Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Delhi’ Category

Human Rights, Encounter Deaths – Crime, Law and Order

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

“தோட்டாக்கள்’ எழுதும் தீர்ப்புகள்!

உ . நிர்மலா ராணி

தில்லி வியாபாரிகளான பிரதீப் கோயல் மற்றும் ஜகஜித் சிங் இருவரையும் பட்டப்பகலில் நடுரோட்டில் ஜனநெரிசல் மிகுந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் 1997-ல் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதற்காக ஓர் உதவி கமிஷனர் உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

“என்கவுன்டர்’ அதாவது “மோதல் சாவுகள்’ என்ற பெயரில் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பறித்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை பரவலாக நிலவிவரும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனை. இதுபோன்ற சம்பவங்களில் சாதாரணமாக நிர்வாகரீதியான விசாரணைகள் நடைபெறும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு மட்டுமே வழங்கப்படும். தவிர தவறு செய்த காவல்துறையினர்மீது சட்டப்படி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு நீதி கிடைத்திருப்பது இந்த வழக்கில்தான்.

அதுவுமே சி.பி.ஐ. 74 சாட்சிகளை விசாரித்து 7 நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக வழக்கை நடத்தி, அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை பலமுறை மாற்றி, இறந்தவரின் குடும்பத்தினரும் மற்ற பல அமைப்பினரும் இடைவிடாமல் போராடி 10 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து இந்த நீதி கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றத்தை, சட்டத்திற்குள்பட்ட மோதல் சாவாகச் சித்திரிக்க கையாண்ட முயற்சிகளும் நீதிமன்றத்தால் கவலையோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

தாதா யாசினும் அவரது கூட்டாளியும் என, தவறாக நினைத்து அவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்ட போலீஸôர், காருக்குள்ளிருந்தவர்கள் முதலில் சுட்டதால்தான் தற்காப்புக்காக தாங்கள் சுடவேண்டி வந்ததாக விளக்கமளித்தனர். அதற்கு ஆதாரமாக பல காலமாகப் பயன்பாடு இல்லாத துப்பாக்கியை காருக்குள்ளிருந்து கைப்பற்றியதாகக் கதைகட்டியதுமல்லாமல் அந்தத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள்தான் இவை என்று அரசு துப்பாக்கிக் குண்டு நிபுணரான ரூப் சிங்கையும் பொய்சாட்சியமளிக்க வைத்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே ஜெசிகாலால் கொலை வழக்கில் பொய் சாட்சியமளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்துபோனது யாசினாக இருந்திருந்தாலும்கூட “”சட்டத்திற்குப்புறம்பான சாவுகளை” நடத்தும் “காக்கிச்சட்டைகள்’ குற்றவாளிகளே என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

“மோதல் சாவுகள்’ சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதா என்றால், இரண்டு காரணங்களுக்காக காவல்துறையினர் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தற்காப்புக்காக இரண்டாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 46-வது பிரிவின்படி மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக்கூடிய குற்றம்புரிந்த ஒரு நபரைக் கைதுசெய்ய முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் மரணத்தை விளைவித்தால்கூட குற்றமில்லை என்பதால்.

ஆனால் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் போலி மோதல் சாவுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. 1960களில் நக்சலைட்டுக்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மேற்குவங்கத்திலும் பின்னர் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளத்தில் அரங்கேறிய இந்த “”சட்டத்திற்குப் புறம்பான சாவுகள்” அவசர நிலை காலகட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு கொள்கையாகவே பின்பற்றப்பட்டது.

பின்னர் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் வடமாநிலங்களிலும், ரௌடிகள் ராஜ்யத்தை அழிப்பது என்ற பெயரில் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகத்தான், பதவி உயர்வு பெற காவல்துறை அதிகாரிகள் அப்பாவி மக்களைக்கூட “”மோதல் சாவுகள்” என்ற பெயரில் பலிகொடுத்திருப்பது காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆள்நடமாட்டமில்லாத பகுதியில், இரவு நேரம் ரோந்து சென்று கொண்டிருக்கும் போலீஸôர் முன் திடீரென்று தோன்றும் குற்றவாளிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுடுவார்கள் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் கைதி காவலர்களின் துப்பாக்கியைத் திறமையாகக் கைப்பற்றி அவர்களைத் தாக்க முயற்சி செய்வர்; தற்காப்புக்காகவும் அவர்களைக் கைது செய்ய முயலும்போதும் போலீஸôரின் குண்டுக்கு அவர்கள் பலியாவார்கள். ஆனால் அவர்கள் நடத்திய தாக்குதலால் போலீஸôருக்கு கை, கால் போன்ற இடங்களில் மட்டுமே அடிபட்டதாகக் கூறப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் நடந்த 9 மோதல் சாவுகள் தொடர்பாக சித்திரவதைக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த “மக்கள் கண்காணிப்பகம்’ களஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த வெள்ளை ரவி, குணா மோதல் சாவுகளில்கூட சம்பவம் நடந்த இடம் போலீஸôர் கூறுவதுபோல் மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடமாக இல்லை என்றும், நாட்டுத் துப்பாக்கியாலும், பெட்ரோல் குண்டுகளாலும் போலீஸôர் தாக்கப்பட்டிருந்தால் 5 காவலர்களுக்கும் ஒரே மாதிரி இடது வலது, கைகளில், முழங்கைக்கு கீழ் எப்படி காயம்பட்டிருக்க முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமியை வெள்ளை ரவி கடத்த திட்டமிட்டிருந்தபோது இந்த மோதல் சாவு நிகழ்ந்ததாக போலீஸôர் அளித்த தகவலை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே மறுத்திருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

போலி மோதல் சாவுகளை நியாயப்படுத்தும் சிலர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் குற்றம் நிரூபணமாகாமல் விடுவிக்கப்படுவதை காரணம் காட்டுகிறார்கள்.

அவ்வாறு குற்றவாளிகள் விடுதலையாவதற்கு காவல்துறையின் மோசமான புலன் விசாரணைதான் பிரதான காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கு நடக்கும்போது போதுமான கவனம் செலுத்துவதில்லை. சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை. அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், நீதிமன்ற காலதாமதம் போன்ற காரணங்கள் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெள்ளை ரவி விஷயத்தில் கூட 1999ல் அவர் மீது பதிவாகியிருந்த 24 வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்னவோ 2003ல்தான். அதற்குள் 22 வழக்குகளில் விசாரணை முடிந்து அவர் குற்றவாளியல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. தனி நீதிமன்றம் விசாரித்த மற்ற 2 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டார்.

மோதல் சாவுகள் குறித்து நேர்மையாக, விரைவாக விசாரணை செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு நமது நாட்டில் இல்லை. மோதல் சாவுகள் நடக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில அரசுக்குக் கடிதம் எழுதியும் பல மாநிலங்கள் அதைப் பின்பற்றுவதில்லை என்று ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஆணையங்களும் நீதிமன்றங்களும்கூட மோதல் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. மணல் மேடு சங்கர் வழக்கில் அவர் தன்னை போலீஸôர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் போவதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் இந்த விஷயம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 24 மனித உரிமை அமைப்புகள் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளது.

இதன் பிறகுதான் மணல்மேடு சங்கர் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும்போது சினிமா பாணியில் வாகனம் விபத்துக்குள்ளாகி, அந்தக் குழப்பத்தில் அவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது.

உண்மையிலேயே ரௌடிகள் மட்டுமே சுட்டுக் கொல்லப்படுகிறார்களா? ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார்? அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா? ஒருவர் ரௌடியாக இருந்தாலும், உயிர் வாழும் உரிமை அவருக்கு உண்டு என்று நமது அரசியல் சட்டம் கூறுவதை மதிக்க வேண்டும்.

சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனை என்ற தீர்ப்பே சரியா, தவறா என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, எந்த விசாரணையுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக தோட்டாக்கள் எழுதும் தீர்ப்பான போலி மோதல் சாவுகளை அனுமதிக்க முடியுமா? சிந்திப்போம்!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————————————————————

கூலிப்படையின் குருகுலங்களாய்…

சு. பிரகாசம்


தமிழகத்தில் கூலிப்படையினரை ஒடுக்குவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் தமிழக முதல்வரால் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட ரவுடிகளை சிறைக்குள் கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அவர்களிடையே தேவையற்ற ஒருங்கிணைப்பிற்கும் தீய சிந்தனைகளுக்குமே வழி வகுக்கும்.

ரவுடிகளை மட்டுமல்ல! தற்போதைய சிறை நிர்வாக ஊழல்களும், சூழல்களும் சிறைப்பட்ட எவரையும் தீய வழிகளுக்கே அழைத்துச் செல்கின்றன.

எனவே, மனித உரிமைகளின் மாதிரிக் கூடங்களாக சிறைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலம்தான் ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றிகாண முடியும்.

சிறை சீரமைப்பு என்பது ரவுடிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் சாதகமான செயல்திட்டங்களை அறிவிப்பது அல்ல! சிறைக்குள் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கும், தீய சிந்தனைகளுக்கும், தீய நட்புக்கும், சிறைத் துறையினரின் ஊழல்களுக்கும் பாதகமான நடவடிக்கை என்பதே சரியான நிலைப்பாடு ஆகும்.

சிறைப்பட்டவர்களில் ரவுடிகளும் தீவிரவாதிகளும் மோசடிக்காரர்களும் சுமார் 20 சதவிகிதத்திற்கும் உள்பட்டவர்களே! எஞ்சியவர்கள் விசாரணைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகளாகவும் உள்ளவர்கள். இவர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாகக் கருதுபவர்கள்.

சிறை வாயிலில் தாயிடம் குழந்தை கேட்டதாம்! ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா! என…

சிறைக்குள் இவ்வளவு சங்கடங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனைவியின் கள்ள உறவைச் சகித்திருப்பேன் என்றாராம் ஓர் தண்டனைக் கைதி!

அய்யா! உணவை வாயில் வைக்க முடியலிங்க! என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம்! என்றாராம் சிறை அதிகாரி!

வீடு தேடி வந்த சிறைத் துறையினரை டேய்! இவங்க போலீஸ் இல்லைடா! நம்ம குருகுலத்து தெய்வங்கள்! என்றாராம் கூலிப்படைத் தலைவன்! சக கூட்டாளிகளிடம்.

இவையெல்லாம் சிறை நிர்வாகங்கள் குறித்த பாதகமான செய்திகள்தான்.

சிறைத் துறையினரின் அராஜகங்களும், ஊழல்களும் சிறை சுவர்களுக்கு வெளியே முழுமையாகத் தெரிவதில்லை. புலனாய்வுப் பத்திரிகைச் செய்திகளை நீதிமன்றங்கள் ஆதாரங்களாகக் கொள்வதில்லை. சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை எவரும் அறிய இயலாது. சிறை அதிகாரிகள் சொல்வதைத்தான் அரசும் நம்ப வேண்டியிருக்கிறது.

கைதிகளுக்கு உணவு வழங்குவதில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன்! ஆளும் அரசியல் கட்சிகளின் (மாநாடு) நிதிச் செலவுகளை ஈடு செய்வதில் சிறைத்துறை முதலிடத்தில் உள்ளது.

அரசு வழங்கும் உணவு அளவீட்டில் 5-ல் ஒருபகுதி கூட கைதிகளைச் சென்றடைவதில்லை என்பதுதான் வேதனை. சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால கட்டங்களில் சிறைகள் சிறைகளாயிருந்தன. அன்று தண்டனை முடிந்து விடுதலையான கைதிகள் பலர் சமூகத்தில் மதிக்கக்கூடியவர்களாக மாறினர்.

அன்று மொழிப் போராட்டங்கள் மூலம் சிறை சென்ற அரசியல் கட்சியினர்தான் இன்று ஆளும் கட்சியினராகச் செயல்படுவதைக் காண்கிறோம்.

தமிழகத்தில் தனிநபர் விரோத அரசியல் தொடங்கிய பின்னரே ரவுடிகளை நோக்கி அரசியல் பதவிகள் தேடி வந்தன. அத்தகையவர்கள் லஞ்ச வழிவகைகள் மூலம் சிறைவாசத்தை சொகுசாக ஆக்கி கொண்டனர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அரசியல்வாதிகளிடமே பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்ற துணிவு சிறை நிர்வாகத்தில் முழுமையாக ஊழல் வியாபிக்க வழிவகுத்துவிட்டது. அதன் விளைவாகவே இன்று கூலிப்படையினரின் குருகுலங்களாய் சிறைகள் மாறிவிட்டன.

சிறையில் நடக்கும் சம்பவங்களை வெளிக்கொணர மனித உரிமை அமைப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சிறைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகளின் ஆய்வைக் கட்டாயப்படுத்த வேண்டும்.

மத்திய சிறைகளின் காவல்நிலையங்களில் உளவுப் பிரிவு அலுவலகங்களை அமைக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளை மட்டுமின்றி சிறைத்துறையினரையும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சிறைக்குள் எந்தப்பகுதியையும் எவரையும் காவல்துறையினர் திடீர் சோதனையிட அனுமதிக்க வேண்டும்.

கைதிகளுக்கு உணவு தயாரிப்பதில் (சிறைத்துறைக்குத் தொடர்பில்லாத வகையில்) உணவக (ஹோட்டல்) உரிமையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

சிறைக்குள் தேங்கிக் கிடக்கும் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

சிறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும். அத்துடன் தண்டனைக் கைதிகளின் சிறை மாற்றங்களுக்கு அவரது அனுமதியைக் கட்டாயமாக்க வேண்டும்.

கைதிகளின் சொந்த ஊர் பகுதி காவல்நிலையங்கள் வாயிலாக விடியோ கான்பரன்சிங் மூலம் உறவினர்கள் பேசுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

சிறைத்துறையில் காவலர் முதல் டி.ஐ.ஜி. வரை சீருடை விஷயத்தில் காவல்துறையினர் போன்று தோற்றமளிக்கின்றனர். இருவேறு அரசுத் துறைகளுக்கு எளிதில் வேறுபாடு காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான சீருடை தோற்றம் துஷ்பிரயோகங்களுக்குத்தான் வழிவகுக்கும். இது தவறான நடைமுறையாகும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது இரக்கத்தையும், இறுக்கத்தையும் சம அளவில் வெளிப்படுத்தும் வகையில் சிறைத்துறையினருக்கு தனி சீருடையை அறிமுகப்படுத்த வேண்டும்.

கைதிகளிடம் சட்டவிரோதமான பொருள்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிய நவீன அறிவியல் சாதனங்களை அனைத்து சிறைகளிலும் அமைக்க வேண்டும்.

விசாரணைக் கைதிகளின் நிலை தண்டனைக் கைதிகளின் நிலையைவிட கடுமையானதாக இருந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக எவரும் சிறை செல்ல நேரிடலாம். அவ்வாறு சிறைப்பட்டவர், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காகவே சிறையில் இருப்பதாகக் கருதப்பட வேண்டும். அவ்வகையில் விசாரணை சிறைவாசிகளுக்கு, அதுவும் முதன்முதலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு என சிறப்பு விதிகள் வகுக்கப்பட வேண்டும்.

சிறைக்குள் எது நடந்தாலும் அதற்கு சாட்சி ஆவணங்கள் இல்லை. சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக சிறைக்குள் சென்றால்… அங்கே நடந்தது நடந்ததுதான். யாரும் ஏன் என்று கேள்வி எழுப்ப வழியில்லை.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் சிறை விதிமுறைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. சிறைகள் என்றாலே ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.

