Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Bombay’ Category

TJS George – Good old Bombay days: India – North vs South in Mumbai

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

அது பம்பாய் காலம்…

டி.ஜே.எஸ். ஜார்ஜ்


சில நாள்களுக்குமுன் காலமான பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. கரஞ்சியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே பம்பாயில் “வட இந்தியர்’களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர் குண்டர்கள். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. ஆனால், சிறப்புமிகு விழுமியங்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருப்பதையும், மறுபுறம் அந்த இடத்தில் தேசபக்தி என்ற போர்வையில் குண்டர்களின் ஆட்சி தலைதூக்கிக் கொண்டிருப்பதையும் அவ்விரு சம்பவங்களும் சித்திரித்தன.

அந்த நாளைய பெருமைக்குரிய பம்பாயின் சின்னமாகத் திகழ்ந்தவர் ருஸ்ஸி கரஞ்சியா. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலான சமயங்களில் காந்திஜி தங்கியிருந்தமையால் ஒரு வகையில் 1940-களில் இந்தியாவின் அரசியல் தலைநகரம் போலவே திகழ்ந்தது பம்பாய். காந்திஜி தங்கியிருந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தார் ஜின்னா.

1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக மட்டுமன்றி, நாட்டியம், நாடகம், இலக்கியம், ஓவியம் ஆகிய கலைகளின் தலைநகரமாகவும் மேட்டுக்குடி வாழ்க்கை நளினங்களின் இருப்பிடமாகவும் அறிவுச்சுடர் பிரகாசிக்கும் நகரமாகவும் திகழ்ந்தது பம்பாய். கொடுக்கவும் எடுக்கவும், பகிரவும் கற்கவும் உலகமே கூடும் இடமாக இருந்தது பம்பாய்.

எடுத்துக்காட்டாக, அன்று கலா கோதா பகுதியில் உள்ள ஓர் அறையில் முற்போக்குக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சமுதாயத்துக்கு அறிமுகமே ஆகியிராத, படைப்பார்வமிக்க கே.எச். ஆரா, வி.எஸ். கெய்தாண்டே, எஸ்.எச். ராஸô, எப்.என். செüஸô, எம்.எப். ஹுசைன், கே.கே. ஹெப்பார் போன்றவர்கள். இன்று அவர்கள் கலை உலக மகுடத்தில் மாணிக்கங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலா கோதாவோ, இன்று உலகின் சிறந்த கலைநகரங்களுக்கு இணையானது என்று கூறும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.

தற்செயலாக நிகழ்ந்ததோ, என்னவோ; ஆனால், அன்றைய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் காக்க வந்த தேவதைகளைப்போல வந்தனர், ஜே.ஜே. கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் வால்டர் லாங்கமர், விளம்பர உலகின் குருவான ரூடி வான் லேடன், பத்திரிகை ஆசிரியரான சி.ஆர். மண்டி ஆகிய திரிமூர்த்திகள். ஒரு முழுத் தலைமுறையின் அழகியல் உணர்வுகளை, சிந்தனைகளை வடிவமைத்து வளர்த்தெடுத்தனர் அவர்கள்.

ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தியர்களா, வட இந்தியர்களா என்று யாரும் அன்று கேட்கவில்லை. அன்றைய பம்பாயின் சிறப்பு அத்தகையது. “”இந்தியாவின் உயிரோடு கலந்தது; அதன் ஓர் அங்கம்” என்ற, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பர்மா ஷெல் நிறுவன விளம்பர வாசகங்களைப்போல, இந்திய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் அவர்கள்.

அன்று பாரீஸ் நகரிலிருந்து இந்தியா திரும்பிய ராஜா ராவ் அளித்த உத்வேகத்தில், “சேத்தனா’ என்ற பெயரில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதுவும் கலா கோதா பகுதியில்தான் அமைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க ழான் பால் சாத்தரின் சிற்றுண்டிச்சாலையாக இருக்கவில்லை. அங்கு வழக்கமாக வருவோரில் முல்க் ராஜ் ஆனந்தும் ஒருவர்.

அங்கிருந்து சில கட்டடங்கள் தள்ளி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார், நாடக உலகுக்குப் புதிய திசைவழியைக் காட்டிய இப்ராகிம் அல்காஜி. அப்போது அங்கிருந்த ஒரே ஆடம்பர ஹோட்டல் தாஜ் மட்டும்தான். அன்றைய வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அம்பாசடர் ஹோட்டல். ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சி ஓஹோவென்றிருந்தது இந்தியா காபி ஹவுஸ்.

முற்றிலும் மாறுபட்ட நாகரிகத்துக்கு மாறத் தயாராக இருந்தவர்களுக்காகவே திறக்கப்பட்டிருந்தது கொலாபாவில் இருந்த லெப்போல்ட் கஃபே. “”சாந்தாராமை”ப் பற்றி எழுதுவதற்கும். “லெப்போல்டை’ உலகம் முழுவதும் பிரபலமாக்குவதற்கும் கிரகோரி டேவிட் ராபர்ட்ஸýக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும்.

மொரார்ஜி தேசாய் ஆட்சி நடந்துகொண்டிருந்ததும், அவரது மதுவிலக்குக் கொள்கையும் அமலில் இருந்ததும் அந்த பம்பாயில்தான். ஒரு சுவர் அலமாரி முழுவதும் உலகின் மிகச் சிறந்த விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் அணிவகுத்து நின்ற, கரஞ்சியாவின் மெரைன் டிரைவ் இல்லம் இருந்ததும் அதே பம்பாயில்தான்.

உண்மையிலேயே உலகப் பண்பாட்டில் ஊறியவர் கரஞ்சியா. மாமனிதர்களுடன் பழகிய அதே நேரத்தில், சாமானியர்களின்பாலும் அக்கறை கொண்டிருந்தவர் அவர்.

தனது அலுவலக உதவியாளருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமானால், ஆசிரியர் குழுக் கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் கரஞ்சியா. தினமும் காலை 11 மணிக்கு நீர் கொண்டு தரும் கடைநிலை ஊழியருக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் தவறாதவர் அவர்.

பழைய உலகின் மாண்புகளையும் நவீன உலகின் நளினங்களையும் சிறந்த கலாசார விழுமியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியவர் ருஸ்ஸி கரஞ்சியா. அன்றைய சிறப்புமிகு பம்பாயைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் அவர்.

ஆனால் இன்றோ, போயேபோய்விட்டன அந்தப் பழைய பெருமைகளெல்லாம்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in 1947, BJP, Bombay, Culture, Divided, Federal, Freedom, George, Heritage, Independence, Karanjia, Mumbai, Nation, National, North, Russy, Russy Karanjia, Sentimental, Sentiments, Separate, Separatists, Shiv Sena, Shivsena, South, State, Thackeray, Tradition, Unity | Leave a Comment »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

Dawood Ibrahim: India CBI vs Pakistan ISI in US of America’s CIA

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

———————————————————————————————————————–
தாவூத் இப்ராகிம் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு- பாகிஸ்தான் உளவுப்படை முடிவு

இஸ்லாமாபாத், ஆக.8-

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் தன்கூட்டாளிகள் சோட்டா ஷகீல், டைகர் மேமனுடன் பாகிஸ் தானில் பதுங்கி இருக் கிறான்.

இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு அவன் ஆயுத சப்ளைசெய்து வரு வதால் அவனை பிடித்து ஒப்படைக்கும்படி இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக பல தடவை கேட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் அல்- கொய்தா இயக்கத்துக்கு நிதி உதவி, ஆயுத சப்ளை செய்வதால், அவனை தங் களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று அமெரிக்க கூறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவூத் இப்ராகிம் சோட்டா ஷகீல், டைகர் மேமன் ஆகிய மூவரையும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண் டையில் இடது காலில் காயம் அடைந்து கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் தாவூத் இப்ராகிம் பற்றி குழப்பம் ஏற்பட்டது. தாவூத் இப்ராகிம் தன் செல்போனை எடுத்து பேசாததால் அவர் பிடிபட்டு இருக்கலாம் என்று அவரது கூட்டாளிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்திய உளவுத்துறை இது வதந்தியாக இருக்கலாம் என்றது, என்றாலும் நேற்று காலை மத்திய அரசு, “தாவூத் இப்ராகிமை ஒப்படையுங்கள்” என்றும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது.

தாவூத் இப்ராகிம் பற்றி இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்களை வழக்கம் போல பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்திë தொடர்பாளர் பிரீகேடியர்ஜாபித் இக்பால் சீமா கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் யாரும் பாகிஸ்தானில் இல்லை. அந்த பெயருடைய யாரையும் பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ கைது செய்யவில்லை. அவரை நாங்கள் கைது செய்ததாக வெளியான தகவல்களில் சிறி தும் உண்மை இல்லை.

இத்தகைய தகவலை பரப்பி விட்டது யார் என்று தெரியவில்லை. அதிபர்முஷ ரப் ஞாயிற்றுக்கிழமை முதல் கராச்சியில்தான் இருக்கிறார். இதனால் கராச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கராச்சியில் துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரிய நகரில் அதை எப்படி மூடி மறைக்க முடியும்ப

இவ்வாறு பிரீகேடியர் ஜாவீத் இக்பால் சீமா கூறினார்.

தாவூத் இப்ராகிம்பற்றி வெளியாகி வரும் முரண் பாடான தகவல்கள் துபாய், மற்றும் மும்பையில் உள்ள உறவினர்களையும், கூட் டாளிகளையும் தவிக்க வைத் துள்ளது. தாவூத், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவ ரையும் கடந்த 3 தினங்களாக தொடர்பு கொள்ள இய லாததால் நெருங்கிய உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனாபர்க்கர் நேற்று குடும்ப உறுப்பினர் களுடன் சேர்ந்துநீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்டார். அவர் கூறுகையில் “கடந்த சில தினங்களாக தாவூத்துடன் பேச முடியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்ப ட்டுள் ளது” என்று கவலையுடன் கூறினார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் போலீசார், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று காலை உறுதி செய்த னர். போலீஸ் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், “தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஐஎஸ்.ஐ. கைது செய்துள்ளது. ப.லுசிஸ்தான் தலைநகரான குயட்டாவின் புறநகரில் ஒரு பங்களாவில் அவர்கள் மூவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

போலீசார் வெளியிட்டுள்ள இந்த தகவல் தாவூத் இப்ராகிம் குடும்பத்திலும் கூட்டாளிகள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ் தான் வாயை திறந்து உண் மையை வெளியிடாத வரை இந்த விவகாரத்தில் குழப் பமே மிஞ்சும் என்ற நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் காதும் காதும் வைத்தது போல மிக ரகசியமாக அமெ ரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முடிவு செய் துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்திடம் அவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.

இது சாத்தியப்படாதபட் சத்தில் தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பே சுட்டுக் கொன்று விடும் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியால் முஷரப் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா கேட்டபோது பாகிஸ் தான் தாவூத் எங்களிடம் இல்லை, இல்லை என்று சாதித்து விட்டது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் தாவூத் இப்ராகி மின் அல்-கொய்தா தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்தது.

இதனால் நெருக்கடிக்குள் ளான பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம் தலைவலியாக மாறிவிட்டதால் அவன் கதையை முடித்து விடலாம் என்ற உச்சக்கட்ட முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தாவூத் இப்ராகிமுக்கு சர்வதேச அளவில் பரம எதிரியாக இருப்பவன் சோட்டா ராஜன். இவனும் மும்பை நிழல் உலக தாதாக் களில் ஒருவன் ஆவான். சிங் கப்பூரில் பதுங்கி இருக்கும் இவன் கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் பாகிஸ் தானில்தான் இருக்கிறான். அங்கு முகத்தை சர்ஜரி செய்து மாற்றி உள்ளான். அடிக்கடி ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு போய் வருகிறான்.

என் துப்பாக்கி குண்டுகளுக் குத்தான் அவன் சாக வேண் டும். என்னுடைய இந்த லட் சியம் நிறைவேறும் வரை நான் ஓய மாட்டேன்.

இவ்வாறு சோட்டா ராஜன் கூறினான்.
———————————————————————————————————————–
13 ஆண்டுகள் தலைமறைவு- மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுடன் கைது

மும்பை, ஆக. 7-

1993-ம் ஆண்டு 300 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு “மூளை” யாக இருந்து சதி திட்டத்தை நிறை வேற்றியவன் தாவூம் இப்ராகிம்.

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த இவன் மும்பையில் குண்டுகள் வெடிப்பதற்கு முந்தின நாளே கூட்டாளிகளுடன் துபாய் வழியாக பாகிஸ் தானுக்கு தப்பிச் சென்று விட்டான்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவன் தங்கி இருந்தான். அவனுக்கு தேவையான எல்லா வசதி களையும் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் உளவுத் துறையும் செய்து கொடுத்தது. பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ள தாவூத் இப்ராகிம் கடந்த 13 ஆண்டுகளாக கராச்சியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

இதைக்கண்டு பிடித்த இந் திய உறவுத் துறை கராச்சி யில் இருக்கும் தாவூத் இப் ராகிமையும், அவன் கூட் டாளிகளையும் கைது செய்து ஒப்படைக்குமாறு வேண்டு கோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் யாரும் இல்லை என்று அறிவித்தது. கடந்த 13 ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் பற்றிய எல்லா தக வல்களையும் பாகிஸ்தான் மறுத்தே வந்தது.

