Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச், 2009

Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

டிராபிக் ராமசாமியை தாக்கியதாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸôருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து, வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அனுமதிக்கப்படாத இடத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாகவும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக 10 வழக்கறிஞர்கள் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு புகார் தந்தி அனுப்பியுள்ளார்.

இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | 1 Comment »

‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ – Pazha Nedumaran on 14 dead

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

14 பேர் உயிரிழந்ததற்கு மத்திய அரசே பொறுப்பு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர்களுக்காக 14 பேர் தீக்குளித்து இறந்ததற்கு மத்திய அரசுதான் பொறுப்பாளி என்று குற்றம்சாட்டினார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன்.

அரியலூர் மாவட்டம், தத்தனூர் கீழவெளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை, இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளித்து இறந்த பாமக தொண்டர் செ. ராஜசேகரனின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பழ. நெடுமாறன் மேலும் பேசியது:

“”தியாகிகளின் தியாகங்களை மதிக்காவிட்டாலும் கொச்சைப்படுத்தக்கூடாது.

தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் 14 பேரின் உயிரிழப்புக்கும் பொறுப்பாளி மத்திய அரசுதான். இதன் விளைவு வரும் மக்களவைத் தேர்தலில் உணர்த்தப்படும். ராஜசேகரனின் மரணம் ஈடுசெய்ய முடியாததுதான் என்றாலும், அவரது குடும்பச் சூழல் கருதி சிறு உதவியாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் விரைவில் வழங்கப்படும்” என்றார் பழ. நெடுமாறன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்: “”இவையெல்லாமும் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்றாலும்கூட, தீயில் வெந்து சாக வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவு, அவர்களது மன வேதனையின் உச்சத்தைக் காட்டுகிறது.

பாமக தலைவர் கோ.க. மணி: முத்துக்குமார் தொடங்கி ராஜசேகரன் வரை தீக்குளித்து உயிரிழந்தவர்களின் நோக்கங்கள் நிறைவேறும் வரை வீரமுள்ள, மானமுள்ள தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

Posted in Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

Bihar raw deal: Tit for tat: Cong seals deal with JMM in Jharkhand: Shibu Soren to fight both LS and assembly polls

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2009

ஜார்க்கண்டில் பங்கீடு: காங்கிரஸ்-7, ஜே.எம்.எம்.-5

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 7 மக்களவைத் தொகுதியிலும், சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும். லாலு பிரசாத் கட்சிக்கு எஞ்சிய 2 தொகுதிகள் விடப்பட்டுள்ளன. இம் மாநிலத்தில் மொத்தமே 14 மக்களவைத் தொகுதிகள்தான்.

பிகாரில் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் அதற்கு 3 தொகுதிகளை மட்டுமே விட்டுவைத்துவிட்டு எஞ்சியவற்றை லாலு பிரசாதும் ராம்விலாஸ் பாஸ்வானும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். அதற்குப் பதிலடி தருவதைப்போல இந்த ஒதுக்கீடு அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு நடந்த பேச்சில் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும் லாலு கட்சிக்கு 3 தொகுதிகளும் தரப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இப்போது லாலு கட்சிக்கு ஓரிடத்தைக் குறைத்து, காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடத்தை அதிகப்படுத்திவிட்டனர்.

லாலு இதை ஏற்பாரா என்று தெரியவில்லை.

கோதர்மா, ஹஸôரிபாக் ஆகிய இரு தொகுதிகள் யாருக்கு என்பதில்தான் காங்கிரஸ் ஆர்ஜேடி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி இருந்தது. கடந்த முறை கோதர்மாவில் பாபுலால் மராண்டியும், ஹஸôரிபாக் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன. பாபுலால் மராண்டி முன்னாள் பாஜக தலைவர். சுயேச்சையாக கோதர்மாவில் வென்றார். ஹஸôரிபாக்கில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே இல்லை. எனவே இத் தொகுதிகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையில் போட்டி நிலவியது.

இந்த இரண்டைத் தவிர எஞ்சிய 12 தொகுதிகளும் காங்கிரஸ் ஜேஎம்எம் ஆர்ஜேடி ஆகிய 3 கட்சிகளுமே போட்டியிட்டு வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | Leave a Comment »

Reporters Woes in covering the upcoming India Elections 2009: Media Pass from EC

Posted by Snapjudge மேல் மார்ச் 18, 2009

நிருபர்களுக்கு தடை போடுகிறது தேர்தல் ஆணையம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான கெடுபிடிகளை அமல்படுத்தி வருகிறது.

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை நியாயமாக, நேர்மையாக நடக்கிறதா என்பதற்கு பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் சாட்சி. ஆனால், மே மாதம் நடக்கும் மக்களவைத் தேர்தலில் அந்த சாட்சிகள், முன்பு போல வாக்குச் சாவடிக்குள்ளோ, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள்ளோ எளிதில் சென்று எதையும் பார்க்க முடியாது.

ஒரு தொகுதிக்கு ஒரு நிருபர், ஒரு புகைப்படக்காரர் என்ற அளவில் முன்பு தேர்தல் ஆணையம் அங்கீகார அட்டை கொடுத்ததால் பல பகுதிகளுக்குச் சென்று செய்தி சேகரிக்க முடிந்தது. நிருபர்கள், புகைப்படக்காரர்கள் நடமாட்டம் இருக்கும் என அரசியல் கட்சிகளும் சற்று கவனமாகவே இருந்தன.

ஆனால், இப்போது ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர் அல்லது புகைப்படக்காரர் மட்டும்தான் இந்த அங்கீகார அட்டை பெற முடியும்.

சென்னை மாவட்டத்தில் 3 தொகுதிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை வெவ்வேறு இடங்களில் நடக்கும். ஆனால் ஒருவர் மட்டும் எல்லா இடங்களையும் பார்ப்பது சிரமம்.

இது அரசியல் கட்சிகளுக்கு மிகவும் வசதியான ஏற்பாடாக அமைந்துவிடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதிலும்கூட தொலைக்காட்சிகளுக்கு இரண்டு பேருக்கு அங்கீகார அட்டை தர முன்வந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

நியாயமான, நேர்மையான தேர்தல் நடப்பதை உறுதி செய்கிறோம் என்று கூறி, வேட்பாளருடன் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு, செலவுக்கு வரம்பு, பிரசாரத்துக்கு வரம்பு என அறிவித்துவிட்டு, அதைக் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும் செய்தியாளர்களுக்கு தடை விதித்ததைப் போன்ற நிலையை உருவாக்குவது சரியில்லை என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையம் இதுபற்றி மறு பரிசீலனை செய்து முன்புபோல தாராளமாக வாக்குச் சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை தருவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கலாமே தவிர, எண்ணிக்கையைக் குறைப்பது சரியாக இருக்காது என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

Posted in Govt, India, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 1 Comment »

CPI(M) Election Manifeto released

Posted by Snapjudge மேல் மார்ச் 17, 2009

ஆட்சியில் பங்கு பெறுவோம்: காரத்

தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத். உடன் கட்சியின் முன்னணித் தலைவர்கள் (இடமிருந்து) பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி, எம்.கே. பாண்டே, முகமது அமின்.

புது தில்லி, மார்ச் 16: மத்தியில் மூன்றாவது அணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தால், அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

மத்தியில் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கூறிய அவர், அதை விவரிக்க மறுத்து விட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டு அவர் மேலும் கூறியது:

மூன்றாவது அணி ஆட்சியமைத்தால் வழக்கம்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு தருமா? அல்லது அமைச்சரவையில் இடம்பெறுமா? என்று கேட்டதற்கு, அமைச்சரவையில் சேரும் வாய்ப்புகளை புறக்கணிக்க முடியாது என்றார்.

இதற்கு முன்னர் ஏற்பட்ட காங்கிரஸ் அல்லாத மத்திய அமைச்சரவையில் (தேவ கெüட மற்றும் ஐ.கே. குஜ்ரால்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி) இடம்பெறவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றது.

மூன்றாவது அணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று குறிப்பிட்ட காரத், இந்த அணிக்கு யார் வருவார்கள், யார் வரமாட்டார்கள் என்பதை இப்போதே கூற முடியாது. மூன்றாவது அணி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால் அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அதேபோல இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது நாட்டை பாதிக்கும் விஷயங்கள் மாற்றப்படும்.

ஸ்விட்சர்லாந்து வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளிக் கொணர காங்கிரஸ் அரசு முயற்சிக்க வேண்டும். மூன்றாவது அணியில் ஒன்று திரண்டுள்ள கட்சிகள் அனைத்தும் ஒரு பொது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இணைந்துள்ளன. தில்லியில் மாயாவதி ஞாயிற்றுக்கிழமை அளித்த விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்றாலும், விருந்தில் பேசப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளில் அவருக்கு முழு உடன்பாடு உள்ளது.

மதச்சார்பின்மையைக் காப்பது, கட்டுப்படுத்தப்பட்ட தாராளமயம், சுயசார்புடனான வெளியுறவுக் கொள்கை ஆகியன மூன்றாவது அணி ஏற்றுக் கொண்ட முக்கியமான கொள்கைகளாகும்.

குறைந்தபட்ச செயல்திட்டத்தை அமல்படுத்தும் ஒரு அணியாக மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தபோதிலும், தொடர்ந்து எதிர்ப்பையும் மீறி பணக்காரர்களுக்கு சாதகமான கொள்கைகளையே மன்மோகன் சிங் செயல்படுத்தினார் என்று கடுமையாக சாடினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகிவிட்டனர். குறைந்தபட்ச செயல்திட்டத்திலிருந்து விலகியதே இதற்குக் காரணம். நாட்டில் ஏழை, பணக்காரர்களிடையிலான இடைவெளி அதிகரித்ததற்கு மன்மோகன் சிங் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணமாகும்.

இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால்தான் தனியார் வங்கிகளின் முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தாமல் விட்டனர். அதேபோல காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்துவது தடுக்கப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே தேர்தலை சந்திப்பது புதிய விஷயமல்ல. இந்த முடிவை கடந்த செப்டம்பரிலேயே மாயாவதி கூறிவிட்டார். மூன்றாவது அணியில் உள்ள கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கூட்டு சேருமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் காரத்.

சந்தர்ப்ப வசத்தால் பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருந்த தெலுங்கு தேசம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முந்தைய கூட்டணியிலிருந்து பாடம் கற்றுவிட்டன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நிச்சயம் இருக்கும்.

ஜார்க்கண்ட் விகாஸ் மஞ்ச் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் தற்போது மூன்றாவது அணியில் இணைந்துள்ளது மேலும் வலுசேர்த்துள்ளது என்றார் காரத்.

பொது விநியோகத் திட்டம் நாடு முழுவதும் ஒரே சீராக அமல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படும். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைவது தடுக்கப்படும். காப்பீட்டுத் துறை தனியார் மயமாகாது. ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். தேர்தலுக்கு தனி நிதியம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நிதி அளிப்பது தடுத்து நிறுத்தப்படும். ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Posted in Economy, India, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 1 Comment »

PMK Alliance: Anbumani Ramdoss DMK Affiliation vs ADMK Victory Calculations

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2009

திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதி கேட்கிறது பாமக?

மறுவரையறை தொகுதிகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள்திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமக கூடுதல் தொகுதி கேட்டு வருவதாகத் தெரிகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. இதில்

  • திமுக-16,
  • காங்கிரஸ்-10,
  • பாமக-6,
  • மதிமுக-4,
  • இரு கம்யூனிஸ்டுகள்-4

என்ற ரீதியில் தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டன.

பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது திமுக கூட்டணியில் இருந்த மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது அக் கூட்டணியில் இல்லை. அக் கட்சிகளுக்கு வழங்கிய 8 தொகுதிகள் திமுக கூட்டணியில் கூடுதலாக உள்ளன.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் பாமகவிடம் கூட்டணி குறித்து பேசியுள்ளனர். அவர்களிடம் கூடுதலாக உள்ள எட்டு தொகுதியில் இருந்து தங்களுக்கு இரு தொகுதிகளை வழங்க வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் 7 நாடாளுமன்றத் தொகுதி, ஒரு மாநிலங்களவைத் உறுப்பினர் பதவியாவது வழங்க வேண்டும் என்று பாமக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரங்களை கேட்டபோது தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கும் இம் முறை தொகுதி ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பாமக கூடுதல் தொகுதி ஒதுக்கக் கோருவது குறித்து உடனடியாக பதில் அளிக்கப்படவில்லை என்றனர்.

இச் சூழ்நிலையில் திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து பாமக வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வருகிறது. விரும்பிய எண்ணிக்கையில் இடங்கள், விரும்பிய தொகுதிகள் தங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து பாமக பொதுக்குழு கூட்டப்பட்டு உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படலாம் என்கின்றன.

Posted in Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Election 2009 caste vote: Tamilnadu MPs forced to find new constituencies after delimitation

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2009

மறுவரையறை தொகுதிகளால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அரசியல்வாதிகள்

தொகுதி மறுவரையறைப்படி உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதிகளால் அரசியல்வாதிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

வாக்காளர்களின் எண்ணிக்கை சரிசமமாக இருக்கும் வகையில் சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்துள்ளது.

இதனால் இதுவரை இருந்த

  1. செங்கல்பட்டு,
  2. திருப்பத்தூர்,
  3. வந்தவாசி,
  4. திண்டிவனம்,
  5. ராசிபுரம்,
  6. திருச்செங்கோடு,
  7. கோபிசெட்டிபாளையம்,
  8. பழனி,
  9. பெரியகுளம்,
  10. புதுக்கோட்டை,
  11. சிவகாசி,
  12. திருச்செந்தூர்,
  13. நாகர்கோவில்

ஆகிய மக்களவைத் தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. திருவண்ணாமலை,
  4. ஆரணி,
  5. விழுப்புரம்,
  6. கள்ளக்குறிச்சி,
  7. நாமக்கல்,
  8. ஈரோடு,
  9. திருப்பூர்,
  10. தேனி,
  11. விருதுநகர்,
  12. தூத்துக்குடி,
  13. கன்னியாகுமரி

ஆகிய மக்களவைத் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 7 தனித் தொகுதிகளில்

  1. ஸ்ரீபெரும்புதூர்,
  2. பொள்ளாச்சி,
  3. பெரம்பலூர்,
  4. ராசிபுரம்

ஆகிய தொகுதிகளுக்குப் பதிலாக

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. நீலகிரி

ஆகிய தொகுதிகள் புதிதாக தனித் தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

  1. சிதம்பரம்,
  2. நாகை,
  3. தென்காசி

தொகுதிகள் தொடர்ந்து தனித் தொகுதிகளாகவே நீடிக்கின்றன.
இப்படி பல தொகுதிகள் உருமாறியுள்ளதால் தாங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் போட்டியிட முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைப்பதே அரிதாகியுள்ளது.

மத்திய அமைச்சர் ஆ. ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி தற்போது பொதுத் தொகுதியாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். நீலகிரி தனித் தொகுதியானதால் அங்கு 5 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர். பிரபு வேறு தொகுதி தேட வேண்டிய நிலையில் உள்ளார்.

  • மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்ற கோபிசெட்டிப்பாளையம்,
  • வைகோவுக்கு சாதகமான சிவகாசி,
  • முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் செங்கல்பட்டு,
  • பாஜக தலைவர் சு. திருநாவுக்கரசருக்குச் சாதகமான புதுக்கோட்டை

ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இவர்கள் புதிய தொகுதிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாமகவுக்கு சாதகமான

  1. திருவள்ளூர்,
  2. காஞ்சிபுரம்,
  3. விழுப்புரம்,
  4. சிதம்பரம்

ஆகிய தொகுதிகள் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளதால் கூட்டணியில் எந்தத் தொகுதியை கேட்டுப் பெறுவது என்று அக்கட்சி தடுமாற்றத்தில் உள்ளது.
புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிகளால் அரசியல்வாதிகளில் பலர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Posted in Govt, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

கட்டேகி சப்ஜி

Posted by Snapjudge மேல் மார்ச் 12, 2009


ஆர். லக்ஷ்மி,
கொல்கத்தா – 29

கட்டேக்கு தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு – 100 கிராம்
  • பனீர் துருவல் – 75 கிராம்
  • பொடிதாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம்
  • வெண்ணெய் – 25 கிராம்
  • ஓமம், சோம்பு – லீ டீஸ்பூன்,
  • மிளகாய்த்தூள் – லீ டீஸ்பூன்,
  • உப்பு – ருசிக்கு
  • சர்க்கரை – லீ டீஸ்பூன்
  • வறுத்துப் பொடித்த நிலக்கடலை – 2 டீஸ்பூன்

கிரேவிக்கு

  • வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 50 கிராம்
  • கசகசா – 1 டீஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் – லீ கப்
  • இஞ்சி, பச்சை மிளகாய் – சிறிதளவு
  • மிளகாய்த் தூள் – லீ டீஸ்பூன்
  • சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் உப்பு, மஞ்சள் தூள் – தேவைக்கு
  • புளிக்காத கட்டித்தயிர் – லீ கப்
  • கொத்தமல்லித் தழை – சிறிது

செய்முறை:

