Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Details’ Category

DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2007

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

ரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு?

ப. இசக்கி

திருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.

திரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.

பிரச்னைகளுக்கு நடுவே மாநாடு:

கூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.

  • காவிரி,
  • முல்லைப் பெரியாறு,
  • பாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.
  • கூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,
  • விலைவாசி உயர்வு,
  • ரேசன் அரிசி கடத்தல்

என பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
திமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பிரமாண்ட பந்தல்:

மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

மாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.

மாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வயதுக்கேற்ப தங்கம்:

இந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்

  1. முதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,
  2. ஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்

நினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.

திமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.

அண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.

நடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.

முன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.

தொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.

விஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.

புதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.

ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.

————————————————————————————————————————————-
Nellai Tirunelveli conference DMK MK STalin Karunanidhi
திமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.

திருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.

அவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.

முன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!

நெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.

திருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
————————————————————————————————————————————-

நெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு
பிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை
உறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,
அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி
துணை மேயர் கா. முத்துராமலிங்கம்.

Host unlimited photos at slide.com for FREE!
“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி?’

புதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

இதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:

“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.

“மிஸ்டர்’ ரூ.11 லட்சம்

ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.

அந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.

அப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

திமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.

தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா?

“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.
Host unlimited photos at slide.com for FREE!
கருணாநிதியின் எண்ண ஓட்டம்:

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா? அது சாத்தியமா? மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.

கட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

இந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.

“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.
Host unlimited photos at slide.com for FREE!
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:

மாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது?

தமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
தி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு

சென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.

இந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

இதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.

ஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
திமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.

பந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.

திருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

முதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.

மாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
————————————————————————————————————————————-

திமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்

திருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.

தமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.

இதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
————————————————————————————————————————————-

கருணாநிதி இன்று நெல்லை வருகை

திருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.

முன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
————————————————————————————————————————————-

தலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.

மாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.
————————————————————————————————————————————-

நெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.

திமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்
மனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.

மாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.

இதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.

இளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.

சனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′
ஒளி-ஒலிக் காட்சிக்கான ஒத்திகை.

இந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.

ஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.

பேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.

ஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

முதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே
அமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க
ஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.

கருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.

மாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு

திருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.

“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்?’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.

சிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.

சிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.
————————————————————————————————————————————-

ஸ்டாலின் எப்போது முதல்வர்?

Host unlimited photos at slide.com for FREE!
திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை
நிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.

திருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:

இந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.

இந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.

இந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.

இந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.

சபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.

ஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.

தந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.

சுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
————————————————————————————————————————————-

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Arrangements, Azagiri, Azakiri, Azhagiri, Coalition, Conference, Details, DMK, Election, Issues, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Karuppasaami, Karuppasaamy, Karuppasami, Karuppasamy, Karuppasamy Pandian, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, MK Alagiri, MK Alakiri, MK Azhakiri, MK Stalin, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Nellai, Pandian, Politics, Polls, Power, Preparations, Stalin, Students, Thirunelveli, Tirunelveli, V Karuppasamy Pandian, Votes, Youth | 3 Comments »

Computer Keyboard for the Visually Challenged – Contest Winner details

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

இது புதுசு: புதிய வெளிச்சங்கள்!

அருவி

கருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்?

புதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:

“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.

கம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து

வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.

மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.

இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும்? அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.

பார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

ஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.

ஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்!

அருவி

Posted in America, Blind, Braille, Challenged, College, Competition, Computer, Contest, Details, Development, Disabled, Dvorak, Engg, Eyes, Feel, Gadget, Handicapped, Indicators, Information, InfoTech, Invention, IT, Keyboard, Keyboards, Keys, Mice, Mouse, Physically, Professors, Project, QWERTY, Research, School, Shorthand, Sight, Steno, stenographers, Student, Tamil, Teachers, Technology, Touch, University, US, USA, Vision, Winner | 2 Comments »

Sakthi Vikadan – Samayapuram Mariyamman Temple: Backgrounder, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

தலங்கள்.. தகவல்கள்

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

சமயபுரம் மாரியம்மன்


சமயபுரம்& சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது.

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத் துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.

பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் தலம் சமயபுரம்.

உரிய காலத்தில் தேவையான& கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்பது இந்த அம்மனது அடைமொழி.

சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.

சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் எனப்படுகிறது!).

அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட் டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

தற்போதைய ஆலயம் கி.பி. 1804&ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

‘சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். இது பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்!’ என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சமயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. எனவே, இந்தத் தலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக சக்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குவதை அறியலாம்.

இந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன், போஜீஸ்வரன் மற்றும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி முக்தீஸ்வரன் கோயிலும் இடம்பெற்றுள்ளன.

மாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984&ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.

பக்தர்களிடம் வசூலித்த பணம் மூலம் கிருபானந்த வாரியார் இந்தக் கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு& மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு& வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.

மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2&ஆம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் வலப் புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970&ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கு மாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக் கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக பக்தர்கள் காணிக்கை வழங்கிய தங்கத்தின் எடை 71 கிலோ& 127 கிராம். இத்துடன் 3 கிலோ& 288 கிராம் செம்பு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

உள்ளே அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.

சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.

சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

வசுதேவர்&தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன்& யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்.

இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.

காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

சமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.

இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.

சமயபுரம் கோயிலில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தங்க ரதம் ஒன்று உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா இல்லாத நாட்களில் மட்டுமே தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்படுகிறது. அப்போது அம்பாளுக்கு தங்கக் கவசமும் அணிவிக்கப்படும்.

இங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

இந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.

உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.

இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.

விஜயநகரப் பேரரசின் காலத்தில் ஸ்தல விருட்சத்துக்குக் கீழே உள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாம். அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் இந்த நாகம் கருவறைக்குச் சென்று அம்மனை பூஜிக்குமாம். அதனால் அம்மனின் நிர்மால்ய பூக்கள் கருவறைக்குள் சிதறிக் கிடக்கும். இந்தக் காட்சியை மறு நாள் உஷத்கால பூஜைக்கு கருவறைக்குள் நுழையும் அர்ச்சகர்கள் தவறாமல் காண்பது வழக்கமாம். காலப்போக்கில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமானதால், அந்த நாகம் வெளியே வருவதில்லையாம். அந்த இடத்தில் தற்போது கம்பிக் கதவு போட்டிருக்கிறார்கள்.

தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளி டம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2&ஆம் திருநாளிலிருந்து 8&ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9&ஆம் நாள் தெப்பத் திருவிழா.

சமயபுரம் மகமாயிக்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள்: சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் & தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும் பஞ்சப் பிரகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் விழா.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.

விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட் களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.

சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை& வைசூரி போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தை தணிக் கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். அப்போது அயல் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூடை கூடையாகப் பூக்களை அனுப்பி வைக்கிறார்கள்.

பூச்சொரிதல் திருவிழாவையட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவஜனம் முடித்த பிறகு முறைப்படி மாரியம்மனுக்குக் காப்பு கட்டுகிறார்கள். பிறகு, திருக்கோயிலின் தென்கரையிலுள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, மூன்று யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து திருக்கோயில் முன்மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதிகள் நான்கின் வழியாகத் தேரடி வந்து, பின்னர் ராஜ கோபுரம் வழியாகப் பிரதட்சணம் செய்து, பூத்தட்டுகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

பங்குனி& சித்திரையில் 13 நாட்களுக்கு சித்திரைப் பெரு விழா நடக்கும். சித்திரை மாதம் முதல் செவ்வாய் தேரோட்டமும், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை தெப்பமும் நடைபெறும். அப் போது முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப் படும்.

தேர்த் திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் ஆற்று நீரைச் சுமந்து அம்மனின் பாதத்தில் ஊற்றிக் குளிர வைப்பர். வைசூரி அகலவும், மழை பொழியவும், பால் சுரக்கவும், வறுமை நீங்கவும் இது நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தேர்த் திருவிழாவின் எட்டாம் நாளன்று, சமயபுரத்தாள், இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒரு நாள் இரவு தங்குகிறாள். 9&ஆம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவார். பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார். அண்ணனிடமும், ஈஸ்வரனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!

இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே, கண்ணனூர் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.

சித்திரை மாத இறுதியில் தொடங்கி வைகாசி முதல் தேதி வரை பஞ்சப் பிராகார உற்சவம் நடக்கும்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் ஆடி& தை வெள்ளிக் கிழமைகள், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி ஆகிய தினங்களில் விசேஷமாகச் செய்யப் படுகின்றன.

புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன் முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை& பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள். அதன் பிறகு, அவற்றை அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு தானமாக அளிக்கிறார்கள் பக்தர்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இங்கு பக்தர்கள் ஈர உடை யுடன் அங்கப்பிரதட்சணம் செய்து, வழிபடுவதுடன், ஆடு, கோழி, தானியங்கள், உப்பு, வெல்லம் ஆகியவற்றுடன் நேர்ந்து கொண்ட வெள்ளியால் ஆன உறுப்புகளையும் தன்னைப் போன்ற மணி பொம்மையையும் காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், பக்தர்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு தங்களின் வயிறு மற்றும் கண்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர்.

தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.

குழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு&கேது தோஷம் உள்ளவர்கள் சமயபுர மகமாயியை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

பிரபல சரித்திர நாவலாசிரியர் கோவி. மணி சேகரனுக்கு பார்வை குன்றியபோது இங்கு வந்து மனமுருகி பிரார்த்தித்தாராம். அதனால் மீண்டும் பார்வை பெற்றார் என்கிறார்கள். சமயபுரம் மாரியம் மனைத் துதித்து பாடல்கள் எழுதியுள்ளார் இவர்.

பார்வை இழந்த சிவந்திலிங்க சுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.

அம்மை நோய் பீடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்கு தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் விரைவில் நோய் குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு உயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.

நமது குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி, ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி விட்டுப் பிரார்த்தித்தால், குறைகள் தீரும். இதற்கான மஞ்சள் காகிதங்களை ஆலய நிர்வாகமே விற்பனை செய்கிறது.

இங்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல். அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை& வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில் இதைச் செய்கிறார்கள். அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.

சமயபுர மகமாயிடம் அதிக பக்தி கொண்டவர் சூரப்ப நாயக்கர். இவர், ஒரு முறை அன்னையின் ஆசி பெறாமல் புதிய உற்சவர் விக்கிரகம் ஒன்று செய்து பிரதிஷ்டை செய்ய முயன்றார். அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. இறுதியில் சூரப்ப நாயக்கர் கண்ணீர் மல்க அன்னையிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினார். அன்னை மனமிரங்கி அவருக்கு அனுமதி அளித்தாள். இன்றும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீதி உலாவின்போது சூரப்ப நாயக்கர் செய்த விக்கிரகம் இடம் பெறுகிறது.

Posted in Backgrounder, Chola, Chozha, Details, Facts, Festival, God, Hindu, Hinduism, Mariamman, Mariyamman, Religion, Sakthi, Samaiapuram, Samaiyapuram, Samayapuram, Temple, Temples, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichirappalli, Trichy, Vikadan, Vikatan | 3 Comments »

Sakthi Vikadan – Srivilliputhoor Andal Temple: Backgrounder, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

தலங்கள்… தகவல்கள்

ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயில்

ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெருமைகள் வராக புராணம்& ரகஸ்ய காண்டத்தில் ஒன்பது அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவராக அவதாரம் நிகழ்ந்த தலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கருதப்படுவதால், இதை ‘வராக «க்ஷத்திரம்’ என்பர். இதையட்டி, இங்கு ஸ்ரீவராகர் சந்நிதி திகழ்கிறது.

மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர்.

ஸீ தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம். இந்தக் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக ஏற்பது என்று அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. ‘மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த கோயில் கோபுரத்தை அரசு சின்னமாக அறிவிக்கக் கூடாது!’ என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போதைய பிரதமர் நேருஜி இது குறித்து ஓமந்தூராரி டம் விளக்கம் கேட்டார். ‘இந்தக் கோபுரத்தை சமயச் சின்னமாகப் பார்க்காமல், திராவிடக் கட்டடக் கலையின் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்!’ என்று விளக்கம் அளித்தார் ஓமந்தூரார். இதன் பின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.

வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசித் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். இது அவளது தாய் வீடு. எனவே, ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாக அணிந்தவள்’ என்ற பெருமை ஆண்டாளுக்கு உண்டு.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார், குரோதன ஆண்டு, ஆனி மாதம், வளர்பிறை ஏகாதசியில், சுவாதி நட்சத்திரத்தில் ஞாயிற்றுக் கிழமை அன்று இங்கு அவதரித்தார். நள வருஷம், ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய்க் கிழமை அன்று இங்கு அவதரித்தவள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். தவிர, வில்லிபாரதம் அருளிய வில்லிப்புத்தூரார், தருமபுரம் ஆதீனத்தை நிறுவிய குரு ஞானசம்பந்தர் ஆகியோரும் அவதரித்த புண்ணியத் திருத்தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர்.

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியாழ்வார் புஷ்ப கைங்கரியம் செய்யும் தனது நந்தவனத்தில் துளசி பாத்திக்கு அருகில், சர்வ லட்சணங்களும் பொருந்திய குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். குழந்தைக்கு கோதை என்று பெயர் சூட்டினார்.

பெருமாள் வழிபாட்டுக்காக தினமும் பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை முதலில் கோதை சூடி மகிழ்வது வழக்கம். ஒரு முறை அதைக் கண்டு கோபம் கொண்ட ஆழ்வார் மகளைக் கடிந்து கொண்டார். அன்று இரவில் அவர் கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகந்தது!’ என்றருளினார். அது முதல் கோதைக்கு, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!’ என்று பெயர் உண்டாயிற்று.

திருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக் கரையை அடைந்ததும் காணாமல் போனாள். பெரியாழ்வார் கலங்கினார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.

ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள்.

இப்போதும் சித்ரா பௌர்ணமி அன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகையில் இறங்குகிறார்.

மு. ராகவையங்கார், ஆண்டாளது காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வமான வானியல் நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வெள்ளி எழுதலும், அதே சமயம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 8&ஆம் நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 731 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அதிகாலை 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் அந்த மார்கழி பௌர்ணமியே திருப்பாவை தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி.716 ஆம் ஆண்டு திரு ஆடிப்பூரத்தில் ஆண்டாள் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. தன் பதினைந்தாம் வயதில் (கி.பி.731) ஆண்டாள் திருப்பாவை இயற்றினாள் என்பர்.

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும்.

திருமலை ஐயங்கார் தன் அண்ணா வேங்கடம் ஐயங்காருடன் இணைந்து பெரியாழ்வாருக்குத் தனியே பெரிய சந்நிதி ஒன்றைக் கட்டினார். பெரியாழ்வாரின் திருமேனி சிதிலம் அடைந்தபோது அப்போதைய திருப்பதி ஜீயரது ஆணைப்படி பெரியாழ்வாரின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றியவரும் திருமலை ஐயங்கார்தான். இதை இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

இது இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழைமையான வடபத்ரசாயி கோயில். மேற்கில் ஆண்டாள் திருக்கோயில். இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

பெரியாழ்வார் ஸ்ரீஆண்டாளுடன் வாழ்ந்த வீடு ‘வென்று கிழியறுத்தான் வீதி’யில் உள்ளது. கி.பி. 14&ஆம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் இந்த வீடு திருக்கோயிலாக மாற்றப்பட்டது (ஆண்டாள் கோயிலின் கருவறை உட்பட அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றையும் மாவலி பாணாதிராயர் கட்டி யதாக கல்வெட்டுத் தகவல் கூறுகிறது). இதன் கருவறையில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்க மன்னார் மற்றும் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளனர்.

11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜ கோபுரம், 196 அடி உயரமுடையது.

ஆண்டாளின் திருக்கோயில் முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்யாண மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், ஏகாதசி மண்டபம் ஆகியன சிற்ப வேலைப்பாடு மிகுந்தவை.

ஒரே கல்லாலான பெரிய தூண் துவஜஸ்தம்பம். இதன் இரு பக்கங்களிலும் வேணுகோபாலன், ஸ்ரீராமர், விஸ்வகர்மா, நடன தாரகை, சூர்ப்பணகையைத் தாக்கும் லட்சுமணன், சரஸ்வதி, அகோர வீரபத்திரர், ஜலந்தரர், மோகினி, சக்தி ஆகிய சிற்பங்கள் உள்ளன.

ராஜ கோபுரத்தின் வடபுறம் ஏகாதசி மண்டபம், பரமபத வாயில் ஆகியவை உள்ளன. ஏகாதசி மண்டபத்தில் கர்ணன், அர்ஜுனன், குகன், சாத்தகி, ஊர்த்துவமுக வீரபத்திரன், நீர்த்தமுக வீரபத்திரன், ரதி, மன்மதன் ஆகிய சிற்பங்கள் கலை நயம் மிக்கன.

கோயில் ராஜ கோபுரத்தின் முன்புறம் இருப்பது பந்தல் மண்டபம். உள்ளே இடப் பக்கம் திருக்கல்யாண மண்டபம். இதில் ராமாயண நிகழ்ச்சிகளை விளக்கும் ஓவியங்கள் உள்ளன. அடுத்துள்ள அறை அணி மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம் காணப்படுகின்றன.

உட் பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது மாதவிப் பந்தல். அடுத்து மணி மண்டபம். இங்கு கம்பம் ஒன்றில், ஆண்டாள் முகம் பார்த்த வெண்கலத் தட்டு (கண்ணாடி) காணப்படுகிறது. இதை தட்டொளி என்பர்.

மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற மண்டபம் ஒன்று உள்ளது. இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவறையில் ஆண்டாள்& ரங்க மன்னார், கருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான கோபால மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி உள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர்& ரங்கமன்னார், ராஜ மன்னார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிவார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள்.

‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை& மாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்.

ஸ்ரீநாச்சியார் திருக்கோயிலின் முதல் பிரகாரம் பெரியாழ்வாரது நெஞ்சகச் சுவராகக் கருதப்படுகிறது.அதில் 108 திவ்ய தேச மூர்த்திகளது திருவுருவம் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. இதன் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட ‘ஸ்ரீலட்சுமி நாராயணர்’ உள்ளார்.

2&ஆம் பிராகாரத்தில் மகாலட்சுமியும், அனுமனும் அருள் பாலிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று இதன் வடக்கு வாசல் வழியே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெரிய பெருமாள் சந்நிதியின் வடபுறம் சேவை நடைபெறும். இங்குள்ள கலைமகள் சிற்பத்தில் நாசியும், கால் பெருவிரல் நுனியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்புக்கு உதாரணம்.

நந்தவனத்துக்கும் வடபெருங் கோயிலுக்கும் இடையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது.

அந்நிய படையெடுப்பால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க ஒரு முறை ஆண்டாள் திருவுருவை திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் சென்றனராம். அதுவரை அங்கு உக்கிரமாக விளங்கிய சக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண் டாள் வந்ததும் சாந்தம் அடைந்தாராம். பிறகு ஸ்ரீஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் திரும்பியபோது சக்கரத்தாழ்வாரும் உடன் வந்ததாகக் கூறுவர். ஸ்ரீசக்கரத்தாழ்வார் மூன்று கண்கள் மற்றும் 16 கைகளுடன் திகழ்கிறார். இவரின் பின்புறம் யோகநரசிம்மர் விளங்குகிறார். ஸ்ரீசக்கரத்தாழ்வார் கிரக தோஷங்களைப் போக்குபவர்.

வடபத்ரசயனர் கோயிலின் தரைத் தளத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். ஒரு காலத்தில் செண்பக வனத்தின் அடையாளமாக இங்கு விளங்கிய புற்றுக்கோயில், புனர் அமைப்பின்போது நீக்கப்பட்டு விட்டது. முதல் தளத்தின் கருவறையில் பள்ளி கொண்ட பெருமாள் அருள் பாலிக்கிறார். அவருடன் ஸ்ரீதேவி& பூதேவி, நாபிக்கமல பிரம்மா மற்றும் திருமாலின் திருப்பாதத்தின் அருகே வடபெருங்கோயிலை எழுப்பிய வில்லியும் கண்டனும் இடம்பெற்றுள்ளனர்.

கொடிமரத்துக்கும் ராஜ கோபுரத்துக்கும் இடையில் பெரியாழ்வார் மற்றும் ராமானுஜரின் சந்நிதிகள் உள்ளன.

தண்ணீர் பஞ்ச காலத்திலும்கூட இந்தத் திருக்கோயிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் நீர் வற்றுவது இல்லை. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறியவும் முடியவில்லை.

கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி& பூதேவி சமேதராக உள்ள வடபத்ர சாயியை மூன்று வாசல்களின் வழியாக தரிசிக்கலாம். தலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க் கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். மேலும் பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது& கைடபர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

சம்ஸ்கிருதத்தில் வடபத்ரம் எனப்படும் ஆலிலையில் பள்ளி கொண்ட பரமன் ஆதலால், இவர் ‘வடபத்ர சயனர்’ எனப்படுகிறார்.

கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும் சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடினாள். அதை ஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது.

தினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.

ஆண்டாள் சூடிய மாலைக்குத் தனி மகத்து வமே இருக்கிறது. வேங்கடாசலபதியே இந்த மாலையை ஆசையுடன் அணிகிறாரே! வேங்கடேசன் மீது அளவற்ற பக்தி கொண்ட ஆண்டாள், அவரைத் துதித்து நாச்சியார் திருமொழியில் பாடினாள். இதனால் மகிழ்ந்த வேங்கடேசன், ஆண்டாள் அணிந்த மாலையை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் என்கிறது புராணம். திருப்பாவையில் முதல் பத்தில் ‘அவன் திருநாமத்தைச் சொல்லு’ என்றும், இரண்டாவது பத்தில், ‘உயரியதான அவன் திருவடியை அர்ச்சனை செய்’ என்றும், கடைசி பத்து பாட்டுக்களில் ‘அவன் திருவடியில் உன்னை அர்ப்பணி’ என்றும் வலியுறுத்துகிறாள் ஆண்டாள்.

ஆண்டாளின் திருமணத்துக்கு பெருமாளை விரைவாகச் சுமந்து வந்தவர் கருடன். அதனால் அவர் இங்கு மாப்பிள்ளைத் தோழனாக பெருமாளின் அருகிலேயே இருக்கிறார்.

ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.

இங்கு ஆண்டாள் உலா வரும்போது, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடப்படுகிறது. செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு& இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு& மாதுளம் பூ; மரவல்லி இலை& கிளியின் உடல்; இறக்கைகள்& நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன். இப்படித் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறது.

ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு’ என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீஆண்டாள் கோயிலின் திருக்குளம், கோயிலில் இருந்து சில தெருக்கள் தாண்டி வாழைக்குளத் தெரு முனையில் அமைந்துள்ளது. இதன் மேற்கு கரையில் எண்ணெய்க் காப்பு நீராடல் உற்சவ மண்டபமும், கிழக்குக் கரையில் தீர்த்தவாசி மண்டபமும் உள்ளன.

காலநேமி எனும் அசுரனை அழித்ததால், மகா விஷ்ணுவின் சக்ராயுதம் களங்கம் அடைந்தது. அதைத் தூய்மையாக்க கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தங்களது தீர்த்தத்தை சக்ராயுதத்தின் மீது சொரிந்து புனிதமாக்கின. ஆண்டாள் நோன்பு இருந்தபோது உதவிய கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிப்பதால் இது ‘திருமுக்குளம்’ எனப்படுகிறது.

திருவிழாவின்போது ஆண்டாள் தைலம் தயாரிக்கப்பட்டு ஆண்டா ளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது.நல்லெண்ணெய், பசும் பால், தாழம்பூ, நெல்லிக்காய், இளநீர் போன்றவற்றுடன் சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு பேரால் காய்ச்சப்படும் இதன் கொள்ளளவு சுமார் 7 படி. இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.

சித்திரை& நீராழி மண்டப விழா, வைகாசி& வசந்த சேவை, ஆனி& பெரியாழ்வார் உற்சவம், ஆவணி& திருப்பவித்ர விழா, புரட்டாசி& பிரம்ம உற்சவம், ஐப்பசி& தீபாவளி, கார்த்திகை& சொக்கப்பனை, தை& கம்பர் விழா, மாசி& தெப்பத்திருவிழா என்று ஆண்டு முழுவதும் ஸ்ரீஆண்டாளுக்கு விழாக் கோலமே!

சித்திரையில் நெசவாளர் தரும் புடவையை ஆண்டாளுக்குச் சாற்றுவர். அன்று, நெசவாளர்கள் ஆண்டாளை சேவிப்பர். சித்ரா பௌர்ணமி அன்று வாழைக்குளத் தெருவில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில், நெசவாளர்கள் வந்து தொழுவர்.

மார்கழி& எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது ஸ்ரீஆண்டாள், தினமும் காலையில், பல பெருமாள்களின் திருக்கோலத்தில் நீராட்ட மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.

அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது. மார்கழி உற்சவத்தன்று முக்குலத்தோர் வீதி வழியே இரவுப் புறப்பாடு நடக்கும். அன்று, ஆண்டாள் வாழைக்குளத் தெரு மண்டபத்திலிருந்து வந்த வழியே திரும்பிச் செல்வது வழக்கம்.

ஸ்ரீஆண்டாளின் மடியில் ஸ்ரீரங்க மன்னார் படுத்திருக்கும் ‘சயன உற்சவம்’ அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலிலும், ஸ்ரீகிருஷ்ணரின் சயன உற்சவம் ஆண்டாள் கோயிலிலும் நடைபெறும்.

ஸ்ரீரங்கம் தலத்தில் நடப்பது போலவே இங்கும் ‘அரையர் சேவை’ நடைபெறுகிறது. அப்போது ஆழ்வார் பாசுரங்களைப் பக்தி சிரத்தையுடன், பாவம், லயம், இசை, சந்தத்துடன் பாடுகிறார்கள்.

மார்கழியில் சாற்று மறையின்போது ஆண்டாள் முன்பாக பதிமூன்று தீர்த்தக் காரர்களும், அரையர்களும், திருப்பள்ளி யெழுச்சி பாடக் காத்திருப்பர். மற்றொரு பக்கம் வேதபிரான் பட்டர்கள் நிற்பர். அப்போது அரையர்கள், தொண்டரடிப் பொடியாழ்வாரது பத்துப் பாசுரங்களைப் பாடித் திருப்பள்ளி எழுச்சி செய்கின்றனர். தொடர்ந்து பெரியாழ்வாருக்கும், சுவாமிக்கும் திருமஞ்சன சேவை நடைபெறுகிறது. பூசணிக்காய் மசியலும், பாசிப் பருப்புப் பொங்கலும் சுவாமிக்கு நிவேதனம் ஆகிறது.

