Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Computer’ Category

Backward Region Grant Fund: Appraisal of Panchayat Raj by Mani shankar Iyer – Failure of local governments

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

மக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி?

க. பழனித்துரை

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

பணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.

வாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை,

  • திருவண்ணாமலை,
  • கடலூர்,
  • விழுப்புரம்,
  • திண்டுக்கல்,
  • நாகப்பட்டினம்,
  • சிவகங்கை

ஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.
வட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இப்படி மத்திய அரசு தரும் நிதியை,

  • பஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,
  • இந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,
  • பாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,
  • புதிய கட்டடம் கட்டுதல்,
  • பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,
  • விளையாட்டு மேம்பாட்டிற்கு வசதிகள்,
  • கழிப்பறை,
  • சுற்றுச்சுவர்,
  • மேஜை, நாற்காலி வாங்குதல்
  • மதிய உணவு சமையலறைக் கட்டடம்

உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.
மத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.

இந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.

பின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.

கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.

ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.

அரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.

ஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.

இந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.

மாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.

—————————————————————————————————————————————————

ஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன?

 எம். ரமேஷ்

ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.
இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.
அந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.
10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.
இலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.
இதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.
தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.
மாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.
2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.
22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.
அனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.
தமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.
இதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.
அதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.
முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.

ஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.

எம். ரமேஷ்

Posted in 5, Administration, ADMK, Allocation, Appraisal, backward, Biz, BPO, Budget, Buildings, Caste, Census, Center, City, Community, Computer, Control, Council, Development, DMK, Economy, Education, Expenses, Exports, family, Finance, Fund, GDP, Governments, Govt, Grant, Growth, Homes, Housing, Hygiene, Improvements, Inaction, Income, Info, InfoTech, infrastructure, investments, IT, ITIS, JJ, Kalainjar, Karunanidhi, Kids, KK, local, Mani, Mani shankar, ManiShankar, Measures, Metrics, Money, NGO, Outsourcing, Panchayat, Panchayat Raj, Panchayath, parliament, Planning, Plans, Play, Playgrounds, Policy, Poor, Population, Progress, Refer, Reference, Region, Residences, Resources, Restrooms, Rich, Rural, Sanitary, Schools, Sector, Services, Software, Spend, Spending, Sports, Stalin, State, Statistics, Statz, Students, TamilNadu, Teach, Teachers, Technology, Telecom, TN, Toilets, Villages, Zones | Leave a Comment »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

Computer Keyboard for the Visually Challenged – Contest Winner details

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

இது புதுசு: புதிய வெளிச்சங்கள்!

அருவி

கருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்?

புதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:

“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.

கம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து

வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.

மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.

இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும்? அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.

பார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

ஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.

ஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்!

அருவி

Posted in America, Blind, Braille, Challenged, College, Competition, Computer, Contest, Details, Development, Disabled, Dvorak, Engg, Eyes, Feel, Gadget, Handicapped, Indicators, Information, InfoTech, Invention, IT, Keyboard, Keyboards, Keys, Mice, Mouse, Physically, Professors, Project, QWERTY, Research, School, Shorthand, Sight, Steno, stenographers, Student, Tamil, Teachers, Technology, Touch, University, US, USA, Vision, Winner | 2 Comments »

Q&A with Doctor on Shoulder Pain – Medical Options (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

இது புதுசு: முதுகு வலிக்கு இனி முற்றுப்புள்ளி!

ந.ஜீவா

மூக்குள்ளவரை சளி இருக்கும் என்பார்கள்.

இனி முதுகு இருக்கும் வரை முதுகு வலி இருக்கும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது.

அந்த அளவுக்கு முதுகுவலி இன்றைய நவீன உலகில் பரவலான நோயாகிவிட்டது. அதுவும் நாள் முழுக்க நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முதுகுவலி உடன்பிறவா சகோதரன் போல ஆகிவிட்டது. அலுவலகத்திற்கு லீவு எடுப்பவர்கள் பலமுறை பாட்டியைச் சாகடித்த பின்னால் இப்போது சொல்லக் கண்டுபிடித்திருக்கும் லேட்டஸ்ட் காரணம், “”பேக் பெயின் தாங்க முடியலை சார். டாக்டர்ட்ட போகணும்.”

முதுகுவலி பிரச்சினையை ஆப்ரேஷன் இல்லாமல், ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் தீர்க்க வந்திருக்கிறது ஓர் அதிசய இயந்திரம். ஆசியாவிலேயே… அதுவும் இந்தியாவிலேயே… முதன்முறையாக ஹைதராபாதிலும் இப்போது சென்னையிலும் வந்திருக்கிறது. முதுகுவலி பற்றியும் அந்த இயந்திரத்தின் “மகிமை’ பற்றியும் நம்மிடம் விரிவாகப் பேசினார் சென்னை அண்ணாநகர் தி பேக் அன்ட் நெக் கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் ஹரிஹரன்.

முதுகு வலி இன்று பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?

இன்றைக்கு 13 வயது குழந்தை முதல் 60 வயது தாத்தா வரை முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்குக் காரணம் உடலுழைப்பு இல்லாததே.

என்னுடைய தாத்தா 10 மைல் 15 மைல் என்றாலும் நடந்தேதான் பள்ளிக்குப் போய் படித்தார். வேலைக்கும் போய்வந்தார். என்னுடைய அப்பா சைக்கிளில்தான் எப்போதும் சென்றார். நான் ஒரு கி.மீ. தூரம் என்றாலும் நடந்து செல்லாமல் வாகனங்களில்தான் சென்றேன். உடல் உழைப்பு இவ்வாறு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது.

கிராமப்புறங்களில் நாள் முழுக்க குனிந்து நடவு செய்யும் பெண்களுக்கு முதுகுவலி வருவது கிடையாது. அரிசி குத்துவதும், ஆட்டுரலில் மாவு அரைப்பதும், ஏன் அம்மியில் மிளகாய் அரைப்பதுமே இல்லாமற் போய்விட்டது. இவ்வாறு உடல் உழைப்பு இல்லாததே முதுகுவலி வர முக்கியக் காரணம்.

உடல் உழைப்பு எதுவும் செய்யாமல் நாம் முதுகை இன்சல்ட் பண்ணுகிறோம். பதிலுக்கு முதுகு நமக்குத் தொல்லை கொடுக்கிறது.

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி வராமல் இருக்க அதற்கெனச் சேர்கள் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும் இதனால் பெரிய அளவுக்குப் பயனில்லை. ஏனெனில் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் எப்போதும் முதுகைப் பொருத்தமாகச் சாய்த்து வைத்திருப்பது கிடையாது. பல நேரங்களில் சீட்டின் நுனியில் உட்கார்ந்துதான் வேலை செய்கிறார்கள். இதனால் முதுகு வலி மட்டுமல்ல, கழுத்து வலியும் சேர்ந்து வரும்.

நமது மூளையில் இருந்து வரும் நரம்புகள் தண்டுவடம் என்கிற பெயருடன் முதுகெலும்பின் உள்ளே இருக்கின்றன. இந்த முதுகு எலும்பு 33 சிறிய எலும்புகளால் ஆனது. இந்த எலும்புகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். இரண்டு எலும்புகளுக்கு இடையே மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் இருக்கிறது. தண்டுவடம் முதுகு எலும்பின் நடுவில் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த நரம்புகள் இரண்டு குட்டி எலும்புகளுக்கு நடுவில் இருந்து வெளியேறுகின்றன. இந்த நரம்புகள்தான் தோள்பட்டை முதல் கால்கள் வரை உள்ள அனைத்துத் தசைகளையும் இயக்குகின்றன.

30 – 40 வயதுள்ளவர்களுக்கு ஜவ்வில் நரம்புகள் உராயும். அதனால் கழுத்தின் பின்பக்கத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். கால்களில் வலி ஏற்படும். கால்கள் மரத்துப் போகும்.

50 – 60 வயதுள்ளவர்களுக்கு முதுகு எலும்புகள் ஒரு எலும்பிற்கு மேல் இன்னொரு எலும்பு ஏறிக் கொள்ளும். இதனால் இந்த இரண்டு எலும்புகளையும் இணைக்கும் ஊஹஸ்ரீங்ற் த்ர்ண்ய்ற் லூஸ் ஆகி உடைந்து போய்விடும். இதனால் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான வலி உண்டாகும்.

சிலருக்கு வேறு ஏதாவது ஆப்ரேஷன் செய்வதற்காக மயக்க ஊசியை முதுகில் போடுவார்கள். இந்த ஊசி முதுகில் உள்ள டிஸ்க்கில் பட்டுவிட்டால், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வலி இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குக் குழந்தையின் வெயிட் அதிகமாவதால் முகுகெலும்பில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதுகெலும்பு ஜவ்வில் நரம்பு அழுந்தும். வலி ஏற்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ரத்தம் செல்வது குறைவாக இருப்பதால் முதுகில் வலி ஏற்படும். இப்படி முதுகுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதுகுவலிக்கு என்ன சிகிச்சை?

பல்வேறு காரணங்களால் முதுகு வலி வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றால், முதலில் பெட் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். பிஸியோதெரபி வைத்துக் கொள்ளலாம் என்பார்கள். இடுப்பில் பெல்ட் (ட்ரேக்ஷன்) போட்டுக் கொள்ளலாம் என்பார்கள். வலி தெரியாமல் இருக்கவும் உடலுக்கு ஊக்கம் தரவும் ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடச் சொல்வார்கள். கடைசிக்கும் கடைசியாக ஆப்ரேஷன் பண்ணச் சொல்வார்கள். ஸ்டீராய்டு மாத்திரைகள் அந்த நேரத்தில் வலியைக் குறைத்தாலும் மீண்டும் வலி வந்துவிடும். தவிர இந்த மாத்திரைகள் உடலுக்கு மிகவும் தீங்கானவை.

ஆனால் இம்மாதிரி ஊசி, மருந்து, மாத்திரை, ஆபரேஷன் என்ற வழக்கமான மருத்துவம் எதுவுமில்லாமல் முதுகுவலியை இப்போது தீர்க்க முடியும்.

அது எப்படி?

முதுகு வலி பிரச்னையைத் தீர்க்க வந்திருப்பதுதான் ஈதல9000 என்ற இயந்திரம். சுமார் எண்பத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.

இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதின் பின்னணி சுவையானது. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள்தாம்.

விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆறுமாதம் ஒரு வருடம் என்று போகிற விண்வெளி வீரர்களை அவர்கள் திரும்பி வந்ததும் பரிசோதித்துப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முதுகு எலும்பு ஓர் அங்குலம் வரை வளர்ந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இல்லாததும், அங்கு நிலவும் குறை மண்டல அழுத்தமும்( Negative Pressure)தான். இந்தக் குறை மண்டல அழுத்தமானது முதுகின் மேல் உள்ள தசைநார்களை விரிவடையச் செய்கிறது. காய்ந்து சுருங்கிய நிலையில் உள்ள டிஸ்க்குகளைப் பதப்படுத்தி விரிவடையச் செய்கிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் எவ்வளவு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்?

டிஆர்எக்ஸ் 9000 இயந்திரத்தில் 20 நாட்களில் இருந்து ஒரு மாதம் வரை சில நிமிடங்கள் ஒருவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஜவ்வுப் பகுதி விரிவடைகிறது. ஜவ்வுப் பகுதியில் அழுத்திக் கொண்டு இருக்கும் வலிக்குக் காரணமான நரம்புகள் விடுபடுகின்றன. இதனால் முதுகு வலி அடியோடு போய்விடுகிறது.

இந்த சிகிச்சை செய்ததற்குப் பின் திரும்பவும் ஜவ்வு, தசைகள் சுருங்கி மீண்டும் முதுகு வலி வராதா?

இந்தச் சிகிச்சையின் போது நாங்கள் தசைகள் இறுகவும் மீண்டும் பழைய நிலையை அடையாமல் இருக்கவும் உடற்பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அந்த உடற்பயிற்சியைத் தினமும் தவறாமல் செய்வதால் முதுகு வலி திரும்பவும் வரவே வராது.

முதுகு வலிக்காக ஏற்கனவே ஆபரேஷன் செய்தும் வலி தீராதவர்கள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகிறார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிற இந்த இயந்திரம் இந்தியா உட்பட 16 நாடுகளில்தான் உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையில் முதன்முதலாக எங்களிடம்தான் இருக்கிறது.

Posted in Auto, Backpain, Bed, Bike, Bodyache, Chat, Comfort, Computer, Deskjob, Diet, Doc, Doctor, Driver, Exercise, Injury, Interview, Long distance, medical, Medicine, Options, Pain, Pillow, Posture, Seating, Shoulder, Sleep, Sofa, Software, Spinal, Traction, TV, Two-wheeler, Tylenol, Yoga | 2 Comments »

Space-station computer failure in Atlantis: NASA, Astronauts, International Space Station

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

“அட்லாண்டிஸ்’ ஓடம்: பிரச்னை என்ன?

என். ராமதுரை

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் (ஷட்டில்) வெளிப் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்னை கவலைப்படக்கூடிய ஒன்று அல்ல என்று அமெரிக்க “நாஸô’ விண்வெளி அமைப்பின் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் 2003-ல் கொலம்பியா விண்வெளி ஓடம் பூமிக்குத் திரும்புகையில் தீப்பற்றி வெடித்ததில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர் என்பதால் அட்லாண்டிஸில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னை இயல்பாகக் கவலையை உண்டாக்குவதாக உள்ளது.

அட்லாண்டிஸில் ஏற்பட்டுள்ள பிரச்னை என்ன என்பதை ஆராயும் முன்னர் விண்வெளிப் பயணத்தில் உள்ளடங்கிய சில பிரச்னைகளைக் கவனிப்பது உசிதம்.

பார்வைக்கு விண்வெளி ஓடம் விமானம் போலவே இருக்கிறது. விமானத்துக்கும் விண்வெளி ஓடத்துக்கும் உள்ள ஒற்றுமை அத்தோடு சரி. மற்றபடி விமானம் வேறு. விண்வெளி ஓடம் வேறு. பொதுவில் விமானங்கள் சுமார் 13 கி.மீ. உயரத்துக்கு மேல் செல்வதில்லை. விண்வெளி ஓடங்கள் சுமார் 300 முதல் 400 கி.மீ. உயரம் செல்பவை. விமானங்களுக்கு காற்று மண்டலம் நண்பன். விண்வெளி ஓடத்துக்கு காற்று மண்டலம் எதிரி.

எந்த வகை விமானமாக இருந்தாலும் சரி, அது காற்று மண்டலத்துக்குள்ளாகத் தான் இயங்க முடியும். ஆனால் விண்வெளி ஓடமானது காற்று இல்லாத இடத்தில் – பூமியிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் உயரத்தில் இயங்குவது. விண்வெளி ஓடம் என்பது ஒரு வகையில் செயற்கைக்கோள் போன்றதே.

ஆளில்லாத இதர செயற்கைக்கோள்களுக்கும் விண்வெளி ஓடத்துக்கும் இடையே முக்கிய வித்தியாசம் உண்டு. செயற்கைக்கோள்களின் ஆயுள்காலம் – சுமார் 7 ஆண்டுகள்தான். அது முடிந்ததும் சில காலம் விண்வெளியில் இருக்கும். பின்னர் மெதுவாக அவை பூமியை நோக்கி இறங்க ஆரம்பிக்கும். பிறகு ஒரு கட்டத்தில் அவை வேகமாக இறங்கும். அக் கட்டத்தில் அவை காற்று மண்டலத்தில் நுழையும்.

காற்று மண்டலம் வழியே அதி வேகத்தில் – மணிக்கு சுமார் 27 ஆயிரம் கி.மீ. வேகத்தில் கீழ் நோக்கிப் பாயும் போது காற்று மண்டல உராய்வு காரணமாக மிகுந்த அளவுக்கு சூடேறித் தீப்பற்றி எரியும். சில சிறிய செயற்கைக்கோள்கள் முற்றிலுமாக எரிந்து இறுதியில் பொடியாகிக் கீழே நிலப்பகுதியில் அல்லது கடலில் விழும்.

விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்து விழுகின்ற எந்தப் பொருளும் காற்று மண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றும். நீங்கள் இரவு வானைக் கவனித்தால் ஏதோ நட்சத்திரம் விழுவதுபோல ஒளிக்கீற்று தென்படும். அனேகமாக அது மிளகு அல்லது சுண்டைக்காய் அளவில் இருக்கிற சிறிய கல்லாக இருக்கலாம். விண்வெளியிலிருந்து இவ்விதம் நிறைய கற்களும் அபூர்வமாகப் பெரிய கற்களும் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.

செயலிழந்த செயற்கைக்கோள்கள் காற்று மண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றி அழிவதில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு உயரே செல்கின்ற விண்வெளி ஓடம் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியாக வேண்டும்.

