Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Jeya’ Category

Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2008

நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்துப் பேசினாலும் பிர சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்ற மாகும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்திலும் வெளியி லும் இடைவிடாது கூறி வருகிறார்.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன் றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புக ளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக ஜெயலலிதா விளங்குகிறார். ஜெயலலிதா வால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாள்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒரு வன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகி றேன்.

13.4.2002 அன்று சென்னை ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் மற்றும் நண்பர்களும் பிர பாகரனின் நேர்காணல் குறித்துப் பேசினோம்.

ஆனால் 26.4.2002 அன்று முதல்வர் ஜெயலலிதா தலை மைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பின்வருமாறு அறிவித்தார். “”விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்த பின்னர் சென்னையில் ஆனந்த் திரையரங்கத்தில் கூட்டம் நடத்தப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அன்றைக்கு சட் டவிரோதமாக எந்த நடவடிக்கையிலும் கூட்டம் நடத்திய வர்களோ அல்லது பேசியவர்களோ ஈடுபடவில்லை என்று அரசுக்குத் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

(தின மணி 27-4-2002) கூட்டம் நடந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி. அதற்கு 13 நாள் கள் கழித்து ஏப்ரல் 26-ஆம் தேதி இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசியதற்காக எங்கள் மீது ஆகஸ்ட் முதல் தேதி பொடா சட்டம் ஏவப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஜெயலலிதா அரசு சிறையில் அடைத் தது. ஆனந்த் திரையரங்கக் கூட்டத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை என அறிவித்த முதலமைச்சரே அது சட்டவிரோதமான கூட்டம் என்று கூறி எங்களைச் சிறையில் அடைக்கிறார்.

பொடா சிறையில் ஓராண்டு காலம் நாங்கள் இருந்த பிறகு எங்களைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டு மென்று பொடா நீதிமன்றத்தில் மூன்று முறை நாங்கள் தாக்கல் செய்த மனுக்களை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத் தில் பிணை கேட்டு நாங்கள் மேல்முறையீடு செய்தோம்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் பொடா சட்டம் குறித்து ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வை.கோ. மற்றும் தோழர்கள், நெடுமாறன் மற்றும் தோழர் கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம், மனித உரி மைகள் மற்றும் சமூக நீதிக்கான அனைத்திந்திய முன்னணி, ஜே.சாகுல் அமீது ஆகியோர் பெயரில் தாக்கல் செய்யப் பட்ட 5 மனுக்கள் குறித்து 16.12.2003 அன்று உச்ச நீதிமன் றம் விசாரித்தது.
இந்திய அரசு சார்பில் வாதாடிய அடர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி, “”திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசி யதும் அமைச்சர் கண்ணப்பன் விடுதலைப் புலிகளை ஆத ரித்துப் பேசியதும் பொடா சட்டத்தின் கீழ் வராது” என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் எஸ். இராசேந்திரபாபு, ஜி.பி. மாத்தூர் அடங்கிய ஆயம் நடத்திய விசாரணையின் இறுதியில் தங்கள் தீர்ப்பில் பின்வ ருமாறு அறிவித்தனர். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தெரிவித்து வெறுமனே பேசுவது பொடா சட்டப் படி குற்றம் ஆகாது. பொடா சட்டத்தின் கீழ் கைது ஆகி ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை வழக்க மான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம்” என்று குறிப்பிட்டனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து 3-1-2004 அன்று தினமணி எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது. “”நமது நாட் டில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றுக்கு வாய் மொழி ஆதரவு தெரிவித்து பேசுவதற்காகப் பொடா சட் டத்தை ஒருவர் மீது பயன்படுத்தக் கூடாது என்ற பொருள் செறிவு உடைய விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்து தனது கனிந்த விசாலமான சட்டநெறிப் பார்வையைப் புலப் படுத்தியது.” நாங்கள் சிறைப்பட்ட ஓர் ஆண்டிற்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எங்களுடைய பிணை மனுவை நீதியரசர் சிர்புர்கர், தணிகாசலம் ஆகியோர் அடங் கிய ஆயம் விசாரித்தது. அதன் பிறகு அவர்கள் அளித்த தீர்ப் பில் பின்வருமாறு கூறினார்கள். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தருவது, வெறுமனே பேசுவது பொடா சட் டப்படி குற்றம் ஆகாது என்றும் பொடா சட்டத்தில் கைதாகி ஓர் ஆண்டிற்கு மேலாகச் சிறையில் இருப்பவர் களை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நெடுமாறன் உள்பட நான்கு பேரை பிணை யில் விடுதலை செய்கிறோம்” என்று அறிவித்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் எனது பேச்சு முழுவதையும் ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து தரச்சொல்லி நீதியரசர் சிர்புர் கர் முழுமையாகப் படித்திருக்கிறார். அதைப் பற்றியும் நீதி மன்றத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “”பிர பாகரன் தந்த பேட்டியைப் பற்றித் தான் தனது பேச்சில் முழுக்க முழுக்க நெடுமாறன் பேசியிருக்கிறார்.
பிரபாகரன் பேட்டி பற்றிய பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் பொடா வழக்கு போடுவதாக இருந்தால் அந்தப் பேட் டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், செய்தியை வெளி யிட்ட பத்திரிகைகள் என எல்லோர் மீதும் வழக்குப் போட் டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை” என்று அர சுத் தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி அவர் கேட்டார்.

“”வெறுமனே கூட்டத்தில் பேசினார் இளைஞர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் நெடு மாறன் பேச்சைக் கேட்டு இந்த ஊரில் வன்முறையில் ஈடு பட்டனர். கலவரம் நடந்தது என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி யைச் சுட்டிக்காட்ட முடியுமா?” என்றும் நீதியரசர் சிர்புர் கர் கேட்டபோது அரசுத் தரப்பு வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தது.

“”நெடுமாறன் ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்திருக்கி றார். சட்டப்படி ஓர் ஆண்டில் பிணை வழங்கப்பட வேண் டும். அவர் ஓர் அரசியல்வாதி. அரசியல் கருத்துகளைக் கூட கூறக்கூடாது என்கிறீர்கள். பொடா சட்டத்தைப் பயன்ப டுத்தி தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள். இது போல் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந் தப் பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியது குறித்து நெடுமாறனின் மனு விசாரணைக்கு வரும்போது அரசு நடத்தை பற்றியெல்லாம் நாங்கள் விசாரிப்போம்” என்று காட்டமாகக் கூறினார்கள்.

பொடா சிறையில் நான் இருந்த காலகட்டத்தில் என் மீது திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஆலந்தூர், வண்ணம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்க ளில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன், பிரி வினை வாதத்தைத் தூண்டினேன் எனக் குற்றங்கள் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாவற் றிலும் எனக்குப் பிணை அளிக்கப்பட்டால் தான் உயர் நீதிமன்றம் அளித்த பிணையின்படி நான் வெளியில் வரமு டியும். ஆகவே இந்த வழக்குகளில் எனக்குப் பிணை கிடைத்து விடாதபடி தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு மேற்கொண்டது.

மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட பொடா மறு ஆய் வுக் குழுவில் நீதியரசர் உஷாமித்ரா தலைவராகவும், கே.இராய்பால், ஆர்.சி.ஜா ஆகியோர் உறுப்பினர்களாக வும் இருந்து தமிழக பொடா வழக்குகள் குறித்து விசார ணையை நடத்தினார்கள். 15.4.2005 அன்று அவர்கள் அளித்த தீர்ப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் கள்.
“”13.4.2002 அன்று ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்கள் அரசியல் ரீதியா னவை. பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதோ அல்லது ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு வாயினால் ஆதரவு தெரிவிப்பதோ தடை செய் யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவதாகாது. மக்கள் பிரச் சினைகளுக்காகச் ஜனநாயக ரீதியில் போராடுவதாகவும் நெடுமாறன் தனது பேச்சில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் ஈழத் தமி ழர்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல உல கெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு விடிவைக் கொண்டு வரும் போராட்டமாக அவர்கள் அதைக் கருதுகிறார்கள்.

எனவே, இந்தப் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது தங்கள் வாழ் நாள் கடமை என்றும் அதற்காக அடக்குமுறைகளைச் சந் திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் படும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோ அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோ அதைப் புரிந்து கொள்ளுமாறு மற்றவர்களை வேண்டுவதோ பயங்கரவாதம் ஆகாது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக் கைக்கு ஆதரவு தருவதாகாது. எனவே, பொடா சட்டம் 21- வது பிரிவின் கீழ் அவர்களின் பேச்சுக்களைக் குற்றமாகக் கரு தமுடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சுக்களின் விளைவாக எத்தகைய வன்முறையும் எங்கும் நிகழவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தோற்றம் (டழ்ண்ம்ஹ ஊஹஸ்ரீண்ங்) எதுவும் இல்லை. பொடா நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் திரும்பப் பெற்ற வையாகக் கருதப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட 5 நபர்களுக்கும் எதிராக முன்தோற்றம் எதுவும் இல்லையென பொடா மறு ஆய்வுக்குழு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, பொடா சட்டத்தின் பிரிவு 2(3) ஆகியவற்றின் கீழ் உடனடி யாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அர சுக்கு இக்குழு ஆணை பிறப்பிக்கிறது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை மிகத் தெளிவாகவும் விளக்கமாக வும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசு வது பொடா சட்டப்படி குற்றம் இல்லை என்பதை தெளிவு படுத்திய பிறகும் முதலமைச்சராக இருந்த ஒருவர் எதையும் மதிக்காமல் திரும்பத் திரும்ப தவறான வாதங்களையே முன் வைப்பது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.

பொடா சட்டத்தை முன்தேதியிட்டு, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இச்சட்டத்தினால் பாதிக் கப்பட்டவர்கள், சட்ட வல்லுநர்கள், மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்திலும் பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட் டிருந்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற் றிய பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொடா சட்டத்தைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தியது. அது மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியை யும் பறித்ததுபோல் பொடா சட்டத்தை முன்தேதியிட்டு திரும்பப் பெறப்போவதில்லை என்றும் பொடா சட்டத் தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிதிகளின் படியே நடத்தப்படும் என்று முடிவு செய்தது. நாடெங்கும் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் பொடா சட்டத் தைத் திரும்பப் பெற முடிவு செய்து மன்மோகன்சிங் அரசு அதிலுள்ள பல கடுமையான பகுதிகளை இந்திய குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தில் இணைத்துவிட்டது. பொடா சட் டம் திரும்பப் பெறப்பட்ட போதிலும் அதனுடைய கொடும்கரங்கள் மறையவில்லை.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டு, தி.முக. ஆட்சி பீடம் ஏறிய பிறகும் கூட பலரின் மீதுள்ள வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க பொதுச் செய லாளர் வைகோ மற்றும் அவரது கட்சி தோழர்கள் எட்டு பேர், நான் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தோழர்கள், நக்கீரன் கோபால் மற்றும் முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 21 பேர் ஆக மொத்தம் 42 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். இவர்களில் நான் உட்பட எங்கள் 4 பேர் மீது உள்ள பொடா வழக்கு மட்டுமே தி.மு.க. ஆட்சி வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதுவும் பொடா மறு ஆய் வுக் குழு ஆணையை ஏற்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் அது நடந்தது.

ஆனாலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், வைகோ மற்றும் தோழர்கள், நக்கீரன் கோபால், முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த
… (Sunday Dinamani)
——————————————————————————————————————————————————————

உண்மையை மறைக்க முயல்கிறார் கருணாநிதி: பழ.நெடுமாறன் பதில்

சென்னை, மார்ச் 17: பொடா வழக்குகள் தொடர்பாக, நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், உண்மையை மூடி மறைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

என்னுடைய கட்டுரையில் பொடா சட்டத்தில் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை விவரமாகக் கூறியிருந்தேன். இறுதியாக, முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 பேர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், “42 பேரில் 4 பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு மீதி 21 பேர் தானா என்பதை அவரது கட்டுரையை படித்தவர்களே பார்த்துச் சிரிப்பார்கள்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறார். எந்தப் பிரச்னையையும் ஆழமாக அலசிப் பார்க்காமல் நுனிப்புல் மேயும் கலை அவருக்கே உரியது.

பொடா வழக்குகளை தமிழக அரசே நேரடியாகத் திரும்பப் பெற்று விட முடியாது. வழக்குகளை திரும்பப் பெறுவதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிறகும், நீதிமன்றத்தில் அவை நிலுவையில் இருப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என்று முதல்வர் உண்மைக்கு மாறான தகவலைக் கூறியிருக்கிறார்.

வைகோ மற்றும் தோழர்கள் வழக்கில் மறு ஆய்வுக் குழுவின் ஆணைப்படி, அரசு வக்கீல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக கொடுத்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்தது.

வைகோ சார்பில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அளித்த முறையீடு நிலுவையில் உள்ளது. எனவே, திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை அளித்தால் வைகோ மீதான வழக்குகள் முடிவுக்கு வரும். ஆனால், இதைச் செய்ய திமுக அரசு முன்வரவில்லை.

முன்தேதியிட்டு, பொடா சட்டம் திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அத்தனையும் முடிந்திருக்கும். மத்திய அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் இதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இதற்கு நேர்மாறாக மத்திய அரசு நடந்து கொண்டது.

பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தான் பாடுபட்டதாகக் கூறும் முதல்வர், தான் பதவியேற்ற பிறகும் அதைச் செய்யவில்லை என்பதுதான் என் கேள்வி.

உண்மைகளை தெரிந்து இருந்தும் அவற்றை மறைப்பதற்கு செய்யப்படும் முயற்சியாக இருக்க வேண்டும் அல்லது நிர்வாகம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆத்திரப்பட்டு அவதூறுகளை அள்ளி வீசுவதால் உண்மைகளை மறைத்துவிட முடியாது.

Posted in Arrest, Bail, BJP, Bonds, Congress, Correctional, Criminal, Eelam, Eezham, expression, Freedom, Gopal, Imprison, Independence, Inquiry, Jail, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Law, Liberation, LTTE, MDMK, Misa, MuKa, Nakkeeran, Nakkiran, Nedumaran, Order, POTA, Prison, Sri lanka, Srilanka, TADA, Tigers, VaiGo, VaiKo, Veerappan | 2 Comments »

Mu Ka Azhagiri & State-owned Arasu Cable TV Corporation Ltd: Multi System Operator (MSO) – Television network for Chennai

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2008

கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்குகிறார் அழகிரி?

சென்னை, பிப். 14: முதல்வர் கரு ணாநிதியின் மகன் அழகிரி, சன் டி.வி.யின் “எஸ்.சி.வி.’ நிறுவனத் தால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆப ரேட்டர்களுடன் முக்கிய ஆலோ சனை நடத்தினார்.

இதையடுத்து, அழகிரி கேபிள் டி.வி. எம்.எஸ்.ஓ. தொடங்கக் கூடும் என்று யூகங்கள் எழுந்துள்ளன.

இந்தக் கூட்டத்தில், கலைஞர் டி.வி. நிர்வாகிகள் சரத்ரெட்டி, அமிர்தம், தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க நிர்வாகி கள், கேபிள் ஆபரேட்டர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

சன் “டி.டி.எச்.’, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆப ரேட்டர்களை அழகிரி அணி சேர்ப்பதையடுத்து, அவர்களை வைத்து புதிதாக எம்.எஸ்.ஓ தொடங்குவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

எஸ்.சி.வி.க்கு போட்டியாகவே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அந்த நிறுவனத் துக்காக எம்.எஸ்.ஓ.க்களைக் குத்த கைக்குக் கோருவதில், தகவல் தொடர்பு சட்டத்தின்படி சிக்கல் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் சென்னையில் எம்.எஸ்.ஓ. தொடங்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், மற்ற இடங்களில் அரசு நேரடியாகவே கேபிள் டி.வி. இணைப்பு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எஸ்.சி.வி.யால் பாதிக்கப்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை அழ கிரி அணி சேர்க்கத் தொடங்கியி ருக்கிறார். அழகிரி, கலைஞர் டி.வி. நிர்வாகிகள், கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டம் இதன் பின்னணியில் முக்கியத் துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக பேசிய அழகிரி, “கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் முக்கிய கோரிக்கைகளைத் தெரிவிக்கு மாறு’ கூறியுள்ளார்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணா நிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வைத்த கோரிக்கை களை நிறைவேற்றினால் போதும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர் கள் தரப்பில் பதில் கூறப்பட்டுள் ளது. அதில் முக்கியக் கோரிக்கை என்ன என்று அழகிரி கேட்ட தற்கு, “கேபிள் டி.வி. தொழிலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்!’ என்று கேபிள் ஆபரேட்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதுகுறித்து முதல்வரிடம் பேசு வதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும், பதிலுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் எங்க ளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்றும் அழகிரி கேட் டுக்கொண்டதாகக் கூறப்படுகி றது. சென்னை அடையாறில் உள்ள “எஸ்தெல்’ ஹோட்டலில் மாலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே அழகிரி பங்கேற்றுள்ளார்.

அதன் பிறகு, அழகிரியும், அமிர் தமும் புறப்பட்டுச் சென்றுள்ள னர். கலைஞர் டி.வி. தலைமை செயல் அதிகாரி சரத்ரெட்டி தலைமையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களில் அழ கிரி பங்கேற்க உள்ளதாகத் தெரிகி றது. சில நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த கேபிள் டி.வி. விவகாரம், இந்தக் கூட்டத்தைய டுத்து மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

————————————————————————————————————————-

கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா?: தயாநிதி மாறன்

சென்னை, பிப். 16: “எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôரின் வேலையா?’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

கேபிள் ஆபரேட்டர்கள் மிரட்டப்படுவது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை சனிக்கிழமை அளித்தார்.

அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் துரைராஜ் தலைமையில் எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை, “ஹாத்வே’ (எம்.எஸ்.ஓ நிறுவனம்) நிறுவனத்துக்கு மாற வேண்டும் என்று போலீஸôர் மிரட்டி வருகின்றனர்.

இதற்காக வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்களை போலீஸôர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸôர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளிப்பதற்காக வந்தேன். ஆனால் கமிஷனர், கூடுதல் கமிஷனர் யாரும் இங்கு இல்லை.

கேபிள் ஆபரேட்டர்கள் நள்ளிரவில் கைது செய்யப்படும் சம்பவம் முதல்வர் கருணாநிதிக்கு தெரியாமல் நடக்கிறது. தெரிந்தால் இதுபோன்று நடப்பதற்கு அவர் அனுமதிக்கமாட்டார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்: சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன்பு “ஹாத்வே’ நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக, சென்னை போலீஸôர் இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு துரைராஜ் தலைமையில் போலீஸôர் கைது மற்றும் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

“ஹாத்வே’யுடன் சேரவில்லையென்றால் பொய் வழக்கு போடுவதாக அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’யுடன் சேருமாறு மிரட்டுவதுதான் போலீஸôர் வேலையா?

இதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தெரியும். ஆனால் பெயரை வெளியிட விரும்பவில்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார் தயாநிதி மாறன்.

————————————————————————————————————
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன பயன்?: சரத்குமார்

சென்னை, பிப். 18: “அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விளக்க வேண்டும்’ என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

எஸ்.சி.வி. கேபிள் ஆபரேட்டர்களை “ஹாத்வே’ நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும்படி மிரட்டுவதும், அதற்கு காவல்துறையைப் பயன்படுத்துவதும் கடந்த சில நாள்களாக நடந்து வருகிறது.

எஸ்.சி.வி., ஹாத்வே என்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்குள் தொழில் போட்டி இருக்கலாம். இதில் ஆளும் கட்சி, ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட நினைப்பது தவறு.

தனியார் நிறுவன போட்டிகளால் பொதுமக்களுக்கும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்காக, அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விரைவில் கேபிள் இணைப்புகள் கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை தமிழகத்தில் அனைத்துத் தொழில்களிலும் கடைப்பிடிக்கப்படுமா?

அரசு கேபிள் டி.வி. நிறுவனம் குறிப்பிட்ட மாநகராட்சிகளில் மட்டும் தொடங்கக் கூடாது. அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிரானதாக மாறிவிடும். தமிழகம் முழுவதும் தொடங்கப்பட வேண்டும்.

பிற தனியார் நிறுவனங்களில் இணைந்துள்ள கேபிள் ஆபரேட்டர்களை, அரசு கேபிள் நிறுவனத்தில் இணைப்புகள் பெறுமாறு மிரட்டக் கூடாது.

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும்.

—————————————————————————————————————-
ஜூனில் அரசு கேபிள் டிவி

சென்னை, பிப். 19: புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.எஸ்.ஓ. சேவையை வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

தமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினரும் கேபிள் டி.வி. கார்ப்பரேஷனும் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்திய கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

எம்.எஸ்.ஓ. (மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர்) முறை என்பது செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி அலைவரிசை சேவையைப் பெற்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு விநியோகிப்பதாகும்.

இந்த சேவை உள்ள இடத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை இருக்கும். அதற்கு உபகரணங்கள் தேவை.

எம்.எஸ்.ஓ. சேவை முதல் கட்டமாக கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும்.

பின்னர் படிப்படியாக அனைத்து இடங்களுக்கும் இச்சேவை விரிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் எம்.எஸ்.ஓ. சேவை திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சை ஆகிய நகரங்களில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடங்குவது குறித்த அறிவிப்பு இல்லை.

ஏற்கெனவே, தனியார் அலைவரிசை சேவையை வழங்கும் உரிமையை முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கு வழங்குவதற்கு வசதியாக இச்சேவையை கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் மதுரையில் தொடங்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மு.க. அழகிரி ராயல் கேபிள் விஷன் என்ற பெயரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

“”சென்னையில் இச்சேவையைத் தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது” என்று அரசு தெரிவித்துள்ளது.

“”கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான உபகரணங்கள், இதர தளவாடங்களை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்ட்டன. அந்த நடைமுறைகள் மார்ச் 12-ம் தேதி பூர்த்தியாகிவிடும். ஜூன் மாதம் சேவை தொடங்கும்” என்று தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொதுநல சங்கத் தலைவர் ஷகிலன் தெரிவித்தார்.

கேபிள் டி.வி. சேவையில் இருப்போரின் வரிச் சுமையைக் குறைக்கவேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அச்சுறுத்துவதாக வந்த புகார்கள் குறித்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் பிரஜேஷ்வர் சிங், உள்துறச் செயலர் எஸ்.மாலதி ஆகியோர் பங்கேற்றனர்.

ஷகிலன், பொதுச் செயலர் கோகுல்தாஸ் உள்ளிட்டோரும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத் தலைவர் காயல் ஆர்.இளவரசு, பொதுச் செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

——————————————————————————————————-

———————————————————————————————————————-
“சன்’னை முடக்க “சன்’னால் முடியுமா?

நமது சிறப்பு நிருபர் – Dinamani

சென்னை, பிப். 24: அரசியல் செல்வாக்கால் அவ்வப்போது ஊட்டம் பெறும் எம்.எஸ்.ஓ.க்கள், கேபிள் ஆபரேட்டர்களை விடாமல் துரத்துகின்றன.

பல இடங்களில் அதிகார வர்க்கத்தால் தங்களுக்கு மிரட்டல் வருவதாகக் கூறும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மிரட்டல் பாணி முறையை தற்போது “ஹாத்வே’ கையில் எடுத்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.

“மல்டி சிஸ்டம் ஆபரேட்டர்’ (எம்.எஸ்.ஓ.) என்ற முறையை சென்னையில் முதல் முதலில் “சிட்டி கேபிள்’ நிறுவனம் 1998-ல் அறிமுகப்படுத்தியது.

வந்தது “ஹாத்வே’:

1999-ல் எம்.எஸ்.ஓ. உலகில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. வியாபார ஆங்கில வார இதழ் நடத்தும் நிறுவனத்திடம் இருந்து எம்.எஸ்.ஓ. நிறுவனத்தை வாங்கியது “ஹாத்வே’. இது வட இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமானது.

“90 சதவீதம் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடம் இருப்பதாகவும், மீதி பத்து சதவீதத்தை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

சிதைந்து போன “ஹாத்வே’:

1999-களில், “சன்’ நெட்வொர்க் நிறுவனம் டி.வி. தொழிலில் புகழ் பெற்று விளங்கினாலும், எம்.எஸ்.ஓ. தொடங்கும் திட்டம் என்பது அவர்கள் மூளையில் உதித்தது அல்ல.

ஆட்சி, அதிகாரம் என அனைத்தும் கைவசம் இருக்க, எம்.எஸ்.ஓ. தொழிலில் இறங்கியது “சன் நெட்வொர்க்’. தன்னுடைய கட்டுப்பாட்டு அறையின் ஜாகையை சென்னையின் மையப்பகுதிக்கு மாற்றியது. மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டு அறையை வேகமாக அமைத்தது.

ஆட்சி, அதிகாரங்களின் ஆசியோடு, 1999-ம் ஆண்டின் இறுதிக்குள் சுமங்கலி கேபிள் நிறுவனம் வேரூன்றி, அசைக்க முடியாத ஆலமரமாக மாறியது. வெறும் மிரட்டலோடு இருக்காமல், தொழில்நுட்ப ரீதியாகவும் சுமங்கலி தன்னை பலப்படுத்திக் கொண்டது.

வந்தார் பாஸ்கரன்:

2001-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கேபிள் டி.வி. தொழிலிலும் எதிரொலித்தது. சுமங்கலி கேபிள் நிறுவனத்தில் இருந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் பாஸ்கரன். இவர், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர், சசிகலாவின் உறவினர்.

“”ஹாத்வே’ நிறுவனத்திடம் இருந்து பிரிந்து போனவர்களை மீண்டும் இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். சில சமயங்களில் சுமங்கலி கேபிள் நிறுவனத்தினர் மேற்கொண்ட பாணியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார். மீண்டும் ஆட்சி, அதிகாரம் வேறொரு ரூபத்தில் வந்து தாக்க வேறு வழியின்றி சுமங்கலியிடம் இருந்து பலர் “ஹாத்வே’-க்குச் சென்றனர். கோபத்தால் சிவந்த சுமங்கலி தனது சேனல் பேக்கேஜை நிறுத்தியது” என்றார் தென் மாவட்ட கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.

தொடர் நாடகங்களால் மக்கள் மனதில் நிலைத்து விட்ட சன் டி.வி. தங்கள் இல்லங்களில் தெரியாமல் போனால் இல்லத்தரசிகள் சும்மா இருப்பார்களா? கேபிள் ஆபரேட்டர்களை நச்சரிக்கத் தொடங்கினர். இதனால், வேறு வழியின்றி மீண்டும் சுமங்கலி நிறுவனத்திடம் சரண்டர் ஆயினர் கேபிள் ஆபரேட்டர்கள்.

அதற்குள்ளாக, தடம் மாறிய கேபிள் ஆபரேட்டர்களுக்கு “செக்’ வைக்கும் வகையில் அந்தப் பகுதிகளில் மாற்றாரை கொம்பு சீவி விட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம்.

“”அதையும் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் சுமங்கலியிடமே வந்து சேர்ந்தோம். இந்த நிலையில், “ஹாத்வே’ நிறுவனத்தில் ராஜாவாக இருந்த பாஸ்கரன் ஒரு கட்டத்தில் அதைக் கைப்பற்ற நினைத்தார். அதற்குள் அரசியல் நெருக்கடி காரணமாக கட்சியிலிருந்தும், அதிகாரத்தில் இருந்தும் தூக்கி எறியப்பட்டார். இதனால், “ஹாத்வே’யில் அரசியல் சாயம் சற்று மறைந்தது” என்றார் சென்னையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவர்.

இதன் பிறகு, மூன்று முதல் நான்கு சதவீத கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே “ஹாத்வே’யிடம் இருக்கின்றனர்.

அன்று அவர்…இன்று இவர்…

வளர்த்த கடா மார்பில் பாய்வதா…? என சிலிர்த்து எழுந்துள்ள ஆளுங்கட்சி தரப்பு, சுமங்கலிக்கு எதிரான வேலைகளைத் தொடங்கி விட்டது.

“ஒன்றுக்கு தீனி போட்டு வளர்த்தால், மற்றொன்று தானாக அழியும் என்கிற ரீதியில் சுமங்கலியை ஒடுக்க “ஹாத்வே’ நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் ஆளும் கட்சி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வரின் மகன் அழகிரி.

அந்தக் கூட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும், பிற கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கேபிள் ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில், ஹாத்வே நிறுவனத்தை வளர்த்துவிடும் பணியில் பாஸ்கரன் ஈடுபட்டார். தற்போது,சுமங்கலியை ஒடுங்குவதற்காக, அழகிரி அந்த வேலையை கையில் எடுத்துள்ளதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வட்டாரத்தில் தகவல் பரவிக் கிடக்கிறது.

முடக்கும் வேலை சாத்தியமா?:

“ஹாத்வே’ கேபிளில் சன் டி.வி. தெரியாதபோது தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லையே என மக்கள் ஏங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. சன் டி.வி.யின் ஜெராக்ஸ் காப்பி போன்று செயல்படுகிறது கலைஞர் டி.வி.

நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என அனைத்தும் “புத்தம் புதிய காப்பி’ வகைகள்தான். எனவே, சன் டி.வி. தெரியாவிட்டாலும் இருக்கவே இருக்கிறது கலைஞர், விஜய், ஜெயா, ராஜ் டி.வி.க்கள். பெரும்பாலான மக்கள் அவற்றுக்கு மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயம், வீடுகளுக்கு நேரடி கேபிள் ஒளிபரப்பு முறையும் (டி.டி.எச்.) பிரபலமாகி வருகிறது. கேபிள் டி.வி. யுத்தத்தில் மக்கள் வெறுப்படைந்தால் டி.டி.எச். முறைக்கு மாற வாய்ப்பு உண்டு. அப்படி மாறினால் அங்கு “சன் நெட்வொர்க்’ வெற்றி பெறும். இதற்குக் காரணம், டி.டி.எச். வசதியை “சன்’ நிறுவனமும் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.

“ஹாத்வே’யுடன் கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கேபிள் வயர்களை அறுத்து பல உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது சுமங்கலி கேபிள் நிறுவனம். தற்போது, அதிகார பலத்தோடு “ஹாத்வே’ களமிறங்கி, சுமங்கலியின் கேபிள் வயர்களை அதன் பாணியிலே அறுத்தெறிய முற்பட்டால் சுமங்கலி கேபிள் நிறுவனமோ, சன் டி.வி.யோ பெரிய பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பில்லை. சன் டி.வி.யின் நேயர்கள் டி.டி.எச்.க்கு மாறிவிடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

எதிர்க்கட்சிகளின் ஆசியோடு “ஹாத்வே’ கேபிளையும், அந்த நிறுவனத்தையும் காலி செய்யும் வேலையில் “சுமங்கலி’ இறங்கினால், பெரும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு அது வழிவகுக்கும்.

இதற்கெல்லாம் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே அனைவரது மனதிலும் எழுந்துள்ள கேள்வி.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Arasu, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, cable, Chennai, Dayanidhi, Gossips, hathway, Jaya, Jeya, JJ, Kalainjar, Kalanidhi, Kanimozhi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Maran, Media, MK, MSO, MuKa, Multi System Operator, network, Rumors, Sasikala, satellite, SCV, Stalin, Sumangali, Sun, Telecom, telecommunications, Television, TV | 1 Comment »

ADMK Party general council Conference: Jayalalithaa announces formation of youth brigades

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2008

பொதுக் குழுவா..?மாநாடா..?

அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. உடன், (வலமிருந்து) கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் இ.மதுசூதனன், அரசியல் ஆலோசகர் பொன்னையன், எம்ஜிஆர் மன்றச் செயலாளர் டி.ஜெயக்குமார்.

சென்னை, பிப். 13: சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு – செயற்குழுக் கூட்டம், பிரம்மாண்ட மாநாட்டைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது பேச்சிலேயே இதைக் குறிப்பிட்டுப் பேசினார். “கூட்டத்துக்கு வரும் வழியெங்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த போது இது மாநாடா? அல்லது பொதுக் குழுவா? என்ற வியப்பை ஏற்படுத்தியது’ என்றார்.

உண்மை தான். கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் செல்லும் வழியெங்கும் வாழைமரத் தோரணங்கள், டிஜிட்டல் போர்டுகள், கட்சிக் கொடி என பூந்தமல்லி நெடுஞ்சாலையே விழாக் கோலம் பூண்டிருந்தது.

மாநாடு நடைபெற்ற திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில், பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காலை 10.10 மணிக்கு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு ஜெயலலிதா வந்தார். அங்கு அவருக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கேரளப் பெண்கள் போல இளமஞ்சள் நிற சேலை அணிந்த இளம் பெண்கள் வரிசையாக நின்று வரவேற்றனர்.

தாரை, தப்பட்டைகள் முழங்க, ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற பலூன்கள் வானில் ஏராளமாக பறக்க விடப்பட்டன.

ADMKசென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் பொதுக் குழு-செயற்குழுக் கூட்டத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர்  ஜெயலலிதாவை வரவேற்கத் தயாராக நிற்கும் குதிரைப் படையினர்.

50-க்கும் மேற்பட்ட குதிரைகள் அணிவகுத்து நின்று ஒருபுறம் வரவேற்பு கொடுக்க, மறுபுறம் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற்றன. இதுதவிர, மிக்கி மவுஸ், டொனால்ட் டக் கார்ட்டூன் சித்திரங்கள் போன்ற உடைகளை அணிந்த கலைஞர்களும் அரங்கத்தின் முன்பகுதியில் நின்று வரவேற்றனர்.

கொண்டாட்டத்தின் முன்னோட்டமோ? வரும் பிப். 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. ஆனால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வைத்த பேனர்களும், கட் – அவுட்களும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லும் வகையில் வைக்கப்பட்டு இருந்தன. JJ Jayalalithaகொக்கிலி கட்டை ஆட்டம் ஆடி, ஜெயலலிதாவை வரவேற்ற அதிமுக தொண்டர்கள்.