மந் நாத முனிகள் பரம்பரையில் வந்த அரையருக்கு கோஷ்டி சேவா காலம் முடிந்த பிறகு, தீர்த்தம் வழங்கப் படுவது மரபு. அதன் பின்னரே அடியவர்களுக்குத் தீர்த்தமும், பிரசாதமும் வழங்குவர்.

மார்கழி மாதத்தில் 23&ஆம் நாளன்று வடபத்ரசாயிப் பெருமாள் முன்னால் திருப்பாவைப் பாசுரம் பாடி அரையர் சேவை துவங்குகிறது. ஆண்டாளைப் போலவே பாசுரம் பாடி அதன் பொருளை அபிநயத்தில் நடித்துக் காட்டுவர் அரையர். முதல் நாள் உற்சவத்தைப் பிரியாவிடை உற்சவம் என்பர். அதாவது பாவை நோன்பு நோற்க ஆண்டாள் விடை கேட்கிற மாதிரி அமைந்தது அது.

ஆடி ஐந்தாம் நாள் உற்சவம். அன்று இரவில் ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீரங்க மன்னார், ஸ்ரீநிவாசர், ஸ்ரீசுந்தர்ராஜன், திருத்தண்கால் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள்களும் அன்று கருட வாகனத்தில் எழுந்தருள்வர். அப்போது ஆண்டாளும், பெரியாழ்வாரும் அன்ன வாகனத்தில் எழுந்தருள்வர்.

ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் இதில், சுமார் 1000 தேவ&தேவியர், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது உருவங்களுடன் மகாபாரதம், ராமாயணக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தேரை வடம் பிடித்து இழுக்க 3,030 ஆட்களாவது வேண்டுமாம். பெரிய தேர், ஆலயக் கோபுரத்தின் உயரத்திலிருந்து முக்கால் பங்கு உயரம் உள்ளது. வானமாமலை ஜீயரால் வழங்கப்பட்ட இந்தத் தேர் நவாம்சம் பொருந்தியது.

தேர்த் திருவிழாவன்று ஸ்ரீஆண்டாளும், ஸ்ரீரங்கமன்னாரும் இந்தத் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். திருத்தேர், நிலையை அடைந்ததும் கோயில் முகப்பில் இருக்கும் சிங்கம்மாள் குறட்டுக்கும் பின்னர் நந்தவனத்தில் உள்ள திருப்பூர மண்டபத்துக்கும் எழுந்தருள்வார்கள். அங்கு அவர்களுக்கு திருமஞ்சனம், திருஆராதனம் ஆகியவை நடைபெறுகின்றன.

ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் நாள் அன்று ஸ்ரீஆண்டாள் ஒரு காலைக் கிடத்தி, மறு காலை மடக்கி அமர்ந்திருப்பாள். அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்திருக்கும் கோலத்தில் ஸ்ரீரங்கமன்னார் நமக்கு சேவை சாதிப்பார்.

இந்தத் தேரைத் தவிர மேலும் இரண்டு தேர்கள் இங்கு உள்ளன. ஆடிப்பூர உற்சவத்தின் முதல் நாள்& பதினாறு கால்கள் கொண்ட சப்பரத் தேர் வீதி உலா வரும். தஞ்சையிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பனையோலை குருத்துக்களால் வடிவமைக்கப்படும் இந்த தேர், பக்தர்களுக்கு பதினாறு வகையான செல்வங்களையும் வழங்கக் கூடியது என்பது ஐதீகம்.

அடுத்தது& செப்புத்தேர். இதை ‘கோ ரதம்’ என்றும் அழைப்பர். பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆனி மாதம் பெரியாழ்வார் உற்சவம், புரட்டாசி மாதம் பெரிய பெருமாள் உற்சவம் ஆகிய நாட்களில் இந்தக் கோரதம் பவனி வருகிறது.

இந்த ஆலயத்தில் நடக்கும் பத்தாம் நாள் திருவிழா அன்று, ‘முத்துக் குறி’ எனப்படும் விசேஷமான நிகழ்ச்சியின்போது ஆண்டாளின் பிறந்த நாள் பலாபலன்களைச் சொல்வர்.

பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்கமன்னார்& ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதன் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருட சேவை நடைபெறும். ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீநிவாசன், சுந்தரராஜன், திருத்தண்கால் அப்பன் ஆகியோர் ஆண்டாளை திருமணம் செய்யப் போட்டி இடுவர். இவர்களுடன் ஸ்ரீரங்கநாதரும் போட்டியில் கலந்து கொள்வார். முதலில் வரும் ஸ்ரீரங்கநாதரையே ஆண்டாள் திருமணம் முடிப்பாள். ஆண்டாளை திருமணம் முடிக்க வருபவர்களை பெரியாழ்வார் உபசாரம் செய்வதே பஞ்ச கருட சேவை.

பங்குனி திருக்கல்யாணத் தின்போது, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி கோயிலிலிருந்து பரிவட்டமும் (பட்டு), ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு, மதுரை அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலிருந்து பட்டுப் புடவையும் அனுப்பி வைக்கப்பட்டு ஆண்டாளுக்கு சாத்துப்படி செய்வது வழக்கம்.

பெரியாழ்வார் இந்த ஆலயத்தின் முதல் தர்மகர்த்தாவாகப் போற்றப் படுகிறார். அவர் தர்மகர்த்தாவாக இருந்த போது, ஸ்ரீஆண்டாளிடம் வரவு& செலவை ஒப்புவிப்பாராம்! இந்த நிகழ்ச்சி, வருடம்தோறும் ஆடி மாதம் 7&வது நாளில் ஆலயத்தின் வடக்குப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ‘நெல் அளக்கும்’ வைபவமாக நடைபெறுகிறது.

ஆண்டாளுக்கும் ஸ்ரீரங்கமன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டின்போது கட்டியம் கூறும் உரிமையை நிரந்தரமாகப் பெற்றுள்ளவர்களை ‘வேத பிரான் பட்டர்’ என்கிறார்கள். பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தவர்கள் இவர்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் விசேஷம் அரவணைப் பிரசாதம். பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் இரவில் படைக்கப்படும் இதில் வடை, தேன்குழல் (முறுக்கு) அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகிய ஏழு வித பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன.

வடபத்ரசாயி கோயிலுக்கு அருகில் தெற்கு ரத வீதியில், திருமலை மன்னர் எழுப்பிய அரண்மனை ஒன்று உள்ளது. அதில் இன்று அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

ஸ்ரீஆண்டாள் நாச்சியார் குறித்து ஸ்வாமி வேதாந்த தேசிகன் இயற்றிய ‘கோதா ஸ்துதி’யில் 29 பாசுரங்கள் உள்ளன. 30 பாசுரங்களைக் கொண்ட ஆண்டாளின் திருப்பாவைக்கு இணையாக அமையக் கூடாது என்பதற்காக ஸ்வாமி வேதாந்த தேசிகன் இவ்வாறு அமைத்தாராம்.

திருமலை நாயக்கர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் நைவேத்திய நேரத்தைத் தெரிந்து கொள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை வரை ஒவ்வொரு மைல் தோறும் ஒவ்வொரு மணி மண்டபம் அமைத்திருந்தார். ஒவ்வொரு மண்டபத்திலும் இருக்கும் மணிகள் ஒலித்து நைவேத்திய நேரத்தை திருமலை நாயக்கருக்குத் தெரியப்படுத்தினவாம். அவற்றில் ஒன்று, மதுரை& ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது.

நாடகக் குழுவை நடத்தி வந்த கன்னையா, கடன் சுமை தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வந்தார். அவர் ஸ்ரீஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தார். அன்றிரவு கனவில் தோன்றிய ஆண்டாள், தனது கதையை நாடகமாக்குமாறு அருளி மறைந்தாள்.

அப்படியே செய்தார் கன்னையா. அந்த நாட கத்தைக் கண்டு மகிழ்ந்த ஒருவர், நாடகக் குழுவைச் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார். கன்னையாவுக்குப் பொருளும் புகழும் சேர்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக யானை, ஒட்டகம் மற்றும் அபிஷேகத்துக்குத் தங்கக் குடம் என்று பல காணிக்கைகளைச் செலுத்தினார் கன்னையா. அவர் அளித்த குடம், ‘கன்னையா குடம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.

உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.

Posted in Andaal, Andal, Backgrounder, Details, Facts, Hindu, Hinduism, Madurai, Periyaalvaar, Periyaalvar, Periyaalwar, Periyaazhwar, Periyaazwar, Periyalwar, Periyazhwar, Religion, Srirangam, Srirengam, Srivilliputhoor, Srivilliputhur, Temple, Temples, Thirupathi, Thirupathy, Tips, Tour, Tourist, Tower, Travel, Vaishnava, Vikadan, Vikatan, Villiputhoor, Villiputhur, Virudhunagar, Virudunagar, Viruthunagar | 4 Comments »

USS Nimitz loaded with hi-tech weapons to dock off Chennai coast – Issues, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

எண்ணங்கள்: USS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்
—————————————————————————————————–

“யுஎஸ்எஸ் நிமிட்ஸ்’-சில சந்தேகங்கள்

டி.எம்.விஸ்வநாதன்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சிவிஎன் 68.. அணு உலைகளைக் கொண்டுள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான, போர் விமானங்களைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல். அது சென்னை துறைமுகத்துக்கு வரவிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிறிய ரக சாதாரண போர்க்கப்பல்கள் இதற்கு முன்னரும் சென்னை துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. அப்போதெல்லாம் எந்தவிதப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் இப்போது என்ன வந்தது இந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு? இதுவும் வழக்கம்போல அரசியல்தானா என்ற கேள்வி சாதாரண குடிமகனுக்கு ஏற்படுவது சகஜம்.

ஆனால் இந்த விஷயத்தில் வலுவான எதிர்ப்புக்குரல் கொடுத்து தொடங்கி வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தொடங்கி பாஜக, பாமக விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனைத்து தலைவர்களுமே பாராட்டுக்கு உரியவர்கள். காரணம் ஒரு மிகப்பெரிய அபாயத்திற்குத்தான் அவர்கள் தடை போட நினைக்கிறார்கள்.

அப்படி “நிமிட்ஸில்’ என்னதான் அபாயம் உள்ளது? இதற்கு விடைகாணும் முன் நிமிட்ஸ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

செஸ்டர் வில்லியம் நிமிட்ஸ். டெக்சாசின் பிரெடிரிக்ஸ்பர்க் நகரில் பிறந்தவர். அமெரிக்க நாவல் அகாதெமியில் தனது பணியைத் தொடங்கிய இவர் அமெரிக்க கப்பற்படைக்காக மாபெரும் சாதனைகளைப் புரிந்தவர். புகழ்பெற்ற பியேர்ல் ஹார்பர் (டங்ஹழ்ப் ஏஹழ்க்ஷர்ன்ழ்) மீதான தாக்குதல் உட்பட பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் கூட அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர் நிமிட்ஸ். சென்னைக்கு வரவிருக்கும் கப்பலுக்கு அவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

அதுதான் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலும்கூட. 1972-ம் ஆண்டு மே 13-ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட நிமிட்ஸ் கப்பல் 1975-ல் தனது முழுநேரப் பணியைத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சர்வதேச கடல் பரப்பில் பல்வேறு இடங்களில் போர்ப்பணியாற்றி வருகிறது.

விமானம் தாங்கிப் போர்க்கப்பலான நிமிட்ஸ் அணு சக்தியால் இயங்கக்கூடியது. இதற்கேற்றார்போல் அதில் இரண்டு மென்நீர் (லைட் வாட்டர்) அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நிமிட்ஸ் அணுசக்தியால் இயங்கக்கூடிய கப்பல் என்பதுதான் இப்போதைய சர்ச்சைக்கே காரணம். இதே கப்பல் இந்து மகா சமுத்திரத்தில் இதற்கு முன்னர் இரண்டு 3 முறை பயணித்துள்ளது. ஆனால் இந்தியாவின் எந்தத் துறைமுகத்திலும் இது நின்றதில்லை. இப்போது வரவேண்டிய அவசியம் என்ன?

ஹென்றி ஜெ.ஹைட் அமெரிக்க-இந்திய அமைதி அணு சக்தி ஒத்துழைப்புச் சட்டம்- 2006-க்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்து சில மாதங்கள்தான் ஆகின்றன. இந்நிலையில் நிமிட்ஸ் அணுசக்தி கப்பல் இந்தியாவுக்கு அதுவும் சென்னைக்கு வருவதுதான் சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன.

சென்னைக்கு மிக அருகில் கல்பாக்கத்தில் நமது அணுசக்தி ஆய்வு உலைகளும் மையங்களும் உள்ளன. மேலும் அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் 40 அணுஉலைகள் கூடுதலாக அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அவ்வாறு அமையும் பட்சத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் கூடுதலான அணு உலைகள் அமைய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நியூக்ளியர் பார்க் அதாவது அணுசக்தி ஆய்வுகள் சார்ந்த அமைப்புகள் ஒரே கூரையின் கீழ் அல்லது ஒரே இடத்தில் அமைவதுதான் நிர்வாகத்திற்கும் போக்குவரத்துக்கும் எளிதானது என்கிற ரீதியில் தமிழகத்தில் கூடுதல் அணு உலைகள் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதற்கேற்றார்போல் அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இந்திய அரசோ அமெரிக்க அரசோ இரு நாட்டு மக்களுக்கும் தெரியும் வகையில் இதுவரை எந்தவித வெளிப்படையான அணுகுமுறையும் கொண்டிருக்கவில்லை. நமது நாடாளுமன்றத்தில்கூட, தேசத்தின் நலன் சார்ந்த இவ்வளவு பெரிய ஒப்பந்தம் இதுரை விவாதிக்கப்படவே இல்லை.

சரி, நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட இதுபற்றி வெளிப்படையாக விவாதிக்க சில சிக்கல்கள் உள்ளன. இதற்கு நமது மத்திய அரசு சொல்லும் ஒரே காரணம் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதுதான். இந்திய அணுசக்தி சட்டம் 1962-ன் 18-வது ஷரத்தானது, “”அணுசக்தி திட்டங்கள் அல்லது திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தி மையங்கள்பற்றி கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தகவல்களை வெளியிடவோ, கேட்கவோ கூடி விவாதிக்கவோ கூடாது” என்கிறது. எனவேதான் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கியே வாசிக்கின்றன.

இத்தகைய சூழலில் நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு அருகே வர அமெரிக்க அரசும், நமது மத்திய அரசும் இத்தனை பிரம்ம பிரயத்தனங்களை எடுப்பதற்கு காரணம் ஒரு வேளை இந்த கப்பலின் “வருகை’ என்பதே இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்பதுதான் விஷயமறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இரு நாடுகளுமே பரஸ்பரம் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற மற்றொரு சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

சரி, இவையெல்லாம் ஒருபுறம் இருக்க எத்தகைய பாதிப்புகள் நிமிட்ஸôல் எழும் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. கப்பல் ஏற்படுத்தலாம் எனக்கருதப்படும் கதிர்வீச்சு அபாயம்தான் மிக முக்கியமான பிரச்னையாக தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. “”ஒருவேளை கதிர்வீச்சு ஏற்பட்டால்” என்பது அவ்வளவு வலுவான வாதமாகத் தெரியவில்லை. ஏனெனில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அக்கப்பலில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். எனவே அவ்வாறு பாதிப்பு இதுவரை ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அப்படியானால் என்னதான் பிரச்னை என்ற கேள்வி எழுகிறது.

நிமிட்ஸ் கப்பலில் உள்ள இரண்டு அணு உலைகளும் இயங்க வேண்டுமானால் இயக்கத்தின்போது அந்த அணு உலைகளைக் குளிர்விக்க தண்ணீர் வேண்டும். அது கடலில் இருந்து எடுக்கப்பட்டு அணு உலைகள் குளிர்வித்த பின் மீண்டும் கடலுக்குள்ளேயே விடப்பட்டுவிடும்.

கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பதால் அந்தப் பகுதி மட்டும்தான் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் நிமிட்ஸ் மெரீனா கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுவதால் அந்தப்பகுதி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் கப்பலில் உள்ள அணுஉலைகள் உருவாக்கும் அணுக்கழிவுகளை எங்கே கொண்டுபோய் அவர்கள் கொட்டுகிறார்கள்? தெளிவில்லை. ஒருவேளை கடலுக்குள்ளேயே அவற்றைக் கொட்டினால்? விளைவு…மிகவும் விபரீதமானது. ஏனெனில் அமெரிக்காவில் உள்ள பல அணு உலைகள் உருவாக்கிய டன் கணக்கான அணுக்கழிவுகளையே என்ன செய்வது என்று இன்னமும் அந்நாட்டு அணுசக்திக்கு எதிரான, அணுசக்தி ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு எதிரான கோஷம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் அந்நாட்டில் இதுபோன்ற விஷப்பரீட்சைகளை அமெரிக்க அரசு செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே அணுக்கழிவுகளை, கட்டாயம் ஆள் இல்லாத நடுக்கடலுக்குள் கொட்டியாக வேண்டிய நிலையில் உள்ளது. இதுதான் மிகவும் அதிர்ச்சியான உண்மை என்கின்றனர் அணுசக்தி எதிர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும்.

அப்படிப்பார்த்தால் சர்வதேச கடல்பரப்பில் எத்தனை இடங்களில் அணுக்கழிவுகளை அமெரிக்கா கடலுக்குள் கொட்டியுள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

இத்தகைய கழிவுகள் இப்போதைக்கு உடனே பிரச்னையை ஏற்படுத்தாது. இன்னும் சில ஆண்டுகளில் அல்லது கழிவுகளை கடலுக்குள் பத்திரமாக ஒரு பெட்டியில் போட்டு இறக்கியிருந்தாலும் கூட கடலில் ஏற்படும் புவி மாற்றங்கள் காரணமாக அதில் கசிவு ஏற்பட்டால் முதலில் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

குறிப்பாக மீன்கள். மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை உணவாகக் கொள்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில், கல்பாக்கத்திலேயே அங்குள்ள கடல்பரப்பில் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆனால் இதனை நமது அணுசக்தித் துறை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்).

மேலும் தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக கடற்கரை சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதியாகவும் உள்ளது. அத்தகைய தருணங்களில் சென்னைக் கடற்கரையோரம் வந்து நிற்கும் நிமிட்ஸ் தனது கழிவுகளை அந்த இடத்திலேயே கொட்டினால் அது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவோ, அல்லது பேரலைகள் வாயிலாகவோ கடற்கரைக்கு கதிர்வீச்சை ஏன் கொண்டு வராது என்பது மற்றொரு வலுவான வாதமாக உள்ளது.

எனவேதான் பல்வேறு அபாயங்களைக் கருத்தில் கொண்டு நிமிட்சை நமது கடல் எல்லைக்குள் அனுமதிக்காமல் இருப்பது நலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணியாற்றிவரும் டாக்டர் புகழேந்தி, “இராக் போரின்போது அமெரிக்காவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால்அந்த நாடே நிமிட்ஸ் கப்பலை தங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அப்படி என்றால் அந்த நாட்டு அரசுக்கும் கப்பற்படை அதிகாரிகளுக்கும் நிமிட்ஸ் கப்பலின் உண்மையான முகம் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஏன் ஆஸ்திரேலியா இக்கப்பலை அனுமதிக்கவில்லை? நாம் ஏன் அனுமதிக்கிறோம்? இதற்கு விடை கண்டாலே விஷயம் புரிந்துவிடும்” என்றார்.

மொத்தத்தில் “நிமிட்ஸ்’ நிமிடத்துக்கு நிமிடம் நமது மக்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைக்காமல் இருந்தால் சரி.

———————————————————————————————————

யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?: 3 இடங்களில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு – டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் ஏ.ஆர். ரெட்டி தகவல்
சென்னை, ஜூலை 1: சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள “யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் “நிமிட்ஸ்’ குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

“நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

“நிமிட்ஸ்’ கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

“நிமிட்ஸ்’ கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

————————————————————————————————-

அமெரிக்க கப்பலில் வந்த போர் வீரர்கள் சமூக சேவை- சென்னை பள்ளியில் குப்பையை அள்ளினார்கள்

சென்னை, ஜுலை. 2-

அமெரிக்கா போர் கப்பல் சென்னை வந்தது. அவர்கள் கடற்கரை ஓட்டல்களில் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத் துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர் கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இன்செட் வரும் உல்லாசம்

அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படு கிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்கு கின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னை யில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக “புக்” செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண் டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணி களிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என் பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரை யில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

பொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட் டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.

கப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவ அதி காரிகள் தெரிவித்தனர்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.

கப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள் ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.

உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்ஷாப் உள்ளது.

தனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத் தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.

————————————————-
அணுவிசைக் கப்பல்கள்

என். ராமதுரை

அண்மையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் “நிமிட்ஸ்’ சில நாள்கள் சென்னை துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி நின்றது. அது அணுவிசையால் இயங்குவதால் அக்கப்பலை சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கலாகாது என்று சில வட்டாரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விமானம் தாங்கிக் கப்பல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று டீசலில் இயங்குவது. இரண்டாவது வகை அணுவிசையில் இயங்குவது. உலகில் இப்போதைக்கு அமெரிக்காவிடம் மட்டுமே அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

பிரான்ஸ் இப்போதுதான் அணுசக்தியால் இயங்குகிற விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வகையான கப்பலை உருவாக்க சுமார் 7 ஆண்டுகள் பிடிக்கும். நிமிட்ஸ் கப்பலை உருவாக்க ஆன செலவு ரூ. 18,000 கோடி. அமெரிக்காவிடம் அணுவிசையில் இயங்கும் 11 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

வடிவில் மிகப் பெரியதான இவ்வகைக் கப்பல் மெதுவாகச் செல்லக்கூடியது. எதிரி நாடு ஒன்று தாக்க முற்பட்டால் இக் கப்பலினால் எளிதில் அத் தாக்குதலிலிருந்து தப்ப இயலாது. ஆகவேதான் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் அதற்குக் காவலாக போர்க்கப்பல்கள் செல்லும். மிக நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட இந்த நாள்களில் விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டிக் காப்பது எளிது அல்ல.

அமெரிக்காவிடம், வானிலிருந்து இரவு பகலாகத் தொடர்ந்து கண்காணிக்க வேவு செயற்கைக் கோள்கள் உள்ளன. எதிரி நாட்டின் கப்பல்களை மற்றும் நீர்மூழ்கிகளை அமெரிக்காவால் எளிதில் கண்காணிக்க இயலும். எதிரி விமானங்கள் விஷயத்திலும் இது பொருந்தும். எதிரி நாடு செலுத்தக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொண்டு நடுவானில் அவற்றை அழிப்பதற்கான ஏவுகணைகளும் அமெரிக்காவிடம் உள்ளன.

உலகின் எந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு அருகே அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தி, அந்த நாட்டின் மீது கடும் விமானத்தாக்குதலை நடத்துவதற்கு இக்கப்பல் நன்கு உதவும். ஆப்கன் போர், முதல் இராக் போர், இரண்டாம் இராக் போர் ஆகியவற்றின்போது அமெரிக்காவின் இவ்வகைக் கப்பல்கள் முக்கியப் பங்கு பெற்றிருந்தன.

இந்தக் கப்பலை நடமாடும் ராணுவ விமானத் தளம் என்றும் சொல்லலாம். மேல் தளத்தில் நிறைய போர் விமானங்களை நிறுத்த இடம் இருக்கும்; ஓடுபாதையும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பலில் நீண்ட ஓடுபாதை அமைக்க முடியாது. ஆகவே “கேட்டபுல்ட்’ மாதிரியில் ஓர் ஏற்பாடு உள்ளது. போர் விமானம் எடுத்த எடுப்பில் 300 கிலோ மீட்டர் வேகம் பெற இது உதவுகிறது.

எல்லாக் காலங்களிலும் விமானங்கள் மேல் தளத்தில் நிறுத்தப்பட மாட்டா. லிப்ட் மூலம் உட்புறத்தில் அமைந்த கீழ் தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்படும். தேவையான போது மேல் தளத்துக்குக் கொண்டு வரப்படும்.

சாதாரண விமானம் தாங்கிக் கப்பலில் அடிக்கடி டீசலை நிரப்பிக் கொண்டாக வேண்டும்.

அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலுக்கு எரிபொருள் பிரச்னையே கிடையாது. அக்கப்பலில் உள்ள அணு உலையானது, தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கப்பல் இயங்குவதற்கான ஆற்றலை அளித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக நிமிட்ஸ் கப்பல் 1975 ஆம் ஆண்டில் செயலுக்கு வந்தது. புதிதாக எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இன்றி அது 23 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்பட்டது. 1998 வாக்கில் புதிதாக எரிபொருள் நிரப்பப்பட்டது. இனி அது மேலும் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டு வரும்.

இவ்விதக் கப்பலின் அணு உலையில் மிகுந்த செறிவேற்றப்பட்ட யுரேனியம் பல குழல்களில் நிரப்பப்படும். பின்னர் கட்டுகட்டாகப் பல குழல்கள் அருகருகே வைக்கப்பட்டிருக்கும். (செறிவேற்றப்பட்ட யுரேனியம் என்பது குறிப்பிட்ட வகை யுரேனிய அணுக்கள் மிகுதியாக உள்ள யுரேனியமாகும்). யுரேனியம், இயல்பாக நியூட்ரான்களை வெளிப்படுத்தும். இந்த நியூட்ரான்கள் அருகில் உள்ள குழல்களில் அடங்கிய இதர யுரேனிய அணுக்களைத் தாக்கும்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு மிகுந்த வெப்பம் தோன்றும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி தோற்றுவிக்கப்படும். இந்த நீராவியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த மின்சாரம் கப்பலின் அடிப்புறத்தில் உள்ள ராட்சத சுழலிகளைச் சுழல வைக்கும்போது கப்பல் நகரும்.