சிறைக்கூடங்கள் அனைத்தும் அச்சம் அளிக்கக்கூடியதாகவும் பழிவாங்கும் ரகசியக் கூடங்களாகவும் இருக்க வேண்டியது ஆங்கிலேய அரசின் அடக்கு முறை ஆட்சிக்கு அவசியமாயிருந்தது.

ஆனால் மக்களாட்சியில் சிறைக்குள் என்ன நடக்கிறது என மக்களுக்குத் தெரிய வேண்டும். ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல வழிகள் மூலம் சிறை விஷயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இல்லையேல் தனிநபர் ஆகட்டும்! அரசியல்வாதிகளாகட்டும்! ஆளும் அரசுக்கு எதிரானவர்களா! எத்தகைய மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பினும் பிடித்து போடு சிறையில்… என்ற நிலையே ஏற்படும். மக்களாட்சியிலும் சர்வாதிகாரிகள் தோன்றத்தான் செய்வார்கள்.

எனவே கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு சிறை சீரமைப்பின் அவசியத்தை இன்றைய அரசுகள் கருத்தில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு சிறை சீர்திருத்தம் மிக அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: மனித உரிமை ஆர்வலர் மற்றும் முன்னாள் சிறைத்துறை காவலர்)

Posted in Arms, Attorney, CBI, Courts, Dada, dead, deaths, Delhi, Don, Encounter, guns, HC, Judges, Justice, Law, Lawyer, mafia, Mob, Order, Police, Ravi, SC, terror, Terrorism, Terrorists, Vellai, Weapons | Leave a Comment »

New Delhi hosts World Toilet Summit: India’s sanitation struggle

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது

உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சீனா, ரஷ்யா, இலங்கை, இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், புதுடெல்லியை மையமாகக் கொண்ட, சுலாப் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.

உலக அளவில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம், அதாவது 2.6 பில்லியன் மக்கள், கழிவறை வசதி இல்லாமல், திறந்த வெளிகளிலும் சுகாதாரமற்ற இடங்களிலும் தங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் மட்டும் 700 மில்லியன் மக்கள் முறையான கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ போதிய கழிவறை வசதி உள்ள நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் சுகாதாரமான கழிவறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளன. ஆனால், வளரும் நாடுகளில் அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தருவதற்கு போதிய தொழில்நுட்பமும், நிதி ஆதாரமும் பெரும் பிரச்சினையாக உள்ளது.

Posted in Bathrooms, Clean, Conf, Conference, Crap, Dalit, Delhi, Disease, Disposal, Hygiene, hygienic, India, Infections, Ladies, Morning, Oppressed, Pay, Railway, Railways, Restrooms, sanitation, Scarcity, She, Shit, Shulab, Shulabh, squat, struggle, Sulab, Sulabh, Sulabh International, Summit, Toilet, Trains, Urine, Use, Water, Women | Leave a Comment »

Institutions averse to parting with information under RTI: Report

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை

‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.

தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.

இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.

தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.

கட்டணம் உயர்வு?

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.

மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Project report on Chennai Metro soon

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2007

சென்னையில் மெட்ரோ ரயில்: ரூ. 9,757 கோடி திட்டம்

சென்னை, நவ. 7: சென்னையில் ரூ. 9,757 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக அமைச்சரவையின் 23-வது கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. அதில் முக்கியமாக மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுமக்களின் விருப்பத்தின் பேரிலும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் பெரம்பலூரை இரண்டாகப் பிரித்து புதிய அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அரியலூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை வட்டங்களை உள்ளடக்கியதாகவும், பெரம்பலூர் மாவட்டம் தற்போதைய தலைமையிடத்துடன் பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களைக் கொண்டதாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த கொள்கை அளவில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தில்லி மெட்ரோ ரயில் கழகம் வழங்கியுள்ள விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் இது இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளதாய் இருக்கும்.

முதலாவதாக வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், தேனாம்பேட்டை வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும், இரண்டாவது வழித்தடம் கோட்டை முதல் அண்ணா நகர், வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரையிலும் அமைக்கப்படும். இவ்விரு வழித்தடங்களில் மொத்தம் உள்ள 46.5 கி.மீ. நீளத்தில் ஏறத்தாழ 20 கி.மீ. நீள தூரம் தரைப்பகுதிக்குக் கீழும், எஞ்சிய தூரம் தரைப் பகுதிக்கு மேலெழும்பியும் அமையும்.

மத்திய அரசின் நிதியுதவி மற்றும் கடனுதவி மூலம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டின் சர்வதேச வங்கி நிதியுதவி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் நிதி முதலீட்டுடன் தொடங்கப்படும் “சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்’ எனும் பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

குழு நியமனம்: சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தலைமைச் செயலாளரின் தலைமையில் தொழில்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக் குழு அளிக்கும் வரைவுக் கொள்கையை முதல்வர் நியமிக்கும் துணைக் குழு விவாதித்து அளிக்கும் பரிந்துரைகளுடன் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளை திறக்க முயற்சி: மதுராந்தகத்தை அடுத்த படாளத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பாண்டியராஜபுரத்தில் உள்ள மதுரா சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஆலைகளும் தனியாரின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும். அதற்காக வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மின் உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலைய விரிவாக்கம்: சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கும் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1070 ஏக்கர் நிலப்பகுதியை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்துக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

——————————————————————————————————————————————————-
2 தடங்களில் அமைக்கப்படவுள்ள
சென்னை `மெட்ரோ ரெயில்’ திட்ட அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல்
டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தகவல்

சென்னை, செப்.11-

ரூ.11 ஆயிரம் கோடியிலான சென்னை `மெட்ரோ ரெயில்’ திட்ட ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு தரைக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் திட்டத்தை இங்கு அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இத்திட்டம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டம் இந்தியாவில் டெல்லியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு இந்த பாதாள ரெயில் திட்டத்தினை டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டி.ஆம்.ஆர்.சி.), வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

விரிவான அறிக்கை தாமதம்

இதைத் தொடர்ந்து, சென்னையிலும் இத்திட்டத்தினை அமல்படுத்த சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான, மண் ஆய்வுப் பணியினை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டி.எம்.ஆர்.சி. மேற்கொண்டது. அப்போது சில இடங்களில் பாதாள ரெயில் திட்டம் அமைப்பதற்கேற்ற மண் வளம் இல்லை என்பதை கண்டறிந்தது.

இதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. அதன்பின்னர், இத்திட்டம் தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை தயார் செய்து தரும் பொறுப்பினை டி.எம்.ஆர்.சி.யிடம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டு காலமாக இது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மாத இறுதியில் அந்த அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டு வருகிறது.

டெல்லி பாதாள ரெயிலில் `நேரு’

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சில் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் தலைவர் என்ற முறையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். அதன்பிறகு, டெல்லி நகரில் ஓடும் பாதாள ரெயிலில் (மெட்ரோ ரெயில்) அவர் பயணம் செய்தார். அத்திட்டம் மிகவும் அற்புதமானது என்றும், அரசுக்கு லாபம் தரும் வகையில் சிறப்பாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார் என்று டி.ஆம்.ஆர்.சி. நேற்று தெரிவித்துள்ளது.

வண்ணாரப்பேட்டை-விமான நிலையம்

மெட்ரோ ரெயில் திட்டத்தின்படி சென்னையில் 2 தடங்களில் பாதாள ரெயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்னை துறைமுகத்தில் இருந்து பரங்கிமலை வரை மற்றொரு பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக 2 இருப்புப்பாதைகள் மொத்தம் 46 கிலோ மீட்டர் தூரத்துக்குஅமைக்கப்படுகிறது. இதில், 14.25 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் தரைக்கு அடியிலும், மீதமுள்ள 31.75 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் அந்தரத்திலும் (மேம்பாலத்தில்) செல்லும். இத்திட்டத்துக்காக ரூ.11 ஆயிரம் கோடி செலவாகும் என்று டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப் போவதாகவும், அதன் பின்னர் அத்திட்டத்தை செயல்படுத்துவது முழுக்க முழுக்க தமிழக அரசின் கையில் உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

————————————————————————————————–
சாலை சந்திப்பு திடல்களில் பண்பாட்டுக் கலாசார சிற்பங்கள்

சென்னை, செப். 25: சென் னையில் உள்ள சாலை சந்திப்பு திடல்களில் தமிழர் பண் பாடு, கலாச் சாரத்தைக் குறிக்கும் வகையில் சிற்பங்கள் அமைக் கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித் தார்.

இது தொடர்பாக சென் னையில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட் சிக் கூட்டத்தில் மேயர் பேசி யது: சென்னையில் 471 பூங் காக்களை மாநகராட்சி பரா மரித்து வருகிறது. இந்தப் பூங்காக்களை மேம்படுத்த வும், புதிய பூங்காக்கள் அமைக்கவும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஸ்டாலின் ரூ.22 லட்சம் மதிப்பிலான பூங்காவை வள்ளுவர் கோட் டம் எதிரில் திறந்து வைத் துள்ளார். திரு.வி.க. பூங்கா ரூ.64 லட்சத்திலும், அண் ணாநகர் டவர் பூங்கா ரூ.3.05 கோடியிலும், மற்றும் நடே சன் பூங்கா உள்ளிட்ட பூங் காக்கள் எழிலூட்டும் பணி கள் நடைபெற்று வருகின் றன.

காந்தி, ஜீவா, காமராஜர், அண்ணா, பெரியார், கலை ஞர் பெயரில் உள்ள பல் வேறு தலைவர்களின் பெயர் களில் உள்ள பூங்காக்களின் முன்பு அந்தத் தலைவர்க ளின் வாழ்க்கை வரலாற்று டன் உருவம் பதிந்த கல் வெட்டு அமைக்கப்பட உள் ளது. அந்தக் கல்வெட்டுக் களை அத்தலைவர்களின் வாரிசுதாரர்கள் மூலம் மிக விரைவில் திறந்து வைக்க நட வடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னையில் சாலை சந் திப்பு திடல்களில் தமிழர் பண்பாடு, கலாசாரம் குறிக் கும் வகையில் சிற்பங்களை அமைப்பதற்கான வடிவங் கள் 56 சிற்பிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சிற்பங் கள் அமைப்பது தொடர் பான கருத்துக்களை அனைத்துக் கட்சி தலைவர்க ளும் எழுத்துப் பூர்வமாக 4 நாட்களுக்குள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றது. வடிவமைப்பு தேர்ந்தெ டுக்கப்பட்ட பின்பு தொழில் நுட்பக்குழு தேர்வு செய்து இறுதி வடிவம் மற்றும் மதிப்பு நிர்ணயிக்கப்படும் என்றார். இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, மன்ற ஆளுங்கட்சித்தலைவர் ந.ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ப.ரவி மற் றும் மன்றத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களும் பங் கேற்றனர்.

Posted in Airport, Auto, Bus, car, Chennai, Commute, Commuter, Delhi, Fort, Govt, Home, Madras, Meenambakkam, Metro, Mode, Nehru, Office, Parangimalai, Parankimalai, Port, Project, Rail, Rails, Raliways, Report, School, St. Thomas Mount, Tamil Nadu, TamilNadu, Tariff, Thrisoolam, Thrisulam, Train, Trains, Transport, Transportation, Traveler, Trisoolam, Trisulam, Vannarapet, Vannarapettai, Vannarpet, Washermenpet, Work | Leave a Comment »

P Sainath: The Voice from the Hinterland – Magsaysay award winner

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

P sainath the hindu award faces people magasaysay prizeஜர்னலிஸம் துறையில் நுழையும் இளைஞர்களின் கனவுகள் வண்ணமயமாக இருக்கின்றன. தொலைக் காட்சித் தொகுப்பாளர், எ·ப்.எம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று ஒளி-ஒலியில் மின்ன ஆசை. அங்கிருந்து ஓர் எட்டு எட்டி பெரிய திரைக்கு மாறும் ஆசை. ப்ரின்ட் மீடியா என்றால் அச்சில் பெயர் பளிச்சிட பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதும் ஆசை. அந்தச் சந்திப்பு கள் மூலம் சமூக அந்தஸ்தையும் செல் வாக்கையும் வளர்த்துக்கொள்ளும் ஆவல்… என்று பல்வேறு கிளைக் கனவுகளுடன் வரும் இளைஞர்கள், பத்திரிகைத் துறையானது ஜனநாய கத்தின் நான்காவது தூண் என்கிற பிரதான நோக்கத்தைத் தவறவிடுகின்ற னர். நீண்ட நெடுங்காலமாக இந்தத் துறையில் இயங்கிவரும் நிறுவனங்கள் கூட ஜனநாயகப் பொறுப்பைக் கிளை நோக்கமாக்கிவிட்டுக் கேளிக்கை யையே முக்கியமாக ஏற்றுவிட்டன. இதன் விளைவாக மீடியா என்றாலே பரபரப்புப் பத்திரிகை இயல் என்பதாக ஓர் அர்த்தம் (அனர்த்தம்?) கற்பிக்கப் பட்டுவிட்டது.

இத்தகைய சூழலில் பி.சாய்நாத், மாக்ஸாய்ஸாய் விருது பெற்றிருக்கிறார். பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புவோருக்கும் நுழைந்துவிட்ட வர்களுக்கும் ஒரு த்ருவ நட்சத்திரம் இதன் மூலம் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறது.

முதல் பக்கச் செய்தியாக என்றும் இடம்பெறாது என்று தெரிந்தும்…

பரபரப்பான போஸ்டர் செய்தி யாகி விற்பனையைக் கூட்டாது என்று தெரிந்தும்…

அசௌகரியமான சூழலில் செய்தி சேகரிக்க நாள் கணக்கில் உழைக்க வேண்டும் என்று தெரிந்தும்…

எழுதும் விஷயத்துக்கு அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளும் வந்து குவியாது என்பது தெரிந்தும்…

தோலுரித்துக் காட்டப்படும் அவலங் களும் பரிதாபங்களும் பெரிய அளவில் விரைந்து மாறிவிடமாட்டா என்பது நன்றாகவே தெரிந்தும்…

யாரைப் பற்றி எழுதுகிறோமோ, அவர் கள் நம் எழுத்தைப் படிக்கக்கூட போவதில்லை என்று தெரிந்தும்…

இந்திய கிராம மக்களின் கஷ்டங் களையும் போராட்டங்களையும் சளைக் காமல் பதிவு செய்து வந்திருக்கிறார் பி.சாய் நாத். ‘இதழியல் தவம்’ என்று அவரது பணியை அழைப்பது நிச்சயமாக மிகை யில்லை.

அவரது அர்ப்பணிப்புக்குக் கிடைத் துள்ள அங்கீகாரம்தான் மாக்ஸாய்ஸாய் விருது. விருதுப் பணம் மொத்தமும் கிராம மக்கள் குறித்து ஆய்ந்து எழுதவே பயனாகும் என்று தெரிவித்ததுடன், தாம் பணியாற்றும் தி ஹிந்து நாளிதழுக்கும் அந்த விருது உரியது என்று சொல்லியிருக் கிறார் பி.சாய்நாத்.

விருதுக்கு வாழ்த்து; பெருந்தன்மைக்கு வணக்கம்!


P Sainath: The Voice from the Hinterland
Ajith Vijay Kumar
The 2007 Ramon Magsaysay Award winner, Palagummi Sainath (born 1957) is one of Asia`s leading developmental studies journalist with numerous writings on issues such as poverty and effects of industrialisation in India. In the words of Nobel Laureate Amartya Sen “He is one of the world`s greatest experts on famine and hunger”.

