Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sudan’ Category

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

Cessation of RCTV in Venezuela – Hugo Chavez & Left Alliance vs Capitalism & USA

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

ஆட்டம் காணும் இடதுசாரி அஸ்திவாரம்

எம். மணிகண்டன்

வெனிசுலாவில் பழம்பெருமை வாய்ந்த “ரேடியோ கராகஸ்’ தொலைக்காட்சி (ஆர்சி டிவி) நிறுவனத்தின் ஒளிபரப்பு அண்மையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஹுகோ சாவேஸýக்கு எதிராக தலைநகர் கராகஸில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று வெறுமனே கூறிவிட முடியாது. ஊடகங்களைத் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கும் நாடுகள் பட்டியலில் வெனிசுலாவுக்கு எப்போதுமே 100-க்கு பின்னால்தான் இடம் கிடைக்கும். சாவேஸின் ஆட்சியில் அது இன்னும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

எதிர்கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சாவேஸýக்கு எதிராக வெளிப்படையாகவே செயல்பட்டு வந்தது ஆர்சி டிவி. 2002-ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறப்பட்டுவந்தாலும், ஆர்சி டிவிக்கும் பெரும்பங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. தற்போது இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பது, சாவேஸின் பொதுவுடமை இலக்குகளை நோக்கிய வேகமான பயணத்தின் ஒரு படியே என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே எண்ணெய் நிறுவனங்களை அரசுடையமையாக்கியது, தனியார் சொத்துக்களை கையகப்படுத்தி ஏழைகளுக்கு வழங்குதற்காக திட்டங்களை அறிவித்தது என அனைத்துமே வெனிசுலாவில் செங்கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிகளே.

இதை மறைமுகமாகக் குறிக்கும் வகையிலேயே, “இந்தப் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது’ என கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்துப் பத்திரிகைகளில் ஒரு பக்கத்துக்கு விளம்பரம் செய்தார். “இந்தியா ஒளிர்கிறது’ என்பது போல.

சாவேஸýக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அண்டை நாடான பொலிவியாவின் ஈவோ மாரல்ஸ், ஓராண்டுக்கு முன்பே எரிவாயு திட்டங்களை அரசுடைமையாக்கி தனது இடதுசாரி பயணத்தைத் துவக்கிவிட்டார். இதனால், சாவேஸ் தனது சீர்திருத்தங்களை முடுக்கி விடவேண்டியதாகிவிட்டது.

லத்தீன் இயக்க விடுதலைக்கு வித்திட்ட சைமன் பொலிவருக்கு நிகரான சீர்திருத்தவாதியாக அறியப்படுபவர் சாவேஸ். இடதுசாரி சிந்தனை கொண்டவர் என்ற முறையில், கியூபாவின் ஆட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நெருக்கமாக இருப்பவர். லத்தீன் அமெரிக்கா முழுவதையும் இடதுசாரிப் பாதைக்கு திருப்ப வேண்டும் என்பதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். சிலி, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் இடதுசாரி அரசுகளை அமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு.

பலமுறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் சாவேஸýக்கும் வெனிசுலா மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். “சாவேஸ் சர்வாதிகாரி என்று கூறப்படுவது மேற்கத்திய நாடுகள் புனைந்த கதை; புஷ்ஷைவிட சிறந்த ஜனநாயகவாதி அவர்’ என்று கடுமையாகக் கூறுவோரும் உண்டு. புஷ்ஷுக்கு எதிராக அந்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டால் அவர் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா எனக் கேட்டு, ஆர்சி டிவி தடை செய்யப்பட்ட சாவேஸின் ஆதரவாளர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

சீர்திருத்தங்களை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாவேஸýக்கு எதிராக நிறைய விமர்சனங்களும் உண்டு. தனக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை திருத்தியது, தேர்தலில் முறைகேடு, அரசுக்கு எதிரானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, பத்திரிகைகளுக்கு கட்டுப்பாடு என சாவேஸ்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

அதேபோல், சாவேஸின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்துக்கும் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருப்பதாகவும் கூறிவிடமுடியாது. பணக்காரர்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி ஏழைகளிடம் ஒப்படைக்கும் திட்டம், அவரது ஆதரவாளர்களிடமே எதிர்ப்பைச் சம்பாதித்தது. இது தவிர, அரசு அதிகாரிகள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு வீடு வைத்திருப்பவர்களிடம் வீடுகளைப் பறித்துக் கொண்டு தவிக்க விட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

ஆர்சி டிவி தடை செய்யப்பட்டதற்கு வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான பிரேசில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றி இருக்கிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில்,”தொழிலாளர்கள் பெயரைச் சொல்லி வோட்டு வாங்கிவிட்டு, அமெரிக்காவின் கைப்பாவையாக பிரேசில் அரசு செயல்பட்டு வருகிறது’ என்று வெனிசுலா நாடாளுமன்றம் கண்டித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதுவும் வெனிசுலாவுக்கு பின்னடைவே.

எதிர்க்கட்சிக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, குளோபோவிஷன் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கும் சாவேஸ் அரசு தடைவிதிக்கும் என்று கூறப்படுவதால் பிரச்னை தற்போது பூதாகரமாகியிருக்கிறது.

இதற்கிடையே, தடைசெய்யப்பட்ட ஆர்சி டிவி ஒளிபரப்பை மெக்சிகோவில் இருந்து மீண்டும் துவக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்நிறுனத்தின் தலைவர் மார்சல் கார்னியர் மெக்சிகோவில் இருக்கும் தனது “நட்பு வட்டாரத்தை’ இதற்குப் பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.

தொலைக்காட்சி, செயற்கைக்கோள், இன்டர்நெட் என ஏதாவது ஒரு வகையில் வெனிசுலா மக்களை தொடர்பு கொள்வேன் என கார்னியர் சபதம் செய்திருப்பதால் சாவேஸýக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

வட கொரியா, ஈரான், சூடான், ரஷ்யா, வெனிசுலா, பெலாரஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் “சாத்தானின் கூட்டணி’ என்றே அமெரிக்க ஆதரவுப் பத்திரிகைகள் பிரசாரம் செய்து வருகின்றன. இது வெறும் வயிற்றெரிச்சல்தான் என்றாலும், இப்பட்டியலில் வெனிசுலா சேர்க்கப்பட்டிருப்பது சரிதானோ என்ற எண்ணம் உலக உலக நாடுகளுக்கு வராமலிருக்க, சாவேஸ் கவனமாகச் செயல்படுவது நல்லது. அதுதான் லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரி அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்குச் சரியான வழி.

————————————————————————————————————————————–

இன்னொரு ஃபிடல் காஸ்ட்ரோ

எம். மணிகண்டன்

வெனிசுலாவைத் தாக்க அமெரிக்காவும் கொலம்பியாவும் சதி செய்கின்றன என அண்மையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் வெனிசுலா அதிபர் சாவேஸ். இப்போதைக்கு அமெரிக்காவால் விலை கொடுத்து வாங்கவோ, நேரடியாகப் போரிட்டு அடக்கவோ முடியாத “அச்சுறுத்தல்’களில் வெனிசுலாவும் ஒன்று என்பதால் சாவேஸின் குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. அதற்காக லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய முடியுமா என்ன?

ஒருநாடு எவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என்பது மட்டுமல்ல, அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை எது என்பதும் முக்கியம் என்பார் சாவேஸ். அவரைப் பொறுத்தவரையில், பொருளாதார வளர்ச்சியின் பயன் அடித்தட்டு மக்கள்வரை சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, பொதுவுடமைக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்குவதுதான். இடதுசாரிகள் என்றாலே அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் என்ற பொதுவான கருத்துக்கு சாவேஸýம் விதிவிலக்கல்ல.

அமெரிக்காவை எதிர்த்து 50 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கியூபாவை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் சாவேஸ், தம்மையும் ஃபிடல் காஸ்ட்ரோ போன்றதொரு போராளியாக முன்னிறுத்திக் கொள்பவர். அமெரிக்காவின் அடிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியம். இதனால் அமெரிக்காவுக்குப் போட்டியாகப் பொருளாதார, ராணுவ பலத்தைப் பெருக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை இயக்கத் தலைவரான சைமன் பொலிவரின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் “அமெரிக்காவுக்குப் பொலிவரிய மாற்று’ (ஆல்பா) என்ற அமைப்பின் கீழ் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளின் ஆதரவை சாவேஸ் திரட்டி வருகிறார். இந்த அமைப்புக்கு வெனிசுலாவும் கியூபாவும்தான் அடித்தளம் அமைத்தன.

பொதுவாக உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தடையிலா வர்த்தகப் பிராந்தியங்கள் போல் அல்லாமல், சமூக அக்கறையும் அடித்தட்டு மக்கள் மீது கரிசனமும் கொண்ட பொருளாதார வளர்ச்சியை எட்டும் வகையிலான வர்த்தகக் கூட்டுகளைச் செய்துகொள்ளப் போவதாக இந்த அமைப்பு கூறியிருக்கிறது.

இது நிறைவேறினால், தற்போது இடதுசாரிகள் மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் “அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொருளாதார வளர்ச்சி’ என்பது உலக நாடுகளில் பலவற்றைக் கவரக் கூடும். இந்தியா போன்ற நாடுகள்கூட தங்களது அமெரிக்க அடிமைத்தனத்தை விட்டுவிடுவது குறித்து யோசிக்கும்.

ஆனால், ஆல்பா அமைப்பில் கியூபாவையும் வெனிசுலாவையும் விட்டால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த நாடும் இல்லை என்பதுதான் பலவீனம். சாவேஸ் என்ன செய்தாலும் அதை இம்மி பிசகாமால் அப்படியே பின்பற்றும் பொலிவியாவும் இந்த அமைப்பில் இணைந்திருக்கிறது. ஈக்வடார், நிகரகுவா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்துவிட்ட போதிலும் உள்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளால் முடிவைப் பரிசீலித்து வருகின்றன. இதுபோக, கரீபியன் கடலில் உள்ள ஆன்டிகுவா, டொமினிகா உள்ளிட்ட குட்டி நாடுகள் மட்டுமே ஆல்பாவில் இணைந்திருக்கின்றன.

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கும் கொலம்பியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வலுவான நாடுகளின் ஆதரவு சாவேஸýக்கு இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

அமெரிக்க வங்கிகளில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிதியை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது சாவேஸின் மற்றொரு திட்டம். ஆசிய வளர்ச்சி வங்கி போல் பிராந்திய வங்கி ஒன்றை ஏற்படுத்தி அதில் இந்தப் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கலாம் என்பது அவரது எண்ணம்.

ஆனால் அமெரிக்காவுக்கு எதிராகக் கூட்டு ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று சாவேஸ் அழைப்பு விடுத்திருப்பது வலியச் சென்று போரை வரவழைப்பதற்குச் சமம். சமூக, பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்துவரும் பொலிவியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்குக் கூட்டு ராணுவத்தை ஏற்படுத்தி போர்புரியும் திட்டமெல்லாம் ஒத்துவராது. கெட்டதும்கூட. லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தாக்கினால் பார்த்துக் கொள்ளலாம்; அதற்காகக் கூட்டு ராணுவம் அமைப்பது என்பது பிராந்திய அமைதியைக் குலைக்கும் வேலை என நிகரகுவாவும், ஈக்வடாரும் கருதுகின்றன.

அண்டை நாடான கொலம்பியாவுடன் சேர்ந்து வெனிசுலாவைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக சாவேஸ் கூறுவதையெல்லாம் வெனிசுலா மக்களே நம்பவில்லை. அப்படியே கொலம்பியாவுடன் போர் வந்தாலும் அதை லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுவதெல்லாம் சுயநலத்தின் உச்சகட்டம். தொடர்ந்து அதிபராக நீடிக்கும் வகையில் வெனிசுலாவில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் தேர்தலில் சாவேஸýக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இந்தத் தோல்விகளை மறைத்து தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்குத்தான் சாவேஸ் இந்த அபத்தங்களைச் செய்துவருவதாகக்கூட பத்திரிகைகள் எழுதுகின்றன.

வெனிசுலாவில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரமில்லை, நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்கூட செய்து தரப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் சாவேஸின் புரட்சியாளர் என்ற பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தனது பெயரை மீட்டெடுக்க வேண்டுமானால், அமெரிக்காவுக்கு எதிராகப் போரிடும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் உருப்படியாக ஏதாவது செய்யலாம், கோகோ பயிரிடுவதைத் தவிர!

Posted in America, Autocracy, Belarus, Biz, Bolivia, BP, Brazil, Bush, Business, Capital, Capitalism, Caracas, Castro, Censor, Chavez, Chile, China, Citgo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Congress, Conoco, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Cuba, Darfur, Democracy, Democratic, Development, Economy, Elections, Employment, Exchange, Exploit, Exploitation, Exxon, ExxonMobil, Fidel, Finance, Foreign, France, Freedom, GDP, Govt, GWB, Hispanic, Hugo, Independence, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Inflation, investments, Iran, Jobs, Journal, Korea, Latin America, Left, markets, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Media, Minerals, Mobil, Money, MSM, Nationalization, Newspaper, oil, Phillips, Polls, RCTV, Recession, Republic, Resources, Russia, Sudan, Union, USA, Venezuela, workers, Zine | Leave a Comment »

Central African Republic: Law and Order Collapsing as Civilians Flee Violence and Killings

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007

மத்திய ஆப்ரிக்க குடியரசு குறித்து அம்னெஸ்டி கவலை

 

மத்திய ஆப்ரிக்க குடியரசில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து குலைந்துவிடும் நிலையின் விளிம்பில் உள்ளது என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.

அங்கு, பிரான்ஸ் நாட்டின் 700 துருப்புகளின் ஆதரவு இருந்தாலும் அரசின் அதிகாரம் தலைநகர் பாங்குயில் மட்டும்தான் செல்லுபடியாகிற நிலையில் உள்ளது.

அந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் அண்டை நாடுகளான சாட், சூடான் மற்றும் காமெரூன் ஆகியவற்றுக்கு வெளியேறிச் சென்றுள்ளார்கள் என அண்மையில் அங்கிருந்து திரும்பியுள்ள ஒரு ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

கிளர்ச்சியாளர்கள், கொள்ளையர்கள் மற்றும் அரசுத் துருப்புக்களால் தாக்கப்பட்டதாலேயே தாம் அங்கிருந்து வெளியேறியாதாக அவர் கூறுகிறார்.

அங்கு அரச துருப்புக்களால் பொதுமக்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அந்நாட்டின் அதிபரின் சார்பில் பேசவல்ல அதிகாரி புறந்தள்ளியுள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டு கேலிக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு இராணுவத்தின் முன்னாள் தளபதி ஃபிரான்சுவா பொழியே அதிரடியாக ஆட்சியைப் பிடித்த பிறகு, அங்கு நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.


Posted in abuse, africa, AI, Amnesty, Amnesty International, Arms, Bangui, car, Central African Republic, CFA Francs, Chad, Children, Conflict, Criminal, defence, Defense, Democracy, ethnic, Ethnicity, Exploit, Extremism, France, Francs, French, Govt, HR, killings, Law, Military, Money, Opposition, Order, Peace, Poor, Power, Republic, Rich, Security, Sudan, Terrorism, troops, UN, Violence, War, Weapons, West Africa | 1 Comment »

Warrants of Arrest for the Minister of Humanitarian Affairs of Sudan, and a leader of the Militia/Janjaweed

Posted by Snapjudge மேல் மே 3, 2007

சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

ஜான் ஜாவீத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர்
ஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர்

சூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

இவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.

அவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.

யுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.

இந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது


அம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன

அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்
அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்

சூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.

டார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.

ஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.

ஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.

Posted in africa, AI, Amnesty, Arms, Arrest, Autocracy, autocrat, Berkshire, Blasts, Bombs, China, crimes, Darfur, defence, Destruction, Exports, Fidelity, genocide, ICC, Janjaweed, Law, Leader, Lord of war, Militants, Military, Militia, Order, Police, Regime, Russia, Soviet, Sudan, Supply, support, Terrorism, UN, USSR, War, Warrants, Warren, Weapons | Leave a Comment »

Ethiopia and Somalia: African Union (AU) peacekeepers – Protect the fragile Somali transitional government

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2007

‘நிலைமை சீராகும் வரை எத்தியோப்பியப் படையினர் சோமாலியாவில் தங்கியிருப்பார்கள்’

சோமாலியாவில் இருந்த இஸ்லாமியப் படைகளை விரட்டியடித்துள்ள எத்தியோப்பியப் படையினர் நிலைமை சீராகும் வரை அங்கேயே இருப்பார்கள் என்று சோமாலியாவின் இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிலைமை சீராக பல மாதங்களாகலாம் என்று சோமாலியாவின் பிரதமர் அலி முகமது கெடி பிபிசியிடம் தெரிவித்தார்.

சோமாலியாவின் எத்யோப்பிய படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் நோக்கம் பெருமளவில் நிறைவேறிவிட்டதாகவும் தமது படையினர், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நாடு திரும்புவார்கள் என்றும் எத்யோப்பிய பிரதமர் மீலீஸ் ஜெனிவாய் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்பின், முக்கிய தலைவர்கள், படையினர் சூழ குறைந்தது 60 வாகனங்களில் தெற்கு சோமாலியாவில் உள்ள துறைமுகர் நகரான கிஸ்மாயோ நகருக்கு, வட மேற்குகில் உள்ள ஒரு நகர் வழியாக சென்றாதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். கிஸ்மயோ பகுதி அரசப் படைகளால் திங்கட்கிழமையன்று கைப்பற்றப்பட்டது.


சோமாலியாவுடனான எல்லையை கென்யா மூடுவது குறித்து ஐ.நா கவலை

அச்சத்தில் சோமாலிய மக்கள்
அச்சத்தில் சோமாலிய மக்கள்

சோமாலியாவின் இடைக்கால அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சோமாலியாவுடனான தனது எல்லையை கென்ய அதிகாரிகள் மூட முயற்சி மேற்கொண்டுள்ளது குறித்து சோமாலியாவுக்கான ஐக்கிய நாடுகளின் மனித உதவி ஒருங்கிணைப்பாளர் கவலை தெரிவித்துள்ளார்.

பி பி சியிடம் கருத்து வெளியிட்ட சோமாலியாவுக்கான ஐ நாவின் மனித உதவி ஒருங்கிணைப்பாளர் எரிக் லா ரவுச், எல்லையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை சமீப நாட்களில் மிகவும் சொற்பமாக குறைந்துவிட்டது என்று கூறினார்.

அதே சமயத்தில் மக்களுடைய பிரச்சனைகள் முன்பு கணிக்கப்பட்டதைப் போல் மிகவும் மோசமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சோமாலியாவில் இருந்து எத்தியோப்பியத் துருப்புகள் வெளியேறுகின்றன

எத்தியோப்பிய துருப்புக்கள்
எத்தியோப்பிய துருப்புக்கள்

சோமாலியாவில் உள்ள எத்தியோப்பியத் துருப்புகள் இன்னும் சில தினங்களில் அங்கிருந்து வெளியேறத் தொடங்குவார்கள் என்று எத்தியோப்பியப் பிரதமர் மெலெஸ் ஷெனாவி கூறியுள்ளார்.

ஒரு கட்ட வெளியேறலுக்கான இறுதி ஏற்பாடுகள் தற்போது செய்யப்படுவதாக, பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் பிரதமர் மெலஸ் கூறியுள்ளார்.

சோமாலிய இடைக்கால அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் கடந்த டிசம்பரில் சோமாலியாவுக்கு எத்தியோப்பியப் படைகள் சென்றன.

ஆறு மாதங்களுக்கு முன்னர் சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவைக் கைப்பற்றியிருந்த இஸ்லாமியக் குழுக்களின் கூட்டமைப்பு, எத்தியோப்பியப் படைகளின் முன்னேற்றத்தை அடுத்து அங்கிருந்து வெளியேறியது.

மிதவாத இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சோமாலிய அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

சோமாலிய இடைக்கால அரசின் அதிபர் அப்துலாய் யூசப்
சோமாலிய இடைக்கால அரசின் அதிபர் அப்துலாய் யூசப்

சோமாலியாவில் இஸ்லாமிய நீதிமன்றங்கள் ஒருங்கிணைப்பின் மிதவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துமாறு சோமாலிய இடைக்கால அரசாங்கத்தை, கென்யாவுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ரன்னெபெர்கர் வலியுறுத்தியுள்ளார்.

சோமாலியாவில் வலுவாக இருந்த மத்திய மற்றும் தெற்கு பகுதியில் இருந்து கடந்த மாதம் இவர்கள் விரட்டப்பட்டனர்.

இஸ்லாமிய மிதவாதிகள் நல்ல எண்ணம் கொண்டவர்கள் என்று குறிப்பிட்ட அவர், சோமாலியாவின் எதிர்காலத்தில் அவர்களுக்கு பங்கு இருக்க வேண்டும் என்று கூறினார்.

எத்தியோப்பிய படைகளின் உதவியோடு தலைநகர் மொகடிஷுவினை அரச படைகள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்து கொண்ட பின்னர் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

சனிக்கிழமையன்று எத்தியோப்பிய வாகன தொடரணியோடு தொடர்புடைய மோதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.


சோமாலிய முக்கிய கிளர்ச்சிக்காரர் ஒருவர் சரண்

சரணடைந்தவர்
சரணடைந்தவர்

ஆப்ரிக்காவின் சோமாலியா நாட்டில் இருந்த இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்பின் ஆட்சியை, இடைக்கால அரசு ஆதரவுப் படைகள் நீக்கியதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய மூத்த சோமாலிய இஸ்லாமிய பிரமுகர் ஒருவர் தானாகவே கென்ய நாட்டு அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளதாக கென்யாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய நீதிமன்றங்களின் செயற்குழு கவுன்சிலின் தலைவராக இருந்த இந்த ஷேக் ஷரீஃப் ஷேக் அஹ்மத் என்பவர் கென்ய எல்லைப்புற நகரான வாஜிரில் பொலிஸாரிடம் சரணைடைந்ததற்குப் பிறகு இவர் கென்யாவின் தலைநகர் நைரோபிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

சரணடைந்த இந்த நபரை என்ன செய்யலாம் என்பது குறித்து அமெரிக்காவுடன் கென்ய அரசாங்கம் விவாதித்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

 


சோமாலியாவில் அமைதிகாக்கும் படைக்கான துருப்புக்களை இரட்டிக்க கோரிக்கை

ஆப்ரிக்க ஒன்றியப் படையினர்
ஆப்ரிக்க ஒன்றியப் படையினர்

சோமாலியாவில் அமைதி காக்கும் பணிக்காக ஆப்ரிக்க நாடுகள் அளிக்க முன்வந்துள்ள 8000 துருப்புக்களை இரட்டிப்பாக்கக் கோரி ஒரு அவசர வேண்டுகோளை ஆப்ரிக்க ஒன்றியத் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

எத்தியோப்பிய நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நடைபெறும் ஆப்ரிக்க ஒன்றியக் கூட்டத்தின் நிறைவு நாளில் இதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

சோமாலியாவில் கடந்த மாதம் இஸ்லாமியப் படைகளை விரட்டியடித்த எத்தியோப்பியப் படைகளுக்குப் பதில் அங்கு அமைதிகாக்கும் படைகள் விரைவாக பொறுப்பேற்காவிட்டால், அங்கு பெரும் குழப்பம் ஏற்படும் என்று தமது பதவிக்காலம் முடிந்த பிறகு ஆப்ரிக்க ஒன்றியத்தில் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் மாலி நாட்டைச் சேர்ந்த அல்பா ஓமர் கொனரே எச்சரித்துள்ளார்.

ஆப்ரிக்க ஒன்றியத்தின் இந்த உச்சி மாநாட்டில் பங்கு பெறும் ஐ நா வின் புதிய பொதுச் செயலர் பான் கீ மூன் ஆப்ரிக்காவில், மாறி வரும் தட்ப வெப்ப நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.


BBC March 1, 2007

சோமாலியாவிற்கு உகாண்டாவின் படைகள்

வரைப்படம்
சோமாலிய வரைப்படம்

சோமாலியாவில் ஆப்ரிக்க ஒன்றிய அமைதிப் படைகளின் ஒரு பகுதியாக செல்லும் உகாண்டா நாட்டின் முக்கிய படையணி ஒன்றை அந்த நாட்டின் அதிபர் யொவேரி முசேவினி வழியனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு செல்லும் 1700 பேரைக் கொண்ட தமது நாட்டின் படையணி சோமாலிய அரசுக்கு உதவி செய்வதற்காக செல்கின்ற போதிலும், அங்குள்ள சோமாலிய ஆயுதக் குழுவினரின் ஆயுதங்களை களையும் முயற்சியில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் என தென்கிழக்கு உகாண்டாவில் நடைபெற்ற இந்த வழியனுப்பும் நிகழ்ச்சியின் போது அதிபர் முசேவினி கூறினார்.

இதற்கு முன்னர் 30 பேர் கொண்ட ஒரு முன் பயணக் குழு ஏற்கெனவே சோமாலிய நகரான பைடோவாவை அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் பின் பகுதியில் சோமாலியாவில் இருந்து இஸ்லாமியப் படைகளை விரட்டியடித்து அங்கு தங்கியிருந்த எத்தியோப்பிய படையினருக்கு மாற்றாக இந்த அமைதி காக்கும் படை அங்கு செல்கிறது.


March 21

சோமாலியத் தலைநகர் மொகடிசுவில் மோதல்கள்

சோமாலியாவில் இன்று காலை எத்தியோப்பியப் படைகளின் ஆதரவுடனான இடைக்கால அரசாங்கப் படைகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன.

அதனை அடுத்து, அங்கு தலைநகர் மொகடிசுவில் நடக்கும் இந்த மோதல்கள், நகரின் பல பாகங்களுக்கும் பரவியுள்ளன.

வடகிழக்கு புறநகர்ப் பகுதிகளிலும் மற்றும் ஹவியே இனக்குழுவினரின் பலமிக்க இடங்களிலும் கடுமையான கனரக ஆயுதங்களின் சூட்டுச் சத்தத்தையும் கேட்கக்கூடியதாக இருந்ததாக நகரில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

இந்த ஹவியே இனக்குழுவினர், சோமாலியாவில் எத்தியோப்பியப் படைகளின் பிரசன்னத்தை எதிர்த்து வருகிறார்கள்.

இந்தச் சண்டை தொடர்பாக இஸ்லாமியவாதிகள் மீது இடைக்கால அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆத்திரமடைந்த கூட்டத்தினர் சிப்பாய்களின் சடலங்களை இழுத்துச் சென்று அவற்றுக்கு தீ மூட்டுவதை காட்டும் படங்களைச் சோமலிய இணையத் தளங்கள் பிரசுரித்துள்ளன.


March 22சோமாலியத் தலைநகர் மொகடிஷுவில் தொடரும் மோதல்கள்

சோமாலிய அரச படைகள்
சோமாலிய அரச படைகள்

சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் மோதல் நடந்துள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கும், எதியோப்பிய படைகளின் ஆதரவு பெற்ற இடைக்கால அரசின் படைகளுக்கும் இடையே நடந்த இந்த மோதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் , ஆறு பேர் காயமடைந்தனர். மொகடிஷுவுக்குத் தெற்கே இருக்கும் எதியோப்பிய படைகளுக்கு வழங்குபொருட்கள் எடுத்துச்செல்லப்படும் சாலையைத் துண்டிக்க கிளர்ச்சியாளர்கள் முயன்றதை அடுத்தும், வட மொகடிஷுவில் ஒரு கால்நடை சந்தைக்கு அருகே இருக்கும் அரசாங்க படைகளை தாக்கியதை அடுத்தும் இந்த மோதல் வெடித்தது.

சாதாரண மக்கள் இந்த சண்டை நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியே தப்பியோடிக்கொண்டிருக்கிறார்கள்.

கோபாவேசமுற்ற கும்பல் ஒன்று தெருக்களில் , இழுத்துச்சென்றதாக புதன்கிழமையன்று தொலைக்காட்சியில் காட்டப்பட்ட போராளிகளின் உடல்கள், எதியோப்பிய படையினர்களது உடல்கள் என்று வரும் செய்திகளை எதியோப்பியா மறுத்துள்ளது.


சோமாலிய மோதலில் எத்தியோப்பிய ஹெலிகாப்டர்கள்

சோமாலியத் தலைநகரின் தெருக்களில் சோமலியச் சிபாய்கள்
சோமாலியத் தலைநகரின் தெருக்களில் சோமலியச் சிபாய்கள்

சோமாலியாவின் தலைநகர் மோஹதிஷுவில் நடைபெற்று வரும் கடுமையான மோதல்களில், அங்குள்ள இடைக்கால அரசை ஆதரிக்கும் எத்தியோப்பியாவின் ஹெலிகாப்டர்களும் பங்கு பெற்றுள்ளன.

அங்குள்ள அரசுக்கும் ஹவ்யே இனத் தலைவர்களுக்கும் இடையே ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு வெடித்துள்ள இந்த வன்முறைகளில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளார்கள், பலர் காயமடைந்துள்ளார்கள்.

தலைநகர் மோஹாதிஷுவின் தெற்கே, ஹவ்யே இனத்தின் ஆயுததாரிகள் இருக்கும் பகுதிகளைச் சுற்றியுள்ள ஐந்து முக்கிய இடங்களை கைப்பற்றும் விதமாக இன்று அதிகாலை இந்தத் தாக்குதல்கள் தொடங்கின.

இந்தத் தாக்குதல்களில் எத்தியோப்பிய யுத்த டாங்கிகள், துருப்புக்கள் ஹெலிகாப்டர்கள் ஆகியவை சண்டையில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தத் தாக்குதலை எதிர்த்து, பலத்த எறிகணை வீச்சுக்களைக் மேற்கொண்டு அந்த இனத்தின் ஆயுததாரிகள் மறுதாக்குதலை நடத்தினர்.

அண்மைக் காலத்தின் அங்கு அதிகரித்த வன்முறைகளைகளின் போது ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.


Posted in Abdullahi Yusuf, African Union, AU, Black Hawk Down, Darfur, Eritrea, Ethiopia, Islam, Islamic courts, Kenya, Kismayo, Mogadishu, Nairobi, Nigeria, peacekeepers, peacekeeping, Shabbab, Somalia, Sudan, Tamil, Uganda, UN, Union of Islamic Courts, United nations, USA | 4 Comments »

Somali Parliament Leader Meets With Islamist Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

சோமாலிய கிளர்ச்சிக்காரர்களுடன் சமரசத்துக்கு முயற்சி

ஷரிப் ஷேக் அடன்
ஷரிப் ஷேக் அடன்

சோமாலியாவின் இடைக்கால நாடாளுமன்றத்தின் சபாநாயகரான ஷரிப் ஷேக் அடன், இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஒன்றியத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தலைநகர் மொகடிஷுவிற்கு சென்றுள்ளார்.

இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஆயுதக்குழுக்கள் நகரத்தினை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

அமைதி ஏற்படுவதற்காகவும், சோமாலியர்கள் ஒன்றிணைவதற்காகவும், தான் தலைநகர் சென்றுள்ளதாக அடன் கூறுகின்றார்.

தலைநகர் மொகடிஷு கடந்த ஜுலை மாதத்தில் இஸ்லாமிய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற பின்னர், மொகடிசஷுவிற்கு செல்லும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரி இவர்.

இஸ்லாமிய படைகள் தலைநகரின் கட்டுப்பாட்டினை எடுத்து கொண்டதினை அடுத்து, பதினைந்து ஆண்டுகளாக தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஆயுதக்குழுக்கள் நகரத்தினை விட்டு வெளியேறின.

ஆனால் சபாநாயகர் நடத்திவரும் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தின் இதர உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏதாவது ஏற்பட்டால், நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்கள் இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு ஆதரவாக செயற்பட கூடும் என்றும், இதனால் சர்வதேச சமூகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட அரசாங்கம் கலைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

Posted in Fear, Islam, Mogadishu, Negotiation, parliament, Sharif Hassan Sheikh Adan, Somalia, Speaker, Sudan, Talks | 3 Comments »

African Leaders Offered $5 Million Performance Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006

ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் ஓய்வுபெற ஊக்கத்தொகை

திட்டத்திற்கு நிதியுளிக்கும் மொ. இப்ராகீம்
திட்டத்திற்கு நிதியுளிக்கும் மொ. இப்ராகீம்

ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், அவர்களது பதவிக் காலம் முடிவடைந்த உடன் பதவியில் இருந்து விலகுவதினை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதவிக் காலம் முடிந்த பின்னர் அதிகாரத்தினை ஜனநாயக முறைப்படி வேறு ஒருவருக்கு கொடுக்கும், ஆப்ரிக்க நாடுகளின் அதிபர்களுக்கு, பத்தாண்டு காலத்தில் சுமார் ஐந்து மில்லியன் டாலர் கொடுக்கப்படும்.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும், அவர்களின் ஆயுட் காலம் முழுவதிற்கும், சுமார் இரண்டு லட்சம் டாலர்கள் கொடுக்கப்படும், இதற்காக ஒரு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

பரிசு பெறுவதற்கு ஆப்பிரிக்க அதிபர்கள் தங்களுடைய பதவிக் காலத்தில் நல்லது செய்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்தப் புதிய திட்டத்திற்கு நிதி கொடுக்கும் சுடான் மற்றும் பிரித்தானிய நாட்டினைச் சேர்ந்த கோடீஸ்வரரான மொ. இப்ராகீம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு, ‘ஆப்ரிக்க தலைமைத்துவத்தில் சாதனை புரிந்தமைக்காக மொ. இப்ராகீமின் பரிசு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Posted in africa, economic opportunity, Leaders, London, Mo Ibrahim, Mo Ibrahim Foundation, Offer, people security, Performance, political freedoms, Prize, Robert Rotberg, rule of law, Sudan, UK | Leave a Comment »

Environment Issues Topples World Governments – N Ramasubramanian

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 18, 2006

ஆட்சிகளைக் கவிழ்க்கும் சூழல் பிரச்சினை

என். ராமசுப்ரமணியன்

பலவகை மாசுகள் நம் நாட்டைப் பயமுறுத்தினாலும், கார்பன் வாயு வெளியீடு இந்தியாவிலிருந்து 3% என்றும், தொழில் உற்பத்தி நிலை அதிகரித்த நிலையிலும், இந்த அளவே “”கார்பன் வெளியீடு” என்பது கட்டுக்குள் இருக்கும் நிலையே என்று உலகச் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கணித்திருக்கின்றார்கள்.

இருப்பினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளும் தொடர்ந்து, பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. இப் பிரச்சினை உலகையே மிகவும் பயமுறுத்தும் விஷயமாகப் பேசப்படுகின்றது.

சமீபத்தில், இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலால் சொத்துகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்பு என்பது மிகவும் கொடுமையானது. இந்தச் சுனாமி நமது நாட்டையும் தாக்குமோ என்ற அச்சநிலை நிலவியது. நல்ல வேளை இம் முறை நாம் தப்பித்தோம்!

அடிக்கடி இந்தோனேசியப் பகுதியில் கடல் கொந்தளிப்பு, பூகம்பம் எனப் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்க நாட்டுத் தென் பகுதிகளில் சூறாவளிகள் காலம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியாவில் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பேய்க்காற்று வீசிப் பெரும் பீதியையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. ஜப்பான் நாடு தொடர்ந்து இயற்கைச் சீற்றத் தாக்குதலுக்கு ஆளாகின்றது.

சென்ற ஆண்டு, கத்ரீனா, ரீட்டா போன்ற சூறாவளிகளால் அமெரிக்கா நிலை குலைந்து போய்விட்டது. 2004ஆம் ஆண்டு இறுதியில் சுனாமி எனும் பேரலைத் தாக்கம் இந்தியாவின் பல பகுதிகளிலும், இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்தியது.

இமயமலைப் பனிப்பாறைகள் உருகி திடீர்ப் பெருவெள்ளம், ஆர்டிக் அண்டார்டிக் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்தல் என்று பல்வேறு சோதனைகளை உலகம் சந்திக்கின்றது.

இத்தகைய பாதகங்கள் மனிதன் இயற்கையைப் பெருமளவு மாசுபடுத்தியதால் ஏற்பட்ட விளைவுகள் – உலகவெம்மை அதிகரிப்பு, ஓசோன் படலத்தில் ஓட்டை என்று கண்டறிந்து, இனியாவது இயற்கையோடு இணைந்து வாழவில்லையெனில், இயற்கையின் தண்டனையை உலகால் தாங்க இயலாததாக இருக்கும் என்று விஞ்ஞான உலகம் உறுதிபடக் கூறி வருகின்றது.

கார்பன் வெளியீட்டைக் குறைக்க வகை செய்யும் கியூடோ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தராத அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்குப் பெருத்த எதிர்ப்பு அந் நாட்டிலேயே ஏற்பட்டுள்ளது. அமெரிக்கத் துணை அதிபராகப் பணியாற்றி, ஆறு வருடத்திற்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் மயிரிழை வித்தியாசத்தில் தோல்வியுற்ற அல்கோர், விரைவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அமெரிக்கக் கடமையும் என்ற வகையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த புத்தகம் வெளியிட உள்ளார்.

உலகின் முதல் மிகப் பெரிய நிறுவனங்களான எக்ஸôன் மொபில் மற்றும் ஷெல், ஷெவ்ரான் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி உலக மக்களுக்கே எடுத்துச் சொல்லிய வண்ணம் உள்ளன.

உலக அளவில் நடைபெறும் பொருளாதார, அரசியல் உச்சி மாநாடுகளில் இரண்டு விஷயங்கள் நிச்சயமாகப் பேசப்படுகின்றன.

1) ஏழை நாடுகளுக்கு எவ்வளவு, எவ்வாறு உதவுவது என்பது

2) சுற்றுச்சூழல் பாதுகாப்பு.

இந்தப் பேச்சுகளெல்லாம் வரவரச் சடங்குகள், சம்பிரதாயங்கள் போல ஆகிவிட்டன என்று உலகப் புகழ்பெற்ற பத்திரிகைகள் தலையங்கம் எழுதுகின்றன.

வெறும் பேச்சுடன் இல்லாமல், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முனைப்புடன் செயலாக்கம் இல்லையென்றால், அரசுகள் கவிழும் என்று சில சமீபத்திய வரலாறுகள் தெரிவிக்கின்றன.

சூடான் நாட்டு அனுபவம்: ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்குப் பகுதியிலுள்ள டர்ஃபர் மழைப்பொழிவு அதிகமற்ற வறண்ட பூமியைக் கொண்ட பகுதி. இங்கு வாழும் மக்கள் கால்நடைகள், ஆடு, ஒட்டகம் போன்றவற்றை மேய்ச்சல் பகுதிகளில் வளர்த்து, குறைந்த மழையில் கிடைக்கும் தண்ணீரில் விவசாயம் செய்து வந்தனர். அங்கு சுற்றுச் சூழலுக்குப் பங்கமேற்பட்டு மழை பொழிவது மிகவும் குறைந்ததால், ஏழ்மை அதிகரித்து, மக்கள் கூட்டம் இரு பிரிவாகி ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு கொல்வது 1980-ல் தொடங்கி, அரசியல் மற்றும் ராணுவக் கலவரங்கள் மிகவும் பெருகி விட்டன. இது தற்போது உலக அளவில் கவலையுடன் பேசப்படுகின்ற விஷயமாகிவிட்டது.

ஈக்குவேடார்: சுற்றுச் சூழல் பாதுகாப்பின்மையால் உண்டாகும் “”எல் நினோ” என்பதால் வெள்ளப் பெருக்கு அல்லது பெரும் வறட்சிகள் ஏற்படுகின்றன. 1998-ல் இந்த “எல் நினோ’வினால் ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்கினால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய உணவுப் பண்டங்கள், மீன் பண்ணைகள் அழிவினால் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்கள் திருப்பிக் கட்டப்படாததால், பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக, ஈக்குவேடார் நாட்டை அப்போது ஆண்ட அரசு தூக்கி எறியப்பட்டது.

இந்தோனேசியா: எல் நினோவின் இந்தோனேசியத் திருவிளையாடல், வரலாறு காணாத வறட்சி. இந்நிலையில் ஆசிய நிதிச் சந்தையும் நிலை குலைந்தது. இதன் விளைவு 31 வருடம் ஆட்சி புரிந்த சுகர்தோவின் அரசுக்கு முடிவு கட்டப்பட்டது.

தட்பவெப்ப மாறுதல்களால், பெரும் வறட்சி, வெள்ளப்பெருக்கு, புயல்கள், பல்வேறு வியாதிகள் அதிகரிப்பு என்று பல கொடிய விளைவுகள் ஏற்படுகின்றன.

ஆயினும் பொது மேடைகளில் அரசியலுக்கே முக்கியத்துவம் தருகின்றோம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய சம்பிரதாயமாக ஏதோ பேசுகிறோம். ஆக அரசும் பொதுமக்களும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பொருளாதார வளர்ச்சி, நாட்டுப் பாதுகாப்பு ஆகியவைகளுக்குச் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் மிக அவசியமாகின்றது.

“”இனி யார் சுற்றுச் சூழலை உண்மையாகப் பாதுகாக்கத் தேர்தல் வாக்குறுதி தருகின்றார்களோ அவர்களுக்கே நமது ஓட்டு (Vote for environment)’’ என்று பொது மக்கள் முடிவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவில் 20% மக்கள் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டுள்ளனர் என்று ஒரு கணிப்பு டியூக் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

பல்வேறு பொருளாதார, நாட்டு நலப் பணித் திட்டங்களைப் பற்றி பேசும் அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மிக அவசியம் என்று உண்மையாக உணர்ந்து, செயலாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். இதைப்பற்றி உணரத் தவறினால், மக்களின் நலனுக்கும், நாட்டிற்கும் துரோகம் இழைப்பவர்களாகவே ஆவார்கள். மக்கள் இதைப் பற்றி, தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், ஆட்சி மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும்.

இது உலக நாடுகள் அனைத்துக்கும் சொல்லப்படுகின்ற அறிவுரை.

ஐ.நா. மிலினியம் ப்ராஜக்ட் இயக்குநர், ஜெஃப்ரி டி.சாச் இது பற்றி எழுதியுள்ள மிகத் தெளிவான, ஆழமான, ஆய்வுக்கட்டுரையை, உலக நாடுகளிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் படித்து, தகுந்த செயல்முறை வடிவங்கள் அமைப்பது, அரசியல் அமைதிக்கு வழிவகுக்கும்.

இயற்கையின் தீவிரவாதம் சுற்றுச் சூழல் பாதுகாப்பின்மையால் ஏற்படும் என்பது உறுதி. இதன் சக்தி முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது என்பதும் உறுதி.

இந்நிலையில், “”சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று தேவையில்லாமல் பயமுறுத்துவோர் எண்ணிக்கையில் அதிகமாகி விட்டனர், இதெல்லாம் சுத்த வெங்காயம், புகைபிடிப்பது ஒன்றும் கெடுதியில்லை, நமக்குப் பிடித்த எந்த உணவையும் (துரித உணவு – Fast food,  Junk food, தண்ட உணவு  ) ஒதுக்காமல் நாவிற்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள். போலி ஆர்வலர்களைக் கண்டு மிரளாதீர்கள். இருக்கிற சில நாள் அனுபவிப்போமே! எதுதான் குறைந்து விடும்” என்றும் ஒருசாரார் வாதிட ஆரம்பித்துள்ளனர்.

இது எப்படி இருக்கு? கழுதைக்கு உபதேசம் காததூரமோ?

Posted in Carbon Emissions, Chevron, Earthquakes, Ecuador, El Nino, Environment, Exxon Mobil, Global Warming, Governments, Hurricanes, Indonesia, N Ramasubramanian, Oil Companies, Ozone, Shell, Sudan, Tamil, Tropical Storms, Tsunami, Vote for environment, World | Leave a Comment »