ஒருவகையில் இது அந்தக் காலத்தில் நிலக்கரியைப் பயன்படுத்திய ரயில் என்ஜின் நீராவியால் இயங்கியதைப் போன்றதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல்கள் அனைத்துமே நிலக்கரி மூலம் இயங்கின. பின்னர் கப்பல்களை இயக்க ராட்சத டீசல் என்ஜின்கள் வந்தன. ஆனால் விமானம் தாங்கிக் கப்பல்களைப் பொருத்தவரையில் அவை மறுபடி நீராவிக்கே வந்துள்ளன. ஒரு முக்கிய வித்தியாசம் – நீராவியைத் தயாரிக்க செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. விமானம் தாங்கிக் கப்பலின் அணு உலைகளில் எவ்வளவு செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எந்த ஓர் அணுசக்திப் பொருளிலிருந்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிரியக்கம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்கள், அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மாலுமிகள் பாதிக்கப்படாதபடி, இவற்றில் அடங்கிய அணு உலைகளிலிருந்து கதிரியக்கம் வெளியே வராதபடி தடுக்க அணு உலையைச் சுற்றிக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.

அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் உள்ளன.

இந்தியாவிடம் உள்ள இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் வெளிநாடுகளிடமிருந்து வாங்கப்பட்டவையே. இவை டீசலில் இயங்குபவை. இந்தியா இப்போது இதே மாதிரியில் சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவதில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கு ஆயத்தங்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.)

Posted in ADMK, Aircraft, Arms, Atom, Attack, Backgrounders, Ban, Boat, carrier, Coast, Communists, defence, Defense, Details, energy, Fighter, Foreign, Fuel, Govt, Gulf, Harbor, Harbour, International, Iran, Iraq, Issues, Jets, Madras, Navy, Nimitz, Nuclear, Ocean, Pakistan, Party, Politics, Protest, Sea, Ship, Spy, Submarines, Terrorism, US, USA, USS Nimitz, Vessel, warship, Weapons, World | 1 Comment »

MBBS, BDS merit list released – Details, Statistics, Admission results

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு “கட்-ஆப் மார்க்’ 197: மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200

சென்னை, ஜூன் 28 : தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு

‘கட்-ஆஃப் மார்க்’ விவரம்:

  1. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான “கட்-ஆஃப் மார்க்’ 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 194.50;
  3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 191.75;
  4. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – 187.25;
  5. பழங்குடி வகுப்பினர் – 179.

மாவட்டங்களுக்கே சிறப்பிடம்:

ராசிபுரம், நாமக்கல், ஓசூர், கோவை, மார்த்தாண்டம் (கன்னியாகுமரி), பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கி முதல் ஏழு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஏழு பேரும் எம்.பி.பி.எஸ். ரேங்க்கை நிர்ணயம் செய்யும் இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200-க்கு 200 பெற்றவர்கள்.

14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்டுக் கூறியதாவது:-

1,552 எம்.பி.பி.எஸ். இடங்கள்:

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேலே சொன்ன மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 154 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,552 இடங்களுக்கு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி வழக்குத் தொடர்ந்துள்ளதால், அந்தக் கல்லூரியில் உள்ள 98 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்த ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

பி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு):

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு 326 பி.டி.எஸ். இடங்களுக்கும் சேர்த்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்”” என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.

———————————————————————————————–

2004-ல் பிளஸ் 2; 2007-ல் எம்.பி.பி.எஸ்.: பொள்ளாச்சி மாணவர் சாதனை

பொள்ளாச்சி, ஜூன் 28: நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக, தான் கனவு கண்டபடி மூன்று ஆண்டுகள் கழித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்பிடம் பெற்று நுழைந்துள்ளார் பொள்ளாச்சி மாணவர் ஜி.கே. அஸ்வின்குமார்.

பிளஸ் 2 முடித்த பிறகு பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதில் சேராமல் 3 ஆண்டுகள் காத்திருந்தார் இவர்.

சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று 7-வது சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது மகன் ஜி.கே.அஸ்வின்குமார். கடந்த 2003-04-ல் பொள்ளாச்சியில் உள்ள பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.

அப்போது அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1169.

சம்ஸ்கிருதம் 196, ஆங்கிலம் 183, கணிதம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 200. ஆக, மருத்துவ படிப்புக்கான கூட்டு மதிப்பெண்ணாக 200-ஐ வைத்திருந்தார்.

இதில் கடந்த 2 முறை நுழைவுத் தேர்வு எழுதியதில் ஒருமுறை பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது.

ஆனால் அஸ்வின்குமார் அதில் சேரவில்லை. ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதவில்லை.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்தாகி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் அஸ்வின்குமார் தமிழக அளவில் 7-வது ரேங்க் பெற்றுள்ளார். மருத்துவக் கல்வியில் முன்னோடியாக விளங்கும் சென்னை மருத்துவக் கல்லூரியை கவுன்சலிங்கில் அவர் தேர்வு செய்யும் நிலையில் இடம் கிடைக்கும்.

மருத்துவப் படிப்பு முடித்து இதய அறுவைச் சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவராவதுதான் தனது எதிர்காலத்திட்டம் என்று அஸ்வின்குமார் தெரிவித்தார்.

வயது வரம்பு கிடையாது:

நுழைவுத் தேர்வு ரத்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்பதால் அஸ்வின்குமார் போன்று கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக கூட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த ஆண்டு பலன் அடைந்துள்ளனர்.

இத்தகைய மாணவர்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அதிகமாக எடுக்காததால் கடந்த ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியவில்லை.

எம்.பி.பி.எஸ்.-ஐப் போன்று பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. எனவே நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பலர் பி.இ. ரேங்க் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உண்டு எனக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

———————————————————————————————–
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்: பயன் தராத ரேண்டம் எண்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் மூலம் அளிக்கப்பட்ட சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) எந்தப் பயனையும் அளிக்கவில்லை.

நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டதால், மாணவர் அட்மிஷனுக்கு புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களிலும் சமமான மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது பிறந்த தேதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், கம்ப்யூட்டர் சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்காக, விண்ணப்பித்தோருக்கு சில வாரங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மூலம் சிறப்பு எண் தரப்பட்டது. இவர்களில் யாருடைய எண் பின்னால் வருகிறதோ அவருக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசு அறிவித்திருந்தது.

“”இரு மாணவர்கள் மட்டுமே சமமான மதிப்பெண்ணைப் பெற்றிந்தனர். எனினும், அவர்கள் இருவரும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்ததால், அரசுக் கல்லூரியில் அவர்களுக்குத் தாராளமாக இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் ரேண்டம் எண் அடிப்படையில் அவர்களை மதிப்பிடத் தேவையே ஏற்படவில்லை” என்று மருத்துவக் கல்வி வட்டாரம் தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் 14 அரசுக் கல்லூரிகளிலும், 3 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மொத்தம் 1,552 இடங்கள் உள்ளன.

———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 பேர்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியலில் கூட்டு மதிப்பெண் 200-க்கும் 199-க்கும் இடையே 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மருத்துவப் படிப்பில் சேர

  • 200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • இதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.
  • ஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி எஸ். ரம்யாவின் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 198.25. எனவே அவர் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197 என்பதால், கூட்டு மதிப்பெண் 196.5, 196, 195 என வாங்கியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : முதல் 7 ரேங்க் பெற்றவர்கள்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.

ஒரு சென்னை மாணவர்கூட 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிறப்பிடத்தைப் பெறவில்லை.

ரேங்க் வாரியாக சிறப்பிடம் பெற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளி குறித்த விவரம்:

1. பி. பிரவீண்குமார், எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

2. ஆர். நித்யானந்தன், குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்;

3. எம். கார்த்திகேயன், மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்;

4. எச். மீனா, அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வெங்கிடாபுரம், கோவை;

5. சி. ஜெரீன் சேகர், குட் ஷெபர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி;

6. எஸ். தாசீன் நிலோஃபர், எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

7. ஜி.கே. அஸ்வின் குமார் (படம்), பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி.
———————————————————————————————–

Posted in Admission, backward, BC, BDS, candidates, Caste, Chennai, Colleges, Competition, Cut-off, Cutoff, Dental, Dentist, Details, Doctor, Education, eligibility, Evaluation, FC, Health, Healthcare, Info, IRT, Madras, Marks, MBBS, MD, medical, Medicine, Merit, MMC, Moogambigai, Moogambikai, Mookambigai, Mookambikai, OBC, OC, Perunthurai, Porur, PSG, Ramachandra, Random, Rasipuram, Reservation, Results, SC, selection, self-financing, ST, Statistics, Statz, Students, Study, University | Leave a Comment »

Madurai West Assembly by-poll: By-election details, campaign strategies, developments

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?

மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.

மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.

ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.

வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounders, By-election, by-poll, Campaign, Details, Developments, DMDK, DMK, Elections, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, JJ, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Madurai, Madurai West, News, Polls, Predictions, Primer, Strategy, Transfers, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Win, Winners | 5 Comments »

Indian Budget 2007-08 : Details, Information, Analysis, Perspectives

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 28, 2007

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, விவசாயம் மற்றும் சுகாதாரத்துக்கு அதிக ஒதுக்கீடு

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், வரவு செலவுத் திட்டத்தில் விவசாய, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார்.

இந்திய அரசின் 2007-08 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தனது பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து வெளியிட்டார்.

விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு
விவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

இந்த வரவு செலவு திட்டத்தில் விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுகளுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையின் வளர்ச்சியை 2.3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பட்ஜெட் ஏமாற்றமே அளிக்கிறது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மின்சாரம் போன்ற துறைகளில் உற்பத்தியை பெருக்க எந்த திட்டமும் அதில் இல்லை என தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

பணவீக்கத்தை குறைக்க பட்ஜெட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.

செல்வந்தர்களிடையே வரிகளைக் கூட்டி கூடுதலான ஆதரங்களை திரட்ட திட்டங்கள் ஏதும் இந்த அறிக்கையில் இல்லை என்றும், தொடர்ந்து நேர்முக வரிகளை அதிகப்படுத்துவதில் அரசுக்கு தயக்கம் இருப்பது தெரிகிறது எனவும் பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒட்டு மொத்தமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்து வருகிறது எனக் கூறினாலும், நாட்டின் ஆதாரமான வேளான் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.


BBC Specialஎழுச்சியுறும் இந்தியா

 

எழுச்சியுறும் இந்தியா
எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது.

இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது.

குடும்பம் நிச்சயிக்கும் திருமணங்கள் குறித்த பெட்டகம்


இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்.

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 1

கோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 2


இந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

அந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.


குறையில்லை; நிறைவுமில்லைபட்ஜெட் என்றவுடன் வரி உயர்வும் வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வும்தான் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இரு பொது விஷயங்கள்.அண்மைக்காலமாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், வருமான வரிவிலக்கு வரம்பும் கூடுதலாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களிடையே இருந்தது.மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டது. இதுவரை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.1.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் வரி செலுத்துவோருக்கு ரூ.1000 வரை பயன் கிடைக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டாலும், வருமான வரியுடன் செலுத்த வேண்டிய கல்வித் தீர்வை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் நிதியமைச்சர் குறிப்பிடும் பலன் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்தாவிட்டாலும்கூட, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு தனி மனிதனின் வருமானத்தில் பெரும்பகுதியை விழுங்குவதைக் கருத்தில்கொண்டு, இச்செலவுகளில் குறிப்பிட்ட வரம்பு வரை 20 சதவீத வருமான வரிக் கழிவு அளித்திருந்தால் மாத வருவாய்ப் பிரிவினருக்கு மகிழ்ச்சி தருவதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கும்.சந்தை வணிகத்தில் நிரந்தர வருமான வரி எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும் என்பது இந்த பட்ஜெட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க, வரவேற்புக்குரிய மாற்றம். இதனால் கருப்புப் பணப் புழக்கம் குறையும். இருப்பினும், ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட எந்த வர்த்தகமும் காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற கட்டாய நிலைமையும் ஏற்பட்டால்தான் சந்தையில் கருப்புப் பணத்தின் புழக்கம் முற்றிலும் மறையும்.

இந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வேளாண்மையில் 4 சதவீத வளர்ச்சிக்கு உறுதி கூறப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் தோட்டப் பயிர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கவனம் மற்ற வேளாண் பயிர்களுக்கு அளிக்கப்படவில்லை. அரிசி, கோதுமை மீதான முன்ஒப்பந்த பேரங்கள் இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது நடைமுறையில் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் பயன் அமையும்.

பாசன மேம்பாட்டுக்காக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பல பாசனத் திட்டங்களை நடப்பாண்டில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத் திட்டங்களில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 8-ம் வகுப்பு முதலாக கல்வி உதவித்தொகை வழங்கும் முடிவும் மகிழ்ச்சியானவை.

சிகரெட் மீதான வரி வழக்கம்போல உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை இல்லாத பான்மசாலாவுக்கான வரியை 66 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக குறைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். புகையிலையைவிட மோசமானது அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். இவை புற்றுநோய்க்கு காரணமானவை. “மவுத் ரெப்பிரஷர்’ என்ற பெயரில் இவை மீண்டும் சந்தையில் அதிக அளவில் நுழைவதற்கு தற்போதைய வரிக்குறைப்பு ஆதரவாக அமைந்துவிடும்.

ஜவுளி மேம்பாட்டு நிதியில் கைத்தறியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைத்தறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், அதற்கான கருவிகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் அதற்கான மானியக் கடன் பெறவும் நெசவாளர்களுக்கு எளிதாக இருக்கும். தமிழக நெசவாளர்கள் இதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை விளக்கி, பயன்படுத்திக்கொள்ளச் செய்யும் பொறுப்பு தமிழக கைத்தறித் துறைக்கு உள்ளது.

சூரியகாந்தி சமையல் எண்ணெய்க்கு 15 சதம் வரி குறைப்பும் பெட்ரோல் டீசலுக்கான தீர்வையை 2 சதவீதம் குறைத்துள்ளதும் இன்றியமையா பண்டங்களின் விலையைக் குறைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


வருமான வரிஎன்.வி.பாலாஜி (Dinamani Op-Ed pages)அடுத்த நிதியாண்டுக்கான (2007-08) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. பட்ஜெட் என்பது அடுத்த ஓராண்டுக்கான நிதியாதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமிடலாகும். இந்தத் திட்டமிடல் அரசு மக்களுக்குத் தெரிவிக்கும் மிகமுக்கியமான சாதனமும் கூட . இது அரசியல் சட்டம் நமக்களித்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் பட்ஜெட் என்ற ஒன்று இல்லாதபோது அரசு தன் செலவினங்களைக் கூட செய்ய முடியாமல் போகும்.பட்ஜெட்டின் மூலம் அப்படி என்னதான் நிதியாதாரங்கள் வந்து விடுகின்றன? முக்கிய ஆதாரம் மத்திய அரசு விதிக்கும் வரிகள். 2006-07 ஆம் ஆண்டிற்கான மத்திய வரிகள் மட்டும் 4.4 லட்சம் கோடிகள். இதில் தனிநபர் வருமான வரி 76 கோடியாகும். கம்பெனிகளுக்கான வருமான வரி 133 லட்சம் கோடியாகும். ஆக வருமான வரி சட்டத்தின் மூலம் அரசு மக்களிடமிருந்து பெறுவது 210 லட்சம் கோடியாகும். இந்த வருமான வரிக்கும் ஒரு சரித்திரம் உண்டு.சிப்பாய் கலகத்தை அடக்க அரசு அதிக செலவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விளைவு, மிகச்சிறிய அளவில் மக்களின் வருமானத்தின் மீது வரி விதிக்கும் சட்டம் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்டது. முதல் உலகப்போர் காலகட்டத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின், வருமான வரிச் சட்டம் (1961) உருவெடுத்தது.இந்த வருமான வரிச் சட்டத்தின் மூலம் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வருமானங்கள் பல்வேறு பிரிவுகளாக, சம்பளம், வீட்டு வாடகை, தொழில் மூலம் ஈட்டும் லாபம், முதலீட்டிலிருந்து திரட்டும் வருவாய், இதர பிரிவு என தனித்தனியாகக் கணக்கிடப்படுகிறது.இப்படி ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வரும் வருமானத்துக்கு சில கழிவுகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. கழிவுகளுக்குப் பின் உள்ள நிகர வருவாய் ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வருவாயிலிருந்து பல்வேறு பொதுக் கழிவுகள் பெறுவதற்கான வழி வருமான வரிச் சட்டத்தில் உள்ளது. இந்த நிகர வருமானமே மொத்த வருவாயாகக் கொண்டு அதன் மீது வரி விதிக்கப்படுகிறது.


பயனற்ற மானியம்“ஏறினால் இறங்குவதில்லை’ – (17-2-07) தலையங்கம் படித்தேன்.விலைவாசி உயர்வுக்கு பொதுவான காரணம் பணவீக்கம் என்பதை மறுக்க இயலாது.அதேசமயம் உணவு உற்பத்தி சாராத மற்ற தொழில் பொருள்களின் கொள்ளை லாப விலை நிர்ணயமும் பணவீக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.எனவே உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகுக்காமல், வேளாண் விளைபொருள்களுக்கு விற்பனை நிலையில் மானியம் வழங்குவதும், பிற பொருள்களுக்கு உற்பத்தி வரி, கூடுதல் வரி ஆகியவற்றில் சலுகை வழங்குவதும் உரிய பயனைத் தராது.சீனாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதற்கும், பணவீக்கம் குறைவாக இருப்பதற்கும் முக்கியக் காரணமே, அவர்களின் உற்பத்திச் செலவு கட்டுக்குள் அடங்கி இருப்பதுதான்.எனவே, விலைவாசி கட்டுக்குள் இருக்க வெறும் மானியங்களும் வரிக் குறைப்புகளும் உதவாது.

சோம. நடராஜன், கரூர்.


ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: தா. பாண்டியன்திருவாரூர், மார்ச் 2: விவசாயத் துறை மேம்பாட்டுக்குக் குறிப்பிடத்தக்க அறிவிப்பு இல்லாத மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:விவசாயத் துறையின் சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயத் துறைக்குப் போதுமான முக்கியத்துவத்தை தரவில்லை.மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்ட விவசாயத் துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது, விவசாயத்துக்குக் கடன் அளிக்குமாறு நிதி நிறுவனங்களை வற்புறுத்தும் வழிகாட்டல் மட்டுமே. இந்தக் கடன் முழுமையாக கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவை வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகை மட்டுமே கல்வித் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறைக்குக் கடந்த ஆண்டை விட ரூ. 13 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியைக் குறைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி தேசிய விவாதம் மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கான மத்திய அரசின் தவறான கொள்கையைக் கண்டித்தும் மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தா. பாண்டியன்.


அரசின் வரி வருவாய் அதிகரித்ததால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டது நிதிப் பற்றாக்குறை: சிதம்பரம்
புதுதில்லி, மார்ச் 2: செழிப்பான பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் வரி வருவாய் அதிகரித்தது ஆகிய சாதக அம்சங்களால், நிதிப் பற்றாக்குறையின் அளவை திட்டமிட்டபடி கட்டுப்படுத்த முடிந்துள்ளது என சிதம்பரம் கூறியுள்ளார்.2006-07 நிதியாண்டுக்கு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3.8 சதவீதமாக கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிடப்பட்டதை விட சிறப்பாக, அது 3.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதேபோல வருவாய் பற்றாக்குறையை 2.1 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் 2 சதவீதமாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், அடுத்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை மேலும் குறைந்து மொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவீதமாகவும், வருவாய் பற்றாக்குறை 1.5 சதவீதமாகவும் குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.பற்றாக்குறையின் அளவு குறைவதால், அரசு கடனை நம்பியிருக்க வேண்டிய அளவு குறைகிறது. நடப்பு நிதியாண்டின் முடிவில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.83,436 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இது ரூ.71,478 கோடியாகக் குறையும். இதேபோல நிதிப் பற்றாக்குறை 1,52,328 கோடியில் இருந்து 1,50,948 கோடியாகக் குறையும் என சிதம்பரம் கூறியுள்ளார்.

2007-08 நிதியாண்டுக்கு செலவு ரூ.6,80,521 கோடியாக இருக்கும், வரவு ரூ.4,86,422 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


நாய்களையும் நாய் வளர்ப்போரையும் தவிர யாரையும் மகிழ்விக்காத மத்திய பட்ஜெட்எஸ். குருமூர்த்தி – தமிழில்: லியோ ரொட்ரிகோநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கும் வேளாண் துறை சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாணும் திட்டம் எதையும் அளிக்காத தனது படுதோல்வியை 2007~08-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மூடிமறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். சிந்தனை வறட்சியை வார்த்தை ஜாலத்தால் மூடி மறைத்திருக்கும் அந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை என்பது அதை சாதாரணமாகப் படித்தாலே தெரிகிறது. தனியார் நிறுவன அதிகாரிகள் தமது வரவு ~ செலவுக் கணக்கில் லாபத்தை அதிகமாகக் காட்டுவதற்கு சித்து வேலைகள் செய்வதைப்போலவே, நிதி அமைச்சரும் தனது சாதுர்யத்தைக் காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்பது பட்ஜெட்டை நுணுக்கமாக ஆராயும்போது தெரிந்துபோகிறது.கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் திருவள்ளுவரின் குறளையும் பயன்படுத்தி, அது ஏதோ வேளாண்மை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் நிதி அமைச்சர். வெளிப்படையாக தகவல்களைக் கூறுவதற்குப் பதில், பலவற்றை மூடிமறைத்து தனது சாதுர்யத்தை அவர் காட்டியிருப்பது பட்ஜெட்டை கூர்ந்து நோக்கும்போது தெரிந்துவிட்டது. தனது உரையில் 43-வது பத்தியில் இருந்து 65-வது பத்தி வரையிலான பகுதியில், வேளாண் துறைக்கான 18 அம்சத் திட்டத்தைப் பற்றி அறிவித்துள்ளார். அவற்றில் இரு அம்சங்கள் தொடர்பாகக் கூறுகையில், ஒன்றைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் மற்றொன்றைப் பற்றிக் கூறுகையில், வேளாண்மை தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.பயறு வகை சாகுபடி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்பாக மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் 7 அம்சங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவை; அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இரண்டே இரண்டு திட்டங்கள்தான் ~ கிராமப்புற ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம், நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கும் திட்டம் ~ புதியவை. அதிலும்கூட, நீர் சேகரிப்புத் திட்டமானது ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாக அமல்படுத்திய திட்டமாகும். அதைப் பற்றி நினைவுகூராமல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.

உரத்துக்கு அளிக்கப்படும் மானியத் தொகையைக் கழித்துவிட்டுப் பார்த்தால், வேளாண்மைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ.50,112 கோடிதான்.

2006~07-ம் ஆண்டு ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டால் வெறும் 25 சதவீதமே கூடுதல். ஆனால், தனது வார்த்தை ஜாலத்தின் மூலம் ஏதோ வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல மடங்கு அதிகரித்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

அது மட்டுமல்ல; வங்கிகள் வழங்கும் கடன் தொகைகளை பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் சேர்த்து பெரும் தொகை போலக் காட்டியதன் மூலம், வேளாண்மைக்கு ஏராளமாக ஒதுக்கீடு செய்திருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.

ஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர் ஆதாரங்களை மராமத்து செய்து, பராமரிக்க 3 ஆண்டுகளில் பட்ஜெட்டில் அவர் ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 100 கோடி ரூபாய். ஆனால், தமது உரையின் 47-வது பத்தியில், “”வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.16,979 கோடி செலவில் சிறப்புத் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுவருகிறது; அதில் ரூ.12,400 கோடியானது நீராதாரம் தொடர்பான திட்டங்களாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீராதாரம் தொடர்பான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஆகும். அதோடு, அது முழுமையாக செயல்படுத்தப்படவும் இல்லை. அதற்கான நிதியை நிதி அமைச்சர் வழங்கப் போவதில்லை; மாறாக உலக வங்கிதான் வழங்கப் போகிறது. அதிலும் தமிழ்நாடுதான் முதலாவதாக உலக வங்கியை அணுகி ரூ.2182 கோடி கடன் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இன்னும் அதைப் பற்றி விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் உரையைப் படித்தால் ஏதோ ரூ.12,400 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அந்தச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.

“நபார்டு’ வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் இவ்வாறே பட்ஜெட்டில் காட்டியிருக்கிறார். நிதி அமைச்சரின் உரைக்குக் கீழே புதைந்திருப்பதை ஆராயாமல் யாராலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது.

தனது பட்ஜெட் உரையில் 15 நிமிடங்களை வேளாண் துறையைப் பற்றிய திட்டங்களுக்கு ஒதுக்கிவிட்டதாக அவரே தனது உரையின் 65-வது பத்தியில் குறிப்பிட்டார். 2004~05-ம் ஆண்டில் வேளாண் வளர்ச்சி விகிதம் அமோகமாக இருந்தது. அந்த ஆண்டிலேயே வேளாண்மைத் திட்டங்களுக்காக தனது உரையில் 1635 வார்த்தைகளை ஒதுக்கி இருந்தார். ஆனால், வேளாண் துறை நெருக்கடியில் சிக்கி இருக்கும் இந்த ஆண்டில், 1899 வார்த்தைகளைத்தான் வேளாண் திட்டங்கள் பற்றி அறிவிக்க ஒதுக்கி இருக்கிறார். அப்பொழுதைவிட 264 வார்த்தைகள்தான் அதிகம்.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்துகொண்டே செல்லும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசு முதலீடு குறைந்துகொண்டு செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய வேளாண்மைத் துறை தொடர்பான அதிமுக்கியமான பிரச்சினைகளை அவரது பட்ஜெட்டில் முழுமையாக ஆராயவே இல்லை.

2003~04-ல் உணவு தானிய உற்பத்தி 21.2 கோடி டன்களாக இருந்தது. ஆனால், அது 2006~07-ல் 20.9 கோடி டன்களாகக் குறைந்துவிட்டது. 2004~05-ம் ஆண்டு பட்ஜெட் உரையில், “”உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்; இனி விவசாயிகள் கோதுமைக்குப் பதில் மலர் சாகுபடி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று, தனக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் கூறியதையே சிதம்பரமும் கூறினார். ஆனால், அடுத்த பதினெட்டே மாதங்களில் கோதுமையைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு: விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிட்டன.

பணவீக்க விகிதம் அதிகரித்திருப்பதற்கு உலகச் சந்தையில் விலை அதிகமாக இருப்பதே காரணம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்தும் நாடு, பல லட்சம் டன் கோதுமையை வாங்குவதற்காக உலகச் சந்தைக்குச் சென்றால் விலை ஏறாமல் குறையவா செய்யும்? விலைவாசிப் பிரச்சினையை நிதி அமைச்சர் வெறுமனே தொட்டுவிட்டுச் சென்றாரே தவிர, ஆழமாக அலசவில்லை.