கூட்டத்துக்குப் பின், கட்சியினரின் பசியைப் போக்க உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சைவம், அசைவ உணவுகள் பரிமாற தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

மதுரவாயல் செல்லும் சாலை ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலால் திணறும். இதில், புதன்கிழமை மாநாடு போல நடைபெற்ற அதிமுக செயற்குழு – பொதுக் குழுக் கூட்டத்துக்கு அதிகம் பேர் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலை நெடுங்கிலும் கட்சியின் தொண்டர்கள் வலம் வந்தபடி இருந்தனர். கூட்டம் முடிந்த பின்பு, பஸ், ஆட்டோ கிடைக்காதவர்கள் பல கிலோ மீட்டர் நடந்து சென்று கோயம்பேடு பஸ் நிலையத்தை அடைந்தனர். Elephants Conference
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.

போக்குவரத்து நெரிசல்:

கோயம்பேடு- மதுரவாயல்- வானகரம் செல்லும் சாலையில் காலை 8.45 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், இச் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்தப் போக்குவரத்து நெரிசலால் நீண்ட தூரத்துக்குச் சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

இதே போல பொதுக்குழுக் கூட்டம் முடிந்தபின் ஜெயலலிதா புறப்பட்டுச் சென்ற பின்னரும் நீண்ட நேரம் வாகன நெரிசல் நீடித்தது.

சசிகலா வருகை:

ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் இக் கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக் குழுக் கூட்டம் செல்லும் வழியில் போலீஸôரின் கெடுபிடி ஏதும் இல்லை.

செயற்குழு-பொதுக்குழு கூட்டத்துக்கு வராமல் பரபரப்பை  ஏற்படுத்திய சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.வி.சேகர்,  திடீரென கூட்டத்துக்கு வந்து பந்தியில் அமர்ந்து உணவருந்தினார்.

வந்தார், எஸ்.வி. சேகர்!

சென்னை வானகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டத்துக்கு எஸ்.வி. சேகர் தாமதமாக வந்து சேர்ந்தார்.

முன்னதாக இக் கூட்டத்துக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று கூறி, மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியை எஸ்.வி. சேகர் ராஜிநாமா செய்ய உள்ளதாக அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இதுகுறித்து எஸ்.வி. சேகர் பின்னர் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று ஜெயலலிதா புறப்படுவதற்கு சற்று முன்பு, அவரை எஸ்வி சேகர் சந்தித்துப் பேசினார்.

இதன்பின் கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து, அமர்ந்து எஸ்வி சேகர் மதிய உணவு சாப்பிட்டார்.

Posted in ADMK, AIADMK, brigades, Conference, Council, DMK, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, Jeyalalithaa, Jeyam, Opposition, Party, Sekar, Women, Youth | Leave a Comment »

Convert development process into mass movement: Narendra Modi – Thuglak magazine’s anniversary celebrations in Chennai

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

எது மதச்சார்பின்மை?: மோடி விளக்கம்

“துக்ளக்’ ஆண்டுவிழாவில் மோடியை வரவேற்கிறார் “சோ’ எஸ். ராமசாமி.

Dondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்: “துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் – 1”

சென்னை, ஜன. 14: சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மதச்சார்பின்மை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

வளர்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினால் நாடு வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ பத்திரிகையின் 38-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:

நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன்.

தமிழக அரசியலில் “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை இதன் மூலம் ஒரு ஜனநாயகத்தை அவர் நிலை நாட்டுகிறார்.

எனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்பதைவிட முதல்வருக்குரிய பணிகளை நான் செய்ய வேண்டும் என மக்கள் என்னை நியமித்துள்ளதாகவே கருதுகிறேன். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது கடமை. என்னால் முடிந்தவரை அந்த கடமையை நிறைவேற்றி வருகிறேன்.

என் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது.

முதல்வர் பதவி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பதவி. எனவே, நேர்மையான, தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறேன். அதனால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது.

நான் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அனைத்து செயலர்களையும் அழைத்து பேசியபோது, குஜராத்தில் அதுவரை நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிய வந்தது.

பெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 45 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

குஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய “ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது.

மதச்சார்பின்மை: மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.

சிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை.

குஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.

தேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

அமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.

எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.

வளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கு விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும் என்றார் மோடி.

  • தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்,
  • தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்,
  • கட்டுரையாளர் குருமூர்த்தி,
  • ஜெயா ஜெட்லி,
  • திருநாவுக்கரசர் எம்.பி.,
  • அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத்தலைவர் முருகன்,
  • மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்

மற்றும் பலர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

Posted in America, BJP, Cho, Cho Ramaswamy, Cho S Ramasamy, Civil, Criminal, dead, Editor, Ela Ganesan, Gujarat, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, Hindutva, Ila Ganesan, Islam, Jaya, Jeya, Killed, Law, MDMK, minority, Modi, Murder, Muslim, Order, Religion, Sarathkumar, Sharathkumar, Thirunavukkarasar, Thirunavukkarasu, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, US, USA, Vai Gopalasami, Vai Gopalsami, Vai Gopalsamy, Vai Kopalsami, Vai Kopalsamy, VaiGo, VaiKo, Visa | 2 Comments »

Sun TV Top 10 Movies & Rights to a Cinema – Collusion, Mixing news with monetary interests

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சர்ச்சை: டாப் 10… 20… 30..!

உலக அதிசயங்களை ஏழு என்று வகைப்படுத்தியதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் “டாப் டென்’ என்று டி.வி. சானல்கள் வரிசைப்படுத்தியதற்கும். அதாவது ஏழு, பத்து என்பதெல்லாம் பழக்க தோஷம்தான். வார வாரம் டாப் டென் நிகழ்ச்சிகள் போக ஆண்டுக்கு ஒருமுறை டாப் டென் தேர்ந்தெடுக்கிறார்கள். சன் டி.வி., இப்போது கலைஞர் டி.வி. இரண்டிலும் இந்த வரிசைப்படுத்தல் நடக்கிறது.

சன் டி.வி.யில் நடக்கிற அரசியல் சுவாரஸ்யமானது. எப்போதும் விஜய் நடித்த படத்தை மட்டுமே டாப் டென்னில் முதலாவதாகக் கொண்டுவருவது அவர்கள் வாடிக்கை. வாரப் பட்டியலிலும் அவர்தான் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பார். அப்படியில்லை என்றால் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் முதலிடத்தைப் பிடிக்கும். அல்லது ரஜினி படம் வெளிவந்தால் அது முதலிடத்தைப் பிடிக்கும்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு “ஆட்டோகிராஃப்’ தேசிய விருது பெற்ற போது அதற்கு சன் டி.வி. போதிய விளம்பரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன். விளைவு அடுத்த ஆண்டில் அவர் இயக்கிய “தவமாய் தவமிருந்து’ திரைப்படம் ஆண்டு டாப் டென்னில் இடம்பெறவேயில்லை. அடுத்து வெளியான “மாயக் கண்ணாடி’ முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஒரு வழியாக சேரன் இறங்கிவந்து சன் தரப்பில் பேசி, பிறகு அந்தச் சானலிலும் அவருடைய பேட்டி இடம் பெற்றது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்டு இப்போது பேட்டி கொடுக்க வைக்கப்பட்டிருப்பவர் அஜீத்.

விஜய் நடித்த “வசீகரா’ படத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். காரணம் அதை ஜெயா டி.வி. வாங்கியிருந்தது.

அவர்கள் முடிவு செய்தால் அது பட்டியலில் இடம் பெறும். வேறு சானல்களில் வாங்கப்பட்ட படங்களை அவர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. ரஜினி, விஜய், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் போக அவர்களுக்குப் படம் விற்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

ஜெயா டி.வி.யில் இவர்களில் இருந்து விடுபட்ட மற்ற படங்கள் இடம் பெறும். உதாரணத்துக்கு அவர்களுக்கு “பில்லா’, “சென்னை -28′ உள்ளிட்ட படங்கள் அவர்களால் சிலாகிக்கப்பட்ட படங்கள்.

செய்திகளே அப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப உருவாக்கப்படுவதும் ஒளிபரப்பப்படுவதுமாக இருக்கும்போது டாப்டென்கள் எம்மாத்திரம்.

கலைஞர் டி.வி.க்குத்தான் தர்மசங்கடம் அதிகம். அவர்கள் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர திரைத்துறையினரை தம் வசம் வைத்திருப்பது அவர்களுக்கு மறைமுக ஆதரவாக நினைக்கிறார்கள். (கடந்த இரண்டாண்டு திரைத்துறை அரசு விருதுகள் பட்டியலிலேயே அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் கெüரவித்தவர்கள் ஆயிற்றே?)

வாங்கிய படங்கள், பெரிய நடிகர்கள்- பெரிய இயக்குநர்களின் படங்கள் என எல்லோரையும் டாப் டென்னில் இடம் பெறச் செய்ய வேண்டும். “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற “சன்’னால் புறந்தள்ளப்பட்ட படங்களுக்கு இங்கே ஆதரவு காட்ட வேண்டிய நெருக்கடி. கூட்டிப் பார்த்தால் படத்தின் பட்டியல் 17-ஐத் தாண்டியது. என்ன செய்வதென்று புரியவில்லை. எந்த ஏழு பேரை நீக்குவது என்று குழப்பம். இறுதியாக ஒரு உத்தி கண்டார்கள். ஏன் டாப் டென்? அது யார் போட்ட சட்டம்? இனி ஒரு விதி செய்வோம் என டாப்- 20 ஆக்கினார்கள். புத்தாண்டு படப்பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றன. புதிதாக இன்னொரு மூன்று படத்தைச் சேர்ப்பதுதானா கஷ்டம்?

ஆக, டாப் இருபது இப்போது மட்டும்தானா என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் “டாப் 25′, “டாப் 30′ என்று பெருகவும் வாய்ப்பு உண்டு.

இறுதியாக ஒரு கேள்வி… கலைஞர்களின் மனம் புண்படாத வண்ணம் இந்த ஆண்டு ரிஸீஸôன திரைப்படங்களின் பட்டியலை வாங்கி அத்தனை டாப்புகளையும் போட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகும் சானல் எது?

Posted in Actors, Actress, Ajith, Arrogance, Arts, Business, Cheran, Cinema, Corporate, Critic, Critique, deal, Distribution, Distributors, Economy, Films, Finance, Jaya, Jeya, K, K TV, Kalainjar, Lists, Maran, Media, Monetary, Money, Movies, MSM, News, Raj, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reviews, Seran, Star, Star Vijay, Sun, Sun TV, Sunday, Top 10, TV, Vijay | 2 Comments »

Sandalwood smuggler Veerappan’s Area: Encroachments in Sathiyamangalam – Losing ones native lands to power, money & politics

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

வீரப்பன் காட்டை குறிவைக்கும் அரசியல்வாதிகள்!

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன.

ஈரோடு, டிச.4: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு புகலிடமாக இருந்த சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள் வளைத்துப்போட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியத் தொழிலதிபர்களும் நிலத்தை வாங்கி வருவதால் பழங்குடியினரின் பாரம்பரிய விளைநிலங்கள் முற்றிலும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதியில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் ஒருகாலத்தில் வீரப்பன் கால்படாத இடமே இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது.

அப்போது இப் பகுதியில் பழங்குடியினர் தவிர பிற மக்கள் நடமாட்டம் அறவே இருந்ததில்லை.

வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. மன இறுக்கத்தைப் போக்கும் இயற்கைச் சூழல், உடலை சிலிர்ப்பூட்டி மகிழ்ச்சி தரும் மிதமான குளிர் போன்ற சிறப்பு அம்சங்களால் இப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களின் கண்பார்வையில் பட்டது.

தங்களது அரசியல் செல்வாக்கு, ஆள்பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்திய இவர்கள், பண்ணைத் தோட்டம், விருந்தினர் இல்லம், ஓய்வு இல்லம் உள்ளிட்டவற்றை மலைப் பகுதியில் உருவாக்கினர்.

இந்நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன. ஒருபுறம் அரசியல்வாதிகள் என்றால் மற்றொருபுறம் முக்கியத் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளால் பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

வீரப்பன் காட்டுப் பகுதியில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் பகுதி தொழிலதிபர்களின் ஓய்வு இல்லங்கள், பண்ணைத் தோட்டங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆசனூரில் பல ஏக்கர் வாங்கியுள்ளார். தொலைதூரத்தில் இருக்கும் தொழிலதிபர்களைக்கூட கவர்ந்து இழுக்கும் இடமாக வீரப்பன் காடு மாறிவிட்டது.

சுமார் 30 ஏக்கர், 50 ஏக்கர் என வாங்கியுள்ள தொழிலதிபர்கள், வார விடுமுறை நாள்களில் இங்கே தங்கியிருந்து இரவு நேரங்களில் தங்களது நிலத்துக்குள்ளேயே மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர் என்பது பழங்குடியினரின் பிரதான குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஆட்சியருக்கு, ஆசனூரில் பல ஏக்கர் நிலம் உள்ளது என்கின்றனர் பழங்குடியினருக்காக போராடிவரும் தன்னார்வ அமைப்பினர்.

அதுபோல பவானிசாகர் அருகே நரிக் குறவருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமித்ததாக பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு பழங்குடியினர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார் கூறியது:

ஈரோடு மாவட்ட பழங்குடியினருக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை குடும்பத்தில் ஏதாவது ஒரு வாரிசுதாரர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்றுவிட்டு மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ஆக்கிரமிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பலத்துக்கு சமமாக பழங்குடியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பழங்குடியினரின் நிலங்களுக்கு பட்டா இல்லாததும், அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் நிலத்தை அபகரிப்பவர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. இதைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்றார் மோகன்குமார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் கூறியது:

பழங்குடியினர் இடங்களை வேறு நபர்கள் வாங்குவதைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லை. இருப்பினும் நிலத்தை அபகரிப்பது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

வீரப்பன் காட்டில் களைகட்டும் ரியல் எஸ்டேட் தொழில்

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, டிச.5: சந்தன வீரப்பன் காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் களை கட்டியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் இப்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

“”உதகை, முதுமலை போல வெகுவிரைவில் இதுவும் சுற்றுலாத்தலமாக விளங்கும். விரைவில் பலமடங்கு விலை உயரும்” -இது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.

வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் இதுபோன்ற பல்வேறு கவர்ச்சிகர வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மைசூர் பிரதான சாலைகளில் காணப்படுகின்றன.

தங்கும் விடுதி, ரிசார்ட் போன்றவற்றில் இரு நாள்கள், ஒரு வாரம் என தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மிதமான குளிர் பிரதேசமான இப் பகுதி மிகவும் பிடித்ததாக மாறி வருகிறது.

சொந்தமாகத் தங்கும் விடுதி கட்டிக்கொண்டால் என்ன? என்ற ஆசை எழும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவர்ந்து விடுகின்றனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர். தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏதுவாக 15 சென்ட், 20 சென்ட் எனத் தரம் பிரித்து நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இப் பகுதியில் ஒரு சென்ட் இடம் ரூ.18 ஆயிரம் (பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. உள்பகுதியில்) முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே இங்கு பெரும்பாலும் நில விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

மலைப் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி மலிவு விலையில் இடத்தை வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மலைப்பகுதி மக்களிடம் இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற இப் பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் துணைபோகின்றனர் என்பது பழங்குடியினர் நலப் போராட்ட அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டு.

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநிலத் தலைவரும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளிவரக் காரணமாக இருந்தவருமான வி.பி.குணசேகரன் கூறியது:

விற்பனைக்காகக் காத்திருக்கும் மனைகள்.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

மலைப்பகுதி மக்களின் நிலத்தை, சமவெளி மக்கள் ஆக்கிரமிப்பதால் பழங்குடியினரின் உரிமை, வேலைவாய்ப்பு பறிபோகிறது. தாளவாடி, கடம்பூர், ஆசனூர் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. இப்போது பர்கூர் மலைப் பகுதியையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குறிவைத்துவிட்டனர்.

பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின நிலங்களை பிறர் ஆக்கிரமிப்பதைத் தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதுபோன்ற சட்டம் தமிழகத்திலும் தேவை. 1996-ல் அப்போதைய வனத்துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செய்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் குணசேகரன்.

இது குறித்து மாநில வனத்துறை வாரிய உறுப்பினரும், மாவட்ட கெüரவ வனஉயிரின காப்பாளருமான ப.கந்தசாமி கூறியது:

தென்னிந்தியாவிலேயே அதிகமாக சத்தியமங்கல வனத்தில்தான் யானைகள், புலிகள், காட்டுமாடுகள், கடமான், புள்ளிமான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள், பல்வேறு ரக பறவைகள் காணப்படுகின்றன. சத்தி வன அழிவுக்குக் காரணமே ரிசார்ட்கள் மற்றும் தங்கும் விடுதிகள்தான். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் வனவிலங்கள் எண்ணிக்கை குறையத் துவங்கிவிட்டது. வனப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தவறான நடவடிக்கை. வனப்பரப்பு குறைவது மனித இன அழிவுக்கு துவக்கமாக மாறிவிடும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்றார் கந்தசாமி.

சமவெளிப் பகுதிகளை வளைத்துப்போட்டு நிலத்துக்கு செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அடுத்த இலக்கு, மலைப் பகுதியாக மாறியுள்ளது. பழங்குடியினர் மட்டுமன்றி வன உயிரினத்தையும் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Posted in abuse, Acres, ADMK, Agriculture, AIADMK, Assets, Bargoor, Bargur, barkoor, Don, encroachments, Environment, Erode, Estate, Farming, Farmlands, Forest, Govt, Guesthouses, Jaya, Jeya, JJ, Land, MLA, MP, Natives, Plants, PMK, Politics, Power, Real Estate, Representatives, Resorts, Sandal, Sandalwood, Sathiamangalam, Sathiyamangalam, Sathyamangalam, Sathyamankalam, SC, Sightseeing, smuggler, ST, Tourists, Tours, Travel, Travelers, Trees, Tribals, Village, Villager, villagers, Villages, Woods | Leave a Comment »

Mrs Homemaker & Mugavari – Jeya TV & Makkal Tholaikkatchi: Serials, Programmes

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007

மிஸஸ் ஹோம் மேக்கர்

ஜெயா டி.வி.யில் இல்லத்தரசிகள் பங்கேற்கும் சுவாரஸ்யமான “மிஸஸ் ஹோம் மேக்கர்’ நிகழ்ச்சி வரும் நவ.23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

இல்லத்தரசிகள் பங்கேற்கும் இந்த சமையல் நிகழ்ச்சியில் கேஸ் அடுப்பு, நவீன சமையல் பாத்திரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

மாறாக, நம் பாரம்பரிய உடையணிந்து கிராமியச் சூழலில் விறகு அடுப்பு மூட்டி அறுசுவை உணவுகளைத் தயாரிக்க வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த போட்டிகளும் படைப்பாற்றலைப் பரிசோதிக்கும் போட்டிகளும் இடம்பெறுகின்றன.

இல்லத்தரசிகளைக் குதூகலப்படுத்த வரும் இந்நிகழ்ச்சி, நவ.23 முதல் வெள்ளிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறு ஒளிபரப்பு சனிக்கிழமை காலை 11 மணி.

————————————————————————————————————————————–
முகவரி

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “முகவரி’ நிகழ்ச்சி நேயர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் சிறு வணிகர்களும் சிறு விளம்பரதாரர்களும் குறு விளம்பரம் மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்திக்கொள்ள முடிகிறது.

நேயர்களைத் தொலைக்காட்சி வாயிலாகவே கடைவீதிக்கு அழைத்துச் சென்று சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருள்களையும் சேவைகளையும் இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்துகிறது.

மேலும் இந்நிகழ்ச்சி, பல வணிக நிறுவனங்களின் முகவரிகளையும் பயனுள்ள இலவச இணைப்புகள் பற்றியும் நுகர்வோர் அறிந்துகொள்ள ஒரு பாலமாக இருக்கிறது. திவ்யா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Posted in Jaya, Jeya, Makkal, Media, Mugavari, Mukavari, Programmes, Serials, Tholaikkatchi, TV | Leave a Comment »

Tamil Actress Latha in TN Politics – ADMK, Thirunavukkarasu & BJP

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

திரைப்பட வரலாறு 789
அரசியலில் லதா


சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க”வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

ஆர்வம் உண்டா?

“எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், “லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?” என்று கேட்டார். “ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றேன்.

”அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்” என்றார்.

ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன்.

நடன நிகழ்ச்சி

எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், “தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?” என்று கேட்டேன். “உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்” என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே “லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்” என்றார்.

உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் “சாகுந்தலம்.” முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன்.

இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், “லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார்.

நான் அவரிடம், “அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை” என்று கூறினேன்.

எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.”

இவ்வாறு லதா கூறினார்.

சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் அழைப்பு தவிர, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் லதாவை அரசியலுக்கு அழைத்தார்.

அதுபற்றி லதா கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல்தான் எங்கள் பூர்வீகம். அங்குள்ள அம்மன் கோவில் பிரபலம். ஊர் எல்லையில் இருக்கிற இந்த கோவிலை என் அம்மா விருப்பப்படி 1977-ல் நான் புதுப்பித்தேன். இப்போதும் தம்பி ராஜ்குமார் இந்த கோவிலை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறான்.

தெலுங்கில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மூலமாக தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமாகியிருந்தேன். இப்போது கோவிலை புதுப்பித்ததன் மூலம் அந்தப் பகுதி மக்களிடமும் நல்லவிதமாக அறியப்பட்டிருந்தேன்.

இதனால் சந்திரபாபு நாயுடு என்னை தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நிற்கச்சொன்னார். அப்போது அவர் போட்ட ஒரே கண்டிஷன், “தேர்தலுக்குப்பிறகு, ஆந்திராவிலேயே செட்டிலாகி விடவேண்டும்” என்பதுதான்.

நான் அவரிடம், “நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். அங்கேதான் நடிகையாக அறிமுகமானேன். எம்.ஜி.ஆர். மட்டும் அவரது ஜோடியாக படங்களில் என்னை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், `லதா’ என்ற பெண்ணை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். எனவே எனக்கு புகழ் தேடித்தந்த தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே இருக்கவே விரும்புகிறேன்” என்று சொல்லி, நாயுடு தந்த அரசியல் வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

இவ்வாறு கூறினார், லதா.

திருநாவுக்கரசு

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். காலமான பிறகு “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க” என்றொரு கட்சியை தொடங்கினார். இதில் சேரும்படி நடிகை லதாவை கேட்டுக்கொண்டார். லதாவும் இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார்.

