Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘revenue’ Category

Textile Industry: Current Trends, analysis – S Gopalakrishnan (Garment Exports)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

ஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.

2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.

ஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.

எனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

சீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.

மத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

எனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.

அதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.

இது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.

இந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.

அதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in America, Bangladesh, Budget, Capital, Cash, China, Commerce, Conversion, Dollar, Dress, Dresses, Economy, Employment, EU, Europe, Exchange, Exports, Factory, Fashion, Garments, GDP, Govt, Honduras, Imbalance, Incentives, Income, Indonesia, Industry, Inflation, Jobs, Knit, Loss, Monetary, Money, Nicaragua, Profit, revenue, Rupee, Srilanka, Tariffs, Tax, Textiles, Thirupoor, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tiruppoor, Tiruppur, Tirupur, Trade, US, USA | Leave a Comment »

Remove ban on milk powder exports

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பால் பௌடர் ஏற்றுமதி தடை நீங்க வேண்டும்!

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பௌடர் ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நுகர்வோர் நலன் கருதி விதித்த இத் தடையை, பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி இப்போது விலக்க வேண்டும்.

குளிர், மழைக்காலங்களில் பால் உற்பத்தி அதிகம் இருக்கும். அப்போது அன்றாடம் 24.10 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கோடைக்காலத்தில் 21.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாகிறது.

தமிழ்நாட்டில் சராசரியாக அன்றாடம் 22.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

எருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.14 வீதமும் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.12 வீதமும் கொள்முதல் விலை தரப்படுகிறது.

பாலைப் பொருத்தவரையில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், பாலுக்குத் தரும் கொள்முதல் விலையில் மூன்றில் இரு மடங்கு நேரடியாக பால் உற்பத்தியாளருக்கே கிடைக்கிறது.

விவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் கறவை மாடு வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு செலவுகளை ஈடுகட்ட முடிகிறது. கால்நடைத் தீவனங்களை அரசு சலுகை விலையில் அளித்தாலும் அதை வாங்கும் பொருளாதார வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும்.

ஒரு மாடு அல்லது இரு மாடுகளை வீட்டுத் தேவைக்காக வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. பாலை விற்க வேண்டும் என்ற நோக்கில் மாடு வளர்ப்பவர்கள் மட்டும்தான் இப்போது மாடு வைத்துக் கொள்கிறார்கள்.

“மாடு’ என்றால் “செல்வம்’ என்பார்கள். ஆனால் நவீன காலத்தில் “மாடு’ என்றால் “பெரும்பாடு’ என்றாகிவிட்டது. மாடுகளுக்குத் தண்ணீரும், மேய்ச்சல் நிலமும் தேவை. மாடுகளை மேய்க்கவும், பராமரிக்கவும் இடம் இல்லை. மாநகராட்சி எல்லைக்குள் மாடுகளை வளர்க்கக்கூடாது என்று மாநகர நிர்வாகத்தினரிடமிருந்து கெடுபிடி வேறு.

இலவச கலர் டி.வி., சிறு விவசாயிகளுக்கு இலவச நிலம் போன்றவற்றைத் தருவதுடன் இலவசமாக மாட்டையும் ஏழைகளுக்குத் தரலாம்.

தொடக்க காலத்தில் மாட்டைப் பராமரிக்கச் சிறிது உதவித்தொகையைக் கடனாக அளித்து, பிறகு பாலைக் கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அசலை கழித்துக்கொள்ளத் தொடங்கினால் கடன் வசூலிப்பும் எளிதாக இருக்கும். தமிழ்நாடெங்கும் உழைப்பையும் நேர்மையையும் மூலதனமாக வைத்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை இதில் ஈடுபடுத்தினால், பிற மாநிலங்களுக்கு இதிலும் தமிழகம் நல்ல வழிகாட்டியாகத் திகழலாம்.

கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு ஏற்கெனவே நன்கு பணியாற்றி வருகின்றன. மாடு வாங்கக் கடன் தருவதில் தமிழ்நாட்டு அரசுடைமை வங்கிகளும் நல்ல அனுபவம் உள்ளவை. எனவே மாடு வளர்ப்பையும் பால் பெருக்கத்தையும் தீவிர இயக்கமாக்கி முனைப்போடு செயல்படுத்தினால் தமிழ்நாடு இந்தியாவின் “”டென்மார்க்” ஆகத் திகழும்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான கணக்கெடுப்பின்படி மொத்தம் 7,662 பால்கொள்முதல் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 21.93 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அன்றாடம் 26.10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. மாநிலம் முழுக்க 36 பால் குளிரூட்டும் மையங்கள் செயல்படுகின்றன. பாலைப் பௌடராக்கும் பிரிவுகள் மாநிலத்தில் 4 உள்ளன.

அமைப்புரீதியான துறையில் அன்றாடம் 46 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தனியார் துறையில் 16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இத்தகைய செழிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, பால் பௌடர் ஏற்றுமதியை அனுமதித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Posted in Assets, Assistance, Commerce, Coop, Coops, Cows, dairy, Drink, Economy, Exports, Farming, Fees, Industry, Law, Liquid, Loans, Manufacturer, Manufacturing, Marketing, milk, Order, Powder, Price, quantity, retail, revenue, Skimmed, Surplus, Tariff, Tax | Leave a Comment »

Sanjay Dutt sentenced to 6 years in prison – Film fraternity rallies behind & to appeal against verdict

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெற்றிக்கண்: சஞ்சய் தத் – கோடே

IdlyVadai – இட்லிவடை: சஞ்சய் தத்துக்கு 6 ஆ�

சற்றுமுன்…: பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

சற்றுமுன்…: சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

சிவபாலன்: நீயூஸ் மீடியாக்களை எத


பாதியில் சினிமா படம்: சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை, ஜுலை. 31-மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக, மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது

  1. மெகபூபா,
  2. தாமால்,
  3. கிட்நாப்,
  4. அலிபாக்,
  5. மிஸ்டர் பிராடு

ஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.
மிஸ்டர் பிராடு, அலிபாக், கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால், இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.

மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.

இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.

இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக “பீகேட்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
———————————————————————————————————-

14 ஆண்டுகளாக நடந்த விசாரணை

எதிர்பாராத திருப்பங்களையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.

257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸôர் யாகூப், எஸ்ஸô, யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸô, யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும், 7 ஆயிரம் பக்க ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6,700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38,070 கேள்விகள் கேட்கப்பட்டன.

குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.

———————————————————————————————————-
சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு!

சுநீல் தத், நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே, ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும், சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார்.

பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா, நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெüரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் (48).

சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.

பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.

தாயின் மரணம், மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத், ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.

இந் நிலையில்தான், மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய், யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு, அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.

அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெüரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

முன்னாபாய்: அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. “”முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.” என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட்டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல, முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————————————————————————————-

கண்டிப்பான நீதிபதி, கனிவான கனவான்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே (54) கண்டிப்பான நீதிபதி, கனிவான மனிதர்.

ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது, ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது, ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இசட் பிரிவு பாதுகாப்பு:

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே, குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.

ஆர்தர் சாலையில் உள்ள சிறையில், பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.

வேலையில் அக்கறை உள்ளவர்.

விடுமுறை எடுக்காதவர். 13,000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும், 7,000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும், 6,700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறையே எடுக்கமாட்டார்:

விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ, இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ, அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து, அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே, ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.

சாய் பாபாவின் பக்தரான கோடே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது, இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987-ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை, திறமை காரணமாக 1993-ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.

———————————————————————————————————-

சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல்

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் “தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.

“காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக, “பிஸ்டல்’ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும், “”ஏ.கே. 56” ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது, பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது, மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது, அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார்; அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள், அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

தவறு செய்துவிட்டேன்: நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள, தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார்.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத், நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன், “”14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன்; சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள்” என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து, “”எல்லோருமே தவறு செய்கிறார்கள்” என்றார்.

நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு (சஞ்சய் தத்) கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸôர் கைது செய்யவோ, சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

அதை நீதிபதி ஏற்று, சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸôருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு, அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.

நீதிபதி கோடே, சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி, ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.

சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.

யூசுப் நல்வாலா, கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும், வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.

கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா, அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.

சட்டவிரோதமாக ஒன்றல்ல, இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள், அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல, மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி; இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸôரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து, உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

“3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை’ என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.

வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத், உஜ்வல் நிகமிடம் சென்று, “”நன்றி ஐயா” என்று கூறி கையை குலுக்கினார்.

———————————————————————————————————-

சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு

மும்பை, ஆக. 1-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.

இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.

இந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2-வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.

ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.

இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.

இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.

முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.

அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க், கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.

இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
—————————————————————————————————–
கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை: தினசரி ரூ.40 சம்பளம்

முப்பை, ஆக. 2-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10-ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

ஒன்றாம் நம்பர் செல் “புத்தர் செல்” என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக, மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.

நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ, பிஸ்கட், ரொட்டி, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.

நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி, அரிசி உணவு, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.

நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா, நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள், டவல், சோப்பு, சீப்பு, பற்பசை, பவுடர், போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் ïசுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன், சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.

அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய், தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில், விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.

கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.

சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள், மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.

சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.

நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.
—————————————————————————————————–

சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்?

01 ஆகஸ்ட் 2007 – 14:43 IST

இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.

பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து, அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில், சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.

பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும், தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.

விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு, உடைகள், வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.

இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.

விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.

சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை, தோட்ட பராமரிப்பு, மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை, தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.

தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.

மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி, அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.

—————————————————————————————————–

என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்…?

புணே, ஆக. 4: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (48) வியாழக்கிழமை புணே “ஏர்வாடா’ சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை விதிகளின்படி,

  • ஜவுளி,
  • சலவை,
  • பேக்கரி,
  • பேப்பர் பிரிண்டிங்,
  • தச்சு வேலை,
  • பெயிண்டிங் ஆகியவற்றில்

ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.
“பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும்’ என்றார் உயரதிகாரி ஒருவர்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக, மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.

இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால், புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.

—————————————————————————————————–

ஜெயிலில் வேலை: பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத்

புனே, ஆக. 8-

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.

இதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.

அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.

அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.

இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
———————————————————————————————————————–

சல்மான்கான், சஞ்சய்தத் கைது: இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம்

மும்பை, ஆக. 30-

ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத், சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள். சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன், முன்னாபாய் சாலே அமெரிக்கா, அலிபாக், கிட்நாப், மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான், மெயின் யுவ்ராஜ், வாண்டட் டெட்அன்ட் அலைவ் (போக்கிரி ரீமேக்), ஹலோ, ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.

இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. “போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை” என்கிறார் போனிகபூர்.

இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.

Posted in abuse, Acquaintance, Actors, Actress, AK-47, AK47, Arms, Black, Blast, Bollywood, Bombay, Bombs, Bullets, cancer, Capital, case, Cash, Celebrity, Cinema, Cocaine, Compensation, Corrections, Cost, Courts, Crime, Currency, dead, Drugs, Dutt, Economy, Extremism, Extremists, Fame, Father, Films, Finance, Gode, Godey, guns, HC, Income, Jail, job, Judge, Justice, kalashnikov, Kodey, Kote, Law, Loss, Misa, Movies, MP, Mumbai, Munnabai, Munnabhai, Nargees, Nargis, Order, Police, POTA, Prison, Producer, Production, Profits, Punishment, release, revenue, Rifles, Rupees, Salary, Sanjai, Sanjay, SC, Sentence, Son, Sunil, Sunil Dutt, TADA, terror, Terrorism, terrorist, Terrorists, verdict, Violence, Weapons, Work | Leave a Comment »

President Abdul Kalam: ‘Journalists can partner national development’ – Ramnath Goenka Excellence in Journalism Awards Speech

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!

“பத்திரிகைத் துறையில் சிறந்த சேவைபுரிந்தமைக்காக ராம்நாத் கோயங்கா பெயரிலான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளையும் விழாவில் பங்கேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு, பத்திரிகைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை என்ற நெருக்கடியான காலகட்டத்தில்கூட பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அஞ்சாமல் பாடுபட்டவர் ராம்நாத் கோயங்கா. சுதந்திரப் போராட்ட வீரர், தொழில் அதிபர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அயராது பாடுபடுபவர் என்று பன்முகச் சிறப்பு பெற்றவர் ராம்நாத் கோயங்கா.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்துமே அவருடைய நாட்டுப்பற்றுக்கும், அச்சமின்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 1932-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபரானார். பிறகு வெவ்வேறு இந்திய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் எல்லா பத்திரிகைகளும் மக்களால் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாக வெளிவந்தன.

“”பத்திரிகையாளர்கள் தேச வளர்ச்சியின் பங்குதாரர்கள்” என்ற தலைப்பில் இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.

1944-ல் எனக்கு 13 வயது. இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அண்ணன் சுதேசமித்திரன், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு துணை முகவராக இருந்தார். வேலைக்காக அவர் இலங்கை சென்றதால், ராமேஸ்வரத்தில் இவ்விரு பத்திரிகைகளையும் விநியோகிக்கும் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது. மாணவனாக இருந்த நான், உலகப் போர் குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்து வந்தேன். முதலில் தினமணி நாளிதழை வாங்கியதும், ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஆர்வமாகப் படிப்பேன். விமானவியலில் எனக்கு ஆர்வத்தை விதைத்ததே தினமணிதான். உலகம் முழுவதுமே மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் அன்றாடம் ஆயிரம் நடக்கலாம். பத்திரிகையாளர்கள் அவற்றை ஊன்றிக் கவனித்து உரிய வகையில் செய்தியாகத் தர வேண்டும்.

1999-ல் டெல் அவிவ் நகருக்குச் சென்றேன். ஹமாஸ் போராளிகள் லெபனான் எல்லையில் ராணுவத்துக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று தொலைக்காட்சியில் முக்கிய செய்தியை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பத்திரிகைகளை வாங்கியபோது, இந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே காண முடியவில்லை. ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த ஒரு விவசாயி, பாலைவனப் பகுதியில் மூன்று ஆண்டுகளாகத் தங்கி காய்கறி, பழச்சாகுபடியை அமோகமாக மேற்கொண்டு சாதனை படைத்திருப்பது குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மக்களும் அச்செய்தியைத்தான் ஆர்வமாகப் படித்தார்கள். பத்திரிகைத் துறையின் சிறந்த பங்களிப்பு என்றே அச் செய்தியை நானும் கருதுகிறேன்.

எல்லா பத்திரிகைகளிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டும். செய்திகளைத் தர, ஆய்வுசெய்ய, முக்கியமானவற்றை எடுத்துரைக்க இதைப் பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பத்திரிகையியல் ஆய்வுப்பிரிவுடன் இந்தப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அது ஏன், எதனால் ஏற்படுகிறது, அதற்கு நீண்டகால, குறுகியகால தீர்வு என்ன என்று அறிய இது உதவும். மூத்த பத்திரிகையாளர்களும் இளைஞர்களும் இதில் சேர வேண்டும். இதனால் பத்திரிகையின் தரமும் உயரும்.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை ஆய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர். அயல்பணி ஒப்படைப்பு என்ற அவுட்-சோர்சிங் முறை குறித்து அமெரிக்காவில் கடுமையான ஆட்சேபம் எழுந்தபோது, ஆய்வு செய்து செய்தி தர ஒரு பத்திரிகையாளர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார். அயல்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள், சாதனங்களில் 90% அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து, செய்தியாக அளித்தார். அது அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு வியப்பை அளித்தது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) எப்படி வளர்ந்திருக்கிறது என்று அறிய “டிஸ்கவரி’ சேனலின், தாமஸ் ஃப்ரீட்மேன் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் போன்ற ஊர்களில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கினார். “”தி வேர்ல்ட் ஈஸ் ஃபிளாட்” (உலகம் தட்டையானது) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் இப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியப் பத்திரிகையாளர்களும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.

பத்திரிகைகள் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் செயலாற்ற முடியும் என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதிக்கு கடந்த மாதம் சென்றேன். அங்கு விவசாயிகளின் பிரச்னை குறித்து விவசாயிகள், அதிகாரிகள், வேளாண்துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருடன் விவாதித்தேன். இதேபோல பத்திரிகைகளின் ஆய்வுக்குழுவும் நேரடியாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தால் பிரச்னையை அடையாளம் காணவும், அரசுக்கு தீர்வுக்குண்டான வழிகளைச் சொல்லவும் உதவியாக இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்துக்குச் சென்றேன். பீட்டா காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதியவகை பருத்தியைச் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மாவட்ட விவசாயிகள் மனம் நொந்த நிலையில் இருந்தனர். வறட்சி காரணமாக மகசூல் குறைந்தது; அல்லது சாவியாகிப் போயிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைத்துவந்தால்தான் பீட்டா காட்டன் விதைகளால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற உண்மை அவர்களுக்கு அனுபவம் வாயிலாகத்தான் கிடைத்தது. இதுவே முன்கூட்டி தெரிந்திருந்தால் அவர்களின் நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும். தரமான விதை, சாகுபடி முறையில் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, உரிய நேரத்தில் வங்கிக் கடன், விளைபொருளை உடனே சந்தைப்படுத்த நல்ல வசதி, மழை இல்லாமல் போனால் பாசன நீருக்கு மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.

அடுத்தது பாசனத் தண்ணீர் பற்றியது. வாய்க்கால்களை வெட்டுவது, மடையை மாற்றுவது ஆகிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆறே இல்லாத இடங்களில் தண்ணீரை எப்படிக் கொண்டுவருவது? மழைக்காலத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீரைச் சேமிக்கலாம் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லித்தந்து உடன் இருந்து அமல் செய்தால் வறட்சி காலத்தில் அது கைகொடுத்து உதவும். இவை மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளும் சாகுபடியாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்களுடைய விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கும் வசதி செய்யப்பட வேண்டும். கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்காமல் இருக்க, எல்லா கிராமங்களுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்க வேண்டும்.

விவசாயிகள் வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவும், விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெறவும் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

பஞ்சாபின் கேரி புத்தார் என்ற இடத்தில் விவசாயிகள், தொழில்துறையினர், ஆய்வு நிலையம், கல்விக்கூடம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பால் பருத்திவிதையின் உற்பத்தித்திறன் இருமடங்காகப் பெருகியது. விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் திட்டங்களை யாருக்குத் தர வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிர்வாக அமைப்பும், திட்ட நிறைவேறலுக்கு இன்னின்னார்தான் பொறுப்பு என்ற நிர்வாக நடைமுறையும் அவசியம். விதர்பாவில் பிரச்னை என்ன, தீர்வு என்ன என்பதை பத்திரிகைகளின் ஆய்வுக்குழுக்கள் கண்டுபிடித்து எழுத முடியும்.

போரிலும், உள்நாட்டுக் கலவரங்களிலும் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளிலும் பிற நெருக்கடிகளிலும் இறப்பவர் எண்ணிக்கை நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இப்படி இறப்பவர்கள் அல்லது காயம்படுகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த 10 லட்சம் பேரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த, உதவித் திட்டம் அவசியம். ஆந்திர மாநிலத்தில் அப்படியொரு திட்டம் அற்புதமாகச் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடிகால மேலாண்மை-ஆய்வு என்ற அமைப்பு ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

சாலை விபத்து, பிரசவ காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் ஆபத்துகள், கிரிமினல் நடவடிக்கைகளால் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, வீடுகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்து, மின்சார விபத்து, ரசாயன விபத்து, நில நடுக்கம், ஆழிப் பேரலை, மிருகங்களால் விபத்து என்று எதுவாக இருந்தாலும் தகவல் கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் அந்தப் பகுதிக்கு முதலுதவி ஆம்புலன்ஸ்களுடன் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றி, உயர் சிகிச்சைக்குத் தாமதம் இன்றி, அமைப்பின் தகவல் தொடர்பு-வாகன வசதிகளைப் பயன்படுத்தி கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்த முறை. இதற்கு முதல்படியே, நெருக்கடி காலத்தில் 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு என்ன நெருக்கடி, எந்த இடம் என்ற தகவலைச்சுருக்கமாக, தெளிவாகச் சொன்னால் போதும், மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு ஆந்திரத்தின் 23 மாவட்டங்களில் 380 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவி, மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன. இதுவரையில் 11,500 பேரின் உயிர் உரிய நேரத்தில் உதவிகள் அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. இச் சேவையைப் பிற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் இதில் முக்கியத் தொடர்பாளர்களாக இருந்து சேவை புரியலாம்.

பத்திரிகை என்பது வாசகர்களுக்குத் தகவல்களையும் கல்வியையும் அளிப்பது. பத்திரிகைகள் நன்கு செயல்பட்டால் தேசம் வலுவடையும். பரபரப்பு செய்திக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் தரக்கூடாது. துணிச்சலாக, உண்மையாக, உத்வேகம் ஊட்டுகிற வகையில் செய்திகளைத் தருவதுதான் உண்மையான பத்திரிகையியலாகும். அது தேசத்தின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு உதவும். பத்திரிகைகளால் இளைஞர்களின் மனத்தை மாற்ற முடியும் என்பதால், ஆக்கபூர்வமாகச் செயல்படுவது மிகமிக அவசியம்.

100 கோடி இந்தியர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பத்திரிகையியலுக்கான ராம்நாத் கோயங்கா விருதில் மேலும் 2 பிரிவுகளையும் தொடங்க வேண்டும்.

1. ஊரக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்தி தருவதற்கும்,

2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்கும்

என்று 2 விருதுகளை 2007-08 முதல் வழங்க வேண்டும்.

(ராம்நாத் கோயங்கா பெயரிலான பத்திரிகையியல் விருதுகளை வழங்கி தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் சுருக்கம்)

————————————————————————————————-
பெருமைக்குப் பெருமை…

“எந்தவொரு பதவிக்கும் அதற்கான பெருமையோ, அதிகாரமோ கிடையாது. அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தால்தான் பதவிகள் பெருமைகளையும் அதிகாரங்களையும் பெறுகின்றன’ – இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறார் இன்று தனது பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

இந்தியக் குடியரசின் தலைவர்களாக இருந்த ஒவ்வொருவரும் அந்தப் பதவிக்குச் சில கௌரவங்களைச் சேர்த்தார்கள். அவர்களது தனித்தன்மையால் அந்தப் பதவி மேலும் பரிமளித்தது. ஓரிரு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் இந்தியக் குடியரசின் தலைமைப் பதவி அதை அலங்கரித்தவர்களால் களங்கப்பட்டதில்லை. களங்கம் என்று அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படும் சம்பவங்களும்கூட, அன்றைய ஆட்சியாளர்களின் தவறால் நிகழ்ந்தவையே தவிர குடியரசுத் தலைவராக இருந்தவரால் ஏற்படவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், எந்த அளவுக்கு இந்தப் பதவிக்கு கௌரவம் சேர்ப்பார் என்று தெரியாத நிலையில்தான் அந்தப் பதவியில் அமர்ந்தார் அப்துல் கலாம். ஐந்து ஆண்டுகள் கடந்து இப்போது பதவியிலிருந்து அவர் ஓய்வுபெறும்போது, இப்படி ஒரு குடியரசுத் தலைவர் இனி இந்தியாவுக்கு எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஆதங்கத்தை அனைவரது இதயங்களும் வெளிப்படுத்தும் அசாதாரணப் புகழோடு விடைபெறுகிறார்.

அரசியல்வாதி அல்லாத ஒருவர், குழப்பமான அரசியல் சூழ்நிலையில் செயல்பட முடியுமா என்பதற்கு விடையளித்திருப்பதுதான் அப்துல் கலாமின் முதல் வெற்றி. அரசியல்வாதிகள் மீது அதிகரித்து வரும் அதிருப்திக்கு நடுவிலும், நாளைய இந்தியா பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தனது குடியரசுத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தது அப்துல் கலாமின் அடுத்த வெற்றி. இனிமையாகவும் எளிமையாகவும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செயல்பட்டு, ஓர் உண்மையான மக்களின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து காட்டியது அவரது மிகப்பெரிய வெற்றி.

குடியரசுத் தலைவரின் ஆணைப்படி ஒரு விஷயம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை ரகசியமாகக் காக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவரைச் சந்தித்து அவருடன் ஒரு சில நாள்கள் தங்கிப்போக விழைந்தனர் அவரது உறவினர்கள். குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின்படி, ராமேஸ்வரத்திலிருந்து புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவரது 53 உறவினர்களும், குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களால் வரவேற்கப்பட்டு, ஊர் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கான எல்லா உபசரிப்புகளுடனும் கவனிக்கப்பட்டனர். ஒரு வாரம் தங்கியிருந்து விடையும் பெற்றனர்.

அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக, ஒருமுறைகூட அரசு வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக்கூடத் தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணத்தை வசூலித்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் குடியரசுத் தலைவர். தனது சம்பளப் பணத்திலிருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை அரசுக் கணக்குக்கு மாற்ற உத்தரவிட்டார் ஒரு குடியரசுத் தலைவர் என்று நாளைய குடியரசுத் தலைவர் மாளிகை ஆவணங்கள் இதை வெளிப்படுத்தும்.

இரண்டே இரண்டு பெட்டிகளுடன் வெளியேற இருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெருமையை இந்திய வரலாறு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறது. அந்த அளவுக்கு, அந்தப் பதவிக்கு அவர் பெருமை சேர்த்ததற்குக் காரணம், அவரது நேர்மையும் எளிமையும்; தனது மனதுக்குத் தவறு என்று பட்டதை தைரியமாக வெளிப்படுத்திய உள்ளத்தூய்மை. நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை அளித்தவர் என்பதுதான் இந்தியக் குடியரசுக்கு அப்துல் கலாமின் மிகப்பெரிய பங்களிப்பு.

இவரைத் தொடர்ந்து இனி யார் அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திச் செல்வது – அப்துல் கலாமின் தனி முத்திரை. இதுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் பதவி ஓய்வுபெற்ற பிறகுதான் “பாரத ரத்னா’ பட்டம் பெற்றார்கள். “பாரத ரத்னா’ குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முன்னுதாரணம் அப்துல் கலாமால்தான் நிகழ்ந்தது.

இவர்போல இன்னொருவர்…? வருவார், வரவேண்டும். அதுதான் அப்துல் கலாமின் எதிர்பார்ப்பும். அது பொய்த்துவிடலாகாது!

——————————————————————————————————————–
அப்துல் கலாமின் 10 கட்டளைகள்

புது தில்லி, ஜூலை 25: வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற, 10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாம் (75).

மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்திய கலாம் பேசியதாவது:

“நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, “”நம்மால் முடியும்” என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

1. நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

2. அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

3. மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

4. அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

5. அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

6. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

7. எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

8. நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

9. ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

10. மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். “”சுகோய்-30” ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, “”அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்” என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்’ என்றார் கலாம்.

Posted in 10, Abdul Kalaam, Abdul Kalam, Analysis, APJ, APJ Abdul Kalaam, APJ Abdul Kalam, Attention, Awards, Bharat Ratna, Bharath, Bharath Rathna, Bharath Ratna, Biosketch, Dev, Development, Education, Excellence, Express, Faces, Freedom, Future, Goenka, Honest, Honesty, Independence, Indian Express, Integrity, Journal, journalism, journalist, Journalists, Kalam, Mag, magazine, Media, MSM, Nation, News, Newspaper, Op-Ed, Opportunity, Path, people, Plan, Planning, Politician, Politics, President, Principle, Prizes, Profits, Ramnath, Ramnath Goenka, Ratna, Reporter, responsibility, revenue, RNG, sales, Sensation, Sensationalism, solutions, Suggestions | Leave a Comment »

Rajni’s ‘Sultan’ trailer screened with ‘Sivaji – The Boss’

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

“சிவாஜி’ திரையிடும் தியேட்டர்களில் ரஜினியின் “சுல்தான்’ பட ட்ரெய்லர்
sultan sivaji trailer rajni images

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செüந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம் “சுல்தான் த வாரியர்’. ரஜினி படங்களில் இடம்பெறுவது போன்ற காமெடி, ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்ட்டூன் சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் “சிவாஜி’ படம் வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

இதுபற்றி செüந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில் “”இந்த “சுல்தான்’ படம் ஒரு துவக்கம்தான். ரஜினிகாந்த் படம் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிறார்கள். அனிமேஷன் படம் என்றாலும் ஒரு திரைப்படத்துக்குரிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன. அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் நிறைவேற்றும்” என்றார்.

இந்த கார்ட்டூன் படத்தை ஆட்லேப்ஸ் நிறுவனமும், ஆச்சர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

———————————————————————————-

30 வருடத்தில் பார்க்காத கூட்டம் `சிவாஜி’ படத்துக்கு ரூ.2 1/2 கோடி வசூல்: அபிராமி ராமநாதன் பேட்டி

சென்னை, ஜுன். 19-

ரஜினியின் சிவாஜிபடம் கடந்த 15-ந்தேதி ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை காணதினமும் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு முன் கூட்டியே முடிந்து விட்டதால் பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்புகின்றனர். `சாப்ட்வேர்’ கம்பெனிகள் 1000, 2000 என்று டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளன.

இதனால் சாதாரண மக்களால் இன்னும் படம் பார்க்க முடியவில்லை. 10 ரூபாய் டிக்கெட்டுகளுக்கு முன் பதிவு கிடையாது என்பதால் அந்த டிக்கெட்டுக்காக இரவு 12 மணிக்கு தியேட்டர்களில் கிïவில் நிற்கின்றனர். மறுநாள் காலை தான் டிக்கெட் வழங் கப்படுகின்றன. விடிய விடிய கிïவில் சளைக்காமல் நிற் கின்றனர்.

திரையுலக வரலாற்றில் சமீப காலங்களில் இது போன்ற கூட்டங்களை பார்த்ததில்லை என்கின்றனர் சினிமா பிரமுகர்கள். வசூலிலும் சிவாஜி சக்கை போடு போடுகிறது.

சென்னையில் சத்யம், சாந்தம், ஆல்பர்ட், தேவி, மெலோடி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, உதயம், சூரியன், ஐநாக்ஸ், ஏ.வி.எம். ராஜேஸ்வரி, கமலா, பாரத், மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் `சிவாஜி’ ஓடு கிறது. அனைத்திலும் தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின் றன. வருகிற 25-ந்தேதி வரை இந்த தியேட்டர்களில் டிக்கெட் இல்லை. அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை நகர சிவாஜி பட விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் மாலைமலர் நிருபரிடம் கூறினார்.

மேலும் அவர் கூறியதா வது:-

சிவாஜி படம் 14-ந்தேதி இரவு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. 15-ந்தேதி முதல் தினமும் 4 காட்சிகள் திரையிட்டு வருகிறோம். சென்னையில் 15 தியேட்டர் களிலும் ஒரு காட்சிக்கு 15 ஆயிரம் பேர் பார்க்கின்றனர். ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். இது வரை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளனர். அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை முன்பதிவு செய்யப் பட்டுள்ளது. எந்த தியேட்டரி லும் டிக்கெட் இல்லை.

என் 30 வருட அனுபவத் தில் அபிராமி தியேட்டரில் 207 படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளன. 45 படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. அவற்றில் ஒரு படத்துக்கு கூட இவ்வளவு கூட்டத்தை பார்த்த தில்லை. முன் பதிவுக்காக இப்படிப்பட்ட நீண்ட கிïவையும் கண்ட தில்லை.

குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். இளைஞர்கள், பெரியர்கள், குழந்தைகள், பெண்களான அனைவரையும் ஒரு சேர பார்க்க முடிகிறது. சிவாஜி படத்துக்குத்தான். தியேட்டர்களுக்கு இதுவரை வராதவரெல்லாம் வரு கிறார்கள்.

சிவாஜி மூலம் தமிழ் சினிமாமறுபிறவி எடுத்துள்ளது.

சென்னை தியேட்டர்களில் சிவாஜி ரிலீசாகி 4 நாட்களில் ரூ.1 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. முன் பதிவான 10 நாட்களுக்கும் 2 கோடியே 40லட்சம் வசூலாகி உள்ளது.

படம் பார்த்தவர்கள் திரும்ப திரும்ப வருகிறார்கள். அதிக நாட்கள் இந்த படம் ஓடும்.

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

Posted in Abiraami, Abirami, Action, Adlabs, Animation, Archer, Area, ARR, Availability, Background, Biz, Black, Cinema, Clubs, Collections, Comedy, Counter, Deals, Fans, Films, Loss, Money, Movies, Mystery, Preview, Production, Profits, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Re-recording, Records, Rehman, Rental, revenue, sales, Soundarya, Soundharya, Sountharya, Sowndharya, Sultan, Tickets, trailer, Transactions, Updates, Voice, Warrior | 8 Comments »

Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.

அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.

இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!

ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.

அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?

அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.

மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.

உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.

ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.

சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.

அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).

ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.

இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.

தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.

கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது

மேலாளர்.)

Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »

Helmets, Plus One Admissions – Justice Intervention Required

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

திறமையின்மைக்குச் சான்றிதழ்

சமீபகாலமாக அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் அடிக்கடி எழுப்பும் கூக்குரல், நீதிமன்றம் அநாவசியமாக நிர்வாக விஷயங்களில் தலையிடுகிறது என்பதுதான். சொல்லப்போனால், அது உண்மையும்கூட. நீதிமன்றத் தலையீடு என்பது “ஹெல்மெட்’ அணிவதா, வேண்டாமா என்பதுவரை தொடர்வது துரதிருஷ்டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதுபோல, நீதிமன்றம் அன்றாட நிர்வாக விஷயங்களில் தலையிடுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்த்தால், அதற்கான விடை கிடைக்கும். தங்களது கடமையில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறும்போது நீதிமன்றத்தின் மூலம்தான் நியாயம் கிடைக்கும் என்கிற நிலைமைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். நீதி கேட்டு ஒரு சராசரி குடிமகன் நீதிமன்றத்தைச் சரணடையும்போது அவனுக்கு நியாயம் வழங்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிகளுக்கும், நீதித்துறைக்கும் ஏற்பட்டு விடுகிறது.

ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாவதுவரை படித்த மாணவன் அதே பள்ளிக்கூடத்தில் 11 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது இயற்கை நியதி. இதை அனைத்து பள்ளிக்கூட நிர்வாகங்களும் கடைப்பிடித்தாக வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டிய கடமை மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு உண்டு.

சி.பி.எஸ்.இ. முறையில் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாவது வகுப்பில் படித்த மாணவனை பிளஸ் ஒன் வகுப்பில் சேர்த்துக் கொள்ள நுழைவுத் தேர்வு மற்றும் புதிய நன்கொடை என நிபந்தனைகள் விதிக்கக்கூடாது என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகாவது, மாநில கல்வித் துறை தங்களது அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதா என்று உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஓர் அரசாணை பிறப்பித்து அத்தனை பள்ளிக்கூட நிர்வாகத்தையும் கட்டுப்பட வைத்திருக்க வேண்டும்.

அரசு இந்த விஷயத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல், குறைந்தபட்சம் அரசாணைகூட பிறப்பிக்காமல் இருந்தது எதனால் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னை எழும்பூரிலுள்ள டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகம் தனது பள்ளியில் பத்தாவது படித்துத் தேறிய முகமது வாசிப் என்ற மாணவனுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் தராமல், அதிக நன்கொடை அளித்த, அவரைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்ற வெளிப்பள்ளிக்கூட மாணவனுக்கு இடம் அளித்தபோதுதான் பிரச்னை வெடித்தது. முகமது வாசிப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் நீதிமன்றம் தலையிட நேர்ந்தது.

பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் கொடுத்த பிறகுதான் மற்ற பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது, கட் – ஆஃப் மதிப்பெண் நிர்ணயிப்பது, புதிய அட்மிஷனாகக் கருதி நன்கொடை பெறுவது போன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றம்.

தான் செய்ய வேண்டிய கடமைகளைத் தட்டிக் கழிக்க அரசு ஏன் முயல வேண்டும் என்பதுதான் புரியவில்லை. அதிகார வர்க்கம் எப்போதுமே எந்தப் பொறுப்பையும் சுமக்காமல் முடிந்தவரை தட்டிக் கழிக்கப் பார்க்கும் என்பது தெரிந்த விஷயம். ஆனால், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் அப்படி இருந்துவிட முடியாது. பொதுமக்கள் நன்மையைக் கருதி தைரியமாக முடிவெடுக்க வேண்டிய கடமை அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு.

அளவுக்கு அதிகமான நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கைகளும் இல்லை. தெருவுக்குத் தெரு காளான்போலப் பெருகி வரும் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இதைப்பற்றி அரசின் கல்வித்துறை கவலைப்படுவதாகவே இல்லை. எந்தவிதப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளாமல், நீதிமன்றத் தீர்ப்பாக உத்தரவுகள் வருவதற்குக் கல்வித் துறை காத்திருக்கிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

திறமைசாலி என்று கருதப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விஷயங்களில் ஏன் தடுமாறுகிறார் என்பது புரியவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு அரசின் திறமையின்மைக்குத் தரப்பட்டிருக்கும் சான்றிதழ்.

Posted in +1, abuse, Admissions, Ban, Bar, Bikes, Business, CBSE, Courts, Cutoff, Disqualify, Don bosco, Donations, Donbosco, Education, Extortion, Helmet, Helmets, HSC, Industry, Judges, Justice, Law, Marks, Matric, Matriculation, Merit, Minister, Needy, Order, Plus1, PlusOne, Poor, Power, Price, Quality, revenue, Rich, Safety, School, Schools, seats, State, Study, Thangam Thennarasu, Thenarasu, Thennarasu, Wealthy | Leave a Comment »

V Muthiah – State of Cooperative societies – Backgrounder, Elections, Law amendments

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

தேவை மாதிரி கூட்டுறவு சட்டம்

வி. முத்தையா

இந்தியாவில் சுமார் 6 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 23 கோடி உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய சமூக, பொருளாதார இயக்கமாக கூட்டுறவு இயக்கம் விளங்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக வேளாண் கடன், இடுபொருள், உரம், மீன்வளம், பால்வளம், சர்க்கரை, வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய பல துறைகளின் வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

தமிழகத்தில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் கூட்டுறவு சங்கங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

தமிழகத்தில் 1.9 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.7 கோடி அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 27 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு பொதுநலநோக்கத்துடன் அறிவித்துவரும் மக்கள் நலத் திட்டங்களை சமூக அக்கறையோடும் செம்மையாகவும் செயல்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

அரசின் திட்டங்களை, அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்படாத வகையில் இவை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் தனக்கு இழப்பை ஏற்படுத்திக் கொண்டு அரசின் பிரதிநிதியாக நுகர்வோருக்கு சேவை செய்து வரும் இந்தக் கூட்டுறவுகளுக்குப் பதிலாக வேறு மாற்று முறை எதுவும் நிச்சயம் அரசுக்குக் கிடைக்க முடியாது.

இக் கூட்டுறவு சங்கங்கள் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பது அகில இந்திய அளவில் பாராட்டப்படக் கூடிய விஷயமாகும்.

தமிழகத்தில் மக்கள் இயக்கமாக வளர்ந்த கூட்டுறவு இயக்கம் அரசியல்வாதிகளுக்கு வெஞ்சாமரம் வீசும் சில சுயநல அதிகாரிகளின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்து வந்தது. அரசியல் குறுக்கீடுகள், தலையீடுகள் காரணமாக கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகப் பண்பை இழந்துவிட்டன.

பல கோடி மதிப்புள்ள சொத்துகளை தன்னகத்தே கொண்டு சிறப்பாகச் செயல்பட்ட பல கூட்டுறவு சங்கங்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளப்பட்டு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. பணியாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மறுக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்தியாகும். கடந்த 1999-ல் நடைபெற்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்கிற புகார் எழுந்ததையும் கருத்தில்கொண்டு தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் செய்யவேண்டியது மிக அவசியமாகும்.

அகில இந்திய கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னாட்சியைக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைச் செய்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நிர்வாகம் செய்யும்போது அரசின் தேவையற்ற தலையீட்டைத் தடுக்க சட்டப்பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். தேவையானால் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாத்திற்காக மத்திய அரசிடம் முறையிட வேண்டும்.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் தன்னாட்சியை உறுதிப்படுத்த பிரகாஷ் குழுவினால் 1991-ல் உருவாக்கப்பட்ட “மாதிரி கூட்டுறவு சட்டம்’ தமிழகத்தில் உடனடியாக சட்டமாக்கப்பட வேண்டும். மாதிரி கூட்டுறவு சட்டத்தில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இவை கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகபூர்வமாக செயல்படுவதை உறுதிபடுத்துவதாக இருக்கும்.

கூட்டுறவு சங்கங்களில் பதிவாளரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒழுங்குமுறைச் சட்டம் என்பதைவிட இயக்குவிக்கும் சட்டமாக இருக்கும். தணிக்கை அறிக்கை அங்கத்தினர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சங்கத்தைக் கலைக்க பதிலாளருக்கு அதிகாரம் கிடையாது.

மேலாண்மை, சட்டம், வங்கியியல், கணக்கியியல், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான புலமை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் அரசின் நிறுவனம் அல்ல என்பதை மாதிரி கூட்டுறவு சட்டம் தெளிவுபடுத்துகிறது. நிர்வாகிகள் மீது பொறுப்பு சுமத்தப்படுகிறது. கூட்டுறவு நிறுவனம் அங்கத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தேர்வு செய்யும் நபர்கள் பொறுப்பு ஏற்பவர்களாகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

சுயநல அரசியல் போக்கு வளர்ந்துவிட்ட இக் காலகட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாக்க “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ அவசியம் சட்டமாக்க வேண்டும்.

கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற இருப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ சட்டமாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் பரந்து, விரிந்த கட்டமைப்புடன் இயங்கி அங்கத்தினர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் அமைப்பாக கூட்டுறவு அமைப்புகள் செயல்பட இயலும்.

(கட்டுரையாளர்: பொருளாளர், ஏ.ஐ.டி.யு.சி. கூட்டுறவு தொழிலாளர் கூட்டமைப்பு)

——————————————————————————————–

கூட்டுறவே நாட்டுயர்வு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இந்தியாவின் வளர்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. ஆனால் தமிழகத்தில் நடந்த கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களால் முறையாகத் தேர்தல் நடக்கவில்லை என அதன் தோழமைக் கட்சிகள் தீவிரமாக எதிர்த்துப் போராடின. ஏற்கெனவே அதிமுகவும் மதிமுகவும் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தன. முதல்வர் அனைத்துக் கூட்டுறவுத் தேர்தல்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இதுவே அந்தத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததற்கான ஆதாரமாகிவிட்டது. திரும்பவும் எப்போது தேர்தல் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மாவீரன் திப்புசுல்தான் காலத்தில் கூட்டுறவு முறையில் பண்டக சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பொருள்கள் நியாய விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டுறவு அமைப்புக்கு தன்னுடைய குடிமக்களையே உறுப்பினர்களாக்கி அவர்களே முன்னின்று நடத்தும் கூட்டுறவு முறையைக் கொண்டு வந்தார் திப்புசுல்தான்.

இந்திய விடுதலைக்கு முன்பே – 1904-ம் ஆண்டில் இப்போதைய திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவுச் சங்கம் இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது. சர்.டி. ராஜகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராகப் பொறுப்பேற்றார். தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்கக் காரணமாக இருந்தவர் கூட்டுறவுத் தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார்.

ஏழைகள் தன்னந்தனியாகத் தங்களின் நலனுக்காக காரியத்தைச் செய்ய இயலாது. அவர்கள் கூட்டுமுயற்சியாகச் செய்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவுமுறை வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நகரும். சிறு உளியால்தான் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. சிறுதுளிதான் பெரு வெள்ளம். இதன் அடிப்படையில்தான் கூட்டுறவு இயக்கம் பிறந்தது. இங்கிலாந்தில் முதன் முதலாக 1844-ல் ராக்டேல் என்ற பகுதியில் 28 நெசவாளர்கள் சேர்ந்து 28 பவுண்ட் மூலதனத்தில் கூட்டுறவு நுகர்வோர் அமைப்பை உருவாக்கினர்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டுவசதி, கதர் கிராமத் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என – அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்குத் தாங்களே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.

நாடு விடுதலை பெற்றபின், கூட்டுறவுச் சங்கங்கள், அடிப்படையில் கிராமப்புற விவசாயிகளின் நலனை மனதில்கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்டன. வேளாண் தொழிலுக்கு நீண்டகால, குறுகியகாலக் கடன்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கியது.

1904-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவுச் சட்டம் 1961, 1963, 1983 என, பல காலகட்டங்களில் முக்கியத் திருத்தங்களைப் பெற்று இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு செம்மையாகச் செயல்பட பலர் காரணமாகத் திகழ்ந்தனர்.

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தைத் தொடங்கிய வ.உ. சிதம்பரனார், கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார். முன்னாள் முதல்வர் ராஜபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா, நெல்லை மேடை தளவாய் குமாரசாமி முதலியார், ஈரோடு ஏ.கே. சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து, சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே. ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ். ராஜகோபால நாயுடு, தஞ்சை நாடிமுத்து பிள்ளை, வேலூர் பக்தவத்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார், பொள்ளாச்சி மகாலிங்கம் என பலர் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக இயங்க 1950களில் அரும்பாடுபட்டனர்.

மீனவர் நலனில் அக்கறை கொண்ட சிங்காரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. ராமமூர்த்தி, அனந்தநம்பியார், எம். கல்யாணசுந்தரம் போன்றோர் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வளர பெரும்பணியாற்றினர்.

கூட்டுறவுச் சட்டப்படி, சங்கத்தின் தலைவராக ஒருவர் இரண்டு முறைதான் பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. 1983-ம் ஆண்டு சட்டம், கூட்டுறவுச் சங்கம் சுயஅதிகாரத்துடன் செயல்பட வழிவகுத்தது. 1988-ல் திருத்தப்பட்ட இச் சட்டம், செயல்படாத சங்கங்களை மாநில அரசு கலைக்கும் உரிமையை அளித்தது. கூட்டுறவு அமைப்புகள் ஆரம்ப காலங்களில் செயல்பட்ட மாதிரி தற்பொழுது இல்லை.

சுயநல விரும்பிகளின் பொறுப்புக்கு வந்தன. “”கூட்டுறவு அமைப்புகளுக்கு முழு சுயாட்சி அளிப்பதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரத் தயாராக உள்ளது” என்று கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் உறுதி அளித்துள்ளார்.

இந்த அமைப்புகளுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி போன்ற உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கலைக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காலந்தாழ்த்தாமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் கூட்டுறவு அமைப்புகள் திறம்படச் செயல்பட்டால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் தழைக்கும். அரசியல் தலையீடு இல்லாமல் உறுப்பினர்களுடைய விருப்பத்தின்பேரில் கூட்டுறவு இயக்கங்கள் செயல்பட வேண்டும்.

கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மட்டுமல்ல; கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பல பாடங்களைப் போதிக்கும் போதிமரமுமாகும்.

கூட்டுறவின் வெற்றி, உறுப்பினர்களின் நாணயத்தைப் பொருத்து அமைகிறது; அது சங்கங்களின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல என்றார் காந்தியடிகள். கூட்டுறவு அமைப்புகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், திட்டமிட்டு நடைபெறுகின்றன. இம்மாதிரியான சீர்கேடுகளைக் களையும்வண்ணம் கூட்டுறவு அமைப்புகள் செயல்பட, அரசு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அக்காலத்தில், கூட்டுறவுத் துறையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள், தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தங்களுடைய சொந்தப் பணத்தையே பயன்படுத்தினர். ஈரோடு எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர் ஒன்றுபட்ட கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.

காந்தியவாதியான அவர், ஈரோட்டிலிருந்து கோவைக்குச் சென்று கூட்டுறவுப் பணிகளை ஆற்றும்பொழுது, தம்முடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து, எளிமையான உணவை வாங்கிவரச் சொல்வார். கூட்டுறவுத் துறை வாகனங்களில் தன் குடும்பத்தாரை ஏற்ற மாட்டார். இவரைப்போன்று, மேடைதளவாய் குமாரசாமி முதலியாரும், தமது உறவினர் ஒருவர், சட்டத்திற்குப் புறம்பாக உதவி கேட்டு வந்தபோது, அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார். ஆனால் இன்றைக்குப் பொறுப்பில் உள்ளவர்கள், கூட்டுறவு அமைப்பின் கணக்கிலேயே தமக்கு மட்டுமல்லாமல், தம்முடைய பரிவாரங்களுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்காக மக்களின் பணத்தை வாரி இறைக்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.

இப்போது, கூட்டுறவுத் துறையை அனைத்து வசதிகளையும் அள்ளித்தரும் காமதேனுவாகக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுகச் சேர்த்து அமைக்கப்பட்ட அமைப்புகள், ஒழுங்கற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்பதால், சீரழிந்து வருகின்றன. எளியோர், வறியோர் எல்லோரும் சேர்ந்து சிரமப்பட்டு அமைத்த கூட்டுறவு முறையின் கண்ணியத்தைக் காக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in Agriculture, amendments, Analysis, Backgrounder, Banks, channel, Citizen, Coop, Cooperative, Cooptex, Democracy, Distribution, Economy, Elections, Expenses, Farmer, Finance, Fish, Fishery, Grains, Help, Industry, Insights, Law, Leaders, Loan, Loss, Management, Members, milk, Op-Ed, Opinion, Paddy, Polls, Poor, Ration, RBI, revenue, sales, Society, solutions, SSI, Suggestions, TUCS | Leave a Comment »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Raj TV’s ‘Kalainjar Television’ Launch – Is it against Maran brothers’ Sun TV?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ராஜ் டிவியில் “கலைஞர் டிவி’

சென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

ராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

புதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.

இந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.
புதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

திமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.

எனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.

புதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
================================================================

ஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்

சென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.

மே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.

ஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.

மே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

திங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.

மே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.

அதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.

———————————————————————————————————

கருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு?

சென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.

ராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.

சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:

சன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.

நீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.

இருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.

அதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.

அதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
———————————————————————————————————

“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

சன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.

புதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.

சன் டிவிக்கு நெருக்கடியா?

சன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.

————————————————————————————————

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!


தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

—————————————————————–

குமுதம் ரிப்போர்ட்டர் –  10.06.07

திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.

மே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.

இதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.

ஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…?’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்!

இதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.

அண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.

கலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு!

உரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.

இந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்!)

அந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்!’ என்றாராம்.

கலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள்? அவன் என் மகன்! என் ரத்தம்!!’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.

இவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.

அடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.

‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது?’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.

ஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.

கடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்!’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.

‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.

‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது!’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.

அப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.

இத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும்? அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்! ஸீ

கலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட!’’

உறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.

சரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே? ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.!

ஸீ எஸ்.பி. லட்சுமணன்

Posted in ADMK, Ads, Arts, Assets, AVM, Bribery, Bribes, BSNL, Campaign, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dinakaran, District Secretary, Districts, DMK, Elections, family, Feud, Government, Governor, Govt, Influence, Investment, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kannada, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Launch, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malayalam, Maran, Market, Media, MR Radha, MSM, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, News, News Channel, Palani Manikkam, PalaniManikkam, Pazhani Manikkam, PazhaniManikkam, Polls, Power, Preach, Radaan, radan, Radhika, Raj, Raj TV, Rajendran, Rating, revenue, Sarathkumar, Secretary, Serial, Sharathkumar, Shares, Soap Opera, Soaps, Stalin, Stocks, Sun, Sun Network, Sun TV, Survey, Surya, Suryaa, Tamil News, TeleSerial, Television, Telugu, Thalapathi, thalapathy, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, TRP, TV, vice-president, VP | 1 Comment »

TASMAC vs Private Liquor Shops in Tamil Nadu – Monthly License woes

Posted by Snapjudge மேல் மே 17, 2007

மாதாந்திர உரிமத் தொகை மாற்றத்தால் தனியார் பார் உரிமையாளர்கள் அவதி

சென்னை, மே 16: மாதாந்திர உரிமத் தொகை மாற்றத்தால் தனியார் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் பாரை மூடிவிட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு (2005-2006) டெண்டர் காலத்தில், மதுக்கடையின் மொத்த விற்பனைத் தொகையிலிருந்து, கடையைப் பொருத்து 2.5 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதில் அதிகபட்ச சதவீதம் எடுப்பவர்களுக்கு மட்டும் டெண்டர் உரிமம் கொடுக்கப்படும்.

அவர்கள் மதுக்கடையின் விற்பனையைப் பொருத்து கூடுதலாகவோ, குறைவாகவோ ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உரிமத் தொகையை செலுத்திவந்தனர்.

ஆனால் 2006 டிசம்பர் மாதம் முதல், கடந்த ஆண்டில் எந்த மாதம் அதிகமான விற்பனை ஆகியிருந்ததோ, அதனையே குறைந்தபட்ச மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் கடையில் விற்பனை கூடுதலாகும் பட்சத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாதக் கட்டணத்தைவிட கூடுதலாகவும், விற்பனை குறையும்போது நிர்ணயிக்கப்பட்ட தொகையும் மாத உரிமத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.

எந்தவொரு வியாபாரமும் எப்பொழுதும் ஒரே சீராக இருப்பதில்லை. வியாபாரம் குறைந்தால் கட்டணத் தொகையைக் குறைக்காமலும், வியாபாரம் அதிகரித்தால் மட்டும் கட்டணத் தொகையை கூடுதலாகக் கட்டச் சொல்வதும் பார் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.

இதோடு அரசு விடுமுறை நாள்களுக்கும் சேர்த்துப் பணம் கட்ட வேண்டியுள்ளது. கிடங்கிலிருந்து கடைகளுக்கு மதுபாட்டில்களை எடுத்துவருவதற்கு மெத்தனப் போக்கு காட்டுவதால், பார் தின்பண்ட விற்பனை நேரடியாகப் பாதிக்கப்படுகிறது.

மேலும் 30 சதவீதத்தினர் பாரில் அருந்தாமல், மது பாட்டில்களை பார்சல் வாங்கிச் சென்றுவிடுகின்றனர். ஆனால் இந்த 30 சதவீதத்தினருக்கும் சேர்த்தே மாதக் கட்டணத்தை அரசுக்கு பார் உரிமையாளர் செலுத்தவேண்டி உள்ளது.

மாதக் கட்டணத்தை குறைக்கக் கோரி உயர் அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. தனியார் பாரை மூடவைத்து, டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் பார் நடத்தி லாபம் அடைவதிலேயே அதிகாரிகள் குறிக்கோளாக உள்ளனர் என்றார் சென்னை எழும்பூர் தனியார் பார் உரிமையாளர் குமார்.

தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு மதுக்கடையின் விற்பனையைப் பொருத்து, பாருக்கான மாத உரிமத் தொகையைக் கணக்கிட்டு வசூலிக்கவேண்டும் எனவும் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in AA, Alcohol, Alcoholic, Alcoholics, Bar, Bars, beer, Brandy, Budget, Chennai, Cocktails, Commerce, Drink, Drunkard, Economy, Expenses, Finance, Govt, License, Liquor, Loss, Madras, Monthly, Parcel, Private, Profit, revenue, Rum, sales, Scotch, Shops, Tamil Nadu, TASMAC, tender, Whiskey, Wine | 2 Comments »

How to stop Corruption using Law and Order – Formation of higher level Committees

Posted by Snapjudge மேல் மே 3, 2007

ஊழலை ஒழிக்க உயர்நிலை அமைப்புகள்

கே.வீ. ராமராஜ்

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு ஒப்பந்தமானது கடந்த 2005 டிசம்பர் 5 அன்று நடைமுறைக்கு வந்தது. இதற்கு இந்தியாவும் ஒப்புதல் அளித்தது. எனவே ஊழல் ஒழிப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமையாகும்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழு இந்தியாவில் “லோக்பால்’, “லோக் ஆயுக்தா’ அமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

  • திட்டமிட்ட, உள்நோக்கத்துடன் ஒருவர் தனது பதவி அல்லது தகுதி ஆதாரங்களை நேரடியாகவோ அல்லது
  • மறைமுகமாகவோ சுய லாபத்திற்குத் தவறாகப் பயன்படுத்துவதே ஊழலாகும் என வரையறுக்கப்படுகிறது.
  1. பதவி அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதல்,
  2. விதிகள் – சட்டங்கள் – நியதிகள் முதலானவற்றை மீறுதல்,
  3. நடவடிக்கை எடுக்க வேண்டிய பணிகளில் செயல்படாமல் இருத்தல்,
  4. சுயநல நோக்கத்துடன் ஆதாரங்களைத் தேடுதல்,
  5. ஒரு செயலைச் செய்வதற்கு அல்லது செய்யாமல் இருப்பதற்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ பெறுதல்,
  6. பொது நலனுக்கு ஊறு விளைவித்தல் போன்ற வகைகளில் ஊழல் நடைபெறுகிறது.

இத்தருணத்தில் “லோக்பால்’ அமைப்பைக் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதும் அலசி ஆராய்வதும் அவசியமாகும். “லோக்பால்’ அமைப்பானது முதல்முதலாக 1809 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஏற்படுத்தப்பட்டது. இம்முறையானது இன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பல நாடுகளில் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமை வகித்த நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் 1966 ஆம் ஆண்டு தமது அறிக்கையில் தேசிய அளவில் “லோக்பால்’, மாநில அளவில் “லோக்ஆயுக்தா’ என்ற இரு வகையான லஞ்சத்தை களையும் அமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமெனப் பரிந்துரை செய்தது.

இதற்கான மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் இன்னும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் மாநில அளவில்

  • கர்நாடகம்,
  • மத்தியப் பிரதேசம்,
  • ராஜஸ்தான்,
  • பஞ்சாப்,
  • அசாம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் “லோக்ஆயுக்தாக்களை’ ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையர் அலுவலகமும் பல மாநிலங்களில் “லோக்ஆயுக்தா’ அமைப்பு முறையும் சில மாநிலங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத் துறைகளும் இயங்கி வருகின்றபோதிலும் இவற்றின் அமைப்பு முறைகளிலும் நடைமுறைகளிலும் அதிகாரங்களிலும் ஒருமித்த தன்மை இல்லை.

இதனால் தேசிய அளவிலும் மாநிலங்களிடையேயும் ஒத்துழைப்பும் தகவல் தொடர்பும் மிக்கதாக உள்ள வகையில் “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ என்ற இரண்டடுக்கு முறையை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்க வேண்டிய காலம் இதுவாகும். இவ்வமைப்பு முறையை உருவாக்கத் தேவைப்பட்டால் அரசியல்சாசன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளலாமென அரசியல்சாசன மறு ஆய்வு குழு தெரிவித்துள்ளது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

“லோக்பால்’ மூலம் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் உயர் பதவி வகிப்பவர்கள் உள்ளிட்டோர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகளையும் “லோக்ஆயுக்தா’ மூலம் முதல்வர், மாநில அமைச்சர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க வழி செய்வதன் மூலமாக நாடு முழுவதும் லஞ்சத்தை ஒழிப்பதற்கான ஒருமித்த அமைப்பு முறை உருவாகும். இத்தகைய அமைப்பு முறையை உருவாக்க 40 ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தபோதிலும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் முழுமையான ஆதரவு இல்லாததால்தான் இம் மசோதா நிறைவேறவில்லையென மாநில “லோக்ஆயுக்தா’ அமைப்புகளின் ஏழாவது மாநாட்டில் மத்தியப் பிரதேச “லோக்ஆயுக்தா’ அமைப்பு தெரிவித்துள்ளது.

“லோக்பால்’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் “லோக்ஆயுக்தா’ பதவியில் நியமனம் செய்யப்படுபவர் உயர் நீதிமன்ற நீதிபதி நிலைக்கும் குறையாத தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும்.

தேவைக்கேற்ப மத்தியிலும் மாநிலத்திலும் “உப லோக்பால்’, “உபலோக் ஆயுக்தா’ அமைப்புகளை நியமிக்கலாம். இவர்களை குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமனம் செய்ய வேண்டும். இப்பதவிகளில் காலியிடம் ஏற்படும்போது நீண்ட காலம் யாரும் பணியில் அமர்த்தப்படாமல் இருப்பதைத் தடுக்கும் வகையில் காலக்கெடுவும் மாற்றுத் திட்டமும் சட்டத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் சூழ்நிலை ஏற்படுமானால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் கையாளும் விசாரணை முறையைப் பின்பற்றலாம்.

“லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தன்னாட்சி பெற்றவைகளாக விளங்குவதோடு இவற்றின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளும் செயல்பாடுகளில் நீதிமன்றக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வமைப்புகளுக்குத் தக்க அதிகாரங்களும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். இப் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு எத்தகைய அரசுப் பணியும் வழங்கப்படக் கூடாது.

மாநிலங்களில் தற்போது உள்ள “லோக்ஆயுக்தா’ அமைப்புகள் தம்மிடம் சமர்ப்பிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தி தமது பரிந்துரைகளை மாநில அரசுக்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் இப்பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே எஞ்சியுள்ளது. இதைப்போல உத்தேசிக்கப்பட்டுள்ள “லோக்பால்’ அமைப்புகள் செயல்படக் கூடாது. மாறாக “லோக்பால்’, “லோக்ஆயுக்தா’ ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு நீதிமன்றத் தீர்ப்புகளைப் போன்ற சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். இப் பரிந்துரைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல் முறையீடு செய்யும் வகையில் புதிய சட்டம் இருக்க வேண்டும். தம்மிடம் தாக்கல் செய்யப்படும் முறையீடுகள் மீது ஓராண்டுக்குள் தீர்வு காண சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமையாகும்.

வேலியே பயிரை மேய்வதுபோல அரசு மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலர் கடமையைச் செய்யாமல் இருப்பதாலும் பிறர் கடமைகளில் குறுக்கிடுவதாலும் அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துவதாலும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. நேர்மையான அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் தவறு செய்பவர்களை இனம் காண உதவ வேண்டும்.

லஞ்சத்தைக் களைய வேண்டுமாயின் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தினாலே போதுமானது. நாடு தன்னிறைவு அடையவும் வல்லரசாக மாறவும் நாம் கனவு காணும்போது லஞ்சத்தை ஒழிக்க “லோக்பால்’ போன்ற அமைப்புகளை நம் நாட்டில் இன்னும் உருவாக்காமல் காலதாமதம் செய்வது சரியல்ல. மேலும் லஞ்ச லாவண்யமற்ற அரசைப் பெறும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்றால் மிகையல்ல.

சரியான பணிகளை முடிப்பதில்கூட அரசு அலுவலகங்களில் ஏற்படும் கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கிறது. ஆட்சி நிர்வாக அமைப்பில் எந்தவொரு நிலையிலும் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது என்பதே நல்லாட்சித் தத்துவம்.

முதலாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரையை போலவே இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த குழுவின் பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களும் தன்னார்வ அமைப்புகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஒசூர் நகர வழக்கறிஞர்.)

—————————————————————————————-

நிர்வாகத்தில் பொறுப்புணர்வு!

கே. ராமமூர்த்தி
“”நிர்வாகத்தில் பொறுப்புணர்வு” என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். அரசு நிர்வாகத்தின் மீது இப்போது பொதுவாகவே எல்லோருக்கும் அதிருப்தி நிலவுகிறது; அத்துடன் ஜனநாயக உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் இந்த விஷயம் முக்கியத்துவம் பெறுகிறது.

“மேலை நாட்டவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் பொறுப்புணர்வு; அலுவலகத்திலோ, நிர்வாகத்திலோ உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும் உங்களுடைய வேலைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இந்தியாவிலோ, உயர் பதவியில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு பொறுப்பு குறைவு!

மத்திய அரசில் முக்கிய பதவியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகக் கூறினார், “”வருமான வரி செலுத்த வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக மறந்துவிட்டேன்” என்று. அதற்குப் பிறகும் தண்டனை, நடவடிக்கை ஏதும் இல்லாமல் அவர்பாட்டுக்கு செயல்பட்டு வந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தாலும், ஒரு தலைமை நிர்வாகிமீது கூட இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை!

அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதாலேயே, அரசியல் சட்டத்தில் அதற்கு உரிய ஏற்பாடுகளை நமது முன்னோர் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்ட அரசாங்கம் என்பதே அதிகபட்ச திறமை, அதிகபட்ச பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்பதற்காகத்தான். அரசின் வரவு, செலவுகளை ஆராய்ந்து நாட்டு மக்களுக்கும் தெரிவித்து, அரசையும் தட்டிக்கேட்கத்தான், “”தலைமைக் கணக்கு – தணிக்கையாளர்” என்ற உயர் கண்காணிப்புப் பதவி அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம் என்பது பொதுக்கணக்குக்குழு என்ற அமைப்பைக் கொண்டு இதே பணியைச் செய்கிறது. அதற்கு தலைமைக் கணக்கு தணிக்கையாளர் நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் செயல்படுகிறது.

“நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் செலவுகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா, திட்டங்கள் ஒழுங்காக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொதுக் கணக்குக்குழுவுடன், மதிப்பீட்டுக் குழு, அரசின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் குழு போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசுத்துறை நிறுவனங்களின் பொறுப்புணர்வை உறுதி செய்ய, கம்பெனிகள் சட்டத்தில் 1956-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி மன்றங்களைப் பொருத்தவரை சிறப்பு தணிக்கை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிர்வாகமே தனது ஊழியர்களின் பொறுப்புணர்வைச் சோதிக்கவும், மேம்படுத்தவும் அக அமைப்புகளையும் வழி முறைகளையும் கொண்டுள்ளது. புற ஏற்பாடாக, பொதுமக்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் சந்திப்பு, புகார்-ஆலோசனைகளைப் பெறுவதற்கான நேரடி சந்திப்புக் கூட்டங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது.

அரசு நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இத்தனை ஏற்பாடுகள் இருந்தபோதும், அரசுத்துறையிலும் அரசு நிறுவனங்களிலும் யாருமே பொறுப்பானவர்கள் இல்லை என்ற எண்ணம்தான் மக்களிடம் வலுத்திருக்கிறது.

ஒரு வேலையை எடுத்தால் குறிப்பிட்ட நேரத்துக்குள் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உணர்வு ராணுவத்தில்தான் அதிகமாக இருக்கிறது; நீதித்துறையில்தான் அது மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதில் அதிகாரக் கட்டமைப்பு மட்டும் இந்த வேறுபாட்டுக்குக் காரணம் அல்ல, அமைப்பு ரீதியாகவே செய்துள்ள ஏற்பாடும், நிர்வாக நடைமுறைகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உள்ள ஏற்பாடுகள் அனைத்தும் “”பெயரளவுக்குத்தான்” செயல்படுகின்றன என்றே மக்கள் கருதுகின்றனர். தவறுகளையும் தாமதத்தையும் தண்டிக்கவோ, கண்டிக்கவோ, திருத்தவோ நிர்வாகத்தில் எந்தவித ஏற்பாடும் இல்லை என்பதே அவர்களுடைய மனக்குமுறல்.

நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் செயல்பாட்டில் பளிச்செனத் தெரியும் அம்சங்கள் இரண்டு.

பொறுப்பாக்குவதும் தணிக்கை செய்வதும், சம்பவம் நடந்து முடிந்த பிறகு தரும் ஆய்வறிக்கையாகவே இருக்கின்றன. எனவே, தவறு நடந்துவிடுகிறது அல்லது உரிய காலத்தில் நடைபெறாமல் மிகவும் தாமதமாக நடக்கிறது. இதற்குக் காரணமானவர்களை அல்லது தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதற்குக்கூட நீண்ட காலம் பிடிக்கிறது.

ஒரு செயலுக்கு யார் பொறுப்பு என்பதை அறிய, மறைமுகமாக கேள்விகளைக் கேட்பதும், அதையும் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்காமல் -அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களைக் கேட்பதாகவும் இருக்கிறது.

இந்தியாவில் பொது நிர்வாகத்தின் மீது நாடாளுமன்றத்துக்கு உள்ள கட்டுப்பாடு குறித்து 1952-1966 வரை மேற்கொண்ட ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

“”அரசியல்சட்டப்படி, அரசு நிர்வாகத்தின்மீது நாடாளுமன்றத்துக்கு முழு கட்டுப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. அப்படியே அதற்கு அதிகாரம் இருந்தாலும் அதை அமல் செய்யும் உள்ள உறுதி அதனிடம் இல்லை.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. நிர்வாகத்தை முழுமையாக ஆராய்ந்து, தவறுகளைக் கண்டுபிடித்து, உரிய திருத்த நடவடிக்கைகளையோ, தண்டனை நடவடிக்கைகளையோ எடுக்க நாடாளுமன்றத்துக்கு அவகாசம் இல்லை. நீண்ட நேரம் அமர்ந்து பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஆராயவோ, விவாதிக்கவோ அவை உறுப்பினர்களுக்கு ஆர்வம் இல்லை. அவையின் கூட்ட நேரத்தை அதிகப்படுத்த அரசுக்கும் விருப்பம் இல்லை. அவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களுக்கு ஆர்வம் குறைவு; இதனாலேயே பல நேரங்களில் அவையில் குறைந்தபட்ச (மொத்த உறுப்பினர்களில் 10 சதவீதம்) “”கோரம்” கூட இல்லை என்று மணி அடிக்கப்படுகிறது. பெரும்பாலான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பயிற்சியோ, அரசியல் விழிப்புணர்வோ, நிர்வாகத்தை நாடாளுமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமோ கிடையாது.

நிர்வாகத்தின் நெளிவுசுளிவுகளைத் தெரிந்துகொண்டு அதன் செயல்களை ஆராய்ந்து குறைகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலருக்குக் கிடையாது. நிர்வாகத்தின் பிரச்னைகள், அமைப்புமுறை, நிர்வாக நடைமுறை போன்றவை பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு சுயேச்சையான சிந்தனை உணர்வும் கிடையாது. இந்த அறிக்கை வந்து 40 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, நிலைமை பெருமளவுக்கு மாறிவிடவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்படி செய்யப்படும் தொகுதி வளர்ச்சி நிதி என்ற செலவினத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். 1993-ல் தலா ரூ.5 லட்சம் என்று மொத்தம் ரூ.37.5 கோடி ஒதுக்கப்பட்டது. 1994-ல் தலா ரூ.1 கோடி என்று உயர்த்தப்பட்டு ரூ.790 கோடியானது. பிறகு அதுவே ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இதே திட்டம் சட்டமன்றங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ரூ.1,500 கோடியானது. இந்த திட்டங்களிலும் இறுதிப்பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதில் 25% தான் போய்ச் சேருகிறது என்று தெரியவருகிறது.

இந்த நிலைமாற பின்வரும் பரிந்துரைகளைப் பரிசீலிக்கலாம்:

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முரணாக உள்ள, அரசு ரகசியங்கள் காப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் தகவல் அறியும் சட்டம் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே அது உருவான விதம், அதற்காக முதலில் மதிப்பிடப்பட்ட தொகை, செலவழிக்கப்பட்ட தொகை, அடைந்த பயன், திட்டம் தோல்வியா, வெற்றியா, சாதகம் அதிகமா பாதகம் அதிகமா என்பதைத் தொகுத்து மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

நிர்வாக நடுவர் மன்றம் போன்றவை வலுப்படுத்தப்பட்டு, விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மனித வள மேம்பாட்டை அளக்கும் வழிமுறையைப் பின்பற்றி, ஒவ்வொரு சமூக நலத் திட்டத்தின் வளர்ச்சியையும் அளக்க வேண்டும். அரசு என்ற அமைப்புக்குப் பதிலாக, சமூகம் என்பதை ஊக்குவித்து அவர்களின் நன்மைக்கான திட்டங்களை அவர்களைக் கொண்டே அமல்படுத்தும் நவீன முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

காலாவதியாகிவிட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஆம்புட்ஸ்மேன், லோக்பால் என்பது வெறும் புகார்களைப்பெறும் அமைப்பாக நின்றுவிடாமல், நிர்வாகத்தினரைப் பதில்சொல்ல வைக்கும் அமைப்பாகச் செயல்பட வலுப்படுத்தப்பட வேண்டும். பொறுப்பாக்குதல் என்ற பெயரில் அரசு நிர்வாகப்பணியாளர்களின் செயல்பாட்டுச் சுதந்திரம், திறமை, நேர்மை, நியாயமான அணுகுமுறை ஆகியவற்றை நசுக்கும்படியான கட்டுப்பாடுகளைத் திணித்துவிடக்கூடாது.

(கட்டுரையாளர்: உறுப்பினர் – மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்.)

———————————————————————————————-

ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேட்டை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை: ப.சிதம்பரம் வேதனை

திண்டுக்கல், ஜூலை 10: ஊழல், திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதுதான் நம்முடைய மிகப் பெரிய தோல்வி என மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய உரை:

கடந்த 3 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவிகிதத்துக்கும் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளன. ஆனால், நமது மக்களிடம் எப்படி இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதுதான் அனைவரிடமும் உள்ள முக்கியக் கேள்வி.

உலகமயமாக்குதலின் பயன்கள் கிராமப்புற இந்தியாவையும் சென்று அடைந்திருப்பது தெளிவு. பல்வேறு நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புகளில் இந்தியாவின் ஏழ்மை விகிதம் கிராமப்புறங்களில் 37.3 சதவிகிதத்தில் இருந்து 28.3 சதவிகிதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று வேலைவாய்ப்பும், குறிப்பாக மகளிர் வேலைவாய்ப்பு கிராமப்புறங்களில் அதிகரித்து இருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெளிவாகி உள்ளது.

கிராமப்புறங்களில் வளர்ச்சி இருந்தாலும், அது உணரும்படியாக இல்லாததற்குக் காரணம் மாற்றம் மிக மெதுவாக நடைபெற்று வருவதுதான். வளர்ச்சியை வேகப்படுத்துவதுதான் நம்முன் இருக்கும் சவாலாகும். இதற்கு முக்கியமாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள், நல்ல கல்வி, கூடுதலான வருவாய் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

இந்திய கிராமங்களில் குறைவான தொழில் முதலீடு, குறைந்த தொழில்நுட்ப வசதி, சந்தையை தொடர்பு கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவைதான் தடைக்கற்களாக உள்ளன.

ஒதுக்கப்பட்ட கோடிகள் எங்கே?

  • கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7 லட்சம் கிராமங்களுக்காக ரூ. 1.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 88 ஆயிரம் கோடியும்,
  • குடிநீர் வசதிக்காக ரூ. 21 ஆயிரம் கோடியும்,
  • தரிசு நில மேம்பாட்டுக்காக ரூ. 5 ஆயிரம் கோடியும்,
  • பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்காக ரூ. 6,700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சராசரியாக இதன் மூலம் 7 லட்சம் கிராமங்களுக்கும் தலா ரூ. 17 லட்சம் கிடைத்திருக்க வேண்டும். இதன் மூலம் பள்ளி, குடிநீர் வசதி, கிராமச் சாலைகள் எளிதாக ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், உண்மையில் அவ்வாறு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன? பதில் கிடைக்க வேண்டும்.

கிராமப்புற இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்கி பாரத் நிர்மாண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 1.74 லட்சம் கோடி செலவில் 2009-ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றப் பாடுபடுவோம்.

இத் திட்டத்தின் மூலம் கூடுதலாக நீர்ப்பாசன வசதியுடன் ஒரு கோடி ஹெக்டேர் பயிர் நிலத்தை உருவாக்கவும், 1,000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களுக்கு இணைப்புச் சாலை வழங்கவும், 60 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரவும் இன்னும் குடிநீர் வசதி பெறாத 74 ஆயிரம் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வசதி செய்து தரவும், மின் இணைப்பு இல்லாத 2.3 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கவும், தொலைபேசி வசதி இல்லாத 66,822 கிராமங்களுக்குத் தொலைபேசி வசதி செய்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நமது தவறுகள்

சாலைகளைப் போடுகிறோம். ஆனால், அவற்றைப் பராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. மின்சாரத்தை வழங்குகிறோம். ஆனால், மின் திருட்டைத் தடுக்கவோ, மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கவோ தவறுகிறோம். வீடுகளைக் கட்டித் தருகிறோம். ஆனால், அவை குடியிருப்பதற்கு தகுதியில்லாத அளவுக்குக் கட்டப்படுகின்றன.

நீர்ப் பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம். ஆனால், அதில் மக்கள் பங்களிப்பு இல்லை.

எல்லாவற்றையும்விட நாம் ஒதுக்கும் நிதியை தவறாக செலவிடுபவர்கள் மற்றும் முறைகேடு செய்பவர்களைக் தண்டிப்பதில்லை. அதோடு ஊழல், நிர்வாகச் சீர்கேடு மற்றும் திறமையின்மை ஆகியவற்றை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோம்.

புதிய நிர்வாக முû

மாநில அரசு என்பது மிகப் பெரிய நிர்வாகம் ஆகவும், ஊராட்சி மிகச் சிறிய நிர்வாகமாகவும் இருப்பதால் இடைப்பட்ட ஒரு நிர்வாகம் தேவை. எனவே ஒவ்வொரு 10 லட்சம் மக்கள்தொகைக்கும் ஒரு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இதற்கான 10 உறுப்பினர்களை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், சாலைகள், குடிநீர் போன்ற அனைத்துத் துறைகளையும் மாவட்ட நிர்வாகம் கவனிக்கும். தேவைப்படும் நிதியை அரசு ஒதுக்கும். இதை நடைமுறைப்படுத்த அரசியல் சட்டத் திருத்தம் தேவையில்லை.

மத்திய, மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால் போதும் என்றார் அமைச்சர் ப. சிதம்பரம்.

