Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ammunitions’ Category

Tamil Eelam Fighter jet: LTTE vs Sri Lanka

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

தமிழ் ஈழத்தின் போர் விமானம்?

Tamil Eelam Eezham LTTE Sri Lanka jet Plane

எல்.டி.டி.ஈ. தரப்பில் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டதாக ஈ-மெயில் மூலம் தகவல்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு
வருகிறது. எனினும், யார் இந்த புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை. இலங்கை அரசை மிரட்ட வேண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் இரு விமானங்களை பறக்க விட்டனர்.
எனவே அவர்களிடம் உண்மையான விமானங்கள் இல்லை என்ற விமர்சனம் எழுந்ததையடுத்து இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

Posted in Airplane, Ammunitions, Arms, Attack, Attacks, Bombs, dead, Eelam, Eezam, Eezham, Extremism, Extremist, Extremists, Fighter, Freedom, Images, Jets, LTTE, Photos, Pictures, Plane, Prabhagaran, Prabhakaran, Srilanka, Tamil, Terrorism, terrorist, Terrorists | 2 Comments »

Arms race in Arab & Gulf states – US, Israel: War zones

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

அமைதியைக் குலைக்கும் ஆயுத பேரம்!

எஸ். ராஜாராம்

“”சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம், சகோதரர்களாக இருக்கும் எங்களைப் பிரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அரபு நாடுகளுக்கு நண்பன்போல காட்டிக்கொள்ள திட்டமிடும் அமெரிக்காவின் இந்த ஆயுத பேரத்தால் மத்திய கிழக்கில் பதற்றம்தான் அதிகரிக்கும்”.

அரபு நாடுகளுடனான அமெரிக்காவின் சமீபத்திய ஆயுதபேர பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் அகமதி நிஜாதி சொன்னது இது.

ஈரானின் முக்கியமான கூட்டாளியான சிரியாவும் இந்த ஆயுத பேரத்தை அபாயகரமானது எனக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளைக் குறிவைத்து குறிப்பாக, அரபு நாடுகளுடன் ஆயுதபேர பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டானுக்கு 13 பில்லியன் (ஒரு பில்லியன் – 100 கோடி) டாலருக்கும், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் மொத்தம் 20 பில்லியன் டாலருக்கும் ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்ய உள்ளது.

அத்துடன் இஸ்ரேலுக்கு 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆயுதங்கள் வழங்கப்படும்.

இதில் விசேஷம் என்னவென்றால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் “ராணுவ உதவியாக’ அளிக்கிறது. ஏனென்றால் இஸ்ரேல் எப்போதுமே அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. அமெரிக்காவிடம் இருந்து இதுவரை அதிக அளவில் ராணுவ உதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறி கொத்துக் குண்டுகளை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீசியது. இதுகுறித்து பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோதிலும், அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தற்போது இஸ்ரேலுக்கு அளிக்கும் உதவியைக்கூட நியாயப்படுத்தவே செய்கிறது.

“”மத்திய கிழக்குப் பிராந்தியம் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அபாயாகரமானதாக உள்ளது. இஸ்ரேலும் பல அபாயங்களை எதிர்கொள்கிறது.

லெபனான், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஈரானும், சிரியாவும் உதவுகின்றன. அதைச் சமாளிக்கும் வகையில் இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை மேம்படுத்திக் கொள்ளவே இந்த உதவி” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ்.

நேரம்பார்த்து அடிப்பது என்பார்கள்… அதை அரபு நாடுகளில் தனது முக்கியமான கூட்டாளியான சவூதி அரேபியா மூலம் ஈரானுக்கு எதிராக கச்சிதமாக நிறைவேற்றுகிறது அமெரிக்கா.

சக அரபு நாடான லெபனானில் நிலையற்ற தன்மையைத் தவிர்க்க இணைந்து செயல்படுவது என சமீபத்தில்தான் ஈரானும், சவூதி அரேபியாவும் முடிவு செய்தன.

ஈரான் ஷியா பிரிவு ஆளுமையிலும், சவூதி அரேபியா ஸன்னி பிரிவு ஆளுமையிலும் உள்ள நாடுகள். ஆனால், இராக்கில் சிறுபான்மை ஸன்னி பிரிவு மக்களுக்கு எதிராகச் செயல்பட ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுகிறது என்பதில் சவூதிக்கு சிறிய நெருடல். அந்த நெருடலை தற்போதைய ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா பெரிதாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கும் அமெரிக்காவை கவலைகொள்ளச் செய்துள்ளது. ஏனெனில் ஈரானில் ஆளும்சக்தியான ஷியா பிரிவு முஸ்லிம்கள்தான் இராக், லெபனானிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.

மேலும், தனது நண்பனான சிரியாவுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா கருதுகிறது. மொத்தத்தில் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை எதிர்க்கும் ஈரானை தனிமைப்படுத்தவே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். “”மத்திய கிழக்கில் அமெரிக்காவின் “விருப்பத்துக்கு’ எதிரான ஒரே நாடு ஈரான்தான்” என்கிறார் அவர்.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமைதியை நிலவச்செய்வது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.

“”மத்திய கிழக்கில் அமைதியின்மைக்குக் காரணமே அமெரிக்காதான். இருப்பினும் அமெரிக்கா நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம்” என சிரியா தெரிவித்துள்ளது.

“”அரபு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்குச் செலவிடும் தொகையை தங்கள் நாடுகளின் முன்னேற்றத்திற்குச் செலவிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார் ஈரான் அதிபர்.

“”மத்திய கிழக்கில் ஆயுதப்போட்டியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. தனது ஆயுதத் தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்கவும், உலகக் கடனாளியாகித் திவாலாவதைத் தவிர்க்கவுமே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டுகிறார் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார்.

உலகின் தலைவராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, ஈரானுடனான தனது தனிப்பட்ட வெறுப்புக்காக மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமல்ல.

Posted in America, Ammunitions, Arab, Arabia, Arms, ascendant, Bahrain, Boeing, Commerce, Democracy, Dubai, Economy, Egypt, Embargo, Emirates, Employment, Freedom, Gaza, Gulf, Haliburton, Hamas, Independence, Iran, Iraq, Islam, Israel, Jobs, Jordan, King, Kingdom, Kuwait, Lebanon, Mid-east, Mideast, Missiles, Monarchy, Muslims, Oman, Palestine, Peace, Qatar, Quatar, Race, sales, Saudi, Sharjah, Shia, Sunni, Syria, UAE, US, USA, War, warlord, Weapons, Yemen | Leave a Comment »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

Is US a warlord?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

“யு.எஸ். மார்க்’ ஜனநாயகம்

ஜனகப்பிரியா

இப்புவியிலேயே மிக அமைதியான நாடு என ஜார்ஜ் புஷ் வர்ணித்த அமெரிக்கா, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏதாவது ஒரு நாட்டுடன் ஒவ்வோர் ஆண்டும் போர் புரிந்த வண்ணமாக இருக்கிறது. இப்போதைக்கு உலகில் உள்ள எண்ணெய் வளம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

பால்கன், மத்திய ஆசியப் பகுதிகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடுகள் அங்கிருக்கும் எண்ணெய் வளத்தினை இலக்காகக் கொண்டவை. உலக எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மேற்காசியாவில் இருப்பதனால்தான் அப்பகுதியின் அரசியல் மேலாண்மையைத் தன் பிடிக்குள் கொண்டு வரத் துடிக்கிறது அமெரிக்கா.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவினைக் கண்டுபிடித்த 500வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை எதிர்த்து, ஐரோப்பிய, ஆசியப் பூர்வீகக் குடிகளின் வம்சாவளியினரும் மனித உரிமை ஆர்வலர்களும் 1992-ல் எதிர்ப்பியங்களை நடத்தினர். அதற்கான வரலாற்று ரீதியான நியாயங்கள் உண்டு. உலகின் இயற்கை வளங்கள் அனைத்தையும் தானே அடைய வேண்டுமென்ற தீவிர வெறியினால் தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி, குவாட்டிமாலா, பிரேஸில், பெரு, நிகரகுவா ஹோண்டுராஸ், எல்சால்வடார், மெக்ஸிகோ போன்ற நாடுகளிலெல்லாம் தனது உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் ரகசிய, நேரடி நடவடிக்கைகளின் வழியாக அந்த நாடுகளின் அமைதியையும் சுதந்திரத்தையும் சீர்குலையச் செய்த மிகப்பெரிய “ஜனநாயகக் காவலனாக’ அமெரிக்கா இருக்கிறது!

நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது அணுகுண்டு வீசி “அமைதியை’ ஏற்படுத்தியது தொடங்கி, வியட்நாமில் பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நடத்தி மக்களின் வாழ்க்கையில் “ஜனநாயகம்’ தழைக்கப் பாடுபட்டதை உலகம் மறக்க முடியுமா?

