Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Integration’ Category

Learning Tamil as a Foreign Language – South Travancore Hindu College, Nagercoil

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

சொல்றாங்க.. – தமிழுக்காக ஒரு தாற்காலிக வேடந்தாங்கல்!

அ. அருள்தாசன்

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென் கோடிக்கு வந்து தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. தமிழில் அனா ஆவன்னா தெரியாதவர்கள் 7 மாதங்களில் தமிழ்ப் பாடல்களை ரசித்துப் பாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்றால் இந்த ஆச்சர்யம் உங்களுக்கு இரட்டிப்பாகும். நாம் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரத்தில் பாரதியின் “சிந்து நதியின்..’  பாடலைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தமிழை ஒற்றுப் பிழையில்லாமல் எழுதும் அவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் வெளிநாட்டினர். இங்கு மாணவர்களாக இருக்கும் அவர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ஆசிரியர்கள் என்பது அடுத்த சுவாரஸ்யம். இனியும் காலம் கடத்தாமல் அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லிவிடுகிறோம்.

மைசூரில் செயல்படும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தமிழ்த் துறையில் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேர்ந்து, தமிழைக் கற்று வருகிறார்கள்.

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய வந்திருந்த அவர்கள்,

  1. கர்நாடகம்,
  2. ஹிமாச்சலப்பிரதேசம்,
  3. மணிப்பூர்,
  4. ஒரிசா,
  5. மேற்கு வங்கம்,
  6. அசாம்,
  7. இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் துணையுடன் நாட்டிலுள்ள மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆண்டுதோறும் இதுபோன்று ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்த 24 பேருக்கும் தமிழ் கற்கும் காலத்தில் அவர்களுக்கான மாத ஊதியம் மற்றும் ரூ.800 ஊக்கத் தொகையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் வரையில் இவர்கள் தமிழைக் கற்கின்றனர்.

நாகர்கோவிலுக்கு வந்திருந்த இந்த ஆசிரியர்களை வழிநடத்தும் பேராசிரியர் எஸ். சுந்தரபாலு கூறியதாவது:

இந்தியா, “மொழிகளின் பொக்கிஷம்’. இங்கு 300-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 18 மொழிகள் மட்டுமே அங்கீகாரம் பெற்றவை. அங்கீகாரம் பெற்ற அல்லது பெறாத மொழிகள் குறித்து ஆய்வு செய்யவும், அவற்றைக் கற்றுக் கொள்ளும் வழிகளை உருவாக்கித் தரும் பணியிலும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மொழிகளைக் கற்க ஆசிரிய, ஆசிரியைகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பழமையான, இலக்கியத்துவம் வாய்ந்த, இனிமையான செம்மொழியாகத் தமிழ் இருப்பதால் பல்வேறு மாநிலத்தவரும் தமிழைக் கற்க ஆர்வமாக வருகின்றனர் என்கிறார் சுந்தரபாலு.

தமிழுக்காக இந்துக் கல்லூரியில் தாற்காலிகமாக குழுமியிருந்த வெளிமாநில ஆசிரிய, ஆசிரியைகள் சிலரிடம் தமிழைக் குறித்தும், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் குறித்தும் பேசியபோது கொஞ்சும் தமிழில் அவர்கள் கூறிய சில சுவாரஸ்ய தகவல்கள்:

புலேகொடா ஆர்ச்சிகாந்தி (இலங்கை):

“”இலங்கை ருகுண தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். அங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வருகிறேன். ஆனால், சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிக்க முடியவில்லை. இதனால், தமிழைக் கற்க இங்கு வந்துள்ளேன்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களிடையே தகவல் தொடர்பு பிரச்னை இருக்கிறது. அதைத் தவிர்க்க இந்தப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றார்.

நெப்ரம் புஷ்பராணிதேவி (மணிப்பூர்):

“”மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகளைக் கற்பது கடினம். இதில் தமிழ் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. மணிப்பூரில் முரே மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் அதிகம் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க இதனால் எனக்கு முடியும்.”

லொரெம்பம் கோமோடோன்சனா தேவி (மணிப்பூர்):

“”கடந்த 5 ஆண்டுகளுக்குமுன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சுற்றுலா வந்திருந்தபோது தமிழர்களின் நடவடிக்கைகள் என்னைக் கவர்ந்தது. இங்குள்ள பெண்கள் நெற்றில் பொட்டு வைப்பதும், ஆண்கள் விபூதி வைப்பதும் பிடித்திருக்கிறது. கடவுள் என்றால் அன்பு என்பதைத் தமிழ் மொழி உணர்த்துகிறது” என்றார்.

ஷபியூர் ரஹ்மான், அப்துர் ரஹீம் (அஸ்ஸôம்):

“”அசாம் மாநிலம், போர்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், சமஸ்கிருத ஆசிரியர்கள். தமிழ் மொழி இனிமையானது என்பதனால் இதைக் கற்கிறோம். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் 30 சதவீதம் தொடர்பு இருக்கிறது. ஏலேலோ ஐலசா போன்ற நாட்டுப்புற பாடல் தெரியும். (இவர்களில் ரஹீமுக்கு அசாமி, பெங்காலி, சமஸ்கிருதம், ஹிந்தி, தமிழ், அரபி ஆகிய 6 மொழிகள் தெரியும்).

அசோதோஸ் மாலிக் (ஒரிசா):

“”ஒரிய மொழி குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். தற்போது தமிழைக் கற்பதால் தமிழுக்கும் ஒரிய மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிந்து கொள்கிறேன். தமிழைக் கற்றபின் தமிழில் உள்ள நூல்களை ஒரிய மொழியிலும், ஒரிய மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தில் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் மிக்கவராக இருப்பவர் என முதல்வர் கருணாநிதியைப் பற்றி அறிந்திருக்கிறேன்” என்றார்.

தட்டுத் தடுமாறினாலும் தமிழில் பேசிய இந்த வெளிமாநில ஆசிரியர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியதுதான்.

Posted in Bengal, Ceylon, Foreign, HR, Instructors, Integration, Language, Learn, Literature, Manipur, Manipuri, Nagercoil, Orissa, Singala, Sinhala, Sinhalase, Srilanka, Students, Tamil, Teachers, Unity, University, WB, World | Leave a Comment »

Ve Saaminatha Sharma – Biosketch by Vikraman

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

மறக்கமுடியா அரசியல் அறிஞர்!

விக்கிரமன்

பேரறிஞர், மூதறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் பெயர் சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது “பிளாட்டோவின் அரசியல்’ என்ற அவரது நூலாகும். பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்த நூலை இன்று படிப்பவர்களும் அவரது தெளிந்த தமிழ் நடையைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

தமிழில் அரசியல் நூல்களை எழுதி வெளியிட்ட முன்னோடி சர்மா. “கார்ல் மார்க்ûஸ’ அறிமுகப்படுத்தினார். “புதிய சீனாவைப்’ புரிய வைத்தார். லெனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கினார். ரஷியப் புரட்சியை எடுத்துக் கூறினார். கிரீஸ் வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டினார்.

வெ. சாமிநாத சர்மா அப்போதைய “வட ஆர்க்காடு’ மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895-ல் செப்டம்பர் 17-ல் பிறந்தார். தந்தை முனுசாமி அய்யர். தாயார் பார்வதி அம்மாள். செங்கல்பட்டிலுள்ள நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற சர்மா ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார். இளம் வயதிலேயே தேசபக்தி, எழுத்தார்வம் மிகுந்த சர்மா தமது பதினேழாம் வயதில் – 1914 ஜூலையில் “கௌரிமணி’ எனும் சமூக நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது விலை மூன்றணா!

தேசிய இயக்கம் கொழுந்துவிடத் தொடங்கிய காலம். சர்மா “பாணபுரத்து வீரன்’ எனும் நாடகத்தை எழுதினார். டி.கே.எஸ். சகோதரர்கள் “தேசபக்தி’ எனும் பெயரில் அதை நாடகமாக நடத்தினார்கள். அந்த நாடகம் அக்கால மாணவரிடையே தேசபக்தியை எவ்வாறு வளர்த்தது என்பதை டி.கே. சண்முகம் நமது “நாடக வாழ்க்கை’ நூலில் எடுத்துக் கூறியுள்ளார்.

ம.பொ. சிவஞானம் தமது “விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு’ எனும் நூலில் பாராட்டியுள்ளார். தமிழக அரசு முன்னாள் செயலர் க. திரவியம் தமது “தேசியம் வளர்த்த தமிழ்’ என்று நூலில் “தேசிய இலக்கியம்’ என்று அதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகாலத்தில் “இந்து நேசன்’ “சுல்பதரு’ போன்ற பத்திரிகைகளில் சர்மா பணியாற்றினார். ஆனால், 1917-ல் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தொடங்கிய “தேசபக்தனில்’ தொண்டாற்றத் தொடங்கியது அவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. அப்போது பெரிய தேசபக்தர்களான சுப்ரமணிய சிவா. வ.வே.சு. அய்யர், மகாகவி பாரதியார் போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. “கல்கி’ சர்மாவுடன் பணியாற்றினார். பின்னர் திரு.வி.க.வின் “நவசக்தி’யில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. சுவைமிகுந்த இலக்கியத் தொடர்களை, கட்டுரைகளைப் படைத்தார். செய்தித் தலைப்புகளை அமைப்பதில் சர்மா திறமை மிக்கவர்.

சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டினின்று பர்மா சென்றுவிட்ட சர்மா, 1937 – 42-ல் ரங்கூனில் “ஜோதி’ என்ற மாத இதழைத் தொடங்கித் திறம்பட நடத்தினார். பிற்காலத்தில் “சக்தி’ போன்ற சிறந்த மாத இதழ் தோன்றக் காரணமாயிருந்தது ஜோதியே. 1942-ல் ஜப்பானியர் பர்மாவில் குண்டு வீசத் தொடங்கியபோது சர்மாவும், அவரது துணைவியாரும் தமிழகம் திரும்பினர். பர்மாவினின்று நடந்தும், காரிலும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்த அனுபவத்தை “பர்மா நடைப்பயணம்’ எனும் நூலில் எழுதி வைத்தார்.

சர்மா சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மட்டுமல்ல; அவர் முற்போக்குக் கருத்தும் கொண்டவர். வரதட்சிணை எதிர்ப்பு சங்கத்தை நிறுவினார். 1914-ல் நண்பர்கள் உதவியுடன் சென்னை செந்தமிழ்ச் சங்க சங்கத்தை ஆரம்பித்தார். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வைத் தலைவராக இருக்குமாறு அணுகினாராம்! 1958-ல் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தார்.

1914-ஆம் ஆண்டில் மங்களம் என்ற பெண்மணியை மணம் புரிந்துகொண்டார். தம் துணைவியாரையும் இலக்கிய, தேசியத் தொண்டில் சமமாக ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கிறார். சர்மாவின் இலக்கியத் தொண்டுக்கு அம்மையார் 1956-ல் மறையும் வரை உறுதுணையாக இருந்திருக்கிறார். சர்மாவும் மங்களம் அம்மாளும் பெற்றெடுத்தவை அருமையான நூல்களே. மனைவியை இழந்த துக்கத்தில் அவர் எழுதிய “அவள்பிரிவு’ என்ற கடித நூல் கடிதக் கலையில் சிறந்ததாகும்.

திட்டமிட்ட வாழ்க்கையை உடையவர் சர்மா. ஆனால் கருணை உள்ளம் நிறைந்தவர். ஒழுக்கம், தமிழ்ப்பற்று இரண்டும் கலந்த உருவமே வெ. சாமிநாத சர்மா.

“உலகம் சுற்றும் தமிழர்’ என்ற புகழ்ப் பெயர் கொண்ட காந்தி திரைப்படச் சிற்பி ஏ.கே. செட்டியார் தொடங்கிய “குமரி மலர்’ எனும் மாத இதழின் ஆசிரியராக 1945-46ல் பணியாற்றினார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். தியாகராய நகரில் அவர் நடத்திய இலக்கியச் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டேன். உஸ்மான் சாலையிலுள்ள பர்ணசாலை போன்ற குடிலில் நான் ஆசிரியராக இருந்த இதழுக்குக் கட்டுரை கேட்டுப் பெறச் சந்தித்தேன். 1978 ஆம் ஆண்டு நண்பர் பெ.சு. மணியுடன், கலாúக்ஷத்ரா விடுதியில் சந்தித்தேன். முதுமையும் நோயும் வாட்டிய நிலையிலும் தமிழ் வளர்ச்சியைப் பற்றியே அவர் பேசினார்.

பர்மா நடைப்பயணக் கையெழுத்துப் பிரதியை பெ.சு. மணி தேடி எடுத்து என்னிடம் தந்தார். தன் நூல்களை வெளியிடும் உரிமையை, சர்மாஜி அவரிடம் அளித்திருந்தார். நான் அப்போது ஆசிரியராக இருந்த “அமுதசுரபி’ மாத இதழில் வெளியிடச் சம்மதித்தேன். கட்டுரை தொடங்கப் போகும் அறிவிப்பைப் பார்த்து அந்த மூதறிஞர் மகிழ்ச்சியடைந்தார். முதல் இதழ் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு இரு நாள்களுக்கு முன்பே அவர் மறைந்தார்.

“பர்மா வழி நடைப்பயணத்தை’ தமிழ் மக்களுக்கு வெளியிட்டுப் படிக்கச் செய்தது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறு.

பர்மா வழி நடைப்பயணத்தைப் படிக்கும்போது நாம் சர்மாவுடன் அந்தப் பகுதியில் அவருடன் சேர்ந்து பயணம் செய்த உணர்வை அடைந்திருக்கிறோம். அறிஞர் சர்மா பயணக் கட்டுரையாக எழுதியிருந்தாலும் இந்த நூல் ஒரு வரலாற்று நூலாகும்.

தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பேரிலக்கியம் அந்தப் பயணக் கட்டுரை. மறைந்த பேரெழுத்தாளர் கு. அழகிரிசாமி, சர்மாவைப் பற்றி 54 ஆண்டுகளுக்கு முன்பு பாராட்டி எழுதினார்.

“”தமிழகத்தில் ஆங்கிலம் தெரியாத தமிழர்களும் அரிஸ்டாட்டிûஸப் பற்றித் தெரிந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பிளேட்டோவையும் ரூúஸôவையும் அரிஸ்டாட்டிலையும் அறிமுகப்படுத்தியவர் சர்மாதான். தமிழ்ச் சமுதாயத்திற்கு எப்பேர்ப்பட்ட பேருபகாரம் இது!

வெ. சாமிநாத சர்மா சிறிது குள்ளமாக இருப்பார். ராஜகோபாலச்சாரியாரைப் போல் மொட்டைத் தலை. சிவந்த மேனி, கதர்வேட்டியும் கதர்ஜிப்பாவும் இவருடைய உடை. சிலசமயங்களில் நேருஜியைப் போல் அரை கோட் அணிந்திருப்பார். தொலைவில் பார்த்தால், திரு.வி.க.வின் தோற்றத்தில் இருப்பார். இவரது எளிய வாழ்க்கைக்கு மகாத்மாவின் எளிய வாழ்க்கையைத்தான் உவமையாகக் கூற முடியும்.

அன்பென்ற மலர், இதழ் விரித்துப் பூத்தது போன்ற தெய்வீகச் சிரிப்பு. சாந்தி பொலியும் முகம். அன்பு சுரக்கும் இனிய சொற்கள். அவர்தான் சர்மாஜி.

செப்டம்பர் 17 ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். ஒழுக்க சீலரான, பண்பாட்டுக் காவலரான, எழுத்துக்காக வாழ்ந்தவரான சர்மாஜி 1978 ஜனவரி 7ஆம் தேதி, கலாúக்ஷத்ராவில் தன் இறுதி மூச்சு நிற்கும்வரை, தமிழ் மொழியின் உயர்வைப் பற்றி மட்டுமே நினைத்தவரை, தமிழ் உள்ள வரை மறக்க முடியாது.

(இன்று அரசியல் அறிஞர் வெ. சாமிநாத சர்மாவின் 112ஆவது பிறந்த நாள்)

(கட்டுரையாளர்: அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்).

Posted in Alagirisami, Alakirisami, Amudhasurabhi, Amudhasurabi, Amuthasurabhi, Amuthasurabi, Arcot, Author, Azhagirisami, Azhakirisami, Biosketch, Books, Burma, China, Cinema, Congress, Drama, Faces, Films, Gandhi, Greece, History, Integration, journalism, journalist, Kadhar, Kalashethra, Kalashetra, Lenin, Literature, Ma Po Sivanjaanam, Mag, magazine, MaPoSi, Marx, Media, Movies, MSM, Nation, National, people, Person, Plato, Rajaji, Read, Russia, Saaminadha, Saaminatha, Saaminatha Sharma, Saminatha, Saminatha Sharma, Sharma, Sivajaanam, Sivanjaanam, Tamil, Theater, Theatre, TKS, Tour, Travel, Ve Saaminatha Sharma, Vigraman, Vikraman, VSS, Writer | Leave a Comment »

Compact Fluorescent lamp (cfl) & Incandescent Bulb – Global Warming

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

குறு ஒளிர் விளக்குகள் } நல்ல தீர்வா?

என். ரமேஷ்

தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருள்களால் உருவாகும் கரியமில வாயு காரணமாக புவி வெப்பம் அதிகரித்து வருகிறது; இதனால் கடல் நீர்மட்டம் உயர்வு, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, உணவு உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை உலக சமுதாயம் உணரத் தொடங்கியுள்ளது.

புவி வெப்பத்தால் ஏற்படக் கூடிய பேரழிவிலிருந்து தப்பிக்க, வளர்ச்சியடைந்த நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அளவைக் குறைக்க வகை செய்யும் கியோட்டோ ஒப்பந்தம் உள்ளிட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப் பிரச்னையின் தீர்வுக்கு, உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை நேரடியாக வழங்க வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள டங்ஸ்டன் இழை கொண்ட “குண்டு பல்பு’களை குறு ஒளிர் விளக்குகளாக (compact fluorescent lamp-cfl) மாற்ற வேண்டும் எனப் பெரும் இயக்கமே நடைபெற்று வருகிறது.

பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகள் “குண்டு பல்பு’களை சிஎஃப்எல்-ஆக மாற்றும் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன. ஆஸ்திரேலியா 2010-க்குள்ளும், கனடா 2012-க்குள் முழுமையாக சிஎஃப்எல்-லுக்கு மாற முடிவு செய்துள்ளன.

இந்தியாவில் கிரீன் பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், தில்லி மாநில அரசு – அங்கு செயல்படும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் இந்த இயக்கத்தில் முனைப்புடன் செயல்படுகின்றன.

சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள பெரும்பாலான மேல்தட்டு, நடுத்தரக் குடும்பங்கள் தற்போது சிஎஃப்எல்-லுக்கு மாறி வருகின்றன. சிஎஃப்எல் எனப்படும் இந்த குறு ஒளிர் விளக்குகள், குண்டு பல்புகளைவிட ஏறத்தாழ ஐந்து மடங்கு குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. 100 வாட் குண்டு பல்பு வழங்கும் ஒளியை 20 வாட் சிஎஃப்எல் விளக்கு வழங்குகிறது. இதன்மூலம் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரச் செலவையும், அதற்குரிய கட்டணத்தையும் குறைக்க முடியும்.

மேலும், ஒரு குண்டு பல்பு செயலிழக்கும் வரை, சராசரியாக 1,000 மணி நேரம் எரியும் என்றால், சிஎஃப்எல் விளக்குகள் அதைவிடப் பலமடங்கு நேரம் எரியக் கூடியவை. இதனால் ஆண்டுக்கு ஒரு சிஎஃப்எல் பயன்பாடு மூலம், அதற்குக் கொடுக்கும் கூடுதல் விலை உள்ளிட்ட அனைத்துச் செலவும் போக, ரூ. 300-க்கும் அதிகமாகச் சேமிக்க முடியும்.

நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைக்கும் இந்த லாபம் தவிர்த்து, மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றின் பயன்பாட்டு அளவும் குறைகிறது. 1,000 மணி நேரம் ஒரு குண்டு பல்பு மின்சாரம் வழங்க 71 கிலோ நிலக்கரி தேவையென்றால், சிஎஃப்எல்லுக்கு 14.2 கிலோ மட்டும் போதுமானது. இதேபோன்று, குண்டு பல்புக்கு 535 லிட்டர், சிஎஃப்எல்லுக்கு 107 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு குண்டு பல்பு 1,000 மணி நேரம் எரிவதற்கான மின் சக்தி உற்பத்தியில் 99.7 கிலோ கரியமில வாயு வெளியிடப்படும். ஆனால், சிஎஃப்எல் எரிவதால் 19.94 கிலோ மட்டும் வெளியிடப்படும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் சல்பர்-டை-ஆக்சைடு, நுண் துகள்கள், எரி சாம்பல் போன்றவையும் சிஎஃப்எல் பயன்பாட்டால் குறையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் பலர் கூறுகின்றனர்.

ஆனால், “டாக்சிக்ஸ் லிங்’ (Toxics Link) என்ற தன்னார்வ அமைப்பு, சிஎஃப்எல்-லுக்கு மாறுவதற்கு முன் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது என எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இதற்குக் காரணம், சிஎஃப்எல், நாம் வழக்கமாக பயன்படுத்தும் குழல் விளக்குகள் போன்ற ஒளிர் விளக்குகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது என்பதுதான்.

நமது சூழலில் மிகச் சிறு அளவில் இருந்தாலும் நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் கைகால் அசைவு, நினைவாற்றல் ஆகியவற்றையும் பாதிக்கக் கூடியது பாதரசம்.

ஒரு சராசரி சிஎஃப்எல் விளக்கில் 0.5 மில்லி கிராம் பாதரசம் உள்ளது. இந்த விளக்குகள் உடைந்தால் பாதரச ஆவி வெளிப்பட்டு வீட்டில் உள்ளோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். உடையாமல் செயலிழந்து (ப்யூஸ்) போன பின்னரும் வழக்கமாக இவை மாநகராட்சி, நகராட்சி குப்பைக் கிடங்குகளுக்கே செல்கின்றன. அங்கு இவை உடைக்கப்பட்டாலும் அந்த பாதரச ஆவி நமது சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை உருவாக்கும்.

தற்போது இந்தியாவில் எரியும் விளக்குகளில் 10 சதம் சிஎஃப்எல் விளக்குகள். ஆண்டுதோறும் சிஎஃப்எல் விளக்குகள் தயாரிப்பில் 56 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. முழுவதும் சிஎஃப்எல் விளக்குக்கு மாறினால் இந்த அளவு ஆண்டுக்கு 560 டன்னாக உயரும். எனவே, பசுமைக் குடில் வாயுக்களைக் குறைப்பதற்காக மற்றொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை என பாதரசத்தை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

சிஎஃப்எல்-லுக்கு மாற்றாக ஒளி உமிழும் டையோடுகளைப் ( Light Emitting Diodes-எல் ஈ டி) பயன்படுத்த முடியும் என இவர்கள் வாதிடுகின்றனர். பாதரசத்தைப் பயன்படுத்தாத இவை சிஎஃப்எல்களைவிடக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதுடன் பல்லாயிரம் மணி நேரத்துக்கு மேல் எரியக் கூடியவை.

ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போதும் பாதரசம் வெளியாகிறது. சிஎஃப்எல்லைப் பயன்படுத்தும் போது இந்த பாதரசம் வெளியாகும் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மட்டும் பாதரசம் வெளியாவதைக் கட்டுப்படுத்துவது எளிதானது. கோடிக்கணக்கான வீடுகளில், குப்பை மேடுகளில் வெளியாகும் போது கட்டுப்படுத்துவது கடினம்.

எனவே, எல்ஈடி போன்ற மாற்றுகள் பரவலான பயன்பாட்டுக்கு வரும் வரை, இடைக்கால ஏற்பாடாக கனடா போன்ற நாடுகளில் சிஎஃப்எல்-களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதரசத்தை மீட்டு எடுக்கலாம். செயலிழந்த சிஎஃப்எல்களைத் திரும்பப் பெறுவது, மறுசுழற்சி செய்வது போன்றவற்றுக்கு ஆகும் செலவை சிஎஃப்எல்லைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஏற்கச் செய்யலாம்.

———————————————————————————————————–
நதியோரம் தேயும் நாகரிகம்!

இரா. சோமசுந்தரம்

வாழ்வின் எல்லா நேரங்களிலும் நாம் ஒருவகையில் அன்றாடம் காய்ச்சிகளின் மனநிலையில்தான் இருக்கின்றோம். அன்றைய தேவை நிறைவடைந்தால் சரி.

அது தேர்தல் என்றாலும், ஊழல் என்றாலும் அல்லது , கொலை, கொள்ளை, விபத்து, மரணங்கள், குண்டுவெடிப்பு – எதுவென்றாலும் சரி, அன்றைய நாளுடன் மறக்கப்படும்.

இந்தப் பட்டியலில் தண்ணீரும் ஒன்று. வீட்டு இணைப்பில் குடிநீர் வந்தது என்றால் அத்துடன் அதை மறந்துவிடுகிறோம். ஆனால் அந்த குடிநீரை வழங்கும் நதிக்கு எத்தகைய கேடுகளைச் செய்து வருகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

இந்திய நதிகள் யாவும், அவை பெரியன என்றாலும் சிறியவை என்றாலும், மழைக்காலத்தில் வெள்ளமும் மற்ற நாட்களில் சாக்கடையும் ஓடும் என்ற நிலைக்கு மாறிவிட்டது. எல்லாக் கழிவுகளும் நதிகளில் கலக்கின்றன.

இது காலங்காலமாக நடந்து வருவதுதானே? இப்போது மட்டும் என்ன புதிதாகத் தீங்கு வந்துவிட்டது?

காலங்காலமாக நதியில் குளித்த மனிதர்கள் வேதிப்பொருள் கலந்த சோப்பைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு “தோல் வெளுக்க சாம்பலுண்டு. துணி வெளுக்க மண்உண்டு’. அவர்கள் ஆற்றோரம் திறந்தவெளிகளையும், வயல்வரப்புகளையும் கழிப்பிடமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தொழிற்சாலைகள் இல்லை. அன்றைய சாயத் தொழில்கூட மரம், செடி, மலர், மரப்பட்டைகள் என இயற்கைப் பொருள்களைக் கொண்டு நடந்தது. யாருக்கும் பாதிப்பில்லை.

இன்றோ நிலைமை வேறு; இவை யாவும் தலைகீழாக மாறிவிட்டன.

தற்போது நதியில் கலக்கும் மாசுகளில் 80 சதவீதம் மனிதக் கழிவுகள்! ஏனையக் கழிவுகள் தொழில்துறையைச் சேர்ந்தவை.

எல்லா வீடுகளிலும் “ஃபிளஷ் அவுட்’ நவீன கழிப்பறை உள்ளது; இன்று இது தவிர்க்கமுடியாத ஒன்று.

ஒரு குடும்பத்துக்கு சுமார் 1.5 கிலோ மலஜலத்தை “”சாக்கடையில் தள்ளிவிட” குறைந்தது 300 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்தத் தண்ணீரும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. பெரும்பாலும், மாநகராட்சி அல்லது நகராட்சி சுத்திகரித்து, வீட்டு இணைப்பில் வழக்கும் குடிநீர்தான்.

சில வெளிநாடுகளில் இத்தகைய ஃபிளஷ் அவுட்களில் பயன்படுத்த மறுசுழற்சி-நீர் விநியோகம் உண்டு. இந்தியாவில் அதற்கு வாய்ப்பே கிடையாது.

உள்ளாட்சி அமைப்புகள், இந்தக் கழிவுகளை ஊருக்கு வெளியே ஒன்றுதிரட்டி, அவற்றை ஓரளவு சுத்திகரித்து பின்னரே நதியில் கலக்கவேண்டும் என்பதற்கு முயற்சிகள் பல எடுக்கப்பட்டன.

அதன் விளைவுதான் நதிகள் பாதுகாப்புத் திட்டம். பல ஆயிரம் கோடி ரூபாயை, இத்திட்டத்திற்காக “ஒதுக்கினார்கள்’.

நகரத்தின் சாக்கடையைச் சுத்திகரித்து இயற்கை உரங்கள் தயாரிப்பு, கீரை காய்கறி வளர்ப்பு – என்றெல்லாம் செய்திகள் வந்தனவே தவிர, நடைமுறையில் எதுவுமே நடக்கவில்லை. சுத்திகரிக்கப்படாத வீட்டுச் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக நதிகளில் கலந்துகொண்டே இருக்கின்றன. இன்றளவும்!

ஒரு மனிதனின் மல, ஜலத்தில் அவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருளை விளைவிக்கப் போதுமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் அனைத்தும் உள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்த இயற்கை சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. நீரில் கரைந்து நீர்த்துப்போகிறபோதுதான் சிறுநீர் ஒரு நல்ல உரமாக மாறும். வெயில் காய்ந்து கிருமிகள் அழிந்த உலர்மலம்தான் தீங்கற்ற உரமாக மாறும். ஆனால் இதற்கு மனித நாகரிகம் இடம் இல்லாமல் செய்துவிட்டது. ஆகவே மலக்கிருமிகள் நேரடியாக நதியைச் சென்றடைகின்றன.

ஓடும் நதிக்கு தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் சக்தி உள்ளது என்பது உண்மையே. நதியில் கலக்கும் உயிர்க்கழிவுகளின் மூலக்கூறுகளைச் சிதைத்து, உருமாற்றம் செய்ய போதுமான அளவு ஆக்சிஜன் நதிநீரில் இருக்க வேண்டும்.

ஆனால் ரசாயன கழிவுகள் நீரை மாசுபடுத்தி, அதன் இயற்கையான சக்தியை ஒடுக்கிவிடுகின்றன. இயற்கையான சுத்திகரிப்புக்கு ஆற்றுமணல் அவசியம். அதுவும் இப்போது பெருமளவில் சுரண்டப்படுகிறது.

நதிநீரைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும்; இல்லையெனில், குடிநீருக்காகப் பெரும்பணத்தைச் செலவிட நேரும்.

மனிதன் பெரிய அறிவுஜீவிதான்!

அதற்கு ஒரு சின்ன உதாரணம்:

ஒரு மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை இணைத்து, அதிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை அந்த வளாகத்தில் உள்ள டீ கடைகள், ஹோட்டல்களில் பயன்படுத்தினால் எரிபொருள் செலவு மிகமிகக் குறையும் என்ற திட்டத்தை முன்வைத்தபோது, காது, கண், மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “அய்யய்யே..எப்படி வியாபாரம் நடக்கும்?’ என்று எதிர்த்தார்கள்.

அதே கழிப்பறைகளின் மலஜலம் அனைத்தையும் பக்கத்தில் உள்ள நதியில் கலந்து, அந்த தண்ணீரைத்தான் மீண்டும் விநியோக்கிறோம் என்று அதிகாரிகள் சொன்னபோது, “சுடுகாடு கூடத்தான் ஆத்தோரம் இருக்குது. எல்லாம் வெள்ளத்துல போறதுதானே’ என்றார்கள்.

Posted in Alternate, Atomic, Biogas, Brazil, Burn, Carbon, Cauvery, CFL, Coal, Conservation, Crap, dead, Degradable, Detergents, Diesel, Disposal, Drill, Drinking, Drought, Earthquake, Electricity, Emission, emissions, energy, Environment, ethanol, Flowers, Flush, Food, Fuel, Ganga, Ganges, Garbage, Gas, Gore, Incandescent, Integration, Interlink, Kyoto, Lamps, Laundry, LED, Lights, Lignite, Lumniscent, Mercury, Mineral, Motor, Nature, Nuclear, Ozone, Petrol, Plants, Pollution, Power, Pump, Purify, Rain, Recycle, Removal, Restrooms, River, Shit, Soaps, Toilets, Toxics, Trash, Trees, Tsunami, Tube, Tubelight, Underground, Urea, Urine, Warming, Waste, Water, Well | 1 Comment »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

Question & Answers with CPI(M) – Rich Party, Support for Govt

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

அரசியல்

கேள்வித் திருவிழா: டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

மத்திய அரசை மிரட்டுகிறோமா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை தொடர்ந்து மிரட்டி வரும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாட்டினை நியாயப்படுத்துகிறீர்களா…?

இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடதுசாரிகள் எப்போதுமே மிரட்டியது கிடையாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்கள் நலனை உருவாக்குகின்ற சில திட்டங்களை அறிவித்திருக்கின்றன.

அவற்றின் மீது கூடுதலான அழுத்தம் கொடுத்து அவற்றைச் செயல் படுத்துவதன் மூலம், மக்களுடைய எதிர்காலம் செழிப்பாக இருக்கும். வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களை வாழ வைக்க முடியும். எனவே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் உள்ள மக்களை மேம்படுத்தக்கூடிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் கூறிவருகின்றன.

உதாரணமாக விலைவாசி உயர்வு பிரச்சினை. அதில் முக்கியமானது பெட்ரோல், டீஸல் விலை உயர்வு. இதைத் தடுப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.

அரசு அடிக்கடிப் போடும் வரிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையுயர்வைத் தடுக்கலாம். ஏனென்றால் பெட்ரோல், டீஸல் விலை உயர்வு என்பது சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்ற பொருள்களில் இருந்து அத்தனை பொருள்களும் விலை ஏறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

ஆகவேதான் நாங்கள் விலையைக் கட்டுப்படுத்துங்கள் என்கிறோம். இதை மிரட்டல் என்று அருள்கூர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாது.

இந்திய நாடும் -அமெரிக்காவும் செய்யக்கூடிய அணு ஒப்பந்தம் என்பது தேச முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அமெரிக்கா, தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக தன்னுடைய ஆதரவு நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

இது இந்தியாவுக்கு நல்லதல்ல. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அணிசாராக் கொள்கை. அதன் அடிப்படையில் செயல்படுவதுதான் நமக்கு நல்லது. “சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை’ என்று குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அறிவிக்கபட்ட பிறகும் அரசு அதிலிருந்து மாறுகிறது.

இதை சுட்டிக்காட்டி மக்களுக்கு விளக்குவதை அரசை நிர்பந்தப்படுத்துவதாகவோ, மிரட்டுவதாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் சி.பி.எம். கட்சிக்குத்தான் அதிக அளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது உண்மையா?

எஸ். கணேசன், கடலூர்.

உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் சி.பி.எம். தன்னுடைய கட்சியை நடத்துவதற்கும், மக்களை சந்திப்பதற்கும், கட்சி வளர்ச்சி ஏற்பாடுகளுக்கும் கட்சி இருக்கும் எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், ஒன்றியங்களிலும், சில கிளைகளிலும் கூட அலுவலகங்கள் வைத்திருக்கிறது.

அந்த அலுவலகத்திற்கான நிலம், கட்டிடம் போன்றவற்றை வைத்துக்கொண்டு நாங்கள்தான் அதிகச் சொத்து இருக்கக்கூடிய கட்சியினர் என்று கூறக்கூடாது. ஏனென்றால் அது மக்களுடைய சொத்தே தவிர சி.பி.எம். சொத்து அல்ல.

மற்ற கட்சிகளுக்கும், சி.பி.எம். கட்சிக்கும் ஓர் அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது. மற்ற கட்சி களில் தலைவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஆனால் சி.பி.எம். கட்சியில், கட்சி வளமாக இருக்கிறது. அதில் இருக்கும் தலைவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள்.

சி.பி.எம். கட்சியில் ஊழியர்களின் சம்பள விகிதம் எப்படி?

பா.சு. மணிவண்ணன், திருப்பூர்.

சி.பி.எம். கட்சியில் முழு நேர ஊழியர்களின் ஊதியம் மாநிலத்துக்கு, மாநிலம் வித்தியாசப்படும். சி.பி.எம். கட்சியில் இருக்கக்கூடிய முழு நேர ஊழியர்களில் சொந்தமாக குடும்ப வருமான வாய்ப்புகள் இருக்கக்கூடியவர்கள் கட்சியிலிருந்து எந்தவிதமான ஊதியமும் எதிர்பார்க்காமல் பணியாற்றுகிறார்கள்.

கட்சியை மட்டும் நம்பி வாழ்கிறவர்கள், கட்சி கொடுக்கக்கூடிய சிறு அலவன்ûஸ மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். அது கஷ்டமான வாழ்க்கைதான். கட்சியின் ஊழியர்களை எடுத்துக் கொண்டால் 500 ரூபாய் முதல், 4000 ரூபாய் வரை ஊதியம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த 4000 ரூபாய் என்பது மாநகரில் மட்டும் அல்ல, வட்டத்திலேயும் உண்டு. இது ஏதோ பதவி அடிப்படையில் என்றெல்லாம் இல்லை.

இரண்டாவது, சி.பி.எம்.மில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய சம்பளத்தை கட்சிக்காகவே கொடுத்து விடுகிறார்கள். கட்சி ஏற்கெனவே அவர்களுக்கு எவ்வளவு ஊதியத்தை நிர்ணயித்து இருக்கிறதோ அந்த ஊதியத்தை வழங்கும்.

ஆகவே மந்திரி என்று சொன்னாலோ, சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொன்னாலோ அவரையும், அப்படியில்லாதவர்களையும் கட்சி வித்தியாசம் பார்க்காது. முதலமைச்சர் உள்பட அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும் பாணி எங்கள் கட்சியின் பாணி.

இது தவிர, பகுதி நேர ஊழியர்கள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறவர்கள்தான் பகுதி நேர ஊழியர்கள். சிலர் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு சி.பி.எம்.மில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் உணர்வு செத்துப் போகவில்லை’ என கி. வீரமணி கூறியுள்ளாரே…!

அ. மாணிக்கம், ராமநாதபுரம்.

ஈழத்தில் தமிழ் மக்கள் உறுதியுடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே சி.பி.எம்.மின் நிலை. அங்கு தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும்; முழு உரிமையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.

இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், “அது ஒன்றுபட்ட இலங்கையில்தான் நடக்க முடியும்’ என்ற எங்களுடைய கருத்துக்கும், “தனி ஈழம் உருவாக வேண்டும்’ என்கிற கி. வீரமணியின் கருத்துக்கும் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது.

பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநிலம் கஹோத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பாபுபாய் கடாரா தனது 3 குழந்தைகளுக்கு 6 பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து…?

வீரராகவன், மன்னார்குடி.

சமீப காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். வேறு பெண்ணை தன்னுடைய மனைவி என்கிற முறையில் வி.ஐ.பி. பாஸ்போர்ட்டுடன் அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவைகளெல்லாம் நம்முடைய அரசியல் கலாசாரச் சீரழிவிற்குக் காரணம். பி.ஜே.பி. ஒரு வித்தியாசமான கட்சி என்பதை அந்தக் கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மும்பை குண்டு வெடிப்பில் முன்னாள் சுங்க அதிகாரி சோம்நாத் தாபாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே…!

என். குமரன், வேளாங்கண்ணி.

நீதிமன்றம் பூரணமாக, வருடக் கணக்காக விசாரித்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. முழுத் தீர்ப்பையும் பார்த்துதான் அதைப் பற்றி சொல்ல முடியும். ஆனால் நீதிமன்றம் ஆபத்தானவர்கள் மீது கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பில் ஏதாவது தவறு இருக்குமேயானால் சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியும்.

—————————————————————————————–

டி.கே.ரங்கராஜன் , சி.பி.எம். மத்திய குழு உறுப்பினர்

* “”முல்லைப் பெரியாறில் கேரள அரசு அணைகட்டுவதற்கு தி.மு.க. அரசும் மறைமுகமாக உதவி செய்கிறது போலிருக்கிறது…” என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளாரே…!

க. ஜெகன், சிவகங்கை.

நதி நீர் பிரச்சினை என்பது இன்று பல்வேறு மாநிலங்களுக்கிடையே தாவாவை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனும் தாவா உள்ளது. நம்முடைய நியாயத்தை கோரிப் பெற, தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

தி.மு.க. அரசு அண்டை மாநிலங்களுடன் இப்படி மோதலற்ற போக்கைக் கடைப்பிடித்து வருவது பாராட்டத் தக்கது.

ஜூலை 26ஆம் தேதியும் டெல்லியில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளார். அவரும் இது குறித்து இரண்டு முதல்வர்களையும் அழைத்துப் பேசுவதாக கூறியுள்ளார்.

முன்னாள் பாரத ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் போன்ற அறிவு ஜீவிகள், நதி நீர் இணைப்பு குறித்து ஒரு கருத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் மோதலற்ற போக்கை கடைப்பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்த அணுகுமுறை நண்பர் பழ. நெடுமாறனுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக, விவரங்களைத் தெளிவாகப் புரிந்த அவர், முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிப்பது நமக்கு ஏற்புடையதல்ல.

* ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதாக நினைக்கிறீர்களா?

என். செல்வம், நாகர்கோவில்.

“காம்ப்ரமைஸ்’ என்பது ஒரு தவறான வார்த்தை அல்ல. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோட்பாடு ரீதியான நிலையை மார்க்ஸிஸ்ட் கட்சி எடுத்தது. இடது சாரிகள் அனைவருமே இணைந்து அதே நிலையைத்தான் வலியுறுத்தினோம்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்கக் கூடியவர், அரசியல் நுணுக்கங்களைத் தெரிந்த ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் அவர் ஓரளவுக்குப் பண்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆகவே மதசார்பற்ற, அரசியல் சட்டத்தைப் புரிந்திருக்கக்கூடிய, இன்றைய இந்திய நாட்டின் தேவையை உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நபர் ஜனாதிபதியாக வருவது இன்றைய காலகட்டத்தில் நல்லது என்பதே எங்கள் கருத்து.

அந்தக் கருத்தை நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிடமும் சொன்னோம். அவர்கள் நிறுத்திய பிரதீபா பட்டீலை நாங்கள் ஆதரித்தோம்.

முதலில் இந்த நிலையை எடுக்கும்போதே எந்தக் காரணத்தைக் கொண்டும், மார்க்ஸிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைக் கோரவுமில்லை; அப்படியொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. அதே போன்று ஏனைய இடதுசாரித் தோழர்களுக்கும் ஜனாதிபதி பதவி மீது கண்ணுமில்லை, விருப்பமுமில்லை.

* உங்களைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் பற்றி…?

க.நெடுஞ்செழியன், அய்யப்பன்தாங்கல்.

என்னைக் கவர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில்

  • தோழர் ராமமூர்த்தி,
  • தோழர் ஜீவா,
  • தோழர் கல்யாணசுந்தரம்,
  • உமாநாத்,
  • சங்கரைய்யா போன்றவர்கள்.

இந்தத் தலைவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் ஒரே மாதிரியாக இருந்ததை நான் 64க்கு முன்னால் பார்த்தேன். அதற்குப் பின் கட்சி பிரிந்த பிறகு கொள்கைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளின் விளைவாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

அதன்பிறகு நான் ஏற்கெனவே சொன்ன சில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கொள்கை ரீதியாக மாறிப்போனார்கள். அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தவிதமான வருத்தமோ, வேதனையோ எனக்குக் கிடையாது.

மற்றபடி கொள்கையை ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்திய விஷயத்திலும், சொல்லுக்கும், செயலுக்கும் ஒற்றுமையாக நடந்துகொண்ட விஷயத்திலும் மார்க்ஸிஸ்ட் தலைவர்கள் வரிசையில் எங்களுடைய அகில இந்தியத் தலைவர்கள்

  • இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்,
  • பி.டி.ரனதேவே,
  • சுந்தரைய்யா போன்றவர்களைச் சொல்லலாம்.

இவர்களால் ஈர்க்கப்பட்ட ஓர் ஊழியனாகத்தான் நான் இருக்கிறேன்.
பெண் தலைவர்களில் என்னைக் கவர்ந்தவர்கள்,

  • பாப்பா உமாநாத்,
  • நர்மதா ரனதேவே,
  • விமலாராணி தேவி

ஆகியோர். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இயக்கத்திற்காகப் பாடுபட்டு முன்னுக்கு வந்தவர்கள்.
கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர்கள் என்று பார்க்கும்போது, மகாத்மா காந்தி, பண்டித நேரு போன்ற தலைவர்களைச் சொல்லலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறும், அவர்கள் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளும் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தவை.

தமிழகத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் என்று காமராஜர் அவர்கள் மற்றும் கலைஞர் அவர்களைக் கூறலாம். இவர்களுடைய பணி, செயல்பாடுகள், அதிலிருக்கக்கூடிய பல்வேறு நல்ல அம்சங்கள் ஆகியவை என்னைக் கவர்ந்துள்ளன.

* அரசியல்வாதி என்பவர் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர் என்று குற்றம் சாட்டுகிறேன். உங்களது பதில்….? (தயவு செய்து கோவிச்சுக்காதீங்க ஐயா)

பா. ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

எந்தக் கோபமும் இல்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியவர் எந்த அரசியல்வாதி என்று எனக்குத் தெரியாது. உங்களுடைய மனதைப் பாதிக்கக்கூடிய அளவிற்கு இப்படியொரு அரசியல்வாதி நடந்திருந்தால் உங்கள் கோபம் நியாயமானதுதான்.

* ரஷ்யாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது ஸôர்?

இரா. கண்ணபிரான், சேலம்.

நான் ரஷ்யாவுக்கு சென்றதில்லை.

* “ஆதாயம் தரும் பதவி தொடர்பான மசோதாவைத் திருப்பியனுப்பியது மிகவும் கடுமையான சோதனையான காலகட்டம்’ என அப்துல் கலாம் தெரிவித்துள்ளாரே…?

தி. நாகேஷ், கோட்டப்பட்டினம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பொறுப்பு ஏதேனும் எடுத்துக் கொள்ளலாமா? அப்படியெனில் அது ஆதாயம் பெறும் பதவி எனக் கொள்ளப்பட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்பதுதான் பிரச்சினை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கேள்வி எழுந்தது. “எது ஆதாயம் தரும் பதவி?’ என்று அரசியல் சட்டத்தின் 102வது பிரிவு தெளிவாக விளக்கவில்லை. எந்தப் பதவிகளை ஏற்றால் பதவியைப் பறிக்கும் சட்டத்திலிருந்து விலக்கு உண்டு எனத் தீர்மானிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உண்டு.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிறுவனங்களில் பொறுப்பேற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தச் சட்டங்கள் மூலம் நாடாளுமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என சி.பி.எம். கோரியது; ஆதாயம் தரும் பதவி சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் விவாதித்து முடிவு எடுக்க ஒரு நாடாளுமன்ற துணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரியது.

நாடாளுமன்றமும், இருக்கும் சட்டத்திலிருந்து சில விதி விலக்குகளை அளித்து திருத்தச் சட்டம் நிறைவேற்றியது. அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது, அவர் தனக்குரிய உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி சில கேள்விகள் எழுப்பினார்; சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டு திருப்பி அனுப்பினார்.

அது மறுபரிசீலனை செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதற்குரிய விசேஷ அம்சங்களை கணக்கிலெடுக்காமல் அப்பொறுப்பில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என முடிவு எடுத்ததால் நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது.

பொது மக்கள் சேவையினை கருத்தில் கொண்டு சில அரசு நிறுவனங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் சி.பி.எம்.மின் நிலை. இப்பொழுது உள்ள குழப்ப நிலை நீங்க, தெளிவானதொரு சட்ட விளக்கம் தேவை என எங்கள் கட்சி கருதுகிறது.

* “உயர் சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற உ.பி. முதல்வர் மாயாவதியின் யோசனை பற்றி…?

எஸ். உலகநாதன், திருவாரூர்.

“இட ஒதுக்கீடு யாருக்கு வேண்டும்?’ என்று சொல்வதற்கு முன், அது செயல்படுத்த வேண்டிய அரசியல் பொருளாதார -சமூகப் பின்னணியினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தின் பெரும் பிரிவினர் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்தனர். அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி, சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்ற தேவையில் எழுந்ததுதான் அரசியல் சட்ட ரீதியான “இட ஒதுக்கீடு’ முடிவுகள்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது அந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. ஆனால் நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்தும், வாழ்நிலையும் எப்பொழுது முழுமை பெறும்? அவர்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார அடித்தளம் வலுவாகக் கட்டப்படுவதன் மூலமாகத்தான் அது முடியும்.

கிராமப் புறங்களில் வாழும் இந்தப் பிரிவினரில் பெரும்பான்மையான மக்கள் நலிந்த பொருளாதாரத்தோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதைக் கொடுக்கும் செயல் திட்டம்தான் நிலச் சீர்திருத்த நடவடிக்கையாகும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் கொடுக்க வல்லது.

இது நாட்டின் இடதுசாரிகள் சொல்கிற கருத்து மட்டுமல்ல…! பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் இதை வலியுறுத்திச் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேரள, மேற்கு வங்க மற்றும் திரிபுரா மாநில அரசுகள், அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டே எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் (நிலத்தைப் பங்கீடு செய்தது) அந்த மக்களுக்கு ஓரளவு பொருளாதார சக்தியினைக் கொடுத்திருக்கின்றன.

அவர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்திருக்கிறது. அதிகார அமைப்பில் அவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. இதை மண்டல் கமிஷன், மற்றும் திட்ட கமிஷன் கணக்கில் எடுத்துப் பாராட்டியும் உள்ளது.
வேறு ஒரு கோணத்திலிருந்தும் இந்தப் பிரச்சினையினைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை (அரசின் கணக்கின்படி) 26 கோடி பேர். வறுமையில் வாடுவோர் அல்லது பொருளாதார பலம் ஏதுமின்றி வாழ்பவர்கள் சாதி, மதம், மொழி என்ற பண்பாட்டு வட்டங்களைத் தாண்டித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர்.

அவர்களின் வாழ்நிலையினை உயர்த்துவதற்கும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாயாவதி என்ன நோக்கத்தோடு அந்த யோசனையை முன் வைத்தார் என்று தெரியாது. ஆனால் பிரச்சினையின் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உயர் ஜாதி ஏழைகள் ஒதுக்கப்பட வேண்டிய மனிதர்கள் அல்லர்! நமது கவலைக்குரிய மனிதர்கள்தான்!

Posted in Alliance, Answers, APJ, Bachan, Badhuri, Baduri, Bathuri, Bhachan, Bhadhuri, Bhaduri, Bhardhan, Bhathuri, BJP, Center, Chat, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, DMK, Eezham, Elections, Faces, Finance, Gorbachev, Govt, Integration, Interview, Jaya, Jeya, Kalam, Karat, Leaders, Lenin, LTTE, Manmogan, Manmohan, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Masood, Masud, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, names, National, NDTV, Neta, Netha, Party, Patil, people, Politburo, Politics, Polls, Poor, Power, Prakash, Prathiba, Prathibha, President, Prez, Principles, Putin, Q&A, Questions, Rasheed, Rashid, Rich, River, Russia, Somnath, Sonia, Soviet, Sri lanka, Srilanka, Stalin, support, UP, US, USA, USSR, UttarPradesh, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Water, Wealthy | Leave a Comment »

Exposing the double standards of Kerala Govt – Inaction, Hypocrisy, Bureaucracy

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

கடிதங்கள் | காலச்சுவடு

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

சக்கரியாவின் ‘மாயாவித் திருடர்கள்’ என்னும் கட்டுரை குறித்து:

கேரளாவில் மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை மூளைச்சலவை செய்துவைத்திருக்கிறார்கள். பிளாச்சி மடையிலுள்ள கொக்கோகோலோ மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் மார்க்சிஸ்டுகளால் கேரளத்தை விட்டு ஓடிவிட்டன.

  • கெல்ட்ரான்,
  • ரேயன்ஸ் மில்,
  • புனலூர் காகித ஆலை,
  • அலகப்பபுரம் டெக்ஸ்டைல்ஸ்,
  • அப்போலோ டயர் தொழிற்சாலை

ஆகிய அனைத்தும் மூடப்படுவதற்குக் காரணமாயிருந்தவர்கள், தம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்டுகளே. கேரளாவைச் சேர்ந்தவர்கள் மூளை உழைப்பாளிகளாகவும் உடல் உழைப்பாளிகளாகவும் மற்ற மாநிலங்களுக்கும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்லக் காரணகர்த்தாக்கள் மார்க்சிஸ்டுகளே.கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்னும் ஊரின் அருகேயுள்ள சம்றவட்டம் என்ற இடத்தில் பாரத புழா அரபிக்கடலில் கலக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்கத் தடுப்பணையும் அதன்மேல் வாகனங்கள் செல்ல ஒரு பாலமும் கட்டத் திட்டமிட்டுக் கேரளாவில் மூன்று முதல்வர்கள் கடந்த 18 ஆண்டுகளில் மூன்று முறை கால்கோள் விழா நடத்தினார்கள். அத்திட்டத்தை என்ன காரணத்தினாலோ கைவிட்டார்கள்.

அந்தப் பாலம் அங்குக் கட்டப்பட்டால் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் குடிநீர் தேவையும் நிறைவேறும் விவசாயம் செழிக்கும் வெயில் காலங்களில் நிலத்தடி நீரும் குறையாது. இது அப்பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் மார்க்சிஸ்டுகள் ஏமாற்றுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்தினால் அணை உடைந்து ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்று வெற்றுக் கூச்சல் போடுகிறார்கள். 4 டி.எம்.சி. தண்ணீரால் 5 மாவட்டங்கள் எப்படித் தண்ணீரில் மூழ்கும்?

ஒரு வேளை மார்க்சிஸ்டுகள் கூறியபடியே நடந்தாலும், அந்த நீர் 70 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அணைக்கு அல்லவா சென்றுவிடும்? கேரள மாவட்டங்கள் என்ன பூந்தொட்டிகளா, நீரில் மூழ்க? அப்படியிருக்கக் காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. வழங்கத் தீர்ப்பு கூறியுள்ளது.

எந்த ஆயக்கட்டு வசதியும் இல்லாமல் 30 டி.எம்.சி.யை எங்குத் தேக்குவார்கள்? அதுவுமில்லாமல் 30 டி.எம்.சி. நீர் தங்களது மாநிலத்திற்குப் போதாது என்றும் மேலும் தண்ணீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். இந்த 30 டி.எம்.சி. நீரால் கேரளா மூழ்காதா? மார்க்சிஸ்டுகள் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்த திருவனந்தபுரத்தைத் தனிக் கோட்டமாக்கியபோது தமிழ்நாட்டில் எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. ஆனால், சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டபோது மார்க்சிஸ்டு தொழிற்சங்கத்தினர் அம்மாநில மக்களைத் தேவையில்லாமல் தூண்டிவிட்டார்கள்.

கேரளாவில் உள்ள குருவாயூரிலிருந்து தானூர் என்னும் இடத்திற்குப் புதிய ரயில் பாதை அமைக்கக் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிலத்தைக் கையகப்படுத்தாமல், அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

திருவனந்தபுரம் அருகே விழிஞம் என்னும் இடத்தில் அதிநவீனத் துறை முகம் அமைக்கப் பல வெளிநாட்டுக் கம்பெனிகள் முயன்றன. ஆனால், மார்க்சிஸ்டு அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை. எர்ணாகுளத்தை ஸ்மார்ட் சிட்டி ஆக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கும் மார்க்சிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்துத் திட்டத்தைக் கிடப்பில் போட்டிருக்கிறார்கள்.

