Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர், 2006

Chief Minister Karunanidhi’s Poem on Murasoli Maran & VaiKo

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2006

முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை…

சென்னை, நவ. 28:முதல்வர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கவிதை வருமாறு:

மாபெரும் திராவிட இயக்கத் தலைவன் என்பதை மறந்து விடுகிறேன், சிறிது நேரம்! மாண்புமிகு முதலமைச்சர் பதவியையும் துறந்து விடுகிறேன்: இதை எழுதுவது குற்றமென்றால்-எழுதாமல் என்னால் எப்படி இருக்க முடியும்?

விழுதாக வந்தவன் விவேகியாகத் தோன்றியவன்:
பழுதான சொல் ஒன்றும் பகர்ந்திடாத பண்பாளன்- மாறன்!

தொழுதேத்தும் பெரியார், அண்ணா, ராஜாஜி போற்றிய மதிவாணன்!
தோஹா மாநாட்டில் அவன் தொலைநோக்குப் பார்வைதனை
தொல்புவி பாராட்டத் தொடங்கியதை இன்னும் நிறுத்தவில்லை!

என் மடியில் வளர்ந்த பிள்ளை மனத்தில் நிலைத்த கிள்ளை! மாறன்! மாறன்!அந்த வீரனுக்கு இணையாக வருவாய் என்று தான் விழலுக்கு நீர் இறைத்தேன் – வீணாகக் கெட்டொழிந்தாய்- விசுவாசம், அன்பு, நட்பு, நன்றியெல்லாம் வீசை என்ன விலை எனக் கேட்டுத் தாழ்ந்து விட்டாய்!

‘‘மாநிலங்களவை ஆசான்” என்று மாபெரும் அவைதனிலே மாலையிட்டு நீ வணங்கியதெல்லாம் மாய் மாலந்தானா?

மாறனுக்கு ஏன் சிலையென்று மமதையுடன் கேட்கின்றாய்- உன் மண்டையோட்டுக்குள் நன்றியை வைத்துப் படைக்கவில்லையா இயற்கை?

மனப்பாடம் பண்ணி நீ மன்றத்தில் பேசியதெல்லாம் மாறன்
எழுதிக் கொடுத்ததென்று மாநிலங்களவைத் தூண்கள் கூடச் சொல்லுமே!மறந்து போயிற்றா:

மாறனின் கால் பிடித்து, கை பிடித்து, கண்ணீர் வடித்து மாநிலங்களவைக்குச் சென்ற பழைய கதையெல்லாம்? என்ன தகுதி மாறனுக்கு சிலை எழுப்ப என்றா கேட்கின்றாய்?

‘‘மாறன் என்றால் சாமான்யமா?‘‘ எனக் கேட்டாரே அண்ணா – அந்த ஒவ்வொரு எழுத்தும் சொல்லுமப்பா: அவன் பெருமை!

இடத்துக்கு இடம் தவ்விப் பாய்ந்திடும் தவளைக் குணம் உனக்கு:
அவனோ தங்கக் குணம் படைத்தவன் -அதனால் இப்போது கூட உன்னை மன்னித்து விடுவான்

அவன் உனக்கு மாநிலங்களவை ஆசான் அல்லவா? அதனால்!

நன்றி : தினகரன்

Posted in abuse, Dinakaran, Dog, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavidhai, Kavithai, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maaran, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli Maran, parliament, Statue, Tamil Literature, Thamizh Kavidhai, Thamizh Poem, VaiGo, VaiKo | Leave a Comment »

Karuthu.com discussion on Capital Punishment switches gear to ‘Parppaneeyam’

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

“கருத்து’ கூட்டத்தில் கருத்து மோதல்

சென்னை, நவ. 30: மரண தண்டனை குறித்து கருத்து அமைப்பு சென்னையில் புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. “கருத்து‘ அமைப்பு சார்பில் மரணதண்டனை குறித்த கருத்துகளை பதிவு செய்யும் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

  • கார்த்தி சிதம்பரம்,
  • பாஜக தலைவர் இல.கணேசன்,
  • மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வி.சுரேஷ்,
  • வழக்கறிஞர் அருள்மொழி,
  • கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

பாஜக தலைவர் இல.கணேசன் மரணதண்டனைக்கு ஆதரவாக தனது கருத்துகளை பதிவு செய்தார். அப்போது, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தியாகு, தமிழ் திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் கூட்டம் நடைபெற்ற அரங்குக்கு வந்தனர்.

மரணதண்டனைக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்ததால் இல.கணேசனிடம் பலரும் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டனர். அதற்கு, தனது பதில்களைத் தெரிவித்தார்.

இதனிடையே, மரணதண்டனை குறித்து இல.கணேசன் தெரிவித்த கருத்துகள் வேறுமாதிரி திசைதிரும்பியது. பார்ப்பனர்கள் தொடர்பான கருத்துகளுக்கு இட்டுச் செல்லப்பட்டது. இதற்கு, பார்வையாளர்களின் ஒருபிரிவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில், மரணதண்டனை குறித்து தியாகு எழுப்பிய கேள்வியுடன் கூட்டம் நிறைவுற்றது.

Posted in Brahminism, Capital punishment, Death Sentence, Director, discussion, forum, Kanimozhi, Karthi Chidambaram, Karuththu, Karuthu.com, Parppaneeyam, Seeman, Thambi | 4 Comments »

Maravanpulavu Ka Sachithananthan – Short Intro

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

மறவன்புலவு க. சச்சிதானந்தன் பற்றி

சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர்; ஐ.நா.உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றியவர்; விலங்கியýலும் தமிழிலும் முதுகலைப் பட்டதாரி; தூய தமிழில் எழுதும் வெகு சிலரில் ஒருவர்; ‘பதிப்புத் தொழில் உலகம்’ என்ற மாத இதழைத் தொடங்கி நடத்துபவர்;

http://www.tamilnool.com என்ற இணையதளத்தில் 35 ஆயிரத்திற்கும் மேலான நூல்களைப் பட்டியல் இட்டு, மின் வணிகத்திற்கு வழிகோýயவர்; ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்;

60 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடýயல் வல்லுநர்; வேற்று மொழிகளிýருந்து தமிழுக்குச் சொற்களை ஒýபெயர்ப்பு செய்வது குறித்து ஆராய்ந்து வருபவர்; திறமை எங்கிருந்தாலும் ஏற்றுப் போற்றும் நல்ல மனிதர்…. எனப் பல பெருமைகளுக்கு உரியவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.

Posted in Agriculture, K Sachithaananthan, Kaanthalagam, Maravanpulavu, Sachithananthan, tamilnool.com, UN | 2 Comments »

Dasavatharam

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

தசாவதாரத்தில் கமலஹாசனின் 10 வேடங்கள்

கமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் அவர் 10 வேடங்களில் நடிக் கிறார். அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனா லும் அவ்வப்போது என் னென்ன வேடம் என்பது ஒவ் வொன்றாக கசிகிறது.