நிதிச் சந்தையில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த 12 மாதங்களில் 4800 கோடி டாலர்களை விலைக்கு வாங்கியது குறித்து ஒரு வார்த்தைகூட அவர் தனது பட்ஜெட் உரையில் கூறவில்லை. ஒரு டாலருக்கு ஈடாக ரூபாயின் மதிப்பை ரூ.45 என்ற அளவில் நிலைநிறுத்தி வைப்பதற்காகவே டாலர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. அதன் விளைவாக நிதிச் சந்தையில் பணப் புழக்கம் (ரூபாய்) அதிகரித்தது; இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலையும் இதர பொருள்களின் விலைகளும் அதனால் அதிகமாக உள்ளன. வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதன் மூலம் நிதிச் சந்தையில் இருந்து ரூ.14,500 கோடியை ரிசர்வ் வங்கி ஒருபுறம் உறிஞ்சி எடுத்தது. அதே நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை அதே அளவில் வைத்திருப்பதற்காக 700 கோடி டாலர்களை சந்தையில் இருந்து வாங்குவதற்காக ரூ.30,000 கோடியை நிதிச் சந்தையில் இறக்கியது. இப்படிப்பட்ட முரண்பாடான நடவடிக்கைகளால் எவ்வாறு பணவீக்க விகிதம் குறையும்? அதன் ஒட்டுமொத்த விளைவாக விலைவாசிகள் உயர்ந்தன. இதற்கு எல்லாம் காரணமே ஏற்றுமதியாளர் வட்டாரமே ஆகும். அவர்களின் நெருக்குதலால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது போலியாகக் குறைத்து அதாவது ரூ.45 ஆகக் காட்டப்பட்டுவருகிறது. அதாவது 35 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருக்க வேண்டியது, 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று காட்டப்பட்டுவருகிறது. அதுவே ஒரு டாலருக்கு ரூ.35 ரூபாய் என்ற நிலை இருக்குமானால் பணவீக்க விகிதமும் 5 சதவீதத்திலேயே இருந்திருக்கும்.

ஆக மொத்தத்தில், நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார் நிதி அமைச்சர். வெறும் ஆண்டுச் சடங்காக நாட்டின் பட்ஜெட்டை மாற்றிவிட்டார் அவர். நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த கிராமப்புற வளர்ச்சியும் வேளாண் துறையும் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுவிட்டன; விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறியதன் பயங்கர விளைவுகளை விரைவிலேயே நாம் அனுபவிக்கப் போகிறோம்.

நாய், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளுக்கான உணவின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்திருப்பதால், நிதி அமைச்சரே கூறியதைப்போல, இந்த பட்ஜெட்டால் நாய் வளர்ப்போரையும் நாய்களையும் தவிர வேறு யார் மகிழ்ச்சி அடையப் போகிறார்கள்? ஆனால் முலாயம் சிங் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தெரியும், நாய் வளர்ப்போர் ஓட்டுப் போடப் போவதில்லை; நாய்களுக்கு ஓட்டே இல்லை என்பது.


மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு புதுடெல்லி, பிப். 28-பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-மாதசம்பளம் பெறுவோருக்கான வருமான வரியில் இந்தபட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமானவரி விதிப்பு மற்றும் விரி விகிதத்தில் மாற்றம் இல்லை. ஆனால்சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.

இந்த வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு பெண்களுக்கு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.

சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.

2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.

ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப்படுகிறது.

நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.

2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.

மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.

கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.

கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.

பிற்பட்ட மண்டல பகுதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.

மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.

20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.

அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்குபயன்

மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.

இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங்கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.

பாங்கிகளில் போடப்பட்ட பணத்தை எடுக்கும் போது பணபரிமாற்ற வரி (பி.சி.டி.வரி) வசூலிக்கப்பட்டு வந்தது. மத்திய, மாநில அரசு களுக்கு இந்த பண பரிமாற்ற வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிப்பட்ட ஒருவர் மற்றும் இந்துகூட்டு குடும்பத்தினர் பாங்கியில் பணம் எடுக்கும் போது ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும்போது இந்த வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுப்பவர்களுக்கு இந்த பாங்கி பண பரிமாற்ற வரிகிடையாது.


பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள் * சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.* சிகரெட் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது.

* தண்ணீர் சுத்திரிக்கும் கருவிகளுக்கு முழு வரி விலக்கு அளிக் கப்படுகிறது.

* பயோ-டீசலுக்கு முழு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

* சிறு தொழில்களுக்கான சுங்க வரி விலக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்கிறது.

* வருமான வரி விலக்கு ஆண்களுக்கு ரூ.1,10,000, பெண் களுக்கு ரூ.1,45,000, மூத்த குடி மக்களுக்கு ரூ.1,95,000 என்ற வகையில் இருக்கும்.

* சூரியகாந்தி எண்ணை மீதான வரி 15 சதவீதமாக குறைக் கப்படுகிறது.

* சமையல் நிலக்கரிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப் படுகிறது.

* மதிப்பு கூட்டு வரி விதிப்பு காரணமாக மத்திய அரசின் வருவாய் 24.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

* புனேயில் நடைபெற உள்ள காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* காமன்வெல்த் போட்டியை நடத்த மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.150 கோடி வழங்கப்படும்.

* வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.

* இயற்கை மாற்றத்தை ஆய்வு செய்ய நிபுணர்குழு.

* உடல் ஊனமுற்றோருக்கு 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* உலகத்தரம் வாய்ந்த நிதி நகரமாக மும்பை மாற்றப்படும்.

* மத்திய விற்பனை வரியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.

* விவசாய முதலீடு 2 சதவீதம் அதிகரிக்கும்.

* கிராமத்தில் நிலம் இல்லாத குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம்.

* ராணுவ செலவுகளுக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

* தங்க நாற்கரக திட்டம் நிறைவடைகிறது.

* மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம்.

* பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.22,282 கோடி.

====================================================
விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க விவசாயம், தொழில் இரண்டிலும் சமநிலை வளர்ச்சி: பிரணப் வலியுறுத்தல்

கோல்கத்தா, மார்ச் 5: விவசாயம், தொழில் ஆகிய இரு துறைகளிலும் சமநிலையான வளர்ச்சி இருந்தால்தான், விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்கவும், வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில் சிங்குரிலும், நந்தி கிராமத்திலும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதால் எழுந்துள்ள பிரச்சினையை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ராஜர்ஹாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகையில் பிரணப் முகர்ஜி கூறியதாவது:

கடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போது போதிய முதலீடு இல்லாத காரணத்தால் விவசாயத் துறை இன்று பின்தங்கிக் கிடக்கிறது.

விவசாயத் துறையிலும் தொழில்துறையிலும் சமநிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இன்னொரு பசுமைப் புரட்சி அவசியம்.

நாட்டில் விவசாயத் துறையில் வளர்ச்சி விகிதம் தற்போது 2 சதவீதமாக இருக்கிறது. தொழில்துறைக்கு நிகராக விவசாயத் துறையைக் கொண்டு வர வேண்டும் எனில், வளர்ச்சி விகிதத்தை குறைந்தபட்சம் 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க முடியும்.

அதே வேளையில், தொழில்மயம் ஆக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டியதும் அரசின் பொறுப்பு என்றார் பிரணப் முகர்ஜி.

====================================================

வரி விதிப்புகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – வேளாண்மை, சுகாதாரம், ஊரக வளர்ச்சியும் சீர்திருத்த நடவடிக்கைதான்: ப.சிதம்பரம்

புது தில்லி, மார்ச் 5: வேளாண் துறை வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்தான்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாடும் அதில் அடங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.

மேலும், பட்ஜெட்டில் அறிவித்த வரி விதிப்புகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“”ஒரு வரியைத் திரும்பப் பெற்றால், அதற்குப் பதிலாக வேறொரு வரியைத்தான் விதிக்க முடியும். எனவே, ஒருவர் மீதான வரியைத் திரும்பப் பெற்றால் அவர் மகிழ்ச்சி அடைவார். அதையே வேறொருவர் மீது விதிக்கும்போது அவர் வருத்தமடைவார். எனவே, எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் அமல்படுத்தப்பட்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளால் தொழில் துறை நிறுவனங்களும் சேவைத் துறை நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

நிறுவனங்கள் லாபம் மீதான வரி, இதர சலுகைகள் மீதான வரி, லாப ஈவுத் தொகை மீதான வரி ஆகியவற்றின் மூலம் அரசுக்குச் செலுத்துவது மிகக் குறைந்த தொகையே ஆகும். தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் தொழில் துறையினர், மற்றவர்களின் நன்மைக்காகவும் சிறிது தொகையை அளிக்க வேண்டும். அதனால் புதிய வரிகளை பெரிய சுமையாக அவை கூற முடியாது.

ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வியை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி அளிக்கவும் பணம் தரப் போகிறார்களா, இல்லையா என்பதே கேள்வி. “ஆம்’ என்றால், தொழில் துறையினர் வரி செலுத்தித்தான் ஆக வேண்டும்.

எச்ஐவி பாதிப்பு, எய்ட்ஸ் நோய், இளம்பிள்ளைவாத நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குவது போன்ற பணிகளில் நாம் போதிய கவனத்தைச் செலுத்தாமல் இருந்துவிட்டோம் என்றே கருதுகிறேன்.

நாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட 70 லட்சம் நீர் ஆதாரங்களை சீரமைத்து, பராமரிப்பதும், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பெரும் திட்டங்களும்கூட பொருளாதார சீர்திருத்தங்களில் அடங்கும்.

வருமான வரி விதிப்புக்கான வருமான வரம்பு ஒரு லட்ச ரூபாயிலிருந்து ரூ.1,10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தவர்கள் செலுத்திவந்த ரூ.5,000 கூடுதல் வரியானது, ரூ.4,120 ஆகக் குறைந்துவிடும். ஆனால், ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களில் எத்தனை பேர் வரி கட்டுகிறார்கள்?

நாட்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடி. அவர்களில் 1.20 லட்சம் பேர்தான் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவதாகக் கூறி, வரி கட்டுகிறார்கள்.

பஞ்சாப், உத்தரகண்ட் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே பட்ஜெட் அறிக்கை அச்சாகிவிட்டது. நாலைந்து வார பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு ஓர் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரிக்க முடியாது; தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்படுவதாகும் பட்ஜெட்.

பணவீக்க விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன; பணவீக்கம் கட்டுக்குள் வந்தவுடன் வட்டி விகிதங்களும் குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.

====================================================
பணவீக்கத்துக்கு மருந்து

இராம. சீனுவாசன்

“”அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு”. அப்படித்தான் பணமும்.

ஒரு நாட்டில் ஓரளவுக்கு பணவீக்கம் இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர்களின் லாபம் உயர்ந்து பொருள்கள் உற்பத்தியும் பெருகும். பணவீக்கம் கட்டுங்கடங்காமல் உயரும்போது, பணத்தின் மதிப்பு குறைந்து பொருளாதார உற்பத்தியும் பாதிப்படைகிறது. எனவே, அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்பது அடிப்படை பொருளாதாரக் கோட்பாடு ஆகும்.

இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 2007-ல் ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 2007 – 08ல் 5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டது. இதற்கு ஏதுவாக பண அளிப்பின் அளவு 15 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இதற்கு மாறாக டிசம்பர் 2006 முதல் பணவீக்கம் 5.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது 6.73 சதவீதம் என்ற அளவை பிப்ரவரி 3, 2007 அன்று எட்டியது. உயர்ந்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.

பணவீக்கம் என்பது நாட்டின் பொது விலை மட்டம் உயரும் விகிதம். இது நாட்டில் எல்லாப் பொருள்களின் விலைகளும் சராசரியாக எவ்வளவு சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் பணவீக்கம் ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு, முந்தைய ஆண்டில் அதே வாரத்தில் நிலவிய பணவீக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது.

பணவீக்கத்தின் காரணம் மக்களிடம் உள்ள அதிக பண இருப்பினால், அவர்களின் தேவையும் உயர்ந்து விலைவாசி உயர்வையும் தூண்டுகிறது என்றும், மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி பெருகாமல் இருப்பது பணவீக்கத்தின் காரணம் என்று இரு வேறு காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

அதிக அளவு பண அளிப்பும், தேவையை விட குறைவான உற்பத்தி அளவும் ஆகிய இரண்டு காரணங்களும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதுபோல ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

“ரெப்போ’ என்பது, வங்கிகள் போதிய பணம் இல்லாதபோது, தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை வைத்து ஒரு சில நாள்களுக்குக் கடன் தொகை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் “ரெப்போ ரேட்’ என்று குறிப்பிடப்படும்.

“”ரெப்போ ரேட்” உயரும்போது, வங்கிகள் தாங்கள் கடன் பெறுவதைக் குறைத்து, கடன் கொடுப்பதையும் குறைக்கும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டி வீதம் “ரெப்போ ரேட்டை’விட அதிகமாக இருக்கும்.

“ரிவர்ஸ் ரெப்போ’ என்பது, வங்கிகள் அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் ஒரு சில நாள்களுக்கு வைப்புத் தொகையாகக் கொடுத்து அதற்கான வட்டியைப் பெறும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி வீதத்துக்குக் குறைவான வட்டியில் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை.

பண இருப்பு விகிதம்: வங்கி பெறும் வைப்புத் தொகையின் ஒரு பகுதி பணமாக ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட வேண்டும். பண இருப்பு விகித அளவை அதிகப்படுத்தும்போது, வங்கியினால் கொடுக்கப்படும் கடன் அளவு குறைந்து பண அளிப்பும் குறையும்.

பணவீக்கத்தைக் குறைக்க “ரெப்போ ரேட்’ பண இருப்பு விகிதம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மேலும் வங்கிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குக் கடன் கொடுப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய கட்டளைகளையும் பிறப்பித்தது. இதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், இந்த ஆண்டு தொடக்கம் வரை நாட்டின் மொத்த பண அளிப்பு எதிர்பார்த்த 15 சதவீதத்தைக் கடந்து 20 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவும் 31 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

எனவே ரிசர்வ் வங்கியின் பார்வையில் பொருளாதாரத்தில் பண அளிப்பு உயர்ந்தது பண வீக்கத்துக்கான மிக முக்கியக் காரணம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்து வந்துள்ள இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் உண்மை வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன்மூலம் மக்கள் கடன் பெறும் அளவும் குறைந்து மொத்த பண அளிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் உடனடியாக பண அளிப்பைக் குறைக்காது என்று ஒருசில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேநேரத்தில் வேறு பலர் தற்போது நிலவி வரும் பணவீக்கத்துக்கு அதிக அளவில் பண அளிப்பு மட்டுமே காரணம் அல்ல, அதைவிட மிக முக்கியமான காரணம் போதுமான அளவிற்கு உற்பத்தி உயராமல் இருப்பதும் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பொருளாதாரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், உற்பத்தித் திறனை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

பணவீக்கத்தின் மிக முக்கியக் காரணம் பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் உற்பத்தி அளவு இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயப் பொருள்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவது, பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் அளிப்பு உயர்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றது என்பது ஒருசாராரின் கருத்து.

இதை ஒப்புக்கொள்வதுபோல, உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, இறக்குமதியை ஊக்கப்படுத்துவது, உணவுப் பொருள்கள் ஊக வாணிபங்களை நிறுத்துவது, எல்லா பொருள்களின் உற்பத்திக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது, சிமெண்ட், அலுமினியம் மீதுள்ள சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஏனெனில் பொருள் உற்பத்தி மற்றும் அளிப்பினை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பாக விவசாயப் பொருள்களின் அளவை உயர்த்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே, பணவீக்கத்தைக் குறைப்பது ஒரு மிக நீண்ட கால முயற்சியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

நாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை 1991 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கத்தோடு பல கொள்கை முடிவுகள், குறிப்பாக வரி, தொழில் துறை மற்றும் வியாபாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதாரச் சீரமைப்பில் விவசாயத் துறை பங்கெடுக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.

எனவே, வருகின்ற காலங்களில் விவசாயத் துறையை சீரமைத்து விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பொருள்களின் தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தியை உயர்த்தவும், அதேநேரத்தில் இறக்குமதியை உயர்த்தி மொத்த அளிப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

உள்நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமெனில், முதலீடுகள் உயர வேண்டும். இதற்கு வட்டி விகிதம் குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இது வருகின்ற காலங்களில் புதிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கும்.

ரிசர்வ் வங்கி பண அளிப்பினைக் குறைக்க வேண்டுமெனில், மற்ற நாடுகளின் செலாவணியுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர வேண்டும். இதனால் இந்தியாவில் அந்நிய நாட்டுப் பொருள்களின் விலை குறைந்து, இறக்குமதி உயரும். இதனால், ரிசர்வ் வங்கியினுடைய பண அளிப்பும் குறையும். இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உண்மை வட்டி விகிதம் குறைந்து, முதலீடுகள் உயர்ந்து, பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, பொருள் உற்பத்தியை உயர்த்துவது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்கும்.

(கட்டுரையாளர்: முழு நேர உறுப்பினர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு).


தனியார் போட்டி அதிகரித்துள்ள நிலையில் தபால் துறை, வானொலி, தூர்தர்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைப்பு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, மார்ச் 6: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தபால் துறை, செய்தி ஒலிபரப்பு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

2007-08-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இதில் அரசின் அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டன.

தபால் துறை: இதன்படி, தயாநிதி மாறன் அமைச்சராக உள்ள தபால் துறைக்கு ரூ. 315 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட ரூ. 104 கோடி குறைவாகும்.

மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளதும், தனியார் போட்டிக்கு இடையே நிதி பற்றாகுறையால் தத்தளிக்கும் துறையாகவும் உள்ள தபால் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல தபால் அலுவலகங்கள் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடங்களிலும், பழைய தாற்காலிக கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

இத் துறையில் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தபால் அலுவலகங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்று சொந்த கட்டடம் கட்டப்படுகிறது.

இன்னும் பல அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில் இத் துறைக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது இத் துறை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தெரிவித்தனர்.

கூரியர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ்கள் என தனியார்துறையின் போட்டியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. போட்டியில் தனியார் துறையினர் முந்திச் செல்ல மறைமுகமாக உதவுவதாக அமையும் என்று ஊழியர் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

வானொலி, தூர்தர்ஷன்: தபால் துறைக்கு அடுத்தபடியாக தனியாரின் போட்டியைச் சமாளிக்க வேண்டியுள்ள துறையான அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது செய்தி ஒலிபரப்புத் துறையாகும்.

இத் துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ. 63 கோடி குறைவாகும்.

இத் துறையில் ஏற்கெனவே பல பிரிவுகள் நிதி பற்றாக் குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது இத் துறையை ஒட்டு மொத்தமாக மூட வழிவகுப்பதாக அமையும் என இத் துறையில் உள்ள ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமான போக்குவரத்து துறைக்கு அதிக நிதி: சாதாரண மக்களுடன் அதிக தொடர்புள்ள துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ள மத்திய நிதி அமைச்சர், விமான போக்குவரத்து துறைக்கு ரூ. 12 ஆயிரத்து 347 கோடியை ஒதுக்கியுள்ளார். இது இத் துறைக்கு கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ. 9 ஆயிரத்து 300 கோடி அதிகமாகும்.

காலம் கடந்து விடவில்லை: பட்ஜெட் நிறைவேறுவதற்கு முன்னர் அல்லது திருத்திய மதிப்பீடுகள் அடிப்படையில் அரசு நினைத்தால் தபால்துறை, வானொலி, தூர்தர்ஷன் உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.


வருமான வரி

என்.வி. பாலாஜி (nvbalaji@karra.in)

வருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (முதல் பகுதி)

இந்திய வருமான வரி சட்டத்தில் ஐந்து வகை வருமானங்களில் அதிக பிரிவுகளைக் கொண்டது வணிகம் மற்றும் தொழிலிலிருந்து பெறும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே ஆகும்.

ஒருவர் வணிகத்திலிருந்து ஈட்டும் லாபம் மற்றும் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு இந்த பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

வரையறுக்கப்பட்ட செலவுகளை, தொழில்.வணிகத்திலிருந்து ஈட்டும் வருமானத்திலிருந்து கழித்து வரும் தொகை வரிக்கு உட்படுத்த வேண்டிய லாபமாகும்.

இன்று வருமானத்தைப் பற்றி அறிவோம்:

கீழ்க்காணும் வருமானங்கள் இந்த தலைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

1. ஒரு வணிகர் தன் வணிகத்தில் பொருட்களை விற்று ஈட்டும் வருமானம்.

2. ஒரு தொழிலாளர் தன் தொழில் மூலம் ஈட்டும் வருமானம்.

3. ஒரு வணிகத்தை, தொழிலை மாற்றியமைக்க பெறும் இழப்பீட்டுத் தொகை.

4. ஒருவருக்கு வியாபாரச் சங்கத்தின் மூலம் வரும் வருமானம்.

5. குறிப்பிட்ட ஏற்றுமதியாளர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏற்றுமதி, இறக்குமதி உரிமத்தை விற்பதின் மூலம் ஈட்டும் வருமானம்.

6. சுங்க வரி மற்றும் கலால் வரி பாக்கி அரசாங்கத்தால் தளர்த்தப்பட்டால் வருமானமாகக் கருதப்படும்.

7. சுங்க வரி மற்றும் கலால் வரி அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டு, பிறகு திருப்பித் தரப்பட்டால் (தங்ச்ன்ய்க்) வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

8. ஒரு கூட்டாளி, தன் கூட்டாண்மையிலிருந்து பெறும் சம்பளம், லாபம், பங்கு, ஊக்கத் தொகை போன்றவை வருமானமாகக் கருதப்படும்.

9. ஏற்றுமதிக்காக அரசாங்கத்திலிருந்து பெரும் ரொக்கச் சலுகை, மற்றும் இதர சலுகைகள், எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.

இந்த வருமானங்களுக்கு எதிராக வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட செலவுகள் பற்றி பிறகு காணலாம்.

வருமானங்கள் மற்றும் லாபங்கள் ஒருவர் தனது கணக்கு புத்தகங்களை சரிவர பராமரித்தால் மட்டுமே கணக்கிடக் கூடும். சிறு தொழிலாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை சரிவர வகுக்க முடியாது. அப்படி உள்ள நிலையில், சிறு தொழிலாளர்கள் தங்களது வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ள நிலையில், தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லாபமாகக் காட்டி, அதற்கு வரி செலுத்தலாம். இது கீழ் வருபவைகளுக்கு பொருந்தும்.

1. கட்டடம் கட்டுபவர் அல்லது கட்டடம் கட்டுவதற்காக ஆட்களை ஏற்பாடு செய்து தருபவர், தனது மொத்த வருமானத்தில் 8% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

2. சில்லறை வியாபாரி, தனது வருமானத்தில் 5% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.

3. ஒரு வருடத்தில் 10-க்கு மேற்படாமல் சரக்கு வாகனங்கள் வைத்து இயக்குபவர், தனது வருமானத்தை கீழ்வருமாறு கணக்கிடலாம்.

– ஒரு கனரக சரக்கு வாகனத்திற்கு மாதம் ரூ.3,500.

– இதர வாகனங்களுக்கு மாதம் ரூ.3,150.

இவை அனைத்தும் வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பிரிவின் கீழ் வரும் நபர், தனது லாபம் இப்படி கணக்கிடுவதை விட குறைவாக இருக்கும் என்று எண்ணினால், அதற்கு தகுந்த புத்தகங்களை சமர்ப்பித்து, குறைந்த லாபத்திற்கு வரி செலுத்தலாம்.


Posted in 2007, 2007-08, Accounting, Agriculture, Allocation, Analysis, Assets, Budget, Chidambaram, Commerce, Communist, Congress, CPI, CPI(M), Deflation, Department, Details, Economy, Education, Expenditure, Finance, Government, Gurumoorthy, Gurumurthy, Healthcare, India, Inflation, Information, infrastructure, Mail, markets, Marxist, Minister, P Chidambaram, P Chidhambaram, Pa Chidambaram, Perspectives, Postal, Private, Projects, Public, Radio, Recession, revenue, S Gurumoorthy, S Gurumurthy, Sector, Shares, Statement, Stocks, Tax, TV | 1 Comment »

Indian Budget 2007-08 : Preview analysis – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

பட்ஜெட் பற்றிய குறிப்புகள்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

மத்திய அரசின் பொது பட்ஜெட் பிப்ரவரி 28 அன்றும், தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதத்திலும் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த காலங்களில் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 28 ஆம் தேதி பிற்பகலில்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காலையிலேயே தாக்கல் செய்யப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையை நிதிநிலை அறிக்கைக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்பின் நிதிநிலை அறிக்கையில் எடுக்கப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். அதில்தான் மக்களின் வரிப்பணம் முறையாகச் செலவிடப்பட்டதா என்பது குறித்து அறியப்படும்.

நிதிநிலை அறிக்கையைப் பற்றி சில குறிப்புகள்: நமது அரசியலமைப்பில் எந்த இடத்திலும் “பட்ஜெட்’ என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லை. முன்னொரு காலத்தில் இங்கிலாந்தின் நிதி அமைச்சர், ஆண்டு நிதிச் செயற்குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துக் கொண்டு மக்களவைக்கு சென்றார். அத்தோல் பைக்கு “பட்ஜெட்’ என்று பெயர். அந்தப் பைக்கு உரிய பெயர், நாளடைவில் அதன் உள்ளே இருந்த ஆவணங்களுக்கு ஆகுபெயராகியது. இந்திய அரசியலமைப்பில் இதற்கு “ஆண்டு நிதிநிலை அறிக்கை’ என்னும் பெயரே வழங்கப்படுகிறது.

நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும்போது, அடுத்துவரும் ஆண்டில் கிடைக்கக்கூடிய வரவுகளையும், செலவுகளையும் துல்லியமாக மதிப்பிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தகால செலவினங்களையும் வருங்காலத்தில் எதிர்பார்க்கக்கூடிய செலவு மதிப்பீடுகளையும் கருத்தில்கொண்டு இம் மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன.

நிதிநிலை அறிக்கையில், அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – செலவினங்கள் என்பதில் கூறப்பட்டுள்ள மொத்தச் செலவை, அறிக்கை – ஐ – வருவாய்க் கணக்கு – வரவினங்கள் என்று கூறப்பட்டுள்ள வருவாயிலிருந்து கழித்தால் வருவாய் உபரி கிடைக்கிறது. இதனைக் கொண்டு அந்த ஆண்டுக்கான மூலதனச் செலவுகள் செய்யப்படுகின்றன. எனினும், சமீப காலங்களில் வழக்கமாக, வருவாயைவிட செலவு அதிகமாக இருந்து வருகிறது. இது வருவாய்ப் பற்றாக்குறை என்ற அடிப்படையில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நிலைநிதிக்குழு – அமைச்சரவை ஒப்புதல்: இந்தப் பகுதி – ஐஐ செயற்குறிப்புகள், சம்பந்தப்பட்ட துறைகளால் தயாரிக்கப்பட்டு, திட்டக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன. திட்டக்குழு, திட்டமிடல் வளர்ச்சியின் ஒட்டுமொத்த நோக்கங்களைக் கருத்தில்கொண்டு, உயர் முன்னுரிமை வாய்ந்த திட்டங்களை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்கிறது.

இக்குழு, ஒவ்வொரு திட்டத்தையும் கவனமாக ஆய்வு செய்கிறது. துறைகளின் ஒவ்வொரு திட்டத்தையும், துறைகளுக்கு இடையேயான ஒவ்வொரு திட்டத்தையும் முன்னுரிமைகளையும் நிதி ஆதாரங்களையும் கருத்தில்கொள்கிறது.

இறுதியாக புதிய திட்டங்களின் பட்டியலைத் தயாரிக்கிறது. பகுதி – ஐ, பகுதி – ஐஐ மதிப்பீடுகளைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டு முடிவாக உருப்பெரும் இறுதி வடிவம், பொதுவாக, மத்திய திட்டக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்ட அளவுக்கேற்பவும், அக்குழுவின் பரிந்துரைகளின்படியும் அமைகிறது.

நிதி ஒதுக்கீடு: இந்த வரவு – செலவுத் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏற்பளித்தவுடன் அதில் விவரிக்கப்பட்டுள்ள செலவுகளைச் செய்ய அரசு அனுமதியளிக்கிறது. இதுவே “நிதி ஒதுக்கீடு’ என்று அழைக்கப்படுகிறது.

வரவு – செலவுத் திட்ட முன் மதிப்பீடுகள்: வரப்போகும் ஆண்டில் பல்வகை ஆதாரங்களிலிருந்தும் அரசுக்குக் கிடைக்கக்கூடிய வரவுகளை மதிப்பிடுதல்.

இந்தப் பணத்தையும் முந்தைய ஆண்டின் கையிருப்பையும் ஒருங்கு சேர்த்தால் எதிர்பார்க்கப்படும் எல்லாச் செலவுகளையும் ஈடுகட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்து மதிப்பிடுதல்.

வரவையும் செலவையும் ஈடுகட்ட வரி விதிப்பை எந்த அளவுக்குக் கூட்டுவது அல்லது குறைப்பது என்பதை முடிவு செய்தல் ஆகியவையாகும்.

“தொகு நிதி’ – Consolidated Fund என்பது வரவு – செலவுத் திட்ட அறிக்கை – ஐ -) வருவாய்க் கணக்கு வரவினங்கள் என்பதில் காட்டப்பட்டுள்ளபடி, ஓர் ஆண்டில் கிடைக்கும் அரசின் இயல்பான வருமானம், தொகு நிதியின் ஒரு பகுதியாக அமைகிறது.

“சாட்டிய செலவுகள்’ (Charged Expenditure) என்பவை தொகு நிதியில் முதல் பொறுப்பாக உள்ள செலவுகள் ஆகும். இவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை.

“எதிர்பாராத செலவு நிதி’ (Contingency Fund) என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் முன்னர் நிர்வாகத்தினரின் அவசரச் செலவுகளுக்கு வகை செய்வதாகும்.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பற்றிய பல சுவையான விவரங்கள்:

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதாவது நாலைந்து மாதங்களுக்கு முன்பே மத்திய நிதியமைச்சகம் இப்பணியைத் தொடங்கி விடுகிறது. நிதியமைச்சகத்தின் செயலாளர் பொருளாதார நிபுணர்களுடனும், நிதி ஆலோசகர்களுடனும், தொழிற்சங்கத் தலைவர்களுடனும் இதர பல தரப்பினருடனும் இதுகுறித்து ஆலோசிக்கிறார். பின் நிதித்துறை ஒவ்வோர் அமைச்சகத்தின் செலவு குறித்து அறிக்கையைப் பெறும். இறுதியாகக் கணினி மூலம் தயாரிக்கப்பட்டு நகல் அறிக்கை “தேசிய தகவல் மையத்திற்கு’ அனுப்பப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு மிகவும் ரகசியமாக நடக்கிறது. அதைத் தயாரிக்கும் நிதித்துறை அலுவலகத்துக்குள் எவரும் எளிதில் செல்ல முடியாது.

பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். அங்கு நூறு பேர் பணியில் இருப்பார்கள். துணைச் செயலாளர்கள், அச்சடிப்போர், பிழை திருத்துவோர், பைண்டிங் செய்பவர்கள், உதவியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பர். இவர்கள் தங்கும் இடத்தில் படுக்கை வசதி, மருத்துவ வசதி, தொலைக்காட்சி என வசதிகள் செய்து தரப்படும். அங்கு பூட்டிய தொலைபேசி மட்டும் இருக்கும். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டும்தான் அதைப் பயன்படுத்த முடியும். இவர்களுக்குத் தேவையான உணவு நிதி அமைச்சக உணவு விடுதியிலிருந்து தயார் செய்து பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பி வைக்கப்படும். இப்பணியில் ஏழு நாள்கள் ஈடுபட்டு இருப்போருக்கு பரிசுகளும், மூன்று மடங்கு ஊதியம் உயர்த்தியும் தரப்படும்.

பட்ஜெட் பிரதிகள் மொத்தம் 12,500 அச்சடிக்கப்படும். அந்த அச்சகத்திற்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்பும் உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி நிதிநிலை அறிக்கையின் விவரங்களோ நிதிநிலை அறிக்கையோ வெளியே தெரிந்தால் அரசு வெளியேற வேண்டும் என்ற மரபும் நடைமுறையில் உள்ளது. தேர்வெழுதும் மாணவரின் கேள்வித்தாள் போன்று பட்ஜெட் ரகசியம் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய “சிதம்பர’ ரகசியமே.

தற்போது வெளியிடப்படவுள்ள மத்திய பட்ஜெட் நாட்டின் 61-வது பட்ஜெட் ஆகும். சுதந்திர இந்தியாவின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தை வழங்கியது ஆர்.கே. சண்முகம் செட்டியார் என்ற தமிழர்தான். மத்திய நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் 5-வது தமிழர் ப.சிதம்பரம். இதற்கு முன் ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி .டி . கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம் மற்றும் ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டைத் தயாரித்து வழங்கியுள்ளனர்.

எட்டு முறை பட்ஜெட்டுகளையும், இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளையும் தயாரித்து வழங்கிய மொரார்ஜி தேசாயின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

எனினும், 1951 – 52ஆம் ஆண்டிலிருந்து 1956 – 57 வரை மொத்தம் ஏழு பட்ஜெட்டுகளை (ஆறு முழுமையானவை, ஒரு இடைக்கால பட்ஜெட்) தொடர்ந்து வழங்கி சாதனை புரிந்துள்ளார் சி.டி . தேஷ்முக்.

நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோன் உயரும். அதுபோல் மக்கள் வளர்ந்தால் நாடு வளரும் என்ற அடிப்படைக்கு ஆதாரம் ஜனநாயகத்தில் ஆட்சியாளரின் வரவு – செலவுத் திட்டங்கள் ஆகும்.

இந்த வரவு – செலவுத் திட்டங்கள் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் மக்களின் உணர்வுகள் என்ற அடிப்படையில் சிந்தித்து தங்களுடைய கடமைகளை ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர், தலைமைக் கழக செயலாளர்}மறுமலர்ச்சி திமுக).

Posted in 2007, 2007-08, Analysis, Backgrounder, Budget, Cabinet, Chidambaram, Chidhambaram, Commerce, Consolidated Fund, Details, Economy, Finance, India, Indian, P Chithambaram, Predictions, Preview, revenue, Tax | Leave a Comment »

Reliance Fresh – Impact, Job growth, Details, Statistics, Benefits & Information

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 25, 2007

தமிழக சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி முதலீடு: ரிலையன்ஸ் திட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, பிப். 25: தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தங்களது சில்லறை வர்த்தகத்தின் மூலம் 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மேலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்க அந்நிறுவனம் உத்தேசித்துள்ளது.

விவசாயிகள், சிறு வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் பலன் பெறும் வகையில் தங்களது சில்லறை வர்த்தகம் நடைபெறும் என அந்நிறுவன வட்டாரங்கள் உறுதி கூறின.

தற்போது சென்னையில் 12 இடங்களில் “ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ என்கிற பெயரில் காய்கறிகள் -பழங்கள் -அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எந்தெந்த இடங்களில்…:

  1. அண்ணா நகரில்
  2. 2 இடங்களிலும்,
  3. முகப்பேர்,
  4. புரசைவாக்கம்,
  5. அசோக் நகர்,
  6. தியாகராய நகர்,
  7. திருவான்மியூர்,
  8. அடையாறு
  9. நந்தனம் சேமியர்ஸ் சாலை,
  10. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை,
  11. வளசரவாக்கம்,
  12. சூளைமேடு ஆகிய பகுதிகளில் தலா ஓர் இடத்திலுமாக இந்த 12 நிலையங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையங்களால் சிறு வியாபாரிகள் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறின.

விவசாயிகளுக்கு உதவி: விவசாயிகள் வாழும் பகுதிகளிலேயே ரிலையன்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொள்முதல் மையங்களுக்குக் கொண்டு செல்ல ஆகும் வண்டிச் செலவு, விளைபொருள்களைச் சுத்தப்படுத்தி, பதப்படுத்த ஆகும் செலவு போன்றவை தவிர்க்கப்படும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20 சதவீத லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைத்தரகர்களின் மூலம் விற்கும்போது பல இடங்களில் பணம் உடனடியாக விவசாயிகளுக்குக் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

விவசாயிகள் எந்தெந்த காலகட்டங்களில் எத்தகைய காய்கறிகளைப் பயிரிடலாம்? எத்தகைய விதைகள், இதர இடுபொருள்களைப் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் கிடைக்கும்? மக்கள் அதிகமாக விரும்பும் காய்கறிகள் எவை என்பன போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் ஃரெஷ் அவ்வப்போது தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறது.

நுகர்வோருக்கு நியாய விலை: விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால், அதிக லாபம் வைத்து விற்க வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான விலைக்கு விற்க எங்களால் முடிகிறது என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் உள்ள 12 ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் 761 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களைத் தவிர, கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் 411 பேர் வேலை செய்கின்றனர். புழலில் உள்ள விநியோக மையத்தில் 447 பேரும், 10 இடங்களில் உள்ள சேகரிப்பு மையங்களில் 65 பேரும் பணியாற்றுகின்றனர்.

யாருக்கும் போட்டி இல்லை

சென்னை, பிப். 25: ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை என ரிலையன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

சென்னையில் சுமார் 70 லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த 15 நாள்களில் சராசரியாக நாள்தோறும் 13 ஆயிரம் பேர் தான் எங்களின் 12 கடைகளிலும் பொருள்களை வாங்கி உள்ளனர். இதில் இருந்தே எங்கள் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை. எவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகும் என்றனர் அவர்கள்.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விற்பனை நிலையங்களைப் போலவே ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் ஆங்காங்கே விற்பனையகங்களை நடத்துகின்றன. அந்நிறுவனங்களைப் போலவே, நாங்களும் யாருடைய தொழிலையும் பாதிக்கவில்லை என அவர்கள் கூறினர்.

================================================================
சலுகை விலையில் பொருள்களை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ்-நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ரகசிய உடன்பாடு

சென்னை, மார்ச் 29: நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

ரிலையன்ஸ் நிறுவனம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 40 சதவீதம் சலுகை விலையில், குறைவான விலைக்கு பொருள்களை கொள்முதல் செய்கிறது. இதற்காக, சில நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணிப்போம்.

ரிலையன்ஸ் நிறுவனம் சென்னையில் 14 சில்லறை காய்கறிக் கடைகளைத் திறந்து உள்ளது. மேலும், ஏதாவது கடையைத் திறந்தால் அப்பகுதி வியாபாரிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

மே 5-ல் வணிகர் மாநாடு: மே மாதம் 5-ம் தேதி வணிகர் தின மாநாட்டை சேலத்தில் நடத்துகிறோம்.

ஆன்-லைன் வர்த்தகம், மதிப்புக் கூட்டு வரி ஆகியவை விலைவாசி உயர்வுக்குக் காரணம். எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும். சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய போராட்டங்களை செப்டம்பர் இறுதியில் மேற்கொள்வோம் என்றார் வெள்ளையன்.

Posted in Backgrounder, Benefits, Biz, Business, Buyer, Chennai, Commerce, Competition, Consumer, Details, Economy, Employment, Finance, Fresh, Fruits, Growth, Healthy, Impact, Information, Jobs, Madras, Market, Opportunity, Reliance, Reliance Fresh, Seller, Statistics, Vegetables, Vendors | Leave a Comment »

Vallalar: Saint Ramalinga Swamigal – History, Details & Biosketch

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பன்முக ஞானி வள்ளலார்

ஆ. முருகன்

வாழையடி வாழையாய் வந்த திருக்கூட்ட மரபில் தோன்றியவர் வள்ளலார்.

அவர் ஒருவரே நூலாசிரியராய், அருட்கவிஞராய், உரையாசிரியராய், பதிப்பாசிரியராய், பத்திரிகை ஆசிரியராய், ஞானாசிரியராய், வியாக்கியானகர்த்தராய், சித்த மருத்துவராய், சீர்திருத்தவாதியாய், அருள்ஞானியாய், சன்மார்க்கியாய் எனப் பன்முக ஞானத்தோடு விளங்கியவர்.

வள்ளலார் ஒருவரே பொதுமக்களுக்கு முதன்முறையாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர். சமஸ்கிருதத்தைத் தாய் என்றும் தமிழ்மொழியைத் தந்தை என்றும் கூறியவர்.

வள்ளலார் ஒருவரே தண்ணீரில் முதலில் விளக்கேற்றியவர். வள்ளலார் ஒருவரே தனிமார்க்கத்தை (சமரச சன்மார்க்கம்) முதலில் கண்டவர்.

ஒரு தனிச் சங்கத்தை (சமரச சன்மார்க்க சத்திய சங்கம்) முதலில் கண்டவர்.

ஒரு தனிக்கொடியை (சன்மார்க்கக் கொடி) முதலில் உருவாக்கியவர்.

ஒரு தனி மந்திரத்தைக் கண்டவர்.

ஐந்து உயிர் எழுத்துகளும் முழுமையாக அமையப் பெற்ற மந்திரத்தை முதலில் கண்டவர்.

“அ’ என்ற முதலெழுத்தாலேயே அமையப் பெற்ற முழு மந்திரத்தை முதலில் கண்டவர்.

மதச்சார்பின்றி, அனைவரும் வணங்கத்தக்க ஒளி (ஜோதி) வழிபாட்டை முதலில் தந்தவர்.

திருவள்ளுவர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்தார், தாயுமானவர் என வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபில் தோன்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள்.

கிழக்கே திருப்பாதிரிப்புலியூர், மேற்கே விருத்தாசலம், தெற்கே சிதம்பரம், வடக்கே திருவதிகை ஆகிய தெய்வீக ஊர்களுக்கு நடுநாயகமாய் விளங்கி வரும் பேரூர் “பார்வதிபுரம்’ என்னும் வடலூர் ஆகும். இதுவே சன்மார்க்க பூமியாகவும் திகழ்கிறது.

இத்தகு சிறப்புடைய ஞானபூமியில்தான் அதாவது பார்வதிபுரத்தில்தான் சன்மார்க்கமும், தமிழும் தழைத்தினிதோங்க 1867-இல் வடலூருக்கு (பார்வதிபுரம்) வந்து உறையலானார். அங்கு சன்மார்க்க சங்கம் (1865), தருமச்சாலை (1867), சத்திய ஞானசபை (1872) என்ற நிறுவனங்களை நிறுவினார். இந் நிறுவனங்கள் வாயிலாகச் “சன்மார்க்கம்’ என்னும் நன்மார்க்க நெறியைப் பரப்பினார்.

இறைவனை அடைவதற்கு நான்கு மார்க்கங்கள் உண்டு. அவை தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்பனவாம்.

நான்கு மார்க்கங்களில் முதல் மார்க்கம் தாசமார்க்கம். இம் மார்க்கமே இறைவனை அடைவதற்குரிய முதல்படியாகும். தாசன் என்ற சொல்லுக்கு அடிமை என்பது பொருள். ஆதலின், தாச மார்க்கத்தை அடிமை நெறி, அடிமை வழி, அடிமை மார்க்கம் என்று கூறலாம்.

இம் மார்க்கத்தில் இறைவனே தலைவன். நாம் அவனுக்கு அடிமை. இறைவனை ஆண்டானாகக் கொண்டு, நாம் அவனுக்கு அடிமைப்பட்டு, ஆட்பட்டு, அடிமைத் தொண்டுகளைச் செய்து வழிபடுதலாகும். சுருங்கச் சொல்வதென்றால் தாச மார்க்கம் என்பது தொண்டு மார்க்கமாகும்.

இரண்டாவது மார்க்கம் சற்புத்திர மார்க்கம். இது முதல் மார்க்கமாகிய தாச மார்க்கத்தைவிட உயர்ந்தது. இதில் இறைவனுக்கும், நமக்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும், மகனுக்கும் உள்ள பாச உணர்வாகும்.

இறைவனைத் தந்தையாகவும், தன்னை மகனாகவும் பாவித்தலின் இது சற்புத்திர மார்க்கம் எனப் பெயர் பெற்றது. இம் மார்க்கத்தில் புதிய மலர், தூப தீபங்கள், திருவமுது முதலிய பொருள்களைச் சேகரித்துக் கொடுத்து, இறைவனின் திருப்படையலுக்கு உதவிகரமாய் இருப்பதாகும்.

மூன்றாவது மார்க்கம் சகமார்க்கம். இது முதலிரண்டு மார்க்கங்களைவிட உயர்ந்தது. இதில் நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு இரண்டு நண்பர்களுக்கு உள்ள உயிர் நட்பாகும். அதாவது சகமார்க்கம் என்பது தோழமை நெறி.

இம் மார்க்கத்தில், ஐம்பொறிகளால் உண்டாகும் ஆசைகளை அடக்கி, இறைவனையே ஒருமை உள்ளத்துடன் நாம் தியானித்திருப்பதாகும்.

நான்காவது மார்க்கமே சன்மார்க்கம். இம்மார்க்கம் முந்தைய மூன்று மார்க்கங்களைவிட மிகமிக உயர்ந்ததாகும். சன்மார்க்கம் என்ற சொல்லைச் சத் + மார்க்கம் என்று பிரித்தல் வேண்டும். சத் என்றால் நன்மை; மார்க்கம் என்றால் வழி. அதாவது சன்மார்க்கம் என்பது நல்வழியாகும். இம் மார்க்கத்தால் நாம் இறைவனோடு இரண்டறக் கலக்கும் ஞானத்தைப் பெறலாம்.

தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம் என்ற மூன்று மார்க்கங்களும் “சன்மார்க்கம்’ என்னும் மார்க்கத்தை அடைவதற்குரிய ஞானப்படிகளாகும். சன்மார்க்கம் ஒன்றே முடிவான பரமுத்தியைத் தரக் கூடியது.

வள்ளலார் சன்மார்க்கத்தினர் என்பதனை “”அடியன் ஆக்கி, பிள்ளை ஆக்கி, நேயன் ஆக்கியே, அடிகள் ஆக்கிக் கொண்டாய்’ என்ற அவரது திருவாக்காலேயே நாம் அறிந்து கொள்ளலாம்.

கடவுள் ஒருவரே. அக் கடவுளை உண்மை அன்பால் ஒளி (ஜோதி) வடிவில் வழிபட வேண்டும். ஏழைகளின் பசியைப் போக்க பாடுபட வேண்டும். எவ்வுயிரையும் தம்முயிர்போல் நினைத்து, அவ்வுயிர்களிடத்தில் அன்பு செலுத்தல் வேண்டும்.

தெய்வங்களின் பேரால் உயிர்ப்பலி இடக் கூடாது. புலால் உணவை உண்ணக் கூடாது. சாதி, சமய, இன வேறுபாடு கூடாது. இறந்தவர்களைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது.

கணவர் இறந்தால் மனைவி மங்கலநாணை வாங்குதல் (நீக்குதல்) வேண்டாம். மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம். மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும்.

இறைவனுக்குத் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பொங்கல், புளியோதரை, திருநீறு, சந்தனம், பால், சூடம், சாம்பிராணி, வத்தி முதலியன கொண்டு அர்ச்சனையோ, அபிஷேகமோ செய்தல் கூடாது. இறைவனைத் திருப்பாக்களால் மட்டும், மெல்லென ஆரவாரம் இல்லாமல் துதி செய்தல் வேண்டும். இறைவனுக்கு முன் மேளதாளங்களோ, நாதசுரமோ வாசித்தல் கூடாது.

புராணங்களும், சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா. எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்பன எல்லாம் சன்மார்க்கக் கொள்கைகளாகும்.

இக் கொள்கைகளைப் பின்பற்றி சன்மார்க்கிகள் அனைவரும் நற்பண்புகளுடன் செயல்பட வேண்டும். சன்மார்க்க பூமியாய் விளங்கும் “”வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே’.

(கட்டுரையாளர்: தமிழாசிரியர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, வடலூர்).

——————————————————————————————————————
சமயம் கடப்பதே சன்மார்க்கம்

பெ. சிதம்பரநாதன்

பள்ளி செல்லாமல், பாடப் புத்தகங்களைப் படிக்காமல், தேர்வு எழுதாமல், பட்டமே பெறாத சிந்தனையாளர்கள் – அருளாளர்கள் – மேதைகள் பலர் உண்டு. அவர்கள், ஓதாது உணர்ந்தவர்கள். கருவிலே திரு அமையப் பெற்றவர்கள். இத்தகைய பரம்பரையில் வந்த மெய்ப்பொருள் கண்ட ஞானி வள்ளலார்.

அவர் பெற்றிருந்த அளப்பரிய கவி ஆற்றலால் ஒரு மகா கவியாகப் புகழ் பெற்றிருக்க முடியும். ஆனால், கவிதையை அவர் ஒரு வழித்தடமாகவே கருதி, தனது இறுதி இலட்சியத்தைக் கவிதை வழி தேடிச் சென்றார். அந்தத் தேடல்கள்தான் அருட்பாவாகப் பிரவாகமெடுத்தது.

பல்வேறு மதங்களும் காட்டிய பார்வைக் கோணங்களால், கடவுளைக் காண்பதில் ஒரு கலகச் சூழ்நிலை நிலவியபோது, “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்று, ஒற்றைக் குரலாக இவர் ஓங்கி ஒலித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோர் பலர்; அங்கீகரித்தவர்கள் சிலர்.

மதங்கள் சண்டைகளையே பெருக்கின. ஜாதிகள் மோதல்களைப் பெருக்கின. மதத்தைப் பேய் என்றவர், பக்தி நூல்களை “”சாத்திரக் குப்பை” என்றும் வேதங்களையும் ஆகமங்களையும் “”பொய், பொய்யே” என்றும் சாடினார். ஜாதி வெறியர்களைச் “”சழக்கர்கள்” என்று, ஆதிக்க சாதியத்தை அஞ்சாமல் கண்டித்தார்.

காருணிய வேளாளர் குலத்தில் தோன்றிய அவர் விரும்பியிருந்தால், ஏதோவொரு சைவ ஆதீனத்திற்கு குருமகா சன்னிதானமாகியிருக்க முடியும். இல்லையேல் ஒரு சைவ ஆதீனத்தை இவரே உருவாக்கி இருக்கவும் முடியும்.

அவ்வாறு அவர் சிந்தனை ஓடவில்லை. இவரையும் இவர் குடும்பத்தையும் வறுமை வாட்டியது. அதனால் பள்ளி சென்று படிப்பதற்கான வாய்ப்பை இழந்தார். ஆனால், மாணிக்கவாசகரின் திருவாசகத்தை வழிகாட்டி நூலாகக் கொண்டு, ஏகலைவனைப்போல எங்கோ சென்று அதனைக் கற்று வந்தது எவருக்குமே அன்றைக்குத் தெரியவில்லை.

இளம் வயதிலேயே தன் இதயத்தை உயிர் இரக்கத்தில் ஊற வைத்து ஒவ்வோர் உயிரிலும் பொருளிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதேபோல தன்னிலிருந்து தன்னையும் அந்நியப்படுத்திக் கொண்டார். இந்த அந்நியமும் ஐக்கியமும்தான் “”ஆருயிர்களுக்கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்” என்று அவரைத் தூண்டி வந்தது.

அவர் வாழ்ந்த சமுதாயம் ஏற்றத்தாழ்வுள்ள சமுதாயம். அந்தச் சமுதாய அமைப்பை அவர் சகித்துக் கொள்ளவில்லை. அதைப் பாதுகாக்கும் ஆட்சியைக்கூட “”கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக” என்று கண்டனம் செய்தார்.

“”ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்” என்று தனது புதிய சமுதாயத்திற்கான பூபாளத்தை இசைத்தார்.

உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் எவ்வாறு ஒருமையுளர் ஆக முடியுமென்றால், இந்த இருவேறு பிரிவுகளுக்குமிடையில் ஒரு பாலம் போலப் பணி செய்பவர் இருந்தால்தான் ஒருமையாக முடியும். அவ்வாறு இரு சாராரையும் இணைப்பவர்களைத்தான் “”ஒத்தார்” என்றார்.

அவர்கள் யாரை ஒத்தவர்கள் என்றால், இறைவனை ஒத்தவர்கள். கடவுளின் தூதுவர்கள். நாயன்மார்கள் போல, ஆழ்வார்கள் போல, புத்தர் போல, மகாவீரர் போல, இயேசுபெருமான் போல, நபிகள்நாயகம் போல, குருநானக் போல, சமுதாய வீதிகளில் சரீரம் தாங்கி உலவியவர்கள் அவர்கள் – சகல உயிர்களையும் சமமாக நேசித்தவர்கள். பாலமாக அவர்களை அமைத்து, இருவேறு பிரிவுகளாக உள்ள உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையாக வேண்டும் என்பதே வள்ளலாரின் விண்ணப்பம்.

காந்திஜியின் சீடர் வினோபாஜி இப்படித்தான் ஒரு பாலமாக விளங்கினார். நிலச்சுவான்தார்களிடமிருந்து தானமாகப் பெற்ற பூமிகளை, நிலமில்லாத ஏழைகளுக்கு வழங்கினார். பூமி தானத்தை இயக்கமாக்கினார்.

இந்தியாவில் 24 கோடி மக்கள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பவர்களாக வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். இவர்களைக் கடைத்தேற்ற வேண்டுமானால், சமுதாயத்தில் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

அத்தகைய நடவடிக்கை எடுக்க நாட்டு மக்களைத் தயாரித்தாக வேண்டும். அவ்வாறு தயாரிப்பதற்கு அவர்களுடைய மனங்களில் நல்ல சிந்தனைகளை விதைத்தாக வேண்டும்.

நல்ல சிந்தனைகள் என்பவை எங்கோயிருந்து அசரீரியாக வருவதல்ல. ஒருவர் எதை அனுபவிக்கின்றாரோ அடுத்தவரும் அதை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவதுதான் நல்ல சிந்தனை. “”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுகிற” மனப்போக்கு அவர்களுடைய எண்ணத்தில் அரும்பத் தொடங்கிவிட்டால், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவுவார்கள்.

வள்ளலார் இதனைப் பற்றி நீளச் சிந்தித்துள்ளார். “அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்த…’ என்ற பிரபலமான அருட்பாவில், “”இகத்தே பரத்தைப்’ பெறுதல் என்று அவர் பேசியுள்ளது புரட்சிகரமான சிந்தனை.

பரம் என்பது என்ன? எதிர்பார்த்த எல்லாமே கிடைக்கும் வைகுந்தம், கைலாயம், இந்திரலோகம், சொர்க்கலோகம் ஆகிய லோகங்கள், வானுலகமாக உயரத்திலேயே இன்னும் வலம்வந்து கொண்டிருக்கின்றன. அதுதான் பரம். அத்தகைய “பரம்’ எங்கோ எட்டாத உலகத்தில் இருப்பதாக ஏன் கற்பனை செய்ய வேண்டுமென்கிறார் வள்ளற்பெருமான்.

அந்தப் பரத்தினை இந்த “இகத்தில்’ – இந்த உலகில் – இந்த மண்ணில் உருவாக்க வேண்டும் என்று, முன் ஏர் ஓட்டியவர் வள்ளலார்.

வள்ளலார், சமயச் சடங்குகளைக் கடந்து படிப்படியான பரிணாம வளர்ச்சியில் பரிபூரணத்தை நோக்கிச் சென்றவர். அதனால்தான் சமய சன்மார்க்கத்தைப் பூரணப்படுத்தும் புனிதநோக்கில்தான் சடங்காச்சார சமய சன்மார்க்கத்தை சுத்த சன்மார்க்கமாக்கினார்.

“சுத்தம் என்றால் அரையும் குறையுமாக இருப்பதை முழுமையாகச் செய்வது. பூரணம் அற்றதாக சமய சன்மார்க்கம் இருப்பதாகக் கருதியே, அதைச் சுத்த சன்மார்க்கமாக்கினார்.

தவ நெருப்பில் உடலின் குறைபாடுகளைத் தகனம் செய்தால், இந்தச் சதை உடம்பு காற்றுடம்பாகும்; காற்றுடம்பு பொன் உடம்பாகும்; பொன் உடம்பு ஒளி உடம்பாகும். இதைத்தான் “முத்தேக சித்தி’ என்றார். அந்த முயற்சியில் வள்ளற்பெருமான் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.

உடம்பு வாழ்க்கைக்குப் பிறகு வாழ்க்கையே இல்லையென்று கருதுகிற மக்களுக்கு மத்தியில், முத்தேக சித்தி என்பது, நமது சுயத்தைச் சுடரச் செய்கிற தன்னம்பிக்கைதான் என்கிற புரிதல் நமக்கு அவசியம்.

மரணத்தையும் எதிர்க்க முடியும் என்கிற துணிவை மனதுக்குள் ஊட்டிய ஒரு மார்க்கத்தைக் காட்டியவர் வள்ளலார். ஏனெனில், மரணம் எலும்புக்கும் சதைக்கும் ஏற்படலாம். ஆனால் மனிதன் காற்றாகிவிட்டால், ஒளியாகிவிட்டால், மரணம் எப்படி மனிதனை வெல்ல முடியும் என்று கேட்பதுபோல அமைந்துள்ள புதிய சிந்தனை இது.

சித்தத்தில் பெறுகிற வெற்றிதான் “சித்தி’ என்பது. சித்தி பெறுவது சுத்த சன்மார்க்கம். முக்தி அடைவது சமய சன்மார்க்கம். வள்ளற்பெருமான் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பதால், அவருக்கு சமாதி எங்கும் இல்லை.

ஒரு மனிதனுக்குள் இந்த நம்பிக்கையை நட்டு வளர்த்துவிட்டால், அவநம்பிக்கை அவனுக்குள் அணு அளவும் புகாது. ஊன் உடம்பு இல்லாமலும் உலவ முடியும் என்பது தன்னம்பிக்கை மட்டுமல்ல, ஒரு நன்னம்பிக்கையுமாகும்.

Posted in Arunachala, bhakthi, bhakti, Biography, Biosketch, Details, Guru, Hindu, Hinduism, History, Maharishi, Ramalinga Swamigal, Saint, Sidhar, Vallalaar, Vallalar | 3 Comments »

Dam across Palar will affect farmers: Jayalalithaa

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்- ஜெயலலிதா அறிக்கை

சென்னை, ஜன. 30-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையைக் கட்டப் போவதாகவும், அதற்கான பூமி பூஜையை பிப்ரவரி 1-ந் தேதி அன்று தொடங்கப் போவதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் நெருக்கடியும், பின்னடைவும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவையும் சந்திக்க உள்ளார்கள்.

மேலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கும் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும்.

கர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை, கேரளா மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதில் பிரச்சினை, இப்போது பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதில் ஆந்திராவோடு புதிய பிரச்சினை தொடங்கி இருக்கிறது.

பாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகின்றது. அது கர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது. ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் பாலாறு பாய்கின்ற வழியில், “குப்பம்” என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். அந்த 140 கிலோ மீட்டர் தூரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாகப் பல்வேறு வகையில் விளங்குகிறது.

விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் வசதி ஆகியவைகளை பாலாற் றின் வாயிலாகத்தான் அந்தந்த மாவட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான். அந்த ஆற்றின் அமைப்பின்படி தமிழக நதிகளிலேயே பாலாற் றில்தான் நிலத்தடி நீர் அதிக மாக உள்ளது.

நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுக்கின்றது என்ற தகவல் கிடைத்தவுடனே, அவ்வாறு செய்யக்கூடாது என்று ஆந்திர முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் உடனே அழைத்துப் பல மணி நேரம் பல்வேறு முறை விரிவாக விவாதித்து 2006 பிப்ரவரி மாத இறுதி வாக்கில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அசல் வழக்கு ஒன்றினை தமிழக அரசின் சார்பில் ஆந்திர அரசுக்கு எதிராக தாக்கல் செய்ய வைத்தேன்.

இவ்வழக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கின் கோப்புகள் தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களுக்கு மாற்றப்பட்டது.

தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாலாறு விஷயத்தில் இவர்கள் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாலாறு பிரச் சினை சம்பந்தமாக அமைச் சர் துரைமுருகன் பேசும்போது, “உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று சொல்லி இருந்தார். அதாவது இனிமேல்தான் வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவருக்கு இப்பிரச்சினை சம்பந்தமாக எனது ஆட்சிக் காலத்திலேயே உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள விவரம் கூடத் தெரியவில்லை.

ஆற்காடு வீராசாமி பேசும்போது, “தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜாவிடம் சொல்லி, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியைத் தராமல் தடுத்திடுவோம்” என்றார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜா அனுமதி தராமலா, ஆந்திர அரசு இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான 270 கோடி ரூபா யில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும்ப

மத்திய அரசின் அனு மதியைப் பெறாமல் இத்திட்டத்திற்கு ஆந்திர அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்பது, ஒரு பரமரனுக்குக் கூடத்தெரியும். ஆனால் பல முறை அமைச்சராக இருந்திருக் கின்ற ஆற்காடு வீராசாமிக்கு தெரியாமல் போனதுதான் மிகவும் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் உயிர் நாடிப்பிரச்சினைக்குக் கூட முக்கியத்துவம் தராமல், ஆந்திர மாநிலத்திற்கு சாதகமாக தடுப்பு அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய மந்திரி ராஜா, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

பா.ஜ.க. கூட்டணி மத்திய ஆட்சியில் அ.தி.மு.க. மந்திரிகள் பங்கேற்றபோது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்ய வற்புறுத்திய போது அதற்கு பணிய மறுத்து எனது கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லி, தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று கருதி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டேன்.

ஆந்திர முதல்-அமைச்சராக இருக்கும் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர். எனவே பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதற்கு சோனியாகாந்தி மூலம் மத்திய மந்திரி ராஜாவிடம் அனுமதி பெற சிரமம் ஏதும் அடைய வாய்ப்பில்லை. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜாவும் தமிழக மக்களின் நலனைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி. மாநிலத்திலும் தி.மு.க.வின் ஆட்சி. ஆனால் விவசாய மக்களின், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கோடான கோடி மக்களை பாதிக்கும் விஷயங்களில் தி.மு.க. எந்த உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

3 அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகச் சாதூரியமான, சாணக்ச யத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை. எப்போது தி.மு.க. இந்த விஷயத்தில் வியாபார நோக்கோடு நடந்து கொள்ள ஆரம்பித்ததோ, அப்போதே தமிழகத்தின் நலன் பறிபோய் விட்டது. கருணாநிதி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கப் போகிறாராப என்பதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகின்றார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை: ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் பதில்

சென்னை, ஜன. 31-

பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்டப்போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலார் ஜெயலலிதா அவரது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றில் ஆந்திரஅரசு தடுப்பனை ஒன்று கட்டுகின்ற பிரச்சினை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு தடுப்பு அணை கட்ட முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்தபோதே சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வேலூர் மாவட்டத்திலும் இந்த பிரச்சினை குறித்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன்.

ஏன், வேலூர் மாவட்ட மக்களின் ஆர்ப்பாட்டமே என் தலைமையின் கீழ்தான் நடந்தது. அன்று இந்த பிரச்சினை குறித்து மெத்தனமாக இருந்துவிட்டு உப்புக்கு சப்பாணி என்பது போல பெயருக்கு ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் கொடுத்து விட்டு அதிலும் நமக்கு உள்ள உரிமைகளை எடுத்து வைக்காமல் பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்று திரும்பியும் பார்க்காமல் வீட்டுக்கு போனவர் ஜெயலலிதா.

இந்த பிரச்சினை குறித்து ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு ஓய்வு எடுக்க பல முறை சென்ற ஜெயலலிதா ஆந்திர முதல் மந்திரியிடம் அப்போது ஒரு முறையாவது விவாதித்தது உண்டாப

இல்லை எந்த அமைச்சரை யாவது ஆந்திராவிற்கு அனுப்பியது உண்டா?

ஆனால் கலைஞர் ஆட்சி அமைந்த பின் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் ஐதராபாத் சென்று அந்த மாநில முதல் மந்திரியை சந்தித்து தடுப்பணை விவகாரமாக விவாதித்தது ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மறந்து விட்டதா?

எந்த நடவடிக்கையும் ஆந்திரா அரசு இந்த பிரச்சினையில் எடுக்காது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது குறித்து தமிழகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியபின்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த மாநில முதல் மந்திரி அன்று தமிழக அமைச்சர்களிடம் தெரிவித்து உள்ளார்.

அதையும் மீறி தடுப்பணை கட்ட முயன்றதாக செய்தி வந்ததும் நானே ஆந்திர நீர்பாசன துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்.

தமிழக அரசு பொதுபணி துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையை அறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

ஆந்திர அரசு அப்படியொரு தடுப்பணையை கட்ட அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி அண்டை மாநில உறவு கெடாமல் தீர்வு காண்பதற்கு பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆந்திர அரசு ஜெயலலிதா திராட்சை தோட்டத்தில் கைவைத்து விட்டது என்று செய்தி வந்ததும் அறிக்கை விடுகிறார். பாலாற்றில் தடுப்பு அணை கட்டுகிறது என்றும் அதை தமிழக அரசு தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். உண்மையான விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்வது என் பார்களே அது போன்ற நிலையில் விவாதத்தில் கலந்து கொள்வது ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.

சர்க்காரியா வழக்கை வாபஸ் வாங்குவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசியதாகவும் அதற்காக உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை குறித்து தொடுக்கப் பட்ட வழக்கை வாபஸ் பெற்றோம் என்று தி.மு.க மீது பழிபோட்டு பேரவையில் அறிவித்துவிட்டு உடனடியாக காங்கிரஸ் கட்சி தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் குறுக்கிட்டு அது தவறான தகவல் என்று கூறியதும் நானும் மனுஷி தானே தவறாக பேசி விட்டேன் நாக்கு தவறிவிட்டது என்று சட்டமன்றத்தில் பேசி மன்னிப்பு கேட்டவர்தான் இந்த ஜெயலலிதா. ஒன்று மட்டும் ஜெயலலிதா உணரவேண்டும். இந்த பிரச்சினை ஜெயலலிதாவுக்கு ஒரு அரசியல். ஆனால் எங்கள் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் உயிர் பிரச்சினை, உரிமை பிரச்சினை நாங்கள் இந்த பிரச்சினையில் எப்படி இருப்போம் என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆந்திரத்தில் பாலாற்றில் அணை கட்டும் இடத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

வேலூர், பிப் . 2: ஆந்திர மாநிலம், குப்பம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படவுள்ள பகுதியில் வியாழக்கிழமை பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூரிலிருந்து 15 கார்களில் குப்பம் கிராமத்திற்கு வந்த பாமக-வினர் 120 பேர், அணை கட்டும் மலைப்பகுதிக்கு கண்டன கோஷமிட்டபடி ஊர்வலம் போலச் சென்றனர். அணை கட்டப்படவுள்ள பகுதியில் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

பாமகவினர் வருகையை தெரிந்துகொண்ட சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராம ரெட்டி காவல்துறை அதிகாரிகளுடன் வந்து, பாமகவினரிடம் கடுமையாக வாதிட்டார்.

இப்பகுதியில் மிகமோசமான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அதற்காக அணை கட்டியே ஆகவேண்டும். நீங்கள் தமிழக அரசியல் காரணங்களுக்காக இங்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். ஆந்திர மாநில காவல்துறை அனுமதியின்றி, தகவலும் தெரிவிக்காமல் வந்திருக்கிறீர்கள் என்று வாதிட்டு, வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஜி.கே.மணி, இந்தப் பிரச்சினை தமிழகத்தில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் என்பதால் நாங்கள் அக்கறையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று அவரிடம் கூறினார்.

ஜெயராம ரெட்டியுடன் வந்தவர்கள், பாமகவினர் அப்பகுதியில் உள்ள மரங்களிலும், பாறைகளிலும் கட்டி வைத்திருந்த கொடிகளை எடுத்துக் கீழேபோட்டனர். ஆந்திர மாநில காவல்துறையினர் தலையிட்டு, பிரச்சினை பெரிதாகாமல் தடுத்தனர். பாமகவினருக்குப் பாதுகாப்பாக தமிழக எல்லை வரை வந்தனர்.

இதுகுறித்து ஜி.கே மணி கூறியது:

ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ.க்குள் 12 தடுப்பணைகளை ஏற்கெனவே உள்ளன. தற்போது குப்பம் பகுதியில் 110 மீட்டர் உயரத்தில் தடுப்பணையை கட்ட ஆந்திர அரசு கட்டவுள்ளது. வியாழக்கிழமை எளிய முறையில் அடிக்கல் நாட்டவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேரடியாக சந்தித்து, பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்து, திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் பாமகவின் நோக்கம்.

நாங்கள் அணை கட்டவுள்ள பகுதியை வியாழக்கிழமை காலை பார்வையிட்ட போது, பாலாற்றின் குறுக்கே, அணை கட்டும் இடத்துக்குச் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு, பாறைகளில் பல இடங்களில் துளை இடப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆந்திர அரசு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் சொல்வது பழைய செய்தி என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எல். இளவழகன் (ஆர்க்காடு), டி.கே.ராஜா (திருப்பத்தூர்), மாநில துணைத் தலைவர் எம்.கே. முரளி, மாநில மகளிரணி தலைவி நிர்மலா ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், வேலூர் மாவட்ட பொருளாளர் கவிதா கோவிந்தன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.

பாலாற்றில் அணை: குப்பம் பகுதிக்குள் தமிழர்கள் நுழைந்தால் கைது செய்வோம்- ஆந்திர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

பள்ளிப்பட்டு, பிப். 2-

வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தின் 5 வட மாவட்டங்களில் பாலாறு ஓடுகிறது. இந்த ஆறு ஆந்திராவில் இருந்து வருவதால், அவர்கள் தண்ணீர் திறந்து விட்டால்தான் பாலாற்றில் தண்ணீர் வரும். ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ. தூரத்தில் மட்டும் 12 தடுப் பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது குப்பம் அடுத்துள்ள கணேசபுரத்தில் 110 மீட்டர் உயரத்தில் பெரிய அளவில் அணை ஒன்றை கட்ட உள்ளது. இந்த அணை கட்டினால் தமிழக பகுதியில் ஓடும் பாலாறு வறண்டு விடும் அபாயம் உள்ளது.

வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூரில் 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பாலாற்றில் அணை கட்டும் பகுதிக்குள் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராமரெட்டி தலைமையில் ஆந்திர விவசாயிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

பாலாற்று பகுதியில் உள்ள மரங்களில் பா.ம.க. வினர் தங்கள் கட்சிக் கொடிகளையும், “பாலாற்றில் அணை கட்டாதே” என்ற எதிர்ப்பு வாசகங்களையும் கட்டினார்கள். இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆந்திர விவசாயிகள் பா.ம.க.வினர் கட்டிய எதிர்ப்பு வாசகங்களை ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தனர். கட்சி கொடிகளை சரமாரியாக கிழித்துப் போட்டனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆந்திர உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜி.கே.மணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, “நாங்கள் இங்கு 110 மீட்டர் உயரத்தில் பெரிய அணை ஒன்றை கட்டியே தீருவோம்” என்றனர்.

பாலாற்றில் அணை கட்டும் பகுதி பதட்டமாக இருப்பதால் அங்கு ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்ட உள்ள குப்பம் தொகுதிக்குள் தமிழர்கள் யாராவது சித்தூர் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் நுழைந்தால் உடனே கைது செய்வோம்.

கணேசபுரம் பகுதியில் தமிழர்கள் கூட்டமாக வந்தால் விரட்டி அடிப்போம் வீணாக இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. தமிழர்கள் பாலாற்று பகுதிக்குள் நுழைந்ததால் ஆந்திர விவசாயிகள் கொதிப் படைந்துள்ளனர். இதனால் நாங்கள் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யவும் ஆந்திர போலீசார் அறிவு றுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. குப்பம் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டது.

தற்போது அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்டும் பணியை தொடங்கி விடுவோம். எங்களுக்கு மாநில மக்களின் நலன்தான் முக்கியம். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் இனியும் இந்த அணை கட்டும் திட்டத்தை தாமதப்படுத்த மாட்டோம்” என்றார்.

பாழாகும் பாலாறு

இராதாகிருஷ்ணன்

பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்பல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென்பகுதியில் தோன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது.

தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

காவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில் திருத்தணி கையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று, தற்போது சென்னைக்கு வடகிழக்கில், எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப் பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இந்த சிற்றாறு சதுரங்கபட்டணம் அருகில் கடலில் சேர்கிறது. தமிழகத்தில் 140 கி.மீ. ஓடுகிறது.

கலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான், காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும்போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில் அவன் கடந்த முதல் ஆறு “பாலாறு’ என்று காட்டப்படுவதால், காஞ்சிக்கு வடக்கில் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய சான்றுகள் மூலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்து இருக்குமெனத் தெரிகிறது.

ஆனால் இன்று பாலாறு, சென்னைக்குத் தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் வேலையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது.

800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு, மனிதர் மனத்தால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஓர் ஆறு இருந்தது என்று ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனும் எழுதத் தூண்டலாம். இந்தத் துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சினையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

ஆந்திர அரசு, தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11 ஆயிரம் கி.மீ பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதிகளைப் பெறுகின்றன.

ராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பல சமயங்களில் தேவையான தண்ணீர் கூட வருவது இல்லை.

ஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன.

1850ல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையைக் கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரைக் கொண்டு சென்றனர். நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு 1855-ல் ஒரு நிலையான அணையைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855ல் கட்டப்பட்ட அணை 1874ல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது. 1877ன் இறுதியில் வறட்சிப் பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1920-ல் மைசூர் அரசாங்கம் திடீரென (சென்னை மாகாண – மைசூர் அரசாங்க) ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகளை உருவாக்கி பாலாற்று நீரைத் தடுத்து விட்டது.

இப் பிரச்சினை குறித்து சென்னை மாகாணக் கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட நீரைத் தடுத்து விட்டது என்று குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்ததும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு உள்ளாக்கி விட்டது.

1802ல் சென்னை மாகாணம் – மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளையோ நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது. இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு தொடக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.

1954-ல் வடஆற்காடு – செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்து தீர்மானத்தில் “”100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினையில் தீர்க்க வேண்டுமென்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தினர்”.

தென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கின்து. இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ. 250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் கணேசபுரம் அணை கட்ட பணிகளைத் துவக்கி விட்டனர்.

இந்த அணையின் மூலமாக ஆந்திரப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன் பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு பாலாறு மூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழைநீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருவது அதிருப்தி அளிக்கிறது.

(கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்).

பாலாறு விவகாரம்: கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் உறுதி

சென்னை, பிப். 5: தமிழக அரசைக் கலந்து பேசாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்க மாட்டோம் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில், குப்பம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை ஒன்றைக் கட்ட, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக வரும் செய்தி குறித்து தமிழக முதல்வர் பிப்ரவரி 1-ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை ஆந்திர முதல்வருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசினார். அப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எடுத்துவரும் முயற்சி குறித்து பேசினார்.

அப்போது, “”ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹைதராபாதுக்கு வந்து சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த உறுதி மொழி காப்பாற்றப்படும்.

அவர்களிடம், கூறியபடி, தமிழக அரசை கலந்து பேசாமல் தடுப்பணை கட்டும் விஷயத்தில் ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு பாதிக்கின்ற வகையில் ஆந்திர அரசு ஈடுபடாது.

இந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து விவரங்களையும் தனது நேரடி கவனத்திற்குக் கொண்டு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார். அத்துடன் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டு தினங்களில் விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பவிருப்பதாகவும் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


பாலாற்றில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

09 ஏப்ரல், 2007

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டினால், அதை சட்ட ரீதியாக எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆந்திர அரசு, தமிழக எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டம் குப்பம் என்கிற இடத்திற்கு அருகே பாலாற்றின் குறுக்கே அணைக் கட்ட போவதாகவும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆந்திர அரசு இந்த அணையை கட்டினால், தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப் படும். என்றும் கவலை தெரிவித்தனர்.

தமிழக அமைச்சர் துரைமுருகன்
தமிழக அமைச்சர் துரைமுருகன்

இதற்கு பதிலளித்துபேசிய துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு மிகவும் அக்கறையுடன் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆந்திரா சென்று அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசியதாகவும், அப்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஆந்திர முதல்வர் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

நேற்று முன்தினம் இந்திய தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுவதாக வெளியான செய்திகள் பற்றி தாம் கேட்ட போது, அடிக்கல் நாட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் முழு விவரம் தெரிந்ததும் தம்மிடம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் தம்மிடம் தெரிவித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்திவருவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை, திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் 17 பேர் பலியான வெடிவிபத்து பற்றி விசாரிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையருமான எம்.எப்.பாரூக்கி, விபத்துக்குள்ளான ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பது குறித்தும் விசாரிப்பார் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக இன்று பேசிய எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த சம்பவத்திற்கு காரணமான வெடிமருந்து எம்மாதிரியான வெடிமருந்து என்பதையும் பாரூக்கி ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, தமது அரசு இந்த விடயத்தில் எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், இந்த வெடிவிபத்துக்கு காரணமான வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பதையும் பரூக்கி விசாரிப்பார் என்றும் அறிவித்தார்.

 

——————————————————————————————————
மெல்லச் சாகிறது பாலாறு

எம். மதனகோபால்

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – பாலாறு.

இந்த ஒரு நதியை நம்பி விவசாயமும் குடிநீர் வழங்கலும் தொழிலும் தடையின்றி நடைபெற்ற காலம் மறைந்து, இன்று தோல் தொழிலுக்கு மட்டுமே பாலாறு என்ற நிலைமையே மேலோங்கி இருக்கிறது.

மழைக்காலத்தில் பாலாற்றின் வெள்ளப் பெருக்கு தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை நிரப்புவதாலும், நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இதுவரை பிரச்னை இல்லாமல் இருந்துவந்தது.

தற்போது ஆந்திர அரசு தமிழகத்தின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ளதால், தமிழகத்துக்கு கிடைத்துவரும் தண்ணீரில் ஆண்டுக்கு 450 மில்லியன் கனஅடி தண்ணீர் குறையும்.

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் இருக்க, குடிநீருக்கும் தட்டுப்பாடு உண்டாகும் என்பது நிச்சயம். தமிழகத்தில் தண்ணீர் வருவது கட்டுப்படுத்தப்படுவதால் ஏரி குளங்களுக்கு நீர் கிடைப்பது அரிது.

படிப்படியாக மூன்று மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலைமை நிச்சயம் ஏற்படும். இதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

பாலாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் ஊறி பல மாதங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்த நிலைக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாலாற்றின் படுகையில் மணல் வரம்புமீறி அள்ளப்படுவதுதான்.

ஆனால் பாலாற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கிறார்கள். இதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தகராறும், லாரிகள் மறிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மணல் கொள்ளை நின்றபாடில்லை.

மிக நீண்ட தொலைவுக்கு வெள்ளை மணல் பரவிக்கிடந்த பாலாற்றுப் படுகையில் இப்போது புல்பூண்டுகள் முளைத்து செம்மண் நிலமாக காணப்படுகிறது. ஓர் ஆறு மறைந்து வருகிறது. இதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது?

மேலும் பாலாற்றுக் குடிநீர் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு, பழையசீவரம், வில்லியம்பாக்கம் பகுதி வழியாக குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த இடங்களில் உள்ள கிணறுகள் வறண்டு வருகின்றன. அதனால், இனிமேல் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் கிடைக்காது. அதனால், அப்பகுதி மக்கள் புதிய வீராணம், கிருஷ்ணா நதி குடிதண்ணீர் கிடைக்கும் இடங்களுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இன்றைய சூழ்நிலையில் காஞ்சி நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்காலத்தில் முழுமையாக குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காஞ்சி நகர மக்கள் குடிதண்ணீருக்காக சென்னையில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.

பாலாற்றுக் குடிநீர் என்பது மற்றவகை குடிநீரைவிட இயற்கையிலேயே கிடைக்கும் நிலத்தடி நீராகும். மிகவும் சுத்தமானது; சுவையானது.

இயற்கையாகவே கிடைக்கும் சுத்தமான பாலாற்றுக் குடிநீர், தற்போது வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டு இருக்கிறது. நிலத்தடி நீரும் கெட்டுள்ளது. பாலாற்றுப் படுகையையொட்டி நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ரசாயன நச்சு கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல்நோய், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகள் இவை.

இப்போதைய அரசு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையையும், ஆற்றில் ரசாயன நச்சுக் கழிவுகள் கலப்பதையும் தடுக்கும் வகையில், பாலாறு பாதுகாக்கப்பட்ட ஆறு என அறிவிக்க வேண்டும்.

பாலாறு தற்போது மத்திய அரசின் அட்டவணை-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அப்படியிருந்தும்கூட இந்த ஆறு பல்வேறு விதிமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு பாலாற்றுக்குத் தனி முக்கியத்துவம் தந்து பாதுகாக்கப்பட்ட ஆறு என்ற அறிவிப்பை செய்யத் தவறினால் விவசாயம் முற்றிலும் இயலாததாக மாறுவதுடன் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும்.

மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களும், தோல் தொழிற்கூடங்களும் கேட்கும் கேள்விகள்என்னவென்றால் – மணல் இல்லாவிட்டால் எப்படி கட்டுமானப் பணிகள் நடக்கும்? தோல் தொழிலால் ரூ.5000 கோடி ஏற்றுமதி நடக்கிறது. இவை தடைபட்டால் பல லட்சம் மக்கள் வேலை இழப்பார்கள் என்பதே!

மணல் கொள்ளையர்களும் தோல் தொழிற்கூட உரிமையாளர்களும் குடிநீரை விலை கொடுத்து வாங்கக் கூடும். நோய்களுக்கு மிகப் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடும். ஆனால் சாதாரண மக்கள் குடிநீருக்கும் தோல் அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கும் வழியின்றி சாவது மட்டுமே நிச்சயம்.

எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காரணம் காட்டி, அம்மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமானது, நியாயமானது?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————–
ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டும் பணி தாற்காலிக நிறுத்தம்

வேலூர், ஆக. 9: பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாமக தொடர்ந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ராவட் புதன்கிழமை கூறியதாவது:

ரூ. 55 கோடியில் கட்டப்படும் தடுப்பணை திட்டம் நீதிமன்ற நடவடிக்கையால் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த சிறிய திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு ஆந்திர அரசுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம் என்றார்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகள் இந்த அணை கட்டுமானப் பணியை எதிர்த்து தொடரப்பட்டுள்ளன. ஒரு வழக்கு அதிமுக அரசும், மற்றொரு வழக்கு திமுக அரசும் தொடர்ந்துள்ளன. பொதுநல வழக்குகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எம். பஷீரும் தொடர்ந்துள்ளனர்.

———————————————————————————————————–

Posted in A Raja, ADMK, Agriculuture, AIADMK, Analysis, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra Pradesh, AP, Arcot N Veerasamy, Backgrounder, Cauvery issue, Chennai, Chitore, Chittoor, Chittore, Chittur, Dam, Details, Developments, DMK, Duraimurugan, Environment Minister, Events, Farming, Floods, Future, Ganesapuram, GK Mani, Government, Happenings, History, Irrigation, Jayalalitha, Jayalalithaa, JJ, Kachipuram, KANCHEEPURAM, Kanchi, Kanjeepuram, Kerala, Kolar, Kuppam, Madras, MDMK, Mullai Periyar, Paalaar, Paalaaru, Paalar, Paalaru, Palar, PMK, Public Works, Public Works Department, PWD, PWD Minister, R&D, Rajasekara Reddy, Ramadas, Ramadoss, Research, River, solutions, Tamil Nadu, Thiruvalloor, Thiruvallur, Thiruvannamalai, TN, Vaaniyambadi, VaiKo, Vaniyambadi, Vellore, Water, YSR | 6 Comments »

Holy Muharram – History, Details & Backgrounder

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

புனித முஹர்ரம்

எம்.கே.எஸ். பாவா

முஸ்லிம்கள் கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய ஆண்டுக்கு “ஹிஜ்ரி’ ஆண்டு என்று கூறுவர். இவ்வாண்டின் முதல் மாதத்தின் பெயர்தான் முஹர்ரம் என்பது.

முஹர்ரம் என்ற அரபி மொழிச் சொல்லுக்குத் தமிழில் “விலக்கப்பட்டது’ என்பது பொருள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பல்லாண்டுகள் முன்பிருந்தே இம்மாதத்தை, புனிதமான மாதங்களில் ஒன்றாக அன்றைய அராபியர்கள் கருதி வந்தனர். அக்காலத்து அராபிய மக்கள் பல குலங்களாகவும், கோத்திரங்களாகவும் பிரிந்து சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு சற்று ஓய்வுகொடுத்து, அமைதி நிலவ வேண்டுமென்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம் இம்மாதமாகும்.

போர்களும், சண்டை சச்சரவுகளும் இம்மாதத்தில் விலக்கப்பட்டதால், “முஹர்ரம்’ என்ற பெயரை இம்மாதம் பெற்றுள்ளது.

1428-வது ஹிஜ்ரி ஆண்டு, 2007 ஜனவரி மாதத்தில் தொடங்கியுள்ளது. ஹிஜ்ரி முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தின், 10-ம் பிறை நாளாகிய “ஆஷுரா’ நாள் ஜனவரி 30-ம் தேதியன்று வருகிறது. இந்நாள் முஹர்ரம் நாள் என்றும் ஆஷுரா நாள் என்றும் கர்பலா தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளுக்குப் பல சிறப்புகள் கூறப்படுகின்றன.

இஸ்லாமிய மறைநூல்கள் மற்றும் நம்பிக்கைகளின்படி இந்நாளில்தான் இறைவன் “குன்’ என்னும் ஒரே சொல்லினால் விண்ணையும் மண்ணையும் படைத்தான்; ஆதி மனிதர்கள் ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் சுவனம் சென்றார்கள்; பின்னர், இறைவனுடைய கோபத்திற்கு ஆளாகி அவர்கள் மண்ணுலகுக்கு அனுப்பப்பட்டனர்; அழுது தொழுது இறைவனிடம் மன்னிப்புப் பெற்றார்கள் என்று அறிகிறோம்.

இந்நாளில்தான் நபி நூஹு (அலை) அவர்கள், தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும், பெரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக இறைவன் கட்டளைப்படி, கப்பல் ஒன்று செய்து அக்கப்பலில் சென்று ஜுதி மலையில் நிலைபெற்று காப்பாற்றப்பட்டார்கள். நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கொடுங்கோல் மன்னன் நம்ரூதினால் நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்பட்டபோது அதிலிருந்து விடுதலை பெற்றார்கள்.

இந்த நாளின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் கருத்தில்கொண்டு பெருமானார் முஹம்மது நபிகள் (ஸல்) முஸ்லிம்களை முஹர்ரம் 10-ம் நாளான ஆஷுரா நாளில் நோன்பு நோற்கும்படியாகக் கூறியுள்ளார்கள். இந்த நோன்பு அந்த நாளைக் கண்ணியப்படுத்துவதோடு இறைவனுடைய பேரருளைப் பெருமளவு பெற்றுத் தருகிறது.

மேற்குறிப்பிட்ட அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் முத்தாய்ப்பாக நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சி ஒன்று இந்த ஆஷுரா நாளில் நடந்துள்ளது. இது “கர்பலா’ எனும் இடத்தில் நடைபெற்ற புனிதப்போர் நிகழ்ச்சியாகும். கர்பலா என்னும் இடம் இராக் தலைநகர் பாக்தாத் அருகே அமைந்துள்ள மணற்பாங்கான மைதானமாகும்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களது பேரர் இமாம் ஹுûஸன் (ரலி) அவர்கள் இந்த கர்பலா மைதானத்தில்தான் யஸீது எனும் கொடுங்கோல் மன்னனின் ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுத்து வீரமரணம் அடைந்தார்கள்.

இமாம் ஹுûஸன் (ரலி), நபிகளின் (ஸல்) அருமை மகளான பாத்திமாவின் புதல்வர். நபிகளின் (ஸல்) மருமகன் ஹஸ்ரத் அலி (ரலி), பாத்திமாவின் கணவராவார். நபி (ஸல்) காலத்திற்குப் பிறகு முதலாவதாக அமைந்த இஸ்லாமிய ஆட்சியின் நான்காவது கலீபாவாகத் திறம்பட ஆட்சி செலுத்தியவர்கள்.

இமாம் ஹுûஸனும் (ரலி), கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்ததோடு அநீதிக்கு எதிராகவும் போர் தொடுத்து மக்களாட்சி மலர உயிரைத் தியாகம் செய்தார்கள்.

இமாம் ஹுûஸனும் (ரலி) அவரது சகோதரர் இமாம் ஹஸனும் (ரலி) சிறு குழந்தைகளாக இருந்தபொழுது நபிகளின் (ஸல்) முதுகில் ஏறி விளையாடுவார்கள். அதேபோன்று ஒரு சமயம் தன் மார்க்கச் சொற்பொழிவை ஆரம்பிக்குமுன் அங்கு வந்த பேரக் குழந்தைகளைக் கண்டதும் மேடையிலிருந்து இறங்கி வந்து நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டுத் தன் அருகில் உட்கார வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இப்படிக் கேட்பார்களாம்: “”யா அல்லாஹ், நான் ஹஸன், ஹுûஸன் இருவர் மீதும் பேரன்பு கொண்டிருக்கிறேன். நீயும் அவர்கள் மீது அன்பு காட்டு! அதோடு யாரெல்லாம் என் பேரர்கள் மீது அன்பு காட்டுகிறார்களோ அவர்கள் மீதும் அன்பு செலுத்து” என்பதாக. இவ்வாறாகப் பெருமானார் நபி (ஸல்) அன்பு செலுத்தி அணைத்து முத்தமிட்ட பேரர் ஹுûஸன் அவர்களின் தலை, எதிரியின் வாளுக்கு இரையாகி கொய்து எடுக்கப்பட்டது.

இமாம் ஹுûஸனுடைய (ரலி) இத்தகைய வீரமரணம் உலகுக்கே ஒரு பாடமாகத் திகழ்கிறது.

இந்த ஆஷுரா நாளான முஹர்ரம் 10-ம் நாளில் முஸ்லிம்கள் அனைவரும் மேற்கூறிய நிகழ்ச்சிகளை நினைவுபடுத்திக் கொள்கின்றனர். அன்று நோன்பு நோற்கின்றனர். இறை நம்பிக்கையை வலுப்படுத்தும் இந்நிகழ்ச்சிகளை மனத்தில் நிறுத்தி இறைவனிடம் துஆவெனும் பிரார்த்தனை புரிகின்றனர். பாவமன்னிப்பும் கோருகின்றனர்.

இத்தோடு நின்றுவிடாமல், குறிப்பாக இமாம் ஹுûஸனுடைய (ரலி) உயிர்த்தியாகத்தின் அடிப்படையை உணர்ந்து எந்த கொள்கைக்காக அவர்கள் பாடுபட்டார்களோ – உயிர் துறந்தார்களோ அவற்றை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் அருள்புரிவானாக.

(கட்டுரையாளர்: செயலாளர், கீழ்ப்பாக்கம் நலநிதி நிறுவனம், சென்னை).

Posted in Backgrounder, Details, Hijri, History, Islam, Mohammad Nabi, Mohammed Nabi, Moharam, Moharram, Muhammad Nabi, Muharam, Muharram, Muslim, Nabi | 1 Comment »

Shilpa Shetty – Biosketch: Born in Tamil nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 29, 2007

நடிகை ஷில்பாஷெட்டி தமிழ்நாட்டில் பிறந்தவர்

`பிக் பிரதர்’ நிகழ்ச்சியில் வென்று பல கோடி பணத்தை பரிசாக பெற்றதன் மூலம் நடிகை ஷில்பாஷெட்டி தன் புகழ் ஏணியின் உச்சத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.

கோதுமை நிறம், சுண்டி இழுக்கும் கண்கள், 5 அடி 10 இஞ்ச் உயரம். அந்த உயரத்துக்கு ஏற்ற உடல் அமைப்பு போன்ற அம்சங்கள் ஷில்பாவை கவர்ச்சி கன்னியாக வலம் வர செய்கின்றன. தற்போது மும்பை செம்பூரில் உள்ள அந்தோணி சாலையில் வசித்து வரும் இந்த அழகு தேவதை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவராவார்.

1975-ம் ஆண்டு ஜுன் மாதம் இவர் தமிழ்நாட்டில் பிறந்தார். இவரது பெற்றோர்-சுரேந்திரா ஷெட்டி, சுனந்தா ஷெட்டி. இவர்கள் இருவரும் சென்னையில் மாடலிங் செய்து வந்தனர். சிறு வயதில் ஷில்பா ஷெட்டியின் அழகை கண்டு அவரது தோழிகள் நீயும் மாடலிங் செய்யலாம் என்றனர். இதனால் 15-வது வயதில் படித்துக் கொண்டே அவர் மாடலிங்கில் ஈடுபட்டார்.

ஆனால் அப்போது 5.7 அடி உயரமே இருந்ததால் முதலில் ஷில்பாவுக்கு சரியான மாடலிங் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மாடலிங் தொழிலில் மேலும் ஈடுபட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஷில்பாஷெட்டி குடும்பம் சென்னையில் இருந்து மும்பைக்கு இடம் மாறியது. அங்கு 18-வது வயதில் `பாஜிகர்’ எனும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக முதன் முதலில் இந்தி திரை உலகில் அறிமுகமானார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது. “மெயின் கிலாடி தூ அனாரி” என்ற படம் ஷில்பாவின் புகழை நாடெங்கும் உயர்த்தியது. இந்தியாவில் உள்ள பிறமொழி நடிகர்களும் ஷில்பாவுடன் நடிக்க போட்டி போட்டனர்.

தமிழ்நாட்டிலும் இவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் இவர் “மிஸ்டர் ரோமியோ” படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ளார். “குஷி” படத்தில் இவர் நடிகர் விஜய்யுடன், “மேக்கோபீனா, மேக்கோ பீனா” என்ற ஒரு பாடலுக்கு ஆடினார். இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

கைவசம் நிறைய படங்களை வைத்திருந்த போது இவருக்கும் நடிகர் அக்ஷய்குமாருக்கும் இடையே காதல் அரும்பியதாக பரபரப்பு தகவல் வெளியானது. சிறந்த நடிகைக்கான விருதுகளை 16 தடவை பெற்ற ஷில்பா ஷெட்டிக்கு 2002ம் ஆண்டு முதல் தோல்வி துரத்தத் தொடங்கியது. அந்த ஆண்டு அவர் நடித்த 5 படங்களும் வரிசையாக தோல்வியை தழுவின. இதனால் அவரை இந்தி பட உலகம் ஒதுக்கியது.

தன்னையும் அக்ஷய்குமாரையும் இணைத்து எழுதிய மாத இதழுக்கு எதிராக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றி பெற்றார். அந்த மாத இதழால்தன் பட உலக வாழ்க்கை சற்று சரிந்து போனதாக ஷில்பா ஷெட்டி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்தி பட உலகில் நிறைய வாய்ப்புகள் வராவிட்டாலும் மற்ற மொழிகளில் ஷில்பாவுக்கு இன்னும் ஆதரவு உள்ளது. 2005ல் கன்னடத்தில் ஆட்டோ சங்கர் படத்தில் இவர் மாயா எனும் கேரக்டரில் நடித்தார். இந்த படம் சூப்பர்-ஹிட் வெற்றியைப் பெற்றது.

ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடிக்கும் ஷில்பா ஷெட்டி சமீபகாலமாக மற்ற சமூக சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறார். எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மிருகங்கள் வதைக்கப்படுவதை எதிர்த்தும் குரல் கொடுத்து வருகிறார்.

2004ம் ஆண்டு இவர் ஒரு படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்தார். நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும், மற்ற முன்னணி நடிகைகளுக்கு இருப்பது போல இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன் பெயரில் இ-மெயில் முகவரியை உருவாக்கி அறிவித்த போது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு மெயில் அனுப்பி திணற வைத்தனர்.

கடந்த 15 ஆண்டுகளாக திரை உலகில் இருக்கும் ஷில்பாவுக்கு தற்போது 31 வயதாகிறது. இதுவரை 37 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் 27 படங்கள் தோல்வியை தழுவின. இந்தி, ஆங்கிலம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய 6 மொழிகளில் பேசும் இவருக்கு அமிதாப்பச்சன், கோவிந்தா, ஜாக்கிஜான், டாம் குரூசி பிடித்த நடிகர்களாகும். தத்கன், கத்யார், ரிஸ்தே ஆகிய படங்கள் ஷில்பாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன. அடுத்து அவர் நடிப்பில் 3 படங்கள் வெளிவர உள்ளன.

ஷில்பாஷெட்டியின் சகோதரி சமீதா ஷெட்டி. இவரும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஷில்பா ஷெட்டி முகவரி:- 12, தேவ்தர்ஷன், 262, அந்தோணிரோடு, செம்பூர், மும்பை-400071. போன்: 022-5517667, 55644738.

ஷில்பா ஷெட்டியின் இளமைக்காலம் சோகம் நிறைந்தது. தமிழ்நாட்டில் பிறந்த அவர் குடும்பம் வறுமையில் வாடியது. பிழைக்க வழி தேடி மும்பை சென்றனர். ஷில்பா ஷெட்டி வயதுக்கு வந்ததும் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளை பார்த்து பேசி முடித்தார்கள். திருமண தேதியும் குறிக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரம் வரதட்சணை பிரச்சினையால் திருமணம் நின்றது. பெற்றோரால் பேசியபடி வரதட்சணை கொடுக்க முடியவில்லை. இதனால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட் டார்கள். ஷில்பா ஷெட்டி அழுதார். அதன் பிறகு ஷில்பாவை அவரது தாய் மாடலிங்கில் தீவிரமாக இறக்கி விட்டார். கொஞ்சம் வருமானம் வந்தது. பிறகு பட உலகுக்கு தாவினார். பணம் கொட்டியது.

Posted in Big Brother, Biography, Biosketch, Bollywood, Details, Film Star, Glamor Doll, Life, Newsmaker, people, Shilpa Shetty, Story, Tamil Actress, Tamil Nadu | 1 Comment »

Sethu Bridge – Ramar Palam aka Hanuman Bridge referred in Ramayanam – History, Current state & Backgrounders

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2007

1. காலம்: பார’தீய’ ஜெகதால கட்சி !

2. பொருனைக்கரையிலே: சேது,பாம்பன்,தனுஷ்கோடி -2

http://porunaikaraiyile.blogspot.com/2006/07/1.html

3. பினாத்தல்கள்: எல்லாப்பக்கமும் �

Voice on Wings said…

//சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!//

அகழ்வுப் பணிகளால் இதுவரை அப்பகுதியில் ஐந்தாறு திமிங்கிலங்கள் மரணித்துள்ளன என்று நேற்று CNN IBN நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. பவளப்பாறைகளுக்கும் பேராபத்து என்ற கருத்து நிலவுகிறது. பொருளாதார அடிப்படையிலும் இத்திட்டம் பெரிய அளவில் பலன் தரபோவதில்லை என்ற தகவல்களே கிடைக்கின்றன.

இப்படியிருக்கையில் Ram factor ஒரு அருமையான சந்தர்ப்பம் நம் அதிகார வரக்கத்திற்கு. மூட நம்பிக்கை எதிர்ப்பு என்ற பெயரில் இத்திட்டத்திற்கான ஆதரவைத் திரட்டி, சில தனிநபர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு திட்டத்தை அவசர கதியில் முன்னெடுத்துச் செல்கின்றனர் நம் ஆட்சியாளர்கள்.
September 23, 2007 11:08 AM

4. நினைத்தேன் எழுதுகிறேன்: வலைப்ப�

5. Thoughts at random: Rama,Sethu and Mr. Karunanidhi

6. E=mc^2: Where are the Indian Scientists?

7. குப்பைகள்: வராதா? வரக்கூடாதா? – கலைஞர் கடிதம்

8. குசும்பு: சென்னை வந்த ராமன்

9. பங்கு வணிகம்: இந்தியா, இலங்கை, சேது & இராமர் பாலம்

10. வெட்டிப்பயல்: கர்ம வீரர், கலைஞர�

News:
11. தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர்

12. கண்ணகி கதையை நம்புபவர்கள் ராமர�

13. மத்திய திமுக அமைச்சர்களை டிஸ்ம�

14. பஜ்ரங் தள், VHP, ராமசேனா தொண்டர்கள

15. இராமர் பாலம் – செய்தித் தொகுப்பு

16. சென்னை பஸ் எரிப்பு: கருணாநிதி க�

17. பெங்களூரூ வன்முறை – இராமர் சேது �

18. Ram Sethu controversy: Ambika Soni offers to resign | சற்றுமுன்…

19. இராமர் இருப்பு: அரசு பின்வாங்கி

20. இராமர் பாலம் – ஆதாரங்கள் இல்லை – ம

21. ராமர் பாலத்தை இடிக்க உலகளவில் க

Cartoons:

22. Ramar Sethu issue | சற்றுமுன்…

23. Dinamani’s Mathy on Congress vs BJP in Ramar Sethu Issue | சற்றுமுன்…


ஜெயலலிதா கூறும் ராமர் பாலம் கடலுக்கடியில் 18 மைல் நீளமுள்ளது

விழுப்புரம், ஜன.29: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் வரலாற்று தொன்மைமிக்க பாலமாகும்.

சேது கடல் கால்வாய் அமைக்கும்போது ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த பாலத்தை சேது பாலம், ராமர் பாலம், அனுமன் பாலம் என்றழைக்கின்றனர். இந்திய வரைபடத்தில், இந்த பாலத்தை ஆதம் பாலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை 18 மைல் தூரத்துக்கு கடலுக்கு அடியில் இப் பாலம் உள்ளதை செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் விளக்குகிறது.

பாக் நீரிணைப்பில் உள்ள இப் பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது. இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த பாலத்தின் வரலாற்று தொன்மையை ஏற்கெனவே விளக்கியுள்ளது. இப்பாலம் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகவும், பிரளயம் ஏற்பட்ட பின்னர் இப்பாலம் கடலுக்கடியில் மூழ்கி விட்டதாகவும் ஆய்வுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் உள்ள இப்பாலம், கோரல் ரீப் (இர்ழ்ஹப்நற்ர்ய்ங்) என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பல வசிப்பதோடு, இனப்பெருக்கம் செய்கின்றன.

திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கும் இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர். கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் முழங்கால் அளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்து செல்லலாம். படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல வழி ஏற்படுத்துவதற்காக, இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

கற்கள் மிதக்கும்

அதிசயம்

இப்பாலத்தில் உள்ள கற்களைப் பெயர்த்து எடுத்தால், அவை கடலில் மூழ்காமல் மிதக்கின்றன. இந்த கற்களை ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் அருகே உள்ள மடத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். அதிசயமான இக்கற்களை பக்தர்கள் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இதற்கு ஆதம் பாலம் என்று பெயரிட்டனர். இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும், ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஒருவரின் சமாதி ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது. இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஆபில்-ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் என்று விவரிக்கின்றனர்.

இலங்கை மன்னர் ராவணன் கடத்திய சீதா பிராட்டியை மீட்க, ராமர் தலைமையில் அனுமன் அமைத்த பாலம் இது என்று கூறும் இலங்கை வாழ் மக்கள், இதை அனுமன் பாலம் என்று அழைக்கின்றனர்.

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார். ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டிய கேமன் இந்தியா என்ற நிறுவனம், ஆதம் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.

—————————————————————————————————————————————————————-
ராமர் பாலத்தைக் காப்போம்

இல. கணேசன்

“”ஏலத்துக்குத் தயாராக உள்ள சிற்பம்” குறித்து சமீபத்தில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியானது. அது ஒரு சிறிய சுண்ணாம்புக் கல் சிங்கச் சிற்பம். அதன் ஏல மதிப்பு 7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி அந்த சிற்பம் தயாரான பொருள் விலை உயர்ந்ததா அல்லது கலை வேலைப்பாட்டில் மிகச் சிறந்ததா என்றால், எதுவுமில்லை. அதன் விலைமதிப்பு உயர்ந்ததற்கு ஒரே காரணம், அது 5000 ஆண்டு பழைமையானது என்பதே!

உலகின் எல்லா நாடுகளும் பழைமையைப் போற்றுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கட்ராஸ் ஆலயத்தின் பின்னணி என்ன? மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தாகம் மேலிட்டு, ஒரு குளத்தில் நீர் அருந்தச் சென்றனர். அப்போது யக்ஷனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததால், நால்வரும் மடிய, தருமர் சென்று யக்ஷனது கேள்விக்குப் பதில் கூறி நான்கு சகோதரர்களும் உயிர் மீட்ட சம்பவம் நடந்த இடம். அந்த இடத்தில் ஒரு கோயில் உள்ளது. அது சிதிலமடைந்துள்ளது. அதைப் புதுப்பித்துப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசு ரூ. 10 கோடி ஒதுக்கியுள்ளது.”

இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் அரசுக்கு, மகாபாரதத்தின்மீது நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தன் தேசத்தின் தொன்மைச் சிறப்புடைய பழம்பொருள்களைப் பாதுகாக்கும் அக்கறை அதற்கு உள்ளது. ராமன் இருந்தார் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் நம்ப மறுக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்ற ஒரு வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டாமா? அக்கறை செலுத்தாவிட்டாலும் ராமர் பாலத்தைத் தகர்ப்பதையாவது தவிர்க்க வேண்டாமா?