1998-ல் நடந்த “எம்.பி” தேர்தலில், திண்டுக்கல்லில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் 60 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி, அரசியல் வட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.

திருநாவுக்கரசு, தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்த நேரத்தில் லதாவும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

லதா இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிஸி நிலை, அவருக்கும் அரசியலுக்கும் ஒரு இடைவெளி இருப்பதுபோல் காட்டுகிறது. தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் எண்ணம் லதாவுக்கு உண்டா? அவரே கூறுகிறார்:-

“திருநாவுக்கரசரின் `எம்.ஜி.ஆர். அ.தி.மு.க‘ சார்பில் நான் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது, கட்சிக்கென்று அங்கீகார சின்னம் எதுவும் தரவில்லை. அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்த மாம்பழம் சின்னம் ஒதுக்கினார்கள். பிரசாரத்தின்போது மக்களை சந்தித்தேனே அந்த
30 நாட்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பம். “தலைவர்
(எம்.ஜி.ஆர்) கூட நடிச்ச பொண்ணு” என்று சொல்லி என்னைக் கொண்டாடினார்கள். “உங்க முகத்துல தலைவரைப் பார்க்கிறோம்மா” என்றார்கள்.

வயதானவர்கள்கூட என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது அவர்கள் வைத்திருந்த அன்பைத்தான் எடுத்துக்காட்டின.

சிலர் என்னிடம், தங்கள் ஊரில் உள்ள “குழாயில் தணணீர் வரவில்லை” உள்ளிட்ட பல குறைகளை உரிமையுடன் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆருடன் நடித்தவள் என்ற உரிமையில், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையாகவே அது எனக்குப் பட்டது. சிலர், “மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்க”, “இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வரணும்” என்றெல்லாம் அன்போடு கேட்டு, அழைத்துப்போய் சாப்பாடும் கொடுத்தார்கள். சூதுவாது தெரியாத அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த இந்த மக்களுக்காக அவர்களுக்கு நல்லது செய்யும் அரசியலில் நான் நீடிப்பதுதான் சரியாக இருக்கும்.

இந்த பிரசாரத்தில் ஒரு வேடிக்கையும் நடந்தது. நான் எங்கள் “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க” கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதே தொகுதியில், தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு என் தோழி ராதிகா பிரசாரம் செய்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழிகள் என்பதால், பிரசாரத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டபோதுகூட மறக்காமல் “ஹாய்! ஹலோ” சொல்லிக்கொண்டோம். நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்லவா?

இப்போது படங்களிலும், தொடர்களிலும் நடிப்பதை தொடர்ந்தாலும், அரசியல் ஈடுபாடும் இருக்கவே செய்கிறது. அரசியலில் முழு மூச்சாக இறங்கும் காலம் வரும்போது நிச்சயம் அதில் என்னை முழுவீச்சில் வெளிப்படுத்தவே செய்வேன். தேசியக்கட்சியில் (பா.ஜ.க) இருந்தாலும் எனது அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும்.

மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்த நான், மக்கள் பிரச்சினைக்காக என்னை அர்ப்பணிப்பேன்.”

Posted in Actress, ADMK, AIADMK, Biosketch, BJP, Cinema, Faces, Films, History, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, JJ, Latha, Leaders, MGR, MGRADMK, Movies, people, Politics, Serial, Sun, Tamil, TamilNadu, Thirunavukkarasar, Thirunavukkarasu, TV | Leave a Comment »

Tamil TV Programmes – Diwali Specials in Sun, Kalainjar, Makkal, SS Music, Jeya and Vijay Televisions

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2007

சின்னத்திரையில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

தீபாவளியை முன்னிட்டு நேயர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என எல்லா டி.வி. சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு பல புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. அவற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள், வழக்கம்போல சினிமா நடிகர், நடிகைகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கக் கூடிய விதத்தில் ஒளிபரப்பாகவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் சில…

எஸ்.எஸ்.மியூசிக்

  • காலை 10.30 மணிக்கு பாவனா,
  • பிற்பகல் 1 மணிக்கு ப்ரியாமணி,
  • மாலை 5 மணிக்கு சந்தியா,
  • மாலை 6.45 மணிக்கு நதியா

ஆகியோரின் பேட்டிகள் ஒளிபரப்பாகின்றன. எஸ்.எஸ்.மியூசிக் தொகுப்பாளர்கள் சிவகாசியில் நேரடியாகப் பங்கேற்ற கலகலப்பான தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
விஜய் டி.வி.

பட்டிமன்றம்:

“குடும்ப வாழ்வில் மனநிறைவு பெற்றவர்கள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா?’ என்ற தலைப்பில் லியோனி தலைமையில் பட்டிமன்றம். காலை 8 மணி.

சூர்யா-ஏ.ஆர்.முருகதாஸ்:

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட சூர்யாவும் “தீனா’, “ரமணா’, “கஜினி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸýம் சிறப்பு காஃபி வித் அனு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். சூர்யா, முதல்முறையாக தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி மனம்திறக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ், ஹிந்தி “கஜினி’ பற்றியும் அமீர்கான் பற்றியும் பேசுகிறார். காலை 9 மணி.

விஜய்:

கம்மாவான் பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் விஜய் தீபாவளி கொண்டாடும் நிகழ்ச்சி “நாயகன்’ என்ற தலைப்பில் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கலக்கல் காமெடி:

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து திரையுலகுக்கு அறிமுகமாகி மலையாளத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயராம் பங்குபெறும் சிறப்பு கலக்கப்போவது சாம்பியன்ஸ் நிகழ்ச்சி. காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஜெயராமும் மிமிக்ரி செய்து கலக்குகிறார்.

இவை தவிர்த்து

  • பகல் 12 மணிக்கு சிம்புவின் “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’,
  • மதியம் 1 மணிக்கு தனுஷின் “நான் பொல்லாதவன்’,
  • மதியம் 2 மணிக்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பங்கேற்ற பாலிவுட் சினிமா விழா,
  • மாலை 5 மணிக்கு புதிய படங்களின் சிறப்புக் கண்ணோட்டம் போன்ற பல நிகழ்ச்சிகள் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன.

சன் டி.வி.

நதியாவின் வணக்கம் தமிழகம்:

க்ளாமரை நம்பாமல் நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாகத் திகழ்ந்த நதியா பங்கேற்கும் “வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கில்லி:

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த சூப்பர் ஹிட் படம் “கில்லி’ மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பாவனா:

இலங்கை அகதிக்கும் தமிழ்நாட்டுப் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து உருவான “ராமேஸ்வரம்’ படத்தைப் பற்றி ஜீவா, பாவனா ஆகியோரின் பேட்டி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இவை தவிர்த்து காலை 10 மணிக்கு சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம், காலை 11 மணிக்கு மற்ற டி.வி.க்களில் ஒளிபரப்பாகும் படங்களைப் பொருத்து ஒரு “திடீர்’ புதுப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

கலைஞர் டி.வி.

ஷோபனா:

காலை 6 மணிக்கு ஷோபானாவின் கர்நாடக இசை நிகழ்ச்சியுடன் தீபாவளி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்குகிறது கலைஞர் டி.வி.

சத்யராஜ்:

சத்யராஜின் கலகலப்பான பேட்டி. இதில் சத்யராஜ் இதுவரை சொல்லாத பல விஷயங்களைப் பற்றி மனம்திறக்கிறார். காலை 7 மணி.

  • காலை 9.30 மணிக்கு நடிகர் விஜய்,
  • 10 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,
  • மதியம் 2 மணிக்கு விக்ரம்,
  • 2.30 மணிக்கு தனுஷ்,
  • 3 மணிக்கு வடிவேலு ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பாகிறது.
  • இதற்கிடையில் பகல் 10.30 மணிக்கு ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடித்த “ஈ’ படம் ஒளிபரப்பாகிறது.
  • மாலை 4 மணிக்கு முதல்வர் கருணாநிதி, கமல், ரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்கும் தமிழக அரசின் விருது வழங்கும் விழாவும் நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகளோடு ஒளிபரப்பாகிறது.
  • இரவு 10.30 மணிக்கு பிரகாஷ்ராஜ்-த்ரிஷா ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

ஜெயா டி.வி.

நந்தாவின் சமையல்: பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா ஜெயராஜ் நடிகர் நந்தாவுடன் இணைந்து விதவிதமான இனிப்புகளைச் செய்யும் நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

  • மாலை 6 மணிக்கு ஜீவன்,
  • 6.30 மணிக்கு பிரசன்னா,
  • இரவு 7 மணிக்கு ப்ரியாமணி,
  • 8.30 மணிக்கு “உன்னாலே உன்னாலே’ விநய் ஆகியோரின் பேட்டியும்
  • இரவு 11 மணிக்கு மாதவன், ஷாம், த்ரிஷா நடித்த “லேசா லேசா’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன.

மக்கள் டி.வி.

கவிதை:

கவிஞர்கள்

  • ஈரோடு தமிழன்பன்,
  • இன்குலாப்,
  • அறிவுமதி,
  • ஜெயபாஸ்கரன்,
  • மு.மேத்தா,
  • பச்சையப்பன்,
  • நா.முத்துக்குமார்,
  • யுகபாரதி,
  • கபிலன்,
  • இளம்பிறை,
  • வெண்ணிலா

ஆகியோரின் புதுமையான கருத்துகளைத் தாங்கிய கவிதை நிகழ்ச்சி காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஆழிக்கொண்டாட்டம்:

நாள்தோறும் கடலில் வாழ்க்கையைக் கண்டெடுக்கும் மீனவர்கள் கடலுக்குள் குதித்து வீர தீர விளையாட்டுகளும் கடலுக்குள்ளேயே வெடி கொளுத்திக் கொண்டாடும் சாகச விளையாட்டு நிகழ்ச்சிகளும் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகின்றன.

ஆத்தாடி உறியடி:

மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கேற்கும் வித்தியாசமான நிகழ்ச்சி. வடம் இழுத்தல், உறியடித்தல் என்று மண்ணின் விளையாட்டுகளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மக்கள் நிகழ்ச்சி பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தீபா”வலி’:

தீபாவளித் திருநாளைக் கொண்டாடாத கிராமங்களைப் பற்றிய நெகிழ வைக்கும் நிகழ்ச்சி. அந்த கிராமங்களுக்கே சென்று அதற்கான காரணங்களை அறியும் வரலாற்றுப் பதிவு. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இவை தவிர்த்து

  • பகல் 1.30 மணிக்கு சத்குரு ஜகி வாசுதேவின் பேட்டி,
  • மாலை 4.30 மணிக்கு மரபு விளையாட்டுகளைப் பற்றிய “காசிக்கு போறேன் நானும் வாறேன்’,
  • மாலை 5.30 மணிக்கு மலேசியத் தமிழர்களின் “மலேசிய மத்தாப்பூக்கள்’,
  • இரவு 8 மணிக்கு ஈரானிய திரைப்படம் உள்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

Posted in Actors, Actress, Cinema, Deepavali, Diwali, Films, Jaya, Jeya, Kalainjar, Makkal, Movies, music, Programmes, Specials, SS Music, Sun, Tamil, Televisions, TV, Vijay | 1 Comment »

ADMK & Jeyalalitha – Politics of Contradications & Alliances of Convenience :: Viduthalai Dravidar Kazhakam

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2007

JJ ADMK Jeyalalitha Viduthalai Contradications Politics Alliances

Posted in Adams, ADMK, AIADMK, Alliance, Baalu, BJP, Bridge, CM, Construction, Contradications, Dam, Dhravidar, DK, DMK, Dravidar, Election, Fort, Govt, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, Manifesto, MDMK, Minister, parliament, Politics, Poll, Project, Ramar, Sethu, Ships, Srilanka, Thravidar, TR Baalu, VaiGo, Veeramani, Vidudhalai, Viduthalai | Leave a Comment »

The importance of Karunanidhi’s time in Kalainjar TV – Dinamani op-ed

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2007

நியாயமான கவலை

கடந்த ஒரு மாத காலமாக முதல்வரின் கவனமெல்லாம் அவரது குடும்பத்தினர் தொடங்க இருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில்தான் இருக்கிறது என்றும், அதில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அவருடன் விவாதிக்கப்பட்டுத்தான் முடிவாகின்றன என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. மக்கள் பிரச்னைகள் மலைபோலக் குவிந்திருக்கும்போது ஒரு மாநில முதல்வர் இதுபோன்ற விஷயங்களில் இந்த அளவுக்கு முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம்தானா என்றுகூடக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழுக்கும் தமிழனுக்கும் பெரிய அளவில் உதவவில்லை என்பதில் யாருக்குமே இரண்டு கருத்து இருக்க முடியாது. தமிழ் கலந்த ஆங்கிலத்தில் உரையாடும் வழக்கத்துக்கு அச்சாரம் போட்ட பெருமை, தொலைக்காட்சிகளுக்கு நிச்சயமாக உண்டு. அவரது உறவினர்களின் தொலைக்காட்சி நடத்தப்படும் விதத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோது, அவர்களது வியாபார விஷயங்களில் தான் தலையிடுவது இல்லை என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் முதல்வர்.

இப்போது அவரது குடும்பத்தினரே தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்க இருக்கின்றனர். அதுவும் அவரை முன்னிலைப்படுத்திக் கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்குகிறார்கள். இந்தத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் ஜுர வேகத்தில் உயர்ந்துகொண்டு வருகிறது. போதாக்குறைக்கு, முதல்வரின உடன்பிறப்புகள் தமிழகம் முழுவதும் கலைஞர் தொலைக்காட்சியை வரவேற்று மூலைக்கு மூலை டிஜிட்டல் பேனர்களை வைத்து மக்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி வருகிறார்கள்.

சங்கத் தமிழையும், தொல்காப்பியத்தையும் சராசரித் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி, அவனது இலக்கிய ரசனையை அதிகப்படுத்தியவர் என்பதால், கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைய வேண்டும் என்பது இலக்கியவாதிகளின் எதிர்பார்ப்பு. திரையுலகுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என்பதால், திரையுலகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அதிகம் இருக்க வேண்டும் என்று அந்தத் துறையினர் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அடிப்படையில் அரசியல்வாதி என்பதாலும், திமுக என்கிற கட்சியின் தலைவர் என்பதாலும், அவரது பெயரில் தொடங்கப்படும் தொலைக்காட்சி, கட்சியின் கொள்கையைப் பரப்பும் விதத்தில் அமைய வேண்டும் என்பதுதான் உடன்பிறப்புகளின் எண்ணமாக இருக்கும்.

அதிமுகவின் ஜெயா தொலைக்காட்சியைப் பின்பற்றி முதல்வர் கருணாநிதியை முன்னிலைப்படுத்தும் கட்சி ரீதியான தொலைக்காட்சியாக கலைஞர் தொலைக்காட்சி இருக்குமா, வியாபாரம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் தொலைக்காட்சியாக இருக்குமா, இல்லை தமிழுக்கும் தமிழனின் பண்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தொலைக்காட்சியாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

இந்த நிலைமையில், தனது பெயரில் தனது குடும்பத்தினரே தொடங்கும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி நினைப்பதிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே விவாதித்துத் தேர்ந்தெடுப்பதிலும் தவறு காண முடியாது.

கலைஞர் தொலைக்காட்சி ஒரு தரமான, அதே சமயம் ஜனரஞ்சகமான தொலைக்காட்சி அலைவரிசையாக அமைவது என்பது முதல்வர் கருணாநிதியின் கெüரவப் பிரச்னை. அதனால், அவரது கவலையில் நியாயமிருக்கிறது.

Posted in Actors, Actress, Channels, Cinema, CM, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dhayaalu Ammaal, Dhayalu Ammal, Dhayanidhi, Dhinakaran, DMK, Films, Jaya, Jeya, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maran, Media, Movies, MSM, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Murasoli, Murasoli Maran, Party, Politics, Propaganda, Serials, Sun, Tamil, Thayanidhi, Thayanithi, Thayanithy, TV | Leave a Comment »

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »

Book Introductions in Jeya TV by A Ku Njaanasambandhan

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

படித்த புத்தகம்

ஜெயா டி.வி.யில் தினமும் காலையில் ஒளிபரப்பாகி வருகிறது “படித்த புத்தகம்’ பற்றிய செய்தியை சொல்லும் நிகழ்ச்சி.

இதில் அ.கு.ஞானசம்பந்தன் கூறும் நூல்கள், நூல் பற்றிய பின்னணி விளக்கங்கள், நூலாசிரியர் குறிப்புகள் எல்லாம் மிக்க உபயோகமாக உள்ளன.

“பார்க்கும் ஆவல்’ அதிகரித்து, “படிக்கும் ஆவல்’ குறைந்து விட்டதை சமன்படுத்த முயலும் தூண்டுகோலாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

சென்ற வாரம், த.நா. குமாரசாமி பற்றியும், அவரது சகோதரர் த.நா. சேனாபதி பற்றியும் கூறினார். த.நா. குமாரசாமியின் மொழித்தேடல், வடமொழிப் புலமை பெற்றது, ரவீந்தரநாத் தாகூருடன் பழகியது போன்ற தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. மொத்தத்தில் தொலைக்காட்சிகளில் வரும் சில உருப்படியான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!

Posted in A Ku Njaanasambandhan, AK Njaanasambandham, AK Njaanasambandhan, Book, Books, Chenapathi, Chenapathy, Coomarasami, Coomarasamy, Introductions, Jaya, Jaya TV, Jeya, Jeya TV, Kumarasamy, Literature, Njaanasambandham, Njaanasambandhan, Njaanasambantham, Njaanasambanthan, Njanasambandham, Njanasambandhan, Njanasambantham, Njanasambanthan, Programme, Reader, Reviews, Senapathi, Senapathy, Television, TN Kumarasami, TN Kumarasamy, TV | Leave a Comment »

Question & Answers with CPI(M) – Rich Party, Support for Govt

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

அரசியல்

கேள்வித் திருவிழா: டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

மத்திய அரசை மிரட்டுகிறோமா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை தொடர்ந்து மிரட்டி வரும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாட்டினை நியாயப்படுத்துகிறீர்களா…?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடதுசாரிகள் எப்போதுமே மிரட்டியது கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலனை உருவாக்குகின்ற சில திட்டங்களை அறிவித்திருக்கின்றன.

அவற்றின் மீது கூடுதலான அழுத்தம் கொடுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம், மக்களுடைய எதிர்காலம் செழிப்பாக இருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை வாழ வைக்க முடியும். எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உள்ள மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் கூறிவருகின்றன.

உதாரணமாக விலைவாசி உயர்வு பிரச்சினை. அதில் முக்கியமானது பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. இதைத் தடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.

அரசு அடிக்கடிப் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையுயர்வைத் தடுக்கலாம். ஏனென்றால் பெட்ரோல், டீஸல் விலை உயர்வு என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களில் இருந்து அத்தனை பொருள்களும் விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

ஆகவேதான் நாங்கள் விலையைக் கட்டுப்படுத்துங்கள் என்கிறோம். இதை மிரட்டல் என்று அருள்கூர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாது.

இந்திய நாடும் -அமெரிக்காவும் செய்யக்கூடிய அணு ஒப்பந்தம் என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அமெரிக்கா, தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தன்னுடைய ஆதரவு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசாராக் கொள்கை. அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. “சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை’ என்று குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கபட்ட பிறகும் அரசு அதிலிருந்து மாறுகிறது.

இதை சுட்டிக்காட்டி மக்களுக்கு விளக்குவதை அரசை நிர்பந்தப்படுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சி.பி.எம். கட்சிக்குத்தான் அதிக அளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது உண்மையா?

எஸ். கணேசன், கடலூர்.

உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் சி.பி.எம். தன்னுடைய கட்சியை நடத்துவதற்கும், மக்களை சந்திப்பதற்கும், கட்சி வளர்ச்சி ஏற்பாடுகளுக்கும் கட்சி இருக்கும் எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், சில கிளைகளிலும் கூட அலுவலகங்கள் வைத்திருக்கிறது.

அந்த அலுவலகத்திற்கான நிலம், கட்டிடம் போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிகச் சொத்து இருக்கக்கூடிய கட்சியினர் என்று கூறக்கூடாது. ஏனென்றால் அது மக்களுடைய சொத்தே தவிர சி.பி.எம். சொத்து அல்ல.

மற்ற கட்சிகளுக்கும், சி.பி.எம். கட்சிக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. மற்ற கட்சி களில் தலைவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஆனால் சி.பி.எம். கட்சியில், கட்சி வளமாக இருக்கிறது. அதில் இருக்கும் தலைவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.

சி.பி.எம். கட்சியில் ஊழியர்களின் சம்பள விகிதம் எப்படி?

பா.சு. மணிவண்ணன், திருப்பூர்.

சி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மாநிலத்துக்கு, மாநிலம் வித்தியாசப்படும். சி.பி.எம். கட்சியில் இருக்கக்கூடிய முழு நேர ஊழியர்களில் சொந்தமாக குடும்ப வருமான வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்கள் கட்சியிலிருந்து எந்தவிதமான ஊதியமும் எதிர்பார்க்காமல் பணியாற்றுகிறார்கள்.

கட்சியை மட்டும் நம்பி வாழ்கிறவர்கள், கட்சி கொடுக்கக்கூடிய சிறு அலவன்ûஸ மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அது கஷ்டமான வாழ்க்கைதான். கட்சியின் ஊழியர்களை எடுத்துக் கொண்டால் 500 ரூபாய் முதல், 4000 ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 4000 ரூபாய் என்பது மாநகரில் மட்டும் அல்ல, வட்டத்திலேயும் உண்டு. இது ஏதோ பதவி அடிப்படையில் என்றெல்லாம் இல்லை.

இரண்டாவது, சி.பி.எம்.மில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தை கட்சிக்காகவே கொடுத்து விடுகிறார்கள். கட்சி ஏற்கெனவே அவர்களுக்கு எவ்வளவு ஊதியத்தை நிர்ணயித்து இருக்கிறதோ அந்த ஊதியத்தை வழங்கும்.

ஆகவே மந்திரி என்று சொன்னாலோ, சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ அவரையும், அப்படியில்லாதவர்களையும் கட்சி வித்தியாசம் பார்க்காது. முதலமைச்சர் உள்பட அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பாணி எங்கள் கட்சியின் பாணி.

இது தவிர, பகுதி நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறவர்கள்தான் பகுதி நேர ஊழியர்கள். சிலர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சி.பி.எம்.மில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் உணர்வு செத்துப் போகவில்லை’ என கி. வீரமணி கூறியுள்ளாரே…!

அ. மாணிக்கம், ராமநாதபுரம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் உறுதியுடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே சி.பி.எம்.மின் நிலை. அங்கு தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், “அது ஒன்றுபட்ட இலங்கையில்தான் நடக்க முடியும்’ என்ற எங்களுடைய கருத்துக்கும், “தனி ஈழம் உருவாக வேண்டும்’ என்கிற கி. வீரமணியின் கருத்துக்கும் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது.

பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநிலம் கஹோத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாபுபாய் கடாரா தனது 3 குழந்தைகளுக்கு 6 பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து…?

வீரராகவன், மன்னார்குடி.

சமீப காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். வேறு பெண்ணை தன்னுடைய மனைவி என்கிற முறையில் வி.ஐ.பி. பாஸ்போர்ட்டுடன் அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவைகளெல்லாம் நம்முடைய அரசியல் கலாசாரச் சீரழிவிற்குக் காரணம். பி.ஜே.பி. ஒரு வித்தியாசமான கட்சி என்பதை அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை குண்டு வெடிப்பில் முன்னாள் சுங்க அதிகாரி சோம்நாத் தாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே…!

என். குமரன், வேளாங்கண்ணி.

நீதிமன்றம் பூரணமாக, வருடக் கணக்காக விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முழுத் தீர்ப்பையும் பார்த்துதான் அதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் ஆபத்தானவர்கள் மீது கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்குமேயானால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.

—————————————————————————————–

டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

* “”முல்லைப் பெரியாறில் கேரள அரசு அணைகட்டுவதற்கு தி.மு.க. அரசும் மறைமுகமாக உதவி செய்கிறது போலிருக்கிறது…” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாரே…!

க. ஜெகன், சிவகங்கை.

நதி நீர் பிரச்சினை என்பது இன்று பல்வேறு மாநிலங்களுக்கிடையே தாவாவை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனும் தாவா உள்ளது. நம்முடைய நியாயத்தை கோரிப் பெற, தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

தி.மு.க. அரசு அண்டை மாநிலங்களுடன் இப்படி மோதலற்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது பாராட்டத் தக்கது.

ஜூலை 26ஆம் தேதியும் டெல்லியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளார். அவரும் இது குறித்து இரண்டு முதல்வர்களையும் அழைத்துப் பேசுவதாக கூறியுள்ளார்.

முன்னாள் பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் போன்ற அறிவு ஜீவிகள், நதி நீர் இணைப்பு குறித்து ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மோதலற்ற போக்கை கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்த அணுகுமுறை நண்பர் பழ. நெடுமாறனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக, விவரங்களைத் தெளிவாகப் புரிந்த அவர், முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிப்பது நமக்கு ஏற்புடையதல்ல.

* ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக நினைக்கிறீர்களா?

என். செல்வம், நாகர்கோவில்.

“காம்ப்ரமைஸ்’ என்பது ஒரு தவறான வார்த்தை அல்ல. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோட்பாடு ரீதியான நிலையை மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்தது. இடது சாரிகள் அனைவருமே இணைந்து அதே நிலையைத்தான் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடியவர், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் அவர் ஓரளவுக்குப் பண்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆகவே மதசார்பற்ற, அரசியல் சட்டத்தைப் புரிந்திருக்கக்கூடிய, இன்றைய இந்திய நாட்டின் தேவையை உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக வருவது இன்றைய காலகட்டத்தில் நல்லது என்பதே எங்கள் கருத்து.

அந்தக் கருத்தை நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிடமும் சொன்னோம். அவர்கள் நிறுத்திய பிரதீபா பட்டீலை நாங்கள் ஆதரித்தோம்.

முதலில் இந்த நிலையை எடுக்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைக் கோரவுமில்லை; அப்படியொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதே போன்று ஏனைய இடதுசாரித் தோழர்களுக்கும் ஜனாதிபதி பதவி மீது கண்ணுமில்லை, விருப்பமுமில்லை.

* உங்களைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் பற்றி…?

க.நெடுஞ்செழியன், அய்யப்பன்தாங்கல்.

என்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்

  • தோழர் ராமமூர்த்தி,
  • தோழர் ஜீவா,
  • தோழர் கல்யாணசுந்தரம்,
  • உமாநாத்,
  • சங்கரைய்யா போன்றவர்கள்.

இந்தத் தலைவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியாக இருந்ததை நான் 64க்கு முன்னால் பார்த்தேன். அதற்குப் பின் கட்சி பிரிந்த பிறகு கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

அதன்பிறகு நான் ஏற்கெனவே சொன்ன சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக மாறிப்போனார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வருத்தமோ, வேதனையோ எனக்குக் கிடையாது.

மற்றபடி கொள்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்திய விஷயத்திலும், சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமையாக நடந்துகொண்ட விஷயத்திலும் மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் வரிசையில் எங்களுடைய அகில இந்தியத் தலைவர்கள்

  • இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,
  • பி.டி.ரனதேவே,
  • சுந்தரைய்யா போன்றவர்களைச் சொல்லலாம்.

இவர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் ஊழியனாகத்தான் நான் இருக்கிறேன்.
பெண் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள்,

  • பாப்பா உமாநாத்,
  • நர்மதா ரனதேவே,
  • விமலாராணி தேவி

ஆகியோர். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கத்திற்காகப் பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் என்று பார்க்கும்போது, மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களைச் சொல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறும், அவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளும் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தவை.

தமிழகத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் என்று காமராஜர் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்களைக் கூறலாம். இவர்களுடைய பணி, செயல்பாடுகள், அதிலிருக்கக்கூடிய பல்வேறு நல்ல அம்சங்கள் ஆகியவை என்னைக் கவர்ந்துள்ளன.

* அரசியல்வாதி என்பவர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர் என்று குற்றம் சாட்டுகிறேன். உங்களது பதில்….? (தயவு செய்து கோவிச்சுக்காதீங்க ஐயா)

பா. ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

எந்தக் கோபமும் இல்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியவர் எந்த அரசியல்வாதி என்று எனக்குத் தெரியாது. உங்களுடைய மனதைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இப்படியொரு அரசியல்வாதி நடந்திருந்தால் உங்கள் கோபம் நியாயமானதுதான்.

* ரஷ்யாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது ஸôர்?

இரா. கண்ணபிரான், சேலம்.

நான் ரஷ்யாவுக்கு சென்றதில்லை.

* “ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவைத் திருப்பியனுப்பியது மிகவும் கடுமையான சோதனையான காலகட்டம்’ என அப்துல் கலாம் தெரிவித்துள்ளாரே…?

தி. நாகேஷ், கோட்டப்பட்டினம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பொறுப்பு ஏதேனும் எடுத்துக் கொள்ளலாமா? அப்படியெனில் அது ஆதாயம் பெறும் பதவி எனக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பதுதான் பிரச்சினை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுந்தது. “எது ஆதாயம் தரும் பதவி?’ என்று அரசியல் சட்டத்தின் 102வது பிரிவு தெளிவாக விளக்கவில்லை. எந்தப் பதவிகளை ஏற்றால் பதவியைப் பறிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு எனத் தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உண்டு.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிறுவனங்களில் பொறுப்பேற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தச் சட்டங்கள் மூலம் நாடாளுமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம். கோரியது; ஆதாயம் தரும் பதவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் விவாதித்து முடிவு எடுக்க ஒரு நாடாளுமன்ற துணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியது.

நாடாளுமன்றமும், இருக்கும் சட்டத்திலிருந்து சில விதி விலக்குகளை அளித்து திருத்தச் சட்டம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அவர் தனக்குரிய உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி சில கேள்விகள் எழுப்பினார்; சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு திருப்பி அனுப்பினார்.

அது மறுபரிசீலனை செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்குரிய விசேஷ அம்சங்களை கணக்கிலெடுக்காமல் அப்பொறுப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுத்ததால் நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது.

பொது மக்கள் சேவையினை கருத்தில் கொண்டு சில அரசு நிறுவனங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்.மின் நிலை. இப்பொழுது உள்ள குழப்ப நிலை நீங்க, தெளிவானதொரு சட்ட விளக்கம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது.

* “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற உ.பி. முதல்வர் மாயாவதியின் யோசனை பற்றி…?

எஸ். உலகநாதன், திருவாரூர்.

“இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும்?’ என்று சொல்வதற்கு முன், அது செயல்படுத்த வேண்டிய அரசியல் பொருளாதார -சமூகப் பின்னணியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் பெரும் பிரிவினர் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையில் எழுந்ததுதான் அரசியல் சட்ட ரீதியான “இட ஒதுக்கீடு’ முடிவுகள்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ஆனால் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தும், வாழ்நிலையும் எப்பொழுது முழுமை பெறும்? அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டப்படுவதன் மூலமாகத்தான் அது முடியும்.

கிராமப் புறங்களில் வாழும் இந்தப் பிரிவினரில் பெரும்பான்மையான மக்கள் நலிந்த பொருளாதாரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைக் கொடுக்கும் செயல் திட்டம்தான் நிலச் சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வல்லது.

இது நாட்டின் இடதுசாரிகள் சொல்கிற கருத்து மட்டுமல்ல…! பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் இதை வலியுறுத்திச் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரள, மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில அரசுகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டே எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (நிலத்தைப் பங்கீடு செய்தது) அந்த மக்களுக்கு ஓரளவு பொருளாதார சக்தியினைக் கொடுத்திருக்கின்றன.

அவர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்திருக்கிறது. அதிகார அமைப்பில் அவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. இதை மண்டல் கமிஷன், மற்றும் திட்ட கமிஷன் கணக்கில் எடுத்துப் பாராட்டியும் உள்ளது.
வேறு ஒரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை (அரசின் கணக்கின்படி) 26 கோடி பேர். வறுமையில் வாடுவோர் அல்லது பொருளாதார பலம் ஏதுமின்றி வாழ்பவர்கள் சாதி, மதம், மொழி என்ற பண்பாட்டு வட்டங்களைத் தாண்டித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

அவர்களின் வாழ்நிலையினை உயர்த்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாயாவதி என்ன நோக்கத்தோடு அந்த யோசனையை முன் வைத்தார் என்று தெரியாது. ஆனால் பிரச்சினையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்லர்! நமது கவலைக்குரிய மனிதர்கள்தான்!

Posted in Alliance, Answers, APJ, Bachan, Badhuri, Baduri, Bathuri, Bhachan, Bhadhuri, Bhaduri, Bhardhan, Bhathuri, BJP, Center, Chat, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, DMK, Eezham, Elections, Faces, Finance, Gorbachev, Govt, Integration, Interview, Jaya, Jeya, Kalam, Karat, Leaders, Lenin, LTTE, Manmogan, Manmohan, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Masood, Masud, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, names, National, NDTV, Neta, Netha, Party, Patil, people, Politburo, Politics, Polls, Poor, Power, Prakash, Prathiba, Prathibha, President, Prez, Principles, Putin, Q&A, Questions, Rasheed, Rashid, Rich, River, Russia, Somnath, Sonia, Soviet, Sri lanka, Srilanka, Stalin, support, UP, US, USA, USSR, UttarPradesh, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Water, Wealthy | Leave a Comment »

Madurai West Assembly by-poll: By-election details, campaign strategies, developments

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?

மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.

மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.

ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.

வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounders, By-election, by-poll, Campaign, Details, Developments, DMDK, DMK, Elections, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, JJ, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Madurai, Madurai West, News, Polls, Predictions, Primer, Strategy, Transfers, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Win, Winners | 5 Comments »