கோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்? தனிக்கோர்ட்டு அறிவிப்பு
கோவை, ஆக. 1-
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.
இந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்தனர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அல்-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.
ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
பிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
—————————————————————————————————–
மதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு
புதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா? கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.
பாஜக அதிருப்தி
கேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.
“பிரார்த்தனை பலித்துவிட்டது’
கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.
மதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
———————————————————————————————————————–
5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்
கோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.
இந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
———————————————————————————————————————–
மதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.
இதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.
தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.
வெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.
———————————————————————————————————————–
சிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை?
கோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.
இவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.
இவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.
இந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.
எனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
அவர்கள் விவரம்:
சம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.
யூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.
கே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.
———————————————————————————————————————–
பலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்
கோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.
தனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்திய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.
காலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.
கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.
காலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.
காலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
காலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.
காலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
பகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.
குண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.
———————————————————————————————————————–
69 பேருக்கு கடும் தண்டனை?
கோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச்சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர்.
எனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:
எஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.
இவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
———————————————————————————————————————–
“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’
கோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.
தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.
இதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.
குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதா? என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.
———————————————————————————————————————–
பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு
கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.
கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.
மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:
முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.
அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.
நெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.
காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.
கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.
காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.
கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.
குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.
———————————————————————————————————————–
கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி
கோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:
கோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.
———————————————————————————————————————–
மதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்
கோவை, ஆக.2-
வழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.
தனிகோர்ட்டு தீர்ப்பு
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியின் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.
இது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-
நிம்மதி அளிக்கிறது
எந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.
அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.
சிகிச்சைக்கு ஏற்பாடு
அவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.
———————————————————————————————————————–
ஜாமீனா? விடுதலையா?
கோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.
தீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.
குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.
சிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.
பல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.
குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா? என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.
இந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.
மேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.
ஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.
இதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு காலம் நீட்டிக்கப்படுகிறது.
இரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.
மேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.
கிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.
———————————————————————————————————————–
கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC
 |
 |
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர் |
ஒலி
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.
பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்
Law and Order – State of Justice system in India (Opinions & Judgments)
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
எண்ணங்கள்: நீதித்துறையின் அதிக�
உயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்!
உ .ரா. வரதராசன்
ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், “நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது’ என்று கேட்டனர். கருணாநிதியோ “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.
உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் – தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.
பொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான – அல்லது உயர்வான – ஒன்றல்ல.
ஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.
தலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் “அவருக்கு தில்லியில் என்ன வேலை? அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர்! நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா?
இன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. “24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக’ என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா?’
நிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற – நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே!
குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய – மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக “பிடி வாரண்ட்’ பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் “பிடி வாரண்டுகள்’ விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது!
நீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்!
நீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.
நீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நேரிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, “வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.
அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், “இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்’ என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.
வேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் – “நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது” என்பதாகும்.
மேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “பந்த்’, உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, “பந்த்’துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் – இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதானத்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
ஆனால் வழக்கில் ஒருதரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, “அரசியல் சட்டம் நிலை குலைவு’, “மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்’, “நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்’, “முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்’ – என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்?
நீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை! நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.
உச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.
(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)
——————————————————————————————————-
மாலை நீதிமன்றங்கள் தீர்வாகுமா?
வெ. ஜீவகுமார்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள், தொலைக்காட்சியிலும் நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.
கடந்த செப்டம்பர் மாத புள்ளி விவரப்படி, நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 30 லட்சம். கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இரண்டரை கோடிக்கும் அதிகம். உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 39,780. கடந்த மார்ச் 31 நிலவரப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தவை 4,06,958. சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகளும் 26,800 சிவில் வழக்குகளும் நிலுவையில் இருந்தன.
வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்வாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலைநேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
மற்றநாடுகளில் உள்ள மக்கள்தொகை- நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கும் நமது நாட்டில் உள்ள விகிதாசாரத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. கனடா நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 104. ஆனால் 105 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகள் என்ற கணக்கில்தான் உள்ளது.
அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கில், 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்று எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விகிதாசாரம் போதுமானதா என்பது ஒருபுறமிருக்க இதுவும்கூட இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.
நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் குறை உள்ளது. கொரியா நீதித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. சிங்கப்பூரில் நிதி ஒதுக்கீடு 1.2 சதவிகிதம். பிரிட்டனில் நிதி ஒதுக்கீடு 4.3 சதவிகிதம். இந்தியாவிலோ நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.2 சதவிகிதம் மட்டுமே. உலக அரங்கில் ஆயுதங்கள் வாங்க மிகுதியாக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மருத்துவத்திற்கோ கல்விக்கோ, நல்ல குடிநீருக்கோ, மக்களின் ரத்தச்சோகையைப் போக்கவோ, சாலைகளுக்கோ, விவசாயத்திற்கோ இந்திய அரசு எப்போதும் போதிய நிதிஒதுக்கீடு செய்ததில்லை. புறக்கணிக்கப்படும் இந்த பட்டியலில்தான் நீதித்துறையும் இடம்பெறுகிறது.
20 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை வாங்கி அவை காலாவதியான நிலையில் தார் பாலைவனத்தில் போட்டுபுதைக்கும் இந்தியா, தனது மக்களுக்கு காலாகாலத்தில் நீதி வழங்குவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. குட்டி நாடுகள் தமது பராக்கிரமம், படை பலம் பற்றிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உலகிலுள்ள 207 நாடுகளில் சுமார் 60 நாடுகளில் எந்தப் படையும் இல்லை என்று கூறுகின்றனர். எனினும் அங்கெல்லாம் நீதித்துறைக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு உள்ளது.
இச் சூழ்நிலையில், கடந்த ஜூலை முதல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்கும் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டன. அக்டோபரில் மேலும் பல மாவட்டங்களில் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன.
உரியகாலத்தில் முறையாக நீதி வழங்கவேண்டுமென்றால், 105 கோடி மக்களுக்கு 12 ஆயிரம் நீதிபதிகள் என்ற இன்றைய எண்ணிக்கை போதவேபோதாது. தீர்வுகளில் ஒன்றாக இப்போது கிராம நீதிமன்றங்கள் என்ற கோட்பாடும் முன் வைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றம் இருந்ததாகத் தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீட்டு வசதிகளும் செய்யப்பட்டிருந்தனவாம்.
14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அன்னியர் ஆதிக்கத்தின் காரணமாக, கிராம நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பாதிப்படைந்தன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றால் அறிவியல் பூர்வமான தீர்வுகளைத்தான் உருவாக்க வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறை ஊழியர்களுக்கும் மேலும் சுமையையும் காலவிரயத்தையும் ஏற்படுத்தக்கூடிய மாலைநேர நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது.
மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நீதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். கட்டமைப்பு வசதிகள் உள்பட நீதித்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடும் போதிய அளவில் இருக்க வேண்டும். வழக்குகள் தேக்கம் நீங்கும்; நீதியும் துரிதமாகக் கிட்டும்!
Posted in Bandh, Bias, Bipartisan, Cabinet, comments, Constituition, Courts, Feedbacks, Govt, HC, Judge, Judgement, Judgements, Judgments, Judiciary, Jury, Justice, Law, Legislative, Media, Minister, MLA, MP, Opinion, Order, Party, Politics, President, SC | Leave a Comment »