நிபந்தனைகளும் நியாயங்களும்
இரா.சோமசுந்தரம்
ஒரு சட்டம் அல்லது புதிய நிபந்தனை புகுத்தப்படும்போது அதற்கான காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதில்லை.
அத்தகைய நிபந்தனை அல்லது சட்டத்தை எதிர்க்கும்போது ‘இதை இப்போது அமல்படுத்துவதன் அவசியம் என்ன?’ என்று கேள்வி கேட்பதும், அதற்கு அரசு சொல்லும் காரணத்தை விவாதத்துக்கு உட்படுத்துவதும், பெருந்திரளானோரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அது அமலாகும்படி பார்த்துக் கொள்வதும் நியாயமான அணுகுமுறைதான்.
இப்போது பட்டியல் வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே உதவித்தொகை தரப்படும் அல்லது தொடரும் என்ற நிபந்தனைக்கு பட்டியல் வகுப்பு மாணவர்கள் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
திடீரென இப்படியொரு நிபந்தனையை மத்திய அரசு கொண்டுவரக் காரணம் என்ன? என்பது பற்றி மாணவர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, யாருமே பேசவில்லை.
இந்த நிபந்தனையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளாவிட்டாலும், மாநில அரசு தனது நிதியில் இந்த மாணவர்களுக்கு உதவித்தொகையை நிபந்தனையின்றி வழங்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரும்கூட, இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கவோ, அல்லது மாணவர்களுக்கு அறிவுறுத்தவோ முயலவில்லை.
ஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது?
மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி சில தனியார் அறக்கட்டளைகளும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டுஉறைவிட வசதியும் அளிக்கின்றன. அல்லது அதற்கான செலவை ஏற்கின்றன.
இந்தத் தனியார் அறக்கட்டளைகளின் கருணை நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவர்களிடம் சலுகையைப் பெறும் மாணவர், ஒரு பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர் உதவித்தொகை அல்லது இலவச விடுதி சலுகையை இழந்துவிடுவார். மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே (எந்தப் பாடத்திலும் ‘அரியர்ஸ்’ இல்லாத போதுதான்) அவருக்கு இலவச சலுகை மறுபடியும் தொடரும். அதுவரை, ஒன்று அவர் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது பொது மாணவர்களுக்கு இணையாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை, அந்த மாணவர்கள் தங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கவனம் சிதறினால், கல்விக் கட்டணம் கையைக் கடிக்கும்.!
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கும் அவர்களது இலவச உண்டுஉறைவிடத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடுகின்றன.
இந்த மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காத மத்திய அரசு, இப்போது அதை நடைமுறைப்படுத்துவது ஏன்? உயர்கல்வியில் இந்த மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதுதான் காரணம். இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும். ஆனால் அவர்களும் அரசியல்வாதிகள் போலவே மெüனம் சாதிக்கிறார்கள்.
எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் (அரியர்ஸ் இருக்கக்கூடாது) என்று எதிர்பார்க்கும் உரிமைகூட அரசுக்கு இல்லாமல் போகுமா?
நகரங்களில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்து, இலவச உண்டுஉறைவிடத்தில் தங்குவதற்கும் இடம் கிடைத்துவிட்டால், பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கும்வரை (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு) கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை.
இந்த உண்மையை அறிந்துகொள்ள ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துப் பார்க்கலாம். அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் உணவு உறைவிட சலுகை பெறும் மாணவர்களில் எத்தனை பேர் அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் (அரியர்ஸ் இல்லாதவர்கள்) என்பதை கல்வித் துறை மிக எளிதில் கணினி உதவியுடன் பட்டியலிட முடியும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண் நிபந்தனையை வைத்தால், பெரும்பாலான மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அத்துடன், பொது ஒதுக்கீட்டிலும் இடம்பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.
அரசின் நிபந்தனையை எதிர்ப்பவர்கள் யார்? கல்லூரியிலும் மாணவர் விடுதியிலும் இடம் கிடைக்கப்பெற்று, கல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்கள் கவனத்தை நகர வாழ்வின் மோகத்தில் சிதறவிடும் மாணவர்கள்தான்.
அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெறுவது கடினம் என்று கருதினால், பருவத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையை மட்டுமாவது ஏற்க முன்வர வேண்டும்.
எந்த நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
————————————————————————————————————————————————————————–
இந்திய சமூகப் பண்பின் அடிப்படைக் கூறுகளை இந்துத்வா மறுதலிக்கிறது!
குல்தீப் நய்யார்
பாரதீய ஜனதாக் கட்சி மறுபடியும் இந்துத்வக் கோட்பாட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டது. அந்த ஒரு கோட்பாட்டை மட்டுமே அது அறிந்துள்ளது. தாங்களே தனியாக அதிகாரம் பெற்றிருக்கும்போது நேரிடையாகவும், தேசிய ஜனநாயக முன்னணியின் அங்கமாக இருக்கும்போது மறைமுகமாகவும் அக் கோட்பாட்டை அது பின்பற்றுகிறது. 1977 – 1980 வரையிலான ஜனதா அரசில் அது முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஜனசங்கத்தின் முன்னாள் உறுப்பினர் களாக இருந்த அனைவரும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தினுடனான தங்கள் தொடர்புகளை அறுத்துக் கொள்கிறோம் என்று லோகநாயகர் ஜெயப்பிரகாச நாராயணனுக்கு வாக்குறுதி அளித்தவர்கள் அதிலிருந்து பின்வாங்கி அவரை ஏமாற்றி விட்டார்கள். இன்று பா.ஜ.க. முன்னிறுத்தி பரப்பி வரும் கோட்பாட்டையே அன்றும் பின்பற்றிய நிலையில், ஒரு இந்து மத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் 60 ஆம் ஆண்டு நினைவு நாளன்று பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூடியது தற்செயலாக நேர்ந்த ஒன்றல்ல. கட்சியின் மதவெறிக் கூச்சல் முன்பு இருந்ததைப் போல ஓங்கி ஒலிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இந்துத்வக் கோட்பாட்டை முன்னிறுத்தி நரேந்திரமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, பா.ஜ.க.வின் தொனியை மாற்றியுள்ளது. குஜராத்தில் மோடியின் வெற்றி எதையோ மெய்ப்பித்துவிட்டது போல, இக்கட்சி இந்துத்வப் பாட்டையே திரும்பவும் பாடத் தொடங்கி விட்டது
எல்.கே. அத்வானி முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி கடுமையான நிலையை மேற்கொள்ளும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. ஆனால் எனக்கு வியப்பளித்தது என்னவென்றால், அந்த மேடையில் ஜஸ்வந்த் சிங்கும் இருந்ததுதான். பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் பற்றி அவர் மிகவும் மகிழ்ச்சி அற்றவராக இருந்தார்; ஒரு நிலையில் கட்சியை விட்டு விலகிச் செல்லும் எண்ணத்திலும் அவர் இருந்தார். அவ்வாறு கட்சியை விட்டுச் சென்றால் தான் தன்னந்தனியாக அரசியலில் அடையாளமற்றவராக நிற்க வேண்டுமே என்பதற்காக அவர் அவ்வாறு செய்யவில்லை போலும். வாஜ்யி உடல் நலமின்றி இருந்தபோதிலும், அக் கூட்டத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில் வந்து அவர் கலந்து கொள்வார் என்று நான் எதிர்பார்த்தேன். அவர் அந்த கூட்டத்திற்கு ஒரு செய்தியைக் கூட அனுப்பவில்லை. தன்னை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தன்னையே நிழல் பிரதமராக அத்வானி காட்டிக் கொண்ட கோமாளித் தனத்தை வாஜ்பேயி ரசிக்கவில்லை என்றே தெரிகிறது. அப்படியில்லையென்றாலும், அத்வானியின் கடுமையான நிலையை வாஜ்பேயி எப்போதுமே விரும்பியதில்லை. பிரதமர் வேட்பாளராகப் பரிந்துரைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலும், அய்க்கிய ஜனதா தளக் கட்சியின் சரத் யாதவும் கலந்து கொண்டது எனக்கு ஏமாற்றமளித்தது. ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு வழி வகுத்த ரதயாத்திரையை மேற்கொண்டவர் அத்வானிதான் என்பதை அவர்கள் மறந்திருக்க முடியாது. சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான அத்வானி, அவர்களுக்கு ஆதரவாக ஆக்கபூர்வ நடவடிக்கை என்னும் இட ஒதுக்கீட்டைக் கூட சிறுபான்மை மக்களை கவர்வதற்காகச் செய்யப் படுவதாகக் கூறுபவர்.
என்றாலும், பா.ஜ.கட்சிக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய சவாலே, நாட்டிலுள்ள விருப்பு பெறுப்பற்ற தாராளமனம் கொண்ட சக்திகளே. அவர்கள் எங்கு இருந்தாலும் சரி, என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, நம் நாட்டின் பன்முகத்தன்மையின் அடிப்படைக் கூறுகளை அழித்தொழிக்கும் இந்துத்வாவை எதிர்த்துப் போராடுவதே அவர்களின் முதல் வேலையாக இருக்கவேண்டும். மதத்தின் பெயரால் இந்திய மக்கள் சமூகத்தைப் பிளவு படுத்தி சிதைக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. அவர்களது இந்துத்வாவின் காரணமாக, நம் நாட்டின் கொள்கையாக எப்போதும் விளங்கும் மதச் சார்பின்மை என்பது தற்போது மிகவும் அவசரத் தேவையாக ஆகிவிட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசிய உணர்வை உருவாக்கி வளர்த்த மகாத்மா காந்தியின் தத்துவத்தையும் இந்தியாவின் பெருமையையும் முற்றிலுமாக அழிக்க பா.ஜ.க. முயல்கிறது. முன்பு ஒரு முறை ஜவஹர்லால் நேரு, நமது அரசியல் போர்க் களத்தில் நாம் போரிட்டு வென்றுவிட்டோம். ஆனால் அதற்கும் குறைவிலாத முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு போர்க்களம் இன்னும் நம்மை எதிர் கொண்டுள்ளது. எந்த வெளிநாட்டு எதிரியுடனான போரல்ல அது . .. அது நம்முள் நாமே எதிர்கொள்ள வேண்டிய போர் என்று கூறினார்.
இப்போர்க்களத்தை பா.ஜ.க. திறந்துவிட்டுவிட்டது. மோடியை மற்ற மாநில பா.ஜ.க. முதல்வர்கள் முன்னோடியாகப் பின்பற்ற வேண்டுமென்று இந்துத்வப் பிரச்சார குறுந்தகடு புகழ் ராஜ்நாத் சிங் கூறியபோது, குஜராத்தில் அவர் மேற்கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையை மிக உயர்வாகப் போற்றிப் பாராட்டுகிறார். நாட்டின் ஜனநாயகத்தையே அச்சுறுத்தும் அவர், பாசிச சக்திகளைப் பலப்படுத்துகிறார். மோடியின் ஆட்சியில் குஜராத் மிகவும் முன்னேற்றமடைந்து உள்ளதாக பறைசாற்றிக் கொள்ளும் கூற்றினை அளந்து அறிவதற்கான சரியான அளவுகோல், குஜராத்தில் முஸ்லிம்களும் மற்ற சிறுபான்மை யினரும் எந்த அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதுதான். இந்து தாலிபான்களின் கைஇறுக்கத்தில் குஜராத் இன்னும் தொடர்ந்து இருக்கிறது. பாரத ரத்னா விருது அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் உலகப் புகழ் பெற்ற ஓவியர் எம். எஃப். ஹுசைனியும் ஒருவர் என்று என்டிடிவி தொலைக்காட்சி சில நாட்களுக்கு முன் அறிவித்தபோது இந்து தாலிபான் சேனைகள் அகமதாபாத்தில் உள்ள அத் தொலைக் காட்சியின் அலுவலகத்தைத் தாக்கி அழித்தனர். மோடியின் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அத்தகையதொரு நோய்த்தன்மை கொண்ட வெறுப்பு நிலவுகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. அவர்கள்தான் இந்துத்வ இயந்திரத்தின் இயங்கு சக்தி என்பதே அதன் காரணம். பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்திடமிருந்து இது பற்றி ஒரு வார்த்தை விளக்கம் கூட வரவில்லை; கண்டிப்பது என்பது பற்றி கேட்கவே வேண்டியதில்லை. அவரது கட்சியான பா.ஜ.க. வின் முழுமையான கட்டமைப்பும் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வில் அமைக்கப்பட்டிருப்பதால், இதன் இளைய தொண்டர்களான சேனைகள், கட்சி அழைக்கும்போதெல்லாம், ஜாடை காட்டும்போது எல்லாம் பேரச்சத்தையும் கொடுமையையும் உருவாக்கத் தயாராக இருக்கும் கருவிகளைப் போல இருப்பது இயல்பேயாகும்.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப் பெற்ற முஸ்லிம்களுக்கு நீதிமன்ற விசாரணையின் போது நியாயம் வழங்கப்படவில்லை என்பதுடன், அவர்களுக்கு அடிப்படை உரிமைகளும் மறுக்கப் பட்டன. இந்த வழக்கில் மொத்தமாக 135 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். 2004 அக்டோபர் 30 ஆம் தேதி ஜாமீன் உத்தரவை குஜராத் உயர் நீதி மன்றம் வழங்கியதுடன் சரி. அதன்பின் இது வரை வேறு எந்த ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் விசாரிக்கவே இல்லை. கைது செய்யப்பட்டதில் பல கடுமையான குறைகள், சில வெளிப்படையான முரண்பாடுகள் அரசுக்கு சுட்டிக் காட்டப்பட்டன. ஆனால் அரசோ இக் குறைகளைக் களைய மறுத்துவிட்டது. குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் இருந்து காவல்துறையினர் எவ்வாறு போலி சாட்சிகளைத் தயார் செய்து தப்பித் துக் கொண்டனர் என்பது வெளிப்பட்டது. பில்கிஸ் பானுவை வன்புணர்ச்சி செய்துவிட்டு, அவளது 3 வயது மகள் உள்பட 14 உறவினர்களைக் கொலை செய்த 11 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் சில குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதுவும் பில்கிஸ் பானு மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி அமைப்புகளின் ஆதரவு பெற்ற மனித உரிமைப் போராளி டீஸ்டா சேடல்வாட் ஆகியோரின் இடைவிடாத முயற்சியால் இது நடந்தது. என்றாலும், இதில் தொடர்புடைய அய்ந்து காவல்துறையினர் விடுதலை பெற்றுள்ளனர். போலி சாட்சியம் அளித்ததற்காக அவர்கள் மீதான வழக்கைத் தொடர வேண்டும் என்று பில்கிஸ் விரும்புகிறார்.
முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க. வின் அனைத்துக் கூட்டங்களையும், கருத்தரங்குகளையும், விவாதங்களையும், பேச்சுக்களையும் கடந்த நாற்பது ஆண்டு காலமாக நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்போதுமே தீண்டாமை பற்றிய கேள்வியை எழுப்பியதே இல்லை? இந்துக்களிடையே உள்ள ஜாதி நடைமுறை மிகவும் அடக்குமுறை நிறைந்த ஒன்றாக உள்ளது. பா.ஜ.க.வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் கட்சி என்பது இதன் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். இதனை சீர்திருத்தவேண்டும் என்று பா.ஜ.க. எப்போதாவது நினைத்திருக்கக்கூடும் என்று நான் நினைக்கவே இல்லை. உண்மையைக் கூறுவதானால், அனைத்து மக்களுக்கும் பொருளாதார சமத்துவம் அளிக்கும் எந்த சட்டத்தையும் பா.ஜ.க. விரும்புவது இல்லை. உயர்ஜாதி மக்களின் கட்சி அது. தொடக்க நாள் முதல் அக்கட்சிக்கு மிகவும் பிரியமானது என்ன வென்றால் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களை, இழிவு படுத்தி கொடுமைப் படுத்துவதுதான். இந்து தாலிபான்களுடன் ஒப்பிடும்போது, முஸ்லிம் தாலிபான்கள் இந்தியாவில் தீவிரமாகச் செயல்பட வில்லை என்றாலும், இந்தியாவில் அவர்கள் இருந்து கொண்டுதான் உள்ளனர். சைத்தானின் பாடல்கள் என்ற நூலின் ஆசிரியர் சல்மான் ருஷ்டிக்கு விருந்து அளித்ததற்காக தொழிலதிபர் காத்ரெஜ்க்கு எதிராக தாலிபான்கள் சில நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தினார்கள். காத்ரெஜ் தயாரிக்கும் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கோரினார்கள். இந்தக் கலவரக்காரர்களுடன் பல முஸ்லிம்கள் தொடர்பு கொண்டவர்கள் அல்ல. என்றாலும் அவர்களுக்கு எதிராகப் பேச அந்த சமூகத்தினர் எவருக்கும் துணிவில்லாமல் போனது. அந்த மதவாத வெறியர்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சம் மக்களிடையே நிலவியது. பொதுமக்களின் மனதில் அத்தகைய அச்சத்தை உருவாக்குவதே அவர்களின் ஆயுதமாகும்.
வங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விவகாரத்தில் அவர்கள் இந்திய அரசை ஏற்கெனவே ஊமையாக்கிவிட்டார்கள். உலகத்தாரிடமிருந்து அவரை தனிமைப்படுத்திய அரசு அவரை டில்லியிலேயே தங்கச் செய்துவிட்டது. இவ்வாறு வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டிருப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அரசோ அல்லது முஸ்லிம் சமூகமோ அவரது சுதந்திரத்தைப் பற்றி எந்த உணர்வும் அற்றவர்களாக உள்ளனர். ஒரு நாள் வெளியுறவுத் துறை அலுவலகத்துக்கு அழைக்கப் பட்ட அவரிடம் அய்ரோப்பாவுக்குச் சென்று விடுமாறு கூறப்பட்டது. நம்பிக்கை கொள்ள முடியாத இந்தியா எவ்வாறு அவரை நடத்தியிருக்கிறது பார்த்தீர்களா!
நன்றி: டெக்கான் கிரானிகிள், 4.2.2008
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.
————————————————————————————————————————————————————————–
அது பம்பாய் காலம்…
டி.ஜே.எஸ். ஜார்ஜ்
சில நாள்களுக்குமுன் காலமான பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. கரஞ்சியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே பம்பாயில் ‘வட இந்தியர்’களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர் குண்டர்கள். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. ஆனால், சிறப்புமிகு விழுமியங்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருப்பதையும், மறுபுறம் அந்த இடத்தில் தேசபக்தி என்ற போர்வையில் குண்டர்களின் ஆட்சி தலைதூக்கிக் கொண்டிருப்பதையும் அவ்விரு சம்பவங்களும் சித்திரித்தன.
அந்த நாளைய பெருமைக்குரிய பம்பாயின் சின்னமாகத் திகழ்ந்தவர் ருஸ்ஸி கரஞ்சியா. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலான சமயங்களில் காந்திஜி தங்கியிருந்தமையால் ஒரு வகையில் 1940-களில் இந்தியாவின் அரசியல் தலைநகரம் போலவே திகழ்ந்தது பம்பாய். காந்திஜி தங்கியிருந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தார் ஜின்னா.
1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக மட்டுமன்றி, நாட்டியம், நாடகம், இலக்கியம், ஓவியம் ஆகிய கலைகளின் தலைநகரமாகவும் மேட்டுக்குடி வாழ்க்கை நளினங்களின் இருப்பிடமாகவும் அறிவுச்சுடர் பிரகாசிக்கும் நகரமாகவும் திகழ்ந்தது பம்பாய். கொடுக்கவும் எடுக்கவும், பகிரவும் கற்கவும் உலகமே கூடும் இடமாக இருந்தது பம்பாய்.
எடுத்துக்காட்டாக, அன்று கலா கோதா பகுதியில் உள்ள ஓர் அறையில் முற்போக்குக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சமுதாயத்துக்கு அறிமுகமே ஆகியிராத, படைப்பார்வமிக்க கே.எச். ஆரா, வி.எஸ். கெய்தாண்டே, எஸ்.எச். ராஸô, எப்.என். செüஸô, எம்.எப். ஹுசைன், கே.கே. ஹெப்பார் போன்றவர்கள். இன்று அவர்கள் கலை உலக மகுடத்தில் மாணிக்கங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலா கோதாவோ, இன்று உலகின் சிறந்த கலைநகரங்களுக்கு இணையானது என்று கூறும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.
தற்செயலாக நிகழ்ந்ததோ, என்னவோ; ஆனால், அன்றைய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் காக்க வந்த தேவதைகளைப்போல வந்தனர், ஜே.ஜே. கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் வால்டர் லாங்கமர், விளம்பர உலகின் குருவான ரூடி வான் லேடன், பத்திரிகை ஆசிரியரான சி.ஆர். மண்டி ஆகிய திரிமூர்த்திகள். ஒரு முழுத் தலைமுறையின் அழகியல் உணர்வுகளை, சிந்தனைகளை வடிவமைத்து வளர்த்தெடுத்தனர் அவர்கள்.
ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தியர்களா, வட இந்தியர்களா என்று யாரும் அன்று கேட்கவில்லை. அன்றைய பம்பாயின் சிறப்பு அத்தகையது. ‘இந்தியாவின் உயிரோடு கலந்தது; அதன் ஓர் அங்கம்’ என்ற, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பர்மா ஷெல் நிறுவன விளம்பர வாசகங்களைப்போல, இந்திய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் அவர்கள்.
அன்று பாரீஸ் நகரிலிருந்து இந்தியா திரும்பிய ராஜா ராவ் அளித்த உத்வேகத்தில், ‘சேத்தனா’ என்ற பெயரில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதுவும் கலா கோதா பகுதியில்தான் அமைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க ழான் பால் சாத்தரின் சிற்றுண்டிச்சாலையாக இருக்கவில்லை. அங்கு வழக்கமாக வருவோரில் முல்க் ராஜ் ஆனந்தும் ஒருவர்.
அங்கிருந்து சில கட்டடங்கள் தள்ளி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார், நாடக உலகுக்குப் புதிய திசைவழியைக் காட்டிய இப்ராகிம் அல்காஜி. அப்போது அங்கிருந்த ஒரே ஆடம்பர ஹோட்டல் தாஜ் மட்டும்தான். அன்றைய வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அம்பாசடர் ஹோட்டல். ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சி ஓஹோவென்றிருந்தது இந்தியா காபி ஹவுஸ்.
முற்றிலும் மாறுபட்ட நாகரிகத்துக்கு மாறத் தயாராக இருந்தவர்களுக்காகவே திறக்கப்பட்டிருந்தது கொலாபாவில் இருந்த லெப்போல்ட் கஃபே. ‘சாந்தாராமை’ப் பற்றி எழுதுவதற்கும். ‘லெப்போல்டை’ உலகம் முழுவதும் பிரபலமாக்குவதற்கும் கிரகோரி டேவிட் ராபர்ட்ஸýக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும்.
மொரார்ஜி தேசாய் ஆட்சி நடந்துகொண்டிருந்ததும், அவரது மதுவிலக்குக் கொள்கையும் அமலில் இருந்ததும் அந்த பம்பாயில்தான். ஒரு சுவர் அலமாரி முழுவதும் உலகின் மிகச் சிறந்த விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் அணிவகுத்து நின்ற, கரஞ்சியாவின் மெரைன் டிரைவ் இல்லம் இருந்ததும் அதே பம்பாயில்தான்.
உண்மையிலேயே உலகப் பண்பாட்டில் ஊறியவர் கரஞ்சியா. மாமனிதர்களுடன் பழகிய அதே நேரத்தில், சாமானியர்களின்பாலும் அக்கறை கொண்டிருந்தவர் அவர்.
தனது அலுவலக உதவியாளருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமானால், ஆசிரியர் குழுக் கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் கரஞ்சியா. தினமும் காலை 11 மணிக்கு நீர் கொண்டு தரும் கடைநிலை ஊழியருக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் தவறாதவர் அவர்.
பழைய உலகின் மாண்புகளையும் நவீன உலகின் நளினங்களையும் சிறந்த கலாசார விழுமியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியவர் ருஸ்ஸி கரஞ்சியா. அன்றைய சிறப்புமிகு பம்பாயைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் அவர்.
ஆனால் இன்றோ, போயேபோய்விட்டன அந்தப் பழைய பெருமைகளெல்லாம்.
(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)
————————————————————————————————————————————————————————–
சீனாவுக்கு இயற்கை விடும் சவால்!
க. ரகுநாதன்
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.
சீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.
பிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.
ஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
ஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
கடும் உறை பனிக்கு ‘லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.
உலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.
உலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.
பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.
மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.
உலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.
வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.
எல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.
உலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.
பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.
இல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்!
————————————————————————————————————————————————————————–
சோகத்தின் முடிவில் உதித்த காப்பீட்டுத் திட்டம்
டி.ஆர். சுதாகர்
நம்நாட்டின் பழம்பெரும் மிகப்பெரிய துறை தபால்துறை. அனைத்து கிராமங்களையும் நாள்தோறும் இணைக்கும் துறையும் அதுவே. இந்தியாவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் இயங்குகின்றன.
இத்துறை மௌனமாக ஒரு சாதனையையும் செய்துள்ளது. அது தான் காப்பீட்டுத் திட்டம்.
இந்திய அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் 125-வது ஆண்டில் தடம்பதித்து வெற்றி நடைபோடுகிறது.
இக் காப்பீட்டுத் திட்ட யோசனை உதித்ததே ஒரு சோகத்தின் முடிவில்தான்.
அது பிரிட்டிஷ் அரசு காலம். 1870-ம் ஆண்டு தபால் தந்தி துறையில் பணிபுரிந்த போஸ்ட் மாஸ்டர் ஒருவர் திடீரென்று நோய் தாக்கி உயிரிழந்தார். இவரது மறைவு அவரது குடும்பத்தை வறுமைச் சூழலில் தள்ளிவிட்டது. சக ஊழியர்கள் இக் குடும்பத்தினருக்கு உதவ பிரிட்டிஷ் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அரசோ இம்மாதிரி உதவுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கைவிரித்து விட்டது.
பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்கள் ஆதரவற்றுத் தவிக்கும் நிலையை உணர்ந்து அக் குடும்பங்களைக் காப்பாற்ற கண்டிப்பாக ஒரு திட்டம் கொண்டுவர வேண்டும் என்ற யோசனை உதித்தது. அது நாளடைவில் உண்மை என உணரப்பட்டு 1883-ல் இலக்கை எட்டியது. அப்போது தபால்துறையை நிர்வகித்து வந்த நிதி மற்றும் வர்த்தக இலாகா செயலர், லண்டனில் இருந்த இந்தியாவுக்கான செயலருக்கு 27-7-1883-ல் கடிதம் எழுதினார். தனது யோசனையையும் வேண்டுகோளையும் அதில் தெளிவுபடுத்தினார். இது மனிதாபிமான முறையில் சிந்திக்கப்பட்டு அதற்கு பிரிட்டிஷ் அரசு செயல்வடிவம் கொடுத்தது.
1884-ம் ஆண்டு தபால் ஊழியர்களிடம் இத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு இந்தியாவின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்த எப்.ஆர்.ஹாக் என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டது.
அப்போது, இத் திட்டத்தின்படி ஒரு தபால் ஊழியர் ரூ.50க்கு குறையாமல், ரூ.4 ஆயிரத்துக்கு மிகாமல் அஞ்சலக ஆயுள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
1888-ம் ஆண்டு தந்தித்துறை ஊழியர்களும், 1894-ம் ஆண்டு பெண் ஊழியர்களும் இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1884-ம் ஆண்டு, ரூ.14 லட்சம் மதிப்புள்ள பாலிசிகள் இருந்தன. தற்போது இத் திட்டத்தில் சுமார் 60 லட்சம் ஊழியர்கள் கோடிக்கணக்கான பாலிசி தொகைக்கு ஆயுள் காப்பீடு செய்துள்ளனர்.
