Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Biz’ Category

Handicraft products from Betelnut – Tea Cups, Paper Plates from areca tree

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

இளமை பக்கம்

பாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்!

ஜி.மீனாட்சி,

இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச் சேர்ந்த கே.மல்லிகா.

உபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்) இருந்து விதவிதமான தட்டுகள், கப்புகள், சூப் கோப்பைகள் என்று இயற்கை வழி பொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.

மல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராதது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:

“”நான் எம்.எஸ்ஸி பட்டதாரி.

திருமணமாகி புகுந்தவீடு வந்தபின், ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,

எங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். பாக்கு மரப் பட்டைகளிலிருந்து தட்டுகள், கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள். அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம். பின்னர் தயாரிப்பு முயற்சியில் இறங்கினோம்” என்று விவரிக்கிறார் மல்லிகா.

எந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லை. தொடர் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறது. அது மல்லிகா விஷயத்திலும் நடந்தது.

எத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோ, கப்புகளையோ தயாரிக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.

“தட்டு’த் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.

துவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகின. சொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்று, வெளியிலிருந்தும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தார். தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.

தரமான தயாரிப்புகள், சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். நீல்கிரீஸ், கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தன. திருமணங்கள், கோயில் விசேஷங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.

“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடு, தயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகா, தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:

“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி, வெயிலில் காயவைத்துக் கொள்கிறோம். காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும் தூசி, மண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம். மீண்டும் அந்த மட்டைகளைக் காயவைத்து, இயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்தி வேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம். தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறது” என்கிறார்.

தட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.

பாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்து, ஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறது. தட்டின் அளவுக்கேற்ப, ரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.

திருமணம் போன்ற விசேஷங்களில் “பஃபே’ விருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில், பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை” என்று நன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம், இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.

“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால், நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…” என்கிறார்.

வெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகு, பெண் தொழில் முனைவோர்களுக்காக “வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்’ என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகா. இந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.

“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறது. குடும்பம், குழந்தைகள் என்று அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல், குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்னும் மல்லிகாவின் வார்த்தைகள், பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.

Posted in areca, areca nuts, Arts, betelnuts, Biz, Business, Commerce, Cups, Exports, Forest, fruit, Green, Handicrafts, Handlooms, Ideas, nuts, Plant, Plates, Small, Tree | 1 Comment »

BJP terms railway budget disappointing; Left opposes role for private players: Lalu’s last lap – Dinathanthi – Part 2

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

Part – 1 (Dinamani)
Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise « Tamil News

கட்டணக் குறைப்புக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள்

மத்திய ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரெயில் கட்டணக் குறைப்புக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ரெயில்வே போர்டு (போக்குவரத்து) உறுப்பினர் வி.என்.மாத்தூர் விளக்கி கூறியதாவது:-

* 5 சதவீத கட்டணக் குறைப்பு என்பது சாதாரண மற்றும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் 2-ம் வகுப்பிற்கு பொருந்தும். இந்த ரெயில்களிலும் கூட தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

* ரெயில்கள் பிரபலமான ரெயில்கள், பிரபலம் அல்லாதவை என்று பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் பிரபலம் அல்லாத 1,200 ரெயில்கள் இயங்குகின்றன. இந்த ரெயில்களின் முதல் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் 7 சதவீத கட்டணக் குறைப்பு கிடைக்கும்.

* பிரபலமான ரெயில்களில் இது 3.5 சதவீத கட்டணக் குறைப்பாக இருக்கும். இதர ரெயில்களில் இதே அளவு கட்டணச்ë சலுகை மக்கள் அதிகம் பயணம் செய்யும் காலங்களிலும் கிடைக்கும்.

* விரைவில் ரெயில்வே இலாகா பிரபலமான ரெயில்களின் பெயர்களை அறிவிக்கும். மக்கள் குறைவாக பயணம் செய்யும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களிலும் குறைந்த அளவு மக்கள் பயண சீசனுக்கான கட்டணச் சலுகை கிடைக்கும்.

* ஏசி-2 அடுக்கு பெட்டிக்கான பயணக் கட்டணச் சலுகை, பிரபலமல்லாத ரெயில்களிலும், மக்கள் குறைவாக பயணம் செய்யும் காலங்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.

* தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கூடுதல் பயணிகள் செல்லும் விதத்தில் அதிகபட்சமாக 81 படுக்கைகள் இருந்தால் அங்கு 6 சதவீத கட்டணச் சலுகை கிடைக்கும். எனினும் இது போன்ற பெட்டிகள் ரெயில்களில் குறைந்த அளவே இருக்கும் என்பதால் அதிகமான பயணிகளுக்கு இச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. ரெயில்வே இலாகா அதிக பயணிகள் செல்லும் வகையில் இதுபோன்ற பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இந்த கட்டணச் சலுகைகளால் ரெயில்வே இலாகாவுக்கு சில நூறு கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும். எனினும் கட்டணச் சலுகைகளால் அதிக அளவில் மக்கள் ரெயில்களில் பயணம் செய்வார்கள்.
———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை:
இந்திய கம்ïனிஸ்டு உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. சாமானியர்களுக்கு ஒன்றும் இல்லை என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

வெளிநடப்பு

மத்திய ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் யாதவ் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வசதியானவர்களுக்கே சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன, சாதாரண மக்கள், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள், உள்ளூர் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்று கூறி பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசியதாவது:-

இந்திய கம்ïனிஸ்டு

குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்ïனிஸ்டு):-

இந்த பட்ஜெட்டை தயாரித்தது ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்தா அல்லது நிதி மந்திரி சிதம்பரமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கூடுதலாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கும், மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கும், புறநகர் பயணிகளுக்கும் ஒரு நன்மையும் அறிவிக்கப்படவில்லை.

ரெயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவது பற்றியோ, புதிய வேலைவாய்ப்புகள் பற்றியோ ஒன்றுமே அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் விளங்குகிறது. அத்துடன் ஒப்பந்த வேலைகள் மற்றும் தனியார்-அரசு கூட்டு வேலைகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நாங்கள் இந்த பட்ஜெட்டை எதிர்க்கிறோம்.

சமாஜ்வாடி கட்சி

சுதாகர் ரெட்டி (இந்திய கம்ï.):- இது ஒரு குறுகிய பட்ஜெட். பாட்னா-சென்னை இடையேதான் புதிய ரெயில்கள் விடப்பட்டு உள்ளன. வசதியானவர்களுக்கு மட்டுமே வசதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாதாரண மக்களுக்கு ஒன்றுமே இல்லை.

மோகன்சிங் (சமாஜ்வாடி கட்சி):- ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் ரெயில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னால் பெரிய விபத்துக்குள்ளாகி விட்டது. இது போல 5 பட்ஜெட்டுகள் இருந்தால் போதும், எதிர்காலத்தில் வேறு பட்ஜெட்டே தேவைப்படாது. ஏனென்றால் அதற்குள் ரெயில்வே துறை முழுவதும் தனியார்மயமாகி இருக்கும்.

பா.ஜனதா

சுஷ்மாசுவராஜ் (பா.ஜனதா):- இந்த பட்ஜெட்டில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்கள் குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளன. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாகுபாட்டுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.

வி.கே.மல்கோத்ரா(பா.ஜனதா):- இந்த பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட்டை எதிர்த்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது, லாலுவின் பட்ஜெட்டில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதையே பிரதிபலிக்கிறது.

சிவசேனா

மனோகர் ஜோஷி (சிவசேனா):- இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நிறைய உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பலன் ஒன்றுமே இல்லை.

இவ்வாறு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சுஷ்மாசுவராஜ், மோகன் சிங், பிரஜ்கிஷோர் மொகந்தி ஆகியோர் பேசுகையில் இந்த பட்ஜெட்டில் உத்தரபிரதேசம், ஒரிசா, குஜராத் போன்ற பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டினார்கள்.

காங்கிரஸ்

ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் பேசுகையில், “5 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது சாதாரண மக்களுக்கு நன்மையே பயக்கும். புறநகர் பயணிகளுக்கு குறிப்பாக மும்பை பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்பட்டு உள்ளன என்று பாராட்டு தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழக புதிய திட்டங்கள்
சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணி 2010-க்குள் முடிவடையும்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு பல்வேறு புதிய பாதைகள் மற்றும் அகல ரெயில் பாதை மாற்றம் போன்ற திட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. சென்னை பறக்கும் ரெயில் திட்டப் பணிகளை, 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வே பட்ஜெட்டில் வெளியான தமிழக திட்டங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:-