ஆகவே அது பூமிக்குத் திரும்புகையில் காற்று மண்டலத்தில் நுழைந்ததும் தீப்பிடித்து அழிந்துவிடாமல் தடுக்க விண்வெளி ஓடத்தின் வெளிப்புறத்தில் தகுந்த வெப்பத் தடுப்பு ஏற்பாடுகள் உள்ளன.

விண்வெளி ஓடம் பூமியை நோக்கி வேகமாக இறங்கும்போது அதன் வெளிப்புறத்தில் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறான அளவில் சூடாகின்றன. அதன் முகப்புப் பகுதி, இறக்கைகளின் முன்புறப் பகுதிகள் ஆகியவை சுமார் 2900 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சூடேறும்.

அக் கட்டத்தில் விண்வெளி ஓடம் தீப் பிழம்பாகக் காட்சி அளிக்கும். விண்வெளி ஓடம் உயரே சென்றுவிட்டு பூமிக்குத் திரும்புகிற ஒவ்வொரு தடவையும் அது தீக்குளிப்பதாகக் கூறலாம்.

இவ்வளவு வெப்பத்திலும் உருகி விடாமல் அதே நேரத்தில் அந்த வெப்பம் உள்ளே சென்று தாக்காத வகையில் தடுக்க விண்வெளி ஓடத்தின் வெளிப்புறப் பகுதிகளில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அதிக வெப்பம் தாக்கும் பகுதிகளில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த ஓடுகள் சுமார் இரண்டரை சென்டிமீட்டர் முதல் 25 சென்டிமீட்டர் வரை தடிமன் கொண்டவை. இவை பயங்கரமாக சூடேறினாலும் அழிந்துவிடாதவை. வெப்பத்தை நன்கு தாங்கி நிற்கக்கூடியவை.

விண்வெளி ஓடத்தின் வெளிப்புறத்தில் மொத்தம் சுமார் 32 ஆயிரம் ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி நம்பர் கொண்டவை. விண்வெளி ஓடம் ஒரு தடவை உயரே சென்று விட்டு பூமிக்குத் திரும்பியதும் சில ஓடுகள் இழக்கப்பட்டிருக்கும். வெப்பம் அதிகம் தாக்காத பகுதிகளில் சிறு துண்டுகள் வடிவிலான கனத்த போர்வைகள் விசேஷ பிசின் கொண்டு ஒட்டப்படுகின்றன. விசேஷ பொருள்களால் ஆன இந்தப் போர்வைகளும் வெப்பம் உள்ளே செல்லாதபடி தடுக்கக்கூடியவை.

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் இப்போது ஏற்பட்ட பிரச்னை இதுதான். அந்த விண்வெளி ஓடத்தின் பின்பகுதியில் சுமார் 1000 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தாக்கக்கூடிய பகுதி ஒன்றில் பதிக்கப்பட்ட ஒரு போர்வையின் ஓரம் தனியே பிரிந்து புடைத்துக்கொண்டு நின்றது. அதாவது 10 சென்டிமீட்டர் கொண்ட போர்வைப் பகுதி இவ்விதம் ஒட்டிக்கொள்ளாமல் இருந்தது.

விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை விண்வெளி ஓடத்திலிருந்து வெளியே வந்து அந்தரத்தில் மிதந்தபடி செயல்பட்டு அப் போர்வையின் ஓரப் பகுதியை விண்வெளி ஓடத்தின் வெளிப்புறம் மீது மீண்டும் ஒட்டினர். இதன் மூலம் உள்ளே வெப்பம் தாக்கும் வாய்ப்பு தடுக்கப்பட்டு விட்டதாகக் கூறலாம்.

டிஸ்கவரி விண்வெளி ஓடம் 2005லும் 2006லும் பூமிக்குத் திரும்பியபோது இவ்விதம் வெப்பக் காப்பு போர்வையின் சிறு பகுதிகள் சரியாக ஒட்டிக் கொள்ளாத நிலையில் பூமிக்கு வந்து சேர்ந்தது.

செயற்கைக்கோள்களை உயரே எடுத்துச் சென்று செலுத்தவும். பழுதுபட்ட செயற்கைக்கோள்களைக் கைப்பற்றி கீழே கொண்டு வரவும் மற்றும் விண்வெளியில் சில ஆய்வுகளை நடத்தவும் விண்வெளி ஓடங்களை அமெரிக்கா உருவாக்கியது.

எனினும் இப்போது விண்வெளியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பொருள்களையும் விண்வெளி வீரர்களையும் கொண்டு செல்ல கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

1981-ல் தொடங்கி அமெரிக்க விண்வெளி ஓடங்கள் 100-க்கும் மேற்பட்ட தடவை உயரே சென்று பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளன. அபூர்வமாகவே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.)

Posted in Atlantis, Computer, ISS, Reference, Science, space, Technology | Leave a Comment »

Health Education – Teaching about adulthood, sex & biology to Students

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?

ரவிக்குமார்

பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.

மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.

“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.

“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,

அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.

“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.

“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.

“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.

– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.

Posted in A, abuse, adult, adulthood, Adults, AIDS, Awareness, Biology, Boy, Brain, Censor, Chat, Children, Cinema, Computer, Condom, Controversy, Culture, Development, discussion, Education, Exposure, Female, Formal, Gentleman, Girl, Glamour, Health, HIV, Imagination, Insights, Intercourse, Interview, Issue, Kid, Kiss, Lady, Love, Lust, male, masturbate, masturbating, Mature, Media, menstruation, MMS, Movies, NC-17, Opinions, Period, PG, Physchology, PMS, Private, Rape, Rating, Sex, SMS, solutions, Students, Suggestions, Tamil, Teachers, Teen, Teenage, Textbooks, Thamizh, TV, UNICEF, Violence, VT, Vulgar, WHO | Leave a Comment »

It is either MBBS or BE – Decide whether to be a Doctor or Engineer – Ponmudi

Posted by Snapjudge மேல் மே 22, 2007

எம்.பி.பி.எஸ். அல்லது பி.இ.: பொன்முடி

சென்னை, மே 23: மருத்துவ சீட்டில் இடம் பெற்ற பிறகும் பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்கும் சிலர் அந்த இடத்தில் சேராமல் விடுகிறார்கள். இனி அவ்வாறு செய்ய இயலாது என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

சில மாணவர்கள் மருத்துவ கவுன்சலிங்கில் இடம் கிடைத்த பிறகும் பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கிலும் பங்கேற்று, பின்னர் அதில் சேராமல் கைவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் காலியாகிவிடுகின்றன.

கடந்த ஆண்டு ஒரு சில மாணவர்கள் அவ்வாறு செய்ததாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இதைத் தடுக்கும் வகையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்த மாணவர்கள் பி.இ., கவுன்சலிங்கில் பங்கேற்றால், “பி.இ. சீட் கிடைத்த பின் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைப்பேன்’ என்று உறுதிமொழி எழுதித் தர வேண்டும்.

இதன் மூலம் அவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே சேர இயலும். மேலும், எம்.பி.பி.எஸ். சீட் காலியாகாமல் பின்னர் நடைபெறும் கவுன்சலிங்கில் நிரம்பிவிடும்.

கல்லூரி ஆசிரியர் நியமனம்: கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் சில நடைமுறைகள் உருவாக்கப்படுகின்றன. அவர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தும்போது சில நடைமுறைகள் பின்பற்றப்படும்.

கல்லூரிகளில் தற்போது கெüரவ ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவோரில்

  • 7 ஆண்டுகள் பணியாற்றுபவர்களுக்கு 15 மதிப்பெண் தரப்படும்.
  • பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்;
  • எம்.ஃபில். முடித்து ஆசிரியர் பணித் தேர்வுகளை (ஸ்லெட், நெட்) எழுதி வெற்றி பெற்றிருந்தால் 6 மதிப்பெண்;
  • முதுநிலை மட்டும் முடித்து, ஸ்லெட், நெட் தேர்வுகளில் வெற்றிபெற்றிருந்தால் 5 மதிப்பெண்;
  • புத்தகங்கள், ஆய்வுகளைச் சமர்ப்பித்திருந்தால், 5 மதிப்பெண்;
  • நேர்காணலுக்கு 10 மதிப்பெண் தரப்படும்.
  • மொத்தம் 2,062 பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றார் அமைச்சர் பொன்முடி.

ஜூலை 2 முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்

மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கி, ஜூலை 8-ம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகே பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் ஜூலை 9-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி நிறைவடைகிறது.

