Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Exposure’ Category

Thorium Power: Fuel & Energy – commercial nuclear reactors

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2007

தோரிய வளம்-இந்திய பலம்!

எஸ். ராஜாராம்

இந்தியா – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் அபரிமித தொழில் வளர்ச்சியால் பெருகிவரும் மின்சாரத் தேவையை ஈடுகட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்பது மத்திய அரசின் வாதம்.

அணுசக்தி திட்டத்திற்கு முக்கிய தேவையான யுரேனியத்தைப் பெற இந்த ஒப்பந்தம் துணைபுரியும். ஆனால், மாற்று எரிசக்தி உத்தியில் ஆர்வம் காட்டும் விஞ்ஞானிகள், யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.

தோரியமும் யுரேனியத்தைப்போல கதிர்வீச்சுத் தன்மை கொண்டதுதான். ஆனால், யுரேனியம் அளவுக்கு ஆபத்தானது அல்ல என்ற கருத்தும் உள்ளது.

அணுஉலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இத் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.

உலகில் முதன்முதலில் அணுஉலைகளில் தோரியம் எரிபொருளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்த நாடு இந்தியாதான். 1995-ல் குஜராத்தில் உள்ள காக்ரபார்-1 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 300 நாள்களும், காக்ரபார்-2 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 100 நாள்களும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தோரியத்தை நேரடியாக அணுஉலைகளில் எரிக்க இயலாது. அதனுடன் யுரேனியம் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது- இது இந்திய தொழில்நுட்பம். யுரேனியத்தைவிட தோரியம் சிறந்தது என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

“”யுரேனியத்தைப் பயன்படுத்திய பின்னர் மிஞ்சும் கழிவின் கதிர்வீச்சுத்தன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும். ஆனால், தோரியக் கழிவின் கதிர்வீச்சுத் தன்மை சுமார் 500 ஆண்டுகளுக்கே இருக்கும்.

பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி இல்லாமல் மின் உற்பத்தி செய்ய வேண்டுமானால் தோரியமே சிறந்தது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹஷேமி-நிஜாத்.

உலகம் முழுவதும் சுமார் 4.5 மில்லியன் டன் தோரியம் இருப்பு உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் இந்தியாவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து, ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா, கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தோரிய வளம் மிகுதியாக உள்ளது.

“”உலகில் உள்ள மொத்த யுரேனியம் இருப்பையும் மின் உற்பத்திக்காக ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அது 10 அல்லது 20 ஆண்டுகளுக்கே வரும். எனவே, நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தோரியத்தைப் பயன்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். அதிகரித்து வரும் அணுசக்தி தேவைக்கு தோரியம் முக்கியமான, சிறந்த தீர்வு”- சமீபத்தில் வியன்னாவில் நடைபெற்ற ஐஏஇஏ கூட்டத்தில் இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் தெரிவித்த கருத்து இது.

தற்போது, அணுஉலைகளில் மின் உற்பத்திக்குப் பிறகு யுரேனியக் கழிவுகளைப் பாதுகாக்க மிகுந்த பொருள்செலவு ஏற்படுகிறது. எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அணுக் கதிர்வீச்சு கசியும் அபாயமும் (செர்னோபில் விபத்து போன்று) உள்ளது. யுரேனியக் கழிவுகளில் இருந்துதான் புளுட்டோனியம் பிரித்தெடுக்கப்பட்டு அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதால், தீவிரவாதிகளின் கையில் அது சிக்காமலும் பாதுகாக்க வேண்டியுள்ளது.

ஆனால், தோரியக் கழிவுகளில் இந்த அளவுக்கு அபாயம் இல்லை. பொதுவாகவே தோரியத்தில் வெடிக்கும் மூலக்கூறுகள் இல்லை என்பதால், அதன் கழிவுகளில் இருந்து அணுஆயுதத் தயாரிப்புக்காகப் பிரித்தெடுக்க எதுவும் இல்லை.

மேலும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தை அணுஉலைகளில் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்தபிறகு, அதன் கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, கதிர்வீச்சுத் தன்மையை முற்றிலும் குறைக்கும் தொழில்நுட்பத்திலும் (இப்ர்ள்ங்க் சன்ஸ்ரீப்ங்ஹழ் ஊன்ங்ப் இஹ்ஸ்ரீப்ங்) இந்தியா முன்னேற்றப்பாதையில் உள்ளது.

வியன்னா கூட்டத்தில் இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

ஏற்கெனவே யுரேனியம் செறிவூட்டுதலிலும், மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்திலும் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. தற்போது தோரிய தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது. இருப்பினும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வணிகரீதியாக, முழுவீச்சில் மின்உற்பத்தி செய்வதற்கு மேலும் உயர் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

அவ்வாறு முழுமையான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதீத தோரிய வளம் மூலம் அணுசக்தி உலகில் முதன்மையான இடத்தை இந்தியா பெறும் என்பது உறுதி!

Posted in Atom, Atomic, Chemical, Danger, dead, Death, Degradable, Development, Electricity, Element, emissions, energy, Environment, Exposure, Fuel, Minerals, Nuclear, Pollution, Power, Radiation, reactors, Research, Researchers, Risk, Science, Scientists, Thorium, Uranium | Leave a Comment »

Ayurvedha Corner: Solutions for Lichen – Ascomycetes

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாத வெடிப்புக்கு மூலிகை தைலம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் மனைவி ஆண்டாளுக்கு வயது 73. இரண்டு கால்களின் பாதங்கள் மற்றும் நகச் சந்துகளிலும், பாத ஓரங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுகிறாள். அவள் பூரண குணமடைய மருந்துகள் கூறவும்.