புதிய ரெயில் பாதைகள்

தமிழகத்தில் மூன்று புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை-புதுச்சேரி-கடலூர் இடையே மகாபலிபுரம் வழியாக ஒரு ரெயில் பாதையும், ஈரோடு – பழனி மற்றும் அத்திப்பட்டு – புத்தூர் இடையே ரெயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

இது தவிர, ஜோலார்பேட்டை – திருவண்ணாமலை இடையிலான புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம், ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

அகல ரெயில் பாதை

மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி, விருத்தாசலம் – ஆத்தூர் ஆகிய இடங்களுக்கு இடையிலும், நெல்லை – திருச்செந்தூர் இடையிலும் முடிவடைந்து விட்டன. தற்போது பணிகள் நடைபெற்று வரும் காரைக்குடி – மானாமதுரை பாதையும், திருவாரூர் – நாகூர் இடையிலான பாதையும் விரைவில் முடிவடையும்.

இந்த நிலையில், வேலூர் – விழுப்புரம் இடையிலான பாதை, தஞ்சாவூர் – விழுப்புரம் (பகுதி மட்டும்) பாதை மற்றும் போத்தனூர் – கோவை ஆகிய பாதைகளை அடுத்த நிதி ஆண்டுக்குள் (2008-09) அகல ரெயில் பாதையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும், மதுரை – போடிநாயக்கனூர் பாதையையும் அகல பாதையாக மாற்ற அறிவிப்பு வெளியானது.

இரட்டை ரெயில் பாதை

தமிழகத்தில், மதுரை – திண்டுக்கல் (பகுதி) மற்றும் திருவள்ளூர் – அரக்கோணம் (3-வது லைன்) ஆகிய பாதைகளில் 2008-09 நிதி ஆண்டுக்குள் இரட்டை ரெயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, திருவள்ளூர் – அரக்கோணம் (4-வது லைன்) மற்றும் விழுப்புரம் – திண்டுக்கல் (மின்மயமாக்கலுடன்) இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓமலூர் – மேட்டூர் அணை இடையே இரட்டை பாதை அமைப்பதற்காக ஆய்வு பணிகள், அடுத்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும்.

பறக்கும் ரெயில்

காரைக்குடி – ராமநாதபுரம் – தூத்துக்குடி – கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு இடையே புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வுப் பணிகள், இந்த நிதி ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும். இது தவிர, பெரம்பலூர் வழியாக சிதம்பரம் – ஆத்தூர் இடையிலும், தஞ்சாவூர் – அரியலூர் இடையிலும் புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

சென்னை புறநகர் மின்சார ரெயில் திட்டத்தில், வேளச்சேரி வரை பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான புறநகர் மின்சார ரெயில் பாதை பணி 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையை நவீனமயமாக்கவும் ரெயில்வே துறை தீர்மானித்துள்ளது.

———————————————————————————————————————————————————————–

ரெயில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது
பாராளுமன்றத்தில் ருசிகர காட்சிகள்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வே மந்திரி லாலு பிரசாத் பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசினார். அப்போது சபையில் சில ருசிகர காட்சிகளை காண முடிந்தது.

* ரெயில்வே பட்ஜெட் தாக்கலான போது பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஆகியோர் சபையில் இருந்தனர்.

சோனியாவுடன் ஆலோசனை

* பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கும் முன், சோனியா காந்தியுடன் லாலு பிரசாத் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.

* ரெயில்வே பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய லாலு பிரசாத்; “நாங்கள் கனவு மட்டும் காணவில்லை. அதை நனவாக்கி இருக்கிறோம்” என்று கூறினார். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சபையில் சிரிப்பொலியும் எழுந்தது.

* லாலு பிரசாத் பட்ஜெட்டை வாசித்துக் கொண்டு இருந்த போது ஒரு கட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த லாலு பிரசாத்தின் மகள்கள், மருமகன் ஆகியோர் அவர் உரை நிகழ்த்துவதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தனர்.

கனிமொழி எம்.பி.

* முன்வரிசையில் ரெயில்வே மந்திரி லாலு பிரசாத்தின் இருக்கைக்கு அருகில்தான் நிதி மந்திரி ப.சிதம்பரம் அமர்ந்து இருப்பார். லாலு பிரசாத் நின்று கொண்டு ரெயில்வே பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, ப.சிதம்பரம் அடுத்த வரிசைக்கு சென்று லாலு பிரசாத்தின் பின்னால் அமர்ந்து இருந்தார்.

* தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் மந்திரிகளுக்கான இருக்கையில் லாலு பிரசாத்துக்கு பின்னால் மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத், இ.அகமது ஆகியோர் அருகே அமர்ந்து இருந்தார்.

* கனிமொழி எம்.பி., சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட ஏராளமான மேல்-சபை உறுப்பினர்கள் எம்.பி.க்களுக்கான காலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்த்தனர்.

* சில எம்.பி.க்கள் ரெயில்வே பட்ஜெட் உரை மொழி பெயர்ப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனே லாலு பிரசாத், தான் மொழி பெயர்ப்பு செய்வதாக கூறி சில இந்தி வாசகங்களை ஆங்கிலத்தில் கூறினார்.

———————————————————————————————————————————————————————–


சென்னை-திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
வாரம் ஒருமுறை இயக்கப்படும்

புதுடெல்லி, பிப்.27-

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகமாகிறது. இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படும்.

ஏழைகள் ரதம்

பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய மந்திரி லாலு பிரசாத், 53 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், 16 ரெயில்களை நீட்டிப்பு செய்யவும், 11 ரெயில்களின் சேவையை அதிகரிக்கவும் ரெயில்வே துறை திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.

இது தவிர, 10 ஏழைகள் ரதம் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதில் பெங்களூர்யஷ்வந்த்பூர்-புதுச்சேரி மற்றும் பெங்களூர்-கொச்சுவேலி ஆகிய இரண்டு ரெயில்கள் அடங்கும். இவை இரண்டும் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும்.

புதிதாக அறிமுகமாக இருக்கும் சில ரெயில்களின் விபரங்கள்:-

* சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* காசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* புத்த கயா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

* சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

* சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (தினசரி)

(விருத்தாசலம் வழியாக இயக்கப்படும்)

* மதுரை-தென்காசி பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்தபிறகு இயக்கப்படும்)

* விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிந்த பிறகு இயக்கப்படும்)

* திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (தினசரி)

* பெங்களூர் யஷ்வந்த்பூர்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

* நியு திப்ருகர் டவுண்-பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வாரம் ஒருமுறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட சில ரெயில்கள்

* பெங்களூர்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் வரை

* சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில், ஸ்ரீ சத்யசாயி பிரசாந்தி நிலையம் வரை

* மதுரை-மன்மாட் (மராட்டியம்) எக்ஸ்பிரஸ் ரெயில், முறையே ராமேசுவரம் வரை ஒரு புறமும் வாக்காய் (குஜராத்) வரை மறுபுறமும்

* கோயம்புத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* பெங்களூர்-சேலம் பாசஞ்சர் ரெயில், நாகூர் வரை (அகலப்பாதை பணி முடிந்த பிறகு)

* தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில், திருச்செந்தூர் வரை

இது தவிர, டெல்லி நிஜாமுதீன்-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில், வாரம் இருமுறைக்கு பதிலாக வாரம் மூன்று முறை இயக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

பயணிகளுக்கு புதிய சலுகைகள்
60 வயதுக்கு மேல் பெண்களுக்கு பாதி கட்டணம்
சென்னை – திருச்செந்தூர் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்
மாணவ- மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்
லாலுபிரசாத் தாக்கல் செய்த ரெயில்வே பட்ஜெட்டில்
கட்டணம் குறைப்பு


பாராளுமன்றத்தில் நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கலë செய்து பேசிய லாலு பிரசாத், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

புதுடெல்லி, பிப்.27-

2008-2009-ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை அந்த இலாகா பொறுப்பை வகிக்கும் மந்திரி லாலு பிரசாத் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் ஆகும்.

சலுகைகள்

கடந்த 4 பட்ஜெட்களை போலவே, இந்த பட்ஜெட்டிலும் அவர் பயணிகள் கட்டணத்தை உயர்த்தவில்லை. அதற்கு பதிலாக, பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்தார். புதிய ரெயில்கள், ரெயில்வே திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

கட்டணம் குறைப்பு

குளு குளு வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்படுகிறது.

குளு குளு வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பயணிகள் ரெயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.

50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். 50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய், கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படும்.

