Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர், 2008

US destroyer monitoring hijacked ship off Somalia: Pirates taking arms ship to Somali Islamist region, demand $20 mn for Ukrainian vessel

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2008


சோமாலியா அருகே கடத்தப்பட்ட கப்பலை கண்காணிக்கிறது அமெரிக்க போர்க்கப்பல்

சோமாலிய கடற்கொள்ளையர்கள்
சோமாலிய கடற்கொள்ளையர்கள்

சோமாலியா அருகே கடத்தப்பட்ட உக்ரைன் நாட்டு கப்பலில் இருக்கின்ற டாங்கிகள் மற்றும் இதர ஆயுதங்கள் இறக்கப்படாமல் இருப்பதை கண்காணிக்க அமெரிக்க போர்கப்பல் ஒன்று அதனை கண்காணித்து வருகின்றது.

மத்திய சோமாலியாவின் கடற்கரைக்கு அருகே கடத்தி செல்லப்பட்டு மற்ற கடத்தப்பட்ட கப்பல்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு கப்பல் தங்கள் கண்பார்வையில் இருப்பதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கென்ய இராணுவத்தினருக்கு இராணுவ பொருட்களை எடுத்து சென்ற இந்த கப்பலை கடத்தியவர்கள், கப்பலை விடுவிக்க பெரும் பணத்தை கேட்கின்றனர்.

இந்தக் கப்பலில் இருக்கும் டாங்கிகள் இப்பகுதியின் ஸ்திரதன்மையை குலைத்து விடும் என சோமாலியாவில் பெருமளவிலான இராணுவ செயற்பாடுகளை கொண்டுள்ள எத்தியோப்பியா கவலை தெரிவித்துள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

Damascus: Hizbollah sees Israeli involvement: Car Bomb Kills 17 in Syria Near Intelligence Office: Worst attack in decades

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2008


சிரியாவில் குண்டுத்தாக்குதல்

கார்குண்டுத் தாக்குதல்
கார்குண்டுத் தாக்குதல்

சிரியாவில் டமாஸ்கஸ் விமானநிலையத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடத்தப்பட்ட கார்குண்டு தாக்குதலில் குறைந்தப்பட்சம் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரான், இராக் மற்றும் லெபனானை சேர்ந்த யாத்தீரிகர்கள் இடையே பிரபலமாக இருக்கும் ஷியா முஸ்லிம் வழிப்பாட்டு இடம் ஒன்றுக்கு செல்லும் பாதையில் இருக்கும் காவல்நிலையம் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பொதுமக்கள் என கூறப்படுகிறது. இது போன்ற தாக்குதல்கள் சிரியாவில் மிக அரிதாக நடைபெற்றுள்ளது என்றாலும், கடந்த ஆண்டு சிரியாவில் இரண்டு பெரும் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.


Major attacks are rare in Syria, a tightly-controlled country with powerful security forces, but there have been a number of incidents in recent years, most of which have been blamed on Sunni Muslim groups.

April 1986: A string of co-ordinated attacks around the northern fishing port of Tartus and several other towns kill at least 144 people and injure another 149.

Syrian officials blame Saddam Hussein, the then-president of neighbouring Iraq.

December 1996: An explosion on a bus in a Damascus neighbourhood kills 13 people and wounds 40 others.

April 2004: Three assailants, a policeman and a woman passer-by die in a gun battle in an area of Damascus which includes a number of diplomatic missions.

The government blames al-Qaeda, but the attack is claimed by a group which says it wants to avenge the government crackdown on the Muslim Brotherhood in Hama in 1982.

September 2004:
A car bomb in southern Damascus kills an official of the Palestinian Hamas movement and three passers-by. Both the  government and Hamas blame Israel.

September 2006: Three armed men and a member of the security forces are killed and 14 people wounded in a failed attempt to set off a car bomb outside the US embassy in Damascus.

February 12, 2008: Imad Moghaniyah, a senior Hezbollah commander linked to attacks against Western and Israeli targets in the 1980s and 1990s, is killed by a car bomb in Damascus.

Hezbollah blames Israel, but it denies any involvement.

August 6, 2008: Syria confirms the assassination of Mohammed Sleiman, an army general described in the Arab media as having been the government’s liaison with the Hezbollah movement in Lebanon.

September 27, 2008: Seventeen civilians die in a car bomb blast on a road leading to the Damascus’s airport.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

Italian inquiry into India murder: CEO of Greater Noida firm battered to death: Dismissed employees of the Graziano Trasmissioni turn violent; 63 under arrest

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2008

ஊழியர்களால் தலைமை அதிகாரி அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இத்தாலிய நிறுவனம் விசாரணை

இந்தியாவில் இயங்கும் ஒரு இத்தாலிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி அதில் வேலை செய்யும் பணியாளர்களாலேயே அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பில், அந்த நிறுவனம் சுயமாக ஒரு விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளது.

கிரேஸியானோ டிரான்ஸ்மிஷியோனி இந்தியா எனும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான லலித் சௌத்ரி அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுடன் நடத்திய கூட்டத்தில் வன்முறை வெடித்தில் அவர் இறக்க நேரிட்டது.

கிராசியானோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தியாவில் தாம் பணியாளர்களை நடத்திய விதத்தை நியாயப்படுத்தியுள்ளது. மேலும் சௌத்ரி அவர்களின் இழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கூறியுள்ளது.

தமது நிறுவனத்துக்கு எதிராக அச்சுறுத்தல் இருந்தபோதிலும் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்கிற கவலையை இத்தாலி வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் சுமார் முன்னூறு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டதற்கான பணியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Two days all India bank harthal on 24th and 25th Sept: Bank unions strike over wages, consolidation

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

இந்தியாவின் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இந்தியாவின் வங்கிகளில் வேலை நிறுத்தம்
இந்திய வங்கிகளில் வேலை நிறுத்தம்

இந்தியாவில் அரசாங்கத்தால் நடத்தப்படும் வங்கிகளைச் சேர்ந்த ஒன்பது லட்சம் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள இருநாள் வேலை நிறுத்தத்தின் முதல் நாளான இன்று பல பகுதிகளில் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

பொதுத் துறையில் உள்ள வங்கிகளை தனியார்மயப் படுத்துவதை எதிர்த்தும், பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதை எதிர்த்தும் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்புகள் பல இணைந்து இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்தியாவில் நடக்கும் வங்கிப் பரிவர்தனைகளில் 90சதவீத அளவு பொதுத் துறை வங்கிகளாலேயே கையாளப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Curfew in Jaffna: Sri Lanka military says northern fighting kills 19 – Eezham & Sri Lanka Updates

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

இலங்கையின் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து மேல்மாகாணத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் தங்களை காவல்துறையில் இன்று ஞாயிற்றுகிழமை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு பதிவு நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக இலங்கை காவல்துறையின் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறுகையில், தமக்கு கிடைத்த தகவலின்படி, மொத்தம் 1310 குடும்பங்களை சேர்ந்த 4308 பேர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

அத்தோடு சிங்கள முஸ்லிம் மக்கள் பதிவு செய்துகொள்ள முன்வரவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்றும், தமிழ் மக்கள் அளவுக்கு அவர்கள் பதிவு செய்து கொள்ளவில்லை என்பது உண்மை தான் என்றும் கூறினார்.

மேலும், சென்றமுறை வடபகுதியிலிருந்து வந்து குடியேறியவர்களுக்காக நடந்த பதிவு நடவடிக்கையின்போது பதிவுசெய்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இம்முறை பதிவு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்


இலங்கையில் ரயில் சேவைகள் பாதிப்பு

இலங்கை ரயில்
இலங்கை ரயில்

இலங்கையில் ரயில் ஒட்டுநர்களும், நடத்துனர்களும், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டிருப்பதால் நாடளாவிய ரீதியில் புகையிரதசேவைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாத நடுப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தின் கனேமுல்ல பகுதியில் இரண்டு ரயில் வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட சம்பவத்தினைத் தொடர்ந்து இரண்டு ரயில் சாரதிகளும், இரண்டு நடத்துனர்களும் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

ஆனாலும் ஒட்டுநர்களும், நடத்துனர்களும் இந்த விபத்து தங்களது தவறினால் ஏற்பட்டது அல்ல என்றும் இலங்கையில் பலதசாப்த காலமாக தொடர்ச்சியாக பாவனையில் இருந்துவரும் பழைய சமிக்ஞை வசதிகளின் தொழில் நுட்பகோளாறே காரணம் என்று தெரிவித்து, இந்த சமிக்ஞை வசதிகள் புதிதாக செய்யப்பட வேண்டுமென்று கோரி வேலை நிறுத்தத்தில் குதித்திருக்கின்றனர்.

கடந்த இரண்டு நாட்களும் வார இறுதி என்பதால் இந்த வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் தொகை ஒப்பீட்டளவில் சிறிதென்றும், இந்த வேலை நிறுத்தம் தொடரப்படுமானால், திங்கட்கிழமை அலுவலகம் செல்லும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று கொழும்பு கோட்டை ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டை பிரதான ரயில்நிலையத்தில் வழமையாக நாளொன்றிற்கு சுமார் 300 க்கும் குறையாத தடவைகள் ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்றும் ஆனால் இன்று கண்டிக்கு இரண்டு ரயில்களும், காலிக்கு இரண்டு ரயில்களும், மாத்தறைக்கு ஒரு ரயில் என மொத்தம் ஐந்து ரயில்களே சேவையில் ஈடுபட்டன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


இலங்கையில் அதிகார பரவலாக்கலில் நீதித்துறை முன்மாதிரி – பிரதம நீதிபதி

இலங்கை பிரதம நீதிபதி சரத் என்.சில்வா
இலங்கை பிரதம நீதிபதி சரத் என்.சில்வா

இலங்கையில் நாட்டின் அதிகாரப் பரவலாக்கலில் நீதித்துறை ஒரு முன்மாதிரியாக இருப்பதாக அந்நாட்டு பிரதம நீதிபதி சரத் என்.சில்வா கூறுகின்றார்.

மட்டக்களப்பிலும் கல்முனையிலும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களை திறந்து வைத்து உரையாற்றிய போது இதனை தெரிவித்த அவர், நாட்டில் நீண்ட காலம் யுத்தத்திலேயே முடிவடைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இனப் பிரச்சினை தொடர்பாகவும் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி நிர்வாக கட்டமைப்பு தொடர்பாகவும் தனது கருத்தக்களை வெளியிட்ட பிரதம நீதிபதி சரத் என்.சில்வா, நீதி நிர்வாகத்தைப் பொறுத்த அளவிலே அதிகபட்ச அளவிலே நாம் அதிகாரப் பகிர்வு செய்துள்ளோம். அரசியல் சாசனத்தின் 13ஆவது சீர்திருத்தம்கூட ஒரு அதிகாரப் பகிர்வு நடவடிக்கையாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. சிவில் வழக்குகளின் மேல்முறையீட்டை பிராந்திய நீதிமன்றங்களே விசாரிப்பது என்ற அளவிலே 13ஆவது சீர்திருத்தத்தையும் விஞ்சி அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டுள்ளது. 13ஆவது சீர்திருத்தத்தைத் தாண்டி அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து பல முறை அனைத்துக் கட்சி கூட்டங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. ஆனால் அப்படியானஃ ஆர்ப்பாட்டம் ஒன்றுமே இல்லாமல் நீதி நிர்வாகத்தைப் பொறுத்த அளவிலே 13ஆவது சீர்திருத்தத்தை நாங்கள் விஞ்சியிருக்கிறோம்.

அதிகாரப் பகிர்வைப் பொறுத்த வரை அமெரிக்க பாணியில் கட்டமைப்பு வேண்டும் இந்தியப் பாணியில் கட்டமைப்பு வேண்டுமென்றெல்லாம் சிந்திக்கத் தேவையில்லை ஏனென்றால் அந்த உதாரணங்களையெல்லாம் நாங்கள் ஏற்கனவே விஞ்சிவிட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கே இரண்டு மோதலற்ற பகுதிகளை அறிவித்துள்ளது இலங்கை அரசு

இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கே ஒட்டுசுட்டான் மற்றும் விஸ்வமடு ஆகிய பகுதிகளை மோதலற்ற பகுதிகளாக அறிவித்துள்ளார் இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்டினனட் ஜெனரல் சரத் பொன்சேகோ.

இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும் போது, விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக வைத்துள்ளார்கள் என்றும், அவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி இந்த பகுதி வரலாம் என்று கூறினார். மேலும் இவ்வாறு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை அப்பகுதி அரசாங்க அதிபர்கள் செய்வார்கள் என்றும், அப்பகுதிக்கு ஏற்கனவே உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


போர்ச்சூழலிலும் தொடர்ந்து இயங்கும் கிளிநொச்சி மருத்துவமனை

கிளிநொச்சி மருத்துவமனை
கிளிநொச்சி மருத்துவமனை

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைத்தளமாக விளங்கிய கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்ற இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் அந்த நகரைச் சூழ்ந்த பல களமுனைகளில் உக்கிரமான சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக இரு தரப்பிரும் கூறுகின்றார்கள்.

கிளிநொச்சி பகுதியில் இருந்து செயற்பட்டுவந்த அரச தனியார் அலுவலகங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி அரச செயலகமும் கண்டாவளையில் உள்ள பிரதேச செயலகத்திலிருந்து செயற்படத் தொடங்கியுள்ளது.

எனினும், கிளிநொச்சி பொது மருத்துவமனை தொடர்ந்தும் கிளிநொச்சி நகரிலேயே இயங்கி வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி கூறுகின்றார்.

அந்தப் பிரதேசத்திற்குத் தேவையான குழந்தைகளுக்குரிய நோய்த்தடுப்பு மருந்துகள் உட்பட பல உயிர்காக்கும் மருந்துகளும், மகப்பேற்றுத் தாய்மார்களுக்கும் அவசியமான பல மருந்துகளும் கிளிநொச்சி மருத்துவமனையில் 20 குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி கூறுகின்றார்.

இந்தக் குளிர்சாதன வசதி வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மருத்துவமனையில் மட்டுமே இருப்பதாகவும், இந்த மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் எறிகணை வீச்சுக்களும் விமானக்குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்ற போதிலும், இந்த மருத்துவமனைக்குரிய வசதிகளுடன் கூடிய மாற்றிடம் ஒன்று இல்லாத காரணத்தினால் வேறு இடத்திற்குச் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

எறிகணை மற்றும் விமானக்குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் கிளிநொச்சி மருத்துவமனை 24 மணித்தியாலமும் செயற்பட்டு வருவதுடன் 150க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு வந்து செல்வதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார். இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


தாக்குதலுக்குள்ளாகும் கிளிநொச்சியிலிருந்து வெளியேறும் மக்கள்

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிளிநொச்சி நகரை அரச படைகள் நெருங்கி வருவதாக தகவல்கள் வரும் நிலையில், அந்நகர் மீது வான் தாக்குதல்களும், ஷெல் தாக்குதல்களும் தொடர்ந்து நடப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த சூழலில் கிளிநொச்சியை விட்டு, நகர மக்கள் பெரும்பாலோனோர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

நகரில் உள்ள பெரும்பாலான தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அத்துடன் கிளிநொச்சியின் அஞ்சல் அலுவலகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இன்று நடத்தப்பட்ட விமானக் குண்டு தாக்குதலில், கிளிநொச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் காவல்துறைத் தலைமையகம் அழிக்கப்பட்டிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நானயக்கார தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

அத்துடன் இதற்கு அருகில் அமைந்திருந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் களஞ்சியசாலை ஒன்றும் அழிக்கப்பட்டிருப்பதாகவும் புலிகளின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஏழு பொதுமக்கள் குண்டுத்தாக்குதல்களில் காயம்’

இந்த தாக்குதல்களில் கிளிநொச்சி நகரைச்சேர்ந்த ஏழு பொதுமக்கள் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகள் கூறியிருக்கின்றனர்.

கிளிநொச்சி நகரைச் சூழ்ந்த பல களமுனைகளில் இன்றும் நேற்றும் நடந்த மோதல்களில் நான்கு படையினரும், 26 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவம் கூறியிருக்கிறது. மோதல்களில் உயிர்ச்சேதங்கள் குறித்து பக்கச்சார்பற்றவகையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், நகரவாசிகள் இருவரிடம் தமிழோசை சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள், தொடர்ந்து இடம்பெற்று வரும் குண்டுவீச்சு காரணமாக 99 சதவீத மக்கள் வெளியேறிவிட்டதாகவும், நகரில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் எல்லம் மூடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மக்கள் வாடகைக்கு லாரிகளை அமர்த்தி, கொண்டு செல்ல முடிந்த அளவு உடமைகளுடன், கிளிநொச்சிக்கு கிழக்கே விசுவமடு போன்ற பகுதிகளை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, வெள்ளிக்கிழமையும் , கிளிநொச்சி நகரின் மீது வான் மற்றும் குண்டு தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்தார்.

குண்டுத் தாக்குதல்கள் காரணமாக, பொதுமக்கள் கிளிநொச்சியிலிருந்து கிழக்கு நோக்கி வெளியேறுவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

கிளிநொச்சியின் மீது தாக்குதல்
அழிவின் ஒரு காட்சி

வியாழக்கிழமை நடந்த குண்டுத் தாக்குதல்களில் ஆறு சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, நேற்று வியாழக்கிழமை வன்னிப்பகுதிக்கு 51 ட்ரக் வண்டிகளில், ஐ.நா மன்றத்தால் கொண்டு செல்லப்பட்ட உணவுப்பொருட்கள் அங்குள்ள இடம் பெயர்ந்த மக்களுக்கு ஒரு வார காலத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொருத்த மட்டில், மருந்துப்பொருட்கள், வாழ்விட வசதிகளை ஏற்படுத்துவதற்கான பொருட்கள், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துவதற்கான பொருட்கள் ஆகியவை அவசரமாகத் தேவைப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

உணவுப்பொருட்கள் ஓரளவு வந்து சேர்ந்த போதிலும், உணவுசாரா நிவாரணப்பொருட்கள் வரவில்லை என்று கூறிய அவர், கடந்த 20 நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தபால் சேவை நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.


இலங்கையில் வன்னியைச் சென்றடைந்துள்ளது உதவிப் பொருள் வாகனத் தொடரணி

இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனத் தொடரணி ஒன்று வன்னி சென்றடைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மதியத்துக்குள் இந்த உணவுப் பொருட்கள் லாரிகளிலிருந்து இறக்கப்பட்டு அரசாங்க அதிபர்கள் மற்றும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதாக உலக உணவு திட்டத்தின் அதிகாரியான மேட்ஸ் வைல்ஸ்ட்ரப் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள் தற்போது எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் உணவு தேவைப்படுபவர்களின் பட்டியலை தயாரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உணவு விநியோகத்துக்கு தயாராக உள்ளது என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டவுடன் இடம்பெயர்ந்தவர்கள் தங்களை பதிவு செய்துகொண்டு உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் உலக உணவு திட்டத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மீது அரச விமானப்படை குண்டுவீச்சு

புலிகளின் அரசியல்துறை செயலகம்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் முக்கிய நகரமாகிய கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மற்றும் சமாதான செயலகம் என்பவற்றை அரச விமானப்படைகள் குண்டுவீசி அழித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கிளிநொச்சி பிரதேச இராணுவ தலைமையகத் தளத்தினை விமானப்படையினர் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

கிளிநொச்சி பரவிப்பாய்ஞ்சான் என்ற இடத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் இராணுவ தலைமையகத் தொகுதியில் புலிகளின் முக்கிய தலைவர்கள் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தவேளையில் அதனை இலக்கு வைத்து, இந்த விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம். இந்தத் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றது.

எனினும் கிளிநொச்சியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறை செயலகம் மற்றும் சமாதான செயலகம் என்பவற்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மின்னஞ்சல் வழியான அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது.


இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகக் கட்சிகள் உண்ணாவிரதம்

இலங்கைத் தமிழர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும், இலங்கை அரசுக்கு எவ்வித ராணுவ ஒத்துழைப்பும் வழங்கக்கூடாது, அரசியல் ரீதியான தீர்வு காணவேண்டும் என மத்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை வற்புறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாநில அளவில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், மார்க்சிஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உட்பட் பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

ஆனால் அஇஅதிமுக ஆர்ப்பாட்டத்தை கலந்துகொள்ளவில்லை.

மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் தனது கட்சியினர் கலந்து கொள்வர் என்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தும், ஏன் அக்கட்சி இப்போது புறக்கணித்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. பாமகவினரும் கலந்துகொள்ளவில்லை.


பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துள்ளார் கனிமொழி

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாகவும், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாகவும் இந்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி வியாழன் மாலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்புக்கு வந்துள்ள கிழக்கு மாகாண மக்கள் காவல்துறையிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து தற்காலிகமாக மேல் மாகாணத்துக்கு சென்றவர்கள் தம்மை காவல்துறையினரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கிழக்கு மாகாணத்திலிருந்து வந்துள்ளவர்கள் தங்களது பெயர்களையும் தங்கியுள்ள விலாசங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என காவல்துறை வேண்டியுள்ளதாக அதன் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது காவல்துறையினரின் வேண்டுகோள் மட்டுமல்ல சட்டபூர்வ தேவையும் கூட என்று கூறிய அவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இவ்வாறான பதிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து மேல் மாகாணத்துக்கு வரும் தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் பர்கர்களும் கூட இவ்வாறு பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக ஊவா மாகாணத்திலிருந்து வந்துள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்களை தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இலங்கையின் வடக்கே மோதல்கள் தொடருகின்றன

வடக்கே வான் தாக்குதல்கள்
வடக்கே வான் தாக்குதல்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டு பதிமூன்று பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் கிளிநொச்சி திருவையாற்றுப் பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் சார்லஸ் அண்டனி படைதளத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் பெண்கள் படைப்பிரிவின் பயிற்சி தளத்தின் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இதனிடையே கிளிநொச்சி, வெலிஓயா மற்றும் வவுனியா களமுனைகளில் இடம்பெற்ற சண்டைகளில் இரண்டு இராணுவத்தினரும் இருபத்தியாறு விடுதலைப் புலிகளும் பலியாகியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியாகவில்லை.


காத்தான்குடி குண்டு வெடிப்பில் இருபதுக்கும் அதிகமானோர் காயம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் காத்தான்குடி பிரதேசத்தில் திங்களன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் சிறுவர்கள் உட்பட இருபதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காத்தான்குடி பேருந்து நிலையத்துக்கு முன்னதாக உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகேயே இந்த குண்டு வெடித்ததாகவும், அந்தப் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் எரிந்து காணப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

காயமடைந்தவர்களில் 16 பேர் காத்தான்குடி வைத்திய சாலைக்கு எடுத்துவரப்பட்டதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஆரையம்பதி மருத்துவமனையிலும் 7 பேர் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இவை குறித்த மேலைதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கொழும்பு புறக்கோட்டை குண்டுவெடிப்பில், இருவர் காயம், வாகனங்கள் சேதம்

குண்டுவெடித்த இடம்
குண்டுவெடித்த இடம்

இலங்கையின் தலைநகர் கொழும்பின் சனசந்தடி நிறைந்த புறக்கோட்டைப் பகுதியில் திங்களன்று பிற்பகல் இடம்பெற்ற சிறிய குண்டுவெடிப்பொன்றில் இருவர் சிறுகாயமடைந்திருக்கிறார்கள், சுமார் ஆறு வாகனங்கள் சேதமடைந்திருக்கின்றன.

