Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘verdict’ Category

Sanjay Dutt sentenced to 6 years in prison – Film fraternity rallies behind & to appeal against verdict

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெற்றிக்கண்: சஞ்சய் தத் – கோடே

IdlyVadai – இட்லிவடை: சஞ்சய் தத்துக்கு 6 ஆ�

சற்றுமுன்…: பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

சற்றுமுன்…: சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

சிவபாலன்: நீயூஸ் மீடியாக்களை எத


பாதியில் சினிமா படம்: சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை, ஜுலை. 31-மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக, மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது

  1. மெகபூபா,
  2. தாமால்,
  3. கிட்நாப்,
  4. அலிபாக்,
  5. மிஸ்டர் பிராடு

ஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.
மிஸ்டர் பிராடு, அலிபாக், கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால், இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.

மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.

இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.

இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக “பீகேட்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
———————————————————————————————————-

14 ஆண்டுகளாக நடந்த விசாரணை

எதிர்பாராத திருப்பங்களையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.

257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸôர் யாகூப், எஸ்ஸô, யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸô, யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும், 7 ஆயிரம் பக்க ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6,700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38,070 கேள்விகள் கேட்கப்பட்டன.

குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.

———————————————————————————————————-
சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு!

சுநீல் தத், நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே, ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும், சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார்.

பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா, நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெüரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் (48).

சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.

பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.

தாயின் மரணம், மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத், ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.

இந் நிலையில்தான், மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய், யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு, அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.

அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெüரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

முன்னாபாய்: அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. “”முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.” என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட்டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல, முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————————————————————————————-

கண்டிப்பான நீதிபதி, கனிவான கனவான்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே (54) கண்டிப்பான நீதிபதி, கனிவான மனிதர்.

ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது, ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது, ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இசட் பிரிவு பாதுகாப்பு:

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே, குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.

ஆர்தர் சாலையில் உள்ள சிறையில், பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.

வேலையில் அக்கறை உள்ளவர்.

விடுமுறை எடுக்காதவர். 13,000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும், 7,000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும், 6,700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறையே எடுக்கமாட்டார்:

விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ, இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ, அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து, அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே, ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.

சாய் பாபாவின் பக்தரான கோடே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது, இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987-ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை, திறமை காரணமாக 1993-ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.

———————————————————————————————————-

சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல்

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் “தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.

“காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக, “பிஸ்டல்’ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும், “”ஏ.கே. 56” ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது, பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது, மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது, அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார்; அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள், அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

தவறு செய்துவிட்டேன்: நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள, தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார்.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத், நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன், “”14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன்; சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள்” என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து, “”எல்லோருமே தவறு செய்கிறார்கள்” என்றார்.

நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு (சஞ்சய் தத்) கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸôர் கைது செய்யவோ, சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

அதை நீதிபதி ஏற்று, சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸôருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு, அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.

நீதிபதி கோடே, சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி, ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.

சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.

யூசுப் நல்வாலா, கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும், வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.

கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா, அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.

சட்டவிரோதமாக ஒன்றல்ல, இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள், அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல, மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி; இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸôரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து, உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

“3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை’ என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.

வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத், உஜ்வல் நிகமிடம் சென்று, “”நன்றி ஐயா” என்று கூறி கையை குலுக்கினார்.

———————————————————————————————————-

சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு

மும்பை, ஆக. 1-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.

இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.

இந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2-வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.

ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.

இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.

இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.

முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.

அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க், கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.

இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
—————————————————————————————————–
கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை: தினசரி ரூ.40 சம்பளம்

முப்பை, ஆக. 2-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10-ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

ஒன்றாம் நம்பர் செல் “புத்தர் செல்” என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக, மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.

நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ, பிஸ்கட், ரொட்டி, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.

நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி, அரிசி உணவு, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.

நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா, நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள், டவல், சோப்பு, சீப்பு, பற்பசை, பவுடர், போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் ïசுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன், சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.

அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய், தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில், விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.

கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.

சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள், மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.

சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.

நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.
—————————————————————————————————–

சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்?

01 ஆகஸ்ட் 2007 – 14:43 IST

இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.

பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து, அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில், சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.

பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும், தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.

விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு, உடைகள், வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.

இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.

விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.

சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை, தோட்ட பராமரிப்பு, மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை, தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.

தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.

மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி, அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.

—————————————————————————————————–

என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்…?

புணே, ஆக. 4: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (48) வியாழக்கிழமை புணே “ஏர்வாடா’ சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை விதிகளின்படி,

  • ஜவுளி,
  • சலவை,
  • பேக்கரி,
  • பேப்பர் பிரிண்டிங்,
  • தச்சு வேலை,
  • பெயிண்டிங் ஆகியவற்றில்

ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.
“பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும்’ என்றார் உயரதிகாரி ஒருவர்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக, மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.

இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால், புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.

—————————————————————————————————–

ஜெயிலில் வேலை: பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத்

புனே, ஆக. 8-

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.

இதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.

அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.

அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.

இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
———————————————————————————————————————–

சல்மான்கான், சஞ்சய்தத் கைது: இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம்

மும்பை, ஆக. 30-

ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத், சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள். சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன், முன்னாபாய் சாலே அமெரிக்கா, அலிபாக், கிட்நாப், மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான், மெயின் யுவ்ராஜ், வாண்டட் டெட்அன்ட் அலைவ் (போக்கிரி ரீமேக்), ஹலோ, ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.

இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. “போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை” என்கிறார் போனிகபூர்.

இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.

Posted in abuse, Acquaintance, Actors, Actress, AK-47, AK47, Arms, Black, Blast, Bollywood, Bombay, Bombs, Bullets, cancer, Capital, case, Cash, Celebrity, Cinema, Cocaine, Compensation, Corrections, Cost, Courts, Crime, Currency, dead, Drugs, Dutt, Economy, Extremism, Extremists, Fame, Father, Films, Finance, Gode, Godey, guns, HC, Income, Jail, job, Judge, Justice, kalashnikov, Kodey, Kote, Law, Loss, Misa, Movies, MP, Mumbai, Munnabai, Munnabhai, Nargees, Nargis, Order, Police, POTA, Prison, Producer, Production, Profits, Punishment, release, revenue, Rifles, Rupees, Salary, Sanjai, Sanjay, SC, Sentence, Son, Sunil, Sunil Dutt, TADA, terror, Terrorism, terrorist, Terrorists, verdict, Violence, Weapons, Work | Leave a Comment »

Two SC judges differ on courts giving directives to Government

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மார்க்கண்டேய கட்ஜு, மன்னிக்கவும்!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நீதிபதிகளுமே அவர்களது அனுபவத்திற்கும், நாணயத்திற்கும், தெளிவான சிந்தனைக்கும் மதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களது தீர்ப்புகளும், கருத்துகளும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

விஷயம் வேறொன்றுமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு அந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பதைப் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.

  • குறைந்தது ஐந்து நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,
  • அந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும்,
  • இதற்கான மாற்றங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்

என்பதும்தான் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு வழங்கியிருந்த வழிகாட்டுதல்கள்.

ஒரு மாநில அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது

என்பது உத்தரப் பிரதேச அரசின் வாதம். அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு தொடுத்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹாவும், மார்க்கண்டேய கட்ஜுவும்.
“”அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவதற்காக சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நீதி வழங்கும் அமைப்புகளைப் பாதிக்குமேயானால், உயர் நீதிமன்றங்கள் தலையிட்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா, அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டிய கடமையை அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கி இருக்கிறது” என்பது எஸ்.பி. சின்ஹாவின் அபிப்பிராயம்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நேர் எதிராக அமைந்திருக்கிறது. “”சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடும் எண்ண ஓட்டத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதித்துறை சுயகட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முறையானது.

எந்தவொரு சட்டமும் அரசியல் சட்டத்துக்கு முரணானதாக இருக்குமேயானால் அதை நிராகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், சட்டத்தை மாற்றவோ, சட்டப்பேரவைகளின் சான்றாண்மையை விமர்சிக்கவோ நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” – இதுதான் மார்க்கண்டேய கட்ஜுவின் வாதம்.

மார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கும் அத்தனை கருத்துகளுமே ஏற்புடையவைதான். சட்டப்பேரவையும் அரசியல்வாதிகளும் வருங்காலச் சிந்தனையுடன் செயல்படுவார்களேயானால், ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்களேயானால், ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாதவர்களாக இருப்பார்களேயானால், மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையது, சரியானதும்கூட.

ஆனால், மக்களின் வெறுப்புக்கும், அவமரியாதைக்கும், கண்டனத்துக்கும் உரிய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒருபுறம். அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் துதிபாடிப் பதவி உயர்வு பெற்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பற்றிக் கவலையேபடாத அதிகார வர்க்கம் இன்னொரு புறம்.

இந்த நிலையில், நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தான் அரசியல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தியக் குடியரசையும், சராசரி குடிமகனையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்.பி. சின்ஹாவின் கருத்துகள் ஏற்புடையதே தவிர, மார்க்கண்டேய கட்ஜுவினுடையது அல்ல. கட்ஜுவின் வாதம், சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத நிர்வாகியின் வாதமாக இருக்கிறதே தவிர, நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நீதிபதியின் தீர்ப்பாக இல்லை.

Posted in activism, administrators, Allahabad, Bench, Center, Centre, Citizen, Consumer, Consumer Court, Consumer Protection Act, Consumer Rights, Court, CPA, Customer, directives, domain, Government, Govt, High Court, Judges, Jury, Justice, Katju, Law, Lawsuit, legislators, Legislature, Markandey Katju, Order, Party, Politics, Protection, provisions, rights, S.B. Sinha, SC, Sinha, State, temptation, UP, Uttar Pradesh, verdict | Leave a Comment »

Cauvery: Tamil Nadu to get 419 tmcft water, Karnataka 270

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

‘தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தரவேண்டும்’- நடுவர் மன்றம் தீர்ப்பு

 

தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இன்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

தமிழகத்துக்கு மொத்தமாக காவிரியில் இருந்து 419 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள காவிரி நடுவர் மன்றம், அதில் 192 டிஎம்சி தண்ணீர் கர்நாடகம் தரவேண்டும் என்றும், மீதி காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

