Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘SSI’ Category

Cheating the state – Income Tax, Black Money, Business folks

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

வாட்டுது வருமான வரி!

“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.

மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உள்நாட்டிலேயே

  • வியாபாரிகள்,
  • தரகர்கள்,
  • சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
  • என்ஜினீயர்கள்,
  • வக்கீல்கள்,
  • ஆடிட்டர்கள்,
  • விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
  • லாரி உரிமையாளர்கள்,
  • சொந்தத் தொழில் செய்பவர்கள்,
  • வியாபாரிகள்,
  • சேவைத்துறையில் இருப்பவர்கள்

என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.

விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.

வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.

———————————————————————————————————

தமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்

சென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.

2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.

தமிழ்நாட்டில்

  • 2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,
  • 2004+05+இல் ரூ.8,344 கோடி,
  • 2005+06+இல் ரூ.10,861 கோடி,
  • 2006+07+இல் ரூ.14,891 கோடி.

இந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.

செய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.

———————————————————————————————————

 

Posted in Biz, Bonds, Bribery, Bribes, Budget, Bureaucracy, Business, Cheats, Chidamabram, Chidambaram, Chidhambaram, Commerce, Compensation, Corruption, Economy, Employment, Finance, Govt, Homes, Houses, Incentives, Income, Income Tax, Industry, IT, Jobs, Money, NCC, NSS, PC, Personal, Private, Rajini, Rajni, Sankar, Savings, Shankar, Shivaji, Sivaji, Small scale, SSI, Tariffs, Tax, Work, Worker | Leave a Comment »

S Gopalakrishnan – Banking services in Rural Areas

Posted by Snapjudge மேல் ஜூலை 23, 2007

கிராமங்களில் வங்கிச் சேவை

எஸ். கோபாலகிருஷ்ணன்

பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.

இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.

மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.

இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.

ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.

கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.

1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.

நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.

வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.

தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.

இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.

கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

——————————————————————————————————————————
சீரழியும் சிறுதொழில்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

கைதயாரிப்பு தீப்பெட்டித் தொழிலில்

  • சிவகாசி,
  • ராஜபாளையம்,
  • கோவில்பட்டி,
  • எட்டயபுரம்,
  • கழுகுமலை,
  • சங்கரன்கோவில்,
  • வாசுதேவநல்லூர்,
  • குடியாத்தம்,
  • செய்யாறு

போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.
வானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.

ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.

இதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.

விலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.

இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.

நெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.

சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.

  • திண்டுக்கல் பூட்டு,
  • சுருட்டுத் தொழில்,
  • கும்பகோணம் பாத்திரத்தொழில்,
  • நெசவுத் தொழில் மற்றும்
  • உடன்குடி பகுதியில் பனைத்தொழில் –
  • சில்லுகருப்பட்டி,
  • பவானி ஜமுக்காளம்,
  • மதுரை சுங்கடி,
  • கூறைப்புடவை போன்றவற்றோடு
  • மீன்பிடித் தொழில்,
  • கருவாடு தொழில் என
  • நடுத்தர,
  • கீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.

மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக

  • நெல்லை அல்வா,
  • கடம்பூர் போளி,
  • உடன்குடி சில்லுக்கருப்பட்டி,
  • குற்றாலம் முறுக்கு,
  • திருவில்லிபுத்தூர் பால்கோவா,
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம்,
  • தூத்துக்குடி மக்ரோன்,
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்,
  • சாத்தூர் சேவு,
  • திண்டுக்கல் மலைப்பழம்,
  • குடந்தை வெற்றிலை சீவல்

போன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.
இத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.

ஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.

உலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————–

கிராம மக்களுக்கு கடன் வசதி

எஸ். கோபாலகிருஷ்ணன்

கந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி?

இந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.

தேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.

அதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.

தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.

சட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன்? கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.

2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

கிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:

கிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.

கிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.

கிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.

வங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.

இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.

குழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.

கடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.

வங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Al, Aluminium, APR, Assets, Auto, Balance, Ballpoint, Banking, Banks, Biz, branch, Business, Calendar, Cellphone, Cheyyaar, Cheyyaaru, Cheyyar, Citi, City, Commerce, Compensation, Crackers, Diary, Dindugul, Dindukal, Dindukkal, Economics, Education, Educational, Employment, Ettayapuram, Exim, Expenses, Export, Exporters, Factory, Finance, Fireworks, Garments, GDP, Globalization, Growth, Gudiatham, Gudiyatham, Home, Housing, ICICI, Imports, Income, Industry, Installment, Instalment, Interest, ITC, Jobs, Kalugumalai, Kalukumalai, Kazhugumalai, Kazhukumalai, Kazugumalai, Koilpatti, Kovilpatti, Kudiatham, Kudiyatham, Loans, match, Matchbox, Matches, Metro, Mobile, Monetary, Motor, Nibs, Opportunity, Pen, Private, Profit, Purchase, Purchasing, Rajapalayam, Rates, RBI, Refill, Revenues, Reynolds, Rural, Sangarankoil, Sangarankovil, Sangarankoyil, Sankarankoil, Sankarankovil, Sankarankoyil, SBI, Sivakasi, Small Biz, Small scale, SSI, Tamil, Textiles, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thoothukudi, Thuthukudi, Tuticorin, VaiGo, VaiKo, Vasudevanalloor, Vasudevanallur, Villages, Wimco, Work, Writing | Leave a Comment »

V Muthiah – State of Cooperative societies – Backgrounder, Elections, Law amendments

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

தேவை மாதிரி கூட்டுறவு சட்டம்

வி. முத்தையா

இந்தியாவில் சுமார் 6 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 23 கோடி உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய சமூக, பொருளாதார இயக்கமாக கூட்டுறவு இயக்கம் விளங்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக வேளாண் கடன், இடுபொருள், உரம், மீன்வளம், பால்வளம், சர்க்கரை, வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய பல துறைகளின் வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

தமிழகத்தில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் கூட்டுறவு சங்கங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

தமிழகத்தில் 1.9 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.7 கோடி அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 27 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு பொதுநலநோக்கத்துடன் அறிவித்துவரும் மக்கள் நலத் திட்டங்களை சமூக அக்கறையோடும் செம்மையாகவும் செயல்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

அரசின் திட்டங்களை, அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்படாத வகையில் இவை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் தனக்கு இழப்பை ஏற்படுத்திக் கொண்டு அரசின் பிரதிநிதியாக நுகர்வோருக்கு சேவை செய்து வரும் இந்தக் கூட்டுறவுகளுக்குப் பதிலாக வேறு மாற்று முறை எதுவும் நிச்சயம் அரசுக்குக் கிடைக்க முடியாது.

