லி” புன்னகைதான்.

சினேகா படத்தை குடும்பத் தோடு கண்டுகளிக்கலாம் என்ற வகையில் தான் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

தொடக்க காலங்களில் சரோஜாதேவி, சாவித்திரி போன்றவர்களும், இடைப்பட்ட காலங்களில் ரேவதி, சுகாசினி போன்றவர் களும்தான் தமிழ் சினிமாவில் கலாச்சார கவுரவம் சேர்த்திருக்கிறார்கள்.

இன்றைய தமிழ் சினிமாவில் “அவிழ்த்து எறிவதில் யார் சிறந்தவர்ப” என்று நடிகைகள் போட்டி போட்டு “துண்டு துணி” அளவுக்குவந்துவிட்ட நிலையில் சினேகா ஒரு வீரம் விளைஞ்ச நடிகையாகவே தெரிகிறார்.

Posted in Actress, Actresses, Backgrounder, Cinema, Films, Glamor, Heroines, Movies, Pornography, Sex, Snega, SNEHA, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, TamilNadu, Taminadu | 26 Comments »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to overcome Ovarian cysts

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கருப்பை கட்டிக்குக் கஷாயங்கள்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

கருப்பையில் உள்ள கட்டிகளால் ( Uterine fibroids) அவதிப்படுகிறேன். அவை ஏற்படுவதற்கான காரணங்களையும் நீங்குவதற்கான வழிமுறைகளையும் கூறவும்.

கருப்பை கட்டிகளால் அவதியுறும் பெண்களின் விகிதம் தற்சமயம் கூடியுள்ளது. இதற்குக் காரணமாக அடிக்கடி கருக்கலைப்பு, டி அண்ட் ஸி முறையில் கருப்பையைச் சுத்தம் செய்வதால் ஏற்படும் மறைமுக ரணங்கள், வம்ச பரம்பரை, பெண் வளரும்போது புரதச் சத்து உடல் அணுக்களில் ஏற்படுத்தும் விரிவாக்கம், கருப்பையைச் சூழ்ந்துள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் உபாதைகள், கருப்பையின் வேலைத் திறனை செவ்வனே செய்யும் அபான வாயு சீற்றம் அடைதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஐம்பது சதவீதம் பெண்கள் இந்தக் கருப்பைக் கட்டிகளால் பாதிப்படைந்தாலும் பலருக்கும் அதனால் உபாதை ஒன்றும் ஏற்படாததால் அவை இருப்பதைப் பற்றியே அவர்கள் அறிவதில்லை.

கட்டியின் அளவு, கருப்பையில் அது வந்துள்ள இடம், மற்ற உறுப்புகளின் அருகாமை ஆகியவற்றைப் பொருத்து அறிகுறிகளை ஏற்படுத்தும். அடிவயிற்றில் அழுத்தம், வலி, சிறுநீர்ப்பை அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் அல்லது தடையுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம், மலப்பை அழுத்தத்தால் மலம் கழிக்கையில் வலி, அதிக அளவில் உதிரப்போக்கு, அதிகமான ரத்தக் கசிவினால் இரும்புச் சத்து குறைந்து ரத்தசோகை, கருத்தரிக்க இயலாத நிலை போன்றவை ஏற்படும்.

இந்தக் கட்டிகள் தொல்லைகள் ஏதும் தராதிருந்தால் விட்டுவிடலாம். ஆனால் சிலவகைக் கட்டிகள் உபாதை ஏதும் ஏற்படுத்தாதிருந்தாலும் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்க வேண்டிவரும். அல்லது அவற்றை ஸ்கேன் மூலம் அடிக்கடி கவனிக்க வேண்டும். காரணம் இந்தக் கட்டிகள் திடீரென்று அசுர வளர்ச்சி அடைய வாய்ப்பிருக்கிறது. அல்ட்ரா சவுண்ட் மூலம் இந்தக் கட்டிகளைப் பற்றிய விவரங்களை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.

கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துவிடுவதால் இந்தக் கட்டிகளும் அகற்றப்படுகின்றன. கட்டிகளை மட்டும் நீக்கும் Myomectomy முறையும் லேசர் மூலம் கட்டிகளைத் துளைப்பதும், கட்டிகளை உறைய வைத்துவிடும் Cryosurgery, பாலிவினைல் ஆல்கஹாலை சிறிய குழாய்மூலம் கட்டிகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு அடைப்பை ஏற்படுத்தி அவற்றை பட்டினிப் போடச் செய்யும் Uterine artery occlusion எனும் கருப்பை ரத்தக்குழாய்களை அடைக்கும் முறையும் தற்சமயம் நவீன மருத்துவத்தில் கையாளப்படுகின்றன.

