Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Manirathnam’ Category

Director Tharani – Story behind the silver jubilee

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

ஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை

எத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’

தில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.

“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

தரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.

சின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.

விவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.

சினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான்! செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.

மணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.

அசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப

இதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.

ஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.

ஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.

இப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.

`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.

நடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.

பூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.

என்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே!

லயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.

அவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.

`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.

எனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.

எல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.

அந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான்! அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.

Posted in Backgrounder, Barathiraja, Bharadhiraja, Bharathiraja, Biography, Biosketch, Chat, Chennai, Cinema, DFTech, Dharani, Dhil, Dhool, Dil, Editing, Editor, Ejamaan, Ejaman, Esamaan, Faces, Filmmaker, Films, Gilli, Institute, Interview, jubilee, Killi, Kodambakkam, Kollywood, Life, Manirathnam, Maniratnam, Movies, people, Rajini, Rajni, RV Udhayakumar, RV Uthayakumar, Selvamani, Story, Student, success, Technology, Telugu, Tharani, Thil, Thirupathisami, Thirupathysamy, Thool, Tollywood, Vikram | Leave a Comment »

Ilaiyaraja – Gangai Amaran, Bharathiraja & declined projects

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

திரைப்பட வரலாறு 708
இளையராஜா
இசை அமைக்க மறுத்த படங்கள்!


இளையராஜா:-

“எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்” என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், “இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!” என்ற எண்ணம்தான்.

இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.

அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!

அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் “ஒரு கை ஓசை” (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)

இப்படி, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை” என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் “புதிய பாதை”); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: “சிகரம்.”

தீஸ்ரி மஞ்சில்

சாருசித்ரா சீனுவாசன், “தீஸ்ரி மஞ்ஜில்” என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் – ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.

படம் முடிந்ததும், “இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.

சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.

டைரக்டர்கள்

சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று – நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.

என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.

கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.

காதல் ஓவியம்

பாரதிராஜா அவரது “காதல் ஓவியம்” படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.

நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், “படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்” என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.

நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்’ அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.

படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், “படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்” என்றேன். “சரி” என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.

திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, “ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!” என்றார்.

“அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!” என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.

படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.

பாரதி என்னிடம் வந்து, “வா, குருவாïர் போய் வரலாம்” என்றார். “படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!” என்று கூறிவிட்டேன்.

“காதல் ஓவியம்” படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.

“பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்” என்றேன்.

“உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!” என்றார்.

அதற்கு நான், “யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் “ஜெகன்மோகினி” படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்” என்றேன்.

ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த “வாலிபமே வா வா.” படம் ஓடவில்லை.

டைரக்டர் கங்கை அமரன்

“அலைகள் ஓய்வதில்லை” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, “அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது’‘ என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.

நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.

அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!”

Posted in Amaran, Anandhu, Ananthu, Balumahendhira, Balumahendhra, Balumahendra, Balumahenthira, Barathiraja, Bharathiraja, Cinema, Directors, Films, Gangai Amaran, Ilaiaraja, Ilaiyaraja, Kaathal Oviyam, KSG, Mani, Manirathnam, Movies, MSV, music, Sigaram, Sikaram, Sridhar, Visvanathan, VIswanadhan, Viswanathan | 1 Comment »

State of Northeastern states – Neglect & Growth of extremist forces

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

அவர்களும் இந்நாட்டு மன்னர்களே!

எஸ். சையது இப்ராஹிம்

தீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • அருணாசலப் பிரதேசம்,
  • அசாம்,
  • மணிப்பூர்,
  • மேகாலயா,
  • மிஜோரம்,
  • நாகாலாந்து,
  • திரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.

இயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.

நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.

இதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.

இந்த நிலைக்கு யார் காரணம்? அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது?. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.

“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.

ஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

நாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.

ஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.

இது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.

இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா?

Posted in abuse, AGP, Ahluwalia, AP, Arunachal, Arunachal Pradesh, Asom, Assam, Bangladesh, Banks, Bengal, Bhutan, Budget, Burma, Bus, Capital, Care, Center, China, coffee, Commerce, defence, Defense, Destination, Development, Dilse, Drought, Electricity, Employment, Environment, Exports, Extremism, Flights, Floods, Forest, Funds, GDP, Govt, Green, Growth, IMF, Imports, Improvements, Industry, ISI, Itanagar, Jobs, Kohima, Loans, Mahantha, Manipur, Manirathnam, Maniratnam, Manisha, Manufacturing, Megalaya, Meghalaya, Military, Misa, Mizoram, Montek, Mynamar, Naga, Nagaland, Nature, NE, Neglect, Northeast, Pakistan, Party, Planes, Plants, Plywood, Politics, Pollution, POTA, Power, Preity, Railways, Rains, Roads, Rubber, Shahrukh, Shillong, State, Students, Surface, TADA, Tea, Teak, Terrorism, Terrorists, Tourist, Trains, Transport, Travel, Trees, Tripura, ULFA, Uyire, Water, WB, Wood, Youth, Zinta | Leave a Comment »

The woes of a Tamil Cinema Producer – GV Films shoots off balance sheets

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

யாரைத்தான் நம்புவதோ?

ஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.

கம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.

“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்!

அடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.

ஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.

பழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.

Posted in Budget, Cinema, Director, Economic, Expenses, Films, Finance, Flop, Gossip, GV, Hit, Jeeva, Kai Vantha Kalai, Kisukisu, Loss, Majnu, Manirathanam, Manirathnam, Maniratnam, Movies, Pandiarajan, Pandiyarajan, Profit, Ravichandran, Rumour, Rumours, Shankar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Blogs, Tamil channels, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Magaizine, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thirudi, Urchagam, Urchakam, Venkatesvaran, Venkateswaran, Woes | Leave a Comment »

Kumutham Theernadhi – Black Friday: Movie Experiences by Viswamithran

Posted by Snapjudge மேல் ஜூன் 7, 2007

குமுதம் தீராநதி
இந்திய சினிமா – விஸ்வாமித்திரன்
கருப்பு வெள்ளிக்கிழமை

ஆசிய சினிமா வரலாற்றில் அரசியல்ரீதியாக நிகழ்ந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படங்கள் சில நூறுகளுக்குள் அடங்கிவிடக் கூடியதுதான். அவற்றில் குறிப்பிடத்தக்க, நமது மனதிலிருந்து என்றும் அகலாத சமகாலப் படங்களாக, தென்கொரிய இயக்குநரான ஜேங்க் சன் வூவினது ‘பூவிதழ்’ (A Petal), இந்தோனேசிய இயக்குநரான கெரின் நுகரோகோவினது ‘கவிஞன்’ (A Poet) போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை அரசியல் சினிமா என்பது பற்றாக்குறை மிக்க பரப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பொதுவாக சினிமா போக்கென்பது. தனிமனித சுகதுக்கங்களைப் பற்றிய வரையறைகளுடன் எஞ்சிவிடுமாறே பெரும்பாலும் நிகழ்கின்றன.

அவற்றுள் ‘நல்ல சினிமா’ என்பது அவற்றை மேம்பட்ட உண்மையுடனும் யதார்த்தத்துடனும் வழங்கினவை மாத்திரமே. அவை பல்வேறுபட்ட போக்குகளை திரைப்பரப்புள் கொண்டு வந்திருந்தாலும், அனைத்தும் கதாபாத்திரப் பார்வைச்சார்புடனேயே அணுகப்பட்டவையாகும். ஒருவிதத்தில் அந்நிலை ஏற்கத்தக்கதுதானெனினும், நம்மைக் கடந்துவிட்ட அல்லது நாம் கடந்துகொண்டிருக்கிற அரசியல் வரலாற்றுத் தடங்களைப் பற்றிய சித்திரிப்புக்களை அவை நேரடித்தன்மையுடன் சுட்ட உதவியதில்லை. உதாரணத்திற்கு, தமிழில் வெளியான ‘ஹே ராம்’ படத்தை எடுத்துக் கொண்டால், மையக் கதாபாத்திரமான சாகேத் ராமினது பார்வைச் சார்பு மதிப்பீட்டின்படியே காந்திய நிலைப்பாடுகளை அப்படம் கணக்கிட்டுப் பார்த்தது. தனிமனித பாதிப்பின் நீண்டதூரப் பழிவாங்கலாக மாத்திரமே அப்படம் தனித்துவிடுகிறது. ‘பம்பாய்’, ‘இந்தியன்’ ஆகிய திரைப்படங்களையும் இவ்வகையில் இணைக்கலாம். இதைப்போலவே தமிழில் வந்த பல படங்கள் மையக் கதாபாத்திரங்களின் மனமதிப்பீட்டிற்கு ஏற்பவே தாம் கடக்கும் வரலாற்றுத் தடங்களைப் பதிவு செய்பவையாக இருப்பதுவே நடைமுறை.

எனவே, அரசியல் சினிமாவை நேரடித் தேவையுடன் திரைப்பரப்பிற்கு எடுத்துவரும் திரைப்படங்கள் ஏறக்குறைய இல்லை என்கிற நிலைதான் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. எனினும், படைப்பொளி மேலோங்கிக் கொண்டிருக்கும் இந்தி சினிமாவில் அக்குறைபாட்டை தீர்க்கவென ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ (Black Friday்) என்கிற இந்தித் திரைப்படம் 2007 பிப்ரவரி மாதத்தில் வெளியானது. வழக்கமான ஒரு இந்தி நடுநிலைத் திரைப்படமாக இருக்கும் என்று நம்பிச் செல்பவர்கள் ஆச்சரியங்களுடனும் அதிர்வுகளுடனும் அரங்கத்திலிருந்து வெளியேறுவது உறுதி. ‘லகான்’ திரைப்படத்திற்குப் பின்பு நீண்ட இடைவெளியில் உலகத் திரைப் பார்வையாளர் சமூகமே தலைநிமிர்ந்து பார்க்கும்படியான வாய்ப்பை ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ அளித்திருப்பது உலகளாவிய நல்ல சினிமாவை இந்திய/தமிழ் மட்டத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாம் முதலில் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயம். ஏனெனில் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை ஆவணப் புனைவுப் படங்கள் (DocuFiction) ஆவணத்தன்மையையும் பெறாமல் புனைவுத்தன்மையையும் பெறாமல் இரண்டும் கெட்டானாகத் தேங்கிப் போய்விடுபவையாக உள்ளன. பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றிய தமிழ்த் திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். இப்படத்தின் முக்கியத்துவம் கருதி படத்தின் தேவையை நாம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்திலும், சினிமா என்கிற காட்சியூடக மொழியின் வெளிப்பாட்டினை (Expression of Film Language) இப்படம் பெற்றிருக்கவில்லை என்கிற குறைபாட்டை நாம் சமாதானப்படுத்திக் கொள்ளமுடியாது. நல்லதொரு வரலாற்று நாடகத்தன்மையையே அப்படம் கொண்டிருந்தது. இயக்குநர் திரைமொழியைவிட கதாபாத்திரத்தின் வரலாற்றைப் பதிவுபடுத்தும் மட்டற்ற ஆர்வத்தின் வெளிப்படுதலாகவோ அல்லது திரைமொழி குறித்த அவரது ஆர்வமற்ற நிலைப்பாட்டின் வெளிப்படுதலாகவோ இந்தப் பிழைகளை நாம் கணிக்கலாம். மணிரத்னம் போன்றவர்கள் இவ்விரு தளங்களையும் சமனாகக் கையாள முயன்றிருப்பினும் (இருவர், பம்பாய், மற்றும் குரு), கதாபாத்திரங்களின்மீது திணிக்கப்படும் காதல் ஈடுபாடு காரணமாக படத்தின் மூலச்செய்தி கைதவறிப் போய் விடுகிறது. கவர்ச்சிபூர்வமான அணுகல்தான் (Romanticised Approach) இத்தகைய படங்களின் வீர்யத்தை மட்டுப்படுத்திவிடும் ஒரு கூறாக அமைந்துவிடுகிறது. இந்தப் பலகீனங்களின் பின்னணியில்தான், ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படத்தின் உச்சபட்ச கலை, அரசியல் வெளிப்பாடுகளின் முக்கியத்துவத்தை நாம் மதிப்பீடு செய்ய நேர்கிறது.

1993ஆம் ஆண்டு நடந்தேறிய பம்பாய் குண்டுவெடிப்புச் சம்பவங்களை முன்வைத்து ஹ§சேன் சேய்தி எழுதின புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1993, மார்ச் 9ஆம் தேதி பம்பாய் நகரைச் சுற்றி 12 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலில் சிக்கி 300_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1600_க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அந்தக் கொடிய சம்பவம் நடந்தது ஒரு வெள்ளிக்கிழமையன்று. மனித கூக்குரல்களும் ரத்த வீறிடல்களும் புகையின் கரிய அடர்த்தியும் படிந்த அந்த வெள்ளிக்கிழமைத் துயரின் சம்பவ விவரிப்பையும் அதன் சதித்திட்டங்களையும் பின்பு நேரும் கைதுவிசாரணைகளையும் தொகுத்து வழங்குகிறது ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ திரைப்படம்.