அதிக நேரம் தண்ணீரில் நின்று கொண்டு துணி துவைத்தல், சமையல் அறையில் தண்ணீர் விட்டு தரையைச் சுத்தப்படுத்திய பிறகு காய்ந்த துணியால் துடைக்காமல், சிமென்ட் தரையில் அதிக நேரம் நின்று கொண்டே சமையல் செய்தல், இரவில் கால்களை அலம்பித் துடைத்த பிறகு பசு நெய் அல்லது விளக்கெண்ணெய் பூசாதிருத்தல், உடல் காங்கை எனப்படும் உடற்சூட்டைக் குறைக்க சூரத்தாவாரை, ரோஜா மொக்கு, காய்ந்த திராட்சை, கடுக்காய்த் தோல் போட்டு ஊறிய தண்ணீரைக் குடிக்காமல் அசட்டையாக இருத்தல், உணவில் உட்புற வறட்சி தரும் கசப்பு, துவர்ப்புச் சுவையை அதிகம் சேர்த்தல், செருப்பு அணியாமல் பல இடங்களுக்கும் வெறும் கால்களுடன் நடந்து செல்லுதல் போன்ற சில காரணங்களாலும், உடல் பருமனாயிருத்தல், பகல் தூக்கம் போன்றவற்றால் கிளறப்படும் பித்த சீற்றம் ஆகியவற்றாலும் பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். இதைப் போக்க ஓர் எளிய வழியுண்டு.

பூங்காவி, இந்துப்பு, வெள்ளைக் குங்கிலியம், குக்கில், வெல்லம் இவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்துக் கொள்ளவும். பசுவின் நெய்(கிடைக்காவிட்டால் தேங்காய் எண்ணெய்) 120 மி.லி. எடுத்து உருக்கி அதில் குக்கிலையும் வெள்ளைக் குங்கிலியத்தையும் போட்டுக் கரைந்ததும் சூட்டுடனிருக்கும்போதே தேன்மெழுகு 20 கிராம் போட்டு இறக்கிவைத்து அதில் பூங்காவி இந்துப்பு வெல்லம் இந்த மூன்றையும் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். காலை அலம்பித் துடைத்த பின் இந்தக் களிம்பைத் தடவ வெடிப்பு மறையும். தங்கள் மனைவிக்கு வெடிப்பு நிறைய உள்ளதால் கால் பாதங்களை முதலில் வென்னீர் விட்டு ஒத்தடம் கொடுத்தபின் இதை உபயோகிக்கவும்.

இதெல்லாம் செய்வதற்கு நேரமில்லை, தயாரித்து விற்கப்படும் களிம்பு ஏதேனும் இருக்கிறதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கும் பதிலுண்டு. ஜீவந்த்யாதி யமகம் எனும் பெயரில் மூலிகைத் தைலம் விற்கிறார்கள். அதை வாங்கி, பஞ்சில் முக்கி, பாதங்களை நன்கு சுத்தப்படுத்திய பிறகு வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தடவி விடவும். வெடிப்பின் உட்புறப் பகுதிகளில் முழுவதுமாக இந்த எண்ணெய் ஊற ஊற தோல் மிருதுவாகி அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து விடும். பஞ்சில் முக்கி எடுத்த இந்த எண்ணெய்யை அப்படியே பாதங்களில் வைத்து ஒரு கைத்தறித் துணியால் கட்டியும் வைக்கலாம். காலை இரவு உணவிற்கு முன்பாக சுமார் 1 மணி நேரம் ஊற விடவும். அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் கால்களைக் கழுவி விடவும். அரிசி வடித்த கஞ்சியினால் கழுவி, அதன் பின்னர் தண்ணீரால் அலம்ப, பாதங்கள் மிருதுவாகிவிடும். வெடிப்பு இடுக்குகளில் அழுக்குச் சேராத வகையில் பாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

வெடிப்புள்ள பகுதிகளில் எழுந்து நடக்கும் போது வலி இருந்தால் இரவில் படுக்கும் முன் பிண்ட தைலம் பூசி விடவும். இது சிறந்த வலி நிவாரணி மட்டுமல்ல, வெடிப்பையும் குணமாக்கும்.

முக்கால் ஸ்பூன் பசுநெய், கால் ஸ்பூன் தேன் குழைத்து காலை, இரவு உணவிற்கு முன்பாக நக்கிச் சாப்பிட, உடலின் வெளிப்புறத் தோலில் ஏற்படும் வெடிப்பு, ஆறாத புண் போன்றவை ஆறிவிடும். வயிற்றில் புண், வாய்ப்புண், ஆசனவாய் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போன்றவையும் குணமாகிவிடும்.

வெடிப்புகளில் அரிப்பு இருந்தால் சததெüத கிருதம் எனும் ஆயின்ட்மென்ட் தடவ மிகவும் நல்லது.

உணவில் தயிர், கத்தரிக்காய், புளிப்பான ஊறுகாய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம். புலால் உணவையும் தவிர்க்கவும்.

Posted in algae, Alternate, Ascomycetes, Ayurveda, Ayurvedha, Ayurvetha, Care, Crohns, Excema, Exposure, Feet, Foot, fungus, Lichen, Medicine, Nature, Pithavedippu, Sethupunn, Skin, skincare, Water | Leave a Comment »

Teacher Suicide – Students, Sex Abuse, Law & Order

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2007

கேமிரா செல்போனில் குளிப்பதை படம் பிடித்ததால் ஆசிரியை தற்கொலை

நகரி, ஆக. 24-

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சிவானந்த புரத்தை சேர்ந்தவர் சுனிதா (27). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நிரஞ்சன் நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள மேல்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் படிக்கும் மாணவர்கள் ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திரகுமார் ஆகியோர் பக்கத்து வீட்டு மாடியில் ஒளிந்திருந்து கேமிரா செல்போனில் படம் பிடித்த

னர்.பின்னர் அவர்கள் இருவரும் சுனிதாவுக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதில், “எங்களுக்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும். இல்லை யென்றால் நீங்கள் குளித்த போது எடுத்த படங்களை இண்டர்நெட்டில் வெளியிடு வோம்” என்று எழுதி இருந்தனர்.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சி யடைந்த அவர் உடனே கணவரிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சின்ன சவுக்னார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் 2 மாணவர்களையும் அழைத்து கண்டித்து அனுப்பி விட்டனர். ஆனால் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்யவில்லை.

இந்த நிலையில் ஆசிரியை சுனிதா தன்னை மாணவர்கள் நிர்வாணமாகபடம் எடுத்து விட்டார்களே என்று வேதனை யில் அழுதபடியே இருந்தார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ்வர் ரெட்டி, நரேந்திர குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

——————————————————————————————–

வீடியோ-செல்போனில் ஆசிரியையை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டல்: பல்கலைக்கழக பேராசிரியர் கைது

டேராடூன், ஆக. 24-

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் குருகுல் கங்கிரி சமஸ்கிருத பல்கலைக்கழகம் உள்ளது. 105 ஆண்டு பாரம் பரியமிக்க இந்த பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் அவ மான சம்பவம் நடந்தது.

இங்கு பேராசிரியர்களாக பணியாற்றுபவர்கள் அருண் குமார், ராஜீவ் சர்மா, மனோஜ்குமார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து குருகுல் பெண்கள் கல்லூரியில் பணி யாற்றும் ஆசிரியை ஒருவரை நிர்வாணப்படம் எடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.

ஆசிரியையின் நிர்வாணப் படத்தை அவர்கள் சி.டி.க் களாக தயாரித்தனர். செல் போனிலும் அதை படம் பிடித்து எம்.எம்.எஸ்.மூலம் மற்றவர்களது செல்களுக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேராசிரியர்களில் ஒரு வரது மனைவி தனது கணவரின் செல்போனில் பெண்ணின் ஆபாசபடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த படத்தில் இருப்பது கணவரது பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியின் ஆசிரியை என் பது தெரியவந்தது.

உடனே அவர் செல்போனில் இருந்த ஆபாச படத்தை சம்பந் தப்பட்ட ஆசிரியையிடம் காட்டி `உன்னை எப்படி என் கணவர் படம் எடுத்தார்’ என்று கேட்டு சண்டை போட்டார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு கல்லூரி முதல்வர் வரை சென்றது.

அவர் இது பற்றி சமஸ்கிருத பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் துணைவேந்தர் ஸ்வாந் திர குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேராசிரியர்களும் உடன டியாக சஸ்பெண்டு செய்யப் பட்டனர். இவர்களில் ராஜீவ்குமார் என்பவர் தற்காலிக பேராசிரியராக பணியாற்றியவர் ஆவார். நிர்வாணப்படத்தில் வரும் ஆசிரியையிடம் துணைவேந்தர் விசாரணை நடத்தினார்.

நிர்வாணப் படத்தில் வரு வது நான் இல்லை என்றும் தனது முகத்தை கிராபிக்ஸ் மூலம் நிர்வாண படத்துடன் இணைத்துள்ளனர் என்றும், இந்தப் படங்களை காட்டி தன்னை 3 பேராசிரியர் களும் பல்வேறு விதத்தில் “பிளாக் மெயில்” செய்து மிரட்டி னார்கள் என்றும் கூறினார்.

பல்கலைக்கழக குழு விசாரணைக்குப் பின் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இதற்குள் 3 பேராசிரியர்களும் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களில் மனோஜ்குமார் என்பவர் போலீசில் பிடி பட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார் கள்.

இதற்கிடையே இந்தசம் பவம் பல்கலைக்கழகம் முழு வதும் பரவியது. 3 பேராசி ரியர்களையும் கைது செய் யக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது 3 பேராசிரி யர் களின் கொடும்பாவியும் எரிக் கப்பட்டது.

Posted in abuse, Bath, Bathe, Bathing, Camera, Cell, Cellphone, Crime, Education, Exposure, Female, Hidden, Law, male, MMS, Mobile, Naked, Order, phone, Pressure, Professor, Se, Sex, Sexual, Sick, Society, Students, Suicide, Teacher, Torture, University, video | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid skin rashes

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சேற்றுப்புண் போக்கும் கடுக்காய்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என் அம்மாவுக்கு சுமார் 10 ஆண்டுகளாகப் பாதவிரல்களில் அதிக அளவில் சேற்றுப்புண் ஏற்படுகிறது. வலியும் எரிச்சலும் ஏற்படுகிறது. சேற்றுப்புண் மறைய மருந்து கூறவும்.

எல்.சிவா, திருத்தணி.

சேற்றுப்புண் வருவதற்கு முக்கியக் காரணமாக ஈரத்தரை, சேறு, சகதி, குழாயடி, கிணற்றடியிலோ எந்நேரமும் இருந்து வேலை செய்பவர்களுக்கு அங்குள்ள அழுக்கும் கிருமிகளும் காலின் விரல்களின் இடுக்கில் நுழைந்து புண் ஏற்படுத்துவதைக் குறிப்பிடலாம். கால்விரல்கள் அதிக இடைவெளியில்லாமல் மிக நெருக்கமாக இருப்பவர்களுக்குச் சேற்றுப் புண் எளிதில் ஏற்படுகிறது. இந்தப் புண் பார்ப்பதற்கு வெள்ளை நிறமாகவும் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அதில் ஏற்படும் அரிப்பைப் போக்க கைவிரல்களை, கால்விரல்களின் இடுக்கில் செருகி “வரட், வரட்’ என்று தேய்க்க அதனால் ஏற்படும் சுகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஆனால் அதன் பிறகு ஏற்படும் எரிச்சல், தீப்புண் போல பற்றி எரியும் தன்மை கொண்டதாக இருப்பதால், அப்போது ஏற்படும் வேதனையும் வார்த்தைகளால் கூற இயலாது.

சொறியச் சொறிய புண் வளர்ந்து கொண்டே போய் ஆழமான புண்ணாகப் பரவிவிடும். நொதநொதப்பான நிலையில் சுகம் தரும் இப் புண் காய்ந்த நிலையில் கடுமையான வலியை ஏற்படுத்தும், அலசம் என்று இந்த உபாதையை வர்ணனை செய்யும் ஆயுர்வேதம், கப-பித்தங்கள் கெடுவதால் அரிப்பையும் சவர்தண்ணீர் கசிவையும் ஏற்படுத்தவதாகக் கூறுகிறது. இந்த உபாதை மாற-

கடுக்காய்த் தோடு சிறிது எடுத்து விழுதாக அரைத்து இரவில் புண்களின் மீது பூசி, மறுநாள் காலையில் கழுவிவிட புண் விரைவில் ஆறிவிடும். கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு, இஞ்சிக்கு புறத்தே நஞ்சு என்பது பழமொழி. அதனால் கடுக்காய் விதையை உபயோகிக்கக் கூடாது. அதுபோல சமையலில் இஞ்சியின் தோலை நீக்கிய பிறகே சேர்க்க வேண்டும்.

கடுக்காய் தோலுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து அரைத்தும் பூசலாம்.

மருதாணி இலையை அரைத்தும் பூசலாம். சிந்தூராதிலேபம் எனும் ஆயிண்ட்மெண்ட் பூச, புண் விரைவில் ஆறிவிடும்.

மதுஸ்னுஹீ எனும் பறங்கிச் சக்கை உள்ளே சாப்பிடுவதற்கு நல்ல மருந்தாகும். மதுஸ்னுஹீ சூரணம் எனும் இம் மருந்தை 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) அளவில் எடுத்து 1 சொட்டுத் தேனும், 1 ஸ்பூன் (5மிலி) மஹாதிக்தகம் எனும் உருக்கி சூடு ஆறிய நெய்யையும் குழைத்து காலை, இரவு உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகத் தொடர்ந்து 2 வாரங்கள் சாப்பிட மிகவும் நல்லது. சேற்றுப்புண் மட்டுமல்ல, வேறு சிரங்கு சொறிகளும், கிருமி நோய்களும் எளிதில் குணமாக்கும் மருந்து இது.

விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை திரிபலாசூரணம் 5 கிராம், கருங்காலிக் கட்டை 5 கிராம் போட்டுக் காய்ச்சிய 1 கிளாஸ் தண்ணீரால் கழுவி, கால்விரல் இடுக்குகளைப் பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, வேப்பிலை, எள்ளு அரைத்துப் பூசிவர, புண் விரைவில் குணமாகிவிடும்.

நகத்தின் சதை இணைப்புப் பகுதிகளிலும், கால்விரல் இடுக்குகளிலும் தொடர்ந்து நால்பாமராதி தைலம், தினேச வில்லாதி தைலம் போன்றவற்றில் ஒன்றைப் பூசிவர சேற்றுப்புண் நம்மை அணுகாது பாதுகாத்துக் கொள்ளலாம். சேற்றுப்புண் உள்ளவர்கள் மீன், தயிர், கத்திரிக்காய், நல்லெண்ணெய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. அடிக்கடி தண்ணீரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Chethuppun, Chethupun, cure, Dermatologists, Dermatology, Exposure, Herbs, itch, medical, Medicines, Natural, Psoriasis, Rash, Sethuppun, Sethupun, Skin, Swaminathan, Symptoms, Therapy, Water, Work | Leave a Comment »

Health Education – Teaching about adulthood, sex & biology to Students

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?

ரவிக்குமார்

பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.

மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.

“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.

“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,

அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.

“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.

“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.

“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.

– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.

Posted in A, abuse, adult, adulthood, Adults, AIDS, Awareness, Biology, Boy, Brain, Censor, Chat, Children, Cinema, Computer, Condom, Controversy, Culture, Development, discussion, Education, Exposure, Female, Formal, Gentleman, Girl, Glamour, Health, HIV, Imagination, Insights, Intercourse, Interview, Issue, Kid, Kiss, Lady, Love, Lust, male, masturbate, masturbating, Mature, Media, menstruation, MMS, Movies, NC-17, Opinions, Period, PG, Physchology, PMS, Private, Rape, Rating, Sex, SMS, solutions, Students, Suggestions, Tamil, Teachers, Teen, Teenage, Textbooks, Thamizh, TV, UNICEF, Violence, VT, Vulgar, WHO | Leave a Comment »

S Gurumurthy – Why only Hindu Gods are subjected to vulgarity in Arts?

