Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Story’ Category

Book reading habits for Kids – Children, Literature, Knowledge, Entertainment

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்

தஞ்சாவூர்க்கவிராயர்

புத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்லுகிறோம்.

புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்கிறார் ஒரு புதுக்கவிஞர்.

குழந்தைகள் படிக்கிற புத்தகங்களைப் பார்க்கும்போது அவை எங்கே குழந்தைகளைக் கிழித்து விடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது.

மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன.

குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்கு மேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம். இது தவறு. குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள்.

குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. இன்னும் களங்கப்படாத மனசு அல்லவா குழந்தைகள் மனசு?

குழந்தைகள் பார்வையில் தென்படும் உலகம் குற்றமற்றது. அழகு நிரம்பியது. அதனால்தான் குழந்தை எதைப் பார்த்தாலும் சிரிக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும். “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…’ அப்படியே ஒரு குழந்தை எழுதிய மாதிரியே அல்லவா இருக்கிறது.

குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழதாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.

நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள் மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!

சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விட வேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றும் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மேசைமீது ஒரு காமிக்ஸ் புத்தகம் இருந்தது. “பையனுக்கா?’ என்றேன்.

“எனக்குத்தான்’ என்றார் சிரித்தபடி.

“அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட நான் காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிப்பேன்’ என்றார்.

குழந்தை வளர வளர குழந்தமை தொலைந்து போகிறது. “இன்னும் என்ன குழந்தையா நீ?’ என்று கேட்டு கொஞ்சநஞ்சம் பாக்கியிருக்கும் குழந்தை மனத்தையும் கருகச் செய்து விடுகிறோம்.

குழந்தையின் கேள்விகள் அற்புதமானவை. அவற்றுக்குப் பதில் சொல்லும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம்.

புகைவண்டிப் பயணத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் குழந்தையை “சும்மா இரு, சும்மா இரு’ என்று அதட்டிக் கொண்டே வந்தார்.

“குழந்தை பாவம். என்ன வேண்டுமாம்?’ என்று கேட்டேன்.

“என்னவோ அசட்டுத்தனமாக தொணதொணக்கிறான். எரிச்சலாக வருகிறது’ என்றார்.

அவனை என் அருகே அழைத்து, “சொல்லு, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.

“மாமா, ரயில் என்ன சாப்பிடும்?’ என்று கேட்டான்.

இதுவா அசட்டுத்தனமான கேள்வி? அழகான கவிதை அல்லவா இது? ரயிலுக்கு உயிர் உண்டு. அதுவும் மனிதர்களைப் போலவே நகர்கிறது. மூச்சு விடுகிறது. கத்துகிறது என்பதால்தானே இந்தக் கேள்வியை குழந்தை கேட்கிறது?

நாம்தான் குழந்தைகளை உதாசீனப்படுத்துகிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பெரிய மனிதர்களாகவே நடத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:

லண்டனில் ஒரு குழந்தைகள் பூங்கா. அங்கே வாத்துகளோடு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் விரலை ஒரு வாத்து கடித்துவிட்டது. காயம் ஒன்றும் பலமில்லை. பூங்கா நிர்வாகமே குழந்தையின் விரலுக்கு மருந்து போட்டுவிட்டது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே இருந்த வாத்துகள் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மகாராணியாரின் பெயரில் உள்ள கருணை நிதியிலிருந்து பராமரிக்கப்படுவதாக ஒரு குறிப்பு இருந்தது.

குழந்தை உடனே இங்கிலாந்து மகாராணியாருக்கு ஒரு கடிதம் எழுதியது: “நீங்கள் வளர்க்கிற வாத்து என்னைக் கடித்துவிட்டது. விரலில் காயம்’ என்று எழுதியது.

கடிதம் மகாராணியாரின் பார்வைக்குப் போயிற்று. அவர் உடனே பதில் எழுதினார்:

“குழந்தாய்! உன் கடிதம் கிடைத்தது!

நான் வளர்க்கும் வாத்து உன்னை விரலில் கடித்து விட்டதற்காக வருந்துகிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். காயம் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன்.

உன் பிரிமுள்ள,

விக்டோரியா.

நம் நாட்டில் இப்படிப்பட்ட கடிதம் எங்கே போயிருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை அல்லவா?

குழந்தைகளை மதிக்கிற, குழந்தைகளைப் புரிந்துகொள்கிற, குழந்தமையைப் பாதுகாக்கிற பொறுப்புணர்ச்சி சமுதாயம் முழுவதும் உண்டாக வேண்டும். அப்போதுதான் அசலான குழந்தை இலக்கியம் இங்கே சாத்தியப்படும். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட குழந்தை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டுவதில்லை.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாத சமூகம் என்பது தண்ணீரில்லாத நாற்றங்காலுக்குச் சமம்.

பள்ளிக்கூடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்றும் வேலை அங்கே மும்முரமாக நடக்கிறது. குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன.

குழந்தைகளை நூலகங்களில் பார்க்கவே முடிவதில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சியும் கணினி விளையாட்டும் குழந்தைகளை கூடத்தை விட்டு வெளியேறாதபடி கட்டிப் போட்டுவிட்டன.

அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தக அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. புத்தக வாசிப்புக்காக குழந்தைகள் ஏங்குவதையும், தொலைக்காட்சி தோற்றுப் போய்விட்டதையும் காண முடிந்தது.

தஞ்சாவூரில் அனன்யா பதிப்பக அதிபர் அருள் என்பவரும் இரா. சேதுராமனும் சேர்ந்து ஓசைப்படாமல் ஒரு மாபெரும் குழந்தைகள் கதைக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறார்கள்~விழுதுகள் என்ற பெயரில்.

குழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இக் களஞ்சியம் என்பது தான் இதன் சிறப்பு. பாட்டி வடை சுட்ட கதையை ஒரு குழந்தை எப்படிச் சொல்கிறது பாருங்கள்.

“ஒரு ஊரில் காக்கா இருந்தது. அப்போது காக்கா வடை சுட்டது. அந்தக் காக்கா வடை சுட்டு முடித்ததும் காக்காக்கள் பறவைகள் காக்காகிட்ட வந்தது. காக்காவும் பறவையும் சேர்ந்து சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் சேர்ந்து விளையாடின. பிறகு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்தனர். முகம் கழுவினர். எல்லோரும் சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் வீட்டுக்குச் சென்றார்கள்.’

இது மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி எழுதிய கதை. மற்றொரு கதையில் கரடியும் யானையும் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அங்கு விருந்தாளியாக சிங்கம் வருகிறது. ஒரு கதையில் பால் வேண்டும் என்று பூனையிடம் எலி கெஞ்சுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து புறப்பட்டு வரும் புதிய காற்று அப்பப்பா என்ன ஒரு வாசம். எப்பேர்ப்பட்ட கற்பனை.

உலகம் பூராவும் ஹாரிபாட்டரின் கதைப் புத்தகங்கள் பரபரப்பாக விற்கப்பட்டதன் காரணம் என்ன? குழந்தைகளின் மனசைப் புரிந்துகொண்டு எழுதியதுதான் காரணம்!

தமிழ்நாட்டில் வசதி படைத்த குழந்தைகள் மட்டும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிப் படித்து மகிழ்ந்தார்கள். “ஏழைக் குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்?’

இப்போதுதானே அவர்களை ஓட்டல்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் கல்குவாரிகளிடமிருந்தும் மீட்டிருக்கிறோம்? அவர்களின் கைகளிலிருந்து மேசை துடைக்கும் துணியையும், ஸ்பானரையும், பெட்ரோல் பிடிக்கும் குழாய்களையும் அப்புறப்படுத்தி நல்ல புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.

அழகான ஆச்சரியமான புத்தகங்கள்.

குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்!

(இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்)

Posted in Books, Children, Comics, Entertainment, family, Fiction, Habits, Intelligence, Kids, Knowledge, Library, Listen, Literature, publications, Publishers, Read, Story | 1 Comment »

Interview with writer Vennila – Poet, Tamil Kavinjar

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

பேட்டி: பெண் பெயரில் ஆண் எழுதினால் குழப்பம்!

பெயல்

கவிதை, கதையில் அதிக ஆளுமை செலுத்தி வரும் வெண்ணிலா இப்போது இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்.

ஒன்று:

சார்க் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக ஒரிசாவில் சமீபத்தில் கவிதை விழா நடந்தது. அதில் தமிழகத்தின் சார்பில் இருவர் கலந்து கொண்டனர். ஒருவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். மற்றொருவர் வெண்ணிலா. இந்த வாய்ப்பு கிடைத்ததில் அவருக்கு அளவில்லா சந்தோஷம்.

இரண்டு:

“மீதமிருக்கும் சொற்கள்’ என்ற தலைப்பில் வை.மு.கோதை நாயகியம்மாள் முதற்கொண்டு 46 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். பெண் எழுத்தாளர்களின் தொகுப்புகள் பல வெளிவந்திருந்தாலும் இதுபோன்று முழுமையான பெரும் தொகுப்பு வந்ததில்லை. இப் பணிக்காக வெண்ணிலா பெரிதும் இலக்கிய வட்டாரத்தில் பாராட்டு பெறுகிறார்.

இரட்டிப்பு சந்தோஷத்திலிருக்கும் அவரிடம் பேசினோம்.

மீதம் அவரது சொற்களில்:

ஒரிசாவில் நடந்த கவிதை திருவிழாவின் சிறப்பு?

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்த சார்க் கூட்டமைப்பில் இலக்கிய பிரிவு ஒன்றும் உண்டு. இந்த இலக்கியப் பிரிவு சார்பில் மூன்று நாள் கவிதை திருவிழா ஒரிசாவில் நடைபெற்றது. எட்டு நாடுகளில் இருந்தும் 60-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு கவிதைப் படித்தனர்.

தமிழகத்தின் சார்பில் நா.முத்துக்குமாரும், நானும் கலந்துகொண்டு கவிதைப் படித்தோம். “பின் இருக்கை’ என்ற தலைப்பில் கவிதையொன்றை தமிழில் படித்து, அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துப் படித்தேன். என்னுடைய கவிதைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பல்வேறு மொழியினரின், பல்வேறு நாட்டினரின் கவிதைகளைப் பரிமாறிக்கொள்கிற வகையில் இப்படி ஒரு விழா நடத்துவதே சிறப்பான ஒன்று என்று நினைக்கிறேன்.

கவிதைத் திருவிழாவின் மூலம் நீங்கள் கற்றது?

இங்கு கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. இவ்விழாவில் வெறும் கவிதை படிக்கப்பட்டதுடன் ஒரிசா மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. கவிதை பற்றிய கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. இது என்னளவில் பெரிய மனக்குறையாக இருந்தது. கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால்தான் மற்ற மொழியினரின் கவிதைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் ஏற்பட்டிருக்கும். படிக்கப்பட்ட கவிதைகளை வைத்துப் பார்க்கிறபோது நவீன தமிழ் கவிதைகளுக்கு நிகரான கவிதை மற்றமொழி கவிதைகளில் இல்லை என்றே சொல்லலாம். சந்தம் வடிவிலான கவிதைகளையே இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாடுபொருள்கள் எல்லாம் நாம் எப்போதோ பாடியதாக இருக்கிறது. தொலைபேசியைப் பற்றியெல்லாம் நாம் எப்போதோ பாடிவிட்டோம். அவர்கள் இப்போதுதான் பாடுகிறார்கள். சிறப்பு என்று கருதி ஒன்று சொல்லவேண்டும் என்றால் பாகிஸ்தான் கவிஞர்களைச் சொல்லலாம். அவர்கள் “கஜல்’ வடிவிலான கவிதைகளாகப் படித்தார்கள். யுத்தத்தைப் பற்றிய கருப்பொருளாக இல்லாமல் மண் சார்ந்த கவிதைகளாக இருந்தது சிறப்பு.