அது ராமர் நடந்த பாலம் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை; நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்பது தவறு. வணக்கத்துக்குரிய முகமது நபிகளின் திருமுடி ஒன்றைப் பேழையில் வைத்து ஹஸரத்பால் மசூதியில் போற்றுகின்றார்கள். அது அவர்களது நம்பிக்கை. நாம் அதை மதிக்கிறோம். புத்தரது பல் ஒன்றை வைத்து பௌத்தர்கள் பாதுகாக்கிறார்கள். அது அவர்களது நம்பிக்கை. அதையும் நாம் மதிக்கிறோம்.

இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு எவரும் கேள்வி கேட்கக்கூடாது. கன்னியாகுமரியின் பாதம் விவேகானந்தப் பாறையில் பதிந்துள்ளதை நாம் நம்புகிறோம். நிரூபிக்க கைரேகை நிபுணரது சான்றிதழைக் கொண்டுவா என்றா கேட்பது?

ராமேசுவரம் மீனவர்கள் தங்களது படகில், யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு ராமர் பாலத்தைக் காட்டுகிறேன் என அழைத்துச் சென்று, கரையிலிருந்து சிறிதுதூரம் சென்று கடல் நடுவே தண்ணீரில் இறக்கிவிட்டு நடக்கச் சொல்வார்கள். இது பாரம்பரியமாக எத்தனையோ ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. “நாஸô’ படமெடுத்துக் காட்டிய பிறகுதான், அது தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை தொடர்ந்து இருப்பதை உலகம் உணர்ந்தது. சுனாமி வந்தபோது கடல் வெகுதூரம் உள்வாங்கியது. அப்போது இந்தப் பாலத்தை நூற்றுக்கணக்கானோர் நேரில் பார்த்தார்கள்.

அது சரி, ராமர் பாலம் என மக்கள் சொன்னால் போதுமா? வரலாற்று ஆதாரம் வேண்டாமா எனக் கேட்கலாம். சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்களில் ஒன்று, ஆங்கிலேயர்கள் 1788 ஜனவரி 1-ல் தயாரித்த வரைபடம். இஸ்லாமிய ஆட்சியின் இறுதிக்காலம் (நன்ழ்ஸ்ங்ஹ் ம்ஹல் ர்ச் ஏண்ய்க்ன்ள்ற்ட்ஹய் ன்ய்க்ங்ழ் ஙர்ஞ்ன்ப் உம்ல்ண்ழ்ங்) தொடர்பானது. அதில் தனுஷ்கோடி – தலைமன்னார் பகுதிக்கு ராமர் பாலம் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு, ஒரு வரைபடம் – நெதர்லாந்து வரைந்தது. அதில் இதே பகுதியை ராமர்கோயில் என எழுதி, ராமர் பாலம் என அடைப்புக்குறியில் குறிப்பிட்டுள்ளனர். ராமன் வாழ்ந்ததே கற்பனை; எனவே, அவர் தெற்கே வந்ததும் கற்பனை எனக் கூறுவோரும் உள்ளனர். அவர்களுக்கு ஒரு கேள்வி. ராமேசுவரம் என்கிற பெயர் எப்படி வந்தது? ராமன், ஈஸ்வரனை அதாவது சிவனைப் பூஜித்த ஸ்தலம் என்பதால்தானே?

அந்தக் கடற்கரைப் பகுதி புனிதமானதாகக் கருதப்படுகிறதே, அது அந்தப் பகுதிக்கு ராமர் வந்த பிறகுதானே? அது சேது சமுத்திரம் என்று பெயர் பெற்றுள்ளதே! சேது தீர்த்தம் என்றும் சொல்கிறார்களே! சேது என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பாலம் என்பது பொருள். தமிழ் அகராதிப்படி செயற்கைக்கரை என்று பொருள். செயற்கையாக அமைந்த பாலம் என்று பெயர். சேது சமுத்திரம் என்பதற்கு, பாலத்தை ஒட்டியுள்ள சமுத்திரம் என்றுதானே பொருள்? அந்தப் பாலத்திற்கு அதிபதி – தலைமன்னார் வரை – சேதுபதி. பாரதத்தின் எல்லையைப் பற்றி குறிப்பிடும்போது சேது முதல் இமயம் வரை – சேது ஹிமாசலம் என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்திய அரசு 1767-ல் தயாரித்த முதல் நிலஅளவைக் குறிப்பேட்டில் அதன் சின்னத்தைப் பொறித்து கீழே ஆசேது ஹிமாசலம் என்றே எழுதியிருக்கிறார்கள்.

ராமன் கட்டிய சேதுவின் பெயரில்தான் சேது சமுத்திரத் திட்டம் அமைந்துள்ளது. அரசின் திட்டப்படி அது நிறைவேறினால் திட்டம் வெற்றி பெறும். சேது இருக்காது. ராமநாதபுர மாவட்ட விவரச் சுவடிகளை தமிழ்நாடு அரசு 1990-ல் வெளியிட்டது. அதற்கு அன்றைய முதல்வர் எழுதிய முன்னுரையில், ராமநாதபுர மாவட்ட விவரச் சுவடியை வெளியிட்டிருப்பதன் வாயிலாக இம்மாவட்டத்தின் சமூக வரலாற்றை ஆராய்வதற்குப் பயனுடைய பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும், நல்ல பணிகளிலும் ஆராய்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த விவரச்சுவடி பெரிதும் பயன்படும் என குறிப்பிட்டுள்ளார்.

வடமொழியில் இது நள சேது என்றும் தமிழில் திருவணை என்றும் சொல்லப்படுகிறது. ராம சேது என்றும் சொல்வர்; ஆதி சேது என்ற பெயரும் உண்டு.” இந்த விவரங்கள் அடங்கிய அரசுப் பதிப்புக்கு முன்னுரை எழுதிய அன்றைய முதல்வர்தான், இன்றும் முதல்வராக உள்ளார்.

இது மக்களுடைய நம்பிக்கைக்குரிய ஒரு தொல்பொருள் என்பது மட்டுமல்ல. இன்றைய தினம் இந்திய அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வதில் பிடிவாதமாக இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் பயனாக நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை அணுஈனுலை மூலம் அபரிமிதமாகப் பெறலாம் என்பது எத்தனை காலத்துக்கு? அமெரிக்கா விரும்புகிறவரை மட்டுமே!

ஆனால் இந்த ராமர் பாலத்தையொட்டி (நீங்கள் அதற்கு என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் சரி) சுமார் 400 ஆண்டுகளுக்கு நாடு முழுவதற்கும் தங்குதடையற்ற மின்சாரம் அளிப்பதற்குத் தேவையான அணுசக்தி மூலப்பொருள் மண்டிக் கிடக்கிறதே!

ராமர் பாலம் என்று அழைப்பதற்கு எங்களது பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை என்று கருதுவோர், இந்த அணு மின்சக்தி மூலப்பொருளுக்காகவேனும் சேது திட்டத்தின் வழித்தடத்தை மாற்றலாமே?

சேது சமுத்திரத் திட்டத்தைக் கொள்கைரீதியாக ஏற்று ஆய்வுப் பணிகளைத் துவக்கியது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான். வாஜ்பாய் ஆட்சிக் காலத்துக்கு முன்பு இரு வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஒன்று மண்டபம் அருகே. இரண்டாவது – பாம்பன் அருகே. முதல் வழித்தடத்தை 1956-ல் பரிந்துரைத்த எ.ஆர். ராமசாமி முதலியார், ஆதாம் பாலத்தை (அதாவது ராமர் பாலத்தை) இடிக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளார்.

வாஜ்பாய் அரசில் 3-வது வழித்தடம் பரிந்துரைக்கப்பட்டது. அது கோதண்டராமர் ஆலயத்தைப் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு கிளம்பி கைவிடப்பட்டது.

பிறகு 4-வது வழித்தடம் கோதண்டராமர் கோயிலுக்கும் எஞ்சியுள்ள தனுஷ்கோடி பகுதிக்கும் இடையே உள்ள ஆளில்லா நிலப்பகுதியில் தோண்டப் பரிந்துரைக்கப்பட்டது. இது நேரடியான பாதை. குறைந்த தூரம், குறைந்த செலவு. இரு பகுதியிலும் உள்ள நிலப் பகுதிகள் சுவர்போல அமையும். ராமர் பாலத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

பக்தியின் அடிப்படையிலும் அறிவியல் முன்னேற்றத்தின் அடிப்படையிலும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; ஆனால் அது ராமர் பாலத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில் நான்காவது வழித்தடத்தில் அமைய வேண்டும் என்பதுதான் இந்துமதத்தில் நம்பிக்கையுள்ள பெருவாரியான மக்களின் விருப்பம். பெரும்பான்மை விருப்பத்திற்கு மாறாகத்தான் செயல்படுவோம் என்று இவர்கள் மார்தட்டினால், மக்களாட்சித் தத்துவத்தில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள். அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் மன்றம் தீர்மானிக்கும்.

(கட்டுரையாளர்: மாநிலத் தலைவர், பாரதீய ஜனதா கட்சி).

——————————————————————————————————————————

கடவுள் காப்பாற்றட்டும்

Dinamani Editorial (Sep 21, 2007)

ஏதாவது கேட்டால், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், வேறு எதையாவது சொல்லி கேள்வியைத் திசைதிருப்புவது என்பது முதல்வர் கருணாநிதியின் வாடிக்கை. ராமர் பற்றி விமர்சித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் நீங்கள், ஏசுநாதர் பற்றியோ, நபிகள் நாயகம் பற்றியோ விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு, “”ராமர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்; ஆரிய-திராவிடப் போராட்டத்தின் கதைதான் ராமாயணம்; நேரு சொன்னார், ராஜாஜி சொன்னார் என்று எதைஎதையோ சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் சொல்லி எங்கெங்கோ விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்.

பகுத்தறிவுவாதம், இறைமறுப்பு என்பன போன்ற விஷயங்கள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விருப்பம். இவையெல்லாம் திராவிட அரசியல் உலகுக்கு எடுத்துரைத்த புதுக்கருத்தல்ல. சொல்லப்போனால் பொதுவுடைமைவாதிகளிடமிருந்து திராவிட இயக்கங்கள் அரைகுறையாகக் களவாடிய விஷயங்கள்தான் இவை. திராவிட இயக்கத்தினரைப்போல ஊருக்குப் உபதேசிக்காமல், பகுத்தறிவுவாதத்தையும் இறைமறுப்பையும் வாழ்க்கைநெறியாகவே கடைப்பிடிப்பவர்கள் பொதுவுடைமைவாதிகள்தான்.

இறைமறுப்பு என்பது இந்து மதத்தின் பல்வேறு தத்துவங்களில் ஒன்று என்பது மட்டுமல்ல, எத்தனையோ ஞானிகளும் சித்தர்களும் சமயக்குரவர்களும் சொல்லிவிடாத பகுத்தறிவுவாதத்தையும் இறைமறுப்பையும் வேறு யாரும் சொல்லிவிடவும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை அவை தத்துவம். முதல்வர் கருணாநிதியைப் பொருத்தவரை இவை மூன்றாம்தர வாக்கு வங்கி அரசியல்.

வால்மீகி எழுதிய ராமாயணம் என்கிற காவியத்தின் கதாநாயகன்தான் ராமர். “நானும் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். அதில் வரும் கதாநாயகர்களைப்போல ராமனும் ஒரு கதாநாயகன்தான்’ என்கிறார் முதல்வர் கருணாநிதி. இவர் எழுதிய “அவன் பித்தனா, பூமாலை, மறக்க முடியுமா போன்ற படங்களின் கதாநாயகர்களின் பெயர் என்ன என்று கேட்டால் அந்தப் படத்தைப் பார்த்த எத்தனை பேருக்கு இப்போது ஞாபகம் இருக்கும்? களவொழுக்கத்தை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்ட இவரது கதைகளை இப்போது பார்த்தால் யாராவது ரசிப்பார்களா? ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லியும் எழுதியும் கேட்டும் பார்த்தும் திகட்டாத ஒரு காவியத்தை, இவரது களவொழுக்கக் கதைகளுடன் ஒப்பிடுவது எந்தவிதத்தில் நியாயம்?

ராமாயண காவியத்தில் எத்தனைஎத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நமது முதல்வருக்குத் தெரியவில்லை. வால்மீகி ராமாயணத்தில் சோமபானம் அருந்தினார் ராமர் என்று ஒரு வரி இருப்பதாகவும் அதை விவாதிக்கத் தயாரா என்றும் கேட்கிறார் முதல்வர். ஏகபத்தினி விரதன் ராமன் என்பதெல்லாம் அவருடைய கவனத்தைக் கவரவில்லை என்றால் எங்கே கோளாறு?

“வேறு பாதையில் அமைந்தாலும் பரவாயில்லை. எந்தப் பாதை என்பதல்ல பிரச்னை. எங்களுக்குத் தேவை சேது சமுத்திரத் திட்டம் என்றும், ராமர் பாலத்தை இடித்தே தீர வேண்டும் என்று தான் வலியுறுத்தவில்லை என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். நல்லதொரு மனமாற்றம். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அப்படியானால் ராமர் பற்றிய சர்ச்சை ஏன்? தேவையில்லாமல் ராமரை முதல்வர் விமர்சிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? தன்னுடைய மூன்றாம்தர களவொழுக்கக் கதாநாயகர்களுடன் காவிய நாயகனான ராமரை ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன?

முதல்வர் கருணாநிதிக்கு ஒரு ராசி உண்டு. தனது சொந்த பலம், செல்வாக்கைவிட சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கின்றன. ஒவ்வொருமுறை ஆட்சியில் அமரும்போதும், அவருக்குப் பேராதரவு உருவாகும். அவரை விமர்சித்தவர்கள்கூட, அவர் கனிந்துவிட்டார், மாறிவிட்டார் என்றெல்லாம் கூறி புளகாங்கிதம் அடைவார்கள்.

இவையெல்லாம் ஓரிரு ஆண்டுகளுக்குத்தான். பிறகு, தேவையில்லாத எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவார். அவரது ஆட்சி மக்களால் விரும்பப்படாத ஆட்சியாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிடும். அந்த ராசி இந்தமுறையும் வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. கடவுள் காப்பாற்றட்டும்.

——————————————————————————————————————
இன்று சேது, நாளை எவரெஸ்ட்?

டி.ஜே.எஸ். ஜார்ஜ்
1920-களில் திராவிட இயக்கத்துக்குத் தூண்டுகோலாக இருந்த சுயமரியாதைக் கொள்கை எங்கே போனது? இன்றைக்கு திராவிட அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கும், தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளும் போக்கு எப்படி உருவானது?

“திராவிட நாட்டில்’ அண்மைக்காலமாக எழுந்துள்ள மோதல் போக்குச் சூழல்களால்தான் இக் கேள்விகள் எழுகின்றன. கர்நாடகத்தில், குறிப்பாக பஸ் பயணிகள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமான விரோத உணர்வு அரசியலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

கர்நாடகத்தில் அரசியல்வாதிகளைச் சார்ந்து நின்று செயல்படும் காவல் துறை, இந்த விஷயத்தை மெத்தனமாகக் கையாண்டதால் நிலைமை மேலும் மோசமானது.

பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் இத்தகைய மோசமான சித்து விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். தெலுங்கு- கங்கை, காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழக அரசு தனது அண்டை மாநிலங்களுடன் மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான சர்ச்சையால் வகுப்புவாத உணர்வுகள் தூண்டப்பட்டதால், இந்த மோதல்போக்கு தேசிய அளவில் விரிவடைந்துள்ளது. ஆளும் திமுகவில் அதிகார மையமாகச் செயல்படும் குழுவினர், இந்தப் பிரச்னைகள் அனைத்திலும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தாங்கள் சொல்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வது சரியல்ல என்பது இவர்களுடைய நிலைப்பாடு. இது சரிதானா?

ஒரு தலைமுறைக்கு முன்னதாக, ராமர்- சீதை கதாபாத்திரங்களைக் கலந்து “”கீமாயணம்” என்ற நாடகத்தை அரங்கேற்றினார் காலஞ்சென்ற நடிகர் எம்.ஆர். ராதா. இன்றைய சூழ்நிலையில் அதை நினைத்துகூடப் பார்க்க முடியாது. அது தேவையற்றதும்கூட.

1852-ல் “”மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன்” என்ற அமைப்பால் வடிவம் கொடுக்கப்பட்ட திராவிடக் கொள்கையில் சில முக்கிய அம்சங்களும் இருந்தன. 1920-களில் திராவிடக் கொள்கையானது மேலும் வலிமை பெற்றது; நீதிக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழிகோலியது.

பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைதான் திராவிடக் கொள்கைக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. பல்வேறு விஷயங்களில் பெரியார் மாறுபட்ட குணாதிசயங்களுடன் செயல்பட்ட போதிலும், நவீன இந்திய வரலாற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். திராவிட அரசியல் வித்தியாசமாகவே இருந்தது. நீதிக் கட்சி வலுவாக இருந்த காலகட்டத்தில், நிலச் சீர்திருத்தம், பெண்கள் விடுதலை ஆகிய அடிப்படைக் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அண்ணாவுக்கு, தெளிவான அரசியல் இலக்குகள் இருந்தபோதிலும், பள்ளிகளில் சரியான வரலாற்றைப் போதிப்பதற்காக இயக்கம் நடத்தினார்; 1950-களின் பிற்பகுதியில் சுமார் 20 ஆயிரம் திமுக தொண்டர்கள் பள்ளி ஆசிரியர்களாக மாறினர்.

தற்போதைய திமுக தலைமைக்கு இதுபோன்ற தொலைநோக்குப் பார்வை இல்லை. சிசுக் கொலைக்கு எதிராக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த 20 ஆயிரம் திமுக தொண்டர்களை கிராமங்களுக்கு அனுப்பலாமே? தமிழகம் முழுவதும் சாதிகளின் பெயரால் நடைபெறும் தொடர் மோதல்களுக்கு முடிவு கட்ட பயிற்சி பெற்ற ஆண்களையும், பெண்களையும் கிராமங்களுக்கு அனுப்பலாமே? இதன்மூலம், சாதிய உணர்வுகளுக்கு முடிவு கட்ட உறுதி ஏற்கலாமே?

இந்தக் கேள்விகளுக்கு வாக்கு வங்கி என்ற தேர்தல் ஜனநாயகத்தில்தான் பதில்கள் பொதிந்து கிடக்கின்றன. வாக்குகளைப் பெறுவதற்கு சாதிதான் குறுக்கு வழி. பெண் சிசுக் கொலை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை உள்ளூர் விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாமே தவிர, வாக்குகளைக் கவர்வதற்கு அவை எந்தவிதத்திலும் உதவாது.

காவிரி நீர், தமிழகத்துக்கு புதிய ரயில்வே கோட்டங்கள் போன்ற எளிதான உணர்வுப்பூர்வமான விஷயங்கள் மூலம் பெருவாரியான மக்களின் வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்பதால், மற்றவற்றைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள், தமிழகத்துக்கு மட்டுமேயான மத்திய அமைச்சர்களாகத்தான் செயல்படுகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலை ஆழப்படுத்துவதற்கு டி. ஆர். பாலுவிடம் ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், இயற்கையின் போக்கை மாற்ற நினைத்தால் பேரழிவு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கடற்கரை மணலைத் தோண்டுவதாலும், அலையாத்திக் காடுகளை அழிப்பதாலும் நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு நமக்குக் கற்றுத் தந்த பாடம். இந்த பாடத்தை நாம் கற்றுக் கொண்டோமா?

எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உயரத்தை சில நூறு அடிகள் வெட்டிக் குறைத்தால், அந்த மலைப் பகுதியில் அதிக லாபம் ஈட்டித் தரும் சுற்றுலா மையங்கள் உருவாகலாம். எவரெஸ்ட் சிகரப் பகுதியை வெட்டுவதற்கு இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா? எவரெஸ்ட் தமிழகத்தில் இல்லாமல் போனதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————–
“ஒரு மணி 45 நிமிடத்தை மிச்சப்படுத்த ரூ. 4 ஆயிரம் கோடி செலவா?’

சென்னை, செப். 29: சேது சமுத்தி ரக் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதன் மூலம் 1 மணி 45 நிமிடத்தை மட் டுமே மிச்சப்படுத்த முடியும்.
இதற்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டுமா? என இந்தியக் கப்பல் படையிலிருந்து ஓய்வுபெற்ற கேப்டன் பாலகிருஷ் ணன் கேள்வி எழுப்பினார்.
சேது சமுத்திர கப்பல் கால்வாய் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென் னையில் வெள்ளிக்கிழமை சேது சமுத்திரம் குறித்த அறிவியல், பொருளாதார ரீதியான நிலைத் தன்மை குறித்த விவாதம் நடத்தப் பட்டது. இதில் பங்கேற்ற அவர் பேசியது: சேது சமுத்திரக் கால்வாய் திட் டத்தின் மூலம், கோல்கத்தாவிலி ருந்து தூத்துக்குடிக்கு கப்பல் போக்குவரத்துக்கான தூரத்தை 340 கடல் மைல்களாகவும், சென் னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல 434 கடல் மைல்களாகவும் குறைக்க முடியும் என இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள் ளது.
பொதுவாக ஒரு கப்பல் கோல் கத்தாவிலிருந்து இலங்கையைச் சுற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு செல்வதற்கு கடக்க வேண்டிய மொத்த தூரம் 1227 கடல் மைல் கள் ஆகும்.
இதே சேது சமுத்திரக் கால் வாய் மூலம் செல்ல, கடக்க வேண் டிய தூரம் 1098 கடல் மைல்கள் ஆகும். இதன் மூலம் கடக்க வேண்டிய தூரத்தில் 129 கடல் மைல்கள் குறைகிறது.
கப்பல் அதிகபட்சமாக ஒரு மணிக்கு 12 கடல் மைல்கள் வேகத் தில் செல்லமுடியும். இதன்படி கோல்கத்தாவிலிருந்து இலங்கை யைச் சுற்றிக்கொண்டு தூத்துக்கு டிக்குச் செல்ல 102.2 மணி நேரம் ஆகும்.
இதே சேது சமுத்திரக் கால்வாய் வழியாகச் சென்றால் 98.5 மணி நேரம் ஆகும். ஏனெனில், திட்டத் தின்படி, சேது சமுத்திரக் கால் வாய் 12 மீட்டர் அளவுக்குதான் ஆழப்படுத்தப்பட உள்ளது. இது போன்ற ஆழம் குறைந்த பகுதியில் கப்பல் செல்லும்போது, கப்பலின் வேகத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும்.
மேலும் கால்வாய் வழியாக பய ணிக்கும் போது கப்பலின் பாது காப்புக்காக ஒரு மாலுமியை பணி யமர்த்தவேண்டும். இவர் கப்ப லில் ஏறி இறங்க குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இதன் மூலம் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்ல மொத்தம் 100.5 மணி நேரம் ஆகும். இதன்படி 1 மணி 45 நிமிடங்கள் மட்டுமே குறைகிறது.
மொத்த தூரத்தில் 129 கடல் மைல்கள் குறைந்து, 1 மணி 45 நிமி டம் மிச்சமாவதற்காக ரூ. 4 ஆயி ரம் கோடியை செலவு செய்ய வேண்டுமா? மேலும் சேது சமுத்திரக் கால் வாய் வழியாக கப்பல் செல்லும் போது, அந்த கப்பல் நிறுவனத் துக்கு ரூ. 19 லட்சம் நஷ்டம் ஏற்ப டும். எனவே இந்தத் திட்டத்தால் எந்த பயனும் இல்லை என்றார் அவர்.
முழுமையான ஆய்வு மேற் கொள்ளப்படவில்லை: இந்தியப் புவியியல் ஆய்வுக் கழக ஓய்வு பெற்ற இயக்குநர் கே. கோபாலகி ருஷ்ணன் கூறியது: ஆதம் பாலம் அமைந்துள்ள பாக்.ஜலசந்தி-மன்னார் வளை குடா பகுதியில் பூகம்பம் வருவ தற்கு அதிக வாய்ப்புகள் உள்ள தென பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அரசு கூறுவதுபோல் ஆதம் பாலம் வெறும் மணல் திட்டுக ளால் மட்டும் உருவாகவில்லை.
பல்வேறு நிலப்பரப்பு மாற்றங்க ளையும், கடலில் ஏற்படும் அதிர்வு களையும் உள்வாங்கி இந்தப் பகுதி ஒரு தடுப்பு அரணாக விளங்கிவரு கிறது.

இந்தப் படிவங்களில் பெரிய பிளவுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிளவுகள் மூலம் அவ்வப் போது நகர்வுகள் ஏற்படும். இத னால் இதன் மேற்பரப்பில் கட்டப் படும் எந்தக் கட்டுமானங்களும் நிலைத்து நிற்காது.

சேது சமுத்திரக் கால்வாய் திட் டத்துக்காக, இந்தியப் புவியியல் ஆய்வுக் கழகம் மூன்று துளைகள் மட்டுமே போட்டு ஆய்வு செய் துள்ளனர். அதுவும் ஆதம் பாலத் தின் மீது ஒரு துளை மட்டும் போட்டு ஆய்வு செய்துள்ளனர்.

முழுமையான திட்டத்துக்கான ஆய்வு இதுவரை மேற்கொள்ளப் படவில்லை.
பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப் படும்: சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பல்லுயிர் பெருக்கம் பெரிதும் பாதிக்கப்படும்.
ஆதம் பாலம் அமைந்துள்ள பாக்.ஜலசந்தி, மன்னார் வளை குடா கடல் உயிரிகள் வாழ்வதற்கு மிக ஏதுவான சூழ்நிலைக் காணப் படுகிறது. சுத்தமான நீர் உள்ள இந்தப் பகுதியில்தான் மீன்கள் இனப்பெருக்கத்தை மேற்கொள் ளும்.

எனவே ஆதம் பாலத்தின் ஒரு பகுதி தோண்டப்படுவதன் மூலம் அசுத்த நீர் கலந்து மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்.
மேலும் சூறாவளி, சுனாமி போன்ற பேராபத்துகள் ஏற்படுவ தோடு, மழைப் பொழிவிலும் மாற் றம் ஏற்படும் என்றார் அவர்.

Posted in Anuman Palam, Backgrounders, Current state, Details, Hanuman Bridge, History, India, Islands, Ramar Palam, Ramayan, Ramayanam, Rameswaram, Sethu, Sethu Bridge, Sri lanka, Srilanka | குறிச்சொல்லிடப்பட்டது: , | 11 Comments »