  1. வெண்ணெயை இளக்கி,
  2. மசாலா சேர்த்து,
  3. வெங்காயத்தைப் போட்டு வதக்கி பின்
  4. கோதுமை மாவைச் சேர்த்து நன்றாகக் கிளறி
  5. ஆற விடவும்.
  6. பின் பனீர்துருவல், கடலைப்பொடி சேர்த்துப் பிசைந்து
  7. சிறு உருண்டைகளாக உருட்டி
  8. ஆவியில் வேக வைக்கவும்.
  9. வெங்காயத்தை ஒரு குச்சியில் செருகி,
  10. இளம் தீயில் பதமாகக் காட்டவும்.
  11. வெந்ததும் தோல் உரித்து,
  12. எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  13. வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளித்து,
  14. அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  15. இரண்டு கப் தண்ணீர் விட்டு,
  16. உப்பு சேர்த்துக்
  17. கொதிக்க விடவும்.
  18. கொதிக்கும் போது, உருண்டைகளை மெள்ள சேர்க்கவும்.
  19. அடுப்பை சிம்மில் வைத்து உருண்டைகள் கலையாமல் மெள்ள கிளறிக் கொடுக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து தயிரைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.

கொத்த மல்லி, கரம் மசாலா தூவி கிளறிப் பரிமாறவும்.

சப்பாத்தி, பூரிக்கு சுவையான சைட் டிஷ்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 12, 2009

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் பத்திரிகையாளரும் பாரதீய ஜனதா எம்.பி.யுமான சந்தன் மித்ரா, புவனேசுவரத்துக்கு அவசரப் பயணம் மேற்கொண்டபோது பாஜக -பிஜு ஜனதாதளம் இடையிலான கூட்டணி முறிந்துபோகும் என்று கனவில்கூட எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்.

ஒரிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி முறிந்தால் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவும். பிஜு ஜனதாதள அரசும் சரியாகச் செயல்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவாக வாய்ப்புள்ளது என்பது தெரியவந்ததால்தான் மித்ரா, புவனேசுவரம் சென்றார்.

இந்த கருத்துக்கணிப்புகளுடன்தான் மித்ரா, முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இருவரும் சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சு நடத்தினர். மித்ரா சொன்ன தகவல்களைக் கேட்ட நவீன் பட்நாயக், பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால் மீண்டும் முதல்வராக முடியாது என்பதை உணர்ந்து கொண்டார்.

மித்ராவை உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்றும் ஒரு நாள் தங்கிச் செல்லுமாறும் பட்நாயக் கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் மித்ரா, பட்நாயக்கை சந்திக்கச் சென்றபோது, “உங்கள் கட்சிக்கு சட்டப்பேரவைக்கு 31 தொகுதிகளும், மக்களவைக்கு 5 தொகுதிகளும்தான் தர முடியும்’ என்று கூறினார் (தற்போது பாஜகவுக்கு 32 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 9 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன).

தற்போது நவீன் பட்நாயக், பாஜகவுக்கு தர முன்வந்துள்ள தொகுதிகளை தேர்தலில் பாஜக கைப்பற்றிவிடுமா என்பதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால், எங்களால் இதுதான் முடியும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார். இந்த முடிவை பாஜக ஏற்றுக்கொள்ளாது என்பதும் அவருக்குத் தெரியும்.

பாஜகவுக்கு 31 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 5 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்க பிஜு ஜனதாதளம் முன்வந்துள்ளதை அக்கட்சித் தலைமை ஏற்க முன்வராவிட்டால் என்ன செய்வது என்று மித்ரா கேட்டதற்கு, இதை ஏற்பதா, நிராகரிப்பதா என்பதை அவர்கள்தான் (பாஜக) முடிவு செய்யவேண்டும் என்று நவீன் தெரிவித்துவிட்டார்.

ஒரிசா மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் உண்மை நிலவரத்தை கணக்குப் போட்டு பார்த்த பின்னர்தான் நவீன் இந்த முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தேர்தல் கூட்டணியை மீண்டும் உறுதி செய்யும் நோக்கில்தான், சந்தன் மித்ரா, பாஜக தலைவர் எல்.கே.அத்வானியின் சிறப்புத் தூதராக புவனேசுவரம் சென்றார். பாஜகவுக்கு தர முன்வந்துள்ள தொகுதிகள் குறித்து, நான் அத்வானியிடம் ஆலோசனை கலந்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும். அதுவரை அவசரப்பட்டு கூட்டணிக்கு எதிரான முடிவு எதையும் எடுக்கவேண்டாம் என்று மித்ரா, நவீன் பட்நாயக்கிடம் கூறியிருந்தார். ஆனால், அதுவரை காத்திருக்க முடியாது என்று கூறி அவர் மறுத்துவிட்டார்.

நவீன் பட்நாயக் இந்த முடிவுக்கு வர பிஜு ஜனதாதளம் கட்சி எம்.பி.யான ஜெய் பாண்டாவும் பிஜு பட்நாயக்கிடம் முன்னர் முதன்மைச் செயலராக இருந்த பி.மோகன் மகாபாத்ராவும்தான் காரணம் என்று பாஜக கருதுகிறது.

கடந்த ஆண்டு கந்தமால் மாவட்டத்தில் வகுப்பு மோதல் நடந்ததிலிருந்தே சங்கப் பரிவாரங்களின் முன்னணி அமைப்பான பாஜக மீது, நவீன்பட்நாயக் அதிருப்தி கொண்டிருந்தார் என்பது வெளிப்படையான விஷயம்.

இப்போது பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதன் மூலம் வரும் தேர்தலில் அவர் “ரிஸ்க்’ எடுக்கத் தயாராகி வருகிறார். இடதுசாரிக் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துகொள்ளவும் அவர் முன்வந்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு தனது கட்சியின் வெற்றியைப் பொருத்து மூன்றாவது அணியுடன் கூட்டு சேரவும் அவர் முற்படலாம். நவீன் பட்நாயக்கின் இந்த திடீர் முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான எல்.கே.அத்வானிக்கு பலத்த அடியாகும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அத்வானியின் கட்சி 138 இடங்களில் வென்றிருந்தது. இந்தத் தேர்தலில் எப்படியும் 180 இடங்களைக் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணியிருந்த பாஜக, இனி அதிக இடங்களை வெல்ல கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளம் கட்சி, ஹரியாணாவில் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் இந்திய தேசிய லோகதளம் கட்சி, அசாமில் அசாம் கணபரிஷத் கட்சி ஆகியவை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிதாக இடம்பெற்றுள்ளன. இருந்தபோதிலும் பிஜு ஜனதாதளத்துடன் கூட்டணி முறிந்தது, அதற்கு பலத்த பின்னடைவாகும்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவும் சிவசேனையும் கூட்டணி வைத்துள்ளன. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக ஆதரவு அளிப்போம் என்று சிவசேனை கூறிவருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானி உள்ளார். எனவே அவரைத்தான் சிவசேனை ஆதரிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டால்தான் பாஜக-சிவசேனை இடையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகாது என்றாலும், அதிக இடங்கள் ஒதுக்கக் கோரி அது பாஜகவை நிர்பந்திக்கலாம். பிகாரில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாஸ்வானின் லோக ஜனசக்தி, காங்கிரஸ் ஆகிய மூன்றும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் நிதீஷ்குமார் கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் கூட்டு சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே வரும் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

2009 தேர்தலில் அத்வானி தவிர, பிரதமராகும் வாய்ப்பு மூன்று பேருக்கு உள்ளது. இதை அந்தந்த அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தால் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வாய்ப்பு உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க முற்பட்டு அதற்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்க முன்வந்தால், மன்மோகன் சிங்கை அவர்கள் பிரதமராக ஏற்க முன்வர மாட்டார்கள். அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்குமாறு சோனியாவை வற்புறுத்தலாம்.

இந்தச் சூழ்நிலையில் சோனியாவுக்கு நம்பகமானவரும், தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான சுஷில் குமார் ஷிண்டே பிரதமராக வாய்ப்பு உள்ளது. பிரணாப் முகர்ஜியோ அல்லது ப.சிதம்பரமோ பிரதமராக வருவதில் சோனியாவுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியுடனும், கர்நாடகத்தில் தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இந்த இரு மாநிலங்களிலும் கூட்டணி ஏற்பட்டால் காங்கிரஸ் தனது வெற்றி எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், தமிழகத்தில் திமுக ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி தொடருமா என்பதை உறுதிபடக் கூறமுடியாது. இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளரை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

கடந்த முறை இடதுசாரிக் கட்சிகள் காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. ஆனால், இந்த முறை காங்கிரஸ், பாஜகவை இடதுசாரிகள் ஆதரிக்கத் தயாராக இல்லை. தங்களுடன் கூட்டணி வைக்காவிட்டாலும் மாயாவதி பிரதமர் ஆவதை அவர்கள் ஆதரிக்கக்கூடும். இவையெல்லாமே மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தது.

மாயாவதி கட்சிக்கு 65 இடங்கள் வரை கிடைத்து, மற்ற பிராந்தியக் கட்சிகள் அவரை ஆதரிக்க முன்வந்து பிரதான கட்சிகளில் ஒன்றும் அவரை ஆதரிக்க முன்வந்தால் மாயாவதி பிரதமராக சாத்தியக் கூறுகள் உள்ளன.

மாயாவதியைப் போலவே பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கக்கூடிய தலைவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார். சிவசேனை கட்சி, பவார் பிரதமர் ஆவதை ஆதரிக்கிறது.

மேலும் சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான அமர்சிங்கும் பவார் பிரதமர் ஆவதை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்.

அரசியல் உலகில் பவாருக்கு நண்பர்கள் பலர் உள்ளனர். கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு பல சமயங்களில் அவர் நிதியுதவி அளித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் தேவ கௌடா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. ஒரிசா மாநிலத்தில்கூட ஒன்று அல்லது இரு இடங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிட தொகுதி ஒதுக்கீடு செய்ய பிஜு ஜனதாதளத்தின் நவீன் பட்நாயக் முன்வந்துள்ளார்.

ஒரிசாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் மூன்றாவது அணிக்கு ஆறுதலாக இருக்கும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த இடங்களைவிட குறைவான இடங்களே இந்தத் தேர்தலில் கிடைக்கும். அதாவது 15-வது மக்களவையும் தொங்கு நாடாளுமன்றமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை சந்தித்த போது, “கூட்டணி அமைப்பதற்கு நான் எதிரானவன். இது எனது தனிப்பட்ட கருத்து’ என்று கூறினார். ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டுமானால் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டால் 2014 வரை எதிர்க்கட்சி வரிசையில் இருப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், பிறகட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட முக்கிய பங்கு வகிப்பவருமான அந்த மூத்த தலைவர் கூறிய கருத்து எனக்கு வியப்பை அளித்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். இதேபோல ஏழை மக்களின் நலனுக்காக தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவந்து செயல்படுத்தியதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழை மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. ஆனால், காங்கிரஸ் தனது சாதனைகளை தொண்டர்கள் மூலம் அனைத்து மக்களிடமும் தகுந்த நேரத்தில் விளம்பரப்படுத்தத் தவறிவிட்டது.

மக்களவைக்குத் தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இப்போது செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறிவருகிறது.

வாசகர்களில் ஒருசிலர் காங்கிரஸ் அரசின் சாதனைகளைப் படித்து மகிழ்வார்கள். ஆனால், பொருளாதாரச் சரிவு, நிதி நெருக்கடி இருக்கும் நேரத்தில் இதுபோன்று மக்கள் பணத்தை வீணடிக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

மீண்டும் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கூறிய கருத்துக்கு வருவோம். பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதைவிட தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதே மேல் என்பது அவரது கருத்து.

நாட்டில் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ், எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் பரவாயில்லை என்று தேர்தல் சமயத்தில் முடிவுக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல.

சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது சில மாதங்களுக்கு முன்னரோ தொடங்கப்பட்ட கட்சியைப் பற்றி நாம் இப்போது பேசவில்லை. காங்கிரஸ் நீண்டகாலமாக இருந்துவரும் கட்சி. அதன் வலிமை அனைவருக்கும் தெரியும். எனவே புதிய கட்சியாக இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கட்டும் என்று காத்திருக்கலாம்.

பஞ்சமர்ஹி முதல் சிம்லா வரையில் நடைபெற்ற பல்வேறு கட்சி மாநாடுகளில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி, அது செயல்படும் முறை, தேர்தல் உத்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே மேல் என்று ஒரு காலத்தில் கூறிவந்த காங்கிரஸ், இப்போது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? எந்த ஒரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு முன் உள்ள முதல் சவால், தேர்தலில் அதிக இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக வருவது யார் என்பதுதான். அப்படியொரு நிலை காங்கிரஸýக்கோ அல்லது பாஜகவுக்கோ ஏற்பட்டால், ஆட்சியமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பார். அதன் பின் ஆட்சியமைப்பதற்கு பிராந்தியக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது முடிவு செய்யப்படும்.

தேர்தலுக்கு முன் கூட்டணி ஏற்பட்டாலும், தேர்தலுக்குப் பின் அணி மாறும் வாய்ப்பு உள்ளது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுமே உணர்ந்துகொண்டுள்ளன.

காங்கிரஸ், பாஜக போன்ற பெரிய கட்சிகள் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைத்துக் கொள்வதே தங்களின் வெற்றி எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வதற்குத்தான். இது அனைவரும் அறிந்த உண்மை.

பாஜக ஏற்கெனவே தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கெனவே அகாலிதளம், சிவசேனை, பிஜு ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவை தவிர இந்திய தேசிய லோக தளம் (ஹரியாணா), அசாம் கணபரிஷத் (அசாம்) ஆகியவையும் இக் கூட்டணியில் சேர்ந்துள்ளன.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியிலிருந்து அஇஅதிமுக, தெலுங்கு தேசம் கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை வெளியேறிவிட்டன.

அஇஅதிமுகவும், தெலுங்கு தேசம் கட்சியும் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளன. காங்கிரஸýடன் தேர்தல் கூட்டுக்குத் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தேர்தல் கூட்டணியைப் பொருத்தவரை பாஜகவைவிட காங்கிரஸ் வலுவானதாக உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுகவும், பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளமும், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளன.

இது தவிர மேலும் மூன்று மாநிலங்களில் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும், கர்நாடகத்தில் தேவகௌட தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடனும், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியுடனும் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முயன்று வருகிறது.

பிகாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தை சமாளிக்கும் வகையில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய மூன்றும் கூட்டணி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியும், திரிணமூல் காங்கிரஸýம் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளன. அண்மையில் பிரணாப் முகர்ஜி மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் பேசி அக்கட்சியுடன் அவர் தேர்தல் கூட்டுவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பார். இந்த விஷயத்தில் அவர் சோனியாவின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்.

2008-ல் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலை கணக்கிட்டுப் பார்த்தால் சில விஷயங்கள் புரியவரும். அங்கு மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 12 இடங்களில் வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதேபோல காங்கிரஸ் 3 அல்லது 4 இடங்களில் வெற்றிபெறக்கூடும்.

காங்கிரஸýடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வது தனது கட்சிக்கு நலன் பயக்கும் என்பதை மம்தா பானர்ஜி நன்கு உணர்ந்து கொண்டுள்ளார். ஏன் தான் போட்டியிடும் தெற்கு கோல்கத்தா தொகுதியில் வெற்றிபெற காங்கிரஸ் உதவிகரமாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.

கர்நாடக மாநிலத்தில் 2008-ல் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அங்கு பாஜக ஆட்சியமைத்துள்ள போதிலும் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் அதிகமானதாகும். அங்கு காங்கிரஸ் 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 10 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 4 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அதிக இடங்களை வெல்லக்கூடும்.

மேலும் இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பாஜகவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும். அங்கு பாஜக இப்போது ஆட்சியில் இருந்தாலும் 2004-ம் ஆண்டு தேர்தலில் வென்ற 18 இடங்களை அது தக்கவைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

ஹிந்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி எப்படியும் 45 முதல் 50 இடங்களை வென்றுவிடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

காங்கிரஸ் கட்சியும், முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மாயாவதி கட்சிக்கு 30 இடங்களுக்கு மேல் கிடைக்காது.

சமாஜவாதியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் தங்களுக்கு 25 இடங்களாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. தேர்தல் கூட்டு பற்றி இரு கட்சிகளும் தலைவர்களும் அடிக்கடி பேசி வருகிறார்களே தவிர இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. உ.பி. மாநில அரசியல் நிலவரத்தைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் முடிவு செய்வது நல்லது.

மேற்குறிப்பிட்ட நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் பிராந்தியக் கட்சிகள் தேர்தல் கூட்டு ஏற்படுத்திக் கொண்டாலும் அதனால் அதிக பலன் அடையப் போவது பிராந்தியக் கட்சிகள்தான். ஆனால், அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் தனது எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பது வெளிப்படையான உண்மை.

இந்த கூட்டணி மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தால்கூட அது அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக உருவாகி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சி இப்போதே தன்னை “பெரியண்ணன்’ போல் நினைத்துக் கொண்டு செயல்படுகிறது. அதாவது இன்னும் சொல்லப்போனால், 2004-ம் ஆண்டு தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது’ என்று பாஜக அதீதமாக செயல்பட்டதைப் போல காங்கிரஸ் நிலை உள்ளது. காங்கிரஸ் தனது நிலையை உணர்ந்து தேர்தல் கூட்டணி அமைத்துச் செயல்பட்டால் அது வெற்றிக்கு வலுசேர்க்கும். இதை காங்கிரஸôர் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | 1 Comment »

Tirupur or Namakkal: EVKS Ilangovan

Posted by Snapjudge மேல் மார்ச் 11, 2009

“பனியன்’ நகரில் களமிறங்குகிறார் ஜவுளி அமைச்சர்?

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் தொகுதியில், மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

ஈரோடு மாவட்டத்தின் கோபி மக்களவையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளங்கோவன், மத்திய அமைச்சரவையில் முதலில் வர்த்தக இணை அமைச்சராக இருந்தார். தற்போது ஜவுளித் துறை இணை அமைச்சராக உள்ளார்.

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு கோபி மக்களவையில் இருந்த

  • பெருந்துறை,
  • பவானி,
  • அந்தியூர்,
  • கோபிசெட்டிப்பாளையம்,
  • திருப்பூர் வடக்கு,
  • திருப்பூர் தெற்கு

பேரவைத் தொகுதிகளை இணைத்து புதிதாக திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த கோபி தொகுதியில் அதிமுக 7 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளன.

காங்கிரஸýடன் முதல் முறையாக எம்ஜிஆர் கூட்டணி அமைத்து 1980-ல் மக்களவைத் தேர்தலைச் சந்தித்தபோது தமிழகத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே இந்த அணி வெற்றி பெற்றது. அப்போது கோபி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜி.சின்னசாமி வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸýக்கு வலுவான அடித்தளம் உள்ள தொகுதிகளின் பட்டியலில் கோபியும் இருந்து வருகிறது.

2004-ல் அதிமுக வேட்பாளரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வென்றார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்களில் இளங்கோவனும் ஒருவர்.

தொகுதி சீரமைப்பில் கோபி மக்களவை நீக்கப்பட்டுள்ளதால் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய நிலையில் உள்ளார். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வாய்ப்பு இருந்தாலும் அவரது விருப்பம் திருப்பூராகவே உள்ளது. ஈரோடு தொகுதியை திமுக கேட்டு வருவதால், அத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு குறைவு.

முக்கியமாக, திருப்பூரில் இளங்கோவன் போட்டியிட காங்கிரஸýக்குள் எதிர்ப்பு இருக்காது. அதேபோல அதிமுக வாக்கு வங்கி அதிகமாக இருப்பதால், இத்தொகுதியில் போட்டியிட திமுகவும் விரும்பாது.

“திருப்பூர் தொகுதியில் இடம்பெற்றுள்ள 6 பேரவைத் தொகுதிகளில் 2 தொகுதி மட்டுமே புதியவை. மற்றவை அவருக்கு வெற்றியை அளித்தவைதான். ஆகவே, திருப்பூரில் போட்டியிடவே விரும்புகிறார்’ என்கின்றனர் இளங்கோவனின் ஆதரவாளர்கள்.

திருப்பூர் மக்களவையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகள் மட்டுமே காங்கிரஸýக்கு வாய்ப்புக் குறைந்தவை. இருப்பினும் பிற 4 தொகுதிகளில் காங்கிரஸ், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் இளங்கோவன் இத் தொகுதியை விரும்புவதாகவும் அக் கட்சியினர் கூறுகின்றனர்.

திருப்பூர் தொகுதி கிடைக்காதபட்சத்தில் நாமக்கல்லில் போட்டியிடுவார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Right to Information: State of Tamil Nadu remains Closed

Posted by Snapjudge மேல் மார்ச் 11, 2009

வெளிப்படைத் தன்மை எங்கே?

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் ஒருமுறை கூட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ் அரசு நிர்வாக நடைமுறை தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் பெறுகின்றனர்.

இந்தச் சட்டத்தின் அமலாக்க மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கம்: இதன்படி தமிழக அரசால் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் 2006 ஜனவரி 12-ம் தேதி தொடங்கப்பட்டு 28-1-2006-முதல் செயல்பட்டு வருகிறது.

3 ஆணையர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஆணையத்தில் பின்னர் மேலும் 4 ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.

மூன்றாண்டுகளில்…:

கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 1.50 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் அடிப்படையில் மக்களுக்கு தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உரிய தகவல்களை மனுதாரர்களுக்கு அளிக்க மறுத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு 300 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன என மாநிலத் தகவல் ஆணையர் ஆர். ரத்தினசாமி அண்மையில் தெரிவித்தார்.

தகவல் அளிக்க மறுத்த 30 அதிகாரிகளுக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டாலும், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாரும் அபராதத்தைச் செலுத்தவில்லை.

அந்தந்த துறை உயர் அதிகாரிகள் மற்றும் தகவல் ஆணையத்தின் அலட்சியப் போக்கு காரணமாக ஏராளமான அதிகாரிகள் அபராதம் செலுத்தாமல் தப்பித்து வருவதாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆண்டறிக்கை:

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 25 (4) பிரிவின் படி மாநிலத் தகவல் ஆணையம் தனது பணிகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஆண்டறிக்கையாக தொகுத்து சட்டப்பேரவையில் அளிக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை ஒருமுறை கூட ஆண்டறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது என பொள்ளாச்சியில் இருந்து செயல்படும் தாயகம் அமைப்பின் நா. பாஸ்கரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, “ஆண்டறிக்கை இதுவரை சமர்பிக்கப்படவில்லை’ என சட்டப்பேரவை செயலக துணைச் செயலர் 10-10-2007-லும், பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறை இணைச் செயலர் 19-10-2007-லும் பதில் அளித்துள்ளனர்.

கடைசியாக சட்டப்பேரவைச் செயலக இணைச் செயலர் 29-01-2009-ல் அளித்த (எண்: 1822/2009-1) கடிதத்திலும், தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை எங்கே?

இந்த நிலையில், 2006-ம் ஆண்டு முதல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப்பேரவை செயலகம் உள்பட ஒவ்வொருத் துறையும் அளித்த தகவல்கள் குறித்த விவரங்கள் ஆண்டறிக்கைக்காக பெறப்பட்டு வருகிறது என மாநிலத் தகவல் ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.

“அரசுத் துறைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு சட்டத்தை அமலாக்க வேண்டிய ஆணையமே, தனது பணிகளில் வெளிப்படைத் தன்மையை பராமரிக்காமல் உள்ளதற்கு உதாரணமாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது’ என தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Posted in Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

List of fasts by AIADMK leader Jayalalitha Jeyaram

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009

  1. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஜெயலலிதா 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
  2. இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக 1985-ல் செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். அதே பிரச்னைக்கு இப்போதும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
  3. முதல்வராக இருந்தபோது 1994-ல் காவிரி பிரச்னைக்காக மெரினா கடற்கரையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர்கள் வந்து சமாதானம் செய்ததை அடுத்து போராட்டத்தை அவர் விலக்கிக் கொண்டார்.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Nielsen ORG Marg survey gives AP to Congress: Chiru gets only 30-35 seats: Andhra Pradesh Assembly Poll Surveys

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009

ஆந்திர சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கருத்துக்கணிப்பில் தகவல்

நகரி, மார்ச்.10-

ஆந்திர சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்து இருக்கிறது.

ஆந்திர சட்டமன்ற தேர்தல்

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. இந்த தேர்தல் ஏப்ரல் 16, மற்றும் 23-ந் தேதிகளில், இரு கட்டமாக நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி ஏதும் இன்றி தனியாக போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து, ஓரணியாக போட்டியிடுகின்றன.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

கருத்து கணிப்பு

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி நீல்சன் ஓ.ஆர்.ஜி. அமைப்பு, என்.டிவி.யுடன் இணைந்து, மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதன் முடிவுகளை அறிவித்து இருக்கிறது.

அதன்படி, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

காங்கிரசுக்கு 155 இடங்கள்

மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 155 முதல் 169 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 92 முதல் 110 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 30 முதல் 35 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு 4 முதல் 6 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

வட ஆந்திர பகுதியில்

காங்கிரஸ் கட்சிக்கு, வட ஆந்திர பகுதி எனப்படும் கடற்கரை பகுதியில் மட்டும் 77 முதல் 88 தொகுதிகளும், ராயல சீமா பகுதியில் 35 முதல் 41 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராயல சீமா பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 13 முதல் 15 இடங்களும், சிரஞ்சீவியின் கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வட ஆந்திர பகுதியில் தெலுங்கு தேசம் கூட்டணி 20 முல் 24 தொகுதிகளிலும், சிரஞ்சீவியின் கட்சி 21 முதல் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்றும் கருதப்படுகிறது.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

The former chief of the Swadeshi Jagran Manch, Muralidhar Rao appointed adivser to BJP chief Rajnath Singh

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2009

பாஜக தலைவரின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமனம்

புது தில்லி, மார்ச் 9: பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக முரளீதர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் அதீத ஈடுபாடு கொண்ட முரளீதர் ராவ், சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.

ஏற்கெனவே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆலோசகராக பிரபாத் ஜா உள்ளார், அவருடன் இணைந்து முரளீதர் ராவும் ஆலோசகராக செயல்படுவார் என பாஜக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக கடந்த மாதம் சேர்க்கப்பட்ட முரளீதர் ராவ், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்.

மேலும் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மிக நெருங்கிய சகாவாக விளங்கிய சுதன்ஷு மிட்டல், தற்போது பாஜகவின் வடகிழக்கு மாநிலங்களின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்துடன் எஸ்.எஸ். அலுவாலியாவுக்குத் தேவையான உதவிகளையும் இவர் மேற்கொள்வார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் கண பரிஷத் கட்சியுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டுவதில் சுதன்ஷு, மிகச் சிறந்த பணியாற்றியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

Andhra Pradesh Polls: Chiru vs Jeevitha; TRS Rao vs Azhar

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2009

சிரஞ்சீவி Vs ஜீவிதா; ராவ் Vs அசார்!

ஹைதராபாத்:

ஆந்திர சட்டசபைத் தேர்தலில் நடிகர் சிரஞ்சீவியை எதிர்த்து நடிகை ஜீவிதாவையும், மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவை எதிர்த்து அசாருதீனையும் நிறு்த்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இங்கு ஏப்ரல்16,23 தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இம் முறை ஆந்திராவில் 4 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், பாஜக, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

காங்கிரசும், பாஜகவும் அனைத்து தொகுதியிலும் போட்டியிடவுள்ளன. மற்ற கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை.

சிரஞ்சீவி திருப்பதி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவரை எதிர்த்து சினிமாவைச் சேர்ந்த வேட்பாளரையே நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

நடிகர்-இயக்குனர் ராஜசேகரின் மனைவியான நடிகை- இயக்குனர் ஜீவிதாவை காங்கிரஸ் நிறுத்தலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே தெலுங்கு பட உலகில் சிரஞ்சீவிக்கும் ராஜசேகருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. சிரஞ்சீவி அரசியலுக்கு வருவதை ராஜசேகர் கண்டித்தபோது அவரை சிரஞ்சீவி ரசிகர்கள் தாக்கிய சம்பவமும் நடந்தது. இதைடுத்தே காங்கிரசில் இணைந்தார் ராஜசேகர்.

ராவை எதிர்த்து அசார்?:

அதே போல மேடக் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.

இந்தத் தொகுதியில் முஸ்லிம் ஓட்டுக்கள் கணிசமாக உள்ளன. அசாருதீனை நிறுத்தினால் ராவின் வெற்றியை தடுத்துவிடலாம் என காங்கிரஸ் கருதுகிறது.

Posted in India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »