Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Dams’ Category

Tamil Nadu Public Works Department (PWD) – Villages’ infrastructure facilities & Support systems for TN river basin resources

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

பொதுப்பணித்துறைக்கு மூடுவிழாவா?

நீதி. செங்கோட்டையன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டல்ஹெüசி பிரபுவால் 1849-ம் ஆண்டு இந்தியாவில் பொதுப்பணித்துறை துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில், பேருந்து, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு துவக்கப்பட்ட இத்துறை, நாளடைவில் வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் தலையாய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

அந்தவகையில் மத்திய பொதுப்பணித்துறையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியாக மாநிலப் பொதுப்பணித்துறையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை ரெகுலர் பிரிவு, தாற்காலிகப் பிரிவு (திருச்சி, வேலூர் ஆகிய இரு வட்ட அலுவலகங்களின் கீழ் பல கோட்ட அலுவலகங்கள்) என இரு பிரிவுகளாகப் பொதுப்பணித்துறை செயல்படுகிறது.

இதில் ரெகுலர் பிரிவு ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண் தொழிலுக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

தாற்காலிகப் பிரிவானது, ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதிகளில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது.

முக்கியமாக ஏரிப்பாசனத்தில் தமிழகம் முன்னிலையில் திகழ இந்த தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவின் பங்கு அளப்பரியது.

இதுபோன்ற முக்கியப் பணியை ஆற்றிவரும் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் தலையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.

தென் மாவட்டங்களின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், பிழைப்புத் தேடி நகர்ப்புறத்துக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவு மூடப்பட்டால், ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அத்துடன், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தடைபட்டுப் போனாலும் போகலாம் என்ற அச்ச உணர்வும் பெரும்பாலான விவசாயிகளின் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறை ரெகுலர் பிரிவு வேளாண் கட்டமைப்பு தொடர்பான பணிகளை எப்போதுமே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பதில்லை.

இதனால் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா என்ற செய்தி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தவிர்த்து, ரெகுலர் பொதுப்பணித்துறை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் சுய ஆதாயத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, தங்களுக்கு கணிசமான கமிஷனை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் தனிப்பட்ட சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்டுள்ளனர் என்பதையே விவசாயிகள் துணிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவரிசையில், தற்போது தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளியது கூட, இந்த ரெகுலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கமிஷன் ஆசைதான் என்றும், அவசியம் ஏற்பட்டால் இதை எந்த இடத்திலும் தாங்கள் சொல்லத் தயார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதாவது ஒருகாலத்தில் ஆற்றுப்பாசனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியை மட்டுமே செய்து வந்த பொதுப்பணித்துறையின் ரெகுலர் பிரிவு, அண்மைக்காலமாக ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதியிலும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது. ரெகுலர் பிரிவின் இந்த முனைப்புக்கு கமிஷன் தான் காரணம் என்பது தவிர எவ்வித நல்ல நோக்கமும் இல்லை.

மாநிலத்தில் மொத்தம் 39,000 ஏரிகள் உள்ளன. ஏரிப்பாசனத்தின் கீழ் 22 சதவீத நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் விவசாயத்தின் உயிரோட்டமான நீராதாரத்தைப் பெருக்குவதில் அரசு அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

குறிப்பாக விவசாயத்தின் ஜீவாதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றைச் சீர்படுத்தி அவற்றை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகப் பொதுப்பணித்துறையின் செயல்பாடோ திருப்திகரமாக இல்லை.