“மீதமிருக்கும் சொற்கள்’ தொகுப்பை எத்தனை ஆண்டுகளாகத் தொகுத்தீர்கள்?

“கனவுப்பட்டறை’ சார்பாகத்தான் பெண்ணிய சிறுகதைகளைத் தொகுக்கிற பணியைத் தொடங்கினேன். கடைசியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்தான் இப்புத்தகத்தைக் கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்தத் தொகுப்பிற்காகச் செலவிட்டிருக்கிறேன். அசோமித்திரன், கந்தசாமி போன்ற பலர் பெண்ணியச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். அந்தத் தொகுப்புகள் எல்லாம் அவரவர் விருப்பங்களுக்கு உட்பட்ட கதைகளாகவே இருந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பில் அப்படியில்லை. வரலாற்று ஆவணமாகத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டுத் தேடித் தொகுத்திருக்கிறேன். அதைப்போலவே வந்திருக்கிறது. மொத்தம் எழுபது பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்தோம். இதில் 45 பெண் எழுத்தாளர்களின் கதைகள் மட்டும் இடம்பெற்றிருக்கிறது. மற்ற எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெறாததற்கு முக்கிய காரணம் அந்த எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை என்பதுதான். உதாரணமாக எஸ்.ரங்கநாயகி என்கிற பெண் எழுத்தாளர். அவர் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். “கலைமகள்’ அவருடைய நூல்களை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அவரைப் பற்றிய குறிப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்தாளர் அநுத்தமாவைச் சந்தித்துக்கூட கேட்டுப் பார்த்தேன். அவருக்கு விவரம் தெரியவில்லை. இப்படி பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

இத்தொகுப்பைத் தொகுத்ததன் மூலம் தெரிந்துகொண்ட விஷயங்கள்?

புத்தகமே எழுதுகிறளவிற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. 1930 முதல் 2004 வரையில் எழுதிய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தொகுத்திருக்கிறேன். இதில் 60 வரை எழுதிய எழுத்தாளர்களைப் பார்த்தோமானால், எழுதிய எழுத்தாளர்கள் எல்லோருமே மேல்வர்க்கத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களாகவே இருக்கின்றனர். 60-க்குப் பிறகே மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், கிருத்திகா போன்றோர் வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே அதிகளவில் பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டாலும், பெண் விடுதலை பற்றிய எழுத்துகள் அவர்களுடைய எழுத்தில் வெளிப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கணவன்-மனைவி சண்டை போன்ற விஷயங்களைப் பற்றியே கதை எழுதியிருக்கிறார்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய எழுத்துகள் சிலர் சொல்வதுபோல இலக்கியமாகாவிட்டாலும், போற்றிக் கொண்டாட வேண்டிய எழுத்துகள், பெண் விடுதலைக்காக அவர் எழுதத் தொடங்கியதைத் தொடர்ந்தே பலர் எழுதத் தொடங்கினர்.

வை.மு.கோதைநாயகியம்மாள் 115 நாவல்கள் எழுதியிருக்கிறார். எழுத்தை அவர் ஒரு தவமாகக் கொண்டிருந்திருக்கிறார். சுதந்திரப்போராட்டத்துக்காக அவர் சிறையிலிருந்தபோது அவருக்காகக் கொண்டு செல்லப்பட்ட பலகார காகிதங்களில்கூட கதை எழுதி அனுப்பியிருக்கிறார். இதைப்போல குகப்பிரியை, குமுதினி போன்றோர் எழுத்தை நேசித்ததைப் கேட்கிறபோது நமக்கு பிரமிப்பைத் தருகிறது.

இதைப்போல மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவல் எம்.எஸ்.கமலாவைப் பற்றியது. இவர் ஒரு சோவியத் மாணவி என்றும், முற்போக்கான கட்டுரைகள் எழுதக்கூடியவர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்படி கமலா எழுதிய கதைகளைத் தேடிப் படித்துப் பார்த்தால் எல்லாமே குடும்பப் பாங்கான கதைகளாகவே இருந்தன. பிறகுதான் எம்.எஸ்.கமலா என்ற பெயரில் இருவர் இருந்தது தெரிய வந்தது.

பெயர் குழப்பத்தில் நான் சந்தித்த இன்னொரு சுவாரஸ்யமான அனுபவம், பெண்களின் பெயரில் பல ஆண்கள் எழுதியிருக்கிறார்கள். அது தெரியாமல் நாங்கள் ஆண்கள் எழுதிய கதைகளையும் தேர்வு செய்துவிட்டோம். எழுத்தாளர் வல்லிக்கண்ணன்தான் எங்களுக்கு இதில் உதவினார். ஆண் எழுத்தாளர்களின் கதைகளை நீக்கிக் கொடுத்தார். பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுகிறபோது வரலாற்றுக் குழப்பங்கள் எதிர்காலத்திலும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இப்போது பெண்கள் அதிகமாக கவிதை எழுத விரும்புவதுபோலத் தெரிகிறதே?

உண்மைதான். இப்போது கவிதை எழுதுகிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். கதை எழுதுகிறபோது அதற்கு ஓர் ஆய்வு தேவை. சிக்கலான மொழி நடையைக் கையாள வேண்டியிருக்கும். கவிதையில் அப்படியில்லை. போகிற வழியிலேயே கரு கிடைக்கும். எளிய யுக்தியில் எழுதிவிட முடியும். இதன் காரணமாக கதை எழுதுகிற பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கலாம். இப்போது எழுதுகிற உமாமகேஸ்வரி, தமயந்தி போன்றவர்கள் கதையில் நல்ல ஆளுமை செலுத்துகிறார்கள்.

– முடிவுறாத சொற்கள் இன்னும் மீதமிருக்கின்றன!

Posted in Authors, Books, Collections, Fiction, Interview, Kavidhai, Kavidhaigal, Kavidhaikal, Kavinjar, Kavithai, Kavithaigal, Kavithaikal, Literature, Orissa, Poems, Poet, SAARC, Story, Vennila, Vennilaa, Writers | Leave a Comment »

Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

முகங்கள்: இரண்டு மடங்கு பணி! நான்கு மடங்கு வேகம்!

அவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.

அவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.

பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.

ஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.

மீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

உங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

இதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்?

சமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.

நமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ?

உங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே?

தமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு? ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

கவிதையில் நாட்டம் ஏன்?

ஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.

எனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.

கவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.

மொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.

சிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி?

டெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது?

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.

என்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.

இதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.

படங்கள் : ஏ.எஸ். கணேஷ்

Posted in Anna, Authors, English, Essays, Fiction, Interview, Kamaladas, Kamaladoss, Kandasamy, Kandhasami, Kandhasamy, Kanthasami, Kanthasamy, Kasi Anandhan, Kasi Ananthan, Literature, Meena, Nakkeeran, Nakkiran, Ph.d, Poems, Researchers, Reviews, Story, Tamil Nadu, TamilNadu, Translations, Translators, Writer | Leave a Comment »

Tamil Movies: Screenplay adaptations from Novels & Books

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

பார்வை: ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..!

தமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு.

இந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் தங்கர் பச்சான். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு நாவல் சமீபத்தில் சினிமாவாகி உள்ளது.

தமிழில் சிறப்பாகப் போற்றப்பட்ட பல நாவல்கள் சினிமா ஆகியிருக்கின்றன. பரவலாக ரசிக்கப்பட்ட பல நாவல்கள் சினிமாவாக ரசிக்க முடியாமல் போயிருக்கின்றன. “”1935-ல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “மேனகா’, “திகம்பர சாமியா’ரில் இருந்தே நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.

அகிலனின் “குலமகள் ராதை’, “பாவை விளக்கு’, “கயல்விழி’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.

கல்கியின் “தியாக பூமி’, “கள்வனின் காதலி’, “பார்த்திபன் கனவு’ போன்ற கதைகளும் மக்களால் கதையாகவும் சினிமாவாகவும் வரவேற்கப்பட்டன.

கொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்’, நாமக்கல் கவிஞரின் “மலைக்கள்ளன்’ ஆகியவை நாவலைவிடவும் பெரிய அளவில் சினிமாவாகச் சிலாகிக்கப்பட்டவை” என்கிறார் சினிமா விமர்சகரும் திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு. துளசி பழனிவேல்.

“”மக்களுக்குச் சினிமா பொழுது போக்கு அம்சமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. காமெடியும், அடிதடியும், கண்ணீரும் அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலர் ஃபுல்லாக வழங்கப்பட வேண்டும். ஆனால் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. கதையுலகில் ஆராதிக்கப்படும் ஆயிரம் பக்க “அன்னா கரீனி’னாவையும் “மோகமுள்’ளையும் சினிமாவாக்கும் போது இது இன்னும் பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பிக்கிறது” என்கிறார் ஓர் உதவி இயக்குநர்.

சுஜாதாவின் “காயத்ரி’, “கரையெல்லாம் செண்பகப் பூ’, “இது எப்படி இருக்கு’ நாவல்களுக்குக் கிடைக்காத வரவேற்பு, மகரிஷியின் “புவனா ஒரு கேள்விக்குறி’, “பத்ரகாளி’ படங்களுக்குக் கிடைத்தது.

வாசக வெற்றி திரைப்பட வெற்றிக்குப் போதுமானதாக இல்லாத நிலை இது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, படமானபோது அது பரவலாக வரவேற்கப்படவில்லை.

மகேந்திரன் சில படங்களே இயக்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாவல்களே. திறமையான கலைஞர்களால் கதைகளை அதன் சாராம்சம் கெடாமல் திரைப்படங்களாக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.

  • உமா சந்திரனின் “முள்ளும் மலரும்’,
  • புதுமைப்பித்தனின் “சிற்றன்னை’யைத் தழுவி எடுத்த “உதிரிப் பூக்கள்’,
  • பொன்னீலனின் “பூட்டாத பூட்டுகள்’,
  • சிவசங்கரியின் “நண்டு’ போன்ற நாவல்களைப் படமாக்கியிருக்கிறார் மகேந்திரன்.

“”இருந்தாலும் சினிமா இயக்குநர்கள் அவர்கள் நேசித்து உருவாக்கிய கதையை உரசிப்பார்த்துக் கொள்ளவும் சரி பண்ணிக் கொள்ளவும்தான் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற பல எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது” என்கிறார் பழனிவேல்.

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சாதாரணமாக ஒரு பிரயோகம் உண்டு. சினிமா வேறு; நாவல் வேறு என்பதும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.

Posted in Agilan, Akilan, Anna, Annadurai, Authors, Books, Cinema, dialogues, Directors, Fiction, Films, Kalki, Kothamangalam, Kothamangalam Subbu, Kothamankalam, Kothamankalam Subbu, Literature, Magarishi, Magendhiran, Magendhran, Magenthiran, Maharishi, Mahendhiran, Mahendran, Mahenthiran, Mahenthran, Movies, Novels, Ponneelan, Pudhumai Pithan, Pudhumaipithan, Puthumai Pithan, Puthumaipithan, Screenplay, Sivasankari, Sivashankari, Story, Subbu, Sujatha, Uma Chandhran, Uma Chandran, Uma Chanthiran, Uma Chanthran, Writers | Leave a Comment »

Kalki Rajendran on Kalki’s Ponniyin Selvan

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

கல்கியின் சிரசாசனம்
சேந்தன் அமுதனுக்கு சிம்மாசனம்
– கல்கி இராஜேந்திரன்

கல்கி குடும்பத்தின் நலனில் அக்கறை உடைய நெருங்கிய நண்பர் ஒருவர், சென்ற இதழில் வெளியான கட்டுரையைப் படித்து விட்டு (நாவல் பிறந்த கதை) போன் செய்தார்.

“கல்கி சக எழுத்தாளர் ஒருவரின் நாவலைக் குறை வாக மதிப்பிட்டு அலட்சிய மாகப் பேசியதாக எழுதி யிருக்கிறாய். உன் சகோதரி ஆனந்தி, பதிலுக்கு, கல்கி அவர்களின் சிவகாமியின் சபதத்தையே குறைத்து மதிப்பிட்டது போலவும் எழுதியிருக்கிறாய். இதெல் லாம் எனக்கு ஒப்புதலாய் இல்லை’ என்று கருத்து தெரிவித்தார்.

சொன்னவர், கல்கி அவர்களை நன்கு அறிந்தவர். எனவே என் எழுத்தில்தான் ஏதோ குறை இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரைப் போலவே வேறு பலரும் நினைக்கக்கூடும். ‘இதனால் அறியப்படுவது யாதெனில்’ என்று உணர்த்துவதுபோல எழுதுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் சில சமயம் அது அவசியமாகிறது என்று உணர்கிறேன்.

கல்கி அவர்கள் சக எழுத்தாளரை மதிக்காமலில்லை. அப்படி இருந்தால் அவருடைய நாவலைப் படித்தே இருக்க மாட்டார். சிலரது எழுத்தை மதிக்கா விட்டாலும் எழுதியவரை மதிப்பவர் கல்கி. ஆனந்தியிடம் அவர் பேசியது ஒரு வாதத்தைக் கிளறுவதற்காகத்தானே தவிர, சக எழுத்தாளரைக் குறைத்து மதிப்பிடு வதற்காக அல்ல. அதேபோல சகோதாரி அவருக்குப் பதிலளித்தது, எங்களுக்கு அப்பா அளித்திருந்த சுதந்திரத்தின் வெளிப் பாடுதானே தவிர, அவளுடைய அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. சிவகாமியின் சபதத் துக்கு சிறப்பாயிரம் எழுதக் கூடியவள் ஆனந்தி. விஷயம் என்னவென்றால், கல்கி அவர்களுக்கு விவாதங்களில் நம்பிக்கைஉண்டு. கலந்துரையாடலும் அதில் இடம் பெறக்கூடிய வாதப் பிரதிவாதங்களும், தயிரைக் கடைந்தால் வெண்ணெய் திரள் வதுபோலத் தெளிவை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவர். ராஜாஜியுடன் அரசியலை விவாதிப்பார்; டி.கே.சி.யுடன் இலக்கியக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக் கும். ஒரு பொருளாதார விஷயம் பற்றி எழுத வேண்டுமென்றால் அது குறித்த விஷயஞானமுள்ளவரிடம் பேசுவார்; விவாதிப்பார். தொடர்கதை எழுதுமுன்னர் என்னிடமும் சகோதரியிடமும் கதை சொல்லுவார். எங்கள் முக பாவங்களை உற்று நோக்குவார். அதன் மூலமே கதை யின் சுவாரஸ்யத்தை எடை போடுவார்.

சிறு வயதிலேயே கதாகாலட்சேபங் கள் பலவற்றைக் கேட்டுக் கேட்டு, கிராமத்தில், வீட்டுத் திண்ணையில் நின்று, ஊர் மக்களுக்குக் கதை சொல்லி மகிழ் வித்தவர் கல்கி. ஆனந்தியும் நானும் குழந்தைகளாக இருந்தபோது, ஊஞ்சலில் அவருக்கு இருபுறமும் அமர்ந்து ராமா யணம், மகாபாரதம் உள்பட பல கதைகள் கேட்போம். கொஞ்சம் எங்களுக்கு வயதான பிறகு, அவர் எழுதப்போகும் தொடர்கதைகளையே பல்வேறு உணர்ச்சி கள் தொனிக்கச் சொல்வார். கேள்விகளை வரவேற்பார். கதை மேலே தொடரும். சில சமயம் ஒரு கேள்வியின் விளைவாக கதையில் ஒரு புதிய சிந்தனை தோன்றும்; திருப்பம் ஏற்படும்.

பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம் எழுதி வருகையில், ஒரு நாள் கல்கி சிரசாசன நிலையில் இருந்தார். நேரம் பார்ப்பது என் வேலை. பாடப் புத்தகமும் கடிகாரமுமாக நான் பக்கத்தில் அமர்ந்திருந் தேன். ஐந்து நிமிஷங்களுக்குப் பதில் மூன்றாவது நிமிஷம் இறங்கிவிட்டார். நான் கவலை அடைந்து, ‘என்ன? என்ன?’ என்று சற்று பதற்றத்துடன் அவரை நெருங்கினேன்.

“ஏண்டா! சேந்தன் அமுதனை சோழ சக்கரவர்த்தியாக்கிவிட்டால் என்ன?’ என்று என்னைக் கேட்டார். சிரசாசன நிலையிலும் அவர் மனம் பொன்னியின் செல்வனில்தான் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட நான், “லாஜிக் சரியாக அமையுமானால் செய்ய லாம்’ என்று சொன்னேன். “ஒரு ண்தணூணீணூடிண்š ணாதீடிண்ணா இருக்கும்.’

அடுத்து, சவாசன நிலையிலும் அவர் உள்ளம் சேந்தன் அமுதனிடம்தான் இருந்தது. பின்னால் அந்தப் புதிய திருப்பத்தை அவர் விவரித்தபோது கவனமாகக் கேட்டு, கேள்விகளையும் எழுப்பினேன். பதில் கூறும்போதே பிசிறுகளை நீக்கி கதை யோட்டத்தைக் கச்சிதப்படுத்தினார்.

என்னைவிடவும் என் சகோதரிக்கு கொஞ்சம் சலுகையும் அதிகம்; துணிவும் மிகுதி. சிவகாமியின் சப தத்தை உள்ளடக்கிய அவளுடைய ஓர் எதிர் வாதத்துக்காக கல்கி கோபமடையவில்லை என்பதுதான் முக்கியம். மாறாக, ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டார். சாதாரணமாக எல்லா நாவல்களிலுமே கதாநாயகன், கதாநாயகி, வில்லன் அல்லது வில்லி என்று கதாபாத்திரங்கள் அமையும். கல்கி இந்த முக்கோணத்தை உடைத் தெறிந்தார் தமது அலை ஓசை நாவலில் (எப்படி என்பதை சென்ற வாரமே விளக்கி யிருக்கிறேன்). இதை அவர் சாதிப்பதற்கு, ‘ராமாயணத்தின் சாயல் சிவகாமியின் சபதத்தில் படிந்திருக்கிறது’ என்று ஆனந்தி கூறியது ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

ஆனந்தி அவர் எழுத்தில் குறை கண்டு விமர்சித்த வேறு தருணங்களும் உண்டு. வந்தியத்தேவன், பல்லக்கில் செல்லும் நந்தினியை முதன் முதலாகச் சந்திக்கும் சாட்சி, அலெக்ஸாண்டர் டூமா எழுதிய த்ரீ மஸ்கிடீர்ஸ் நாவலில் வரும் ஒரு காட்சி போலவே அமைந்திருப்ப தாக அவள் சொன்னதை கல்கி ஒரு தார்மிகத்
துணிவுடன் ஏற்றுக்கொண்டார். “சில சமயம் இப்படித்தான் தவிர்க்க முடியாதபடி பாதிப்பு ஏற்படும்; தொடர்ந்து படித்து வா, அப்புறம் சொல்லு’ என்றார். ஆயிரம் டூமாக்கள் வந்தாலும் நெருங்க முடியாத அளவுக்கு பொன்னியின் செல்வன் தன்னிகரற்ற ஓர் இலக்கியச் செல்வமாகத் தமிழனுக்குக் கிடைத்தது.

1954 தீபாவளி சமயம், உடல் பரிசோதனைகளுக்காக கல்கி, ஜி.ஹெச்.சில் சேர்க்கப்பட்டார். மருத் துவமனையில் இருந்தபடியே தீபாவளி மலருக்காக ‘மயில் விழி மான்’ என்ற கதையை எழுதினார். அதைப் படித்த ஆனந்தி, “கதையெல்லாம் பிரமாதம்தான்; ஆனால், இது என்ன மயில் விழி மான் என்று ஒரு தலைப்பு? நீங்கள் தரக்கூடிய தலைப்பாகவே இல்லை. பகீரதன்தான், ‘தேன்மொழியாள்’, ‘குயில் குரலாள்’ என்றெல்லாம் தலைப்பு தருவார்’ என்றாள்.

கல்கி ‘இடிஇடி’ என்று சிரித்துவிட்டு “அப்படியா! பகீரதன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வதற்குப் பதில் அவனிட மிருந்து நான் கற்றுக்கொள்ள ஆரம் பித்துவிட்டேன் போலிருக்கு!’ என்று கூறி, உடல் உபாதைகளையும் மறந்து மேலும் சிரித்தார்!

Posted in Anandhi, Anandi, Authors, Bageeradhan, Bageerathan, Bagiradhan, Bagirathan, discussion, Faces, Fiction, Kalki, Krishnamoorthy, Krishnamurthy, Literature, Memoirs, Narration, Novels, people, Ponniyin Selvan, Rajendhiran, Rajendiran, Rajendran, Rajenthiran, Story, Vikadan, Vikatan, Writers | Leave a Comment »

Norman Mailer Pulitzer-Winning Author, Dies at 84

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

பிரபல எழுத்தாளர் நார்மன் மெய்லர் காலமானார்

நார்மன் மெய்லர்
நார்மன் மெய்லர்

கடந்த ஐம்பதாண்டுகளில் அமெரிக்க கலாச்சாரத்தில் முக்கியமான நபராக திகழ்ந்த நார்மன் மெய்லர் தனது 84 வது வயதில் காலமாகியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் நார்மன் மெய்லரும் ஒருவர். தன்னுடைய முதலாவது நாவலான ‘தி நேகட் அண்டு தி டெட்’ மூலம் முத்திரையை பதித்தார் நார்மன் மெய்லர். இரண்டாவது உலகப் போரில் தனக்கு கிடைத்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டு நார்மன் மெய்லர் இந்நாவலை உருவாக்கினார்.

நாவல்கள் மட்டுமன்றி, கட்டுரைகள், நாடகங்கள், செய்திகள், திரைப்படம் போன்றவற்றிலும் நார்மன் மெய்லர் நன்கு அறியப்பட்டார்.

அவருக்கு, ‘தி ஆர்மிஸ் ஆஃப் தி நைட்’ மற்றும் ‘தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்’ ஆகிய இரண்டு படைப்புக்காக இருமுறை புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.

இதில் ‘தி எக்ஸிகியூஷனர்ஸ் சாங்’கில் காணப்பட்ட அவருடைய எழுத்து முறை அவருடைய முத்திரையாக பதிந்தது.

அரசியலில் துடிப்புடன் இருந்த நார்மன் மெய்லர் 1960 ஆண்டுகளில் வியட்நாம் போருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.

Posted in America, Author, Bush, dead, Fiction, GWB, Literature, Mailer, Norman, Novels, Prizes, Pulitzer, Story, US, USA, Vietnam, Wars, Writer | 1 Comment »

Interview with Tamil Writer Bharatha Devi – Thamizh Literature: Author Series in Dinamani Kathir

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

முகங்கள்: ஒரே கதையத்தான் டிவி நாடகத்தில் போடுறாங்க!

அவர் படித்தது வெறும் ஐந்தாம் வகுப்பு. ஆனால் அவர் எழுதிய புத்தகங்களை பிஎச்.டி படிப்பிற்காக ஆய்வு செய்கிறார்கள். நான் பதினேழு வயதுவரை மாடுதான் மேய்த்தேன் என்று கபடமில்லாமல் கூறும் அந்த ஒளிவுமறைவற்ற அவரின் தன்மைதான் அவர் எழுத்திலும் வெளிப்படுகிறது.

சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம் என்று எழுத்தின் பல்வேறு தளங்களிலும் செயல்படும் பாரத தேவியின் கதைகள் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

பாசாங்கற்ற இயல்பான கிராமத்து எழுத்துக்குச் சொந்தக்காரரான பாரததேவியிடம் பேசினோம்.

பாரததேவி என்பது உங்கள் புனைப் பெயரா? இல்லை சொந்தப் பெயரே அதுதானா?

நான் காந்தி இறந்த நாள் அன்னைக்கிப் பொறந்தேன். என் சித்தப்பா ராணுவத்திலே மேஜரா இருந்தவர். அப்பா போலீஸ்காரர். அவுக வச்சபேர்தான் பாரததேவி. சொந்தப் பேரே அதுதான்.

கதை எழுதுவதில் ஆர்வம் எப்படி வந்தது?

ராஜபாளையம் சொக்கலிங்கபுரத்தில அஞ்சாவது வரைக்கும் படிச்சேன். அப்பா நான் சின்னப்புள்ளையா இருக்கிறப்பவே இறந்துபோயிட்டார். அதனால சின்ன வயசுல மாடுதான் மேய்ச்சேன். அந்த நேரத்தில நிறையக் கதைகள் கேட்பேன்.

அப்புறம் எனக்கு கல்யாணமாச்சு. நெறையக் கதை புஸ்தகம் படிக்க ஆரம்பிச்சேன். மு.வ. புத்தகங்கள், நா.பார்த்தசாரதி புத்தகங்கள்ன்னு படிச்சேன். அப்பத்தான் கி.ராஜநாராயணனின் “கோபல்ல கிராமத்து மக்கள்’ படிச்சேன். நான் அப்ப எந்த எழுத்தாளரோட புத்தகத்தைப் படிச்சாலும் அவுகளுக்கு லெட்டர் போடுற பழக்கம் வச்சிருந்தேன். கி.ரா.வுக்கும் போட்டேன்.

அதுமட்டுமில்லாம அவர நேரில் பார்க்கிறதுக்காக கோவில்பட்டி பக்கத்திலே இருக்குற அவரு சொந்த ஊரான இடைசெவலுக்குப் போனேன். அவரைப் பார்த்ததுமே எனக்கு அப்பா மாதிரி தோணிருச்சி.

“”நான் அப்பான்னு உங்களைச் சொல்லட்டுமா”ன்னு அவர்ட்ட கேட்டப்ப அவரும் சந்தோஷமா, “”எனக்குப் பொம்பளைப் புள்ள இல்ல. கல்யாணம் முடிச்சி எந்தச் செலவில்லாம பேரனோட எனக்கு மகள் கிடைச்சா எனக்குச் சந்தோஷம்”னார்.

எனக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சு.

நான் அப்பயே ஒன்றிரண்டு கதைங்க எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பிச்சு வச்சிருந்தேன். ஆனா ஒண்ணுல கூட அதப் போடலை. அதைக் கி.ரா.விடம் சொன்னேன். அவரு, “”நீ கதைய எழுதி எனக்கு அனுப்பி வை”ன்னு சொன்னாரு. அப்புறம் நான் ஊர்ப்பக்கத்தில நடந்த கதையை அவருக்கு அனுப்பி வச்சேன். அவரு அதைப் படிச்சிட்டு இது நாட்டுப்புறக் கதையில்ல. நிகழ்வுன்னார். எது நாட்டுப்புறக் கதை, எது நிகழ்வுன்னு எனக்கு அப்பத் தெரியலை.

அதுக்குப் பின்னால என் முதல்கதை “தாமரை’ பத்திரிகையில வந்துச்சு.

புத்தகம் எதுவும் எழுதியிருக்கிறீர்களா?

நானும் அப்பாவும் (கி.ரா) சேர்ந்து 4 புத்தகம் எழுதினோம்.

நான் தனியா எழுதின புத்தகங்களும் வர ஆரம்பிச்சிச்சு. ” பெண்மனம்’ ரெண்டு பாகம், “நாட்டுப் புறத்துப் பெண்கள்’ எல்லாம் வந்துச்சு. தமிழினி பதிப்பகம் “நிலாக்கள் தூரம் தூரமாக’ன்னு ஒரு புத்தகம் போட்டாங்க. அது 320 பக்கம். எனது 10-17 வயசுல கிராமத்திலே நடந்த உண்மைச் சம்பவங்களை அதில எழுதினேன். நான் எழுதின புத்தகம் இதுவரை 6 வந்திருச்சு.

பத்திரிகைகளில் எதுவும் எழுதியிருக்கிறீர்களா?

“கரிசல் காட்டுக் காதல் கதைகள்’னு அவள் விகடன்ல தொடர் வந்துச்சு. அப்ப தினகரன் வசந்தத்துல எஸ்.கே.முருகன் இருந்தாரு. அவரு முயற்சியால அதில “சுமைதாங்கிக் கற்கள்’னு தொடர் வந்துச்சு.

தூரதர்ஷன்ல, ரேடியோவில, “பெண்ணே நீ’ பத்திரிகையில என் பேட்டி வந்துச்சு. சன்டிவி, மக்கள் டிவியிலும் பேட்டி வந்துச்சு.

நான் படிக்கலையே தவிர என் புத்தகத்தை ரெண்டு பேரு பிஎச்.டி பண்றதுக்காக எடுத்திருக்காங்க. அசோக்குமாருன்னு ஒரு தம்பி இதுக்காக என்னை வந்து பார்த்துச்சு.

ஐந்தாவது வகுப்புதான் படித்திருக்கிறீர்கள். இவ்வளவு புத்தகம் எழுதும் அளவுக்கு நீங்கள் முன்னேறியதற்கு என்ன காரணம்?

நான் இந்த அளவுக்கு முன்னேறுனதுக்குக் காரணம், நான் படிக்காமப் போனதுதான். படிச்சிருந்தா ஒரு வேளை டீச்சர் வேலை பார்த்துக்கிட்டு இருந்திருப்பேன். உலகத்துக்கு நான் இருக்கிறது தெரிஞ்சிருக்காது. புத்தகம் எழுதியிருக்கமாட்டேன். படிக்காமப் போனது பெரிய இழப்பு மாதிரி எனக்குப் பட்டுச்சு. அந்த இழப்பை ஈடுகட்டுற மாதிரிதான் கதை எழுதுற முயற்சியில இறங்கியிருக்கேனோன்னு தோணுது.

வேறு துறைகளில் முயற்சி செய்யாமல் கதை எழுதியதற்குக் காரணம்?

அப்ப கிராமத்தில எல்லாருக்கும் கதை சொல்ற பழக்கம், கேக்ற பழக்கம் இருந்துச்சு. எங்க வீட்டுக்காரரோட அக்கா நல்லா கதை சொல்லுவாங்க. எங்க சின்னம்மா கதை சொல்லுவாங்க. களையெடுக்க, கதிரறுக்கப் போறப்ப கதை சொல்லிக்கிட்டே வேலை நடக்கும். கதையைக் கேட்டு வளர்ந்த நான் கதை எழுத இறங்கினது ஆச்சரியம் இல்லை.

இப்போது கதை சொல்லும் பழக்கம் குறைந்துவிட்டதே? இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்தக் காலத்துப் பொம்பளைங்க வேலைங்கள எவ்வளவு சீக்கிரமா முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டு டிவி பார்க்க உக்காந்துடுறாங்க. பிள்ளைகள்ட்ட பேசுறது, அன்பா சாப்பாடு கொடுக்கிறது எல்லாம் கெடையாது.

நான்லாம் பிள்ளைகளோட சேர்ந்து பொழுதக் கழிக்கணும்னு நெனைப்பேன். அப்பத்தான் பிள்ளைக கிட்ட மனந்திறந்து பேசமுடியும். கஷ்டம், குடும்பச் சூழ்நிலை பிள்ளைங்களுக்குத் தெரியும். பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளா வளர்வாங்க.

இப்பல்லாம் சீக்கிரமே மூணுவயசுல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிடுறாங்க. இது பிள்ளைங்களுக்கும் நல்லதில்ல. சமுதாயத்துக்கும் நல்லதில்லை.

பிள்ளைகள் போனப்பறம் டிவி பார்க்க உக்காந்திடுறாங்க. ரெண்டு பொம்பளைங்க பேசினா அது நாடகத்தப் பத்தின பேச்சாத்தான் இருக்கு. டிவியில ஒரே கதையத்தான் திரும்பத் திரும்பப் போடுறாங்க. ஒருத்தர் ரெண்டு பெண்டாட்டி கட்டிக்கிறது, மாமியார் கொடுமை இதத்தான் காட்டுறாங்க. இப்பல்லாம் மாமியார் கொடுமை இல்லை. மாமியாரப் பிடிக்கலைன்னா தனியாப் போயிடுறாங்க. அப்புறம் எங்க கொடுமையிருக்கு? நல்லா வாழ்றவங்களுக்கு எப்பிடி இடைஞ்சல் கொடுக்கலாம்?னு காட்டுவாங்க. நாம முன்னேறுறதுக்கு என்ன செய்யணும்னு யோசிக்கணும். அடுத்தவங்களைக் கெடுக்க யோசிக்கக் கூடாது.

ஆனா இந்த நாடகமெல்லாம் சீக்கிரமே மாறிடும்னு நெனைக்கிறேன். ஏன்னா எல்லாமே மாறிக்கிட்டிருக்கு. சனங்களுக்கு இந்த டிவி நாடகத்தைப் பார்த்துப் பார்த்து சலிச்சுப் போயிடும். ஒரு காலத்தில சரித்திரப் படங்கள் அதிகமா வந்துச்சு. இப்ப வருதா? ஏன்? சனங்களுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கலை.

Dinamani Kathir Bharatha Devi Ki Rajanarayan Karisal Kaattu kathaigal

உங்களுடைய குடும்பத்தைப் பற்றி?

எங்க வீட்டுக்காரரு பள்ளிக்கூடத்தில வாத்தியாரா இருந்து ஹெட்மாஸ்ட்டாரா ஆயி இப்ப ரிடையர் ஆயிட்டார். அவரு எனக்கு ஒத்துழைப்புக் கொடுக்கலேன்னே இந்த அளவுக்கு நான் முன்னேறியிருக்க முடியாது.

எனக்கு ஒரே பையன். கஷ்டப்படுத்தாம, காயப்படுத்தாம வளர்ந்தான். நான்தான் படிக்க முடியலை. பையனை நல்லாப் படிக்க வச்சோம். இப்ப அமெரிக்காவில் பெரிய படிப்பு படிக்கிறான். பொம்பளைப் பிள்ளை இல்லைன்னு கவலையில்லை. எனக்குக் கல்யாணமாகி 11 வருஷம் கழிச்சுத்தான் இவன் பிறந்தான். குழந்தையே இல்லாம இருந்த எனக்கு “இவனாவது பிறந்தானே’ன்னு இருந்துச்சு.

Posted in Author, Bharatha Devi, Biosketch, Faces, Fiction, Interview, Kathir, KiRa, Literature, Novels, Story, Tamil, Thamizh, Writer | 1 Comment »

Frankfurt Book Fair: Interview with Kizhakku Pathippagam’s Badri

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!

ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.

உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.

“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.

ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.

இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.

நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.

“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?” என்றோம்.

“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.

தமிழ்மகன்.

Posted in Agents, Annual, audiobooks, Authors, Books, Business, Catalan, Catalonia, Channels, classics, Deals, Deutsch, Deutschland, Distribution, English, EU, Events, Exhibition, exhibitors, Faces, Fair, Fiction, forum, Frankfurt, German, Germany, India, Industry, Interview, Kilakku, Kizakku, Kizhakku, Language, Literary, Literature, Marketing, Media, Meet, Multilingual, NBT, network, Networking, New Horizon, Novels, Outlets, people, publications, Publishers, Reach, Read, Reader, Readers, Reports, sales, Sell, Spain, Story, Sura, Tamil, Trade, Translations, Translator, wholesalers, Works, World | Leave a Comment »

History of Movies & Politics – Tamil Cinema series in BBC Tamil

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 21, 2007

நெஞ்சம் மறப்பதில்லை – பாகம் ஐந்து

நன்றி: பிபிசி தமிழ்

தமிழக மக்களிடம் திரைப்படங்களுக்கு தனி இடம்
தமிழக மக்களிடம் திரைப்படங்களுக்கு தனி இடம்

தமிழ் திரையுலகில் புராண பக்தி கதைகள் ராஜா ராணிக் கதைகள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலை மாறி சமுதாய விழிப்புணர்வு, பகுத்தற்றிவுக் கொள்கைகள் ஆகியவற்றைக் கதைக்களமாக கொண்ட திரைப்படங்கள் வரத்தொடங்கியது தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வேரூன்றிய காலகட்டமான ஐம்பதுகளின் துவக்கத்தில்தான்.

சமூக சீர்திருத்தப் படங்களை இயக்குவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்த அப்போதைய இயக்குநர்களாக கருதப்பட்டவர்கள் கிருஷ்ணன்,பஞ்சு என்கிற கூட்டு இயக்குநர்கள். ஏ.வி.எம். நிறுவனத்துக்காக பல வெற்றிப்படங்களைத் தந்தவர்கள் இவர்கள்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன் போன்ற வித்தகர்கள் கிருஷ்ணன் பஞ்சு படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார்கள்.

முரசொலி மாறன் கதை வசனத்தில் உருவான குலதெய்வம் என்ற திரைப்படத்திலிருந்த வசன பாணி மற்றும் சமூக சீர்திருத்த கருத்துகளை விவரிப்பதோடு, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த திருவாரூர் தங்கராசுவின் கதையில் எம்.ஆர்.ராதா அற்புதமாக நடித்து பெருவெற்றி பெற்ற ரத்தக் கண்ணீர் திரைப்படம் முன்வைத்த முற்போக்கு கருத்துகளை ஆராய்கிறது இந்த ஐந்தாம் பாகம்.

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பற்றிய தொடர்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மேதைகள்,சிரிக்க வைத்த சிந்தனையாளர்கள், நையாண்டி நாயகர்கள், நடிப்புச் சுடர்கள் மற்றும் சிந்திக்க வைத்த எண்ணற்ற இயக்குனர்கள் என்று, தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர். பி.பி.சி.யின் முன்னாள் தயாரிப்பாளர் சம்பத்குமார் தயாரித்து வழங்குகிறார்.

பகுதி 5

பகுதி 4

பகுதி 3

பகுதி 2

பகுதி 1

Posted in ADMK, AIADMK, Anna, Audio, AVM, BBC, Cinema, dialogues, DK, DMK, Films, History, Kalainjar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MGR, MK, Movies, Pictures, Podcast, Podcasting, Politics, Series, Story, Tamil | Leave a Comment »

Happy Navarathri: Dussehra Celebrations – Golu Special

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

Madhurai Meenakshi Golu Hinduism Navarathri Utsavar Decoration Raja Rajeswari
மங்கையர் போற்றும் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது
சென்னை, அக்.11-

“ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, மங்கையர்க்கு 9 இரவு நவராத்திரி;” என்று மங்கையர் போற்றும் நவராத்திரி விழா இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேத வாத்தியார் ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-

புண்ணியம் தரும் புரட்டாசி

தமிழ் மாதங்களில் புரட்டாசிக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த மாதம் மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்று போற்றப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டுமின்றி அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை புண்ணியமாக கருதுகிறார்கள்.

நவராத்திரி

புரட்டாசி மாதம் மற்றொரு வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது. புரட்டாசி மாதம் மங்கையர் போற்றும் நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நவராத்திரி பெண்களுக்கான பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போல் பெண்களுக்கு நவராத்திரி ஒன்பது நாட்கள் போற்றுதலுக்குரிய நாட்களாக கருதப்படுகிறது. எனவே, நவராத்திரியை மங்கையர் போற்றும் நவராத்திரி என்று சொல்கிறார்கள்.

சக்தி வழிபாடு

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (துர்கா, லட்சுமி, சரஸ்வதி) ஆகிய முப்பெரும் சக்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது நவராத்திரி விழாவில் தான். இந்த மூன்று சக்திகளும் சேர்ந்தே லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரியாக தேவி புராணங்களில் சொல்லப்படுகிறது.

இதையே ஸ்ரீசக்ர பூஜா விதியில் ஸ்ரீகாமேஸ்வரி, ஸ்ரீபகமாலினி, ஸ்ரீநித்தியக்லின்னா, ஸ்ரீபேருண்டா, ஸ்ரீவன்னிவாசினி, ஸ்ரீவஜரேஸ்வரி, ஸ்ரீத்வரிதா, ஸ்ரீகுலசுந்தரி, ஸ்ரீநித்யா, ஸ்ரீவிஜயா, ஸ்ரீசர்வமங்களா, ஸ்ரீஸ்வாலாமாலினி, ஸ்ரீலலிதா, ஸ்ரீவாராகி, ஸ்ரீசியாமளா உள்பட 18 சக்திகளாக சொல்லப்பட்டு உள்ளது. அதையே 18 புராணங்களும் நடைமுறையில் உள்ளன. 18 சக்திகளும் ஒவ்வொரு பலா பலனை வழங்குகிறார்கள்.

காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று 3 சக்திகளாகவும் அழைக்கப்படுகிறார்கள்.

நவராத்திரி விழாவை, ஸ்ரீதுர்கா பூஜையாகவும் கொண்டாடுகிறார்கள். 9 நாட்களும் ஸ்ரீதுர்கா தேவியை, “ஸ்ரீவனதுர்கா, ஸ்ரீசூலினி துர்கா, ஸ்ரீஅக்னிதுர்கா, ஸ்ரீசாந்தி துர்கா, ஸ்ரீசபரிதுர்கா, ஸ்ரீலவனதுர்கா, ஸ்ரீதீபதுர்கா, ஸ்ரீஆசூரி துர்கா, ஸ்ரீஜெயதுர்கா”, என்று ஒவ்வொரு நாளும் நவ துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

மைசூர் தசரா

வட இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் `ராமலீலா’ என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில், துர்கா பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள்.

கர்நாடகாவில் தசரா பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. மைசூர் தசரா உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. தசரா பண்டிகையை கண்டு ரசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

சுவாசினி, கன்யா பூஜை

நவராத்திரியின்போது, வீடுகளில் கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும். நவராத்திரி விழாவில் `சுவாசினி’ பூஜை, `கன்யா’ பூஜை செய்வது சிறப்பானது ஆகும். `சுவாசினி’ பூஜை என்பது, சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் தங்கள் வசதிக்கேற்ப வஸ்திர தானம், ஆபரண தானம் வழங்கி விருந்தளிப்பது சிறந்ததாகும். தாம்பூலம் வழங்கும்போது சுமங்கலிகளிடம் ஆசி வாங்க வேண்டும்.

இதே போல், பெண் குழந்தைகளுக்கும் பாவாடை, சட்டை வழங்கி வணங்க வேண்டும். குழந்தையை தெய்வமாக பாவித்து வணங்குவதே கன்யா பூஜை என்று அழைக்கப்படுகிறது. சுவாசினி, கன்யா பூஜையின்போது, நவராத்திரியின் முதல் நாள் ஒருவருக்கும், இரண்டாவது நாள் இருவருக்கும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிப்பது நல்லது. அவரவர் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொடுக்கலாம்.

எத்தனை படிக்கட்டுகள்

நவராத்திரியில் கொலு வைப்பது முக்கியமானதாகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதியை குறிப்பிடும் வகையில் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற தத்துவத்தில் 3 படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களை குறிப்பிடும் வகையில் 5 படிக்கட்டுகளாகவும், அறுசுவையைக் குறிப்பிடும் வகையில் 6 படிக்கட்டுகளாகவும், சப்த மாதாக்களை குறிப்பிடும் வகையில் 7 படிக்கட்டுகளாகவும், நவ துர்க்கையை குறிப்பிடும் வகையில் 9 படிக்கட்டுகளாகவும், ஸ்ரீவித்யாவை குறிக்கும் வகையில் 10 படிக்கட்டுகளாகவும், லாபஸ்தானத்தை குறிக்கும் வகையில் 11 படிக்கட்டுகளாகவும், 12 மாதங்களை குறிப்பிடும் வகையில் 12 படிக்கட்டுகளாகவும் கொலு வைக்கலாம். வசதி படைத்தவர்கள் 36 படிக்கட்டுகளில் கூட கொலு வைக்கிறார்கள்.

இன்று கொலு வைக்க சிறந்த நாள்

இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த நாள் ஆகும்.

கொலு பொம்மைகளை படிக்கட்டுகளில் வைப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) உகந்த நாள் ஆகும். இன்று காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் சுக்ர ஹோரையில் கொலு வைக்க வேண்டும். வழிபாடுகளை நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்க வேண்டும்.

என்னென்ன பிரசாதம்?

நவராத்திரியின்போது, ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வொரு பிரசாதம் வைத்து வழிபடவேண்டும். முதல் நாள் சர்க்கரைப் பொங்கல், மொச்சை சுண்டல், முப்பருப்பு வடை பிரசாதமாக வைக்க வேண்டும். சனிக்கிழமை எள் கலந்த பாயசம், தயிர் வடை, வேர்கடலை சுண்டல், எள்ளு சாதமும், ஞாயிற்றுக்கிழமை கோதுமையில் தயார் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக இடம் பெறச் செய்ய வேண்டும்.

திங்கட்கிழமை அவல் கேசரி, பால்பாயசம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல், 5-வது நாள் செவ்வாய்க்கிழமையன்று சர்க்கரை பொங்கல், துவரை வடை, கடலைப்பருப்பு (பூம்பருப்பு) சுண்டல், 6-வது நாள் தேங்காய் பால் பாயசம், பச்சைப்பயிறு சுண்டல், கதம்ப சாதம், 7-வது நாள் கொண்டக்கடலை சுண்டல், பாதாம், முந்திரி கலந்த பாயசம், தயிர் சாதம், புட்டு, 8-வது நாள் அனைத்து வகை இனிப்பு, பலவித பட்சணங்கள், மொச்சை சுண்டல், 9-வது நாள் எள் உருண்டை, எள் பாயசம், புளியோதரை, கேசரி, வேர்க்கடலை சுண்டல், 10-வது நாள் கோதுமையில் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக வைத்து பூஜை செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.

நவராத்திரியின்போது, சண்டி பாராயணம், சண்டி ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. நவராத்திரியில் தான் ஆதி பராசக்தி மிகப்பெரிய அசுரர்களை வதம் செய்ததாக தேவி புராணங்களில் கூறப்பட்டு உள்ளன.

ஆயுத பூஜை

நவராத்திரியில் 9-வது நாள்ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி சிறிய பெட்டிக்கடையில் இருந்து பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் ஆயுத பூஜை அன்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

தொழில் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் கூடுதல் சிறப்புக்கொடுத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன.

விஜயதசமி

ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமி வருகிறது. விஜயதசமியில் உள்ள விஜயம் என்றால் வெற்றி. தசம் என்றால் 10.`மி’ என்றால் தனக்கு என்று பொருள். தனக்கு 10 திசைகளில் இருந்தும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நோக்கில் அன்றைய தினம் மகா விஷ்ணு, தேவியர், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு கல்விக்கண் திறக்கும் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.

விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சில பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்புகளைக் கூட இந்த நாளில் தான் தொடங்குகிறார்கள்.

இவ்வாறு ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறினார்.