கடந்த 2005-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தன் மூத்த மகள் மக்ரூக் இப்ராகிமை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் மகன் ஜுனையட் மியான்டட்டுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் தாவூத் இப்ராகிம் கராச்சியில் வாழ்வது உறுதி படுத்தப்பட்டது. அப்போதும் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிமை பிடித்து இந்தி யாவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை.

இதற்கிடையே உலக அள வில் பின்லேடனின் அல் கொய்தா பயங்கர வாதி களை ஒடுக்க தீவிர நடவடிக் கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் பார்வையில் தாவூத் இப்ராகிம் சிக்கினான். உலகம் முழுக்க “ஹெராயின்” போதை பொருட்களை வினியோகிக்கும் தாவூத் இப் ராகிமின் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பல வகை களில் மறைமுக உதவிகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தேவை யான ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் ரகசியமாக கடத்தி சென்று ஒப்படைக்கும் படுபாதக செயலை தாவூத் இப்ராகிம் கும்பல் செய்தது. அதோடு அல் கொய்தா இயக் கத்துக்கு அவன் நிதி உதவியும் செய்தான். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, தாவூத் இப்ராகிமை பிடித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை விடுத்தது.

இதற்கும் பாகிஸ்தான் வழக்கம் போல மழுப்பலான பதிலையே அளித்தது. தாவூத் இப்ராகிமுக்கும், அவனது கும்பலுக்கும் பாகிஸ்தான் அரசே அடைக்கலம் கொடுப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, அவர்களை கராச்சியில் இருந்து விரட் டும்படிமுஷரப்புக்கு நெருக்கடி கொடுத்தது.

இந்த நிலையில் கராச்சியில் உள்ள ரீஜெண்டு கிரவுன் பிளாசா ஓட்டலில் தாவூத் இப் ராகிமுக்கும், பிர்ரா ஜ×தீன் பவீசா என்ப வனுக் கும் இடையே கடந்த வியா ழக்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தாவூத் இப்ராகிம் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியா னது. இது உலகம் முழுக்க தாதா கும்பலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய சம்பவம் எது வும் நடைபெறவில்லை என்று கராச்சி போலீசார் மறுத்தனர்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் உளவுபடையிடம் சிக்கி உள்ள தகவல் நேற்றிரவு வெளியானது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ் தான் எல்லையில் உள்ள ஒரு ஊரில் தாவூத் இப்ராகிம் பதுங்கி இருந்த போது ராணுவத்தினரும், உளவுத் துறையினரும் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். உளவுத் துறையினர் அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமுடன் அவனது நம்பிக்கைக்குரிய கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய டைகர் மேமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குவாட்டா நகரின் புறநகரில் உள்ள ஒரு பங்களாவில் பலத்த பாதுகாப்புடன் உளவுத் துறை வைத்துள்ளது. இது பற்றி சர்வதேச நாடுகள் கேட்டதற்கு வழக்கம் போல பாகிஸ்தான் மவுனம் சாதித்து

வருகிறது.தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்துள்ளானாப அல்லது அவனை பாகிஸ்தான் உளவு படை பிடித்து வைத்துள்ளதா? என்பன போன்ற எதையும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. இதில் பதில் கூறினால் தனக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. எனவே தாவூத் இப்ராகிம் பிடிபட்டுள்ளதை மூடி மறைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

தாவூத் பற்றி வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி என்று இந்திய உளவுத்துறை கூறி உள்ளது. தாவூத்தை காப்பாற்ற பாகிஸ்தான் நாடக மாடுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

என்றாலும் தாவூம் இப்ரா கிம் உளவுப்படையிடம் சிக்கி இருப்பதை மும்பை, துபாய், லண்டனில் உள்ள அவன் கூட்டாளிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போன்களில் இதுவரை அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவதால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போனை எடுத்து பேசும் உளவுப் படையினர் மறு முனையில் பேசுபவரிடம் “உங்கள் பெயர் என்னப எங்கு இருந்து பேசு கிறீர்கள்ப சொல்லுங்கள். தாவூத்பாயிடம் சொல்லி விடுகி றோம்” என்றே சொல்கி றார்களாம்.

கடந்த 13 ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் தாவூத் இப்ராகிமிடம் இருந்து இப்படி பதில் வந்ததே இல்லையாம். இதனால் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள், தொழில் நண்பர்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுத சப்ளை செய்து வருவதால் தாவூத் இப்ராகிம் நடவடிக்கையை முடக்குவதை மிக முக்கிய பணியாக இந்தியா கருதுகிறது.

அது போல உலக அளவில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவுவதால் தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டிக்க அமெரிக்க ராணுவம் துடி துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியா, அமெரிக்கா இரண்டுமே தாவூத் இப்ராகிமை பெற சர்வதேச போலீஸ் உதவியை நாடி உள்ளன. ஆனால் பாகிஸ்தான் தன் மவுனத்தை கலைத்து தாவூத் இப்ராகிம் பற்றிய மர்மங்களை உலகுக்கு வெளிப்படுத்துமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.
———————————————————————————————————————–

Posted in 1993, 9/11, AK-47, AK47, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Al-Umma, America, Arabia, Arms, Arrest, Assets, Backgrounder, Baluchistan, Bharatiya Janata Party, Biosketch, BJP, Blast, Bombay, bombings, Bombs, CBI, Chhota, Chhota Rajan, Chhota Shakeel, Chota, CIA, Clifton, Clifton beach, Clifton Kahakasha, Cocaine, Commerce, Company, Criminal, Currency, Custody, D-company, Dawood, Dawood Ibrahim, dead, Dealer, Death, defence, Defense, Detained, Detainee, Don, Drugs, Dubai, Dutt, Estate, Extortion, extradition, Extremism, Extremist, Extremists, Faces, Fake, Finance, Gulf, Haseena, Haseena Parkar, Hasina, Havala, Hawala, Hindutva, Ibrahim, Illegal, India, Intelligence, Inter Services Intelligence, Interpol, Investigation, Iraq, ISI, Islam, Jama’at ud-Dawa, Justice, Karachi, Kovai, Law, Masjid, Memon, Military, Money, Movies, Mumbai, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Muslim, Narcotics, Navy, NDA, Order, Pakistan, Parkar, people, Pervez, Pervez Musharraf, Police, Property, Quetta, Rajan, RSS, Saudi, Security, Shakeel, Smuggle, smuggler, Smuggling, Terrorism, terrorist, Terrorists, Tiger, Treaty, UAE, Underworld, UPA, US, USA, Weapons, WTC, Yakub, Yakub Memon | Leave a Comment »

Sanjay Dutt sentenced to 6 years in prison – Film fraternity rallies behind & to appeal against verdict

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெற்றிக்கண்: சஞ்சய் தத் – கோடே

IdlyVadai – இட்லிவடை: சஞ்சய் தத்துக்கு 6 ஆ�

சற்றுமுன்…: பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

சற்றுமுன்…: சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

சிவபாலன்: நீயூஸ் மீடியாக்களை எத


பாதியில் சினிமா படம்: சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை, ஜுலை. 31-மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக, மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது

  1. மெகபூபா,
  2. தாமால்,
  3. கிட்நாப்,
  4. அலிபாக்,
  5. மிஸ்டர் பிராடு

ஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.
மிஸ்டர் பிராடு, அலிபாக், கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால், இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.

மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.

இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.

இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக “பீகேட்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
———————————————————————————————————-

14 ஆண்டுகளாக நடந்த விசாரணை

எதிர்பாராத திருப்பங்களையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.

257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸôர் யாகூப், எஸ்ஸô, யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸô, யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும், 7 ஆயிரம் பக்க ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6,700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38,070 கேள்விகள் கேட்கப்பட்டன.

குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.

———————————————————————————————————-
சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு!

சுநீல் தத், நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே, ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும், சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார்.

பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா, நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெüரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் (48).

சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.

பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.

தாயின் மரணம், மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத், ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.

இந் நிலையில்தான், மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய், யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு, அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.

அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெüரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

முன்னாபாய்: அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. “”முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.” என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட்டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல, முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————————————————————————————-

கண்டிப்பான நீதிபதி, கனிவான கனவான்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே (54) கண்டிப்பான நீதிபதி, கனிவான மனிதர்.

ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது, ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது, ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இசட் பிரிவு பாதுகாப்பு:

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே, குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.

ஆர்தர் சாலையில் உள்ள சிறையில், பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.

வேலையில் அக்கறை உள்ளவர்.

விடுமுறை எடுக்காதவர். 13,000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும், 7,000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும், 6,700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறையே எடுக்கமாட்டார்:

விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ, இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ, அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து, அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே, ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.

சாய் பாபாவின் பக்தரான கோடே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது, இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987-ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை, திறமை காரணமாக 1993-ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.

———————————————————————————————————-

சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல்

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் “தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.

“காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக, “பிஸ்டல்’ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும், “”ஏ.கே. 56” ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது, பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது, மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது, அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார்; அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள், அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

தவறு செய்துவிட்டேன்: நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள, தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார்.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத், நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன், “”14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன்; சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள்” என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து, “”எல்லோருமே தவறு செய்கிறார்கள்” என்றார்.

நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு (சஞ்சய் தத்) கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸôர் கைது செய்யவோ, சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

அதை நீதிபதி ஏற்று, சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸôருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு, அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.

நீதிபதி கோடே, சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி, ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.

சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.

யூசுப் நல்வாலா, கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும், வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.

கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா, அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.

சட்டவிரோதமாக ஒன்றல்ல, இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள், அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல, மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி; இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸôரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து, உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

“3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை’ என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.

வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத், உஜ்வல் நிகமிடம் சென்று, “”நன்றி ஐயா” என்று கூறி கையை குலுக்கினார்.

———————————————————————————————————-

சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு

மும்பை, ஆக. 1-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.

இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.

இந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2-வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.

ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.

இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.

இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.

முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.

அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க், கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.

இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
—————————————————————————————————–
கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை: தினசரி ரூ.40 சம்பளம்

முப்பை, ஆக. 2-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10-ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

ஒன்றாம் நம்பர் செல் “புத்தர் செல்” என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக, மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.

நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ, பிஸ்கட், ரொட்டி, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.

நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி, அரிசி உணவு, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.

நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா, நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள், டவல், சோப்பு, சீப்பு, பற்பசை, பவுடர், போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் ïசுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன், சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.

அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய், தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில், விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.

கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.

சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள், மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.

சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.

நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.
—————————————————————————————————–

சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்?

01 ஆகஸ்ட் 2007 – 14:43 IST

இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.

பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து, அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில், சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.

பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும், தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.

விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு, உடைகள், வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.

இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.

விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.

சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை, தோட்ட பராமரிப்பு, மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை, தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.

தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.

மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி, அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.

—————————————————————————————————–

என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்…?

புணே, ஆக. 4: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (48) வியாழக்கிழமை புணே “ஏர்வாடா’ சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை விதிகளின்படி,

  • ஜவுளி,
  • சலவை,
  • பேக்கரி,
  • பேப்பர் பிரிண்டிங்,
  • தச்சு வேலை,
  • பெயிண்டிங் ஆகியவற்றில்

ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.
“பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும்’ என்றார் உயரதிகாரி ஒருவர்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக, மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.

இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால், புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.

—————————————————————————————————–

ஜெயிலில் வேலை: பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத்

புனே, ஆக. 8-

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.

இதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.

அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.

அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.

இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
———————————————————————————————————————–

சல்மான்கான், சஞ்சய்தத் கைது: இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம்

மும்பை, ஆக. 30-

ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத், சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள். சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன், முன்னாபாய் சாலே அமெரிக்கா, அலிபாக், கிட்நாப், மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான், மெயின் யுவ்ராஜ், வாண்டட் டெட்அன்ட் அலைவ் (போக்கிரி ரீமேக்), ஹலோ, ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.

இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. “போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை” என்கிறார் போனிகபூர்.

இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.

Posted in abuse, Acquaintance, Actors, Actress, AK-47, AK47, Arms, Black, Blast, Bollywood, Bombay, Bombs, Bullets, cancer, Capital, case, Cash, Celebrity, Cinema, Cocaine, Compensation, Corrections, Cost, Courts, Crime, Currency, dead, Drugs, Dutt, Economy, Extremism, Extremists, Fame, Father, Films, Finance, Gode, Godey, guns, HC, Income, Jail, job, Judge, Justice, kalashnikov, Kodey, Kote, Law, Loss, Misa, Movies, MP, Mumbai, Munnabai, Munnabhai, Nargees, Nargis, Order, Police, POTA, Prison, Producer, Production, Profits, Punishment, release, revenue, Rifles, Rupees, Salary, Sanjai, Sanjay, SC, Sentence, Son, Sunil, Sunil Dutt, TADA, terror, Terrorism, terrorist, Terrorists, verdict, Violence, Weapons, Work | Leave a Comment »

The High Cost Of Living in Chennai

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நகரம்: சென்னை – 133!