இக் கூட்டுறவு சங்கங்கள் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பது அகில இந்திய அளவில் பாராட்டப்படக் கூடிய விஷயமாகும்.

தமிழகத்தில் மக்கள் இயக்கமாக வளர்ந்த கூட்டுறவு இயக்கம் அரசியல்வாதிகளுக்கு வெஞ்சாமரம் வீசும் சில சுயநல அதிகாரிகளின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்து வந்தது. அரசியல் குறுக்கீடுகள், தலையீடுகள் காரணமாக கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகப் பண்பை இழந்துவிட்டன.

பல கோடி மதிப்புள்ள சொத்துகளை தன்னகத்தே கொண்டு சிறப்பாகச் செயல்பட்ட பல கூட்டுறவு சங்கங்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளப்பட்டு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. பணியாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மறுக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்தியாகும். கடந்த 1999-ல் நடைபெற்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்கிற புகார் எழுந்ததையும் கருத்தில்கொண்டு தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் செய்யவேண்டியது மிக அவசியமாகும்.

அகில இந்திய கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னாட்சியைக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைச் செய்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நிர்வாகம் செய்யும்போது அரசின் தேவையற்ற தலையீட்டைத் தடுக்க சட்டப்பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். தேவையானால் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாத்திற்காக மத்திய அரசிடம் முறையிட வேண்டும்.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் தன்னாட்சியை உறுதிப்படுத்த பிரகாஷ் குழுவினால் 1991-ல் உருவாக்கப்பட்ட “மாதிரி கூட்டுறவு சட்டம்’ தமிழகத்தில் உடனடியாக சட்டமாக்கப்பட வேண்டும். மாதிரி கூட்டுறவு சட்டத்தில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இவை கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகபூர்வமாக செயல்படுவதை உறுதிபடுத்துவதாக இருக்கும்.

கூட்டுறவு சங்கங்களில் பதிவாளரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒழுங்குமுறைச் சட்டம் என்பதைவிட இயக்குவிக்கும் சட்டமாக இருக்கும். தணிக்கை அறிக்கை அங்கத்தினர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சங்கத்தைக் கலைக்க பதிலாளருக்கு அதிகாரம் கிடையாது.

மேலாண்மை, சட்டம், வங்கியியல், கணக்கியியல், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான புலமை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் அரசின் நிறுவனம் அல்ல என்பதை மாதிரி கூட்டுறவு சட்டம் தெளிவுபடுத்துகிறது. நிர்வாகிகள் மீது பொறுப்பு சுமத்தப்படுகிறது. கூட்டுறவு நிறுவனம் அங்கத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தேர்வு செய்யும் நபர்கள் பொறுப்பு ஏற்பவர்களாகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

சுயநல அரசியல் போக்கு வளர்ந்துவிட்ட இக் காலகட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாக்க “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ அவசியம் சட்டமாக்க வேண்டும்.

கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற இருப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ சட்டமாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் பரந்து, விரிந்த கட்டமைப்புடன் இயங்கி அங்கத்தினர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் அமைப்பாக கூட்டுறவு அமைப்புகள் செயல்பட இயலும்.

(கட்டுரையாளர்: பொருளாளர், ஏ.ஐ.டி.யு.சி. கூட்டுறவு தொழிலாளர் கூட்டமைப்பு)

——————————————————————————————–

கூட்டுறவே நாட்டுயர்வு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இந்தியாவின் வளர்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. ஆனால் தமிழகத்தில் நடந்த கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களால் முறையாகத் தேர்தல் நடக்கவில்லை என அதன் தோழமைக் கட்சிகள் தீவிரமாக எதிர்த்துப் போராடின. ஏற்கெனவே அதிமுகவும் மதிமுகவும் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தன. முதல்வர் அனைத்துக் கூட்டுறவுத் தேர்தல்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இதுவே அந்தத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததற்கான ஆதாரமாகிவிட்டது. திரும்பவும் எப்போது தேர்தல் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மாவீரன் திப்புசுல்தான் காலத்தில் கூட்டுறவு முறையில் பண்டக சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பொருள்கள் நியாய விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டுறவு அமைப்புக்கு தன்னுடைய குடிமக்களையே உறுப்பினர்களாக்கி அவர்களே முன்னின்று நடத்தும் கூட்டுறவு முறையைக் கொண்டு வந்தார் திப்புசுல்தான்.

இந்திய விடுதலைக்கு முன்பே – 1904-ம் ஆண்டில் இப்போதைய திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவுச் சங்கம் இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது. சர்.டி. ராஜகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராகப் பொறுப்பேற்றார். தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்கக் காரணமாக இருந்தவர் கூட்டுறவுத் தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார்.

ஏழைகள் தன்னந்தனியாகத் தங்களின் நலனுக்காக காரியத்தைச் செய்ய இயலாது. அவர்கள் கூட்டுமுயற்சியாகச் செய்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவுமுறை வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நகரும். சிறு உளியால்தான் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. சிறுதுளிதான் பெரு வெள்ளம். இதன் அடிப்படையில்தான் கூட்டுறவு இயக்கம் பிறந்தது. இங்கிலாந்தில் முதன் முதலாக 1844-ல் ராக்டேல் என்ற பகுதியில் 28 நெசவாளர்கள் சேர்ந்து 28 பவுண்ட் மூலதனத்தில் கூட்டுறவு நுகர்வோர் அமைப்பை உருவாக்கினர்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டுவசதி, கதர் கிராமத் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என – அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்குத் தாங்களே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.

நாடு விடுதலை பெற்றபின், கூட்டுறவுச் சங்கங்கள், அடிப்படையில் கிராமப்புற விவசாயிகளின் நலனை மனதில்கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்டன. வேளாண் தொழிலுக்கு நீண்டகால, குறுகியகாலக் கடன்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கியது.

1904-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவுச் சட்டம் 1961, 1963, 1983 என, பல காலகட்டங்களில் முக்கியத் திருத்தங்களைப் பெற்று இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு செம்மையாகச் செயல்பட பலர் காரணமாகத் திகழ்ந்தனர்.

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தைத் தொடங்கிய வ.உ. சிதம்பரனார், கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார். முன்னாள் முதல்வர் ராஜபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா, நெல்லை மேடை தளவாய் குமாரசாமி முதலியார், ஈரோடு ஏ.கே. சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து, சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே. ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ். ராஜகோபால நாயுடு, தஞ்சை நாடிமுத்து பிள்ளை, வேலூர் பக்தவத்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார், பொள்ளாச்சி மகாலிங்கம் என பலர் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக இயங்க 1950களில் அரும்பாடுபட்டனர்.

மீனவர் நலனில் அக்கறை கொண்ட சிங்காரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. ராமமூர்த்தி, அனந்தநம்பியார், எம். கல்யாணசுந்தரம் போன்றோர் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வளர பெரும்பணியாற்றினர்.

கூட்டுறவுச் சட்டப்படி, சங்கத்தின் தலைவராக ஒருவர் இரண்டு முறைதான் பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. 1983-ம் ஆண்டு சட்டம், கூட்டுறவுச் சங்கம் சுயஅதிகாரத்துடன் செயல்பட வழிவகுத்தது. 1988-ல் திருத்தப்பட்ட இச் சட்டம், செயல்படாத சங்கங்களை மாநில அரசு கலைக்கும் உரிமையை அளித்தது. கூட்டுறவு அமைப்புகள் ஆரம்ப காலங்களில் செயல்பட்ட மாதிரி தற்பொழுது இல்லை.

சுயநல விரும்பிகளின் பொறுப்புக்கு வந்தன. “”கூட்டுறவு அமைப்புகளுக்கு முழு சுயாட்சி அளிப்பதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரத் தயாராக உள்ளது” என்று கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் உறுதி அளித்துள்ளார்.

இந்த அமைப்புகளுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி போன்ற உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கலைக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காலந்தாழ்த்தாமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் கூட்டுறவு அமைப்புகள் திறம்படச் செயல்பட்டால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் தழைக்கும். அரசியல் தலையீடு இல்லாமல் உறுப்பினர்களுடைய விருப்பத்தின்பேரில் கூட்டுறவு இயக்கங்கள் செயல்பட வேண்டும்.

கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மட்டுமல்ல; கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பல பாடங்களைப் போதிக்கும் போதிமரமுமாகும்.

கூட்டுறவின் வெற்றி, உறுப்பினர்களின் நாணயத்தைப் பொருத்து அமைகிறது; அது சங்கங்களின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல என்றார் காந்தியடிகள். கூட்டுறவு அமைப்புகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், திட்டமிட்டு நடைபெறுகின்றன. இம்மாதிரியான சீர்கேடுகளைக் களையும்வண்ணம் கூட்டுறவு அமைப்புகள் செயல்பட, அரசு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அக்காலத்தில், கூட்டுறவுத் துறையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள், தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தங்களுடைய சொந்தப் பணத்தையே பயன்படுத்தினர். ஈரோடு எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர் ஒன்றுபட்ட கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.

காந்தியவாதியான அவர், ஈரோட்டிலிருந்து கோவைக்குச் சென்று கூட்டுறவுப் பணிகளை ஆற்றும்பொழுது, தம்முடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து, எளிமையான உணவை வாங்கிவரச் சொல்வார். கூட்டுறவுத் துறை வாகனங்களில் தன் குடும்பத்தாரை ஏற்ற மாட்டார். இவரைப்போன்று, மேடைதளவாய் குமாரசாமி முதலியாரும், தமது உறவினர் ஒருவர், சட்டத்திற்குப் புறம்பாக உதவி கேட்டு வந்தபோது, அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார். ஆனால் இன்றைக்குப் பொறுப்பில் உள்ளவர்கள், கூட்டுறவு அமைப்பின் கணக்கிலேயே தமக்கு மட்டுமல்லாமல், தம்முடைய பரிவாரங்களுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்காக மக்களின் பணத்தை வாரி இறைக்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.

இப்போது, கூட்டுறவுத் துறையை அனைத்து வசதிகளையும் அள்ளித்தரும் காமதேனுவாகக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுகச் சேர்த்து அமைக்கப்பட்ட அமைப்புகள், ஒழுங்கற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்பதால், சீரழிந்து வருகின்றன. எளியோர், வறியோர் எல்லோரும் சேர்ந்து சிரமப்பட்டு அமைத்த கூட்டுறவு முறையின் கண்ணியத்தைக் காக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in Agriculture, amendments, Analysis, Backgrounder, Banks, channel, Citizen, Coop, Cooperative, Cooptex, Democracy, Distribution, Economy, Elections, Expenses, Farmer, Finance, Fish, Fishery, Grains, Help, Industry, Insights, Law, Leaders, Loan, Loss, Management, Members, milk, Op-Ed, Opinion, Paddy, Polls, Poor, Ration, RBI, revenue, sales, Society, solutions, SSI, Suggestions, TUCS | Leave a Comment »

101 farmers commits suicide in Kerala in last 10 months

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை

திருவனந்தபுரம், மார்ச் 28: கடந்த 10 மாதங்களில் கேரளத்தில் 101 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இத்தகவலை கேரள வேளாண்துறை அமைச்சர் முல்லைக்கரை ரத்னாகரன் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்தப் பட்டியலில் வயநாடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 46 விவசாயிகளும், கோழிக்கோட்டில் 11 விவசாயிகளும், திருவனந்தபுரத்தில் 10 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரத்னாகரன் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட 549 விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டதாக ரத்னாகரன் கூறியுள்ளார்.

==============================================================
சிறு வியாபாரிகளைச் சீரழிக்கும் பன்னாட்டு மூலதனம்

இரா. செழியன்

இந்தியாவின் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் வகையில், உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் துணையுடன் வெளிநாட்டு பெரும் மூலதன நிறுவனங்கள் படையெடுத்துவர ஆரம்பித்துள்ளன.

இந்தியாவில் உள்ள 1 கோடி 20 லட்சம் வியாபாரிகளில் பெரிய அளவில் வர்த்தக நிறுவனங்கள் வைத்திருப்பவர்களின் அளவு 4 சதவீதம் என்று கூறப்படுகிறது. எஞ்சிய 96 சதவீதம் பேர் சிறு விற்பனையாளர்கள்.

சிறிய கடைகள் வைத்திருப்பவர்களிலிருந்து மார்க்கெட்டில் கூறுகட்டி காய்கறி, பழங்களை விற்பவர்கள் வரை ஒவ்வொருவரும், அதிகமான மூலதனம் இல்லாமல், தனிப்பட்டு தானே முதலாளியாக, தொழிலாளியாக, விற்பனையாளராக, தொழில் நடத்தி, நாள்தோறும் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்து தனது குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் அவதிப்படுகின்றனர்.

தொடர் சில்லறைக் கடைகளை இந்தியாவில் அமைக்க பிரமாண்டமான வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலைமை, சிறு வியாபாரிகளை இந்திய வணிகத்துறையிலிருந்து அடியோடு அகற்றிவிடும்.

சில்லறைக் கடைகளை அமைக்க இந்திய ரிலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. இந்த நிறுவனத்தின் முதலாளி முகேஷ் அம்பானி உலகப் பிரசித்த பெற்ற செல்வச் சீமான். 2007 ஆம் ஆண்டின் உலக செல்வந்தர்களின் பட்டியலில் அவர் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர் – இந்திய மதிப்பீட்டில் அது 88 ஆயிரம் கோடி ரூபாய்.

“ரிலையன்ஸ் பிரெஷ்’ என்ற பெயரில் சில்லறைக் கடைகளை அம்பானி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள முதலீடு 800 கோடி ரூபாய். தில்லியில் 8 சில்லறைக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. சென்னையிலும் அதன் கடைகள் வந்துவிட்டன.

காய்கறிகள், பழங்கள், மாமிசம், மீன்வகை, உணவுப் பொருள்கள், அன்றாட அடிப்படைத் தேவைக்கான பண்டங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் விற்கும் இந்த அமைப்புகளுக்குத் தேவையான, குளிர் சாதனக் கிடங்குகள், குளிர்சாதன லாரிகள், குளிர்சாதன விற்பனைக்கூடங்கள், பாதுகாப்பு அறைகள், பனிப்பெட்டிகள், விளம்பரத் தட்டிகள் எல்லாவற்றையும் மேல்நாட்டு முறையில் அமைத்து, தோட்டத்தில் விளைந்த காய்கறி பழங்களை நேரடியாக, சில்லறைக் கடையில் “புதிதாக’த் தருவதால், அந்தக் கடைகளுக்கு, “ரிலையன்ஸ் பிரெஷ்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்தச் சில்லறைக் கடைகள் மூலம் நடைபெறும் விற்பனை இன்னும் மூன்றாண்டு காலத்தில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு வந்துவிடும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

ஹைதராபாத், ஜெய்ப்பூர், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் வைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளுக்கு வரக்கூடிய 2 லட்சம் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த “கர்ரேபோர்’ என்ற நிறுவனம் சில்லறை விற்பனையில் உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு 30 நாடுகளில் 12 ஆயிரம் கடைகள் இருக்கின்றன. அதற்குச் சென்ற ஆண்டில் நடைபெற்ற வியாபாரத்தின் அளவு சுமார் 40 லட்சம் கோடி ரூபாய்! தாம் ஆரம்பித்த இந்திய நாட்டு சில்லறை வியாபாரத்துக்குத் துணைபுரிய அந்தப் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்துக்கு உலகில் இரண்டாவது இடம் என்றால், சில்லறை வியாபாரத்தில் உலகில் முதலிடத்தில் உள்ள “வால்மார்ட்’ என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு “பாரதி’ என்று மற்றோர் இந்திய நிறுவனம் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட “வால்மார்ட்’ உலக அளவில் சென்ற ஆண்டில் செய்த விற்பனையின் அளவு 350 பில்லியன் டாலர்; அதாவது 15 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்! நமது இந்திய அரசின் சென்ற ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தின் மொத்த அளவு 5 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய்!

111 கோடி மக்களை ஆட்சிசெய்யும் ஒரு நாட்டின் வரவு- செலவைவிட, சில்லறை வியாபாரத்தில் ஒரு நிறுவனத்தின் ஓர் ஆண்டு விற்பனையின் அளவு இரண்டரை மடங்குக்கும் மேலாக இருக்கிறது. சில்லறை வியாபாரம், ஆனால் கல்லாப்பெட்டி வசூல் உலக நாடுகளின் பலவற்றின் வருமானத்தைவிடப் பெரியது, பிரமாண்டமானது.

டாடா நிறுவனமும் சில்லறைக் கடைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “உல்வொர்த்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட ஆரம்பித்திருக்கிறது. “உல்வொர்த்’ நிறுவனத்தின் ஆண்டு விற்பனை அளவு 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்!

பெருத்த அளவில் சில்லறைக் கடைகளை வைத்திருக்கும் வணிக முறை வெளிநாடுகளில் வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள வியாபாரத்தில் 85 சதவீதம் பெரிய நிறுவனங்களிடம் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்புகளிடம் ஒப்படைப்பது, 96 சதவீதமுள்ள சிறு வியாபாரிகள் கை – கால்களில் இரும்புச் சங்கிலிகளைப் போட்டு வாழ்நாள் முழுவதும் வறுமைச் சிறையில் அவர்களை அடைத்து வைப்பதாக முடியும்.

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை வெளியிட்டது. இதில் அரசின் ஆறு அம்ச அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பது: “”7 முதல் 8 சதவீத அளவில் வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், எல்லோருக்கும் வேலை வாய்ப்பைத் தந்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் பாதுகாப்பான நிலையான நல்வாழ்க்கை அளிக்க முற்படுவோம்”.

ஆனால் இன்று உள்நாட்டு முதலாளிகளுடன் இணைந்து ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று மூலதனம் உடைய பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழிப்பதுடன், சிறு வியாபாரிகளின் வாழ்வை அடியோடு அழித்துவிட முயல்வது சரியா?

“”எல்லோருக்கும் வேலை”, “”ஒவ்வொரு குடும்பத்தின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று இக்கூட்டணியின் சார்பில் தரப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? கிடைத்த வேலைகள் போகின்றன, இருந்த நல்வாழ்வு நாசமாகிறது!

நடுத்தரக் குடும்பத்தினரின் சுயவேலை வாய்ப்புத் திட்டமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

அன்னிய மூலதன உதவியுடன் ரிலையன்ஸ், பாரதி, டாடா என்று அடுத்தடுத்து இந்திய நிறுவனங்கள் தொடர் சில்லறைக் கடைகளை அமைக்க ஆரம்பித்துவிட்டன!

சிறிய மீன்களை பெரிய மீன்கள் விழுங்கிவிடுவதைப்போல, இந்தியாவின் சிறு வியாபாரிகளை விழுங்க பெரிய நிறுவனங்கள் வந்துவிட்டனவே! இந்தப் பேராபத்தைத் தடுக்க மத்திய – மாநில அரசுகள் என்ன செய்துள்ளன?

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில், சில்லறைக் கடைகளில் நடைபெறும் விற்பனையில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிற “வால்மார்ட்’ இந்தியாவின் சில்லறை மார்க்கெட்டில் நுழைந்து விட்டதே! “வால்மார்ட்’ அமைப்புக்கு வால் பிடிக்கும் அமைப்பாக இந்திய அரசும் இந்தியப் பொருளாதாரமும் ஆகிவிட்டனவா?

சுதந்திர இந்தியாவில், சுயவேலையில், சுயமுதலீட்டில், சுயமாகப் பாடுபட்டு, சுயமரியாதையுடன் வாழ்வு நடத்தும் எண்ணற்ற சிறு வியாபாரிகள் வேலையிழந்து, வீடிழந்து, பொருளிழந்து, வாழும் வகை இழந்து, பிறந்த நாட்டில் அகதிகளாக, அநாதைகளாக, அலைய வேண்டிய நிலைமை வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

சுனாமிப் பேரலை தாக்கினால், கடலோரத்தில் உள்ள சிற்றூர்களும் சிறு குடிசைகளும் அழிக்கப்பட்டு மணல் மேடுகளாக மாறுவதைப்போல், உலகளாவிய பொருளாதாரப் பேரலை உழைப்பவர்களை, உழைத்துப் பிழைக்கும் சிறு வியாபாரிகளைக் கல்லறைகளுக்கு அனுப்பும் காலதேவனாக ஆகிவிடும்.

கடல் அலை கொந்தளித்தால், நாடு தாங்காது. ஏழைகளின் மனம் கொந்தளித்தால் நாடாளும் அரசு தாங்காது.

(கட்டுரையாளர்: நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்).


ரிலையன்ஸ் நிறுவனத்தால் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்கிறார் பொருளாதார வல்லுநர்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடையின் துவக்கம்
ரிலையன்ஸ் நிறுவனக் கடையின் துவக்க விழா-ஆவணப் படம்

ரிலையன்ஸ் நிறுவனம் காய்கனிகளை விற்க சென்னையில் சூப்பர் மார்க்கெட்டுகளை தொடங்கியது முதலே அரசியல் சர்ச்சை ஏற்பட்டது.

70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னை மாநகரில் உள்ள பெருகி வரும் மத்தியதர மக்களிடையே உள்ள மேல்தட்டு மக்களை குறிவைத்துதான் இந்தக் கடைகள் திறக்கப்பட்டுள்ள எனவும், இதனால் சிறு வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனகிறார் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்.

ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், இது போன்ற வர்த்தகத்தில் பல நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டிலிருந்து பெரிய அளவில் அந்த நிறுவனங்கள் கொள்முதல் செய்வதால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்க முடிகிறது எனவும் கூறுகிறார்.

இது போன்ற நிறுவனங்கள், இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து பொருட்களை நேரடியாக வாங்குவதால் விவசாயிகளும் பலனடைவார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உலக மயமாக்கலில் ஒரு நாடு ஈடுபடும் போது, குறிப்பிட்ட துறைகளுக்குத் தான் தமது சந்தை திறந்திருக்கும் எனக் கூறமுடியாது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Posted in Agency, Agents, Agriculuture, Ambani, Analysis, Business, Capitalism, Commerce, Consumers, Economy, Exploitation, Farmers, Farming, Farmlands, Finance, Foreign, Globalization, Industry, investors, Kerala, Kozhikode, Loans, Malayalam, Merchants, Middlemen, MNC, Mullakkara Ratnakaran, Reliance, service, SEZ, Small Biz, SSI, Suicide, THIRUVANANTHAPURAM, Trivandrum, Vendors, Wal-Mart, Walmart | Leave a Comment »

Textiles & Handicrafts from Banana fiber

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

இது புதுசு: வாழை நாரில் வண்ணச் சேலைகள்!

பி.முரளிதரன்

வாழை நார், பூக்களைத் தொடுக்கப் பயன்படும் எனத் தெரியும். ஆனால், அதைப் பயன்படுத்தி விதவிதமான துணிகளைத் தயாரிக்க முடியுமா? “முடியும்’ என நிரூபித்துள்ளார் சேகர்.

இவர், வாழை நாரைப் பயன்படுத்தி, பட்டுச் சேலைகள் முதல் திரைச் சீலைகள் வரை விதவிதமான துணிகளைத் தயாரித்து வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியான அனகாபுத்தூரில் வசித்து வரும் இவர், அனகாபுத்தூர் சணல் நெசவாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

புழுதி பறக்கும் புறநகர் சாலை வழியாக ஊடுருவி, ஓர் இனிய காலைப் பொழுதில், சேகரைச் சந்தித்தோம். தறியை அனிச்சையாய் தன் கால்களால் ஆட்டியபடியே நம்மிடம் வாழை நாரைப் பயன்படுத்தி ஆடைகள் தயாரிக்கும் நுட்பம் பற்றி அவர் பேசியதிலிருந்து…

“”கைத்தறி நெசவுத் தொழிலில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருபவர்கள் நாங்கள். இத்தொழிலில் நான் ஈடுபட தொடங்கியதும், ஏதாவது புதுமையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆனால், எந்தமாதிரியான புதுமையைப் புகுத்த வேண்டும் எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் ஒரு புதுவித ஐடியா எனக்குக் கிடைத்தது.

15 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில், சணல் பொருட்கள் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இக்கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, சணல் பொருட்களுடன் வாழை நாரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

வாழை நாரையும், சணலையும் பயன்படுத்தி அந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அப்போது தான், எனக்கு “வாழை நாரைப் பயன்படுத்தி ஏன் துணிகளை நெய்யக் கூடாது?’ என்ற ஒரு கேள்வி மனதில் எழுந்தது. இதையடுத்து, இந்தத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக, கன்னியாகுமரி, நாகர்கோயில் ஆகிய ஊர்களுக்குச் சென்று வாழை நார்களை, கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு எவ்வாறு பதப்படுத்தி பயன்படுத்துகின்றனர் என்ற ரகசியத்தைக் கற்றுக் கொண்டேன். அந்த இரு ஊர்களில்தான் வாழை நாரைப் பயன்படுத்தி கூடைகள், பைகள், அலங்காரப் பொருட்கள் என அதிகளவில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, வாழை நாரைப் பயன்படுத்தி துணிகள் நெய்யத் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இதற்காக, குன்றத்தூர் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும், கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்தும் வாழை நார்களை வாங்கி வந்து, சிறிய அளவிலான ரசாயனக் கலவையின் மூலம் அவற்றை “பிளீச்’ செய்து அதைப் பதப்படுத்தினேன்.

பின்னர், அதில் இருந்து மெல்லிய ரக நூலிழைகளைப் பிரித்து எடுத்தோம். அதனுடன், பருத்தி, சில்க், பாலியெஸ்டர் உள்ளிட்ட இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்து வருகிறேன். வாழை நாரைப் பயன்படுத்தி, நெசவு செய்யும் முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில், மும்பையில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, எனக்குத் தெரிந்த வரை, நான் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளை தயாரித்து வருகிறேன்.

பொதுவாக, துணிகள் நெய்வதற்கு வாழை நாரைப் பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வாழை நார்கள் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகத் திகழ்கிறது. வாழைச்சாறு உடலுக்கு நல்லது. அதிலும், குறிப்பாக கிட்னியில் உள்ள கல்லைக் கரைக்க இச்சாறு பயன்படுகிறது. வாழை நாரை பயன்படுத்தி நெய்யப்படும் துணியை அணியும் போது, உடலில் ஏற்படும் வியர்வைத் துளிகள் மூலம் வாழை நாரின் மருத்துவக் குணங்கள் உடலுக்குள் சென்று நன்மை விளைவிக்கின்றன.

அதோடு, இந்த இழையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் துணிகளில் சுருக்கம் ஏற்படுதல், சாயம் போகுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை.

பருத்தி நூலும், வாழை நாரும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆடைகள் கோடைக்காலத்திற்கு ஏற்றதாகும். இந்த இழைகளில் 20, 40, 60, 80, 120, 200 என்ற கவுன்ட்டுகள் உள்ளன. இந்த கவுன்டின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க துணியின் தரம் அதிகரிக்கும். வாட் டைஸ், நேச்சுரல் டைஸ், சுற்றுச் சூழலுக்குப் பாதகமில்லாத “ஈகோ ஃபிரண்ட்லி டைஸ்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு வண்ணங்களில், பலவித டிசைன்களில் இத்துணிகளைத் தயாரித்து வருகிறோம்.

சமீபத்தில் கூட, பருத்தி, சில்க், உலன், ஹெம்ப், லினன், பைனாப்பிள் உள்ளிட்ட 25 வகையான இயற்கை நார்களைப் பயன்படுத்தி துணியைத் தயாரித்தோம். இதை, மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

தற்போது, நாங்கள் வாழை நாரின் இழையைப் பயன்படுத்தி பட்டுத் துணிகள், புடவைகள், சட்டைத் துணிகள், திரைச் சீலைகள் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறோம். சிறிய அளவில் தொடங்கப்பட்ட என்னுடைய இத்தொழிலில், தற்போது 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இதுதவிர, மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைப்பைச் சேர்ந்த 11 குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்னிடம் இருந்து இழைகளை வாங்கிச் சென்று துணிகளை நெய்து கொடுக்கின்றனர். இதன் மூலம், அவர்களுக்கு மாதம் தோறும், கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்தி நூறு சதவீத வாழை நாரில் இருந்து இழைகளை எடுத்து துணிகளை நெய்கின்றனர். அதற்காக, அவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்தின் விலை ரூ.60 லட்சம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை அவர்களால் பிரித்தெடுக்க முடிகிறது. ஆனால், நாங்கள் தறிகளை பயன்படுத்துவதால், நீளமான நூலிழைகளை தயாரிக்க முடியவில்லை. துண்டு, துண்டாக தயாரித்து அவற்றை பெரிய நூலாக இணைத்து நெசவு செய்து வருகிறோம். அதுபோன்ற விலை உயர்ந்த இயந்திரங்களை பயன்படுத்த, எங்களிடம் போதிய பண வசதி கிடையாது. அதேபோல், அத்தகைய தொழில்நுட்ப அறிவும் எங்களிடம் இல்லை.

மத்திய அரசு ஏஜென்சிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு தற்போது எங்களுடைய தயாரிப்புகளை சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறோம். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் வாழை நாரைப் பயன்படுத்தி செய்யப்படும் துணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இன்னும் இத்தொழில் விரிவடையவில்லை.

போதிய முதலீடு, அரசின் ஆதரவு, தேவையான விளம்பர வசதி ஆகியவைகள் கிடைத்தால், இத்தொழிலை மிகப் பெரிய அளவில் செய்ய முடியும். இயற்கை இழைகளைப் பயன்படுத்தி துணிகளை நெய்ய நெசவாளர்கள் முன் வரும் பட்சத்தில், அவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும், கைநிறையச் சம்பளமும் கிடைப்பது உறுதி” என்றார் நம்பிக்கையுடன் சேகர்.

-தொடரட்டும் உங்களின் தொழில்…வாழையடி வாழையாக!

படங்கள்: “மீனம்’ மனோ

Posted in Banana, Blinds, Business, Cloth, Clothes, Commerce, Cotton, Dress, Fabric, fiber, fibre, Handicrafts, Hemp, Industry, Jute, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Linen, Manufacturing, Nagercoil, Nagerkovil, Phillipines, pineapple, Plaintain, Plantain, Sarees, Saris, Screens, Shirts, Silk, Small Biz, SSI, Tailor, Technology, Textile, Towels, Tropical | Leave a Comment »

Wal-mart entry into Retail business in India – Impact & Globalization

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

வாடப் போகும் வாழ்க்கை ஆதாரம்

மா.பா. குருசாமி

நமது நாட்டில் உலகமயமாக்கலின் விளைவாக மிகப்பெரிய நிறுவனங்கள் தொழில், வாணிபத்தில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன.

உற்பத்தியிலும், விற்பனையிலும் சிறிய அளவில் நடைபெறும் தொழில்களை ஓரங்கட்டிவிட்டு, கோடிக்கால பூதங்களாக பெரிய நிறுவனங்கள் கோலோச்சப் போகின்றன. இவற்றால் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கை ஆதாரத்தை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவிக்கப் போகின்றனர். இதற்கோர் எடுத்துக்காட்டு சில்லறை வாணிபம்.

வேளாண்மையில் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் சின்னஞ்சிறு அளவில் இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் சாகுபடி செய்யும் உணவு தானியங்களும், காய்கறிகளும், தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருள்களும் நாடு முழுவதும் இருக்கின்ற நுகர்வோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் செல்கின்றன.

இதேபோல பெரிய, சிறிய தொழிற்கூடங்களில் உற்பத்தியாகின்ற எண்ணற்ற ஏராளமான பொருள்கள் கோடிக்கணக்கான நுகர்வோர்களுக்குச் செல்கின்றன. இவை எப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கும். இவை மொத்த வியாபாரிகளிடம் கைமாறி, இடைப்பட்ட வணிகர்களிடம் சென்று, இறுதியில் சில்லறை வியாபாரிகள் கைகளுக்கு வருகின்றன. அவர்களிடமிருந்து நுகர்வோருக்குப் போகின்றன.

சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய கடைகளாக அமைத்து, எல்லா வகைப் பொருள்களும் ஓரிடத்தில் கிடைக்கின்ற வகையில் இருப்பு வைத்து விற்பனை செய்பவர்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட கடைகள் நகரங்களில் இருக்கும். இவர்களிடம் நுகர்வோர் மட்டுமன்றி சிறிய வியாபாரிகளும் பொருள்களை வாங்குவார்கள்.

இரண்டாம் வகையினர் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து சிறுகடைகளாக, பெட்டிக்கடைகளாக அமைத்துக் கொண்டு வாணிபம் செய்பவர்கள்.

மூன்றாம் பிரிவினர் நூற்றுக்கணக்கில் முதலீடு செய்து கூடைகளில், பெட்டிகளில், தள்ளுவண்டிகளில் பொருள்களை வைத்து தெருத்தெருவாக பொருள்களை விற்றுப் பிழைப்பவர்கள்.

மொத்தத்தில் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் பல லட்சம் பேர் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை அறியலாம். இவர்களுக்கு வாணிபம் வாழ்க்கை முறை. விற்றால் சாப்பாடு; இல்லையேல் பட்டினி.

அளவும் விளைவும்: நமது நாட்டில் சில்லறை வாணிபத்தின் அளவு எவ்வளவு இருக்கும்? கருத்தியல் அடிப்படையில் நுகர்பொருள் உற்பத்திக்குச் சமமாக சில்லறை விற்பனை இருக்குமென்று கூறலாம்.

நமது நாட்டில் மிகுதியாக மக்கள் தொகை இருப்பதால் உலகில் நமது நாடு பெரிய சந்தையாகக் கருதப் பெறுகின்றது. இதனால்தான் வளர்ச்சி பெற்ற நாடுகளும், மிகுதியாக ஏதாவது ஒன்று அல்லது சில பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளும் அவர்களது எச்சப் பொருள்களை நமது நாட்டில் வந்து கொட்டத் தயாராக இருக்கின்றன.

நமது மக்களிடம் வளர்ந்து வருகின்ற நுகர்வுக் கலாசாரம் கையில் பணமிருந்தால், கடன் கொடுக்க ஆளிருந்தால் எதனையும் வாங்கலாம் என்ற மனப்பான்மையை வளர்த்திருக்கிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு “செல்போன்’.

இந்த அங்காடி முறை வளர்ச்சியையும், சில்லறை வாணிபத்தில் வெளியில் தெரியாமல் இலைமறை காயாக இருக்கும் வளத்தையும் வாய்ப்பையும் புரிந்து கொண்டதால் மிகப் பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் முதலீடு செய்ய வரிந்து கட்டிக் கொண்டு முன்வருகின்றன.

வரப்போகும் ஆபத்து: நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெரு நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து வருகின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சில்லறை வாணிபம் பேரங்காடிகள் மூலம் நடைபெறுகிறது. ஓர் அங்காடிக்குள் நுழைந்தால் வேண்டிய எல்லாப் பொருள்களையும் அங்கு வாங்கலாம். அங்குள்ள மக்களுக்கு அது ஏற்ற முறையாக இருக்கிறது. நமது நகர மக்களுக்கு பேரங்காடிப் பழக்கம் வந்து கொண்டிருக்கிறது.

தென் மாநிலங்களில் ஸ்பென்சர்ஸ் டெய்லி, நீல்கிரிஸ், சுபிக்ஷா, திரிநேத்ரா ஆகிய பெரிய நிறுவனங்கள் நகரங்களில் பேரங்காடிகளை அமைத்து ஓரளவு வெற்றிகரமாகச் சில்லறை வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு, மத்திய மாநிலங்களில் பண்டாலூன் ரீடெய்ல் என்ற நிறுவனம் 60 உணவுப் பொருள் பேரங்காடிகளை அமைத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த ரிலையன்ஸ் நிறுவனம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவில் மிகப் பெரிய திட்டத்தோடு சில்லறை வாணிபத்தில் நுழைந்திருக்கிறது. 2006 நவம்பர் மத்தியில் ஹைதராபாதில் ஒரே நாளில் அதிரடியாக 11 “ரிலையன்ஸ் பிரஷ் அவுட்லெட்ஸ்’ என்னும் மிகப்பெரும் விற்பனை நிலையங்களை அமைத்ததன் மூலம் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ரிலையன்சின் திட்டம் மிகப் பெரியது. 2010 – 11இல் இந்தியாவில் சில்லறை வாணிபத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயோடு முதலிடத்தில் இருக்க வேண்டுமென்பது நோக்கம். அதன் தொடக்கம் 22 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு.

ரிலையன்சோடு போட்டி போட்டுக் கொண்டு இன்னும் சில பெரிய நிறுவனங்கள் சில்லறை வாணிபத்தில் பங்கு பெற பெரும் முதலீட்டோடு அங்காடி ஆடுகளத்தில் நுழையப் போகின்றன.

ஆதித்யா பிர்லா குழுமம் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறதாம். பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கோப்பர்ஸ் என்ற நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சில்லறை வாணிபத்தில் பெரிய நிறுவனங்கள் 412 பில்லியன் டாலர் முதலீடு செய்யுமென்று மதிப்பிடுகிறது.

இந்த பெரும் பூதங்களான நிறுவனங்கள் ஆயிரங் கோடிகள் என்ற கணக்கில் முதலீடு செய்கின்றபோது சிறிய, பெரிய நகரங்களில் எல்லாம் இவற்றின் கிளை அங்காடிகள் இருக்கும். குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறுவார்கள். பொருள்களை மொத்தமாகக் கொள்முதல் செய்வதால் அவர்களால் குறைந்த விலைக்கு வாங்க முடியும். சிறிய உற்பத்தியாளர்கள், விவசாயிகள் அவர்களிடம் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள். வாங்கும் விலையை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். அவர்களோடு சாதாரண வியாபாரிகளால் போட்டி போட முடியாது.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 10 அல்லது 15 சதவீதம் தள்ளுபடி தருவார்கள். இது போதாதா நமது மக்களைக் கவர்வதற்கு? நடுத்தர, மேல்மட்ட மக்கள் இத்தகைய முறையால் பல நன்மைகள் கிடைப்பதாக நம்புவார்கள். இதனால் சங்கிலித் தொடராக இருக்கும் பேரங்காடிகள் கொடி கட்டிப் பறக்கும்; சில்லறை வணிகர்கள் செல்லாக் காசுகளாவார்கள்.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் நகரங்களோடு நின்றுவிடாது. இவர்கள் முகவர்கள் மூலமாகவோ புதிய விற்பனை முறைகளின் மூலமாகவோ கிராமங்களிலும் ஊடுருவுவார்கள். கைக்கு எட்டிய தூரம்வரை இவர்களது சில்லறை வாணிபம் பரந்து விரியும்.

பொருளாதாரத்தின் ஏகபோக நடவடிக்கைகள் செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்கும்; ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும். சிந்திக்கக்கூடிய நடுத்தர மக்கள் கிடைக்கும் சில்லறை நலன்களுக்காக நாட்டு நலனை அடகு வைக்க நினைக்கக் கூடாது.

குவிதல் முறைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். காட்டு வெள்ளப் போக்காக வரும் பெரும் முதலீட்டால் சில்லறை வணிகர்களை அழியாமல் காப்பது அரசின் கடமை. வருகிற ஆபத்தை சில்லறை வணிகர்களும் சிறு உற்பத்தியாளர்களும் உணர வேண்டும்; அறிய வேண்டும்; இணைய வேண்டும்; போராட வேண்டும்.

நமது நாட்டில் கடைநிலை மக்களைக் காக்காமல், கவனிக்காமல் வளத்தையும் வளர்ச்சியையும் காண இயலாது.

(கட்டுரையாளர்: இயக்குநர், குமரப்பா ஆராய்ச்சி நிறுவனம், தாயன்பகம், திண்டுக்கல்).

==================================================
ஒரு விவசாயியின் எதிர்காலம்?

ச. குப்பன்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி.

அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.

மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.

அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.

சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.

கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப்போட்டுவிட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார்.

அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர். சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார்.

இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார்.

குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.

இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார். இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது?

இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும்.

வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும்.

விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்.

(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு).
==================================================

Posted in Agriculture, Analysis, Backgrounder, Bankruptcy, Banks, Bharti, Birla, Biz, Brinjal, Business, Cane, Capitalism, Collars, Commerce, Consumer, Customer, Diesel, EB, Eggplant, Electricity, Engine, Expenses, Farmer, Finance, Food, Fresh, Fruits, Futures, Globalization, harvest, harvesting, Impact, Income, India, Industry, Inflation, Investment, Irrigation, Lake, Loan, Manufacturing, markets, Motor, Operations, Options, Plants, Power, Premium, Prices, Rain, Recession, Reliance, retail, sales, Small Business, Small scale, SSI, Sugar, Sugarcane, Tap, Trading, Vegetables, Venture, Wal-Mart, Walmart, Water | 1 Comment »