தற்போது அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கென மாநில அளவில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.
நகர மக்களுக்கு மட்டும் கிடைக்கும் இத்தகைய சலுகை ஏன் கிராம மக்களுக்கும் கிடைக்கக்கூடாது என்ற கேள்வி எழுந்தது. இதைப் பயன்படுத்தி கிராம மக்களும் பயன்பெற இத் திட்டம் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
1995-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி முற்றிலும் கிராமப்புற மக்களுக்காக கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிராமப்பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் அனைவருக்கும் அதாவது 19 லிருந்து 55 வயது வரை உள்ளவர்களுக்கு இத் திட்டம் பொருந்தும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகபட்சம் ரூ.3 லட்சத்திற்கும் காப்பீடு செய்யலாம்.
முழு ஆயுள் காப்பீடு, குறித்த கால காப்பீடு, மாறுதலுக்கு உட்பட்ட முழு ஆயுள் காப்பீடு, எதிர்பார்ப்பு குறித்த கால காப்பீடு, 10 ஆண்டு கிராமிய அஞ்சலக காப்பீடு என 5 திட்டங்கள் உள்ளன.
தற்போது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை இருவரும் பாலிசிதாரர்களாக இருந்தால், அவரது குழந்தைகள் இருவருக்கு 5 முதல் 21 வயது வரை பாலிசி எடுக்கலாம். இதனால் அக் குடும்பத்தினருக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இதில் தாய், தந்தை யாராவது இறக்க நேரிட்டால் அந்த பாலிசிக்கான முதிர்வுத் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது. குழந்தைகள் இறக்க நேரிட்டால் அந்த பாலிசிக்கான பிரீமியம் வசூலிக்கப்படுவதில்லை. பாலிசி முதிர்வடைந்தபின் அக் குடும்பத்தினருக்கு இத் தொகை வழங்கப்படுவது இத் திட்டத்தின் சிறப்பம்சம்.
கடந்த ஆண்டு கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.34 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கோவை கோட்டத்தில் 4856 பரிந்துரைகள் செய்யப்பட்டு ரூ.40.64 கோடிக்கு பாலிசி எடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டு, சுமார் ரூ.10 கோடி அளவுக்குப் பாலிசி எடுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் குறைந்தபட்ச பிரீமியம் மட்டுமன்றி ஒவ்வொரு 20 ஆயிரம் ரூபாய் காப்பீட்டுக்கும் மாத பிரீமியத் தொகையில் ரூ.1 வீதம் சலுகை, ஓராண்டுக்குமுன் மொத்தமாகப் பிரீமியம் செலுத்தினால் 2 சதவீதம் தள்ளுபடி, அரையாண்டுக்கு 1 சதவீதம், காலாண்டுக்கு அரை சதவீதம் தள்ளுபடி உண்டு. இதில் 3 ஆண்டுகளுக்குப் பின் தேவைப்பட்டால் கடனுதவியும் வழங்கப்படுகிறது.
கிராம மக்களைக் காப்பாற்ற, அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதமாக, சேமிப்பிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.
————————————————————————————————————————————————————————–
மாற்றமும் ஏமாற்றமும்…
தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சியின் தொடர் விளைவாக ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளும் கொஞ்சநஞ்சமல்ல. முப்பது ஆண்டு உழைப்புக்குப் பிறகு ஒரு வங்கி அதிகாரி பெறும் ஊதியத்தைவிட, பட்டம் பெற்ற அடுத்த நாளே அவரது மகனோ மகளோ பெறும் ஊதியம் இரண்டு மடங்கு என்பது பெற்றோரைப் பொருத்தவரை மகிழ்ச்சியான விஷயம். ஆனால், சமுதாயத்தின் மிகச்சிறிய விழுக்காடு மட்டுமேயான இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்களிடம் காணப்படும் தாராளம், ஏனைய அனைத்துப் பிரிவினரையும் எல்லாவிதத்திலும் பாதிக்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.
நூறு கோடியைத் தாண்டிய மக்கள்தொகையில் அரை சதவிகிதம்கூட இல்லாத ஒரு பகுதியினரிடம் காணப்படும் பணப்புழக்கம், ஏனைய பிரிவினரின் அன்றாட வாழ்க்கையில் பெரிய புயலைக் கிளப்பி இருக்கிறது என்பது எரிமலைக் குமுறலாக இருந்து வருகிறது. அதிகரித்த வீட்டு வாடகை, எண்ணிப் பார்க்க முடியாத முன்பணம், அடங்க மறுக்கும் வீடு, மனை விலை, வாசனைத் திரவியங்கள், நுகர்பொருள்கள் மீதான மோகம் என்று ஏனைய பிரிவினரை கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் முடவர்களாக்கி இருக்கிறது இந்த திடீர் பணக்காரத்தனம்.
ஆனால், பணக்காரத்தனமும் அதன் வெளிப்பாடுகளும் தனி மனித சுதந்திரம் என்கிற கோஷத்துடன் வளையவரத் தொடங்கும்போது, அதன் எதிர்விளைவாக எழுகின்ற இயலாமையின் வெளிப்பாடு, அநாகரிகத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் அச்சாரம் போடுமோ என்பதுதான் நமது அச்சம். எங்களுக்கு உரிமையில்லையா என்று கேட்கும் இளைஞர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இதேபோல இருக்க உரிமை இருந்தும், அதற்கான வாய்ப்பில்லாத சக இளைஞர்களை நினைத்துப் பார்க்கும் கடமை அவர்களுக்கு இல்லையா?
அடுத்தாற்போல, இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் வேலை நேரம், அந்தந்த நிறுவனங்கள் தொடர்பு வைத்திருக்கும் நாடுகளின் வேலைநேரமாக இருப்பது புரிகிறது. நேரங்கெட்ட நேரத்தில் இளைய தலைமுறையினர் தங்களது உடல்நலத்தைப் பொருள்படுத்தாமல் பணம் சம்பாதிக்க முற்பட்டிருப்பது காலத்தின் கட்டாயம். இவர்களுக்குத் தகுந்த பாதுகாப்புத் தரப்பட வேண்டும் என்பதும், அலுவலகங்களுக்குச் சென்று வர போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கைகள்.
குறிப்பாக, பெண் ஊழியர்கள் போக்குவரத்து ஓட்டுநர்களால் பலாத்காரம் செய்யப்படும் நிகழ்ச்சிகளும், சக ஊழியர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படும் செய்திகளும் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்ச நீதிமன்றம் கர்நாடக நிறுவனம் ஒன்றின் தலைமை இயக்குநரை ஓட்டுநர் ஒருவரின் தவறான நடத்தைக்கு உத்தரவாதியாக்கும்படி கூறியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய பரிந்துரை.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர் குற்றம் சாட்டப்படுவார், தண்டிக்கப்படுவார் என்கிற பய உணர்வு இருந்தால்தான் இந்த நிறுவனங்களின் கண்காணிப்பு கடுமையாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தவரை, அந்தத் துறைக்கு இப்போது இருக்கும் முக்கியத்துவமும் அன்னிய நாடுகளின் ஆதரவும் குறைந்து விடுமோ என்கிற பயத்துடன் அரசு செயல்படாமல், நமது இளைய சமுதாயத்தினரின் வருங்கால நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு நியாயமான உரிமைகள் தரப்படுவதற்கு வழிகோல வேண்டும்.
எந்தவொரு மாற்றத்தையும் வளர்ச்சியையும் சட்டம் போட்டுத் தடுத்துவிட முடியாது. இளைய தலைமுறையின் தனிமனித சுதந்திரத்தை முடக்குவது என்பதும் நல்ல முடிவாக இருக்காது. ஆனால், சமுதாயத்தின் எல்லா மாற்றங்களையும், செயல்பாடுகளையும் தொலைநோக்குப் பார்வையுடன் நெறிப்படுத்தும் கடமை ஓர் அரசுக்கு உண்டு. இதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.
————————————————————————————————————————————————————————–
ஆளுக்கொரு நீதி…
அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தக்க நேரத்தில் ஒரு தீர்ப்பு மூலம் அறிவுரை கூறியிருக்கிறது.
பிகார் மாநிலத்தில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்கள், தங்களுக்கும் மத்திய அரசில் பணிபுரியும் கால்நடைத்துறை டாக்டர்களின் ஊதிய விகிதமே வழங்கப்பட வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இரு அரசுகளின் டாக்டர்களும் செய்வது ஒரே வேலையைத்தானே, ஊதிய விகிதமும் ஒன்றாக இருந்தால் என்ன என்று பாட்னா உயர் நீதிமன்றம் பகுத்தறிவோடு சிந்தித்து, பிகார் கால்நடைத்துறை டாக்டர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.
உடனே பிகார் அரசு இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. “பிகார் மாநில கால்நடைத்துறை டாக்டர்களின் பணிமுறை, பணியாற்ற வேண்டிய பகுதி, அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் போன்றவற்றில் மத்திய அரசு டாக்டர்களுடன் ஒப்பிடும்போது வேறுபாடுகள் உள்ளன. அதுமட்டும் அல்லாது மத்திய அரசுக்குள்ள நிதி வசதி பிகார் போன்ற மாநிலங்களுக்குக் கிடையாது. அப்படியிருக்க மத்திய அரசின் ஊதிய விகிதத்தை கால்நடை டாக்டர்களுக்கு அமல்படுத்தினால் அதையே முன் உதாரணமாகக் கருதி மற்ற பிரிவினரும் கேட்கத் தொடங்கலாம். இது பெரிய பிரச்னையில் கொண்டுபோய்விடும்’ என்று சுட்டிக்காட்டியது.
உடனே பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், “ஊதிய விகிதத்தைத் தீர்மானிக்க வேண்டியது அரசின் நிர்வாகத்துறை; அதில் தேவையில்லாமல் நீதித்துறை தலையிட வேண்டியதில்லை’ என்று தக்க நேரத்தில் அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழக அரசுக்கு, அதிலும் குறிப்பாக முதல்வர் கருணாநிதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு; மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் ஊழியர்கள் கேட்க வேண்டும் என்றுகூட காத்திராமல் உடனே அறிவித்து அவர்களுடைய நன்றியையும் பாராட்டையும் பெற்றுவிடுவார்.
மத்திய, மாநில அரசுகளின் ஊதியக்குழுக்களின் நிழலே படியாத பொதுமக்கள்தான் பாவம், இதையெல்லாம் ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது.
அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறைகளில், “செய்யும் வேலைக்கு கூலி’ என்று மட்டுமே பேசப்படுகிறது. அதே போல வேலைக்கு வராத நாள்களுக்கு கூலி கிடைக்காது.
அரசு ஊழியத்தில்தான் அடிப்படை ஊதியம் தவிர, அகவிலைப்படி (விலைவாசி உயரும்போதெல்லாம் மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில் அதை 3 மாதங்களுக்கு ஒருமுறை ஈடு செய்யும் ஏற்பாடு), நகரங்களில் பணிபுரிந்தால் நகர ஈட்டுப்படி, வாடகைப்படி, சிறப்புப் படி, இடர்ப்படி என்று “படிப்படியாக’ பல படிகள் அளக்கப்படுகின்றன. (இவையே போதாது என்ற மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளிலும் நியாயம் இல்லாமல் இல்லை.)
இவை போக, ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுதோறும் “இன்கிரிமெண்ட்’ எனப்படும் ஊதிய உயர்வு. அதுபோக ஊதியக் குழுக்களின் பரிந்துரைகளுக்குப் பிறகு -அதுவும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே -ஊதிய உயர்வு என்று அரசு ஊழியர்களின் காலம் கழிகிறது.
நாடு முழுக்க ஒரே மாதிரியான தொழில் செய்கிறவர்களுக்கு, ஒரே மாதிரி ஊதியம் கிடைக்க “”தேசிய ஊதியக் கொள்கை நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்போது அந்தக் கோரிக்கையே “கங்கை-காவிரி இணைப்பு’ போல நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் பட்டியலில் சேர்ந்துவிட்டது.
வேளாண்மை, தொழில், சேவை ஆகிய துறைகளிலேயே வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே ஊதிய வேற்றுமை நிலவுகிறது. ஒரு மாநிலத்துக்குள்ளேயே வெவ்வேறு மாவட்டங்களில் ஊதியம் வேறுபடுகிறது. நாட்டிலேயே வடக்கு, மேற்கு மாநிலங்களில் ஊதியம் கட்டுபடியாகும் விதத்திலும் கிழக்கு, தெற்கு பகுதிகளில் மிகவும் குறைவாகவும் இருக்கிறது.
அமைப்புரீதியாகத் திரட்டப்படாதவர்களும் இந் நாட்டின் வாக்காளர்கள்தான் என்றாலும், அவர்களுக்கு அரசியல் தெளிவு இல்லாததால் அவர்களுடைய குடும்பங்களில் மொத்தம் எத்தனை வாக்குகள் என்று கணக்கிட்டு சலுகைகள் தரப்படுவதில்லை. கூலி உயர்வு கேட்கக்கூட ஒரு அந்தஸ்து தேவைப்படுகிறது இந்த நாட்டிலே!
————————————————————————————————————————————————————————–
கவியும் வாழ்வும்
அஜயன் பாலா
உலகம் சொற்களால் ஆனது! சொற்கள் இல்லாத ஓர் உலகத்தை நம்மால் கற்பனையில்கூட யோசிக்க முடியாது.
ஒரு சமூகம் தனது ஞாபகங்களைச் சொற்களின் பயன்பாட்டினூடே கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் சேகரித்து வைத்துக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக வரலாற்றையும் கலாசாரத்தையும் கடத்தி வருகிறது. இந்தச் செயல்பாடு இல்லாத ஒரு மொழியில் சொற்கள் அர்த்தகனத்தைச் சுலபமாக இழந்துவிடுகின்றன.