  1. மன்னன்,
  2. வில்லன்,
  3. அழகான இளைஞன்,
  4. வெள்ளைக் காரன்,
  5. ஒல்லிப் பிச்சியான்,
  6. பயில்வான்,
  7. 92 வயது பணக்கார கிழவி,
  8. அந்தணர் ஆகிய வேடங்களில் அவர் நடிக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கும்பகோணம் கோவில் `செட்’ போட்டு சென்னை அருகே சமீபத்தில் படப்பிடிப்பு நடந்தது. அந்தணர் வேடத்தில் கமல் நடித்தார். அதன் பிறகு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் 92 வயது கிழவி வேடத்திலும், வெள்ளைக்காரர் வேடத்தி லும் நடித்த காட்சிகள் படமாக் கப்பட்டன.

கும்பகோணம் கோவிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் `செட்’ போட்டு படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலை கிராபிக்சில் தத்ரூப மாக கொண்டு வர விசேஷ கேமரா பயன்படுத் தப்பட்டதாம். இந்த கேமராவை ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைத்துள்ளனர். கேமராவை இயக்கவும் ஆஸ்தி ரேலியாவில் இருந்து கேமரா மேன் வந்துள்ளார்.

Posted in Asin, Dasavatharam, Dhasavatharam, Hero, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhassan, Movie Review, Previews, Tamil Actors, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Thasavathaaram, Thasavatharam | 3 Comments »

Tribal Leader Shibu Soren – Biography

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

மகன் கொலைக்காக போராடிய தாய்: சிபுசோரன் சிக்கியது எப்படி?

புதுடெல்லி,நவ. 29- கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் மத்திய மந்திரி சிபு சோரன் நேற்று உடனடியாக கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

63 வயதாகும் சிபுசோரனை கம்பி எண்ண வைத்திருக் கும் கொலை வழக்கு தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது. இதில் அவர் எப்படி சிக்கினார் என்ற விபரம் இப்போது தெரிய வந் துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

1993-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் நரசிம்மராவ் பெரும்பான்மை பலம் இல்லாமல் தவிக்க நேரிட்டது. எனவே ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபுசோரனுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.

லஞ்சப்பணத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று சிபுசோரனின் உதவியாளர் சசிநாத் ஜா கேட்டார் .அவருக்கு ரூ.15லட்சம் சிபுசோரன் கொடுத்தார். அதன்பிறகு மீண்டும் பணம் வேண்டும் என்று சசிநாத் ஜா கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிபுசோரன் 1994-ம் ஆண்டு மே மாதம் சசிநாத் ஜாவை விருந்துக்கு அழைத்தார். பிறகு அவரை தெற்கு டெல்லியில்இருந்து ராஞ்சிக்கு கடத்திச் சென்றனர். அங்கு சசிநாத்ஜா கொலை செய்யப்பட்டார். இதுபற்றி சசிநாத்ஜா சகோதரர் அமர்நாத் ஜா பாராளுமன்ற போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடந்து வந்தது. ஆனால் அதில் வேகம் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து சசிநாத்ஜா தாய் பிரியம்வதாதேவி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர் தன் மகன் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.

சி.பி.ஐ. தீவிரவிசாரணை நடத்தி சசிநாத்ஜா கொலை சதி திட்டங்களை வெளிச்சத் துக்கு கொண்டு வந்தது. சிபுசோரனின் தூண்டுதல் பேரில் திட்டமிட்டு கொலை நடந்து இருப்பதையும் கண்டு பிடித்தது. அதோடு சசிநாத்ஜா பிணத்தை தோண்டி எடுத்து சிபிஐ விசாரித்தது.

சசிநாத்ஜா எலும்புக்கூடு பல்வேறு நிலைகளில் டிஎன்ஏ சோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மண்டைஓடு “சூப்பர் இம்போசிங்” முறைப்படி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த மண்டை ஓடு சசிநாத் ஜா உடையது என்பது உறுதியானது.

சசிநாத்ஜாவின் எலும்புக்கூடுகளில் நடந்த அதிநுட்ப தடயவியல் சோதனைகள் மூலம் அவர் படுகொலை ஆனதும் உறுதியானது. மண்டை ஓடு, எலும்புக்கூடு ஆகிய இரு சோதனைகளும் சிபுசோரன் சிக்க முக்கிய கார ணமாக அமைந்தது.

இந்த விபரங்களை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டு கோர்ட்டில் ஒப்படைத்தது. கொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சிபுசோரனால் தப்ப இயல வில்லை.

மொத்தம் 47 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் அளித்த சாட்சியங்களும் சி.பி.ஐ. விசாரணை முடிவுகளும் முழு அளவில் ஒத்துப்போனது. இதனால் சிபுசோரன் மீது விழுந்த பிடி இறுகியது.

இந்த வழக்கில்

  • சிபு சோரன்,
  • நந்தகிஷோர்,
  • அஜய்குமார்மேத்தா,
  • சைலேந்திரபட்டாச்சார்யா,
  • பசுபதிநாத், மேத்தா ஆகிய 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியது. இவர்கள் 5 பேரும் நேற்றே கோர்ட்டு உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

சிபுசோரனுக்கும் மற்றும் 4பேருக்கும் என்ன தண்டனை வழங்கப்படும் என்பது நாளை தெரிய வரும். அவருக்கு ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“குருஜி” சிபுசோரனின் எழுச்சியும்-வீழ்ச்சியும் 12 ஆண்டுகள் காட்டில் வசித்தவர்

“கொலையாளி” என்று நிரூபிக்கப்பட்டதன் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியையும், தலை குனிவையும் ஏற்படுத்தி விட் டார் சிபுசோரன்.

வட மாநில அரசியலில் ரவுடியிசம் என்பது அதிகம்… கொலை, ஆள் கடத்தல் என்பதெல்லாம் அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு “சும்மா” பொரி கடலை சாப் பிடுவது மாதிரி சாதாரண சமாச்சாரம்.

ஆனால் ஒரு கட்சிக்கு தலை வராக இருப்பவர் கொலை, ஆள் கடத்தல், சொத்துக் குவிப்பு என பலதரப்பட்ட வழக்குகளில் சிக்கியது இது வரை கேள்விப்படாத ஒன்று. அந்த சிறுமையை ஏற்படுத்தி இருப்பவர் சிபுசோரன்.

1942ம் ஆண்டு இவர் பீகார் மாநிலம் கஜிரிபாத் அருகே உள்ள சந்தல் எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆசிரியர்கள் மலைவாழ் இனத்தை சேர்ந்த வர்கள்.

சிபுசோரனுக்கு 10 வயது இருக்கும் போது அவர் தந்தை இறந்தார். இது அவரது வாழ்க்கைப் பாதையை புரட் டிப் போட்டு விட்டது.பணக்காரர்கள், ஜமீன் தாரர்களுக்கு எதிராக இவர் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார். 1952-ம் ஆண்டு அவரது இந்த போராட் டம் தொடங்கியது.

ஜார்க்கண்ட் இன மலை வாழ் மக்களின் முன்னேற்றத் துக்காக போராடுவதாக இவர் அறிவித்தார். ஜமீன்தாரர்களை தாக்கி விட்டு காட்டுக்குள் ஓடி விடுவார். 1970-ம் ஆண்டு வரை அவர் வாழ்க்கை இப் படித் தான் கழிந்தது.

அதன் பிறகு ஜார்க்கண்ட் இன மக்களுக்காக ஒரு அமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என்று சிபுசோர னுக்கு தோன்றியது. 1973-ம் ஆண்டு அவர் வக்கீல் வினோத் பிகாரி மகோதா என்பவருடன் சேர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) எனும் அமைப்பை தொடங்கினார். பிறகு இது அரசியல் கட்சியாக மாறியது.

இந்த நிலையில் ஜே.எம்.எம்.மின் முக்கிய தலைவராக திகழ்ந்த மகோதா படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகே சிபுசோரனின் நடவடிக்கைகள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.

ஜார்க்கண்ட் மக்களுக்காக அவர் பேரணி போன்றவை நடத்தி மக்கள் கவனத்தை கவர்ந்தார். இதனால் பீகா ரில் அவர் வளர்ச்சி தடுக்க முடியாதபடி இருந்தது. மலை வாழ் இன மக்கள் இவரை “குருஜி” என்று அழைத் தனர்.

பெரும்பாலான மலைவாழ் இன மக்கள் வீடுகளில் இவரது படத்தை கடவுள் படங்களுக்கு இÛணையாக வைத்து பூஜித்தனர். இதனால் ஜார்க்கண்டில் இவர் அசைக்க முடி யாத சக்தியாக மாறினார். இவரை எதிர்த்தவர்கள் கடத் தப்பட்டனர். கொல்லப்பட் டனர்.

சரியோ, தவறோ இவரது பெயர் பரபரப்பாக நாடெங் கும் பேசப்பட்டது. 1980ம் ஆண்டு இவரும் இவரது ஆதரவாளர்களும் பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. அதன் பிறகு சிபுசோரனின் அரசியல் ஆவேசமும் ஆதிக்கமும் அதி கரித்து விட்டது. அவரது தகாத செயல் களுக்கு சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாததால் அவர் இதுவரை தப்பித்து வந்தார். ஆனாலும் அவர் மீது தற்போதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதில் 2 கொலை வழக்கு கள் சிபுசோரனின் மறுபக்க வாழ்க்கையை தோலுரித்து உலகிற்கு காட்டி விட்டது. 1975-ம் ஆண்டு சிருடி என்ப வரை கொலை செய்த வழக் கில் இவர் சிக்கினார். மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் தண்ட னையில் இருந்து தப்பி விட் டார்.என்றாலும் 1994-ல் தன் உதவியாளர் சசிநாத் ஜாவை கொலை செய்த வழக் கில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார். சி.பி.ஐ. அதிகா ரிகள் மண்டை ஓட்டை வைத்து நடத்திய திறமையான ஆய்வு சிபுசோரனுக்கு “ஆப்பு” அடித்து விட்டது.

சிபுசோரன் பற்றிய நிஜமுகம் தெரிய வந்ததும் ஜார்க்கண்ட் மக்களும் அவரை வெறுக்கத் தொடங்கி விட்டனர்.
குருஜி என்று மரியாதையாக அழைத்து வந்த மக்கள் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரை குப்புற தள்ளி விட்டனர். தன் மகனை எப்படி யாவது ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஆக்கி விட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் ஜார்க்கண்ட் மக்கள் அவர் மகனை வெற்றி பெற கூட செய்யவில்லை.

இந்த வீழ்ச்சிக்கிடையே தற்போது சிபுசோரன் சிறைக் குள் தள்ளப்பட்டுள்ளார். அரசியலில் இனி அவர் கதை முடிந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கொலைகாரன் என்ற தீர்ப்பு காரணமாக பதவி விலகிய முதல் மத்திய மந்திரி என்ற கறை முத்திரையை அவர் பதித்துள்ளார். துடைக்க முடியாத களங்க முத்தி ரையால் சிபுசோரன் மீண்டு எழ முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

நாளை (வியாழக்கிழமை) டெல்லி கோர்ட்டு வழங்கும் தண்டனை தான் சிபுசோரனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே அந்த தீர்ப்பை ஜார்க்கண்ட் மாநில மக்கள் படபடப்புடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Posted in Bihar, Biography, Biosketch, CBI, Corruption, Jha, JMM, Lifesketch, Memoirs, Murder, Narasimha Rao, Ranchi, Secretary, Shibu Soren, Sibu Soren | Leave a Comment »

Madhya Pradesh Assembly has Vaastu problem?

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்கள் மரணத்துக்கு வாஸ்து காரணமா?


Shall we redesign then?
போபால், நவ. 29- மத்திய பிரதேசத்தில் 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டு அன்றில் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு 16 எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்து உள்ளனர்.

1998 முதல் 2003-ம் ஆண்டு வரையிலான பா.ஜனதா ஆட்சியின் போது 12 எம்.எல்.ஏ.க்கள் இறந்தனர். தற்போதும் அங்கு பா.ஜனதா ஆட்சிதான் நடந்து வருகிறது.

சட்டசபை கட்டிடம் கட்டப் பட்டு 10 ஆண்டுகளில் 16 உறுப்பினர்கள் மரணம் அடைந்ததற்கு வாஸ்துதான் காரணம் என்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் தெரிவித்து உள்ளனர். உலக புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான சார்லஸ் சோரேரா இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர்.

எம்.எல்.ஏ.க்கள் மரணத் துக்கு சட்டசபை கட்டிடத்தின் அமைப்புதான் காரணமா என்று மாநில அரசு ஆய்வுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக 45 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பொதுப்பணித்துறை மந்திரி கைலாஷ் கூறும்போது, வாஸ்து கோளாறு காரணமாக இருக்கலாம் என்று சிந்திப்ப தாக தெரிவித்தார். பெரும் பாலான எம்.எல்.ஏ.க்கள் மரணத்திற்கு

  • வயது முதிர்வு,
  • நோய்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களான கிஷோரிலால் வர்மாவும், அவரது மனைவியும் பணப் பிரச்சினையால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதற்கு வாஸ்துதான் காரணமா என்று கம்ïனிஸ்டு உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.எம்.எல்.ஏ.க்கள் மரணத் திற்கு வாஸ்துதான் காரணமா என்பதில் பாரதீய உறுப்பினர்கள் இடையே மாறுபட்ட கருத்து உள்ளது.

Posted in Architecture, Assembly, BJP, Brujendra Tiwari, Building, Charles Correa, Civil Engineering, Communist, Communist parties, Communists, Construction, Indore, Ishwardas Rohani, Kailash Vijayvargiya, Kishorilal Varma, Madhya Pradesh, MLA, Pakaj Agarwal, PWD Minister, Ramlakhan Sharma, Shadora Gopilal Jatav, Srinivas Tiwari, structural engineer, Superstition, Vaasthu, Vaastu, Vaastu & Research Foundation, Vaastu institute, Vasthu, Vedic, Vidhan Sabha | Leave a Comment »

Tamil Film stars agree on principle to reduce their Compensation packages

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

முதல்கட்ட பேச்சுவார்த்தை: நடிகர்கள் சம்பளம் பாதியாக குறைப்பு

சென்னை, நவ. 28- திரைப்படத்துறைக்கு படப்பிடிப்பு கட்டணம் குறைப்பு, கேளிக்கைவரி ரத்து என பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து புதுப்புது படக்கம்பெனிகள் முளைத்துள்ளன. அதிக படங்களுக்கு பூஜையும் போடப்படுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களும் படங்கள் தயாரிக்க முதலீடு செய்கின்றன.

இந்த நிலையில் நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

புதுப்படங்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தயாராகி விடுகிறது. இரண்டு மாதங்களிலும் சில படங்களை எடுத்து விடுகிறார்கள். இதற்கு நடிகர்களுக்கு கோடி கோடியாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

  • முன்னணி நடிகர்கள் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.
  • சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர்கள் ரூ. 15 கோடி வரை வாங்குகிறார்கள்.
  • நடிகைகளுக்கு ரூ. 50 லட்சம், ரூ. 60 லட்சம் வழங்கப்படுகிறது.
  • தெலுங்கில் நடிகைகளுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் தருகிறார்கள்.

எனவே 60 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகைகள் பலர் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடிக்கிறார்கள். நடிகர்கள் சம்பள உயர்வால் தயாரிப்பாளர்கள் கவலையில் உள்ளனர். ஏற்கனவே அவர்கள் சம்பளத்தை குறைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனாலும் அவை அமுலாகவில்லை.

தற்போது அரசு சலுகை கள் அளித்துள்ளதால் நடிகர்கள் சம்பளத்தையும் குறைத்து அனைவரும் பயன்படத்தக்க வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கம் அதிகார பூர்வமற்ற வகைகள் முதல்கட்ட பேச்சு வார்த்தையை முடித்துள்ளது.

சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும், சம்பளத்தின் ஒரு பகுதியாக ஏதேனும் ஒரு ஏரியாவின் விநியோக உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும். சம்பளத்தை ஒரே நேரத்தில் வாங்காமல் தவணை முறைகளில் பெற்றுக்கொள்ள வேண்டும். என பல்வேறு அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன. விரைவில் இரண்டாவது கட்டப்பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அப்போது சம்பளத் தொகை இறுதி செய்யப்படும்.

Posted in Compensation, Film Stars, Kollywood, Movie Budget, Salary, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film | Leave a Comment »

G Varalakshmi – Biography

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்தார்: 9 வயதில் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி மரணம்

சென்னை, நவ. 27- பழம்பெரும் நடிகை ஜி.வர லட்சுமி சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. வரலட்சுமி ஆந்திராவை சேர்ந்தவர். அங்குள்ள பிரகாசம் மாவட்டத்தில் 27.9.1927-ல் பிறந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 80 படங்கள் நடித்துள்ளார். இவரது முதல் படம் பக்தபிரகலாதா. தனது 9வது வயதில் குழந்தை நட்சத் திரமாக இதில் அறிமுகமானார். கதாநாயகியாக நடித்த முதல் படம் துரோகி. இப்படத்தில் எல்.வி.பிரசாத் கதாநாயகனாக நடித்தார்.

தமிழில் குழந்தையும் தெய்வ மும், நான் பெற்ற செல் வம், அரிச்சந்திரா ஆகிய படங்க ளில் நடித்துள்ளார். குலேபகா வலியில் எம்.ஜி.ஆருக்கு இவர் ஜோடி. அரிச்சந்திராவில் சிவாஜி ஜோடியாக நடித் தார். அரிச்சந்திரா படம் வரலட்சுமியின் சொந்த படம். இது `சென்சார்’ பிரச்சினையில் சிக்கி ரொம்ப நாள் ரிலீசாகாமல் இருந்தது. ரிலீசான பிறகும் சரியாக ஓடவில்லை.

இவர் நடித்த `அண்ணி’ படம் தமிழ், தெலுங்கில் தயாரானது. வளர்ப்புத்தாய் கேரக்டரில் இதில் நடித்தார். இப்படம் இரு மொழிகளில் அதிக நாட்கள் ஓடி சக்கை போடு போட்டது.

வரலட்சுமி இளம் வயதில் மல்யுத்த போட்டி பிரியையாக இருந்தார். அந்த காலத்தில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தினமும் மல்யுத்த போட்டிகள் நடக்கும்.

இப்போட்டியை காண மைதானம் நிரம்பி வழியுமாம். இங்கு நடைபெறும் தாரா சிங், கிங்காங் மல்யுத்த சண்டைக்கு தனி மவுசு உண்டு. இந்த போட்டிகளை காண வரலட்சுமி தினமும் செல்வாராம். தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

பிரபல டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவை திருமணம் செய்து கொண்டார். பிரகாஷ் ராவ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத் தக்கது.

குழந்தை நட்சத்திரம், கதா நாயகி, வில்லி கேரக்டர் களில் நடித்த வரலட்சுமியின் கடைசி படம் வேதமனசுலு. அந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

இவரது மகன் பிரகாஷ் பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 30வது வயதில் அவர் மரணம் அடைந்தார்.

கடைசி காலத்தில் பெசன்ட் நகரில் உள்ள மகள் கனகதுர்கா வீட்டில் தங்கி இருந்தார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று மரணம் அடைந்தார்.

பெசன்ட் நகர் மயானத்தில் இன்று மாலை உடல் தகனம் நடக்கிறது.

Posted in Andhra Pradesh, AP, Biosketch, G Varalakshmi, Kollywood, Lifesketch, Memoirs, Tamil Actress, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Telugu Actress, Telugu Cinema | Leave a Comment »

Left sees red in Wal-Mart’s retail foray in India

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனம் நுழைய முயற்சி: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை, நவ. 29: சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனம் நுழையும் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனமான மார்ட் நுழைவதற்கு வகை செய்யும் முறையில் இந்திய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் ஏற்பாடு செய்துள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாகும்.

பல லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதாலேயே சில்லறை விற்பனைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடதுசாரி கட்சிகளுடன் வியாபாரிகள் அமைப்புகள் உள்பட பல அமைப்புகளும் எதிர்த்து வந்துள்ளன. இந்தப் பின்னணியில் மறைமுகமாக பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் நுழைய அனுமதியளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக தலையிட்டு இந்த முயற்சியை தடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சில்லறை விற்பனைத் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழையும் முயற்சியை ஒன்றுபட்டு முறியடிக்க முன்வருமாறு அனைத்துப் பிரிவு மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

Posted in Bharti Enterprises, Commerce Minister, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), ecosystem, Kamal Nath, Reliance, Sunil Mittal, supply chain management, Wal-Mart | Leave a Comment »

SEZs will harm Farmlands & Water Sources

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை அடுத்து நீர் நிலைகள், விவசாய நிலங்களுக்கு புதிய ஆபத்து

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, நவ. 29: துணை நகரம், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டங்களுக்கு அடுத்தபடியாக புதிய நகர்களை (டவுன்ஷிப்) உருவாக்கும் நிறுவனங்களால் ஏரிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் டவுன்ஷிப் எனப்படும் புதிய நகர்களை உருவாக்கும் பணியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு புதிய நகர்களை உருவாக்க குறைந்தபட்சம் 20 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் தேவைப்படுகின்றன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தற்போது இத்தகைய திட்டங்களுக்கு நிலம் பெறுவதில் தனியார் நிறுவனங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வேறு வழி இல்லாமல் சில நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் புதிய நகர்களை உருவாக்கி வருகின்றன.

இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக இத் தொழிலில் இறங்கியுள்ள சில நிறுவனங்கள் எந்த விலை கொடுத்தாவது பெருமளவில் நிலம் பெறுவதற்கு தயாராகி வருகின்றன.

தங்களது திட்டங்களுக்காக இந் நிறுவனங்கள் குறி வைத்திருப்பது புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் விவசாய நிலங்களைத்தான்.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் தேங்காமல் உள்ள ஏரிகளைத் தங்களது திட்டங்களுக்கு கையகப்படுத்தித் தருமாறு இந் நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இதேபோல, கடந்த சில ஆண்டுகளாக சாகுபடிப் பணிகள் நடைபெறவில்லை என்று கூறி விவசாய நிலங்களையும் விலைக்கு வாங்க இந் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

இது தொடர்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நீர் நிலைகள் மற்றும் விவசாயப் பகுதிகளாக உள்ள நிலங்களைக் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றம் செய்வதற்கான பணிகளில் இந் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தற்போது நீர் நிலைகளான ஏரிகளில் சில பகுதிகள் மட்டுமே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டன.

புதிய நகர்கள் திட்டங்கள் மூலம் இந்த நிலை மாறி ஏரிகள் முழுமையாகவே காணாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

நீர் நிலைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளுக்குக்கூட இது குறித்து தெரியாத நிலை உள்ளது.

சாத்தியமா?: நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இப் பிரச்சினை புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு நீர் நிலைகளைக் குடியிருப்புகளாக மாற்றுவதற்கு சட்டத்தில் வழி உண்டா என்று அரசு அதிகாரிகள் கேள்வி எழுப்பினால் அதற்கு உரிய பதில் தரவும் தனியார் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

கடந்த ஆண்டு ஹைதராபாதில் 2 ஏரிகளை குடியிருப்புப் பகுதிகளாக மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இதற்கு அரசின் அனுமதி பெறப்படும் என பிரபல கட்டுமான நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நகர்ப்புறங்களில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய குடியிருப்புகளை உருவாக்க வேண்டியது தவிர்க்க முடியாதது தான்.

ஆனால், மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள நீர் நிலைகள் அதைவிட முக்கியமானது என்பதை தொடர்புடைய துறையினருக்கு தெரிவிக்க வேண்டிய தருணம் தற்போது உருவாகியுள்ளது.

————————————————————————————————–
துணை நகரத்தை எதிர்ப்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் பரிதி இளம்வழுதி

சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ள 2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை குறித்து சென்னையில் புதன்கிழமை தொடங்கிய பயிலரங்கில் சி.எம்.டி.ஏ. தலைவர் பரிதி இளம்வழுதி,  துணைத் தலைவர் ஆர். சந்தானம்.

சென்னை, ஆக. 30: துணை நகரங்கள் அமைக்கப்படுவதை எதிர்ப்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என சி.எம்.டி.ஏ. தலைவரும், செய்தித் துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி தெரிவித்தார்.

சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ள 2-வது பெரும் திட்ட (மாஸ்டர் பிளான்) வரைவு அறிக்கை குறித்த 2 நாள் பயிலரங்கை புதன்கிழமை தொடக்கி வைத்து அவர் பேசியது:

சென்னை மாநகரின் அதீத வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தேவையான எதிர்பார்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டுள்ளது.

மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு துணை நகரம் அமைப்பது உள்ளிட்ட அரசின் வளர்ச்சித் திட்டங்களை சிலர் வேண்டுமென்றே எதிர்க்கின்றனர். இவர்களுக்கு மக்களின் எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

இவ்வாறு எவ்வித எதிர்கால திட்டமிடலும் இல்லாமல் தங்கள் விருப்பம் போல அரசின் திட்டங்களை எதிர்ப்பது எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக அமையும். இவர்களை எதிர்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள்.

வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் அரசின் திட்டங்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை தகர்த்தெரியக்கூடிய திடமான நிலையில் தமிழக அரசு உள்ளது.

அதற்காக மாற்று கருத்துகளை தமிழக அரசு புறந்தள்ளியதில்லை. கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை தான். அத்தகைய மாற்று கருத்துகள் இருந்தால் தயங்காமல் அரசுக்குத் தெரிவிக்கலாம்.

ஐ.டி. வளர்ச்சி மட்டும் போதாது: சென்னை நகரை அழகு படுத்துவது, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதால் மட்டும் அரசின் திட்டம் முழுமை அடையாது.

நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் வாழும் மக்களையும், நடைபாதைவாசிகளையும் உள்ளடக்கி அவர்களுக்கும் அனைத்து வாழ்விட வசதிகளையும் ஏற்படுத்தித் தரும் பணிகளையும் அரசு கருத்தில் கொண்டுள்ளது என்றார் பரிதி இளம்வழுதி.

தலைமைச் செயலாளர்: பயிலரங்கில் பங்கேற்ற தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி பேசியது:

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அருகே துணை நகரங்களை உருவாக்க வேண்டியது தற்போதைய நிலையில் மிகவும் அவசிய தேவையாகும்.

இவ்வாறு துணை நகரங்களை உருவாக்காவிட்டால் எதிர் காலங்களில் நகரங்களில் மட்டுமல்லாது அதனை ஒட்டிய பகுதிகளிலும் திட்டமிடப்படாத வளர்ச்சி ஏற்படும்.

இதனால், புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

சென்னைப் பெருநகர்ப் பகுதி மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாத்து பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்படும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் திரிபாதி.

சி.எம்.டி.ஏ. துணைத் தலைவர் ஆர். சந்தானம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் ஆர். செல்லமுத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

————————————————————————————————–

Posted in Agriculture, City, Economy, Irrigation, Issues, Op-Ed, Rural, SEZ, Special Economic Zone, Suburban, Water | Leave a Comment »

Shibu Soren convicted in his secretary Jha’s murder case

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2006

கொலை வழக்கில் ஷிபு சோரனுக்கு எதிராகத் தீர்ப்பு

ஷிபு சோரன்
ஷிபு சோரன்

கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட, இந்திய நடுவண் அரசின் மூத்த அமைச்சர் ஷிபு சோரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஷிபு சோரன் தனது உதவியாளரை கடத்தி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார், என்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக டில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

ஷிபு சோரன் நிலக்கரித் துறையை வகித்து வந்தார். தீர்ப்பு வந்த பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் உருவாக முக்கியப் பங்கு வகித்த ஷிபு சோரன், ஏற்கனவே ஒரு கொலை வழக்குத் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பதும் பிறகு மீண்டும் பதவியேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் ஒருவர் கொலை வழக்கில் தண்டனை பெறுவது இந்தியாவில் இதுதான் முதல் முறை.