Through his substantial work on the livelihoods and poverty of India`s rural poor, Sainath has been playing a crucial role in changing the nature of the development debate not just in India but also across the world.

He is known to spend as much as 300 days a year in the rural interior and had been doing so for the past 14 years. Currently he is the Rural Affairs Editor and Mumbai Chief of Bureau of The Hindu.

Sainath was born into a distinguished family of freedom fighters in Andhra Pradesh in the year 1957 with the illustrious former President of India V V Giri as his grandfather.

Education and Career

Early education was at the Loyola College in Chennai. His inclination towards social problems and commitment to a political perception on poverty began while he was a student at the Jawaharlal Nehru University, Delhi. After receiving a Master`s degree in history, he began his career as a journalist with the United News of India in 1980. His talent surfaced soon as he received the news agency`s highest individual award within a very short span of time.

After a successful stint with UNI, Sainath joined The Blitz, then a prominent tabloid published from Mumbai as foreign affairs editor and then as deputy editor, a position he held for ten years.

It was during this period Sainath got the opportunity to tour nine drought-stricken states in India; these travels radically changed his approach towards his work and journalism.

“That`s when I learned that conventional journalism was all about the service of power. You always give the last word to authority. I got a couple of prizes, which I didn`t pick up because I was ashamed,” said Sainath.

The year 1991 was the turning point in India’s economic fortunes as Dr Manmohan Singh launched economic reforms and that was also the very year Sainath started to emerge as a developmental journalist. Sainath felt that media`s attention was moving from “news” to “entertainment” and that the urban elite was getting prominence in the newspapers at the cost of news on the grim situation in rural India especially poverty.

“I felt that if the Indian press was covering the top 5 per cent, I should cover the bottom 5 per cent”, says Sainath.

All this internal turmoil made him quit Blitz in 1993 and applied for the Times of India fellowship. After bagging the fellowship, he took to the un-trodden path, the back roads to the ten poorest districts in five states. Covering close to 100,000 km across India, walking 5,000 km on foot, he reached the poorest of poor and reported about their plight. The Times of India published 84 reports by Sainath, many of them subsequently reprinted in his book, “Everybody Loves A Good Drought”. This best selling, widely acclaimed book, published in 1997 helped focus public attention on the condition of India`s rural poor and in turn helped increasing public awareness and support.

Sainath discovered that the acute despair prevalent in India`s poorest districts was not due to drought, as the government claimed. He strongly believed that it was rooted in India`s enduring structural inequalities like poverty, illiteracy, and caste discrimination.

He focused on the shocking rise in suicides among India`s debt-ridden farmers, revealing that in just six highly effected districts in 2006, the number of suicides had soared to over a thousand, with the government guilty of grossly underestimating the numbers.

His relentless pursuit of news from the rural hinterland provoked immense response including the revamping of the Drought Management programmes in the southern state of Tamil Nadu, and also on Area Development programme for tribal people in Madhya Pradesh.

In the last decade, he has extensively reported on the agrarian crises caused due to the neo-liberal policies like globalization, privatisation and related government policies. He has also shed light on the lack of sensitivity and inefficiency shown by successive governments and the bureaucracy controlled by them.

The shocking revelation about India boasting about being a grain surplus country even when 250 million Indians are suffering from endemic hunger is credited to the journalistic pursuits of Sainath.

According to his outlook the shift from truth-seeking journalism to bland, promotional content has gone hand in hand with the increase of globalization.

Owing to his extensive reporting on poverty and rural developmental issues and its positive effect on the developmental parameters, many other newspapers were forced to initiate columns on poverty and rural development.

He is currently working on a project on the impending nationwide agrarian crisis, particularly in regions like Vidarbha, AP and Orissa, where its effects are most severely felt. He has to his credit over 100 reports on the subject.

Awards and Recognition

Over the years Sainath has won over 30 national and international awards and fellowships as a journalist.

The prominent amongst them being:

# European Commission`s Natali Prize in 1994.

# Amnesty International global award for meritorious human rights journalism in 2000.

# The Boerma Journalism Prize from the UN FAO in 2001; the most important award in development journalism. .
# The prestigious, B. D. Goenka award for excellence in journalism for the year 2000.

# Judges` prize (newspaper category) Harry Chapin Media Awards

Apart from these he is also a Distinguished International Scholar at the University of Western Ontario. He has also participated in many international initiatives on communications sponsored by the UNESCO and in the UNHCR sponsored World Information Campaign on Human Rights.

And as a tribute to his courageous endeavors in Journalism, immense contribution to literature and creative communication arts, P Sainath has been awarded the Ramon Magsaysay 2007.

Posted in Award, Biography, Biosketch, Blitz, Chennai, Chief of Bureau, Delhi, Desk, Drought, Editor, Faces, Famine, Food, Giri, Hindu, History, Hunger, industrialisation, JNU, Journal, journalism, journalist, Loyola, Madras, Mag, magasaysay, magazine, magsaysay, Manmohan, Media, MSM, Needy, News, Newspaper, P sainath, Palagummi, Palagummi Sainath, Paper, people, Poor, Poverty, President, Prez, Prize, Ramon Magsaysay, Report, Reporter, Rich, sainath, Society, tabloid, The Hindu, UNI, V V Giri, VV Giri, Water, Wealthy, Zine | Leave a Comment »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

State of the Justice System in India (BMW case: NDTV exposes prosecution-defence nexus)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வழக்கறிஞர்களுக்கு “தண்டனையே’ கிடையாதா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

ஒரு சாலை விபத்து (பி.எம்.டபிள்யூ.) வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், எதிரியின் வழக்கறிஞரும் சேர்ந்து சாட்சியத்தைக் குலைப்பது பற்றி பேசிக்கொண்டதை என்.டி.டி.வி. சில வாரங்களுக்குமுன் அம்பலப்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சாலை விபத்து பற்றியது. கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் குடிபோதையில் காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலரைக்கொன்றது பற்றியது அந்த வழக்கு. அவர் ஓட்டிய கார் பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டுக் கார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி குல்கர்னி என்பவர். அரசுத் தரப்பு ஏதோ காரணத்துக்காக அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றவே இல்லை!

எதிரியின் வழக்கறிஞர் (பிரபலமான வழக்கறிஞர், காங்கிரஸ்காரரும் கூட), அரசுத் தரப்பு வழக்கறிஞர் (இவரும் பிரபலமான வழக்கறிஞர்தான். ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே போதும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவேன் என்று தானாக முன்வந்தவர்) இருவரும், முக்கிய சாட்சியுடன் ஏதோ அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததை என்.டி.டி.வி.யின் ரகசிய கேமரா படம் பிடித்துக் காட்டியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், சாட்சியாக இருப்பவருக்கு “”புளூ லேபிள்” ஸ்காட்ச் விஸ்கியைக் காட்டி, குடிக்கிறீர்களா என்று கேலியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதிரியின் வழக்கறிஞரோ, அந்த சாட்சியை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகள் பல வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. வழக்கறிஞர்கள், பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவை உணர்த்தின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லி பார் கவுன்சில் தலைவர் மனான் அறிவித்தார். அதெல்லாம் நடக்காது, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை இருக்காது, எல்லாவற்றையும் பூசி மெழுகிவிடுவார்கள் என்று அதே நிகழ்ச்சியில் நான் முடிவுரையாகத் தெரிவித்தேன். அந்த இருவரையும் சில நாள்களுக்கு மட்டும் “சஸ்பெண்ட்’ செய்து, மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதித்துவிட்டனர்.

அந்த வழக்கின் முழு விவரமும் என்னிடம் கிடையாது – இரு வழக்கறிஞர்களும் அவர்களுடைய பதவிக்குப் பொருந்தாத எதையும் செய்தார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வரக்கூடும். இப்போது நம்முடைய கவலை இந்த வழக்கு எப்படிப் போகிறது என்பதல்ல.

நம் நாட்டில் எந்தத் தொழில் செய்கிறவர் ஆனாலும் அவர் மக்களால் அலசப்படுகிறார். அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள் என்று அனைத்து தரப்பாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதே போல வழக்கறிஞர்கள் சமூகத்தை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. வழக்கறிஞர்களின் குணாதிசயங்கள், தொழில்நடத்தும் விதம், பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவை குறித்து ஊடகங்களும், பொதுவிஷயங்களில் அக்கறை உள்ள அமைப்புகளும் வெகு நெருக்கத்திலிருந்து ஆராய வேண்டும்; அந்த ஆய்வு முடிவை மக்கள் அறிய வெளியிட வேண்டும்.

என்னுடைய இளவயதில் மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்டுகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் வழக்கறிஞர்கள் பற்றிச் சொன்னதன்மூலம் பல விஷயங்கள் தெரிந்தன. வட இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வீடு, நிலம் தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. ராணுவத்திலோ, நகரில் கிடைக்கும் சிறு வேலைகளிலோ கிடைத்த சொற்ப வருவாயை மக்கள் இந்த வழக்குகளுக்காகச் செலவிட்டனர். அதாவது அவை வழக்கறிஞர்களின் பைகளை நிரப்பின.

சாதாரண வழக்குகூட ஆண்டுக்கணக்கில் நீடித்தன, அல்லது நீட்டிக்கப்பட்டன. சில வழக்குகளில் வாதி, பிரதிவாதியின் மறைவுக்குப் பிறகு கூட வழக்குகள் பைசலாகாமல் நீடித்தன. உள்ளூர் போலீஸôர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இவற்றில் பங்கு இருந்தது. நம் ஜனநாயகத்தில் எல்லா துறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள சாபக்கேடு இதற்கும் வந்து சேர்ந்தது, அதாவது பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன.

வழக்குகளில் வாய்தா வாங்குவதிலேயே திறமைசாலியான ஒரு வழக்கறிஞர் குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிபதியே சுட்டிக்காட்டினாராம்; அதையே அவர் தனக்கு அளித்த சான்றிதழாகக் கருதி பிற வழக்கு விசாரணையின்போதும் குறிப்பிட்டு வாய்தா வாங்கிவிடுவாராம். இதை அந்த தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய தில்லி பார் கவுன்சில் தலைவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டு நீதிமுறை குறித்து எழுதிய புத்தகத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வழக்கில் சம்பந்தப்படும் ஏழைகளுக்குத் தரப்படுவதில்லை.

தில்லி தந்தூர் வழக்கில், முக்கிய எதிரிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியபோது மக்களிடம் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கொலை நடந்து 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரே சாட்சி ஒரு போலீஸ்காரர்தான். அவருக்கு சம்பளம்கூட அதிகம் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியிருக்க முடியும், அல்லது தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் நீதிக்காக நிலைகுலையாமல் நின்ற அந்த ஒரே சாட்சி காரணமாகத்தான் எதிரிக்கு தண்டனை விதிக்க முடிந்தது. இதில் கேள்வி என்னவென்றால், எப்படி ஒரு சாதாரணமான வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்பதுதான்.

அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் மீது பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அரிசோனா மாநிலத்தில் இந்திய சீக்கியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை நடந்து முடிந்து தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. நம் நாட்டிலும் இப்படி ஏன் விரைந்து வழக்குகளை முடிக்கக் கூடாது? கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? மூத்த அரசியல்வாதி அல்லது அதிகாரி என்றால் அவர் மீதான லஞ்ச, ஊழல் வழக்கையும் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதை ஏற்பீர்களா?

வழக்கறிஞர்களை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை என்ற எண்ணமே சில வேளைகளில் தோன்றுகிறது. பார் அசோசியேஷன் என்பது வழக்கறிஞர்களுடன் தோழமை உள்ள அமைப்பு. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் பணி சட்டத்துடன் தொடர்புள்ளது. அது வழக்கறிஞர்களின் வேலையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர எப்போதாவது முயற்சி செய்துள்ளதா? வழக்கறிஞர்களைக் கண்காணிப்பதை நீதிமன்றங்கள் செய்ய முடியும், ஆனால் அவையும் அப்படி எதையும் செய்வதில்லை.

1960கள் வரை நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தனித்தனியே பிரிக்கப்படவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் வழக்குகளைக் கண்காணித்து வந்தது. எத்தனை வழக்குகள் தாக்கலாகின, எத்தனை விசாரிக்கப்பட்டன, எத்தனையில் இறுதித் தீர்ப்பு வந்தது என்று தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டவுடன் நிர்வாகம், கண்காணிப்பு வேலையை விட்டுவிட்டது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் நீதித்துறையின் கீழ் நிலையில் ஊழல் இருக்கிறது, இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி என்று தெரிவித்தது.

வழக்கறிஞர் தொழிலில் என்ன நடக்கிறது என்று அக்கறை காட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது வழக்கறிஞர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. சூரிய வெளிச்சம் எங்கு பாயவில்லையோ அங்கு பாச்சைகளும் கரப்பான்களும் பெருகி வளர்கின்றன. சூரிய ஒளி பட்டால் இவையெல்லாம் விலகி அங்கே தூய்மை நிலவும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

——————————————————————————————–

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்

உ .ரா. வரதராசன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தெரிவித்துள்ள கருத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

“”தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நீதிபதிகளை வசைபாடுவது, சிலரது பொழுதுபோக்காக உள்ளது. இத்தகைய அறிக்கைகள் நீதிமன்றங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, அவற்றின் எதிர்காலத்தை மதிப்பிழக்கச் செய்ய முற்படுகின்றன; இவற்றை அனுமதிக்கவே முடியாது”, என்று கூறி, சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பைச் செய்த நபருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையை அந்த நீதிபதிகள் வழங்கினர். அதே தீர்ப்பில், கண்ணியமான வார்த்தைகளில் ஒரு நீதிமன்றத்தின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் தெளிவுபடச் சொல்லப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, நாளிதழ்களில் வெளியான அதே நாளில், உலக ஊழல் அறிக்கை – 2007 என்ற ஓர் ஆவணத்தை இணையதளத்தில் காண நேரிட்டது. சர்வதேச ஊடுநோக்கி ( பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ஸ்ரீஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்) என்ற அமைப்பின் அறிக்கை நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றியது.

உலகில் இன்று நிலவும் ஊழலின் பரிமாணம் மலைக்க வைப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஊழலில் கசிந்து விரயமாகும் நிதியைக் கணக்கிட்டால் அது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் கோடி டாலர்கள் என்ற வரம்பைத் தாண்டுகிறது என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, நீதி ஆகிய அனைத்துத் துறைகளையும் இந்த ஊழல் கரையான் செல்லரித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை கசப்பானதும் கவலைக்குரியதுமாகும்.

இதில் நீதித்துறையில் ஊழல் என்பது, மற்ற அனைத்துத் துறைகளையும்விட அபாயகரமானது. மற்ற துறைகளில் நிலவும் ஊழலால் பாதிக்கப்படுகிற எவரும், அவற்றுக்கு எதிராக நீதித்துறையின் தலையீட்டையே நாடுவது இயல்பானது. ஆனால், பரிகாரம் தேடிப் போகும் நீதி தேவதையின் சன்னிதானமே ஊழல் கறை படிந்து காணுமானால், வேறு புகலிடம் ஏது?