இவ்வாறாக ஒரு சமூகத்தின் ஆன்ம வளர்ச்சிக்கு இறைச்சிப் பொருளாக விளங்கும் கவிஞனின் சொற்களும் வாழ்வும் காலங்காலமாக பரிதாபத்துக்குரிய நிலையில்தான் இருந்து வருகின்றன. வாழும்போது பாரதிபட்ட துன்பங்களும், அவமானங்களும் இன்று கதைகளாகவும் காவியங்களாகவும் சிலாகிக்கப்படுகின்றன. தனது ஒத்துவராத இயல்பு காரணமாக சமூகத்தில் அவர் பட்ட துன்பங்களின் கதைகள் நம் யோசனைக்கு அப்பாற்பட்டது. வாழும்போது கவிஞனை இம்சித்துப் பார்க்கும் இதே சமூகம், இறந்த பிறகு அவனுக்கு சிலை வைத்து கொண்டாடுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை.
பாரதிக்குப் பிறகு வந்த இத்தகைய தீவிர மனநிலை கொண்ட கவிஞர்களில் நகுலனும், பிரமிளும் குறிப்பிடத்தக்கவர்கள். மனித மனத்தின் இயல்பு குறித்தும், பிரபஞ்சத்திற்கும், இவற்றிற்குமிடையேயான தொடர்பு குறித்தும் கவிதை எழுதியவர்கள். அதேபோல வெளி உலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளாமல் ஒரு வித எள்ளல் தன்மையுடன் அவதானித்தவர்கள். இருவருமே அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளைச் சிதறடித்துப் பதில்களையே கேள்விகளாக்கி தங்களது தீவிர மனநிலையை வெளிப்படுத்தியவர்கள். இருவரில் நகுலனுக்கு வீடே உலகமாக இருந்தது. ஆனால் பிரமிளுக்கு உலகமே வீடாக இருந்தது. இருவரில் பிரமிளுடன் நான் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரோடு சில பொழுதுகளில் உரையாடியிருக்கிறேன்.
அப்போது சென்னை ரங்கநாதன் தெருவில் “முன்றில்’ என்ற பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. முன்றில் சிற்றிதழின் ஆசிரியரான மா. அரங்கநாதன் மற்றும் அவரது மகன் மகாதேவன் ஆகிய இருவரும் அதனை நடத்தி வந்தார்கள். அப்போது மாலை நேரங்களில் எழுத்தாளர்கள் அங்கு கூடுவது வழக்கம். நான் அப்போது நகரத்திற்குப் புதியவன். நண்பர் ஒருவரின் பரிச்சயத்தின்பேரில் அந்தக் கடைக்குச் செல்லத் தொடங்கினேன்.
சஃபி, கோபிகிருஷ்ணன், லதா ராமகிருஷ்ணன், சி. மோகன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், நாகார்ஜுனன், சாருநிவேதிதா, யூமா வாசுகி என பலரும் அங்கு வந்து செல்வர். இதனாலேயே அப்போது நான் பணி செய்து கொண்டிருந்த புலனாய்வு பத்திரிகையின் பணி முடிந்ததும் அந்த இடத்திற்கு விரைவேன். அதுபோல நான் விரைந்து சென்ற ஒரு நாளில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவாக்கில் ஒல்லியாக, ஜோல்னா பை கண்ணாடி சகிதம் அமர்ந்திருந்தவரைப் பார்த்தேன்.
கூர்மையான நாசி மற்றும் விழிகளுடன், மீசை தாடி சுத்தமாய் ஷேவ் செய்யப்பட்டு மழுமழுவென முகம். அவர்தான் பிரமிள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அவரிடம் பேசி பரிச்சயமும் செய்து கொண்டேன். பேச்சினூடே சினிமாக்கள் மீது அவருக்கிருந்த ஈடுபாடு என்னைக் கவர்ந்தது. ஒரு சினிமா தொடக்க காட்சியிலிருந்து இறுதிவரை க்ளைமேக்சை நோக்கியே நகர வேண்டும். நல்ல திரைக்கதை அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என பேச்சினூடே கூறினார்.
நண்பர்கள் மூலமாக அவரது முகவரியைப் பெற்றுக்கொண்டேன். அடுத்த இரு நாள்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டைத் தேடிச் சென்றேன். அப்போது அவர் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார். வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தால் கீழே பெரும் பன்றிக்கூட்டம் உணவுப்பொருள்களுக்காக சதா இரைச்சலிட்டபடி காணப்படும். அங்கே வசித்த யாரோ அதனைக் கூட்டமாக வளர்த்து வந்தனர். பிரமிள் தனியாக அங்கே வசித்து வந்தாலும் பெரும்பாலும் அங்கிருப்பவர்களிடம் நன்மதிப்பு பெற்றவராகவே இருந்தார். வீட்டைத்தேடி வந்தபோது குடியிருந்தவர்களின் பாவனையிலிருந்தே இதனை என்னால் யூகிக்க முடிந்தது. அந்தச் சிறிய அறையில் ஒரு மூலை முழுக்க வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள். அதற்கு முன் பிரமிளை சந்தித்தபோது வம்பை விலை கொடுத்து வாங்குவதுபோல என பலர் எச்சரித்தனர். ஆனால் அவர் என்னைச் சற்று கேலியும் கிண்டலுமாக அணுகினார்.
பேச்சினூடே சற்று நேரம் நிதானமாக என்னைத் தனது சோடாபுட்டி கண்ணாடி வழியாக ஊடுருவிப் பார்ப்பார். அன்றைய காலகட்டத்தின் சக எழுத்தாளர்கள்பற்றி விசாரித்தார். நீ அவனுடைய ஆளா என கேள்வி கேட்டார். அப்போது அவருக்கும் பல எழுத்தாளர்களுக்கும் மிகப்பெரிய சர்ச்சைகள் சிற்றிதழ்களில் ஓடிக் கொண்டிருந்த நேரம்.
அன்று எனக்கும் சேர்த்து அவரே உலை போட்டார். குக்கரில் வடிப்பதுபோல சிறிது தண்ணீர்கூட கஞ்சியாக வெளிப்படாமல் அலுமினியப் பாத்திரத்தில் சாதம் வடிக்கிறேன் பார் என்றார். அதுபோல வடித்துக் காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அரிசிக்கும் தண்ணீருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்றார். பின் ரசம் மற்றும் ஊறுகாயுடன் அன்றைய என் பகல் பொழுது கழிந்தது.
அப்போது அவருக்கு எப்படியும் 54 வயதிருக்கும். அவரிடம் கேட்டபோது அப்படித்தான் சொன்னார். நானும் அவரும் அன்று வெளியில் இறங்கி நடந்தோம். எனக்கு உள்ளூர பெருமிதம். காலத்தின் மிகச்சிறந்த கவிஞனோடு வீதியில் நடந்து செல்கிறோம் என்ற உணர்வு.
ஆனால் எங்களைக் கடந்து சென்ற எவரும் அந்த ஸ்மரனை இல்லாது கடந்துபோவது என்னை ஆச்சரியப்படுத்தியது. இப்போது யோசிக்கும்போது என் அதீதம் நகைப்பை வரவழைக்கிறது என்றாலும் அப்போது பதட்டமான மனநிலையில் நகரத்திற்குப் புதிதாக அறிமுகமாகியிருந்த எனக்கு, அப்படியான உணர்வுதான் இருந்தது.
பின்னர் இருவரும் சற்றுதூரம் உஸ்மான் ரோட்டில் நடந்து சென்றபின் எதிரே ஒரு பசு எதிர்ப்பட்டது. அந்தப் பசுவின் முன் நெடுநேரம் அவர் நின்றார். அந்தப் பசுவும் சலனமில்லாமல் அவர் முன் நின்றது. இருவரையும் புறச் சூழலையும் நான் மாறி மாறிப் பார்த்தபடி அங்கே நின்றிருந்தேன். சாலையில் கடந்து செல்வோர் எங்களை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டபோது அவரிடம் நான், ஏன் எதற்காக அப்படி நின்றீர்கள், என்றேன். நான் பசுவோடு பேசிக் கொண்டிருந்தேன் என்றார். சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். அவர் சொன்னது உண்மையா, பொய்யா எதையும் நான் யோசிக்கவில்லை. ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனைப்போல ஒருவித களிப்பு அப்போது என்னுள் நிறைந்திருந்தது.
இரண்டாவது முறை அவர் வீட்டிற்குச் சென்றபோது இருவரும் வெளியில் இறங்கி வெகுதூரம் நடந்தோம். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி இறங்கி ஒரு புத்தக அலமாரி குறித்து விசாரித்தோம். அவர் எதிர்பார்த்ததை விட நல்ல அலமாரி கிடைத்தது. போதிய பணம் கொண்டுவராததால் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு மீண்டும் பாலத்தில் ஏறி இருவரும் உஸ்மான் ரோடு பக்கமாக நடந்து வந்தோம்.
அப்போது பரவாயில்லை உன்னோடு வந்தால் காரியம் கூடுதலாகப் பலிதமாகிறது என மகிழ்ச்சியுடன் கூறினார். எல்லாம் சில நொடிகள்தான். சட்டென பேச்சு, மா. அரங்கநாதன் குறித்து எழுந்தது. அப்போது இருவரும் சிற்றிதழ்களில் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். இந்தப் பிரிவு எனக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
நான் இதுகுறித்து பேச்சு எடுத்ததும் உடனே அவர் முகம் மாறியது. எனக்குத் தெரிந்துவிட்டது நீ அவனுடைய ஆள் எனக் கூறியபடி அவசரமாக என்னைப் பிரிந்து எதிர்சாரிக்கு வேகமாக ஓடி ஒரு “ஸ்டூடியோ’வினுள் நுழைந்துகொண்டார். அங்கிருந்த நபர்களிடம் என்னைக் காண்பித்து ஏதோ சொன்னார். கடைக்காரர்கள் வெளியில் வந்து என்னைப் பார்த்தனர். உடனே நானும் அந்த இடத்தைவிட்டு அகன்றேன். எனக்கு வருத்தமாக இருந்தது.
அவரிடம் ஏன் இதுகுறித்து பேச வேண்டும் என என்னை நானே நொந்துகொண்டேன். ஒரு குழந்தையைப்போல அவர் ஓடிச்சென்றது இப்போது என் மனதில் காட்சி சித்திரமாக என்னைத் துன்புறுத்துகிறது. இது நிகழ்ந்து சில ஆண்டுகள் கழித்து அவர் இறந்த சேதி கேள்விப்பட்டபோது உண்மையில் என் கண்களில் நீர் துளிர்த்தது.
கடைசிவரை ஒரு நிம்மதியின்மை அவரை அலைக்கழித்தது. உலக நியதிக்கு ஆட்படாதவராக அவர் தன்னை முழுவதுமாக வேறு உலகத்தில் இருத்திக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
இதுபோன்ற கவிஞர்கள் குறித்து ஒரு சமூகம் எப்போதும் பிரக்ஞை இல்லாமல் சுழல்கிறது. இப்போது ஓரளவு நிலைமைகள் சாதகமாகத் தெரிகின்றன. ஆனால் எல்லா காலத்திலும் தீவிர மனநிலையும் சொற்களின் தேடலும் கொண்ட கவிஞன் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகவே செய்வான்.
இந்த முரணைப் புரிந்து கொள்வதும், இத்தகைய கவிஞர்கள் குறித்து நமது பொதுபுத்திக்கு உட்படுத்துவது மட்டுமே அவர்களுக்கு நாம் செய்யும் சரியான காரியமாக இருக்க முடியும்.
————————————————————————————————————————————————————————–
கல்கி 1
ஹிந்து நாளிதழில் ‘வாசகர் ஆசி¡¢யர்’ என்பதாக ஒருவர் −ருக்கிறார். −வர் வாசகர்கள் சார்பில் அவர்களுடைய விமர் சனங்களை ஏற்று, தேவைப்படும்போது விளக்கங்களும் அளிக்கிறார். −ன் றைய வாசகர் ஆசி¡¢யர் திரு. கே. நாரா யணனிடம் ஒரு வாசகர், “−றந்து போன வர்களின் சடலங்களைப் புகைப்பட மெடுத்துப் பிரசு¡¢க்கத்தான் வேண்டுமா? அதுவும் முதல் பக்கத்தில்?” என்று கேட் டிருக்கிறார். “பரபரப்புக்காகவே செய் யப்பட்ட கா¡¢யமாகத் தோன்றுகிறது. அருவருப்பை ஏற்படுத்துகிறது” என்கிறார்.
திரு. நாராயணன் பதிலளிக்கையில், தமக்கு அதில் விருப்பமில்லை என்றும் ஆனால், செய்தியின் முக்கியத்துவம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வென்றுவிடுகிறது என்றும் சொல்கிறார். −ன்று வன்முறை உலகெங்கும் தலை வி¡¢த்தாடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.
−து குறித்து, பலமணி நேரம் நீடிக்கும் பட்டிமன்றமே நடத்த நிறைய வாய்ப்புண்டு. வன்முறையையும் அதன் விளைவுகளையும் “டாம் அண்ட் ஜெர்¡¢” போன்ற கார்ட்டூன் சினிமாவாய்க்கூடக் காண்பிக்கக்கூடாது என்று அறிவுறுத்தும் மனநல நிபுணர்கள் −ருக்கிறார்கள்.
‘கல்கி’ −றந்தவா¢ன் உடலைப் படம் பிடித்து, தமது பத்தி¡¢கையில் பிரசு¡¢க்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக −ருந்தார். மிகப்பொ¢ய தலைவர்கள் காலமானால்கூட, அவர்கள் ஆரோக்கிய மாக −ருந்த நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பிரசு¡¢த்துத்தான் அஞ்சலி செலுத்துவார். ஒரே ஒரு சமயம் −தற்கு விதிவிலக்கு செய்தார். அது, மகாத்மா காந்தி காலமானபோது. அவரது −றுதி யாத்திரை படங்கள், ‘லாங்ஷாட்’ டில் மக்கள் வெள்ளத்தையும் ‘குளோஸ் அப்’பில் அண்ணல் மீளாத் துயில் கொண்டிருப்பதையும் காட்டின. “−தை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்?” என்று கேட்டபோது, “காந்தியடிகள் மானுடர் அல்ல; அவதார புருஷர். அவ ருக்கு ஜனனமும் −ல்லை மரணமும் −ல்லை” என்றார் ‘கல்கி’. ‘மாந்தருக் குள் ஒரு தெய்வம்’ என்று மகுடமிட்டு, காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து எழுதினார்.