இந்த இரு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை பூர்த்தியான பிறகு தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கவுன்சலிங் நடைபெறும். 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

——————————————————————————————-

சுமையாகலாமா கவுன்சலிங்?

பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு (கவுன்சலிங்) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடைபெறும். எனினும், பொதுமக்கள் வலியுறுத்தினால், வெவ்வேறு மையங்களில் கலந்தாய்வை நடத்தவும் அரசு தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி.

சில பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை லட்சக்கணக்கான ரூபாய்க்கு “விற்பனை’ செய்வது குறித்து யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார். சில சமூகப் பிரச்சினைகளில் மக்கள்தான் புகார் தர வேண்டும், மக்கள்தான் வலியுறுத்த வேண்டும் என்று மக்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள அரசு காத்திருப்பதில்லை.

நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் தர்ணா நடத்தவில்லை. ஊர்வலம் போகவில்லை. கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியதை ஏற்றுத்தானே அரசு தீவிரமாகப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்தது?

அதைப் போல், கலந்தாய்வு முறை குறித்தும், நன்கொடை குறித்தும் பத்திரிகைகள், அரசியல் பிரமுகர்கள் மூலம் வரும் புகார்களையே அடிப்படையாகக் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்தபோது, கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசு அறிவித்தது. அதை உறுதி செய்யும் வகையில், 65 ஆயிரம் பொறியியல் இடங்களுக்கு இதுவரை 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சில கேள்விகளை இப்போது எழுப்பியுள்ளது.

முன்பெல்லாம் 65 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்களில் கலந்தாய்வு முடிந்த பின் கிட்டத்தட்ட 6 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும். இந்த முறை 87 ஆயிரம் பேர் 65 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பிப்பதால், கடும் போட்டி நிலவும். அதை அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது?

ஒரே அண்ணா பல்கலைக்கழகம் இருந்த காலத்தில் நான்கு மையங்களில் கவுன்சலிங் நடைபெற்றது. தற்போது நான்கு அண்ணா பல்கலைக்கழகங்கள் இருக்கும்போது, ஒரே இடத்தில் மட்டும் கவுன்சலிங் நடத்துவதால் குழப்பம் நேராது என்று என்ன நிச்சயம்?

கிராமப்புற மாணவர்களுக்காக என்று கூறும் அரசு, விண்ணப்பப் படிவங்களின் விலையை ரூ.500 என்று நிர்ணயித்தது ஏன்? கலந்தாய்வுக் கட்டணத்தையும் ரூ.100 மட்டுமே குறைத்துள்ளது.

கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படுவதால், தொலைதூரத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும் அவர்களுடன் வரும் பெற்றோர் அல்லது துணைக்கு வருபவரின் பஸ் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. அது மட்டும் பலன் தருமா, சென்னையில் தங்குவதற்கு சுமார் ரூ.2000 வரை செலவு ஆகும். இவையெல்லாம் அவர்களுக்கு நிதிச் சுமை இல்லையா?

ஏராளமானோர் பி.இ. இடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் மக்களுக்கு அதிகரித்து வரும் நாட்டமும் அதன் வேலைவாய்ப்புமே காரணம் என்பது தெரியும். ஆனால், ஆண்டுதோறும் பலரும் விழையாமல் இருக்கும் சிவில், மெக்கானிக்கல் படிப்புகளால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

சிலசமயம் மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்த பிறகு, பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங்கிலும் சில மாணவர்கள் பங்கேற்கிறார்கள். அதில் இடம் கிடைத்த பிறகு சேராமல், எம்.பி.பி.எஸ். படிப்பையே தக்க வைத்துக் கொள்கிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் பி.இ. சீட் காலியாகவே போய்விடுகிறது. இதைத் தவிர்க்க, எம்.பி.பி.எஸ். கிடைத்த மாணவர்கள் “பி.இ. கவுன்சலிங்கில் பங்கேற்றால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாட்டேன்’ என்று எழுத்து மூலம் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். அது வரவேற்கத் தக்கதே.

கடந்த ஆண்டுகளைப் போல் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையில் வழக்கு, விவகாரம் என்று இதுவரை அதிக குழப்பம் இல்லை என்பது உண்மை. குழப்பம் மட்டுமன்றி, சுமையையும் தவிர்ப்பது அரசின் கடமை.

பொதுமக்களின் கூக்குரலுக்கும், வலியுறுத்தலுக்கும் காத்திராமல் கவுன்சலிங்கை குறைந்தது நான்கு மையங்களிலாவது நடத்த அரசே முன் வரவேண்டும். அதுதான் நல்லாட்சிக்கு அழகு!

————————————————————————————————-

அரசின் அலட்சியத்தால் 300 எம்பிபிஎஸ் இடங்கள் இழப்பு: ஜெயலலிதா குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதனால் 300 மருத்துவ இடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“”மருத்துவர் ஆக வேண்டும் என மாணவர் சமுதாயம் தங்களின் நெடுநாளைய கனவுகளோடு இருக்கும் நிலையில் இத்தகைய அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெற்றோர் தங்களது பிள்ளைகளை மருத்துவராக உருவாக்கும் முயற்சிக்குத் திமுக அரசின் தவறான கொள்கை மற்றும் தெளிவற்ற தொலை நோக்குப் பார்வையே முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

தமிழகத்தில் மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்புப் படித்து சிறந்த மருத்துவர்களாகத் திகழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2001 – 06 ஆண்டைய எனது ஆட்சிக் காலத்தில் தேனி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகளும் முடிக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் தொடக்கி வைக்கப்பட்டன.

தற்போது திமுக அரசின் அலட்சியப் போக்கால் இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் போதிய அடிப்படை வசதிகள், குறிப்பாக பேராசிரியர்கள், கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதனை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து

  • 2004-ல் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிக்கும்
  • 2005-ல் வேலூர் மருத்துவக் கல்லூரிக்கும்
  • 2006-ல் உச்ச நீதிமன்ற ஆணை மூலம் தேனி மருத்துவக் கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டன.

இந்த 3 மருத்துவக் கல்லூரிகள் எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு கலந்தாய்வு முறையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணிபுரியும் மருத்துவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை வேறு எங்கும் மாறுதல் அளிக்காமல் தொடர்ந்து அதே மருத்துவக் கல்லூரியிலேயே பணியாற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தேன்.

ஆனால் திமுக ஆட்சியில் இந்த மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு மாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாததுதான் முக்கிய காரணம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தனது ஆய்வு அறிக்கையில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே திமுக அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 300 மருத்துவர்கள் உருவாவதைத் தடுத்து நிறுத்தி அவர்களுடைய வாழ்க்கையில் பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 300 மருத்துவ இடங்களை இந்த ஆண்டே மீண்டும் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இல்லையெனில் இதற்கான முழுப் பொறுப்பையும் முதல்வர் கருணாநிதி ஏற்க வேண்டும்.”

Posted in Admissions, ADMK, AIADMK, Analysis, Anna, BE, Bribe, Bribery, BTech, Choice, City, College, Computer, Corruption, Counseling, Counselling, Dean, Decision, Doctor, DOTE, Education, Engg, Engineer, Engineering, Govt, Information, InfoTech, Instructor, IT, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Kanniakumari, Kanniyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, MBBS, medical, Minister, MS, Needy, Op-Ed, Ponmudi, Poor, Professor, REC, Rich, Rural, School, seat, solutions, Students, Suburban, Teacher, Tech, Technology, Theni, University, Vellore, Velore, Village, Wealth, Wealthy | Leave a Comment »

The cost of Engineering Admissions – Reservations, Wealthy vs Needy

Posted by Snapjudge மேல் மே 22, 2007

விலைபோகும் கம்ப்யூட்டர் படிப்புகள்

சென்னை, மே 22: பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்க, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை போகின்றன என்பது அதிர்ச்சியான உண்மை.

“பிளஸ் 2′ தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே பல பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளையே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகிறார்கள்.

காரணம், சாஃப்ட்வேர் தொழிலில் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதே. அத்துடன், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக்கு “கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் வேலை கிடைக்க சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு செய்து வருகிறது.

பி.இ. படித்தால், நிறைய சம்பளத்துடன் நிச்சயம் நல்ல வேலை என்ற நிலை உருவாகியுள்ளதால், இப்படிப்புகளில் சேர ஆண்டுதோறும் ஆயிரம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதன் விளைவாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நிறைய பேர் போட்டியிடுகிறார்கள். எனவே, அதற்கு “விலை’ என்ற ரீதியில் நன்கொடைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சில முன்னணிக் கல்லூரிகளில் மேற்கண்ட படிப்புகளில் சேர கல்விக் கட்டணம் நீங்கலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் வசூலிக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே இக் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து தங்களுடைய இடங்களை முன் பதிவு செய்து கொள்கிறார்கள்.

இவ்வாறு நிர்வாக இடங்களில் மாணவர்கள் சேர கட்டணம் வசூலிப்பது, பதிவு செய்து கொள்வது குறித்து தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “”அவ்வாறு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அவர்கள் எங்கள் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் நடத்தப்படுகின்றன என்று விசாரித்து வருகிறார்கள். அவ்வளவுதான் பதிவு செய்வில்லை” என்றனர்.

“பிளஸ் 2′ தேர்வு முடிவு வெளியாகும் முன்பு பல பொறியியல் கல்லூரிகளில் முன்பதிவு செய்வதற்காக ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் எனப் பல பெற்றோர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு பதிவு செய்த மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அந்தப் பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்படுவதாகச் சில பெற்றோர்கள் கூறினர்.

பிளஸ் 2 தேர்வு வெளியான பின், மிக நல்ல மதிப்பெண்ணைப் பெற்றவர்களையே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்கிறார்கள் என்பது விசாரித்தபோது தெரியவந்தது.

இதனிடையில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் ஒற்றைச் சாளர முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாகவே, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் வசூலித்த “முன்பதிவுக் கட்டணத்தை’ கல்லூரி நிர்வாகங்கள் திருப்பித் தருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் வழக்கம்போல், சிவில், மெக்கானிக்கல் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு இத்தகைய கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. காரணம், இப்படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் மிக மிகக் குறைவு.

Posted in +2, Affordability, BE, BITS, Bribe, Bribery, BSc, BTech, Campus, Colleges, Computer, Doctor, Donation, DOTE, ECE, Education, EEE, Employment, Engg, Engineering, Entrance, Gentleman, HSC, IIM, IIT, InfoTech, Interview, IT, Jobs, kickbacks, Marks, medical, Merit, Money, MSc, Plus Two, Poor, Price, professional, Ranking, REC, Reservation, Rich, Scholarship, Schools, Science, Score, seat, Self-financed, Software, Students, Technology, University, Wealthy | Leave a Comment »

Dinamani Kathir Weekly Variety: Book, Computer User, Gadam, Traffic, Helmets

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

படித்ததில் கிடைத்தது

சலூர், ஆரிகரு, நிகமா, கொரூலா, பொதுகே, மனார்பா – இதெல்லாம் என்ன என்கிறீர்களா? ஒரு வேளை ஜப்பானிய வார்த்தைகளோ என்று குழம்புகிறீர்களா? குழப்பம் வேண்டாம்.

சலூர் அல்லது சாலூர் என்றால் சேலம்.

ஆரிகரு என்றால் திருச்சி உறையூர்.

நிகமா என்றால் நாகப்பட்டினம்

கொரூலா என்றால் காரைக்கால்.

பொதுகே என்றால் பாண்டிச்சேரி.

மனார்பா என்றால் சென்னை மயிலாப்பூர்.

இப்படி நம்ம ஊர்ப் பெயர்களை வாய்நிறைய அழைத்தவர் தாலமி. கி.பி.119 – 161 ஆண்டுகளில் எகிப்தில் வாழ்ந்த அறிஞர். அவர் எழுதிய புவியியல் புத்தகம் ஏழாம் தொகுதியில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன.

(வி.எஸ்.வி.இராகவன் எழுதிய “தாலமி’ என்ற நூலிலிருந்து கிடைத்த தகவல்)

ஆராய்ச்சி: கம்ப்யூட்டர் – கீ போர்டு – கைகள்!

ந.ஜீவா

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருடைய வீடுகளிலும் ரேடியோ கூட இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருடைய வீடுகளிலும் டி.வி.இல்லை. ஆனால் இப்போது குடிசைகளின் கதவைத் தட்டி டி.வி. நுழைந்துவிட்டது. இன்னும் பத்தாண்டுகளில் கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் காலம் மாறிவருகிறது.

கம்ப்யூட்டர் படிப்பும் அந்தத் துறையில் வேலைவாய்ப்பும் பெருகிவிட்டதைப் போலவே அது தொடர்பான பிரச்சினைகளும், உடல் நலக் குறைபாடுகளும் அதிகரிப்பது இயல்பானதே.

ஒரு நாளைக்குப் பத்து, பன்னிரண்டு மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி, கழுத்து வலி, கண்ணில் பிரச்சினைகள், தலைவலி போன்றவை ஏற்படுவது சாதாரணம்.

மணிக்கட்டில் வலியும் அதைத் தொடர்ந்து விரல்களில் பாதிப்பும் பின்னர் கம்ப்யூட்டரில் வேலை செய்ய முடியாத அளவுக்குக் கைகள் பாதிக்கப்படுவதும் வெளிநாடுகளில் எப்போதோ ஏற்பட்டுவிட்டன. நமது நாட்டில் அவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்துள்ளனர் தஞ்சை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கே.முகம்மது அலியும் சென்னை ஸ்ரீஇராமச்சந்திரா மெடிக்கல் காலேஜைச் சேர்ந்த டாக்டர் சத்தியசேகரனும். போலந்தில் இருந்து வெளிவரும் Intertnational journal of JOSE occupational safety and Ergonomics என்ற உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழில் அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரை வெளிவந்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் பாதிப்புகள் ஏற்படாமல் எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பது பற்றியும் டாக்டர் முகம்மது அலியிடம் பேசினோம்.

டாக்டர் கே. முகம்மது அலி

நம்முடைய நாட்டில் குறிப்பாகச் சென்னையில் கடந்த பத்தாண்டுகளாகவே ஐ.டி. கம்பெனிகள் அதிகரித்துவிட்டன. நிறையப் பேர் கம்ப்யூட்டர் படித்துவிட்டு இரவும் பகலும் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். இந்த ஐ.டி.கம்பெனிகளில் வேலைசெய்யும் பலர் ஒரு நாளைக்கு பத்துமணி நேரம், பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்கிறார்கள். அது தவிர, வீட்டுக்கு வந்தும் அலுவலக வேலைகளைச் செய்பவர்களும் உள்ளனர். போதாக் குறைக்கு இன்டர்நெட் கனெக்ஷன் வேறு வாங்கி வைத்திருப்பவர்கள் வீட்டிற்கு வந்து மேலும் இரண்டுமணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருப்பார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கழுத்து வலி, முதுகு வலி, கண்எரிச்சல், தலைவலி, உடல்பலவீனமாக உணர்தல், மன இறுக்கம் எல்லாம் சாதாரணம் என்று சொல்லக் கூடிய அளவில் மணிக்கட்டில் வலி ஏற்படும். மணிக்கட்டுப் பகுதியில் உள்ள மீடியன் நரம்பில் ஏற்படும் பாதிப்பினால் இது ஏற்படுகிறது. இதனால் கைவிரல் மரத்துப் போகும். இரவுநேரத்திலும் காலையில் எழும்போது கைவிரல்களில் வலி அதிகமாகத் தெரியும். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனிக்கவில்லையென்றால் பின்னர் கைத் தசைகள் பாதிக்கப்பட்டு கைகளினால் வேலையே செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த நோய்க்கு Carpal tunnel syndrome என்று பெயர்.

நமது நாட்டில் கம்ப்யூட்டர் வேலை வாய்ப்புகள் பெருகி வரும் சமயத்தில் இந்த மாதிரியான பாதிப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைப் பற்றி அறிய ஆராய்ச்சி மேற்கொண்டோம். நானும் டாக்டர் சத்தியசேகரனும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.

சென்னையில் உள்ள சுமார் 33 கம்பெனிகளில் இந்த ஆராய்ச்சிக்காக ஏறி இறங்கினோம். ஆராய்ச்சி செய்வதற்கான அனுமதி வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பெரும்பாலான கம்பெனிகள் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளாக இருப்பதால் அதன் தலைமையகங்கள் வெளிநாடுகளில் உள்ளன. அவர்கள் முறைப்படி அனுமதி பெற வேண்டியிருந்தது. கடைசியில் எங்கள் ஆராய்ச்சிக்கு உட்பட்ட கம்பெனிகள் வெறும் 21 தான். அதில் மொத்தம் பணிபுரியும் 4276 பேரில் 648 பேரை “ராண்டம் சாம்பிளிங்’ என்கிற முறையில் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.

ஆராய்ச்சியின் முடிவில் எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன. கம்ப்யூட்டரில் வேலைசெய்பவர்களில் எட்டுப் பேருக்கு ஒருவருக்கு இந்த மணிக்கட்டு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

எங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் தாம். அதிலும் ஆண்களே அதிகம். பொதுவாகப் பெண்களைவிட இந்தத் துறையில் ஆண்களே அதிக நேரம் வேலை செய்வதும் எங்கள் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது. ஆண்கள் சராசரியாக 12 மணி நேரம் செய்தால் பெண்கள் 8 மணிநேரம்தான் வேலை செய்வது தெரிந்தது. இதனால் ஆண்களுக்கு இந்தப் பாதிப்புகள் அதிகம். மேலும் ஆண்கள் வீட்டிற்குப் போயும் இன்டர்நெட்டில் மூழ்கிவிடுவதும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் காரணம்.

டாக்டர் சத்தியசேகரன்

இந்தப் பிரச்சினை வருவதற்கு முக்கியக் காரணம், கம்ப்யூட்டரில் கீ போர்டில் டைப் செய்யும் போதும், மெüûஸப் பயன்படுத்தும் போதும் மணிக்கட்டு அருகே கை மடங்கியிருக்கும்படி வேலை செய்வதுதான். அதனால் மீடியன் நரம்பு பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க முழங்கையும் மணிக்கட்டும் நேர்கோட்டில் இருக்கும்படி வைத்து வேலைசெய்ய வேண்டும். இதற்கு உட்காரும் இருக்கை வேலை செய்பவரின் உயரத்திற்குத் தக்கபடி ஏற்றி இறக்கி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி இருக்க வேண்டும்.

பலர் வீடுகளில் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள். ஆனால் அதற்கேற்ற பொருத்தமான மேஜையோ, நாற்காலியோ வாங்கமாட்டார்கள்.

அதற்கடுத்து தொடர்ச்சியாக வேலை செய்யாமல் அரை மணிநேரத்துக்கு ஒரு தடவை 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். 2 – 3 மணி நேரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும்.

மானிட்டருக்கும் கைக்கும் உள்ள தூரத்தைப் பொருத்தமான அளவில் வைக்க வேண்டும். மணிக்கட்டு ஒரு போதும் மடங்கவே கூடாது.

2004 ல் நாங்கள் செய்த இந்த ஆராய்ச்சியை நாங்கள் போலந்தில் உள்ள ஆராய்ச்சி இதழுக்கு அனுப்பி வைத்தோம். அந்த இதழ் சர்வதேச தொழிலாளர் அமைப்பாலும் (ILO), சர்வதேச எர்கானமிக்ஸ் அமைப்பாலும் (IEA) அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. எந்த ஆராய்ச்சிக் கட்டுரையை அனுப்பி வைத்தாலும் அவர்கள் உடனே “ஓகே’ சொல்லிவிடமாட்டார்கள். இத்துறை சார்ந்த பல நிபுணர்களின் பார்வைக்கு கட்டுரை அனுப்பி வைக்கப்படும். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே கட்டுரை பிரசுரிக்கப்படும். அது 2006 டிசம்பர் மாதம் பிரசுரிக்கப்பட்டது.

எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் இணையதளமான www.pubmed.com ் இலும் எங்களுடைய கட்டுரை வெளிவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியை இந்தியாவிலேயே நாங்கள்தான் முதன் முறையாகச் செய்துள்ளோம்.

2004 இல் சண்டிகாரில் நடந்த IAPSM – இன் தேசியமாநாட்டில் இந்தக் கட்டுரைக்கு “இளம் ஆண்விஞ்ஞானிகளின் சிறந்த ஆராய்ச்சிக்கான விருது கொடுத்தார்கள்.

இந்த ஆராய்ச்சியைச் செய்து உண்மையைக் கண்டுபிடிப்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. கம்ப்யூட்டரில் தொடர்ந்து பணிபுரிபவர்களுக்கு இம்மாதிரியான பிரச்சினைகள் இனியும் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

எனவே இதுகுறித்து கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் வேலை செய்யும் கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளைச் சொல்கிறோம். குறிப்பாக ஸீட்டிங் அரேன்ஜ்மென்ட் பற்றிச் சொல்கிறோம். அரசுக்கும் இந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிவிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

முகங்கள்: நீதியின் ஏ.கே.47!

ஞாயிறு

ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் டிராஃபிக் ராமசாமி (74) அநீதிகளுக்கு எதிரான ஓர் ஏ.கே.47!

பொதுமக்கள், போலீஸ், அரசியல்வாதி, வக்கீல், முதல்வர் என யார் தவறு செய்தாலும் “பொது நல வழக்கு’ மூலம் தட்டிக் கேட்பவர்! வெற்றி பெறுபவர்!

லேட்டஸ்ட் வெற்றி -“ஹெல்மெட் கட்டாயம்!

இந்த டிராஃபிக் ராமசாமி தன் டெரிஃ”பிக்’ பயண அனுபவத்தை அவரே இங்கு சொல்கிறார். நோ டிராஃபிக் “ஜாம்’!

“”ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள் தினம். அன்னைக்குதான் நான் பிறந்தேன். வருஷம் 1934. முட்டாள்கள் தினத்தில் பிறந்தவர்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள் என்பதை மாற்றவேண்டும் என்கிற எண்ணம் எனக்குச் சின்ன வயதிலிருந்தே உண்டு. அதை இப்போது நான் அறிவாளிகள் தினம்னு மாற்றியிருக்கிறேன் என்று கூடச் சொல்லுவேன். தனக்குச் சரியென்று பட்டதைச் சரியென்றும் தவறென்று பட்டதைத் தவறு என்றும் சொல்வது தவறே இல்லை. இந்த எண்ணமும், இந்தக் கொள்கையும்தான் என் மூச்சே. இதை நான் சின்ன வயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்.

பச்சையப்பன் கல்லூரியில் ஃபெல்லோ ஆர்ட்ஸ் முடிச்சிட்டு பி.அண்ட்.சி மில்லுல படிப்படியா முன்னேறி அதிகாரியா வேலை செஞ்சேன். எங்க அப்பாவும் அங்க வேலை பார்த்தார். எனக்குக் கல்யாணம் செய்து வைக்க அப்பா முடிவு செய்தார். பொண்ணு பார்த்து நிச்சயதார்த்தம் முடிச்சு கல்யாணப் பத்திரிகையும் அடிச்சாச்சு. எனக்குத் தெரியாமலேயே எங்கப்பா பொண்ணு வீட்டாரிடம் வரதட்சணை கேட்டிருக்கிறார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரதட்சணை. இந்த விஷயம் தெரிந்ததும், வரதட்சணை வாங்கக்கூடாதுனு சொன்னேன். எங்கப்பா ஒத்துக்கல. வாங்கியே ஆகணும்னு ஒத்தக் கால்ல நின்னாரு. வாங்கக்கூடாதுனு நான் ரெட்டைக் கால்ல நின்னேன். இது ரெண்டு பேருக்குள்ளேயும் பெரிய எதிர்ப்பா கிளம்பிடுச்சு. பத்திரிகை அடிச்சு கொடுத்தப் பிறகும் கல்யாணத்தை நிறுத்துவதற்கு அப்பா முயற்சித்தார். பி.அண்ட்.சி மில்லுல எனக்கு மேல இருந்த அதிகாரிகளிடம் சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிடுவதாக மிரட்டினார். நான் அஞ்சவில்லை. எதிர்ப்புகளை மீறி வரதட்சணை வாங்காம நிச்சயம் செய்த பெண்ணையே மணம் முடித்தேன். வீட்டைவிட்டு தனியாகவும் வந்துவிட்டேன். எங்கூட பிறந்தவங்க பத்துபேரு. கூட்டுக் குடும்பமா இருந்தோம். அதோடு பிரிந்ததுதான், இன்று வரை சேரவில்லை. சில காலத்திற்கு பிறகு பி.அண்ட்.சி மில்லு வேலைய உதறிவிட்டு வந்து, சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்பதுதான் என் வேலை என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.

ஆரம்பத்தில் தவறு செய்கிற ஊழியர்கள் மீது பெட்டிஷன் போட்டு நடவடிக்கை எடுத்தேன். அப்போது அதிகாரிகளும் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுத்தார்கள். போகப் போக பெட்டிஷனுக்கு மதிப்பு இல்லாமல் போனது. போட்ட பெட்டிஷன்கள் குப்பைக் கூடைக்குத்தான் போயின. இதன்பிறகுதான் பொதுநல வழக்குப் போடத் தொடங்கினேன்.