இதேபோன்று மெத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தென்மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து, இன்னொரு “விதர்பாவாக’ உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கிடையில், “நதிகளை இணைப்போம்’ என்று அடிக்கடி கூறி வரும் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி இல்லாததால்தான் பொதுப்பணித்துறையின் தாற்காலிகப் பிரிவுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக உலா வரும் செய்திகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

Posted in Agriculture, basin, Dams, Duraimurugan, facilities, Farmers, Farming, Flyovers, GIS, Govt, Hydrology, infrastructure, Irrigation, Lakes, Management, Mgmt, Planning, Plng, Projects, Public, PWD, Resources, Rivers, service, Suicides, support, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy, Vellore, Vidarba, Vidharbha, Vitharbha, Water | Leave a Comment »

Seven wonders of Tamil Nadu – Must see tourist spots & places by Kumudham

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

01.08.07 கவர் ஸ்டோரி

குற்றாலம்

பேரருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உட்பட சுமார் ஒன்பது அருவிகள் ஒரே இடத்தில் 170 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தோடி விழுகின்றன.அதுவும் நோய் தீர்க்கும் மூலிகை களோடு. நயாகரா உட்பட உயரமான பல அருவிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மக்கள் குளிக்க முடியாது. 170 மீட்டர் உயரமாக இருந்தும் மக்கள் குளிக்கக்கூடிய அருவி என்பது இதன் மற்றொரு சிறப்பு.

மலைக்கோட்டை

நீங்கள் திருச்சி செல்வதாக இருந்தால், அதை அடைவதற்கு பல கிலோமீட்டர் முன்பே உங்கள் முன் கம்பீரமாய் நின்று வரவேற்கும் திருச்சி மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இந்த மலை 273 அடி உயரமும் 344 படிகளும் கொண்டது.

மேட்டூர் அணை

தஞ்சை வயல்களுக்கு நீரளித்து விளையவைக்கும் அமுதசுரபி. 1934_ல் கட்டப்பட்ட மேட்டூர் அணையின் நீளம் மட்டும் 1700 மீட்டர். உயரம் 120 அடிகள். 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதுடன், 1,130 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விளைய வைக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆடல் அரசருக்கு சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட கம்பீர வீடு. 5_ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சிற்றம்பலத்தைக் கட்டியது பல்லவ மன்னன் இரண்யவர்மன். அதன் பின் பல மன்னர்களாலும் மாறி மாறி மெருகூட்டப்பட்ட இந்த ஆலயம் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

மகாபலிபுரம் சிற்பங்கள்

ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் தங்கள் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த செழிப்பையும் ஒரே இடத்தில் காட்ட தேர்ந்தெடுத்த இடம்தான் மகாபலிபுரம். பஞ்ச பாண்டவர் குகை, கடற்கரைக் கோயில், பாறை முழுதும் சிற்பங்கள் என்று ஒட்டுமொத்த கலை யழகும் கொண்டுள்ள இது சுற்றுலா வரை படத்தில் ‘செவன் பகோடாஸ்’ என்று புகழ்பெற்றுள்ளது.

செட்டிநாட்டு வீடுகள்

சாதாரண வீடுகளைக் கூட கலைக்கோயிலாக மாற்றமுடியும் என்பதற்கு தமிழகம் கொடுத்துள்ள உதாரணம், செட்டிநாட்டு வீடுகள். மர வேலைகளுக்கு பர்மா தேக்குகள், தரைக்கு உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட ஆத்தங்குடி கற்கள், சுவர் களில் அந்தக் காலத்திலேயே இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியக் கற்கள் என்று வாங்கி, முட்டை கலந்த ‘செட்டிநாடு பிளாஸ்டரை’க் கலந்து குழைத்துக் கட்டியிருக்கிறார்கள்.

கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாட்டு அரண்மனை, காரைக் குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒவ்வொன்றும் நகரத்தாரின் கலைரசனையை எடுத்துச் சொல்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்க்க ஒருநாள் போதாது. உலகிலேயே செட்டிநாட்டில் மட்டும்தான் இத்தனை அழகான மாளிகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.

கைலாசநாதர் கோயில்

பல்லவர்களின் மற்றொரு பிரமாண்ட படைப்பு. கோயிலின் வாசலில் கம்பீரமாக மண்டியிட்டிருக்கும் நந்தியை வைத்தே கோயிலின் பிரமாண்டத்தை அறிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் அஜந்தா சிற்பங்களுக்கு இணையாகக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.

திருவள்ளுவர் சிலை

தமிழகத்தின் கலைவளங்களில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கும் விஷயம். முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலில் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அதிகாரத்துக்கு ஒரு அடி என்று 133 அடிகளில் இங்கே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெரியகோவில்

பெயரைப் போல நிஜமாகவே பெரிய கோயில் தான். கோயில் மட்டுமல்ல, இங்குள்ள சிவலிங்கம், பிரமாண்ட நந்தி (இதன் எடை மட்டும் 17 டன்), கோபுரம் (70 மீட்டர்) என்று எல்லா விஷயங்களும் பெரியது.

வேலு£ர் கோட்டை

கிருஷ்ண தேவராயரின் தளபதிகள் பொம்மியும் திம்மண்ண ரெட்டியும் எழுப்பிய கோட்டை இது. 16_ம் நூற்றா ண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பல போர்களைச் சந்தித்தது. திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு, அவரது வாரிசுகள் சிறை வைக்கப்பட்டது இங்குதான்.

தமிழக அதிசயங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதிலிருந்து ஏழு இடங்களை வரிசைப்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதாவது இடங்கள் இருந்தால், அவற்றையும் சரியான காரணங்களுடன் விளக்கி எங்களுக்கு அனுப்புங்கள். கலைநயம், புராதனம், இயற்கை அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அதிசயங்களை சரியாக வரிசைப்படுத்தி அனுப்பும் 7 வாசகர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும். உங்கள் அதிசயப் பட்டியலை அஞ்சல் அட்டையில் அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழக அதிசயங்கள்
பி.எம்.சுதிர்,

Posted in Boating, Chennai, Chettinad, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Classic, Courtralam, Coutrallam, Culture, Dams, Districts, Falls, Forest, Forts, Guide, Heritage, hidamabram, Hidden, Hills, Horseback, Horsebackriding, Irrigation, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Kings, Kumudam, Kumudham, Kuthaalam, Kuthalam, Kutralam, Mahabalipuram, Mamallapuram, Mettoor, Mettur, Mountains, Projects, Rulers, Sidamabram, Sidhamabram, Specials, Tamil, Tamil Nadu, Tanjore, Thanchavoor, Thanchavur, Thanjavoor, Thanjavur, Thiruchendhoor, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Tips, TN, Tour, Tourist, Travel, Trichirappalli, Trichoor, Trichur, Trichy, Vellur, Velore, Visit, Water, Waterfalls, wonders | 2 Comments »

Growing demand, challenge for The Tamil Nadu Electricity Board – Providing uninterrupted power

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

“ஷாக்’ அடிக்கிறதே, என்ன செய்ய?

தமிழ்நாடு மின்வாரியத்தின் பொன்விழா ஆண்டு இது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கோலாகல விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், மின்வாரிய ஊழியர்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். மேலும் 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கான திட்டங்களையும், ரூ.160 கோடி செலவில் 10,000 டிரான்ஸ்ஃபார்மர்களையும் அறிவித்து பொன்விழாவை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் வளர்ச்சியும், செயல்பாடுகளும் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே இல்லை. அப்பாதுரை, பூர்ணலிங்கம், விஜயராகவன் போன்ற முன்னாள் மின்வாரியத் தலைவர்களின் பங்களிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப்போனால், மற்ற தென்னக மாநிலங்களைவிட மின்உற்பத்தியிலும் சரி, விநியோகத்திலும் சரி, தமிழ்நாடு மின்வாரியத்தின் செயல்பாடுகள் நிச்சயமாகச் சிறப்பானதாகவே இருந்துவருகிறது.

1957-லிருந்து தமிழ்நாடு மின்வாரியம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளைத் திரும்பிப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும். மின்வாரியத்தில் பயனடையும் நுகர்வோர் எண்ணிக்கை சுமார் 4.30 லட்சத்திலிருந்து 1.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. அப்போது மின் இணைப்பு இருந்த நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெறும் 1,813. இப்போது 8,63,177. அப்போது பம்ப் செட்டுகளின் எண்ணிக்கை 33,440. இன்று 18,01,972 விவசாய பம்ப் செட்டுகள் மின் இணைப்பை பெற்றுள்ளன.