ஒருவர் தமக்களிக்கப்படும் அதிகாரத்தைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஊழலேயாகும். அந்த ஆதாயங்கள் பணமாகவோ, பொருளாகவோ, வேறுவகைப்பட்டதாகவோ இருக்கலாம். நீதித்துறை ஊழல் என்பது நீதி பரிபாலன முறைமைக்கு உள்ளிட்டு செயல்படும் எவரும், அதன் பாரபட்சமற்ற செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் செல்வாக்கு செலுத்துவதன் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதே! இதை அளவிட்டு அறிவதற்காக 62 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளே இந்த உலக ஊழல் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நீதித்துறையில் ஊழல் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, நீதித்துறையின் செயல்பாட்டில் அரசியல் தலையீடுகளால் நிகழ்வது; மற்றது, நீதித்துறையின் பல மட்டங்களில் புகுந்துவிடும் லஞ்ச லாவண்யம் காரணமாக நடைபெறுவது. நீதித்துறையை அணுகும்போது, நியாயமான பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெறுகிற அடிப்படை மனித உரிமையை இந்த இருவகை ஊழலும் மறுக்கிறது. எந்த ஒரு நாட்டிலும் நீதித்துறையில் ஊழல் மலிந்தால், அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாததாகி விடும். “”ஊழலா, அது எங்கள் நாட்டில் வாடிக்கையாகிப் போய்விட்ட விவகாரம்” என்று மக்கள் சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.

தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லையானால், அங்கே நீதித்துறையில் நாணல்போல் வளைந்து, ஊழலுக்கு இடமளிக்கும் நீதிபதிகள் இடம்பெறுவது இயல்பாகிவிடும்.

நீதிபதிகளுக்கான சம்பளம், ஊதிய நிலைமைகள், பாதுகாப்பற்ற சூழல், இடமாற்றல் அச்சுறுத்தல் போன்றவையும் நீதிபதிகளையும் நீதிமன்ற அலுவலர்களையும் ஊழல் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.

தவறிழைக்கும் நீதிபதிகளைத் தண்டனைக்கு உட்படுத்தவோ, பதவிநீக்கம் செய்யவோ உரிய ஏற்பாடுகள் இல்லையென்றாலும், நீதித்துறை ஊழலுக்கு உறைவிடமாகி விடும்; நேர்மையாகச் செயல்படும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் விருப்பம்போல் பந்தாடும் சூழலும் அதே நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிவு மறைவு அற்றதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற ஏற்பாட்டுக்கு இடமில்லாமலும் அமையும் நிலை, நீதித்துறையை ஊழல் அரிப்பதற்கு வாய்ப்பாகி விடும்.

இந்த நான்கு அம்சங்களிலும், நீதித்துறையில் ஊழல் பரவாமல் தடுக்க, பல்வேறு பரிந்துரைகளை உலக ஊழல் அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நீதித்துறை ஊழல் பற்றிய ஓர் ஆய்வும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் வெளிவந்த சில விவரங்களை இந்த அறிக்கை தொகுத்தளிக்கிறது.

“நீதித்துறை ஊழலின்றி செயல்படுகிறதா?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்று பதிலளித்தவர்கள் 85 சதவிகிதம் பேர்! நீதித்துறை ஊழல் காரணமாகக் கைமாறும் தொகை ஆண்டுக்கு ரூ. 2,360 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீதித்துறை ஊழலுக்குப் பிரதான காரணங்களாக அமைவது, வழக்கு விசாரணையில் நேரிடும் காலதாமதம், நீதிபதிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளேயாகும்.

2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகள்; உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகள்; நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து – “”இனி புதிதாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் பிடிக்கும்” என்பதாகும்!

இந்த நிலைமையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதற்கான குறுக்கு வழியாக ஊழல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவில் சராசரியாக பத்து லட்சம் நபர்களுக்கு 12 அல்லது 13 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையிலேயே, நீதித்துறை நியமனங்கள் உள்ளன. இதே பத்து லட்சம் நபர்களுக்கு, அமெரிக்காவில் 107 நீதிபதிகள்; கனடாவில் 75; பிரிட்டனில் 51 என்ற அளவில் உள்ளனர். இதனால் தீர்ப்புகள் தாமதமடைகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“தாமதித்து வழங்கிடும் நீதி, மறுக்கப்படும் நீதி’. ஆனால், சட்டத்தை மீறுகிறவர்களுக்கும், குற்றங்களைத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கும், வழக்குகளின் தாமதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது! நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான்! 2002ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உருவான இந்தக் கோட்பாடுகள்தான், பின்னர் 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கோட்பாடுகள் நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டுமே.

இதுமட்டுமல்ல, நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான குழு அறிக்கைக்கும், நீண்ட நெடிய விவாதங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அறிகுறியே தென்படவில்லை!

நீதிமன்ற அவமதிப்பு அனுமதிக்கப்பட முடியாததுதான்; ஆனால், நீதித்துறையின் மதிப்பை உயர்த்துவது எப்படி, எப்போது?

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

————————————————————————————————–

நீதிதேவன் மயக்கம்
Dinamani – Op-ed (September 05 2007)

“”மக்களுக்கு நீதித்துறையின் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதித்துறை மீதான நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு நீதிபதிகள் மீதும் நீதித்துறையின் மீதும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வழக்குகள் அதிக காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்”~இப்படி சொல்லியிருப்பது அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ, பத்திரிகையாளரோ அல்ல; நீதிபதிகள்.

வித்தியாசமான, அதேசமயம் மக்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நிகர் அவர்தான். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு வழங்குபவர் என்கிற பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. 1957ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மாத்தூரின் முன் விவாதத்துக்கு வந்தபோதுதான் மேற்கண்ட கருத்தை அவர்கள் தெரிவித்தனர்.

அரை நூற்றாண்டு காலம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பது என்பது, நமக்கே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சுமார் 30 லட்சம் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இரண்டரைக் கோடிக்கும் அதிகமான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்திலும் சரி, நிலைமையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சுமார் 39,780 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2006-ம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4,06,958. கடந்த ஆண்டு கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இது. தமிழக விசாரணை நீதிமன்றங்களில் சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில் இருப்பதாகவும், இவற்றில் 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குற்றவாளிகள் பலர் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வராமல் வழக்கைத் தள்ளிப்போட்டுத் தப்பிக்க முயல்வது சகஜமாகிவிட்டது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மரணம்வரை தீர்ப்பு வழங்கப்படாமல் தப்பித்த சரித்திரங்கள் ஏராளம். இதனால், நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

அதேபோல, நிரபராதிகள் விடுவிக்கப்படாமல், அடிக்கடி நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும்போது அது தர்மத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான செயல்பாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் அவலநிலைக்கு நிகரானதுதான் இதுபோன்ற அலைக்கழிப்பு. நிரபராதி, தீர்ப்பு வழங்கப்படாமல் குற்றவாளி என்கிற களங்கத்துடன் காலவரையறையின்றித் தொடர்வது என்பது நீதிதேவனுக்கே அவமானம்.

உடனடி நீதி கிடைக்குமேயானால், லஞ்சமும் ஊழலும்கூடப் பெரிய அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவன் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், காலதாமதமின்றி அதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசீலித்துத் தீர்ப்பளிக்குமேயானால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பயமும் பொறுப்புணர்வும் ஏற்படும்.

தாமதமாகக் கிடைக்கும் நீதி என்பது கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்கிற கதையைப் போன்றதுதான். பொதுமக்களை மட்டும் வருத்திக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை இப்போது நீதிபதிகளையும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது என்பது ஆறுதலைத் தருகிறது. நீதிதேவன், மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!

——————————————————————————————————————–
நாட்டின் தேவை 5 ஆயிரம் புதிய கோர்ட் : தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை : “நாடு முழுவதும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை துவக்கினால் தான் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்’ என்று இந்திய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஜுடிசியல் அகடமி நடத்திய, “உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

தலைமை நீதிபதிபேசியதாவது :

நீதிபதிகள் தங்களுக்கு முன்பாக எந்த மாதிரியான வழக்குகள் வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்காமல், அது போன்றவற்றில் நீதிபதிகளே ஆர்வம் எடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். மிகச் சாதாரணமான வழக்குகளை விரைவாக தீர்த்து விட வேண்டும்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில நீதிபதிகள் மிகவும் மதிக்கப்படுவதோடு, தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர். சமுதாயத்துடன் நாம் செல்ல வேண்டும். வழக்கு தொடருபவர் நேரடியாக நம்மிடம் வருகிறார். அவர்களது பிரச்னையை நாம் அணுக வேண்டும். எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்த்து வைக்கிறோமோ, அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியடைவர். வழக்கு

மூலம் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அவர்கள் மகிழ்வர். எனவே, பிரச்னைகளை அறியும் கலையை நாம் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகளால் நீதிபதிகள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறவும், அனுபவங்களை பற்றி பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கு தெரியாமலேயே இதனால் நாம் பயனடைகிறோம்.

தமிழக அரசு 72 புதிய கோர்ட்டுகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநில அரசுகளிடம் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில முதல்வர்கள் உறுதியளிப்பர், ஆனால், விரைவில் நடைமுறைக்கு வராது.

புதிய கோர்ட்கள் :

வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் புதிய கோர்ட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இந்தியாவில் 14 ஆயிரத்து 600 கோர்ட்டுகள் உள்ளன. மேலும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை நாடு முழுவதும் அமைத்தால் தான், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் வழக்குகள் குவிந்து கொண்டு தான் இருக்கும். மக்கள், நீதிபதிகள் மீது தான் குற்றம் சாட்டுவர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
மாதத்துக்கு நுõறு வழக்குகள் நீதிபதிகள் உத்தரவாதம் : சென்னை:

“மாதத்துக்கு நுõறு வழக்குகளை முடிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்’ என்று, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.

நீதிபதிகளுக்கான பயிற்சி கருத்தரங்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது: நீதிபதிகளுக்கான கற்பித்தல் பணிமனைகளை மாவட்ட வாரியாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறு விவகாரங்களுக்கான நீதிபதிகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதிகளிடம், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சராசரியாக எடுக்கப்படும் கால அளவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. எவ்வாறு இவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகளிடம் எந்தளவு தங்களது செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று கேட்ட போது, மாதத்துக்கு தற்போது 50 வழக்குகளை முடித்து வருவதற்கு பதிலாக நுõறு வழக்குகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஐகோர்ட்டில் இரண்டு நிரந்தர, “லோக் அதாலத்’கள் அமைக்கப்படும். இதுதவிர, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாதத்துக்கு இரண்டு, “லோக் அதாலத்’கள் தனியாக நடத்தப்படுகின்றன.

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில், 143 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1.54 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இது ஒரு சாதனை. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து மாலைநேர கோர்ட்டுகள் செயல்படத் துவங்கிய பின், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒன்பதாயிரத்து 245 வழக்குகள் முடிக்கப்பட்டன.

ஐகோர்ட்டின் மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம் கடந்த ஜூன் முதல் மிக தீவிரமாக செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னையில் 140 மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்’ வழக்கை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்ததற்காக கடந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இரண்டாயிரத்து 196 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ரூ.70 கோடி மதிப்பிலான இந்த வழக்கு தான் இந்தியாவிலேயே மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு. இவ்வாறு ஏ.பி.ஷா பேசினார்.

Posted in 5000, AA, abuse, Accident, Alcoholism, Arms, Attorney, Balakrishnan, Blood, BMW, Bribery, Bribes, Capital, case, Congress, Corruption, Courts, dead, Delhi, Driver, Driving, Drunk, DUI, escape, Expose, Free, Guilty, HC, Hit, I U Khan, industrialist, Jail, Jethmalani, Judges, Justice, Launch, Law, Lawyer, legal, MP, Nanda, Nandha, NDTV, New, Order, Party, Police, Politics, Poor, Power, Prison, Prosecution, Punishment, R K Anand, Rich, Sanjeev, Sanjeev Nanda, Sanjiv, SC, Sentence, Sunil Kulkarni, Suspension, testimony, Wealthy, Witness | 1 Comment »

A tourist in Himalayas – Urbanization, Environment protection, Traveler

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

இமயமலைப் பகுதி மாநிலங்கள் வளமானவையா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் உள்ள சிறு நகரான சக்ரதா என்ற இடத்தில் சமீபத்தில் சில நாள்கள் தங்கினேன். அது ராணுவ கன்டோன்மென்ட் பகுதி.

கடல் மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் இருக்கிறது. டேராடூன் நகரிலிருந்து ஜீப்பில் போக மூன்றரை மணி நேரம்.

தில்லியின் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சக்ரதாவுக்குச் சென்றேன். வனத்துறையின் ஓய்வில்லத்திலிருந்து அந்த மலையைப் பார்க்க பார்க்கப் பிரமிப்பாக இருந்தது.

டோன்ஸ் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான அங்கு மரங்கள் அடர்ந்த காடு நேர்த்தியாக இருந்தது. பருவநிலை மிக அற்புதமாக, ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருந்தது. சொர்க்கத்துக்கு அருகிலேயே வந்துவிட்டதைப் போன்று உணர்ந்தேன்.

உத்தரப் பிரதேசத்தின் மலைப்பகுதி வளர்ச்சியில் அக்கறை செலுத்தப்படவில்லை என்பதால் தனியாகப் பிரிக்கப்பட்ட மலை மாநிலம் இது. இமாசலத்தை ஒட்டியிருக்கிறது. இம் மாநிலம் உதயமாகி 8 ஆண்டுகள் இருக்கும். அதற்குள் அதன் வளர்ச்சி அல்லது நிர்வாகம் குறித்துக் குறை கூறுவது சரியல்ல. ஆனாலும் மாநிலத்தின் வளர்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பது தவறல்ல.

ராணுவத்தின் தரைப்படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் சக்ரதா இருக்கிறது. இங்கு வெளிநாட்டவர் வரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியின் தலைவாயிலான கல்சி என்ற இடத்திலிருந்து சக்ரதா வரையுள்ள பகுதிக்குச் செல்வதாக இருந்தால் ராணுவத்தின் அனுமதியோடுதான் செல்ல முடியும்.

கல்சி என்ற இடத்தில்தான் டோன்ஸ் நதி, யமுனையில் சேர்கிறது. இந்த இடத்தில் மாமன்னர் அசோகர் பற்றிய பாறைக் கல்வெட்டு இருக்கிறது. இதை இந்தியத் தொல்லியல் துறை பராமரிக்கிறது. 19-வது நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேயர்தான் இதைக் கண்டுபிடித்தார். இந்தியாவின் இதுபோன்ற தொல்லியல் சின்னங்களையும், கலாசாரத்தையும் வெள்ளைக்காரர்கள்தான் ஆர்வமுடன் கண்டுபிடித்துள்ளனர், நம்மவர்கள் அந்த அளவுக்குக் கண்டுபிடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

இப்பகுதியின் பாதி வனப்பகுதியை வனத்துறை நேரடியாகவும் மற்றதை சிவிலியன்களும் நிர்வகிக்கின்றனர். இந்த பாகுபாட்டை அங்கு வளர்ந்துள்ள மரங்களிலிருந்தே அறியலாம். வனத்துறையினர் பராமரிக்கும் பகுதியில் காடு நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறது.

இந்தப் பிராந்தியம் முழுவதிலும் வன விலங்குகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காட்டு மான் அல்லது பன்றி மட்டுமே எப்போதாவது கண்ணில்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். குஜ்ஜர்கள் வளர்க்கும் காட்டெருமைகளும் பசுக்களும்தான் கண்ணில்பட்டன. சில ஒப்பந்ததாரர்கள் மட்ட குதிரைகளை சரக்கு எடுத்துச் செல்வதற்காக வைத்துள்ளனர்.