மார்ச் 9, 1993இல் பம்பாயிலுள்ள நவ் படா காவல்நிலையத்தில், காட்சிகள் தோன்றாத இருட்பின்னணியில் சிறைக்கதவு பலமாக ஓங்கியறையப்படும் சத்தத்தோடு துவங்குகிறது. அந்தச் சத்தமே படத்தின் தீவிரத்தன்மையை நோக்கிய நமது கவனத்தைக் கூர்மைப்படுத்திவிடுகிறது. தொடர்ந்து பூட்ஸ் காலோசை. காட்சி பரவ, சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட குல் மொஹமத் எனும் இளைஞனொருவன் காவல்துறையினரால் நீரில் மூழ்கடிக்கப்பட்டு வதைக்குள்ளாகிறான். நடைபெற்ற கலவரமொன்றில் அகப்பட்ட அவன், தனது சகோதரர்களுடன் கைதுசெய்யப்பட்டவன். ஆனால் உண்மையில் அவனது சகோதரர்களுக்கு அந்தக் கலவரத்தில் எந்தப் பங்கெடுப்பும் இல்லை. அவர்களை விடுவித்துவிடுமாறு அழுது புலம்புகிறான். பின்பு (சகோதர்களை விடுவிக்கச்செய்யும் விழைவின்பொருட்டாலும்) பயம் கலந்த அழுகையுனூடாக பம்பாயில் இன்னும் 3 நாட்களில் ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வெடிக்கப்போகும் சதித்திட்டம் பற்றிக் காவல்துறையினரிடம் கூறுகிறான். ஸ்டாக் எக்சேஞ்ச், மந்த்ராலயா மற்றும் சேனா பவன் ஆகிய இடங்கள் வெடிவைத்துத் தகர்க்க குறிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறான். ஆனால் காவல்துறையினர் அதை நம்புவதாக இல்லை. ‘எளிதாக தரைமட்டமாக்க அவ்விடங்களெல்லாம் என்ன இனிப்புத் துண்டங்களா?’ என்று ஏளனத்துடன் பதிலளிக்கின்றனர். ஆனால் உண்மையில் வெடிப்பு நிகழப்போகிறது என்பதை அடுத்த காட்சி நமக்கு உறுதிப்படுத்தத் துவங்குகிறது.

சதி ஏற்பாட்டாளரான டைகர் மேமனது குழுவுரை ‘மார்ச் 12ஆம் தேதி திட்டம் நிகழ்த்தப்படவேண்டும்’ என்று நிகழ்கிறது. அடுத்து ஆங்காங்கு குண்டுகள் பொருத்தப்படும் செயல் விரிவாக காட்டப்படுகிறது. பம்பாயின் கடற்கரையோர புறாக்கள் உற்சாகமாகப் பறந்துகொண்டிருக்கின்ற வெள்ளிக்கிழமை. மதியம் 1.25 மணித்துளியில் ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டடம் காட்டப்படுகிறது. மக்கள் அபாயமறியாது நெரிசலாக தத்தமது பணிகளைத் தாங்கி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். கட்டடத்தில் மணியோசை எழும்ப, திரைப்படத்தின் நகர்வு மெதுத்தன்மையை (Slow Motion) அடைகிறது. காலம் உறையத் துவங்குவதான மெதுத்தன்மை. மனித இரைச்சல் கரைந்து கட்டடத்தின் அடிப்பகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கும் குண்டின் ஒலி மேலெழுகிறது. ஏறக்குறைய இதயத்தின் ஓசை நிதானத்திலிருந்து மெதுவாக பதற்றமடைந்து செல்வதைப் பிரதிபடுத்தும் சத்தம் அது. ஓசை வேகப்பட, கட்டடத்தின் அடிமட்டம் வெடித்துச் சிதறுகிறது. செவியின் தாங்கும்ஓசை அறுபட்டு அருகிருப்பவர்கள் மயக்கத்திலாழும்போது எழும்பும் பீதியடைந்த மௌனஇரைச்சல் திரைசூழ்கிறது. உயிரோடிருப்பவர்கள் நடந்ததை இன்னும் உணராவண்ணம் திக்பிரமை பிடித்து சுற்றிப்பார்த்துக் கொள்கிறார்கள். ரத்தம் மழைநீரெனச் சூழ, உடல்கள் சிதறி அசைவற்றுக் கிடக்கின்றன. குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நாம் நின்றிருந்து தப்பித்துவிட்டால் நமது நினைவு சிதறின பிரமையில் எவ்விதம் அச்சூழலைக் காண்போமோ, அச்சூழல் அப்படியே திரைப்பரப்பில் ஞாபகப்படுத்தப்படுகிறது. அக்காட்சியின் தீவிரப் படமாக்கம் திரைப்படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை அநேகமாக அழித்துவிட்டு குண்டுவெடிப்பு பிறப்பித்துவிடும் கோரத்தை நாம் கண்ணெதிரே கண்டுணர்வதுபோன்ற பிரதிபலிப்பைத் தந்துவிடுகிறது. ஐரோப்பிய சினிமாவில் மாத்திரமே யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் இத்தகைய தொழில் நுட்பக் கூறுகளை நாம் காணமுடியும். இப்படத்திலும் இத்தகைய கூறுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய சினிமாவிற்குப் புதியதுதான்.

2.45 மணித்துளிக்கு வோர்லி பாஸ்போர்ட் அலுவலகத்தினருகே நிறுத்தத்தில் வந்து நிற்கும் பேருந்து மீண்டும் புறப்படும்போது குண்டுவெடித்துத் தகர்க்கப்படுகிறது. தொடர்ந்து நிஜமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திவடிவில் காட்டப்படுகின்றன. குறுகிய நிமிட இடைவெளிகளில் செஞ்சுரி பஜாரில் உள்ள பேருந்துநிறுத்துமிடம், ஏர் இந்தியா கட்டடம், தாதரிலுள்ள சிவசேனா பவனிற்கு அருகிலிருக்கும் லக்கி பெட்ரோல் பம்ப், ஜூகு சென்டர் ஹோட்டல் மூன்றாம் மாடியிலுள்ள அறை, சவேரி பஜாரின் வீதி, மக்கிமேர் காலனி, பிளாசா திரையரங்கில் வாகனம் நிறுத்துமிடம், பந்த்ராவிலுள்ள ஸீ ராக் ஹோட்டலின் 18வது மாடி, சாந்தா குருஸ் விமான தளத்திற்கருகிலுள்ள மற்றொரு சென்டர் ஹோட்டல் என துல்லியமான திட்டத்தின் அடிப்படையில் தகர்ப்புக்கள் நடத்தப்படுகின்றன. பம்பாய் நகரமே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துப் போகும்படி புகை குடித்த கருப்பு நாளான அவ்வெள்ளிக்கிழமை வலிகளடர்ந்த பொழுதாக உருவடைகிறது.