முதல் வழக்கு ஐகோர்ட்டு பகுதியில் உள்ள ஒரு ரோட்டை ஒன்வேயாக மாற்றியது தொடர்பானது. ஐகோர்ட்டு உள்ள பாரிமுனை பகுதி நெரிசல் மிகுந்த பகுதி. ஒன் வே மாற்றிய பிறகு பல விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். ஒன் வேயாக மாற்றிய முதல்நாள் ஒரு கண்டக்டர் உயிரிழந்தார். ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு ரோடைக் கிராஸ் செய்கிறபோது வேனில் அடிபட்டு இறந்துபோனார். இப்படி ஒன்றரை வருடத்தில் 28-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது இருவழிச் சாலையாக இருந்தபோது விபத்தில் இறந்தோர் எண்ணிக்கையைவிட அதிகம். இந்தப் புள்ளிவிவரங்களுடன், இறந்தவர்கள் போட்டோ உட்பட அனைத்து விவரங்களையும் சேகரித்து பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் என் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை. கோர்ட்டில் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி, “”ஐகோர்ட்டு உள்ள பாரிமுனை பகுதியை ஜெர்மனியில் உள்ள சாலை அமைப்புகள் போல மாற்றி அமைக்கப்போகிறோம். இதில் ஒரு கட்டம்தான் ஒன் வே. இது இங்கு அவசியமானது” என்றார். அதற்கு நான் “”இந்த அதிகாரி ஜெர்மனிக்குதான் லாயக்கு… தமிழ்நாட்டுக்கு லாயக்கில்லை. அவரை அங்கேயே மாற்றிவிடுங்கள்”என்று சொன்னேன். இதன் பிறகு நீதிபதிகள் விசாரித்து பாரிமுனை பகுதிக்கு ஒன் வே சரிவராது என்று தீர்ப்பு வழங்கினர். இந்த வழக்கில் ஒரு சோகச் சம்பவம் என்னவென்றால். எந்த அதிகாரி பாரிமுனை பகுதியை ஜெர்மனியாக மாற்றி அமைக்கிறேன் என்று சொன்னாரோ அவருடைய சகோதரி கணவர் தீர்ப்பு வருவதற்கு முதல்நாள் விபத்தொன்றில் அதே சாலையில் இறந்துபோனார். அதன் பிறகு மீன்பாடி வண்டிகள் குறித்து வழக்குத் தொடர்ந்தேன். சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களின் நலனின் அக்கறை கொண்டு, .25 குதிரை திறனுள்ள மோட்டாரை சைக்கிள் ரிக்ஷாவில் பொருத்திக்கொள்ள அனுமதி கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் போகப்போக சைக்கிள் ரிக்ஷா என்ற பெயரில் மீன்பாடி வண்டியில் மோட்டார் வாகனங்களுக்குப் பொருத்தக்கூடிய மோட்டாரைப் பொருத்தி ஓட்டி வந்தனர். இந்த மீன்பாடி வண்டியில் அடிபட்டு இறந்தால் எந்த நஷ்ட ஈடும் பெற முடியாது. இதைக் கருத்தில்கொண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். முதல்கட்டமாக சென்னைக்குள் மீன்பாடி வண்டிக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. புறநகர் பகுதிகளில் மட்டும் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. அங்கேயும் இதற்கு தடைவிதிப்பது தொடர்பாக வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

அதைப்போல அடுக்ககங்கள் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தேன். 85 அடிகள் கொண்ட சாலையில் 3 மூன்று மாடிக் கட்டடங்கள்தான் கட்டலாம். ஆனால் அனுமதி பெறாமல் பலர் பலமாடி கட்டடங்கள் கட்டியுள்ளனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் 32 அடுக்ககங்களை இடிக்கச் சொல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி பல தரப்பிலும் இருந்து மிரட்டல் வந்தன. 30 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் கூறினார்கள். நான் வாங்க மறுத்துவிட்டேன்.

இந்த வழக்கில் மட்டுமல்ல பல வழக்குகளில் மிரட்டப்பட்டுள்ளேன். ஒருமுறை ஐகோர்ட்டு அருகில் போக்குவரத்துகளைச் சரிசெய்துகொண்டிருந்தேன். வழக்கு போடுவது மட்டும்தான் என் வேலை என்று நினைக்கக்கூடாது. போக்குவரத்துகளைச் சரிசெய்கிற பணியிலும் ஈடுபடுவேன். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரமும் செய்கிறேன். ஐகோர்ட்டு அருகில் போக்குவரத்தைச் சரிசெய்து கொண்டிருக்கும்போது மாலை நேரம். கூட்டம் அதிகம். எனக்கு ஒரு கண் சரியாகத் தெரியாது. அதற்காகக் கண்ணாடி போட்டிருப்பேன். இதைத் தெரிந்துகொண்ட ஒருவன் கண்ணாடியைத் தட்டிவிட்டு கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டான். இத்தனைக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் சிறிது தூரத்தில்தான் நின்றிருந்தார். அவரிடம் புகார் கொடுத்தேன் அவருக்குத் தெரிந்துதான் இந்தச் சம்பவம் நடந்தது. ஒரு நடவடிக்கையும் இல்லை. ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். அவர்கள் உத்தரவின்பேரில் எனக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. மக்களும் கேட்டுப் பெறலாம் என்பதற்காகத்தான் போலீஸ் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டேன். என்னைப் போல என் வீட்டாருக்கு எந்தவித தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக நான் அவர்களோடு இல்லை. கோடம்பாக்கத்தில் ஒரு நண்பர் வீட்டில் இருக்கிறேன். நாளுக்குநாள் எதிரிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். வக்கீல்கள், அரசியல்வாதிகள், முதல்வர்கள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது எனக்குச் சந்தோஷத்தையே அளிக்கிறது. என் ரோல் மாடல் இராஜாஜி. தவறென்றால் எங்கும், யாரையும் தட்டிக் கேட்பேன்.” என்று கையில் கேமரா எடுத்துக்கொண்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் சகிதம் எங்காவது தவறுகள் நடக்கிறதா என்று பஸ்ஸில் ஏறி பயணிக்கத் தொடங்குகிறார் டிராஃபிக்!

மேடை: இங்கே கடம்; அங்கே க்ளே}டிரம்!

ரவிக்குமார்

கர்நாடக இசை உலகில் மூத்த தலைமுறை, சமகாலத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் தலைமுறை, வளர்ந்து வரும் இளந்தலைமுறை, இந்த மூன்று தலைமுறை இசைக் கலைஞர்களும் தங்களின் கச்சேரிக்கு கடம் வாசிப்பதற்கு ஃபர்ஸ்ட் சாய்ஸôக விரும்புவது, “கடம்’ சுரேஷ்!

“”கடவுள் அனுக்கிரகத்தோடு, அனுசரிப்புடன் கூடிய வாசிப்பு முறையை நான் பின்பற்றுவதுதான், மூத்த தலைமுறை கலைஞர்கள் முதல் இளந்தலைமுறை கலைஞர்கள் வரை பலரும் நான் பக்கவாத்தியம் வாசிக்கவேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம்” என்கிறார் அடக்கத்தோடு சுரேஷ்.

கடம் தவிர மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங் போன்ற வாத்தியங்களை இசைப்பதிலும், கொன்னக்கோலிலும் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் சுரேஷ், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்த இரண்டாவது உலகளாவிய தாள வாத்தியக்காரர்கள் பங்கேற்ற இசைத் திருவிழாவில் பங்கேற்று கடம் வாசித்திருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்த ஒரே இந்தியக் கலைஞர் “கடம்’ சுரேஷ் என்பதால், இந்தியர்கள் “காலரை’த் தூக்கி விட்டுக் கொள்ளலாம்! இனி அவரின் இசைப் பயணத்திலிருந்து சில ஞாபகத் துளிகள்!

நான் இன்றைக்கு இசையுலகில் நல்லதொரு நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனக்குக் கிடைத்த குரு பரம்பரையினர்தான். லய மேதை ஹரிஹர சர்மா தான் எனக்கு முதல் குரு. இவர் விக்கு விநாயகராமின் தந்தை. விக்கு விநாயகராமிடமும் என்னுடைய பாடத்தைத் தொடர்ந்தேன். அதன்பின், உமையாள்புரம் நாராயணசுவாமியிடம் அவரின் கடைசி காலத்தில் அவரிடமிருந்த மிகப்பெரிய பொக்கிஷத்தை நான் அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அது, அவரின் தந்தை கோதண்டராம ஐயர் கடம் வாசிப்பில் தனக்கென உண்டாக்கியிருந்த பாணி. கையின் விரல்களைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலும் கடம் வாசிப்பார்கள். ஆனால் அவரது பாணி, கையின் விரல்கள், விரல் நகங்கள், விரல் மூட்டுகள்..என அனைத்தையும் பயன்படுத்தி வாசிக்கும் முறை. அதேபோல் டி.வி. கோபாலகிருஷ்ணனிடமும் இருபது வருடங்கள் வரை லயப் பயிற்சி பெற்றேன். 1980-லேயே டி.வி.ஜி.யுடன் இணைந்து கர்னாடிக் ஜாஸ் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கி விட்டேன். அப்போது திலீப் கீ-போர்டு வாசிப்பார். சிவா டிரம்ஸ் வாசிப்பார். அதன்பின் ஒவ்வொருவரும் தனித் தனி டிராக்கில் பிஸியாகிவிட்டோம். சிவா- டிரம்ஸ் சிவமணியாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார். திலீப், ஏ.ஆர். ரஹ்மானாக புகழ்பெற்ற இசையமைப்பாளராகி விட்டார். நானும் பிரபல வித்வான்களுக்கு கடம் வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.

வீணை எஸ். பாலசந்தர் சீனாவில் இசை நிகழ்ச்சி வழங்கும் போது அவருக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மூத்த இசைக் கலைஞரான உமையாள்புரம் சிவராமன் ஜப்பானில் வழங்கிய இசை நிகழ்ச்சிக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் பெருமையை எனக்கு அளித்தார்.

பொதுவாக நடனத்துக்கு கடம் வாத்தியத்தைப் பயன்படுத்துவது அரிது. ஆனால் மறைந்த நாட்டிய மேதை சந்திரலேகா “மகா காளி’ என்னும் பெயரில் மரபும், நவீனமும் கலந்த நாட்டிய நிகழ்ச்சியை ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிகள் முழுவதிலும் நான் கடம் வாசித்தேன்.

கொல்கத்தாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞரான விக்ரம்கோஷ் தலைமையில் உருவான “ரிதம்ஸ்கேப்’ என்ற குழுவில் நானும் இடம்பெற்றேன். நாங்கள் 2004-ல் பார்சிலோனாவில், ஓர் இசை நிகழ்ச்சியை அளித்தோம்.

இன்றைக்கு பல உலக நாடுகளிலும் என்னுடைய கடத்தின் ஒலி கேட்பதற்குக் காரணம், மிருதங்க மேதையான காரைக்குடி மணிதான். அவரின் “ஸ்ருதிலயா’வின் மூலமாக மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

தற்போது நான் பங்கேற்ற பார்சிலோனா இசை விழாவில், இரண்டு நாட்கள் என்னுடைய மியூசிக் கன்ஸர்ட் நடந்தது. என்னுடன் சேர்ந்து பெüலோ சிமினோ என்பவர் “ஃபிரேம் டிரம்’ என்ற தாள வாத்தியத்தை வாசித்தார். இந்த வாத்தியம் நம்மூரில் வாசிக்கப்படும் “டேப்’ மாதிரி இருக்கும். ஆனால் இதை கையில்தான் வாசிக்கவேண்டும். கடம் வாத்தியக் கலைஞர்களுக்கு மேற்கத்திய நாடுகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. அங்கு கடத்திற்குப் பெயர் க்ளே-டிரம்! அதன் நாதத்திற்கு மயங்காத மேற்கத்தியர்களே கிடையாது எனலாம். ஃபிரேம் டிரம் வாசிக்கும் பெüலோ சிமினோ கூட என்னிடம் கடம் வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். எப்படி என்கிறீர்களா? எல்லாம் இ-மெயில், சாட்டிங், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான்!

நான் இங்கிருந்து கடம் வாசித்து அதை ஒரு ஃபைலில் பதிவு செய்து, இ-மெயிலில் அனுப்பி விடுவேன். அந்த ஃபைலில் ஒரு மாதத்துக்கு தேவையான பாடம் இருக்கும். சந்தேகம் என்றால், சாட்டிங்கில் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வார். இப்படி என்னிடம் இணையத்தின் வழியாக இசை படிப்பவர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள். பெüலோ சிமினோ போன்று சில வெளிநாட்டவர்களும் உண்டு. தாகா என்ற ஜப்பானியருக்கு எப்படியோ நான் கடம் வாசித்திருக்கும் சி.டி. கிடைத்திருக்கிறது. அதில் கடத்தின் நாதத்தில் மனதைப் பறிகொடுத்த தாகா ஆகி குனோ, இந்த வாத்தியத்தைக் கற்றுக் கொண்டே தீருவது என்ற முடிவோடு இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தார். அவருடைய ஆர்வம் எனக்குப் பிரமிப்பூட்டியது. மடமடவென்று கடம் வாசிப்பில் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்ட தாகா, இன்றைக்கு மானாமதுரைக்குச் சென்று கடம் வாத்தியங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கும் அளவுக்குத் தேறிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

குரு, சிஷ்ய பாணிதான் இசையைக் கற்றுக்கொள்வதற்கான சரியான முறை. வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம்முடைய கலாசாரத்தின் வேரை இழக்காமல், கலை வடிவங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது இன்றைய தொழில்நுட்பம். இதை நான் தவறென்று சொல்லமாட்டேன். ஆனால் உள்ளூரில் இருப்பவர்கள் எல்லாம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இசையைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தால் அவர்களை நான் ஆதரிப்பது கிடையாது. அவர்கள் நேரடியாகக் கற்றுக் கொள்வதுதான் நல்லது.

நமது மதத் தத்துவங்களின்படி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உடன் வருவது பானை. இப்படிப் பானை தொடர்பான தத்துவங்களை, சிந்தனைகளை தனது (ஒரு குயவன் அரை கடவுள்)‘அ ல்ர்ற்ற்ங்ழ் ஹ க்ங்ம்ண் எர்க்’ என்ற நூலில் 1960-ம் ஆண்டு எழுதியுள்ளார் பிரெஞ்ச் எழுத்தாளரும், தத்துவவியலாளருமான ழான் கேன்டீன். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு ராஃப்பேல் ஓப்ரியான் என்னும் பிரெஞ்ச் குறும்பட இயக்குனர் “யதி’ என்னும் பெயரில் 45 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படத்தை 1996-ல் எடுப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். அந்தக் குறும்படத்தின் பின்னணி இசையில் முழுக்க முழுக்க நான் கடம் வாசித்திருந்தேன். இந்தக் குறும்படத்துக்கு சிறந்த குறும்படத்திற்கான பரிசும் கிடைத்தது.

எந்த வேளையில் சிவதாண்டவமாடினாலும் அப்போதெல்லாம் வாசிக்கப்படும் பெருமையைப் பெற்ற இசை வாத்தியம் கடம். அதன் புகழ் வெளிநாட்டவர்களின் இந்தக் குறும்படத்தில் வெளிப்படுகிறது என்றால் அது மகிழ்ச்சியான விஷயம்தானே!” என்கிறார் சுரேஷ்.

-கடத்தின் நாதத்திற்கு நிகரேது!

Posted in Book, Computer, Dinamani, Everything, Gadam, Helmets, Junk, Kathir, Traffic, User, Variety | Leave a Comment »

Andhra MLAs to get software for analysing their Constituency

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

தொகுதி நிலவரத்தை அறிய ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சாப்ட்வேர்

ஹைதராபாத், மார்ச் 7: ஒரு இடத்தில் இருந்து கொண்டே தொகுதி நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ள உதவும் வகையில் புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு ஆந்திர எம்.எல்.ஏ.க்களின் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சாப்ட்வேரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கலாம். கிராமப்புறத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். மக்களின் குறைகள் குறித்தும் கண்காணிக்கவும் இந்த புதிய சாப்ட்வேர் உதவும்.

முதல்கட்டமாக இந்த சாப்ட்வேர் 30 எம்.எல்.ஏ.களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Chandrababu, Chandrababu Naidu, Computer, Congress, Constituency, Deployment, Hyderabad, MLA, Naidu, Software, TDP, Telugu, Y.S. Rajasekhar Reddy, YS Rajasekhara Reddy, YSR | 1 Comment »