‘கல்கி’ அவர்களுக்கு வேறு சில உறுதியான கொள்கைகளும் −ருந்தன. அவற்றை, −ன்று வரை கல்கி பத்தி¡¢கை மட்டுமின்றி, கல்கி குழுமப் பத்தி¡¢கை கள் அனைத்துமே கடைபிடிக்க முயன்று வருகின்றன. மது விளம்பரங்களை கல்கி பத்தி¡¢கை தொடக்க காலத்திலிருந்தே விலக்கிவிட்டது. மதுவிலக்கு பிரசாரத்துக் கென்றே திருச்செங்கோடு காந்தி ஆசிர மத்தில் ராஜாஜியால் நடத்தப்பட்ட ‘விமோசனம்’ பத்தி¡¢கையில் பல சிறு கதைகளை, பிரசார நோக்கிலேயே எழுதி யவர் ‘கல்கி’. தமது பத்தி¡¢கையில் மது விளம்பரங்கள் மட்டுமின்றி, மது அருந் துதல் பற்றிய வர்ணனையோ படமோ −டம்பெறக் கூடாது என்பதில் கண்டிப் பாக −ருந்தார்.
ஆரம்ப காலத்தில் கல்கி, சிகரெட் விளம்பரங்களைப் பிரசு¡¢த்து வந்தது. ஒரு கால கட்டத்தில் சிகரெட் பிடிப்பதால் புற்றுநோய் வரும் என்று தொ¢ய வந்த போது, சிகரெட் விளம்பரங்களை ஒதுக்கி விடும்படி சதாசிவம் அவர்களிடம் ராஜாஜி கேட்டுக்கொண்டார். அதை உடனே ஏற்றுக்கொண்ட சதாசிவம், வரு மான −ழப்பை லட்சியம் செய்யாமல், ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்த விளம்பரங்களைக்கூட ரத்து செய்து, சம் பந்தப்பட்டவர்களுக்கு விளக்கமும் வருத் தமும் தொ¢வித்துக் கடிதங்களை எழுதினார்.
சில தினங்கள் சென்று பேச்சு வாக்கில் ராஜாஜியிடம், அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டதை சதாசிவம் தொ¢ வித்தார். “அது சா¢, ஆனால், நமக்குப் பூரணமாக நம்பிக்கை −ல்லாத ஒரு விஷயத்தில், சமுதாய நன்மைக்காக ஈடு பாடு காட்டுவதுகூட தர்மமாகாது” என் றார் ராஜாஜி. அவர் என்ன நோக்கில் சொல்கிறார் என்பதை உடனே பு¡¢ந்து கொண்ட சதாசிவம், “புகையிலை போடுவதை −ந்த வினாடியிலிருந்து விட்டுவிட்டேன்” என்று மின்னல் வேக சபதம் செய்தார். ராஜாஜிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது சதாசிவத் துக்கு ரொம்பச் சிரமமாகத்தான் −ருந் தது. ஆனால், அவருடைய மனோதிடம் வென்றது. கிராம்பு அதற்குப் பொ¢தும் உதவியது. சில மாதங்களில் கிராம்பு மெல் வதையும் துறந்துவிட சதாசிவத்தால் முடிந்தது.
ஜனத்தொகை பெருக்கத்தைக் குறைக்க, குடும்பக் கட்டுப்பாடு விளம்பரங்களையும் ஆணுறை விளம்பரங்களையும் சமுதாய நலன் நோக்கில் பிரசு¡¢க்கலாமா என்பது குறித்து, கல்கி கா¡¢யாலயத்தில் பொ¢ய விவாதமே நடந்தது. கடைசியில் பிரச்னை ராஜாஜியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ‘குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் மனிதனுக்குத் துணிவைத் தந்து, தவறான திசைகளில் செல்ல ஊக்கு விக்கும்; சமுதாய சீர்கேட்டுக்கே வழிவகுக் கும்’ என்பது ராஜாஜியின் வாதமாக −ருந் தது. ‘மனக் கட்டுப்பாடே முக்கியம்’ என்று ராஜாஜி உறுதிபட எழுதியும் −ருக்கிறார். −தையட்டி, ஆணுறை விளம்பரங்களை கல்கியில் ஏற்பதில்லை என்று முடிவா யிற்று. −ன்று பத்தி¡¢கைகளில் −டம் பெறும் ஆணுறை விளம்பரங்கள் ஆபா சத்தின் உச்சத்துக்கே சென்றிருப்பதைப் பார்த்தால், ராஜாஜி கூறியது எவ்வளவு உண்மை என்பது தொ¢யவரும். முறை கேடான வாழ்க்கையால் நிகழக்கூடிய பின் விளைவு பற்றிய பயம் அடியோடு போய் விட்டது.
‘கல்கி’, பகுத்தறிவுப் போட்டியின் (ஞிணூணிண்ண் தீணிணூஞீ) எதி¡¢ அல்ல. ஆனால், பெருந் தொகைகளைப் பா¢சாக வைத்து ஆசை காட்டி, கூப்பனுக்குக் கட்டணம் வசூலிப் பதைக் கடுமையாகக் கண்டித்தார். குதி ரைப் பந்தயம் போன்ற சூதாட்டங்களை எதிர்த்து, கதைகளும் கட்டுரைகளும் நிறைய எழுதினார்.
நேரடியாகவோ மறைமுகமாகவோ தனி நபர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி எழுதுவதும் வதந்திகளைப் பரப்புவதும் ‘கல்கி’ அவர்களுக்கு ஒவ்வாத விஷயங்கள். யாரையும் தனிப்பட்ட முறையில் அவர் தாக்கியது கிடையாது. கொள்கை அளவில் தான் அவருடைய பேனா யுத்தங்கள் எல் லாமே நிகழ்ந்தன. எனக்குத் தொ¢ந்து −ரண்டே தடவைகளில் அவர் தமது கொள்கையிலிருந்து சற்றே சறுக்கி, தனி மனிதர்களைத் தாக்குவது போன்ற தலைப் புகள் தந்துவிட்டார்!
பாரதி மணிமண்டபம் திறப்பு விழாவின்போது, அழைக்கப்பட்டு வந்த வர்களுக்குப் போதிய கவனிப்பு, உபசாரம் −ல்லை என்று குறைப்பட்ட பேராசி¡¢யர் அ.சீனிவாசராகவன் அவர்களுக்கு, பதி லளிக்கும் விதமாக எழுதிய கட்டுரைக்கு, ‘அட, சீ! ராகவா!’ என்று தலைப்பு தந்து விட்டார். (‘சாவி’ நடத்தி வந்த ‘வெள்ளி மணி’ பத்தி¡¢கையில் −டம்பெற்ற கட்டுரை). −தேபோல் ராஜாஜியிடம் கொண்டிருந்த அபா¢மித பக்தி காரணமாக, காமராஜரை விமர்சித்து எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘பொ¢ய மனிதரும் சின்ன புத்தியும்’ என்று தலைப்பு கொடுத்துவிட் டார். கட்டுரைகளில் தனி நபர் தாக்குதல் −ல்லை; கொள்கை அளவில் விவாதம் தான் என்றாலும், தலைப்புகள் −ப்படி அமைந்துவிட்டதற்காக ‘கல்கி’ வருத்தப் பட்டதுண்டு; வெளிப்படையாக ஒப்புக் கொண்டதும் உண்மை.
நான் கல்லூ¡¢யில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில், “காலேஜி லிருந்து திரும்பி வரும்போது, ‘ஹிக்கின் பாதம்’ஸில் நுழைந்து நவீன நாவலாசி¡¢ யர்கள் எழுதிய புத்தகங்கள் ஒன்றிரண்டு வாங்கி வா” என்று உத்தரவு போடுவார். குஞிணிணாணா, ஏதஞ்ணி, ஈதட்ச்ண் போன்றவர்கள் எழுதிய நாவல்களைப் படித்த அதே ஆர்வத்துடன் அன்றைய சமகால நாவலாசி¡¢யர்களின் நாவல்களையும் விரும்பிப் படிப்பார். ணிணூஞித்தூ, ஓšடூடூச்ணஞீ, ஙிடšச்ணாடூšதூ, ஙிணிஞீšடணிதண்š, šதிடிடூ ண்டதணாš போன்ற பல எழுத்தாளர்களின் நாவல்களை, அவருக்காக நான் வாங்கி வந்து தந்திருக்கிறேன். ஒரு சமயம், புதிய எழுத்தாளர் ஒருவரது புத்தகத்தைத் தேர்வு செய்தேன். பின் அட்டையில் அந்த நாவ லைப் பற்றிய சிறு அறிமுகத்தைப் படித்த போது, மிக நன்றாக −ருக்கும் என்று தோன்றியது. வாங்கி வந்து கொடுத்தேன்.
மறுநாள் காலை கையில் காப்பியுடன் அப்பாவை எழுப்ப அவர் அறைக்குள் நுழைந்தபோது, அந்தப் புத்தகம் சுக்கு நூறாகக் கிழிக்கப்பட்டு, குப்பைத் தொட்டி யில் போடப்பட்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டேன். காப்பியைக் கொடுத்து விட்டு, “என்னப்பா −து!” என்று குப்பைத் தொட்டியைச் சுட்டிக்காட்டிக் கேட்டேன். “வெறும் குப்பை” என்றார். “ஐயோ! ஐந்து ரூபாய் ஆயிற்றே!” என்றேன். (அந்த நாளில் ஐந்து ரூபாய் மிகப் பொ¢ய தொகை.) “தொலையட்டும்! ஐந்து ரூபாய் கெட்டுப் போனால் சம்பாதித்துக்கொள்ள லாம்; மனம் விகாரமடைந்தால் சா¢ பண்ண முடியாது” என்றார். பத்தாவது பக்கத்தி லேயே படிப்பதை நிறுத்தி, கிழிப்பதை ஆரம்பித்துவிட்டார் என்றும் தொ¢ய வந் தது. −ந்தத் தண்டனையை, சில தமிழ்ப் பத்தி¡¢கைகளும் ‘கல்கி’யிடம் பெற்றிருக் கின்றன. ஒரு கதை ஆபாசத்தின் விளிம்பை நெருங்கினால் போதும்; கோபம் பொங் கும்; ‘டர்ர், டர்ர்’ தொடரும்! ஆபாச திரைப் படங்களைக் கிழிக்க முடியாததால், விமர் சனங்களில் அவற்றைக் கிழி கிழி என்று கிழித்தார்! நல்லனவற்றை வரவேற்கவும் எப்போதும் தயாராயிருந்தார்.
‘பத்தி¡¢கை தர்மம் என்றால் என்ன?’ என்று கல்கி பத்தி¡¢கை தொடங்கி −ரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வி¡¢வாக எழுதி னார் அதன் ஆசி¡¢யர். ஆனால், முதல் −தழிலேயே அவர் ‘கல்கி பத்தி¡¢கையின் நோக்கம்’ என்று சொல்லி எழுதிய −ரண்டு வார்த்தைகள், பத்தி¡¢கை தர்மத்தைக் குறித்து பல பக்கங்கள் எழுதுவதற்குச் சம மானது. அந்த −ரு சொற்கள்: ‘தேச நலன்.’
-பத்திரிகை தர்மம் என்றால் என்ன – கல்கி ராஜேந்திரன்
————————————————————————————————————————————————————————–
கல்கி 2
மகாராஷ்ட்ராவின் புதிய அரசியல் தாதா ராஜ் தாக்கரே! சிவசேனாவின் மூத்த தலைவர் சஜ்ஜன் பூஜ்பல் கட்சியைவிட்டு 1992ல் வெளியேறியபோது, கட்சிக்குள் தனது மகன் உத்தவ் தாக்கரே மற்றும் சகோதரர் மகன் ராஜ் தாக்கரே ஆகியோரை கட்சிக்குள் கொண்டுவந்தார் பால் தாக்கரே. −டை யில் உத்தவுக்கும் ராஜுக்கும் மோதல் வரவே, −ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனையில் −ருந்து விலகி, மகா ராஷ்ட்ரா நவநிர்மாண் சேனாவைத் தொடங்கினார் ராஜ் தாக்கரே. பொ¢யப்பா பால் தாக்கரே, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஆயுதத்தைக் கொஞ்சம் தூசு தட்டி எடுத்து, பளபளப்பாகக் கூர்தீட்டிப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். ஆயு தத்தின் பெயர், ‘மராட்டியம் மராட்டியர் களுக்கே’! கொஞ்சம் பு¡¢யும்படி சொல்ல வேண்டும் என்றால், ‘−து எங்க ஏ¡¢யா, உள்ள வராதே!’
பிஹா¡¢களும் உத்தரபிரதேசக்காரர் களுமே ராஜ் தாக்கரேவின் பிரதான −லக்குகள். முக்கியமாக, பாலிவுட்டைக் கலக்கும் வெளிமாநில நட்சத்திரங்கள்.
அவா¢ன் நாற்காலிக் கனவுக்காகக் கிடைத்த துருப்புச் சீட்டு அமிதாப்பச்சன். எடுத்த எடுப்பிலேயே அவரைக் குறி வைத்து வார்த்தைகளை வீசினார்.
‘அமிதாப்புக்கு மும்பையைவிட பிறந்த மண்ணான உத்தரபிரதேசம் மீதுதான் விசுவாசம் அதிகம். அவரை சூப்பர் ஸ்டா ராக்கிய மும்பையின் நினைவு அவருக்குத் தேர்தலில் நின்றபோதுகூட வரவில்லை. அலகாபாத்தில்தான் நின்றார். மும்பைக்கு ஒன்றுமே செய்யவில்லை. கல்லூ¡¢யைக் கூட உ.பி.யில்தான் கட்டுகிறார்’ என்று சீண்டினார்.
பதிலுக்கு, ‘யார் −ந்த ராஜ் தாக்கரே?’ என்று அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன் கேட்டு வைக்க, பற்றிக்கொண்டது நெருப்பு.
‘பிஹா¡¢கள் எதற்காக சத்பூஜையை மகாராஷ்ட்ராவில் வைத்துக்கொண்டாட வேண்டும்? உ.பி.காரர்கள் அவர்களுடைய மாநிலத் தொடக்க விழாவை மும்பையில் கொண்டாடுவது முட்டாள்தனமாக −ருக்கிறது. மகாராஷ்ட்ராவுக்கு வருபவர்கள் மராத்திய மொழியில் பேச வேண்டும். அதன் கலாசாரத்தை மதிக்க வில்லை என்றால் பாதிப்பைத் தவிர்க்க முடியாது.’
சீறித் தள்ளினார் ராஜ் தாக்கரே. ஆத்திர மடைந்த சமாஜ்வாதி கட்சியினர் ராஜ் தாக் கரேவை எதிர்த்துப் பேச, அடுத்த ரவுண்ட் வன்முறை அரங்கேறியது!
‘மக்கள் மத்தியில் வகுப்புவாதத்தையும் பிராந்திய உணர்வையும் தூண்டிவிட்டு, வன்முறை வழியில் அர சியல் லாபம் பார்க்க நினைக்கிறார் ராஜ் தாக்கரே’ என்று வெடித்தார் சமாஜ்வாதி பொதுச் செயலாளரும் அமிதாப்பின் நண்பருமான அமர்சிங்.
‘−தோ வருகிறேன்’ என்று எழுந்த ராஜ் தாக்கரே, பத்தி¡¢கை ஒன்றுக்குக் கடிதம் எழுதினார்.
‘·பிரான்ஸில் சீக்கியர்கள் டர்பன் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை பற்றி, −ந்தியா வந்த ·பிரான்ஸ் அதிபா¢டம் மன்மோகன்சிங் பேசுகிறார். −லங்கைத் தமிழர்களுக்காகவும் ராஜீவ்காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளுக்காகவும் தமிழ்நாட்டில் −ருக்கும் பல கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. ஆனால், மராத்திய மக்களின் தார்மீக உணர்வுகள் பற்றி நான் பேசினால் மட்டும் ரௌடி பட்டம் கொடுக்கிறார்கள். ஆம். மராத் தியை அவமதிப்பவர்களுக்கு நான் ரௌடி தான். அவர்களை அடக்கிவிட்டுத்தான் மறுவேலை. மும்பை முதலில் மகா ராஷ்ட்ராவின் தலைநகரம். −ங்கு நுழைய வேண்டுமானால் மராத்தியர்களின் அனு மதி பெற வேண்டும்.’
−துதான் கடிதத்தின் சாரம். வார்த் தைக்கு வார்த்தை அனல் பறந்தது. ‘ராஜ் தாக்கரேவின் அடியாட்கள் எங்கள் மக் களின் உயிரைப் பறித்துவிடுவர் போலத் தொ¢கிறது. எங்கள் உயிரைப் பாது காத்துக்கொள்ள மூங்கில் கொம்புகளை விநியோகிக்கப் போகிறோம்’ என்று அறி வித்தார் மகாராஷ்ட்ரா மாநில சமாஜ்வாதி தலைவர் அபு ஆஸ்மி. வெகுண்டெழுந்த ராஜ் தாக்கரே, ‘நான் மராத்தியர்களுக்கு வாளைக் கொடுக்க நோ¢டும்’ என்றார்.
ஒரு காலத்தில் உணர்வுபூர்வமாக −ந்தியாவை −ணைத்த சாதுக்களின் பூமி மஹாராஷ்ட்ரம்… −ன்று தேசத்தை உருக்குலைக்கும் உணர்வுகள் அங்கே கொந்தளிக்கின்றன!
– ரணகள ராஜ் தாக்கரே
————————————————————————————————————————————————————————–
ராஜ் தாக்கரேவை எதிர்த்துக் கூட்டறிக்கை!
மிகுந்த யோசனைக்குப் பிறகு ராஜ் தாக்கரேவைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் அத்வானி. “−ந்தியா முழுதும் ஒரு நாடு. அதில் யாரும் எங்கும் போய் வாழ்ந்து பணியாற்றி, பொருளீட்ட உ¡¢மை உண்டு” என்கிற உண்மையை அவர் எடுத்துச் சொல்வதற்குள் மும்பையில் ரகளை, கலாட்டா, வன்முறை, கடையடைப்பு – எல்லாம் நடந்துவிட்டன! அத்தனைக்கும் பிறகு தயங்கித் தயங்கி ராஜ் தாக்கரேவைக் கைது செய்திருக்கிறது மும்பை போலீஸ்.
குறுகிய நோக்கில் பேசி, பி¡¢வினை வளர்த்து, மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, வோட்டுகளைப் பெற முயற்சி செய்வதுதான் மிகச் சுலபமான குறுக்கு வழி அரசியல். ராஜ் தாக்கரே செய்தது போலவே −ந்தக் கா¡¢யத்தைத்தான் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களும் செய்து வருகிறார்கள். −ந்தத் தவறைச் சுட்டிக்காட்டி கண்டனம் செய்து, −க்கட்சிகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, தேசியக் கட்சிகளும் அவற்றின் மாநில கிளைகளும் −வற்றுடன் கைகோத்து கூட்டணி அமைத்துக்கொண்டு, அரசியல் ஆதாயம் காண்பதற்குத்தான் முற்படுகின்றன. மொத்தத்தில், தேசிய பார்வையை தேர்தல் பார்வை எ¡¢த்து அழித்துவிட்டது!
ஒரு சில வோட்டுகளுக்காக தேச ஒருமைப்பாடை அடகு வைக்கத் துணியும் கட்சிகள், தேர்தலில் போட்டியிட முடியாத படி செய்ய வேண்டும். சட்டத் திருத்தம் கொண்டு வந்தோ அல்லது ஏற்கெனவே உள்ள சட்டங்களை உறுதியாகவும் கடுமையாகவும் அனுசா¢த்தோ −தனைச் செய்யலாம். தற்போது மத்தியில் ஆளும் முக்கிய கட்சியான காங்கிரஸ¤ம் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் −ணைந்து செயல்பட்டால், −தற்கான சட்டத்தைப் பலப்படுத்துவதும் சாத்தியமே.
ஆனால், அரசியல் ¡£தியான, நிர்வாக ¡£தியான −ந்தச் சீர்திருத்தம் மட்டுமே பிரச்னையைத் தீர்த்துவிடாது. நடைமுறையில், பிற மாநில மக்கள் குடியேறி, ஒரு மாநிலத்தின் வளத்தையும் வேலைவாய்ப்புகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறபோது, அதற்கு எதிரான உணர்வுகள் தோன்றுவது −யல்புதான். −ந்த எதிர்ப்புணர்வைத் தவிர்க்க வேண்டுமானால், மாநில தலைவர்களிடையே ஒருமித்த சிந்தனை வேண்டும். தொழில், வர்த்தக, விவசாய முயற்சிகளை ஒருங்கிணைக்கலாம். மாநிலங்களை −ணைக்கும் பொருளாதார மண்டலங்களை உருவாக்கி, எல்லோருக்கும் வேலைவாய்ப்புகள் பெருக்கலாம். ஐரோப்பிய நாடுகளேகூட −ன்று ஒரே பொருளாதார மண்டலமாக −யங்குகின்றன.
கல்வித் திட்டத்தையும் பரந்ததாக்கி, பள்ளிக் கல்வி பெற்ற யாருமே தன் தேவைக்குச் சம்பாதித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு தொழில் அறிவையும் அதற்கான முனைப்பையும் ஊட்டலாம்.
ஆனால், −ங்கே நடப்பவை எல்லாம் நேர் மாறாகத்தான் −ருக்கின்றன! நதி நீர் பகிர்வில் தகராறு தொடங்கி, மொழி வெறி, ஜாதி கண்ணோட்டம், மதப் பி¡¢வினை வரை அனைத்து வேற்றுமைகளையும்தான் தலைவர்கள் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், வளர்க்கிறார்கள். −தை −ப்படியே தொடர அனுமதித்தால், மாநிலத்துக்கு −ரண்டு ராஜ் தாக்கரேக்கள் உருவாகி, −ந்தியாவை −ருபதே ஆண்டுகளில் −ருக்கும் −டம் தொ¢யாமல் அழித்துவிடுவார்கள்!
ஆகவே, தேசிய உணர்வும் பொறுப்புணர்வும் படைத்த மன்மோகன் சிங், அத்வானி போன்ற தலைவர்கள் உடனடியாக −ணைந்து −ந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். ராஜ் தாக்கரேவுக்கு எதிராக −ருவரும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை விட்டாலே அதன் வலிமை அசாத்தியமானதாக −ருக்கும்!
————————————————————————————————————————————————————————–
பிப்ரவரி கடைசி நாளன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதேன்?
புது தில்லி, பிப். 28: பட்ஜெட் குறித்து குறைந்தது ஒரு மாதம் விவாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி மாதம் கடைசி நாளன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பொதுவாக பிப்ரவரி 28-ம் தேதியும் லீப் ஆண்டுகளில் பிப்ரவரி 29-ம் தேதியும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
நிதியாண்டு ஏப்ரல் முதல் தேதி தொடங்குகிறது. மார்ச் மாதத்தில் பட்ஜெட் மீது நாடாளுமன்றம் விவாதித்துமுடித்து ஒப்புதல் வழங்கிய பிறகே அரசின் செலவுகளுக்கு பணம் எடுக்க முடியும். இதற்காகவே பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கலாகிறது.
மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. ஆனால் லீப் ஆண்டில் அவர் தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட்.
லீப் ஆண்டில் (தனது பிறந்த நாளில்) இரண்டு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாய்க்கு உண்டு. அதிக எண்ணிக்கையில் (10) பட்ஜெட்டை தாக்கல் செய்தவரும் மொரார்ஜிதான்.
லீப் ஆண்டில் சி.டி. தேஷ்முக், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, பிரணாப் முகர்ஜி, என்.டி. திவாரி, மன்மோகன் சிங், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் 23 நிதியமைச்சர்கள் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளனர்.
சிதம்பரம் 5 முழு பட்ஜெட்டையும் ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளார்.
மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்த 10 பட்ஜெட்டில் 2 இடைக்கால பட்ஜெட்டாகும்.
சி.டி. தேஷ்முக் 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
மன்மோகன் சிங் மற்றும் யஷ்வந்த் சின்ஹா தலா 5 பட்ஜெட்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் மட்டும் இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
பொதுவாக பட்ஜெட் இரு பகுதிகளைக் கொண்டதாயிருக்கும். முதல் பகுதி நாட்டின் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் பகுதியாக இருக்கும். இரண்டாம் பகுதி வரி விதிப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
பட்ஜெட் குறித்த விவாதம் மக்களவையில் முதலில் விவாதிக்கப்படும். பின்னர் மாநிலங்களவையிலும் விவாதிக்கப்படும்.
மக்களவையில் முதலில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் தனது உரையின் பிரதியை மாநிலங்களவையில் தாக்கல் செய்வார்.
இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பெருமையும் தமிழரையே சாரும். 1948-ம் ஆண்டு நேரு தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதுமட்டுமின்றி, அதுதான் ஒரே சமநிலை பட்ஜெட்டாகும்.
1947-ம் ஆண்டிலிருந்து மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த நடைமுறை 1999-ம் ஆண்டு மாற்றப்பட்டு பகல் 11 மணிக்குத் தாக்கல் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.
இதற்கு முன் லீப் ஆண்டில் பிப்ரவரி 29-ம் தேதி 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 9-வது முறையாக சிதம்பரம் தாக்கல் செய்கிறார்.
————————————————————————————————————————————————————————–
அதுதான் கடைசிப் பக்கம்…
கி. கஸ்தூரி ரங்கன்
அறுபது ஆண்டு பந்தம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதே என்று மனதில் சோகம் நிரம்பி வழியும் இத் தருணத்தில் பழைய நினைவுகள் அலை மோதுகின்றன.
ரங்கராஜன், சுஜாதாவைக் கைப்பிடித்து அதே பெயரில் பிரபல எழுத்தாளராகப் பிரகாசிக்கத் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, அவருடனும் அவருடைய குடும்பத்தினருடனும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. 1950ம் ஆண்டுகளில் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது ரங்கராஜனின் அண்ணன் என் வகுப்புத் தோழன். அப்போது ஏற்பட்ட நட்பில் தியாகராய நகர் மூஸô சேட் தெருவில் இருந்த அவன் வீட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அவன் அப்பா, மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளர். மாடியும் கீழுமாகப் பெரிய வீடு. ரங்கராஜன் அரை டிராயரில் காட்சியளிப்பான். அவன் தம்பி ராஜப்பா, அண்ணன் கிச்சாய் அக்கம் பக்கத்து விடலைப் பசங்கள் எல்லாரும் மாடி வராந்தாவில் கவர் பால், அரை மட்டை சகிதம் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த இடத்தில் தடுப்பாட்டம் தான் ஆட முடியும். பந்தை ஓங்கி அடித்தால் அடுத்த வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்துவிடும். எனவே அரை மணியில் அலுத்துவிடும். ஆட்டம் முடிந்தது என்று கலைந்து செல்வோம்.
நானும் ரங்கராஜனும் ஏதாவது விஷயம் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். இருவருக்கும் பொதுவாக இருந்த எழுத்தார்வம் காரணமாகப் பத்திரிகைகள் பற்றிப் பேசுவோம். அப்போதே “”குப்பை பத்திரிகை”களுக்கு மாற்றாக வித்தியாசமான பத்திரிகை வெளியிட வேண்டும் என்று பேசிக்கொள்வோம்.
அதற்கான சந்தர்ப்பம் வெகு ஆண்டுகள் கழித்து இருவரும் வேலை நிமித்தமாக தில்லியில் குடியேறியபின்தான் வந்தது. ரங்கராஜன் மதறாஸ் இன்ஸ்டிடியூட்டில் எலக்ட்ரானிக்ஸ் படித்துவிட்டு தில்லியில் சிவில் ஏவியேஷன் துறையில் வேலைக்குச் சேர்ந்தான். நான் ஜர்னலிஸம் படித்துவிட்டு நியூயார்க் டைம்ஸ் நிருபரானேன். பிரம்மச்சாரிகளாக இருந்தவரை இருவரும் வேறு சில தனிக் கட்டைகளுடன் அறை ஒன்றில் தங்கியிருந்தோம். இருவருக்கும் குடும்பம் என்று ஏற்பட்ட பிறகு கரோல்பாக்கில் வேறுவேறு வீடுகளுக்கு மாறினோம். அப்போதும் நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு.
மீண்டும் பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை பலமாகப் பிடித்துக் கொண்டது. “”நீ தைரியமாக ஆரம்பி. நான் எழுதுகிறேன்” என்று சொன்னான். நானும் 1965 ஆகஸ்டில் “கணையாழி’ மாத இதழைத் தொடங்கிவிட்டேன். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்று அவனுக்குப் புனைப்பெயர் சூட்டி கடைசிப் பக்கம் எழுத வைத்தேன்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இடையிடையே நீண்ட இடைவெளி விட்டு ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின் கடைசிப் பக்கம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. 2006ல் கணையாழி நின்று போயிற்று. அவனுடைய விருப்பத்தின் பேரில் கணையாழியின் பழைய பக்கங்களை மீண்டும் வெளியிட முயற்சி மேற்கொண்டேன். சித்தன் ஆசிரியர் பொறுப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “”யுகமாயினி”யில் கடைசி 16 பக்கங்களை கணையாழி பக்கங்கள் என்று அறிவித்து, அதில் மீண்டும் சுஜாதாவின் கடைசிப் பக்கத்தைத் தொடங்கச் செய்தோம்.
துரதிர்ஷ்டவசமாக சுஜாதா ஓர் இதழில் மட்டுமே எழுத முடிந்தது. திடீரென்று நிமோனியா ஜுரத்தில் படுத்துவிட்டார். மருத்துவமனையிலிருந்து மீண்டுவரவில்லை. அவருடைய கடைசி எழுத்து கணையாழி கடைசிப் பக்கத்துக்கு எழுதியதாகத்தான் இருக்கும்.
100 நாவல்கள், 250 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள், ஒரு டஜன் நாடகங்கள், அரை டஜன் வெற்றிப் படங்கள் என்று எழுத்துலக சகலகலாவல்லவனாகத் திகழ்ந்த போதிலும் சுஜாதாவுக்கு ஓர் ஆதங்கம் இருந்தது. தமிழ்நாட்டில் தனக்கு உரிய இலக்கிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்பதுதான். அதைக் கடைசியாக எழுதிய கணையாழி பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
முதிர்ந்த வயதில் அவருடைய ஈடுபாடு திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும், திவ்யப் பிரபந்த பாசுரங்களிலும் சென்றது. அவற்றில் மூழ்கி ரசித்து சிறுசிறு கட்டுரைகளில் தந்திருக்கிறார். மாணவர்களுக்கும் புரியும்படி திருக்குறளை எளிய தமிழில் தந்திருக்கிறார்.
இலக்கியத்திற்கு அப்பால் அவர் நிகழ்த்திய சாதனை அவர் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வந்த “”அம்பலம்” இணையதளம். மற்றொரு மகத்தான சாதனை தேர்தல் நடைமுறையை எளிதாக்கியிருக்கும் வாக்குப் பதிவு இயந்திரம். இதற்காகவாவது அவருக்கு ஒரு பத்ம விருது வழங்கியிருக்கலாம்.
(கட்டுரையாளர்: தினமணியின் முன்னாள் ஆசிரியர்)
————————————————————————————————————————————————————————–
தேவை வட்டி குறைப்பு
எஸ். கோபாலகிருஷ்ணன்
சென்ற பல மாதங்களாக வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவண்ணம் இருந்தது. காரணம், கடந்த ஆண்டு வங்கிக் கடனுக்கான வட்டிவீதம் – குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டிவீதம் – முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட கணிசமாக அதிகரிக்கப்பட்டது. வட்டி வீதம் உயர்ந்ததால் புதிதாக வீடு அல்லது பிளாட் வாங்குபவர்களின் எண்ணிக்கை சரிந்தது. அதுமட்டுமல்லாமல், 2007ம் ஆண்டில் வங்கிகள் வழங்கிய ஒட்டுமொத்தக் கடன்தொகை, முந்தைய ஆண்டுகளில் வழங்கிய கடன்தொகையைவிடக் குறைவு என பாரத ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி சென்ற ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட புதிய கடன் கொள்கையில், கடன்களுக்கான வட்டி வீதம் குறைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. சமீபத்திய கடன்கொள்கையில், எந்தவித கடனுக்கான வட்டிவீதமும் குறைக்கப்படவில்லை. காரணம், ரிசர்வ் வங்கியின் முழுக்கவனமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே இருந்தது. வட்டிவீதம் குறைக்கப்பட்டால், பணவீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கருதியிருக்கக் கூடும். அதேநேரம், எதிர்காலத்தில் அவசியம் ஏற்பட்டால் வட்டிவீதத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே ரிசர்வ் வங்கிக்கு மேலோங்கியிருந்தது.
பாரத ரிசர்வ் வங்கி இந்த நிலைப்பாட்டை எடுத்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ், அந்த நாட்டில் வட்டி வீதத்தை 1984ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஒரே மூச்சில் முக்கால் சதவீதம் குறைத்தது. அதற்கு அடுத்த சில தினங்களில் மேலும் அரை சதவீதம் குறைத்தது.
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் சூழலில், அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் அப்படியொரு மந்த நிலை இல்லை என்பது உண்மையே. எனினும், வட்டி அதிகரிப்பால், வீடு கட்டுவதற்கு அல்லது வாகனங்கள் வாங்குவதற்கு அல்லது தொழில் நடத்துவதற்குத் தேவையான வங்கிக் கடன் பெற மக்கள் முன்வரவில்லையெனில் அது நல்ல அறிகுறி அல்ல.
பொதுமக்களின் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வட்டி வீதத்தைக் குறைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
சில தினங்களுக்கு முன் வெளியான தகவலின்படி, சென்ற டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி வீதம் 7.6 சதவீதமாகக் குறைந்து உள்ளது.
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில்துறை வளர்ச்சி 13.4 சதவீதமாக இருந்தது. இதனைக் கருத்தில்கொண்டால், சென்ற டிசம்பர் மாதத்தில் 7.6 சதவீத வளர்ச்சி என்பது மிகப்பெரும் சரிவு என்பது தெளிவு.
தொழிற்சாலைகளில் உற்பத்தி, மின்சாரம், நுகர்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. பின்னர் வரக்கூடிய மந்த நிலைக்கு இது ஓர் அபாய அறிவிப்பு போன்றது.
இந்தப் பின்னணியில், சில தினங்களுக்கு முன், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசியது கவனிக்கத்தக்கது. கடந்த சில மாதங்களில் வங்கிகள் கடன் வழங்கும் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, வீடு கட்டும் துறையிலும் நுகர்பொருள் உற்பத்தித் துறையிலும் வளர்ச்சி குறைந்திருப்பதற்கு வங்கிக் கடன் குறைந்திருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன், வரும் காலத்தில் இந்தத் துறைகளில் வளர்ச்சி அதிகரிக்கும் வகையில், இவற்றுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வங்கிகளை வலியுறுத்தியுள்ளார்.
எதிர்பார்த்தபடி, பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் தனது பிரதான கடன் வட்டி வீதத்தை 12.75 சதவீதத்திலிருந்து 12.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தங்களது வீட்டுக்கடன் வட்டி, சில்லறைக்கடன் வட்டி வீதங்களையும் குறைத்துக் கொண்டுள்ளன.
இதுவரை வட்டிக் குறைப்பை அறிவிக்காத இதர வங்கிகள் விரைவில் அவ்வித அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, வணிக ரீதியில் அவ்வப்போது வட்டி வீதத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கு வங்கிகளுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. ரிசர்வ் வங்கிதான் அறிவிக்க வேண்டும் என்பதில்லை. எனினும், ரிசர்வ் வங்கி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது கடன் மற்றும் நிதிக் கொள்கையை வெளியிடுகிறது. இதிலிருந்து வரும் சமிக்ஞைகளுக்காக வங்கிகள் காத்திருப்பது வழக்கம். இந்த முறை, நிதி அமைச்சர் தெரிவித்த சூசகமான அறிவுரை, வங்கிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.
முன்னதாக, கடன் கொள்கை வெளியானபோது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் கடன் வழங்குவதில் சற்று நிதானப்போக்கு இருக்கட்டும் என ரிசர்வ் வங்கி கருதியது புரிந்து கொள்ளக்கூடியதே. அதிலும் குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படாத நேரம் அது. அது ஏற்றப்படும்போது, பணவீக்கம் உயரும் என்பது அறிந்ததே. தற்போது, நீண்டகாலமாகத் தள்ளி வைக்கப்பட்ட பெட்ரோல் விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டு விட்டது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால் பணவீக்கம் எந்த அளவு உயரக்கூடும் என்பதும் அடுத்த சில வாரங்களில் தெரிந்துவிடும்.
அதேநேரம், வளர்ச்சி விகிதம் குறைவதும் ஏற்புடையது அல்ல.
தற்போது, பல வங்கிகள் ஏற்கெனவே வட்டி வீதத்தைக் குறைத்துள்ள புதிய சூழலில், பாரத ரிசர்வ் வங்கி நிலைமையை மறு ஆய்வு செய்வதே பொருத்தமாக இருக்கும். ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய கடன் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யாமல்விட்ட “பேங்க் ரேட்’ (வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டிவீதம்); “ரெப்போ ரேட்’ எனப்படும் ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு முதலீட்டுப் பத்திரங்களின் மீது வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதம்; மற்றும் “ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ எனப்படும் வங்கிகளிடம் உள்ள உபரிப் பணத்தைக் குறுகிய காலத்துக்கு ரிசர்வ் வங்கி பெற்றுக்கொள்ளும் ஏற்பாட்டுக்கான வட்டிவீதம் ஆகிய அனைத்துவகை கடன்களுக்குமான வட்டிவீதத்தை விஞ்ஞான ரீதியில் மாற்றி அமைக்க பாரத ரிசர்வ் வங்கி முன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
அப்படிச் செய்வதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய வட்டிக் குறைப்பு செயல்பாடு ஸ்திரத்தன்மை அடைவதற்கு உதவுவதுடன் அது நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் அமையும்.
வீட்டுக் கடன்களுக்கு வட்டிக் குறைப்பை அறிவித்துள்ள வங்கிகள், அறிவிப்போடு நின்றுவிடாமல் வீட்டுக் கடன் மற்றும் சில்லறைக் கடன்களுக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, உரிய கடன் வழங்குவதில் ஆக்கபூர்வமான ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான், சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று சதா கனவு காணும் நடுத்தர மக்களின் கனவு நனவாகும்.
————————————————————————————————————————————————————————–
ஒன்பது வீத வளர்ச்சியை எட்டுவது கடினம் என்கிறது இந்திய பொருளாதார அறிக்கை
இந்தியாவின் வருடாந்திர நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்து, 9 சதம் வளர்ச்சி விகிதத்தை நிலை நிறுத்துவது மிகவும் கடினமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக 2007-08 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் ப. சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டுவருவதற்கு மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் அறிவித்தார்.
சில்லறை வர்த்தகத்தில் குறிப்பிட்ட அளவு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, நவரத்தினங்கள் என்று அழைக்கப்படும் லாபம் ஈட்டும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை குறிப்பிட்ட அளவுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட பல யோசனைகள் அதில் அடங்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக 9 சதத்துக்கும் மேல் இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 2007-2008-ம் ஆண்டில் அதைவிடக் குறைந்து, 8.7 சதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
உலக அளவிலான சந்தை நிலவரங்களால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்திருப்பதை, வலுவான நிதி மற்றும் வர்த்தகக் கொள்கைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த நிதியாண்டில் 5.4 சதமாக இருந்த பணவீக்கம், இந்த நிதியாண்டில் 4.4 சதமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் சரிவுகள் குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பீதியடையாமல், நம்பகமான தகவல்களின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையைப் பொருத்தவரை, இந்தியா சில ஆண்டுகளாக முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், இலங்கை, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் சுகாதார நிலை திருப்திகரமாக இல்லை என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
————————————————————————————————————————————————————————–
தனியார் மயத்துக்கு பச்சை விளக்கு…?
ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்குத் தெரிகிறது என்று ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் “அரசியல் ரீதியாக’ மகிழத்தக்க வகையில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் லாலு பிரசாத்.
புதிதாக 53 ஜோடி புதிய ரயில் சேவை (அவற்றில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 9), ரூ.25,000 கோடிக்கு ரொக்க உபரி, ஏராளமான புதிய திட்டங்கள், 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ரயில் திட்டங்களில் முதலீடு, மாணவிகள் பட்ட மேல்படிப்பு வரை இலவசமாகச் செல்ல சலுகை, போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாகவே சென்று வரும் சலுகை, மூதாட்டிகளுக்கு கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிப்பு என்று தன்னுடைய வழக்கமான முத்திரைகளைப் பதித்திருக்கிறார்.
மக்களவைக்குத் தேர்தல் நெருங்குவதாலேயே ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று கூறிவிட முடியாது. கடந்த 4 பட்ஜெட்டுகளாகவே அவர் கட்டணங்களைக் குறைத்தும், சீரமைத்தும் மக்களுடைய மனங்களிலிருந்து சுமையைக் குறைத்து வருகிறார்.