கருப்பை கட்டிகள் உருவாகும் முறையை ஆயுர்வேதம் கூறும் முறையானது நவீன மருத்துவத்தின் கூற்றிலிருந்து வேறுபடுகிறது. கருப்பையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அபான வாயு- வேர்க்கடலை, காராமணி, மொச்சைக் கொட்டை, பட்டாணி, பச்சைப் பயிறு, கடலை எண்ணெய், அதிக நேரம் பட்டினியிருத்தல் போன்ற உணவு மற்றும் செய்கையால் சீற்றம் அடைகிறது. பகல்தூக்கம், சோம்பலுடன் கூடிய வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்படும் கபத்தின் சீற்றமும் அதனுடன் சேர்வதால் கருப்பையின் உள்ளே அமைந்துள்ள ரத்த நாளங்கள், மாமிசம் மற்றும் கொழுப்புப் பகுதிகள் கேடடைந்து கட்டிகளை உருவாக்குகிறது.

அடிவயிற்றுப் பகுதியில் கட்டிகளின் இறுக்கம் தளர புளித்த சூடான மோரில் சில மூலிகைப் பொடிகளைக் குழைத்துப் பற்று இடுவார்கள். அதன் மூலம் ஏற்படும் உட்புழுக்கம் காரணமாக இறுகி கெட்டியாயிருந்த கட்டிகள் தளர்ந்து தொய்வை அடைகின்றன. அதன்பிறகு உள் மருந்தாகக் காலையில் வெறும் வயிற்றில் வரணாதி கஷாயமும் மாலையில் சுகுமாரம் கஷாயமும் சாப்பிட, இந்தக் கட்டிகள் உடைந்து அமுங்கிவிடும். இன்றைய நவீன அறுவைச் சிகிச்சை முறைகளும் மிகச் சிறப்பான முறையில் வந்திருப்பதால் மருந்தின் மூலம் குணமடையாத கட்டிகளை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றுவதில் தவறேதுமில்லை.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Child, Cryosurgery, cyst, cysts, diagnosis, Doctor, Health, Healthcare, Kid, Medicine, Menses, Menstrual, Mom, Mother, Myomectomy, Ovarian, Parent, Period, PMS, Pregnancy, Sex, solutions, surgery, Symptoms, Treatment | 1 Comment »

Health Education – Teaching about adulthood, sex & biology to Students

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?

ரவிக்குமார்

பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.

மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.

“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.

“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,

அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.

“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.

“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.

“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.

– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.

Posted in A, abuse, adult, adulthood, Adults, AIDS, Awareness, Biology, Boy, Brain, Censor, Chat, Children, Cinema, Computer, Condom, Controversy, Culture, Development, discussion, Education, Exposure, Female, Formal, Gentleman, Girl, Glamour, Health, HIV, Imagination, Insights, Intercourse, Interview, Issue, Kid, Kiss, Lady, Love, Lust, male, masturbate, masturbating, Mature, Media, menstruation, MMS, Movies, NC-17, Opinions, Period, PG, Physchology, PMS, Private, Rape, Rating, Sex, SMS, solutions, Students, Suggestions, Tamil, Teachers, Teen, Teenage, Textbooks, Thamizh, TV, UNICEF, Violence, VT, Vulgar, WHO | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to increase Sperm Count

Posted by Snapjudge மேல் மே 23, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடற்சூட்டால் வரும் கேடு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, சரத்பேட்டை- 602 103.

எனக்கு வயது 35. மனைவிக்கு வயது 22. மூன்று வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் புண்ணியம் இல்லை. எனக்கு விந்தணுக்கள் குறைவாக உள்ளது. சிறு குழந்தைகளைக் கண்டால் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது. ஏக்கமும் அழுகையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனைவிக்கும் மாதவிலக்கு நாட்கள் அதிகமாக இருப்பதால், அவளுடைய உடல் நலம் தேறவும், என் உடல் நிலை கோளாறையும் சரி செய்ய என்ன வழி?

எஸ்.ராஜேஷ், மதுரை.