10,098 மெகாவாட் மின் உற்பத்தி, 1,148 துணை மின்நிலையங்கள், 1,73,053 ட்ரான்ஸ்ஃபார்மர்கள் என்று மின்வாரியம் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து, தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது என்பதை நினைக்கும்போது வியப்பு அதிகரிக்கிறது.

ஆனால், இந்த சாதனைகளை மட்டும் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தால் அதில் பயனில்லை. மின்உற்பத்தியைப் பொருத்தவரை நம்மை எதிர்நோக்கி இருப்பது மிகப்பெரிய சவால்கள் என்பதுதான் உண்மை. நாளும் அதிகரித்துவரும் மின் தேவையை எதிர்நோக்கும் சக்தி நமது மின்வாரியத்துக்கு இருக்கிறதா என்றால் சந்தேகம்தான்.

கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தின் மின்தேவை 7.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 11.5 சதவீதம் அதிக நுகர்வு ஏற்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு மின்வாரிய இணையதளம் தெரிவிக்கிறது. கூடுதலாக 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கு மின்நிலையங்களை அமைக்க பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழகத்தின் வருங்காலத் தேவைகளை இவை பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறி.

புதிய அணைகளைக் கட்டுவது, நீர்மின் நிலையங்களை அமைப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். தமிழகத்தில் உற்பத்தியாகும் நதியே கிடையாது என்பது மட்டுமல்ல, அப்படியே அந்த நதிகளில் வரும் தண்ணீர், விவசாயப் பாசனத்துக்கே போதாத நிலைமை. அணுமின் நிலையங்களை அமைப்பது என்பது வருங்காலச் சந்ததியினருக்கு ஆபத்தானது என்பதால் அதை வரவேற்பதற்கில்லை. அனல்மின் நிலையங்கள் அமைக்கலாம். ஆனால் இதற்கு மின்உற்பத்தி செலவு பலமடங்கு அதிகம். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில், அதிகரித்து வரும் மின்தேவையை எதிர்கொள்ள, நமது மின்சார வாரியம் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்திருக்கிறதா, வகுத்து வருகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடனடித் தேவைக்கான திட்டங்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.

மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே நாளைய மின்தேவையை நாம் எதிர்கொள்ள முடியும் என்பது நன்றாகவே புரிகிறது. மத்திய மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தின் முயற்சியால் மட்டுமே இந்த விஷயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. மின்வாரியமே முன்வந்து, சூரியஒளி மின்சக்திக்கு முன்னுரிமை அளிக்க நுகர்வோரை ஊக்குவித்தால் மட்டும்தான், எதிர்வரும் இருண்ட சூழ்நிலையை ஒளிபெறச் செய்யமுடியும்.

இன்றைய நிலையில், தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள எல்லா மின்வாரியங்களுமே, மரபுசாரா எரிசக்திக்கு ஊக்கம் அளிப்பதால் தங்களது வருமான இழப்பு பற்றிக் கவலைப்படுகின்றனவே தவிர, தனிநபர் மின் பயன்பாட்டை மரபுசாரா எரிசக்தி மூலம் குறைத்து, மின்சாரத்தை தொழில் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு முழுமையாக விநியோகிக்க முன்வராதது ஏன் என்பது புரியவில்லை.

அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்; அடிக்கடி அதிகரிக்கப்படும் மின்கட்டணம் – இவை இரண்டையும் மின்வாரியம் தவிர்க்க முற்பட வேண்டும். அப்போதுதான் பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு மின்வாரியத்துக்குப் பொதுமக்களின் பாராட்டும் வாழ்த்தும் கிடைக்கும். என்ன செய்ய, “ஷாக்’ அடிக்கிறதே..?

Posted in Alternate, Customer, Dams, Demand, Distribution, Electricity, energy, Grid, Hydroelectric, infrastructure, Megawatt, Power, Project, renewable, River, Solar, Statistics, Statz, Sun, Supply, TNEB, Water, Windmills | Leave a Comment »

China considering property protection: Tax Issues

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

சீனாவில் சொத்து குறித்து புதிய சட்டம் கொண்டு வர அரசு ஆலோசனை

சீன நாடாளுமன்றம்
சீன நாடாளுமன்றம்

சீனாவில், அரசிடமிருந்து நிலத்தை தனியார்கள் குத்தகைக்கு பெறவேண்டிய நிலை உள்ளது பற்றிய கோபம் அதிகரித்து வருவதால், ஒரு புதிய தனியார் சொத்து சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது குறித்து சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.

கிராமப்புறங்களில், தங்களது நிலங்களை, புதிய வீடுகள் மற்றும் தொழிற்சாலைக் கட்டிடங்களைக் கட்டுவோருக்குப் பறிகொடுத்த மக்களின் பிரச்சினைகள் காரணமாக, அங்கு பரவலான சமூக அதிருப்தி நிலவுகிறது.

கம்யூனிஸ்ட் சீனா, ஒரு அதிகரித்து வரும் அளவில், முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டு வரும் நிலையில், இந்த புதிய சட்டம், சொத்து பறிமுதல் செய்யப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு எதிராக பாதுகாப்பளிக்கும். இந்த சட்டத்திற்கு அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————————-

சீனாவில் வறட்சி: உணவு உற்பத்தி பாதிப்பு

பெய்ஜிங், ஜூன் 13: சீனாவில் 6 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் 3 கோடி டன் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது.

சீன வேளாண்மைத் துறை துணை அமைச்சர் வீ சோ கூறியது: நாட்டின் மொத்த தண்ணீர் உபயோகத்தில் விவசாயத்திற்கு 64 சதவீதம் செலவிடப்படுகிறது. நீரை சேமிப்பது சமுதாயத்திற்கு அவசியமானது.

வேளாண்மைத் துறையில் நீர் சேமிப்பு உத்திகளை கையாளுவதும், நீர் சேமிப்பை சிறந்த முறையில் செயல்படுத்துவதும் கடினமான பணி.

மேலும் சீனாவில் 30 கோடி ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாத அளவுக்கு 3000 கோடி கனஅளவு மீட்டர் நீர் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சீன அரசு தற்போது ரூ. 364 கோடிக்கும் அதிகமான செலவில் 16 லட்சத்து 47 ஆயிரத்து 415 ஏக்கர் நிலத்தில் நீர் சேமிப்பு உத்திகளை செயல்படுத்தியுள்ளது.

இதனால் ஆண்டுக்கு 270 கோடி கனஅளவு மீட்டர் மழை நீரும், ஏக்கருக்கு 1260 கனஅளவு மீட்டர் நீரும் சேமிக்கப்படுகிறது.

Posted in Agriculture, Arid, Assets, Capitalism, China, commercial, Communism, Communist, Dams, Disaster, Drought, Economy, Farming, Flood, Food, Government, individuals, industrial, Industry, Irrigation, Issues, Land, Law, Nature, Paddy, Poor, Poverty, Private, Production, Property, Protection, rice, Rural, Stats, Tax, Water | 1 Comment »

Water resource planning – Long term strategies for effective use of Dams, River, Rains

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

கரை ஏறுமா கால்வாய் பாசனம்?

கி.சிவசுப்பிரமணியன்

தமிழகத்தின் முப்பெறும் நீராதாரங்களாக விளங்குபவை

  • கால்வாய்ப் பாசனம்,
  • ஏரிப்பாசனம்,
  • கிணற்றுப் பாசனம்.

இவை அனைத்துக்கும் மழை வளமே அடிப்படை. ஆனால் மழை வளம் குறைந்துவிட்டதால் நிலத்தடி நீர் அபரிமிதமாக உறிஞ்சப்படுகிறது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து திறந்தவெளிக் கிணறுகள் பலவும் வறண்டுபோய் விட்டன. எனவே ஆழ்துளைக் கிணறுகளின் உதவியை விவசாயிகள் நாடி அதில் பேரளவு பணம் விரயம் செய்தும் போதிய நீர் கிடைக்காமல் வாடும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

“கரிகாலன் கட்டி வைத்த கல்லணை’யும் ஆங்கிலப் பொறியாளரான பென்னி குயிக்கின் முயற்சியால் உருவான பெரியாறு அணையும் நவீன தமிழகப் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட “பரம்பிக்குளம் – ஆழியாறு’ பாசனத் திட்டமும் தமிழக மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதோடு விவசாயிகளின் வாழ்க்கைக்கும் அடிப்படையாக விளங்குகிறது.

ஆறுகள் மற்றும் அணைகளிலிருந்து செல்லும் கால்வாய்ப் பாசனத்தை நம்பியுள்ள கிணறுகள் சாதாரணமாக வறண்டு போவதில்லை. ஆனால் இதே கால்வாய்களில் சில ஆண்டுகள் தொடர்ந்து நீர்வராமலும், மழை பொழிவும் குறைந்து போனால் இக்கால்வாய்ப் பாசனக் கிணறுகளில் பெரும்பாலானவை வறண்டு போகும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையை (2002 மற்றும் 2003-ல்) பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன விவசாயிகள் அனுபவித்தது கசப்பான உண்மை. இந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியால் கால்வாய்களில் விடப்பட்ட நீர் வரத்து பயனற்றதாகியது. பல ஆண்டுகளாக பலனளித்து வந்த ஆயிரக்கணக்கான தென்னைகள், வறட்சியால் மடிந்தன.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடனாளிகளாக்கப்பட்டனர். இது போன்ற நிலைமைகளிலிருந்து மீள்வதற்கான வழிகளைக் காண்பது மிக அவசியமாகும்.

பெரியாறு மற்றும் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டங்களின் முக்கிய அம்சம் தமிழக மற்றும் கேரள எல்லைகளில் உற்பத்தியாகும் ஆறுகள் மூலம் கேரள மாநிலத்தால் பயன்படுத்த இயலாத, வீணாக அரபிக் கடலில் கலக்கும் நீரை தமிழகத்தின் வறட்சியால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களுக்கு அளிப்பதே ஆகும்.

1960-களில் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தது. இத் திட்டம் தற்போது கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளித்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத்தின் மொத்த பாசன அளவு ஏறத்தாழ 2.5 லட்சம் ஏக்கராக இருந்தது.

நீர்ப்பாசன ஆதாரத்தைப் பெருக்க முயற்சிக்காமல் நீர்ப்பாசன பரப்பை 1994-ல் அரசு முனைந்து அதிகப்படுத்தியதால் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனம் தற்போது 18 மாதத்திலிருந்து 24 மாதத்துக்கு ஒருமுறை நீர் பெரும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இப்பாசன விவசாயிகளிடையே இருந்த பெருமிதம் மாறி, எங்கே தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மழையின்மையால் பயிர் காய்ந்து விடுமோ என்ற அச்ச உணர்வையே காண முடிகிறது.

இத்தகைய நிச்சயமற்ற தண்ணீர் பற்றாக்குறை நிலைமையைப் போக்க “நல்லாறு திட்டத்தின்’ உபரிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.

அந்த நீரை திருமூர்த்தி அணைக்குத் திருப்பி விட வேண்டும். அதே சமயம் திருமூர்த்தி அணையின் தற்போதைய கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.

இதன் மூலம் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும்; கால்வாய்ப் பாசனமும் கரை ஏறும்; அதை நம்பியுள்ள கிணற்றுப் பாசனமும் செழிப்புறும்.

(கட்டுரையாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்குநர்).

Posted in Aaliyaar, Aazhiyaar, Aazhiyaaru, Agriculture, Dams, Farmers, Ground water, Irrigation, Lake Farming, Nallaaru Plan, Nallaru Plan, Parambikkulam, Parambikulam, Parampikkulam, Periyar, Rain, Shortage, Thirumoorthi dam, Thirumurthi dam, Water, Water sources, Waterways, Wells | 1 Comment »

Rainwater damage prevention scheme to get Rs. 410 Crores – M Karunanidhi

Posted by Snapjudge மேல் நவம்பர் 22, 2006

வெள்ளப்பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண ரூ.410 கோடியில் திட்டம்: கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு 

சென்னை, நவ. 22- பொதுப்பணித்துறையில் உள்ள நீர் வள ஆதாரத் துறை மற்றும் கட்டிட பிரிவுகளில் செயல்படும் திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி சென்னை கோட்டையில் நேற்று ஆய்வு நடத்தினார்.

சிறு பாசன குளங்களை செப்பனிடும் திட்டங்கள் பற்றியும், ஏற்கனவே எடுக்கப்பட்டு முடிக்கப்படாமல் இருந்த நீர் தேக்க திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத்தால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தினார்.

சென்ற ஆண்டு மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சரி செய்வதற்கும், இந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்டு இருக்கிற சேதங்களை சரி செய்வதற்கும், இனி வரும் மாதங்களில் ஏற்படக் கூடிய வெள்ளசேதங்களை முன் எச்சரிக்கையாக தடுப்பதற்கு தேவையான பணிகளைச் செய்யவும் ரூ. 25 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

ஏற்கனவே துவக்கப்பட்டு முடிவு பெறாமல் இருந்த 34 நீர் பாசன திட்டங்களில் இப்போது 6 மாதத்தில் முடிந்த திட்டங்களை உடனடியாக திறந்து வைத்து பாசனத்திற்கு தண்ணீர் அளிக்குமாறு உத்தரவிட்டார். மீதமுள்ள திட்டங்களை வரும் நிதி ஆண்டிலேயே விரைந்து முடிக்குமாறு ஆணையிட்டார்.

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாட்டிலுள்ள பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான 8,326 ஏரிகளை நவீனப் படுத்துவதற்கும் பாசன அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ரூ 2,500 கோடி செலவில் திட்டங்கள் தயாரித்து செயல்படுத்துவதை விரைவு படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகரத்தில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க ரூ.4 கோடியும், திருச்சி பகுதியில் குடமுருட்டி ஆற்றில் உடைப்பு காரணமாக ஏற்படும் வெள்ள சேதங்களை தடுப்பதற்கு ரூ.5 கோடியும், ஒதுக்கி தந்து இருந்தார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்தும் முதல்வர் அவர்கள் ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தினுடைய நிதிநிலை அறிக்கையில் நீர் வள ஆதார துறைக்கு 524 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிதி ஒதுக்கீடு மூலம் நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். அதே போல் பொதுப் பணித் துறையில் உள்ள கட்டிட பிரிவிற்கு ரூ. 225 கோடி நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பணிகளினுடைய முன்னேற்றம் குறித்தும் முதல் – அமைச்சர் ஆய்வு நடத்தினார். பொதுவாக, தமிழ்நாட்டில் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற சென்னை பெருநகருக்கு நிரந்தர பரிகாரம் காண 27 திட்டங்கள் பொதுப் பணித் துறை மூலம் ரூ. 410 கோடிமதிப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர பரிகாரம் காண ரூ 230 கோடி, கல்லணை கால்வாய் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கு நிரந்தர பரிகாரம் காண 220 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் திருச்சி நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்து வெள்ள நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திருப்பும் ரூபாய் 295 கோடிக்கான திட்டத்தினையும் விரைவாக செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த திட்டங்களை விரைவில் நபார்டு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted in Agriculture, Budget, Dams, Drinking Water, Floods, Irrigation, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Lakes, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Perambalur, Plan, Pumps, Rain, Rivers, Tamil Nadu, Trichy, Water | Leave a Comment »