இப்பகுதியில் ஜெüன்சார்-பப்பார் பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பஞ்ச பாண்டவர்களின் வழித் தோன்றல்கள். ஹிந்து பண்டிகைகளை இவர்கள் தங்களுக்கென்றுள்ள தனி பஞ்சாங்கப்படி கொண்டாடுகின்றனர். மிகவும் அமைதியானவர்கள். இப்பகுதியில் கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நிகழ்வதில்லை. மாடு மேய்வது தொடர்பான சிறு புகார்கள் அதிகம்.

வனப்பகுதியில் சில ஓய்வில்லங்கள் உள்ளன. சில மிகவும் வசதியாக, அழகாக உள்ளன. சில பராமரிப்பின்றி மோசமாக இருக்கின்றன. ஆனால் அற்புதமான வனத்துக்கு நடுவே இவை உள்ளன.

பிரிட்டிஷ்காரர்களின் ரசனையே அலாதி. இங்குள்ள ஒரு ஓய்வில்லத்தில் லேடி எட்வர்ட்ஸ் என்ற பெண்மணி 3 நாள்கள் தொடர்ந்து தங்கியிருந்திருக்கிறார். தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து 7 ஆயிரம் மைல்கள் தள்ளி வந்த நாட்டில், ஆளரவமே இல்லாத மலைப்பகுதி காட்டில் இயற்கையை ரசிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல!

காட்டிலே ஒரு கிளையைக்கூட வெட்டக்கூடாது என்று 1996-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வன வளத்தைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு.

ஆனால் காடுகளை அறிவியல்ரீதியாக பராமரிப்பதென்றால், அவ்வப்போது மரங்களை வெட்டி அல்லது கிளைகளைக் களைத்து சீர்படுத்த வேண்டும். பழைய மரங்களை வெட்டிவிட்டு புதிய கன்றுகளை நட வேண்டும். “”காடுகளைப் பாதுகாக்க வேண்டியவர்கள்” அதில் அக்கறை காட்டாததால்தான் நீதித்துறை தலையிட நேர்ந்தது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

உத்தரகண்ட் மலைப்பகுதிக்கு கடந்த 40 ஆண்டுகளாகப் பலமுறை சென்று வந்துள்ளேன். குமான், கர்வால் என்ற இருவகை மலைப் பகுதிகளிலும் அதிகம் பயணம் செய்துள்ளேன்.

அப்பகுதியில் கிராமங்களும் சிற்றூர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. சாலை வசதி மட்டும் ஓரளவுக்கு மேம்பட்டிருக்கிறது. கிராமங்களில் செல்போன், ஜீன்ஸ் பேண்ட், கோக-கோலா மட்டுமே புதிய நாகரிகச் சின்னங்களாகக் கண்ணில்படுகின்றன. பெரும்பாலான மக்கள் பட்டினி இல்லாமல் ஏதோ ஒரு வேளையோ இரு வேளையோ சாப்பிடுகிறார்கள் என்பதைத் தவிர எந்தப் பொருளாதார முன்னேற்றமும் இல்லை.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. கிராமங்களிலிருந்து ஒரு மைல் சுற்றளவுக்குள் ஆரம்பப்பள்ளிக்கூடம் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்வாக இல்லை. பல குடும்பங்களில் சிறுவர்களை அதிகம் படிக்க வைப்பதில்லை.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் மூன்று.

1. கல்வி பயில போய் வரும் போக்குவரத்துச் செலவு கட்டுப்படியாவதில்லை.

2. படிக்கப் போய்விட்டால் குடும்பச்செலவுக்கு வருவாய் குறைகிறது.

3. படித்து முடித்ததும் வேலையா கிடைக்கப்போகிறது?

ஓரளவு படித்த இளைஞர்கள் வேலைதேடி சமவெளியில் உள்ள நகரங்களுக்குச் செல்கின்றனர். அங்கு வீட்டு வேலை செய்கின்றனர் அல்லது ராணுவத்தில் சேர்கின்றனர்.

வனப்பகுதியில் காண்ட்ராக்டர் வேலையைச் செய்கிறவர் மட்டும் வியாபாரி போல, கொஞ்சம் காசு பார்க்கிறார். ஆனால் அதற்கு பொறுமையும், புத்திசாலித்தனமும் அவசியம்.

குடி தண்ணீர் இல்லாமல் மக்கள்படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நல்ல தண்ணீருக்காக பெண்களும் குழந்தைகளும் குடங்களைத் தூக்கிக்கொண்டு 3 அல்லது 4 மைல்தூரம் கூட செல்கின்றனர். எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் தரும் திட்டம் 1980-களில் வெகு ஆடம்பரமாக தொடங்கப்பட்டது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இன்னும் இக் கிராமங்களை அத்திட்டம் எட்டவில்லை.

தொழில் வளர்ச்சியும் அதிகம் இல்லை. காடுகளில் கிடைக்கும் பழம், இலை, பூ, மூலிகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆலை எதுவும் ஏற்படவில்லை. டேராடூன் நகர்ப் பகுதியில் மட்டும் பெயருக்கு சில தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் மலையின் அழகை ரசித்தபடியே சிலநாள்கள் தங்கிவிட்டுச் செல்ல கூடாரங்களை நிறுவலாம்; அங்கு சாலை, குடிநீர், கழிப்பிடம் போன்ற குறைந்தபட்ச வசதிகளை மட்டும் செய்துதரலாம் என்று இப்போது யோசனை கூறப்பட்டிருக்கிறது.

மலையேறும் சாகசத்தை நிகழ்த்த நினைப்பவர்களை ஈர்க்க இந்த சுற்றுலாத் திட்டம் பயன்படும். ஆனால் இதனால் நிரந்தர வருவாய் கிடைக்காது.

நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆனபிறகும், விவசாயியோ, கிராமவாசியோ தான் பிறந்த மண்ணிலிருந்துகொண்டே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தத் தவறிவிட்டோம்.

முன்னேற வேண்டும் என்றால் சொந்த ஊரிலிருந்து வெளியேறி நகரங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைமையை நாடு முழுவதும் ஏற்படுத்திவிட்டோம்.

தேசியக் கொள்கைகளை வகுப்பதில் நாம் அடைந்துள்ள தோல்விக்கு இது நல்ல உதாரணம்.

மாநிலத்தின் அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் திறமையானவர்கள், நல்லவர்கள். மாநில முதல்வர் நாராயண் தத் திவாரி நல்ல அனுபவம் பெற்ற தேர்ந்த நிர்வாகி. அப்படியும் மாநிலத்தின் வளர்ச்சி சமச்சீரானதாகவோ, மெச்சத்தகுந்ததாகவோ இல்லை.

இந்த மாநிலத்தில் 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், ஆனால் 80 வளர்ச்சிக் கோட்டங்கள் உள்ளன. இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கும் கோட்டங்களின் தலைவர்களுக்கும் இடையே, வருவாயைப் பகிர்ந்துகொள்ள போட்டி ஏற்படும். இது இப்பகுதி வளர்ச்சிக்கு உகந்ததல்ல. வளர்ச்சி கோட்டங்களையும் பேரவைத் தொகுதிகளுக்குச் சம எண்ணிக்கையில் இருக்குமாறு முதலிலேயே பிரித்திருக்க வேண்டும்.

மக்களின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கினாலும் அவற்றைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் போக்கு எங்குமே இல்லை. மக்கள் இன்னமும் விழிப்படையாமலேயே இருக்கின்றனர் என்பது உண்மையே.

எனவே ஆட்சியாளர்கள் இந்த நிலைமையை மாற்ற நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். எல்லாம் வழக்கம்போலவே நடப்பதால் முன்னேற்றம் வந்துவிடாது. முன்னேற்றம் இல்லாவிட்டால் மோசமாகப் போய்விடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

———————————————————————————————————

வன வளம் காப்போம்!

ஆர்.எஸ். நாராயணன்

கடந்த இரு நூற்றாண்டுகளில் வன வளம் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. தாவரங்கள் மட்டுமன்றி, விலங்கினங்களும் கணிசமாக அழிந்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மனிதர்களே காரணம்!

அரசு தரும் ஒரு புள்ளிவிவரப்படி 1875-லிருந்து 1925 வரை 80 ஆயிரம் புலிகள், 1 லட்சத்து 50 ஆயிரம் சிறுத்தைகள், 2 லட்சம் ஓநாய்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. 1925-க்குப் பின் இன்றுவரை கொல்லப்பட்டவை எவ்வளவு?~வனங்கள் சுத்தமாகிவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த வேட்டையை விட இன்றைய ஆட்சியில் வேட்டையின் விளைவால் காடுகளில் சிங்கம், புலி, நரி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை, கவலை தரும் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஐம்பதாண்டு முதிர்ந்த தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், கருங்காலி, ரோஸ்வுட் எதுவும் இல்லை. ஒருகாலத்தில் காட்டில் ஒரு வீரப்பன் இருந்தான். இப்போது நாட்டில் இருந்து கொண்டே பல வீரப்பர்கள் வனத்தை அழித்து வருகிறார்கள். வனக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மரவியாபாரிகளுக்கு வைரம் பாய்ந்த மரம் கிடைக்கும். பன்மடங்கு வனச் செல்வங்கள் கொள்ளை போகும்போது, ஒருபக்கம் பழியை வனத்தில் வாழ்வுரிமை கேட்கும் பழங்குடிகள் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

இப்போது ஒரு புதிய பசி வந்துள்ளது. அதன் பெயர் “வளர்ச்சி’. வளர்ச்சி என்ற போர்வையில் வனத்தைச் சுரண்ட புதிய வரையறையைப் பெரும் பொருள்செலவில் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் வனம் மற்றும் சூழலியல் அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு “”வனம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ஒரு வரையறை விளக்கத்தை வழங்கும்படியும், இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ப சட்ட நெளிவுசுளிவுகளிலிருந்து தப்பும் ஆலோசனைகளை வழங்கும்படியும், அதற்குரிய கட்டணத்தையும் கேட்டு பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கைவிட்டிருந்தது. பதில் அனுப்பியிருந்த பல ஆய்வு நிறுவனங்களில் மிகக் குறைந்த கட்டணத்திற்கு அசோகா அறக்கட்டளை முன்வந்தது. அப்பணி முடிவுற்று அது தொடர்பான முடிவுக்கூட்டம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது. அதில் “வனத்தின் வரையறை’ முன்வைக்கப்பட்டது.

வனம் என்றால் என்ன? இதற்கு ஐ.நா. அமைப்புகள் வழங்கும் அறிக்கைகள் உள்ளன. வனம் பற்றிய வரையறை வகைகள், பணிகள், நிர்வாகம், பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை அறிக்கைகள் வனம் – மற்றும் சூழலியல் அமைச்சக நூலகத்தில் நிறையவே உள்ளன. இவ்வளவு இருந்தும் புதிய வரையறை இப்போது தேவைப்படுகிறது. ஓட்டைகள் பல போட்டு ஒழுகும் பானையில் மேலும் ஓர் ஓட்டை போட ஆலோசகர்களும் அலுவலர்களும் முயல்வது ஏன்? அவர்கள் அப்படி என்ன வரையறுத்தார்கள்?

“”வனம் என்பது அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி. உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பாதுகாப்பு அடிப்படையில் சட்டரீதியாக வனம் என்று பதிவு செய்யப்பட்ட நிலம். இப்படிப்பட்ட நிலப்பிரிவு எல்லைகளுக்குட்பட்ட ஏரி, குளம், நதி போன்ற நீர்நிலைகள், மரங்கள், புல்வெளிகள், நன்செய், புன்செய் நிலங்கள், பாலைவனம், மண்ணியல் ஆய்விடம், பனி மண்டலங்கள்…..”

இந்தியாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக – நீர் மின்திட்ட அணைகள், ராணுவக் கட்டுமானம், சுரங்கம், குடியிருப்பு மாற்றம், நெடுஞ்சாலை.. போன்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக – பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 1300 வழக்குகள் – வளர்ச்சிக்கு வனங்களை ஒதுக்கிக் கொள்ள முடியாமல் உள்ளனவாம். இப்போது புரிகிறதா? நாட்டில் உள்ள நரிகள் ரொம்பவும் பொல்லாதவை. வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களைச் சுரண்ட பெரு முதலாளிகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் வழங்கவும், காலம்காலமாக வனமே வாழ்வு என்று வனங்களை நம்பி வாழும் ஆதிவாசிகளுக்குப் பச்சைத் துரோகமும் செய்ய இப் புதிய வரையறை உதவும்.

வழக்கில் சிக்கியுள்ள பகுதி 6 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேர்தான். இன்று மரம்வெட்டுவதற்காக வனம் என்று ஒதுக்கப்பட்ட காடுகளின் பரப்பு 3.1 கோடி ஹெக்டேர், காப்பிடம் என்று பதிவான நிலப்பரப்பு 1.5 கோடி ஹெக்டேர். ஆக மொத்தம் 4.6 கோடி ஹெக்டேர் நிலத்தின் சொந்தக்காரர், ஒரு மகாநிலப்பிரபுவாகத் திகழ்ந்துவரும் அரசு, 8 கோடி வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறைக்குக் கட்டுப்பட்ட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அனுபவப் பாத்தியதைக் கொண்டாடி சொந்தமாக்கிக் கொள்ளும் தந்திரம் நாட்டு நரிகளுக்கு உண்டு. அந்த உரிமை காட்டு நரிகளுக்கு இல்லை. டன் டன்னாக மரம் வெட்டிக் கொள்ளை அடிக்கப்படுவது ஒருபுறம். பாவப்பட்ட வனவாசிகள் தங்கள் ஆடு, மாடுகளை வனங்களுக்கு ஓட்டிச் சென்று மேய்க்க அவர்களுக்கு உரிமை இருந்தும் உரிமை மறுக்கப்படுகிறது. வனவாசிகள்தான் வனத்தை அழிப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. காடுகளில் உலர்ந்து விழும் விறகைப் பொறுக்குவதும், விதை, பழம் பொறுக்குவதும் மரங்களை வெட்டுவதும் ஒன்றாகிவிடுமா?

1970-களில்தான் காடுகளில் வனவிலங்குகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்தார்கள். மரக்களவுபற்றி கண்டுகொள்ளவில்லை. 1972-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் காரணமாக தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் உருப்பெற்றுக் காட்டு விலங்குகளை அவற்றின் இயல்பான சூழலில் காப்பாற்றி இனப்பெருக்கம் செய்யப்பட்டது. இப்படி வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டதைப்போல் வனவாசிகளின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் உத்தராஞ்சல் மாநிலத்தில் தாசோலியில் வனவாசிகள் ஒன்றுகூடி சிப்கோ இயக்கத்தை உருவாக்கினர். இதை சர்வோதய இயக்கத்தைச் சேர்ந்த காந்தியவாதி சாந்தி பிரசாத் பட் தொடங்கிவைத்து தலைமையேற்று நடத்தினார்.