ஆண்கள் பலருக்கும் விந்தணு குறைபாடு இன்று அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு எனும் பூமியின் வெப்பம் அதிகரித்திருப்பதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். மனிதனின் தனிப்பட்ட செயல்களாலும் உடற் சூடு அதிகரிக்கக் கூடும். புகைப் பழக்கம், மதுபானம் அருந்துதல், நிதானமற்ற பதட்டமான சூழ்நிலையில் அலுவல் வேலை, சிறு விஷயங்களுக்குக் கூட வீட்டில் கடும் கோபம் கொள்ளுதல், உணவில் அதிகம் காரம், புளி, உப்பு, காரம்மசாலா சேர்த்தல், ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் அதிகமாகச் சாப்பிடுதல், இரவில் அதிக நேரம் கண் விழித்தல், குழந்தை வேண்டுமே என்ற ஏக்கத்தில் அதிகமான தாம்பத்ய உறவு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து சாப்பிடாதிருத்தல் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாம் உண்ணும் உணவு அனைத்தும் ஏழு தாதுக்களால் ஜீரணம் செய்யப்படுகின்றன. உணவின் சாரத்தை முதலில் பெறும் ரஸதாது தனக்கு வேண்டிய சாரத்தைப் பெற்று, கபத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. அடுத்த சாரத்தை ரத்தம் ஜீரணம் செய்து தன் பகுதியைப் பெற்றுக்கொண்டு, பித்தத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. மாமிசம் உணவின் சாரத்தை உறிஞ்சி, உடலின் உட்புற துவாரங்களில் கழிவைச் சேர்க்கிறது. மேதஸ் எனும் தாது தன் பங்காகிய உணவின் சாரத்தை உறிஞ்சி, வியர்வையைக் கழிவாக வெளியேற்றுகிறது. எலும்பு, உணவின் போஷகாம்சத்தைப் பெற்று நகம், தலைமுடி ஆகியவற்றைக் கழிவாகவும், மஜ்ஜை உணவுச் சத்தை உறிஞ்சி, தோல், கண் பகுதியில் எண்ணெய்ப் பசையைக் கழிவாகவும், இறுதியாக விந்து, உணவின் சாரத்தைப் பெற்று “ஓஜஸ்’ எனும் உடலின் சாராம்சத்தையும் ஏற்படுத்துகிறது. உண்ணும் உணவின் மிகவும் சூட்சமமான சாரத்தைப் பெறும் விந்து, அணுக்களை உற்பத்தி செய்வதில் முழுவதுமாக உணவை நம்பித்தான் இருக்கிறது. நிலம் மற்றும் நீரின் அம்சம் அதிகம் கொண்ட இனிப்புச் சுவை விந்தணுக்களின் உற்பத்திக்கு அதிக அளவில் உதவி செய்கிறது. அதிரஸம், பாயசம், சர்க்கரை கலந்த பாலுடன் உளுந்துக் கஞ்சி, உளுந்து வடை (பசு நெய்யில் பொரித்தது), சர்க்கரைப் பொங்கல் போன்றவை விந்தணுக்களை அதிகப்படுத்துபவை. கீழ்காணும் மூலிகை மருந்துகளை நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி நன்றாக அரைக்கவும்.

அமுக்கராக் கிழங்கு, பூனைக் காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, பால் முதுக்கன் கிழங்கு, நெரிஞ்சில் விதை, அதிமதுரம், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு.

மேற்கண்ட பருப்புகளையெல்லாம் வகைக்கு 100 கிராம். அரைத்ததை துணியால் சலித்து, கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதபடி மூடிவைக்கவும். 5 கிராம் சூரணத்தில் 10 மிலி பசு நெய்யும் (உருக்கி), 5 மிலி தேனும் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். விந்தணுக் குறைபாட்டை இம்மருந்து தீர்க்கக் கூடும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடவும்.

உங்கள் மனைவியின் மாதவிலக்கு நாட்கள் அதிகம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிவது நலம். இருப்பினும் பொதுவாக புஷ்யானுகம் சூரணம் சாப்பிட நல்லது. 5 கிராம் சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 மிலி) சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர், 1/2 ஸ்பூன் தேன் குழைத்து காலையில், மாலையில் உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடலாம். சதாவரீகுலம், அசோகாரிஷ்டம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்ற மருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு கருப்பையின் வலுவை அதிகப்படுத்தலாம்.

Posted in Alternate, Ayurvedha, Birth, Child, conceive, conceiving, conception, Count, couple, couples, Expect, Female, fertile, fertility, Gene, Health, Help, male, Medicines, Natural, Parent, Pregnancy, Pregnant, Sex, Sperm, Suggestions, Swaminathan, Therapy | Leave a Comment »

Pakistan ‘same-sex’ couple jailed

Posted by Snapjudge மேல் மே 22, 2007

பாகிஸ்தான் திருமணம் ஒன்றில் சர்ச்சை

பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்
பிரச்சினையை எதிர்நோக்கும் தம்பதிகள்

பாகிஸ்தானில் திருமணம் செய்து கொண்ட இருவரில், கணவனாகக் கருதப்பட்டவர் உண்மையில் ஒரு பெண் என்று தீர்ப்பளித்த லாகூர் நீதிமன்றம் ஒன்று, அந்த இருவரையும் நீதிமன்றக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

கணவர் என்று சொல்லிக் கொள்பவரது பாலின மாற்று அறுவை சிகிச்சை சரியாக, முறையாக நடக்காத நிலையில், இந்த இருவரும், அவரது பாலினத்தைப் பற்றி பொய் சொல்லிவிட்டார்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணப்பெண்ணின் தந்தை, இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்வது என்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால், தனது மகளின் திருமணம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.

Posted in couple, Female, Gender, GLBT, Husband, Identity, Islam, Law, legal, Lesbian, male, Marriage, Muslim, Nikkah, Operation, Order, Pakistan, Relation, Relationship, same-sex, Sex, sex-change, Spouse, surgery, Transgender, Wedding, Wife | 1 Comment »

An Exit Strategy For Wolfowitz?

Posted by Snapjudge மேல் மே 8, 2007

உலக வங்கி தலைவரின் நெருங்கிய சகா இராஜினாமா

உலக வங்கியின் தலைவர்
உலக வங்கி தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

உலக வங்கியின் தலைவரான பால் வூல்போவிட்ஸ் அவர்களின் நெருங்கிய சகா ஒருவர் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார்.

உலக வங்கியின் தலைமையச் சூழ்ந்துள்ள தற்போதைய நிலவரம், உலக வங்கி தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதை சிரமமாக்கியுள்ளதாக, கெவின் கீலம்ஸ் என்னும் அந்த சகா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனது சினேகிதிக்கு பணியுயர்வை ஏற்பாடு செய்தார் என்ற சர்ச்சை தொடர்பில் வூல்போவிட்ஸ் அவர்கள் பதவி விலக வேண்டும் என்ற அழைப்பை எதிர்கொண்டு வருகிறார்.

===============================================
காதலிக்கு பதவி உயர்வு: உலக வங்கியின் விதிகளை தலைவர் மீறியது கண்டுபிடிப்பு

வாஷிங்டன், மே 9: உலக வங்கியின் தலைவர் பால் உல்ஃபோவிட்ஸ், தனது காதலிக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கொடுத்ததன் மூலம் வங்கியின் விதிகளை மீறியிருப்பதை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.

2005-ம் ஆண்டில் உலக வங்கியின் ஊழியரும் காதலியுமான ஷாஹா ரைஸô என்பவருக்கு வங்கியின் விதிகளுக்கு புறம்பாக பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் உல்ஃபோவிட்ஸ் பதவி விலகுமாறு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அவர் பதவியை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறார்.

உல்ஃபோவிட்ஸின் உயர் ஆலோசகர் கெவின் கெல்லம்ஸ் பதவி விலகப்போவதாக திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த நிலையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

“வங்கியை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்வது என்பது தற்போதைய சூழ்நிலையில் கடினமானதாக இருக்கும். எனவே வேறு வாய்ப்புகளுக்காக வெளியேற முடிவு செய்து விட்டேன்’ என்று கெல்லம்ஸ் கூறினார்.

Posted in abuse, anti-poverty, bank, companion, Compensation, Female, Love, Pay, Power, Price, Scandal, Sex, US, USA, Wolfowitz, world bank | Leave a Comment »

Marriage laws need to be amended to prevent abuse by NRIs

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

திருமண சட்டத்தை திருத்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை

புதுதில்லி, மார்ச் 20: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்வதில் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில், திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

வெளியுறவு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது.

இதில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளாகி வரும் நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்கு குடியேற்ற சட்டத்தில் திருத்தங்கள் செய்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

குவைத், ஓமன், கத்தார், மலேசியா ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சுரண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் நிலையில், இந்த நாடுகளுடன் இதுதொடர்பாக உடன்பாடு செய்துகொள்வதற்கான நடைமுறைகளை துரிதப்படுத்தவேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்வதில் முறைகேடுகளும், பல திருமணங்கள் தோல்வியடைவதும் அதிகரித்துள்ளன. இதை தடுப்பதற்கு சக்திமிக்க நடவடிக்கைகள் தேவை.

இதற்கு, திருமணங்கள் பதிவுசெய்யப்படுவதை கட்டாயமாக்குவது, இந்திய திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் திருணம் பதிவு செய்யப்படும் நீதிமன்ற எல்லையிலேயே விவாகரத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் வகையில் திருமண சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும்.

Posted in Abroad, abuse, Alimony, Divorce, Foreign, Foreigner, Kuwait, Malaysia, Marriage, Non Resident, NRI, Oman, Overseas, Quatar, Registration, Relationship, Sex, Trade, Wedding, workers | Leave a Comment »