Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Theater King Harold Pinter: Indira Parthasarathy

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2009

நாடகக்காரர்களின் நாடகக்காரர்
_ இந்திரா பார்த்தசாரதி

அண்மையில் கால மான, பிரித்தானிய நாடக ஆசிரியராக உலகம் அறிந்த ஹெரால்ட் பின்டர், ஒரு பன்முகச் சாதனையாளர். கவிஞர், நாவலா ஆசிரியர், கட்டுரையாளர், திஇரைக்கதை உரையாடல் படைப்பாளர், இடதுஇசாரி முற்போக்குச் சிந்தஇனையாளர். அவரை ஒரு தனிமனித இயஇஇக்கம் என்று விமர்சகர்கள் சித்இஇதிரிப்பது மிகவும் பொருந்தும். ஹெஇரால்ட் பின்டர், தொடக்கத்தில் கவிஇதைகள் எழுதினார்; என்றாலும், 1957இல் டேவிட் பேரன் (David Baron) என்ற பெயரில் எழுதிய ‘அறை’ (The Room) நாடகம்தான் அவரைக் கலை உலகில் நாடகப் படைப்பாளராக அறிமுஇகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் 29 நாடகங்களும் 22 திரைக் கதைகளும் பல தொலைக்காட்சி நாடஇகங்களும், ஒரு நாவலும் எழுதினார்.

ஹெரால்ட் பின்டர் நாடகங்களில் முக்கியமானவை,‘பிறந்த நாள் விருந்து’ (The Birthday Party), ‘வீட்டைப் பார்த்துக் கொள்ளுகின்றவர்’ (Caretaker), ‘சொந்தவீடு வருகை’ ( The Home Coming), ‘துரோகம்’ (Betrayal), ‘அமைதி’ (Silence), ‘Precisely, One for the Road’, ‘பழங்காலம்’ (Old Times) என்பன. இவற்றில் முதல் நான்கும் திரைப்இபடங்களாக ஆக்கப்பட்ட போது, அவற்றிற்குத் திரைக்கதையும் உரையாஇஇஇஇடல்களும் பின்டர் எழுதினார். ‘தம்முடைய நாடகத்துக்குத் திரைக்இகதைஇயும் உரையாடலும் எழுதி வெற்இறி அடைந்த வெகு சிலரில், பின்டர் ஒருவர்’ என்று ‘லண்டன் டைம்ஸ்’ எழுதியது. அமெரிக்க நாடக ஆசிரியர் டென்னிஸி வில்இலியம்ஸ், மிகப் பிற்காலத்தில், அதாவது, டென்னிஸியின் நாடகங்கள் மேடையேறி திரைப்படங்களாக ஆக்கப்பட்டு, அவை வெற்றி அடைந்த பிறகு, தாம் எழுதிய மூல வடிவம் அப்படியே காட்சி வடிவங்களாக ஆக்கப்இபட்டிருந்தால், அவை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று குறைப்பட்டுக் கொண்டார். அவர் இவ்வாறு தாக்குவதற்கு இலக்காக இருந்தவர், அந்நாடகங்களின் திரைப்இபடங்களின் இயக்குநராக இருந்த எலியா காஸான்.

பின்டர் தம்முடைய நாடகங்களுக்கு மட்டுமன்றி, பிறருடைய ஆக்கங்இகளுக்கும் திரைக்கதையும் உரைஇயாடலும் எழுதியிருக்கிறார். ஜான் ஃபௌல்ஸ் (John Fowles) எழுதிய ‘The French Lieutenant’s Woman’, காஃப்காவின் ‘The Trial’, Proust எழுதிய ‘Rememberance of things past’ போன்ற செவ்வியல் படைப்புகளுக்கும் திரைக்இகதை அமைத்திருக்கிறார். ‘Proust’ நாவலுக்குத் திரைவடிவம் கொடுத்தது போல் சவாலான விஷஇயம் வேறு எதுவும் இருக்கமுடியாது’ என்று பின்டர் ஒரு நேர்இகாணலில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்இலாஇவிட்டாலும், சாம்யுவல் பெக்கெட்டின் ‘Krapps Last tapes’ என்ற நாடகத் தனி மொழிக்குத் திரைஇஇவடிவம் கொடுத்தது இதைவிட பெரிய சவாலாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பின்டரின் தந்தை வழி பெற்இறோஇர்இகள் போலிஷ் யூதர்கள். இரண்டாம் உலகப் போரின் போது, பின்டர் சிறுஇஇஇவனாக இருந்த காலத்தில், பல சமயங்களில் தனித்து இருக்கும்படி நேர்ந்இஇதிருக்கிறது. பள்ளிக்கூடத்திலும் அவர் மற்ற சிறுவர்களோடு நெருங்கிப் பழகியதில்லை. இவருடைய நாடகஇங்இகளில் இதன் பாதிப்பை நாம் அதிகம் காணமுடிகின்றது. தனிமை, ஏக்கம், அடங்கிய சீற்றம், சந்தேகம், தீர்மானித்த ஒரு தெளிவின்மை, பாதுகாப்பின்மை போன்ற பல உணர்இவுகளால் பாதிக்இகப்பட்டவர்கள் இவருடைய நாடக மாந்தர்கள். இவருடைய நாடகங்களை வகைஇசெய்வது மிகக் கடினம். ‘நாடக சிரியர்களின் நாடக சிரியர் ஹெரால்ட் பின்டர்’ என்பார் டேவிட் தாம்ஸன். மௌனத்தை இவர் தம் நாடகத்தில் ஒரு சக்தி வாய்ந்த நாடகப் பாத்திரமாகக் கையாளுகிறார். அதாவது, இரண்டு கதாபாத்திரங்கள் உரையாடும்போது, ஒரு பாத்திஇரத்தின் சொல்லாடல் மற்றைய பாத்திஇரத்தின் மனத்தில் ஏற்படுத்தும் சிந்தஇனை அலைகள் காரணமாக, சிந்தித்துப் பதில் கூறுவதற்கான இடைவெளியையும் அம்மௌனத்தின் சுமையையும், நாடகம் படிக்கின்றவர்களும் பார்க்கிஇன்இறவர்களும் உணரும்படியாக நாடஇகத்தை அமைப்பது அவருக்குக் கை வந்த கலை. இது சாதாரண வாசகனுக்கோ, அல்லது பார்வையாளருக்கோ சாத்இதியமன்று. அதனால்தான் இவரை, ‘நாடக சிரியர்களின் நாடக ஆசிரியர்’ என்றார் தாம்ஸன்.