இமயமலைக் காடுகளில் சட்டபூர்வமாக மரங்களை வெட்ட வந்த ஒப்பந்தக்காரர்களை மரங்களை வெட்ட முடியாதபடி மரத்தை இரு கரங்களால் அணைத்துக் கொண்டு, “”முதலில் எங்களை வெட்டிவிட்டு மரங்களை வெட்டுங்கள்” என்று வனவாசிகள் கூறினர். மலைக்காடுகளில் மரங்களை வெட்டும்போது நிலச்சரிவும் வெள்ளமும் உருவாகும் என்ற உண்மை வனவாசிகளுக்கு நன்கு தெரியும். 1972, 73 ஆண்டுகளில் “சிப்கோ’ இயக்கம் தீவிரமானபோது சுற்றுச்சூழல் காப்பு இயக்கத் தலைவர்கள் சுந்தர்லால் பகுகுணா, வந்தனா சிவா ஆகியோர் அதில் பங்கேற்றனர். அதுபோன்ற இயக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருப்பெறவில்லை. குறிப்பாக கொடைக்கானல் அமைந்துள்ள பழனிமலைக்காடுகளில் வன அழிவு காரணமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும்போது ஆண்டுதோறும் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுகிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் கொண்டுவந்த நெருக்கடிகால ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் பொற்காலம் எனலாம். 1980-ல் நெருக்கடிகால வனப்பாதுகாப்புச் சட்டம் வந்தது. மாநில அரசுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு வனத்துறை ஊழல்கள் – மரம் கடத்தல் – மலிந்திருந்த காலகட்டத்தில், மத்திய அரசு அனுமதி இல்லாமல் வனங்களில் மாநிலங்கள் கைவைக்க இயலவில்லை. பின்னர் ராஜீவ்காந்தி காலத்திலும் பழனிமலைப் பாதுகாப்பு உள்பட வனப்புனர் வாழ்வுக்கு நிறைய நிதி உதவிகள் வழங்கப்பட்டன. காலம் செல்லச் செல்ல நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. வனவாசிகளின் வாழ்வுரிமை மேலும் மேலும் மறுக்கப்பட்டே வந்துள்ளது. வனத்தை வரையறை செய்யும்போது, வனவாழ் மக்களின் உரிமை அன்று சற்று கவனம் பெற்றது. இன்று முற்றிலும் மறுக்கப்படுகிறது. வனவிஷயத்தில் மட்டுமாவது வருவாய் நோக்கை மறந்துவிட்டு, உயிர்ச்சூழல் – சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முதல் மரியாதை வழங்க வேண்டும். வனத்திலே பிறந்து, வனத்திலே வளர்ந்து, வனத்திலே வாழ்ந்து மடியும் வனவாசிகளை வெளியேற்றும் ஒரு பாவச்செயலை இனியும் தொடர வேண்டாம்.

“”இந்தப் பிரபஞ்சம் ஒரு மகாசக்தியின் படைப்பு. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் அவற்றின் நலன்களுக்காகவே இயற்கை என்னும் மகாசக்தி படைத்துள்ளது. எந்த உயிரினமும் அடுத்த உயிரின உரிமைகளைப் பறிப்பது பெரும்பாவம்” என்று ஈசோபநிஷதம் கூறுகிறது. காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க. அதைக் காப்பாற்றுங்க!

——————————————————————————————————————————-
முசௌரி உணர்த்திய பாடம்!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

கடந்த வாரம் முசௌரி சென்றிருந்தேன். பிரிட்டிஷ்காரர்கள் இந்நாட்டுக்கு வந்தபோது, அவர்கள் விரும்பிக் குடியேறிய மலைவாசஸ்தலத்தில் முசௌரியும் ஒன்று. தில்லிக்கு வடக்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊருக்கு டேராடூனிலிருந்து ஒரு மணி நேரத்தில் காரில் செல்லலாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான தேசிய பயிற்சி மையம் இங்குதான் இருக்கிறது. இதர மத்திய அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் அடிப்படைப் பயிற்சி அளிக்கும் நிலையமும் இங்கு இருக்கிறது. இதை மலைகளின் ராணி என்றும் அழைக்கின்றனர்.

1998-ல் ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற அதிகாரிகளுக்கு, நிர்வாகச் சீர்திருத்தம் குறித்து உரை நிகழ்த்த சென்றிருந்தேன். 160 அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்களில் பாதிப்பேர் நேரடியாக ஐ.ஏ.எஸ். ஆனவர்கள். மற்றவர்கள் வெவ்வேறு மாநில அரசுகளால் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறத் தேர்வு செய்து அனுப்பப்பட்ட அனுபவம் வாய்ந்த அதிகாரிகள். அமெரிக்காவைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவராக நான் அங்கு சென்றிருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி தர டியூக் பல்கலைக்கழகத்தின் உதவியை இந்திய அரசு நாடியிருந்தது.

டேராடூனிலிருந்து காரில் சென்றேன். “”அடடா, சுற்றுச்சூழல் எவ்வளவு பச்சைப் பசேல் என்று பார்க்க ரம்மியமாக இருக்கிறது” என்று அகாதெமியின் காரை ஓட்டிவந்த டிரைவரைப் பார்த்துக் கூறினேன். அவர் சொன்ன பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது. 1980-களில் லக்னெüவில் உயர் பதவியில் இருந்த ஓர் அதிகாரி, முசௌரியில் மரங்களை வெட்டவோ, நகராட்சிக்குள் புதிய கட்டடங்களைக் கட்டவோ அனுமதிக்கவே முடியாது என்று கண்டிப்பாகக் கூறி அமல்படுத்தியதால் இந்தப் பிரதேசம் பிழைத்தது என்றார். அவர் சொன்ன அந்த அதிகாரி நான்தான்.

நைனிதாலிலும் முசௌரியிலும் மரங்களை வெட்டுவதிலும் கட்டடங்களைக் கட்டுவதிலும் கண்மூடித்தனமான வேகத்தில் சிலர் இறங்கிவிட்டனர் என்று எனக்குத் தகவல் வந்தது. உடனே அந்த தடை உத்தரவைப் பிறப்பித்தேன். நைனிதால், முசௌரியில் யாரும் மரங்களை வெட்டக்கூடாது, முசௌரி மலையில் யாரும் பாறைகளை வெட்டவோ, இதர கனிமங்களைச் சேகரிக்கவோ கூடாது என்று உத்தரவிட்டேன்.

“”மலைப்பகுதியின் வளர்ச்சியைத் தடுக்கிறேன், மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் தடையாக இருக்கிறேன்” என்றெல்லாம் என்னைப்பற்றி குற்றம்சாட்டி எனக்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னைப் பலர் மிரட்டினார்கள். அதில் கொலை மிரட்டலும் உண்டு. முதலமைச்சரைக்கூட தங்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் உறுதியாக என்னை ஆதரித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான் போட்ட உத்தரவினால் ஏற்பட்டுள்ள நல்ல பலன்களை நானே பார்த்து பூரித்துப் போனேன்.

காலாகாலத்துக்கும் மக்கள் என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தற்பெருமையாக இதை நான் கூறவில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நல்ல முடிவில் அதிகாரிகள் உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன். ஊழல் அரசியல்வாதியும் முதுகெலும்பில்லாத அதிகாரிகளும்தான், மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நல்ல முடிவுகளிலிருந்து பின்வாங்குகிறார்கள். இதை மேலும் ஒரு நல்ல உதாரணம் கொண்டு விளக்க விரும்புகிறேன்.

1960-களில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1970-களின் பிற்பகுதியில் அதுவே சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்குத் தமிழகம்தான் முன்னோடி. தரக்குறைவான அரிசி, தானியங்களைப் பயன்படுத்துவார்கள், கணக்கில் தில்லுமுல்லு செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்வார்கள் என்றெல்லாம் இத் திட்டங்களை எதிர்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உறுதியாக இருந்ததால் இத்திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்படுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் பலனை மாநிலம் அனுபவித்து வருகிறது. சத்துணவு காரணமாக தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் உடலும் – அறிவும் திடமாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் படிப்பில் தமிழகம் முன்னிலையில் நிற்கிறது.

தமிழக அரசின் சிறந்த நிர்வாகத்தால் எத்தனையோ நன்மைகள் மாநிலத்துக்குக் கிடைத்தாலும் சத்துணவுத் திட்ட பலன் அவற்றில் முதன்மை பெறுகிறது. ஒரு கொள்கை முடிவால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய நல்ல பலன்களை ஊகித்து மதிப்பிட முடியாது; ஆனாலும் சில நல்ல நிர்வாகத்துக்கு சில கடுமையான, உறுதியான முடிவுகள் மிகமிக அவசியம்.

ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தின் காரை ஓட்டிய அந்த டிரைவர், அந்த அகாதெமி மாணவர்களிடையே மிகவும் பிரபலமான குதிரைப் பயிற்றுனர் நவல் கிஷோர் என்பவரின் உறவினர். அதை அவர் சொன்னபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்ததால் சிரிப்பும் பொத்துக்கொண்டு வந்தது. “என்னப்பா, இப்போதும் பயிற்சி மாணவர்கள் குதிரையை ஓட்ட ஆரம்பித்து கீழே விழுகிறார்களா?’ என்று கேட்டேன். ஆமாம் சார், ஆனால் ஒரு வித்தியாசம், பழைய மாணவர்களைப் போல இப்போதுள்ள இளைஞர்களுக்கு எலும்பு உறுதியாக இல்லை, அதிக நாள்கள் மருத்துவமனையில் படுத்துவிடுகிறார்கள் என்றார் அதே உற்சாகத்துடன்.

அந்தக் காலத்தில் மாணவர்கள் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு தொலைவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு நடந்தோ, சைக்கிளிலோ போனார்கள். வீட்டு வேலைகளையும் தோட்ட வேலைகளையும் செய்தார்கள். கிணற்றிலிருந்து நீர் இறைத்துத் தந்தார்கள். இப்போது நொறுக்குத் தீனி தின்றுவிட்டு பஸ்ஸிலோ, மோட்டார் சைக்கிள்களிலோ பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். எனவே உடலில் வலு இல்லை. பள்ளிக்கூடத்தில் சத்துணவைப் போட்டு ஊருக்கே உரம் ஊட்டிய அந்த நாள் எங்கே, வீட்டிலேயே சாப்பிட்டு வலுவில்லாமல் இருக்கும் இந்த நாள் எங்கே?

எல்லோருக்கும் வரும் சந்தேகம் எனக்கும் வந்ததால் பயிற்சி அகாதெமியின் இயக்குநர் ருத்ர கங்காதரனிடம், “”இப்போதைய மாணவர்களின் தரம் எப்படி?” என்று கேட்டேன். “நான் கடந்த ஆறு ஆண்டுகளாக இயக்குநராக இருக்கிறேன்; இப்போது பயிற்சிக்கு வருகிறவர்கள், பழைய மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாது உலக ஞானத்திலும் அவர்களுடைய பாடத்திலும் சிறந்து விளங்குகின்றனர். கடுமையான பயிற்சிகளைக்கூட எளிதாக முடிக்கின்றனர். நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது’ என்று பதில் அளித்தார்.

நான் ஏற்கெனவே கூறியபடி, டியூக் பல்கலைக்கழகம் சார்பில் சென்றிருந்தேன். என்னுடன் வந்த இதர பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே. இந்த பல்கலைக்கழகம் ஹார்வர்ட், ஸ்டேன்ஃபோர்டு, யேல் பல்கலைக்கழகங்களுக்கு நிகரானது. இங்கு மட்டும் அல்ல, உலகின் முன்னணி பல்கலைக் கழகங்கள் பலவற்றில் இந்தியர்கள்தான் இப்போது பேராசிரியர்களாகவும் மாணவர்களாகவும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அளவுக்கு அறிவில் சிறந்தவர்கள் இந்த நாட்டில் இருந்தும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையில் உழல்வதும், அரசியல்வாதிகள் அப்பட்டமான சுயநலத்தில் மிதப்பதும், அதிகாரவர்க்கம் அவர்களுக்கு அடிபணிவதும் தாளமுடியாத வருத்தத்தைத் தருகிறது. நிர்வாகச் சீர்திருத்தம் எந்த அளவுக்கு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.

முசௌரியில் பார்த்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். சாலைகளில் வாகன நெரிசல் அதிகம். முன்பைவிட கடைகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு தென்னிந்தியச் சிற்றுண்டியகமும் உடுப்பி ஓட்டலும் கண்ணில்பட்டன. தென்னாட்டு இட்லி, வடை, சாம்பார், மசாலா தோசை வட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Adventure, Analysis, Animals, Archeology, Ashoka, Ashokar, ASI, Asoka, Asokar, Backgrounder, Cantonement, City, dead, Deforestation, Dehradoon, Dehradun, Delhi, Economy, Education, Environment, Finances, Forests, Fox, Ganga, Ganges, Govt, Growth, guns, Haridwar, Hiking, Hills, Himachal, HP, Hunt, Hunting, Industry, infrastructure, Jobs, Kill, Kulu, Lives, Manali, Metro, Military, Mountains, Mussoori, Mussouri, Nature, Pollution, Protect, Protection, Rafting, Rishikesh, River, Rural, Sandalwood, Shot, Sports, State, Statistics, Stats, Tour, Tourism, Tourist, Transport, Traveler, Tree, Trees, Trekking, Tribals, UP, Urbanization, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Veerappan, Village, Water, Welfare, Wild, Wolf, Wolves | Leave a Comment »

Health ministers meeting on polio eradication on June 6

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

போலியோ பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு

புது தில்லி, ஜூன் 3: போலியோ பாதித்த 10 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

போலியோ குறித்து ஆராயவும், வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி தலைநகர் தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இது குறித்து தேசிய போலியோ ஒழிப்பு திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு நாடுமுழுவதும் 60 பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

  • உத்தரப் பிரதேசம்,
  • பிகார்,
  • தில்லி,
  • ஹரியாணா,
  • பஞ்சாப்,
  • குஜராத்,
  • ராஜஸ்தான்,
  • ஆந்திர பிரதேசம்,
  • மகாராஷ்டிரம் மற்றும்
  • மத்திய பிரதேசம்

ஆகிய மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில்

  1. உ.பி.யில் 36 பேரும்,
  2. பிகாரில் 16 பேரும்,
  3. உத்தரகண்டில் 3 பேரும்,
  4. ஆந்திரத்தில் 2 பேரும்,
  5. ஹரியாணா,
  6. குஜராத்,
  7. மகாராஷ்டிரம்,
  8. ராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 674 பேர் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு 66 பேருக்கு போலியோ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் உலக அளவில் நைஜீரியாவுக்கு அடுத்த படியாக போலீயாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

உலக அளவில் இந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை போலியோவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். இதில் 54 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர்.

செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் இந்த போலியோ வைரஸின் தாக்கம் இருக்கும். போலியோவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Posted in Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra, Andhra Pradesh, AP, Bihar, Delhi, Eradication, Gujarat, Haryana, Health, Healthcare, Immunization, Immunize, Madhya Pradesh, maharashtra, medical, MP, New Delhi, Nigeria, Outbreak, Polio, Prevention, Punjab, Rajasthan, Shot, UP, Utharkhand, Uttar Pradesh, Uttarkhand, Uttrakand | Leave a Comment »

Mayawati takes Uttar Pradesh – Biosketch

Posted by Snapjudge மேல் மே 11, 2007

உ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்

லக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).

இவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.

உ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

முந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

தில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.

பின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.

ஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா

மூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.

மாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.

தில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

1984 முதல் தீவிர அரசியல்

1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.

இருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.

கல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.
———————————————————————-
வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி

லக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை

உ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.

இது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.
———————————————————————————-

உத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு

லக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.

உ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.

பகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.

தேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.

7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.

50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.

மாநிலத்தின் 40-வது முதல்வர்

1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

என்.டி. திவாரிக்கு இணையாக..

உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.

403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.

———————————————————————————————————

ஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது

லக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.

முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

உ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • உ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • இதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,
  • அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,
  • ஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.
  • மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.
  • முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.

எனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.

  • சமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.
  • அம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
  • உயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.

இந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.

அதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.

நிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.

எம்.எல்.ஏ., தாராளம்:

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.
————————————————————————————————–

மாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை

நீரஜா செüத்ரி:

தமிழில்- ஜி.கணபதி

மாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.

சமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.

இது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.

தலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த

  • சதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),
  • நசீமுதீன் சித்திக்கி (முஸ்லிம்),
  • பாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.

அயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.

ஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

இப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே? இது ஏன் என்பதே.

பாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.

ஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.

தலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.

இந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.

வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.

மாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.

தாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.

2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.

சில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.

இந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.

மாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.

வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.

பாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.

மாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.

தில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.

———————————————————————————————-

.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்!

உ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.

எஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.

இது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.

இந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.

அந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.

“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்?’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.

நசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.

“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.

இந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.

சுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.

டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.

குறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.

———————————————————————————————–

“மனுவாதி-மாயாவாதி’ உடன்பாடு!

எஸ். குருமூர்த்தி

“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்!

பேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.

“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு! தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.

“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.

மற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்?

இதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.

அது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.

சாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.

“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.

இப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.

“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.

“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.

“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.

“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.

மாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.

உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.

பிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.

இப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.

உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.

நீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.

———————————————————————————————

கங்கா தீரமும் காவிரி ஓரமும்…

செ.கு. தமிழரசன்

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.

இழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.

இந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.

பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.

கான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.

ஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.

எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.

இதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.

இதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.

காங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.

ஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.

மாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.

ஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.

அண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா?

மாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா?

இங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.

மேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.

அகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

ஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.

அண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.

மேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.

மாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.

(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)

—————————————————————————————
உ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து

லக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
—————————————————————————————
உ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்

லக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.

இதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.

மாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————

Kumudam Reporter – Solai

08.07.07

இனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி?

அந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்?

நாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.

தமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.

உத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.

எனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.

ஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.

இப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.

‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.

தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு? முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.

காங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.

அதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.

இந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.

முற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.

வெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

இப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா? வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா? இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.

‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி? பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்…? தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.

இத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா? பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா?

எதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா? அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்!

——————————————————————————————-

உத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது

லக்னோ, ஆக. 6-

உத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.

கன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.

கன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

வீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.

—————————————————————————————————————————–
“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’
புதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.

சோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.

நியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.

நாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.

காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.

———————————————————————————————————————————————————
உத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு
பிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு

புதுடெல்லி, ஜன.17-

உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.

பிரமாண்ட கேக்

உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.

நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அனல் மின்திட்டம்

பிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

இது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-

இது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.

3 மாநிலங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.

சிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

மத்திய அரசு ஆதரவு

ஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.

இதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Action, Aiswarya, Allahabad, Alliance, Allocations, Amar Singh, Amarsingh, Ambani, Amitab, Amitabh, Anil, Assembly, Assets, Ayodhya, Ayodya, Bachan, Bahuguna, Bahujan Samaj Party, Biosketch, BJP, Brahmin, Brahmins, Bribes, BSP, Caste, Casteism, CM, Congress, Constituency, Corrupt, Corruption, Creamy, Creamy Layer, Dalit, Delhi, Disproportionate, Economic, Election, Elections, Faces, Free, Goel, Govt, Gujarat, Guru, Gurumoorthy, Gurumurthy, Health, Healthcare, Hindu, Hinduism, Hindutva, Homes, Hospitals, Hosuing, IAS, IPS, Islam, Jaiprakash, Jaiprakash Narain, Jats, JP, Kanshi, Kanshi ram, Kanshiraam, Kanshiram, Kansi ram, Kansiraam, Kansiram, kickbacks, Kurmis, Land, Lucknow, Mandal, Manifesto, Manu, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MBC, medical, Medicine, Mishra, Misra, Moslem, Mulayam, Muslim, Naseemuddin, Naseemudhin, Nasimuddin, Nasimudhin, New Delhi, OBC, Op-Ed, people, Plan, Planning, Poll, Polls, Power, PRO, promises, Property, Rajnath, Rajnath Singh, Ramjenmabhoomi, Ramjenmabhumi, Ramjenmaboomi, Ramjenmabumi, Reliance, Religion, Reservation, Reservations, Reserved, Rowdy, Rule, Sathish Chandra Mirs, SathishChandra Miras, SC Mishra, Siddik, Siddiq, Sidhik, Sidhiq, Slum, SP, Statue, Students, Study, Sudhir, Sudir, Taj, Taj mahal, Thakur, Thakurs, UP, Uttar Pradesh, Vaisya, Vajpayee, Vajpayi, Varanasi, Yadavs | 2 Comments »

The increasing cost of Property Appreciation – Practices, Investments, Discrepancies

Posted by Snapjudge மேல் மே 10, 2007

உயரும் நில மதிப்பு

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகம் வருவதால் நன்மைகள் அதிகம் உள்ளன. நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. இருப்பினும் சில இடையூறுகளும் உடன் வருகின்றன.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் அப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிடுவது (அல்லது உயர்த்தப்படுகிறது?) இயல்பான நிகழ்வாகிவிட்டது. சாதாரண தொழிற்சாலை வந்தாலும் நிலத்தின் மதிப்பு உயரும்தான். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் நிலத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடுகிறது.

சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் திடீரென நிலத்தின் விலை பல கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

இதனால், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் காலிமனைகளை வளைத்துப்போடுவது அல்லது குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவது, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகியன அதிகரித்துள்ளன. அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான இடங்களை விற்கும் நிலையை உருவாக்கி, அதை கூட்டணி அமைத்து ஏலத்தில் எடுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

சென்னை நகரில் இதுபோன்ற ரியல் எஸ்டேட் முறைகேடுகள் பற்றிய புகார்கள் ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதேபோன்ற முறைகேடுகள் வேகமாக நடைபெற்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இதற்குப் பின்புலமாகவும், பலமான ஆதரவாகவும் இருப்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இப்படி வாங்கப்படும் மனை, நிலம் ஆகியவற்றின் “உயர்த்தப்பட்ட’ மதிப்பு இவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இத்தகைய ரியல் எஸ்டேட் முறைகேடுகளை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவுகள் உள்ளன. என்றாலும், யாரும் தண்டனை பெறவில்லை. இந்த முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இதில் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொண்டால் முறைகேடுகளைத் தடுக்கவும், நிலத்தின் போலியான உயர் மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். இல்லையெனில், நகரின் மையப்பகுதிகளில் வசிக்கும் “எதிர்ப்பு சக்தி’ இல்லாத சாதாரண மக்கள் உயிருக்குப் பயந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாக மாறும்.

தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் நினைத்தால் இத்தகைய நிலமதிப்பு உயர்வைத் தடுக்க முடியும். இந்நிறுவனங்களைக் காட்டிலும், அதில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மனது வைத்தால் அந்தந்த நகரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு உயர்வதைத் தடுக்க முடியும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இவர்களது செலவிடும் திறன் சாதாரண மக்களைக் காட்டிலும் மிக அதிகம்.

ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை கொடுப்பது அவருக்குச் சிரமமில்லை. ஆனால் அவரை அறியாமலேயே அப்பகுதியின் வாடகையை உயர்த்துகிறார். அவரால் குறைந்தபட்ச தூரத்துக்கு ஆட்டோவில் செல்ல ரூ.30-ஐ வீசிவிட முடியும். அப்பகுதியில் ஆட்டோ கட்டணம் உயர அவர் காரணமாகிறார். அதைவிட மோசமாக. அவரால் ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள ஒரு குடியிருப்பை ரூ.15 லட்சத்துக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும். ஆனால், சம்பளத்தைத் தவிர “வேறு வருமானம்’ எதையும் பார்க்க முடியாத நடுத்தர மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை கூடுதல் என்றாலும் அது பெரும் சுமை. சொந்த வீடு எனும் கனவை மண்ணுக்குள் அழுத்துகிற சுமை.

Posted in Apartments, Appreciation, Asset, Bangalore, Bid, Biotech, Boom, Bust, Chennai, Compensation, Construction, CRR, Deflation, Delhi, Discrepancy, Economy, Employment, Estate, Exports, Finance, Flats, Hyderabad, India, Industry, Inflation, InfoTech, Interest, Investment, IT, Jobs, Labor, Land, Madras, Manufacturing, Plots, Poor, Property, Real Estate, Recession, REIT, Rich, Salary, Sale, SEZ, Stagflation, Telecom, workers | Leave a Comment »

Dinamani Kathir Weekly Variety: A Performance before President Kalam

Posted by Snapjudge மேல் மே 1, 2007

மேடை: கலாமைத் தலையாட்ட வைத்த இஞ்சிக்குடி!

பா. கிருஷ்ணன்

கடந்த ஏப்ரல் முதல் தேதி. தில்லியில் சார்க் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

தில்லி வந்திருந்த சார்க் தலைவர்கள் குடியரசுத் தலைவரையும் பிரதமர், அமைச்சர்களையும் மாறி மாறிச் சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையும் பரபரப்பாக இருந்தது.

அவரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்க வந்த பலர் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. அவரிடம் அப்பாயின்ட்மென்ட் பெற்றவர்களும் காத்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தில்லி உத்தர சுவாமிமலை ஆலயத்தில் பங்குனி உத்தரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை ஒட்டி மார்ச் 31-ம் தேதி இரவு முருகன் திருவீதியுலாவிலும், மறுநாள் ஏப்ரல் 1-ம் தேதி காலை அபிஷேகத்தின்போதும் நாகஸ்வர இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த இஞ்சிக்குடி இ.பி. கணேசனுக்கு ஓர் அதிர்ச்சி, அதே தினம் மாலையில் காத்திருந்தது.

பங்குனி உத்தரத் திருவிழாவின் நிறைவில் ஏப்ரல் 1-ம் தேதி மாலையில் அவரது கச்சேரிக்கு வந்திருந்த குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி சுவாமிநாதன் கச்சேரி முடிந்ததும் அவரிடம் கேட்டது, ஆயிரம் தவில்களை வாசிப்பது போன்ற இனிய அதிர்ச்சியை அளித்தது.

“”நீங்க நாளைக்கு குடியரசுத் தலைவர் முன்னால் நாகஸ்வரம் வாசிப்பீர்களா? அதற்கு ஏற்பாடு செய்கிறோம்” இதுதான் சுவாமிநாதன் கேட்ட கேள்வி.

மறுநாள் அவரது செல்போனில் அழைப்பு வந்தது, மாலை 6 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கச்சேரி நடத்தவேண்டும் என்று.

மாலை 5 மணிக்கே நாகஸ்வரம், தவில், சுருதிப் பெட்டி சகிதம் இ.பி. கணேசன் பார்ட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஜர் ஆனது.

அங்கு, மிக முக்கியமான நபர்கள் மட்டுமே பங்கு பெறும் சிறிய அரங்கு உள்ளது. அங்கே கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 5 மணியளவில் 60 பேர் அங்கே நிறைந்துவிட்டனர்.

ஐந்திலிருந்து ஆறுமணி வரை அரங்கில் பதிவுசெய்யப்பட்ட மெலிதான இசை அரங்கில் தவழ்ந்து கொண்டிருந்தது.

அதேநேரத்தில் தனது அலுவலகத்தில் விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டார்:

“”எங்கள் ஊரில் மங்கலமான நிகழ்ச்சிகளில் நாகஸ்வரம் என்ற அற்புதமான கருவியை இசைப்பது உண்டு. அதன் இசையைக் கேட்க விருப்பமா?” என்றார்.

உற்சாகத்துடன் அவர்கள் தலையை அசைக்க, சரியாக மாலை 6 மணிக்கு விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள் சகிதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அரங்குக்குள் நுழைந்தார் கலாம்.

முதல் வரிசையில் விசேஷமாக அமைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து, கச்சேரியைத் தாளம் போட்டு, தலை அசைத்து ரசித்தார். நாகஸ்வர இசைக் கச்சேரிக்கு 20 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டது. ஆனால், கலாம் ரசித்ததோ சுமார் 50 நிமிஷம்.

முதலில் ஹம்சத்வனியில் “ரகுநாயகா’ என்ற தியாகையரின் கீர்த்தனை. அடுத்து, பஞ்சரத்தின கீர்த்தனையில் இடம்பெற்ற “எந்தரோமஹானுபாவுலு’; மூன்றாவதாக, பைரவி ஆலாபனையுடன் கூடிய ராகமாலிகை என்று முழு நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசித்தார் கலாம்.

அத்துடன் நிற்கவில்லை. நிகழ்ச்சியை வழங்கிய இஞ்சிக்குடி கணேசனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் மரியாதை செய்தபோது, “”மிகக் குறுகிய நேரத்தில் உங்களது இசைத் திறமையை அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள். உங்களது தந்தை பிச்சக்கண்ணுப் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டிருக்கிறேன். அதே கலை உங்களிடமும் உள்ளது, பாராட்டுகள்” என்றார் அப்துல் கலாம்.

ஓர் உண்மையான கலைஞரால்தானே இன்னொரு உண்மையான கலைஞரின் திறமையை முழுமையாகப் பாராட்டமுடியும்! அப்துல் கலாம் விஞ்ஞானி, கவிஞர் என்பது மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த வீணை இசைக் கலைஞரும் ஆவார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?!

Posted in Carnatic, Delhi, EB Ganesan, EP Ganesan, Gadam, Injikkudi, Kadam, Kalam, Kathir, music, Nadhasvaram, Nadhaswaram, Nathaswaram, Pancharathna, Thavil | Leave a Comment »

BJP seals triumph in MCD polls, shuts out Congress : Op-Ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 9, 2007

தில்லி மாநகராட்சித் தேர்தல்

தில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அந்த மாநகராட்சியை காங்கிரஸ் வசமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.

புதுதில்லியை நிர்வகிக்க தனி அமைப்பு உள்ளபோதிலும் தலைநகரையே கைப்பற்றி விட்டோம் என்பதுபோல பாஜக இந்த வெற்றியைப் பறைசாற்றிக் கொள்ள முற்படலாம். இத் தேர்தலின் முடிவுகள் மத்திய அரசு மீதும் தில்லி துணை மாநில அரசு மீதும் தில்லி மாநகராட்சி மீதும் மக்களுக்கு நிலவி வந்த அதிருப்தியைக் காட்டுவதாக பாஜக வர்ணிக்க முற்பட்டுள்ளது.

தில்லி துணை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக வற்புறுத்தியுள்ளது. இது அர்த்தமற்ற கோரிக்கையாகும். ஒரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் முடிவை வைத்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என்றால் அதற்கு முடிவே இல்லாது போய்விடும். தில்லி மாநகராட்சியில் முதல்தடவையாக மாயாவதி கட்சி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸின் தோல்விக்கு அக் கட்சிக்குள் நிலவிய உள்கட்சிப்பூசலே காரணமாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாட்டில் எந்தவொரு பெருநகரை எடுத்துக்கொண்டாலும் அதன் பிரச்சினைகள் அதிகம். போதுமான அதிகாரமும் போதுமான வருமானமும் கிடையாது என்பது நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும். ஆகவே மக்களின் அதிருப்தி மாநகரை ஆளுகின்ற கட்சி மீது திரும்புகிறது.