கூடுதல் படுக்கை வசதி

கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட முன்பதிவு பெட்டிகளில் கட்டணம் 2 சதவீதம் குறைக்கப்படுகிறது. இந்த பெட்டிகளில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதே, இதற்கு காரணம்.

படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை, பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், இந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72-ல் இருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. குளு குளு வசதி கொண்ட மூன்றடுக்கு பெட்டிகளில் படுக்கைகள், 64-ல் இருந்து 72 ஆகவும், குளு குளு வசதி கொண்ட உட்கார்ந்து பயணம் செய்யும் (சேர் கார்) பெட்டிகளில் இருக்கைகள் 67-ல் இருந்து 102 ஆகவும் உயர்ந்துள்ளன. எனவே, இந்த பெட்டிகள் அனைத்திலும், 2 சதவீத கட்டண குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், குளு குளு வசதி கொண்ட பெட்டிகளில் கட்டண குறைப்பு என்பது, மக்கள் அதிகமாக பயணிக்கும் ரெயில்களிலும், நெரிசல் மிக்க நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களிலும், சரிபாதி அளவுக்கே (50 சதவீதம்) அளிக்கப்படும்.

கல்லூரி மாணவிகளுக்கும் இலவச `சீசன் டிக்கெட்’

தற்போது, 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவிகளுக்கும், 10-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையே ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கு இலவச மாதாந்திர `சீசன் டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சலுகையை, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரையிலும் விரிவுபடுத்துவதாக லாலுபிரசாத் யாதவ் அறிவித்தார்.

முதியவர்கள்

60 வயதை தாண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகுப்புகளிலும் 30 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

இனிமேல், 60 வயதை தாண்டிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும். 60 வயதை தாண்டிய ஆண்களுக்கு 30 சதவீத கட்டண சலுகையே நீடிக்கும்.

புதிய ரெயில்கள்

53 புதிய ரெயில்கள் விடப்படும் என்று அறிவித்த லாலு பிரசாத், புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி எக்ஸ்பிரஸ், சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர், மதுரை-தென்காசி பாசஞ்சர் உள்பட புதிதாக 9 ரெயில்கள் விடப்படுகின்றன. தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மேலும் சில ரெயில்களின் பயண தூரமும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

எய்ட்ஸ் நோயாளிகள்

தற்போது, பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா, வீர் சக்ரா, ஆகிய விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் குளு குளு வசதி கொண்ட இரண்டடுக்கு பெட்டிகளில் `கார்டு பாஸ்’ வசதியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த `கார்டு பாஸ்’ வசதி, அசோக் சக்ரா விருது பெற்றவர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். அத்துடன், அவர்களுடன், துணைக்கு ஒருவரும் பயணம் செய்யலாம்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையங்களுக்கு பயணம் செய்வதற்கு, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.

பெட்ரோல், டீசலுக்கு கட்டணம் குறைப்பு

ரெயில்களில் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. நாட்டில் உபயோகப்படுத்தப்படும் 40 சதவீத பெட்ரோல், டீசல், ரெயில்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 கி.மீ. தூரத்துக்கு பெட்ரோல், டீசலை கொண்டு செல்வதற்கான கட்டணம், டன்னுக்கு ரூ.181-ல் இருந்து ரூ.172.40 ஆக குறைக்கப்படுகிறது.

ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.1,243.60-ல் இருந்து ரூ.1,184.40 ஆக குறைக்கப்படுகிறது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கொண்டு செல்வதற்கு டன்னுக்கு ரூ.2,238.40-ல் இருந்து ரூ.2,131.80 ஆக குறைக்கப்படுகிறது.

தேயிலை

இந்த கட்டண குறைப்பு மூலம் எண்ணை நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.50 கோடி மிச்சம் ஆகும். இதனால் சாலை வழியாக பெட்ரோல், டீசலை கொண்டு செல்வது குறையும் என்று ரெயில்வே அமைச்சகம் நம்புகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசல் விலை குறையாது.

சாம்பல் கழிவை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 14 சதவீதம் குறைக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு தேயிலை, நிலக்கரி, பாக்சைட் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு சரக்கு கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்படுகிறது.

