Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘terror’ Category

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Human Rights, Encounter Deaths – Crime, Law and Order

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

“தோட்டாக்கள்’ எழுதும் தீர்ப்புகள்!

உ . நிர்மலா ராணி

தில்லி வியாபாரிகளான பிரதீப் கோயல் மற்றும் ஜகஜித் சிங் இருவரையும் பட்டப்பகலில் நடுரோட்டில் ஜனநெரிசல் மிகுந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் 1997-ல் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதற்காக ஓர் உதவி கமிஷனர் உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

“என்கவுன்டர்’ அதாவது “மோதல் சாவுகள்’ என்ற பெயரில் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பறித்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை பரவலாக நிலவிவரும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனை. இதுபோன்ற சம்பவங்களில் சாதாரணமாக நிர்வாகரீதியான விசாரணைகள் நடைபெறும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு மட்டுமே வழங்கப்படும். தவிர தவறு செய்த காவல்துறையினர்மீது சட்டப்படி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு நீதி கிடைத்திருப்பது இந்த வழக்கில்தான்.

அதுவுமே சி.பி.ஐ. 74 சாட்சிகளை விசாரித்து 7 நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக வழக்கை நடத்தி, அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை பலமுறை மாற்றி, இறந்தவரின் குடும்பத்தினரும் மற்ற பல அமைப்பினரும் இடைவிடாமல் போராடி 10 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து இந்த நீதி கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றத்தை, சட்டத்திற்குள்பட்ட மோதல் சாவாகச் சித்திரிக்க கையாண்ட முயற்சிகளும் நீதிமன்றத்தால் கவலையோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

தாதா யாசினும் அவரது கூட்டாளியும் என, தவறாக நினைத்து அவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்ட போலீஸôர், காருக்குள்ளிருந்தவர்கள் முதலில் சுட்டதால்தான் தற்காப்புக்காக தாங்கள் சுடவேண்டி வந்ததாக விளக்கமளித்தனர். அதற்கு ஆதாரமாக பல காலமாகப் பயன்பாடு இல்லாத துப்பாக்கியை காருக்குள்ளிருந்து கைப்பற்றியதாகக் கதைகட்டியதுமல்லாமல் அந்தத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள்தான் இவை என்று அரசு துப்பாக்கிக் குண்டு நிபுணரான ரூப் சிங்கையும் பொய்சாட்சியமளிக்க வைத்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே ஜெசிகாலால் கொலை வழக்கில் பொய் சாட்சியமளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்துபோனது யாசினாக இருந்திருந்தாலும்கூட “”சட்டத்திற்குப்புறம்பான சாவுகளை” நடத்தும் “காக்கிச்சட்டைகள்’ குற்றவாளிகளே என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

“மோதல் சாவுகள்’ சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதா என்றால், இரண்டு காரணங்களுக்காக காவல்துறையினர் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தற்காப்புக்காக இரண்டாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 46-வது பிரிவின்படி மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக்கூடிய குற்றம்புரிந்த ஒரு நபரைக் கைதுசெய்ய முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் மரணத்தை விளைவித்தால்கூட குற்றமில்லை என்பதால்.

ஆனால் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் போலி மோதல் சாவுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. 1960களில் நக்சலைட்டுக்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மேற்குவங்கத்திலும் பின்னர் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளத்தில் அரங்கேறிய இந்த “”சட்டத்திற்குப் புறம்பான சாவுகள்” அவசர நிலை காலகட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு கொள்கையாகவே பின்பற்றப்பட்டது.

பின்னர் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் வடமாநிலங்களிலும், ரௌடிகள் ராஜ்யத்தை அழிப்பது என்ற பெயரில் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகத்தான், பதவி உயர்வு பெற காவல்துறை அதிகாரிகள் அப்பாவி மக்களைக்கூட “”மோதல் சாவுகள்” என்ற பெயரில் பலிகொடுத்திருப்பது காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆள்நடமாட்டமில்லாத பகுதியில், இரவு நேரம் ரோந்து சென்று கொண்டிருக்கும் போலீஸôர் முன் திடீரென்று தோன்றும் குற்றவாளிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுடுவார்கள் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் கைதி காவலர்களின் துப்பாக்கியைத் திறமையாகக் கைப்பற்றி அவர்களைத் தாக்க முயற்சி செய்வர்; தற்காப்புக்காகவும் அவர்களைக் கைது செய்ய முயலும்போதும் போலீஸôரின் குண்டுக்கு அவர்கள் பலியாவார்கள். ஆனால் அவர்கள் நடத்திய தாக்குதலால் போலீஸôருக்கு கை, கால் போன்ற இடங்களில் மட்டுமே அடிபட்டதாகக் கூறப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் நடந்த 9 மோதல் சாவுகள் தொடர்பாக சித்திரவதைக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த “மக்கள் கண்காணிப்பகம்’ களஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த வெள்ளை ரவி, குணா மோதல் சாவுகளில்கூட சம்பவம் நடந்த இடம் போலீஸôர் கூறுவதுபோல் மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடமாக இல்லை என்றும், நாட்டுத் துப்பாக்கியாலும், பெட்ரோல் குண்டுகளாலும் போலீஸôர் தாக்கப்பட்டிருந்தால் 5 காவலர்களுக்கும் ஒரே மாதிரி இடது வலது, கைகளில், முழங்கைக்கு கீழ் எப்படி காயம்பட்டிருக்க முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமியை வெள்ளை ரவி கடத்த திட்டமிட்டிருந்தபோது இந்த மோதல் சாவு நிகழ்ந்ததாக போலீஸôர் அளித்த தகவலை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே மறுத்திருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

போலி மோதல் சாவுகளை நியாயப்படுத்தும் சிலர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் குற்றம் நிரூபணமாகாமல் விடுவிக்கப்படுவதை காரணம் காட்டுகிறார்கள்.

அவ்வாறு குற்றவாளிகள் விடுதலையாவதற்கு காவல்துறையின் மோசமான புலன் விசாரணைதான் பிரதான காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கு நடக்கும்போது போதுமான கவனம் செலுத்துவதில்லை. சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை. அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், நீதிமன்ற காலதாமதம் போன்ற காரணங்கள் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெள்ளை ரவி விஷயத்தில் கூட 1999ல் அவர் மீது பதிவாகியிருந்த 24 வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்னவோ 2003ல்தான். அதற்குள் 22 வழக்குகளில் விசாரணை முடிந்து அவர் குற்றவாளியல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. தனி நீதிமன்றம் விசாரித்த மற்ற 2 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டார்.

மோதல் சாவுகள் குறித்து நேர்மையாக, விரைவாக விசாரணை செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு நமது நாட்டில் இல்லை. மோதல் சாவுகள் நடக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில அரசுக்குக் கடிதம் எழுதியும் பல மாநிலங்கள் அதைப் பின்பற்றுவதில்லை என்று ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஆணையங்களும் நீதிமன்றங்களும்கூட மோதல் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. மணல் மேடு சங்கர் வழக்கில் அவர் தன்னை போலீஸôர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் போவதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் இந்த விஷயம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 24 மனித உரிமை அமைப்புகள் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளது.

இதன் பிறகுதான் மணல்மேடு சங்கர் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும்போது சினிமா பாணியில் வாகனம் விபத்துக்குள்ளாகி, அந்தக் குழப்பத்தில் அவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது.

உண்மையிலேயே ரௌடிகள் மட்டுமே சுட்டுக் கொல்லப்படுகிறார்களா? ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார்? அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா? ஒருவர் ரௌடியாக இருந்தாலும், உயிர் வாழும் உரிமை அவருக்கு உண்டு என்று நமது அரசியல் சட்டம் கூறுவதை மதிக்க வேண்டும்.

சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனை என்ற தீர்ப்பே சரியா, தவறா என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, எந்த விசாரணையுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக தோட்டாக்கள் எழுதும் தீர்ப்பான போலி மோதல் சாவுகளை அனுமதிக்க முடியுமா? சிந்திப்போம்!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————————————————————

கூலிப்படையின் குருகுலங்களாய்…

சு. பிரகாசம்


தமிழகத்தில் கூலிப்படையினரை ஒடுக்குவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் தமிழக முதல்வரால் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட ரவுடிகளை சிறைக்குள் கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அவர்களிடையே தேவையற்ற ஒருங்கிணைப்பிற்கும் தீய சிந்தனைகளுக்குமே வழி வகுக்கும்.

ரவுடிகளை மட்டுமல்ல! தற்போதைய சிறை நிர்வாக ஊழல்களும், சூழல்களும் சிறைப்பட்ட எவரையும் தீய வழிகளுக்கே அழைத்துச் செல்கின்றன.

எனவே, மனித உரிமைகளின் மாதிரிக் கூடங்களாக சிறைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலம்தான் ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றிகாண முடியும்.

சிறை சீரமைப்பு என்பது ரவுடிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் சாதகமான செயல்திட்டங்களை அறிவிப்பது அல்ல! சிறைக்குள் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கும், தீய சிந்தனைகளுக்கும், தீய நட்புக்கும், சிறைத் துறையினரின் ஊழல்களுக்கும் பாதகமான நடவடிக்கை என்பதே சரியான நிலைப்பாடு ஆகும்.

சிறைப்பட்டவர்களில் ரவுடிகளும் தீவிரவாதிகளும் மோசடிக்காரர்களும் சுமார் 20 சதவிகிதத்திற்கும் உள்பட்டவர்களே! எஞ்சியவர்கள் விசாரணைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகளாகவும் உள்ளவர்கள். இவர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாகக் கருதுபவர்கள்.

சிறை வாயிலில் தாயிடம் குழந்தை கேட்டதாம்! ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா! என…

சிறைக்குள் இவ்வளவு சங்கடங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனைவியின் கள்ள உறவைச் சகித்திருப்பேன் என்றாராம் ஓர் தண்டனைக் கைதி!

அய்யா! உணவை வாயில் வைக்க முடியலிங்க! என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம்! என்றாராம் சிறை அதிகாரி!

வீடு தேடி வந்த சிறைத் துறையினரை டேய்! இவங்க போலீஸ் இல்லைடா! நம்ம குருகுலத்து தெய்வங்கள்! என்றாராம் கூலிப்படைத் தலைவன்! சக கூட்டாளிகளிடம்.

இவையெல்லாம் சிறை நிர்வாகங்கள் குறித்த பாதகமான செய்திகள்தான்.

சிறைத் துறையினரின் அராஜகங்களும், ஊழல்களும் சிறை சுவர்களுக்கு வெளியே முழுமையாகத் தெரிவதில்லை. புலனாய்வுப் பத்திரிகைச் செய்திகளை நீதிமன்றங்கள் ஆதாரங்களாகக் கொள்வதில்லை. சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை எவரும் அறிய இயலாது. சிறை அதிகாரிகள் சொல்வதைத்தான் அரசும் நம்ப வேண்டியிருக்கிறது.

கைதிகளுக்கு உணவு வழங்குவதில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன்! ஆளும் அரசியல் கட்சிகளின் (மாநாடு) நிதிச் செலவுகளை ஈடு செய்வதில் சிறைத்துறை முதலிடத்தில் உள்ளது.

அரசு வழங்கும் உணவு அளவீட்டில் 5-ல் ஒருபகுதி கூட கைதிகளைச் சென்றடைவதில்லை என்பதுதான் வேதனை. சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால கட்டங்களில் சிறைகள் சிறைகளாயிருந்தன. அன்று தண்டனை முடிந்து விடுதலையான கைதிகள் பலர் சமூகத்தில் மதிக்கக்கூடியவர்களாக மாறினர்.

அன்று மொழிப் போராட்டங்கள் மூலம் சிறை சென்ற அரசியல் கட்சியினர்தான் இன்று ஆளும் கட்சியினராகச் செயல்படுவதைக் காண்கிறோம்.

தமிழகத்தில் தனிநபர் விரோத அரசியல் தொடங்கிய பின்னரே ரவுடிகளை நோக்கி அரசியல் பதவிகள் தேடி வந்தன. அத்தகையவர்கள் லஞ்ச வழிவகைகள் மூலம் சிறைவாசத்தை சொகுசாக ஆக்கி கொண்டனர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அரசியல்வாதிகளிடமே பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்ற துணிவு சிறை நிர்வாகத்தில் முழுமையாக ஊழல் வியாபிக்க வழிவகுத்துவிட்டது. அதன் விளைவாகவே இன்று கூலிப்படையினரின் குருகுலங்களாய் சிறைகள் மாறிவிட்டன.

சிறையில் நடக்கும் சம்பவங்களை வெளிக்கொணர மனித உரிமை அமைப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சிறைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகளின் ஆய்வைக் கட்டாயப்படுத்த வேண்டும்.

மத்திய சிறைகளின் காவல்நிலையங்களில் உளவுப் பிரிவு அலுவலகங்களை அமைக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளை மட்டுமின்றி சிறைத்துறையினரையும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சிறைக்குள் எந்தப்பகுதியையும் எவரையும் காவல்துறையினர் திடீர் சோதனையிட அனுமதிக்க வேண்டும்.

கைதிகளுக்கு உணவு தயாரிப்பதில் (சிறைத்துறைக்குத் தொடர்பில்லாத வகையில்) உணவக (ஹோட்டல்) உரிமையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

சிறைக்குள் தேங்கிக் கிடக்கும் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

சிறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும். அத்துடன் தண்டனைக் கைதிகளின் சிறை மாற்றங்களுக்கு அவரது அனுமதியைக் கட்டாயமாக்க வேண்டும்.

கைதிகளின் சொந்த ஊர் பகுதி காவல்நிலையங்கள் வாயிலாக விடியோ கான்பரன்சிங் மூலம் உறவினர்கள் பேசுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

சிறைத்துறையில் காவலர் முதல் டி.ஐ.ஜி. வரை சீருடை விஷயத்தில் காவல்துறையினர் போன்று தோற்றமளிக்கின்றனர். இருவேறு அரசுத் துறைகளுக்கு எளிதில் வேறுபாடு காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான சீருடை தோற்றம் துஷ்பிரயோகங்களுக்குத்தான் வழிவகுக்கும். இது தவறான நடைமுறையாகும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது இரக்கத்தையும், இறுக்கத்தையும் சம அளவில் வெளிப்படுத்தும் வகையில் சிறைத்துறையினருக்கு தனி சீருடையை அறிமுகப்படுத்த வேண்டும்.

கைதிகளிடம் சட்டவிரோதமான பொருள்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிய நவீன அறிவியல் சாதனங்களை அனைத்து சிறைகளிலும் அமைக்க வேண்டும்.

விசாரணைக் கைதிகளின் நிலை தண்டனைக் கைதிகளின் நிலையைவிட கடுமையானதாக இருந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக எவரும் சிறை செல்ல நேரிடலாம். அவ்வாறு சிறைப்பட்டவர், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காகவே சிறையில் இருப்பதாகக் கருதப்பட வேண்டும். அவ்வகையில் விசாரணை சிறைவாசிகளுக்கு, அதுவும் முதன்முதலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு என சிறப்பு விதிகள் வகுக்கப்பட வேண்டும்.

சிறைக்குள் எது நடந்தாலும் அதற்கு சாட்சி ஆவணங்கள் இல்லை. சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக சிறைக்குள் சென்றால்… அங்கே நடந்தது நடந்ததுதான். யாரும் ஏன் என்று கேள்வி எழுப்ப வழியில்லை.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் சிறை விதிமுறைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. சிறைகள் என்றாலே ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.

சிறைக்கூடங்கள் அனைத்தும் அச்சம் அளிக்கக்கூடியதாகவும் பழிவாங்கும் ரகசியக் கூடங்களாகவும் இருக்க வேண்டியது ஆங்கிலேய அரசின் அடக்கு முறை ஆட்சிக்கு அவசியமாயிருந்தது.

ஆனால் மக்களாட்சியில் சிறைக்குள் என்ன நடக்கிறது என மக்களுக்குத் தெரிய வேண்டும். ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல வழிகள் மூலம் சிறை விஷயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இல்லையேல் தனிநபர் ஆகட்டும்! அரசியல்வாதிகளாகட்டும்! ஆளும் அரசுக்கு எதிரானவர்களா! எத்தகைய மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பினும் பிடித்து போடு சிறையில்… என்ற நிலையே ஏற்படும். மக்களாட்சியிலும் சர்வாதிகாரிகள் தோன்றத்தான் செய்வார்கள்.

எனவே கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு சிறை சீரமைப்பின் அவசியத்தை இன்றைய அரசுகள் கருத்தில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு சிறை சீர்திருத்தம் மிக அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: மனித உரிமை ஆர்வலர் மற்றும் முன்னாள் சிறைத்துறை காவலர்)

Posted in Arms, Attorney, CBI, Courts, Dada, dead, deaths, Delhi, Don, Encounter, guns, HC, Judges, Justice, Law, Lawyer, mafia, Mob, Order, Police, Ravi, SC, terror, Terrorism, Terrorists, Vellai, Weapons | Leave a Comment »

LTTE vs Sri Lanka – Eezham imbroglio: Lack of interest by Indian Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஏன் இந்தத் தயக்கம்?

விடுதலைப் புலிகள் எப்போது, எப்படி, எங்கே தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை ராணுவம் குழம்பிப் போயிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும், அனுராதபுரம் ராணுவ விமானத்தளத்தின் மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்துவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, உலகமே இந்தச் செய்தியைப் படித்துவிட்டு பிரமித்துப் போயிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாதாரண விமான நிலையமாக இருந்தால்கூடப் பரவாயில்லை. சாத்தியம் என்று சமாதானப்படலாம். தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது இலங்கை ராணுவத்தின் விமானத்தளம். இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள அனுராதபுரம் விமானத்தளத்திற்குள், அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி, காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவினர் எப்படி நுழைய முடிந்தது என்பது, இலங்கை அரசையே உலுக்கிவிட்டிருக்கிறது.

மூன்று பெண் புலிகள் உள்பட 21 பேர் கொண்ட கறுப்புப் புலிகள் எனப்படும் தற்கொலைப் படையினரின் தாக்குதலில் சேதமடைந்திருப்பது 18 இலங்கை ராணுவ விமானங்கள் மட்டுமல்ல, உலக அரங்கில் இலங்கை அரசின் மரியாதையும்தான். தற்கொலைப் படையினரின் தரைவழித் தாக்குதல் போதாது என்று, விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தாக்குதலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடந்ததுதான் அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம்.

கடந்த மார்ச் மாதம் கொழும்பு நகரத்தை அடுத்த இலங்கை விமானப்படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. விடுதலைப் புலிகளிடம் உள்ள இரண்டு விமானப் படை விமானங்களும் சுமார் நாற்பது நிமிடங்கள் எந்தவிதக் கண்காணிப்பு வளையத்திலும் அகப்படாமல் பறந்து வந்து, தாக்குதல் நடத்திவிட்டு, வந்த சுவடே தெரியாமல் பத்திரமாகத் திரும்பியது எப்படி?

பிரச்னை அதுவல்ல. விடுதலைப் புலிகள் தாக்குவதும், இலங்கை ராணுவம் பழிக்குப் பழி நடவடிக்கையாகத் திருப்பித் தாக்குவதும் கடந்த கால்நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெறும் விஷயம். எப்போது விமானம் வரும், தாக்குதல் நடக்கும் என்பதறியாமல் பயத்தில் நடைப்பிணமாக வாடும் அந்த நாட்டு மக்களின் நிலைமையை நாம் மனிதாபிமான அடிப்படையில் ஏன் பார்க்க மறுக்கிறோம்? மடிவது சிங்கள உயிரா, தமிழரின் உயிரா என்பதைவிட, மனித உயிர் என்பதை உணர முடியாதவர்களாக இருக்கிறோமே, ஏன்?

ஈழப் பிரச்னைக்கு முடிவு துப்பாக்கி முனையில் ஏற்படாது என்பதை இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது வறட்டு கௌரவமும் முரட்டுப் பிடிவாதமும் நடைமுறை யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது நியாயமல்ல.

இலங்கைப் பிரச்னையைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால் இந்திய அரசு தனது தார்மிகக் கடமையிலிருந்து விலகி நிற்பது எந்தவகையிலும் நியாயமாகப்படவில்லை. மத்தியில் கூட்டாட்சி நடத்தும் திமுகவும் பாமகவும் இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்று கூறுவது உண்மையானால், மத்திய அரசின் மௌனத்தைக் கலைக்க வைப்பது அவர்களது கடமை.

ஈழப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. அவரே முன்னின்று பேச்சுவார்த்தைகளை நடத்தினால் நல்ல முடிவு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசும் சரி, வெறுமனே தனது அதிகாரிகள் மூலம் ஓர் அரசியல் பிரச்னைக்குத் தீர்வுகண்டுவிட முடியும் என்று நினைப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. மேலும், இலங்கை அரசின் நட்புக்காக மௌனம் காப்பதும் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. தமிழக முதல்வரை முன்னிறுத்தி இலங்கைப் பிரச்னைக்கு ஒரு சுமுகமான முடிவை ஏற்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

Posted in ADMK, AFB, Air Force, Airforce, Anuradapura, Anuradhapura, Anurathapura, Arms, Assassin, Assassination, Attack, Attacks, Bombs, Citizens, Colombo, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Cyanide, Danger, dead, DMK, Eelam, Eelam People's Revolutionary Liberation Front, Eelctions, Eezam, Eezham, Extremism, Extremists, Flights, guns, India, Initiatives, Jaffna, Kill, Killed, Leaders, LTTE, Military, Party, Peace, people, Politics, Sri lanka, Sri Lankan Navy, Srilanka, Suicide, terror, Terrorism, Terrorists, Vanni, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, Wanni, Weapons | 1 Comment »

Maoists kill 18 in Jharkhand village: Giridih Massacre

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

தவறான பாதை; தவறான பார்வை

பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.

மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.

9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.

இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.

அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.

Posted in Andhra, AP, Babulal, Bandh, Bihar, carbines, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, Chikadia, Chikhadia, CRPF, Divide, Errabore, Extortion, Extremism, Extremist, Extremists, Gaya, Giridhi, Giridhih, Giridi, Giridih, Girithi, Girithih, Jamui, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, JMM, JVM, Madhu Koda, MadhuKoda, Mahato, Maoists, Marandi, Metro, MP, Nation, National, National Games, Nationalisation, Nationalism, Nationalist, Nationalists, Nationality, Nationalization, Nations, Native, Native Folks, Natives, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Nepal, Nithish, Nitish, Nitish Kumar, Nitish Kumar Singh, NitishKumar, Nunulal, Nunulal Marandi, Poor, Rich, Rural, SC, SLR, SLRs, ST, Sunil Kumar Mahato, SunilKumar Mahato, Telengana, Telugu, Telugu (తెలుగు), Telugu Desam, Telungana, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists, Tribals, victims, Villages, Violence | Leave a Comment »

Pakistan’s political mess – Benazir Bhutto makes triumphant return

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

என்று தணியும் சுதந்திர தாகம்?

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய பேநசீர் புட்டோ, மனித குண்டுத் தாக்குதலுடன் பாகிஸ்தானில் வரவேற்கப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இப்படியொரு வெடிகுண்டு கலாசாரத்தை அரசும், பாகிஸ்தானிய ராணுவமும் ஆதரித்ததன் விளைவை இப்போது அந்த நாட்டு அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான விஷயம்.

தீவிரவாத சக்திகள் தங்களுக்கு மத முலாம் பூசிக் கொள்வதன் மூலம் அரசின் ஆதரவும், ராணுவத்தின் உதவியும் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டதன் விளைவுதான், பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள்.

ஜெனரல் பர்வீஸ் முஷாரஃப் எந்தத் தீவிரவாத சக்திகளின் துணையோடு ஆட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரோ அந்த சக்திகளை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி அடக்கவும் ஒடுக்கவும் முயன்றால், அந்தத் தீவிரவாத சக்திகள் எப்படிப் பேசாமல் இருக்கும்?

பாகிஸ்தானைப் பொருத்தவரை ஆட்சியில் அமர்வதற்கு ஒன்று பஞ்சாபியராக இருக்க வேண்டும் அல்லது சிந்தியாக இருக்க வேண்டும். லாகூரைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் பஞ்சாப் என்றும், கராச்சியைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் சிந்து என்றும் அழைக்கப்படும். ஜெனரல் முஷாரஃபும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். சிந்துப் பகுதியைச் சார்ந்தவர் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ. அமெரிக்காவின் துணையோடு பிரதமர் முஷாரஃபும், பேநசீர் புட்டோவும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முஷாரஃப் அதிபராகத் தொடர்வது என்றும், பேநசீர் புட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதான் பிரச்னைக்கு அஸ்திவாரமே. அரசியல்வாதிகளான முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரீஃபும், பேநசீர் புட்டோவும் கைகோர்த்து மீண்டும் மக்களாட்சி நிலவப் போராடுவதை விட்டுவிட்டு பேநசீர் புட்டோ, அதிபர் பர்வீஸ் முஷாரஃபுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா? பேநசீர் மீது சாட்டப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படும் என்பதுதான்.

பேநசீர் புட்டோவுக்கு சிந்து மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல, நவாஸ் ஷரீஃபும் சரி, பஞ்சாப் மாகாணத்தின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்தான். ஆனால் இருவருக்குமே இருக்கும் பொதுவான பலவீனம், அவர்களது சுயநலமும், ஊழல் குற்றச்சாட்டுகளும். ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு, அதிபராகவும் முஷாரஃப் தொடரலாமா என்கிற கேள்விக்கு விரைவிலேயே பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க இருக்கிறது.

பாகிஸ்தானிய அரசியலும் சரி, அரசியல் தலைவர்களும் சரி அமெரிக்காவின் கைப்பாவைகளாகத்தான் செயல்பட முடியும் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை. அந்த அளவுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் அமெரிக்க ஆதிக்கம் ஊடுருவி இருக்கிறது. இதன் விளைவுதான் அதிகரித்து வரும் தீவிரவாதம். இதுவரை அண்டை நாடான இந்தியாவை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானிலேயே தங்களது கைவரிசையைக் காட்ட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மத முகமூடியை அணிந்துகொண்டு அப்பாவி மக்களை உயிர்ப்பலி கொள்ளும் இந்தத் தீவிரவாத இயக்கங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால், முதலில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தலையீடு பாகிஸ்தானில் இருக்கக் கூடாது; இரண்டாவது, ஆட்சியில் ராணுவம் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும்; மூன்றாவது, பாகிஸ்தானில் முறையான தேர்தல் நடைபெற்று மக்களாட்சி மலர வேண்டும். இல்லையானால், எல்லாம் வல்ல இறைவன்தான் பாகிஸ்தானைக் காப்பாற்ற வேண்டும்!

———————————————————————————————————————————————-

நம்பிக்கை நட்சத்திரமல்ல, பேநசீர்!

எம். மணிகண்டன்

அரசியல்வாதிகள் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பார்கள் என்பதால் அரசியலை, பரமபத விளையாட்டுடன் ஒப்பிடுவதுண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவுக்கு இந்த ஒப்பீடு மிக நன்றாகவே பொருந்தும்.

புட்டோ தூக்கிலிடப்பட்ட பிறகு, வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் திரும்பியபோது, ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வந்த நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார் பேநசீர். ஆனால் 1988-ல் அவர் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் அவர்மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டபோது, மக்களின் மதிப்பை இழந்தார்.

1993-ல் மீண்டும் பிரதமரானபோது, அவர் மீது முன்பைவிட அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளே எழுந்தன. அதனால் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து, போலந்து, ஸ்பெயின், பிரான்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பேநசீரும் அவரது கணவர் ஸர்தாரியும் முறைகேடாகப் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களைக் காட்டின.

இதனால் சிறைக்குச்செல்ல வேண்டும் என்று அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினார் பேநசீர். அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, நாட்டைவிட்டே வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்தபோதும் சரி, அவரும் அவரது கட்சியினரும் மக்களைப்பற்றிக் கவலைப்பட்டதே இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த 18-ம் தேதி பேநசீர் பாகிஸ்தான் திரும்பியபோது, அவர் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து 139 பேர் இறந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஆனால் சம்பவம் நடந்த சில வினாடிகளுக்குள் பேநசீர் கட்சியைச் சேர்ந்த பெரிய தலைவர்கள்முதல் குட்டித் தலைவர்கள்வரை அனைவரும் தங்களது சொகுசு கார்களில் ஏறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர் என்பதுதான் இறந்தோர் குடும்பங்களுக்கு வேதனை அளித்த சேதி.

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைக் கொண்டுசெல்வதற்குக்கூட போதுமான வாகனங்கள் இல்லை. இறந்தவர்கள் அனாதைப் பிணங்களாகத் தெருவிலே கிடந்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பேநசீரைத் தவிர வேறு யாரைக் குறை கூறினாலும் அது ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். ஏனென்றால் தனது வருகை ரத்தகளறியாக மாறப் போகிறது என்பது பேநசீருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் முன்பே தெரியும்.

முஷாரப் ஆட்சியில் மக்களைத் தவிக்கவிட்டு இவ்வளவுகாலம் பேநசீர் எங்கே போயிருந்தார் என அவரது கட்சியினரே கேள்வி எழுப்புகின்றனர். முஷாரபுடன் முறையின்றி ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே அவர் பாகிஸ்தான் திரும்பியிருக்கிறார் என்பதில் மக்களுக்கும் கோபமிருக்கிறது.

முஷாரப் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் முன்பைவிடச் சுதந்திரமாக இருக்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவி செய்தவர் என்பதால் முஷாரபுக்கு மேலைநாடுகளின் ஆதரவு இருக்கிறது.

லால் மசூதி, பழங்குடி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மத அடிப்படைவாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அப்படியிருந்தும் முஷாரபை மக்களுக்குப் பிடிக்காமல் போனதற்கு காரணம், அவர் பதவிக்கு வந்தவிதமும், பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் செய்யும் தந்திரங்களும்தான்.

ஆனால், இந்தத் தந்திரங்கள் அனைத்தையும் இதற்கு முன்பே செய்தவர்தான் பேநசீர். அவரும் தனது வசதிக்கேற்ப அரசியல் சட்டத்தைத் திருத்தியவர்தான். தனது குடும்பத்தினருக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கி சட்டம் ஒழுங்கைக் கேலிக்கூத்தாக்கியவர்தான்.

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமரானாலும், இப்போது அவருக்கும் முஷாரபுக்கும் இடையே இருக்கும் சுமுக உறவு தொடர்ந்து இருக்கப்போவதில்லை. அதற்குக் காரணம் முஷாரப் கையில் இருக்கும் ஆட்சிக் கலைப்பு அதிகாரம்தான். இதற்கான அரசியல்சட்டத் திருத்தத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு வேண்டும்.

ஆட்சியைப் பிடிப்பதே சிரமம் என்பதால், இரண்டில் மூன்று பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது முடியாத விஷயம். இச் சட்டத் திருத்தத்தால் ஏற்கெனவே ஒருமுறை பதவியை இழந்த பேநசீர், பதவியில் நீடிக்க வேண்டுமானால் முஷாரபுக்கு அடிபணிந்தே சென்றாக வேண்டும். அதனால், தத்தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முஷாரபும் பேநசீரும் புதிய தந்திரங்களை பிரயோகிப்பார்கள்.

அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக முஷாரபை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், பேநசீருக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமாகச் செயல்படுவார்கள். ஏனென்றால் முஷாரபைக் காட்டிலும் அமெரிக்காவின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பவர் பேநசீர். முஷாரபுக்கு ஒருபடி மேலேபோய், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக அமெரிக்கப் படைகளை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கக்கூட பேநசீர் தயங்கமாட்டார்.

பேநசீரும், முஷாரபும் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமராவார். ஆனால் முன்புபோல் பேநசீரிடம் பாகிஸ்தான் மக்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பாகிஸ்தானை ஆட்சி செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? புட்டோவின் மகள் என்பதைத் தவிர.

Posted in Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Benazir, Bhutto, Bribery, Bribes, Corruption, kickbacks, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Navaaz, Navas, Navaz, Nawaz, Pakistan, Pervez, Pervez Musharraf, political, Punjab, Sharif, Sind, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists | Leave a Comment »

Sanjay Dutt sentenced to 6 years in prison – Film fraternity rallies behind & to appeal against verdict

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெற்றிக்கண்: சஞ்சய் தத் – கோடே

IdlyVadai – இட்லிவடை: சஞ்சய் தத்துக்கு 6 ஆ�

சற்றுமுன்…: பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

சற்றுமுன்…: சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

சிவபாலன்: நீயூஸ் மீடியாக்களை எத


பாதியில் சினிமா படம்: சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை, ஜுலை. 31-மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக, மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது

  1. மெகபூபா,
  2. தாமால்,
  3. கிட்நாப்,
  4. அலிபாக்,
  5. மிஸ்டர் பிராடு

ஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.
மிஸ்டர் பிராடு, அலிபாக், கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால், இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.

மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.

இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.

இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக “பீகேட்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
———————————————————————————————————-

14 ஆண்டுகளாக நடந்த விசாரணை

எதிர்பாராத திருப்பங்களையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.

257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸôர் யாகூப், எஸ்ஸô, யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸô, யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும், 7 ஆயிரம் பக்க ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6,700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38,070 கேள்விகள் கேட்கப்பட்டன.

குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.

———————————————————————————————————-
சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு!

சுநீல் தத், நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே, ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும், சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார்.

பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா, நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெüரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் (48).

சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.

பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.

தாயின் மரணம், மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத், ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.

இந் நிலையில்தான், மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய், யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு, அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.

அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெüரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

முன்னாபாய்: அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. “”முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.” என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட்டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல, முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————————————————————————————-

கண்டிப்பான நீதிபதி, கனிவான கனவான்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே (54) கண்டிப்பான நீதிபதி, கனிவான மனிதர்.

ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது, ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது, ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இசட் பிரிவு பாதுகாப்பு:

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே, குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.

ஆர்தர் சாலையில் உள்ள சிறையில், பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.

வேலையில் அக்கறை உள்ளவர்.

விடுமுறை எடுக்காதவர். 13,000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும், 7,000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும், 6,700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறையே எடுக்கமாட்டார்:

விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ, இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ, அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து, அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே, ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.

சாய் பாபாவின் பக்தரான கோடே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது, இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987-ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை, திறமை காரணமாக 1993-ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.

———————————————————————————————————-

சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல்

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் “தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.

“காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக, “பிஸ்டல்’ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும், “”ஏ.கே. 56” ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது, பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது, மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது, அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார்; அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள், அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

தவறு செய்துவிட்டேன்: நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள, தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார்.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத், நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன், “”14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன்; சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள்” என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து, “”எல்லோருமே தவறு செய்கிறார்கள்” என்றார்.

நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு (சஞ்சய் தத்) கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸôர் கைது செய்யவோ, சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

அதை நீதிபதி ஏற்று, சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸôருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு, அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.

நீதிபதி கோடே, சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி, ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.

சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.

யூசுப் நல்வாலா, கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும், வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.

கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா, அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.

சட்டவிரோதமாக ஒன்றல்ல, இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள், அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல, மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி; இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸôரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து, உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

“3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை’ என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.

வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத், உஜ்வல் நிகமிடம் சென்று, “”நன்றி ஐயா” என்று கூறி கையை குலுக்கினார்.

———————————————————————————————————-

சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு

மும்பை, ஆக. 1-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.

இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.

இந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2-வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.

ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.

இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.

இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.

முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.

அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க், கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.

இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
—————————————————————————————————–
கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை: தினசரி ரூ.40 சம்பளம்

முப்பை, ஆக. 2-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10-ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

ஒன்றாம் நம்பர் செல் “புத்தர் செல்” என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக, மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.

நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ, பிஸ்கட், ரொட்டி, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.

நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி, அரிசி உணவு, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.

நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா, நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள், டவல், சோப்பு, சீப்பு, பற்பசை, பவுடர், போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் ïசுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன், சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.

அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய், தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில், விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.

கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.

சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள், மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.

சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.

நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.
—————————————————————————————————–

சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்?

01 ஆகஸ்ட் 2007 – 14:43 IST

இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.

பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து, அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில், சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.

பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும், தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.

விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு, உடைகள், வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.

இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.

விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.

சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை, தோட்ட பராமரிப்பு, மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை, தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.

தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.

மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி, அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.

—————————————————————————————————–

என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்…?

புணே, ஆக. 4: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (48) வியாழக்கிழமை புணே “ஏர்வாடா’ சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை விதிகளின்படி,

  • ஜவுளி,
  • சலவை,
  • பேக்கரி,
  • பேப்பர் பிரிண்டிங்,
  • தச்சு வேலை,
  • பெயிண்டிங் ஆகியவற்றில்

ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.
“பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும்’ என்றார் உயரதிகாரி ஒருவர்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக, மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.

இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால், புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.

—————————————————————————————————–

ஜெயிலில் வேலை: பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத்

புனே, ஆக. 8-

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.

இதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.

அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.

அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.

இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
———————————————————————————————————————–

சல்மான்கான், சஞ்சய்தத் கைது: இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம்

மும்பை, ஆக. 30-

ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத், சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள். சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன், முன்னாபாய் சாலே அமெரிக்கா, அலிபாக், கிட்நாப், மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான், மெயின் யுவ்ராஜ், வாண்டட் டெட்அன்ட் அலைவ் (போக்கிரி ரீமேக்), ஹலோ, ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.

இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. “போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை” என்கிறார் போனிகபூர்.

இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.

Posted in abuse, Acquaintance, Actors, Actress, AK-47, AK47, Arms, Black, Blast, Bollywood, Bombay, Bombs, Bullets, cancer, Capital, case, Cash, Celebrity, Cinema, Cocaine, Compensation, Corrections, Cost, Courts, Crime, Currency, dead, Drugs, Dutt, Economy, Extremism, Extremists, Fame, Father, Films, Finance, Gode, Godey, guns, HC, Income, Jail, job, Judge, Justice, kalashnikov, Kodey, Kote, Law, Loss, Misa, Movies, MP, Mumbai, Munnabai, Munnabhai, Nargees, Nargis, Order, Police, POTA, Prison, Producer, Production, Profits, Punishment, release, revenue, Rifles, Rupees, Salary, Sanjai, Sanjay, SC, Sentence, Son, Sunil, Sunil Dutt, TADA, terror, Terrorism, terrorist, Terrorists, verdict, Violence, Weapons, Work | Leave a Comment »

Turkey Wants to Launch Incursions Into Iraq

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 12, 2007

குர்திஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று துருக்கிய இராணுவத் தளபதி கூறுகிறார்

ஜெனரல் யாசர் புயுகாணிட்
ஜெனரல் யாசர் புயுகாணிட்

இராக்கின் வடபகுதியில் உள்ள குர்திஸ்தான் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க தமது நாட்டின் இராணுவம் படை நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என துருக்கியின் இராணுவப் படைகளின் தலைவர் கூறியுள்ளார்.

எல்லை தாண்டி இராக்கிலுள்ள குர்திஸ்தானிற்குள் சென்று இராணுவ நடவடிக்கைகளை எடுக்க துருக்கி அரசு அனுமதிக்க வேண்டும் என துருக்கியின் இராணுவத் தலைவர் ஜெனரல் யாசர் புயுகாணிட் கேட்டுக் கொண்டுள்ளார்.

குர்திஷ் பிரிவினைக் குழுவினரான பிகேகே யின் ஆயிரக்கணக்கானவர்கள் வட இராக்கை தளமாக வைத்துக் கொண்டு துருக்கி மீதான தாக்குதல்களை நடத்துகிறார்கள் என துருக்கி எண்ணுகிறது.

இதனிடையே அடுத்த மாதம் துருக்கியில் நடைபெறவுளள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும் எனவும் துருக்கியின் இராணுவத் தளபதி ஜெனரல் புயுகாணிட் மேலும் கூறியுள்ளார்.

Posted in Ankara, Attack, defence, Erdogan, General, Iraq, Kurdistan, Kurdistan Workers Party, Kurdisthan, Military, PKK, terror, Terrorism, terrorist, Turkey, Yasar Buyukanit | Leave a Comment »

LTTE air power threat to entire South Asian region

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

வானில் எழுந்த புதிய கவலை

தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது நடத்தியுள்ள விமானத் தாக்குதல் இலங்கையில் புதிய போர்ச்சூழலை உருவாக்கியுள்ளது.

இதுநாள் வரையிலும் தரைவழி, கடல்வழி பாதுகாப்பு வளையங்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்த இலங்கையின் அனைத்து உயர் அதிகார மையங்களும், இனி வானத்தையும் உற்றுப் பார்த்தாக வேண்டும். அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளால் இலங்கை ராணுவத்தை நிலப்பரப்பில் எதிர்கொள்ள முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் புலிகளின் வசமிருந்த பல நகரங்கள், கிராமங்களை இலங்கை ராணுவம் தனது ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டது. இதனால் வான் தாக்குதலைத் தொடங்கியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

2001-ம் ஆண்டு கொழும்பு விமான நிலையத்தில் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, பாதிக்கும் மேற்பட்ட விமானங்களை அழித்ததைப் போன்ற சேதம் இப்போது நடைபெறவில்லை என்று இலங்கை அரசு கூறிக் கொண்டாலும் இது முதல் தாக்குதல்; அதுவும் இரவில் நடத்தப்பட்ட தாக்குதல்; இந்தத் தாக்குதல் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழக்கமாக இடம்பெறும் தற்கொலைப்படையினர் வான் புலிகளிலும் இருப்பார்கள். இலங்கை எத்தனை பாதுகாப்பு வளையங்களை அமைத்தாலும் தற்கொலை விமானிகளைத் தடுப்பது அரிது. அல்-காய்தா விமானிகள் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் மோதியதைப் போல, வான்புலிகளும் இலங்கையின் எந்த அலுவலகத்தையும் எப்போது வேண்டுமானாலும் தாக்கி அழிக்க முடியும்.

இலங்கையின் தரைப்படை, கடற்படை, விமானப்படை மூன்றையும் தாக்கும் திறன் பெற்றுவிட்ட விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தீவிரமாகத் தாக்கத் தொடங்கும். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

விமானத்துக்குத் தேவையான அலுமினியம் மற்றும் உதிரி பாகங்களை புலிகள் தொடர்ந்து கடத்தி வந்து, போர் விமானங்களை வடிவமைத்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக விமான ஓடுபாதை அமைத்துள்ளனர். இதை எப்படி இலங்கை உளவுத் துறை அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

விடுதலைப் புலிகளிடம் தற்போது எத்தனை விமானங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விமானங்களை நவீன கருவிகள் மூலம் தொலைவிலேயே கண்காணித்து சுட்டு வீழ்த்தும் நவீன, செலவுமிக்க போர்முறைகளுக்கு மாற வேண்டிய அவசியம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

புலிகளுக்கு போர் விமானம் தயாரிக்கவும், விமானத்தை இயக்கவும் யார் உதவினார்கள் என்பது இலங்கையின் தலைவலி என்றாலும், அதைவிட பெரிய தலைவலியும் இக்கட்டான நிலைமையும் இந்தியாவுக்குத்தான் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்த நவீன ரக விமானங்களை இந்தியாவிடம் இலங்கை அரசு கேட்கும். இலங்கை விமானப் படையில் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதனால் அனைவருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிக்க இலங்கை அரசு கேட்கும். இதைச் செய்தால் இந்தியாவுக்குள் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் எழும்.

புலிகள் தங்கள் தாக்குதலை நடத்தும்போது இந்திய வான் எல்லைக்குள்ளும் பறக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். இந்திய எல்லைக்குள் நுழையும் ஒரு போர் விமானத்தை தாக்குவதா, வேண்டாமா என்பதிலும் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.

விமானம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ள விடுதலைப் புலிகளிடம் ஹெலிகாப்டர்களும் இனி இடம் பெறக்கூடும். தமிழகக் கடலோரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து தங்களுக்கான பொருள்களை எடுத்துச் செல்லும் சம்பவங்களும் இனி நடைபெறலாம். தமிழகக் கடலோரம் கடற்படை ரோந்துகளை அதிகரித்ததைப் போலவே விமானப் படையையும் தமிழகக் கடலோரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உருவாகும்.

=====================================================

மிரட்டிப் பணம் பறித்ததாக பிரான்ஸில் 17 புலிகள் கைது?

பாரீஸ், ஏப். 2: தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்காக பிரான்ஸில் வசிக்கும் தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக 17 விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

17 பேரும் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடுப்பு நீதிபதி ஜீன்-லூயிஸ் புரூஜியரின் உத்தரவின் பேரில் போலீஸôர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பிரான்ஸில் வசிக்கும் தமிழர் குடும்பங்கள் இந்த அமைப்புக்கு தலா ரூ. 1.21 லட்சம் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும். அதேபோல் அங்கு வர்த்தகம் செய்யும் தமிழர்கள் ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கட்டாயமாக நிதி வசூலித்துத் தருவோர் தங்களது கமிஷனாக 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. நிதி வழங்க மறுக்கும் குடும்பத்தினர் கடத்தப்படுவர் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸில் 70 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

================================================
கேட்டுப் பெற முடியும்

இலங்கையில் மூன்றாவது முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதலில் சேதமுற்ற இரண்டு எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளில் ஒன்று இந்திய-இலங்கை கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இலங்கை அரசும் பெட்ரோல் விநியோக நிறுவனத்தை கூட்டாக நிர்வகித்து வருகின்றன. இதில் லங்கா ஐஓசிக்கு (இலங்கையில் செயல்படும் ஐஓசி நிறுவனத்தின் பெயர்) 33 சதவீத பங்கு உள்ளது. இந்திய அதிகாரிகளும் இதில் பணியாற்றுகின்றனர். பெட்ரோல் விநியோகத்தை இலங்கை அரசின் நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.

கொலநோவா எண்ணெய்க் கிடங்கானது இலங்கை-இந்திய கூட்டு நிறுவனத்துக்குரியது என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மேலும், புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் குறிப்பிடும்போது, “”ராணுவத் தீர்வையே இலங்கை அரசு நாடுகிறது. அதனால் வேறு வழியின்றி இலங்கை விமானப் படைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இரு எரிபொருள் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தினோம். தொடர்ந்து தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் செய்வதால் இந்திய கூட்டு நிறுவனமாக இருந்தாலும் தாக்குவார்கள் என்றால், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவியோ அல்லது வேறு ராணுவப் பயிற்சியோ அளித்தால் இந்தியாவையும் தாக்குவார்களா?

விடுதலைப் புலிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் தமிழகத்திலிருந்துதான் வருகின்றன என்பதுதான் இலங்கையின் புகார். அதற்காக, இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை நியாயப்படுத்த முடியுமா?

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய அடுத்த நாளே, கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரைக் கொன்றவர்கள் கடல்புலிகள் என்று காவல்துறைத் தலைவர் முகர்ஜி கூறினார். “விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கொண்டு சென்றநேரத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் உளவு பார்க்க வந்ததாகக் கருதி தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்றும் தெரிவித்தார். இந்த விளக்கமானது, ஆயுதக் கடத்தல் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான ராமேஸ்வரத்திலிருந்து தெற்கு கடற்கரைக்கு மாறியுள்ளது என்பதையும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும் அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப்போல உள்ளது.

கடல்புலிகளின் பாதுகாப்பில் உள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் பிடித்திருந்தால் இந்திய அரசு தலையிட முடியும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இந்திய அரசு எப்படி பேசும்? அப்படிப் பேசினால் மீனவர்களுக்கு ஈடாக புலிகள் எதைக் கேட்பார்கள்?

12 மீனவர்களை மீட்கும் ஒரே வழி தமிழக கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் “தமிழக மீனவர்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்பதுடன், கடத்தி வைத்துள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று சொல்வதுதான்.

ஏனென்றால், புலிகளின் வான் தாக்குதல்களால் பொருளாதார பாதிப்பை சந்தித்ததுடன், போதுமான ஆயுதங்களோ, படைப் பயிற்சியோ இல்லாமல் திண்டாடும் இலங்கை அரசு நிச்சயமாக இந்தியாவின் உதவியை நாடும். இந்தியா ஆயுத உதவியை அளித்தால் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமே. தமிழக மீனவர்களை விடுவிக்காவிட்டால், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்க மாட்டோம் என்று அறிவிப்பு செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது.

Posted in air crafts, Air Force, Arrests, Attack, Commission, Contribution, defence, Defense, Donation, Extortion, Foreign, France, French, Funds, Interpol, Katunayake, kickbacks, Law, Liberation Tamil Tigers of Eelam, LTTE, Mahinda Rajapaksa, Military, Navy, Non-profit, Order, Paris, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, separatist, South Asia, Sri lanka, Srilanka, Suicide, terror, Terrorism, terrorist, Vanni, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Wanni | 5 Comments »