5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட படத்தின் முதல் பகுதி முதல் கைதுப் படலம். மகிம் எனும் பகுதியில், அல் ஹ§சைனி கட்டட விலாசத்திலுள்ள ரூபினா சுலைமான் மேமன் வீட்டிற்கு காவல்துறையினரோடு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியான ராகேஷ் மரியா செல்கிறார். அங்கு யாருமிருப்பதில்லை. பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்கையில் டைகர் பாயின் (டைகர் மேமன்) மூத்த சகோதரன்தான் சுலைமான் எனவும் அவரது துணைவியார்தான் ரூபினா என்பதும் தெரியவருகிறது. ஆனால் குண்டுவெடிப்பிற்கு முதல்நாள் டைகர் பாய் தனது உறவினருடன் துபாய்க்குத் தப்பிச்சென்றுவிட, இந்தக் குண்டுவெடிப்பில் டைகர் பாய் தொடர்புபட்டிருப்பது தெளிவுபடுகிறது. மார்ச் 14ஆம் தேதி டைகர் பாயின் அந்தரங்கக் காரியதரிசியான அஸ்கர் முகாதெம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுகிறான். இந்தக் காட்சி மிகவும் நுட்பமான வகையில் எடுக்கப்பட்டிருப்பது இக்காட்சியின் தீவிரத்தை தேர்ச்சிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு அறையில் மேல் மூலையிலிருந்து கவனிப்பதாக அடர் சிவப்பு நிறத்தின் ஒளிப்பின்னணியில் நிகழும் இக்காட்சியில், ஒரு விசாரணைக் கைதியின் பதட்டத்தை மிகத் தேர்ச்சியாக அஸ்கர் கதாபாத்திரம் ஏற்ற நடிகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக காவல் அதிகாரி குடிக்குமாறு கூறி தேநீர் தரும்போது விபரீதமான அபாயம் தன்னைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்து அஸ்கர் அந்தத் தேநீரைக் குடிக்கத் தயங்குவது நுட்பமான வார்ப்பில் படமாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனத்துடன் தோன்றும் அந்தப் பாத்திரம் இந்தச் சதியின் விபரீதத்தை முழுக்க உணராமலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை அவனது வாக்குமுலம் சொல்கிறது. தொடர்ச்சியாக குண்டுவெடிப்பிற்காக ஏவப்படும் இளைஞர்கள் தமக்கு கூறப்பட்ட இடங்களில் குண்டுகளை பொருத்துவது பற்றிய விவரணை மிகவும் துரிதமான காட்சிகளால் சித்திரிக்கப்படுகின்றன. இக்காட்சியில் கோர்க்கப்பட்டிருக்கும் இசை, அந்த அபாயச் செயலின் பதற்றவேகத்தை பிரதிபலிக்கும்விதமாக கையாளப்பட்டிருக்கிறது. உண்மையில் யோசித்தால் படத்தின் ஒவ்வொரு காட்சியின், கதாபாத்திரங்களின் தன்னியல்பான வெளிப்பாடுகள் மட்டுமின்றி, இதர வேலைப்பாடுகளான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, சத்தப் பின்னணி, நகரச் சூழல் என யாவுமே இணையான தரமேன்மையுடன் அணுகப்பட்டிருப்பது இந்திய சினிமாவில் வியப்பிற்குரிய ஒன்றாகவே தோன்றுகிறது. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ போன்ற திரைப்படங்களை எளிதாக இயக்கிவிட முடியாது. இப்படத்தின் ஒவ்வொரு கணநேரக் காட்சிகளையும் கூர்ந்து கவனிக்கும்போது மிகத் தேர்ச்சிபெற்ற பல்துறைக்கலைஞர்கள் பங்கேற்புச் செய்திருப்பது எளிதாகத் தெரியவரும்.

இரண்டாம் பகுதி மார்ச் ஏப்ரல் 1993இல் நடைபெறும் கைது மற்றும் கைதிவிசாரணைப் படலம். காவல்துறைக்குச் செய்தி தருபவன் (Informer) மூலம் பர்வேஸ், சோயிப் கன்சாரி, முஸ்தாக், இம்தியாஸ் கவேத் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. பல அப்பாவி இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறையின் அணுகல்கள் ‘வன்முறை’ என்பதையும் தாண்டி அன்றாட நிகழ்வுகளின் இயல்புத்தொனியுடன் காட்சிக்குள் வந்துசெல்கின்றன. இம்தியாஸ் கவேத்தை விரட்டிப் பிடிக்கும் காட்சியில், விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமாக அமைக்கப்பட்ட காட்சி இது. கவேத்தை பிடிக்கும் வினாடிகளில் திரும்பத் திரும்ப அவன், தப்பித்துவிடுகிறான். காட்சியின் வேகமும் பின்புறத்தில் ஒலிக்கும் இசையின் தாளகதியும் இந்த நீண்ட காட்சியை உயிரோட்டப்படுத்துகிறது. கடினமுயற்சிக்குப் பின் அவன் அகப்பட்டதும், விசாரணையறையில் வதைபடும் காட்சியும், சுத்தியலால் கைவிரல்கள் நசுக்கப்படும் அவன், குற்றக் கோப்பில் கையெழுத்துப் போட வலியுறுத்தப்படும் நிலையில், நசுங்கிய கையால் பேனாவைப் பிடிக்கவியலாமல் அவன் கதறும் காட்சியும், அவன் குற்றவாளி எனும் நிலையிலும், நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஏனெனில், இந்தத் திரைப்படம் சாமான்ய மனிதர்கள் சக சூழ்ச்சிகளுக்குப் பலியாகி தமது வாழ்வை அழித்துக் கொள்வதைப் பற்றியதாக இருக்கிறது. அப்பாவி மக்கள் இறந்துவிடுவார்கள் என்கிற பதட்டம் ஒருசிறிதுமின்றிதான் சதி வேலைகளை ஏதோ ஆக்கபூர்வமான வேலை செய்வதுபோல ஈடுபாட்டுடன் இவர்கள் செய்கிறார்கள். அதனுடைய பிரதிபலனை பின்பு வருத்தத்துடன் அனுபவிக்கிறார்கள். எனினும், அவர்களுக்குள்ளும் தலைமறைவாக இருக்கும் எளிய உள்ளங்களைப் பற்றிய நுண்ணிய சித்திரிப்புக்களையும் இந்தப்படம் வழங்கத் தவறவில்லை.

