Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Industry’ Category

Employment Opportunities & Education Facilities – Job Guarantee Schemes & Export Processing Zones

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

பகல் கனவாகும் வேலை வாய்ப்பு

ப.செ. சங்கரநாராயணன்

ஆண்டுக்கு 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறப்படும் இந்தியாவில், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மாநிலங்களவையில் அண்மையில் எம்.பி.க்களின் கூச்சல், குழப்பத்துக்கிடையே (மக்களவைத் தலைவருக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது) தாக்கல் செய்யப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 61-வது அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், 55 கோடிப் பேர் 30 வயதுக்கு உள்பட்டவர்கள். அதில், வேலையில்லாதோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துவரும் தகவல் கவலையளிப்பதாக உள்ளது.

1999-2000-ம் ஆண்டில் வேலையில்லாதோர் சதவிகிதம் 7.3 ஆக இருந்தது. 2004-2005-ல் 8.35 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக, (வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவு) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், உழைக்கும் வயதுப் பிரிவினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம் என்கிறார். (உழைக்காமல் திரிகிறவர்களைச் சேர்க்கவில்லை)

இதற்காக அமைப்புசாரா தொழில்துறையில், புதிய வேலை வாய்ப்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் விவசாயத்தை விட்டு நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களை நாடுவோர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, 2015-ல் உள்நாட்டு தேவைக்கு பெருமளவிலான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என, மூத்த விவசாய விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஆயிரக்கணக்கான கோடி கடன் தள்ளுபடி மட்டும், விவசாயிகளை ஒருபோதும், அவர்கள் சந்தித்து வரும் உண்மையான அவலங்களில் இருந்து மீட்டெடுக்காது.

தில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை, நாட்டில் 836 மில்லியன் மக்கள் தினமும் ரூ. 20 வருவாயுடன், சுகாதாரமற்ற சூழலில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 546 மில்லியன் பேர் வேலையின்றித் தவிக்கின்றனர்.

33 சதவிகிதம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள். 12 சதவிகிதம் பேர் மட்டுமே, பள்ளிக் கல்வி முடித்தவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 400 பல்கலைக்கழகங்கள் இருந்தும் (போலிப் பல்கலைக்கழகங்கள் தனி), 10 சதவிகிதம் பேர் மட்டும் கல்லூரிக் கல்வி பயிலும் நிலை வேதனையளிப்பதாக உள்ளது என்கிறார் ராஜசேகரன் பிள்ளை.

உயர்கல்வியை 11 சதவிகிதம் பேர் பெற்றுள்ளனர். அதில் 4.3 சதவிகிதம் பேர் பெண்கள்.

இதில் ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வோரில் 90 சதவிகிதம் பேர் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், 2007-ம் ஆண்டில் நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுப் பணிக்குச் செல்வோர் 28 சதவிகிதமாகவும், உயர்கல்வி கற்கச் செல்வோர் 33 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டனர். தாராளமயமாக்கல் கொள்கைகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பது, இன்னும் அறிக்கை அளவிலேயே உள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 34,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதத்துக்கும் குறைவே. (ராணுவத் துறைக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல்).

இந்தியாவின் 2.5 லட்சம் உள்ளாட்சிகளில் அடிப்படைக் கல்வியை மேம்படுத்தாமல் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாலோ, தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்தாமல் எண்ணிக்கையை உயர்த்துவதாலோ எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை.

குறிப்பாகத் தமிழகத்தில் பாலிடெக்னிக்குகளை விட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதற்குக் காரணம் முற்றிலும் வணிகமயமாகி விட்ட உயர் கல்விதான்.

சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கில் கிடைக்கும் ஊதியமும், அத்துறையில் எப்பாடுபட்டாவது தங்கள் குழந்தைகளை நுழைக்க விரும்பும் பெற்றோர்களின் ஆசையும் ஒரு காரணம். அனைத்துத் துறைகளிலும் தகவல் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் இத்துறையில் வேலைவாய்ப்பு குறையும் நிலையும் உள்ளது.

இந்நிலையில், அதிகமாக வெளிவரும் அரைகுறை பொறியாளர்களால், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது.

பொறியியல் கல்வி முடித்து வெளிவருவோரில் 22 சதவிகிதம் பேர் மட்டுமே, வேலைக்கான தகுதியுடன் உள்ளதாக, கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

மத்திய அரசு அடிப்படைக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் முழுமையான திறன்களை மேம்படுத்தும் பாடத் திட்டங்களையும் அமைத்தால்தான், உயர்கல்வியின் நோக்கம் நிறைவேறும் என்பதை மறுப்பதற்கில்லை. அத்துடன் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பிற்கான பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களையும் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அதுவரை தினம் ஒரு பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என, அரசு பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது பகல் கனவுதான்.

Posted in Agriculture, City, Contract, Contractors, Education, Employment, EPZ, Export, Farmers, Farming, IIM, IIT, Industry, Jobs, Loans, Metro, MNC, Opportunities, SEZ, Suicides, Union, Villages, Work | Leave a Comment »

How to be successful in the Tamil Film Industry – Tips & Backgrounders: Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

நேர்மை வேண்டும்

புரொடக்ஷன் மேனேஜர் கம் புரொட்யூஸர் பாபுராஜா

“”சினிமா…. ஒரு நல்ல தொழில். மற்ற எல்லா தொழில்களிலும் லாபத்தை மட்டும்தான் எதிர்பார்க்க முடியும். ஆனால் சினிமாவில் மட்டுமே லாபத்துடன் சேர்த்து நல்ல பெயரையும் சம்பாதிக்க முடியும்” என்றார் தயாரிப்பாளரான ஆர்.பி.செüத்ரி.

ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஆக வேண்டுமெனில் பெருமளவு முதலீடு போட வேண்டியிருக்கும். பணமிருந்தால் புரொட்யூஸராகி விடலாம். ஆனால் அந்த பணத்தைக் கொண்டு வராதவர்களும் கூட தயாரிப்பாளர் ஆகிவிடும் அதிசயம் சினிமாவில் மட்டுமே சாத்தியப்படும்! தொடர்ந்து நான்கு படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக (புரொடக்ஷன் மேனேஜர்) வேலை பார்த்தால் போதும். திறமையும், நேரமும் கூடும்பட்சத்தில் அவர்கள் தயாரிப்பாளர் ஆவது சகஜமானதுதான்.

ஆர்.பி. செüத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸில் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக புரொடக்ஷன் மேனேஜராகவும், ஜெ. ஜெ. குட் ஃபிலிம்ஸின் அதிபராகவும் இருந்து வருபவர் பாபுராஜா.

புரொடக்ஷன் மேனேஜரின் அசிஸ்டெண்ட் ஆக நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இங்கே நமக்கு வழிகாட்டுகிறார் அவர்.

இந்த இதழில் பாபுராஜா சொல்வதைக் கேட்போம்.

“”நான் உதவி இயக்குனரா வரணும்னு நினைச்சேன். ஆனா வந்த இடத்தில் அப்படி ஆக முடியல. மலேசியா வாசுதேவன் சார் எடுத்த முதல் படமான “நீ சிரித்தால் தீபாவளி’யில் ஆஃபீஸ் பையனா வேலை பார்த்தேன். 1991-ம் வருஷம்னு நினைக்கிறேன். அப்புறம் ஒரு சில படங்கள் வொர்க் பண்ணிக்கிட்டிருந்தேன்.

டைரக்டர் ராஜகுமாரன் சார் மூலமா விக்ரமன் சார் நட்பு கிடைச்சது. அவர் என்னை செüத்ரிசார்கிட்டே அறிமுகப்படுத்தி, “பூவே உனக்காக’ படத்தில புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ண வச்சார். என்னோட வொர்க்கைப் பார்த்த செüத்ரி சார், விக்ரமன்கிட்டே, “இவரு இங்கேயே இருக்கட்டும்’னு கேட்டுக்கிட்டார். அதிலிருந்து இருபத்தி அஞ்சு படங்களுக்கு மேல சூப்பர் குட்ல புரொடக்ஷன் மேனேஜரா வொர்க் பண்ணிட்டிருக்கேன்.

“விண்ணுக்கும் மண்ணுக்கும்’ ஷூட்டிங் நடந்துகிட்டிருந்தபோதுதான் சரத்குமார் சாரும், செüத்ரி சாரும் நீங்க புரொட்யூஸர் ஆகிடுங்க’ன்னு சொன்னாங்க. “அரசு’ படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளரா அறிமுகமானேன். அப்புறம் “சத்ரபதி’ தயாரிச்சேன். இப்போ “நினைத்து நினைத்து பார்த்தேன்’னு ஒரு படம் பண்றேன்.

தயாரிப்பு நிர்வாகின்னா ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கும், டைரக்டருக்கும் பாலமா இருக்கிறவர். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் திறமை முக்கியம். இந்த வேலைக்கு மிகமிக முக்கியம் நேர்மை. அது இருந்தால்தான் லாங் லைஃப்பா நீடிக்க முடியும். சரியான உழைப்பும் அவசியம்.

உங்க மேல நம்பிக்கை இருந்தால்தான் நீங்க நிரந்தரமா ஒரு கம்பெனியில வொர்க் பண்ண முடியும். நம்பிக்கை இல்லைன்னா நீங்க யார்கிட்டேயும் வொர்க் பண்ண முடியாது. புரொடக்ஷன் மேனேஜர்னா நடுநிலைமை வகிப்பது நல்லது.

அதாவது நீங்க புரொட்யூசருக்கும் சப்போர்ட் பண்ணக்கூடாது. டைரக்டர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட்கள்னு யாருக்கும் சப்போர்ட்டா இருக்கக்கூடாது. ஒரு நடிகருக்கு இவ்வளவுதான் சம்பளம்னா அதை கரெக்ட்டா வாங்கிக் கொடுக்கணும். யாருக்காகவும் ஒருதலைபட்சமா செயல்பட்டால் பேர் கெட்டுப் போயிடும். நடிகர்- நடிகை, டெக்னீஷியன்கள் எல்லார்க்கும் சம்பளம் ஃபிக்ஸ் பண்றதும் நாங்கதான்.

எல்லா விஷயங்களையும் தயாரிப்பாளருக்கு சொல்வோம். ஒரு சில தயாரிப்பாளர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பாங்க. செüத்ரி சாரெல்லாம் ஒரு படத்துக்கு அதிகபட்சமே நாலஞ்சு தடவைதான் ஸ்பாட்டுக்கு வந்து பார்ப்பார். úஸô, நாங்க ஒரு தயாரிப்பாளர் மாதிரிதான் அங்கே வொர்க் பண்ணிட்டிருப்போம்.

நாங்க சரியா வொர்க் பண்ணலைன்னா அன்னிக்கு ஷூட்டிங்கே நடக்காதுன்னா பார்த்துக்குங்களேன். எங்களுக்கு அடுத்தபடியா அதிக நேரம் வொர்க் பண்றது டிரைவர்கள்தான்.

ஒரு படத்துக்கு, புரொடக்ஷன் மேனேஜர் மினிமம் மூணுபேரையாவது அசிஸ்டெண்ட்டா வச்சிருப்பார். எல்லார்க்கும் ஒவ்வொரு வேலைகள் இருக்கும். ஒருத்தர் கார் புரோக்ராம் பண்ணுவார். அதாவது ஆர்ட்டிஸ்ட்களுக்கு வண்டி அனுப்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவைக்கிறது. அப்புறம் ஷூட்டிங் முடிஞ்சதும் அவங்களை ரூம்ல கொண்டு போய் ட்ராப் பண்ற வொர்க்கை கவனிப்பார்.

இன்னொருத்தர், லொக்கேஷனை பார்ப்பார். அதாவது மறுநாள் ஷூட்டிங்குக்கு… ஹீரோயின் கோவில்ல சாமி கும்பிடுற சீன் இருக்குதுன்னு டைரக்டர் எங்ககிட்டே சொல்லியிருப்பார். நாங்க, அதற்குத் தகுந்த மாதிரி கோவில் தேடி அதை டைரக்டர்கிட்ட காட்டி முதல்ல ஓ.கே. வாங்குவோம். அப்புறம் அது செட் ஆச்சுதுன்னா அங்கே பெர்மிஷன் சரியா ஏற்பாடு பண்ணி வச்சிருப்போம்.

சில நேரங்கள்ல என்னால வொர்க்கைக் கவனிக்க முடியலைன்னா ஆர்ட்டிஸ்ட்களுக்கு புரோக்ராம் சொல்றதிலிருந்து என்னோட வொர்க்கை எல்லாம் மூணாவது ஆள் கவனிச்சிக்குவார். பெரிய பட்ஜெட் படம்னாலும் மூணே மூணு அசிஸ்ட்டெண்ட் போதும்.

டைரக்டர்களுடைய தேவைகள் எல்லாத்தையுமே முழுமையா, அவர் கேட்ட நேரத்தில் அதாவது சரியான நேரங்களில் நடிகர்- நடிகைகளின் தேதிகள், டெக்னீஷியன்களின் தேதிகள், லொக்கேஷன் பெர்மிஷன் என எல்லாவற்றையும் அமைத்துக் கொடுப்பதுதான் எங்களின் வேலை.

ஆனால் டைரக்டர் சொல்வதை மட்டுமே கேட்டு, அதன்படி நடப்பது மட்டுமே வேலையின்னு நினைக்கக் கூடாது. படத்தோட முழுக்கதையையும் நாங்க தெரிஞ்சிருந்தால்தான் டைரக்டர் திருப்திபடக்கூடிய அளவிற்கு எங்களால் வொர்க் பண்ண முடியும்.

உதாரணமா, டைரக்டர் எங்ககிட்டே ஒரு லொக்கேஷன் கேட்கிறார்னா, நாங்க அவர் நினைக்கிற மாதிரியான ஏதாவது ஒரு லொக்கேஷனைத்தான் காண்பிக்க முடியும். ஆனா படத்தோட கதை எங்களுக்கும் தெரியும்போது, சரியான லொக்கேஷனை டக்குன்னு காண்பிச்சிடலாம். இப்ப உள்ள டைரக்டர்கள் யாரும் பாகுபாடு பார்க்கறதில்ல. அதனால எல்லாருமே அவங்களோட படத்தோட முழுக் கதையையும் எங்ககிட்ட சொல்லிடுறாங்க. அப்பத்தானே ஒரு கேரக்டருக்கு இவரை மாதிரி ஒரு ஆள் வேணும்னு டைரக்டர் கேட்கிறப்ப கொண்டு வர முடியும்?

புரொடக்ஷன் மேனேஜர் வேலைங்கறது ஒரு சின்ன வேலை கிடையாது. தயாரிப்பாளர் பணம் போடுறதோட சரி! சிலர் ஷூட்டிங் நடக்கற இடத்துக்கே வரமாட்டாங்க.
காலையில ஏழு மணிக்கு ஷூட்டிங் நடத்தணும்னா நாங்க அதிகாலை மூணு மணிக்கு எழுந்திரிச்சால்தான் அந்த ஷூட்டிங்கை நடத்த முடியும்.

புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ், புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்ஸ் என நாங்க எல்லாம் மூணு மணிக்கே எழுந்திரிச்சு, எல்லார்க்கும் வண்டிகள் அனுப்பிச்சிடுவோம். நடிகர்- நடிகைகள் எல்லாரையும் ஸ்பாட்டுல அசம்பிள் பண்ண வேண்டியிருக்கும். அப்படி கரெக்ட்டா ஷூட்டிங் ஏழு மணிக்கு தொடங்கிடுச்சின்னா, பல பிரச்சினைகளும் தொடங்க ஆரம்பிக்கும். சில ஆர்ட்டிஸ்ட்டுகள் மதியம் பனிரெண்டு மணிக்கு வரச் சொல்லியிருப்பாங்க.

அவங்களுக்கு தகவல் சொல்லி ரெடி பண்ணனும். அப்புறம் மறுநாள் ஷூட்டிங்கிற்கு தேவையானதையும் ரெடி பண்ணனும். கிட்டத்தட்ட நைட் பதினோரு மணி வரைக்கும் எங்க வொர்க் போயிக்கிட்டு இருக்கும்.

காலையில மூணு மணிக்கு எழுந்திரிச்சதிலிருந்து நைட்டுல பதினோரு மணிக்கு படுக்கப் போறவரைக்கும் நடைமுறை சிக்கல்களாகத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியான சாப்பாடு சாப்பிட முடியாது. நிம்மதியா தூங்கிட முடியாது. டென்ஷன் இருந்துட்டே இருக்கும்.

டைரக்டர்தான் கேப்டன் ஆஃப் த ஷிப்னு சொல்லுவாங்க. úஸô, படம் ஜெயிக்கணும்ங்கற டென்ஷன்ல டைரக்டர் இருப்பார். ஒரு டைரக்டருக்கு அடுத்தபடியா அத்தனை டென்ஷன்களும் எங்களுக்குத்தான் இருக்கும். சரியான டயத்துல சரியா எடுக்கணுமேங்கற டென்ஷன் அவருக்கு… ஒரு ஆர்ட்டிஸ்ட் வர்றதுக்கு பத்து நிமிஷம் லேட் ஆனாக்கூட டைரக்டருக்கு நாங்க பதில் சொல்லி ஆகணும்.

காலையில உள்ள ஷூட்டிங்கிற்கு வர வேண்டிய நடிகருக்கு நாங்க கார் அனுப்பிச்சிருப்போம். ஆனா அது போய் எங்கேயாவது பிரேக் டவுன் ஆகி நிற்கும். அந்த நடிகர் வரலைன்னு டைரக்டர் எங்க மேல டென்ஷனாயிடுவார். அதுக்கு பதில் சொல்லணும்.

ஒரு லொக்கேஷனை ஃபிக்ஸ் பண்ணி வச்சிருப்போம். அங்கே ஏதோ ஒரு குழப்பத்துல வேற யாருக்காவது அன்னிக்கு அந்த லொக்கேஷனை கொடுத்து வச்சிருப்பாங்க. அதை க்ளீயர் பண்ணி வாங்க வேண்டியிருக்கும். úஸô, எல்லா வகையிலும் எங்களுக்கு டென்ஷன் இருக்கும்.

யூனிட்ல உள்ள யாராவது ஒருத்தர் வர லேட்டானாக்கூட சிரமம்தான். ஒரு படத்துக்கு நூறு பேர் வொர்க் பண்றாங்கன்னா அத்தனை பேரும் ஸ்பாட்டுல இருந்தால்தான் வொர்க் நடக்கும். டைரக்ஷன், எடிட்டிங், கேமரான்னு எல்லாத்தையும் நீங்க இன்ஸ்ட்டியூட்ல படிச்சிட்டு, இல்ல புத்தகங்களை படிச்சு தெரிஞ்சுகிட்டோ வந்திடலாம்.

ஆனா இதுக்கு அப்படி கிடையாது. அனுபவம்தான் அவசியம். இந்த தொழிலுக்கு மெமரி பவர் ரொம்ப முக்கியம். ரொம்பப் பேச வேண்டியிருக்கும். உதாரணமா, நமக்கு தேவைப்படுற லொக்கேஷனுக்கு ரொம்ப அமெüண்ட் கேட்பாங்க. பேரம் பேசி கம்மியான அமெüண்ட்ல அதை முடிக்கணும். செலவை சுருக்கணும்.

டைரக்டர் தன்னோட ஸ்கிரிப்ட் ரெடியானதும், அதை எத்தனை நாள்ல முடிச்சிடலாம்னு ப்ளான் பண்ணிட்டார்ன்னா… அந்த ஸ்கிரிப்ட்டுக்கு எவ்வளவு செலவு பண்ணவேண்டியிருக்கும்னு நாங்க கரெக்டா சொல்லிடுவோம். முன்னாடியெல்லாம் பட்ஜெட் போட்டு, படங்கள் பண்ணினாங்க. ஆனா இப்ப பட்ஜெட்ங்கறது யாரு கையிலேயும் கிடையாது. ஆனா டைரக்டர் நினைச்சா சாத்தியம்.

டைரக்டர் நினைச்சால்தான் பட்ஜெட்டை ஏத்தவோ, இறக்கவோ முடியும். புரொடக்ஷன் மேனேஜர் ஓரளவுதான் செலவுகளை மிச்சப்படுத்த முடியும். பட்ஜெட் அதிகமாகுறதும், கம்மியாகுறதும் டைரக்டர் கையிலதான் இருக்கு. இப்ப யாரும் பட்ஜெட் பத்தி பேசுறதில்ல. டைரக்டர்கிட்டே கதையை கேட்கிறப்பவே, இதை நம்பளால பண்ண முடியுமான்னு புரொட்யூசர்கள் யோசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. டைரக்டர் சொன்ன கதைக்கு தகுந்த செலவுகளை பண்ணினால் மட்டுமே குவாலிட்டியை எதிர்பார்க்க முடியும்.

அதனால இப்ப செலவு பண்ணிதான் ஆகவேண்டிய கட்டாயம் இருக்கு. நியாயமா ஒரு படத்தோட கதைக்கு என்னென்ன தேவையோ அதற்கு செலவு பண்ணித்தான் ஆகணும். ஆனால் எங்கே பட்ஜெட்டைக் குறைக்க முடியும்னா…. நெகட்டிவ், அப்புறம் ஷூட்டிங் டேட்ஸ் இதுலதான் செலவை கம்மி பண்ண முடியும்.

அதாவது ஒரு படத்துக்கு பதிமூணாயிரம் அடி ஃபிலிம் போதும். ஆனா சிலர் லட்சக்கணக்கான அடி ஃபிலிமை வீணடிப்பாங்க. ஐம்பது சீன் இருக்கிற ஒரு ஸ்கிரிப்ட், கதையைப் பொறுத்து எழுபது நாளைக்குள்ள மொத்த ஷூட்டிங்கை முடிச்சிடலாம். ஆனா அதுக்கு மேல நாட்கள் போறப்பத்தான் பட்ஜெட்டும் மீறிப்போகுது.

ஒரு ஸ்கிரிப்ட் பக்காவா இருந்து, தேவையில்லாத எதையும் (பாட்டு, சீன்கள்) எடுக்காமல் இருந்தால் படத்தோட பட்ஜெட் பக்காவா குறையும். இந்த கேரக்டருக்கு குறிப்பிட்ட நடிகர்தான் வேணும்னு டைரக்டர் நினைச்சார்னா அந்த நடிகருக்கான சம்பளத்தை கொடுத்துத்தான் ஆகணும். எல்லாமே டைரக்டர் கையில தான் இருக்கு.

ஒரு நடிகருக்கு 5 லட்ச ரூபாய் சம்பளம்னு வச்சுக்குங்க. அதுக்குப் பதில் அவரை போடாமல் புதுமுகம் யாரையாவது நடிக்க வச்சுகூட அந்த அஞ்சு லட்ச ரூபாயை மிச்சப்படுத்துறது டைரக்டர் கையிலதான் இருக்கு. தொடர்ந்து படங்கள் எடுத்து வரும் கம்பெனிகள்ல புரொடக்ஷன் மேனேஜர் இருப்பாங்க.

ஆனா புதுசா படம் பண்ண வர்றவங்ககிட்டே படத்தோட டைரக்டர்தான் புரொடக்ஷன் மேனேஜரை சொல்லுவாங்க. காரணம் டைரக்டர்தான் அந்த புரொட்யூஸரை இண்டஸ்ட்ரிக்குக் கூட்டிட்டு வந்திருப்பார். அதனால யார் நல்லா வொர்க் பண்ணு வாங்கறது டைரக்டருக்குத் தெரியும்.

லொக்கேஷன்கள் சரியா ஃபிக்ஸ் பண்ணனும்னா, ஸ்கிரிப்ட், புரோக்ராம் லிட்ஸ்கள் பக்காவா இருக்கணும். புரோக்ராம் லிஸ்ட் சரியில்லைன்னாத்தான் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருக்கும். லொக்கேஷன்கள் கிடைக்கிறதில ஒருநாள், ரெண்டு நாள் தள்ளி போகலாம்.

கவர்மென்ட் லொக்கேஷன்கள் எல்லாம் முன்கூட்டியே சொல்லி, பெர்மிஷன் வாங்கணும். ரெயில்வே பெர்மிஷன் எல்லாம் ரெண்டு மாசத்துக்கு முன்பே அப்ளை பண்ணினால்தான் கிடைக்கும். அதை வாங்கி வச்சிருப்போம். ஆனா அன்னிக்கு யாராவது ஒரு ஆர்ட்டிஸ்ட்டோட டேட்ஸ் குழப்பமா வரும்.

úஸô, ஷூட்டிங்கை தள்ளிப்போடமுடியாது. காரணம் அப்ப அந்த லொக்கேஷன் பெர்மிஷனை வேற யாருக்காவது கொடுத்து வச்சிருக்கலாம். இந்த மாதிரி நடைமுறை சிக்கல்கள் வரும். அதே சமயம் பிரைவேட் லொக்கேஷன்னா சரி பண்ணிக்கலாம். ரெயில்வே, ஏர்போர்ட் லொக்கேஷன்கள்னா பெர்மிஷன் வாங்கறது கஷ்டமானது. இதெல்லாம் எங்களோட வேலைகள். இதுல குளறுபடி வந்தா ஷூட்டிங் கேன்சலாகக்கூட ஆயிடும்..

சினிமாவைப் பொறுத்தவரை எதற்குமே கல்வித் தகுதி தேவையில்லைன்னுதான் நான் சொல்லுவேன். அதுக்காக எழுதப் படிக்க தெரியாதுன்னு சொல்லக்கூடாது. தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்தில உறுப்பினரா சேர்ந்தால்தான் நீங்க புரொடக்ஷன் அசிஸ்டெண்ட்டாக சேரமுடியும். ஒரு தயாரிப்பாளர் அல்லது டைரக்டரோட சிபாரிசு இருந்தால் மட்டுமே உங்களை புரொடக்ஷன் பாயாகவோ / எக்ஸிகியூட்டிவ்வாகவோ சேர்த்துக் கொள்வார்கள்.

அதாவது அதில் மெம்பரானால்தான் நீங்க படத்துக்கு வொர்க் பண்ண முடியும்.
நாங்க வொர்க் பண்ற படத்தோட அசிஸ்டெண்ட் டைரக்டர் தனியா படம் பண்ணும்போது எங்களை கூப்பிட்டுக்குவாங்க. அதனால எங்களுக்கு தொடர்ந்து வொர்க் பண்றதுக்கான வாய்ப்புகள் வரும். கிட்டத்தட்ட பதினேழு வருஷமா சூப்பர்குட்லதான் நான் வொர்க் பண்றேன்.

ஒவ்வொரு படத்துக்கும் நாங்க சிரமப்பட்டுத்தான் ஆகணும். படத்தோட டெக்னீஷியன்கள் படம் ஆரம்பிக்கிறதுக்கு நாலு நாளைக்கு முன்பிருந்து… படம் முடிஞ்சு, பூசணிக்காய் உடைச்சதுக்கு அப்புறம் போயிடலாம். கேமராமேன்னா ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு பத்து நாளைக்கு முன்பே லொக்கேஷன் பார்க்க அப்படி இப்படின்னு வொர்க் இருக்கும்.

ஆனா எங்க புரொடக்ஷன் வொர்க் எப்படின்னா நாங்க படம் தொடங்கறதுக்கு 3 மாசத்துக்கு முன்பே எங்க வொர்க்கை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி படம் முடிஞ்சும் போஸ்ட் புரொடக்ஷன் அது இதுன்னு 3 மாசம் வொர்க் இருக்கும். ஒரு தயாரிப்பு நிர்வாகிக்குத்தான் அதாவது எங்களுக்குத்தான் சினிமாவில வேலை ஜாஸ்தி.

நான் சரியா வொர்க் பண்ணினதினாலதான் இன்னிக்கு நான் புரொட்யூஸரா புரொமோஷன் ஆகியிருக்கேன். பெரிய முதலீட்டோட வந்தால்தான் படத்தயாரிப்பாளர் ஆக முடியும். ஆனா என்னை மாதிரி மேனேஜர்கள் தயாரிப்பாளர்கள் ஆகுறதுக்குக் காரணம் எக்ஸ்பீரியன்ஸ்களும், சின்ஸியாரிட்டியும் தான்”.

Posted in Actors, Actress, Backgrounders, Chowdhry, Cinema, Directors, executives, Express, Faces, Films, Industry, Kollywood, Life, Managers, Movies, people, Producer, success, Supergood, Tips | Leave a Comment »

TN Govt will accord priority to housing, water scheme: The Governor of Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஜனவரி 23, 2008

தைமுதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம்

40 சமத்துவபுரங்களிலும் தந்தை பெரியார் சிலை!

கல்வி, வேலை வாய்ப்பு, சமூகநீதி, தொழில்வளம், வேளாண்மை,
மகளிர் நலம், மருத்துவம்… … அடுக்கடுக்கான திட்டங்கள்

ஆளுநர் உரையில் மின்னும் ஒளிமுத்துகள்!


சென்னை, ஜன. 23- தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம், 240 சமத்துவ புரங்களிலும் தந்தை பெரியார் சிலை உள்ளிட்ட அரிய அறி விப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.
தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் இன்று காலை 10 மணியளவில், தமிழ்நாடு சட்டமன்றப் பேர வையில் ஆற்றிய உரை வரு மாறு: (ஆளுநரின் ஆங்கில உரையைத் தொடர்ந்து சட்ட மன்றப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அவர்கள் அவ் வுரையைத் தமிழில் படித்தார்). அமைதி தவழும் மாநிலம்
நமது நாட்டின் பிற மாநி லங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது.

மாநிலத்தில் தீவிரவாத நட வடிக்கைகள் எவையும் நடை பெறாவண்ணம் இந்த அரசு தொடர்ந்து விழிப்புடன் கண் காணித்து வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்குள் தீவிரவாதம் ஊடுருவதற்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையினருக்கு எதிராக இந்த அரசு கடும் நட வடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாய வளர்ச்சி காண்பதும், வறு மையை ஒழிப்பதுமே சாதிப் பூசல்களுக்கும், தீவிரவாதத் திற்கும் நிரந்தரத் தீர்வுகளாகும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கலாம்

நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வான தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத் திய அரசு செயல்படுத்தவேண் டுமென்றும், அதன் முதற்கட் டமாக, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை உட னடியாகச் செயல்படுத்தவேண் டுமென்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் கூட, மாநிலங்களிடையே ஒரு மித்த கருத்து எதுவும் எட் டப்படாத நிலையே உள்ளது. எனவேதான், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக் கும் திட்டத்தையாவது செயல் படுத்திட, மத்திய அரசு பதி னொன்றாவது அய்ந்தாண்டுத் திட்ட காலத்தில் நிதியுதவி வழங்கவேண்டுமென்று தமிழக அரசு கோரியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை யில், மேலும் தாமதமின்றி இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை இந்த அரசு விரைந்து மேற்கொள்ளும். மேலும், பருவ காலங்களில் தமிழக நதிகளின் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, வறட்சியான பகுதிகள் வளம் பெறும் வகையில் நிலத் தடியில் சேமித்துப் பயன் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, இந்த அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைக்கும். நமது மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதி களில், ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் வீணாகும் நீரைத் தடுப்பணைகள் மூல மாகச் சேமித்து, ஆண்டு முழு வதும் வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்குப் பயன்படுத்து வதற்கான பெருந்திட்டம் ஒன்று வரும் நிதியாண்டிலி ருந்து செயல்படுத்தப்படும்.

சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்

தமிழக மக்களின் நீண்ட காலக் கனவாக விளங்குவதும் – 1860 ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஆய்வு நடத்திடத் தொடங்கப் பெற்று, பொறியியல் மேதை களால் ஏற்றுக்கொள்ளப் பட்டு, சாத்தியக் கூறுகள் கண் டறியப்பட்டு, சான்றோர்கள் ஆன்றோர்களால் வரவேற்கப் பட்டதுமான – உலகத் தொடர் புகள், வணிகத் தொடர்புகள் விரிவாக்கப்பட்டு நம் நாடு மேலும் வளமும், வலிவும் பெறுவதற்குப் பயன்படக் கூடி யதுமான சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிடத் தொடங்கி, தற்போது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் முன்னுக்குப் பின் முரணாக எழுப்புகிற வாதங்களுக்கு செவிசாய்த்து திட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி விடா மல் தமிழக மக்களின் எதிர் காலத்தை, ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றிடுவதி லிருந்து பின்வாங்காமல் – அந்த அரிய ஆக்கப்பூர்வமான திட் டத்தை நிறைவேற்றிட வேண் டுமென்று மத்திய அரசினை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

240 சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை

தந்தை பெரியார் சிலை ஒன் றினை 95 அடி உயரத்தில் அமைக்கவேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களின் வேண் டுகோளினை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுள்ள நிலையில், ஓரிடத்தில் சிலை அமைப் பதைக் காட்டிலும், பெரியார் பெயரால் மேலும் 95 சமத்துவ புரங்களை அமைத்து; அனைத்து சமூகத்தினரும் சகோதர பாசத் துடன் ஒருமித்து வாழ்கின்ற அந்த ஒவ்வொரு சமத்துவபுரக் குடியிருப்பு முகப்பிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலையை அமைப்பதால், அவருடைய தலையாய கொள்கையான சமுதாயச் சமத்துவக் கொள்கை பரவுவதற்கு வழி ஏற்படும் என்பதற்காக அந்தப் பணியை இந்த அரசு தொடங்க முடிவு செய்துளள்து. ஏற்கெனவே இவ்வரசு அமைத்துள்ள 145 சமத்துவபுரங்களுடன் சேர்த்து, இப்பணி முடிவுற்ற பின் பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழ கத்தில் அமையும்.

தைத்திங்களே தமிழ்ப் புத்தாண்டு

பெரும் புலவரும், தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்று வித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், அய்ந் நூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921 ஆம் ஆண்டு சென்னை – பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி, தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெய ரில் தொடர் ஆண்டு ஒன் றினைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு என்று கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவு எடுத் தார்கள். அந்தக் கருத்தினை, முப்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பே மாண்புமிகு முதல மைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அர சிதழிலும் நடைமுறைப்படுத் திட ஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என்பது, ஒட்டு மொத்த மாக எல்லாத் தமிழ் அறிஞர் களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக் கம் என அறிவித்து நடை முறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி – தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச் சியுடன் கொண்டாடும் வகை யில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்க ளிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன் மானம் போற்றிப் பாடியும் ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச் சியால் அன்பை அள்ளிப் பொழிவர்.

திட்ட ஒதுக்கீடு இரு மடங்கு

கடந்த பத்தாவது அய்ந் தாண்டுத் திட்ட காலத்தின் திட்ட ஒதுக்கீடான ரூபாய் 40,000 கோடியை இரு மடங் குக்கும் மேலாக உயர்த்தி, ரூபாய் 85,344 கோடி அளவில், வரும் பதினொன்றாவது அய்ந் தாண்டுத் திட்டக் காலத்தில் திட்டப் பணிகளை மேற் கொள்ள ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இத்திட்டக் காலத்தில், வேளாண்மைத் துறைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதோடு, சமூகநீதியை உறுதி செய்யும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல் படுத்தப்படும்.

மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் தமிழும்!

இந்த அரசின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மய்ய அரசு தமிழைச் செம்மொழி யாக அறிவித்துப் பெருமைப் படுத்தியது மட்டுமன்றி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையும் சென்னையில் அமைத்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாட மாக்குவதற்கான சட்டம் இயற் றப்பட்டு, அனைவரும் தமிழ் பயில இவ்வரசு வழிவகுத்துள் ளது. தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கச் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளில் தமிழையும் வழக்கு மொழி யாக்கவும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

விவசாயிகளின் நலன்

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் மூலமாக, விவசாயிகளின் வரு வாயைப் பெருக்க இவ்வரசு முனைப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கால்நடை மற்றும் மீனளம் வாயிலாகக் கூடுதல் வருவாயை ஈட்டுதல் ஆகியவை மூலமாகவே இது சாத்திய மாகும். உலக வங்கியின் உத வியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள நிலவளத் திட் டத்தின்கீழ், பொதுப்பணித் துறை, வேளாண் துறை, கால் நடைத் துறை, மீனளத் துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து திட்டப் பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயக் கூட் டுறவுக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தன் வாயிலாக, தமிழக விவசாயிகள் மீண்டும் கடன் பெற வழிவகுக்கப்பட் டுள்ளது. தற்போது அதிகரித் துள்ள உற்பத்திச் செலவு களுக்கு ஏற்ப, விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகை யில், மத்திய அரசு அறிவித்த 100 ரூபாய் ஊக்கத் தொகையோடு சேர்த்து, மாநில அரசின் கூடு தல் ஊக்கத் தொகையாக 50 ரூபாய் வழங்கி, இந்த அரசு சன்ன ரக நெல்லுக்கான கொள் முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 825 ஆக உயர்த்தியுள்ளது.

மூன்று லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்

தரிசு நிலங்களைப் பண் படுத்தி, அவற்றை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங் களுக்கு இலவசமாக அளிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு இலட்சத்து 38 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவச மாக வழங்கியுள்ளது. மேலும், குடியிருக்க இடமற்ற ஏழை எளியவர்களுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட் டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் புறம்போக்கு நிலங் களில் பத்து ஆண்டுகளாக வீடுகள் கட்டிக் குடியிருப் போருக்குப் பட்டா வழங் கப்படும் என்பதைத் தளர்த்தி, வருமான வரம்பையும் விலக்கி, அய்ந்தாண்டுகளுக்கு மேலாகக் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா கிடைத் திட இந்த அரசு வழிவகுத் துள்ளது.

மின் உற்பத்தி

மத்திய மின் உற்பத்தி நிலை யங்களிலிருந்து பெறப்படும் மின் சக்தியின் அளவு குறைந் ததால், நமது மாநிலத்தில் மின் விநியோகத்தில் அண்மையில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட் டன. பழுப்பு நிலக்கரித் தட் டுப்பாடு காரணமாக, நெய் வேலி மின் உற்பத்தி நிலையம் ஒப்புக்கொண்ட அளவிற்கு மின் சக்தியை அளிக்க இயல வில்லை. இதேபோன்று, கல் பாக்கம் மற்றும் கைகா அணு மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறையால் அவற்றின் உற்பத்தித் திறனுக் கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, மத்திய மின் உற்பத்தி நிலை யங்களின் மின் உற்பத்தியை அதிகப்படுத்துமாறு சம்பந்தப் பட்ட துறைகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத் துக் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ரூபாய் 925 கோடி மதிப்பீட் டில் 185 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப் படும்.

இவை 18 மாதங்களுக் குள் இயங்கத் தொடங்கும். இதுதவிர, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத் துள்ளது. வட சென்னை, மேட் டூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை நிறு வுவதற்கான ஆயத்தப் பணி களை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வரு கிறது. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மய்ய அரசு தமிழ்நாட்டிற்கு மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது.

கல்வியில் கணினிமயம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த தி.மு. கழக ஆட்சிக் காலத்தின்போதுதான், 1999-2000 ஆம் ஆண்டில் கணினிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட் டது. கடந்த ஒன்றரை ஆண்டு களில் மாநிலத்தில் உள்ள 1,880 அரசு மேல்நிலைப் பள்ளி களுக்கும், 1,525 அரசு உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணி னிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில், எஞ்சி யுள்ள 100 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 606 உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்படும். மேலும், பதினொன்றாவது அய்ந்தாண்டுத் திட்டக் காலத்திற்குள், மாநிலத்தில் உள்ள 6,650 அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் அளிக்கப்பட இந்த அரசு ஆவன செய்யும். இதுமட்டுமன்றி, தமிழ்வழிக் கல்வியில் பயின்று 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 1,000 மாணவ மாண வியருக்கு ஊக்கப் பரிசாக கணினிகள் அளிப்பதற்கான திட்டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தும்.

திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்

கோயம்புத்தூரில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறு வனம் ஒன்றையும் (அய்.அய். எம்.), மதுரையில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனம் (அய்.அய்.டி.), திருச்சியில் அறி வியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (அய்.அய்.எஸ். இ.ஆர்.) ஒன்றையும் அமைக் குமாறு, மத்திய அரசை, தமிழக அரசு கோரியுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது ஒரு மத்தியப் பல்கலைக் கழகம் கூட இல்லாத குறையை நீக்க, மாநிலத்தில் மத்திய பல்கலைக் கழகம் ஒன்றை அமைக்கு மாறும் மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை, முதல மைச்சர் அவர்கள் இதுகுறித்து சந்தித்துப் பேசியுள்ளார்கள். முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோள் குறித்து நம் பிக்கையூட்டும் வகையில் மத்திய அமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள். இந்த மத்தியப் பல்கலைக் கழகம் திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும்.

மருத்துவத் துறை

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற இய லும். இதை மனதில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் தேவையான பணியாளர்களும், அனைத்து வசதிகளும் கிடைக் கச் செய்ய இந்த அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த பணியிடங் களில் 2,167 மருத்துவர்கள் மற்றும் 2,341 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, 468 புதிய மருத்துவப் பணி யிடங்களும், 1,059 புதிய செவி லியர் பணியிடங்களும் தோற் றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. கிராமப்புறத்தில் உள்ள மகளிருக்கு 24 மணி நேரமும் மகப்பேறு சிகிச்சைக் கான வசதி கிடைக்கும் வகை யில், 1,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று செவிலியர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி, ரூபாய் 597 கோடி ரூபாய் மதிப்பீட்டி லான உலக வங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின்கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து வட்ட மற்றும் மாவட்ட மருத் துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவ தற்கான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இவ் வாறு நமது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதற்குச் சான்றாக, தனியார் மருத்துவ மனைகளில் நடைபெறும் பிள்ளைப் பேறுகளின் எண் ணிக்கை குறைந்து, அரசு மருத் துவமனைகளில் பிள்ளைப் பேறுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வருமுன் காப் போம் திட்டத்தின்கீழ் இது வரை நடத்தப்பட்டுள்ள 4,872 முகாம்களில் 51 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த அரசு பொறுப்பேற்ற பின், மோட்டரோலா, டெல் கம்ப்யூட்டர்ஸ், சாம்சங், ரெனோ-நிஸ்ஸான் போன்ற பல பெரும் தொழில் நிறுவனங் களுடன் ரூபாய் 15,083 கோடி மதிப்பீட்டிலான 12 புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்திடப்பட்டு, அவற்றில் நான்கு தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள் ளன. இதனால் 1,37,140 பேர் களுக்கு நேரடி மற்றும் மறை முக வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

தொழிற்கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி

ரூபாய், 4,000 கோடி மதிப்பீட்டில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஆண் டொன்றுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக் கப்பட்டு வருகிறது. மேலும் ரூபாய், 1800 கோடி மதிப்பீட் டில் போர்டு கார் தொழிற் சாலை ஆண்டொன்றுக்கு கூடுதலாக இரண்டு இலட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக்கம் செய் யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமைந்துள்ள இவ்விரு தொழிற்சாலைகளும், தங்களது பெரும் விரிவாக்கத் தையும் நமது மாநிலத்திலேயே மேற்கொள்வதானது, இந்த அரசின் தொழிற்கொள்கைக் குக் கிடைத்த நற்சான்றித ழாகும்.

கப்பல் கட்டும் தளங்கள்

கடந்த வரவு – செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட் டது போன்று, சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரூபாய் 3,068 கோடி முதலீட் டில் லார்சன் அண்டு ட்யூப்ரோ நிறுவனம் கப்பல் கட்டும் தளம் ஒன்றினை அமைக்கும். இதன் மூலமாக சுமார் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்புப் பெறு வார்கள். கடலூர் மாவட்டத் தில், இன்னொரு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற் கான ஆயத்தப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

24,58,411 வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள் இலவசம்

தி.மு.க., தேர்தல் அறிக்கை யில் அறிவிக்கப்பட்டவாறே, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாதோர் அனைவருக்கும் அவற்றை வழங்கும் திட்டம் இவ்வரசால் செயல்படுத்தப்பட்டு, இது வரை 24,58,411 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றா வது கட்டமாக, 34 இலட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டுள் ளன. சர்வதேச ஒப்பந்தப் புள்ளி வாயிலாக சட்டமன்ற கட்சி களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் ஒப்புதல் பெற்று, ஒளிவு மறைவற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, எவ்விதப் பாகுபாடுமின்றி மாநி லத்தின் அனைத்துப் பகுதிகளி லும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்கள் மூலமாக, ஏழை எளிய குடும்பங்களுக்கு இவை வழங்கப்பட்டு வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத் தப்பட்டு, இந்தியாவிலேயே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து வீடு களிலும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்தான் என்ற சாத னையை விரைவில் எட்டு வோம்.

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை – மாநகர்ப் பகுதி தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகின்றது. இப் பகுதியின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு உடனடி யான மற்றும் நிலையான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இந்த முக்கியப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, ரூபாய் 9,757 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை டில்லி மெட்ரோ இரயில் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி யின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பப் பட்டுள்ளது. இத்திட்டத்திற் கான ஆரம்பக் கட்டப் பணி கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு லட்சம் புதிய வீடுகள்

குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் ஆகியோருக்கு, நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டு வசதி அளிப்பதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். பல்வேறு நகர்ப்புற மேம் பாட்டுத் திட்டங்களின்கீழ், மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் வீட்டு வசதித் தேவையைக் கருத்தில் கொண்டு, பொதுத் துறை – தனியார் துறை கூட்டு முயற் சியின் வாயிலாக மாநகராட்சி களுக்கு அருகில் உள்ள பகுதி களில் வீட்டு வசதித் திட் டங்கள் செயல்படுத்தப்படும். இதுமட்டுமன்றி, வீட்டு வசதித் திட்டங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியை குறைந்த வருவாயு டைய மக்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனை யின்படி, திட்டங்களைச் செயல்படுத்தும் கட்டட அமைப்பாளர்களுக்கு, அதிக தரைப் பரப்புக் குறியீட்டள விற்கு இந்த அரசு அனுமதி யளிக்கும்.

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

மத்திய அரசின் மிகப் பெரும் சாதனைத் திட்டமான தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், தமிழகத்தில் தற்போது 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள அனைத்து மாநி லங்களிலும் இத்திட்டத்தின் செயல்பாட்டை சமூக ஆய்வு வாயிலாக ஆய்ந்து வரும் குழு வினர், தமிழகத்தில் இத்திட் டம் மிகச் சிறப்பாகச் செயல் படுத்தப்படுவதாகவும், இத் திட்டத்தின்கீழ் பணிபுரிவோ ருக்கு நாளொன்றுக்கு எண்பது ரூபாய் ஊதியமாக வழங்கப் பட்டு வருவதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இத்திட் டத்தின்கீழ் பெண்களே 82 சதவிகிதம் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளதாகவும் குறிப் பிட்டு பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தை, மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தியுள்ளதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் நிதியாண்டு முதல் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப் படும்.

நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி

தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியே- அப்பகுதியில் சமுதாயப் பூசல் கள் எழாமல் இருக்க உதவும் அடிப்படையில், இம்மாவட் டங்களின் தொழில் வளர்ச்சிக் கான பல முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. நாங்கு நேரியில் சிறப்புப் பொருளா தாரப் பகுதி அமைப்பதற்கு குறுக்கிட்ட தடைகள் நீக்கப் பட்டுள்ள நிலையில், 2,500 ஏக்கர் பரப்பளவில் பல் தொழில் சிறப்புப் பொருளா தார மண்டலம் ஒன்று விரை வில் அமைக்கப்படும்.

இதைப் போன்றே, கங்கை கொண்டா னில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண் டலம் ஒன்றை ஏற்படுத்தவும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதி களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கவும் எல்காட் நிறுவனம் நட வடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில், கங்கைகொண் டான் மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களுக்கு நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. இம்மாவட்டங் களில் உள்ள படித்த வேலை யற்ற இளைஞர்கள் பெரு மளவில் வேலை வாய்ப்புப் பெறவும், இப்பகுதிகள் பொரு ளாதார வளர்ச்சி அடையவும் இந்த நடவடிக்கைகள் பெரி தும் உதவும் என நம்புகிறேன்.

மகளிர் நலன்

நமது சமுதாயத்தில் பெண் கள் தமது முழு உரிமைகளைப் பெறவும், உரிய பங்கினை ஆற்றவும் இந்த அரசு எப் பொழுதுமே உறுதுணையாக இருந்துள்ளது. பெண்களுக்கு சமச் சொத்துரிமையையும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு வேலை வாய்ப்பு களில் இட ஒதுக்கீட்டையும் வழங்கி பெண்ணுரிமை காத் தது இந்த அரசுதான் என்பதை அனைவரும் அறிவர். இந்த வகையில், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வழி வகுக்கும் சட்டத்தை, திருமதி சோனியா காந்தி அவர்களின் சீரிய வழிகாட்டுதலுடன், மாண்புமிகு பிரதமர் மன் மோகன்சிங் அவர்கள் தலை மையில் நடைபெறும் அய்க் கிய முற்போக்குக் கூட்டணி அரசு விரைவில் நிறைவேற் றிடும் என நம்புகிறோம்.

சுய உதவிக் குழுத் திட்டம்

1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் இந்த அரசால் தொடங்கப் பெற்ற சுய உதவிக் குழுத் திட்டம், இன்று நமது மாநிலத்தில் உள்ள மகளிருக்கு சமூகப் பொருளாதாரச் சுதந் திரம் அளிக்கும் மாபெரும் மக்கள் இயக்கமாக உரு வெடுத்துள்ளது. இதுவரை கிராமப் பகுதிகளில் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த சுழல் நிதி உதவியை, முதன்முறையாக மாநிலத்தின் நகரப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக் கும் இந்த அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. தற்போது மாநிலத்தில் சுமார் 58 இலட் சம் உறுப்பினர்களைக் கொண்ட மூன்று இலட்சத்து அறுபதாயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வரு கின்றன. இக்குழுக்கள் ரூபாய் 1,639 கோடி சேமித்துள்ள தோடு மட்டுமன்றி, ரூபாய் 2,566 கோடி வங்கிகளிடமி ருந்து கடனுதவி பெற்றுள்ளன.

இந்த இளைஞர்களுக்கான பல்வேறு பயிற்சித் திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. மேலும், பொது அறிவு, கணினி அறிவு, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறன் மற்றும் நேர்முகத் தேர்வு களில் பங்கேற்கும் திறன் ஆகிய வற்றை இளைஞர்கள் பெற இந்த அரசு ஆவன செய்யும். பயிற்சி பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் அதிக அளவில் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் பெருமள வில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான திட் டம் ஒன்று இந்த அரசு செயல்படுத்தும்.

மாதாந்திர ஓய்வு உதவி

தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் அளிக்கப்பட்ட வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில், 2006-07 ஆம் ஆண்டில் முதி யோர், ஆதரவற்றோர் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூ 200 லிருந்து ரூ 400 ஆக இந்த அரசு உயர்த்தியது. தற்போது வறு மைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து முதியோருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மறைந்த பாரதப் பிரதமர் திரு மதி இந்திரா காந்தி அம்மை யாரின் பிறந்த நாளான 19-11-2007 அன்று இந்தத் திட்டம் நமது மாநிலத்தில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் வாயி லாக, ஆண் வாரிசுகளின் ஆத ரவுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி, 65 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சுமார் 10 இலட்சம் முதியோர்கள் பயன் அடைவார்கள்.

ஊனமுற்றோருக்கு வழங் கப்படும் உதவித் தொகையை ரூ 200 -லிருந்து ரூ 400- ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு வழங் கப்படும் உதவித்தொகையை ரூ 200-லிருந்து ரூபாய் 500-ஆகவும் இந்த அரசு கடந்த ஆண்டு உயர்த்தியுள்ளது. தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள் ளக்கூட இயலாத மன வளர்ச்சி குன்றியோருக்கு, முன் எப் போதும் இல்லாத வகையில், வருமான வரம்பு மற்றும் எண்ணிக்கை வரையறை யின்றி, மாதாந்திர உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்க இந்த அரசு ஆணை யிட்டது. இதன் அடிப்படை யில், இதுவரை 30,000 பேருக்கு இத்தொகை வழங்கப்பட் டுள்ளதோடு, இவர்களுக்கு சிறப்புக் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வசதிகளும் கிடைத்திட இந்த அரசு ஆவன செய்துள் ளது.

ஒரு வகையில் ஊனமுற் றோர் என்றே கருதப்பட்டு, சமுதாயத்தின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரவாணி களின் நலனில் எப்பொழுதுமே இந்த அரசு அக்கறை கொண் டுள்ளது. சமூக அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச் சினைகளை இவர்கள் எதிர் கொள்வதைக் கருத்தில் கொண்டு, குடும்ப அட்டை களை வழங்குதல், அரசு மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. இவர்களின் மீது இந்த அரசு கொண்டுள்ள பரிவின் காரணமாக இவர் களுக்கென புதிய நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.

நமது மாநிலத்தில், ஏன் நமது நாட்டிலேயே, எங்கும் முன்னர் எப்போதும் வழங்கப் படாத அளவில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த தாய்க் குலத்திற்கு திருமணம் மற்றும் மகப்பேறு உதவிகளை இந்த அரசு வழங்கி வருகிறது. இந்த உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும்போது, அதில் குறுக்கே புகுந்து ஆதாயம் தேடும் நோக்கத்தோடு, சில இடைத் தரகர்களும் அலுவ லர்களும் தவறான செயல்களில் ஈடுபட இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இத் தகைய கயவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

அமைப்பு சாராத் தொழிலாளர்கள்

அமைப்பு சாராத் தொழிலா ளர்களின் நலனுக்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்துள்ளது. 1996-2001 ஆண்டு காலத்தில், இந்த அரசு தான் அமைப்பு சாராத் தொழி லாளர் நல வாரியங்களை அமைத்து நலத்திட்ட உதவி களை வழங்கியது. இடையில் கலைக்கப்பட்ட இந்த வாரி யங்களை இந்த அரசு மீண்டும் அமைத்துள்ளது. இந்த வாரி யங்களின் மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், 2,20,043 அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சுமார் ரூபாய் 56 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவி களைப் பெற்றுள்ளனர்.

சென்னை சங்கமம் கலை விழா

நாட்டுப்புறக் கலைஞர் களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக தனி நல வாரியம் ஒன்றை இந்த அரசு அமைத்துள்ளது. நமது தொன்மையான கலைகளை வாழவைக்கும் அரும்பணியாக, நாட்டுப் புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் ஆர்வத்திற்கு ஆதரவு நல்கிடும் வகையிலும், சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ் மையம் – சென்னை சங்கமம் கலை விழா, மாநகர் முழுவதும் வெற்றிகரமாகவும், மக்களின் பேராதரவுடனும் நடைபெற் றதை யொட்டி; வரும் ஆண்டு களிலும் படிப்படியாக தமிழ கம் முழுவதும் இவ்விழாவை நடத்துவதற்கு இந்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்.

இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக நிலவிவரும் இந்தப் பிரச்சி னைக்கு விரைவில் சுமுகமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த அரசு, மைய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில், அவர் களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியும், இலவச மின்சாரம் அளித்தும் பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ரூபாய் 256 கோடி செலவில், மாநிலத் தில் உள்ள 3 கோடியே 28 இலட்சம் ஏழை எளிய மக் களுக்கு இலவச வேட்டி, சேலைகள் அளிக்கும் திட்டம், நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தப் படும்.

என்றும் மீனவர் நலனுக்கு உயர் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்துள்ளதோடு, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் மீனவர்களுடைய குடும்பங் களுக்கு உதவுவதற்கான திட் டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல் லும்போது அவர்களுக்கு ஏற் பட்டு வரும் இன்னல்களைக் களையத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து எடுக் கும்.

துப்புரவுப் பணியாளர்களின் நலம்

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மனிதக் கழிவை எடுத் துச் செல்லும் தொழிலில் ஈடு பட்டு இருந்தோரின் சமூகப் பொருளாதார முன்னேற் றத்திற்கு இந்த அரசு உறு துணையாக இருக்கும். இந்த நோக்குடனேயே, இவர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் களுக்கு மறுவாழ்வுஅளிக்க வும், மாற்றுத் தொழில்களை மேற்கொள்ள உதவவும் தேவை யான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அருந்ததியர் வகுப்பினர் சமூகப் பொருளாதார நிலை யில் அடித்தளத்தில் இருப்ப தால், அவர்தம் முன்னேற்றத் திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது ஆதிதிராவி டருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்க ளுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி, அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோ சித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைவதற்கு, இப்பிரிவுகளைச் சேர்ந்தோர் அனைத்துத் துறைகளிலும் உயர் வேலை வாய்ப்புகளைப் பெறுவது அவசியம் என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள் ளது. இதனையொட்டி, தற் போது மாநிலத்தில் பெருமள வில் உருவாகிவரும் வேலை வாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின இளை ஞர்கள் பெறும் வகையில், 2007-08 ஆம் ஆண்டிற்கான சிறப்பு மாநில உதவி ரூபாய் 25 கோடி தொகையையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப் பதற்கே இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்வி அறிவிலும், சமுதாய முன்னேற்றத்திலும் சிறுபான் மையினர் பின்தங்கியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு கிடைத்திட இந்த அரசு வழி வகுத்துள்ளது. மேலும், அவர்களது முன்னேற் றத்தில் தனி கவனம் செலுத்து வதற்காக இந்த அரசு ஒரு தனி இயக்குநரகத்தையும் அமைத் துள்ளது.

தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு

இந்த அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத் தும் எப்போதும் சமூக நீதி என்ற குறிக்கோளை மையப் படுத்தியே செயல்படுத்தப் பட்டு வந்துள்ளன. நீதிக்கட்சி யின் வழி வந்த திராவிட முன் னேற்றக் கழக அரசு, சமூக நீதியை நிலை நாட்டுவதில் இந்த நாட்டிற்கே முன்னோடி யாகத் திகழ்ந்து வந்துள்ளதை அனைவரும் அறிவர். இந்த வகையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் தனி யார் துறை வேலை வாய்ப்பு களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

இந்த அரசின் கொள்கை கள், செயல்பாடுகள், சாதனை கள் மற்றும் எதிர்காலத் திட் டங்கள் ஆகியவற்றை உங்கள் முன் விரிவாக எடுத்துரைத்து உள்ளேன். இன்று தமிழகம் கண்டுவரும் ஒப்பற்ற வளர்ச்சி யின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்ற டையச் செய்யவும், நலிவுற் றோர் நலம் பேணவும், ஜன நாயக ஒளி பரவிடவும், மத நல்லிணக்கம் வலுப்பெறவும், சமூகநீதியை நிலை நாட்டவும் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலை மையிலயான இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இவை யாவும் செவ்வனே நிறைவேற, நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் என் உரையை நிறைவு செய்கிறேன்.

– இவ்வாறு ஆளுநர் உரை யாற்றினார்

Posted in Agriculture, Barnala, Budget, DMK, Economy, Electricity, EVR, Farming, Finance, Governor, Govt, Housing, Industry, MK, Periyar, Planning, Power, priority, Schemes, SEZ, TN, Viduthalai, Water | Leave a Comment »

Companies slash prices to sell cement in Tamil Nadu at Rs 200/bag: Tamil Nadu Cement Corporation (TANSEM)

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

பாவம், பொதுஜனம்!

கட்டுமானத் தொழில் என்று சொல்லும்போது, அதில் தொழிற்சாலைகள், அரசின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் என்று அனைத்துமே அடங்கும். இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தியில் 40 சதவிகிதம் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கும், ஏனைய 60 சதவிகிதம் வீட்டு வசதித் துறைக்கும் பயன்படுகிறது.

ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 200 ஆக இருந்தது. கடந்த ஆறே மாதங்களில் நாளொரு விலையும், பொழுதொரு தட்டுப்பாடுமாகக் குதித்தெழுந்து இப்போது ரூ. 260 என எட்டாத உயரத்தை எட்டிப் பார்த்திருக்கிறது. தங்கமும் சிமென்டும் போட்டி போடுவதைப் பார்த்தால், சராசரி மனிதனுக்கு மயக்கம் வராத குறை.

சிமென்ட் விலையைக் குறைக்கும் எண்ணத்தில், கடந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு மூட்டை ரூ. 190க்கும் குறைவாக விற்பனை செய்யும் சிமென்டிற்கான கலால் வரியை டன்னுக்கு ரூ. 50 குறைத்தது என்பது மட்டுமல்ல, அதற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யும் சிமென்டுக்கு டன்னுக்கு ரூ. 200 கலால் வரி உயர்த்தப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள், சிமென்ட்டின் விலையை ரூ. 190க்கும் குறைவாக வைத்திருப்பார்கள் என்ற நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துவிட்டது.

சுமார் ஒரு லட்சம் டன் சிமென்ட்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இறக்குமதி செய்து பொது விநியோகத் துறை மூலம் ரூ. 20 குறைத்து விற்பனை செய்யலாம் என்பது அரசின் முடிவு. இதேபோல அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுமானால், தமிழகத்திலுள்ள சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வேறு பலமாக எழுப்பப்படுகிறது. ஒரு சில தனியார் சிமென்ட் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூட முடியாத அரசு, இந்த நிறுவனங்களை எப்படி நிர்வாகம் செய்யும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தி தற்போது 160 மில்லியன் டன்கள். கூடுதலாக இந்த ஆண்டு 13 மில்லியன் டன் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தும் தட்டுப்பாடு தொடர்வது ஏன் என்பது புரியவில்லை. சிமென்ட் விலை உயர்வால் பல வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டிருப்பதாகவும், திட்டமிட்ட முதலீடு போதவில்லை என்றும் நிறுவனங்களும், அரசுத் துறைகளும், வீடு கட்டும் சராசரி மனிதர்களும் அலறும் நிலை. கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் மத்திய அரசு, சிமென்ட் விலை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகரிப்பதை ஏன், எதற்காக வேடிக்கை பார்க்கிறது? மாநில அரசுகள் பழியைச் சுமக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி மௌனம் சாதிக்கிறது சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம். அது ஏன்?

பொது விநியோகம் மூலம் மாதம் ஒன்றிற்கு 20 லட்சம் மூட்டைகள் சிமென்ட்டை மூட்டை ஒன்றிற்கு ரூ. 200 வீதம் விற்பதற்கு ஆலை அதிபர்கள் ஒப்புக்கொண்டிருப்பதால், தட்டுப்பாடு முற்றிலும் விலகிவிடும் என்று எப்படி நம்புவது? அரசு அதிகாரிகள் வழங்கும் பர்மிட் என்பது, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் லாபமடைய வழிகோலாது என்பது என்ன நிச்சயம்?

இதற்கு உடனடித் தீர்வு இறக்குமதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தரநிர்ணயங்கள் தளர்த்தப்பட்டு இறக்குமதி என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சிமென்ட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, இறக்குமதி செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது யாருக்கு லாபமோ இல்லையோ, நிச்சயமாக சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சாதகமான விஷயம். இறக்குமதி சிமென்ட்டின் தரத்துக்கு நாங்களும் சிமென்ட் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

சிமென்ட் விலை குறைவதும், தட்டுப்பாடு நீங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல் இருப்பது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த அமெரிக்காவிலேயே பாலங்கள் இடிந்து விழுகின்ற நிலையில், தரத்தைத் தளர்த்துவது ஆபத்து.

முதலில் மணல். இப்போது சிமென்ட். யார் காட்டில் மழை பெய்யப் போகிறது என்று யார் கண்டது? பாவம், பொதுஜனம்!

Posted in ADMK, Biz, Building, Cement, Chettinad, Chettinad Cement Corporation, Companies, Construction, Dalmia, Dayanidhi, DMK, Duopoly, Economy, Finance, Grasim, India Cements, Industries, Industry, Kalanidhi, Madras Cements, manufacturers, Maran, Monopoly, Muthiah, Oligopoly, Poor, Private, Ramco, Rich, Tamil Nadu, TANSEM, Ultratech | 1 Comment »

Indian Budget 2008 by P Chidhambaram: Finance, Economy, Analysis, Taxes, Exemptions

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

குறையுமா வரிச்சுமை?

எஸ். கோபாலகிருஷ்ணன்

புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில், பலர் மனதில் எழும் கேள்வி, “”வரிச்சுமை குறையுமா?” என்பதே.

மக்களவைக்கு திடீர் தேர்தல் வரக்கூடும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நேர்ந்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஒரு “தேர்தல் பட்ஜெட்’ ஆக இருந்திருக்கும். சலுகைகளுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று! குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிலைமையை மாற்றிவிட்டன. மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னர் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில் தற்போதைய மக்களவைக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் வர இருக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.

ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பட்ஜெட் சுமை தங்களை மேலும் வாட்டாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயல்பு.

இதை மனதில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் சிதம்பரம் தனது பட்ஜெட்டில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

அரசியல் தேவைகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் புதிய பட்ஜெட் சற்று மென்மையாக இருக்க வேண்டும். காரணம், தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.டி.பி. விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி, ஏதோ மின்னல்போல் தோன்றி மறையாமல் ஸ்திரமடைந்து வருகிறது.

மற்றொரு சாதகமான அம்சம், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் படிப்படியாக அதிகரித்து, இப்போது கணிசமாகவே உயர்ந்துள்ளது. துல்லியமாகச் சொல்லுவதானால், 2003 – 04ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 302 லட்சமாக இருந்தது. 2006 – 07ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 320 லட்சமாகப் பெருகியுள்ளது.

வருமான வரியை மட்டும் எடுத்துக்கொண்டோமானால், இதே காலத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 235 லட்சத்திலிருந்து, 275 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஆக, தனிநபர் வருமான வரித்தொகையும் சரி, கம்பெனிகளின் வருமானவரித் தொகையும் சரி, சமீபகாலமாக அபரிமிதமாகப் பெருகி வருகிறது. மொத்தத்தில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.

இதற்கு பொருளாதார வளர்ச்சியும், நிதி அமைச்சகம் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒரு காரணம் ஆகும்.

அத்துடன், வரிவிகிதங்கள் நியாயமாகவும், மக்களின் சக்திக்கு ஏற்பவும் இருக்குமானால், வரி ஏய்ப்பு நிச்சயமாகக் குறையும். அதேநேரம், மக்கள் தானாக முன்வந்து வரி செலுத்துகையில், வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாமல் போனால், தானாக முன்வந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அரசு இதனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்.

கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததுபோலவே இந்த ஆண்டும், நிதி அமைச்சர் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் பட்ஜெட் குறித்து ஆழமாகக் கலந்து ஆலோசிப்பார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிகிதங்கள் குறைக்கப்படக் கூடும். ஏற்றுமதி குறைவதால் வேலைவாய்ப்பும் கடுமையாகக் குறைகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ரூ. 53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சரே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.

இதுதவிர, உணவு மற்றும் உரம் சார்ந்த மானியங்கள், எளிய மக்களைப் பாதிக்காதவண்ணம், திருத்தி அமைக்கப்படக்கூடும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது உலக வங்கியைத் திருப்தி செய்வதற்காக அல்லாமல், உண்மையிலேயே மானியத் தொகை உரியவர்களைச் சென்றடையும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

வருமான வரித் துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவினரும் உள்ளனர். உதாரணமாக, மூத்த குடிமக்கள். ஒரு பக்கம் சராசரி வயது உயருகிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவு. இவர்களுக்குக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தற்போது வழங்கப்படும் சொற்ப சலுகைகள் நியாயமான அளவு விரிவுபடுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத ஒருநிலையில் இது உடனடித் தேவை.

அடுத்து, சிறு முதலீட்டாளர்களுக்கும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஊக்குவிப்பு அளிக்கப்படவில்லை. 80இ பிரிவின்படி, ஒரு லட்சம் ரூபாய்வரை சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை சிறு முதலீட்டாளர்கள் என்ற பெயரில், பங்குச் சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்பவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.

அஞ்சல் அலுவலக முதலீடுகளுக்கும் 5 ஆண்டுகளுக்குக் குறைவான வங்கி முதலீடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதே உண்மை.

5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வங்கி முதலீடுகளுக்கு 80 இ பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை அளித்திருப்பது வங்கிகள் டெபாசிட் திரட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை.

அனைத்துக்கும் மேலாக, சிறு முதலீட்டாளர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது தற்போதுள்ள E.E.E. (Exempt, Exempt, Exempt) முறை தொடர வேண்டும் என்பதே. அதாவது முதலீடு செய்யும்போது, வரிவிலக்கு. இதைத்தான் ‘E’ (Exempt) என்ற வார்த்தை குறிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு. இதை இரண்டாவது ‘E’ (Exempt) என்ற சொல் குறிக்கிறது. கடைசியாக, முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போதும் வரிவிலக்கு கிடைக்கிறது. இதனை மூன்றாவது ‘E’ (Exempt) குறிக்கிறது.

உதாரணமாக, பொது வருங்கால வைப்புநிதி (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC.) இன்சூரன்ஸ் ஆகிய பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் EEE. என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. இது தொடர வேண்டும்.

ஆனால், EET. (Exempt, Exempt, ், Tax) என்ற புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சிதம்பரம் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த உத்தேச முறையின் கீழ், மூன்றாவது கட்டத்தில், அதாவது முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டும். இதைத்தான் T(Tax) என்ற சொல் குறிக்கிறது.

இத்திட்டத்தை கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கேல்கர் குழுவினர் கூறிய காரணங்கள் விசித்திரமானவை. “”பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு இடையே நிலவும் பாகுபாட்டை அகற்றுவது என்பது ஒன்று. இரண்டாவது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டுள்ளது” என்பதுதான் அது.

நம் நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டால் சிறு முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பரிந்துரையை நிதி அமைச்சர் ஏற்கலாகாது.

ஏட்டளவில் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், வரிச்சுமையாவது குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

————————————————————————————————————————————————————

சீனாவின் சவாலை எதிர்கொள்ள…

புது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த முன்னணி தொழிலதிபர்கள் வழக்கமான வரிச்சலுகைகளுடன் கூடுதலாக ஒரு வரம் கேட்டுள்ளனர். அது, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 150 சதவீத “இறக்குமதி வரி’ விதிக்க வேண்டும் என்பது.

தசரதனிடம் கைகேயி கேட்ட வரம்போல அல்ல என்றாலும் சீனத்துப் பண்டங்களால் இந்தியத் தொழிலதிபர்களின் தூக்கம் கெட்டு வருவதை இது நன்கு உணர்த்துகிறது. பொம்மை, பேட்டரி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டெலிவிஷன், செல்போன், காகிதம், அச்சு இயந்திரம், ஆலைகளுக்கான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் என்று எல்லா துறைகளுக்கும் தேவைப்படும் பொருள்களைத் தயாரித்து அதை மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையில் கொண்டுவந்து குவிக்கிறது சீனா.

தனிநபர் வருமான வரிவிகிதத்தை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும், வருமான வரி விலக்கு வரம்பை ஒரேயடியாக

5 லட்ச ரூபாய் வரைக்கும் உயர்த்த வேண்டும், கம்பெனிகள் மீதான வரியை இப்போதுள்ள நிலையிலேயே அனுமதித்துவிட்டு, “”சர்-சார்ஜ்” எனப்படும் கூடுதல் தீர்வையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நமது தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறார்கள்.

கம்பெனிகள் தாங்களே மேற்கொள்ளும் ஆராய்ச்சி-வளர்ச்சிகளுக்கான செலவுக்குத் தரும் வரிச்சலுகையை, வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும்.

மக்களவைக்குப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் கேட்ட வரங்களில் பெரும்பாலானவற்றை “சிதம்பரசாமி’ அருளக்கூடும். ஆனால் சீனாவின் சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறார்?

சீனாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் அங்கு உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துவிட முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிச முறை உற்பத்தி, விநியோகம் எல்லாம் டெங் சியோ பெங் காலத்திலிருந்து படிப்படியாக நீங்கி, உலக அளவில் போட்டி போடத்தக்க கட்டமைப்பு அங்கே வளர்ந்து வந்திருக்கிறது. சீனத்தின் “பட்டுத் திரை’க்குப் பின்னால் நடந்தவை என்னவென்று உலகம் இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை.

சீனத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அங்கும் தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. சொந்த வீடு, நகை, வெளிநாட்டு உல்லாசப் பயணம் என்று சீனர்களால் மெல்லமெல்ல வெளியில் வரமுடிகிறது. சீனத்தில் ஒரே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தாராளமயம், உலகமயமாக்கலின் சிற்பி என்று இந்தியாவில் நாம் சிலரை அடையாளம் கண்டு பாராட்டி (அல்லது வசைபாடி) வரும் நிலையில், சீனா உண்மையிலேயே விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

நம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இன்னமும் பெரும் அளவுக்கு லாபகரமாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல படிப்பும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களும், தொழில்திறன் உள்ள தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவும்-ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் உள்ளவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி, நமது பொருளாதாரத்தை மேலும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லாமல், அடுத்தடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களையும், மத்திய பட்ஜெட்டையுமே மையமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் செக்குமாடு போல ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

சீனாவுக்கு இணையான தொழில்வளத்தை நாமும் அடையத் தடையாக இருப்பது எது என்று ஆராய்ந்து, அதை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பின்தங்கியே இருப்போம்; சீனா, அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.

———————————————————————————————————–
சிதம்பர ரகசியம்

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், முடிந்தால் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்திய அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் விஷயம். இதை மாநிலங்களுக்காகத் தரப்படும் நிதி கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கச் செலவிடப்பட வேண்டும் என்பது அவர்களது அபிப்பிராயம்.

மக்கள் நிர்வாகம், தேச நிர்வாகம் போன்ற விஷயங்கள் வியாபார ரீதியாகச் செய்யப்படுபவை அல்ல. லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட முடியாது. குறிப்பாக, இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண் தொழிலை நம்பி இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை அகற்றுவது என்பது, இந்தியாவை சோமாலியா ஆக்கும் முயற்சி. அது விபரீதத்தில் முடிந்துவிடும்.

அதேநேரத்தில், அரசின் மானியங்கள் சேர வேண்டிய விவசாயிகளைப் போய்ச் சேர்கிறதா என்பதும், மானியம் பயனுள்ளதாக அமைந்து விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய உர அமைச்சகம் நடப்பு ஆண்டுக்குத் தரப்படும் உர மானியம், அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பு செய்யப்பட்டு சுமார் 50,000 கோடி ரூபாயாக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. நிதியமைச்சகம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்.

யூரியா போன்ற உரங்களுக்கான உற்பத்திச் செலவில் பாதிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயிகள் தருகிறார்கள் என்றும், தங்களுக்குத் தரப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரத் தயாரிப்பாளர்கள் மத்திய உர அமைச்சகத்தின் மூலம் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகத் தரப்படாமல் உர உற்பத்தியாளர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குகிறார்கள். அதனால், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும், 100 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும் ஒரே விலையில்தான் உரங்கள் தரப்படுகின்றன.

பெரிய நிலச்சுவான்தார்களுக்கு இந்த மானியத்தின் பயன் சென்றடைய வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, மானியத்தின் பயன் உர உற்பத்தியாளர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கிறது என்பது அதைவிட வேதனையான விஷயம். தங்களுடைய நிர்வாகச் செலவுகளை அதிகரித்து மானியத்தின் பெரும்பகுதி பயனை உரத் தயாரிப்பாளர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, மானியம் நேரடியாக விவசாயிகளைப்போய் சேரும்படியான வழிமுறைகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கொடுத்த உறுதிமொழி, செயல்படுத்தப்படவே இல்லை. உரத் தயாரிப்பாளர்கள் அதைச் செயல்படுத்தவிடவில்லை என்றுகூடக் கூறலாம். அப்படிச் செய்திருந்தால், பெரிய நிலச்சுவான்தார்கள் மானியம் வழங்கும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள். சுமார் எட்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்.

தற்போது விவசாயிகள் தாங்கள் எந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். மானிய விலையில் உரத் தயாரிப்பாளர்கள் வழங்கும் யூரியா போன்ற உரங்களைத் தான் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. மானியம் நேரடியாக அவர்களைச் சேர்கிறது எனும்போது, தங்களது பயிறுக்கு ஏற்ற கலவை உரங்களைப் பெறும் வசதி அவர்களுக்கு ஏற்படும். விவசாய உற்பத்தி பெருகும்.

சிறு விவசாயிகளை எப்படி அடையாளம் காண்பது? அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது?~ இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் இந்த அரசும், நிர்வாக எந்திரமும், அதிகாரிகளும் எதற்கு?

விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படவோ, நிறுத்தப்படவோ கூடாது. மாறாக, முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் பெயரைச் சொல்லி பெரிய உர நிறுவனங்கள் மானியத்தை விழுங்குவது தடுக்கப்பட வேண்டும். சேர வேண்டியவர்களைப்போய் மானியங்கள் சேராமல் இருப்பதற்கு யார் காரணம்? நிதியமைச்சருக்குத்தான் வெளிச்சம்!

————————————————————————————–

நிதியமைச்சரை நம்புவோமாக!

உலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் திசைதிரும்பிய நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பலமான பொருளாதார அடித்தளம் என்பது ஒரு தேசத்தின் அன்னியச் செலாவணி இருப்பும், ஏற்றுமதியும் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தன்னிறைவும்கூட என்பதைத்தான் இந்த எச்சரிக்கைக் குரல்கள் வலியுறுத்தின.

பங்குச் சந்தைப் பொருளாதாரம் என்பது, தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளிலிருந்து இணைபிரிக்க முடியாத விஷயம். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆபத்தே, ஒரு சில தனிநபர்களின் அதிபுத்திசாலித்தனம் பங்குச் சந்தையில் பூகம்பத்தை ஏற்படுத்தி அப்பாவி முதலீட்டாளர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும் என்பதுதான். ஹர்ஷத் மேத்தா மற்றும் யு.டி.ஐ. மோசடிகள் எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைத் தங்களது சேமிப்புகளை ஒரே நொடியில் இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சோகக்கதைதான் எடுத்துரைக்கும்.

பங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு மோசமான பரிமாணத்தை விரைவில் இந்தியா சந்திக்க இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், உலக அரங்கில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், பிரச்னைகளும் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்பதை நாம் சந்திக்க இருக்கிறோம்.

அமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது என்பதை உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமன்றி, அமெரிக்க அரசே உணர்ந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 140 பில்லியன் டாலர் திட்டமொன்றை அறிவித்திருக்கிறார். வரிக்குறைப்பு மூலம் அமெரிக்கப் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனையும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதுதான் அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு.

பொருளாதாரப் பின்னடைவின் விளைவால், உற்பத்தி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்பதுதான் அவர்கள் கவலை. ஏற்கெனவே புஷ் நிர்வாகத்தின்மீது காணப்படும் அதிருப்தி, இதுபோன்ற வேலைக்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களால் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைவலி அது.

பெரிய அளவில் அமெரிக்காவுக்கு நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி இல்லை என்பதால் அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு நம்மைப் பாதிக்காது என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது ஐ.டி. நிறுவனங்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவை நம்பித் தொழில் செய்பவர்கள். நமது இந்தியப் பங்குச் சந்தை மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அன்னிய மூலதனத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, டாலர்களாக வந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது.

அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்களது மூலதனத்தை இந்தியாவுக்குத் திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுபோன்ற முதலீடுகள் திடீரென திரும்பப் பெறப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது பொருளாதாரத்தையே தகர்த்துவிடும் தன்மையது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல், அமெரிக்காவைச் சார்ந்த அத்தனை நாடுகளும் குழம்பிப் போயுள்ளன.

இந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அமெரிக்கப் பின்னடைவு நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி கூறியிருக்கிறார். நமது அடிப்படைப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் கூறியிருக்கிறார். நல்லது, நம்புவோம். ஆனாலும் சிறு சந்தேகம்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரமும் பலமாகத்தானே இருந்தது? எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறோமே, அமெரிக்கா ஆட்டம் கண்டால் நாமும் ஆட்டம் காண மாட்டோமா?

—————————————————————————————-

நேர்முகமா, மறைமுகமா?

மத்திய பட்ஜெட் தயாராகி வருகிறது. வழக்கம்போல தொழில்துறையினர், சேவைத்துறையினர், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துப் பேசி ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்.

ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கணினித்துறையில் ஈடுபட்டோர், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மருந்து-மாத்திரை தயாரிப்பாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், தகவல் தொடர்பில் முதலீடு செய்தோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கட்டுமானத் துறையில் உள்ளோர், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவத் தொழிலைச் செய்வோர், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்துவோர் என்று வசதி படைத்தவர்களே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.

“”மோரீஷஸிலிருந்து முதலீடு செய்தால் வரி விதிப்பு கிடையாது” என்ற மொட்டையான சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று “”சமீபத்தில்தான்” நிதி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கை வருமாம். மத்திய பட்ஜெட் என்பதே பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் நலனுக்காக ஏழைகள் மீது வரியைச் சுமத்தி கறாராக வசூலிப்பதற்குத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் எல்லோருக்குமே 30%தான் வருமான வரி என்பது எந்த ஊர் நியாயம்? 20 லட்சம் சம்பாதித்தாலும் 20 கோடி சம்பாதித்தாலும், 200 கோடி சம்பாதித்தாலும் உச்ச பட்சம் 30% தான். வாழ்க மத்திய அரசின் சோஷலிசம்.

ஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வயதான பெற்றோர்கள், கவனித்தே தீர வேண்டிய ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், விதவையர், நிரந்தர நோயாளிகள் என்று பல பிரச்னைகள் உண்டு. சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்குவதே இவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. வருமான வரிச் சலுகைக்காக வீடு கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை வெளியில் சொல்லும்படியாக இல்லை. நம் நாட்டின் மருத்துவ இன்சூரன்ஸ் லட்சணம் மற்ற எல்லோரையும்விட சிதம்பரத்துக்கே தெரியும். ஆயினும் நடுத்தர வர்க்கத்துக்கு அவர் தரும் நிவாரணம் என்ன?

நடுத்தர வர்க்கத்தின் சேமிக்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தேசிய புள்ளிவிவர நிறுவனம் சமீபத்திய கணக்கெடுப்பிலிருந்து அறிந்து அரசுக்கு அறிக்கை தந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான அம்சம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பினால்தான் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று வருகின்றன. அந்தத் தொகையிலிருந்துதான் அரசு, தனக்கு முக்கியச் செலவுகளுக்குக் கடன் பெறுகிறது. விதை நெல்லைப் போன்றதுதான் நடுத்தர மக்களின் சேமிப்பு. அதற்கு வழி இல்லாமல் வருமானம் ஒட்டத்துடைக்கப்படுகிறது என்றால் நிதி நிர்வாகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.

விலைவாசி உயர்வு, ஊதியக் குறைவு, நுகர்வு கலாசாரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. முதல் இரண்டுக்கும் மத்திய, மாநில அரசுகளும் நம் நாட்டுத் தொழில்துறையும் காரணம். மூன்றாவதற்கு வெளிநாட்டு தனியார் வங்கிகளும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிவிட்ட நம் நாட்டு நிதி நிறுவனங்களும் காரணம்.

உலகமயம், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது என்று கூறி சுங்கவரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி ஆகியவற்றைக் கணிசமாக குறைக்கிறார் நிதியமைச்சர். வெளிநாடுகளிலிருந்து வரும் தேவையற்ற இறக்குமதியைக்கூட தவிர்க்க முடியவில்லை என்று சொல்கிறார். ஆனால் நேர்மையாக உழைத்து, வருமானத்தை மறைக்க முடியாத நிலையில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு சலுகை காட்டுவதை, தேவையற்ற செயல் என்று கருதுகிறார்.

வீட்டு வாடகை, மளிகைச் செலவு, வைத்தியச் செலவு ஆகிய மூன்றும் மாதாமாதம் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை; அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தை அவர்களே கூட்டிக்கொண்டுவிடலாம். வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளுக்கு “”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்” அளவுக்கு இது தீவிர பிரச்னை கிடையாதே? எல்லாம் நம் தலையெழுத்து!

———————————————————————————————————————–
“சிதம்பர’ ரகசியம் எடுபடுமா?

எம். ரமேஷ்

இம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளது. தொழில்துறையைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. லீப் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு பட்ஜெட் இது.

பட்ஜெட்டின் இறுதிப் பலன் பெருவாரியான நடுத்தர மற்றும் சாதாரணப் பிரிவு மக்களின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக அமைவதில்லை. பல சமயங்களில் பட்ஜெட், இருக்கின்ற நிலைமைக்கும் வேட்டு வைப்பதாகத்தான் இருக்கிறது.

பட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் விலைகள் உயரும். சராசரி இந்தியனுக்குச் சுமை கூடும். அறிவிப்புகள் நிறைய இருக்கும். ஆனால் அதனால் யாருக்குப் பலன் என்பது மட்டும் புரியாத “சிதம்பர’ ரகசியமாய் இருக்கும்.

கூடுதல் வரிச் சுமையில் சிக்காமல் தப்பித்தால் போதும் என்று நடுத்தரப் பிரிவு மக்கள் நினைக்கின்றனர். நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சலிப்பே அடித்தட்டு மக்களிடம் அதிகம் நிறைந்திருக்கிறது.

பொதுவாக தாராளமயமாக்கலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்துமே நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சுமையாகத்தான் இருந்துள்ளது.

நாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அவரை அடியொற்றி சிதம்பரமும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தாராளமயம் தொடரும் என்பது உறுதி.

தாராளமயப் பொருளாதாரம் வேளாண் துறையை அறவே ஒதுக்கிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறை பக்கம் சிதம்பரம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

இருப்பினும் இந்தப் பட்ஜெட்டை சுமையில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யவே சிதம்பரம் விரும்புவார். ஏனெனில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

அதேசமயம், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான கூடுதல் செலவினம், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது ஆண்டுக்கான ஒதுக்கீடு போன்ற பல பிரச்னைகள் சிதம்பரம் முன் நிற்கும் சவால்களாகும்.

வேளாண் துறை வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக உள்ளது. வேளாண் உற்பத்தியை 4 சதவீதமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பல நடவடிக்கைகளை சிதம்பரம் எடுத்தாக வேண்டியுள்ளது.

விவசாயக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல முனைகளிலிருந்து வலுத்து வருகிறது.

அதேபோல வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 29,200 கோடி டாலர் உள்ளது. அதேபோல பணவீக்கமும் 4.35 சதவீதமாக கட்டுக்குள் உள்ளதும் திருப்திகரமான விஷயம்.

தொழில்துறை வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு 13.4 சதவீதத்திலிருந்து தற்போது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டவேண்டுமானால் வேளாண் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாகிறது.

முந்தைய பட்ஜெட்டுகளைப் போலவே மூன்று முக்கிய விஷயங்களுக்கு மட்டும் சிதம்பரம் முன்னுரிமை அளிப்பார் என்பது திண்ணம். ஒன்று நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, இரண்டு, கட்டமைப்புத் துறையை விரிவாக்குதல், மூன்று, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவையே.

வெறுமனே அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதிலோ பொருளாதார வளர்ச்சியை எட்டிவிடமுடியாது.

கல்வி, இன்றைய நிலைமைக்கேற்ப வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள்தானே நீண்டகாலத்தில் உண்மையான, உறுதியான வளர்ச்சிக்கு வித்திட முடியும்? வரும் பட்ஜெட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

கிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றம் போன்றவையெல்லாம் தாராளமய அலையில் எங்கோ தள்ளப்பட்டு விட்டன.

காங்கிரஸ் கூட்டணிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதுடன் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் சிதம்பரத்துக்கு உள்ளது.

வேளாண்மை மற்றும் மகளிர்க்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக சலுகை காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வார்த்தைகளைப் பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை சிதம்பரம் எடுப்பார் என உறுதியாக நம்பலாம்.

மற்றபடி, கிட்டத்தட்ட இன்னொரு மன்மோகன் சிங் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று நம்பலாம்.

Posted in 2008, America, Analysis, Balance, Budget, Business, Cheap, Chidambaram, Chidhambaram, China, Chithambaram, Commerce, Corporate, Currency, Deflation, Dollar, Economy, Exchange, Exempt, Exemptions, Expenses, Exports, Finance, Imports, Income, India, Industry, Inflation, Loss, Monetary, Profit, Recession, Rupees, sectors, SEZ, Tax, Taxes, US, USA | Leave a Comment »

Electricity Distribution and Power Generation in Tamil Nadu – Energy Crisis and its Impacts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2007

கண்ணாமூச்சி ஆடும் மின்சாரம்

எஸ். ஜெய்சங்கர்

உலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு, வெளிநாடுகளுக்கு நமது சந்தையைத் திறந்துவிட்டாகிவிட்டது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாகக் குவிகின்றன. தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியில் நமது நாடு 9 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ளது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் நம் நாட்டு வணிகர்கள் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், அனைத்து வசதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்ட இந்திய நிறுவனங்கள் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகச் சந்தையில் காலூன்ற முடிகிறது.

சிறு, குறு நிறுவனங்களின் இன்றைய நிலையோ பரிதாபமாக உள்ளது. தொழிலை மிகுந்த லாபகரமாக நடத்தவும் முடியாமல், அதை விட்டு விலகவும் முடியாமல், புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது. இதில் தொழிலை நசுக்க, முன்னறிவிப்பற்ற மின்தடை எனும் இம்சை வேறு இவர்களை வாட்டத் தொடங்கிவிட்டது.

மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்ளும் இந்த சிறு, குறு தொழிற்சாலைகள், தினசரி பல முறை ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளன.

வேலையே நடக்காதபோது, தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாமல் தாற்காலிக விடுமுறைகளும் அறிவித்துள்ளன. மிகப்பெரிய தொழில் துறை நிறுவனங்களாக இருந்தாலும், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவை அதிகரிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் தொகுப்புகள் கொண்ட தொழிற்பேட்டை பகுதிகள், நகர்ப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்தடையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை அமைந்திருப்பது கிராமப் பகுதிகளிலா? நகரப் பகுதிகளிலா? என்பது நிச்சயம் அரசுக்குத் தெரியாமல் இருக்காது.

தமிழகத்தின் மின்தேவை தினசரி 8,500 மெகாவாட். இதுபோக, வெளிமாநிலத்துக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை விற்பனை செய்து வந்துள்ளது தமிழகம். ஆனால், இன்றைய நிலையில் மின் உற்பத்தி குறைந்து போனதால், வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தினசரி வழங்கப்படுகிறது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தினசரி 1,500 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துபோய்விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என விளக்கம் அளிக்கிறது தமிழக அரசு.

உண்மையில், தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், தனியார் காற்றாலைகள், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து 10,500 மெகாவாட் மின்சாரத்தை தினசரி உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது. எங்கு தவறு நடக்கிறது என்பது அரசுக்குத் தெரியும்.

இதனால், மாநகராட்சிப் பகுதிகளான சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மின்தடை ஏற்படுகிறது.

கிராமப்புறங்களில் மின் தடை ஏற்பட்டால், சிறிது நேரம் வீட்டுக்கு வெளியே காற்றாட இருக்க முடியும். தீப்பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியது போன்ற குடியிருப்புகளில் வசிக்கும் நகர்ப்புற மக்கள், மின்தடையால் தங்களுக்கு ஏற்படும் “புழுக்கத்தை’ தீர்க்க எங்கு செல்வது? ஆனால், நகரில் மின்தடையே இல்லை என்கிறார் மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் துணை மின் நிலையங்களில், தினசரி எத்தனை முறை, எவ்வளவு நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்ற விவரங்கள் நிச்சயம் அரசுக்குத் தெரிந்திருந்தும், “தமிழக நகரப் பகுதிகளில் மின்தடை இல்லை, கிராமப்பகுதிகளில் மட்டுமே மின்தடை’ எனும் பதிலைக் கூறியிருக்கிறது அரசு.

அரசின் கூற்றுப்படியே கிராமப் பகுதிகளில் மட்டும் மின்தடை என்றாலும், அங்கும் பாதிப்புகள் அதிகம் உள்ளன. இலவச மின்சாரம், மானிய விலையில் மின் மோட்டார் தந்த அரசு, அதை இயக்கத் தேவையான மின்சாரத்தைச் சரியாகத் தருவதில்லை. ஆற்றுப் பாசனம் அற்ற பகுதிகளில் கிணற்றுப் பாசனம் ஒன்றே வழி. இந்த விளை நிலங்களில் மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

கிராமப் பகுதிகளை ஒட்டிய ஆற்றுப் படுகைகளில் இருந்து, பெரிய மின் மோட்டார்கள் மூலம் நகருக்குக் கொண்டு வரப்படவேண்டிய குடிநீர் விநியோகமும் தடைப்படுகிறது.

தொடர்ந்து 24 மணி நேரமும் மோட்டார் இயங்கினாலே, நகர்ப்புற குடிநீர்த் தேவையைத் தீர்க்க முடியாத நிலையில், இந்த மின் துண்டிப்பால் 13 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய அவலநிலை. இது அரசுக்குப் பொதுமக்களிடையே அவப்பெயரைத் தேடித் தருகிறது.

இந்நிலை ஓரிரு நாள்களில் சரியாகும் எனத் தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.

சென்னை, மேட்டூர், குந்தா, தூத்துக்குடி, உடன்குடி ஆகிய இடங்களில் புதிய மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்து, அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் தமிழகத்தின் எதிர்காலப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம்.

மக்கள் படும் துயரங்களைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுத் தீர்வு காணும் மனோதிடம் அரசுக்கு தேவை. முன்னறிவிப்பற்ற மின்தடை பிரச்னைக்கு தற்போதைய தேவை உடனடித் தீர்வு மட்டுமே. அரசின் மறுப்பறிக்கையும் விளக்கமும் அல்ல.

————————————————————————————————————
மின்வெட்டா, மின்னல் வெட்டா?

தொழில்துறையிலும் விவசாயத்திலும் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து விளங்குவதற்குக் காரணமே மின்சாரத்துறை என்றால் அது மிகையாகாது. அந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கும் ஆர்க்காடு என். வீராசாமி பழுத்த அரசியல்வாதி, நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர்; எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சரின் நிழல் போன்றவர், முதல்வரின் மனம் அறிந்து செயல்படுபவர்.

இத்தனை பீடிகைகள் போடுவதற்குக் காரணமே, சமீப மாதங்களாக எல்லா மாவட்டங்களிலும் விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வேதனையோடு பேசிவரும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டைக் குறைக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற கவலைதான்.

தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 10,098 மெகாவாட். மின்தேவையின் உச்சபட்ச அளவு 8,800 மெகாவாட். ஆனால் இப்போது உற்பத்தி ஆவதோ 7,500 மெகாவாட்தான். எனவே அன்றாடம் சுமார் 2 மணி முதல் 8 மணி நேரம்வரை மின்சாரத் தடை ஏற்படுகிறது. சராசரியாக 4 மணி நேரத்துக்கு மின்சாரம் தடைபடுகிறது.

காற்றாலைகளிலிருந்து கிடைத்துவந்த மின்சாரம் குறைந்துவிட்டதால் 1,500 மெகா வாட் அளவுக்கு மின்சாரவரத்து குறைந்துவிட்டதாகவும், மத்திய தொகுப்பிலிருந்து இப்போது 1,000 மெகாவாட் கிடைக்காததாலும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில அரசு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் மின்சாரத் தேவை 4,000 மெகாவாட் அதிகரித்த நிலையில், மின்னுற்பத்தியோ 531 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருப்பதாக அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவிக்கிறார்.

புதிய தொழில்பிரிவுகளால் ஆண்டுக்கு 600 முதல் 700 மெகாவாட் வரை மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

மின்சார பற்றாக்குறையால் ஜவுளி ஆலைகளால் முழுத் திறனில் இயங்க முடியாமல் போனதாகவும் இதனால் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள காற்றாலைகளில் கிடைக்கும் மின்சாரத்தைத் தொகுப்பாகப் பெற, மாநில மின்சார வாரியம் நல்ல கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொண்டால் 3,686 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று அத்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அறிவிக்கப்படாத மின்சார வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கோயமுத்தூர் மாவட்டமும் பின்னலாடைத் தொழில் கேந்திரமான திருப்பூரும்தான். கோயமுத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உயர் அழுத்த மின் இணைப்புகளாகும். கோவை மாவட்டத்தில் மட்டும் மின்நுகர்வு அளவு 1,200 மெகாவாட் ஆகும். இது மாநிலத்தின் மின் உற்பத்தியில் 13.5%.

இப்போதைய பிரச்னை மின்சார வெட்டு மட்டும் அல்ல, மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது நிச்சயமாகத் தெரியாததும் ஆகும். இதனால் ஆலைகளில் உற்பத்தியைத் திட்டமிட முடிவதில்லை.

ஒரு நாளைக்கு 7,000 கிலோ நூல் இழை உற்பத்தி செய்த ஒரு ஜவுளி ஆலையில் இப்போது 600 கிலோ முதல் 1,000 கிலோ வரைதான் அதிகபட்சம் உற்பத்தி செய்ய முடிகிறது. 500-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் 40% அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு நூற்பாலை சங்கத் தலைவர் ஏ.பி. அப்பாகுட்டி வேதனையோடு தெரிவிக்கிறார்.

மின்வெட்டு காரணமாக டீசல் பம்புகள், ஜெனரேட்டர்கள் விற்பனை 100% அதிகரித்திருப்பது இந்த பிரச்னையின் பரிணாமத்தை இன்னொரு கோணத்தில் உணர்த்துகிறது.

அமைச்சரின் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் அந்தநேரச் சமாதானத்துக்கு வேண்டுமானால் பயன்படலாமே தவிர, பிரச்னையை தீர்க்க உதவாது. நடுநிலைமையுடன் ஆலோசனை கூறக்கூடிய நிபுணரை நியமித்து, உரிய பரிந்துரையைப் பெற்று, அதை மின்னல் வேகத்தில் செயல்படுத்துவது ஒன்றே தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

—————————————————————————————————————————————————

தமிழகத்தை வாட்டும் மின்வெட்டு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு காலத்தில் தேவைக்கு அதிகமாக மின்உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்று லாபம் ஈட்டியது. இன்றைக்குத் தமிழகம் தனக்குத் தேவையான மின்சாரம் கிடைக்காமல் அல்லல்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மின் வெட்டாலேயே மக்களுக்கு ஷாக் அடிக்கிறது. விவசாயிகள் மட்டுமல்ல, ஆலைத் தொழிலாளிகள், தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் எனச் சகலரும் பாதிக்கப்படுகின்ற நிலை. விவசாயிகள் எந்த நேரம் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு தங்களுடைய பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச தூக்கமும் உணவும் இல்லாமல் பம்ப்செட் அருகே காத்துக் கிடக்கின்ற நிலைமை. இரவு நேரங்களில் மின்சாரம் வந்தாலும் பாம்புகளுக்கும், நட்டுவாக்களிகளுக்கும் பயப்படாமல் கடும் இருட்டிலும் பாடுபடுகின்ற நிலையில் இன்றைக்கு விவசாயிகள் இருக்கின்றனர். வியர்வை சிந்தி வியர்வையை அறுவடை செய்யும் விவசாயிக்குப் பலமுனைத் தாக்குதல்கள். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு விலை இல்லை. உரத்தட்டுப்பாடு. இதற்குமேல் மின்வெட்டு. தலைநகர் சென்னையில் மின்சாரம் கிடைத்தாலும் மற்ற பகுதிகளில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு மேல் அரசுப் பரிவாரங்கள் பகலில் ஆலையை இயக்காமல் இரவில் ஆலைப் பணிகள் நடக்கட்டும், வாரத்திற்கு ஒரு நாள் ஆலையின் இயந்திரச் சக்தியை நிறுத்திவிடுங்கள் என்று கூறும் ஆலோசனைகள். இதெல்லாம் ஆலைகளில் பணியாற்றிவரும் தொழிலாளிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் பெரும் கேடு ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 10,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 55 சதவீதம் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 28 சதவீதம் மத்திய அரசு உற்பத்தி நிலையங்களில் இருந்தும், 11 சதவீதம் தனியார் மூலமும், 3.5 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்தும் கிடைக்கிறது. காற்றாலையின் மூலம் 3,000 மெகா வாட் தற்பொழுது கிடைக்கிறது.

இப்படி இருக்க, மின்வெட்டு, மின் தட்டுப்பாடு ஏன் என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் தமிழக அரசின் மெத்தனப் போக்கே ஆகும். பல ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சரிசெய்யப்படவில்லை. பழுதுபட்ட இயந்திரங்களைத் திரும்பத் திரும்ப ஓட்டுவது, இயந்திரங்கள் பராமரிப்பில் சரியான கட்டுப்பாடு இல்லாதது, இந்தப் பணியில் நிரப்பப்பட வேண்டிய பொறியாளர்கள், பணியாளர்கள் நிரப்பப்படாமல் இருப்பது, இதற்குமேல் பல்துறை பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்துக்குப் படையெடுத்ததனால் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தகவல், தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க பல ஒப்பந்தங்கள் தொடர்ந்து கையொப்பமிடப்படுகின்றன. அதற்கேற்ப உரிய திட்டங்கள் இல்லை. 120 தொழிற்பூங்காக்களுக்கு மட்டுமே 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட குளறுபடிகளால்தான் இந்தத் தட்டுப்பாடு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் 0.4 சதவீத மின் உற்பத்தி தனியாரிடம் இருந்தது. தற்பொழுது தனியார் உற்பத்தி 28.18 சதவீதமாக உயர்ந்து விட்டதால் இதற்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. ஆண்டுக்கு ஒருமுறை மின்சாரத்தை வாங்க 12,016 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்து தமிழக அரசு கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. விவசாயம் மட்டும் இல்லாமல் நெசவுத் தொழிலும், விசைத்தறிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் போன்ற பகுதிகளில் சாதாரண நெசவாளிகள் தத்தளிக்கின்றனர். திருப்பூர் பின்னல் ஆடைதொழில்கூட ஓரளவுதான் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயங்க முடிகிறது. விசைத்தறி நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்தடையால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கொங்கு மண்டலத்திலுள்ள ஆலைகள், நூற்பாலைகளில் எட்டு மணிநேரம் மின்வெட்டு உள்ளது என்று செய்திகள் வருகின்றன. திருப்பூரில் மட்டும் மின்வெட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். மின்சாரப் பாதிப்பால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. தாமிரபரணியில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்ற மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் செயல்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழந்து உள்ளன.

1991-இல் மின்துறையில் தனியார் மற்றும் அன்னிய மூலதனம் 25 சதவீதத்தை எட்டியது. அதில் ஐந்து மாநிலங்கள் குறிப்பிடும் அளவுக்கு ஆர்வத்தைச் செலுத்தின. மகாராஷ்டிரம் முதலிடமும் தமிழகமும் கர்நாடகமும் அதற்கு அடுத்த இடங்களையும் பிடித்தன. தமிழ்நாட்டில் மட்டும் இதற்காக முடக்கப்பட்ட மூலதனத்தின் பங்கு 8 சதவீதம்.

1995இல் ஒரிசா மாநிலத்திலும் 1998இல் ஆந்திர மாநிலத்திலும் மின்சாரக் கட்டுப்பாடு குழுமங்கள் அமைக்கப்பட்டன. இவை மின் விநியோகத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தனியாருக்கு விற்கின்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. இது தொடர்பான தனியார் அன்னிய மூலதனம் போன்றவற்றில் மின்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்தும் சட்டத்தை 2006 மார்ச் மாதம் மத்திய அரசின் மின் அமைச்சகம் கொண்டு வந்தது. தமிழகம் இன்று சுமார் 17 கோடி குறைந்த அழுத்த மின் பயனீட்டாளர்களையும், சுமார் 6,000 உயர் அழுத்த மின் பயனீட்டாளர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சத்து 22 ஆயிரம் பேர் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்தத்தில் 58 சதவிகிதத்தை வழங்குபவர்களாக இருக்கிறார்கள். மகாராஷ்டிரத்தை அடுத்து மின்வாரியத்தில் பணியாற்றுகிறவர்கள் இங்குதான் அதிகம். 94 ஆயிரம் பேர் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார்கள்.

2003 – 2004 மின் கட்டுப்பாடுக் கழகத் தகவலின்படி யூனிட் விற்பனை கீழ்க்கண்டவாறு உள்ளது.

புனல் மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 0.59, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.09, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் இருந்து அவசரத்திற்கு வாங்கிய மின்சாரம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.17, மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.22, பி.பி.என். பவர் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.56, தனியார் காற்றாலை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.70, அணுமின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.71, கரும்புச் சக்கை யூனிட் ஒன்றின் விலை ரூ. 2.87, தமிழ்நாடு மின்வாரியத்தின் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.09, தனியார் அனல்மின் நிலையம் யூனிட் ஒன்றின் விலை ரூ. 3.99, தனியார் எரிவாயு மின் நிலையங்கள் யூனிட் ஒன்றின் விலை ரூ. 4.65

2003 – 2004இல் வசூல் கட்டணம் ரூ. 10,545 கோடி. மானியமும் ஏனைய வருமானங்களும் மொத்தத்தில் ரூ. 477 கோடி. அந்த ஆண்டின் இழப்புத் தொகை ரூ. 2,743 கோடி. இதனால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரைகள் எழுந்தன. அந்த ஆண்டின் இழப்பை ரூ. 663 கோடியாகக் குறைக்க வேண்டும் என்பதற்காக மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் மின்வாரியம் மின்சாரம் வாங்குவதற்கு 49 சதவீதமும், எரிபொருளுக்கு 24 சதவீதமும், வட்டிக்கு 7 சதவீதமும், பராமரிப்புக்கு 12 சதவீதமும் ஏனைய மற்ற செலவுகள் 8 சதவீதமுமாக மின்வாரியத்தில் செலவுக் கணக்கு இருந்தது.

தனியார்மயத்தில் 2007 வரை ஐந்து தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கு பல தனியார்கள் மின் உற்பத்தித் துறையில் தங்கள் கால்களைப் பதிக்க அரசிடம் அணுகி உள்ளனர். 2003 – 2004 கணக்கின்படி ஒரு யூனிட்டுக்கு தனியாரிடம் இருந்து பெற்ற மின்சாரத்தின் விலை, தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் தயாரித்த மின்சாரத்தின் விலையைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருந்தது. இப்படித் தேவையில்லாமல் அதிகப்படியான செலவுகளை அரசு தனது தவறான அணுகுமுறையால் செய்ய வேண்டியுள்ளது. 1999-வது ஆண்டின்படி 2,564 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி கொடுக்கலாம் என்ற நிலை வந்தால் தமிழக மின்வாரியம் கடனாளியாகி, திவாலாகி கதவைச் சாத்த வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படும் என்ற பரிந்துரையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. 2001-ஆம் ஆண்டில் தனியார் மின்நிலையங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.25-க்கு மேல் தரமுடியாது என்று அரசு அறிவித்ததற்கு தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையாகப் போராடின.