1970 மார்ச் 25-ல் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிஞ்சர் தலைமையில் கூடிய 40 பேர் கொண்ட ஆலோசனைக் கமிட்டி, ஜனநாயக ரீதியில் தேர்ந்தடுக்கப்பட்ட சோஷலிச அரசாங்கத்தைக் கவிழ்க்க, சிலியின் ராணுவ எதிர்ப்புரட்சிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் டாலர் நிதி ஒதுக்குகிறது. 1973 செப்டம்பர் 11-ந் தேதி மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை சி.ஐ.ஏ.வின் வழிகாட்டுதலோடு ராணுவ பலத்தால் சீர்குலைத்து மக்கள் தலைவர் அலண்டேவைக் கொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்களும் கலைஞர்களும் சான்டியாகோ விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1988-ல் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களைக் கொன்று குவித்தார் சதாம் என்று குற்றச்சாட்டு. அதே ஆண்டில்தான் அமெரிக்க விளைபொருள்களை வாங்க 500 மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசாங்கம் சதாம் உசேனுக்கு மானியமாக வழங்கியது. குர்து இனமக்கள் அழித்தொழிக்கப்பட்டதற்குப் பரிசாக அடுத்த ஆண்டில் மானியத் தொகையை இரு மடங்காக்கி 1 பில்லியன் டாலர்களை வழங்கியது அமெரிக்கா. ஆந்த்ராக்ஸ் கிருமிகளை உண்டுபண்ணும் நுண்ணுயிர் வித்துகளையும் ஹெலிகாப்டர்களையும் ரசாயன உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தேவையான துணைப்பொருள்களையும் சதாமுக்குக் கொடுத்தது அமெரிக்கா. ஆனால் 1990-ல் சதாம் குவைத் நாட்டுக்குள் படைகளை அனுப்பி போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதற்காக அவர் மீது கோபம் வரவில்லை அமெரிக்காவுக்கு; தன்னுடைய உத்தரவின்றி அனுப்பினார் என்பதுதான் குற்றம்.

வளைகுடாப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அமெரிக்கா விதித்த தடைகளின் காரணமாக, உணவு, மருந்து, சுத்தமான குடிநீர், மருத்துவமனை உபகரணங்கள் எல்லாமும் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் ஐந்து லட்சம் இராக்கியக் குழந்தைகள் இறந்திருக்கின்றன. இதைப்பற்றி அமெரிக்காவின் ஐ.நா. தூதுவராக இருந்த, “மேடலின் ஆல்பிரெட்’ கூறியது என்னவென்றால்: “”அது ஒரு கடினமான முடிவுதான், இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணும்போது கொடுத்த விலை சரிதான் என்று நாங்கள் எண்ணுகிறோம்”.

பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இராக்கின் மேல் இன்னொரு போர். இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கில் குழந்தைகள் நோய் கண்டு இறந்து போயின.

இறந்து போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்கூடப் பாரபட்சம். அமெரிக்க சிப்பாய் இறந்தால் 5 லட்சம் டாலர். இராக்கிய பிரஜை இறந்தால் இரண்டாயிரம் டாலர் கொடுப்பதே கடினம். ஆனால் 30 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வழங்குவதாக விளம்பரம். கடந்த சில ஆண்டுகளில் 300 டன் எடையுள்ள யுரேனியத்தினாலான கதிரியக்கத் தன்மை கொண்ட ஆயுதங்களை இராக்கின் நிலப்பரப்பில் வயல்வெளிகளில் வீசியிருக்கிறது அமெரிக்க ராணுவம்.

அமெரிக்க நிர்வாகத்தின் உள் அறைகளினுள் பதுங்கியிருந்த சில பழைய உண்மைகளை உலகம் இப்போது அறியத் தொடங்கியிருக்கிறது. 70களின் முற்பாதியில் ஆப்கன் பிரச்சினையில் முன்னாள் சோவியத் யூனியனின் படைகளை வெளியேற்ற நடைபெற்ற அமெரிக்க முழக்கங்களின் திரைமறைவில் சவூதி மன்னரின் குடும்பத்தினருடன் இணைந்து “அல்-காய்தா’ அமைப்பு உருவாகத் துணையாக நின்றார் சீனியர் புஷ்.

“ஹில்பர்ட்டன்’ எனும் பெயரிலான ஆயுத உற்பத்தி நிறுவனம் புஷ் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. இதன் சகோதர நிறுவனமான “டிக்செனி’க்குத்தான் ஆப்கனிலும் இராக்கிலும் கட்டுமானப் பணிகளுக்கான ஆணை கிடைத்திருக்கின்றன. இப்போது நமக்குப் புரியும்: “அழித்தலும் ஆக்கலும் நானே’ என்கிற அமெரிக்க கொக்கரிப்பின் பொருள்; அப்பாவி லெபனான் மக்களின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிவதை அவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று இன்று அறிவிக்கிற அமெரிக்க ஜனநாயகத்தின் நிஜமுகம்!

Posted in America, Ammunitions, Arms, Dinamani, Fights, Lord of war, Op-Ed, Tamil, US, USA, warlord, Wars | Leave a Comment »