ரவிக்குமார்

தலைப்பைப் பார்த்துவிட்டு “133′-ஐ ஏதோ தபால்துறையில் பயன்படுத்தப்படும் பின்கோட் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலக அளவில் வாழ்வதற்கு அதிகமான செலவு பிடிக்கும் நகரங்களில், நமது சென்னை மாநகரம் 133-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. “காஸ்ட் ஆஃப் லிவிங் பெங்களூர்ல ரொம்ப அதிகம்பா’ன்னு யாராவது கூறினால்… நம்பாதீர்கள். ஏனென்றால், பெங்களூர் இந்த வரிசையில் நமக்கு அடுத்துதான் வருகிறது!

மாஸ்கோ, லண்டன், சீயோல், டோக்கியோ, ஹாங்காங், கோபன்ஹெகன் வரிசையில் நம்முடைய சென்னையும். அமெரிக்காவின் புகழ்பெற்ற “மெர்சர்ஸ்’ நிறுவனம் தான் உலகளாவிய இந்தச் சர்வேயை ஆறு கண்டங்களில் எடுத்திருக்கிறது. சென்னைவாசிகள் தங்களின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில், அந்தச் சர்வேயில் இருக்கும் இதர விவரங்களைப் பற்றியும், அது தொடர்பாக சிலரின் கருத்துகளும் இதோ:

  • கல்வி,
  • பொருளாதாரம்,
  • அன்னியச் செலாவணியை கவரும் வகையிலான திட்டங்கள்,
  • போக்குவரத்து,
  • உடை,
  • உணவு வகையிலான மாற்றங்கள்,
  • மக்களின் வாங்கும் திறன்,
  • அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,
  • தனிமனித வருவாய்,
  • வீட்டு உபயோகப் பொருள்கள்,
  • பொழுதுபோக்கு அம்சங்கள்…

இப்படி 200 வகையான அளவுகோல்களின் மூலம், வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களை தரப்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக தேர்வாகியிருப்பது

  • மாஸ்கோ நகரம்.
  • சீயோல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆசியாவின் எட்டு நகரங்கள் 50-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
  • மும்பை 52-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
  • புதுதில்லி 62-வது ரேங்கில் இருக்கிறது.

அமெரிக்காவின் மெர்சர்ஸ் நிறுவனம் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களாக 143 நகரங்களை ஆறு கண்டங்களில் அறிவித்திருக்கிறது. இதில் 133-வது இடத்தை சென்னை பெற்றிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?சென்னையைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. வியாபாரம், தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் ஒருநாளில், அதிகமான எண்ணிக்கையில் சென்னை நகரத்துக்கு வந்து போகும் மக்கள் தொகை (Floating Population) நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.

“”சென்னை ஒரு காஸ்ட்லியான நகரமாக இருப்பதற்கு, பரவலாக அதிகரித்திருக்கும் தனிநபர் வருமானமும் ஒரு காரணம். மற்ற நகரங்களைப் போல மக்கள் இங்கிருந்து புறநகர்களுக்கு இடம்பெயர்வதற்கு விரும்புவதில்லை” என்கிறார் மத்திய வணிக வளர்ச்சிக் குழுமத்தின், தமிழ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ரஃபிக் அகமத்.

“”தங்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பணி செய்யும் இடத்திற்கு அருகாமையில் வாடகை வீட்டிலாவது இருந்து நிலைமையைச் சமாளிப்போம்” என்ற யோசனையோடு நாளுக்கு நாள் புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

“”கும்மிடிப்பூண்டியில இருந்து நான் மட்டும் வேலைக்கு வந்துட்டிருந்தேன். அப்போது அங்கேயே ஒரு சின்ன ஸ்கூல்ல குழந்தைங்களைப் படிக்க வச்சிட்டிருந்தேன். இப்போ என் மனைவியும் வேலைக்குப் போறாங்க. அதனால தைரியமா சென்னைக்கு வந்துட்டோம். குறைஞ்ச வாடகைக்கு கும்மிடிப்பூண்டியில இருக்கிற எங்க வீட்டை விட்டுட்டு இங்க குடித்தனம் இருக்கிறோம். கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்கள நாங்க நினைச்சா மாதிரி நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்கிற திருப்தி இருக்கு” என்கிறார் சென்னை, சாலிக்கிராமத்திலிருக்கும் கல்யாணராமன்.

சென்னை நகரத்திற்குள் இடம் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகளின் மதிப்பும், ஃபிளாட் வகையான வீடுகளுக்கும் கூட இன்றைக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருக்கின்றது.

நாளுக்கு நாள் சென்னை நகரத்தில் பெருகிவரும் ஐ.டி. தொழில்நுட்ப வளாகங்களும், தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன. “”பெங்களூரோடு ஒப்பிடுகையில் நில வியாபாரம் சென்னையில் கடந்த சில மாதங்களில் விலை அதிகம் உயர்ந்திருக்கின்றது” என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சிலர்.

சென்னை-133 எஃபெக்டுக்கு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம். கடந்த 12 மாதங்களில் 6,985 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழிற்சாலைகளையும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் சென்னையில் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே ஆட்டோ-மொபைல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நகரம் என்ற அங்கீகாரத்தை சென்னை பெற்றிருக்கிறது.

உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் “நாஸ்காம்’ என்னும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதலீடுகளைச் செலுத்துவதற்கு தகுதியான ஒன்பது நகரங்களில், சென்னைக்கு மூன்றாவது ரேங்க் கொடுத்திருக்கின்றது.

-என்ன இருந்தாலும் பாரீஸ் போல வருமா… என்று இழுக்கும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கும் கீழே பத்து நகரங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுங்கள்!

Posted in 133, America, Analysis, Bombay, Boston, Chennai, Compensation, Consumer, Customer, Dress, Economy, Education, Exchange, Expenses, Finance, France, GDP, Homes, Household, Houses, Income, India, Inflation, Interest, job, Korea, LA, London, Madras, Moscow, Moskva, MoU, Mumbai, NYC, Paris, Price, Prices, Purchasing, Rates, Recession, Rent, Russia, Salary, Schools, Seoul, Stagflation, UK, US, USA, USSR, Work | Leave a Comment »

Kumutham Theernadhi – Black Friday: Movie Experiences by Viswamithran

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

குமுதம் தீராநதி
இந்திய சினிமா – விஸ்வாமித்திரன்
கருப்பு வெள்ளிக்கிழமை

ஆசிய சினிமா வரலாற்றில் அரசியல்ரீதியாக நிகழ்ந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படங்கள் சில நூறுகளுக்குள் அடங்கிவிடக் கூடியதுதான். அவற்றில் குறிப்பிடத்தக்க, நமது மனதிலிருந்து என்றும் அகலாத சமகாலப் படங்களாக, தென்கொரிய இயக்குநரான ஜேங்க் சன் வூவினது ‘பூவிதழ்’ (A Petal), இந்தோனேசிய இயக்குநரான கெரின் நுகரோகோவினது ‘கவிஞன்’ (A Poet) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அரசியல் சினிமா என்பது பற்றாக்குறை மிக்க பரப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பொதுவாக சினிமா போக்கென்பது. தனிமனித சுகதுக்கங்களைப் பற்றிய வரையறைகளுடன் எஞ்சிவிடுமாறே பெரும்பாலும் நிகழ்கின்றன.

அவற்றுள் ‘நல்ல சினிமா’ என்பது அவற்றை மேம்பட்ட உண்மையுடனும் யதார்த்தத்துடனும் வழங்கினவை மாத்திரமே. அவை பல்வேறுபட்ட போக்குகளை திரைப்பரப்புள் கொண்டு வந்திருந்தாலும், அனைத்தும் கதாபாத்திரப் பார்வைச்சார்புடனேயே அணுகப்பட்டவையாகும். ஒருவிதத்தில் அந்நிலை ஏற்கத்தக்கதுதானெனினும், நம்மைக் கடந்துவிட்ட அல்லது நாம் கடந்துகொண்டிருக்கிற அரசியல் வரலாற்றுத் தடங்களைப் பற்றிய சித்திரிப்புக்களை அவை நேரடித்தன்மையுடன் சுட்ட உதவியதில்லை. உதாரணத்திற்கு, தமிழில் வெளியான ‘ஹே ராம்’ படத்தை எடுத்துக் கொண்டால், மையக் கதாபாத்திரமான சாகேத் ராமினது பார்வைச் சார்பு மதிப்பீட்டின்படியே காந்திய நிலைப்பாடுகளை அப்படம் கணக்கிட்டுப் பார்த்தது. தனிமனித பாதிப்பின் நீண்டதூரப் பழிவாங்கலாக மாத்திரமே அப்படம் தனித்துவிடுகிறது. ‘பம்பாய்’, ‘இந்தியன்’ ஆகிய திரைப்படங்களையும் இவ்வகையில் இணைக்கலாம். இதைப்போலவே தமிழில் வந்த பல படங்கள் மையக் கதாபாத்திரங்களின் மனமதிப்பீட்டிற்கு ஏற்பவே தாம் கடக்கும் வரலாற்றுத் தடங்களைப் பதிவு செய்பவையாக இருப்பதுவே நடைமுறை.

எனவே, அரசியல் சினிமாவை நேரடித் தேவையுடன் திரைப்பரப்பிற்கு எடுத்துவரும் திரைப்படங்கள் ஏறக்குறைய இல்லை என்கிற நிலைதான் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனினும், படைப்பொளி மேலோங்கிக் கொண்டிருக்கும் இந்தி சினிமாவில் அக்குறைபாட்டை தீர்க்கவென ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ (Black Friday்) என்கிற இந்தித் திரைப்படம் 2007 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. வழக்கமான ஒரு இந்தி நடுநிலைத் திரைப்படமாக இருக்கும் என்று நம்பிச் செல்பவர்கள் ஆச்சரியங்களுடனும் அதிர்வுகளுடனும் அரங்கத்திலிருந்து வெளியேறுவது உறுதி. ‘லகான்’ திரைப்படத்திற்குப் பின்பு நீண்ட இடைவெளியில் உலகத் திரைப் பார்வையாளர் சமூகமே தலைநிமிர்ந்து பார்க்கும்படியான வாய்ப்பை ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ அளித்திருப்பது உலகளாவிய நல்ல சினிமாவை இந்திய/தமிழ் மட்டத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் முதலில் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம். ஏனெனில் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஆவணப் புனைவுப் படங்கள் (DocuFiction) ஆவணத்தன்மையையும் பெறாமல் புனைவுத்தன்மையையும் பெறாமல் இரண்டும் கெட்டானாகத் தேங்கிப் போய்விடுபவையாக உள்ளன. பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றிய தமிழ்த் திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். இப்படத்தின் முக்கியத்துவம் கருதி படத்தின் தேவையை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும், சினிமா என்கிற காட்சியூடக மொழியின் வெளிப்பாட்டினை (Expression of Film Language) இப்படம் பெற்றிருக்கவில்லை என்கிற குறைபாட்டை நாம் சமாதானப்படுத்திக் கொள்ளமுடியாது. நல்லதொரு வரலாற்று நாடகத்தன்மையையே அப்படம் கொண்டிருந்தது. இயக்குநர் திரைமொழியைவிட கதாபாத்திரத்தின் வரலாற்றைப் பதிவுபடுத்தும் மட்டற்ற ஆர்வத்தின் வெளிப்படுதலாகவோ அல்லது திரைமொழி குறித்த அவரது ஆர்வமற்ற நிலைப்பாட்டின் வெளிப்படுதலாகவோ இந்தப் பிழைகளை நாம் கணிக்கலாம். மணிரத்னம் போன்றவர்கள் இவ்விரு தளங்களையும் சமனாகக் கையாள முயன்றிருப்பினும் (இருவர், பம்பாய், மற்றும் குரு), கதாபாத்திரங்களின்மீது திணிக்கப்படும் காதல் ஈடுபாடு காரணமாக படத்தின் மூலச்செய்தி கைதவறிப் போய் விடுகிறது. கவர்ச்சிபூர்வமான அணுகல்தான் (Romanticised Approach) இத்தகைய படங்களின் வீர்யத்தை மட்டுப்படுத்திவிடும் ஒரு கூறாக அமைந்துவிடுகிறது. இந்தப் பலகீனங்களின் பின்னணியில்தான், ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படத்தின் உச்சபட்ச கலை, அரசியல் வெளிப்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் மதிப்பீடு செய்ய நேர்கிறது.

1993ஆம் ஆண்டு நடந்தேறிய பம்பாய் குண்டுவெடிப்புச் சம்பவங்களை முன்வைத்து ஹ§சேன் சேய்தி எழுதின புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1993, மார்ச் 9ஆம் தேதி பம்பாய் நகரைச் சுற்றி 12 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலில் சிக்கி 300_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1600_க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அந்தக் கொடிய சம்பவம் நடந்தது ஒரு வெள்ளிக்கிழமையன்று. மனித கூக்குரல்களும் ரத்த வீறிடல்களும் புகையின் கரிய அடர்த்தியும் படிந்த அந்த வெள்ளிக்கிழமைத் துயரின் சம்பவ விவரிப்பையும் அதன் சதித்திட்டங்களையும் பின்பு நேரும் கைதுவிசாரணைகளையும் தொகுத்து வழங்குகிறது ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படம்.

மார்ச் 9, 1993இல் பம்பாயிலுள்ள நவ் படா காவல்நிலையத்தில், காட்சிகள் தோன்றாத இருட்பின்னணியில் சிறைக்கதவு பலமாக ஓங்கியறையப்படும் சத்தத்தோடு துவங்குகிறது. அந்தச் சத்தமே படத்தின் தீவிரத்தன்மையை நோக்கிய நமது கவனத்தைக் கூர்மைப்படுத்திவிடுகிறது. தொடர்ந்து பூட்ஸ் காலோசை. காட்சி பரவ, சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட குல் மொஹமத் எனும் இளைஞனொருவன் காவல்துறையினரால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு வதைக்குள்ளாகிறான். நடைபெற்ற கலவரமொன்றில் அகப்பட்ட அவன், தனது சகோதரர்களுடன் கைதுசெய்யப்பட்டவன். ஆனால் உண்மையில் அவனது சகோதரர்களுக்கு அந்தக் கலவரத்தில் எந்தப் பங்கெடுப்பும் இல்லை. அவர்களை விடுவித்துவிடுமாறு அழுது புலம்புகிறான். பின்பு (சகோதர்களை விடுவிக்கச்செய்யும் விழைவின்பொருட்டாலும்) பயம் கலந்த அழுகையுனூடாக பம்பாயில் இன்னும் 3 நாட்களில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கப்போகும் சதித்திட்டம் பற்றிக் காவல்துறையினரிடம் கூறுகிறான். ஸ்டாக் எக்சேஞ்ச், மந்த்ராலயா மற்றும் சேனா பவன் ஆகிய இடங்கள் வெடிவைத்துத் தகர்க்க குறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறான். ஆனால் காவல்துறையினர் அதை நம்புவதாக இல்லை. ‘எளிதாக தரைமட்டமாக்க அவ்விடங்களெல்லாம் என்ன இனிப்புத் துண்டங்களா?’ என்று ஏளனத்துடன் பதிலளிக்கின்றனர். ஆனால் உண்மையில் வெடிப்பு நிகழப்போகிறது என்பதை அடுத்த காட்சி நமக்கு உறுதிப்படுத்தத் துவங்குகிறது.

சதி ஏற்பாட்டாளரான டைகர் மேமனது குழுவுரை ‘மார்ச் 12ஆம் தேதி திட்டம் நிகழ்த்தப்படவேண்டும்’ என்று நிகழ்கிறது. அடுத்து ஆங்காங்கு குண்டுகள் பொருத்தப்படும் செயல் விரிவாக காட்டப்படுகிறது. பம்பாயின் கடற்கரையோர புறாக்கள் உற்சாகமாகப் பறந்துகொண்டிருக்கின்ற வெள்ளிக்கிழமை. மதியம் 1.25 மணித்துளியில் ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடம் காட்டப்படுகிறது. மக்கள் அபாயமறியாது நெரிசலாக தத்தமது பணிகளைத் தாங்கி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டடத்தில் மணியோசை எழும்ப, திரைப்படத்தின் நகர்வு மெதுத்தன்மையை (Slow Motion) அடைகிறது. காலம் உறையத் துவங்குவதான மெதுத்தன்மை. மனித இரைச்சல் கரைந்து கட்டடத்தின் அடிப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டின் ஒலி மேலெழுகிறது. ஏறக்குறைய இதயத்தின் ஓசை நிதானத்திலிருந்து மெதுவாக பதற்றமடைந்து செல்வதைப் பிரதிபடுத்தும் சத்தம் அது. ஓசை வேகப்பட, கட்டடத்தின் அடிமட்டம் வெடித்துச் சிதறுகிறது. செவியின் தாங்கும்ஓசை அறுபட்டு அருகிருப்பவர்கள் மயக்கத்திலாழும்போது எழும்பும் பீதியடைந்த மௌனஇரைச்சல் திரைசூழ்கிறது. உயிரோடிருப்பவர்கள் நடந்ததை இன்னும் உணராவண்ணம் திக்பிரமை பிடித்து சுற்றிப்பார்த்துக் கொள்கிறார்கள். ரத்தம் மழைநீரெனச் சூழ, உடல்கள் சிதறி அசைவற்றுக் கிடக்கின்றன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நாம் நின்றிருந்து தப்பித்துவிட்டால் நமது நினைவு சிதறின பிரமையில் எவ்விதம் அச்சூழலைக் காண்போமோ, அச்சூழல் அப்படியே திரைப்பரப்பில் ஞாபகப்படுத்தப்படுகிறது. அக்காட்சியின் தீவிரப் படமாக்கம் திரைப்படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை அநேகமாக அழித்துவிட்டு குண்டுவெடிப்பு பிறப்பித்துவிடும் கோரத்தை நாம் கண்ணெதிரே கண்டுணர்வதுபோன்ற பிரதிபலிப்பைத் தந்துவிடுகிறது. ஐரோப்பிய சினிமாவில் மாத்திரமே யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் இத்தகைய தொழில் நுட்பக் கூறுகளை நாம் காணமுடியும். இப்படத்திலும் இத்தகைய கூறுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சினிமாவிற்குப் புதியதுதான்.

2.45 மணித்துளிக்கு வோர்லி பாஸ்போர்ட் அலுவலகத்தினருகே நிறுத்தத்தில் வந்து நிற்கும் பேருந்து மீண்டும் புறப்படும்போது குண்டுவெடித்துத் தகர்க்கப்படுகிறது. தொடர்ந்து நிஜமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திவடிவில் காட்டப்படுகின்றன. குறுகிய நிமிட இடைவெளிகளில் செஞ்சுரி பஜாரில் உள்ள பேருந்துநிறுத்துமிடம், ஏர் இந்தியா கட்டடம், தாதரிலுள்ள சிவசேனா பவனிற்கு அருகிலிருக்கும் லக்கி பெட்ரோல் பம்ப், ஜூகு சென்டர் ஹோட்டல் மூன்றாம் மாடியிலுள்ள அறை, சவேரி பஜாரின் வீதி, மக்கிமேர் காலனி, பிளாசா திரையரங்கில் வாகனம் நிறுத்துமிடம், பந்த்ராவிலுள்ள ஸீ ராக் ஹோட்டலின் 18வது மாடி, சாந்தா குருஸ் விமான தளத்திற்கருகிலுள்ள மற்றொரு சென்டர் ஹோட்டல் என துல்லியமான திட்டத்தின் அடிப்படையில் தகர்ப்புக்கள் நடத்தப்படுகின்றன. பம்பாய் நகரமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போகும்படி புகை குடித்த கருப்பு நாளான அவ்வெள்ளிக்கிழமை வலிகளடர்ந்த பொழுதாக உருவடைகிறது.

5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட படத்தின் முதல் பகுதி முதல் கைதுப் படலம். மகிம் எனும் பகுதியில், அல் ஹ§சைனி கட்டட விலாசத்திலுள்ள ரூபினா சுலைமான் மேமன் வீட்டிற்கு காவல்துறையினரோடு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ராகேஷ் மரியா செல்கிறார். அங்கு யாருமிருப்பதில்லை. பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்கையில் டைகர் பாயின் (டைகர் மேமன்) மூத்த சகோதரன்தான் சுலைமான் எனவும் அவரது துணைவியார்தான் ரூபினா என்பதும் தெரியவருகிறது. ஆனால் குண்டுவெடிப்பிற்கு முதல்நாள் டைகர் பாய் தனது உறவினருடன் துபாய்க்குத் தப்பிச்சென்றுவிட, இந்தக் குண்டுவெடிப்பில் டைகர் பாய் தொடர்புபட்டிருப்பது தெளிவுபடுகிறது. மார்ச் 14ஆம் தேதி டைகர் பாயின் அந்தரங்கக் காரியதரிசியான அஸ்கர் முகாதெம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறான். இந்தக் காட்சி மிகவும் நுட்பமான வகையில் எடுக்கப்பட்டிருப்பது இக்காட்சியின் தீவிரத்தை தேர்ச்சிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு அறையில் மேல் மூலையிலிருந்து கவனிப்பதாக அடர் சிவப்பு நிறத்தின் ஒளிப்பின்னணியில் நிகழும் இக்காட்சியில், ஒரு விசாரணைக் கைதியின் பதட்டத்தை மிகத் தேர்ச்சியாக அஸ்கர் கதாபாத்திரம் ஏற்ற நடிகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக காவல் அதிகாரி குடிக்குமாறு கூறி தேநீர் தரும்போது விபரீதமான அபாயம் தன்னைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்து அஸ்கர் அந்தத் தேநீரைக் குடிக்கத் தயங்குவது நுட்பமான வார்ப்பில் படமாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனத்துடன் தோன்றும் அந்தப் பாத்திரம் இந்தச் சதியின் விபரீதத்தை முழுக்க உணராமலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அவனது வாக்குமுலம் சொல்கிறது. தொடர்ச்சியாக குண்டுவெடிப்பிற்காக ஏவப்படும் இளைஞர்கள் தமக்கு கூறப்பட்ட இடங்களில் குண்டுகளை பொருத்துவது பற்றிய விவரணை மிகவும் துரிதமான காட்சிகளால் சித்திரிக்கப்படுகின்றன. இக்காட்சியில் கோர்க்கப்பட்டிருக்கும் இசை, அந்த அபாயச் செயலின் பதற்றவேகத்தை பிரதிபலிக்கும்விதமாக கையாளப்பட்டிருக்கிறது. உண்மையில் யோசித்தால் படத்தின் ஒவ்வொரு காட்சியின், கதாபாத்திரங்களின் தன்னியல்பான வெளிப்பாடுகள் மட்டுமின்றி, இதர வேலைப்பாடுகளான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, சத்தப் பின்னணி, நகரச் சூழல் என யாவுமே இணையான தரமேன்மையுடன் அணுகப்பட்டிருப்பது இந்திய சினிமாவில் வியப்பிற்குரிய ஒன்றாகவே தோன்றுகிறது. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ போன்ற திரைப்படங்களை எளிதாக இயக்கிவிட முடியாது. இப்படத்தின் ஒவ்வொரு கணநேரக் காட்சிகளையும் கூர்ந்து கவனிக்கும்போது மிகத் தேர்ச்சிபெற்ற பல்துறைக்கலைஞர்கள் பங்கேற்புச் செய்திருப்பது எளிதாகத் தெரியவரும்.

இரண்டாம் பகுதி மார்ச் ஏப்ரல் 1993இல் நடைபெறும் கைது மற்றும் கைதிவிசாரணைப் படலம். காவல்துறைக்குச் செய்தி தருபவன் (Informer) மூலம் பர்வேஸ், சோயிப் கன்சாரி, முஸ்தாக், இம்தியாஸ் கவேத் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பல அப்பாவி இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அணுகல்கள் ‘வன்முறை’ என்பதையும் தாண்டி அன்றாட நிகழ்வுகளின் இயல்புத்தொனியுடன் காட்சிக்குள் வந்துசெல்கின்றன. இம்தியாஸ் கவேத்தை விரட்டிப் பிடிக்கும் காட்சியில், விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமாக அமைக்கப்பட்ட காட்சி இது. கவேத்தை பிடிக்கும் வினாடிகளில் திரும்பத் திரும்ப அவன், தப்பித்துவிடுகிறான். காட்சியின் வேகமும் பின்புறத்தில் ஒலிக்கும் இசையின் தாளகதியும் இந்த நீண்ட காட்சியை உயிரோட்டப்படுத்துகிறது. கடினமுயற்சிக்குப் பின் அவன் அகப்பட்டதும், விசாரணையறையில் வதைபடும் காட்சியும், சுத்தியலால் கைவிரல்கள் நசுக்கப்படும் அவன், குற்றக் கோப்பில் கையெழுத்துப் போட வலியுறுத்தப்படும் நிலையில், நசுங்கிய கையால் பேனாவைப் பிடிக்கவியலாமல் அவன் கதறும் காட்சியும், அவன் குற்றவாளி எனும் நிலையிலும், நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஏனெனில், இந்தத் திரைப்படம் சாமான்ய மனிதர்கள் சக சூழ்ச்சிகளுக்குப் பலியாகி தமது வாழ்வை அழித்துக் கொள்வதைப் பற்றியதாக இருக்கிறது. அப்பாவி மக்கள் இறந்துவிடுவார்கள் என்கிற பதட்டம் ஒருசிறிதுமின்றிதான் சதி வேலைகளை ஏதோ ஆக்கபூர்வமான வேலை செய்வதுபோல ஈடுபாட்டுடன் இவர்கள் செய்கிறார்கள். அதனுடைய பிரதிபலனை பின்பு வருத்தத்துடன் அனுபவிக்கிறார்கள். எனினும், அவர்களுக்குள்ளும் தலைமறைவாக இருக்கும் எளிய உள்ளங்களைப் பற்றிய நுண்ணிய சித்திரிப்புக்களையும் இந்தப்படம் வழங்கத் தவறவில்லை.

மூன்றாவது பகுதி ஓடும் படலம். இப்பகுதி, டெல்லியிலிருக்கும் மசூதியன்றிலிருந்து துவங்குகிறது. சதியின் வெற்றிக்குப் பிறகு, பாத்ஷா கானும் பஷீர் கானும் டைகர் பாயிடமிருக்கும் தமது பாஸ்போர்ட்டுகளைப் பெற்று இந்தியாவிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் டெல்லியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். டைகர் பாயைத் தொடர்பு கொள்ளும்போது ‘ஏன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? அகப்படவா?’ என்று வினா எழுப்பி, உடனே எங்காவது சென்று தலைமறைவாக இருக்கும்படி கூற, உடனே இருவரும் பாத்ஷா கானின் சொந்த ஊரான ராம்பூருக்கு (உத்தரப்பிரதேசம்) செல்கிறார்கள். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும்படியும், அங்கிருந்து துபாய்க்குச் செல்ல தான் ஏற்பாடு செய்வதாகவும் டைகர் பாய் மீண்டும் தொலைபேசித் தொடர்பில் உறுதியளிக்க, இருவரும் நம்பிக்கையுடன் செல்கிறார்கள். அங்கு சக சதியாளர்களோடு உரையாடும்போது அனைவரது பாஸ்போர்ட்டும் எரிக்கப்பட்டுவிட்டதை அறிந்து பாத்ஷா கொதிப்படைகிறான். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறான். எனினும், டைகர் பாய் அனைவரையும் காக்கும்பொருட்டுத்தான் ஜெய்ப்பூருக்கு வரச் சொல்லியிருப்பதாகவும் புதிய பாஸ்போர்ட்டுகள் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிலவும் செய்தியன்றால் சமாதானமடைகிறான். எனினும் உள்மனதுள் தான் கைவிடப்பட்டதாக பாத்ஷா எண்ணுகிறான். மீண்டும் ராம்பூருக்கு வர, மறுநாள் காலையில் பஷீர், பாத்ஷாவிடம் சொல்லாமல் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட, தனிமையின் வெம்மையோடும் பயத்தோடும் பாத்ஷா பழைய தில்லி, கல்கத்தா என அலைக்கழிக்கப்படுகிறான். டைகர் பாயிடம் தொடர்பு கொள்வதும் கடினமாகி கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் ராம்பூருக்குத் திரும்புகிறான்.

கரிய இருளாக இருப்பின் சுமை அடரத்துவங்கும் ஒரு நாளில் (மே 10, 1993) காவல்துறை அவனது இல்லம் வந்து கைதுசெய்துகிறது. பின்பு விசாரணையறைக்கு அழைத்துவரப்படுகிறான் பாத்ஷா. ராகேஷிற்கும் அவனுக்கும் இடையே அரசியல்ரீதியான விவாதம் நடைபெறுகிறது. ‘எத்தனைபேர் உயிரை இழந்தார்கள் என்பதையும் இந்த நகரம் எத்தனை துன்பப்பட்டது என்பதையும் அறிவாயா? உனக்கென்ன, நீ தப்பித்துச் செல்ல இந்த உலகத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கிறது’ எனும் ராகேஷிடம், ‘தான் குற்றமேதும் செய்யவில்லை’ என்று பதில்கூறுகிறான் பாத்ஷா. பின்பு மெதுவாக தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்குகிறான். ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் எமது மக்கள் மீதான வன்முறையும் இத்தகைய செயலைச் செய்ய எங்களைத் தூண்டியது’ என்று கூறுகிறான். வசனங்கள் படத்தில் நேரடித் தன்மையுடன் பிரயோகப்பட்டிருப்பதும் ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிற அம்சங்களை தயக்கமின்றி புகுத்தியிருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. இந்த மூன்றாவது பகுதியே கதைகூறலின் அடிப்படையிலும் காட்சிகளை கட்டமைத்ததன் அடிப்படையிலும் படத்தின் மிகச் சிறந்த பகுதியாக பரிணமிக்கிறது. பாத்ஷாவாக நடித்த ஆதித்யா ஸ்ரீவத்சவா நடிப்பின் உச்சம் தொடுகிறார்.

நான்காம் பகுதி, யாகூப் கான் மற்றும் ஆர்.டி.எக்ஸ் படலம். ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தைக் கடத்துபவனும் சதிவேலையில் ஈடுபட்டவனுமான யாகூப்கானினது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்பொருட்டு அவனது சகோதரரும் எம்.கே. பில்டர்ஸ் அதிபருமான மஜித்கானும் அவரது துணைவி நபிசாவும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இதனை அறியும் யாகூப் தலைமறைவான இடத்திலிருந்து காவல்துறைக்கு தொலைபேசி வழி தனக்கும் குண்டுவெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனவும், மஜிதையும் நபிசாவையும் விட்டுவிடும்படியும் போதையேறின நிலையில் அழுதுபுலம்புகிறான். தொடர்ந்து டைகர் பாயிடம் தொலைபேசி வழி பேசுகிறான். எதிர்ப்புறமிருந்து ‘இந்தப் புனிதப்போரில் பலியாவது தவிர்க்கவியலாதது’ எனப் பதில்வருகிறது. தாவுத் பாயிடம் (தாவுத் இப்ராகிம்) பேசிப்பாருங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறான் யாகூப். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றறிந்த நிலையில், காவல்துறையினரிடம், ‘எனது சகோதரரை விடுவித்தால் ஒரு தகவலைக் கூறுவேன்’ என்று கோரிக்கை வைக்கிறான். அதிகாரி விடுவிக்க முயலுவதாகக் கூற, அம்ருத் நகரிலுள்ள காய்ந்த மீன்கள் நிரப்பப்பட்ட உணவுக்கிடங்கில் டைகர் பாய் பதுக்கிவைத்திருக்கும் ஆர்.டி. எக்ஸ் வெடிமருந்து இருப்பதாகத் தகவல் தர, காவல்துறை சென்று மருந்தை பறிமுதல் செய்கிறது. தொடர்ந்து, அருகிலிருக்கும் நக்லா பந்தர் சிற்றோடையிலும் (மார்ச் 30, 1993) பல ஆர்.டி.எக்ஸ் பதுக்கப்பட்ட சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்படுகின்றன.

யாகூப் மீண்டும் தொலைபேசி வழி காவல்துறையினருக்கு பிலு கான் அடிக்கடி வரும் உணவுவிடுதி பற்றின தகவலைத் தருகிறான். அவனது பழிவாங்கல் காட்டிக்கொடுப்பதாக உருமாறுகிறது. விசாரணையின்பேரில் அந்த உணவுவிடுதியின் அதிபரான ராஜ்குமார் குரானாவை கைதுசெய்கிறார்கள். அவருக்கு ஏதும் தெரியாது என்கிற நிலையிலும் சிறையிலடைக்கப்படுகிறார். அவரது கண்முன்னே பெண்கைதிகளின் மீதான மானபங்கம் நிகழ்த்தப்பட, மனம் ரணமுற்று அவதிப்படுகிறார். குறுகிய நாட்களில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனது குடும்பத்திற்கு அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற அச்சத்தினாலும் துக்கத்தாலும் மனைவி, பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறார். படத்தின் ஒரு கிளைச் சிறுகதை போல வரும் இப்பகுதியில், ராஜ்குமார் குரானாவாக வரும் நடிகர் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிட நேரங்களிலேயே நடந்துமுடிந்துவிடும் அவரது கதாபாத்திரத்தின் திரைவாழ்வு நமது எண்ணத்துள் நீங்கவியலாமல் ஒட்டிக்கொள்கிறது. எல்லா சூழ்ச்சிகளுக்கும் பின்பாக அப்பாவிகளும் பலியாவதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரம் வந்துசெல்கிறது.

ஐந்தாம் பகுதி சதியாலோசனைப் படலம். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை நன்குணர்ந்த பாத்ஷாகான் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்கும் பகுதி இது. இதன் தொடர்ச்சியில், தாவுத் பான்சே என்கிற கடத்தல் வியாபாரி கைதுசெய்யப்படுகிறான். டைகர் பாயிடம் ஒருவருட காலமாகப் பணிபுரிபவன். தாவுத் பாயுடனான வியாபார நம்பகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் பான்சேயை துபாயிலுள்ள தாவுத் இப்ராகிம் இருப்பிடத்திற்கு டைகர் அழைத்துச் செல்கிறான். நிஜமாகவே உருக்கொண்டு வந்தாற்போல அமைந்திருக்கிறது தாவுத் இப்ராகிம் வந்துசெல்லும் காட்சி. தாவுத்தாக வரும் நடிகர் தோற்றத்தில் அச்சுப்பிசகாமல் தாவுத்தை மறுபிரதி செய்யும் வண்ணமாக இருக்கிறார். படத்தின் நீளத்தால் ஏற்படும் பார்வையாளரது அயர்வை தாவுத் இப்ராகிமின் வருகை அகற்றிவிடுகிறது.

பின்பு, சதியில் ஈடுபடுமுன் அனைவரும் பாகிஸ்தானிலுள்ள பெயரறியா இடமொன்றிற்குப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். தீவிரமான ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளன் ஆர். டி. எக்ஸ் வெடிகுண்டை அறிமுகப்படுத்துகிறான். அவை இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு தயாரிக்கப்பட்ட குண்டுகளெனக் கூறி, தூரமாக எறிந்து வெடித்துக் காட்டுகிறான். காண்பவர்கள் கலங்கிப்போகும் அளவு அதன் சத்தமும் சிதிலமும் புழுதியெழுப்புகிறது. உணர்வுபூர்வமான மத உரைகளின்மூலமும் பழிவாங்கும் உன்மத்தம் எழுப்பப்படுகிறது. இத்தகைய இனத்துவேஷப் பழிதீர்த்தலுக்கான பின்னணி படத்தில் நிஜமான ஆவணக் காட்சியாக இப்பொழுது காண்பிக்கப்படுகிறது பாபர் மசூதி இடிக்கப்படும் சம்பவத்தின் நேரடிக் காட்சி. தொடர்ந்து பம்பாயில் ஏற்பட்ட இனக் கலவரம். இரு அணியாளர்களும் கொலைசெய்வதும் பாலியல்பலாத்காரம் மேற்கொள்வதும் எனத் தொடரும் வன்செயல்கள். 600 பேர் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களோடும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும் வேதனையி லாழ்த்தப்படுகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் துயரமும் அச்சமும் கசிய அகதிகளாகின்றனர்.

ஒரு சிறுமி, ‘தனது தந்தையும் தாயும் தம்பியும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தனது தாத்தாவும் பாட்டியும் காணாமல் போய்விட்டார்கள்’ எனவும் அனைத்தையும் இழந்துவிட்ட கையறுநிலையின் தீவிர மறியாமல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பொன்றில் சொல்கிறாள். ஒரு முஸ்லிம் பெண்மணி, ‘நீங்களனைவரும் பம்பாயைவிட்டு வெளியேறிவிடுங்கள், உங்களுக்கு இங்கிருக்க இடமில்லை’ என எதிரணியினர் கூறுவதாக கவலையுறுகிறார். பொருளாதார நிலைகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. டைகர் பாயின் அலுவலகமும் இரவோடு இரவாக எதிரணியினரால் கொளுத்தப்படுகிறது. மறுநாள் காலையில் அலுவலகம் வந்து கொதித்துப்போகும் டைகர் பாய் பழிவாங்கும் நோக்கத்தில் சூளுரைத்துவிட்டு துபாய்க்குப் பறந்துசெல்ல, அங்கு சதியாலோசனை நடைபெறுகிறது. எங்கெங்கு வெடிப்பு நிகழ்த்துவதென இடங்கள் குறிக்கப்படுகின்றன. அடுத்த காட்சியிலேயே படத்தின் முதல்காட்சியில் நாம் கண்ட தொடர் வெடிப்புக்கள் மீண்டும் காட்டப்படுகின்றன. மனித உடல்கள் சிதறி ரத்தம் பீறிட்டு வழிய, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட பலியுற்ற அப்பாவி மனித உடல்களை காண்பித்தபடியே திரைப்பரப்பில் இருள் நிறைகிறது.

இந்தத் திரைப்படம் ஒரு சாராரின் வன்செயல்களை மட்டுமே சித்திரித்திருந்தால் நிலவும் சூழலில் ஆபத்தைப் பிரயோகிக்கும் படமாகக் கருதப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு அரசியல் வன்முறைக்கும் மற்றொரு அரசியல் வன்முறை வேராக பின்னியங்குகிறது என்கிற அறிந்துணர்வை படம் நமது பொதுப்பார்வைக்கு ஏற்படுத்தித் தருகிறது. இருவேறு தன்னுணர்ச்சி மற்றும் துவேஷக் கணக்குகளால் நஷ்டப்படுவது சாமான்ய மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களே என்பது படத்தின் மூலச் செய்தியாகிறது. இந்த வன்முறைகளை நாம் செய்வதறியாது பார்த்துக் கடந்ததுபோல திரைப்படமும் பார்த்தபடி கடந்துசெல்கிறது. இத்தகைய சாய்வற்ற அரசியல் சமன்பார்வைகளை இந்தியாவின் சிறந்த ஆவணப்பட இயக்குநரான ஆனந்த பட்வர்த்தனது ஆவணப்படங்களில் மட்டும்தான் நாம் காணவியலும். அவற்றிற்கிணையான பார்வைகளை (புனைவாக்கம் என்னும் வரையறையையும் மீறி) இந்தப்படமும் வழங்குகிறது என்பது சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஓர் அம்சம்.

2006 மத்தியிலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம் சமகால வழக்கிலிருக்கும் மத/அரசியல் பிரச்சினையை சித்திரிப்பதால் உடனடியாக வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வழக்கு முடிவடைந்திருக்கும் நிலையில் படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்திய சினிமாவின் வலுவான குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கும் இளைஞர். ராம்கோபால் வர்மாவினது ‘சத்யா’ மற்றும் படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் அனுராக். மணிரத்னத்தின் ‘யுவா’ படத்திற்கு வசனமெழுதியவர். ‘குரு’ படத்திலும் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ படத்திலும் அவரது பங்களிப்பு உண்டு. அவரது உரைநடை வளம் ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்திற்கு மிகவும் உந்துதலான வீர்யத்தை அளித்திருக்கிறது. உள்ளீடான கதையம்சமும் சாய்வற்ற அரசியல் பார்வையும் திரைமொழி குறித்த அறிவாற்றலும் ஒருசேர வாய்ப்பது அரிது. அனுராக்கிற்கு அந்த ஒன்றிணைவு வாய்த்திருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ந்து அளிப்பார் என நம்பிக்கை கொள்வோம்.

‘ஒளிப்பதிவு செய்திருப்பதை உணர்த்தாத படங்களே சிறந்த ஒளிப்பதிவை கொண்டிருப்பவை’ என்கிற பார்வை ஒன்றுண்டு. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்தில் ஒளிப்பதிவின் தேவையற்ற குறுக்கீட்டு முன்னிலையை நாம் எங்குமே காணமுடியாது. கதையம்சத்தின், கதாபாத்திர உணர்வோட்டத்தின் நிழலெனவே ஒளிப்பதிவு தொடர்கிறது. ராம்கோபால் வர்மாவின் படங்களில் இடம்பெறும் சதவீதங்களையும் தாண்டி, இதுவரை இந்தித் திரைப்படங்களில் நேர் யதார்த்தத்துடன் காணாமலிருந்த மும்பை மைய புறநகர வீதிகளை காட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவியக்கம். ஒளிப்பதிவாளர் நடராஜ சுப்பிரமணியன். இவர் தமிழரும்கூட. அரிதாகவே கைவரப்பெறும் ஒளிப்பதிவின் நேரிய தன்மையை திரைப்பரப்பில் உலவவிட்ட அவரது உயர்ந்தபட்ச திரைப்பங்கேற்பிற்காக (தமிழர் என்கிற நிலையிலும்) தமிழ்ச்சமூகம் பெருமைப்பட வேண்டும். இன்னும் பல காட்சிகள் கண்களுக்குள் மறக்கவொண்ணாமல் கிளையாடுகின்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் காட்டப்படும்போது பதற்றமும் வேதனையும் அழிக்கக்கூடிய நீலநிற ஒளிக்கலப்பு குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களை கைதுசெய்யும் தேடல்படலத்தில் குழப்பமும் சூன்யமும் காட்டும் மெல்லிய மஞ்சள் நிறம் கைதிகள் விசாரிக்கப்படும் காட்சியில் வன்முகம் காட்டும் சிகப்பு நிறம் என காட்சிகளின் மனவோட்டத்திற்கேற்ப பல்வேறு வண்ணங்களை பிரயோகித்திருக்கிறார்.

டைகர் பாயாக வரும் பவன் மல்ஹோத்ராவையும், காவல்துறையதிகாரியாக வரும் கே. கே மேனனையும் உள்ளிட்டு படத்தில் பங்கேற்ற அனைத்து நடிகர்களுமே தமது படைப்பாற்றலை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மற்றொரு பலமான படத்தொகுப்பைச் செய்திருப்பவர் ஆர்த்தி பஜாஜ். காட்சிகளின் தொகுப்பை சிற்ப வேலைப்பாட்டு கவனத்துடன் அணுகியிருக்கிறார். படத்தின் உணர்ச்சிகளுள் நம்மை மூழ்கடித்துவிடும்படியான இசையை இந்தியன் ஓசியன் தந்திருக்கிறது. இனிவரும் எதிர்கால அரசியல் திரைப்படங்களுக்குச் சிறந்த முன்னோடியாக ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்றுமே தன்னிருப்பு பெற்றிருக்கும் என்பதுவும் இறுதியாகச் சொல்லவேண்டியது.

Posted in 9-11, 9/11, Arms, Arts, Awards, Babri Masjid, BJP, Black Friday, Blasts, Bollywood, Bombay, Bombs, Cinema, Classic, dead, Dec6, DocuFiction, Documentary, Drama, Extremism, Extremists, Film, guns, Hindi, Hindu, Hindutva, Incident, Islam, mani Rathnam, Manirathnam, Masala, Masjid, massacre, Mosque, Movie, Mumbai, Murder, Muslim, National, Panaroma, Politics, RDX, revenge, Reviews, RSS, Shiv Sena, Terrorism, terrorist, Violence, Vishvamithiran, Vishvmithran, Vishwamithiran, Vishwamithran, Visvamithiran, Visvamithran, Viswamithiran, Viswamithran, War, WTC | Leave a Comment »

Rich vs Poor – Forbes Wealthiest Indians list: Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

உலகச் செல்வமும், ஏழ்மையும்

ந. ராமசுப்ரமணியன்

உலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.

“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

வருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

அமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.

ஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

இந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.

  • லட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.
  • முகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.
  • அனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.
  • அஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.
  • குஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.
  • சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.
  • குமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.
  • சசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.
  • ரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.
  • பலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.
  • ஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.
  • சிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.
  • திலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.
  • சைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.
  • இந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.
  • கலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • கிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • சாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • துளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • சுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.
  • உதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.
  • பாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.
  • மல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.
  • நாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.
  • அனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • வேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • விஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • ஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • விகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.
  • நந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.
  • எஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.
  • பிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • கேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • ராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.

பரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.

உலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).

இந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.

இப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.

உலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான

  • அமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,
  • ஜப்பானில் 15.3 சதவீதம்,
  • இங்கிலாந்து 15 சதவீதம்,
  • பிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.
  • பிரேசிலில் 23 சதவீதம்,
  • ரஷியாவில் 20 சதவீதம்,
  • இந்தியாவில் 22 சதவீதம்,
  • சீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.

உலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.

உலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.

21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.

25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.

பணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.

அதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.

“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே! தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது?

(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).


மும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.

ஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.

இந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

மும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.

———————————————————————————————

வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு

மும்பை, ஜ×லை.5-

இந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.

மும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.

கடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.

மொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

மொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.

8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.

மற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

மராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

——————————————————————————————————————

இந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி

பல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.

வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.

முகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.

Posted in Ambani, Anil, Arrogance, Asia, Asset, Azim Premji, Bajaj, Bill Gates, Billion, Billionaire, Birla, Biz, Bombay, Brazil, Business, Capitalism, Children, China, Commerce, Dayanidhi, Dhinakaran, Dinagaran, Dinakaran, Display, Distribution, Economics, England, Finance, Forbes, France, Gates, Globalization, Godrej, HCL, Homeless, Homes, Housing, Industry, Infosys, Japan, Kalanidhi, Kid, Kungumam, Lakshmi Mittal, maharashtra, Manufacturing, Maran, Microsoft, Millionaire, Mittal, Money, Mugesh, Mukesh, Mumbai, Nadar, Narayana Murthy, Needy, Oberoi, Oceanview, Op-Ed, Poor, Pune, Rich, Right, Russia, Seaview, Services, Shiv Nader, Sooriyan FM, Soviet, Street, Sun TV, TATA, USA, USSR, Vakf, Wakf, Warren Buffet, Wealth, Wipro | 1 Comment »

B Kanagaraj: Border dispute between Karnataka & Maharashtra – Belgaum: Analysis, History, Backgrounder

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

சிக்கலாகும் எல்லைப் பிரச்சினை

பி. கனகராஜ்

கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது.

பெல்காம் மட்டுமல்ல; நமது நாட்டின் பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

வரலாற்றிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டம் தலைநகரான பெங்களூரை விட்டு பெல்காமில் கூட்டப்பட்டது. கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெல்காமை கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தை இங்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குப் போட்டியாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் அமைப்பான “மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இவ்வாறு பெல்காம் எல்லைப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிடையே அரசியல் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.

கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணமாக பெல்காம் மாவட்டம் உள்ளது. “மூங்கில் கிராமம்’ என்ற பொருள்படும் சமஸ்கிருதப் பெயரைப் பெற்றிருக்கும் பெல்காம் 1956ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் அதிகம் வாழ்ந்த பம்பாய் மாநிலத்தில்தான் இருந்தது.

பஸல் அலி கமிஷன் பரிந்துரையால் ஏழாவது அரசியல்சாசன திருத்தச் சட்டம் மொழிவாரி மாநில சீரமைப்பை அமல்படுத்தியதால் பெல்காம் மாவட்டம் அண்டை மாநிலமான மைசூருக்கு வழங்கப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை “மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ பெல்காம் மீட்பு போராட்டத்தை மராட்டியர்களுக்காக நடத்தி வருகிறது. மராட்டியர்களின் “சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற நீண்டகால கனவின் முக்கிய துருவமாக பெல்காம் உள்ளது.

“மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளிலும் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. பெல்காம் மாநகராட்சி மன்றம் சென்ற ஆண்டு மகாராஷ்டிரத்துடன் இணைய தீர்மானம் இயற்றியது. எரிச்சலுற்ற கர்நாடக மாநில அரசு மாநகராட்சி மன்றத்தையே கலைத்து விட்டது.

இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே இப் பிரச்சினை வெடிப்பதற்கு மொழி, பொருளாதார, மற்றும் கலாசார காரணங்கள் உள்ளன. மராட்டியர்கள் தற்போது தங்களது கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவதற்கு கர்நாடக மாநில அரசின் மொழிக் கொள்கை முக்கியக் காரணமாகும்.

கர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியில் கட்டாயமாக பாடம் போதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பெல்காமில் பெரும்பான்மையாக உள்ள மராட்டியர்கள் கன்னட மொழித் திணிப்பை எதிர்க்கின்றனர்.

நமது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்துகிறது. கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிரிவை மீறுவதாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் எதிர்க்கின்றனர். மராட்டிய மொழியைப் பாதுகாக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பொருளாதாரக் காரணமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெல்காம் மாவட்டம் இதமான தட்பவெப்ப நிலையில் அமைந்துள்ளது. விவசாய வளத்தைப் பெற்றுள்ள இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவேதான் விவசாய ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்க மராட்டியர்கள் விரும்புகின்றனர்.

இரண்டு மாநிலங்களும் பெல்காமின் மேல் விருப்பம் காட்டுவதற்கு பெல்காமின் கல்வி வளர்ச்சியும் ராணுவ முக்கியத்துவமும் காரணமாக உள்ளன. பெங்களூருக்கு அடுத்தபடியாக கல்வி வளர்ச்சி பெற்ற நகரம் பெல்காமாகும். மேலும் இந்திய ராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. இதனை “தரைப்படையின் தொட்டில்’ என்றே பலர் வர்ணிக்கின்றனர்.

ஆகவே மகாராஷ்டிரம் இம்மாவட்டத்தைப் பெறுவதற்கு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி வருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டம் அமலானபோது உருவான குழுவின் முன் தனது கோரிக்கையை வைத்தது. மேலும் 1966ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாஜன் தலைமையில் நடுவர் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால் மகாஜன் குழு தனது பரிந்துரையில் பெல்காம் மாவட்டம் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டது.

இம்மாவட்டத்தில் மகாராஷ்டிரம் கோரும் 864 கிராமங்களில் 264 கிராமங்களை அதற்கு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகம் கோரும் 516 கிராமங்களில் 247 கிராமங்களை அதற்கு வழங்கவும் இக்கமிஷன் அறிவுறுத்தியது. இக்கமிஷனின் பரிந்துரைகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டாலும் மகாராஷ்டிரம் நிராகரித்து விட்டது.

இல கார்புசர் என்ற கட்டட வல்லுநரால் நிர்மாணிக்கப்பட்ட, சண்டி என்ற கிராம காவல் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் சண்டீகர் ஒரு நீண்ட கால எல்லைப் பிரச்சினை ஆகும். 1966ம் ஆண்டு முதல் ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே, சண்டீகர் யாருக்குச் சொந்தம் என்பதில் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. சீக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரியபோது சண்டீகர் நகரம் அரசியல் சச்சரவின் மையமாக இருந்தது. தற்போது தீவிரவாதம் தணிந்து போனாலும் பஞ்சாபியர்களின் நீண்ட கால ஏக்கமாகவே உள்ளது சண்டீகர் நகரம்.

கர்நாடகத்தில் உள்ள மங்களூரை கேரளம் கோரி வருகிறது. கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியை கர்நாடகம் கோருகிறது.

அண்மையில்கூட அசாம் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களில் இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தைதான் சரியான வழிமுறைகளாகும். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இப்பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும். விடவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மையுடன் மாநிலங்கள் செயல்படக் கூடாது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

“கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற உயரிய கொள்கையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. தேசிய வலிமைக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் அமைதிக்கும் இக் கொள்கை அவசியமானதாகும்.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசியல் அறிவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோவை).

Posted in Analysis, Backgrounder, Belgaum, Bombay, Border, British, Chandigarh, Civic body, Climate, Commerce, Conflict, Coop, Cooperative, Defense, Dispute, Economy, Education, Facts, Goa, Growth, Haryana, History, India, Industry, Issues, Kannada, Karnataka, Kasargode, Kerala, Khalisthan, Language, Mahajan, maharashtra, Mangalore, Marathi, Military, Mumbai, Municipality, Op-Ed, Province, Punjab, Race, Region, Research, Rural, Society, State, Unity, Village | Leave a Comment »

Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

இரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன! 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு

புது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.

சரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.

அத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.

உள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வாய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.

இம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.

சில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

படுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

வரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.

தில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.

90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.

உபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு

பாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

நாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.

ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை

புதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.

மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.

================================================

முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்

புதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

சரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.

ரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.

ஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.

11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.

ஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

Posted in 2007, Analysis, Bombay, Bonus, Buddhism, Budget, Calcutta, Carriage, Chennai, City, Coach, Crap, Delhi, Double decker, Economy, Engines, Environment, Express, Finance, Freight, Goods, Guide Operator, human waste, Hygiene, ICF, Incentives, Interlink, Japan, Kapurthala, Kolkata, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loans, Madras, Manufacturing, Ministry, Mumbai, New Delhi, Own Your Coach, passenger, Perambur, Piss, Pollution, Predictions, Preview, Public-Private-Partnership, Railways, Reservation, Restrooms, Safety, Schemes, Security, Shit, Smell, Superfast, Toilets, Tour, Trains, Transportation, Travel, Urin, Urine, Velu, Waste | 1 Comment »

Shiv Sena-BJP on top in Maharashtra, Congress-NCP humbled

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

சிவசேனை -பாஜக கூட்டணியிடம் மீண்டும் மும்பை மாநகராட்சி

மும்பை, பிப். 3: மகாராஷ்டிர மாநிலத்தில் 10 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், மும்பை மாநகராட்சியையும் பெரும்பாலான நகராட்சிகளையும் சிவசேனை -பாஜக கூட்டணி மீண்டும் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

சிவசேனைக் கட்சியில் இருந்து முன்னாள் துணை முதல்வர் நாராயண் ராணே கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் சேர்ந்ததாலும், பால் தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ் தாக்கரே விலகியதாலும், கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்து வந்த சிவசேனை -பாஜக கூட்டணிக்கு இது வியப்பூட்டும் வெற்றியாகும்.

மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில், முன்னணியில் உள்ள வார்டுகள் உள்பட மொத்தம் 112 வார்டுகள் சிவசேனை -பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் நிலையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி 65 இடங்களிலும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளன.

மும்பையின் புறநகர்ப் பகுதியான பந்த்ராவில் அமைந்துள்ள சிவசேனைக் கட்சி நிறுவனர் பால் தாக்கரேயின் இல்லத்துக்கு வெளியே கூடிய ஏராளமான கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

நாசிக்: நாசிக் நகராட்சியில், மொத்தமுள்ள 108 இடங்களில், சிவசேனை -பாஜக கூட்டணிக்கு 40 இடங்கள் கிடைத்துள்ள போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

நாக்பூர்: நாக்பூர் நகராட்சியில், மொத்தமுள்ள 136 இடங்களில், 57 இடங்களைப் பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அங்கு காங்கிரஸýக்கு 32 இடங்கள் கிடைத்துள்ளன.

புணே: புணே நகராட்சியில், மொத்தமுள்ள 144 இடங்களில், 42 இடங்களை வென்று தேசியவாத காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி ஆகியுள்ளது. காங்கிரஸýக்கு 35 இடங்கள் கிடைத்துள்ளன.

பிம்ப்ரி -சிஞ்ச்வாடு: பிம்ப்ரி -சிஞ்ச்வாடு நகராட்சியில் மொத்தமுள்ள 105 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் 60 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. காங்கிரஸ் 20 இடங்களில் வென்றுள்ளது.

சோலாபூர்: சோலாபூர் நகராட்சியில் மொத்தமுள்ள 98 இடங்களில், 40 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் தனிப் பெரும் கட்சி என்ற நிலையை அடைந்துள்ளது. அங்கு தேசியவாத காங்கிரஸýக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன.

தாணே, உல்லாஸ்நகர், அகோலா, அமராவதி ஆகியவை தேர்தல் நடைபெற்ற மற்ற நகராட்சிகள் ஆகும்.

சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைக்காதது தவறு -காங்கிரஸ்: சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்காதது காங்கிரஸ் கட்சி செய்த தவறு என முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறினார்.

கூட்டணிக்கு முயற்சி எடுத்தோம். ஆனால் அது கைகூடவில்லை என்றார் அவர்.

நகர்ப் பகுதிகளில் கட்சியின் தளத்தை விரிவாக்க தமது கட்சியினர் முயற்சி எடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.

மும்பை தேர்தல்

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்பதை மும்பை பெருநகர மாநகராட்சிக்கும் மற்றும் 9 மாநகராட்சிகளுக்கும் நடந்துள்ள தேர்தல்கள் காட்டியுள்ளன.

சிவசேனைக் கட்சி பலவீனமடைந்துவிட்டதாக காங்கிரஸ் கருதியது. அது தவறு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் பலம் பெற்று வருவதாகவும் ஆகவே மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இனி ஒதுக்கி வைக்கலாம் என்றும் காங்கிரஸ் நினைத்தது. அதுவும் தவறாகிவிட்டது.

சிவசேனை பலவீனமடைந்துவிட்டதாக காங்கிரஸ் கணக்குப் போட்டதற்குக் காரணங்கள் உண்டு. சிவசேனைக் கட்சியானது 40 ஆண்டுகளாக பால்தாக்கரே தலைமையில் இயங்கி வருவதாகும். 2005-ல் அக் கட்சியின் முக்கியப் பிரமுகர் என்று கருதப்பட்ட நாராயண் ரானே அக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அது போதாது என சிவசேனைக் கட்சியில் பிளவு ஏற்பட்டு பால்தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ்தாக்கரே தனிக் கட்சி அமைத்தார். நாராயண் ரானேயுடன் சேர்ந்து காங்கிரஸýக்குத் தாவிய எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் துணைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றனர்.

இத் துணைத் தேர்தல்களில் சிவசேனைக் கட்சி தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல், மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ரானேயின் வருகையால் காங்கிரஸ் கட்சியின் பலம் 77-ஆக அதிகரித்தது. இதன் பலனாக பவாரின் கட்சியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாகியது. இப் பின்னணியில்தான் மும்பை மாநகராட்சித் தேர்தலில் பவார் கட்சியுடன் கூட்டுசேராமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முற்பட்டது.

தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறின. இதைப் பொய்ப்பித்து சிவசேனை-பாஜக கூட்டணி இந்த மாநகராட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.

பால்தாக்கரேயின் வெற்றிக்குக் காரணங்கள் உண்டு. முதலாவதாக, எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நின்றன. தவிர முந்தைய மாநகராட்சியில் உறுப்பினர்களாக இருந்த 58 பேரை சிவசேனைக் கட்சி மீண்டும் நிறுத்தாமல் துணிந்து உரிய வேட்பாளர்களை நிறுத்தியது. அத்துடன் பால்தாக்கரே தமது ஆவேசப் பேச்சு மூலம் மக்களைக் கவர்பவர். தேர்தல் முடிவுகள் இவ்விதம் அமைந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. சுமார் 46 சதவீத வாக்காளர்களே வாக்களித்து உள்ளனர். பாதிக்கும் மேற்பட்டவர்கள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். 2002-ல் நடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் சிவசேனை – பாஜக கூட்டணியின் பலம் இத்தடவை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், அக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிட்ட வேண்டுமானால், அது சுயேச்சைகளின் உதவியை நாடியாக வேண்டும் என்ற நிலைதான் உள்ளது.

ஆனால் சிவசேனை – பாஜக கூட்டணியின் வெற்றி பெரிதாகத் தெரிவதற்கு முக்கியக் காரணம் அண்மையில் சிவசேனைக் கட்சிக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளே.

மகாராஷ்டிரத்தில் பிற மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் காங்கிரஸýக்கு ஆறுதல் அளிப்பவையாக இல்லை. பவார் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்பட்ட அகோலா நகரில்தான் அக் கூட்டணி பதவியைப் பிடித்துள்ளது. நாகபுரியில் காங்கிரஸ் பதவி இழந்தது. இதற்கு உள்கட்சி சண்டையே காரணம். புணேயில் காங்கிரஸýக்கு பலத்த சரிவு. அமராவதியிலும் சோலாப்பூரிலும் பவார் கட்சியின் தயவில் காங்கிரஸ் பதவியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சியானது தனது கூட்டணிக் கட்சிகளை அவ்வப்போது உதாசீனம் செய்வது தவறு என்பதையே இத் தேர்தல்கள் காட்டியுள்ளதாகச் சொல்லலாம்.
மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தல் புகட்டும் பாடம்

நீரஜா செüத்ரி – தமிழில்: சாரி.

மகாராஷ்டிரத்தில் நடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தல் முடிவால் அங்கு ஆட்சி கவிழப் போவதும் இல்லை, தலைமையில் மாற்றம் வரப்போவதும் இல்லை; ஆனால் அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அது புகட்டும் பாடம் ஒன்று உண்டு.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது அவசியம் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட தலைவர்கள் பலர் ஆரம்பம் முதலே வற்புறுத்தினர்.

கட்சியின் மாநிலத் தலைவர் பிரபா ராவ், மும்பை தலைவர் குருதாஸ் காமத், மகாராஷ்டிர காங்கிரஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அகில இந்திய பொதுச்செயலர் மார்கரெட் ஆல்வா ஆகியோர்தான் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டு தனது வலிமையை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இனி கட்சிக் கூட்டத்தில் தோல்வியை ஆராயும்போது இவர்களின் தலைகள் உருளக்கூடும்.

மும்பை மாநகர காங்கிரஸ் கட்சித் தலைவர் குருதாஸ் காமத்தும் மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலும் பகிரங்கமாக தேர்தல் சமயத்தில், குழாயடிச்சண்டைபோல சவால்விட்டுப் பேசிக்கொண்டதன் மூலம் கூட்டணிக்குள் பூசல் இருப்பது உறுதியானது.

இந்தத் தேர்தல் முடிவு பல உண்மைகளை உணர்த்துகிறது. கூட்டணிதான் நல்ல வெற்றிகளைப் பெற்றுத் தருகிறது என்பது முதலாவது உண்மை. இதை காங்கிரஸ் மறக்காமல் இருக்கும்போதெல்லாம் அதற்கு வெற்றி கிட்டுகிறது. அந்த கால செல்வாக்கு இன்னமும் தொடருவதாக பிரமையில் ஆழ்ந்து, தனித்துப் போட்டியிடும்போதெல்லாம் தோல்வியே கிட்டுகிறது.

கூட்டணியால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும் என்பதை அனுபவத்தில் முதலில் உணர்ந்தவர் ஜெயலலிதாதான். 1998 தேர்தலில் மதிமுக, பாமக போன்ற சிறிய கட்சிகளைக்கூட ஒன்றுவிடாமல் தனது அணியில் சேர்த்து அதிகாரத்தைக் கைப்பற்றினார். கடந்த சட்டப் பேரவை பொதுத்தேர்தலின்போது கூட மதிமுகவை தன் பக்கம் ஈர்த்து, தனக்கு படுதோல்வி ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாமல் விட்டதுடன், சமூகங்களுடனான சுமுக உறவையும் இழந்து நின்றது. முதல் முறையாக, எந்த ஒரு தலித் கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்டது. கைர்லாஞ்சி சம்பவத்தால் கொதித்துப் போய் இருக்கும் தலித்துகள், காங்கிரஸ் கட்சி அதைக் கையாண்ட விதத்தால் மனம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை, மாலேகாம் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு விசாரணை என்ற பெயரில் ஏராளமான முஸ்லிம்களை மாநிலப் போலீஸôர் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனால் முஸ்லிம்களின் ஆதரவு காங்கிரஸýக்குக் குறைந்துவிட்டது. குருதாஸ் காமத்தின் தொகுதியிலேயே ஆறு வார்டுகளில் 4 வார்டுகளில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரு மாநிலத்துக்கு இணையான பட்ஜெட் போடும் அளவுக்கு மும்பை மாநகரம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்கு சரியான கூட்டணியை ஏற்படுத்த காங்கிரஸýம் தேசியவாத காங்கிரஸýம் தவறவிட்டதுதான் விந்தையானது.

மொத்தம் உள்ள 227 வார்டுகளில் 225 வார்டுகள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. 2 வார்டுகள் தொடர்பாகத்தான் இழுபறி ஏற்பட்டது. அந்த இரண்டில்கூட தோழமை உணர்வோடு தனித்தனியாக போட்டியிட்டிருக்கலாம். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை முதலில் எடுத்தது.

இதற்கு உள்நோக்கமும் இருக்கலாம். மகாராஷ்டிர அரசியலில் பழம்தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான சரத் பவார், காங்கிரஸ் கட்சி பலம் பெறுவதை விரும்பவில்லை என்று தெரிகிறது. பிம்ப்ரி-சின்ச்வாட் நகரை தேசியவாத காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுவிட்டது. புணேயில் காங்கிரûஸவிட பவார் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி.

2009-ல் மூன்றாவது அணி அமைக்க பவார் முயற்சி செய்கிறார். அப்படி அது வலுவாக அமைந்தால் காங்கிரúஸô, பாரதீய ஜனதாவோ அதை ஆதரித்துத்தான் தீர வேண்டும். சரத்பவார் அளவுக்கு அரசியல் சாதுர்யம் உள்ள தலைவர் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்பதே அதன் மிகப்பெரிய பலவீனமாகும். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே பாரதீய ஜனதாவுடன் கூட்டு வைத்துக் கொண்டார். மராத்திய இனத்தின் சுயமரியாதை குறித்துப்பேசி மக்களின் இன உணர்வைத் தூண்டினார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடி, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவிகள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னமும் மரண தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பதற்காக குடியரசுத் தலைவர் கலாமையே தாக்கிப் பேசினார்.

பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் வெளியாகியிருக்கும் இத் தேர்தல் முடிவுகள் சிவசேனை, பாரதீய ஜனதா கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

தமிழில்: சாரி.

Posted in Bal Thackeray, BJP, BMC, Bombay, Brihanmumbai Municipal Corporation, Chaari, Civic Polls, Coalition, Cong (I), Congress, Congress (I), Elections, Indira Congress, Local Body, maharashtra, Maharashtra Navnirman Sena, MNS, Mumbai, Municipality, Narayan Rane, Nationalist Congress Party, NCP, Neeraja Chowdhry, Op-Ed, Opinion, Party, Politics, Polls, Raj Thackeray, Sharad Pawar, Shiv Sena, Tamil, Vilasrao Deshmukh, Winner | Leave a Comment »

Abdul Kalam vs Bal Thackeray – Afsal & Hairstyle

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

அப்துல்கலாம் பற்றி விமர்சித்த பால்தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வற்புறுத்தல்

மும்பை, ஜன. 31- மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரம் நடந்து வருகி றது. சிவசேனா தலைவர் பால் தாக்கரே தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை தூக்கில் போடாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் ஜனாதிபதியை விமர்சித்தார்.

`அப்சல் கருணை மனுவை ஜனாதிபதி இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவருடைய நீண்ட தலைமுடி கண்ணை மறைக்கிறது. நில வையும், நட்சத்திரத்தையும் மட்டும் பார்க்க முடிகிறது’ என்று அவர் கூறினார்.

சோனியா காந்தி பற்றி கூறும் போது, வெளிநாட்டு காரரால் இந்த நாடு ஆளப்படுகிறது. மன்மோகன் சிங் என்ற பொம்மை பிரத மராக இருக்கிறார்என்று கூறினார்.

பொதுவாக ஜனாதிபதியை அரசியல் தலைவர்கள் யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால் பால்தாக்கரே விமர்சித்து இருப்பது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்களும் வந்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபன் கூறியதாவது:-

அரசியல் விவகாரத்தில் ஜனாதிபதியை இழுப்பது தவறானது. மும்பை மாநக ராட்சி தேர்தல் உள்ளூர் பிரச்சினைக்கு தொடர் பானது. எனவே இங்குள்ள பிரச்சினையை பேச வேண்டும். அப்சÛலை குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அவருடைய கருணை மனு முறைப்படியான நடைமுறை ஆய்வில் உள்ளது. இதை விமர்சிக்க பால்தாக்கரேக்கு உரிமை இல்லை’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கூறும்போது, `ஜனாதிபதி பற்றி விமர்சித்தது நாட்டையே அவமானபடுத்துவதற்கு சம மாகும்’ ஜனாதிபதி என்பவர் தனி மனிதர் அல்ல. அது ஒரு அமைப்பு. பால்தாக்கரே கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.

பாரதீய ஜனதா தலைவர் வினோத் திவாதே கூறும்போது, `பால் தாக்கரே ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பேசவில்லை, நிலவு மற்றும் நட்சத்திரங்களை ஒப்பிட்டு பேசவில்லை பாராளுமன்ற தாக்குதல் விவகாரம் பெரிய சம்பவம் என்பதால் தனது ஆதங்கத்தை தனக்கே உரித்தான பாணியில் சொன்னார்’ என்றார்.

Posted in Abdul Kalam, Afsal, Bal Thackeray, BMC, Bombay, Capital punishment, Elections, Hairstyle, Life sentence, Manmohan Singh, Mumbai, parliament, President, Shiv Sena, Sonia Gandhi, Terrorism, terrorist | Leave a Comment »

Hema Malini rubs north Indians the wrong way

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

மும்பை, ஜன. 26: நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி (படம்), வட இந்தியர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுகுறித்த விவரம்:

மும்பை உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஹேமமாலினியிடம்

“மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன’ என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ஹேமமாலினி

“அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’

என பதிலளித்திருந்தார். ஹேமமாலினியின் இந்த பதிலால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹுசைன் தல்வாய் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:

ஹேமமாலினி முதலில் தான் ஒரு பொறுப்புள்ள எம்.பி. என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நடிகை. அவருடைய கணவர் -நடிகரும், எம்.பி.யுமான தர்மேந்திரா வட இந்தியர்தான்; அவருடைய மகள்களும் பாதி வட இந்தியர்கள்தான். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து ஹேமமாலினி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரிலிருந்து குடியேறிய வட இந்தியர்கள்தான் மும்பை மக்கள் தொகையில் ஏராளமானோர் என்பதும், ஹேமமாலினி தமிழில் அறிமுகமாகி இந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வட இந்தியர்கள் பற்றி நான் கூறிய கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளது: ஹேமமாலினி

மும்பை, ஜன. 27: வட இந்தியர்கள் குறித்து தான் கூறியதாக தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், தொலைக்காட்சி நிருபர்கள் சிலர், வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு அவர், அவர்களுக்கு பிரச்சினை என்றால் சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்’ என்று பதிலளித்தார். ஆனால் இதற்கு பல தரப்பிலும் பலத்த கண்டனம் எழுந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்து அவர் கையெழுத்திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது. அதில் கூறியுள்ளதாவது:

வட இந்தியர்கள் குறித்து நான் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் தவறாக திரித்துக்கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயம் ஊதி பெரிதாக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தபோது, சில தொலைக்காட்சி நிருபர்கள் என்னை அணுகி கருத்து கேட்டனர். அப்போது மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு சத்தமாக இருந்ததால் தொலைக்காட்சி நிருபர்கள் கேட்ட கேள்வி எனக்கு சரியாக கேட்கவில்லை. இருப்பினும் அந்த சமயத்தில் நான் சிரித்துக்கொண்டேதான் அவர்களுக்கு பதிலளித்தேன்’ என்றார்.

வட இந்தியர்களை அளவுக்கதிகமான மரியாதையுடன் உயரிய இடத்தில் வைத்துள்ளேன். மும்பையை விட்டு அவர்களை வெளியேற சொல்லவோ அல்லது அவர்களுக்கு ஆலோசனைக் கூறும் அதிகாரமோ எனக்கில்லை.

இதற்குமேலும் அரசியல் கட்சிகள் நான் கூறியதாக தெரிவித்த கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்றார்.

Posted in Bharatiya Janata Party, BJP, Bombay, Brihanmumbai Municipal Corporation, Civic Polls, Elections, Hema Malini, Hemamalini, India, Local Body Polls, Mumbai, north India, Polls, Quote, racism, Racist, Rajya Sabha | Leave a Comment »

‘Captain’ Vijaykanth’s DMDK to compete in Mumbai Civic Polls

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

மும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டி

சென்னை, ஜன. 25: மும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

179-வது வார்டு தாராவில் என். நவிகிருஷ்ணன், 168-வது வார்டு சயான்கோலிவாடாவில் லட்சுமி ராஜாமணி ஆகியோர் தேமுதிக வேட்பாளர்களாக முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Posted in Bombay, Civic body, Civic Polls, DMDK, Local Elections, maharashtra, Mumbai, Tamil, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | 1 Comment »

Dubai questions Nusli Wadia for carrying revolver gun

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கி, குண்டுகள்: விமான நிலையத்தில் பறிமுதல்

மும்பை, ஜன. 20: மும்பையிலிருந்து ஏர்~இந்தியா விமானத்தில் துபைக்குச் சென்ற பிரபல தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் 30 குண்டுகளும் இருந்தது துபை விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதை அடுத்து விமான நிலையங்களில் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்துப் பாதுகாப்புச் சோதனைகளையும் கடந்து கைத்துப்பாக்கியையும் குண்டுகளையும் ஒருவர் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதித்தது எப்படி என்பது குறித்து ஏர்~இந்தியா நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பணியில் கவனக் குறைவாக இருந்ததாக இரு ஊழியர்களை ஏர்~இந்தியா நிறுவனம் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 13-ம் தேதி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் அவர் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

ஆனால், துபையில் அவர் இறங்கியபோது விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் அவரது சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் குண்டுகளும் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமத்தை அதிகாரிகளிடம் வாடியா காட்டியதை அடுத்து, அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதற்கான ரசீதை அதிகாரிகள் அளித்தனர்.

பாம்பே டையிங் நிறுவன அதிபரான நுஸ்லி வாடியா, “கோஏர்’ என்னும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.

இச் சம்பவம் குறித்து விசாரித்தபோது, “”வாடியாவின் வீட்டுப் பணியாள், அந்தத் துப்பாக்கியையும் குண்டுகளையும் தெரியாமல் வாடியாவின் சூட்கேஸில் வைத்து, விமான நிலையத்தில் கொண்டுவந்து அவரிடம் கொடுத்துவிட்டார்” என்று அவரது நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் விளக்கம் அளித்தார்.

Posted in Air India, Airport, Ambani, arms licence, baggage, Bombay, Bombay Dyeing, breach, cartridges, civil aviation, Dubai, firearm, GoAir, gun, Guru, mani Rathnam, Ministry, Mumbai, Nusli Wadia, Reliance, revolver, Security, X-ray | Leave a Comment »

Mumbai Bomb Blasts – Timeline : Chronology

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

விசாரணை } கடந்துவந்த பாதை

மும்பையில் 1993 மார்ச் 12-ம் தேதி 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் 257 பேர் இறந்தனர். 713 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான விசாரணை தடா கோர்ட்டில் நடந்தது. விசாரணையின் தொடக்கம் முதல் இறுதி வரையான விவரம் வருமாறு:

நவ. 4, 1993: நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 189 எதிரிகளுக்கு எதிராக 10 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்.

நவ. 19. 1993: சிபிஐ-க்கு வழக்கு மாற்றம்.

ஏப். 1, 1994: ஆர்த்தர் சாலையில் இருக்கும் மத்திய சிறை வளாகத்தில் உள்ள தனி கட்டடத்துக்கு தடா கோர்ட் மாற்றம்

ஏப். 10, 1995: இருபத்தாறு எதிரிகளை விடுவித்தது தடா நீதிமன்றம். மற்ற எதிரிகள் மீது புகார் சாட்டல். இதே வேளையில், டிராவல் ஏஜென்ட் அபு அசிம் ஆஸ்மி (தற்போது சமாஜவாதி கட்சி எம்பி), மற்றும் அம்ஜத் மேஹர் போக்ஸ் ஆகிய இருவரை இந்த வழக்கிலிருந்து உச்சநீதிமன்றம் விடுவிப்பு.

ஏப். 19, 1995: தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தொடக்கம்

ஏப்ரல்-ஜூன் 1995: எதிரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு

ஜூன் 30, 1995: முகம்மது ஜமீல், உஸ்மான் ஜன்கானன் ஆகிய இருவர் வழக்கில் அப்ரூவராகின்றனர்.

அக். 14, 1995: ஏப்ரல் 19, 1993-ல் கைதான நடிகர் சஞ்சய் தத் (117வது எதிரி), உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிப்பு

மார்ச், 23, 1996: தடா நீதிபதி ஜே.என்.பட்டேல், உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு

மார்ச் 29, 1995: சிறப்பு தடா நீதபதியாக பி.டி.கோடே நியமனம்.

அக்டோபர் 2000: 684 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை முடிவு.

மார்ச் 9-ஜூலை 18, 2001: எதிரிகள் தரப்பு வாக்குமூலம் பதிவு

ஆகஸ்ட் 9, 2001: அரசுத் தரப்பில் குறுக்கு விசாரணை ஆரம்பம்

அக்டோபர் 18, 2001: அரசுத் தரப்பு குறுக்கு விசாரணை முடிவு

நவம்பர் 9, 2001: எதிரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை ஆரம்பம்.

ஆகஸ்ட் 22, 2002: எதிரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணை நிறைவு

பிப். 20, 2003: ரவுடி கும்பல் தலைவன் தாவூதின் கும்பலைச் சேர்ந்த எஜாஸ் பதான் நீதிமன்றத்தில் ஆஜர்.

மார்ச் 20, 2003: முஸ்தபா தோஸô என்பவரை காவலில் வைப்பதற்கான நடவடிக்கை, மற்றும் அந்த வழக்கு தனியாக பிரிப்பு

செப்டம்பர் 2003: வழக்கு விசாரணை முடிவு

ஜூன் 13, 2006: அபு சலீமின் விசாரணை தனியாக பிரிப்பு

ஆகஸ்ட் 10, 2006: தீர்ப்பை எழுதும் பணி தொடக்கம், செப்டம்பர் 12ல் தீர்ப்பு என நீதிபதி பி.டி.கோடே அறிவிப்பு.

Posted in 1993, Abu Salem, Bomb Blasts, Bombay, CBI, Dawood Ibrahim, Mumbai, Pakistan, Sanjay Dutt, TADA, Tamil, Tiger Memon, Timeline | Leave a Comment »