———————————————————————————————————————————

நவராத்திரி இரண்டாம் நாள்
வாராஹி :

விஷ்ணுசக்தி வகைகளுள் வாராஹியும் ஒருத்தி. வராஹ (பன்றி முகம்) வடிவம் கொண்டவள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தன் தெத்துப்பற்களால் பூமியைத் தாங்கி துõக்கியிருப்பவள். “மங்கள மய நாராயணி’ என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் அம்ச சக்திகளில் “தண்டினி’ என்ற பெயரும் உண்டு. இவள் தேவியின் சேனாதிபதி. வராஹநந்தநாதருக்கு வராஹ ரூபமாக காட்சி தந்ததால் வாராஹி என்று பெயர் பெற்றாள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். இவளை குறிக்கும் 32 செய்யுள்கள் அடங்கிய நுõல் “வாராஹி மாலை’ எனப்படும். நாம் பேசும்போது வாக்கை தடுத்து நிறுத்துபவள் வாராஹி. எனவே இவளுக்கு “வல்காமுஹி’ என்ற பெயரும் உண்டு. இது காலப்போக்கில்”பகளாமுஹி’ என ஆகிவிட்டது.

நைவேத்யம் : வெண்பொங்கல், இனிப்பு பலகாரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: வளையல் விற்றல்

———————————————————————————————————————————

நவராத்திரி மூன்றாம் நாள்

இந்திராணி :

பராசக்தியை நாளை இந்திராணியாக கருதி வழிபட வேண்டும். இவளை மகேந்திரி என்றும் கூறுவர்.

இவள் இந்திரனின் சக்தி. கிரீடம் தரித்து வஜ்ராயுதம் தாங்கியிருப்பவள். ஆயிரம் கண் உடையவள். விருத்திராசுரனை அழித்தவள். யானை வாகனம் கொண்டவள். இதை ஐராவதம் என்பர். தேவலோகத்தின் ராஜ்ய இயக்கத்தை கவனித்துக் கொள்கிறாள். “சாம்ராஜ்ய தாயினீ’ என்பதும் இவளது இன்னொரு பெயர். பெரும் பதவியை விரும்புபவருக்கு இவளது அருள் தேவை. அரச பதவிகள், அரசுபதவிகள் அனைத்தும் இவளால் உருவாகின்றன.

நைவேத்யம் : வெண்பொங்கல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: பட்டாபிஷேகம்
———————————————————————————————————————————
———————————————————————————————————————————

Posted in Celebrations, Ceremony, Culture, Dolls, Durga, Dussehra, Dussera, Festival, Functions, Golu, greetings, Guide, Hindu, Hinduism, India, Lakshmi, Laxmi, Legends, Mahalakshmi, Mahalaxmi, Myth, Naragasura, Naragasuran, Narakasura, Narakasuran, Navarathri, Navaratri, Navrathri, Navratri, Pig, Pooja, Puja, Ram, Rama, Ramlila, Ravana, Ravanan, Religion, Sarasvathi, Sarasvathy, Saraswathi, Saraswathy, Sita, Sitha, Steps, Story, Tamil Nadu, TamilNadu, Tips, TN, Varaahi, Varahi, Vijayadasami, Vijayadashami, Vijayadhasami, Vijayadhashami, Vijayathasami, Vijayathashami, Winter | Leave a Comment »

Notorious criminal Vellai Ravi & associate killed in encounter

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi « Tamil News – வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?:

07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.


தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.

2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.
————————————————————————————————

அடுத்த குறி யார்?

சென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார்? என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.

ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ரௌடிகள் பட்டியல்:

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்

  • மாலைக்கண் செல்வம்,
  • காதுகுத்து ரவி,
  • கேட் ராஜேந்திரன்,
  • நாகேந்திரன்,
  • சேரா,
  • காட்டான் சுப்பிரமணியன்,
  • ஜெர்மன் ரவி,
  • கருப்பு பாலு,
  • ஸ்டாலின்,
  • திண்டுக்கல் பாண்டியன்

என போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
——————————————————————————————————————————–
வெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா?

ஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

நிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:

புதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.

அப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.

என்னை ஏன் கடத்தப் போகிறார்கள்? என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.

என்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.

——————————————————————————————-
வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி

ஓசூர், ஆக. 3 –

ஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.

உறவினர்கள் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

அவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.

அடையாளம் காட்டினர்

வெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

4-வது மகன்

முன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

குணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-

காய்கறி வியாபாரம்

நானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

எனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.

தமிழில் பேசுவோம்

வெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

அடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.

எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.

இவ்வாறு தமிழ்அரசி கூறினார்.

——————————————————————————————-

லாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி

சென்னை, ஆக. 2-

சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.

வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-

என் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.

எப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.

அந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.

நேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.

அவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.

கடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
——————————————————————————————-

வெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு

சென்னை, ஆக. 2-

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.

இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.

ஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.

இந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.

பின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

ஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.

இதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்

ஓசூர், ஆக. 2-

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.

கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.

நேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.

இந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.

வெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.

வெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே?

சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-

வெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு

பெரம்பூர், ஆக. 3-

சென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

நேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.

இதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.

அவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.

பக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-

எனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.

அதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.

செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.

பின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.

என் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.

எப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.

இதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.

அப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.

அதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.

ஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.

அதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.

இவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.

———————————————————————————————————————

வெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்

சென்னை, ஆக. 4-

Vellai ravi photoசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.

அதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.

இதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.

வெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.

இந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.

போலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.

இந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.

சானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.

சமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.

அவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.
அப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.

ஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.

இதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.

—————————————————————–
காசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:

வட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.

அதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.

திருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.

———————————————————————————————————————
ரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்!

சென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.

ரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.

இந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.

எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.

சாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன? முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.

உடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.

ரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.

நான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.

“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.

3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.

———————————————————————————————–

என்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது

சென்னை, ஆக. 8-

சென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்
மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.

போலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.

அதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.

கடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.

என்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு

செய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.

மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.

மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.

நல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.

மாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.

சமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.

அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.

போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-

எனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.

நான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்னmaalaikkan selvam arcot veerasamy DMK Politics Party affiliations rowdy dada arrest செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.

சென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.

அதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.

இதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.

உடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

பின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.

———————————————————————————————–
அக்கா மகனை கொன்றதால்
பழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
புழல் சிறையில் அடைப்பு

செங்குன்றம், ஆக.10-

அக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுட்டு பிடிக்க உத்தரவு

சென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.

இதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

செல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பழிக்கு பழி

கடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.

கடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

———————————————————————————————–

Posted in ACP, Akhthar, Akthar, Alcohol, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Arkadu, Arms, Arrack, Assassin, Assassination, Assembly, Bagalur, Bangalore, BJP, Bombs, Cabinet, Chennai, Cinema, Commissioner, CoP, Crime, Criminal, CSI, Dada, DCP, dead, Election, Electricity, Encounter, Extortion, Faces, gang, Guna, Hide, Hideout, Hijack, Hosoor, Hosur, HR, ICF, Illicit, Karnataka, Kidnap, kidnappping, Kumaran, Law, Leaders, Liquor, Maalaikan, Maalaikkan, Madras, Minister, MLA, Money, Movies, Murder, Murugan, Murukan, N Veerasamy, Nanjil, Nanjil Kumaran, National Highway, Neta, Netha, nexus, NH, Order, Osur, people, Peramboor, Perambur, Police, Poll, Raichoor, Raichur, Rajaram, ransom, Ravi, Rich, rights, Rowdy, Santhapuram, Selvam, Selvaraghavan, Shakeel, Story, TASMAC, Toddy, Veerachami, Veerachamy, Veeramani, Veerasami, Veerasamy, Vellai, Vellai Ravi, Venkatasaami, Venkatasaamy, Venkatasami, Venkatasamy, Venkatesa Pannaiyaar, Venkatesa Pannaiyar, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayakumar, Vijaykumar, Weapons | Leave a Comment »

Director Tharani – Story behind the silver jubilee

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

ஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை

எத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’

தில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.

“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

தரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.

சின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.

விவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.

சினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான்! செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.

மணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.

அசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப

இதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.

ஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.

ஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.

இப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.

`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.

நடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.

பூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.

என்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே!

லயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.

அவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.

`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.

எனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.

எல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.

அந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான்! அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.

Posted in Backgrounder, Barathiraja, Bharadhiraja, Bharathiraja, Biography, Biosketch, Chat, Chennai, Cinema, DFTech, Dharani, Dhil, Dhool, Dil, Editing, Editor, Ejamaan, Ejaman, Esamaan, Faces, Filmmaker, Films, Gilli, Institute, Interview, jubilee, Killi, Kodambakkam, Kollywood, Life, Manirathnam, Maniratnam, Movies, people, Rajini, Rajni, RV Udhayakumar, RV Uthayakumar, Selvamani, Story, Student, success, Technology, Telugu, Tharani, Thil, Thirupathisami, Thirupathysamy, Thool, Tollywood, Vikram | Leave a Comment »

Ka Naa Su’s Translation – Mirugangalin Pannai (Animal Farm by George Orwell) – Book Review

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

நூல் அறிமுகம்: க.நா.சு.வின் மொழிபெயர்ப்பில் ஜார்ஜ் ஆர்வெலின் மிருகங்கள் பண்ணை

– ந. கவிதா

பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலின் Animal Farm நாவலின் மொழிபெயர்ப்பே ‘மிருகங்கள் பண்ணை’. இலக்கிய விமர்சகரும் படைப்பாளியுமான க.நா. சுப்பிரமணியம் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். மூலம் 1946இல் வெளியானது. சென்னை அம்ருதா பதிப்பகம் தனது ‘Heritage Collection’ பதிப்பு வரிசையில் இம்மொழிபெயர்ப்பை 2006இல் மறுபதிப்புச் செய்திருக்கிறது.

ஆர்வெல் இந்தியாவில் பிறந்தவர். பர்மாவில் போலீஸ் அதிகாரியாகவும் இங்கிலாந்தில் ஆசிரியராகவும் பிரான்சில் பத்திரிகை ஆசிரியராகவும் பணிசெய்த பல்துறை அனுபவம் மிக்கவர். இவரது 1984, Burmese Days, Down and Out in Paris and London, The Road to Wigan Pier, Homage to Catalonia, Inside the Whale போன்ற நூல்கள் சிறப்பான கவனம் பெற்றவை. மிருகங்களின் பண்ணை விற்பனையிலும் மிகப் பெரிய சாதனை செய்தது. முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், ஆங்கிலத்தில் மட்டும் பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது

இந்நாவல் ஒரு முதலாளியை வீட்டை விட்டும் பண்ணையை விட்டும் வெளியேற்றிவிட்டுத் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டிய மிருகங்களின் கதை. ஆனால் முழுக்க முழுக்க அரசியல் பேசும் நாவல்.

முதலாளி ஜோன்ஸின் பண்ணையில் பன்றி, குதிரை, நாய், கோழி, ஆடு, வாத்து, காகம், நாய் என்று பல வித மிருகங்களும் பறவைகளும் இருக்கின்றன. அவற்றில் மூத்த பன்றியான கிழட்டு மேஜர்தான் விலங்குகளின் மனதில் புரட்சி விதையை விதைக்கிறது. உணவிற்காகப் பகலெல்லாம் ஜோன்சிற்கு உழைத்து ஓய்ந்துபோவது குறித்தும் அடிமைகளாக இருப்பது குறித்தும் விலங்குகளிடம் விழிப்புணர்வு ஏற்படுமாறு பேசியது இந்த மேஜர்தான். சில நாட்களில் இந்த மேஜர் இறந்துபோகிறது.

அதற்குப் பின்பு நெப்போலியன், ஸ்நோபால், ஸ்குவீலர் போன்ற பன்றிகள் பிற விலங்குகளிடம் இந்தப் புரட்சி மனப்பான்மையை வளர்க்கின்றன. எதிர்பார்த்தது போலவே மிஸ்டர் ஜோன்ஸைப் பண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றிப் பண்ணையைக் கைப்பற்றுகின்றன விலங்குகள்.

புரட்சி வெற்றியடைந்த பின் பன்றிகள் பிற விலங்குகளுக்குத் தலைமை ஏற்கின்றன. குறிப்பாக நெப்போலியனும் ஸ்நோபாலும். பண்ணை மிருகங்களின் எதிரி மனிதன்தான், அவனுக்கு அடிமையாக ஒருபோதும் இருக்கக் கூடாது; ஒரு விலங்கு இன்னொரு விலங்கைத் தாக்கக் கூடாது; மது அருந்தக் கூடாது; எல்லா மிருகங்களும் சரிசமம்; மிருகங்கள் துணி அணியக் கூடாது; படுக்கையில் படுத்துறங்கக் கூடாது என்று பல்வேறு விதிகளை வகுத்துக்கொள்கின்றன மிருகப் பண்ணை விலங்குகள். எல்லா விலங்குகளும் கல்வியறிவு பெறவும் ஏற்படாயிற்று.

பண்ணை வேலைகளில் அந்தந்தப் பருவ காலத்திற்குரிய அத்தனை வேலைகளையும் இந்த விலங்குகள் செய்தன. விலங்குகள் மிகக் கடினமான உழைத்தன. சுதந்திரமாக இருப்பதில் அவை வேலைப் பளுவை உணரவில்லை. சுதந்திரமாக இருப்பதில் அவை வேலைப் பளுவை உணரவில்லை. தலைமைப் பொறுப்பு வகிக்கும் பன்றி இனம் மட்டும் சில சிறப்புச் சலுகைகளை அனுபவித்தது. புத்திசாலி இனம் என்பதால் இந்தச் சலுகை என்று காரணம் சொல்லப்படுகிறது.

ஸ்நோபாலுக்குக் காற்றாடிக் கட்டிடம் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் யோசனை வருகிறது. அதற்குப் பண்ணைக் காரியங்களில் செய்யும் வேலையைவிடக் கூடுதலாக வேலை செய்ய வேண்டி வரும் என்றும் உணவுத் தன்னிறைவுதான் முதல் தேவை என்றும் நெப்போலியன் தரப்பில் கூறப்படுகிறது. விலங்குகளுக்கு மின்சார விளக்கொளியும் வெதுவெதுப்பான நீரும் ஆசையைக் கிளப்புகின்றன. ஆனால் நெப்போலியன் அதை மறுக்கிறது. அதோடு வேட்டை நாய்களின் உதவியோடு ஸ்நோபாலைப் பண்ணையை விட்டு விரட்டுகிறது. அதிர்ச்சியடைந்த பிற மிருகங்களிடம் ஸ்நோபால் ராஜதுரோகம் செய்தது என்று அதன் துரோகச் செயல்கள் கதைகளாகக் கூறப்படுகின்றன. அதை விலங்குகளும் ஏற்றுக்கொள்கின்றன.

நெப்போலியன் அதிகாரத்தின் மொத்த உருவாக மாறியது. சில மாதங்களில் காற்றாடிக் கட்டிடம் கட்டும் யோசனையை நெப்போலியன் முன்வைக்கிறது. மேலும் ஸ்நோபால் தனது திட்டத்தைத் திருடியது என்றும் குற்றம் சாட்டுகிறது நெப்போலியன். பசுக்கள் கறக்கும் பால் முழுவதும் பன்றிகளின் உணவில் கலக்கப்படுகின்றன. உதிர்ந்த ஆப்பிள்கள்கூட பிற விலங்குகளுக்குக் கொடுக்கப்படவில்லை. காரணம் மூளை வேலை செய்யும் இனம் என்பதனால் சலுகை.

விலங்குகள் கடினமாக உழைத்து நெப்போலியனின் கட்டளைப்படி காற்றாடிக் கட்டிடம் கட்டுகின்றன. நிறைவுறும்போது புயல் காற்று கட்டிடத்தைச் சிதைத்தது. பழி ஸ்நோபால்மீது போடப்பட்டது. மீண்டும் கட்டிடம் கட்டப்பட்டது. மனித எதிரிகள் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். உழைப்பு வீணாணது. விலங்குகளுக்கு உழைப்பிற்கேற்ற உணவு கிடைக்கவில்லை. நெப்போலியன் வேட்டை நாய்களோடு வலம் வந்துகொண்டிருக்கிறது. துரோகம் செய்த விலங்குகள் கொல்லப்படுகின்றன. பிற விலங்குகள் பயத்தால் தலைவனின் ஆணைப்படி நடந்துகொள்கின்றன.

நெப்போலியன் விதிகளை மீறி மனிதர்களோடு நட்பு கொள்கிறது. படுக்கையில் படுத்துத் தூங்குகிறது. பன்றி இனம் குடிக்கிறது. விதிகள் மாற்றி எழுதப்படுகின்றன. சில விதிகள் தளர்த்தப்படுகின்றன. பிற விலங்குகள் கேள்விகள் கேட்க முடியாமல் வாயடைத்துப்போகின்றன. கடின உழைப்பாளியான பாக்ஸர் குதிரை கொல்லப்படுகிறது.

கேள்வி கேட்பதற்கு இயலாமையால் பிற மிருகங்கள் தவிக்க, பன்றி இனம் மனிதர்களோடு வியாபாரம் பேசிக்கொண்டு சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. குடிபோதையில் இருவருக்கும் சண்டை வலுக்கிறது. மனித முகத்திற்கும் பன்றி முகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மனித முகம் பன்றியாகவும் பன்றி முகம் மனித முகமாகவும் தெரிகிறது என்று கதை நிறைவடைகிறது.

மிருகங்களின் பண்ணை ருஷ்யப் புரட்சிக்குப் பின் நிலவிய ஊழலையும் ஒடுக்குமுறையையும் விமர்சிக்கும் நாவல் என்று சொல்வார்கள். ஆனால் இந்தக் கதை எந்த நாட்டிற்கும் அதன் அரசியல் சூழலுக்கும் பொருந்தக்கூடிய கதைதான். அரசியலைப்பில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தாமே எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தையும் சலுகைகளையும் இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது.

எல்லாக் காலத்திலும் அதிகார வர்க்கத்தின் போக்கை விமர்சிப்பதாக இந்நாவலைப் புரிந்துகொள்ள முடிகிறது. க.நா.சு.வின் மொழிநடை சிறப்பாக இருக்கிறது. இருந்தாலும் அவரது காலத்துத் தமிழில் சகஜமாக இருந்த வடமொழிச் சொற்களின் பயன்பாடு பல இடங்களில் நெருடுகிறது. நாவலின் தலைப்பு அட்டையில் மிருகங்களின் பண்ணை எனவும் உள்ளே மிருகங்கள் பண்ணை எனவும் தரப்பட்டிருக்கிறது. சின்ன விஷயத்தில் ஏன் இந்தக் குழப்பம்?

மிருகங்களின் பண்ணை
– ஜார்ஜ் ஆர்வெல்
தமிழில்:
        க.நா. சுப்பிரமணியம்
விலை: ரூ. 75.
வெளியீடு: அம்ருதா பதிப்பகம், சென்னை – 116.

Posted in 1984, Amrutha, Animal Farm, Author, Books, Critique, Fiction, Ka Na Su, Ka Naa Su, Kavitha, KNS, Literature, Novel, Orwell, Reviews, Story, Thozhi.com, Translation, Works, Writer | Leave a Comment »

Arts club for Mentally disabled in Chennai – Rasa

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

மனவளர்ச்சி குன்றியோரின் கலைக் குழு: “ரஸா’ அமைப்பு உருவாக்குகிறது
மனவளர்ச்சி குன்றியோரின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையிலும், அந்தத் திறமையின் மூலம் அவர்கள் வருவாய் ஈட்ட உதவும் விதத்திலும் “சிறப்பு கலைக் குழு’வை சென்னையைச் சேர்ந்த “ரஸா‘ (ரமணா சூன்ருத்யா ஆலயா) அமைப்பு உருவாக்குகிறது.

இதற்காக 14 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றிய 15 பேரை வரும் 21-ம் தேதி கலைத்திறன் தேர்வுகளை நடத்தி, தேர்ந்தெடுக்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் -இயக்குநர் டாக்டர் அம்பிகா காமேஷ்வர் தெரிவித்தார். 1989 அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கலைத்திறனை வளர்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களிடம் எத்தகைய கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

ரஸா‘ நடத்தும் சிறப்புப் பள்ளியில் மன வளர்ச்சி குன்றிய 100 பேர் தற்போது பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இசை, நாட்டியம், நாடகம், முக பாவங்களுடன் கதை சொல்லுதல் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், முழுக்க முழுக்க மன வளர்ச்சி குன்றியோரை மட்டுமே கொண்ட கலைக் குழுவை உருவாக்க வேண்டும் என்பது “ரஸô’வின் நோக்கம்.

கலைக் குழுவில் இடம்பெறத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இலவச பயிற்சி தரப்படும். பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு “ரஸா, 1/1 அபிராமபுரம் முதல் தெரு, சென்னை -600 018′ என்கிற முகவரியிலோ, 2499 7607, 6528 1970 என்கிற தொலைபேசிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.

Posted in Arts, Chennai, Dance, Disabled, Drama, Free, Help, Madras, music, Narration, Performance, Rasa, service, Stage, Story, Students, Teach, Theater, Volunteer | Leave a Comment »

Paavannan’s Book Review of Haruki Murakami’s Translated works in Tamil by Vamsi Books

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

சுதந்திரமும் சுதந்திரம் துரத்தலும் – பாவண்ணன் :: புத்தக விமர்சனம் – கவிதை அனுபவம்
01.07.07
குமுதம் தீராநதி

கடந்த சில ஆண்டுகளாக மொழிபெயர்ப்புத்துறையில் ஆர்வமுடன் இயங்கிவரும் இளைஞர்கள் ஜி. குப்புசாமி, ராஜகோபால், செழியன் ஆகியோர். இம்மூவருடைய மொழிபெயர்ப்பில் ஆறு சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவை அனைத்தும் ஹாருகி முரகாமி என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதியவை. ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் மூன்று வெவ்வேறு தொகுப்புகளிலிருந்து இக்கதைகளைத் தேர்தெடுத்திருக்கிறார்கள் இவர்கள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு எடுத்துரைப்பு முறையைக் கொண்டதாக விளங்குகிறது. முற்றிலும் யதார்த்த முறையில் தொடங்கி முற்றிலும் புனைவுகளும் கற்பனைகளும் மிகுந்த உலகுக்குத் தளமாற்றம் கொள்ளும் கதைகளும் இருக்கின்றன. யதார்த்தத் தளத்துக்கும் கற்பனைத் தளத்துக்கும் மாறிமாறி பயணிக்கிற கதைகளும் உண்டு. எந்தவிதமான விசேஷ முயற்சிகளும் இல்லாமல் இரண்டுவகையான உலகங்களும் ஒன்றோடொன்று பொருத்தமாக இணைந்து கச்சிதமாகப் பிரிகின்றன. இதுவே இக்கதைகளின் முக்கியச் சிறப்பு. சிறுகதைகளின் பல்வேறு சாத்தியப் பாடுகளை எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கும் படைப்பாளிகள் நிறைந்த தமிழ்ச்சூழலில் இக்கதைகளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைக்கக்கூடும்.

முரகாமியை ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளராக அறிமுகப்படுத்துகிறார் தொகுப்புக்கு முன்னுரை வழங்கியிருக்கும் சுகுமாரன். கலாச்சாரத்துக் குறைவுக்கு இலக்கான ஜப்பானிய உலகமும் வாழ்வும் இவருடைய கதைகளில் சித்திரிக்கப்படுவதாகவும் மரபுசார்ந்த ஒழுக்கங்களிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபடும் முயற்சிகளில் இறங்குபவர்களாகவும் அதனால் எழக்கூடிய புதிய சங்கடங்களால் திணறுகிறவர்களாகவும் முரகாமியின் கதைமாந்தர்கள் இருப்பதாகவும் கூடுதலான தகவலைப் பகிர்ந்துகொள்கிறார் சுகுமாரன். தொகுதியைப் படித்துமுடித்து கதைகளை மனத்துக்குள் அசைபோட்டுப் பார்க்கும்போது, முரகாமியின் கதைகளை உரசிப் பார்க்கும் உரைகல்லாக இந்த வாசகம் எவ்வளவு துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சுகுமாரன்மீது ஒருவித பாராட்டுணர்வு எழுகிறது.

ஆறு கதைகளில் முக்கியமான சிறுகதைகளாக, ‘குடும்ப விவகாரம்’ கதையைச் சொல்லவேண்டும். இக்கதையில் இடம் பெறும் அண்ணன், தங்கை இருவரும் முக்கியமான கதைப்பாத்திரங்கள். பிறந்த ஊரிலிருந்து தொலைவான நகரத்தில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து ஆளுக்கொரு அறையில் தங்கியிருக்கிறார்கள் அவர்கள். ஆளுக்கொரு சமயத்தில் வெளியே வேலைக்குச் சென்று திரும்பி, வார இறுதியில் மட்டும் பார்த்துப் பேசிக் கொள்கிறார்கள். இருவருக்குமிடையே உள்ள நெருக்கத்தையும், விலகலையும், ஆதங்கத்தையும், அன்பையும், நுட்பமாக விவரித்த படிச் செல்கிறது கதை

கல்விச் சுதந்திரம், வேலைச் சுதந்திரம், பாலியல் சுதந்திரம் என எல்லா வகையான சுதந்திரங்களிலும் திளைக்கிறவர்கள் முழுச் சுதந்திரமடைந்தவர்களாகவும் ஆனந்தமானவர்களாகவும்தானே இருக்கவேண்டும் என்பது நம் எண்ணம். கட்டற்ற விடுதலை என்பது இந்தப் புள்ளியை நோக்கி மானுட குலத்தை அழைத்துச் செல்லும் ஒன்றாகவே இருக்கும் என்பது நம் நம்பிக்கை. நம் எண்ணத்துக்கும், நம்பிக்கைக்கும் மாறாக, இந்தச் சுதந்திரங்கள் எதுவுமே மனித மனத்தின் ஆழத்தில் உறங்கும் இச்சையுணர்வையோ அல்லது வெறுப்புணர்ச்சியையோ துளியும் மாற்றவில்லை என்பதை நாம உணரும் வகையில் கதையைக் கட்டியமைக்கிறார் முரகாமி.

இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணியாற்றுகிறான் அண்ணன். இதுவரை உத்தேசமாக இருபத்தியாறு பெண்களோடு தான் உறங்கியிருப்பதாகக் கணக்குச் சொல்கிறவன். தாயாக இருந்தாலும் சரி, தந்தையாக இருந்தாலும் சரி, மணந்துகொள்ள தங்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி, மனதில் பட்டதை சுதந்திரமாக முன் வைக்கத் தயங்காதவன். அவன் தங்கையும் பாலியல் சுதந்திரம் உள்ளவள். இதுவரை இரண்டு பேருடன் உறங்கியிருப்பதாகச் சொல்பவள். தனக்காக சில வேலைகளைத் தன் அண்ணன் செய்ய வேண்டும் என்று கோருபவள். அவளுக்குப் பதினெட்டு வயதாகிறது. அவள் யாரோடு உறங்கினால் என்ன என்ற எண்ணம் கொண்டவனாக இருந்தாலும் தங்கை தன் மனதுக்குப் பிடித்த இளைஞனொருவனைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் விருப்பத்தை முன் மொழிந்ததும் அக்கணத்திலிருந்து அந்த அண்ணனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஏதோ ஒரு பிடிப்பின்மையும் வெறுப்புணர்வும் அவனை வாட்டுகின்றன. புதிய இளைஞனைப் பற்றி ஏதேதோ மாற்று அபிப்பிராயங்கள் சொல்லத் தொடங்குகிறான். அவனது பேச்சுமுறை, பழகும் விதம் என ஏதோ ஒரு குறையைக் கண்டு அறிவிப்பவனாக இருக்கிறான். அவன் வசிக்கும் வீடு சொந்த வீடா, வாடகைவீடா என்று கேட்டறிந்து தாய்க்குத் தகவல் அளிப்பதுகூட அவனுக்குச் சலிப்பான செயலாகத் தோன்றுகிறது.

திடீரென இச்சலிப்பும் வெறுப்பும் ஏன் அவன் மனதில் எழ வேண்டும்? ‘‘அவள் யாரோடு வேண்டுமானாலும் உறங்கிவிட்டு வரட்டுமே, அதைப்பற்றிக் கவலையில்லை’’ என்ற எண்ணம் கொண்டவன் அவன். கைப்பைக்குள் ஆணுறையை வைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டாம் என கிண்டல் செய்யும் அளவுக்கு அவளுடைய சுதந்திரத்தை மதிப்பவன். அப்படிப்பட்டவனை தங்கையின் திருமணத் தேர்வு ஏன் மனக் குலைவை நிகழ்த்த வேண்டும்? தங்கையென்னும் உடைமையுணர்வை உதற இயலாத தவிப்புதான் காரணம். விருந்துக்கு அழைக்கப்பட்ட எதிர்காலக் கணவனுடன் அந்த வீட்டில் தான் எவ்விதமான உறவிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த அறையில் அந்த இடத்தில் அதைத் தன்னால் செய்யமுடியாது என்றும் சொல்கிறாள் தங்கை. அவளுக்கு ஏன் அப்படிப்பட்ட உணர்வு எழுகிறது? உடலளவில் அங்கே இல்லாத சகோதரனை உணர்வுரீதியாகவும், எண்ணரீதியாகவும் அங்கே இருப்பதாகவோ, கண்காணிப்பதாகவோ அவளை உணரவைப்பது எது? அண்ணனென்னும் உடைமையுணர்வை முற்றிலும் உதற முடியாத சங்கடம்தான் காரணம். குடும்ப அமைப்பின் வழியாக அந்த உடைமையுணர்வு காலம்காலமாக கட்டிக்காக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு கணத்தில் சட்டென அதைத் துறக்க முடிவதில்லை. துறக்க முடியாத அந்தச் சங்கடத்தை முன்வைப்பதாலேயே அது குடும்ப விவகாரமாக மாறுகிறது. இளைஞர்களுக்கு நவீன ஜப்பான் வழங்கியிருக்கிற சுதந்திரங்களுக்கும் அவர்களுடைய மன ஆழத்தில் இன்னும் உறுத்திக் கொண்டிருக்கும் புள்ளிக்கும் உள்ள முரணை அல்லது உறவைத் தொட்டுக் காட்டிவிட்டு மீள்கிறது கதை. ஒன்றாக பீர் அருந்தி தத்தம் மனபாரங்களைப் பேசி இறக்கி வைத்து எடையற்றவர்களாக மாறிய பிறகு அண்ணனும், தங்கையும் தத்தம் அறையை நோக்கித் திரும்பிவிடுவதைப் போல உலகமும் பழைய படி சுதந்திரத்தின் விளிம்புக்கு வந்துவிடுகிறது.

‘ஷினாகவா குரங்கு’ என்னும் இன்னொரு சிறுகதையும் தொகுப்பின் முக்கியக் கதை. நடப்பியல் சொல் முறையிலும் புனைவாக்கச் சொல்முறையிலும் மாறி மாறி முன்வைக்கப்படுகிறது கதை. எல்லாவற்றையும் பசுமையாக நினைவில் வைத்திருக்கும் ஒருத்தியால் தனது சொந்தப் பெயரை நினைவில் வைத்திருக்க முடியாமல் அடிக்கடி மறந்து போகிறது. எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். அது மிகப் பெரிய பிரச்னையாக வாழ்வில் உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஆலோசனை மையத்தை நாடிச் செல்கிறாள் அவள். இப்படி ஒரு பக்கம். ‘‘ஒரு பெயர் என்னைக் கவர்ந்துவிட்டால் அது எனக்குக் கிடைக்க வேண்டும்’’ என்னும் எண்ணத்துடன் நடமாடும் குரங்கு இன்னொரு பக்கம். ஒரு பக்கம் யதார்த்தம். இன்னொரு பக்கம் புனைவு. இரண்டு இழைகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓட மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கதையை நெய்து கோண்டு போகிறார் முரகாமி. சுதந்திரத்தின் படிமமாக குரங்கு சித்திரிக்கப்பட்டிருப்பது யோசிக்கத்தக்கது. பல தளங்களைத் தாண்டி வாசகர்கள் தம் எண்ணங்களை விரிவாக்கிக் கொள்ள வழிவகுக்கும் புள்ளி இது. ஒரு பெயருக்காக தேடி அலையும் முயற்சிகளில் அந்தக் குரங்கின் சுதந்திரம் நேசமாக உருமாறுகிறது. நேசத்தின் வலிமையை தன் அனுபவத்தை முன் வைத்தே அது புரிந்து கொள்கிறது.

சுதந்திரத்தைப் பற்றியும் சுதந்திரம் துறத்தலைப் பற்றியும் பல்வேறு கோணங்களின் கதைச் சூழல்களையும் மாந்தர்களையும் உருவாக்கிச் செல்லும் முரகாமி ‘‘நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது’’ என்னும் சிறுகதையில் எண்ணங்களைச் சுதந்திரமாக முன் வைக்க இயலாத ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

கட்டற்ற சுதந்திரங்களை ஆண்களும், பெண்களும் துய்க்கிற நவநாகரிகமான டோக்கியோவில் நாகரிகமான ஒரு தெருவில் ஓர் இளம் பெண்ணும் ஓர் இளைஞனும் ஒருவரையருவர் பார்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் இன்னொருவரைப் பார்த்ததுமே தனக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவராக இருவருமே உணர்கிறார்கள். பொருத்தத்தைச் சுட்டிக் காட்டுகிற இரசாயன மாற்றம் இருவருடைய உடல்களிலும் நிகழ்கிறது. ஆனாலும், இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமலும், ஒரே ஒரு பார்வையைக் கூட பகிர்ந்து கொள்ளாமலும் கடந்து சென்று விடுகிறார்கள். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு அதேபோல நிகழ்கிறது. அப்போது அதே தீவிரப் பொருத்த உணர்வு. அதே அளவு இரசாயன மாற்றம். என்ன காரணத்தால் பகிர்ந்து கொள்ளாமலும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே பொருத்தமானவர்களுடன் கூட சேர்ந்து செல்லக் கூடிய சூழல் நிறைந்த ஊரில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தம் என்று உணர்ந்தும் இந்தப் பாராமை வாழ்வில் ஏன் நிகழ்கிறது? விடுவிக்கப்பட முடியாத இப்புதிருக்கு என்ன காரணம்? எல்லையற்ற சுதந்திரங்களாலும் கூட அப்புதிரின் விளிம்பைத் தொட முடியாமல் போவது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் மானுட குலம் இது போன்ற எண்ணற்ற புதிர்களால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை, நாம் துய்க்கிற எல்லாச் சுதந்திரங்களும் நம்முடைய நினைவாற்றலும், திறமைகளும் மானுட குலம் புதிர்களால் நிறைந்தது என்னும் எளிய உண்மையை உணர்வதற்காகத்தான் போலும்.

(நூறு சதவிகித பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது. ஜப்பானியச் சிறுகதைகள்,

மூலம்_ஹாருகி முரகாமி.

மொழி பெயர்ப்பு: ஜி. குப்புசாமி, ராஜகோபால், செழியன்,

வம்சி வெளியீடு, 19, டி.எம். சாரேன், திருவண்ணாமலை. விலை ரூ.80)

Posted in Books, Chezhian, Chezhiyan, Kuppusami, Literature, Muragami, Murakamy, Murkami, Paavanan, Paavannan, Pavannan, Rajagopal, Reviews, Sezhian, Sezhiyan, Story, Translation, Works, Writer | Leave a Comment »