சமீபகாலமாக அதிகரித்து வரும் தனியார் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களால் ஏற்படும் தொழில் போட்டியைச் சமாளிக்க முதல் வகுப்பு மற்றும் குளிர்பதன வசதி பொருத்தப்பட்ட உயர் வகுப்பு பெட்டிகளுக்கான கட்டணத்தைக் குறைத்திருக்கிறார்.
பெட்ரோல், டீசல், எரிசாம்பல் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் கட்டணத்தைக் குறைத்திருப்பது பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்தும் விவேகமான செயல்.
ஆனாலும் சில உறுத்தலான விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லாமல் இல்லை. நாடு முழுக்க சமச்சீராக வளர்ச்சி அடைந்தால்தான் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டே திட்டங்களை பிகாரை மட்டும் மையமாக வைத்துச் செயல்படுவது சரிதானா?
குஜராத் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று பாரதிய ஜனதாவினரும், மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று மார்க்சிஸ்டுகளும், உத்தரப் பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்று பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சியினரும் வெளிநடப்பு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களே ஆத்திரத்தை அடக்கமுடியாமல் கொட்டியிருக்கிறார்கள். நாடு முழுக்க பலன்பெற வேண்டிய ரயில்வே துறை பிராந்திய நோக்கில் நிர்வகிக்கப்படுவது நல்லதல்ல என்று மட்டும் லாலுவுக்குக் கூறுவது நமது கடமையாகிறது.
ரயில்வேதுறையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமுதாய ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரும் கல்வித்தகுதி இல்லாத நிலையிலும் நிரந்தர வேலைவாய்ப்பு பெறுவதற்கு ரயில்வேதான் இதுவரை கருவியாக இருந்து வந்திருக்கிறது.
இப்போது ரயில்வே துறையில் புதியவர்கள் வேலைக்கு எடுக்கப்படுவது மிகவும் குறைந்து வருகிறது. அதுபற்றி இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இல்லை. பொறியாளர்கள், கணினித் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்று மட்டுமே தேர்வு செய்வதால், சமூகத்தின் மேல் தட்டு அல்லது நடுத்தர வர்க்கத்துக்குத்தான் வேலை கிடைக்கிறது. இந் நிலையில் ரயில்வேயில் துப்புரவுப் பணியாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விடும் செயல், சமூக நீதிக்கே துரோகம் செய்வதாகிவிடும்.
சமூக நீதிக்காகப் பாடுபடும் லாலு போன்றவர்களே அந்தத் தவறைச் செய்யக்கூடாது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி, பாமக நிறுவனர் ச. ராமதாஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தலையிட்டு உரிய வகையில் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
வட இந்தியாவுக்கு யாத்திரை செல்பவர்களும், தென்னிந்தியாவுக்கு யாத்திரை வருபவர்களும் முக்கியமான சில ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களிலேயே தங்குகின்றனர். அவர்கள் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக தங்கிச் செல்ல, கழிப்பறை, குளியலறை, பாதுகாப்பான தங்கும் இடம் ஆகியவற்றை அந்த ரயில் நிலையங்களிலேயே ஏற்படுத்துவது அவசியம். அதற்குப் பணம் இல்லையே என்று கையை விரிக்காமல், உபரித் தொகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
————————————————————————————————————————————————————————–
மோரிஷஸ் (வரிஏய்ப்பு) பாதை!
உ . ரா. வரதராசன்
மோரிஷஸ், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு தீவு. அதன் மக்கள்தொகை வெறும் 12 லட்சம் மட்டுமே; நிலப்பரப்பைக் கணக்கிட்டால் இந்தியாவில் நூறில் ஒரு பங்குக்கும் (ஒரு சதவிகிதத்திற்கும்) குறைவானதே. இந்த நாட்டோடு இந்தியா செய்து கொண்டுள்ள ஓர் ஒப்பந்தம் இந்திய நாட்டின் சட்டங்களைச் செல்லாக் காசாக ஆக்கிவிட்டு, வரியை ஏய்த்துக் கொள்ளை லாபம் கொழிப்பதற்கான ராஜபாட்டை ஆகி இருக்கிறது.
இந்தியா – மோரிஷஸ் நாடுகளுக்கிடையே இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கை என்ற பெயரில் 1983-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இரண்டு நாடுகளின் குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் பரஸ்பரம் வியாபாரம் மற்றும் தொழில் தொடர்புகளை மேற்கொள்கிறபோதோ அல்லது வேறு வகையில் வருமானம் ஈட்டுகிறபோதோ சொந்த நாட்டிலும் வருமான வரி கட்ட வேண்டும். வெளிநாட்டிலும் வரி கட்ட வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவதுண்டு. இது ஒரே வருமானத்தின் மீது இரண்டுமுறை வரி கட்டுகிற இரட்டை வரி விதிப்பாக அமைந்தது. இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு நாட்டில் வரி விதிப்புக்கு ஆட்பட்டால் மற்றொன்றில் வரிவிலக்கு அளிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை உருவானது.
இந்தியா இதுபோன்ற உடன்படிக்கைகளை 50-க்கும் மேற்பட்ட நாடுகளோடு செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கைகள் அனைத்தும் ஒரே விதமான சரத்துகளை உள்ளடக்கியதாக இல்லை. மோரிஷஸ் நாட்டோடு செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையை ஒத்த தன்மையில் குறிப்பிட்ட சில நாடுகளோடு மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்திய – மோரிஷஸ் உடன்படிக்கை அமலில் இருந்த முதல் பத்தாண்டுகளில், பிரச்னை எதுவும் பெரிதாக எழவில்லை.
1991ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற உலகமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்த மோரிஷஸ் உடன்படிக்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தது. 1992-ம் ஆண்டு முதல், வெளிநாட்டுப் பெரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டது. அதே 1992ஆம் ஆண்டில் மோரிஷஸ் அரசாங்கமும் கடல் கடந்த வியாபார நடவடிக்கைகளுக்கான ஆணையம் (ஞச்ச்ள்ட்ர்ழ்ங் ஆன்ள்ண்ய்ங்ள்ள் அஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ங்ள் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) ஒன்றை நிறுவச் சட்டம் இயற்றியது. அதன் கீழ் எந்த ஒரு வெளிநாட்டுக் கம்பெனியும், மோரிஷஸில் ஒரு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து கொண்டு, வெளிநாடுகளில் (பங்குச்சந்தை) வர்த்தகத்தில் ஈடுபட வழிவகை செய்யப்பட்டது.
இதற்குப் பிறகுதான் மோரிஷஸ் பாதை வழியாக வெளிநாட்டு நிதி மூலதனம் வேக வேகமாக இந்தியாவிற்குள் நுழையத் தொடங்கியது. 1992 – 93இல் மோரிஷஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் (பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு) வந்த முதலீடுகள் ரூ. 17 கோடியாக இருந்தது. இதுவே 2000 – 01ஆம் ஆண்டில் ரூ. 74,050 கோடியாக உயர்ந்தது. சராசரியாக, இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதன வரவுகளில் மூன்றில் ஒரு பகுதி மோரிஷஸ் பாதை வழியாக வந்ததுதான் என்று மத்திய அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் உணர்த்துகின்றன. 12 லட்சம் மக்கள்தொகையை மட்டுமே கொண்டுள்ள மோரிஷஸ் நாட்டில் இவ்வளவு பெருந்தொகைகள் மூலதனமாக ஆண்டுதோறும் உருவாகி வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் வாய்ப்பு அறவே இல்லை; எனவே, மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மூலதனம் மோரிஷஸ் பாதை வழியாக அனுப்பப்படுகிறது என்பதே யதார்த்தம்!
மோரிஷஸ் பாதை மீது பன்னாட்டு மூலதனத்திற்கு ஏன் இவ்வளவு மோகம்? வெளிநாட்டுக் கம்பெனி மோரிஷஸ் நாட்டில் துணைக் கம்பெனியைப் பதிவு செய்வது மிக மிக எளிது. பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகள் இவ்வாறு துணைக் கம்பெனியைப் பதிவு செய்து அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை மோரிஷஸ் பாதை வழியே இந்தியாவுக்கு அனுப்புவதும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் லாபம் பெருக்குவதும், அந்த லாபத்தை மோரிஷஸ் வழியாகவே திருப்பி வரவழைத்துக் கொள்வதும் மிக எளிதாக நடைபெற்று வருகிறது.
இப்படிப் பெறப்படும் லாபத்திற்கு இந்திய – மோரிஷஸ் உடன்படிக்கை காரணமாக, இந்தியாவில் எந்த வரியும் மோரிஷஸ் நாடு கட்ட வேண்டிய அவசியமில்லை. எனவே, எந்த வரிச்சுமையும் இல்லாமல் வருமானம் கொழிக்கிற வழியாக மோரிஷஸ் பாதை மாறிவிட்டது.
இப்படி 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மோரிஷஸ் கம்பெனிகளாக, இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு சற்றும் சளைக்காமல் வெளிநாடு வாழ் இந்தியர்களும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் கம்பெனிகளும் மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்குப் பயன்படுத்தி வருகின்றன. இதன் விளைவு, மோரிஷஸ் பாதையில் வலம் வந்து பங்குச்சந்தை சூதாட்டத்தில் சம்பாதிக்கும் கொள்ளை லாபத்துக்கு இந்தியாவிலும் சரி, மோரிஷஸிலும் சரி எந்த வரியும் கிடையாது.
இந்த மோரிஷஸ் பாதையை வரி ஏய்ப்புக்காகப் பயன்படுத்திய சில உள்நாட்டுக் கம்பெனிகள் மீது இந்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து மார்ச் 29, 2000 அன்று ஆணை பிறப்பித்தது. இதன் காரணமாக வெளிநாட்டு மூலதனம் வருவது தடைபட்டு விடும்; வந்த மூலதனமும் வெளியே பறந்தோடி விடும் என்ற அச்சம் காரணமாக, அவசர அவசரமாக ஏப்ரல் 13, 2000 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. மோரிஷஸ் அரசாங்கம் ஒரு கம்பெனிக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கியிருந்தாலே, அந்தக் கம்பெனியின் உரிமையாளர்களோ, அதன் மூலம் முதலீடு செய்பவர்களோ மோரிஷஸில் குடியிருப்பதாகக் கருதப்படுவார்கள்; அது தொடர்பாக எந்தவித விசாரணையோ, ஆட்சேபமோ எழுப்பக்கூடாது என்பது அந்த சுற்றறிக்கையின் கட்டளை!
இது நியாயமற்றது என்று “சுதந்திரம் காப்போம் இயக்கம்’ என்ற அமைப்பு தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கைத் தொடுத்தவர்களில் சிவ காந்த் ஜா என்ற வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையரும் ஒருவர். தில்லி உயர் நீதிமன்றம் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. “”இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு என்பது, இரண்டு நாடுகளிலும் வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காகத்தானே தவிர, எந்த நாட்டிலும் வரியைக் கட்டாமல் ஏய்ப்பதற்காக அல்ல; அதை அனுமதிக்க முடியாது” என்பது அத்தீர்ப்பின் சாரம்.
மத்திய அரசோ இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது; “குளோபல் பிசினஸ் இன்ஸ்டிட்யூட்’ என்ற சர்வதேச முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு ஒன்றும் இந்த மேல்முறையீட்டில் மனுதாரராகச் சேர்ந்து வழக்காடியது. (இதன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பின்னர் மத்திய அரசின் சட்ட அமைச்சரானவர்!) உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்துத் தீர்ப்பளித்தது.
மோரிஷஸ் உடன்படிக்கை வரிஏய்ப்புக்கான வசதியான பாதையாகப் பயன்படுகிறது என்பதை 2005இல் மத்திய கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முன்பாக 2001இல் கேத்தன் பாரிக் பங்குச்சந்தை ஊழலை விசாரித்த நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கையும் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தக் கூட்டுக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, “”மோரிஷஸ் பாதை தவறாகப் பயன்படுத்தப்படுவது எனக்குத் தெரியும். ஆனால் (மத்திய அரசின்) வரி வருவாயைப் பெருக்குவதை விட வெளிநாட்டு மூலதனத்தின் வரவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மோரிஷஸ் உடன்படிக்கையின் ஓட்டைகளை அடைக்க முற்படவில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
2004-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்போம்’ என்று குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் கூறியிருந்தது. ஆனால் குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தின் வாக்குறுதி “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்வதற்கான உறுதிமொழியல்ல. அதை இந்தியக் கம்பெனிகள் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது மட்டுமே’ என்று நிதியமைச்சர் புதிய விளக்கமளித்தார். இது முந்தைய அரசு விட்டுச்சென்றுள்ள பிரச்னை; சர்வதேச ராஜிய உறவுகள் சம்பந்தப்பட்ட ஒன்று; தன்னிச்சையாக இந்தியா இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் அவர் கைவிரித்துவிட்டார்.
இந்தியாவைப் போலவே மோரிஷஸýடன் உடன்படிக்கை செய்துகொண்ட இன்னொரு நாடு இந்தோனேஷியா. மோரிஷஸ் நாடு தனது சட்டத்தைத் திருத்தி வெளிநாட்டவர்கள் மோரிஷிஸில் துணைக் கம்பெனிகளைப் பதிவு செய்து மற்ற நாடுகளில் வர்த்தகம் செய்ய அனுமதித்ததைக் காரணம் காட்டி 2005ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இந்தோனேஷியா மோரிஷஸ் நாட்டுடனான உடன்படிக்கையை ஒட்டுமொத்தமாக ரத்தே செய்துவிட்டது. இந்தோனேஷியாவுக்கு சாத்தியப்படுகிற இந்த வழிமுறை இந்தியாவுக்கு மட்டும் பொருந்தாது என்பதில் எந்த நியாயமும் இல்லை.
வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரியாக மோரிஷஸ் பாதை தொடர்கிறது.
(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)