மூன்றாவது பகுதி ஓடும் படலம். இப்பகுதி, டெல்லியிலிருக்கும் மசூதியன்றிலிருந்து துவங்குகிறது. சதியின் வெற்றிக்குப் பிறகு, பாத்ஷா கானும் பஷீர் கானும் டைகர் பாயிடமிருக்கும் தமது பாஸ்போர்ட்டுகளைப் பெற்று இந்தியாவிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில் டெல்லியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். டைகர் பாயைத் தொடர்பு கொள்ளும்போது ‘ஏன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? அகப்படவா?’ என்று வினா எழுப்பி, உடனே எங்காவது சென்று தலைமறைவாக இருக்கும்படி கூற, உடனே இருவரும் பாத்ஷா கானின் சொந்த ஊரான ராம்பூருக்கு (உத்தரப்பிரதேசம்) செல்கிறார்கள். அங்கிருந்து ஜெய்ப்பூர் செல்லும்படியும், அங்கிருந்து துபாய்க்குச் செல்ல தான் ஏற்பாடு செய்வதாகவும் டைகர் பாய் மீண்டும் தொலைபேசித் தொடர்பில் உறுதியளிக்க, இருவரும் நம்பிக்கையுடன் செல்கிறார்கள். அங்கு சக சதியாளர்களோடு உரையாடும்போது அனைவரது பாஸ்போர்ட்டும் எரிக்கப்பட்டுவிட்டதை அறிந்து பாத்ஷா கொதிப்படைகிறான். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறான். எனினும், டைகர் பாய் அனைவரையும் காக்கும்பொருட்டுத்தான் ஜெய்ப்பூருக்கு வரச் சொல்லியிருப்பதாகவும் புதிய பாஸ்போர்ட்டுகள் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிலவும் செய்தியன்றால் சமாதானமடைகிறான். எனினும் உள்மனதுள் தான் கைவிடப்பட்டதாக பாத்ஷா எண்ணுகிறான். மீண்டும் ராம்பூருக்கு வர, மறுநாள் காலையில் பஷீர், பாத்ஷாவிடம் சொல்லாமல் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றுவிட, தனிமையின் வெம்மையோடும் பயத்தோடும் பாத்ஷா பழைய தில்லி, கல்கத்தா என அலைக்கழிக்கப்படுகிறான். டைகர் பாயிடம் தொடர்பு கொள்வதும் கடினமாகி கையிலிருந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் ராம்பூருக்குத் திரும்புகிறான்.

கரிய இருளாக இருப்பின் சுமை அடரத்துவங்கும் ஒரு நாளில் (மே 10, 1993) காவல்துறை அவனது இல்லம் வந்து கைதுசெய்துகிறது. பின்பு விசாரணையறைக்கு அழைத்துவரப்படுகிறான் பாத்ஷா. ராகேஷிற்கும் அவனுக்கும் இடையே அரசியல்ரீதியான விவாதம் நடைபெறுகிறது. ‘எத்தனைபேர் உயிரை இழந்தார்கள் என்பதையும் இந்த நகரம் எத்தனை துன்பப்பட்டது என்பதையும் அறிவாயா? உனக்கென்ன, நீ தப்பித்துச் செல்ல இந்த உலகத்தில் எத்தனையோ இடங்கள் இருக்கிறது’ எனும் ராகேஷிடம், ‘தான் குற்றமேதும் செய்யவில்லை’ என்று பதில்கூறுகிறான் பாத்ஷா. பின்பு மெதுவாக தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்குகிறான். ‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் எமது மக்கள் மீதான வன்முறையும் இத்தகைய செயலைச் செய்ய எங்களைத் தூண்டியது’ என்று கூறுகிறான். வசனங்கள் படத்தில் நேரடித் தன்மையுடன் பிரயோகப்பட்டிருப்பதும் ஆவணப்படத்தில் மட்டுமே காணமுடிகிற அம்சங்களை தயக்கமின்றி புகுத்தியிருப்பதும் வியப்பாகவே இருக்கிறது. இந்த மூன்றாவது பகுதியே கதைகூறலின் அடிப்படையிலும் காட்சிகளை கட்டமைத்ததன் அடிப்படையிலும் படத்தின் மிகச் சிறந்த பகுதியாக பரிணமிக்கிறது. பாத்ஷாவாக நடித்த ஆதித்யா ஸ்ரீவத்சவா நடிப்பின் உச்சம் தொடுகிறார்.

நான்காம் பகுதி, யாகூப் கான் மற்றும் ஆர்.டி.எக்ஸ் படலம். ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்தைக் கடத்துபவனும் சதிவேலையில் ஈடுபட்டவனுமான யாகூப்கானினது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும்பொருட்டு அவனது சகோதரரும் எம்.கே. பில்டர்ஸ் அதிபருமான மஜித்கானும் அவரது துணைவி நபிசாவும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இதனை அறியும் யாகூப் தலைமறைவான இடத்திலிருந்து காவல்துறைக்கு தொலைபேசி வழி தனக்கும் குண்டுவெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனவும், மஜிதையும் நபிசாவையும் விட்டுவிடும்படியும் போதையேறின நிலையில் அழுதுபுலம்புகிறான். தொடர்ந்து டைகர் பாயிடம் தொலைபேசி வழி பேசுகிறான். எதிர்ப்புறமிருந்து ‘இந்தப் புனிதப்போரில் பலியாவது தவிர்க்கவியலாதது’ எனப் பதில்வருகிறது. தாவுத் பாயிடம் (தாவுத் இப்ராகிம்) பேசிப்பாருங்கள் எனக் கோரிக்கை விடுக்கிறான் யாகூப். ஆனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றறிந்த நிலையில், காவல்துறையினரிடம், ‘எனது சகோதரரை விடுவித்தால் ஒரு தகவலைக் கூறுவேன்’ என்று கோரிக்கை வைக்கிறான். அதிகாரி விடுவிக்க முயலுவதாகக் கூற, அம்ருத் நகரிலுள்ள காய்ந்த மீன்கள் நிரப்பப்பட்ட உணவுக்கிடங்கில் டைகர் பாய் பதுக்கிவைத்திருக்கும் ஆர்.டி. எக்ஸ் வெடிமருந்து இருப்பதாகத் தகவல் தர, காவல்துறை சென்று மருந்தை பறிமுதல் செய்கிறது. தொடர்ந்து, அருகிலிருக்கும் நக்லா பந்தர் சிற்றோடையிலும் (மார்ச் 30, 1993) பல ஆர்.டி.எக்ஸ் பதுக்கப்பட்ட சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்படுகின்றன.