தில்லி தேர்தலில் குறிப்பாக வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டன. அது மிக நீண்டகாலமாக இருந்து வருகிற நில ஆக்கிரமிப்புப் பிரச்சினையாகும். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டன. கடைசியில் நீதிமன்ற உத்தரவு காரணமாக நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று. குடியிருப்புப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வர்த்தக அமைப்புகளின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. இவ்விதம் விதிமுறைகளை மீறி தொடங்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவையெல்லாம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கவே பல தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் எந்தத் தரப்பையும் திருப்திப்படுத்த முடியாமல் போய்விட்டது.

புதிதாக ஆட்சிக்கு வரும் பாஜகவுக்கும் இது தலைவலியாக அமையலாம். இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதற்கு மாநில அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தில்லி தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகரில் மட்டுமன்றி வேறு சில நகரங்களிலும் தோல்வியைக் கண்டது. அதன் பின்னர் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வி கண்டது. உ .பி.யில் இப்போது ஏழு கட்டங்களாக நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸýக்குப் பெருத்த வெற்றி வாய்ப்பு உள்ளதாகச் சொல்ல முடியாது.

புதுச்சேரியைப் போலவே துணை மாநில அந்தஸ்தைக் கொண்ட தில்லி யூனியன் பிராந்தியத்துக்கு அடுத்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இப் பின்னணியில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு என்ன காரணம் என காங்கிரஸ் மத்திய தலைமை ஆராய வேண்டியது அவசியம்.

==============================================================
மீட்சிப் பாதையில் பாரதீய ஜனதா!

நீரஜா செüத்ரி

மீட்சிப் பாதையில் செல்கிறது பாரதீய ஜனதா. சமீபகாலமாக, எல்லா இடங்களிலும் அதன் தலைவர்கள் நினைப்பதற்கும் அதிகமாகவே அது வெற்றிகளைக் குவித்து வருகிறது.

தில்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 164-ஐ அது பிடித்திருக்கிறது. உத்தராஞ்சல், பஞ்சாப் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும், உத்தரப்பிரதேசத்திலேயே சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நகரசபைத் தேர்தலிலும் அது வெற்றி பெற்றது.

சொல்லப்போனால் உ.பி. நகரசபைத் தேர்தல் வெற்றிதான் அதற்கு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாண்டுகளாக சோர்ந்து கிடந்த அதன் தொண்டர்கள் உற்சாகம் பெற்று கட்சிப் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

இதனால்தான், சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்புப் “”பிரசார கேசட்” விவகாரம் பெரிய பாதிப்பை யாரிடத்திலும் ஏற்படுத்தவில்லை; அதேசமயம், பாஜகவின் சில தலைவர்களுக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. எனவேதான், சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் அந்த கேசட்டுக்காக தன்னைக் கைது செய்ய வந்தால், கைதாகிவிடுவது என்ற முடிவை கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் எடுத்தார்.

கேசட்டை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் கட்சித் தலைமையே அதைத் திரும்பப்பெற உத்தரவிட்டது. அதில் ஆட்சேபகரமாகவும், வகுப்புகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிகள், வசனங்கள் இருந்ததை அது உணர்த்துகிறது. கேசட்டில் வாஜபேயி, அத்வானி ஆகியோரின் படங்கள் உள்ளன. உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லால்ஜி தாண்டன் கேசட்டை லக்னெüவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டிருக்கிறார். பிறகு அதற்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் கையில் சவுக்கை எடுத்ததன் பிறகே, “”அது தங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது, ஏற்கெனவே திரையிடப்பட்டது, தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை” என்றெல்லாம் மழுப்பலான விளக்கங்கள் தரப்பட்டன.

தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை என்றால் பிரசாரம் உச்சத்தில் இருக்கும்போது கட்சித்தலைமை அலுவலகத்தில் அதை வெளியிடுவானேன்?

இந்த விவகாரம் எப்படிப் போனாலும், பாரதீய ஜனதா, தான் நினைத்ததை சாதித்துவிட்டது. “”முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஹிந்துக்கள் சிறுபான்மைச் சமூகமாகும் ஆபத்து இருக்கிறது” என்ற அச்சத்தை அது விதைத்துவிட்டது. உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 18.5% என்று 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரம் வெளியான மறுநாளே, முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மைச் சமூகத்தவர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார். ஒரே விஷயத்தை பாஜக கேசட் குரூரமாகவும், நீதிமன்றத் தீர்ப்பு வேறுவிதமாகவும் பதிய வைத்திருக்கின்றன.

இப்போது பாரதீய ஜனதாவில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்தான் அதிகம்; அவர்கள் செய்ததுதான் அந்த கேசட் தயாரிப்பு என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியை விரைவாக வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்று அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகிவிடத் துடிக்கிறார் என்று மற்றொரு வட்டாரம் கருதுகிறது.

தேர்தல் வந்துவிட்டால் சங்கப் பரிவாரங்களின் உதவி பாரதீய ஜனதாவுக்குத் தேவைப்படுகிறது. இப்போது கட்சி முன் உள்ள சவால் எல்லாம், ஹிந்துக்களிலேயே மிதவாதிகளைத் தன்பக்கம் ஈர்ப்பதுதான். இவர்கள்தான் “”உண்மையில் பெரும்பான்மையானவர்கள்”. கேசட்டில் வெளியான காட்சிகளையும் வசனங்களையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள், முகம் சுளிப்பார்கள். ஜின்னாவைப் பற்றி அத்வானி பேசியது போன்ற பேச்சுகளே இவர்களை ஈர்க்கும். கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்து அத்வானி அப்படி பாகிஸ்தானில் பேசியிருந்தாலும், அவர் பேசிய இடமும், சூழ்நிலையும்தான் அவரைக் குற்றவாளியாக்கிவிட்டது. அதற்காக அவரை சங்கப் பரிவாரத் தலைமை கடுமையாகக் கண்டித்தது.

தில்லியில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது விலைவாசி உயர்வு, குடியிருப்புப் பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்தது, அங்கீகாரமற்ற கட்டடங்களை இடித்தது போன்ற விவகாரங்களால் கொதித்துப் போனதால்தான்; “”ஒரு முஸ்லிம் குடும்பம் 35 குழந்தைகளைப் பெறுவது” குறித்து கவலைப்பட்டு அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இந் நிலையில் ராஜ்நாத் சிங், மிதவாத ஹிந்துக்களையும் ஈர்க்கும்வகையில் செயல்பட வேண்டும்; மாறாக தீவிரவாத ஹிந்துத்துவாவைக் கையாளக்கூடாது.

முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பால் முஸ்லிம் வாக்குகள் ஒரு சேர சமாஜவாதி கட்சிக்குப் போகலாம்; ஆனால் இந்த சர்ச்சை நீடிக்காததால் முலாயமின் வாக்கு வங்கி மேலும் வலுவடையும் வாய்ப்பு குறைந்துவிட்டது.

இந் நிலையில் கேசட் விவகாரம் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிட்டது; அதன் தலைவர்கள் தாங்கள் பேசியதையே மறுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தேர்தல் வந்துவிட்டாலே எல்லா வழிகளையும் பிரசாரத்தில் கையாள்வது வழக்கம் என்றாலும் பாஜகவின் இந்த கேசட் தரம் தாழ்ந்த ஒரு செயலாகும்.

வெற்றிமீது வெற்றிகளைக் குவித்துவரும் ஒரு கட்சியின் நடவடிக்கையாக இது தெரியவில்லை, எதையாவது செய்து வெற்றி பெற்றுவிடத் துடிக்கும் “”நிதானமற்ற நடவடிக்கையாகவே” தெரிகிறது; எல்லாவற்றையும்விட முக்கியம், இது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் அரங்கில் அவசியமே இல்லை.

தமிழில்: சாரி.
==============================================================

Posted in Advani, Anti-incumbent, Bajpai, Bajrang Dal, BJP, BSP, Campaign, Cassette, Civic, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corporation, Delhi, Elections, Hindu, Hinduism, Incumbency, Islam, Local Body, MCD, Mid-term, minority, Municipal, Municipality, Muslim, New Delhi, Polls, Punjab, Rajnath, Rajnath Singh, RSS, Slander, Terrorism, UP, Utharanchal, Uttar Pradesh, Uttaranchal, Vajpayee, VHS, video | Leave a Comment »

Neeraja Chowdhury – Encouraging signs by 5 new MPs: Lok Saba Politics

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

புதிய பாதை காட்டும் 5 இளம் எம்.பி.க்கள்!

நீரஜா செüத்ரி

அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று “”கோரம்” மணி ஒலிக்கிறது; நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் உறுப்பினர்களை உள்ளே வருமாறு கூவிக்கொண்டே, அழைத்துச் செல்ல நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர் பரபரப்பாக ஓடி வருகிறார்.

காபியை குடித்துக் கொண்டும், சாம்பாரில் ஊறிய வடையை ஸ்பூனில் எடுத்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் உறுப்பினர்கள், நாட்டு நடப்பு குறித்து தங்களுக்குள் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

  • “”இந்த அர்ஜுன் சிங்குக்கு எதையாவது செய்து பேப்பரில் பெயர் வரவழைப்பதே வேலை” என்கிறார் ஒருவர்,
  • “”நீதிமன்றங்கள் வரம்போடு இருக்க வேண்டும்பா” என்கிறார் மற்றொருவர்.
  • “”இந்த மூக்குக் கண்ணாடி வெளிநாட்டில் வாங்கியதா?” என்று அக்கறையோடு விசாரிக்கிறார் மற்றொருவர்.
  • ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் பற்றி இத்தனை சந்தடிக்கிடையிலும் ஒருவர் கிசுகிசுக்கிறார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சராக பிரமோத் மகாஜன் இருந்த காலத்திலிருந்தே இதுதான் மைய மண்டபக் காட்சி. முக்கியமான விவாதங்களின்போதுகூட உள்ளே இருக்க பல உறுப்பினர்கள் விரும்புவதில்லை.

இந்தப் பின்னணியில்தான் அந்த 5 இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சிப் பரவசத்தையும் ஏற்படுத்தியது. பொழுது விடிந்தும் விடியாத காலை நேரத்தில் 5 இளம் எம்.பி.க்கள் வியர்க்க விறுவிறுக்க கைகளில் பெட்டிகளுடன் புது தில்லி ரயில் நிலையத்துக்கு ஓடி வருகின்றனர். ரயில் புறப்படுவதற்கு முன்னதாக வந்துவிட்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதியாக ஆசுவாசப்படுகின்றனர்.

வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்த 5 பேரும் அதிகாலையிலேயே ரயிலைப் பிடிக்க வந்திருப்பதற்குக் காரணம் அரசியல் அல்ல, அவர்களுடைய தொகுதிப் பிரச்சினையும் அல்ல. அதைத் தெரிந்து கொண்டபோதுதான், கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகளைப் பின்பற்றி செய்தி சேகரிக்கும் எனக்கு பூரிப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில், குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவுக்குக் காரணம் என்ன? அரசின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் எந்த அளவுக்குப் பயன் தருகிறது? அதை வெற்றியடைய வைக்க என்ன செய்யலாம் என்று நேரில் அறிந்துவரத்தான் அவர்கள் இப்படி ஒன்றாகக் கிளம்பிவிட்டனர்.

காங்கிரஸ், பாரதீய ஜனதா என்று எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் அவர்கள்.

காலை 6.15 மணிக்குப் புறப்படும் குவாலியர் “சதாப்தி’ எக்ஸ்பிரûஸப் பிடிக்க காலை 5.45-க்கு வரவேண்டும் என்று தீர்மானித்த

  1. சச்சின் பைலட்,
  2. சுப்ரியா சுலே,
  3. ஷாநவாஸ் உசைன்,
  4. ஜெய பாண்டா,
  5. பிரேமா கரியப்பா என்ற அந்த 5 பேரும் 5.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டனர். முதல் வகுப்பில் இலவசமாகவே செல்லலாம் என்றாலும் குளிர்பதன வசதியுடன் கூடிய “சேர்-கார்’ வகுப்பிலேயே அமர்ந்து கொண்டனர். அவர்களுடன் கஜல் பாடகர் பினாஸ் மசானி, நடிகர் கெüர் கர்ணிக் ஆகியோரும் மும்பையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டனர்.

“”ஊட்டச்சத்து குறைவுக்கு எதிரான மக்கள் கூட்டணி” என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நம் நாட்டில் 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேர் ரத்த சோகை நோயால் அவதிப்படுகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் காணப்படுகிறது. முதலில் பாஜக ஆளும் மாநிலத்துக்குப் போனாலும் அடுத்து காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரம், அடுத்து பாஜக-பிஜு ஜனதா தளம் ஆளும் ஒரிசா என்று எல்லா மாநிலங்களுக்கும் செல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

குறைகளைக் கண்டுபிடித்து அதை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தாமல், அரசுக்கு நல்ல யோசனைகளைக் கூறுவதே இவர்கள் நோக்கம். மகாராஷ்டிரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்களுடன் சேர்ந்து இதில் செயல்பட ஆரம்பித்ததால் நல்ல பலன்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

சதாப்தி எக்ஸ்பிரஸ் குவாலியரை அடைந்ததும் ரயில் நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் இளைஞர்கள் பட்டாளம் ஒன்று, “”சச்சின் பைலட் வாழ்க” என்று விண் அதிர கோஷமிட்டது. தருமசங்கடத்தில் நெளிந்த பைலட், அவர்களைக் கையமர்த்தி, “”அரசியல் விஷயமாக நான் இங்கே வரவில்லை, என் பின்னால் வராதீர்கள்” என்று அடக்கமாகக் கூறிவிட்டு, பாஜகவின் ஷாநவாஸ் உசைனை அருகில் அழைத்து அணைத்தபடி நின்றார். தொண்டர்கள் அதைப் புரிந்துகொண்டு உற்சாகமாக கை அசைத்து விடை பெற்றனர்.

கலிங்க நகர், சிங்குர், நந்திகிராமம், விவசாயிகளின் தற்கொலை என்று பத்திரிகைகளில் அடிபடும் செய்திகள் அனைத்துமே, “”நாட்டில் வளர்ச்சி இருந்தாலும் அது சமத்துவமாக இல்லை” என்பதையே காட்டுகிறது. இந்தியாவின் குழந்தைகளில் சரிபாதி ரத்த சோகையுடன் இருந்தால் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?

ஐந்து இளம் எம்.பி.க்கள் சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இது முதல் அடிதான். இவர்களுடைய ஒற்றுமையும், லட்சியமும் மேலும் வலுவடைந்து, இது மாபெரும் இயக்கமாக மாறுமா, மாரத்தான் ஓட்டமாக உருவெடுக்குமா, இவர்களுக்கு அதற்குண்டான தெம்பு இருக்குமா என்பதெல்லாம் காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.

ஆனால் இந்த முயற்சி, நம் அனைவராலும் மனமாரப் பாராட்டப்பட வேண்டியது என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழில்: சாரி.

Posted in Anganvadi, Appearance, Assembly, Biju Janata Dal, BJD, BJP, Children, Congress, Delhi, Female, Field, Food, Gwalior, Hygiene, Janata Dal, Jaya Panda, Kariappa, Kid, Lok Saba, Madhya Pradesh, maharashtra, Malnutrition, MP, NCP, Neeraja, Neeraja Chowdhury, New Delhi, NGO, Non-profit, Nutrition, Orissa, Panda, parliament, pilot, Politics, Pramod, Pramod Mahajan, Prema Kariyappa, Promotion, Sachin Pilot, Shanavaz, Shanawaz Hussein, Shatabdi, Shupriya Sule, Tour, Trip, Women | 1 Comment »