Posted by Snapjudge மேல் மே 28, 2007

ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசகலைக்கு இலக்காவது ஏன்?

எஸ். குருமூர்த்தி

பிள்ளையார் சுழி போடுவதுபோல தொடக்கத்திலேயே எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கை.

எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரிகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள் அடித்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரை.

இங்கு சித்திரிக்கப்பட்டிருக்கும் ஆபாசத்துக்கு மன்னிப்புக் கோரி… பிரச்னையின் மையம் இதோ. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சியை ஓர் ஓவியர் வரைந்தால் அது எப்படி இருக்கும்? அவருடைய கைகள் சிலுவையின் இருபக்கமும், கால்கள் சிலுவையின் அடிபாகத்திலும் வைத்து ஆணி அடிக்கப்பட்டு அவரது உடலிலிருந்து ரத்தம் சிந்துவதும்தானே அந்தச் சித்திரத்தின் மையம்.

ஆனால் இப்போதைய நவீன ஓவியர்கள் இந்த மையக் காட்சியை அரைகுறை ஓவியமாகவே கருதுகிறார்கள். மேலும் தங்களுடைய கற்பனையினால் எப்படி ஏசுவை சிலுவையில் அறைந்து சித்திரத்தை முழுமையான கலைச்சின்னமாக்குகிறார்கள் பாருங்கள்.

சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் துயிலுரியப்பட்டு – ஆம் நம்புங்கள்! முழு நிர்வாணமாகச் சித்திரிக்கப்பட்டு – அவருடைய ஆண்குறியிலிருந்து விந்துகள் சிந்தி ஆச்சரியப்படாதீர்கள், அதோடு மட்டும் நிற்கவில்லை – அந்த விந்து துளிகள் அந்தச் சிலுவைக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் மேற்கத்திய பாணி டாய்லெட் ஓட்டையில் விழுவதுபோலவும், அந்த டாய்லெட் அடியில் மீன்கள் இருப்பதுபோலவும், அந்த மீன்கள் அந்த விந்துகளை விழுங்குவதுபோலவும்… வக்கிரமான கற்பனையின் உச்சாணிக்குச் சென்று ஆபாசத்தைக் கலையாக்கிச் சித்திரித்து சிலுவையில் ஏசுநாதர் அறையப்பட்ட “அரைகுறை’ ஓவியத்தை முழுமையாக்குவதுதான் நவீன ஓவியம் (ம்ர்க்ங்ழ்ய் ஹழ்ற்). நம்புங்கள்; இது கற்பனையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த விஷயம். இது நடந்தது குஜராத்தில். ஆனால் செய்தது நரேந்திர மோடி அல்ல. அவர் இந்தக் கேவலத்தைத் தடுக்கத்தான் செய்தார். ஆனால் இதைத்தான் அற்புதமான ஓவியம்; அந்த ஓவியரின் சுதந்திரம் புனிதமானது என்று கூறுகிறார்கள் மதச்சார்பற்ற அறிவு ஜீவிகளில் சிலரும், பத்திரிகையாளர்களில் பலரும்.

இத்தோடு முடியவில்லை இந்த வக்கிரம்; இது ஓர் ஆரம்பம்தான். மேலும் பாருங்கள்; ஒரு பெரிய ஓவியத்தில் முழு நிர்வாணமான ஒரு பெண்.

இது அந்த ஓவியத்தின் முன்னுரை, முடிவல்ல. அந்தப் பெண்ணின் கர்ப்பப் பையிலிருந்து ஒரு சிசு துடித்து வெளியில் வர முயற்சி செய்வதுபோல அமைகிறது அந்த ஓவியத்தின் அருவருப்பான அடுத்தகட்டம். இப்போதும் முழுமையடையவில்லை அந்த ஓவியரின் அந்தப் படைப்பு. கடைசியில நிர்வாணமாக எல்லோரும் பார்க்கும்படி குழந்தை பெறும் அந்தப் பெண் “துர்க்கை அம்மன்’ என்று எழுதி அந்த ஓவியத்தை முடிக்கிறார் அந்த ஓவியர். அப்படி அநாகரிகமாக சித்திரிக்கப்பட்ட பெண்தான் துர்க்கை!

இந்த இரண்டு கீழ்த்தரமான ஓவியங்கள் மட்டுமல்ல; சிவ பெருமான் மற்றும் விஷ்ணுபகவான் போன்று ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் இதுபோலவே வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்டு அந்த ஓவியங்கள் குஜராத்தில் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த அநாகரிகமான ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் ஆட்சேபித்தனர்; ஆர்ப்பாட்டமும் செய்தனர்; போலீஸôரிடம் புகார் செய்தனர்; அதன்மேல் போலீஸôர் நடவடிக்கையும் எடுத்து அந்த ஓவியரைக் கைதும் செய்தனர்.

போலீஸ் நடவடிக்கை எடுத்த அடுத்த நிமிஷம் நாடு முழுதும் மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் மற்றவர்களும் ஒட்டுமொத்தமாக ஆங்கிலப் பத்திரிகைகளும் குஜராத் முதல்வர் நரேந்தி மோடியைக் குறி வைத்து தாக்க ஆரம்பித்தனர். அவர் சட்டாம்பிள்ளையாக நடந்து கொள்வதாகவும் கலைஞர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

“சுதந்திரமில்லையென்றால், கலைக்கு உயிரில்லை’ என்றெல்லாம் கோஷம் எழுப்பினார்கள் மும்பையிலும் தில்லியிலும்.

ஆனால் அப்படி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தாங்கள் எந்தவிதமான ஓவியக்கலையையும், எந்த ரகமான ஓவியங்களையும் பாதுகாக்க போராடுகிறோம் என்பதைக் கூறவும் இல்லை; அவர்களை யாரும் எதற்காகப் போராடுகிறீர்கள் என்று கேட்கவும் இல்லை. தைரியமிருந்தால் அவர்கள் எந்தவிதமான சித்திரங்களை வரையும் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்க வேண்டும்.

வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்ட ஏசுநாதர் ஓவியத்தையும், பெண்ணை கீழ்த்தரமாக்கி துர்க்கை என்று எழுதப்பட்ட அந்த ஓவியத்தையும் மக்கள் முன்னால் வைத்து “”இந்த ஓவியங்களை வரைந்து காட்சிக்கு வைத்தால் என்ன தவறு?” என்று நாணயமாக மக்களைக் கேட்டிருக்க வேண்டும் அவர்கள்.

ஆனால் அப்படிச் செய்ய அவர்களுக்குத் துணிவு கிடையாது. அவர்கள் அப்படிச் செய்தால், பரோடாவில் நியாயமாகத்தான் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர் என்கிற “குட்டு’ வெளியாகிவிடுமே! என்ன கலை என்பதை மறைத்து எல்லா பத்திரிகைகளும் “கலை சுதந்திரம் பறிபோகிறது’ என்று ஒப்பாரி வைத்தன.

ஆனால் எந்த மாதிரி கலை, எந்த மாதிரி படங்கள் பரோடாவில் காட்சிக்கு வைக்கப்பட்டன என்பதை எந்தப் பத்திரிகையும் நாணயமாக வெளியிடவில்லை. காரணம் ஆபாசத்தை எப்படி வெளியிடுவது என்பதுதான். பின் எப்படி ஆபாசம் கலையாக முடியும்? அதுமட்டுமல்ல; பரோடாவில் ஓவியக் கண்காட்சி நடத்துபவர்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தது ஏசுநாதரை அப்படி கீழ்த்தரமாகச் சித்திரித்ததால் மனம் புண்பட்ட ஒரு கிறிஸ்தவர். இந்த உண்மைகளைக் கூட வெளியிடாமல், ஹிந்து வெறியர்கள் கண்காட்சியை எதிர்க்கின்றனர் என்று கூசாமல் பொய் கூறின பத்திரிகைகள்! இன்று வரை உண்மையை எழுதவில்லை எந்தப் பத்திரிகையும்.

ஹிந்துக்கள் வழிபடும் ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் ஆபாசமாகச் சித்திரிப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்ட ஓவியர்கள் பலர் நம் நாட்டில் இருக்கின்றனர். இவர்களில் தலைசிறந்து விளங்குபவர், பலராலும் பாராட்டப்படுகிற எம்.எஃப். உசேன்தான்.

ஹிந்துக்களின் எல்லா தெய்வங்களை – ஏன் எல்லோருக்கும் பொதுவான, பாரதியார் போற்றிய பாரத அன்னையையும்கூட துயிலுரிந்து, நிர்வாணமாகச் சித்திரித்த அற்புதமான கலைஞர் அவர். பதிவிரதையான சீதை நிர்வாணமாக பிரம்மசாரியான அனுமனின் வாலின் நுனியில் அமர்ந்திருப்பதுபோல ஓவியம் தீட்டினார் இந்த பிருகஸ்பதி!

“ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்பதுபோல ஏன் இப்படி ஹிந்து தெய்வங்களை மட்டும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் சித்திரித்து ஓவியம் தீட்டுகிறார்கள் இவர்கள்? இந்தக் கேள்விக்குப் பதில் எல்லோருக்கும் புரிந்ததே.

ஹிந்து தெய்வங்களை எப்படிக் கேவலமாகச் சித்திரித்தாலும் அதைத் தட்டிக் கேட்கவோ, அதற்காகக் கோபப்பட்டு வெகுண்டு எழுந்து பஸ்களைக் கொளுத்துவோர் அப்படிச் செய்கிறவர்களை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டு மதக்கட்டளை பிறப்பிக்கவோ ஹிந்து மதத்தில் வழியில்லை. வேறுமத நம்பிக்கையை இப்படி ஆபாசமாக்க முடியுமா? மற்ற மதத்தினரிடம் இப்படி விளையாடிப் பாருங்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தோ அல்லது சங்கராச்சாரியர்களோ சவால் விடவில்லை. இப்படிக் கூறியது தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கபூர்.

2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆபாசமான படங்களை வரைந்ததற்காக ஓவியர் உசேனுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்தது, உசேன் மனுவைத் தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பில் கூறுகிறார் நீதிபதி கபூர்.

கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களைக் கேவலப்படுத்தினால் அதனால் அந்த மக்களுடைய மதஉணர்வுகள் புண்படுகின்றன. அதுமட்டுமல்ல; மதங்களுக்கிடையே நிலவி வரும் நல்லுறவுகளையும் அது பாதிக்கிறது. அதுபோன்ற சித்திரங்களை கலையென்று சிலர் கூறினாலும் வழிபடப்படும் தெய்வங்களை நிர்வாணமாக்கிச் சித்திரிப்பதால், அது மதநம்பிக்கை உள்ள மக்களின் மனத்தை வேண்டுமென்றே புண்படுத்தும் செயல் என்பதை மறக்க முடியாது. கலை சுதந்திரம் என்கிற போர்வையில் மதஉணர்வுகளை நோக அடிக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது. இது வேற்றுமதத்தைச் சேர்ந்த மனுதாரராருக்கு (உசேன்) இன்னும் நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும்.

தெய்வங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்பதை (உசேன்) மனுதாரர் சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால், அவர் சார்ந்த மதக் கடவுளையோ அல்லது வேறு மதத் தெய்வங்களையோ இதுபோன்ற கலைக்கண்ணோட்டத்தோடு வரைந்து தன் கைவரிசையை காட்டிப் பார்க்கட்டும்”. இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

நீதிபதி கபூர் கூறியுள்ளதுபோல, மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் உசேன் போன்றவர்கள் ஹிந்து அல்லாத மற்ற மததெய்வங்களிடத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்ட வேண்டும் என்று கூறுவார்களா? அவர்கள் ஏன் கூறுவார்கள்? நீதிபதி கபூர் கொடுத்த தீர்ப்பையை அவர்கள் பிரசுரிக்கவில்லையே!


RaayarKaapiKlub : Message: cultural policingnagarajan63இன்றைய திணமணி நாளிதழில் திரு எஸ்.குருமூர்த்தியின் “ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசக் கலைக்கு இலக்காவது ஏன்?” என்னும் தலைப்பில் வந்துள்ள கட்டுரையை படிக்க நேர்ந்தது. அண்மையில் குஜராத் மாகாணத்தில் வதோதரா நகரில் அமைந்திருக்கும் ஓவியக் கல்லூரியில் நிகழ்ந்தவற்றையும் அதன் தொடர்பான சலசலப்பையும் அது பற்றி ஊடகங்களிலும், ஆங்கில தினசரிகளிலும் விவரமான விவாதங்களை பாராதவரோ படிக்காதவரோ இருக்க மாட்டார்கள்.அக்கட்டுரை சார்ந்த பல செய்திகள் அவர் நிலைகொண்டுள்ள இயக்கத்தின் சார்புடையதாக உள்ளது. ஒரு நாணயத்துக்கு இருபக்கங்கள் உண்டு. அதன் ஒரு பக்கம் அவர் கட்டுரை. படிப்பவருக்கு ஒரு எச்சரிக்கையுடன் தமது நீண்ட கட்டுரையை “எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரீகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ, அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்பவர்கள் அடித்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக் கிறது” என்று துவக்கியுள்ளார்.கட்டுரையை பலமுறை படித்தபின் அது சார்ந்த என் எதிர் வினைகளை பதிவு செய்கிறேன் ஒரு ஓவியனாக.கட்டுரையாளர் தாம் ஆபாசம் என்று கருதும் ஓவியங்கள் பற்றி நுணுக்கம் மிகுந்த விவரங்களுடன் அதன் பிரச்சனையை அணுகுகிறார். நிகழ்ந்தவற்றை நான் இங்கு திரும்பக் கூற விழையவில்லை. அந்த ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டவையல்ல. அந்த ஓவிய மாணவரின் செயல்முறை தேர்வுக்கானவை. கல்லூரி வளாகத்தில் அத்துமீறி ஒரு கும்பல் நுழைந்து வன் முறையில் ஈடுபட்டது. காவல்துறையில் அந்த மாணவரை கைது செய்வதும் நடந்தது. அதை நியாயப்படுத்துவதும் தொடர்கிறது.அவர் ஆபாசம் என்று விவரிக்கும் ஓவியங்களின் வரிசையில் மாமல்ல புரத்தில் வீற்றிருக்கும் இலட்சுமி (ஆடையின்றி), க்ருஷ்ணர் கோபியர்களின் சீலைகளை திருடும் காட்சி ஓவியமாக்கப்பட்ட விதம், ஜெயதேவரின் ‘கீதகோவிந்தம்’ கவிதை ஓவியங்கள், குஜராத் மாநிலத்தில் இன்றளவும் பரவலாகப் பின்பற்றப்படும் வழிபாட்டில்
“லஜ்ஜா தேவி” சிலை அமைக்கப் பட்டிருக்கும் விதம், தாந்திரிக வழிபாட்டில் சிவன் மேல் காளி அமைந்திருக்கும் கோலம், தாண்டவமாடும் நடராஜரின் சிலை (உருவத்தில் குறி சிதைக்கப் பட்டிருக்கும்) போன்ற சிலவற்றையும் நான் சேர்க்க விரும்புகிறேன். அவையெல்லாமும் ஹிந்து கடவுளர், தேவியர்கள்தான். இது போன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கும். அவையும் ஆபாசம்தானா? வக்கர மனத்தின் வெளிப்படுதானா? “ஆபாசம் எப்படி கலையாகமுடியும்” என்னும் கேள்வி எழுப்பும் கட்டுரையாளர் அவற்றை மீண்டும் ஒருமுறை பார்க்கட்டும்.

இந்த வகையில் ஓவியர் ஹுசைன்தான் இந்த வகை சிந்தனையாளர்களுக்கு ‘மெல்லக் கிடைத்த அவல்.’ மாமல்லபுரத்தில் உள்ள பெரும்பாலான சிற்பங்கள் உடையின்றித்தான் உள்ளன. இந்தியாவின் எண்ணற்ற கோயில்களிலும் உடையில்லாத கடவுளர் சிலைகளும் ஓவியங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம் ஆபாசத்துடன் சேர்த்துவிடலாமா? அவற்றுக் கெல்லாம் உடை உடுத்திவிடலாமா? அல்லது தீயிட்டுக் கொளுத்திவிடலாமா?

ஜெர்மனி, ருஷ்யா போன்ற மேலை நாடுகளில் யதேச்சாதிகாரம் கோலோச்சிய போது அரசு, ஒரு கலைஞன் எதை படைப்புக்கருவாக கொள்ள வேண்டும் என்னும் திட்டத்தையும் செயற்படுத்தியது என்பது வரலாறு கூறும் உண்மை. அதன் காரணமாக, ஓவியர்கள் வேறு நாடுகளுக்கு ஓடியதும் உண்மை. கட்டுரை ஆசிரியர் இங்கும் -அதாவது பாரதத்திலும்- அதை நடைமுறைபடுத்த விரும்புகிறாரா?

ஊடகங்களின் மூலம் வீட்டினுள் வன்முறையும், ஆபாசமும், தங்கு தடையின்றி நுழைந்து அவர் குறிப்பிடும் கலாசாரத்தையும் சமுதாயக் கட்டுப் பாட்டையும் நாசமாக்கிக் கொண்டுள்ளனவே! அங்கெல்லாம் அவர்கள் கண்கள் மூடிக்கொண்டு விடுமா?

படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரம் என்பது சுய கட்டுப்பாடுகளுடன் தான் இயங்குகிறது. படைப்பை விமர்சிப்பது படைப்பளியின் வளர்ச்சிக்கு உதவும். படைப்பாளியை வன்முறையாக விமர்சிப்பது என்பது நாகரீகமான வழியல்ல. எல்லாவற்றையும் அரசியலுக்குள் இழுத்துச்செல்வது ஆபத்தான எதிர் காலத்திற்கு இட்டுச்செல்லும். ஆனால் விதிவசமாக அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அந்தக்கல்லூரியில் பல ஆண்டுகளாக குழுச்சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதையும், இந்த சலசலப்பும் அதன் விளைவுதான் என்பதையும் ஒரு செய்தியாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

nagarajan63

————————————————————————————————

Some Blogger Feedbacks (if anything is missing, please leave a comment)

சந்திப்பு:
குருமூர்த்தியின் கவலை இந்துக்களின் கவலையா?


அரவிந்தன் நீலகண்டன்:
அகப்பயணம்: இந்துத்துவமும் கலை சுதந்திரமும்

————————————————————————————————-

நிர்வாணமாக சீதை நிர்வாண ராவணன் மடியில்
Naked Lord Hanuman and Goddess Sita
This picture shows a naked Lord Hanuman attacking a naked demon king Ravana while Goddess Sita is sitting naked on Lord Ravana’s thigh. Goddess Sita is the epitome of chastity and is role model for women the world over.

நிர்வாண சீதை அனுமானின் வாலை தன் கால்கள் இரண்டின் நடுவில் வைத்திருக்கும் காட்சி
Naked Goddess Sita sitting on the tail of Naked Lord Hanuman
According to the Indian History, Goddess Sita or Lord Hanuman has never been shown in the Naked form. Goddess Sita has never been rescued by Lord Hanuman. Over here Husain is interfering with the cultural principles. Not only this, he is trying to devise new imaginative indecent pictures of the manifest forms of God who are respected by millions of Hindus. Showing the use of the tail of Lord Hanuman for such an act has crossed all the limitations of indecency.

நிர்வாண அனுமான் முன் நிர்வாண பெண்

சிவன் பார்த்திருக்க பார்வதியை பின்புறமாக புணரும் நந்தி முன்புறமாக பார்வதியின் பிறப்புறுப்பை நக்கும் குழந்தை
A bull having sexual intercourse with Goddess Parvati and Lord Shiva watching on the auspicious day of Shivratri
Lord Shiva is the Principle of Absolute Knowledge and the principle of Destruction in the Universe.

புலியை புணரும் துர்கா

யானை மீது நிர்வாண துர்கா

நிர்வாண சரஸ்வதி : பிறப்புறுப்பை மறைக்கும் வீணை

அதே நேரம் ஹுசைன் தன் அன்னை, மகள் மற்றும் முகமது நபியின் மகள் பாத்திமா ஆகியோரை வரைந்துள்ள ஓவியங்கள்:


Posted in Artist, Arts, Buddhism, Christ, Christianity, Community, Culture, Dinamani, Exposure, expression, Female, Feminism, Freedom, Girl, Glamor, Glamour, Gods, Gurumoorthi, Gurumoorthy, Gurumurthi, Gurumurthy, Hindu, Hinduism, Hindutva, Humanity, Hussain, Hussein, Independence, Intolerance, Islam, Jesus, Lady, Media, MF Hussain, Muslim, Objectification, Obscene, Obscenity, Op-Ed, Opinions, Painter, Paintings, Portrayal, Propaganda, Religion, RSS, Sculpture, Thoughts, Tolerance, vulgarity, Women | 9 Comments »