—————————————————————————————————————————

ஊழல் விசாரணை பணிகளுக்கும் “அவுட் சோர்சிங்’ மகாராஷ்டிராவில் புரட்சி

மும்பை: நிறுவனங்கள், வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும், தங்கள் பணிகளில் சிலவற்றை இன்னொரு நிறுவனத்திடம், ஒப்படைத்து, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வதை பார்த்திருக்கிறோம்; ஆனால், அரசு ஊழியர் நடத்தை, ஊழல் குறித்து விசாரிக்கும் பொறுப்பை, “அவுட் சோர்சிங்’ முறையில் செய்து கொள்வது பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், இப்படி ஒரு புரட்சியை செய்துள்ளது மகாராஷ்டிர அரசு.

இதனால், ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை கொந்தளித்துள்ளனர். இந்த அமைப்பு, முழு சுதந்திரமாக இயங்கும். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தலைமையில் இயங்கும். அவருக்கு உதவ, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு சம்பளம் தரப்படும். இந்த அமைப்பிடம், எல்லா துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விவகாரங்களும் ஒப்படைக்கப்படும். அதை விசாரித்து, அரசின் ஊழியர் நலத்துறைக்கு அறிக்கையை அனுப்பிவிடும். அதன் பேரில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அமைப்பு உருவாக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை, ஊழியர் நலத்துறை வெளியிட்டவுடன், ஊழியர்கள் பலரும் கொதித்தனர். “அரசுக்கு தொடர்பே இல்லாத மாஜி அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தினால், நியாயம் கிடைக்காது. மேலும், ஊழல் தான் அதிகரிக்கும்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் சொல்வதை ஏற்க அரசு தயாரில்லை. பல துறைகளில் உள்ள விசாரணை பிரிவுகளை அரசு கலைத்துவிட்டது. “ஊழியர்கள் பற்றிய எந்த ஒரு விசாரணையும் புதிய அமைப்பிடம் தான் ஒப்படைக்க வேண்டும்’ என்று துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

——————————————————————————————————-
தூய்மையாகுமா பொதுவாழ்க்கை?

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

“”முறையற்ற செயல்களை மேற்கொண்டு குடிமக்களை வருத்தும் அரசன் கொலைகாரர்களைவிட கொடியவன்.” – என்ற குறட்பாவின்படி ஆட்சியாளர்களுடைய நேர்மையின் கீழ்தான் நாடு நலம் பெறும்.

ஆளவந்தவர்களும் நிர்வாகத்தில் இருப்போரும் மக்களுக்குப் புகார் அற்ற தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும்.

இன்றைக்கு பொது வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற சூழல் நிலவுகிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றும் தங்களால், தங்களுக்காக ஆளப்படுகின்ற ஆட்சி என்ற நோக்கிலும் அரசை நடத்துகின்றனர்.

இந்த அவலப்போக்கை மாற்ற லோக்பால் மசோதா 1968, 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் ஆகாமல் நின்றுபோனது. ஆனால் ஒப்புக்கு நாடாளுமன்றத்தில் பலமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக மேல்தட்டில் இருக்கின்றவர்களையும் தட்டிக் கேட்கின்ற மசோதா இன்றைய சூழலில் அவசியம் தேவை. பொது வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான அரசியல் வளரவும் இம்மசோதா வழிசெய்யும்.

பங்குபேர ஊழல், சர்க்கரைப்பேர ஊழல், டெலிகாம் ஒப்பந்த ஊழல், ஹவாலா ஊழல் என்று தொடங்கி இந்தியாவில் சர்வநிலையிலும் புரையோடிவிட்டது.

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது கூறப்பட்ட ரூ. 950 கோடி தீவன ஊழல் இந்தியாவையே ஆட்டி வைத்தது.

முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மருமகளுக்கு சட்டத்திற்குப் புறம்பாக பெட்ரோல் விற்பனை நிலையங்களை சதீஷ் சர்மா ஒதுக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் மூலம் உண்மை எனத் தெரியவந்தது. இன்று சரத்பவார் மீது கோதுமை இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்திய வரலாற்றில் ஊழல்கள் தொடர் கதையாக இருக்கின்றன. பஞ்சாப் மாநில அன்றைய முதல்வர் பிரதாப் சிங் கைரான் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேரு பிரதமராக இருந்தபோது அதுபற்றி விசாரிக்க எஸ்.ஆர். தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.

1958-ஆம் ஆண்டு பெரோஸ் காந்தி மக்களவையில் முந்திரா ஊழல் பிரச்னையை கிளப்பினார். ரூ. 1.25 கோடி மதிப்புள்ள பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகம் முறைகேடாக விற்பனை செய்தது சம்பந்தமாக ஊழல் குற்றச்சாட்டை பெரோஸ் காந்தி பேசினார். இது சம்பந்தமாக ஆவணங்களை மக்களவையில் வைக்கும்படி வேண்டி அன்றைய மக்களவைத் தலைவர் அனந்தசயன அய்யங்காரிடம் கோரினார். ரகசியக் கோப்புகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அய்யங்கார் முந்திரா ஊழல் சம்பந்தமான ரகசியக் கோப்புகள் அனைத்தையும் அவையில் வைக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.

இதன் பின்பு, பண்டித நேரு ஆணையின் பேரில் அன்றைய பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சி. சுக்லா இதுகுறித்து விசாரணை நடத்தினார். இறுதியில் பங்கு பேர ஊழலில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக அன்றைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியில் இருந்து விலகினார். அம்மாதிரி கிருஷ்ணமேனன் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பிரதாப் சிங் கைரோனுக்குப் பிறகு பக்ஷி குலாம் முகமது மீதும், 1957-ல் கேரளத்தை ஆண்ட கம்யூனிஸ்ட் அரசு, ஆந்திரத்திலிருந்து அரிசி வாங்கப்பட்ட ஊழல் முதல் இன்றைக்கு ஆட்சியில் உள்ளவர்கள் வரை செய்த ஊழல்களை ஒரு நீண்ட பட்டியலாக இடலாம்.

புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வி. காமத் மூன்றாவது மக்களவையில் சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் சீராஜின் ஊழலை அம்பலப்படுத்தினார். ஐந்தாவது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய வணிகத் துறை அமைச்சர் எல்.என். மிஸ்ரா ஏற்றுமதி உரிமம் வழங்கியதில் ஊழல் செய்துள்ளார் என்ற பிரச்னை எழுப்பப்பட்டது. அன்றைய மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லான், இது சம்பந்தமான ரகசிய ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கினார். இறுதியில், இந்தப் பிரச்னையில் ஊழல் நடந்தது என்று நாடாளுமன்றம் உறுதிபட கூறியது.

பாரத ஸ்டேட் வங்கியில் நடந்த நகர்வாலா ஊழலை அனைவரும் அறிவார்கள். ரூ. 60 லட்சம் தில்லி நாடாளுமன்றத் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்தினால் அந்த வங்கியின் அதிகாரி மல்கோத்ரா மூலம் வழங்கப்பட்டது என்ற பிரச்னை நாடு முழுவதும் எதிரொலித்தது.

இந்தச் சூழலில் நகர்வாலா மர்மமாக இறந்துவிட்டார். இந்தக் கிரிமினல் வழக்கு 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. யார் குற்றவாளி என்று இதுவரை நீதிமன்றம் தீர்ப்பு தரவில்லை என்பது வேதனையான செய்தி ஆகும். அந்தப் பணம் கொடுத்த வங்கி அதிகாரி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சஞ்சய் காந்தியின் மாருதி கார் தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டார்.

ஐந்தாவது மக்களவையில் மாருதி கார் ஊழல் சம்பந்தமாக பல சட்ட விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்தப் பிரச்னை சம்பந்தமான விவரங்களைத் தொழில் அமைச்சகம் மக்களவையில் வைக்கவிடாமல் தடுத்தது என்ற குற்றச்சாட்டு அன்றைய இந்திரா காந்தி மீது சுமத்தப்பட்டது. அவசர நிலை காலத்தில் ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு ஷா கமிஷன் அமைக்கப்பட்டது.

ஏ.ஆர். அந்துலே, “”இந்திராகாந்தி அறக்கட்டளை அமைப்புக்கு’ பணம் வசூல் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இது சம்பந்தமான ஆவணங்கள் மக்களவையில் வைக்கப்பட்டது. இறுதியாக நீதிபதி லின்டன் தீர்ப்பின்படி மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து அந்துலே விலகினார்.

பரபரப்பான போபர்ஸ் ஊழல் நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தது. இதனால் ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை மக்கள் அகற்றினார்கள். இந்த பேரத்தில் அவர் ரூ. 64 கோடி கமிஷனாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. ஒன்பதாவது மக்களவையில் தேசிய முன்னணி அரசு ஆட்சியில் இருந்தபோது போபர்ஸ் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டது.

போபர்ஸ் ஊழல் விசாரணை முடிவுறாத நிலையில் இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. குவாத்ரோச்சியை ஆட்சியில் உள்ளவர்கள் தற்போது பாதுகாக்கின்ற நிலை.

செயிண்ட் கிட்ஸ் பிரச்னை, வீட்டு வசதி ஊழல், ஜெ.எம்.எம். ஊழல், யூரியா இறக்குமதி ஊழல், ஹெக்டே மீது கர்நாடகத்தில் நில மோசடி குற்றச்சாட்டு என ஊழல்கள் பட்டியலும் நீண்டு கொண்டுள்ளன.

10-வது மக்களவையில் பங்கு வியாபாரி ஹர்ஷத் மேத்தா நேரிடையாக பல அரசியல் தலைவர்களிடம் பணம் கொடுத்தேன் என்று கூறினார். இறுதியாக, இது சம்பந்தமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு விடப்பட்டது. இப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

சர்க்கரை பேர ஊழல், டெலிகாம் ஊழல் விவகாரம் போன்றவை கடுமையாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டன. இது சம்பந்தமாக, அன்றைய அமைச்சர் சுக்ராம் டெண்டர்களை கடைசி நிமிடத்தில் மாற்றி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ. 20,000 கோடி இழப்பு ஏற்பட்டது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெரும் புள்ளிகளும், தொழிலதிபர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக 5729 நபர்கள் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இன்றும் அந்த ரகசியப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தவறு செய்யும் ஆட்சியாளர்களை விசாரிக்க “லோக்பால்’ போன்ற அமைப்பு தேவை என வலியுறுத்தப்பட்டது. 1960-ம் ஆண்டு கே. சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஊழல்கள் அதிகமாகிப் பரவி வருவதைப்பற்றியும் அதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் அரசுக்குப் பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அனுமந்தையா, வெல்லோடு உன்னிநாதன், மாத்துர் போன்றோர் தலைமையில் அமைக்கப்பட்டன. 1966-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர்திருத்தக் குழுவும் மக்கள் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஊழல், தவறுகளைப் பற்றிய புகார்களை ஆராய ஓர் அமைப்பு தேவையென வலியுறுத்தியது.

“லோக்பால்’ போன்ற அமைப்பு செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் பிரதிநிதிகள் இதயசுத்தியோடு அணுகவில்லை என்பதே ஆகும்.

மக்கள் மத்தியில் லோக்பால் பற்றி பல்வேறு உறுதிமொழிகள் அளிக்கப்பட்டும் நடைமுறைக்கு வராத அளவில் அணை போடப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது.

“”இதோ புலி வருகிறது…” என்பது போன்று லோக்பால் மசோதாவின் கதையும் உள்ளது. லோக்பாலுக்கு எப்போது விடிவுகாலம் வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in abuse, Chidhambaram, Collector, Commissioner, Corruption, Court, Democracy, Economy, Education, Election, Employment, Finance, Gandhi, GDP, Governor, Govt, Growth, Honesty, IAS, Improvements, Inflation, Influence, infrastructure, IPS, Jobs, Judge, Jury, Justice, kickbacks, Law, Lecture, Lok Ayuktha, Lokpal, Metro, Money, Officer, Order, Party, Planning, Police, Politics, Poor, Poverty, Power, Public, Ramamurthy, Ramaraj, Recession, Republic, responsibility, revenue, Rich, Rural, service, Suburban, Wealthy | Leave a Comment »

India may stop palm oil import from Indonesia: ISEA

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 5, 2007

இந்தோனேசியாவுக்கு இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரிக்கை

ஜகார்த்தா, ஏப். 5: சுத்திகரிக்கப்படாத ஆயிலுக்குப் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்தால் பாமாயில் உள்பட அனைத்து சமையல் எண்ணெய்களின் இறக்குமதியையும் முற்றிலும் நிறுத்த வலியுறுத்துவோம் என இந்தோனேசியாவுக்கு இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கு அதிகப்படியாக சுத்திகரிக்கப்படாத பாமாயிலை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந் நிலையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஏற்றுமதியை குறைத்துவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் ஏற்றுமதியை அதிகரிக்க அந்நாட்டு அரசு முயற்சித்து வருகிறது. இதனால்தான் பாமாயில் இறக்குமதியை முற்றிலும் நிறுத்திவிட வலியுறுத்துவோம் என இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

“இந்தோனேசியா, மலேசியா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவுக்கு அதிக அளவிலான பாமாயிலை ஏற்றுமதி செய்து வருகின்றன. மலேசியாவை விட இந்தோனேசியாதான் அதிகம் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவுக்கு மலேசியா சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை ஏற்றுமதி செய்ய அதிக முனைப்பு காட்டுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இந்தியாவிற்கு தேவையில்லை’ என இந்திய சமையல் எண்ணெய் நிறுவனங்கள் சங்கம் இயக்குநர் மேத்தா தெரிவித்தார்.

Posted in Commerce, Consumption, Cooking, CPO, crude, crude palm oil, Economy, Employment, Expense, Exports, Gas, Import, Indian Solvent Extractors Association, Indonesia, ISEA, Jakarta, job, Malaysia, oil, palm oil, palmoil, Protection, refined palm oil, revenue, soybean, soybean oil, Tax, Trade, vegetable oils | 1 Comment »

Money Lending practices – Checks, Loans, Accounting Backgrounder

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

போலி காசோலைகளும் தொடர் வழக்குகளும்

ப. முத்தையன்

இந்தியாவில் பணமாற்று முறையில் முதலில் தோன்றிய முறை “கைமாத்து’ அல்லது “கைமாற்று.’

ஒரு நபர் தெரிந்த ஒரு நபருக்கோ அல்லது தெரிந்த நபர் அறிமுகப்படுத்தும் மற்றொரு நபருக்கோ நம்பிக்கை நாணயத்தின் பேரில் நேரிடையாக பணம் கடனாகக் கொடுப்பதுதான் கைமாற்று. வாய்வழி உத்தரவாதம்தான் பெரிதாக மதிக்கப்பட்டது.

பணத்திற்கு வட்டி தர வேண்டுமா, வேண்டாமா என்பது இரு நபர்களின் உறவையும் கால அளவையும் பொறுத்தது. குறுகிய கால கடனுக்கு வட்டி பெரும்பாலும் கிடையாது. காலங்கடந்த தொகைக்கு வட்டி வாங்கப்பட்டது. கைமாற்று முறையில் மாற்றம் ஏற்பட்டு பின்னர் புரோ நோட்டு அல்லது கடன் உறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்து பணம் வாங்கும் முறை புழக்கத்தில் வந்தது. பொதுவாக புரோ நோட்டு மூன்று ஆண்டு காலக்கெடுவிற்கு உட்படுத்தப்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. முழுத் தொகையையும் செலுத்த முடியாதபோது ஒரு சிறு தொகை வரவு வைக்கப்பட்டு மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்கு கெடு நீட்டிக்கப்படுவதும் அல்லது அசலும் வட்டியும் சேர்த்து பழைய “புரோ நோட்டை’ ரத்து செய்து புதிய “புரோ நோட்’ எழுதும் முறையும் பழக்கத்தில் வந்தது.

பணம் முழுவதையும் வேறு ஒரு நபரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர் பெயருக்கு “புரோ நோட்டை’ மாற்றிக் கொடுக்கும் பழக்கமும் வந்தது. பணத்தைப் பெற முடியாதபோது வழக்குகள் மூலம் பணம் பெறப்பட்டது. தொடர்ந்து வெற்றுப் “புரோ நோட்’டில் கையெழுத்து வாங்குவதும் நிதி நிறுவனங்கள் “செக்யூரிட்டிக்காக’ ஒன்று அல்லது இரண்டு மூன்று “புரோ நோட்டு’களில் கையெழுத்து வாங்குவதும் அதை வைத்து போலி வழக்குகள் தொடர்வதும் வழக்கமாகின.

எனவே கடன் பெற்றோர் பட்ட, படும் அவதிகள் சொல்லி மாளாது. அசல் என்றுமே தீராது, வட்டி தான் குட்டி போட்டுக் கொண்டே இருக்கிற சூழ்நிலைகளும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, பண மாற்று முறைகளில் தோன்றின. அரசும் பல சட்டங்களை இயற்றிக் கடன் நிவாரணம், வழக்குகள் பைசல் என்று ஆணையிட்டாலும் பணம் கொடுப்பவர்கள், பணம் பெறுபவர்களைப் படுத்தும் பாட்டை ஏட்டில் சொல்ல இயலாது.

இக் கொடுமைகளைக் களைய அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் பொது மக்களுக்குக் குறைந்த அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்க ஆரம்பித்தன. வீட்டுக்கடன், கல்விக்கடன், தனி நபர் கடன், பொருள்கள் வாங்கக் கடன் என்று வழங்க ஆரம்பித்தன. வங்கிகள் பெருகப் பெருக, காசோலை முறை அமலுக்கு வந்தது. இம்முறை அமலுக்கு வந்ததும் பல நிறுவனங்களும் கடனுதவி அமைப்புகளும் 12, 24, 36 என எண்ணிக்கைகளில் பின் தேதியிட்ட காசோலைகளை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கக் கடன் வழங்க ஆரம்பித்தன.

இம்முறை புழக்கத்தில் வர வர வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன்களைக் கவர்ச்சி சலுகைகளில் வழங்க ஆரம்பித்தன. தவணை தவறிய கடன்களை வசூலிக்கவும் வாகனங்களை ஏலத்தில் கொண்டு வரவும் காசோலை மோசடி வழக்குகள் மாற்று முறை ஆவணச் சட்டம் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இம்முறை புழக்கத்தில் வளர வளர தனி நபர்களும் காசோலைகள் பெற்றுக் கொண்டு மற்ற நபர்களுக்கு பணம் கடனாக வழங்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஓர் அரசு அலுவலர் அல்லது நிரந்தர வருமானம் உள்ள ஊழியர் வங்கிக் கணக்குகள் தொடங்கி காசோலை வசதி பெற்று சுலபமாகக் கடன் வாங்க முடியும். இம்முறையில் அவர்கள் பணம் கடனாகப் பெறும் போது காசோலைகளை பின் தேதியிட்டுக் கொடுப்பது வழக்கம். காசோலைகள் நிரப்பப்படாமல் இருப்பதும் உண்டு.

பணம் கொடுக்க முடியாத போதும் அல்லது கொடுத்து முடித்த போதும் காசோலைகள் உயிர் பெற்று விடுகின்றன. பல பேராசை பிடித்த நிதி நிறுவனங்களும் தனி நபர்களும், கந்து வட்டிதாரர்களும் இந்த காசோலைகளை வேண்டும் தொகைக்குப் பூர்த்தி செய்து மாற்றுமுறை ஆவணச் சட்டப் பிரிவு 138ல் வழக்குத் தொடர்ந்து விடுகின்றனர்.

கையெழுத்து மறுக்கப்படாத போது இவ்வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமைந்து விடுகின்றன. அப்போது பணமே வாங்காத போதும் அல்லது குறைவான பணமே பெற்றபோதும் பெரிய கடன் சுமைக்கு எதிரிகள் தள்ளப்பட்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

எதிரிகளுக்குப் பணம் செலுத்தும் தகுதி உண்டா அல்லது பெரும் பணம் பெறும் சூழ்நிலை உண்டா என்று நீதிமன்றங்கள் ஆராய்வதில்லை. காசோலை நிரூபிக்கப்பட்டால் போதும். சுமார் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளம் பெறும் ஊழியர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழக்கை எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் அமைந்து விடுகின்றன. ஊழியரின் சேமிப்புக் கணக்கில் நிலுவைத் தொகையே ஒரு சில ஆயிரத்தைத் தாண்டாதபோது எவ்வாறு ஒரு லட்சத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட காசோலை கொடுக்க முடியும் என்ற கேள்வியே எழுவதில்லை.

கையெழுத்து, வழங்கப்பட்ட காசோலை, வங்கி அதிகாரிகளின் சாட்சியம், மனுதாரர் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன. இதனால் பல போலி, மோசடியான காசோலைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டு ஏராளமான அப்பாவிகள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை எவ்வாறு தடுக்க முடியும்?

சேமிப்புக் கணக்குகள் தொடங்கும்போது ஊழியர் வாங்கும் சம்பளம் அல்லது சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் தொகையைப் பொறுத்து காசோலைகள் வழங்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஓர் ஊழியரின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரம் என்றால் அவரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரம். எனவே அந்த ஊழியருக்கு சுமார் 12 காசோலைகள் மட்டும் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒவ்வொரு காசோலையும் பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாமல் என்று குறிப்பிடப்பட்டு 12 காசோலைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் காசோலைகளைப் பூர்த்தி செய்யாமல் கொடுத்தாலும், ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் அதன் மதிப்பு ஏறாது.

ஒவ்வொரு காசோலையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு அச்சடிக்கப்பட வேண்டும் அல்லது முத்திரை இடப்பட வேண்டும். வங்கிகளே முத்திரை அல்லது சீல் இட்டு விட்டால் அக் காசோலைகளை எக்காலத்திலும் பயன்படுத்தும் முறை தானாகவே ஒழிந்துவிடும். புதியதாக, காசோலை வேண்டுமென்றால் பழைய காசோலைகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு வழங்கலாம். அவ்வாறு செய்தால் பணப் பரிமாற்றம் அல்லது பட்டுவாடா செய்த அல்லது செய்யப்பட்ட தேதியின் முக்கியத்துவமும் உண்மையும் தெரிந்து விடும்.

எந்த ஒரு வங்கியும் வழங்கும் தேதியையும் காலக்கெடு (குறைந்தபட்சம் ஆறு மாதம்) தேதியையும் அதிகபட்ச தொகையையும் குறிப்பிடாமல் காசோலைகளை வழங்கக்கூடாது. இதற்குத் தகுந்தாற்போல் மாற்று முறை ஆவணச் சட்டப் பிரிவுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும். வங்கிக் கணக்கு (பாஸ்) புத்தகங்களில் இவ்விவரங்கள் பதியப்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் போலியான வழக்குகள் எதிர்காலத்தில் தோன்றாது.

மேலும் நிதி நிறுவனங்களும் தனியாரும் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்று ஒரேயடியாக வங்கிக் காசோலைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய முடியாது. மேலும் பரிசீலனைக் கட்டணம், அபராத வட்டி என்று காலத்தை நீட்டிக்க முடியாது. கடன் பெறும் நபர்களும் தன்னால் தொகையைச் செலுத்த முடியுமா என்று யோசித்துச் செயல்பட முடியும். ஆறு மாத காலத்திற்குள் வாங்கப்பட்ட காசோலைகள் திரும்பி வந்தாலோ அல்லது போதிய பணம் வங்கிக்கணக்கில் இல்லை என்றாலோ வங்கிகள் மீண்டும் காசோலைகள் வழங்கக் கண்டிப்பாக மறுக்கலாம். இம்முறை உபரிச் செலவையும் வீணான ஆடம்பரப் பொருள்கள் வாங்கும் செலவையும் கண்டிப்பாகக் குறைக்கும்.

அரசும் வங்கித் துறையும் இதைப் பரிசீலிக்குமா? சட்டத்திருத்தம் ஏற்பட்டால் பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவர்.

(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).

Posted in Accountancy, Accountant, Accounting, Analysis, Asset, Backgrounder, bank, CA, Check, Checking, Cheque, Chit Funds, Commerce, DD, Demand Draft, Draft, Finance, History, Income, Interest, Lending, Loan, Loss, MF, MO, Money, Money Order, Mortgage, Muthaian, Muthaiyan, Mutual Funds, Pa Muthaiyan, Profit, Rates, revenue, Savings, Security | Leave a Comment »

Krishna Canal project farmland acquisition – Poonamallee Taluk office furniture as compensation

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாலுகா அலுவலகம் ஜப்தி

கிருஷ்ணா கால்வாய்க்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருள்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

சென்னை, மார்ச் 27: அரசு கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உரிய தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணா நதி நீர் கால்வாய் பணிக்காக திருவள்ளூர் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களை அரசு 1990-ல் கையகப்படுத்தியது. இதில் புள்ளரம்பாக்கம், பொத்தூர், ஆலத்தூர், பாக்கம், பூண்டி அருகே உள்ள மயிலாப்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சென்டுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிக தொகை வழங்கவும் கோரி நில உரிமையாளர்கள் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என 2003-ல் உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என 2004-ல் உத்தரவிட்டனர்.

ஆனாலும் 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி 3-வது விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. அசோகன், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இழப்பீட்டுத்தொகை வழங்க மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பூந்தமல்லி தலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், இயங்காத ஜீப் உள்ளிட்டவற்றை நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வழக்கறிஞர் அருள் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்தனர்.

ஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

தாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த தாலுகா அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தனி அறையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். தாசில்தாரும் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.

Posted in Aalandhoor, Aalandhur, acquisition, Agriculture, Alandoor, Alandur, Asset, Canal, Collector, Compensation, Court, Dam, encroachment, Farmer, Farming, Farmlands, Finance, Government, Govt, Irrigation, Judge, Justice, Krishna, Lake, Land, Law, Local Body, Municpality, Mylapore, Officer, Order, Poonamallee, Poondi, Poonthamallee, Poonthamalli, Poovirunthavalli, Property, Ransack, revenue, River, Scheme, SEZ, Taluk, Thiruvalloor, Thiruvallur, Water, Weird | Leave a Comment »