இன்றைய இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பொலிசார் இன்று திங்களன்று சுமார் 12.30 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை மல்வத்தை வீதியிலுள்ள வாகனத் தரிப்பிடமொன்றிற்கு அருகில் மறைத்து வைத்துவைக்கப்பட்டிருந்த சிறிய குண்டொன்றே வெடித்திருப்பதாகவும், இதில் சிறுகாயங்களிற்குள்ளான ஆணொருவரும், பெண்ணொருவரும் சிறுகாயங்களிற்குள்ளாகி கொழும்பு தேசியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளைக் கண்டறிய பொலிசார் தற்போது தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சில வாரங்களுக்குள் புறக்கோட்டைப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது சிறிய குண்டுவெடிப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


வன்னி மோதல்களில் பலர் பலி

இலங்கை பாதுகாப்புப் படைச் சிப்பாய் ஒருவர்
இலங்கை பாதுகாப்புப் படைச் சிப்பாய் ஒருவர்

இலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையினர் இன்று இரண்டு தடவைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி, விடுதலைப்புலிகளுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நேற்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சண்டைகளில் 23 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் 26 படையினர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் வன்னேரிக்குளத்திற்கும், பண்டிவெட்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை எதிர்த்து நேற்றுக் காலை முதல் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்திவருவதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.


கனேமுல்லயில் ரயில் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் சாவு, 26 பேர் காயம்

இலங்கையில் இன்று மாலை கம்பஹா மாவட்டத்தின் கனேமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு ரயில் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒருவர் உயரிழந்திருக்கிறார், மேலும் 26 காயமடைந்து கம்பஹா மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள், இன்று சுமார் 3.30 மணியளவில் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கடுகதி புகையிரத வண்டியொன்று, கொழும்பிலிருந்து பொல்காவலயை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புகையிரதவண்டியுடன் மோதியதாகவும், இதில் காயமடைந்தவர்கள் சுமார் 27 பேர் உடனடியாகவே அருகிலுள்ள வைத்தியசாலைகளிற்கு விரையப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் இறந்தாகவும் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்காரணமாக றாகமவிற்கு அப்பால் புகையிரத சேவைகள் பாதிப்படைந்திருப்பதாகவும், இதனை சீர்செய்ய விசேட குழுக்கள் உடனேயே அங்கு விரையப்பட்டிருப்பதாகவும், இன்றுமலையளவில் சேவைகள் வழமைக்குத் திரும்பக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக் குறித்த விசாரணைகளை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்திருக்கிறது.


களுவாஞ்சிக்குடியில் இருவர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று அதிகாலை குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த இளைஞர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கோடைமேடு அணைக்கட்டோரம் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் விசேட அதிரடிப்படையினரால் அவதானிக்கபட்டதையடுத்து, இரு தரப்பினருக்குமிடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றதாகவும் அப்போது ஒரு இளைஞரிடமிருந்த குண்டு வெடித்துச் சிதறியதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தின் பின்பு அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 2 சடலங்களுடன் தற்கொலை அங்கியொன்றும், கிளேமார் குண்டொன்று உட்பட மேலும் சில பொருட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் மீண்டும் மனிதாபிமான பணிகளை ஆரம்பிக்கிறது ஐ.நா

இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வரும் வன்னிப் பகுதியில் மீண்டும் உணவு மற்றும் இதர உதவி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகங்களின் சார்பில் பேசவல்ல அதிகாரியான கார்டன் வைஸ் தமிழோசையிடம் கூறுகையில், வன்னியில் இருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு பொருட்களை நேரடியாக வழங்க அரசாங்கமும், ஐ.நா வும் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த உணவு பொருட்கள் ஐ.நாவின் மேற்பார்வையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்றும், இந்த உணவு பொருட்கள் கிளிநொச்சியை சுற்றியவாறு எடுத்து செல்லப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் எங்கெல்லாம் பெரும் கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கெல்லாம் நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்றும் கார்டன் வைஸ் கூறினார்.

அத்தோடு இந்த உணவு பொருட்கள் எடுத்து செல்லப்படும் பாதை குறித்து அரசாங்கத்திடமும், விடுதலைப் புலிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், தாங்கள் வன்னியில் உதவி பணிகளை மீண்டும் ஆரம்பித்து இருந்தாலும், தாங்கள் வன்னியில் இருந்து செயற்படுவதாக எண்ணக் கூடாது என்றும் இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகங்களின் சார்பில் பேசவல்ல அதிகாரியான கார்டன் வைஸ் கூறினார்.

அவர் தெரிவித்த தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வவுனியா நகரின் மையப்பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்

வவுனியாவில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்
வவுனியாவில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்

இலங்கையின் வடக்கே பலத்த இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள வவுனியா நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இராணுவத்தினர் பொலிசார் உட்பட 8 படையினரும் 3 சிவிலியனகளும் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிசார் கூறியிருக்கின்றனர்.

இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவம் இராணுவ வாகனங்களும், பொதுப்போக்குவரத்து வாகனங்களும் போய் வருகின்ற ஏ9 வீதியில் வவுனியா நகர தனியார் பேரூந்து நிலையச் சந்தியில் இடம்பெற்றிருக்கின்றது.

சைக்கிளில் வந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாரி, கடமை முடிந்து தமது விடுதிகளுக்குச் செல்வதற்காக 4 பொலிசார் பிரயாணம் செய்வதற்காக ஏறியிருந்த முச்சக்கர வண்டியொன்றின் மீது மோதி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.


தமிழக மீனவர் கச்சத் தீவு பகுதியில் சுட்டுக்கொலை

தமிழக மீனவ படகு
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

தமிழக மீனவர் ஒருவர் கச்சத் தீவு பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மேலும் சிலருடன் இணைந்து கச்சத்தீவு பகுதியில் சனிக்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருக்கையில், இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

உடல் ஞாயிறன்று காலை ராமேஸ்வரம் வந்து சேர்ந்தது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் அரசின் நிவாரணத் தொகையாக மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலையை முருகனின் குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளார்.

தொடரும் இத்தகைய சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அறிவித்திருக்கின்றனர்.

இதனிடையே சென்னையிலுள்ள இலங்கைத் துணைத்தூதர் அம்சா துப்பாக்கி சூட்டிற்கும் இலங்கை கடற்படையினருக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை என்றும், இரு நாடுகளுக்கும் இருக்கும் நல்லுறவைக் கெடுக்க சதி செய்யும் சிலர் இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் அறிக்கை ஒன்றில் கூறி உள்ளார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

தாக்குதலில் காயமடைந்தவர்கள்
தாக்குதலில் காயமடைந்தவர்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரப்பகுதியில் சனிக்கிழமையன்று இடம்பெற்ற விமானக்குண்டுத் தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன் உயிரிழந்துள்ளார். அவரது மனைவியும் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் சனிக்கிழமை பகல் நடைபெற்ற இந்தத் தாக்குதல் விடுதலைப் புலிகளின் பெண் கரும்புலிகளுடைய தளத்தின்மீதே நடத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இதன்போது அந்த முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பலர் காயங்களுக்கு உள்ளாகியதுடன் சிவிலியன்கள் தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட சிவிலியன்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆரையம்பதி பிரதேசவாசிகளிலொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 18 ம் திகதி ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட இருவர் காத்தான்குடிக்கு செல்வதாகக் கூறி புறப்பட்டு சென்ற பின்பு காணாமல் போயுள்ளதாக உறவினர்களினால் புகார் செய்யப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்

பொலிஸ் தகவல்களின் படி இந்நபர்களில் ஒருவரே கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

குறிப்பிட்ட மாணவன் தொடர்பாக இது வரை தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இருவரும் எங்கு வைத்து காணாமல் போனார்கள் என்பது தொடர்பாகவோ,சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பின்ணணியோ இது வரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இந்த இருவரும் காணாமல் போன சம்பவத்தையடுத்து ஆரையம்பதி பிரதேசத்தில் கடந்த ஒரு வார காலமாக வழமை நிலை பாதிக்கப்பட்டு பதட்ட நிலை காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றம் தெரிவுக்குழுக்களை நியமித்துள்ளது

விடுதலைப்புலிகள் அமைப்புடன் இலங்கை ஆளுங்கட்சிக்கு ரகசிய உடன்பாடு இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு, மிக் ரக விமானங்களின் கொள்வனவு குறித்த ஒரு சர்ச்சை மற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு எதிரான சில குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து விசாரிக்கு முகமாக மூன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் டபுள்யூ.ஜே.எம். லொகுபண்டார நியமித்துள்ளார்.

இவற்றில் மிக் விமான விவகாரம் குறித்து ஆராயும் குழுவுக்கு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரிய தர்ஸன யாப்பவும், விடுதலைப்புலிகளுடனான, ஆளுங்கட்சியின் உடன்பாடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவுக்கு அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வாவும், இறைவரி திணைக்கள விவகாரம் குறித்த விசாரணைக்குழுவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான கபீர் ஹசீம் அவர்களும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதலிரண்டு விவகாரங்களில் குற்றச்சாட்டுக்கள் ஆளும்கட்சிக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவற்றை விசாரிக்கும் குழுக்களுக்கு அரசாங்க அமைச்சர்களே தலைவர்களாக நியமிக்கப்பட்டதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்துள்ளது.


வட இலங்கையில் வான்வழித் தாக்குதல்கள்

இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு உதவியாக வான்வழி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், கிளிநொச்சி மாவட்டம் பூனகரி பகுதியில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீது வியாழன் இரவு எம்.ஐ. 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் குண்டுத் தாக்குதல் நடத்தி சேதங்களை ஏற்படுத்தியதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

காயமடைந்த பெண் மருத்துவமனையில்…

ஆயினும் கிளிநொச்சி நகரப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளை நோக்கி படையினர் தொடர்ச்சியாக எறிகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இந்தத் தாக்குதல்களின்போது உருத்திரபுரம் பகுதியில் எறிகணை குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 26 வயதுடைய இளம் தாயொருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சி மீது அடுத்த வாரம் அளவில் தாக்குதல் ஆரம்பமாகலாம்: இலங்கை இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா

இலங்கையின் வடக்கே யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் நீண்டகாலக் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாகவும், அடுத்த வாரமளவில் இந்த நகரத்தின் மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா கொழும்பில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டதுபோல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டுவருவதாகவும்,. அடுத்த வாரம் அளவில் கிளிநொச்சி மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ளமுடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.


மீண்டும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் சீனா

விண்வெளிக்கு செல்லும் சீன ரொக்கெட்

சீனா விண்வெளிக்கு மூன்றாவது முறையாக மனிதனை அனுப்புவதற்கான பணிகளை தீவிரமாக செய்துவருகிறது. இம்முறை, விண்வெளிக்கு செல்பவர் விண்ணில் நடக்கவும் உள்ளார்.

சீன விண்வெளி வீரர் இப்படிச் செய்யவுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சீனவுக்கு சர்வதேச மதிப்பு கிடைக்கும் என்றும் உள்நாட்டில் தேசப் பற்றும் நாட்டைப் பற்றிய பெருமிதமும் அதிகமாகும் என்றும் சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நம்புகின்றனர்.

சீன ஊடகங்கள் விண்வெளி வீரர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பங்களைப் பற்றியும் பல நுண்ணிய தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

அடுத்த 12 ஆண்டுகளுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையங்களை அமைக்கவும் நிலவில் தரையிரங்கவும் சீனா பிரம்மாண்டத் திட்டங்களை தீட்டிவைத்துள்ளது. இதன் காரணமாக சில நடைமுறை பலன்களும் இருக்கின்றன என்றும் சிலர் வாதிடுகின்றனர்.


வன்னிக்கு உணவுப் பொருட்கள் செல்லத் தொடங்கியுள்ளன

வன்னியில் ஒரு சாலையோரக் கடை
வன்னியில் ஒரு சாலையோரக் கடை

இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர் உணவுப் பொருட்கள் செல்லத் தொடங்கியுள்ளன.

இருபது டிரக் வண்டிகளில் உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்த போதிலும் ஐந்து டிரக் வண்டிகளில் எண்பத்து ஐந்து டண்கள் அளவுக்கு மட்டுமே பொருட்கள் அனுப்பப்பட்டள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இதனிடையே கடந்த பத்து தினங்களில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 54 டிரக் வண்டிகளில் உதவிப் பொருட்கள் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி 80 டிரக் வண்டிகளில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

வடக்கே மோதல்கள் தொடருகின்றன

வடக்கே வவுனியா, கிளிநொச்சி மற்றும் வெலிஓயா பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

அக்கராயன்குளம் சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் இரண்டு சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று இராணுவம் கூறியுள்ளது.

இவை குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு கருத்துக்கள் உடனடியாக வெளியாகவில்லை.


மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் பகுதிகளில் ஹர்த்தால்

வெறிச்சோடிய சாலைகள்
ஆளில்லா சாலைகளும் அடைக்கப்பட்டுள்ள கடைகளும்

மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பிரதேசவாசிகள் இருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தைக் கண்டித்து மாவட்டத்திலுள்ள சில தமிழ் பிரதேசங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக மாவட்டத்தின் வழமை நிலை பாதிக்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை ஆரையம்பதி பிரதேச பாடசாலை மாணவன் உட்பட இருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர்

தமது அயல் பிரதேசமான காத்தான்குடிக்கு ஆடு விற்பதற்காக குறிப்பிட்ட இருவரும் சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

இருவரும் காணாமல் போன சம்பவத்தைக் கணடித்தும், அவர்கள் கடத்தப்பட்டிருந்தால் விடுவிக்க வேண்டும் என்று கோரியுமே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

தமது பிரதேசத்திற்குள் குறித்த நபர்கள் கடத்தப்படவோ அல்லது காணாமல் போகவோ இல்லை என காத்தான்குடி பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் புதன்கிழமை மாலை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

ஆனால் இவ்விருவரும் காத்தான்குடி பிரதேசத்திற்குள்ளேயே காணாமல் போன்தாக ஆரையம்பதி செல்வ விநாயகர் ஆலய பரிபாலன சபைத் தலைவர் எம். கமலாகரன் கூறுகின்றார்.

ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி பிரதேசவாசிகளிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை தான் சந்தித்து உரையாடியதாக கூறும் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, வியாழக்கிழமை முதல் பிரதேசத்தில் இயல்பு நிலை ஏற்படுத்துவது குறித்து இரு தரப்பு பிரமுகர்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

Nalini release: HC quashes advisory board order on Nalini’s plea

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2008

நளினி விடுதலை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நளினி மற்றும் அவரது கணவர் முருகன்
நளினி மற்றும் அவரது கணவர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினியை விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

விதிமுறைகளின்படி புதிய குழுவை அமைத்து, நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி நாகமுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து, நளினியின் வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்களின் பேட்டியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Posted in India, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Finland’s gun culture: Gunman murders 10 of his fellow students: School Shooting – Armed student opens fire at college

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 24, 2008

ஃபின்லாந்தில் பள்ளிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம்

ஃபின்லாந்து நாட்டில் சமையல் கலை மற்றும் தொழிற்பயிற்சிக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், ஒரு துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.

தன்னைத்தானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்ட அந்த துப்பாக்கிதாரி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.

தான் ஒரு துப்பாக்கி பயிற்சியிடத்தில் இருப்பதான வீடியோவை இணையத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது திங்கழன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட போதிலும், கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கௌகாஜோகி நகரில் நடந்த இந்த சம்பவம், கடந்த ஒரு வருடத்தில், ஃபின்லாந்தில் நடந்த இதுபோன்ற இரண்டாவது சம்பவமாகும்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Northern India Faces More Rain as Monsoon Toll Reaches 2400, Displace Millions: Army called in as floods overwhelm defences in Uttar Pradesh: Delhi face Yamuna fury

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 24, 2008

இந்தியாவில் வெள்ளத்தால் 200 பேர் பலி

வட இந்தியாவில் பல லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்
வட இந்தியாவில் பல லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் கடந்த சில நாட்களில் பெய்த கடுமையான பருவ மழை காரணமாக கிட்டத்தட்ட 200 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் 20 லட்சம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை மீட்பதற்கான பணியில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

US embassy in Yemen hit by car bomb, 1 Indian killed – Kerala trainee nurse killed: Al-Qaeda resurgence & terror threats

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2008

யேமன் நாட்டில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல்

யேமனில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது
யேமனில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது

யேமன் நாட்டில் மிக பலத்த பாதுகாப்புடன் இயங்கும் அமெரிக்க தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தொடுத்த ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலில், குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தூதரகக்கட்டிடத்துக்கு வெளியே இரண்டு கார் குண்டுகள் வெடித்தன; அதன் பின்னர் கட்டிடத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; போலிஸ்காரர்கள் போல உடையணிந்து இந்த தாக்குதலை நடத்தியவர்கள், பாதுகாவலர்களுடன் மோதினர். இறந்தவர்களில் ஆறுபேர் தீவிரவாதிகளும் பாதுகாவலர்களும் அடங்குவர்.

தூதரக அலுவலர்கள் யாரும் காயமடையவில்லை என்று அமெரிக்க அரசுத்துறை நிறுவனம் கூறியது. இஸ்லாமிய ஜிஹாத் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் குழு ஒன்று இந்த தாக்குதலை தான் நடத்தியதாகக் கூறியது.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Generic drug industry: Ranbaxy hires Giuliani to help it with FDA ban: shares drop 10 pct as US bans drugs – Indian pharma companies

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2008

சிக்கலில் இந்தியாவின் மருத்து தயாரிப்பு நிறுவனம்

சிக்கலில் ரான்பேக்ஸி நிறுவனம்
சிக்கலில் ரான்பேக்ஸி நிறுவனம்

இந்திய மருந்து தயாரிப்பு பெருநிறுவனமான, ரான்பாக்ஸி, அது தயாரிக்கும் 30க்கும் மேற்பட்ட வணிகப்பெயர்கள் அல்லாமல், ரசாயனப் பெயர்களை வைத்து மட்டுமே அறியப்படும் மருந்துகள் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்பட, அமெரிக்க அரசு விதித்திருக்கும் தடை குறித்து தான் ஏமாற்றமடைந்திருப்பதாக கூறியுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை, எப்.டி.ஏ, இந்த நிறுவனத்தின் இரண்டு தொழிற்கூடங்களில் தயாரிப்பு தரம் குறித்த பிரச்சினைகளை தான் கண்டுபிடித்திருப்பதாகக் கூறியது.

ரான்பேக்ஸியோ, எப்.டி.ஏ கடந்து இரண்டு ஆண்டுகளாக எழுப்பிய கவலைகள் ஒவ்வொன்றைக்குறித்தும், தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாகவே தான் கருதியதாகவும் கூறியுள்ளது.

ஆயினும், தனது மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் குணப்படுத்தும் திறன் குறித்து எந்த வித கேள்விகளும் இல்லை என்று எப்.டி.ஏ முடிவிற்கு வந்திருப்பது பற்றி தான் திருப்தியடைந்திருப்பதாகவும் ரான்பேக்ஸி கூறியது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Baby Formula – 4 dead, 6200 sick: China Milk Scandal Shows Ties Between Companies, City Officials: Singapore suspends China milk imports; deadly chemical found in yoghurt

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2008


பாலில் நஞ்சு கலக்க காரணமான வலையமைப்பு கலைக்கப்பட்டதாக சீனா கூறுகிறது

சீனப்பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை தடை செய்யவோ அல்லது திருப்பியழைக்கவோ மேலும் மேலும் நாடுகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த இரசாயனத் தொற்று ஏற்பட காரணமாக இருந்த வலையமைப்பை கலைத்து விட்டதாக சீனா கூறுகிறது.

திருட்டுத்தனமாக நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் பால் பண்ணைகளில் நடத்தப்பட்ட சோதனைகளையடுத்து இருபத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாலில் மெலமைன் என்னும் இரசாயனத்தை சேர்த்தார்கள் அல்லது அதை பாலில் சேர்க்க உதவினார்கள் என்ற காரணத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் இரசாயனக் கலப்பு காரணமாக அங்கு பல ஆயிரம் குழந்தைகள் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி நோயுற்றன. நான்கு குழந்தைகள் இறக்கவும் நேரிட்டது.

இதனிடையே தங்களது குழந்தைகள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வழக்குகளை தொடுத்திருக்கும் குடும்பங்கள் வழக்கை கைவிடுமாறு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்படும் – சீன பிரதமர்

சீன குழந்தை
பால்மா கலப்படத்தால் குழந்தைகள் பாதிப்பு

சீனாவில் பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதி செய்ய சீன பிரதமர் வென் ஜியாபோ உறுதியளித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு தங்கள் அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் பால்மா கலப்பட விஷயத்தில் தலைநகர் பீஜிங்கில் புதியதாக 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக சீன செய்திகள் கூறுகின்றன.

மேலும் ஷாங்காய் நகரத்தில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்து சதவிதத்தினர் சிறுநீரகங்களில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இது வரையில் நான்கு குழந்தைகள் பலியாகியுள்ளனர், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் பால்மாவில் ஏற்பட்ட ரசாயனக் கலப்பால் பல ஆயிரம் குழந்தைகளுக்கு பாதிப்பு

பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை
பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை

சீனாவில் இரசாயனக் கலப்பு கொண்ட பால்மாவை உட்கொண்ட காரணத்தினால் ஆறாயிரம் குழந்தைகள் நோய்வாய்பட்டுள்ளனர் என அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இதுவரை மூன்று குழந்தைகள் மரணமடைந்துள்ளன என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் சீனாவின் சுகாதார அமைச்சர் சென் ஷூ தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமானவர்களின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஊழல் தொடர்பான விவகாரம் பரவிவரும் நிலையில், சீனாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இராசயனமான மெலமைன், மேலும் இருபத்து இரண்டு வெவ்வேறு வர்த்தகப் பெயர்களையுடைய பால்மாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரசாயனப் பொருள் பால்மாவில் கலந்திருப்பதாக அறியப்படவில்லை. பாலில் புரதச்சத்து கூடுதலாக இருப்பதற்காக மெலமைன் கலக்கப்பட்டதாக எண்ணப்படுகிறது.

இதையடுத்து தேசிய அளவில் அனைத்து பால் உணவுப் பொருட்களும் பரிசோதிக்கப்பட வேண்டும் என சீனா உத்தரவிட்டுள்ளது.



சீன பால் உற்பொருட்களுக்கு சிங்கப்பூர் இறக்குமதி தடை

இரசாயனக் கலப்படம் நிறைந்த பால் மாவு

சீனாவிலிருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் சிங்கப்பூர் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சில சீன பால் உற்பத்திப் பொருட்களில் தொழிற்சாலை இரசாயனமான மலெமைன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவில் பாலிலும் பால் மாவிலும் இந்த இரசாயனக் கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடைகளிலிருந்து பால் உற்பத்திப் பொருட்கள் பலவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு அவை அகற்றப்பட்டுவருகின்றன.

சீனாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை கடந்த சில நாட்களில் எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் கிட்டத்தட்ட பத்து சதவீத மாதிரிகளில் மெலமைன் கலந்திருக்கிறது என சீன அரசாங்கத்தின் தரக் கண்காணிப்பு நிறுவனம் கூறுகிறது.

இதனிடையே, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவு வகைகளை பரிசோதனை செய்ய இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய வர்த்த நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன, நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அரசு இந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கையினை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

India: Violence against Christians: No let-up in Orissa, Karnataka mob attacks: Police station torched

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 17, 2008

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மத்திய அரசு கர்நாடகத்துக்கு அறிவுரை

கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுரை அனுப்பியிருக்கிறது.

ஒரிஸ்ஸா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் கடந்த சில தினங்களாக கிறிஸ்த தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவ மக்கள் மீதும் தாக்குதல் நடந்துவருகிறது.

இந்து கடும்போக்கு அமைப்புக்கள் இதற்குக் காரணம் என்றும், ஆனால் பாஜக தலைமையிலான மாநில அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த பிரச்சினையில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக மத்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா தெரிவித்தார்.

ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தின் 355-வது பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை அனுப்பக்கூடும் என்று தில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநில அரசைக் கலைப்பதற்குப் பயன்படுத்தப்படும் 356-வது பிரிவுக்கு முந்தைய நடவடிக்கை இது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

மத்திய அரசின் இந்த உத்தரவு, வெறும் அறிவுரை மட்டும்தான் என்றும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.



இந்து – கிறிஸ்தவ மோதல்கள் இந்தியாவில் தொடர்கிறது

மோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்
மோதலில் எரிக்கப்பட்ட ஒரு தேவாலயம்

இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு இடையில் முருகல் நிலை தொடரும் பின்னணியில் மேலதிக வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே மோதல்கள் இடம்பெற்ற கந்தமால் மாவட்டத்தில், சுமார் 500 பேர் கொண்ட கும்பல் ஒன்று காவல் நிலையத்தை தாக்கி தீவைத்ததில் ஒரு காவலதிகாரி கொல்லப்பட்டார். மற்ற காவலர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடித்தப்பினார்கள்.

ஹிந்து மத தலைவர் ஒருவர் ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டதை தொடர்ந்து தற்போதைய மதக்கலவரங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இந்த மோதல்கள் கடந்த சில தினங்களில் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவுக்கும் பரவியிருக்கிறது.

Posted in Govt, India, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sri Lanka’s Tamil Tigers warn of ‘genocide’ as UN agencies pullout: Ban Ki-moon ‘helping LTTE’ – Sri Lanka: IDPs urge foreign aid workers not to leave Vanni, block convoy

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2008

கிளிநோச்சிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற டிரக்குகளுக்கு அனுமதி மறுப்பு

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்று செவ்வாய் கிழமை உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற முறை நாளாக இருந்தபோதிலும், பொருட்களை ஏற்றிக்கொண்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற 20 ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகச் செல்வதற்கு படையினர் அனுமதி வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ட்ரக் வண்டிகளை ஓமந்தையூடாகச் செல்ல அனுமதிப்பதற்கு உயர்மட்டப் படைத்தரப்பினரிடமிருந்து தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என படையினர் தெரிவித்ததையடுத்து பல மணித்தியாலங்கள் காவல் இருந்துவிட்டு, இந்த ட்ரக் வண்டிகள் ஓமந்தையிலிருந்து வவுனியா திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வாரம் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பொருட்களைக் கொண்டு செல்வதற்கென ஏற்பாடுகள் இருந்த போதிலும் அந்த மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில் படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்குக் கடந்த வாரம் உரிய பிரயாண அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள் என்பன தொடர்ந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் 73 ட்ரக் வண்டிகளில் அரிசி, பருப்பு, கருவாடு உள்ளிட்ட உணவு மற்றும் கட்டிடப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் இன்று தெரிவித்திருக்கின்றது.

ஆயினும் 11 ஆம் திகதிக்குப் பின்னரான உணவு விநியோக நிலைமைகள் குறித்து இராணுவ தலைமையகம் எதனையும் தெரிவிக்கவில்லை.

ஆரசாங்கத்தின் அறிவித்தலையடுத்து, வன்னிப்பிரதேசத்தில் இருந்து ஐநா அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் கடந்த வாரம் வெளியேறியதைத் தொடர்ந்து வன்னிப்பிரதேசத்திற்கான குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொண்டு நிறுவனங்களின் வெளியேற்றம் மட்டுமல்லாமல், ஓமந்தைக்கு வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ9 வீதியை அண்டிய பிரதேசங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற கடும் சண்டை நிலைமைகளும் இந்த இழுபறி நிலைமைக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகின்றது.


இலங்கையின் வடக்கே கடும் மோதல்

இலங்கை விமானப்படையினர் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இலங்கை விமானப்படையினர் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர்

இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைகளில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு உதவியாக கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளத்திலும், அக்கராயன்குளம் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் இன்று செவ்வாய்கிழமை மதியம் 12.45 மணியளவில் அடுத்தடுத்து மூன்றுதடவைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை விளைவித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப்போர்முனைகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 28 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம், வன்னேரிக்குளம், பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களையடுத்து, படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

வெலிஓயா ஆண்டான்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘’பாசறை’’ என்ற கடற்புலிகளின் தளம் ஒன்றைப் படையினர் தம்வசமாக்கியிருப்பதாக இராணுவ தலைமையகம் தனது இணையதள செய்தியில் தெரிவித்திருக்கின்றது.

மல்லாவி மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் கடந்த சிலதினங்களில் இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 13 சடலங்கள் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படுவதற்காக இன்று வவுனியாவில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது.

இதேவேளை முச்சக்கர வண்டியில் வந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் இரண்டு பெண்கள் நேற்றிரவு கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது. இவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.


இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த கருத்தரங்கு

உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான கருத்தரங்கம்
உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான கருத்தரங்கம்

இலங்கையில் உள்நாட்டில் மோதல்களினால் நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான அகதிகளிற்கு நிரந்தர தீர்வொன்றினைக் காணும் நோக்கில் மனித உரிமைகள், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களுடன் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள மூன்று-நாள் கலந்துரையாடல் இன்று கொழும்பில் ஆரம்பமாகியது.

அகதிகளுகான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விசேட பிரதிநிதி பேராசிரியல் வால்டர் கலின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும், உதவி வழங்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய பேராசிரியர் வால்டர் கலின் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைசூழ்நிலைக்கும் மத்தியிலும், குறிப்பாக வடக்கில் ஏற்பட்டுள்ள இடர்களிற்கு மத்தியிலும் இவ்வாறானதொரு கலந்துரையாடலினை நடாத்துவது வரவேற்கத்தக்கது என்றும், வன்முறைகளிற்கும், இடப்பெயர்வுகளிற்கும் முகம்கொடுத்துள்ள மக்களின் துன்பங்களையும், தேவைகளையும் மறந்துவிடமுடியாது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வொன்றினைக்காண்பதற்கு தகுந்த திட்டமிடலொன்றினை முன்னகர்த்துவது என்பது ஒரு சவால் என்றும் அந்தச் சவாலிற்கு இப்போதே முகம்கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

ஆயுதக் களைவுக்கான அவசியம் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தல்

இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சர், அங்குள்ள ஆயுதக் குழுக்களிடம் ஆயுதக்களைவை செய்ய உறுதி வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியில் அமெரிக்க உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

கிழக்கிலே ஸ்திரத்தன்மை, பெருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும் இலக்கில் ஒரு முக்கிய பகுதியாக, இங்குள்ள மக்களுக்கு கல்வியறிவையும் தொழிற்பயிற்சியையும் வழங்குவது அமையும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு எண்ணத்தையும் உத்தியையும் முன்னெடுப்பதற்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதும் முக்கியமானதாகும் என்றும், இதன் மூலம் அங்கிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் அவர் கூறினார்.

தனியார் முதலீடுகள் அங்கு வருவதற்கு அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானது என்று வலியுறித்திய அமெரிக்கத் தூதர், அது விடயத்தில் தமக்கு கிழக்கு மாகாண முதல்வர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை அரசும், கிழக்கு மாகாண அரசும் முதலமைச்சரும் பாதுகாப்பு உத்திரவாதங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், அதுமாத்திரமல்லாமல் ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான வகையில் நடைபெறும் கொலைகள் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ராபர்ட் ஓ பிளேக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது இந்தக் கருத்து குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வட இலங்கையில் தொடர்ந்தும் கடுமையான உயிர்ச்சேதம்

இலங்கை இராணுவ தாங்கி ஒன்று
இலங்கை இராணுவ தாங்கி ஒன்று

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் கிழக்கு, மேற்கு களமுனைகளிலும், கொக்காவில் பிரதேசத்தின் தென்பகுதியிலும், மாங்குளத்திற்கு மேற்கிலும் விடுதலைப் புலிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் குறைந்தது 36 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், அவர்களது 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளளதாக இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது. மேலும் 24 படையினர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த உயிரிழப்புகள் சேதங்கள் குறித்து உடனடியாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகாத போதிலும், கிளிநொச்சிக்குத் தெற்கே, வன்னிக் களமுனைகளில் இராணுவத்தினரை எதிர்த்து விடுதலைப் புலிகள் நேற்று பல இடங்களில் முறியடிப்பு தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். வன்னிவிளாங்குளம் பகுதியில் இராணுவத்தினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்படுத்தியதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்றும், வன்னிப்பிரதேசத்தில் போர்ச்சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் துயர் நீங்குவதற்கு அமைதி ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணியும் சர்வமதப் பிராரத்தனையும் நடத்தப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணையகத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்த சர்வமதப் பிராரத்தனையில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.


வட இலங்கை மீனவர்களின் தொழில் பாதிப்பு குறித்து யாழ் பேராசிரியர்

யாழ் மீனவர்கள்
யாழ் மீனவர்கள்

யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையின் வட பகுதியில் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது என்று கூறுகிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றுபவரும் கடல்வளம் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவமான பேராசிரியர் சிலுவைதாசன்.

இலங்கையின் மொத்த உற்பத்தியில் 36 சதவீதத்தைப் பெற்றிருந்த வடபகுதி தற்போது வெறும் பத்து சதவீதத்தையே பெற்றுள்ளது, மீன்பிடித் தொழிலில் முதலிடத்தில் இருந்து, தற்போது கடை நிலைக்கு இலங்கையின் வடக்கு மாகாணம் கீழிறங்கியுள்ளது என்றும் அவர் விபரித்தார்.

அரசாங்கம் விதித்துள்ள பலவித கட்டுப்பாடுகளால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு புறமிருக்க, தமிழக மீனவர்கள் தமது எல்லைக்குள் நுழைந்த்து, தொடர்ந்து மீன்பிடிப்பது வட இலங்கை மீனவர்கள் தொழில் செய்வதில் பெரிய பிரச்சினைகளை உண்டுபண்ணியுள்ளது என்று அவர் விளக்குகிறார்.

இந்நிலை தீர இருசாராரும் பேசி தீர்ககவேண்டும், தங்கள் பகுதியில் மீனவளம் வறண்டுபோயிருப்பதால் எல்லைதாண்டி தமிழக மீனவர்கள் வருவது புரிந்துகொள்ளக் கூடியதுதான் என்றாலும், இலங்கைப் பகுதியிலும் அம்மாதிரி ஆகிவிடக்கூடாது, அதே நேரம் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாவதும் வருத்தத்திற்குரியதே, இப்பிரச்சினை தீர இரு சாராரும் பேசித் தீர்க்கவேண்டும் என வற்புறுத்துகிறார் பேராசிரியர் சிலுவைதாசன்.

கொழும்பில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

இலங்கையிலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களிலிருந்து தலைநகர் கொழும்பிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெயர்ந்திருப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வடக்கிலிருந்து மக்கள் இடம்பெயர்வதைப் பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகள் கொழும்பிலும் அதனைச் சுற்றிய இடங்களிலும் குண்டுகளை வைத்துவருகிறார்கள் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உரிய காரணம் என்று குறிப்பிட்டு அப்படிப்பட்ட காரணம் இல்லாமல் கொழும்பில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை இலங்கை பாதுகாப்பு படையினரால் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், யதேச்சதிகாரமாக தடுத்துவைக்கப்படுவதாகவும், அடிக்கடி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தமிழ் மக்கள் முறையிடுகின்றனர்.

இவ்வகையாக கொழும்புக்கு வந்துள்ளவர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது சட்ட விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஒழுங்குகளுக்கு எதிரானது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உபதலைவரான யோகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார். இதே நேரத்தில் இந்த பதிவுகளை தாங்கள் எதிர்க்கவில்லை என்றாலும் இது முறையற்ற செயல் என்று கருத்து வெளியிட்டுள்ளார் இலங்கை அரசின் பிரதியமைச்சரான ராதாகிருஷ்ணன். இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிக்ழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வைத்தியத்தில் அரச மருத்துவரொருவர்
வைத்தியத்தில் அரச மருத்துவரொருவர்

இலங்கையில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்ட விரோத போலி வைத்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வைத்தியர்களினாலே அநேகமான கருக்கலைப்பு நிலையங்கள் நடத்தப்படுவதாகவும் கூறுகின்றது.

உலகில் போலி மருத்துவர்கள் அதிகமாகவுள்ள நாடாக இலங்கை காணபப்டுவது துரதிர்ஷ்டவசமானது என கவலை வெளியிட்டுள்ள
அச்சங்கத்தின் செயலாளரான டாக்டர் உபுல் குணசேகரா, போலி மருத்துவம், மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸ், சுகாதார அமைச்சு உட்பட உரிய தரப்புகளுடன் பல பேச்சுக்கள் நடத்திய போதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாக இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்.

நாளொன்றிற்கு 750 முதல் 1000 வரைய கருக்கலைப்புகள் இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் அரசாங்க மருத்துவ சபைகளில் பதிவு செய்யப்படாதவர்களே இவர்கள் என்றும் தெரிவிக்கின்றார்.

கருக்கலைப்பகளை பொறுத்த வரை சட்ட விரோத மருத்துவர்களாலேயே பெரும்பாலானவை நடத்தப்படுவதாக பெண்கள் அமைப்புகளும் குற்றம் சுமத்துகின்றன.

சட்ட விரோத மருத்துவர்கள் இருந்தாலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்து போல் இந்த எண்ணிக்கையில் இல்லை என கூறும் சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் சுரேஸ் வடிவேல் இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்


இலங்கையின் வடக்கில் தொடரும் வன்முறை

திருகோணேஸ்வரர் ஆலயம்
திருகோணேஸ்வரர் ஆலயம்

இலங்கையின் திருகோணமலையின் திருகோணஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவான சிவகுரு ராஜ குருக்கள், ஞாயிறு மாலை வித்தியாலயம் வீதியில் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இலங்கையின் வடக்கே வன்னிக்களமுனைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது அடுத்தடுத்து நான்கு தடவைகள் ஞாயிற்றுக்கிழமையன்று விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாச்சிக்குடா மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீதும், அவர்களது தளம் ஒன்றின் மீதும் குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கொக்காவில் பகுதிகளில் தற்போது படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் வன்னியில் உறவுகளை தொடர்புகொள்வதிலுள்ள பிரச்சினைகள்

வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் தமது உறவுகளை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிகளில் கடுமையான மோதல்கள் நடந்துவரும் வேளையில், அங்கே செயல்பட்டு வந்த தொலை பேசி இணைப்புகள் பல வாரங்களாக முற்றாக துண்டிக்கப்பட்டுவிட்டன.

இதனால், இங்கே ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர் இலங்கைத் தமிழர்களில் பலர் தமது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

வன்னிப்பகுதியில் உள்ள சில குறிப்பிட்ட அரசுத் துறை அலுவலகங்களின் தொலை பேசி இணைப்புக்களைத் தவிற பிற இணைப்புகள் அனைத்தும் தற்போது செயலிழந்துள்ளதாகவே தெரிகிறது.

உள்ளூர் தொடர்புகளும் அங்கே துண்டிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு மட்டும்தான் வன்னி மக்களுக்கும் வெளியுலகுக்கும் இடையேயான ஒரே தொடர்பாய் தற்போது இருப்பதாகத் கருதப்படுறது.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் வாழும் சில இலங்கைத் தமிழர்கள் தமது உறவுகளைத் தொடர்புகொள்வதிலுள்ள சிக்கல்கள் மற்றும் அதனால் தாம் அடைந்துள்ள இன்னல்களை தமிழோசையில் விளக்குவதை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வியாழனன்று இடம்பெற்ற மோதல்களில் 24 விடுதலைப் புலிகளும், 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.

எனினும் இந்த மோதல்கள் உயிரிழப்புக்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் விசுவமடு பகுதியில் வியாழன் பிற்பகல் விமானப்படையினர் நடத்திய வான்வழி குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


இலங்கையில் கரையொதுங்கிய சடலங்கள் ‘இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய அகதிகளுடையது’

தனுஷ்கோடியைக் காட்டும் செயற்கைக்கோள் படம்

இலங்கையின் வடக்கே நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் கடந்த சில தினங்களில் கரையொதுங்கிய 7 சடலங்களும் இந்தியாவில் இருந்து படகு மூலமாக தாயகம் திரும்பிய இலங்கை அகதிகளுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய இலங்கை அகதிகள் பயணம் செய்த படகொன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேரில் மூவர் தவிர ஏனையோர் கடலில் மூழ்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

உயிர் தப்பிய மூவரும் கடலில் நீந்தி தமிழகக் கரையோரத்தை வந்தடைந்ததாக தமிழகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்களே இவ்வாறு யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் நயினாதீவுகளில் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது.

கிளிநொச்சிக்கான உணவுப் பொருட்கள் அனுப்பப்படவில்லை

வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாகவும், கிளிநொச்சி மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய ஐநா அமைப்புக்களும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் வன்னிப்பகுதியில் இருந்து வெளியேறியதன் பின்னர் அந்தப் பகுதிக்கு உலக உணவுத் திட்டத்தின் மூலம் அனுப்பப்படுகின்ற ட்ரக் வண்டிகள் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லவில்லை என்றும் அதற்கான அனுமதி படை அதிகாரிகளினால் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை உறுதி செய்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், இதைவிட அரசாங்கத்தினால் கிளிநொச்சிக்கு ஒன்றுவிட்ட ஒருநாள் ஓமந்தை ஊடாக 20 லொறிகளில் பொருட்களை ஏற்றிச் செல்லும் ட்ரக் வண்டிகளுக்கும் இந்த வாரத்தில் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புளியங்குளத்தில் கிளெமோர் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி

தாக்குதலில் காயமடைந்த சிறுவன் ஒருவன் மருத்துவமனையில்
தாக்குதலில் காயமடைந்த சிறுவன் ஒருவன் மருத்துவமனையில்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய புளியங்குளம் பகுதியில் இன்று காலை பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 3 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூவர் படுகாயமடைந்ததாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். எனினும் அதனை இராணுவ தலைமையகம் நிராகரித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் பிரசார நடவடிக்கைக்காகவே அவர்கள் சார்ந்த ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டிருக்கின்றன என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் நாச்சிக்குடா பகுதியில் வலைப்பாடு கடற்பரப்பில் இரணைதீவுக்கு அருகில் இன்று காலை விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் 4 மணித்தியாலங்கள் கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இந்தச் சண்டைகளில் 3 பெரிய படகுகள் உட்பட விடுதலைப் புலிகளின் 10 படகுகளைப் படையினர் அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இன்று பிற்பகல் 4 மணிவரையில் தொடர்ந்த இந்த மோதல்களில் 20 தொடக்கம் 30 வரையிலான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வரவில்லை.

கடற்சமரோடு, வன்னிக்களமுனைகளிலும் இராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் தொடர்ந்து சண்டையிட்டு வரும் அதேவேளை, அரச விமானப்படையினரும் வான்வழி தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சும் இராணுவமும் தெரிவித்திருக்கின்றன.

வன்னியில் விசுவமடுவுக்கு அருகே பிரமந்தன்குளம் என்னுமிடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படும் தளத்தில் விடுதலைப் புலிகள் பொருத்தியிருந்த விமான எதிர்ப்பு பொறிமுறையொன்றை (சிஸ்டம் ஒன்றை) விமானப்படையினர் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் குண்டுவீசி தாக்கி அழித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் போர்முனைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்களும், எம்.ஐ 24 ரக ஹெலிக்கப்டர்களும் அடுத்தடுத்து நடத்திய விமானக்குண்டுத் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் மேலும் ஒரு மோட்டார் பீரங்கித் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், வன்னேரிக்குளம் முன்னரங்க பகுதியில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் இடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் உடனடியாக கருத்து எதனையும் வெளியிடவில்லை.

நாச்சிக்குடா பகுதியில் உள்ள கரம்பைக்குளம் குளக்கட்டு பகுதியிலும், அக்கராயன்குளம் பிரதேசத்திலும் விடுதலைப் புலிகளுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கடும் மோதல்களில் கொல்லப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தச் சண்டைகளில் 40 விடுதலைப் புலிகள் இறந்துள்ளதாகவும் இராணுவ தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த மோதல்களில் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
ஒன்றரை கிலோ மீற்றர் நீளமுடைய கரம்பைக்குளம் குளக்கட்டுப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ள இராணுவம் இன்று அந்தப் பகுதியில் மேலும் ஒன்றரை கிலோ மீற்றர் நீளமுடைய பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் வவுனியா வன்னிவிளாங்குளம், புதூர், மன்னகுளம், பகுதிகளில் படையினருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 இலிருந்து புதன்கிழமை காலை 6 மணிவரையில் தாக்குதல்கள் நடந்ததாகவும், இதில் 13 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

வன்னேரிக்குளத்தில் படையினர் இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைக்கு எதிரான தமது தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், இரண்டு இராணுவத்தின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் தங்களால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


கொழும்பு வரும் வட மாகாணத்தவர்களை பதிய உத்தரவு

கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலமாக இருக்கின்றன
கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலமாக இருக்கின்றன

இலங்கையின் வடக்கிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணத்திற்கு வந்திருப்பவர்கள் அனைவரும், செப்டம்பர் 21 ஆம் திகதி காவல்நிலையங்களில் பதிய வேண்டும் என்று இலங்கை காவல்துறை இன்று அறிவித்திருக்கிறது.

இது குறித்து இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரியான ரஞ்சித குணசேகர தமிழோசையிடம் கூறுகையில், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழும் உள்ள பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களுக்காகவே இந்த பதிவுகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏனைய பகுதிகளில் இருந்து வருபவர்கள் நீண்ட காலம் அங்கு தங்குவதில்லை என்பதால், அவர்களை பிரத்தியேகமாக பதியவில்லை என்றும், இருப்பினும், அப்படியானவர்களை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் சொந்தக்காரர்கள் பதித்து வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.

தம்மை பதிந்துகொள்ள வருபவர்கள், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தையாவது தம்மோடு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.

வட இலங்கையில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெறுகின்றன: இழப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை விமானப்படையினர் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்திருக்கின்றனர்.

இன்று காலை முதல் மாலை வரையில் 5 இடங்களில் விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதில் விடுதலைப் புலிகளின் இரண்டு எறிகணை பீரங்கி நிலைகள் அழிக்கப்பட்டு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடும் தளம் ஒன்றின் மீதும், உடையார்கட்டுக்குளம் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதக்கிடங்கு ஒன்றின் மீதும் விமானப்படையினர் இன்று காலை 6.30 மணியளவில் அடுத்தடுத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

எனினும் வட்டக்கச்சி பகுதியில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் குடியிருப்புக்கள் மீதே விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் 3 சிவிலியன்கள் காயமடைந்ததாகவும், 8 வீடுகள் சேதமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

வடபகுதியில் இடம்பெறும் மோதல்களில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து இருதரப்பிலிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.


கிளிநொச்சியிலிருந்து பெருமளவில் மக்கள் இடம் பெயர்வு

இடம் பெயரும் மக்கள்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரப்பகுதியில் இராணுவத்தினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதனாலும், அந்த நகரை அண்டிய பகுதிகளில் விமானத் தாக்குதல்கள், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிரமடைந்துள்ள நேரடிச் சண்டைகள் காரணமாக கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயரத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு மூன்று தினங்களாக இடம்பெற்று வருகின்ற இந்த இடப்பெயர்வு காரணமாக கிளிநொச்சி நகரை உள்ளடக்கிய கரைச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள 14 கிராம சேவையாளர் பகுதிகளில் இருந்து 6500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஒரு வண்டியில் பல பொருட்கள்
ஒரு வண்டியில் பல பொருட்கள்

ஐநா அமைப்புக்கள் வன்னிப்பிரதேசத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என அரசாங்கம் விடுத்திருந்த அறிவித்தலையடுத்து, அந்தப் பிரதேசத்திலிருந்து ஐநா அமைப்புக்கள் நேற்று முழுமையாக வெளியேறியுள்ளன.

இந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண பணிகளும், தற்போது இடம்பெயர்ந்து சென்று கெர்ணடிருக்கும் மக்களுக்கான உடனடி நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் கூறுகின்றார்.
இது குறித்த மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை விமானப் படை தாக்குதலில் 4 பொதுமக்கள் பலி

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டி பகுதியில் இன்று இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் குறைந்தது 4 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

மறுப்பு

ஆனால், விடுதலைப்புகளின் இலக்குகள் மீது இன்று நான்கு தடவைகள் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகின்ற இலங்கை பாதுகாப்பு அமைச்சு கிளிநொச்சியில் இரணைமடுவுக்கு மேற்குப் பகுதியில் விடுதலைப்புலிகள் கூடும் இடங்களில் இரு தடவைகள் விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மற்றும் உடையார் கட்டுக்குளம் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.

குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்கள் குறித்து தமிழோசையிடம் பேசிய, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி, நான்கு பேர் இறந்துள்ளதாகவும், நான்கு பேர் மிகவும் மோசமாக காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிள்ளையார்கட்டு நோக்கி தாம் சென்ற வேளையிலேயே விமானப்படையின் விமானம் தம்மை தாக்கியதாக கூறுகிறார் காயம்பட்ட ஒருவர்.

அதேவேளை மோதல்கள் நடப்பதால், காயமடைந்தவர்களில், கவலைக்கிடமாக இருப்பவர்களை மேலதிக சிகிச்சைக்கு அனுப்புவதிலும் சிரமம் இருப்பதாகக் கூறுகிறார் டாக்டர் சத்திய மூர்த்தி.

கிளிநொச்சி மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.


வன்னியில் இருந்து ஐ நா மனிதநேயப் பணியாளர்கள் விலகல்

வன்னிப் பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்
வன்னிப் பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

வன்னிப் பகுதியிலிருந்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிப் பணியாளார்கள் முற்றிலுமாக விலகி விட்டார்கள் என்று ஐ நாவின் இலங்கை அலுவலகப் பேச்சாளர் கார்டன் வைஸ் பி பி சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது சர்வதேச பணியாளர்களும், இலங்கையின் மற்றப் பகுதியைச் சேர்ந்த பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், ஆனால் வன்னிப் பகுதியைச் சேர்ந்த சில உள்ளூர் பணியாளர்கள் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை மட்டும் தமது 20 பணியாளர்கள் வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வந்துவிட்டதாக கார்டன்வைஸ் கூறினார்.

வன்னிப் பகுதியிலிருந்து தமது வாகனங்கள் அனைத்தும் முழுமையாக வெளியே வந்து விட்டதாகவும், உபகரணங்கள் பல வவூனியாவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பணிகளை செய்ய காரிடாஸ் முடிவு

கத்தோலிக்க நிறுவனமான கேரிடாஸ், வன்னிப் பகுதியில் தொடர்ந்து தம்முடைய மனித நேயப் பணிகளை மேற்கொள்ளும் என்று கேரிடாசின் இயக்குனர் அருட் தந்தை டேமியன் பெர்னாண்டோ, பி பி சியின் சிங்கள சேவையான சந்தேஷியாவுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

காரிடாஸ் ஒரு அரசு சாரா நிறுவனமல்ல என்றும் அது கிறிஸ்தவ தேவாலயத்தின் மனித நேயப் பணிகளை செய்யும் ஒரு அமைப்பு என்றும் விளக்கமளித்த காரிடாஸ் இயக்குனர் தங்களது அமைப்பில் வன்னிப் பகுதியில் வெளிநாட்டவர்கள் யாரும் பணியாற்றவில்லை என்றார்.


கொழும்பில் பஸ் குண்டுவெடிப்பில் 4 பேருக்கு காயம்

குண்டு தாக்குதல் நடைபெற்ற பேருந்து
குண்டு தாக்குதல் நடைபெற்ற பேருந்து

இலங்கையின் தலைநகர் கொழும்பில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்துள்ளது.

அந்த குண்டு வெடிப்பதற்கு சற்று முன்னதாகவே அந்த பேருந்து பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அகற்றப்பட்டுவிட்டதால், எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை.

அந்த பேருந்தில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று இருப்பது அவதானிக்கபட்டதை அடுத்தே, அதில் இருந்த பயணிகள் இறக்கபட்டு, அது பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை அரசாங்கப் படையினர் அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


வவூனியா தாக்குதலில் இந்தியர்களுக்கு காயம்படவில்லை- இலங்கை இராணுவப் பேச்சாளர்!

ராடார் தளம் மீது நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் காயமடைந்ததை இந்தியாவும் இலங்கையும் உறுதி செய்துள்ளன
ராடார் தளம் மீது நடந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் காயமடைந்ததை இந்தியாவும் இலங்கையும் உறுதி செய்துள்ளன

இலங்கையிலிருக்கும் இந்திய தூதரகம், வவுனியா தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்தார்கள் என்று உறுதி செய்துள்ள நிலையிலும் கூட இந்தியர்கள் யாரும் அத்தாக்குதலில் காயமடையவில்லை என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார மீண்டும் கூறியுள்ளார்.

அந்த தாக்குதல் நடைபெற்ற தினத்தில், இந்தியர்கள் யாரும் வவுனியா முகாமில் பணிக்கு அமர்த்தப்படவில்லை என்று அவர் தெரிவி்த்திருந்தார். ஆனால் தாக்குதலில் இரண்டு இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் காயமடைந்ததை இரு நாட்டு அரசுகளும் உறுதி செய்துள்ளன.

தாக்குதல் குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பிரிகேடியர் நாணயகாரா, தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இந்தியர்கள் யாரும் இல்லை என்றும் இந்தியர்கள் காயமடைந்ததாக உங்களுக்கு இந்திய தூதரகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தால் நீங்கள் அவர்களிடமே அது குறித்து மேலதிக விவரங்களை கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இந்திய தூதரக அதிகாரி மட்டுமல்லாமல், இலங்கை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா அவர்களும் இரண்டு இந்தியர்கள் காயமடைந்ததை உறுதி செய்திருக்கிறாரே என்று அவரிடம் தமிழோசை கேட்டபோது, “நீங்கள் தயவு செய்து அந்த அமைச்சரையே தொடர்புகொண்டு இதை பற்றி கேளுங்கள். எனக்கு தெரியாத விடயம் குறித்து நான் எதுவும் கூறமுடியாது. என்னை பொறுத்தவரை அந்த முகாமில் இந்தியர்கள் யாரும் இல்லை” என்று பிரிகேடியர் தெரிவித்தார்.


விடுதலைப் புலிகள் அழியும் வரை இராணுவ நடவடிக்கைகள் தொடரும் – இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி சமாதானப் புறாவல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்
ஜனாதிபதி சமாதானப் புறாவல்ல என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கெதிராக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் அவர்களை முற்றாக அழித்தொழிக்கும்வரை தொடரும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை கொழும்பில் தெரிவித்திருக்கிறார்.

திங்கட்கிழமை மாலை இலங்கை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்துடன் நடாத்திய கலந்துரையாடலின்போது இது குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அதிகாரிகளும், முப்படைத்தளபதிகளும் தற்போது புலிகளுக்கு எதிராக வடக்கில் இடம்பெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளின் போக்குக்குறித்து மிகவும் திருப்தியாக இருப்பதாகவும், புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், இது ஒரு சாத்தியப்படும் காரியம் என்றும் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்திலிருந்து சர்வதேச தொண்டுநிறுவனப் பணியாளர்களின் வெளியேற்றம் குறித்துக் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச பணியாளர்களின் சுயபாதுகாப்பிற்காகவே அரசு அவர்களை வன்னியிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டதாகவும், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், அந்தப்பிரதேசங்கள் படையினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் மீளவும் அங்கு சென்று பணியாற்ற அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

‘ஐ.நா. பணியாளர்கள் வெளியேறுவதற்கு வழியேற்படுத்தித்தர விடுதலைப் புலிகள் சம்மதம்’

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐநா அமைப்புகள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து, அப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐ.நா. மன்ற அமைப்பின் பணியாளர்கள் ஏற்கெனெவே அங்கிருந்து வெளியேறத் துவங்கிவிட்டனர். மீதமுள்ள ஐநா அமைப்பின் பணியாளர்கள் அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை அங்கிருந்து வெளியேறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக இவர்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று கோரி, கிளிநொச்சியிலிருக்கும் பொது மக்கள் போராட்டங்கள் நடத்தி தடை ஏற்படுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, ஐ.நா. மன்ற அதிகாரிகள் இது குறித்து விடுதலைப்புலிகள் அமைப்பிடம் பேசியதை தொடர்ந்து, மீதமுள்ள ஐ.நா. அமைப்பின் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தித் தருவதாக விடுதலைப்புலிகள் தங்களிடம் உறுதி அளித்திருப்பதாக இலங்கையில் இருக்கும் ஐ.நா. மன்றத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான கோர்டன் வெய்ஸ் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவரது விரிவான செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.



வட இலங்கை மோதல்கள்: முரண்பட்ட தகவல்கள்

இலங்கை சிப்பாய்

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற உக்கிர சண்டையில் எதிர்த்தரப்பினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகக்கூறி இருதரப்பினரும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அக்கராயனுக்குத் தெற்கே திருமுறிகண்டி வீதியில் இந்த மோதல்கள் இடம்பெற்றதாகவும், இராணுவத்தின் முன்னேற்ற நடவடிக்கையை எதிர்த்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் மீது படையினர் நடத்திய எறிகணை தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இரு தரப்பினருக்கும் இடையில் பல மணித்தியாலங்கள் கடும் துப்பாக்கிச் சண்டைகள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கி்ன்றது.

ஆனால் விடுதலைப் புலிகளோ, தமது கடுமையான எதிர்த்தாக்குதலில் இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சண்டையில் இராணுவத்தினருக்குப் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்களையும், ஆயுதத் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த மோதல்கள் காரணமாக கிளிநொச்சிக்கும் வவுனியாவுக்கும் இடையிலான பொதுப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவக்கப்படுகின்றது.

இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பல பாதுகாப்பு தேடி வடக்கு நோக்கி இடம்பெயர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே. கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் மாதுறுஓயா காட்டுப்பகுதியில் திங்கள் மாலை விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் சிவில் பாதுகாப்புப் படை சிப்பாய் ஒருவரும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்கள் என மகாஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வன்னியிலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை – ஐ.நா

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து ஐ.நா. உதவிப் பணியாளர்கள் விலகுவது தற்காலிகமாகத் தடைபட்டுள்ளது என்றாலும் அரசு ஆணைக்கமைய அப்பகுதியலிருந்து வெளியேறும் முடிவில் மாற்றமில்லை என்று கார்டன் வைஸ் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார். எனினும் தாங்கள் வவுனியா பகுதியில் இருந்து மனிதாபிமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வன்னியிலிருந்து வெளியேறும் போது வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அதி முக்கியமான பொருட்களையும் தாங்கள் வெளியேற்ற போவதாகவும், முக்கியமற்ற பொருட்கள் மற்றும் ஒரு சில பணியாளர்கள் அங்கே இருப்பார்கள் என்றும் ஐ,நா அதிகாரியான கார்டன் வைஸ் தெரிவித்தார்.

கிளிநொச்சிப் பகுதிக்கு அருகே மோதல்கள் வலுத்துள்ள நிலையில், அங்கிருக்கும் உதவிப் பணியாளார்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதங்கள் வழங்க முடியாது எனக் கூறி அங்கிருந்து உதவிப்பணியாளர்களை விலகச் சொல்லி இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அதைத் தொடாந்து சில நாட்களுக்கு முன்னதாக ஐ.நா. அப்பகுதியலிருந்து வெளியேறத் தொடங்கியிருந்தது.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் வன்னி போர் முனைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் 27 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தின் நாவற்குளம் மற்றும் வவுனியா நகருக்கு கிழக்கே உள்ள மாமடு ஆகிய இடங்களில் சனிக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மாமடு பகுதியில் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரது சடலத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவத் தலைமையகம் கூறியிருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் வன்னேரிக்குளம் நாச்சிக்குடா பகுதிகளிலும் வெலிஓயா ஆண்டான்குளம் போர்முனையிலும் இடம்பெற்ற மோதல்களில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில் வன்னிக்கள முனைகளில் சில தினங்களுக்கு படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த 2 விடுதலைப் புலிகளின் சடலங்கள் சனியன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவம் தனது இணையத்தள செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றது. எனினும் இந்த மோதல் சம்பவங்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


மட்டக்களப்பில் சட்ட விரோத மீன்பிடித்தலால் மீன் இனங்கள் அழிவு

மீன் பிடித்தலை நம்பி ஏராளமான குடும்பங்கள்
மீன் பிடித்தலை நம்பி ஏராளமான குடும்பங்கள்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடித்தல் அதிகரித்துள்ளதால் சில மீனினங்கள் அழிந்து வருவதாக மாவட்ட மீன்பிடி விரிவாக்கல் தினைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

வாவியில் இனம் காணப்பட்டுள்ள 112 வகையான மீனினங்களில் 28 வகையான மீனினங்கள் அழிந்து வருவதாக மாவட்ட மீன்படித்துறை உதவிப் பணிப்பாளர் எஸ்.டி.ஜோர்ஜ் கூறுகின்றார்.

இம் மாவட்டத்திலுள்ள 24 ஆயிரம் மீனவ குடும்பங்களில், 50 சத வீதமான குடும்பங்கள் வாவி மீன்பிடித்தொழிலை தமது வாழ்வாதகரமாக நம்பியுள்ளதாகவும், வாவி மீனவர்களில் 20 முதல் 25 சத வீதமானவர்களே தடை செய்யப்பட்ட வலைகளைப் பாவித்து சட்ட விரோத மீன் பிடித்தலில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், கடந்த கால சூழ்நிலை காரணமாக ஏற்கனவே இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சட்ட நடவடிக்கை மூலம் இதனை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த சட்ட விரோத மீன் பிடித்தல் காரணமாக இம் மாவட்டத்தில் சமூக பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று கூறிய மாவட்ட மீன் பிடி அபிவிருத்தி சபைத்தலைவரான சிதம்பரப்பிள்ளை பியதாச, கடந்த காலங்களில் இதனை தடுக்க முற்பட்ட போதெல்லாம் ஆயுத அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாகவும் கூறுகின்றார்.


இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரக்கூடிய மக்களுக்கான உதவிகள் குறித்து ஆய்வு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரக்கூடிய மக்களுக்கான உதவிகளை செய்வது குறித்த முக்கிய அதிகாரிகள் மட்டக் கூட்டம் ஒன்று இன்று வவுனியாவில் நடந்துள்ளது.

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தீவிரமான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அங்கு ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலைமையையடுத்து, பாரிய எண்ணிக்கையில் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியான வவுனியா பிரதேசத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு வரக்கூடிய இடம்பெயர்ந்த மக்களை 6 இடைத்தங்கல் முகாம்களில் முதலில் தங்கவைத்து அவர்களின் விபரங்கள் பதியப்பட்டு, பாதுகாப்பு நடைமுறைகள் முடிவடைந்த பின்னர், அவர்களுக்கென வேறு 3 இடங்களில் அமைக்கப்படவுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வது குறித்து, இன்று வவுனியா செயலகத்தில் சிவில், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் மற்றூம் ஐநா அமைப்புக்கள் உட்பட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உள்ளுர் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளார்கள்.

கிளிநொச்சி நிலைமைகள்

வெளியேறும் அரசசார்பற்ற நிறுவனங்கள்
வெளியேறும் அரசசார்பற்ற நிறுவனங்கள்

கிளிநொச்சியில் இருந்து உதவிநிறுவனப் பணியாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதால், அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்காக அவர்கள் மேற்கொண்டுவந்த பணிகள் தடைப்பட்டுள்ளதுடன், தமக்கு அவை ஒரு சுமையாக மாறியுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இராணுவததிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப்பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ள மோதல் நிலைமைகளினால் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில், அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய அந்தப் பிரதேசத்தில் இருந்து ஐ நா மன்றம் சார்ந்த நிறுவனங்களும், ஏனைய சர்வதேச மற்றும் உள்ளுர் தொண்டு நிறுவனங்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பாடசாலைகளில் தங்கியிருந்த மக்களுக்கான மாற்று வாழ்விட வசதிகளை ஏற்படுத்துவதற்காக தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்த வேலைத்திட்டங்கள் முடிவடையாத நிலையில் கைவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

இதனால் 17 பாடசாலைகளில் மாத்திரமே இடம்பெயர்ந்த மக்கள் வெளியேறியதையடுத்து, அங்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

5 பாடசாலைகளில் இன்னும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார். அத்துடன் மாற்று வாழ்விட வசதிகளைப் பெற்றவர்களும் தமக்குரிய அடிப்படை வசதிகளை முழுமையாகப் பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.



இலங்கையின் வன்னியில் இருந்து ஐ.நா மன்றத்தினரை வெளியேற வேண்டாம் என கோரி மக்கள் முற்றுகை

முற்றுகையிட்ட மக்கள்
முற்றுகையிட்ட மக்கள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஐநா மன்றத்தின் உதவி அமைப்பினரை அங்கிருந்து வெளியேற வேண்டாம் எனக்கோரி அங்குள்ள மக்கள் அந்த அலுவலகங்களைச் சூழ்ந்திருந்து தடுத்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தகவல் வெளியிட்ட ஐநா மன்றத்தின் சார்பில் இலங்கையில் பேசவல்ல அதிகாரியாகிய கோடன் வெய்ஸ் அவர்கள், ஐநாவின் அகதிகளுக்கான தூதரகம், உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அலுவலகங்களைச் சூழ்ந்து சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் அந்த பணியாளர்களை அங்கிருந்து வெளியேற முடியாதாவாறு அமைதியான முறையில் தடுத்திருக்கின்றார்கள்.

தங்களது கரிசனைகளையும் கவலைகளையும் உள்ளடக்கிய கோரிக்கைகளை அவர்கள் எழுத்து மூலமாக அங்குள்ள தலைமைப் பணியாளரிடம் வழங்கி அவற்றை ஐநா மன்றத்தின் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டிருக்கின்றார்கள்.

நாங்கள் அங்கிருந்து வெளியேறவே முயற்சிக்கின்றோம். எமது கணிப்பின்படி அங்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. அரசாங்கம் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என தெரிவித்து அங்கிருந்து எங்களை வெளியேறிவிடுமாறு கோரியிருக்கின்றது. அங்குள்ள எமது பணியாளர்கள் அவர்களை வெளியேறாதவாறு தடுத்துள்ள பொதுமக்களிடம் தம்மை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


Posted in Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

New Delhi Rocked by Blasts in 3 Markets; 22 Killed, 110 Injured: Dust bins: The new terror tools

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 செப்டம்பர், 2008

இந்திய தலைநகர் புதுடெல்லியில் மீண்டும் குண்டுவெடிப்பு

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த ஒரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். 18 பேர் காயமடைந்தார்கள்.

தெற்கு டெல்லியில் புகழ்பெற்ற குதுப்மினார் அருகே உள்ள மெஹரோலி மார்க்கெட் பகுதியில் பிற்பகல் சுமார் 2 மணிக்கு இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், மார்க்கெட்டில் எலக்ட்ரானிக் கடை அருகே ஒரு பையைப் போட்டுவிட்டுச் சென்றதாகவும், அதை சிறுவன் ஒருவன் எடுத்தபோது, அது வெடித்துவிட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன், அந்தப் பகுதியில் இருந்த பலர் காயமடைந்தார்கள். அந்த வெடிகுண்டு, ஒரு டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

குண்டுவெடிப்பு நடந்த அந்த சிறிய தெருவில், ரத்தமும், உடைந்த கண்ணாடித் துண்டுகளும், மரச்சாமான்களும் சிதறிக்கிடந்தன. குண்டுவெடித்தவுடன், அங்குள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கடைக்காரர்களும், அங்கு வந்த பொதுமக்கள் பலரும், காயமடைந்தவர்களை மருத்துவனைகளுக்கு்க் கொண்டு செல்ல உதவினார்கள்.

குறைந்த சக்தி கொண்டதாகக் கூறப்படும் இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து தடயங்களை சேகரித்த தேசிய பாதுகாப்புப் படை வெடிகுண்டு நிபுணர்கள், இரண்டு பக்கமும் கூர்மை கொண்ட ஆணிகள் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.



தில்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

தில்லி குண்டுவெடிப்பு
தில்லி குண்டுவெடிப்பு

இந்திய தலைநகர் தில்லியில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லபடுவதற்கு காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மூவரும் இந்திய முஜாகீதின் எனப்படும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களின் கைதோடு, இதுவரையில் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஐந்தாக உயர்ந்துள்ளது.

முன்னதாக இரண்டு தீவிரவாத சந்தேக நபர்களை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தில்லி பகுதியில் துப்பாக்கி சூட்டின் போது பொலிஸார் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தில் பொலிஸார் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

புதுடெல்லி தொடர் குண்டுவெடிப்பில் பலர் பலி

குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடம்
குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடம்

புதுடெல்லியில் சனிக்கிழமை மாலை நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எண்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் இந்த குணடுவெடிப்புக்கள் நடந்திருக்கின்றன.

முதலாவது குண்டுவெடிப்பு கரோல்பாக் பகுதியில் உள்ள கஃபார் மார்க்கெட் பகுதியில் மாலை சுமார் 6.15 மணிக்கு ஏற்பட்டது.. அந்த நேரத்தில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமானவர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின் தாக்கத்தால் வாகனங்கள் தூக்கியெறியப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்புக்களில் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிகிறது.

அடுத்த சில நிமிடங்களில், டெல்லியின் மையப் பகுதியான கன்னாட்பிளேஸ் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. அங்கு, பிரதான மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ள ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் சென்ட்ரல் பார்க் பகுதியில் குண்டுவெடித்தது. குப்பைத் தொட்டியில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு கூடியிருந்த பலர் படுகாயமடைந்தனர்.

குண்டுவெடிப்பில் சிக்கிய பெண்ணொருவர்
குண்டுவெடிப்பில் சிக்கிய பெண்ணொருவர்

அதையடுத்து, அதற்கு அருகில் உள்ள பாரகம்பா ரோட்டில் குண்டுவெடித்தது. குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில், அந்த வழியாகச் சென்ற பலர் படுகாயமைடந்தார்கள்.

தெற்கு டெல்லி பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷில் உள்ள எம்.பிளாக் மார்க்கெட்டில் இரணடு குண்டுகள் வெடித்தன. வாகனங்களில் வைக்கப்பட்ட இந்த குண்டுகள் 15 நிமிட இடைவெளியில் வெடித்தன. கரோல்பாக் பகுதியில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட தகவல்களை, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த மார்க்கெட்டிலும் குண்டுவெடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்களில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்.

காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.

சென்ட்ரல் பார்க், ரீகல் சினிமா மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் ஆய்வு
குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் ஆய்வு

இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உரிமை கோரியிருக்கிறது. 9 குண்டுவெடிப்புக்கள் நடக்கும் என்றும், தங்களை யாராலும் தடுக்க முடியாது என்றும் சில ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி.ய ஈ-மெயில் தகவலில் தெரிவித்துள்ளன.

இந்த குண்டுவெடிப்புக்கு பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Fresh protests: Protesters and police clash in Indian Kashmir: 2 killed, 130 injured – Curfew continues in Shopian, Baramulla

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 14, 2008

காஷ்மீரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிஸ் துப்பாக்கி சூடு

இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரி கல்லெறிந்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், குறைந்தது இரண்டுபேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒருவர் இறந்த பகுதியான ஷோபியான் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஸ்ரீநகர் உள்ளிட்ட, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் இந்தியாவுக்கு எதிராக புதிய போராட்டங்களில் பலர் ஈடுபட்டனர்.

லத்திகளாலும், கண்ணீர் புகையை பயன்படுத்தியும் பாதுகாப்பு படையினர் கூட்டத்தை கலைத்தனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »