Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூலை 24th, 2007

Saravana Bhawan Rajagopal Annachi vs Jeevajothi saga – Details, History

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

IdlyVadai – இட்லிவடை: ஜீவஜோதி, அண்ணாச்சி ப

சற்றுமுன்…: ஓட்டல் அதிபர் ராஜகோ�: ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு: ஜீவஜோதி கடத்தல் வழக்கு

நாகப்பட்டினம், ஜூலை 7: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்காக ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் நாகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கணவரை இழந்த ஜீவஜோதி, நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 7.7.2003 -ம் தேதி ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் தேத்தாகுடிக்கு வந்து சாந்தகுமார் கொலை வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு ஜீவஜோதியை வற்புறுத்தியுள்ளனர்.

ஜீவஜோதி மறுத்ததால் அவரை கடத்திச் செல்ல முயற்சித்தனர். தடுக்க முற்பட்ட கிராம மக்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டனர். தன்னை கடத்திச் சென்று கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் மனு அளித்தார். கொலைமுயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தங்கராஜ் இந்த வழக்கை கொலைமுயற்சி பிரிவுக்குப் பதிலாக கொலை மிரட்டல் பிரிவாக மாற்றி விசாரணை மேற்கொண்டார்.

இதனை அரசு தரப்பில் ஆட்சேபித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொலைமுயற்சி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் இந்த வழக்கு கடந்த ஏப். 27 -ம் தேதி நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி ரவீந்திரன் உத்தரவின் பேரில் இந்த வழக்கை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சேதுமாதவன் விசாரித்து வருகிறார்.

வரும் 23 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதாகவும் அன்றைய தினத்தில் இருந்து சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் நீதிபதி சேதுமாதவன் அறிவித்தார்.

தினமணி

————————————————————————————————————

ஓட்டல் அதிபர் ராஜகோபால் மீதானகொலை முயற்சி வழக்கில் ஜீவஜோதி `திடீர்’ பல்டி

நாகை, ஜுலை.24-

நாகை மாவட்டம் வேதாரண்யம் தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்தநிலையில் ராஜகோபால் உள்பட 6 பேர் கடந்த 15.7.2003-ம் தேதியன்று தேத்தாகுடியில் தங்கியிருந்த தன்னை கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் போலீசில் அவர் புகார் செய்தார்.

இதன்பேரில் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 2005-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் நடந்தபோது அப்போதைய மாஜிஸ்திரேட்டு கொலை முயற்சி வழக்கிற்கு பதிலாக கொலை மிரட்டல் வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக் கப்பட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கொலை முயற்சி வழக்காக நடத்த வேண்டும் என்றும், வேறு கோர்ட்டில் விசாரிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நாகை முதன்மை குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கடந்த 6-ந்தேதி முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜகோபால் உள்பட 6 பேர் மீதும் 7 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஜுலை 23-ந்தேதி 1 முதல் 10 வரையிலான சாட்சிகள் விசாரணை நடக்கும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜராயினர்.

இதேபோல் சாட்சிகளான ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தம்பி ராம்குமார் தந்தை ராமசாமி மற்றும் கோபால்சாமி, தஞ்சை போலீசார் பாலாஜி, மதிவாணன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் ஜீவஜோதியின் மாமா தசமணி ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் தசமணிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ஜீவஜோதி 9 மாத கர்ப்பிணி யாக உள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். அப்போது சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தினத்தன்று என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நாகை மாவட்டத்தில் எந்த போலீஸ் நிலையத்திலும் ராஜகோபால் குறித்து புகார் கொடுக்கவில்லை.

புகார் மனுவில் உள்ள கையெழுத்து என்னுடையது தான். ஆனால் அதில் எழுதி உள்ள வாசகங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கூறினார்.

மேலும் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய ஜீவஜோதி இந்த வழக்கு குறித்து நாங்கள் சமரசமாக பேசி தீர்வு கண்டு கொள்கிறோம் என கூறி மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தார்.

ஆனால் சாட்சி விசாரணை அன்று இதுபோல் மனுதாக்கல் செய்யக்கூடாது எனக்கூறிய மாஜிஸ்திரேட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் ஜீவஜோதி தம்பி ராம்குமார், தந்தை ராமசாமி உள்பட அனைவரும் ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற சாட்சிகள் விசாரணை இன்று நடக்கிறது.

—————————————————————————————————

ஜீவஜோதி கடத்தல் வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் விடுவிப்பு

நாகப்பட்டினம், ஆக. 1: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை, சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு, வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தங்கியிருந்த ஜீவஜோதியின் வீட்டுக்கு ராஜகோபால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் வந்து வற்புறுத்தினர். ஜீவஜோதி மறுக்கவே அவரை கடத்த முயற்சித்தனராம்.

இது தொடர்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளித்தார். இதன்பேரில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், வழக்கறிஞர் ஜி. ராஜேந்திரன், கணேசன் (எ) சகாதேவன், சுப்ரமணியன், கார்த்தீசன், ஸ்ரீநிகநாஜன் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி சேதுமாதவன் தனது தீர்ப்பில், “புகார் கூறிய ஜீவஜோதி மற்றும் அரசுத் தரப்பில் காவல் துறையைத் தவிர அனைத்து சாட்சியங்களும் பிறழ் சாட்சியமளித்ததால் குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாகத் தெரிவித்தார்.

Posted in Annaachi, Annachi, Backgrounders, Biosketch, case, Chain, Developments, Eatery, Faces, Franchise, Franchisee, History, Hotel, Inn, Issues, Jeevajothi, Jeevajothy, Jivajothi, Jivajothy, Judge, Justice, Law, Lawsuit, Order, people, Price, Raajagopal, Rajagopal, Restaurant, Rich, Santhakumar, Saravana, Saravana Bhavan, Saravana Bhawan, Society, Stuff, TN | Leave a Comment »

Cheran praises Mu Ka Azhagiri in Arima Association Meet

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

தொல்லைக்காட்சிகளாக மாறிய தொலைக்காட்சிகள் பார்க்கும் ஆர்வம் குறைவதாக டைரக்டர் சேரன் வருத்தம்

மதுரை, ஜுலை.24- தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக இருப்பதால் அவற்றை பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று சினிமா டைரக்டர் சேரன் கூறினார்.

அரிமா சங்க விழா

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அரிமா மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும், அரிமா சங்க பொன்விழாவும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடந்தது.இந்தவிழாவில், முன்னாள் பண்பாட்டு இயக்குனர் கோவை ராமசாமி கலந்து கொண்டு மதுரை மாவட்ட அரிமா கவர்னர் டி.பாண்டியராஜன் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் சினிமா டைரக்டர் சேரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனப்போராட்டம்

இன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. செல்போன்களாலும், தொலைக்காட்சிகளாலும், மனப்போராட்டம், கோபம் போன்றவை ஏற்படுகிறது.இப்போது டி.வி. பார்க்க கூட மக்களுக்கு ஆர்வம் இல்லை. அது தொல்லைக்காட்சியாக இருப்பதால் ஆர்வம் குறைந்துவருகிறது.

நல்ல சினிமா படங்கள் எடுத்தால் சில நேரங்களில் ஓடுவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எப்படியோ ஓடின.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் சமூக சேவைதான் நிம்மதியை தருகிறது. நாம் ஒதுக்கப்படும்போது சமூகத்தில் நம்மை அடையாளம் காட்ட தேவைப்படுவது தொண்டு தான். இதனால் பலன் பெற்றவர்கள் நம்மை மதிக்கும்போது எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளை பெற்றது போன்ற மனபூரிப்பு ஏற்படுகிறது.

நான் டைரக்டு செய்த மாயக்கண்ணாடி படத்தின் கதாநாயகன் தோல்வியை மட்டுமே தழுவி வருவார். ஒருமுறை தனக்கு எந்த மாதிரியான திறமை உள்ளது என்று உணர்ந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார்.

வாழ்க்கையே பாடம்

நமக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது தொண்டு தான். காதல் இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழ முடியாது. எனவே தோழமை மிகவும் அவசியம். நான் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். ஆனால் அந்த இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆகியது. பல தியாகங்கள் செய்த பின்னர் தான் லட்சியத்தை அடைய முடிந்தது.

சேவை செய்ததன் மூலம் பெரிய மனிதர்களாகியவர்கள் தான் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். எனவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேவை செய்து நட்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய மனப்பான்மையை பெறவேண்டும்.

பட்டறிவு தான் ஒரு மனிதனுக்கு நல்ல பாடமாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்களுக்கு பாடமாகும். நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சேரன் பேசினார்.

விழாவில், குழு தலைவர் சங்கரலிங்கம், இணைத்தலைவர் ரவிச்சந்திரன், பன்னாட்டு இயக்குனர் நாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி சோமசுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


:: Paraparapu Tamil Daily News :: – Connecting People Across the Web: “வைகோ ‘டூ’ அழகிரி- சேரன் அடித்த செம ‘பல்டி’!

முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வானுயர வாழ்த்திப் பேசிய இயக்குநர் சேரன், மதுரையில் நடந்த விழாவில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியை ‘வாய்க்கு வாய்’ அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிரசாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தபோது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேரன், வைகோவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இந் நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மு.க.அழகிரியை பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை அரிமா சங்க அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மு.க.அழகிரி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன்,

தொண்டுகள் மூலம் சாதனை செய்த மனிதர்கள் தான் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். யாரும் எடுத்த எடுப்பில் உயர முடியாது. படிப்படியாகத்தான் உயர முடியும். ஒரு மனிதன் வாழ்வில் உயர லட்சியம், தோழமை வேண்டும். காதல் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழவே முடியாது. பிறருக்கு சேவை செய்வதன் மூலமே நமது வாழ்க்கை உயரும். அஞ்சா நெஞ்சன் என்றால் அது ஒருவருக்குத்தான் பொருந்தும். அஞ்சாத உள்ளம், உள்ள உணர்வுடன் பிறருக்கு உதவக் கூடிய ஒருவரைத்தான் அஞ்சா நெஞ்சன் என்கிறோம்.

வெற்றிக்கு இலக்கணமாக நமது அஞ்சா நெஞ்சன் திகழ்கிறார். வார்த்தையால் பேசுவதை விட செயல்களில் காட்டி வருகிறார். அவரைப் போல அனைவரும் வெற்றி பெற வேண்டும். மாயக்கண்ணாடியாக இல்லாமல், மக்கள் முன் உண்மைக் கண்ணாடியாக உள்ளார் அஞ்சா நெஞ்சன் என்று சேரன் கூறிக் கொண்டே போக அழகிரியே ஒரு கட்டத்தில் நெளிந்துவிட்டார். வைகோவின் தீவிர பக்தராக அறியப்பட்டவரான சேரன், தடாலடியாக அழகிரியை வாய்க்கு வாய் புகழ்ந்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Alagiri, Alakiri, Arima, Attend, Attendance, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Cheran, Cinema, Films, Function, Gossip, Kisukisu, Madurai, Mayakannaadi, Mayakannadi, Mayakkannaadi, Mayakkannadi, MDMK, Meet, Meeting, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, Movies, MuKa Alagiri, Party, Politics, Rumor, Rumour, Seran, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Meet, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Pictures, Tamil Theater, Tamil Theatres, Vambu, Vampu | Leave a Comment »