Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Q&A’ Category

Question & Answers with CPI(M) – Rich Party, Support for Govt

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

அரசியல்

கேள்வித் திருவிழா: டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

மத்திய அரசை மிரட்டுகிறோமா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை தொடர்ந்து மிரட்டி வரும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாட்டினை நியாயப்படுத்துகிறீர்களா…?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடதுசாரிகள் எப்போதுமே மிரட்டியது கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலனை உருவாக்குகின்ற சில திட்டங்களை அறிவித்திருக்கின்றன.

அவற்றின் மீது கூடுதலான அழுத்தம் கொடுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம், மக்களுடைய எதிர்காலம் செழிப்பாக இருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை வாழ வைக்க முடியும். எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உள்ள மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் கூறிவருகின்றன.

உதாரணமாக விலைவாசி உயர்வு பிரச்சினை. அதில் முக்கியமானது பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. இதைத் தடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.

அரசு அடிக்கடிப் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையுயர்வைத் தடுக்கலாம். ஏனென்றால் பெட்ரோல், டீஸல் விலை உயர்வு என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களில் இருந்து அத்தனை பொருள்களும் விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

ஆகவேதான் நாங்கள் விலையைக் கட்டுப்படுத்துங்கள் என்கிறோம். இதை மிரட்டல் என்று அருள்கூர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாது.

இந்திய நாடும் -அமெரிக்காவும் செய்யக்கூடிய அணு ஒப்பந்தம் என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அமெரிக்கா, தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தன்னுடைய ஆதரவு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசாராக் கொள்கை. அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. “சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை’ என்று குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கபட்ட பிறகும் அரசு அதிலிருந்து மாறுகிறது.

இதை சுட்டிக்காட்டி மக்களுக்கு விளக்குவதை அரசை நிர்பந்தப்படுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சி.பி.எம். கட்சிக்குத்தான் அதிக அளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது உண்மையா?

எஸ். கணேசன், கடலூர்.

உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் சி.பி.எம். தன்னுடைய கட்சியை நடத்துவதற்கும், மக்களை சந்திப்பதற்கும், கட்சி வளர்ச்சி ஏற்பாடுகளுக்கும் கட்சி இருக்கும் எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், சில கிளைகளிலும் கூட அலுவலகங்கள் வைத்திருக்கிறது.

அந்த அலுவலகத்திற்கான நிலம், கட்டிடம் போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிகச் சொத்து இருக்கக்கூடிய கட்சியினர் என்று கூறக்கூடாது. ஏனென்றால் அது மக்களுடைய சொத்தே தவிர சி.பி.எம். சொத்து அல்ல.

மற்ற கட்சிகளுக்கும், சி.பி.எம். கட்சிக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. மற்ற கட்சி களில் தலைவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஆனால் சி.பி.எம். கட்சியில், கட்சி வளமாக இருக்கிறது. அதில் இருக்கும் தலைவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.

சி.பி.எம். கட்சியில் ஊழியர்களின் சம்பள விகிதம் எப்படி?

பா.சு. மணிவண்ணன், திருப்பூர்.

சி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மாநிலத்துக்கு, மாநிலம் வித்தியாசப்படும். சி.பி.எம். கட்சியில் இருக்கக்கூடிய முழு நேர ஊழியர்களில் சொந்தமாக குடும்ப வருமான வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்கள் கட்சியிலிருந்து எந்தவிதமான ஊதியமும் எதிர்பார்க்காமல் பணியாற்றுகிறார்கள்.

கட்சியை மட்டும் நம்பி வாழ்கிறவர்கள், கட்சி கொடுக்கக்கூடிய சிறு அலவன்ûஸ மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அது கஷ்டமான வாழ்க்கைதான். கட்சியின் ஊழியர்களை எடுத்துக் கொண்டால் 500 ரூபாய் முதல், 4000 ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 4000 ரூபாய் என்பது மாநகரில் மட்டும் அல்ல, வட்டத்திலேயும் உண்டு. இது ஏதோ பதவி அடிப்படையில் என்றெல்லாம் இல்லை.

இரண்டாவது, சி.பி.எம்.மில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தை கட்சிக்காகவே கொடுத்து விடுகிறார்கள். கட்சி ஏற்கெனவே அவர்களுக்கு எவ்வளவு ஊதியத்தை நிர்ணயித்து இருக்கிறதோ அந்த ஊதியத்தை வழங்கும்.

ஆகவே மந்திரி என்று சொன்னாலோ, சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ அவரையும், அப்படியில்லாதவர்களையும் கட்சி வித்தியாசம் பார்க்காது. முதலமைச்சர் உள்பட அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பாணி எங்கள் கட்சியின் பாணி.

இது தவிர, பகுதி நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறவர்கள்தான் பகுதி நேர ஊழியர்கள். சிலர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சி.பி.எம்.மில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் உணர்வு செத்துப் போகவில்லை’ என கி. வீரமணி கூறியுள்ளாரே…!

அ. மாணிக்கம், ராமநாதபுரம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் உறுதியுடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே சி.பி.எம்.மின் நிலை. அங்கு தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், “அது ஒன்றுபட்ட இலங்கையில்தான் நடக்க முடியும்’ என்ற எங்களுடைய கருத்துக்கும், “தனி ஈழம் உருவாக வேண்டும்’ என்கிற கி. வீரமணியின் கருத்துக்கும் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது.

பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநிலம் கஹோத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாபுபாய் கடாரா தனது 3 குழந்தைகளுக்கு 6 பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து…?

வீரராகவன், மன்னார்குடி.

சமீப காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். வேறு பெண்ணை தன்னுடைய மனைவி என்கிற முறையில் வி.ஐ.பி. பாஸ்போர்ட்டுடன் அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவைகளெல்லாம் நம்முடைய அரசியல் கலாசாரச் சீரழிவிற்குக் காரணம். பி.ஜே.பி. ஒரு வித்தியாசமான கட்சி என்பதை அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை குண்டு வெடிப்பில் முன்னாள் சுங்க அதிகாரி சோம்நாத் தாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே…!

என். குமரன், வேளாங்கண்ணி.

நீதிமன்றம் பூரணமாக, வருடக் கணக்காக விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முழுத் தீர்ப்பையும் பார்த்துதான் அதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் ஆபத்தானவர்கள் மீது கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்குமேயானால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.

—————————————————————————————–

டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

* “”முல்லைப் பெரியாறில் கேரள அரசு அணைகட்டுவதற்கு தி.மு.க. அரசும் மறைமுகமாக உதவி செய்கிறது போலிருக்கிறது…” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாரே…!

க. ஜெகன், சிவகங்கை.

நதி நீர் பிரச்சினை என்பது இன்று பல்வேறு மாநிலங்களுக்கிடையே தாவாவை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனும் தாவா உள்ளது. நம்முடைய நியாயத்தை கோரிப் பெற, தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

தி.மு.க. அரசு அண்டை மாநிலங்களுடன் இப்படி மோதலற்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது பாராட்டத் தக்கது.

ஜூலை 26ஆம் தேதியும் டெல்லியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளார். அவரும் இது குறித்து இரண்டு முதல்வர்களையும் அழைத்துப் பேசுவதாக கூறியுள்ளார்.

முன்னாள் பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் போன்ற அறிவு ஜீவிகள், நதி நீர் இணைப்பு குறித்து ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மோதலற்ற போக்கை கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்த அணுகுமுறை நண்பர் பழ. நெடுமாறனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக, விவரங்களைத் தெளிவாகப் புரிந்த அவர், முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிப்பது நமக்கு ஏற்புடையதல்ல.

* ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக நினைக்கிறீர்களா?

என். செல்வம், நாகர்கோவில்.

“காம்ப்ரமைஸ்’ என்பது ஒரு தவறான வார்த்தை அல்ல. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோட்பாடு ரீதியான நிலையை மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்தது. இடது சாரிகள் அனைவருமே இணைந்து அதே நிலையைத்தான் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடியவர், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் அவர் ஓரளவுக்குப் பண்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆகவே மதசார்பற்ற, அரசியல் சட்டத்தைப் புரிந்திருக்கக்கூடிய, இன்றைய இந்திய நாட்டின் தேவையை உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக வருவது இன்றைய காலகட்டத்தில் நல்லது என்பதே எங்கள் கருத்து.

அந்தக் கருத்தை நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிடமும் சொன்னோம். அவர்கள் நிறுத்திய பிரதீபா பட்டீலை நாங்கள் ஆதரித்தோம்.

முதலில் இந்த நிலையை எடுக்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைக் கோரவுமில்லை; அப்படியொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதே போன்று ஏனைய இடதுசாரித் தோழர்களுக்கும் ஜனாதிபதி பதவி மீது கண்ணுமில்லை, விருப்பமுமில்லை.

* உங்களைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் பற்றி…?

க.நெடுஞ்செழியன், அய்யப்பன்தாங்கல்.

என்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்

  • தோழர் ராமமூர்த்தி,
  • தோழர் ஜீவா,
  • தோழர் கல்யாணசுந்தரம்,
  • உமாநாத்,
  • சங்கரைய்யா போன்றவர்கள்.

இந்தத் தலைவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியாக இருந்ததை நான் 64க்கு முன்னால் பார்த்தேன். அதற்குப் பின் கட்சி பிரிந்த பிறகு கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

அதன்பிறகு நான் ஏற்கெனவே சொன்ன சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக மாறிப்போனார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வருத்தமோ, வேதனையோ எனக்குக் கிடையாது.

மற்றபடி கொள்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்திய விஷயத்திலும், சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமையாக நடந்துகொண்ட விஷயத்திலும் மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் வரிசையில் எங்களுடைய அகில இந்தியத் தலைவர்கள்

  • இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,
  • பி.டி.ரனதேவே,
  • சுந்தரைய்யா போன்றவர்களைச் சொல்லலாம்.

இவர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் ஊழியனாகத்தான் நான் இருக்கிறேன்.
பெண் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள்,

  • பாப்பா உமாநாத்,
  • நர்மதா ரனதேவே,
  • விமலாராணி தேவி

ஆகியோர். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கத்திற்காகப் பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் என்று பார்க்கும்போது, மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களைச் சொல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறும், அவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளும் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தவை.

தமிழகத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் என்று காமராஜர் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்களைக் கூறலாம். இவர்களுடைய பணி, செயல்பாடுகள், அதிலிருக்கக்கூடிய பல்வேறு நல்ல அம்சங்கள் ஆகியவை என்னைக் கவர்ந்துள்ளன.

* அரசியல்வாதி என்பவர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர் என்று குற்றம் சாட்டுகிறேன். உங்களது பதில்….? (தயவு செய்து கோவிச்சுக்காதீங்க ஐயா)

பா. ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

எந்தக் கோபமும் இல்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியவர் எந்த அரசியல்வாதி என்று எனக்குத் தெரியாது. உங்களுடைய மனதைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இப்படியொரு அரசியல்வாதி நடந்திருந்தால் உங்கள் கோபம் நியாயமானதுதான்.

* ரஷ்யாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது ஸôர்?

இரா. கண்ணபிரான், சேலம்.

நான் ரஷ்யாவுக்கு சென்றதில்லை.

* “ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவைத் திருப்பியனுப்பியது மிகவும் கடுமையான சோதனையான காலகட்டம்’ என அப்துல் கலாம் தெரிவித்துள்ளாரே…?

தி. நாகேஷ், கோட்டப்பட்டினம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பொறுப்பு ஏதேனும் எடுத்துக் கொள்ளலாமா? அப்படியெனில் அது ஆதாயம் பெறும் பதவி எனக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பதுதான் பிரச்சினை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுந்தது. “எது ஆதாயம் தரும் பதவி?’ என்று அரசியல் சட்டத்தின் 102வது பிரிவு தெளிவாக விளக்கவில்லை. எந்தப் பதவிகளை ஏற்றால் பதவியைப் பறிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு எனத் தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உண்டு.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிறுவனங்களில் பொறுப்பேற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தச் சட்டங்கள் மூலம் நாடாளுமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம். கோரியது; ஆதாயம் தரும் பதவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் விவாதித்து முடிவு எடுக்க ஒரு நாடாளுமன்ற துணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியது.

நாடாளுமன்றமும், இருக்கும் சட்டத்திலிருந்து சில விதி விலக்குகளை அளித்து திருத்தச் சட்டம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அவர் தனக்குரிய உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி சில கேள்விகள் எழுப்பினார்; சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு திருப்பி அனுப்பினார்.

அது மறுபரிசீலனை செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்குரிய விசேஷ அம்சங்களை கணக்கிலெடுக்காமல் அப்பொறுப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுத்ததால் நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது.

பொது மக்கள் சேவையினை கருத்தில் கொண்டு சில அரசு நிறுவனங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்.மின் நிலை. இப்பொழுது உள்ள குழப்ப நிலை நீங்க, தெளிவானதொரு சட்ட விளக்கம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது.

* “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற உ.பி. முதல்வர் மாயாவதியின் யோசனை பற்றி…?

எஸ். உலகநாதன், திருவாரூர்.

“இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும்?’ என்று சொல்வதற்கு முன், அது செயல்படுத்த வேண்டிய அரசியல் பொருளாதார -சமூகப் பின்னணியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் பெரும் பிரிவினர் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையில் எழுந்ததுதான் அரசியல் சட்ட ரீதியான “இட ஒதுக்கீடு’ முடிவுகள்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ஆனால் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தும், வாழ்நிலையும் எப்பொழுது முழுமை பெறும்? அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டப்படுவதன் மூலமாகத்தான் அது முடியும்.

கிராமப் புறங்களில் வாழும் இந்தப் பிரிவினரில் பெரும்பான்மையான மக்கள் நலிந்த பொருளாதாரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைக் கொடுக்கும் செயல் திட்டம்தான் நிலச் சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வல்லது.

இது நாட்டின் இடதுசாரிகள் சொல்கிற கருத்து மட்டுமல்ல…! பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் இதை வலியுறுத்திச் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரள, மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில அரசுகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டே எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (நிலத்தைப் பங்கீடு செய்தது) அந்த மக்களுக்கு ஓரளவு பொருளாதார சக்தியினைக் கொடுத்திருக்கின்றன.

அவர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்திருக்கிறது. அதிகார அமைப்பில் அவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. இதை மண்டல் கமிஷன், மற்றும் திட்ட கமிஷன் கணக்கில் எடுத்துப் பாராட்டியும் உள்ளது.
வேறு ஒரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை (அரசின் கணக்கின்படி) 26 கோடி பேர். வறுமையில் வாடுவோர் அல்லது பொருளாதார பலம் ஏதுமின்றி வாழ்பவர்கள் சாதி, மதம், மொழி என்ற பண்பாட்டு வட்டங்களைத் தாண்டித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

அவர்களின் வாழ்நிலையினை உயர்த்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாயாவதி என்ன நோக்கத்தோடு அந்த யோசனையை முன் வைத்தார் என்று தெரியாது. ஆனால் பிரச்சினையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்லர்! நமது கவலைக்குரிய மனிதர்கள்தான்!

Posted in Alliance, Answers, APJ, Bachan, Badhuri, Baduri, Bathuri, Bhachan, Bhadhuri, Bhaduri, Bhardhan, Bhathuri, BJP, Center, Chat, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, DMK, Eezham, Elections, Faces, Finance, Gorbachev, Govt, Integration, Interview, Jaya, Jeya, Kalam, Karat, Leaders, Lenin, LTTE, Manmogan, Manmohan, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Masood, Masud, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, names, National, NDTV, Neta, Netha, Party, Patil, people, Politburo, Politics, Polls, Poor, Power, Prakash, Prathiba, Prathibha, President, Prez, Principles, Putin, Q&A, Questions, Rasheed, Rashid, Rich, River, Russia, Somnath, Sonia, Soviet, Sri lanka, Srilanka, Stalin, support, UP, US, USA, USSR, UttarPradesh, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Water, Wealthy | Leave a Comment »

Tamil Exam papers – Sample III

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

மாதிரி வினாத் தாள் மேல்நிலை இரண்டாம் ஆண்டு – பொதுத் தமிழ்: தமிழ் இரண்டாம் தாள்

(உரைநடை, துணைப் பாடம், செய்யுள் நயம் பாராட்டல், தமிழாக்கம், படைப்பாற்றல், மொழித்திறன்) (தொடர்ச்சி)

ஐய. பின்வரும் வினாக்களுள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் விடை எழுதுக.

2*10 = 20

13. “பால்வண்ணம் பிள்ளை (அல்லது) “சட்டை’ கதையைக் கருப்பொருளும், சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.

(அல்லது)

“ஓர் உல்லாசப் பயணம்’ (அல்லது) “பழிக்குப் பழி’ கதையில் வரும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை நாடகமாக வரைக.

14. “ஒவ்வொரு கல்லாய்’ (அல்லது) “மண்’ சிறுகதையில் நும் மனம் கவர்ந்த கதை மாந்தர் குறித்துத் திறனாய்வு செய்க.

(அல்லது)

ஒரு குடும்பத்தில் பொறுப்பான தந்தை, அன்பான தாய், நல்ல குழந்தைகள் அமைந்துள்ள சூழலைக் கருவாய் அமைத்து ஒரு கதை எழுதுக.

(அல்லது)

சுனாமியில் சிக்கி வழி தவறி வந்த குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்குவது போல் ஒரு கதை எழுதுக.

ய. 15. பின்வரும் செய்யுளைப் படித்துணர்ந்து அதில் அமைந்துள்ள மையக் கருத்தை நயத்துடன் எடுத்துரைத்து அதில் அமைந்துள்ள எதுகை, மோனை, இயைபு, முரண், அணி, சந்தச்சுவை, உவமை, உருவகம், கற்பனை ஆகியவற்றுள் ஏற்புடையவற்றைச் சுட்டி எழுதுக.

1*10 = 10

நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்தே

நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தை!

கோலம்முழு தும்காட்டி விட்டால் காதற்

கொள்கையிலே இவ்வுலகம் சாமோ? வானச்

சோலையிலே பூத்தனிப் பூவோ நீதான்?

சொக்க வெள்ளிப் பாற்குடமோ? அதிக ஊற்றோ?

காலை வந்த இளம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?

– கவிஞர் பாரதிதாசன்

யஐ. பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் தமிழாக்கம் தருக:

3*2 = 6

16. ஆஹழ்ந்ண்ய்ஞ் க்ர்ஞ்ள் ள்ங்ப்க்ர்ம் க்ஷண்ற்ங்.

17. உம்ல்ற்ஹ் ஸ்ங்ள்ள்ங்ப்ள்ம்ஹந்ங்ற்ட்ங்ம்ர்ள்ற்ய்ர்ண்ள்ங்.

18. ஏஹள்ற்ங் ம்ஹந்ங் ஜ்ஹள்ற்ங்.

19. ரட்ங்ழ்ங் ற்ட்ங்ழ்ங் ண்ள் ஜ்ண்ப்ப், ற்ட்ங்ழ்ங்ண்ள்ஹஜ்ஹஹ்.

20. அப்ப் ஸ்ரீர்ஸ்ங்ற், ஹப்ப் ப்ர்ள்ள்.

21. ஓண்ய்க்ய்ங்ள்ள் ஸ்ரீஹய்ய்ர்ற் க்ஷங்க்ஷர்ன்ஞ்ட்ற்.

யஐஐ. 22. பின்வரும் பழமொழிகளுள் ஒன்றினை விளக்கும் வகையில் வாழ்க்கை நிகழ்வில் அமைத்து (பத்து வரிகளில்) எழுதுக.

1*4 = 4

அ) உரிய காலத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்

ஆ) சிறுதுளி பெருவெள்ளம்

இ) வருமுன் காத்தலே சிறந்தது

(அல்லது)

“எரிபொருள் சிக்கனம் தேவை’ (அல்லது) நல்ல நண்பன்’ என்ற தலைப்பில் சிந்தித்து உமது சொந்தப் படைப்பாகக் கவிதை ஒன்றை (எட்டு அடிகளுக்குக் குறையாது பத்து அடிகளுக்கு மிகாது) எழுதுக.

யஐஐஐ. பின்வரும் வினாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விடை எழுதுக.

10*1 = 10

23. புலி வந்தன; எருதுகள் ஓடியது.

(வாக்கியப் பிழையைத் திருத்துக)

24. நெல்லிகாய், தான்றிகாய், கடுகாய் ஆகிய மூன்று சரக்குகளை கொண்டது திரிபலை எனப்படும்.

(தேவையான இடங்களில் வல்லின மெய்களை இட்டு எழுதுக).

25. அலை, அழை (அல்லது) ஆணி, ஆனி (பொருள் வேறுபாட்டை உணர்த்தும் வகையில் தனித்தனி வாக்கியங்களில் அமைத்து எழுதுக?)

26. டி.வி.யில் சீரியல் பார்க்காவிட்டால் லைஃபே போர் அடித்து விடும்’ என்கிறாள் பாட்டி.

(பிறமொழிச் சொற்களை நீக்கி இனிய தமிழில் எழுதுக)

27. சுபதினத்தில் கிருகப் பிரவேசம் முடித்த தம்பதிகள் அனைவரையும் உபசரித்தார்கள்.

(பிறமொழிச் சொற்கலப்பை நீக்கி நல்ல தமிழில் எழுதுக)

28. கோளிமுட்டை தாவாரத்தில் உருண்டது.

(கொச்சையான வழுஉச் சொற்களைத் திருத்தி எழுதுக)

29. நீரோச் சோறோ எதுக் கிடைத்தாலும் உண்டுச் செல்வேன்.

(தேவையற்ற இடங்களில் அமைந்த வல்லின மெய்களை நீக்கி எழுதுக.)

30. தோட்டத்தில் உள்ள வாழைச் செடி பார்க்க அழகாக உள்ளது.

(மரபு வழுவை நீக்கி எழுதுக)

31. பரவை இறையாகப் பயரு வகைகளைத் திண்ணும்.

(எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக)

32. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது என்று என் தந்தை சொன்னார்.

(பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டெழுதுக)

விடைகள் -கேள்வி எண் 16-21; 23-32

16. குரைக்கின்ற நாய் கடிக்காது

17. குறைகுடம் தளும்பும்

18. பதறிய செயல் சிதறும்

19. மனம் இருந்தால், மார்க்கமுண்டு

20. பேராசை பேரிழப்பு

21. அருளை வாங்க முடியாது

23. புலி வந்தது; எருதுகள் ஓடின.

24. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்று சரக்குகளைக் கொண்டது திருபலை எனப்படும்.

25. அலை -கடல் அலை, அலைந்து திரிதல்

அழை -கூப்பிடு

ஆணி -கூரிய இரும்புத்துண்டு

ஆனி -ஒரு மாதம்

26. “தொலைக்காட்சியில் தொடர்களைப் பார்க்காவிட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும்’ என்கிறாள் பாட்டி.

27. நன்னாளில் புதுமனை புகுவிழாவை முடித்த கணவன் மனைவியர் அனைவரையும் ஒப்பினார்கள்.

28. கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது.

29. நீரோ சோறோ எது கிடைத்தாலும் உண்டு செல்வேன்.

30. தோட்டத்தில் உள்ள வாழைக்கன்று பார்க்க அழகாக உள்ளது.

31. பறவை இரையாகப் பயறு வகைகளைத் தின்னும்.

32. “”ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கடிதம் எழுது”, என்று என் தந்தை சொன்னார்.

Posted in Exam, Examinations, Genral Tamil, papers, Public Exam, Q&A, Questions | 22 Comments »

Vat Q&A – Dinamani Solutions on Sales Tax Questions

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

“வாட்’ வரி: “இன்புட், அவுட்புட் டாக்ஸ்’ கணக்கிடுவது எப்படி?
டி. அய்யாபிள்ளை, நாகர்கோவில்.

நான் சிமெண்ட் கடையில் கணக்கராக வேலை பார்க்கிறேன். வாட் முறையில் “இன்புட் டாக்ஸ்’, “அவுட்புட் டாக்ஸ்’ பற்றி விளக்கவும்.

சிமெண்டை நம் மாநிலத்தில் ஆலைகளிலிருந்து நீங்கள் வாங்கும்போது 12.5 சதவீதம் வரி செலுத்தி வாங்கியிருப்பீர்கள். உதாரணமாக சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 எனில் அதற்கு 12.5 சதவீதம் ரூ.25 வாட் வரியாகச் செலுத்தியிருப்பீர்கள். அவ்வாறு செலுத்திய வரிதான் “இன்புட் டாக்ஸ்’ என்பது. இந்த இன்புட் டாக்ûஸ நீங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் அந்த சிமெண்ட் மூட்டைக்கு ரூ.20 லாபம் வைத்து விற்க வேண்டும் என கருதுவீர்களேயானால் வாங்கிய விலை வரி உள்பட ரூ.225 லாபம் ரூ.20 ஆக மொத்தம் ரூ.245 என்று நிர்ணயம் செய்து அதற்கும் 12.5 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டுமே என்ற கருத்தில் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இது தவறு.

உங்களுக்கு ரூ.20 லாபம் வேண்டும் என்றால் நீங்கள் ரூ.200 வாங்கிய விலை லாபம் ரூ.20 சேர்த்து ரூ.220 பிளஸ் 12.5 சதவீதம் வாட் வரி என்றுதான் விற்க வேண்டும்.

நீங்கள் கொள்முதல் செய்தபோது செலுத்திய “வாட்’ வரியை அடக்க விலையில் சேர்க்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் பொருளை விற்கும்பொழுது வசூலிக்கும் வரியில் (அவுட்புட் டாக்ஸ்) தாங்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியை வைத்துக் கொண்டு மீதியைத்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். மேலே சொன்ன உதாரணத்தில் நீங்கள் சிமெண்ட் மூட்டை ரூ.220 பிளஸ் “வாட்’ என விற்கிறபோது நீங்கள் ரூ.27.50 வரியாக வசூல் செய்வீர்கள். இதுதான் “அவுட்புட் டாக்ஸ்’ என்பது.

இந்த வரித் தொகையில் தாங்கள் கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியான ரூ.25-ஐ வைத்துக் கொண்டு மீதி ரூ.2.50-ஐ மட்டும்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். இதுதான் “செட்ஆஃப்’ என்று சொல்வது.

நுகர்வோருக்கு மொத்த விலை வரி உள்பட ரூ.227.50 மட்டுமே. “வாட்’ வரியில் வரி மீது வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

“வாட்’ வரி விதிப்பில் விவசாயத் துறை சார்ந்துள்ள இடுபொருள் வர்த்தகர்களுக்கு எத்தகைய பலன் கிடைக்கும்?

பாண்டியன் உர டிப்போ, திண்டிவனம்.

“வாட்’ வரி முறையில் விவசாய இடுபொருள்களான உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு 4 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வரிப் பளு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் “வாட்’ வரி அமலாக்கக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று உரம் மற்றும் பூச்சி மருந்துக்கு நம் மாநிலத்தில் முதல் கட்ட விற்பனையில் மட்டும் வரி விதிக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு நடைபெறும் விற்பனைகளுக்கு வரி விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

“வாட்’ வரி குறித்த விவரங்களை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: http://www.tnvat.gov.in

இந்தப் பகுதியில் இடம்பெறும் கேள்வி-பதில்களை http://www.dinamani.com/vat/index.asp  என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.

Posted in Accountancy, Accountant, Answers, Biz, Business, Cement, Economy, Farmer, Farming, Finance, Government, India, Input Tax, Output Tax, Personal, professional, Q&A, Questions, Sales Tax, Small Business, State, Tamil Nadu, Tax, TNGST, VAT | 5 Comments »

Sample Tamil Exam paper – Questions on Thamizh Grammar & Poems

Posted by Snapjudge மேல் ஜனவரி 23, 2007

பிளஸ் டூ பொதுத் தேர்வு (மாதிரி) வினா – பொதுத் தமிழ்

பகுதி-1 – தமிழ் – முதல் தாள்
(செய்யுளும், இலக்கணமும்)

  • காலம்: 3 மணி
  • மதிப்பெண்: 100

குறிப்பு: (1) விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையில் அமைதல் வேண்டும்.

(2) வினா யஐ-க்கான விடை மட்டும் செய்யுள் வடிவில் அமைதல் வேண்டும்.

1. பின்வரும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு ஐந்து வரிகளில் விடை எழுதுக.

4*2 =8

1. புறநானூற்றால் அறியப்படும் செய்திகள் யாவை?

2. எதனை மறத்தல் எதனினும் நன்று?

3. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் யாவை?

4. தேவார மூவர் யாவர்?

5. நாம் தூங்கிக் கிடந்ததால் நடந்ததாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

6. நாடெங்கும் புத்தக சாலை ஏன் வேண்டும்?

2. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்குப் (பத்து வரிகளில்) விடை தருக.

3*4 = 12

7. இந்தியர் அனைவரும் எவ்வெண்ணத்தைக் கைக்கொள்ள வேண்டும்?

8. நரிவெரூஉத்தலையார் பயனில்லாத முதுமை உடையாரை விளித்துக் கூறுவன யாவை?

9. பொறையுடைமையின் சிறப்பை திருவள்ளுவர் வழிநின்று விளக்குக.

10. கண்ணகியைக் கண்டு ஊரவர் திகைத்துக் கூறியன யாவை?

11. பாண்டியன் பரிசு பேழைக்குள் இருந்தன யாவை?

3. பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்குப் (பத்து வரிகளில்) விடை தருக.

3*4 = 12

12. தென் கரை நாட்டின் வளம் குறித்து முக்கூடற்பள்ளு உரைப்பனவற்றை எழுதுக.

13. உவமைக் கவிஞர் சுரதா எவ்வெவற்றைச் சிக்கனம் எனப் பட்டியலிட்டுள்ளார்?

14. மனித நேயம் பற்றிக் கவிஞர் கூறுவன யாவை?

15. மூலையில் கிடக்கும் வாலிபனிடம் தாராபாரதி கூறும் அறிவுரைகள் யாவை?

16. நாயினேன் மறந்து என்னினைக்கேனே என்று சுந்தரர் உருகுமாற்றினை விளக்குக.

4. பின்வரும் வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்கு (இருபது வரிகளில்) விடை தருக.

1*8 = 8

17. அறிவுடைமை அதிகாரத்தில் இடம்பெற்ற குறட்பாக்களின் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.

18. கோலியாத்து என்ற அரக்கனின் வருகையும், தாவீரன் அவனை வென்ற திறத்தினையும் எழுதுக.

19. பாரதியார் காட்டும் அந்திவான வருணனையைத் தொகுத்து வரைக.

5. பின்வரும் செய்யுளின் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

4*1 = 4

20. யாருமில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ

(அ) பாடல் இடம் பெற்ற நூல் எது?
(ஆ) இப்பாடலின் ஆசிரியர் யார்?
(இ) “”கள்வன்” யார்?
(ஈ) இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?

(அல்லது)

21. “நீயடா வெதிர் நிற்பதோ மதம் பொழ கரிமேல்
நாயடா வினை நடத்துமோ?’

(அ) இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
(ஆ) இப்பாடலின் ஆசிரியர் யார்?
(இ) யார் யாரிடம் கூறியது?
(ஈ) “கரி’ என்பதன் பொருள் யாது?

6. 22. “கண்டனென்’ எனத் தொடங்கும் கம்பராமாயணச் செய்யுளை அடிபிறழாமல் எழுதி அதன் பாவகையையும் எழுதுக.

(4+2 = 6)

23. காலத்தினால்’ எனத் தொடங்கும் குறளையும், “செயல்’ என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக.
(2+2 = 4)

7. 24. எவையேனும் இரண்டு சொற்களுக்கு உறுப்பிலக்கணம் தருக.
2*2 = 4

(அ) வேண்டேன் (ஆ) களையாத (இ) கேட்டி (ஈ) ஏகுவாய் (உ) பொறுத்தல் (ஊ) சொல்லுமின்

25. கீழ்க்கோடிட்ட தொடர்களுள் எவையேனும் மூன்றனுக்கு இலக்கணக் குறிப்பு எழுதுக.
3*2 = 6

(அ) கயன்முன் (ஆ) திரைகவுள் (இ) கூர்ம்படை (ஈ) படூஉம் (உ) சிறைப்பறவை (ஊ) வல் விரைந்து

26. எவையேனும் இரண்டு தொடர்களுக்குப் புணர்ச்சி விதி தருக.
2*2 = 4

(அ) வினைத்திட்பம் (ஆ) பெருந்தேர் (இ) வீறெய்தி (ஈ) நிறைஉடைமை (உ) இற்பிறப்பு (ஊ) சின்னாள்

27. சான்று தந்து விளக்குக.
1*4 = 4

பொதுவியல் திணை (அல்லது) வினை முற்றிய தலைமகன் தேர்பாகற்குச் சொல்லியது.

28. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

இக்குறளில் பயின்று வந்துள்ள அணியை விளக்குக.

(அல்லது)

எடுத்துக்காட்டு உவமையணி அல்லது தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
1*4 = 4

8. பொருத்துக
4*1 = 4

தினை தெய்வம்

29. குறிஞ்சி (அ) வருணன்
30. நெய்தல் (ஆ) துர்க்கை
31. பாலை (இ) திருமால்
32. முல்லை (ஈ) இந்திரன்
(உ) முருகன்

Posted in +2, 10th, Answers, Exam, Examination, Examples, Grammar, Higher Secondary, HSS, Literature, Poems, Q&A, Question Paper, Questions, Reference, School Exam, Tenth, Thamizh | 2 Comments »

Thamizhvaanan Q&A in Kalkandu : Dravidam, Anna, Periyar, China War

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

தமிழ் பத்திரிகையுலகில் கேள்வி பதில் பகுதியில் வெற்றிக் கொடி நாட்டியவர் தமிழ்வாணன். பழைய கல்கண்டு இதழ்களை புரட்டியபோது காணக் கிடைத்த அவரது ருசிகரமான கேள்வி பதில்கள் சில:

சீன யுத்த நிதிக்காக பெரியார் இன்னும் காலணா கூடத் தரவில்லையே?

உங்களுக்கு இது ஆச்சரியம்! யுத்த நிதியிலிருந்து தனக்கு எதுவும் கேட்காமலிருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியம்!

அழகிப் போட்டி நடத்துகிறார்களே?

நடத்த வேண்டியது தான்; ஆனால், அதில் எனக்கு ஒரு சந்தேகம்… முன்பு அழகாக இருந்தார்கள் என்று தேர்ந்தெடுத்து வருகிறார்களா அல்லது நாளைக்கு அழகாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து வருகிறார்களா என்பது தான் எனக்குப் புரியவில்லை.

?

நான் தராசில் நிற்க மாட்டேன். சீன யுத்த நிதிக்கு, எனது நிறையைப் பார்த்து, நீங்களே இதற்குரிய தங்கத்தைக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டாரே நேரு!

நேருவுக்கு இப்போது தங்கம் கிடைக்கிறது; நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. அதனால்தான் நேரு அப்படிச் சொல்லி விட்டார்! தங்கள் எடைக்கு எடை புளி கிடைத்தால் கூட அதற்காக நாள் கணக்கில் தராசில் நிற்கத் தயாராக இருக்கும் தலைவர்கள் இன்று நம் தங்க தமிழ்நாட்டில் இருக்கிறார்களே!

தமிழரசுக் கழகம் (ம.பொ.சி., கட்சி) எப்படி இருந்து வருகிறது?

ஒரு தேவாரப் பாட சாலையைப் போல் நடந்து வருகிறது. ஓதுவார் ஒருவர் தான் தேவாரப் பாடசாலையில் இருப்பார். சில சீடர்கள் இருப்பார்கள். வெளியே ஒரு போர்டு தொங்கிக் கொண்டிருக்கும். இது தான் தேவாரப் பாடசாலை.

வெற்றிலை போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

வாய் சிவப்பாகும்; பல்லில் காவி ஏறும். உப்புமாவும், கேசரியும் சாப்பிடுவதற்கு ஒன்று போல் இருக்கும்.

ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதும் போது முகவரிப் பகுதியில் திராவிட நாடு என்று எழுதலாமா?

திராவிட நாடு என்று என்ன… சுவர்க்கம் என்று கூட எழுதலாம். போய் சேருமா என்பது தான் சந்தேகம்! திராவிட நாடு என்று முகவரி இடப்பட்ட கடிதங்கள் ஆயிரக்கணக்கில், “டெட் லெட்டர்’ ஆபீசில் கிடக்கின்றன என்று கேள்வி!

தமிழ் தேசியக் கட்சியிலிருந்து சம்பத்தை விலக்கி வைப்பதாக கண்ணதாசன் சொன்னாரே, அது என்ன ஆயிற்று?

என்ன சொன்னீர்கள்? சம்பத்தைத் தள்ளி வைப்பதாக கண்ணதாசன் சொன்னாரோ? ஊம், உங்களைச் சொல்ல என்ன இருக்கிறது. காலம் அப்படிக் கெட்டு கிடக்கிறது! சோப்பு தான் தண்ணீரில் கரைந்து காலியாகுமே தவிர, தண்ணீரைக் குடித்துத் தொட்டியை காலியாக்கிவிடாது சோப்பு.

“எங்கள் அண்ணாவிடம் போய் காமராஜர் கற்றுக் கொண்டு வரட்டும்…’ என்கிறாரே என்.வி.நடராசன்?

எதை? பொடி போடுவதையா?

சிவாஜி கணேசன் அமெரிக்கா போயிருந்த போது கென்னடி ஏன் கணேசனைக் கூப்பிட்டு பேச வில்லை?

கணேசன் ஒரு பிஸிமேன் என்பது கென்னடிக்குக் கூட தெரியும் போல் இருக்கிறது.

பெரியார் எப்படி இருக்கிறார்?

நாம் வைத்து வளர்ந்தவர்களெல்லாம் நம்மை விட்டுப் போய் கொண்டிருக்கிறார்களே என்று மிகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். நாம் வளர்த்ததில் நம் தாடி ஒன்றே இன்னும் நம்மையே நம்பி, நம்மை விட்டுப் போகாமல் நம்மோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறது என்று தன் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்!

நடிகர் ஆனந்தன், “நானும் மனிதன் தான்’ என்ற பெயரில் சொந்த படம் எடுக்கப் போகிறாராமே?

எடுக்கட்டும். இதிலாவது நானும் நடிகன் தான் என்பதை அவர் எடுத்துக் காட்டட்டும்.

பெரியாருக்கு மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா?

ஏற்றுக் கொள்ள மாட்டார். மந்திரி வேலையில் மாதாமாதம் தான் பணம் கிடைக்கும். சமுதாய சீர்திருத்தப் பணியில் ஊருக்கு ஊர், டூருக்கு டூர் பணம் கிடைக்குமே!

Posted in Ananthan, Andumani, Anna, Answers, China War, Dinamalar, Dravidam, EVR, Indo-China, Kamaraj, kamarajar, Ma Po Si, Nehru, Pa Ke Pa, Periyar, Q&A, Questions, Sivaji, Sivaji Ganesan, Thamizhvaanan | Leave a Comment »

Karunanidhi ridicules Jayalalitha and Vaiko – Hurricane & Empty Gas

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

‘புயலும்’ காற்றும் கருணாநிதி கிண்டல்
ஜனவரி 04, 2007

சென்னை: ‘புயலையே’ பொடாவில் பிடித்து வேலூர் சிறையில் அடைக்கும்போது ‘காற்றை’ கைது செய்ய முடியாதா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக முரசொலியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்துள்ள பதில்:

கேள்வி: காற்றைக் கைது செய்யக் கழுதைகளால் முடியுமா என்று எதிர்க்கட்சிப் பேச்சாளர் ஒருவர் பேசியுள்ளாரே.?

கருணாநிதி: ஏன் முடியாது? பொடா சட்டத்தில் புயலையே கைது செய்து வேலூர் சிறையில் போட்டிருந்தார்களே.

கேள்வி: திரையரங்கக் கட்டணக் குறைப்பு குறித்து சில பத்திரிக்கைகள் சென்னையில் அதிகப்படியான வசதிகள் கொண்ட இரண்டே திரையங்குகளுக்கு மாத்திரம், உயர் வகுப்புக்கு மட்டும் கட்டணம் உயர்த்தியிருப்பதை பெரிதுபடுத்தி, அரசு சினிமாக்காரர்களுக்கு பணிந்தது என்றும், அரசு பல்டி என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்களே?

கருணாநிதி: இந்த அரசு ஏழை, எளிய சாதாரண சாமான்ய மக்களின் நலன் கருதி, திரையரங்கு கட்டணங்களைக் குறைத்து ஆணை பிறப்பித்ததிலிருந்து அணுவளவும் மாறவில்லை. அந்த ஆணை அப்படியே செயல்படுத்தப்படுகிறது.

அரசு குறியிட்டு வகுத்துள்ள 15 அல்லது 10 வசதிகள் கொண்ட திரையரங்குகள் இரண்டே இரண்டு மட்டும் சற்று கூடுதலாக அதாவது அடிப்படைக் கட்டணம் ரூ. 10 என்றும், அதிகபட்சக் கட்டணம் ரூ. 85 லிருந்து 120 ரூபாய் என்றும் கட்டணம் வசூலித்துக் கொள்ள சிறப்பு வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

குறைந்த கட்டணப் பயனை இரண்டாயிரம் திரையரங்குகளுக்கு செல்வோர் அனுபவிப்பதற்கு அரசின் 2வது அறிவிப்பால் எந்தத் தடையும் இல்லை. இதை விஷயமறிந்தோர் உணர்ந்தே இருக்கின்றனர்.

அவசரப்படுவோர், ஆத்திரத்தில் அம்மிக் குழவியால் குத்திக் கொண்டு அவதிப்பட்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? சொறி சிரங்கு பிடித்தவன், அரிப்பு தாங்காமல் உடம்பை பிராண்டிக் கொள்வான். அப்போது சுகமாக இருக்கும். சிறிது நேரம் கழித்து ரத்தம் கசியும், எரிச்சல் எடுக்கும். அப்போது பாவம், அவன் துடிப்பான். என்ன செய்வது, சிரங்கு பிடித்தவர் நிலையில் சிலர் இருக்கிறார்கள்.

பல்டி என்றும் பணிந்தது என்றும் தலையைப் பிய்த்துக் கொண்டு தலைப்பு போடுகிறார்கள். உண்மை தெரிந்தும் ஊமையாகி விடுகிறார்கள். அவர்களுக்காக அனுதாப்படுவோம்.

கேள்வி: முல்லைப் பெரியாறு அணையின் கைப்பிடிச் சுவரில் சேதம் ஏற்படுத்திய செய்தியை அறிந்ததும், உடனடியாக பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியிருந்த போதிலும் நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே?

கருணாநிதி: தமிழக முதல்வர் உடனடியாக பிரதமருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்றும், பேச்சுவார்த்தை முறையாக இல்லாததால் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார் என்றும், அதுதான் பாராட்டுக்குரியது என்றுமா ஜெயலலிதா அறிக்கை விடுவார்?

எதிர்க்கட்சித் தலைவர் குறை சொல்லித்தானே ஆக வேண்டும். வேறு எதுவுமே அவரால் சொல்ல முடியாத நிலையில் இதையாவது சொல்லிக் கொண்டிருக்கட்டுமே என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கே:- ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கில் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே, அந்த வழக்கு எந்த ஆண்டிற்கான வருமானம் குறித்தது என்பதை கூற முடியுமா?

ப:- 1993-94 ஆம் ஆண் டுக்கான, அதாவது 13 ஆண்டு களுக்கு முந்தைய ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வருமான வரி துறை கிரிமினல் நடவடிக்கையை 1996ம் ஆண்டு, பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. `

அதன் பின்னர் 1991-92 மற்றும் 1993ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே ஒருமுறை உச்ச நீதிமன்றம் வரை சென்று 3 மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும், அன்றாடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதே வழக்கில்தான் தற்போது அதே உச்ச நீதிமன்றம் சென்னை நீதி மன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கிற்கு தடை விதித்துள்ளது.

Posted in ADMK, Disproportionate assets, DMK, Entrance Tickets, Fares, Jail, Jayalalitha, JJ, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MDMK, Movie Theater, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Mullai Periyar, Murasoli, POTA, Prison, Property, Q&A, Sasikala, TADA, Ticket pricing, Vai Gopalasami, Vai Kopalsamy, VaiGo, VaiKo | Leave a Comment »

Arasu Pathilgal – Kumudam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

தி.ராஜு,
திருநெல்வேலி டவுன்.

தமிழ்நாடு இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறிக்கொண்டு வருவது போல் தெரிகிறதே?

கரெக்ட். சிக்குன் குனியா பரவுவதில்தானே?

 ஜி.மாரியப்பன்,
சின்னமனூர்.

நமீதா போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் காட்சியை டி.வி.யில் பெரும் பரபரப்பு செய்தியாகக் காட்டியது அவசியமா?

நீர் பார்த்தீரா இல்லையா? அதைச் சொல்லும் முதலில்.

 இரா. பார்த்திபன்,
வயலூர்.

சமீபத்தில் படித்த புத்தகம்?

1973ம் வருடம் வெளியிடப்பட்ட, அ.தட்சிணாமூர்த்தி என்கிற தமிழ்ப்பேராசிரியர் எழுதிய ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்கிற அரிய புத்தகம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வரலாறும் வாழ்க்கையும் எப்படி சிறப்புற்று இருந்தன என்பதை உணர்ச்சிவசப்படாமல், இலக்கிய, தொல்லியல் ரீதியாக அழகாக விவரிக்கும் புத்தகம்.

  • போர் முறைகளில் தமிழர்கள் கொண்டிருந்த நேர்மை,
  • புதிய கண்டுபிடிப்புகளில் காட்டிய ஆர்வம் (முக்கியமாக உணவு, உடை, வாத்தியங்கள் தயாரிப்பில்),
  • வாணிபத்தில் இருந்த உலகநோக்கு,
  • புலவர்களை மதித்த பணிவு,
  • உழவுக்குத் தலை வணங்கிய மாண்பு,
  • இறந்தவர்களைப் பெருமைப்படுத்தும் நன்றி மறவாமை,
  • வானிலையிலும்,
  • மருத்துவத்திலும்,
  • விருந்தோம்பலிலும்,
  • இலக்கியத்திலும்,
  • ஆன்மிகத்திலும்,
  • ஆடற் பாடல், இசைக் கலையிலும்,
  • தத்துவத்திலும்,
  • கலாசாரத்திலும் வாழையடி வாழையாக தமிழும், தமிழர்களும் செழித்தோங்கி வளர்ந்ததைப் படிக்கப் படிக்க, ஆஹா, எத்தனை சிறப்புமிக்க வரலாற்றில் நாம் பிறந்திருக்கிறோம் என்கிற செருக்கே வந்துவிட்டது. இத்தனை மகத்தான பின்னணியை எப்படி இளம் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பது என்கிற பிரமிப்பும் வந்தது.

ச.சிவகாமி சுந்தர்,
சென்னை_94.

சென்னையில் பெருகி வரும் டிராஃபிக் ஜாமைச் சமாளிக்க ஒற்றைப் படை எண் வாகனங்களை ஒரு நாளும் இரட்டைப் படை எண்ணுள்ள வாகனங்களை மறுநாளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாமே?

எனக்கு முன் ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை. உங்கள் கேள்வியைப் படிக்கும்போது தாங்கள் முற்பிறவியில் துக்ளக் மகாராஜாவாகப் பிறந்திருப்பீர்களோ என்று தோன்றுகிறது.

Posted in A Thatchinamoorthy, Arasu, Books, Chikun Kunya, Culture, Kumudham, Namitha, Q&A, Tamil, Thuglaq | Leave a Comment »