கேரளா பொருளாதார வளர்ச்சி பெற்றுச் சிறந்த மாநிலமாக உருவெடுத்தால், மார்க்சிஸ்டுகள் அம்மாநில மக்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரு காரணம்தான். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று மேற்கு வங்கம் நந்தி கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து 14 பேர் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். மார்ச் 14 நினைவுகூரத்தக்க தினம்தான்.

பொதுவுடமைச் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம் மார்ச் 14. மார்க்சிஸ்டுகளின் அந்நிய நாட்டு அடி வருடித்தனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் வரலாறும் மன்னிக்காது என்பது திண்ணம்.

கே. கணேசன்
கோயம்புத்தூர் – 27

—————————————————————————

தமிழகத்தின் உரிமைப் பிரச்னைகள்

பா. ஜெகதீசன்

தமிழகமும், கேரளமும் கடந்த பல தலைமுறைகளாகவே அண்ணன் – தம்பியைப் போன்ற உறவுடன் பாசத்துடன் பழகி வந்தன. ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சமீபகாலத்தில் எழுந்த பிரச்னை விசுவரூபம் எடுத்து, இரு தரப்பினரையும் பகையாளிகளைப் போல பேச வைத்து விட்டது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைப் போல, மேலும் பல பிரச்னைகளில் இரு மாநிலங்களுக்கு இடையே “இழுபறி’யான ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, பரம்பிக்குளம் -ஆழியாறு ஒப்பந்தம் தொடர்பான பிரச்னை 1988-லிருந்து நீடித்து வருகிறது. 6.11.2004-ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையை தொடருகின்றன.

கஜினி முகமது தொடர்ந்து படை எடுத்து வந்த வரலாற்றை முறியடிக்கும் வகையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண இதுவரை சுமார் 20 முறைக்கும் மேல் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறு ஆகியவற்றிலும், இவற்றில் இணையும் ஆறுகளிலும் உள்ள நீரை மின்சாரம் தயாரிக்கவும், பாசனம் மற்றும் குடிநீருக்குப் பயன்படுத்தவும் 9.11.1958 முதல் செயல்படக் கூடிய ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே கையெழுத்தானது.

9.11.1988-ல் இந்த ஒப்பந்தம் மறு ஆய்வு செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை.

அதேபோல, பாண்டியாறு -புன்னம்புழா நதிகள் தமிழகத்தில் நீலகிரி மலையின் உயர்ந்த சிகரங்களில் தோன்றி, கூடலூருக்கு 5 கி.மீ. மேற்கே இணைகின்றன. இந்த இணைப்புக்குக் கீழே இந்த நதி புன்னம்புழா என்றே அழைக்கப்படுகிறது. கேரளத்தில் நீலாம்பூர் அருகே சாளியாற்றில் கலந்து, பேபூர் என்கிற இடத்தில் அரபுக் கடலில் இந்த நதி சங்கமம் ஆகிறது.

இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் கிடைக்கும் 14டி.எம்.சி. நீரில் குறைந்தபட்சம் 7 டி.எம்.சி.யையாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த ஆற்றிலிருந்து கிழக்கு நோக்கி தண்ணீரைத் திருப்ப கேரளத்தின் ஒப்புதலைப் பெறும் முயற்சியைத் தமிழகம் மேற்கொண்டுள்ளது.

புன்னம்புழா திட்டத்தில் கிடைக்கும் தண்ணீரை பவானி ஆற்றின் கிளை ஆறான மோயாற்றில் இணைத்து, கோவை மாவட்ட விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், இந்தக் கனவு எப்போது நனவாகும் என்று தெரியவில்லை.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி – வைப்பாறு நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்து, அதுதொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறது. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளின் நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது என்பது அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி.

பம்பா -அச்சன்கோயில் -வைப்பாறு இணைப்புத் திட்டம் என்பது கேரளத்தில் உள்ள பம்பா -அச்சன்கோயில் ஆறுகளின் உபரி நீரைத் தமிழகத்துக்குத் திருப்புவது ஆகும். இந்தத் திட்டத்தினால் சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், தென்காசி வட்டங்களில் உள்ள 91,400 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கர்) நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 22 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பம்பா – அச்சன்கோயில் ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரில் இது 20 சதவீதம் மட்டுமே.

மேலும் இந்தக் குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் 500 மெகாவாட் மின்சாரத்தையும் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.

ஆனால், இதர திட்டங்களைப் போலவே, இந்தத் திட்டத்தையும் கேரள அரசு ஏற்கவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைக்கும் வகையில், கண்ணகி கோயில் பிரச்னை அமைந்துள்ளது.

உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள வண்ணாத்திப்பாறைக் காடு தமிழகத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியில்தான் கண்ணகி கோயில் உள்ளது.

ஆனால், கண்ணகி கோயில் தனது எல்லைக்குள் உள்ளதாக கேரள அரசு கூறி வருகிறது. அத்துடன், அங்கு வழிபாடு நடத்தச் செல்லும் தமிழக மக்களை கேரள அரசு தடுத்து, பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையே உள்ள எல்லையின் நீளம் சுமார் 830 கி.மீ. இதில் சுமார் 250 கி.மீ. தூரத்துக்குத்தான் இரு மாநிலங்களின் அதிகாரிகளும் ஆய்வு செய்து, எல்லைகளை நிர்ணயித்துள்ளனர்.

கேரள அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்காததால், எஞ்சிய தூரத்துக்கு எல்லையை வரையறுக்க முடியாத நிலை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆங்காங்கே தமிழகத்தின் பகுதிகளைத் தனது பகுதிகள் என்று கேரளம் கூறி போலியாக உரிமை கொண்டாடி வருகிறது.

கேரளத்துடன் நல்லுறவை வளர்க்கவே எப்போதும் தமிழகம் விரும்புகிறது. ஆனால், அந்த விருப்பம் ஈடேறத் தடைகற்களாக இத்தனை பிரச்னைகள் அமைந்துள்ளன. இந்தத் தடைகள் தகர்க்கப்பட்டு, நல்லுறவு மேம்பட கேரளத்தின் பெருந்தன்மையான ஒத்துழைப்பு அவசியம்.

———————————————————————————————————————————

முல்லைப் பெரியாறும்-கேரளமும்!

என். சுரேஷ்குமார்

திருநெல்வேலி மாவட்டம், சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு, பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோனி ஆறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு சுமார் 300 கி.மீ. தூரம் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது.

பெரியாறு தமிழக எல்லைக்குள் 56 கி.மீ. தூரமும் கேரள எல்லைக்குள் 244 கி.மீ. தூரமும் பாய்கிறது.

மக்களின் குடிநீர் தேவைக்கும் பாசனத்திற்காகவும் பெரியாறு திட்டத்திற்கு முதன்முதலில் செயல்வடிவம் கொடுத்தது ஆங்கிலேயர்கள்.

அதன்படி, 1808-ம் ஆண்டு ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்டத்தை ஆய்வு செய்து 1862-ல் 162 அடி உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

பின்னர் 1882-ம் ஆண்டு 175 அடி உயரத்தில் அணை கட்ட பென்னி குயிக் நியமிக்கப்பட்டார். அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.65 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி முல்லை ஆறும், பெரியாறும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. அணை கட்டப்படவிருந்த பகுதியான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தமிழர் வாழும் பகுதிகளாகும். தற்போதும் அப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலும் தமிழர்களே.

இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசு, அணை கட்டப்பட உள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி எனக் கொண்டு, 1886-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுக்கான ஒப்பந்தத்தை செய்தது.

மேலும், இந்த அணை நீரானது தமிழகத்திற்கு காலகாலத்திற்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய அரசு 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்டது.

அதன்படி 1241 அடி நீளத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடி.

இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி. ஆனால், திடீரென வரும் வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்பட்டது.

இந்த அணையில் தேங்கும் நீரை, கிழக்குத் திசையில் 5765 அடி நீளமும், 60 அடி ஆழமும், 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டுவந்து பின்பு அந்த நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்குப் பிறகு 78 கி.மீ. நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளியே எடுக்க முடியும்.

மேலும், 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடிவரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும்.

பின்னர் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அந்த அணையின் நீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர்தான் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணையை முழுவதும் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, 1956-ம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரளத்தோடு இணைக்கப்பட்டன.

1978-ம் ஆண்டு அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தது. அதன்மூலம் அணையின் நீர்மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டது.

பின்னர் அணை பலப்படுத்துவது தொடர்பாக கேரள- தமிழக அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, அணை பலப்படுத்தப்படும்வரை அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது.

இதற்கிடையே பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளை கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை கேரளம் குறைத்தது.

இதனால் ஒரு போகம் சாகுபடி செய்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின.

1979 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை 1985-ம் ஆண்டே முடித்த பின்பும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்தது.

இதனால் இப்பிரச்னையை தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை சார்ந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்ட பிறகு, அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியது. மேலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என கேரள அரசு சொன்ன காரணங்கள் பொய்யானவை என்று ஆணையம் தெளிவாகக் கூறியது.

அதன் அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், கேரள அரசு 1979-ம் ஆண்டு தமிழகத்தோடு செய்த ஒப்பந்தத்தை மீறியதோடு, நிபுணர் குழு அறிக்கையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் உதாசீனப்படுத்தியது.

தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்து அதே ஆண்டு மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம், நீர்வளம் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி பெரியாறு அணையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன்மூலம் கேரள அரசு மேற்கொள்ளும் ஒரு தலைப்பட்சமான முடிவு நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக விடப்பட்டிருக்கும் அறைகூவல்.

மேலும், தற்போது பழைய அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு கேரள அரசு கட்டினால் தமிழகத்தின் உரிமை முழுமையாகப் பறிபோகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Posted in Agriculture, Apollo, Bureaucracy, Cauvery, Coke, cola, Communism, Communist, Communist parties, Communist Party of India, Congress, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Dam, Disaster, Drinking, Economy, Employment, Exports, Finance, Flood, GDP, Govt, Growth, Guruvaioor, Guruvaiyoor, Guruvaiyur, Guruvayoor, Guruvayur, Harbor, Harbour, Headquarters, Hype, Hypocrisy, Imports, Incentives, Industry, infrastructure, Integration, Irony, Irrigation, Jobs, Kaviri, Keltron, Kerala, Kozhikode, Labour, Literacy, Madurai, Malaappura, Malappura, Malappuza, Malappuzha, Malayalam, Manufacturing, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Mills, Mullai, Mullai Periyar, MullaiPeriyar, National, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakode, Periyaar, Periyaaru, Periyar, Periyaru, Politics, Port, Prevention, Producation, promises, Railways, River, Salem, SEZ, Shipping, State, Tax, Textiles, THIRUVANANTHAPURAM, TMC, TN, Trains, Trivandrum | Leave a Comment »

APJ Abdul Kalam – Why two party system will not work for India? (Op-ed)

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விபரீத யோசனை

சிப்பாய் புரட்சி ஏற்பட்ட 150-வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுப்பிய ஒரு கருத்து, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைப் போல் இந்தியாவிலும் இரண்டு கட்சி ஆட்சி முறை ஏற்படுவது நல்லது என்பதுதான் அவர் கூறியிருக்கும் கருத்து. சாதாரணமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கூறாமல் இருக்கும் குடியரசுத் தலைவர், தனது பதவிக்காலம் முடிய இருக்கும் நேரத்தில் இப்படியொரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டிய அவசியம் தான் என்ன?

மேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு

  • சாதி,
  • மத,
  • மொழி,
  • சமுதாய,
  • பொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது. அதுமட்டுமல்ல, ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே அடிப்படைக் கல்வி கற்றவர்களாக இருப்பதுடன், பொருளாதார ரீதியில் அடிப்படை வருமானம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, அத்தனை பிரிவினரின் குரலையும், தேவைகளையும் பிரதிபலிக்கவும், அவர்களது உணர்வுகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும், தேசியக் கட்சிகளால் இயலாமல் போனதன் விளைவுதான் இத்தனை கட்சிகளும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும்.

ஒட்டுமொத்த தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது சில பல சிறிய பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போவது சகஜம். பல சந்தர்ப்பங்களில், சில பிரிவினரின் எதிர்ப்பார்ப்புகளும் உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு. அதன் விளைவுதான் பல்வேறு அரசியல் கட்சிகள். பல கட்சி ஆட்சிமுறையில், குறிப்பாக நாடாளுமன்ற ஆட்சி முறையில் இது தவிர்க்க முடியாத நிர்பந்தம்.

பிரிட்டன் போன்ற மக்கள்தொகை குறைந்த, பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், அதிபர் முறை ஆட்சி அமைப்புள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் இரு கட்சி ஆட்சிமுறை என்பது இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, சமுதாய, மொழிவாரிப் பிரிவினைகளை உள்ளடக்கிய நாடுகளுக்குப் பொருந்தாது என்பது அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.

இந்த இரு கட்சி ஆட்சி முறையில் இன்னோர் அபாயமும் உண்டு. சுயநல சக்திகள் விரும்பினால் இரண்டு கட்சிகளையும் விலைக்கு வாங்கி ஜனநாயகத்தையே தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட முடியும். அதுவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம், இதுபோன்ற விஷம சக்திகளுக்கு இரண்டு கட்சி ஆட்சி முறையில் பூரண சுதந்திரத்தை அளித்துவிடும்.

இந்தியப் பொதுமக்கள் அதிபுத்திசாலிகள். எந்த நேரத்தில் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானித்துத் தேர்ந்தெடுப்பதில் நமது வாக்காளர்கள் கெட்டிக்காரர்கள். இரண்டு கட்சிக் கூட்டணிக்கு தேசிய அளவில் வழிகோலிய அவர்கள், இரண்டு கட்சி ஆட்சியைப் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளவும் தயங்கவில்லை.

இரண்டு கட்சி ஆட்சி முறை அதுவாகவே உருவாக வேண்டும். உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாக்கப்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும், ஒரு சிலரின் கஜானாவிற்குள் அடகு வைத்துவிடும். பல்வேறு பிரிவினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காத ஜனநாயகமாக இந்தியா மாறிவிடும். அதன் விளைவு பிரிவினைவாதத்திற்கு வழிகோலும். அதனால் வேண்டாமே இப்போது இரண்டு கட்சி ஆட்சி முறை!

Posted in ADMK, APJ Abdul Kalam, Assembly, BJP, BSP, Canada, Caste, Citizen, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Conservative, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Democracy, Democrats, Dems, Disintegration, DMK, Economy, Election, England, Federal, Foreign, France, Freedom, Globalization, Govt, Identity, Independence, India, Integration, Italy, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, Kalam, Labor, Language, Liberal, LokSaba, Minister, MP, National, Op-Ed, parliament, Party, PM, Politics, Polls, Population, President, Quebec, Region, Religion, Reps, Republic, Republicans, Rule, Sect, SP, Speaker, Tory, UK, USA, Vote | 4 Comments »

China’s outrageous claim – Denies visa, Arunachal Pradesh vents anger on UPA

Posted by Snapjudge மேல் மே 27, 2007

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா

இட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

சீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

——————————————————————————

மரியாதைக்குரிய அண்டை நாடு!

எம். மணிகண்டன்

அண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க சீனா மறுத்தது.

இதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.

இதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.

இந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.

மணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அப்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.

இப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.

ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம்.

1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.

திபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.

அதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

ஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.

சீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.

என்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

ஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்படுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.

பெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா? அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா? என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.

Posted in Aggression, AP, Arms, Arunachal Pradesh, Assam, Bhutan, BRIC, China, Claim, Country, Extremism, Foreign, G8, IAS, India, Integration, Manipur, Missiles, Mizoram, Nagaland, Nation, National, Nepal, North East, Northeast, Nuclear, Op-Ed, Pokharan, Pokhran, Pokran, Power, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Risk, SAARC, Security, South Asia, State, Superpower, Terrorism, Tibet, Tripura, ULFA, UPA, Violence, Visa, War, Weapons | Leave a Comment »

President presents Kabir Puraskar, Communal Harmony awards

Posted by Snapjudge மேல் மே 23, 2007

உ.பி. இளைஞருக்கு கபீர் விருது; அசாம் காந்தியவாதிக்கு ஒருமைப்பாட்டு விருது: கலாம் வழங்கினார்

புது தில்லி, மே 24: தேச ஒருமைப்பாடு, வகுப்பு ஒற்றுமைக்காக உழைத்த உத்தரப்பிரதேச சமூக சேவகர் ராம்பாபு சிங் செüஹானுக்கு (34) கபீர் விருதும், அசாமைச் சேர்ந்த ரவீந்திரநாத் உபாத்யாயவுக்கு தேச வகுப்பு ஒற்றுமை விருதும், தில்லியிலிருந்து செயல்படும் சமத்துவ கல்விக்கான தன்னார்வ அமைப்புக்கு தேசிய வகுப்பு ஒற்றுமை விருதும் வழங்கப்பட்டன.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவ்விருதுகளை வழங்கிப் பேசினார். குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் பங்கேற்றனர்.

ராம்பாபு சிங் செüஹான்: உத்தரப்பிரதேசத்தின் தம்னாகடி கிராமத்தைச் சேர்ந்த செüஹான், கபீர்தாசரால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ஹத்ராஸ் என்ற இடத்திலிருந்து ஆக்ராவுக்கு பாத யாத்திரை சென்றார். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாகப் பரிந்து பேசி நியாயம் கிடைக்க உதவி செய்தார். அவருக்கு பாராட்டு பத்திரமும் ரூ.50,000 ரொக்கமும் விருதாக தரப்பட்டன.

ரவீந்திரநாத் உபாத்யாய்: அசாமைச் சேர்ந்த காந்தியவாதியான ரவீந்திரநாத் உபாத்யாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இப்போது வட-கிழக்கு மாநிலங்களில் வகுப்பு மோதல்களால் பதற்றம் அடைந்துள்ள பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். 2000-வது ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2003-ல் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டமைக்காக ஜம்னாலால் பஜாஜ் விருது பெற்றார். 2004-ல் வட-கிழக்கு மாநிலங்களின் நண்பர் என்ற விருதைப் பெற்றார்.

ரவீந்திரநாத் உபாத்யாயாவுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டன.

சமத்துவ கல்விக்கான நிறுவனம்: தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சமத்துவ கல்விக்கான நிறுவனம் மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும் தேச ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கவும் இடைவிடாமல் பாடுபட்டு வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசி பூஷண் இந்த அமைப்பை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறார். இந்த அமைப்புக்கும் பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை தரப்பட்டன.

Posted in activism, Activists, Assam, Awards, Charity, Chauhan, citation, communal, Education, Faces, Gandhi, Gandhian, Harmony, Hindi, Hindu, Hinduism, Individual, Integration, Jury, Kabir, Kalam, Leaders, Muslim, Nation, National, NGO, Northeast, organisation, people, Politics, President, Prizes, Puraskar, Rabindra Nath Upadhyay, Rambabu Singh Chauhan, Recognition, secularism, Shashi Bhushan, Socialist, Society, UP, Uttar Pradesh, Volunteer | Leave a Comment »

Veera. Jeeva Prabhakaran: Kerala’s adamant attitude results in 40 acre of grains loss for Tamil Nadu – Mullai Periyar

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

பிடிவாதத்தால் கடலுக்குச் சென்றது 4 டி.எம்.சி. தண்ணீர்: 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு?

வீர. ஜீவா பிரபாகரன்

மதுரை, ஜன. 30: பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, நீர்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த கேரள அரசு மறுத்ததால் மதுரை மாவட்டத்தில் தற்போது 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து, கேரள அரசிடம் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப். 27-ல் தீர்ப்பு அளித்தது.

ஆனால், இத்தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு ஏற்ற வகையில் கேரள சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

இரு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையின்போதும், உடன்பாடு காண்பதற்கான முயற்சியில் கேரள அரசு சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

மேலும், பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில் கேரள முதல்வரின் இணைய தளத்தின் மூலம் பெரியாறு அணை குறித்து தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கேரள அமைச்சர்களும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர்.

கடலுக்குச் சென்ற தண்ணீர்: பெரியாறு அணையின் இருபோக, ஒருபோக மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியைச் சேர்ந்த 1.45 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு கடந்த அக்டோபர் 23-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

உரிய நேரத்தில் பருவமழை தொடங்கியதாலும் பெரியாறு அணையின் நீர்தேக்கும் அளவை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாலும், இந்த ஆண்டு போதிய பாசன நீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து மதுரை மாவட்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டினர்.

விவசாயிகள் எதிர்பார்த்தது போலவே, தொடர் மழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. எனினும், 136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலுக்குச் சென்றது.

காய்ந்து வரும் நெற்பயிர்: கடந்த அக்.23-ல் தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், நவம்பர் முதல் வாரம் வரை பல்வேறு பகுதியிலும் நடவுப் பணிகள் படிப்படியாக நடைபெற்றன. நெற் பயிர் முழு விளைச்சல் பெற 120 நாள்களுக்குத் தண்ணீர் தேவை.

ஆனால், பெரியாறு, வைகை உள்ளிட்ட அணைகளில் போதிய நீர் இன்மையால் தற்போது பாசனப் பகுதிக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதுவும், பயிருக்குக் கடைசி வரை தண்ணீர் அளிக்க வாய்ப்பில்லை.

இந் நிலையில், மதுரை மாவட்டத்தில் தற்போது நெல் பயிரிட்டுள்ள 1 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் 40 ஆயிரம் ஏக்கர் போதிய தண்ணீர் இன்றி பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் கேரள அரசின் மீது வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளோம். பெரியாறு அணைப் பிரச்சினை நாட்டின் வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்தில் பார்க்கப்படவில்லை. இப் பிரச்சினை கேரளத்தில் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது’ என்றும் பெரியாறு பாசன ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் எம். மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

குறைந்தது நீர்மட்டம்: பெரியாறு அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 115.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 590 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 130.90 அடியாக இருந்தது.

அரசியலைத் தாண்டிய உறவு:

தமிழகத்தில் 1946-ல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது குமுளியிலிருந்து கீழகூடலூரில் வந்து விழும் தண்ணீரிலிருந்து மின்சார உற்பத்தி செய்யும் திட்டம் தீட்டப்பட்டது.

அதற்கு, பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை எதிர்ப்புத் தெரிவித்தார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர் பி. ராமமூர்த்தியை முதல்வர் ராஜாஜி அனுப்பி வைத்தார்.

பேச்சுவார்த்தை நடத்திய ராமமூர்த்தி, கேரளத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 2 பைசா அளித்தால் அம்மாநில அரசு சம்மதிக்கும் என்ற கருத்தை அறிந்து ராஜாஜியிடம் தெரிவித்து, அதன்படி உடன்பாடு ஏற்பட்டு பெரியாறு மின்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அன்று, இப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரசியலைக் கடந்து தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டினர். இன்று அரசியல் ஆதாயமே பிரதானமாகிவிட்டது.

—————————————————————————————–

தொடர்கதையாகிவிட்ட முல்லைப் பெரியாறு பிரச்னை

பா. ஜெகதீசன்

கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1,300 அடி தூரத்தில் ரூ.216 கோடி செலவில் புதிய அணையைக் கட்டுவது தொடர்பான அறிவிப்பை கேரள சட்டப் பேரவையில் அந்த மாநில நீர் ஆதாரத் துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் வெளியிட்டுள்ளார்.

மூன்று தலைமுறைகளாக கேரளத்துடன் நீடித்து வரும் இந்த விவகாரத்தை இடியாப்பச் சிக்கலாக்கி, தொடர்கதையாக ஆக்கவே கேரளத்தின் இந்த அறிவிப்பு பயன்படும் என்பது தமிழகப் பாசனத் துறை வல்லுநர்களின் கருத்து.

கேரளத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி கடலில் கலக்கும் பெரியாறு, முல்லை ஆகிய நதிகளுக்கு இடையே அணை கட்டும் பணியை 1874-ல் பிரிட்டனைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர் பென்னி குயிக் தொடங்கினார்.

அரசின் நிதி உதவியுடன், அடர்ந்த வனப் பகுதியில் சுமார் 3,500 அடி உயரத்தில் அணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

ஆரம்பநிலையில் இந்தப் பணி தோல்வி அடைந்தது. எனவே, அரசு தனது நிதி உதவியைத் தொடராமல் நிறுத்தி விட்டது.

எனினும், பென்னி குயிக் தனது சொத்துக்களையும், மனைவியின் நகைகளையும் விற்று, அணை கட்டும் பணியை தொடர்ந்தார்.

1895-ல் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டது.

தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட இந்த அணை தற்போதும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் குடிநீர் -பாசன வசதி மேம்பாட்டுக்கு அடித்தளமாகத் திகழ்கிறது.

நூற்றாண்டு கொண்டாடிய இந்த அணையில் கசிவு ஏற்பட்டதாக கேரளத்தில் இருந்து வெளியாகும் சில இதழ்களில் (தவறான) செய்திகள் வெளியாகின.

1979-ல் அணையின் பாதுகாப்பு தொடர்பாக சில அச்சங்களை கேரள அரசு எழுப்பியது.

இதையடுத்து, அணையை மத்திய நீர்வளக் குழுமம் ஆய்வு செய்து, அணையைப் பலப்படுத்த 3 வகையான பணிகளை மேற்கொள்ளும்படி தமிழகத்துக்குப் பரிந்துரைத்தது.

அதன்பேரில் அணையின் நீர்மட்டம் அதன் முழு அளவான 152 அடியில் இருந்து தாற்காலிகமாக 136 அடியாகக் குறைக்கப்பட்டது.

தக்க பாதுகாப்பு -பலப்படுத்தும் நடவடிக்கைகளைச் செய்து முடித்த பிறகு, நீர்மட்டத்தை 145 அடிக்கு உயர்த்தலாம் எனவும் குழுமம் பரிந்துரைத்தது.

பேபி டேம் எனப்படும் சிற்றணையைப் பலப்படுத்துதல், கைப்பிடிச் சுவற்றை 2 அடி உயர்த்துவது ஆகிய பணிகளைக் கேரள அரசு எதிர்த்ததால், முடிக்க இயலவில்லை.

குழுமம் கூறியபடி அணையைப் பலப்படுத்தும் இதர பணிகளைப் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசு நிறைவேற்றியது.

அதன்பிறகும், அணையின் நீர்த் தேக்கும் அளவை உயர்த்த கேரள அரசு முன்வரவில்லை.

இதுதொடர்பாக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த சிலரும், நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த சிலரும் (கேரளம் மற்றும் சென்னை) உயர் நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

பின்னர் இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்பேரில், 19.5.2000-ல் தமிழக -கேரள முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது.

அந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

அணையின் பாதுகாப்பு குறித்து ஆராயவும், தக்க பரிந்துரைகளை அளிக்கவும், வல்லுநர் குழுவை மத்திய அரசு நியமித்தது.

அந்தக் குழு 2001 மார்ச்சில் அரசுக்கு அறிக்கை அளித்தது. “சிற்றணையைப் பலப்படுத்தும் பணி முடிந்த பிறகு, பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி உயரத்துக்கு நீர் மட்டத்தை உயர்த்துவது பற்றி ஆய்வு செய்யலாம்.

அதற்கு முதற்கட்டமாக நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என அந்தக் குழு பரிந்துரை செய்தது. அதை தமிழகம் ஏற்றது.

இந்த நிலையில், அணையில் நீர் தேக்கும் அளவை 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து 2006 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்தத் தீர்ப்பு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெரிதும் உதவும் என பாசனத் துறை வல்லுநர்கள் கருதினர்; அவர்களைப் போலவே, விவசாயிகளும் நம்பினர்.

அணையில் தேக்கப்படும் 142 அடி நீரில் 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே பாசனத்துக்கு எடுக்க இயலும்.

பெரியாறு அணையில் கடந்த 25 ஆண்டுகளாக 136 அடிவரை மட்டுமே தேக்க அனுமதிக்கப்பட்டதால் 6 டி.எம்.சி. மட்டுமே நீரைத் தேக்க முடிந்தது. 152 அடிவரை நீரைத் தேக்க அனுமதிக்கப்பட்டால் 10.5 டி.எம்.சி. நீரைத் தேக்க முடியும்.

தற்போது 142 அடி நீரைத் தேக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் கூடுதலாக 1.54 டி.எம்.சி. நீரைத் தேக்க இயலும்.

பெரியாறு அணையின் நீர்த்தேக்கும் அளவை உயர்த்தும் பிரச்னையால் தமிழகத்துக்கு கடந்த 29 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பயிர் இழப்பும், மின் உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ளன.

கேரள அரசின் பிடிவாதத்தால் மழைக் காலங்களில் முழுமையாக நீரைத் தேக்க இயலாமல் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 35 டி.எம்.சி. தண்ணீர் வீணாகி, கடலில் கலந்தது.

மாநிலங்களுக்கு இடையே முற்றுப் பெறாத தொடர்கதையாக நீடிக்கும் இத்தகைய நதி நீர்ப் பகிர்வுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒரே வழிதான் உள்ளது.

தென்னிந்திய நதிகளை விரைந்து இணைப்பது ஒன்று தான் அந்த வழி.

————————————————————————————————————————————————–

பெரியாறு அணையா? தேசிய ஒருமைப்பாடா?

கடந்த 1979ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 28 ஆண்டுகளாக நீடித்து வரும் பெரியாறு அணைப் பிரச்னை இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

பெரியாற்றின் வடிமுகப் பரப்பில் தமிழ் நாட்டிலும் சில பகுதிகள் உள்ளன. இந்தப் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர். இது பெரியாறு அணையின் மொத்த வடிமுகப் பரப்பில் சுமார் 20 விழுக்காடு ஆகும். பெரி யாறு அணைக்கு வரும் நீரின் அளவில் 88.90 சதவிகிதம் நமது எல்லைக்குள்ளேயே பெய்யும் மழையினால் கிடைக்கிறது.

கேரள அரசு பெரியாற்றில் 16 அணைக ளைக் கட்டியுள்ளது. இந்த அத்தனை அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 9 சதவிகிதம் மட்டுமே பெரியாறு அணை யின் நீரில் பயன்படுத்த நாம் உரிமை பெற் றுள்ளோம். ஆனால் இந்தச் சிறு அளவைக் கூட கேரள அரசியல்வாதிகளால் பொறுக் கமுடியவில்லை.

பெரியாறு அணை உடன்பாட்டின்படி மீன்பிடிக்கும் உரிமையும் சுற்றுலாத் தளமா கப் பயன்படுத்தும் உரிமையும் தமிழகத் துக்கு உண்டு. ஆனால் அந்த உரிமைக ளைத் தமிழக அரசு கேரள அரசுக்கு விட் டுக்கொடுத்தது. இதன் மூலம் ஆண்டுதோ றும் கேரள அரசுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. பெரியாறு அணை கட்டப்படாமல் இருந்தாலோ இந்த உரிமைகளைத் தமிழக அரசு விட்டுக் கொடுக்காமல் இருந்தாலோ இந்த வருமா னம் கேரள அரசுக்குக் கிடைக்காது.

பெரியாறு அணை பலவீனமாக இருப்ப தாகவும், எந்த நேரமும் இடிந்து விழக்கூடும் அபாயம் இருப்பதால் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க வேண்டுமெனவும் கேரளம் பிடிவாதமாக வற்புறுத்தியதன் விளைவாக மத்திய நீர்ப் பாசன ஆணையம் தலையிட்டு அணை யைப் பலப்படுத்தும் வேலைகள் முடிவடை யும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கும்படி ஆணையிட்டது. இதன் விளைவாக கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாகப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாக இருந்து வருகிறது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டில் பெரும் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி இல்லாமல் பெரும் பாதிப் புக்கு உள்ளாகின.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்க ளில் பெரியாறு நீரினால் பாசனம் செய்யப் படும் நிலத்தின் பரப்பளவு சுமார் 2 லட்சம் ஏக்கர் ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்ட தன் விளைவாக மேற்கண்ட நிலங்களில் பின்வருமாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தரிசாக மாறிய நிலப்பரப்பு 38,000 ஏக் கர் இருபோக சாகுபடியாக இருந்து ஒரு போக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86,000 ஏக்கர். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்குழாய் கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு – 53,000 ஏக்கர். ஆக மொத்தம் 2 லட்சம் ஏக்கரில் 1 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக விவசாய உற்பத்தியில் இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 55.80 கோடியாகும்.
மின் உற்பத்தி இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 75 கோடியாகும். ஆக மொத்தம் தமிழகத் துக்கு இழப்பு ஆண்டுக்கு ரூபாய் 130.80 கோடியாகும்.

1980ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை 28 ஆண்டுகாலமாக மொத்த இழப்பு 3662.40 கோடியாகும்.

1986ஆம் ஆண்டில் அணையைப் பலப்ப டுத்தும் வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற் கும் கேரளம் சம்மதிக்கவில்லை. இது சம் பந்தமாக கேரளம், தமிழகம் ஆகிய மாநி லங்களின் உயர் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக் குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டன. கடந்த 28-4-2000 அன்று இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசும்படி மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதற்கிணங்க 19-5- 2000 அன்று இரு மாநிலப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அணையின் வலிமையை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைப்ப தென முடிவு செய்யப்பட்டது.

அதற்கிணங்க அமைக்கப்பட்ட குழு 2001 மார்ச்சில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் எனப் பரிந் துரை செய்தது. மற்றுமுள்ள வேலைகளை முடித்தபிறகு 152 அடிவரை உயர்த்தலாம் என்று கூறியது. இந்தப் பரிந்துரை உச்ச நீதி மன்றத்திற்கு அளிக்கப்பட்டது. 27-2-2006 அன்று உச்ச நீதிமன்றம் இந்தப் பரிந்து ரையை ஏற்று அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிவரை உயர்த்த லாம் எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த கேரள அரசு 18-3-2006 அன்று கேரள சட்டமன் றத்தில் அணையின் நீர்மட்டத்தை உயர்த்து வதற்கு எதிரான சட்டம் ஒன்றை நிறைவேற் றியது. கேரள சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் இந் தச் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட் டது என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

இதற்கு எதிராக தமிழக அரசு 31-3-2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை அளித்தது. கேரள சட்டத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அணை யின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவ தைக் கேரளம் தடுக்கக்கூடாது என்றும் அந்த மனுவில் வேண்டிக் கொண்டது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேரள அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் 27-7-2006 அன்று தள்ளுபடி செய்தது. அத்துடன் இரு மாநில அரசுகளும் கூடிப்பேச வேண்டும் என்றும் அல்லது இந்திய அரசு தலையிட்டு இப்பிரச்னையைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கேட்டுக்கொண்டது. அதற்கி ணங்க 29-11-2006 அன்று புதுதில்லியில் இரு மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டத்தை மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கூட்டினார். அதில் எந்த முடி வும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பின்னர் 18-12-2006 அன்று இரு மாநில அமைச்சர் கள் கூட்டத்தை அவர் கூட்டினார். இந்த இருகூட்டங்களிலும் எத்தகைய முடிவும் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு மனுவை அளித் திருக்க வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னையைத் தீர்க்க வழி யில்லை என்பதால் உச்ச நீதிமன்றம் அளித் திருக்கிற தீர்ப்பை உடனடியாக நிறைவேற் றுமாறு மத்திய அரசுக்கும் கேரள அரசுக் கும் ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமி ழக அரசு அந்த மனுவில் வலியுறுத்தியி ருக்க வேண்டும்.
அல்லது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கி ணங்க அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்க வேண்டும். அதை கேரள அரசு தடுத்திருக்குமானால், அந்த அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக் கினை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்க வேண்டும். ஆனால் மேலே கண்ட இரண் டையுமே தமிழக அரசு இதுவரை மேற் கொள்ளவில்லை என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பெரியாறு அணை நீரில் தமிழகத்திற்கு உள்ள சட்டப்படியான உரி மைகளை நிலைநாட்ட தமிழக அரசு அடி யோடு தவறிவிட்டது.

தமிழக அரசின் இந்தத் தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் புரிந்துகொண்ட கேர ளம் அடுத்த நடவடிக்கையை மேற்கொள் ளத் திட்டமிட்டது. சட்டப்படியும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதை ஒருபோதும் தடுக்க முடி யாது என்பதை உணர்ந்துகொண்ட கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டும் என்ற திட்டத்தை வலியுறுத்தத் தொடங்கியது.

ஏற்கெனவே மத்திய நீர்ப்பாசன கமிஷன் அமைத்த நிபுணர் குழுக்களும் உச்ச நீதிமன் றம் அமைத்த நிபுணர் குழுவும், அணை பல மாக உள்ளது. எனவே நீர்மட்டத்தை உயர்த் தலாம் எனப் பரிந்துரைகள் வழங்கிய பிறகு கேரள அரசு தானாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து அணையை ஆய்வுசெய்யும்படி கூறியது. இது சட்டவிரோதமானதாகும்.
இந்த நிபுணர் குழு ஆய்வு செய்வதற்குத் தடைவிதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை தமி ழக அரசு அணுகியிருக்க வேண்டும். அவ் வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.

பெரியாறு அணையில் கசிவு அதிகமாக இருக்கிறது என கேரள அரசு நியமித்த நிபு ணர் குழு கூறுவது முற்றிலும் பொய்யான தகவலாகும். கேரள மாநிலத்தில் பல்வேறு அணைகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் கசிவு நீரின் அளவு குறித்து கேரள மாநில அரசினால் அமைக்கப்பட்டுள்ள நீராதார வளர்ச்சி மற்றும் நிர்வாகம் குறித்த மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வருமாறு: 1895ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெரி யாறு அணையில் அதிகப்பட்ச கசிவு நிமி டத்திற்கு 89.371 லிட்டர் ஆகும். 112 ஆண் டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான அணையில் இந்த அளவுதான் கசிவு ஆகி றது.

1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட குட்டி யாடி அணையில் நிமிடத்திற்கு 249.77 லிட் டர் அளவுக்குக் கசிவு ஏற்படுகிறது. அதா வது 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய அணையில் இவ்வளவு அதிகமான கசிவு ஏற்படுகிறது.

1966ஆம் ஆண்டு கட்டப்பட்ட பம்பா அணையில் நிமிடத்திற்கு 96.00 லிட்டர் அளவுக்குக் கசிவு ஏற்படுகிறது. அதாவது 41 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அணை கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியாறு அணைக்குப் பிறகு கேரள மாநிலத்தில் கட்டப்பட்ட அணைகளில் இவ்வளவு அதிகமான அளவில் கசிவு ஏற்ப டும்போது அந்த அணைகளை இடிக்க வேண்டும் என்று கேரள அரசு கூறவில்லை.
மாறாக மேற்கண்ட அணைகளைவிட மிகக்குறைந்த அளவுக்கே கசியும் பெரி யாறு அணையை இடிக்க வேண்டும் என்று கூசாமல் கூறுகிறது.

கேரள அரசு அமைத்த நிபுணர் குழு எதிர்பார்த்ததுபோல அணை பலவீனமாக இருக்கிறது. அணையில் கசிவு அதிகமாகி யிருக்கிறது. எனவே இந்த அணையை முற் றிலுமாக இடித்துவிட்டு புதிய அணை கட் டவேண்டும் எனப் பரிந்துரை செய்துள் ளது. இந்தப் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக்கொண்ட கேரள அரசு அணை கட் டுவதற்கான அலுவலகத்தையும் திறந்துவிட் டது. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? புதிய அணை கட்டுவதற்கு கேரள அர சுக்குச் சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் பழைய அணையும் இரு மாநிலங்களுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட 999 ஆண்டுகால உடன்பாடும் அதன்படி நமக் குள்ள சட்டப்பூர்வமான உரிமைகளும் நீடிக்கிறது என்ற நிலைப்பாட்டை வற்புறுத் தும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் ஏக மனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண் டும். இதில் தமிழகத்தில் உள்ள சகல கட்சிக ளும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்.

பெரியாறு அணைக்குக் கீழே இடுக்கி அணைக்கு மேலே எந்த இடமும் புதிய அணை கட்டுவதற்கு ஏற்றதல்ல. ஏற்கெ னவே கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் எத்தகைய கட்டட வேலையும் 3 ஆண்டுக ளுக்கு மேற்கொள்ளக்கூடாது என அர சாணை பிறப்பித்துள்ளது. தானே பிறப் பித்த இந்த ஆணையை மீறி அணை கட்ட முடியாது. இது கேரள அரசுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் வேண்டுமென்றே புதிய அணை கட்டப்போவதாக அறிவித்து கேரள மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி நடைபெறுகிறது.

புதிய அணை கட்டப்படுவதற்கு கேரள அரசு தேர்ந்தெடுத்த இடம் வனப்பகுதிக் குள் அமைந்துள்ளது. அப்பகுதியில் அணை கட்டவோ அதற்கான ஆய்வு நடத் தவோ மத்திய வன அமைச்சகத்திடம் அனு மதி பெற வேண்டும். இதற்காக கேரள அரசு கேரள வனத்துறை மூலம் மத்திய வனத்துறை அமைச்சகத்திற்கு அனுமதி வேண்டி நவம்பர் முதல் வாரத்தில் கடிதம் அனுப்பியிருந்தது. மத்திய வனத்துறை அமைச்சகம் அளித்த பதிலில் “”புதிய அணை கட்டுவதற்குத் தேர்வு செய்யப் பட்ட இடம் வனவிலங்கு சரணாலயமாக உள்ளது. வனவிலங்கு சரணாலயத்தில் அணை கட்ட அனுமதிக்க முடியாது.
வனப்பகுதியில் ஆழமாகக் குழிதோண்டி ஆய்வு நடத்தவும் அனுமதிக்க முடியாது” எனத் திட்டவட்டமான பதிலை அனுப்பி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தச் செய்தியை அடியோடு மறைத்து கேரள அரசு புதிய அணை கட்டு வதற்கான அலுவலகத்தைத் திறந்து நாட கம் ஆடியுள்ளது.

இதன் மூலம் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுப்பதற்குத் திட்டமிட்டு கேரள அரசு செயல்படுகிறது.
இதைத் தமிழக அரசும் அனைத்து அரசி யல் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று முறிய டிக்க வேண்டும்.
புதிய அணை கட்டுவதை கேரளம் தொடர்ந்து வற்புறுத்துமானால் பரம்பிக்கு ளம் ஆழியாறு திட்டத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 8 அணைகளுக்கு மேலாக மேலும் 2 அணைகளைக் கட்டும் வேலை யில் தமிழக அரசு ஈடுபடப்போவதாக அறி விக்கவேண்டும். இப்படிப் பதிலடி கொடுப் பதன் மூலம்தான் நாம் கேரளத்தின் தீய நோக்கத்தை முறியடிக்க முடியும்.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரள மாநி லத்தில் ஓடும் நதிகளுக்குத் தமிழகம் 93 டி.எம்.சி. நீரை அளிக்கிறது. இதற்குப் பதி லாக கேரளத்தில் உற்பத்தியாகி தமிழகத் திற்கு அளிக்கப்படும் நீரின் அளவு கீழே குறிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக் கப்பட்டால் நமக்கு 10.6 டி.எம்.சி. நீர் மட் டுமே கிடைக்கும்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டப்படி நமக்கு 32.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கி றது.

Posted in Agriculture, Dam, Dinamani, Electricity, Farmer, Farming, Grain Fields, Grains, Growth, Impact, Integration, Irrigation, Karunanidhi, Kerala, Madurai, Malayalam, Monsoon, Mullai, Mullai Periyaar, Mullai Periyar, Mullai Periyaru, Paddy, Paddy Fields, Periyaar, Periyaaru, Periyar, Politics, Power, Rain, Rajaji, rice, River, State, Tamil Nadu, Vaigai, Vaikai, Veera. Jeeva Prabhakaran, Water | 2 Comments »

Bharati in Puthiya Kalacharam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 18, 2006

ஜூனியர் விகடனில் ரவிக்குமார் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து நீங்கள் (ஹரியண்ணா) எழுதியிருந்ததைப் படித்தேன். ரவிக்குமார் கட்டுரையை படிக்க வில்லை, ஆதலால் என்னவென்று புரியவில்லை. இதோ ‘புதிய கலாச்சாரம்’ இதழில் வந்திருக்கும் ஒரு கட்டுரை

அன்புடன்
சாபு
துபாய்
—————-
கட்டபொம்மனைப் பாடாத பாரதி

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமர்சிக்கும் போதெல்லாம், ‘பாரதியை அவனது வரலாற்றுப் பின்புலத்தில் ¨¨த்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்” என்று கூறி விமர்சிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.

சரி வரலற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசிலிப்போம். பாரதி சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக்கிறான், கோகலே தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதிராய் போன்ற வட இந்திய தலைவர்களப் பற்றி பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம்,ரசிய்யா வைப்பற்றி எல்லாம் பாடியிருக்கிறார். காக்கை,குயில்,கிளி மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்..

ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனை பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை.சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்று இலக்கிய அறிவோ,உலக ஞானமோ இல்லாத அப்பகுதி மக்கள் கட்ட பொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங்களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் பாடதது ஏன்?

ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.

“எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து எட்டப்பனின் வாரிசான மண்ணுக்குத் தோழனாக இருந்து அவனை அண்டிப்பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம்மனைப் பற்றி எப்படி எழுத முடியும்? என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக் கூடும்.

“நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி, அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்” அடேயப்பா ஈட்டி போல் பாயும் சொற்கள் பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய நேர்மைத் திறத்தைப் பற்றி பாரதி ஏதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலியினர் தம்முடைய ஆய்வுக்ளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருகிறார்களா?

வே.மணிக்கம் எழுதிய ‘தானபதிப்பிள்ளை வரலாறு” என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

“கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைபற்றியோ பாஞ்சாலக்குறிச்சிப் பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியிலிருந்து மீண்டு மிகுந்த நலிவுற்று பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1909 ல் ஓலைத்தூக்கும் சீட்டுக்கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில் ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய “விம்சமணி தீபிகை'(1878) நூலை செம்மைபடுத்தி தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கட்டபொம்மனைப்பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்

அதாவது எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வெங்கடாசலபதி.அத்தகைய தீயூழிலிருந்து பரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்.

புதிய கலாச்சாரம்
நவம்பர் 2006
ஆசிரியர் வி. வல்லபேசன்
puthiyakalacharam@rediffmail.com

————————————————————————————————-
முழுமையான சுதந்திரக் கவி

கா. செல்லப்பன்

“சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதை நாம் அடைந்தே தீருவோம்’ என்று சூளுரைத்தார் பாலகங்காதர திலகர். அதை அடைந்துவிட்டதாகவே, அன்றே ஆனந்தகூத்தாடியவர் தீர்க்கதரிசனக் கவி பாரதியார். “சுதந்திரத்தை மற்றவர்கள் தந்து பெற்றுக் கொள்ளப் போவதில்லை. அதை எப்போது வேண்டுமோ அப்போது நானே எடுத்துக் கொள்வேன்’ என்று ஓர் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வீரர் கூறினார்.

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரத்தைத் தன் ஆத்மாவின் உண்மையான நிலை என உணரும்போது, “விட்டு விடுதலையாகி’ விடுகிறோம் என்று பாரதியார் கருதினார். அதேபோல, ஒரு தேசம் தன்னை உணர்ந்து கொள்ளும்போது, அது அகவிழிப்பு பெற்று ஆற்றலுடன் எழுச்சி பெறும்போது, உண்மையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்குகிறது. அந்த விழிப்பையும் எழுச்சியையும் மக்களின் மொழியிலேயே அற்புதக் கவிதையாக்கியவர்தான் மகாகவி பாரதியார்.

சுதந்திர பூமியைக் கவிஞன் வலம் வந்து, வணங்கி வாயார வாழ்த்தும்போது அதைத் தன் சொற்களால் சொந்தமாக்கிக் கொள்கிறான். “வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம், மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்று தனது பிரம்மாண்ட தேசத்தில் கம்பீரமாக உலவுவதாகவும், மலையையும் கடலையும் மனித ஆற்றலால் வெல்வதாகவும் கவிஞர் கூறுகிறார்.

ஆனால் ஒரு தேசம் பிறப்பது, வெறும் பூகோளம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; அது மனித பந்தங்களாலும் வரலாற்றுச் சொந்தங்களாலும் உருவாவது. “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்ததுமிந்நாடே; அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே’ என்று தன்னை ஒரு வரலாற்றுச் சங்கிலியோடு இணைத்து, அதனை “வந்தே மாதரம்’ என்ற புதிய மந்திரத்தால் வணங்குகிறார்.

தன் மூதாதையர்களை, அர்ஜுனனை, இராமனை, சகுந்தலையின் மகன் பரதனை நினைவுகூர்ந்து, பாரதத்தை ஒரு புதிய தொன்மமாகப் படைக்கிறார். தொன்மங்கள்தான் (ஙஹ்ற்ட்ள்) ஒரு சமூகத்தைப் பிணைக்கும், சமுதாயத்தின் கனவுகள். பாரதி ஒரு புதிய தேசியத் தொன்மத்தை உருவாக்குகிறார். இந்தத் தொன்மம், பழங்கதையல்ல; ஒரு சமுதாயத்தின் உயிர்ப்பாற்றல். பாரத மாதாவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடி, சமயக் குறியீடுகளுக்குச் சமூக அர்த்தங்களைத் தந்தவர் பாரதி.

பாரதி, இந்த மண்ணின், மக்களின் ஆற்றலைப் பாரத சக்தியாகவும் பராசக்தியாகவும் உருவகித்தார். பாரதியின் பராசக்தி வழிபாடு, மக்களின் அடிமன ஆற்றலை வெளிப்படுத்தும் வீரவழிபாடாகவே தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, அவர் பெண் கடவுள்களைப் போற்றியது, இந்த மண்ணும் பெண்ணும் விலங்கொடிந்து விடுதலை பெற விழைந்ததால்தான். அவர் பாஞ்சாலி சபதம் இயற்றியதும் பெண்ணடிமையையும் மண்ணடிமையையும் போக்குவதற்கே. இந்த இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாரதி உணர்ந்தார்.

வீட்டிலே பெண்களைப் பூட்டி வைத்த சமுதாயம், அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பணயம் வைத்திழந்தபோது, தங்களது மண்ணை மட்டுமல்ல, உள்ளாற்றலையும் இழந்தனர். “தன்னை இழந்த தருமன், என்னை இழப்பதற்கு உரிமை இல்லை’ என்று பாஞ்சாலி வாதாடும்போது, பாரதத் தாயின் குரலை, இந்த நாட்டில் பன்னெடுங்காலமாக அடக்கப்பட்டிருந்த பெண்மையின் வீர முழக்கத்தைக் கேட்கிறோம்.

பெண் விலங்கறுத்து வீறுபெற்று எழுந்தால்தான், இந்த மண் மாண்பு பெறும் என பாரதி பாடினார். எனவேதான் “பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்’ – பாரினில் வந்ததாகப் பெண்களே பேசுவதாக மகாகவி அன்றே கூறினார்.

பாரதியின் சுதந்திரம், பாரத சமுதாயத்தின் முழுமைக்குமான பொதுவுடைமை. இங்கு வாழும் அத்தனை பேருக்கும் – மறவருக்கும் – பறையருக்கும் – புலையருக்கும் விடுதலை, விடுதலை என வீர முழக்கமிட்டார். சுதந்திரத்தின் இன்னொரு கூறாகச் சமத்துவத்தைக் கண்டார். எனவேதான், “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’ என்று கூறினார். நாம் “எல்லோரும் ஓர்குலம்; எல்லோரும் ஓர் விலை, ஓர் நிறை’ என உறுதிபடக் கூறினார்.

சுதந்திரத்தை உலக நாடுகள் அனைத்தும் அனுபவிக்க வேண்டும் என பாரதி விழைந்தார். அதனால்தான் பெல்ஜியத்துக்கு வாழ்த்து பாடினார். புரட்சியை மாகாளி பராசக்தியாக உருவகித்த கவிஞர், ரஷியாவில் ஜார் மன்னன் வீழ்ந்ததை, “”ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி, அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன்’ என்று ஆர்ப்பரித்துப் பாடினார். “தனியொருவனுக்கு உணவிலை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சூளுரைத்தபோது அவரது சர்வதேசச் சமத்துவச் சிந்தனை வெளிப்பட்டது.

பாரதி, இந்த மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் மட்டுமன்றி, விண்ணில் பறக்கும் பறவைகளுக்கும் சுதந்திர கீதம் பாடிய கவிஞன். “”காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்” என்று பிரபஞ்சத்தில் எங்கும், எதிலும் தன்னையே தன் கூட்டத்தையே கண்டு, அத்வைதத்தை ஓர் அகன்ற ஏகத்துவமாக விளக்கிக் காட்டினார். குருவி, விடுதலையுணர்வுக்கும் காக்கை, சமத்துவ உணர்வுக்கும் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியும் வலுவும் அதன் எல்லாப் பகுதிகளும் ஏற்றத்தாழ்வின்றி, இணைந்து வாழ்வதைப் பொருத்தது என அவர் கருதினார். “கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ என்று புதிய பண்டமாற்றுத் தத்துவம் பேசுகிறார். அனைத்துக்கும் மேலாக, மாநிலங்களிடையே நீர்ப் பங்கீடு தேவை என அன்றே உணர்ந்த கவிஞர், “வங்கத்தின் ஓடிவரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்’ என்று பாடினார். இந்த ஒற்றுமையுணர்வு இன்னும் வராதது, சுதந்திரத்தின் பலன்களை முழுமையாக நுகர்வதற்குத் தடையாக உள்ளது.

இறுதியாக, இன்றைய உலகமயச் சூழலில், எந்த நாடும் தனித்தியங்க இயலாது. அதேநேரத்தில் நாம் மற்ற நாடுகளோடு கொள்ளும் உறவுகளும் செய்யும் ஒப்பந்தங்களும் நம்முடைய சுதந்திரத்துக்கு எள்ளளவும் பாதகமாக அமையக் கூடாது. கண்ணீரும் செந்நீரும் விட்டு வளர்த்த சுதந்திரத்தை, கண்ணின் மணிபோல காப்பது நம் கடன்.

சுதந்திரமில்லாமல், சொர்க்க பூமியில் வாழ்வதைவிட, சுகங்களேயில்லாத சுதந்திர பூமியில் வாழ்வது மேல். இதுதான், “விதந்தரு கோடியின்னல் விளைந்தெனை யழித்திட்டாலும், சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்று பாடிய மகாகவியின் நிரந்தரச் செய்தி.

(இன்று பாரதியார் நினைவுநாள்) (கட்டுரையாளர்: பேராசிரியர்)

Posted in Aa Raa Venkatachalapathy, AR Venakatachalapathi, Award, Barathi, Bharathiyaar, Bharathy, British, Females, Feminism, Fighter, Freedom, French, Harikrishnan, Independence, India, Integration, Kattabomman, Kavithai, Liberation, Literature, Mahakavi, Nationalism, Panchali, Panjali, Poems, Poet, Pondicherry, Prize, Puthiya Kalacharam, Puthucherry, Ravi kumar, Ravikkumar, Saabu, Spirit, Tamil-Ulagam, V Vallabesan, Women | Leave a Comment »