இவ்வாறு பல எச்சரிக்கைகள், அறிக்கைகள் மூலம் தனியார் மயமாக்கப்படுவது சரியில்லை என்று தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்பட்டும் பாராமுகமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாடுக் கழகத்தை எதிர்த்து இரண்டு வழக்குகள் தொடுத்தார். தனியார் நிறுவனங்களான பன்னாட்டு நிறுவனத்துக்கு நிதியமைச்சரின் துணைவியார் நளினி சிதம்பரம் வாதாடினார். இறுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மின்சார விலையைக் குறைக்க வேண்டும் என்பதே தீர்ப்பாக அமைந்தது.

தனியார் புகுந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. நெய்வேலியை ‘ஞ’ யூனிட் நடத்தி வரும் எஸ்.டி.சி.எம்.எஸ்., சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏசியா பிரௌன் பொவேரி, அமெரிக்காவின் சி.எம்.எஸ். போன்ற பன்னாட்டு மின் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபத்துக்கு விற்கத் திட்டமிட்டாலும் முடியாமல் 2007-இல் ஒரு சில நிறுவனங்களை அபுதாபி நேஷனல் எனர்ஜி என்ற அமைப்புக்கு விற்றுவிட்டன. மகாராஷ்டிரத்தில் என்ரான் போன்று கொள்ளை அடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஒரு சில நிறுவனங்கள் விட்டுவிட்டு ஓடிவிட்டன. இப்படிப் பல நிறுவனங்கள் கால் வைத்ததும், மின்துறையில் நமக்கு ஏற்பட்ட பாதகங்களாக அமைந்துவிட்டன.

உத்தேசிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதுதான் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.

அத்திட்டங்கள்:

1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.

2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.

4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.

5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.

6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.

7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.

8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.

9. சூரியவெப்பம், கடல் நீர், நிலக்கடலைத் தோல் போன்றவற்றில் இருந்து மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை அறிய வேண்டும்.

காற்றாலைகள் மூலம் 3626 மெகாவாட், சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் 213 மெகாவாட், தாவரங்கள் மூலம் (பயோமாஸ்) 99 மெகாவாட், குப்பைகள் மூலம் 4.25 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.

மரக்காணத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீர்மின் குழுமம் மூலம் காவிரி புனல்மின் திட்டம், ஓகேனக்கல் புனல்மின் திட்டம் அமைக்கவும் இதன்மூலம் 390 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவிரிப் பிரச்னையைப் போல் இதிலும் கர்நாடகம் மூக்கை நுழைக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரில் அமைக்க இருந்த மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட்டுவிட்டது.

பல அணைகள் நிரம்பி இருந்தபொழுதும் மின்உற்பத்தி எப்படி முடங்கியது என்று தெரியவில்லை. அதைச் சரிசெய்ய அரசு கவனம் செலுத்தவில்லை.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது.

Posted in Agriculture, Arcot, Commerce, Consumption, Distribution, DMK, Economy, Electricity, energy, Exports, Farmers, Farming, Finance, Fuels, Generation, Generators, Govt, Impact, Impacts, Industry, Inefficiency, Inverters, Kalainjar, Karunanidhi, Megawatts, MK, Motors, MW, NLC, Power, Power cut, Power Cuts, Powercut, Powercuts, Production, SEZ, Stalin, Sufficiency, Veerasamy, Water | 1 Comment »

TN faces power crisis – Unannounced Electricity cuts to end by capacity addition & private participation

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

இதர மாநிலங்களிலிருந்து மின்சாரம்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, நவ. 26: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசாம், ஹரியாணா மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். நிருபர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 7,500 மெகாவாட். தி.மு.க. அரசு ஏற்பட்ட பிறகு, தொழில் வளம் பெருக, புதிய தொழில்நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால், மின் தேவை கடந்த காலத்தை விட அதிகரித்து தற்போது 8,800 மெகாவாட்டை எட்டிவிட்டது.

தொழில் வளம் காரணமாக, மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். பின்னர் சீராகும்.

மின்சாரத் தேவையைச் சமாளிக்க பல்வேறு மாநிலங்களுடன் தமிழகம் பேசி வருகிறது. இது குறித்து மாநில மின் வாரியத் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கான உடன்பாடு இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாகிவிடும். இந்த மாநிலங்களிலிருந்து மொத்தம் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் பற்றாக்குறையின் விளைவாக கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற யோசனையை தமிழக முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார்.

ரூ.32 ஆயிரம் கோடியில் மின்நிலையம்: தமிழகத்தில் மொத்தம் ரூ.32 ஆயிரம் கோடியில் இரு புதிய மின் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மரக்காணம், கடலூர் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசே முழு அளவு முதலீட்டையும் செலுத்தும்.

இந்த இரு மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதில் 50 சதவீதத்தைத் தமிழகத்துக்கு அளிக்கும்படி கோரப்படும்.

ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் 90 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது. மீதியும் விரைவில் முடிந்துவிடும். தற்போது, சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது. அது போல் நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. அத்துடன், 10 லட்சம் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த ஆண்டுதான் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மின் உற்பத்தியை விரைவுபடுத்துமாறு பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த மின் நிலையம் ஜனவரியில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில் சீராகும்

தொழில் வளம் காரணமாக மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை நேர்ந்துள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். நிலைமை சரியானதும் ஜனவரியில் சீராகும்.

இருந்தாலும் மின்சாரப் பகிர்மானத்தின்போது இழப்பு நேர்வது இதர மாநிலங்களை விட பெரிய அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
—————————————————————————————————————————-

வணிக மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, நவ. 26: தமிழகத்தில் முதல் முறையாக வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இதன்படி 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சார நிலைமை குறித்து தொழிலதிபர்களுடன் அவர் திங்கள்கிழமை காலையில் விவாதித்தார்.

அதையடுத்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வணிக ரீதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து மூன்று மாதங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் உருவான கருத்தை ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்தெந்த தொழில் நிறுவனங்கள் முன் வருகின்றனவோ, அவை தமிழ்நாடு மின்வாரியத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை வாரியம் பரிசீலிக்கும். அதன் அறிக்கை அரசு நியமிக்கும் குழுவிடம் அளிக்கப்படும். அக்குழு விண்ணப்பித்துள்ள நிறுவனம் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் என்று ஆராய்ந்து தலைமைச் செயலரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். பிறகு, முதல்வரின் ஒப்புதலை அடுத்து ஆணை பிறப்பிக்கப்படும்.

இதுவரை வணிக ரீதியில் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பம் குறித்து குழு ஆராய்ந்து வருகிறது. இது இம்மாத இறுதிக்குள் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.

மின் பற்றாக்குறை:

தமிழகத்தில் இந்த ஆண்டு காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக, நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 1,500 மெகாவாட் மின்சாரம் ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துவிட்டது.

இருந்த போதும், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க உரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தொழிலதிபர்களுடன் விவாதிக்கப்பட்டது.

சில தொழிலதிபர்கள் தங்களது ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தும் எரி எண்ணெய் (ஃபர்னஸ் ஆயில்) மீதான மதிப்புக் கூட்டு வரியில் (வாட்) சலுகை அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அது குறித்து முதல்வர், நிதியமைச்சர், நிதிச் செயலருடன் கலந்து பேசப்பட்டது. அதையடுத்து வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அந்நிறுவனங்களின் மீதான வாட் வரியை விலக்கிக் கொள்ளப்படுகிறது.

தொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், உறுப்பினர் (விநியோகம்) ஆகியோர் பங்கேற்றனர். எதிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க இக்கூட்டம் பெரிதும் உதவியது. இதன் மூலம் மின்வெட்டு ஏற்படாமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி அளித்தது. தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டால், ஒரு சில பகுதிகளில் அதிகபட்சமாக அரை மணி நேரம் மின்சாரத் தடையை ஏற்படுத்தும் நிலை வரலாம். அதையும் தவிர்க்க மின்வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார் ஆர்க்காடு வீராசாமி.

Posted in Aarkadu, addition, Alternate, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Assam, Atomic, Bills, Capacity, Center, Centre, Climate, Coal, Construction, Consumers, Crisis, Cuddalore, Dabhol, Demand, Disruption, Electricity, energy, Enron, Govt, Haryana, households, Industry, infrastructure, investments, mega power, megapower, Megawatts, Monsoon, MW, Natural, NLC, Nuclear, Power, Powercut, Powercuts, Prices, Private, Rains, Rathnagiri, Ratnagiri, Resources, Shortage, Solar, State, Supply, Veerasami, Veerasamy, veeraswami, veeraswamy, Windmills | Leave a Comment »

‘Abhirami’ Ramanathan: Dinathanthi Biosketch – Tamil Movie History – Notable Faces

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(801)
படத்தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்
3 துறைகளில் `அபிராமி’ ராமநாதன் சாதனை

தியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட `அபிராமி’ ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

திரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் `அபிராமி’ ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொழில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.

அபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.

திரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-

அபிராமி ராமநாதன்

“என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்’ செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் இருந்து வந்தார்.

அப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே
2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்’ முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை!

சென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் “பால்கனி” அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.

அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை.

விவேகானந்தா கல்லூரியில் “பி.ï.சி” முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.

ஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன்.

வருமானம்

பள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்’ என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.

கல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்கு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்’ என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.

இந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்!

இப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.

இதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன்! என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்!

சின்ன வயதில் அப்பா என்னிடம் “நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை’ விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.

சொந்தத் தொழில்

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், “வேலைக்கு போகிறாயா? கம்பெனியில் சேருகிறாயா?” என்று அப்பா கேட்டார்.

சொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.

உன்னிடம் “முதல் (பணம்) இருக்கிறதா?” என்று கேட்டார்.
“10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. “சரி! செய்” என்றார்.

சென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம்.

விஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.

“பூரா பணமும் போய்விட்டதா?” என்று அப்பா கேட்டார்.

“ஆமாம்” என்று நான் தலையசைத்ததும், “தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்” என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.

சோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடியாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.

`அபிராமி’ உதயம்

இந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, “நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு” என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் “அபிராமி”, “பாலஅபிராமி” என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.

1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி “அபிராமி”யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.

Posted in Abhirami, Abirami, Biosketch, Biz, Cinema, Dinathanthi, Distributor, Enetrtainment, Faces, Films, History, Industry, Movie, Movies, Producer, Rajni, Ramanadhan, Ramanathan, Sivaji, Theaters, Theatres | Leave a Comment »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »

Tamil Nadu’s fishing industry vs Sri Lankan naval personnel: Harassment of Indian fishermen

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

மீனவர் வாழ்வு விடியுமா?

உதயை மு. வீரையன்

அண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.

நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.

மீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.

இந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா? “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன? தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா? நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா?

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.

ராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.

சாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா?

கரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்?

பலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.

இம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன? அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது? இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா? ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்?

தமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.

தமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.

கச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.

இது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.

இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.

இந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.

“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.

இவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன்? அத்துமீறி நடப்பது யார்? இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா? முடிவு செய்வது யார்?

Posted in Arms, Boats, Bombs, borders, Boundary, Capture, Catch, Cocaine, Contraband, dead, defence, Defense, Drugs, Exports, Extortion, Extremists, fiberglass, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Harassment, Illegal, Imprison, India, Industry, International, island, Jail, Jury, Justice, Kachatheevu, Kachathivu, Kachativu, Katcha Theevu, Kodiakkarai, kodiyakkarai, Law, LTTE, Maginda, Magindha, Magintha, Mahinda, Mahindha, Mahintha, Marijuana, maritime, Misa, Narcotics, Nautical, Navy, Ocean, Oceanery, Order, Peace, POTA, Prison, Rajapaksa, Rajapakse, Refugees, release, SAARC, Sea, Sector, Shoot, Shot, Shrimp, Squids, Sri lanka, Srilanka, TADA, Talaimannar, Terrorism, Terrorists, Thalaimannar, Tourism, Tourist, Travel, Trawlers, Trespass, War, Waters, Weapons, World | Leave a Comment »

Chennai Ranganathan Street – Infrastructure, Safety & Traffic issues due to Illegal Construction

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

விதிமுறை மீறல்கள்!

ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.

இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?

உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?

உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?

இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?

  • கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
  • உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
  • ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
  • ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்

ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.

இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.

Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »

Tamil Nadu unveils new industrial policy – Focuses on infrastructure, manufacturing &aims to double exports at $30 bn by 2011

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

புதிய தொழில்கொள்கை வெளியீடு – 4 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: கருணாநிதி

சென்னை, நவ. 5: நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்க வகை செய்யும் புதிய தொழில்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தொழில்கொள்கையை முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார்.

உற்பத்தித் துறையில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், தமிழகத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சர்வதேச சந்தையில் தரத்திலும் விலையிலும் போட்டியிடக் கூடிய அளவுக்கு மேம்படுத்தவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் தொழில்துறையில் வளர்ச்சியடைய இப்புதிய தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் ஆலோசனைக்குப் பிறகு இப்புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டிற்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், உற்பத்தித் துறையின் பங்களிப்பை 21 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு தொழில்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களைக் கவரும் வகையில், முதன்மை முதலீட்டு மையமாக தமிழகத்தை உருவாக்குவதும், உலகளாவிய பொருள் வழங்கீட்டுத் தொடர்களுடன், உள்நாட்டு தொழில் பகுதிகளை ஒருங்கிணைக்க உதவுவதும் இதன் நோக்கமாகும்.

திறன் மிக்க தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதும், மனித வளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்திற்கு மேம்படுத்துவதும் நோக்கமாகும்.

இந்த இலக்கை எட்டும் நோக்கில் சென்னைக்கு அப்பாலும் தொழிற்சாலைகள் உருவாவதற்கு ஏதுவாக பின்தங்கிய பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும், தனியார்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சிகளை ஏற்படுத்துவதும், உள்கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதும் பிரதான நோக்கமாகும்.

தொழிலக சிறப்புப் பகுதிகள் :

  • சிப்காட் நிறுவனம்,
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அல்லது
  • தனியார் மேம்பாட்டாளர்கள் அமைக்கும் தொழில் பூங்காக்களை சமமாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக

  • சென்னை – மணலி – எண்ணூர் மற்றும்
  • செங்கல்பட்டு – ஸ்ரீபெரும்புதூர் – ராணிப்பேட்டை பகுதிகள் தொழிலகச் சிறப்புப் பகுதிகளாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • அடுத்த கட்டமாக மதுரை,
  • தூத்துக்குடி மற்றும்
  • கோவை – சேலம் பகுதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளில் உள்ள அறிவியல் பூங்காக்களைப் போன்று நுண்ணிய உயர்தொழில்நுட்பப் பூங்காக்களை சிப்காட் மூலம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உயிரி அறிவியல் புதுமைத் திட்ட நிதி ஒன்றை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தினால் (டிட்கோ) மூலம் செயல்படுத்தவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களின் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மனித ஆற்றல் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழில்பயிற்சி தர மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள், தொழிற் பயிற்சி கல்வி நிறுவனங்கள் இடையே தொடர்புகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிஐஐசி) நிர்வகிக்கும் ஒரு மூல நிதியின் மூலம் தமிழ்நாடு தொழில்நுட்ப மற்றும் எரிசக்தி பயன்பாட்டுத் திறன்களை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத் திட்டத்துக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படும்.

வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு கூடுதல் உதவிகள் அளிக்கப்படும்.

உடல் ஊனமுற்ற அதேசமயம் சிறப்பாகபணியாற்றும் திறன் பெற்றவர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல

  • வேளாண் தொழில்கள்,
  • வேளாண் இயந்திரங்கள்,
  • நுண்ணிய பாசனத்திற்கான வேளாண் சாதனங்கள் ஆகிய தொழிற்சாலைகளுக்கு சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மின்னணு வன்பொருள்,
  • ஜவுளி,
  • தோல்,
  • மோட்டார் வாகனம் போன்ற தொழில்களில் ஏற்றுமதி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் இதில் அடங்கும்.

புதிய தொழிற்சாலைகளை மூன்று வகையாகப் பிரித்து அவற்றுக்கு தரச் சான்றை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைந்து அளிப்பதும் புதிய தொழில் கொள்கையின் பிரதான நோக்கம் என்றார் கருணாநிதி.

புதிய தொழில் கொள்கையின் பிரதிகளை தொழிலதிபர்களிடம் முதல்வர் அளித்தார்.

—————————————————————————————————————————————–

தமிழக புதிய தொழில் கொள்கையில் சலுகை மழை! * விவசாய தொழிலுக்கு அதிக முன்னுரிமை

சென்னை :வரும் 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில்களுக்கு அனைத்து சலுகைகள் வழங்கவும் முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நலிவடைந்து வரும் விவசாய தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க விவசாயத்துக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளை கண்டறிவதற்குரிய வழிமுறைகளை நிர்ணயிக்க தொழில் துறைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழுவும், முதல்வர் கருணாநிதியை தலைவராகவும், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்புத் தொழில் முனைப்புக் குழுவும் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற் கூட்டமைப்புகள் மற்றும் வர்த்தக சபை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, புதிய வரைவு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது. அமைச்சரவைக் குழு விவாதித்து இறுதி செய்த, ஷபுதிய தொழில் கொள்கையை’ முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

இந்த தொழில் கொள்கை, 2011ம் ஆண்டுக்குள் 20 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தயாரிப்புத் துறையின் தற்போதைய பங்களிப்பான 21 சதவீதத்தை 27 சதவீதமாக உயர்த்துதல், முதலீட்டாளர்களை கவரும் மையாக தமிழகத்தை உருவாக்குதல், திறமையான தொழிலகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், மனிதவளத்தையும் அறிவாற்றல் முதலீட்டையும் உலக தரத்துக்கு மேம்படுத்துதல் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டுள்ளது.விவசாயம் மற்றும் விவசாய விளை பொருட்கள் பதப்படுத்தும் தொழில்களுக்கு புதிய தொழில் கொள்கையில் அளிக்கப்பட்டுள்ள பல சலுகைகள் வருமாறு:

வேளாண் விளை பொருள் பதப்படுத்தும் தொழிலுக்கு தேவைப்படும் சட்ட அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் பெற்றுத் தந்து அவற்றுக்கு ஊக்கத் தொகை வழங்கும் அமைப்பாக வேளாண்மை விற்பனை மற்றும் வணிக இயக்ககம் செயல்படும்.

ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், அவர்களுக்கு உதவிகள் செய்யவும், ஒரு ஏற்றுமதி அபிவிருத்திப் பிரிவு அமைக்கப்படும்.

  • வேளாண்மை விளை பொருள் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த ஊக்க உதவிகள் அளிக்கப்படும்.
  • இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவு (ராமநாதபுரம்),
  • கோழியினப் பொருட்கள் (நாமக்கல்),
  • மஞ்சள் (ஈரோடு),
  • ஜவ்வரிசி (சேலம்),
  • வாழைப்பழம் (திருச்சி),
  • மாம்பழம் (கிருஷ்ணகிரி),
  • முந்திரி (பண்ருட்டி),
  • பனைப் பொருட்கள்,
  • மருத்துவ மூலிகைச் செடிகள் மற்றும்
  • கடல் சார்ந்த உணவு (தூத்துக்குடி),
  • பால் பொருட்கள்,
  • திராட்சை (தேனி) போன்றவற்றில் தொழில் பூங்காக்களிலும், சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் பதப்படுத்தும் தொழில் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in 2011, Agriculture, Auto, Automotive, Budget, Bus, Cars, Challenged, Commerce, Disabled, DMK, Economy, Electrical, Electronics, Employment, Environment, Equipments, Exports, Fabrics, Farming, Garments, Incentives, industrial, Industry, infrastructure, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Leather, Manufacturing, Nature, Policy, Pollution, Protection, SEZ, SIPCOT, Tamil Nadu, TamilNadu, Tariffs, Tax, Textiles, TIDCO, TN, Training, Transport, Work, workers | 1 Comment »

When Sparklers Light Up Diwali Sky – Sivakasi Fireworks & Manual Labor: Need for the automation in Industrialization

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

பட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்

சிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

சிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

சுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.

பட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.

சரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:

பல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.

பட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.

பட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:

தீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

எனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.

Posted in Activists, Automation, Ban, Biz, Business, Child, Compensation, Crackers, Deepavali, Deepavalli, Diwali, Economy, employees, Factory, Fire works, Fireworks, Govt, Hours, Industrialization, Industry, Inhumane, Jobs, Labor, rules, Sector, Sivagasi, Sivakasi, Sparklers, Work, workers | Leave a Comment »

Simpsons – Vedanthangal in Chennai: A retreat for migrating birds (North Madras)

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

சுற்றுச்சூழல்: சென்னையில் ஒரு வேடந்தாங்கல்!

சென்னை என்றாலே ஒருவருக்கு என்ன நினைவுக்கு வரும்?

போக்குவரத்து நெரிசல். புழுதிபடிந்த சாலைகள். வாகனப்புகை நடுவில் சிக்கித் திணறும் மனிதர்கள். வீடுகளில் தோட்டம் வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி. சாலையில் 30 நிமிஷம் நடந்தால் 300 வகையான மாசுகள் படிந்துவிடும் அளவுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள். நடக்கவே முடியாத இட நெருக்கடி. ஏதோ கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் வேண்டுமானால் கொஞ்சம் பச்சைப் பசேல் செயற்கைப் புல் வெளிகளைப் பார்க்கலாம்.

மாநகராட்சியின் புண்ணியத்தால் எங்கேயாவது தென்படும் பூங்காக்கள்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நகர்ப்புறங்களில் விழுந்துவிட்ட இடைவெளி என்னவோ அதிகரித்துக் கொண்டே போகிறது.

அதிலும் வடசென்னையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கும் குப்பைகள். தெருவில் வழிந்தோடும் சாக்கடை. தொழிற்சாலைகளின் புகை மண்டிய வானம். நெடி வீசும் காற்று. அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் மனித இயந்திரங்கள். மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது சந்தேகம் என்று கூறும் அளவுக்கு நெருக்கடி. புறாக் கூண்டு குடியிருப்புகள்.

ஆனால் இந்த வடசென்னைப் பகுதியில் வனம் போல் ஒரு பகுதி; அங்கே பல வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. ஆம்! இங்கே ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இது உண்மை.

நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள். ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள். வேடந்தாங்கல் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சென்னையில் வேடந்தாங்கல் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம் அது இருப்பது சென்னை செம்பியம் பகுதியில்தான்.

தொழிற்சாலை என்றாலே அது சுற்றுச் சூழலைக் கெடுக்க வந்தது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆம் இந்த சென்னை வேடந்தாங்கல் உருவானதே ஒரு தொழிற்சாலையால்தான்.

நிலம் கிடைத்ததா? அதில் தொழிற்சாலையைத் தொடங்கினோமா? லாபம் சம்பாதித்தோமா? என இருக்கும் பல தொழிற்சாலை நிர்வாகங்களின் மத்தியில் வித்தியாசமாக, கிடைத்த நிலத்தில் இருந்த குளங்களை நல்லபடியாகப் பாதுகாத்து, தொடர்ந்து பராமரித்து வந்தது சிம்சன் நிறுவனம். அதன் விளைவாக வந்து சேர்ந்தனர் பல வெளிநாட்டுப் பறவை விருந்தினர்கள்.

முதன் முதலில் 1978-ல் இங்கு “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரிய வகை பறவைகள் இருப்பதைத் தற்செயலாகப் பார்த்தனர். அடடா! நம் பகுதியை நாடி பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே! என ஆச்சரியப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இங்குள்ள 2 குளங்களையும் அட்டகாசமாகப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.

சென்னையில் மழை வருவதே அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான். அதிகம் போனால் ஒரு பத்துநாட்கள் பெய்யும். அப்புறம் ஆண்டு முழுதும் வாட்டி வதைக்கும் வெயில்…வெயில்…தண்ணீர் பஞ்சம்…பற்றாக்குறை.

சில வருடங்களில் இந்தப் பத்து நாள் மழையும் கூட ஏமாற்றிவிடும். மக்கள் குடிக்கத் தண்ணீரின்றி படும்பாடு சொல்லி மாளாது. அப்படிப்பட்ட சிங்காரச் சென்னை மாநகரில் ஒரு குளத்தை வற்றாமல் பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமா? என்ன?

இந்த வளாகத்தில் பெய்யும் மழை நீரில் ஒரு துளி கூட வீணாகாமல் அனைத்தையும் சேகரித்து இந்தக் குளங்களுக்கு வழங்கும் சிறந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பு இங்கு செயல்படுகிறது.

அதன் விளைவாக – முறையான இயற்கை வழி பராமரிப்பின் காரணமாக – அந்த 2 குளங்களும் தற்போது பறவைகள் சரணாலயமாக மாறியுள்ளன. சென்னையில் மிக வேகமாக அழிந்து வரும் “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரியவகை கொக்கு, முக்குளிப்பான், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், பாம்புதாரா, சின்ன கொக்கு, உன்னி கொக்கு, குருட்டு கொக்கு, செங்குருகு, கம்புள் கோழி, தாழைக்கோழி, நாமக்கோழி, நீர்க்கோழி, நில தாழைக்கோழி, மேற்கத்திய பொன் முதுகு மரங்கொத்தி போன்ற 110 வகை பறவைகள் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றன.

இவற்றில் இரவில் உணவு தேடும் வக்கா உள்ளிட்ட சில வகைப் பறவைகள் இந்த குளங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவை மட்டுமல்லாது ஐரோப்பா, இலங்கை போன்ற அயல் நாடுகளில் இருந்து “பிட்டா’ உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.

“”சிம்சன் நிறுவனத்தால் சுமார் 29 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த குளங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 22 ஆயிரம் பறவைகள் இருந்தன. அப்போது, பி.என்.எஸ். எனப்படும் மும்பையை சேர்ந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடம் உலக அளவிலான பறவைகள் சரணாலயங்கள் பட்டியலில் இடம் பெற்றது” என்றார் செம்பியம் எஸ்டேட் மேலாளர் பி. சிவராமமூர்த்தி.

“வக்கா’ எனப்படும் பறவைகள் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக அப்போது இருந்தனவாம்.

நிறையப் பேருக்கு இப்படியோர் அதிசயம் இருப்பது தெரியாது என்றாலும் தெரிந்தவர்கள் இங்கு வந்து குவிவது சாதாரண நிகழ்வு.

இந்த சரணாலயம் இருக்கும் செம்பியம் பகுதி மட்டுமல்லாது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து கண்டுகளிக்கின்றனர். இதற்கு நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

இங்கு வந்து இந்த குளங்களையும், அதில் தங்கும் பறவைகளையும் பார்த்து செல்கின்றனர்.

இந்தப் பறவைகளின் பழக்க வழக்கங்கள், நீர் நிலைகளின் சுற்றுச்சூழல் தன்மை போன்றவை குறித்து நீர்ப்பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சென்னை கால்நடை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆராய்ச்சி கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர்.

110 வகையான பறவைகள் வந்து சென்ற இந்தப் பகுதியில் தற்போது 10, 12 வகைகளை சேர்ந்த சில நூறு பறவைகள் மட்டுமே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி இருந்த மற்ற நீர் நிலைகள் மிக வேகமாக அழிந்து வரும் நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவது கவலை தரக்கூடிய ஒன்றாகும்.

“”இந்த இடத்தைச் சிறப்பாகப் பராமரிக்க விரும்புகிறோம், இது தொடர்ந்து நடைபெறும், பறவைகள் வந்தாலும், வராவிட்டாலும் இந்தக் குளங்கள் இதே அளவு முக்கியத்துவத்துடன் சிறப்பாகப் பராமரிக்கப்படும்” என்று உறுதியாகக் கூறுகிறார்கள் சிம்சன் நிர்வாகத்தினர்.

சென்னை மக்கள் தொழில் வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவர்களே பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சென்று வேடந்தாங்கலை ரசிப்பார்கள். நம்மிடம் அதுபோன்ற இடம் இல்லையே என அப்போது அங்கலாய்ப்பார்கள். இதற்குக் காரணம் இப்படியோர் இடம் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்தச் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பிற நீர்நிலைகளைக் கான்கிரீட் வனங்களாக மாற்றாமல் இருந்தால்தான் இங்கு பறவைகள் தொடர்ந்து வரும்.

ஆனால் செம்பியம் வளாகத்துக்கு அருகில் இருந்த மாதவரம் ஏரி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

“சிம்சன்’ நிறுவனம் மட்டும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து பறவைகள் சரணாலயமாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.

ஆனால் நீர் நிலைகளை அரசும், மக்களும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் பலருக்கும் தெரியாத இந்தப் பறவைகள் சரணாலயம் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகையில் அமைந்த இந்தக் குளிர்வனம் காய்ந்து போவதை யார்தான் கற்பனை செய்ய முடியும்?

Posted in Chennai, employees, Environment, Factory, Industry, job, Kathir, Lakes, Madras, migration, Migratory, Nature, Protection, Rains, Rainwater, retreat, Simpsons, Source, Stream, Summer, Tanks, Vedandhaangal, Vedandhangal, Vedanthaangal, Vedanthangal, Water, Winter, workers | Leave a Comment »

State of Job Growth in India – Employment & Business Opportunities

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2007

வேலைவாய்ப்பு: துளிர் விடும் நம்பிக்கை!

எஸ். கோபாலகிருஷ்ணன்


இந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சி ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை. ஏற்கெனவே பண வசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும், படித்த, நகர்ப்புற இளைஞர்கள் நல்ல வேலைகளைத் தேடிக் கொள்வதற்குமே இந்த வளர்ச்சி உதவுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை என்கிற நியாயமான கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ச.ந.ந.ஞ. எனப்படும் “”தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு” வேலைவாய்ப்புகள் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள தனது 61வது சுற்று ஆய்வு முடிவுகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

1993ம் ஆண்டுமுதல் 1999ம் ஆண்டுவரை, இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 0.98 சதவிகிதமாக அதிகரித்து வந்த நிலை இப்போது மறைந்துவிட்டது. மாறாக, 1999 – 2000 முதல் 2004 – 05 வரையிலான காலத்தில், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் 2.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை.

இங்கு நாம் சுமார் 24 ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தோமேயானால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தையும் அதற்கான காரணங்களையும் அறியலாம்.

முதலாவதாக, 1983 முதல் 1993 – 94 வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொள்வோம். அப்போது, என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வின்படி வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 2 சதவீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பொதுமக்களின் கருத்துப்படியும், அந்த காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியதாகச் சொல்ல முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே இலாகா உள்ளிட்ட பல அரசுசார்ந்த துறைகள் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல், சிறுதொழில்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைத்து வந்தது. வங்கிகளும் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்குவதில் முனைப்பு காட்டின. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 40 சதவிகிதம் சிறுதொழில்கள் மூலம் கிடைத்தன. அதேபோல், விவசாயமும் குறிப்பாக, சிறு விவசாயிகள், முன் உரிமை அடிப்படையில் ஓர் அளவு கடனுதவி பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே, தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதமாக அப்போது இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

இரண்டாவதாக, 1993 – 94 முதல் 1999 – 2000 வரையிலான காலத்தில் என்ன நேர்ந்தது? வேலைவாய்ப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக, அதாவது 0.98 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது. 1992-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. அப்போதுதான், பொருளாதாரத் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் அறிமுகமாயின. சிறு தொழில்களுக்கும், விவசாயத்துக்கும் அரசு அளித்து வந்த ஊக்குவிப்பும் உதவிகளும் சுணக்கம் அடைந்தன. எங்கும், எதிலும் கணினிமயம் என்ற நிலை ஏற்படத் தொடங்கியது. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொய்வடைந்தது. இதை உறுதி செய்வதாகவே தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை தெரிவித்தபடி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதத்திலிருந்து வெறும் 0.98 சதவிகிதமாகச் சரிந்தது.

மூன்றாவதாக, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, 1999 – 2000 முதல் 2004 – 05 காலத்தில், முந்தைய சரிவு சரிசெய்யப்பட்டு, 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, உண்மையிலேயே ஒரு மைல் கல் வளர்ச்சி என்பது தெளிவு. இந்த ஆறு ஆண்டு காலத்தில் மக்கள்தொகையில், வேலைக்குப் போகக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்த பின்னரும், வேலைவாய்ப்பு வளர்ச்சி முந்தைய 0.98 சதவிகிதத்திலிருந்து 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது ஓரளவு ஆறுதல் தரக்கூடிய ஒன்று என்றாலும், கவலை அளிக்கும் அம்சங்களும் உள்ளன. துறைவாரியாகப் பார்க்கும்போது, விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, 59.8 சதவிகிதத்திலிருந்து 58.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பதே அது.

அதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் 3 கோடி பேருக்கு விவசாயத்துறையில் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ள வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் சரி பாதி எனலாம்.

நகர்ப்புறம், கிராமப்புறம் என்னும் வித்தியாசம் இல்லாமல், பரவலான அடிப்படையில், சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டவர்களின் எண்ணிக்கை முன்எப்போதையும்விட கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி சுயவேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டுள்ளவர்கள் 26 கோடி பேர்.

அதேநேரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், போதிய ஊதியம் மற்றும் குறைந்தபட்ச வசதிகள் கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் பசிக்கொடுமையைக் குறைத்திட இந்தியா செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி அமைப்பு தயாரிக்கும் “உலகளாவிய பசிக்கொடுமை குறியீடு’ (எகஞஆஅக ஏமசஎஉத ஐசஈஉல) என்னும் தரப்பட்டியல் அடங்கிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சர்வதேச அமைப்பு, சில தினங்களுக்குமுன், ஒரு தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, பசிக்கொடுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்திட முயலும் 118 நாடுகளைக் கொண்ட பட்டியல் அது. அதில், இந்தியா 94வது இடத்தில்தான் உள்ளது என்பது வேதனை தரும் விஷயம். மிகவும் பின்தங்கிய நாடாகிய எத்தியோப்பியாகூட நம்மைவிட முன்னேறிய நிலையில், 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 88வது இடத்திலும் சீனா 47வது இடத்திலும் உள்ளன. நாம் தினமும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

நமது வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக மாறுவது எப்போது? இதற்கு விடையளிக்கும்வகையில், மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரும், பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழுவின் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன் அண்மையில் எழுதியுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

1999 – 2000 முதல் 2004 – 05 காலகட்டத்தில் என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வில் காணப்படும், அதே சாதகமான அம்சங்கள் நீடிக்கும்பட்சத்தில், ஜி.டி.பி. 9.1 சதவிகிதமாகத் தொடர்ந்து இருக்குமேயானால், விவசாயத்துறை வளர்ச்சி சற்று குறைந்தால்கூட, 2009ம் ஆண்டு முடிவிற்குள், வேலைவாய்ப்பு வளர்ச்சி நமது முழு தேவையை பூர்த்தி செய்துவிடும் என்கிறார்.

ஒருவேளை, இது நிறைவேறாதபட்சத்தில் டாக்டர் ரங்கராஜன் முன்வைக்கும் இன்னொரு சாத்தியக்கூறு வருமாறு:

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 8.5 சதவிகிதமாகவே இருந்து, விவசாய வளர்ச்சி வீதம் 2 சதவிகிதமாக மட்டுமே இருக்குமானால், வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் முழுத்தேவையையும் பூர்த்தி செய்வதற்கு 2017ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்.

ஆக ஊரக மேம்பாட்டுக்கு திறவுகோல் விவசாய வளர்ச்சியே. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை ஆவணத்தில் (Approach Paper) விவசாய மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்தேனும், இந்த அவசியத்தை அரசு உணர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏழ்மை மற்றும் பசியை ஒழிப்பதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான – அதிலும் குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உருவாக்கப்படும் வேலைகளுக்கான – ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

Posted in Biz, Business, City, Commerce, Compensation, Divide, Economy, employee, Employers, Employment, GDP, Growth, Industry, Jobs, Loans, Metro, Poor, Rich, Rural, Self-employed, Small Business, unemployment, Village, Villages | Leave a Comment »