‘என் ஆழ்மனத்துப் படிமங்கள்தாம் என் கதை மாந்தர்கள். அவர்கள் எனக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே அந்நியர்கள். அவர்களை அவர்இகளின் உரையாடல்கள் மூலம் புரிஇந்இதுஇகொள்ள முடியாது. அவர்கள் உரைஇயாடல்இஇகளுக்கிடையே காக்கும் மௌனம் மூலந்தான் அவர்களைப் புரிந்துகொள்ள முடியும்,’ என்று ஹெரால்ட் பின்டர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இம்மௌனம் மன இறுக்கத்தை அதிகரிக்கக் கூடியது. சொற்சிக்கனம்; சொஇஇல்இஇலிச் சொல்லி உறைந்து பொருஇளி ஆழந்துபோன வார்த்தைகளை திரு ம்பத் திரும்பச் சொல்லுதல்; அர்த்தஇமேதுமில்லாததுபோல் தோன்றும் சைகைகள் ஆகியவற்றின் மூலம் உளவியல் பாங்கான சூழ்இநிலையை உருவாக்குவதுதான் இவர் நாடகங்களின் இயல்பு. தேர்ந்த நடிகர்களும் இயக்குநருமின்றி இவர் நாடகங்களை மேடை ஏற்றுவது கடினம்.

பின்டர் நாடகங்களில் மிகவும் முக்கியமான ‘The Home Coming’, உளவியல் ரீதியாக, பாலுணர்வையும் வன்முறையையும் பூடகமான முறையில் நாடகக் கருவாகக் கொண்டது. ஐந்து ஆண்களையும் ஒரு பெண்ணையும் கதாபாத்திரங்களாகக் கொண்ட இந்நாடகத்தில், பாலுணர்வுச் சொற்சிலம்பாட்டம் நிகழ்கிறது. எழுபது வயது தந்தை, அவர் சகோதரர், மூன்று பிள்ளைகள், அவர்களில் ஒருவனுக்கு அமெரிக்க மனைவி. டெட்டி என்கிற அவனும் அவன் மனைவியும் அமெரிக்காவிலிருந்து, வடக்கு இங்கிலாந்துக்கு வந்திஇருஇக்இகிறார்கள், அவர்களுடைய மூன்று குழந்தைகளுடன். பெண்ணே இல்லாத வீட்டில் ஒரு பெண்ணின் வருகை ஒரு புதிய சூழ்இநிலையைத் தோற்றுவிக்கிறது. ரூத், டெட்டி திருமணம் அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்று தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ரூத், பாலுணர்வு விளையாட்டின் மூலம் (emotional and sexual games) தன் அடையாளத்தை உணர்ந்து அவ்வீட்டின் அதிகாரஇத்தைக் கைப்பற்றுகிறாள். அமெஇரிக்இகப் பெண்ணாகிய அவள் அமெரிக்கா திரும்பவில்லை. டெட்டி மூன்று குழந்தைகளுடன் அமெரிக்கா திரும்புகிறான். “அந்த வீட்டின், ‘Oedipal’ தேவை பூர்த்தியாகிறது” என்கிறார் ஜான் லாஹர் என்ற விமர்சகர்.

‘துரோகம்’ நாடகத்தில் சொல்லப்படுகின்ற நிகழ்வுகளின் காலவரிசை தலைகீழாக இருக்கிறது. அண்மைக் காலத்திய நிகழ்வு முதல் காட்சியில் சொஇல்இலப்படுகிறது. பிறகு தொடர்இகின்ற காட்சிகளில், பின்னோக்கிய நிகழ்இவுகள் பின்னோக்கியக் காலக்கணக்கில் வரிசையாகத் தொடரும். இறுதிக் காட்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி சொல்இலப்படுகின்றது. ராபர்ட்டும் எம்இமாஇஇவும் இளம் தம்பதியர். ஜெர்ரி அவர்கள் திருமணத்தில், ராபர்ட்டின் மாப்பிள்ளைத் தோழன். அவன் மணஇஇமானவன். ஆனால், அவனுக்கும் எம்மாவுக்கும் பிணைப்பு ஏற்பட்டுஇவிடுஇகின்றது. அவன் ஒரு தனி விடுதி எடுத்து அங்கு எம்மாவை மதியப் பொழுதுகளில் ஐந்தாண்டுகள் தொடர்ந்து சந்திக்கின்றான். வெனிஇஸுக்கு ராபார்ட்டும் எம்மாவும் விடுஇமுறைஇக்குச் சென்றபோது, எம்மா, ராபர்ட் சந்தேகித்ததை உறுதிசெய்து விடுகின்றாள். ராபர்ட்டுக்குத் தெரிஇயாது என்று நினைத்த ஜெர்ரி, எம்மாஇவுடன் அவனுக்கு இருந்த உறவு முறிந்த பிறகு, தன் துரோக மனச் சுமையை ராபர்ட்டிடம் இறக்கி மன்னிப்புக் கேட்க அவனடம் செல்கிறான். ஆனால், ராபர்ட் அவனிடம், எம்மா அவனிடம் ஏற்கெனவே எப்பொழுதோ சொல்லிவிட்டாள் என்று கூறியதும், அவன் அதிர்ச்சி அடைகிறான். ராபர்ட் தன்னை வென்றுவிட்டது போல் அவன் உணர்இகிறான். ‘மெலோட்ராமா’வுக்கு உரிய நிகழ்வுகள் என்றாலும், அவற்றை நிதானமாக, தினசரிச் சம்பவங்கள் போல், வேண்டுமென்றே நிகழ்வுத் தொடர்வைத் தலைகீழாக்கி பின்டர் சொல்லும் விதம் ஒரு புது நாடக உத்தி. உரையாடல்களில் மௌனந்தான் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. ஹெரால்ட் பின்டர் ஏராளமான விருதுகள் வாங்கியிருக்கிறார். அமெரிஇக்காவிடம் அவருக்குத் தீவிர வெறுப்பு இருந்தாலும், டோனி விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஃபிரான்ஸின் உயர்தர ‘லீஜியன் ஆஃப் ஹானர் விருது’ அவருக்குக் கொடுக்கப்பட்டது. இறுதியாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் நோபல் பரிசை வென்றார். நோபல் பரிசு ஏற்புரையில், ‘அப்பாவி ஈராக்கிய பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் அமெரிக்க அதிபர் புஷ்ஷும், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி ப்ளேயரும் கொலைகாரர்கள்’ என்று அவர் சித்திரித்ததை யாரும் மறக்க மாட்டார்கள்.

இந்திரா பார்த்தசாரதி, தமிழின் முக்கியமான நாடகக்காரர்களில் ஒருவர்; எழுத்தாளர்.

3 பதில்கள் to “Theater King Harold Pinter: Indira Parthasarathy”

  1. SANKAR said

    i AM SHANKAR, a GREAT FAN OF PINTER.. I TRANSLATED BIRTHDAY PARTY INTO TAMIL AND STAGED THE PLAY IN OCTOBER.DURING THE REHEARSAL I CAME TO KNOW ABOUT THE NOBEL PRIZE. IT WAS REALLY ENCOURAGING. i PRESENTED THE PLAY AGAIN IN SURYA FESTIVAL TRIVANDRUM IN 2008 SEPTEMBER. AS A TRIBUTE TO PINTER IN HIS FIRST ANNIVERSARY IAM PRESENTING THE PLAY ON DECEMBER 20 2009 AT ALLIANCE TWO SHOWS 3PM AND 6 PM
    K.SANKARANARAYANAN
    SLATE- Stage for Literature Art Theatre Expressions
    SLATE First Production Camus’ outsider in tamil as ANNIYAN-2004
    Second Production Pinter’s Birthday party 2005
    Third Production Ionesco’s Lesson in english 2006
    Fourth Production Lesson in english Albees Zoo Story in tamil 2007
    Fifth production Birth Day Party at Soorya Festival 2008
    contact cell 9381017076

  2. sakeela said

    nyu,i/jtlu

  3. This is really interesting, You’re a very skilled blogger.I have joinedyour rss feed and look forward to seeking more of your great post. Also, I have shared your website in my social networks!

    by 迷你寫字樓

பின்னூட்டமொன்றை இடுக