காவிரி பாசனப்பகுதியில் 740 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது என்று கணக்கிட்டு, அதில் 419 டிஎம்சியும், கர்நாடகாவுக்கு 270 டிஎம்சியும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், பாண்டிச்சேரிக்கு 7 டிஎம்சியும் வழங்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நீர்ப் பங்கீட்டைப் பொறுத்தவரை பொதுவாக காவிரி நீரைப் பங்கீடு செய்வது பிரச்சினையில்லாமல் இருக்கும் என்றும்,கோடைகாலத்தில், நீர்வரத்துக் குறையும் போது, இரு மாநிலங்களும் அறுவடைக்காகக் காத்திருக்கும் நிலையும் காணப்படுவதால் அந்தக் காலப்பகுதியிலேயே நீர்ப்பங்கீட்டில் பிரச்சினை உருவாகும் என்றும் கூறுகிறார் நீர்ப்பாசனத் துறை நிபுணரான ஜனகராஜ்.

இதேவேளை காவிரி நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு வரவேற்றுள்ளது.

இப்போதாவது நியாயம் கிடைத்ததே என்று தான் ஆறுதலடைவதாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் இதனை வரவேற்றுள்ளார்.

காவிரி விவசாயிகள்
காவிரி விவசாயிகள்

இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த மனத்திருப்தியைத் தருவதாக அவர் தமிழோசையிடம் கூறியுள்ளார்.

ஆனால் இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இதனை எதிர்த்து தாம் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அது அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தத் தீர்ப்பை அடுத்து கர்நாடகப் பகுதிகளில் பெருமளவு பதற்றம் இல்லையாயினும், சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதாகவும், வேறு சில இடங்களில் சில எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக் குறித்து தமிழக அரசியல்வாதிகள் கருத்துகள்

காவிரி
காவிரி

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தற்போது வந்துள்ள தீர்ப்பானது தமிழகத்துக்கு சாதகமாக இருக்கிறது என்ற தொனிப்பட தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இன்றையத் தீர்ப்புக் குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதேவேளை இந்தத் தீர்ப்புக் குறித்து தமிழகத்தின் அனேகமான அரசியல் கட்சிகள் தமது கருத்தை இன்னும் வெளியிடாவிட்டாலும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

ஆளும் திமுக இதனை வரவேற்றுள்ளது.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம். வரதராஜன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள போதிலும், ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே அவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

இவர்களின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



இதுவரை கிடைத்த நீர்சென்னை, பிப். 6: காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வெளியான பிறகு கடந்த 17 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் (டி.எம்.சி. அளவில் -ஆண்டுவாரியாக):1991-92 ….. 334.96

1992-93 ….. 351.69

1993-94 ….. 223.37

1994-95 ….. 373.16

1995-96 ….. 183.09

1996-97 ….. 244.05

1997-98 ….. 268.05

1998-99 ….. 237.27

1999-2000.. 268.60

2000-01 ….. 306.20

2001-02 ….. 162.74

2002-03 ….. 94.87

2003-04 ….. 65.16

2004-05 ….. 163.96

2005-06 ….. 399.22

2006-07 ….. 227.76

(பிப்.2 வரை)

இவ்விவரங்களைப் பார்க்கும்போது நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பில் கூறப்பட்ட 205 டி.எம்.சி.யைக் காட்டிலும் அதிக நீரை அவ்வப்போது கர்நாடகம் திறந்து விட்டதைப் போல தோன்றும். ஆனால், பெரு மழை காரணமாக தனது அணைகளுக்கு வந்த உபரி வெள்ள நீரைக் கர்நாடகம் திறந்து விட்டதால் தான் அதிக நீர் காவிரியில் தமிழகத்துக்கு வந்தது.

ஒரு வகையில் பார்த்தால், தனது வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வடிநிலமாக தமிழகக் காவிரிப் பகுதிகளைக் கர்நாடகம் பயன்படுத்தி வந்துள்ளது என்பதே தமிழகப் பொதுப் பணித் துறையினரின் கருத்து.


காவிரி பயணம் செய்யும் பாதைகர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பிரம்மகிரி மலையில், தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி தோன்றுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகும் ஹேமாவதி, ஹேரங்கி, லட்சுமணதீர்த்தம், கபினி, சுவர்ணவதி போன்ற துணை நதிகள் கர்நாடகத்தில் காவிரியில் கலக்கின்றன. பீடபூமியின் உட்பரப்பில் தோன்றும் சிம்ஷா, அர்க்காவதி ஆகியவை காவிரியின் இடப் பக்கத்தில் சேருகின்றன.கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைக் கடக்கும்போது மேட்டூருக்குக் கீழே தெற்கு நோக்கி காவிரி திரும்புகிறது. பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை நதிகள் கலக்கின்றன. பவானி நதி காவிரியுடன் இணைந்த பிறகு, காவிரியின் அகலம் விரிவு அடைகிறது. திருச்சியில் மேல் அணைக்கு மேற்புறத்தில் 2 கி.மீ. அளவுக்கு அது அகன்று, “அகண்ட காவிரி’யாகக் காட்சி தருகிறது.

மேல் அணையில் இரு பிரிவுகளாகப் பிரிந்து, வட பிரிவு கொள்ளிடம் என அழைக்கப்படுகிறது. கல்லணைப் பகுதியில் காவிரியிலிருந்து வெண்ணாறு பிரிகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பல கிளைகளாகவும், உட்கிளைகளாகவும் பிரிந்து, மொத்தம் 36 கிளை நதிகளாகப் பரவிப் பாய்கின்றன. இறுதியில் பூம்புகாருக்கு அருகே குறுகிய ஓடையாகக் கடலில் கலக்கிறது காவிரி.

மொத்தம் 800 கி.மீ. நீளம் உள்ள காவிரியில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழகத்திலும் ஓடுகிறது. இரு மாநிலங்களிடையேயான எல்லையாக 64 கி.மீ. தூரம் ஓடுகிறது.


காவிரி – தமிழகத்தின் பல நூற்றாண்டுத் தொடர் கதை: ராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கிய பிரச்சினை

பா. ஜெகதீசன்சென்னை, பிப். 6: தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரிப் பிரச்சினை என்பது பல நூற்றாண்டுகளாகவே நீடிக்கும் தொடர்கதையாக இருந்து வருகிறது.காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு திங்கள்கிழமை வெளியாகியது. இந்நிலையில் இப்பிரச்சினையில் தமிழகம் கடந்து வந்த பாதையை இங்கு காணலாம்.

இப்பிரச்சினை 11-ம் நூற்றாண்டிலேயே தலைதூக்கியது. காவிரியின் குறுக்கே மைசூர் அரசு கட்டிய அணையை 2-வது ராஜராஜ சோழன் உடைத்து, நீரைத் திறந்து விட்டார்.

17-ம் நூற்றாண்டில் மைசூர் அரசு மீண்டும் கட்டிய அணையை உடைக்க தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் தமது படைகளுடன், ராணி மங்கம்மாளின் படைகளையும் அழைத்துச் சென்றார். சரியாகக் கட்டப்படாத அணை அதற்குள் உடைந்தது.

கி.பி. 2-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சிறப்பான பாசனக் கட்டமைப்புகள் தமிழகக் காவிரி பகுதியில் இருந்தன.

காவிரியின் இடது கரையில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க உடைப்பின் குறுக்கே இன்றும் உலகமே வியக்கும் பழமையான கல்லணை, கரிகால் சோழனால் கட்டப்பட்டது.

ஒப்பந்தத் தொடர் கதை: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே 1890-லிருந்து 1892 வரை பேச்சு வார்த்தை -கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. அதன் விளைவாக ஒப்பந்தம் ஏற்பட்டது.

“சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது புதிய ஆயக்கட்டு அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என்கிற விதி அதில் இடம் பெற்றது.

கிருஷ்ணராஜ சாகர் அணை: காவிரியின் குறுக்கே கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட சென்னை அரசின் இசைவை மைசூர் அரசு கோரியது. அத்திட்டம் தமிழகத்தைப் பாதிக்கும் என்பதால் இசைவு அளிக்க சென்னை அரசு மறுத்தது.

“கோலார் தங்கச் சுரங்கப் பணிகளுக்கு மின் சக்தியைத் தரும் சிவசமுத்திரத் திட்டத்துக்குத் தடையின்றி நீர் வழங்கும் நிர்பந்தம் உள்ளது. முதலில் 11 டி.எம்.சி. நீரையும், பிற்காலத்தில் அனுமதி கிடைக்கும்போது 41 டி.எம்.சி. நீரையும் தேக்குவதற்கான உயரத்துக்கு ஏற்ற அகலமான அடித்தளம் கொண்ட அணை கட்டிக் கொள்கிறோம். அகலமான அடித்தளம் அமைப்பதைப் பிற்காலத்தில் பெரிய அணையைக் கட்ட அனுமதி கோருவதற்குக் காரணமாக வலியுறுத்த மாட்டோம்’ என மைசூர் அரசு உறுதி கூறியது.

1924 ஒப்பந்தம்: மைசூர் அரசு சிறிய அணையைக் கட்டிக் கொள்ள சென்னை அரசு இசைவு அளித்தது. 1911 செப்டம்பரில் பணியைத் தொடங்கிய மைசூர் அரசு, தனது உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டது.

இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது.

44.827 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டவும், 1.25 லட்சம் ஏக்கர் புதிய பாசன வசதியை ஏற்படுத்தவும் சென்னை அரசு இசைவு அளித்தது.

அதே நேரத்தில் 93.50 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக 3.01 லட்சம் ஏக்கர் நிலத்துக்குச் சென்னை அரசு பாசனம் அளிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

சென்னை அரசு புதிய பாசன நீர்த் தேக்கங்களை அமைக்கலாம். பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய நதிகளில் நீர்த்தேக்கம் அமைத்தால், அதற்கு ஈடாக அதன் கொள்ளளவில் 60 சதவீதத்துக்கும் மேற்படாத ஓர் அணையைத் தனது எல்லைக்குள் காவிரியின் துணை நதிகளில் மைசூர் அரசு அமைக்கலாம்.

எதைச் செய்தாலும், சென்னை மாகாணத்துக்குச் சேர வேண்டிய நீரின் அளவு குறைந்து விடாதபடி மைசூர் அரசு செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் தெளிவுபடுத்தியுள்ளது.

நடுவர்மன்றக் கோரிக்கை: பிற்காலத்தில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணைகளைக் கட்டி, பாசனப் பரப்பை அதிகரித்தது. இத்தகராறைத் தீர்க்க 1968-லிருந்து காவிரிப் படுகை மாநில முதல்வர்களிடையே பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.

பிரச்சினையை நடுவர்மன்றத் தீர்வுக்கு விடும்படி 17.2.1970-ல் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. பிறகு, நடுவர்மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி கோரி 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அளித்த அறிவுரை -உத்தரவாதத்தின் பேரில் அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

1974-லிருந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டது. காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.

நடுவர் மன்றத்தை நியமிக்கக் கோரி 29.05.75-ல் மீண்டும் தமிழக அரசு வலியுறுத்தியது.

விவசாயிகள் ரிட் மனு: நடுவர்மன்றம் அமைக்கக் கோரி தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த ரிட் மனுவுக்குத் தமிழக அரசு ஆதரவு அளித்தது.

16.6.1986-ல் பெங்களூரில் மத்திய அமைச்சர் நடத்திய கூட்டத்தில் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாக அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அறிவித்தார். “நடுவர் மன்றத்துக்குப் பிரச்சினையை விடுவதைத் தவிர இனி வேறு வழி இல்லை’ என்றார் அவர். அதற்கான மனு 6.7.1986-ல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

நடுவர்மன்றம்: நடுவர்மன்றம் அமைப்பது பற்றிய அறிவிப்பை ஒரு மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4.5.1990-ல் உத்தரவிட்டது. அதையடுத்து 2.6.90-ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது.

தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்கிற இடைக்காலத் தீர்ப்பை 21.3.1991-ல் நடுவர்மன்றம் அளித்தது.

தமிழகத்துக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விட்ட பிறகே கர்நாடகம் தனது அணைகளில் நீரைத் தேக்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டதைக் கர்நாடகம் கண்டு கொள்ளவே இல்லை.

ஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகிய 3 நதிகளின் குறுக்கே கர்நாடகம் கட்டிய அணைகள் விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை என மத்திய அரசின் வல்லுநர் குழுவே கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அணைகளைக் கட்டும்போது தமிழக அரசின் முன் இசைவையோ, மத்திய அரசின் அனுமதியையோ கர்நாடகம் பெறவில்லை.

ஆனால், தமிழகமோ மேட்டூர் அணைக்குப் பிறகு, பவானி, அமராவதி போன்ற அணைகளைக் கட்டியபோது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது.

1974-க்குப் பிறகு பல்வேறு நிலைகளில் 40 முறை இரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தின.


உபரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தமா?ஏ. தங்கவேல்புதுதில்லி, பிப். 6: பலத்த மழை பெய்யும் காலங்களில், காவிரியில் உற்பத்தியாகும் உபரி நீரைப் பற்றி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

உபரி நீர் மூலம், ஆண்டுக்கு சராசரியாக 40 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். நடுவர் மன்றம் அது யாருக்குச் சொந்தம் என்று சொல்லாத நிலையில், உபரி நீர் முழுவதையும் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

உபரி நீரைத் தேக்கி வைப்பதற்காக புதிய அணை கட்டலாம் என்ற யோசனைகூட இப்போதே வந்துவிட்டது. அணை கட்டினால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறைப்படுத்தலாம். மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் செய்யலாம் என்று திட்டமிடப்படுகிறது.

ஆனால், இந்த உபரி நீர் தொடர்பாக கர்நாடக வழக்கறிஞர்கள் மத்தியிலேயே ஒருமித்த கருத்து இல்லை.

உபரி நீர் முழுவதற்கும் கர்நாடகம் சொந்தம் கொண்டாடுமானால், தமிழகம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?

அண்டை மாநிலம் அணை கட்ட வேண்டுமானால் தனது அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலையில், தமிழகம் இதுவரை உறுதியாக இருந்துவந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டும் நேரத்தில்கூட, தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்ட பிறகே சம்மதம் தெரிவித்தது.

திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பில், ஒவ்வொரு மாநிலமும் காவிரியைப் பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டிய பரப்பளவு எவ்வளவு என்பதைத் தெரிவிக்கவில்லை.

தொடரும் போராட்டம்: இறுதித் தீர்ப்பு வந்துவிட்டாலும், மறு ஆய்வு செய்யக் கோரி மாநிலங்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்யும் நிலையில், சட்டப் போராட்டம் தொடரும். நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யும் அதே நேரத்தில், மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.

பஞ்சாப் -ஹரியாணா மாநிலங்களிடையே ராபி -பியாஸ் நதிநீர் பிரச்சினையில் 1987-ம் ஆண்டு எராடி கமிஷன் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன்பிறகு 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில், காவிரியின் நிலை என்னவாகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.


எல்லையில் நீர் மின் திட்டம் வந்தாலும் தமிழகத்தின் பங்கு குறையக் கூடாது: காவிரி நடுவர் மன்றம் உத்தரவு

Dinamani சிறப்பு நிருபர் புதுதில்லி, பிப். 6: தமிழக -கர்நாடக எல்லையில் நீர் மின் திட்டம் அமைக்கப்பட்டாலும், நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ள தண்ணீரின் அளவு தமிழகத்துக்குக் குறையக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.காவிரிப் பிரச்சினையில், நடுவர் மன்றத் தலைவர் என்.பி. சிங், உறுப்பினர்கள் என்.எஸ். ராவ் மற்றும் சுதிர் நாராயணன் ஆகியோர் திங்கள்கிழமை அளித்த இறுதித் தீர்ப்பில், நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் தேவைகள் பாதிக்கப்படாத வகையில் நீர் மின் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“”தமிழக -கர்நாடக எல்லையில், தேசிய நீர்மின் திட்டக் கழகத்துடன் இணைந்து சில நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த ஆலோசித்து வருவதாக இரு மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எப்போது அதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டாலும், அணையில் நீர் தேக்கிவைக்கப்பட்டாலும், நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டபடி, நீர்ப்பாசனத் தேவைகளுக்காகத் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் பங்கு குறையக் கூடாது. உத்தரவில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் உரிய நேரத்தில் செல்ல வேண்டும்” என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம் மற்றும் புதுவைக்குரிய தண்ணீரை அனுமதிக்க வேண்டிய அட்டவணையைப் பாதிக்கும் வகையில் கர்நாடகம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், மாநிலங்கள் ஒருமித்த கருத்துடன், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனையுடன், அந்த அட்டவணையை மாற்றிக்கொள்ளலாம்.

ஓர் அணையிலிருந்து, ஒரு மாநிலம் தனது சொந்தத் தேவைக்காக தண்ணீரைத் திருப்பிவிட்டால், குறிப்பிட்ட தண்ணீர் ஆண்டில் (ஜூன் -மே) அந்த மாநிலம் அதைப் பயன்படுத்தியதாகக் கருதப்பட வேண்டும்.

அணை அல்லது துணை நதியில் இருந்து திருப்பிவிடப்படும் தண்ணீரில் 20 சதம் உள்ளூர் மற்றும் நகராட்சி குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணை, ஆறு அல்லது கால்வாயில் இருந்து எடுக்கப்படும் நீரில் 2.5 சதவீதத்தைத் தொழில்துறைத் தேவைகளுக்காகப் பன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகம், கேரளம் அல்லது புதுச்சேரி மாநிலங்கள், ஓர் ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், அடுத்து வரும் மாதங்களில், ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஓர் ஆண்டில் தனது பங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், அடுத்த ஆண்டு குறிப்பிட்ட மாநிலத்தின் பங்கைக் குறைக்க முடியாது. அதேபோல், பயன்படுத்தாத தண்ணீரை அந்த ஆண்டில் வேறு மாநிலம் பயன்படுத்தியிருந்தால், அடுத்த ஆண்டும் அந்த மாநிலம் கூடுதல் பங்கு கேட்பதற்கு உரிமை இல்லை என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜூன் 1-ம் தேதி துவங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடையும் காலத்தை, நீர்ப்பாசனக் காலம் என்று நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.


கிடைத்ததை விரும்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி தருவதாகவும் இல்லை; அதிக வருத்தம் அளிப்பதாகவும் இல்லை.கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்பது இடைக்காலத் தீர்ப்பு. ஆனால், இறுதித் தீர்ப்பு 192 டிஎம்சியாக குறைந்துவிட்டது. அதாவது 13 டிஎம்சி குறைவு. காவிரி நீரில், “தமிழகத்தின் பங்குநீர்’ என்பதும், தமிழகத்துக்கு “கர்நாடகம் வழங்க வேண்டிய நீர்’ என்பதும் இரு வேறு விஷயங்கள்.

தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி தண்ணீர் என்ற தீர்ப்பைக் கேட்டவுடன் தமிழகத்துக்கு அதிக தண்ணீர் கிடைத்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், உண்மை அதுவல்ல. காவிரியில் தமிழகத்தின் பங்கு 419 டிஎம்சி. இதில் தமிழக எல்லைக்குள் காவிரியில் எப்போதும் தானாகச் சென்றுகொண்டிருக்கும் தண்ணீரும், கிளைநதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரும் ஆண்டுக்கு 227 டிஎம்சி எனக் கணக்கிடப்பட்டு, கர்நாடகம் நமக்கு “”வழங்க வேண்டிய தண்ணீர் ஆண்டுக்கு 192 டிஎம்சி” என்று கணக்கிடப்படுகிறது. இதில் குடிநீர் தேவைக்கு 10 டிஎம்சியும் அடங்கும்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பில், “13 டிஎம்சி போனால் போகிறது’ என்ற மனநிலைக்கு தமிழக விவசாயிகள் வந்துவிட்டனர். “இந்த நீரையாகிலும் நடுவர்மன்றம் நிர்ணயித்த அளவுப்படி கர்நாடகம் திறந்துவிட்டால் சரிதான்’ என்று போராடிச் சலித்துப்போய்க் கிடக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் எப்படி பகிர்ந்துகொள்வது என்பதைத்தான் தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அதுபற்றி இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மழை பொய்க்காத ஆண்டுகளில் சராசரியாக 250 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுகிறது. மழை இல்லாதபோதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பற்றாக்குறை ஆண்டுகளில் தண்ணீர் பகிர்வுக்கான அளவுகளை அறிவிக்கும்படி நடுவர்மன்றத்திடம் தமிழக அரசு முறையிடலாம்.

இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மேட்டூர் அணையை மட்டுமே நம்பியிருக்காமல் நமக்குக் கிடைக்கும் மிகை நீரைத் தேக்கி வைக்க இன்னொரு அணையைக் கட்டும் கட்டாயமும் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. முன்பு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரியில் கூடுதல் தடுப்பணை கட்டும் திட்டத்தை உலக வங்கிக்கு தமிழகம் அளித்தபோது, நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பின்னர் பார்க்கலாம் என்று அவர்கள் நிராகரித்துவிட்டனர். இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில், இது குறித்து தமிழகம் பரிசீலிக்கலாம். மேலும், நமக்கு கர்நாடகம் உண்மையிலேயே 192 டிஎம்சி தண்ணீர் வழங்குகிறதா என்பதை கண்காணிக்க சரியான அளவீட்டு முறைகள் இல்லை. தற்போது பிலிகுண்டலு பகுதியில் உள்ள அளவுமானியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இப்பகுதி வண்டல்மண்ணால் மேடுற்றுள்ளதால், குறைவான அளவு நீர்தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது.

இந்த அளவு மாறுபாடு குறித்து பிரச்சினை எழுந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஒரு யோசனை கூறினார். கர்நாடக-தமிழக எல்லையில் (ஓகேனக்கல் அருகில்) புனல்மின்நிலையம் அமைத்தால், இரு மாநில அரசுகளும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நீரின் அளவைச் சரியாகத் தீர்மானிக்கவும் முடியும் என்றார். அப்படியும் செய்யலாம்தான்.


காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தேவை

திருச்சி, பிப். 13: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தமிழக பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத் தலைவர் ஜி. கனகசபை தலைமை வகித்தார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் மன்னார்குடி எஸ். ரெங்கநாதன் பேசியது:

“காவிரிப் பிரச்சினை முற்றிலும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை; அரசியல் பிரச்சினையல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பில் முழு திருப்தி இல்லை என்றாலும் நியாயமான தீர்ப்புதான்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்த்தால் பல்வேறு பாசன நலத் திட்டங்களுக்கு உலக வங்கி கடன் தரத் தயாராக உள்ளது’ என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதையடுத்து தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

கோடைக்காலத்தில் தண்ணீர் திறப்பு குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. கோடைக்காலத்தில் தண்ணீர் திறக்காவிட்டால் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு கோடைக்காலத்தில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 Dinamani – Feb 14, 2007

காவிரி தீர்ப்பு: தமிழகத்தின் இழப்பும்-தவறுகளும்

பழ. நெடுமாறன்

சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தீராமல் இருந்துவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

1968 முதல் 1990 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகாலமாகப் பேச்சு நடத்தி தமிழகம் ஏமாந்ததுதான் மிச்சம்.

1972 ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் கொடுத்திருந்த வழக்கை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு திரும்பப் பெற்றது.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் 19 ஆண்டுகளாக இழுத்தடித்து நடுவர் மன்றம் அமைக்கவிடாமல் கர்நாடம் தடுத்தது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ஏற்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நடுவர் மன்றத்தை அமைத்தார்.

16 ஆண்டுகாலமாக நடுவர் மன்றத்துக்கு ஒத்துழைப்பு தராமல் கர்நாடகம் இழுத்தடித்தது. இறுதியாக, 2007ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்படி தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. நீரும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்துக்கு அளிக்கப்பெற்ற 419 டி.எம்.சி.யில் 192 டி.எம்.சி. நீரை கர்நாடகம் அளிக்கும். மீதமுள்ள 227 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி ஓடும் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகளிலிருந்து கிடைக்கும் நீர் ஆகும். ஆக காவிரியில் கர்நாடகம் கொடுப்பது 192 டி.எம்.சி. இதில் 10 டி.எம்.சி. நீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அளிக்கப்பட வேண்டும். புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. கொடுக்க வேண்டும். இந்த 17 டி.எம்.சி. போக தமிழகத்துக்கு கிடைப்பது 175 டி.எம்.சி. மட்டுமே.

ஆனால் சராசரியாக 177 டி.எம்.சி. நீர் மட்டுமே பெற்று வந்த கர்நாடகத்துக்கு மேலும் 93 டி.எம்.சி. நீர் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மற்றோர் அநீதியும் நமக்கு இழைக்கப்பட்டுள்ளது. காவிரி தாவா தொடங்கப்பட்டதிலிருந்து பேச்சுவார்த்தைகளின்போதும் உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு எடுத்து வைத்த நிலை என்பது நமக்களிக்கப்படும் காவிரி நீர் மேட்டூர் அணையில் அளக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில் இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் கர்நாடகம் மேட்டூரில் அளப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பில்லிகுண்டு என்ற இடத்தில்தான் நீர் அளக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்கு பல வகையிலும் இழப்பு ஏற்படும். அதாவது பில்லிகுண்டில் அளந்தால் நமக்கு 14 டி.எம்.சி. நீர் குறையும்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் மற்றும் ஓர் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. கேரளத்திற்கு 30 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் கபினி ஆற்றிலிருந்து 21 டி.எம்.சி. நீரும் தமிழகம் பவானி ஆற்றிலிருந்து 9 டி.எம்.சி. நீரும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வறட்சிக் காலத்தில் தமிழ்நாடு உள்பட காவிரிப் பாசன மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறைத்துள்ளது. அதைப்போல கர்நாடகம் பயன்படுத்த வேண்டிய நீரின் அளவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடுவர் மன்றம் அவ்வாறு செய்யவில்லை. இது மிகப்பெரிய அநீதியாகும்.

கர்நாடகத்திற்கு நடுவர் மன்றம் அளித்த காவிரி நீரின் பங்கு 270 டி.எம்.சி. ஆகும். இதில் 50 சதவீத நீர் காவிரி நீர் பாயும் பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. காவிரி நீர் பாயும் பகுதிகள் அல்லாத இடங்களிலிருந்து கிடைக்கும் எஞ்சிய 50 சதவீதத்திற்கும் அதிகமான கூடுதல் நீரைப் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகத்திற்கு எவ்விதத் தடையும் கிடையாது. இந்த நீரில் மற்ற மாநிலங்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது ஒருசார்பானது ஆகும்.

காவிரிப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையின்போதும், உச்ச நீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் வழக்குகள் நடந்தபோதும் நமது சார்பில் பல தவறுகள் இழைக்கப்பட்டுவிட்டன. இது இறுதித் தீர்ப்பில் நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

ஆனால் தமிழகத்தின் சார்பில் 1972ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒரே சீரான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகள் மாறி மாறி ஏற்பட்டன. ஒவ்வோர் ஆட்சியின்போதும் ஒவ்வோர் அணுகுமுறை கையாளப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தின் நிலைப்பாடு உறுதியற்றதாகவும் பல மாற்றங்களுக்கு ஆளானதாகவும் இருந்தது.

இந்நிலையில் நடுவர் மன்றத் தலைமை நீதிபதி சித்ததோஷ் முகர்ஜியை அப் பதவியிலிருந்து அகற்ற கர்நாடகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. கர்நாடகம் அளித்த பொய்யான புள்ளிவிவரங்களை ஏற்க மறுத்ததே இதற்கு முக்கியக் காரணம்.

இந்நிலையில் முகர்ஜி பதவி விலகினார். அவர் விலகாமல் இருந்திருந்தால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு நிச்சயமாக வேறுவிதமாக இருந்திருக்கும்.

இதற்கிடையில், நடுவர் மன்றத்தில் அங்கம் வகித்த மற்ற நீதிபதிகளும் மாறினர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள காலஅவகாசம் கிடைக்கவில்லை.

பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது தமிழகத்திற்கு உடனடியாக 11 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டது. அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பிரதமர் அதுபற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் பதவி வகித்த கே. அலக் என்பவர் 6 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டுக்கு அளித்தால் போதும் என்று பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமரும் அவ்வாறே ஆணையிட்டார். பிற்காலத்தில் தேவெ கௌட பிரதமராக வந்தபோது, மத்திய திட்ட அமைச்சராக கே. அலக் நியமிக்கப்பட்டார். திட்டக்குழுவின் அனுமதியில்லாமல் காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் கர்நாடகம் மேற்கொண்டு வந்த பாசனக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கத்துடன் திட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறே அனுமதியும் வழங்கினார். இதை மத்தியில் அங்கம்வகித்த தமிழக அமைச்சர்களோ, தமிழக அரசோ ஆட்சேபிக்கவில்லை.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற பிரதமர் குஜ்ரால் காலத்தில் வரைவுத் திட்டமும் ஆணையமும் உருவாக்குவதற்கான வழி வகுக்கப்பட்டது. ஆனால் குஜ்ரால் அரசு சில மாதங்களே பதவியில் இருந்ததால் இத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

காவிரி நதிநீர் வாரியத்தை அமைக்க முன்னாள் பிரதமர் வாஜபேயி முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என அவரை வற்புறுத்த தமிழக அரசும் தவறிவிட்டது.

1971ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சியுடன் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளன. 1987-க்குப் பிறகு மத்திய ஆட்சியில் தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ தொடர்ந்து அங்கம் வகித்துள்ளன. ஆனாலும் 1956ஆம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்தி காவிரி நதிநீர் வாரியம் அமைக்க இவைகள் முற்றிலுமாகத் தவறிவிட்டன.

உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் காவிரி வழக்கு நடைபெற்றபோது தமிழக வழக்கறிஞர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை அ.தி.மு.க. ஆட்சி மாற்றியது. அ.தி.மு.க. ஆட்சி நியமித்த வழக்கறிஞர்களை தி.மு.க. ஆட்சி மாற்றியது. இதன் விளைவாக வழக்கின் போக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.

இறுதியாக காவிரிப் பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கத் தவறிவிட்டன. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. இதன் விளைவாக மத்திய அரசும் நடுவர் மன்றமும் நம்மை மதிக்கவில்லை.

(கட்டுரையாளர்: தலைவர், தமிழர் தேசிய இயக்கம்).

Posted in Agriculture, Amaravathi, Amaravathy, Analysis, Backgrounder, Bavani, Bhavani, Biligundlu, Border, Cauvery, Cauvery Water Disputes Tribunal, Cholan, Current, Dam, Developments, discharge, Dispute, Events, Farmer, Farming, Happenings, Hearings, Hemavathi, Hemavathy, Herangi, Heranki, History, Inter-state, Irrigation, Kabini, Kallanai, Kannambadi, Karikal Cholan, Karnataka, Kavery, Kaviri, Kerala, KR Sagar, Krishna Raja Sagar, Madikeri, Mercara, Mysore, Nedumaran, Noyyal, Opinion, Pala Nedumaran, Pazha Nedumaran, Pazha Netumaran, Public Works, Pudhucherry, Puducherry, PWD, Rajaraja Chozhan, reservoir, River, State, Tamil Nadu, Tanjore, Thanjavoor, Thanjavur, Tribunal, verdict, Water | 1 Comment »