யாகூப் மீண்டும் தொலைபேசி வழி காவல்துறையினருக்கு பிலு கான் அடிக்கடி வரும் உணவுவிடுதி பற்றின தகவலைத் தருகிறான். அவனது பழிவாங்கல் காட்டிக்கொடுப்பதாக உருமாறுகிறது. விசாரணையின்பேரில் அந்த உணவுவிடுதியின் அதிபரான ராஜ்குமார் குரானாவை கைதுசெய்கிறார்கள். அவருக்கு ஏதும் தெரியாது என்கிற நிலையிலும் சிறையிலடைக்கப்படுகிறார். அவரது கண்முன்னே பெண்கைதிகளின் மீதான மானபங்கம் நிகழ்த்தப்பட, மனம் ரணமுற்று அவதிப்படுகிறார். குறுகிய நாட்களில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனது குடும்பத்திற்கு அவமானம் நேர்ந்து விடுமோ என்கிற அச்சத்தினாலும் துக்கத்தாலும் மனைவி, பிள்ளைகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறார். படத்தின் ஒரு கிளைச் சிறுகதை போல வரும் இப்பகுதியில், ராஜ்குமார் குரானாவாக வரும் நடிகர் தனது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிட நேரங்களிலேயே நடந்துமுடிந்துவிடும் அவரது கதாபாத்திரத்தின் திரைவாழ்வு நமது எண்ணத்துள் நீங்கவியலாமல் ஒட்டிக்கொள்கிறது. எல்லா சூழ்ச்சிகளுக்கும் பின்பாக அப்பாவிகளும் பலியாவதற்கு உதாரணமாக இந்தக் கதாபாத்திரம் வந்துசெல்கிறது.

ஐந்தாம் பகுதி சதியாலோசனைப் படலம். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை நன்குணர்ந்த பாத்ஷாகான் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்கும் பகுதி இது. இதன் தொடர்ச்சியில், தாவுத் பான்சே என்கிற கடத்தல் வியாபாரி கைதுசெய்யப்படுகிறான். டைகர் பாயிடம் ஒருவருட காலமாகப் பணிபுரிபவன். தாவுத் பாயுடனான வியாபார நம்பகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் பான்சேயை துபாயிலுள்ள தாவுத் இப்ராகிம் இருப்பிடத்திற்கு டைகர் அழைத்துச் செல்கிறான். நிஜமாகவே உருக்கொண்டு வந்தாற்போல அமைந்திருக்கிறது தாவுத் இப்ராகிம் வந்துசெல்லும் காட்சி. தாவுத்தாக வரும் நடிகர் தோற்றத்தில் அச்சுப்பிசகாமல் தாவுத்தை மறுபிரதி செய்யும் வண்ணமாக இருக்கிறார். படத்தின் நீளத்தால் ஏற்படும் பார்வையாளரது அயர்வை தாவுத் இப்ராகிமின் வருகை அகற்றிவிடுகிறது.

பின்பு, சதியில் ஈடுபடுமுன் அனைவரும் பாகிஸ்தானிலுள்ள பெயரறியா இடமொன்றிற்குப் பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். தீவிரமான ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியாளன் ஆர். டி. எக்ஸ் வெடிகுண்டை அறிமுகப்படுத்துகிறான். அவை இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு தயாரிக்கப்பட்ட குண்டுகளெனக் கூறி, தூரமாக எறிந்து வெடித்துக் காட்டுகிறான். காண்பவர்கள் கலங்கிப்போகும் அளவு அதன் சத்தமும் சிதிலமும் புழுதியெழுப்புகிறது. உணர்வுபூர்வமான மத உரைகளின்மூலமும் பழிவாங்கும் உன்மத்தம் எழுப்பப்படுகிறது. இத்தகைய இனத்துவேஷப் பழிதீர்த்தலுக்கான பின்னணி படத்தில் நிஜமான ஆவணக் காட்சியாக இப்பொழுது காண்பிக்கப்படுகிறது பாபர் மசூதி இடிக்கப்படும் சம்பவத்தின் நேரடிக் காட்சி. தொடர்ந்து பம்பாயில் ஏற்பட்ட இனக் கலவரம். இரு அணியாளர்களும் கொலைசெய்வதும் பாலியல்பலாத்காரம் மேற்கொள்வதும் எனத் தொடரும் வன்செயல்கள். 600 பேர் கொல்லப்படுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களோடும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழந்தும் வேதனையி லாழ்த்தப்படுகின்றனர். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் துயரமும் அச்சமும் கசிய அகதிகளாகின்றனர்.

ஒரு சிறுமி, ‘தனது தந்தையும் தாயும் தம்பியும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தனது தாத்தாவும் பாட்டியும் காணாமல் போய்விட்டார்கள்’ எனவும் அனைத்தையும் இழந்துவிட்ட கையறுநிலையின் தீவிர மறியாமல் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பொன்றில் சொல்கிறாள். ஒரு முஸ்லிம் பெண்மணி, ‘நீங்களனைவரும் பம்பாயைவிட்டு வெளியேறிவிடுங்கள், உங்களுக்கு இங்கிருக்க இடமில்லை’ என எதிரணியினர் கூறுவதாக கவலையுறுகிறார். பொருளாதார நிலைகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன. டைகர் பாயின் அலுவலகமும் இரவோடு இரவாக எதிரணியினரால் கொளுத்தப்படுகிறது. மறுநாள் காலையில் அலுவலகம் வந்து கொதித்துப்போகும் டைகர் பாய் பழிவாங்கும் நோக்கத்தில் சூளுரைத்துவிட்டு துபாய்க்குப் பறந்துசெல்ல, அங்கு சதியாலோசனை நடைபெறுகிறது. எங்கெங்கு வெடிப்பு நிகழ்த்துவதென இடங்கள் குறிக்கப்படுகின்றன. அடுத்த காட்சியிலேயே படத்தின் முதல்காட்சியில் நாம் கண்ட தொடர் வெடிப்புக்கள் மீண்டும் காட்டப்படுகின்றன. மனித உடல்கள் சிதறி ரத்தம் பீறிட்டு வழிய, வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட பலியுற்ற அப்பாவி மனித உடல்களை காண்பித்தபடியே திரைப்பரப்பில் இருள் நிறைகிறது.

இந்தத் திரைப்படம் ஒரு சாராரின் வன்செயல்களை மட்டுமே சித்திரித்திருந்தால் நிலவும் சூழலில் ஆபத்தைப் பிரயோகிக்கும் படமாகக் கருதப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு அரசியல் வன்முறைக்கும் மற்றொரு அரசியல் வன்முறை வேராக பின்னியங்குகிறது என்கிற அறிந்துணர்வை படம் நமது பொதுப்பார்வைக்கு ஏற்படுத்தித் தருகிறது. இருவேறு தன்னுணர்ச்சி மற்றும் துவேஷக் கணக்குகளால் நஷ்டப்படுவது சாமான்ய மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்களே என்பது படத்தின் மூலச் செய்தியாகிறது. இந்த வன்முறைகளை நாம் செய்வதறியாது பார்த்துக் கடந்ததுபோல திரைப்படமும் பார்த்தபடி கடந்துசெல்கிறது. இத்தகைய சாய்வற்ற அரசியல் சமன்பார்வைகளை இந்தியாவின் சிறந்த ஆவணப்பட இயக்குநரான ஆனந்த பட்வர்த்தனது ஆவணப்படங்களில் மட்டும்தான் நாம் காணவியலும். அவற்றிற்கிணையான பார்வைகளை (புனைவாக்கம் என்னும் வரையறையையும் மீறி) இந்தப்படமும் வழங்குகிறது என்பது சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஓர் அம்சம்.

2006 மத்தியிலேயே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப் படம் சமகால வழக்கிலிருக்கும் மத/அரசியல் பிரச்சினையை சித்திரிப்பதால் உடனடியாக வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வழக்கு முடிவடைந்திருக்கும் நிலையில் படம் வெளியாகியிருக்கிறது. படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், இந்திய சினிமாவின் வலுவான குரலை உலக அரங்கில் ஒலிக்கச் செய்திருக்கும் இளைஞர். ராம்கோபால் வர்மாவினது ‘சத்யா’ மற்றும் படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் அனுராக். மணிரத்னத்தின் ‘யுவா’ படத்திற்கு வசனமெழுதியவர். ‘குரு’ படத்திலும் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ படத்திலும் அவரது பங்களிப்பு உண்டு. அவரது உரைநடை வளம் ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்திற்கு மிகவும் உந்துதலான வீர்யத்தை அளித்திருக்கிறது. உள்ளீடான கதையம்சமும் சாய்வற்ற அரசியல் பார்வையும் திரைமொழி குறித்த அறிவாற்றலும் ஒருசேர வாய்ப்பது அரிது. அனுராக்கிற்கு அந்த ஒன்றிணைவு வாய்த்திருக்கிறது. நல்ல திரைப்படங்களை தொடர்ந்து அளிப்பார் என நம்பிக்கை கொள்வோம்.

‘ஒளிப்பதிவு செய்திருப்பதை உணர்த்தாத படங்களே சிறந்த ஒளிப்பதிவை கொண்டிருப்பவை’ என்கிற பார்வை ஒன்றுண்டு. ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ படத்தில் ஒளிப்பதிவின் தேவையற்ற குறுக்கீட்டு முன்னிலையை நாம் எங்குமே காணமுடியாது. கதையம்சத்தின், கதாபாத்திர உணர்வோட்டத்தின் நிழலெனவே ஒளிப்பதிவு தொடர்கிறது. ராம்கோபால் வர்மாவின் படங்களில் இடம்பெறும் சதவீதங்களையும் தாண்டி, இதுவரை இந்தித் திரைப்படங்களில் நேர் யதார்த்தத்துடன் காணாமலிருந்த மும்பை மைய புறநகர வீதிகளை காட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவியக்கம். ஒளிப்பதிவாளர் நடராஜ சுப்பிரமணியன். இவர் தமிழரும்கூட. அரிதாகவே கைவரப்பெறும் ஒளிப்பதிவின் நேரிய தன்மையை திரைப்பரப்பில் உலவவிட்ட அவரது உயர்ந்தபட்ச திரைப்பங்கேற்பிற்காக (தமிழர் என்கிற நிலையிலும்) தமிழ்ச்சமூகம் பெருமைப்பட வேண்டும். இன்னும் பல காட்சிகள் கண்களுக்குள் மறக்கவொண்ணாமல் கிளையாடுகின்றன. மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் காட்டப்படும்போது பதற்றமும் வேதனையும் அழிக்கக்கூடிய நீலநிற ஒளிக்கலப்பு குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களை கைதுசெய்யும் தேடல்படலத்தில் குழப்பமும் சூன்யமும் காட்டும் மெல்லிய மஞ்சள் நிறம் கைதிகள் விசாரிக்கப்படும் காட்சியில் வன்முகம் காட்டும் சிகப்பு நிறம் என காட்சிகளின் மனவோட்டத்திற்கேற்ப பல்வேறு வண்ணங்களை பிரயோகித்திருக்கிறார்.

டைகர் பாயாக வரும் பவன் மல்ஹோத்ராவையும், காவல்துறையதிகாரியாக வரும் கே. கே மேனனையும் உள்ளிட்டு படத்தில் பங்கேற்ற அனைத்து நடிகர்களுமே தமது படைப்பாற்றலை பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் மற்றொரு பலமான படத்தொகுப்பைச் செய்திருப்பவர் ஆர்த்தி பஜாஜ். காட்சிகளின் தொகுப்பை சிற்ப வேலைப்பாட்டு கவனத்துடன் அணுகியிருக்கிறார். படத்தின் உணர்ச்சிகளுள் நம்மை மூழ்கடித்துவிடும்படியான இசையை இந்தியன் ஓசியன் தந்திருக்கிறது. இனிவரும் எதிர்கால அரசியல் திரைப்படங்களுக்குச் சிறந்த முன்னோடியாக ‘கருப்பு வெள்ளிக்கிழமை’ என்றுமே தன்னிருப்பு பெற்றிருக்கும் என்பதுவும் இறுதியாகச் சொல்லவேண்டியது.

Posted in 9-11, 9/11, Arms, Arts, Awards, Babri Masjid, BJP, Black Friday, Blasts, Bollywood, Bombay, Bombs, Cinema, Classic, dead, Dec6, DocuFiction, Documentary, Drama, Extremism, Extremists, Film, guns, Hindi, Hindu, Hindutva, Incident, Islam, mani Rathnam, Manirathnam, Masala, Masjid, massacre, Mosque, Movie, Mumbai, Murder, Muslim, National, Panaroma, Politics, RDX, revenge, Reviews, RSS, Shiv Sena, Terrorism, terrorist, Violence, Vishvamithiran, Vishvmithran, Vishwamithiran, Vishwamithran, Visvamithiran, Visvamithran, Viswamithiran, Viswamithran, War, WTC | Leave a Comment »

Mukesh to be world’s richest Indian

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

லட்சுமிமிட்டலை முந்தினார் மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி 

புதுடெல்லி, பிப். 27-

ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்து உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்திலும் உலக அளவில் எடுக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும் இருந்தார்இரும்பு எஃகு தொழிலில் உலகின் நம்பர் ஒன் தொழில் அதிபர் லட்சுமி மிட்டல். இங்கிலாந்தில் 600கோடி ரூபாய்க்கு ஒரு ஆடம்பர மாளிகையை வாங் கியது, ரஷ்யாவின் அர் செலர் இரும்பு ஆலையை பல்வேறு சவால்களுக்கு இடையே விலைக்கு வாங்கி யது போன்றவற்றில் உலக பிரபலங்கள் பலரை வியக்க வைத்தார்.

தற்போது இந்த ஜாம்ப வானை சொத்து மதிப்பில் முந்தியுள்ளார் அம்பானி சகோதரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக கரு தப்படும் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட்டின் பங்குகளை அதிகஅளவு பெற்றதில் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் தனிபட்ட சொத்து மதிப்பு 1லட்சத்து 4ஆயிரத்து 40 கோடி ரூபாயாக உள்ளது.

லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 96ஆயிரத்து 480கோடி ரூபாயாக உள்ளதால் லட்சுமி மிட்டலை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி அடைந்துள்ளார். முகேஷ் அம்பானி இந்தியா விலேயே தொழில் செய்கிற வர் லட்சுமி மிட்டலின் பெரும்பாலான தொழில்கள் வெளிநாட்டிலேயே நடக்கின் றன. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என்றாலும் அவர் இந்திய பாஸ்போட்டை வைத்திருப்பவர் இந்தியா வில் பிறந்தவர் என்ற அடிப்படை யில் இந்திய தொழில் அதிபராக கருதப்படுகிறார்.

Posted in Ambani, Arcelor, Arcelor Mittal, Bill Gates, Birla, Cash, Equity, Forbes, Fortune, Guru, Lakshmi Mittal, Lakshmi Niwas Mittal, Manirathnam, Maniratnam, Microsoft, Mittal, Money, Mukesh Ambani, Poor, Reliance, Reliance Industries Limited, Rich, RIL, Shares, Steel, Stocks, TATA, Valuation, Vimal | Leave a Comment »

Aiswarya Rai & Abhishek Bhachan marriage will be on February 19th 2007

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

ஐஸ்வர்யாராய்க்கு பிப்ரவரி 19-ந்தேதி திருமணம்

பெங்களூர், டிச.19-

பெங்களூரில் வசித்து வரும் ஐஸ்வர்யாராயின் குடும்ப ஜோதிடரான சந்திரசேகர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 32-வது வயது பிறக்கிறது. அன்று முதல் அவருக்கு யோகம் நிறைந்த நாள். ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சனுக்கு இடையேயான திருமண தடை அனைத்தும் நீங்கி விட்டன.

இந்தநிலையில் ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் ஜோடிக்கு வருகிற பிப்ரவரி 19-ந் தேதி திருமணம் நடக்கிறது. இந்த திருமணம் மும்பையில் உள்ள ஹயத் இண்டர்நேஷனல் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடக்க உள்ளது. பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மும்பையிலும், 21-ந் தேதி டெல்லியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இவ்வாறு ஜோதிடர் சந்திரசேகர சுவாமிகள் கூறினார்.

ஆனால், இந்த திருமணதேதி பற்றி அபிஷேக்பச்சன் குடும்பமோ, ஐஸ்வர்யாராய் குடும்பமோ எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Aiswarya Rai, Amitabh Bachaan, Bollywood, Gossip, Guru, Hindi Actors, Hindi Actress, Hollywood, Hyatt International, Jaya Bhaduri, Kisukisu, Kollywood, Mani Ratnam, Manirathnam, Marriage, Movies, Mumbai, Personal Life, Reception, Stars, Tamil | 35 Comments »

Mallika Sherawat to dance with Rajni for Item Number in Sivaji (The Boss)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

`சிவாஜி’ படத்தில் மல்லிகா ஷெராவத்: ரஜினியுடன் குத்தாட்டம் போடுகிறார்

ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ஏவி.எம்.நிறுவனம் தயாரிக்கும் பிரமாண்டமான படம் `சிவாஜி’. இப்படத்தில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கான பாடல் காட்சிகள் ஸ்பெயின், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன. டூயட் பாடலுக்கு ரஜினி காந்த்-ஸ்ரேயா ஆகியோர் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

குத்துப்பாடல்

படத்தின் பெரும் பாண்மையான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் குத்தாட்டம் போடும் பாட்டில் பிரபல பாலிவுட் நடிகையை நடனமாட வைக்க டைரக்டர் ஷங்கர் முடிவெடுத்தார்.

அதன்படி `செக்ஸ் குயின்’ மல்லிகா ஷெராவைத்தை வைத்து அப்பாடலை எடுக்க முடிவெடுத்த ஷங்கர் மல்லிகா ஷெராவத்தை தொடர்பு கொண்டார். அதன்படி ஒரு பாடலுக்கு ஆட ரூ.25 லட்சம் என ஒப்பந்தம் செய்யப்பட்டு மல்லிகா ஷெராவத் இப்பாடலில் ஆடுகிறார்.

சூடேற்றும் பாடல்

அடுத்த வாரம் எடுக்கப் படவுள்ள இந்த பாடல் ரசிகர்களை மிகவும் சூடேற்றும் வண்ணம் எடுக்கப்பட உள்ளது. மல்லிகா ஷெராவத் ஜாக்கிஜானுடன் `தி மித்’ படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து உலகம் முழுவதும் பரபலமானவர்.

இந்தியில் மணிரத்னத்தின் `குரு’ படத்தில் நடிக்கும் மல்லிகாஷெராவத் தமிழில் கமலஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் `தசாவதாரம்‘ படத்திலும் நடிக்கிறார்.

Posted in Dasavatharam, Jackie Chan, Kamalhassan, mallika Sherawat, Manirathnam, Rajini, Rajniganth, Shankar, Shreya, Sivaji, Tamil, Tamil Cinema, Thamizh Movies, The Boss | 1 Comment »