Posted in Bribe, Cabinet, CBI, Chiroari massacre, Corruption, India, Jharkhand, Jharkhand Mukti Morcha, JMM, Minister, Prime Minister, Shashinath Jha, Shibu Soren, Shiv Sena, Union Minister for Steel and Mines, UPA | Leave a Comment »

Ira Murukan – Kensington Gardens, Indian Kidnappers, Sangitha Kalanidhy

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

லண்டன் டைரி: லண்டன் இசைவிழா!

இரா. முருகன்

ஒரு பத்து வருடம் முன்னால், நம் ஊரில் பரபரப்பான பகுதியில் ஒரு கிரவுண்ட் இடம் சும்மா கிடந்தால் என்ன நடந்திருக்கும்? சடசடவென்று ஒரு நாலு மாடிக் கட்டடம் உயரும். கேபிள் டிவியின் விளம்பர நச்சரிப்புத் தாங்காமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பந்து மித்திரர்களோடு அங்கே படையெடுப்போம். இருபது சதவிகித வட்டிக்கு பிக்செட் டெபாசிட். மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு நகைச்சீட்டு என்று ஆரம்பித்துவிட்டு வெள்ளி முலாம் பூசிய வெங்கடாஜலபதி டாலர், காமாட்சி விளக்கு என்று எதையாவது பரிசாகப் பெற்று பெருமையோடு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருவோம். அப்புறம் மூன்று வருடம் கழித்து பனகல் பார்க் பெஞ்சில் கூட்டம் போட்டு, போட்ட பணத்தில் முப்பத்திரண்டு சதவீதமாவது கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்போம். ஒரு கிரவுண்ட் இல்லாமல் இருநூற்றெழுபத்தைந்து ஏக்கர் இப்படிச் சும்மா கிடந்திருந்தால்? அந்த மீட்டிங்கை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த வேண்டியிருக்கும் என்பதைத் தவிர வேறே வித்தியாசம் இருந்திருக்காது.

லண்டனில் ஓர் இருநூற்றெழுப்பத்தைந்து ஏக்கர் செல்வச் செழிப்பு மிகுந்த கென்சிங்டன் பகுதியில் இருநூறு வருடத்துக்கு முன்னால் சும்மா கிடந்தது. அப்போது டிவியும் அதில் விளம்பரமும் இல்லாததாலும், பிரிட்டீஷ் அரச வம்சத்துக்கு இலவச காமாட்சி விளக்கு ஆசை இல்லாத காரணத்தாலும், கென்சிங்டனில் அந்தப் பெரிய நிலப்பரப்பை கொப்பும் குழையும் புல்தரையும் பூச்செடியுமாக மாற்றி, கென்சிங்டன் தோட்டம் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்தியாவையும் சேர்த்த சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட விக்டோரியா மகாராணி இந்தத் தோட்டத்தை அடுத்த கென்சிங்டன் அரண்மனையில்தான் பிறந்து வளர்ந்ததாக அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.

கென்சிங்டன் பூங்காவில் இப்படி ஓர் அறிவிப்புப் பலகை கூட விடாமல் படித்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். ஓர் அரை டஜன் மோட்டா சர்தார்ஜிகள் உற்சாகமாகப் பேசிக்கொண்டு, அவ்வப்போது புல்தரையில் குட்டிக்கரணம் அடித்து எழுந்து நின்று முன்னால் நகர்ந்தபடி இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளும் ஒரு பெரிய நாயுமாக வந்த வெள்ளைக்காரத் தம்பதி குழந்தைகளை ஓடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடுகிறது. அவர்கள் சர்தார்ஜிகளையும் என்னையும் பார்க்கிற பார்வையில் நாங்கள் எல்லோரும் பிள்ளை பிடிக்கிறவர்கள் என்ற பலமான சந்தேகம் தெரிகிறது. குழந்தைகள் அடக்கமாக பூங்கா சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து சாண்ட்விச் சாப்பிட ஆரம்பிக்க கட்டவிழ்த்து விட்ட அவர்களுடைய நாய் மண்ணில் புரண்டுவிட்டு எதிரில் கால்வாய்க்குள் புகுந்து ஒரு நிமிடம் நீந்தி, திரும்ப ஈரத்தோடு மண்ணில் புரள ஓடிவருகிறது. மேலே விழுந்து பிடுங்குவதுபோல் பாய்ந்த அந்த இங்கிலீஷ் நாயின் பரம்பரையை பஞ்சாப் பாஷையில் திட்டியபடி ஒரு சர்தார்ஜி, நாய்க்கார தம்பதியிடம் நல்ல இங்கிலீஷில் புகார் சொல்கிறார். “நீங்கதான் பாத்து நடக்கணும்’ அந்தம்மா சாண்ட்விச்சில் பாதியை விண்டு நாய்க்குக் கொடுத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக் கொள்கிறார்.

கென்சிங்டன் பூங்காவில் இருந்து வெளியே வரும்போது பிரம்மாண்டமாக முன்னால் நிற்கிறது ராயல் ஆல்பர்ட் அரங்கம். இறந்துபோன தன் கணவர் ஆல்பர்ட் இளவரசர் நினைவாக விக்டோரியா மகாராணி கட்டியது. இந்திரா காந்தி சர்க்கார் தில்லியில் கவிழ்ந்து அல்பாயுசாக ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து குஷியாக உள்குத்து நடத்திக் கொண்டிருந்த 1977-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இந்த ராயல் ஆல்பர்ட் ஹாலில் மேற்கத்திய சாஸ்தீரிய சங்கீத நிகழ்ச்சியிலிருந்து, ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட விழா, அரசியல்வாதிகள், அறிவியல் துறை அறிஞர்களின் சொற்பொழிவு என்று எத்தனையோ இந்த நூற்று முப்பது வருடத்தில் நடந்திருக்கிறது. தற்போது வருடா வருடம் பிரிட்டீஷ் ஒலி, ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி கோடைகால இசைவிழாவான ப்ராம் என்ற ப்ரொமனேட் விழா நடத்துகிறது இங்கேதான்.

ப்ரொமனேட் என்றால் நடந்துகொண்டே இசை கேட்கிறது என்று பொருளாம். ஆல்பர்ட் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடக்கமுடியாது. ஆனாலும் அரங்கத்தில் நின்றபடிக்கு இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஒருத்தருக்கு ஒரு டிக்கெட்டுக்கு மேல் கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது.

நீண்ட க்யூவில் நின்று அன்றைய ப்ராம் நிகழச்சிக்கான நுழைவுச்சீட்டுக்காகக் காத்திருக்கிறேன். பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இசைக்குழு மேற்கத்திய இசைமேதை மோசர்ட்டின் இருநூற்றைம்பதாவது பிறந்த ஆண்டு நிறைவை ஒட்டி முழுக்க மோசர்ட் இசையமைத்த படைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. நாலைந்து வெள்ளைக்காரர்கள் சுறுசுறுப்பாக பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரீய சங்கீதத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பதை முதன்முதலாக ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.

பிளாக்கில் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒயிட்டிலேயே கிடைத்துவிடுகிறது டிக்கெட். ஐந்தே பவுண்ட்தான் செலவு. மூவாயிரம் பேர் நிற்கிற பெரிய அரங்கத்தில் புகுந்து நானும் நின்றபடி மேடையைக் கவனிக்கிறேன். பிபிசி டெலிவிஷன் காமிராக்கள் அவை பக்கம் திரும்பி அழகான வெள்ளைக்காரப் பெண்களைத் தேடிக்கொண்டிருக்க, நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. சாவு நிகழ்ந்தபோது வாசிக்க ஏதுவாக மோசர்ட் எழுதிய மேசானிக் ப்யூனரல் மற்றும் ரெக்யூம் என்ற இரண்டு படைப்புகள் மேடையேற்றப்படும் என்று அறிவிப்பு தொடர்கிறது.

இருபது வயலின், ஏழெட்டு புல்லாங்குழல், டிரம்பெட், வெள்ளைச் சீருடை அணிந்த பத்து பாடகர்கள், அக்கார்டியன், பியானோ என்று மேடை நிறைந்து சோகமயமான இழவு இசையைப் பொழிய இசைக்குழு நடத்துனர் ஆவேசமாகக் கையை இப்படியும் அப்படியும் அசைத்து இன்னும் உற்சாகமோ சோகமோ படுத்துகிறார். என் பக்கத்தில் ரெக்சின் பையைப் காலடியில் வைத்துவிட்டு ஒரு வெள்ளைக்கார முதியவர் இசைக்குறிப்பு எழுதிய புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு இசைக்குழு கூடவே மெல்ல வாய்க்குள் பாடியபடி சங்கீதத்தில் முழ்கியிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, “”தனிப்பாடல் பாடகிகள்லே ரெண்டு பேர் ஸ்ருதி சேராமக் கஷ்டப்படுத்திட்டாங்க. பின்வரிசை ரொம்ப சுமார்தான்” என்றபடி பக்கத்தில் நடந்தவரிடம் சொன்னபடி வந்தவர் கூறியது அட்சரம் பிசகாமல் அடுத்த நாள் கார்டியன் பத்திரிகை இசை விமர்சனத்தில் வந்திருந்தது.

“”போன மாதம் ப்ராம் நிகழ்ச்சிக்கு லண்டனில் கச்சேரி செய்ய வந்திருந்த கர்னாடக சங்கீத வித்துவான் மணக்கால் ரங்கராஜனைக் கூட்டிப் போனேன்” என்று நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் சொல்கிறார். சென்னை சங்கீத சீசனில் சபா எதிலும் தட்டுப்படாத மணக்கால் லண்டனில் அண்மையில் அவை நிறைந்த இரண்டு கச்சேரி நடத்தி இருக்கிறார் என்பதை அறிந்து இன்னொரு தடவை ஆச்சரியப்படுகிறேன்.

அடுத்த ஆண்டு டிசம்பர் சங்கீத விழாவில் மேலும் ஆச்சரியகரமாக, லண்டன் ப்ராம் போல் பிரெஞ்சி இசைக்குழு சென்னை மியூசிக் அகாதமியில் மோசர்ட் இசை நிகழ்ச்சி நடத்தலாம். அல்லது லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நித்யஸ்ரீ கச்சேரிக்கு வெள்ளைக்காரர்கள் ப்ளாக்கில் டிக்கெட் விற்கலாம். இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் ஆச்சரியமாக, அகாதமிக்காரர்கள் மணக்கால் ரங்கராஜனுக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்க முடிவெடுக்கலாம்.

Posted in BBC, Era Murugan, Humor, Ira Murukan, Iraa Murugan, Kensington Gardens, London Diary, London Iyer, Mathalarayar, Mozart, music, Orchestra, Padmanabha Iyer, Performance, Raayarkaapiklub, Sangeetha Kalanithi, Sangitha Kalanidhi, Summer, Symphony, Tamil Literature, Travel Notes, UK | 1 Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

மூலிகை மூலை: அந்தரத் தாமரை

விஜயராஜன்

அடுக்கு அடுக்காய் வைத்தாற்போல இலைகளைக் கொண்டது அந்தரத் தாமரை. நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடி இனமாகும். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. இலைகளே மருத்துவக்குணம் உடையவை. உடலிலுள்ள வெப்பத்தைத் தணித்தும், தாகத்தை அடக்கியும், தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் குளம், குட்டைகளில் தானாகவே வளர்கின்றது.

வேறுபெயர்கள்: அவை, ஆகாயமூலி, ஆகாயத்தாரை.

ஆங்கிலத்தில்: Pistia Steteotes, Linn, Areceae.

மருத்துவக் குணங்கள்:

அந்தரத் தாமரை இலையைச் சுத்தமாகத் தேய்த்துக் கழுவி சாறு பிழிந்து 20 மில்லியளவு எடுத்து அதில் சிறிதளவு வெங்காயத்தைச் சாறு பிழிந்து 2 வேலை குடித்து வர சொருக்கு மூத்திரம் கட்டுப்படும்.

அந்தரத் தாமரை இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும்.

அந்தரத் தாமரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்துத் தொடர்ந்து கட்டிவர வெளிமூலம், ஆசனக்குத்தல் குணமாகும்.

அந்தரத் தாமரை இலையைச் சாறு பிழிந்து 100 மில்லியளவு எடுத்து அத்துடன் சிறிது எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து இளஞ்சூடாகக் காய்ச்சி சூடு பொறுக்கும் அளவு துணியில் தொட்டு வெளிமூல முளைப்பு, மூல வலி, மூல எரிச்சல் போன்றவற்றிற்கு ஒற்றடம் கொடுக்கக் குணமாகும்.

அந்தரத் தாமரை இலையை மட்டும் அரைத்து தொழுநோய் புண் உள்ளவர்கள் அதன் மீது போட்டு வர ஆறும்.

அந்தரத் தாமரை இலையை 2 கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் மீது இந்த இலையின் விழுதை வைத்துக் கட்ட ஆறும்.

அந்தரத் தாமரை இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்துப் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒரு முறை தலைமுழுகி வர உடல் சூடு, கண் எரிச்சல், மூல நோய் குணமாகும்.

அந்தரத் தாமரையிலையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, கருங்குறுவை அரிசி மாவும் சம அளவாக எடுத்து கலந்து பிட்டவியல் செய்து எடுத்து நல்லெண்ணைய் விட்டுப் பிசைந்து 3 கரண்டியளவு சாப்பிடவும். அத்துடன், மாதுளங் கொழுந்தை காடியில் அவித்து மூலத்தில் வைத்துக் கட்டினால் மூலமுளை விழுந்து விடும்.

Posted in Allopathy, Areceae, cure, Disease, Doctor, Herbs, Homeopathy, Infection, Linn, medical, Medicine, Mooligai, Natural Therapy, Pistia Steteotes, unaani | Leave a Comment »

Can ‘Thiruvilaiyadal Aarambam’ hit the Theatres?

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

திரைக்கதிர்: திரு-வா? குரு-வா?

மனோஜ் கிருஷ்ணா :: “திருவிளையாடல் ஆரம்பம்’ – தனுஷ், ஸ்ரேயா

தேவதையைக் கண்டேன்‘ படத்தையடுத்து தனுஷ்-பூபதிபாண்டியன் இணையும் இரண்டாவது படம் “திருவிளையாடல் ஆரம்பம்’. படத்தைத் தொடங்கியபோது தலைப்பை மாற்ற வேண்டும் என்று சிவாஜிமன்றத்தினர் சார்பில் பல சர்ச்சைகள் எழுந்தன. இன்னும் எதிர்ப்பு உள்ளதா? படத்தின் தற்போதைய நிலைமை என்ன? என்று இயக்குநர் பூபதிபாண்டியனிடம் கேட்ட போது…

“”படப்பிடிப்பு தொடங்கும்போது டைட்டிலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிலர் சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்கள். ஹீரோவின் பெயர் திருக்குமரன். சுருக்கமாக திரு. காதல் நிறைவேறுவதற்காக அவர் செய்யும் விளையாடல்களே திரைக்கதை. இந்த உண்மை உணர்த்தப்பட்ட பிறகு பெயர் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

திரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன். ஸ்ரேயா பணக்கார வீட்டுப் பெண். இவர்களிருவருக்கும் காதல். ஸ்ரேயாவின் அண்ணன் குரு. திரு-வா? குரு-வா? என்ற மனப்போராட்டத்தில் இருக்கும் ஸ்ரேயா இறுதியில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் திரையில் தோன்றும் காட்சிகளிலெல்லாம் விசில் பறக்கும். எப்போது தொடங்கியது; எப்போது முடிந்தது என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு படம் விறுவிறுப்பாகச் செல்லும்.

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசம் இவை எதுவுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பார்க்கும்படி காமெடியாகவும், கலகலப்பாகவும் படத்தை இயக்கியுள்ளேன்” என்றார்.

Posted in Bhoopathy Pandiyan, Devathayai Kanden, Dhanush, Shreya, Sreya, Sriya, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thanush, Thiruvilaiyaadal Aarambam, Thiruvilaiyadal | Leave a Comment »

Tamil Tigers leader declares Sri Lanka cease-fire “defunct”

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

தமிழருக்கு தனி நாடே வழி என்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று விடுதலைப் புலிகளுடைய வருடாந்திர மாவீரர் நாள் உரையில் கடந்த ஓராண்டாக வடக்கு கிழக்கில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், சமாதான வழிமுறையில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு, தங்கள் இயக்கம் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி விளக்கிக் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கம் கடந்த ஓராண்டாக எடுத்து வந்த நடவடிக்கைகள் தங்களுக்குத் திருப்தியைத் தரவில்லை, இவர்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவவில்லை எனவும் இது குறித்து தங்களுடைய நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்ட பிரபாகரன் அவர்கள்,

“சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை. எனவே எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். விடுதலைக்கான பாதையின் தமது பயணத்தினை மீளவும் தமிழர்கள் ஆரம்பித்திருக்கின்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் உலகத் தமிழினத்திடமிருந்து தொடர்ச்சியான ஆதரவினையும் உதவியையும் நாம் வேண்டி நிற்கின்றோம்,” என்றார்.

பிப்ரவரி மாதம் 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையே கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எப்படி செயலிழந்து போனது என்பதைக் குறிப்பிட்ட பிரபாகரன்

“தனது படைபலத்தினைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கலாம் என ராஜபக்ச அரசு எண்ணுகின்றது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து, அரைகுறைத் தீர்வை தமிழர்மீது திணிப்பதற்கு அது விரும்புகின்றது. ராஜபக்ச அரசின் இந்தத் தந்திரோபாயத்தினால்தான், யுத்தநிறுத்த ஒப்பந்தம் செயலிழந்துபோய்க் கிடக்கின்றது. எமது நிலைகள் மீது தாக்குதல்களை நடாத்துவோம் என வெளிப்படையாகவே அறிவித்துவிட்டு, நடாத்திவரும் ராஜபக்ச அரசு இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்குரிய ஈமக்கிரிகைகளை செம்மையாகச் செய்திருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்

உலக தமிழினத்திடம் இருந்து தொடர்ச்சியாக ஆதரவினையும் உதவினையும் எதிர்பார்த்துள்ளோம் – விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்

 


விடுதலைப் புலிகள் தலைவரின் அனைத்து கருத்துக்களிலும் ஏமாற்று தன்மை தெரிகிறது – இலங்கை அரசு

கெஹெலிய ரம்புக்வெல்ல
கெஹெலிய ரம்புக்வெல்ல

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேசவல்லவராக கெஹலிய ரம்புக்வெல்ல,

பிரபாகரன் அவர்களின் இன்றைய கருத்துக்களை கடந்த காலங்களில் பலமுறை கேட்டு விட்டோம் என்றும், கடந்த ஆண்டு , விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில், மஹிந்த ராஜபக்சவை ஒரு யதார்த்தமான அரசியல் தலைவர் என்று அறிமுகப்படுத்தி , அவருக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு ஆண்டு கால் அவகாசம் கொடுப்பதாகக் கூறினார். ஆனால், கடந்த ஆண்டு மாவீரர் தின உரை நிகழ்த்திய இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அவர் வன்முறையை அதிகரிக்க ஆரம்பித்து விட்டார். இது அவரது ஏமாற்றும் தன்மை மற்றும் பயங்கரவாதத்தன்மையின் ஒரு தெளிவான அடையாளம் என்று கூறினார்.

மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர், திம்புவிலிருந்து ஜெனீவா வரை அமைதிப்பேச்சுவார்த்தைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். திம்புவிலிருந்து ஜெனீவா வரையிலான காலகட்டத்தில்தான், உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் வழிபடும் தலதா மாளிகை தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில்தான, முஸ்லீம் பள்ளிவாசல் தாக்குதலில், அப்பாவி முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். எனவே, அவரது இந்த அனைத்துக் கருத்துகளிலும் இந்த ஏமாற்றும் தன்மை நன்றாக வெளிப்படுகிறது என்றும் கூறினார் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பேசவல்ல கெஹலிய ரம்புக்வெல்ல.

இதற்கிடையே, இந்த உரை தற்போதைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது எனக் கோடிட்டு காட்டுகிறது எனக் கூறும் இலங்கை பகுபாய்வாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், தனி அரசு தான் ஒரே தீர்வு என்கிற கருத்து, சர்வதேச சமூகத்தை பொறுத்த வரையில் அவர்கள் இலங்கையில் ஒரு சமாதான முயற்சியை மேற்கொண்ட முயற்சிகளை பார்க்கின்ற போது அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது எனவும் கூறுகிறார்.

மேலும், வெளிநாட்டிலுள்ள தமிழீழ ஆதரவாளர்கள் போரை விரும்பினாலும், இலங்கை தீவில் போரின் உக்கிரத்தை நேரடியாக எதிர்கொள்ளும் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

Posted in BBC, Eezham, Keheliya Rambukwella, LTTE, Sri lanka, Srilanka, Tamil independence, Velupillai Prabhakaran | 1 Comment »