ரூ.52,700 கோடி திரட்ட இலக்கு

நடப்பு (2007-2008) நிதி ஆண்டில் 79 கோடி டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வரும் (2008-2009) நிதிஆண்டில், அதைவிட 6 கோடி டன் சரக்குகளை கூடுதலாக கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்கள் மூலம் நடப்பு நிதிஆண்டில் ரூ.47 ஆயிரத்து 743 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் நிதி ஆண்டில் ரூ.52 ஆயிரத்து 700 கோடி வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு லாலுபிரசாத் யாதவ், தனது ரெயில்வே பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

2 மணி நேரம் வாசித்தார்

லாலுபிரசாத் யாதவ், மொத்தம் 2 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். அவர் தனது உரையை தொடங்கும்போதே, தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசி தொடங்கினார். இருப்பினும், தங்களது மாநிலத்துக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை

ரெயில்வே பாதுகாப்பு படையில் 5,700 போலீசார் மற்றும் 993 சப்-இன்ஸ்பெக்டர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அந்த இடங்கள் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் போலீசார் பதவியில் 5 சதவீதமும், சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

———————————————————————————————————————————————————————–

`தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத் தரும்’
ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரிகள் கருத்து


புதுடெல்லி, பிப்.27-

ரெயில்வேயில் தனியார் துறையை ஆதரிப்பது பேரழிவைத்தரும் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரவேற்பும் எதிர்ப்பும்

லாலு பிரசாத்தின் ரெயில்வே பட்ஜெட் குறித்து இடது சாரி தலைவர்கள் வரவேற்பும், கண்டனமும் தெரிவித்து இருக்கிறார்கள். பயணிகள் கட்டணத்தை குறைப்பு செய்திருப்பதையும், சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படாததையும் பாராட்டியுள்ள இடது சாரி தலைவர்கள் அதே சமயம் பட்ஜெட் தனியாருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இது குறித்து இந்திய கம்ïனிஸ்டு கட்சி தலைவர்கள் ஏ.பி.பரதன், சமீம் பைசி நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதுவும் இல்லை

இந்த பட்ஜெட்டால் உள்ளூர் மற்றும் புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற விஷயங்கள் கவலையளிக்க கூடியதாகும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் ரெயில்வே இலாகா செயல்பட்டாலும், ரெயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சம் இடங்களை நிரப்புவது குறித்து எதுவும் கூறப்படவில்லை.

ரெயில்வேயின் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகள், அசவுகரிய குறைவுகள் பற்றி பட்ஜெட்டில் முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவையும் கூட தனியார் வசம்தான் ஒப்படைக்கப்பட்டவையில்தான் அடங்குகின்றன. கடந்த 2 வருடங்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட வசதிகளை திரும்ப அளிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

மேற்கண்டவாறு அவர்கள் இருவரும் கூறினார்கள்.

பேரழிவை தரும்

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான பிருந்தா கரத் கூறும்போது, `இந்த பட்ஜெட்டில் தனியார் துறையின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது பேரழிவைத் தரும். 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் உள்ள நிலையில் அந்தப் பணத்தை லாலு பிரசாத் ரெயில்வேயின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் முதலீடு செய்திருக்கலாம். இந்த தொகையை சாதாரண பயணிகளுக்கு திரும்பச் கிடைக்கச் செய்திருக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.

சிதம்பரம் பட்ஜெட்

இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அவைத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறும்போது, `மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும் நிலையில் சரக்கு ரெயில்களில் ஏற்றுவது, இறக்குவது போன்ற சேவைகளையும், சரக்குப் பெட்டிகளை பராமரிப்பதை குத்தகைக்கு விடுவதும் எந்தவிதத்தில் நியாயம்?… இது லாலு பிரசாத் யாதவின் பட்ஜெட்டாக தெரியவில்லை. நிச்சயமாக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தால் தயாரிக்கப்பட்டதுதான். வசதி படைத்தவர்களுக்கான பட்ஜெட்டாகவே இது உள்ளது. இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வோருக்கும், மாதாந்திர சீசன் டிக்கெட்தாரர்களுக்கும் சலுகைகள் இதில் அளிக்கப்படவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

ரெயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் 7 சதவீதம் குறைப்பு.

* ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைப்பு.

* புறநகர் ரெயில்கள் நீங்கலாக மற்ற ரெயில்களில் 2-ம் வகுப்பில் பயணம் செய்ய ரூ.50 வரையிலான கட்டணத்துக்கு 1 ரூபாய் கழிவு.

* மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2-ம் வகுப்பு கட்டணம் கூடுதலாக 2 சதவீதம் குறைப்பு.

* 60 வயதை கடந்த பெண்களுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு.

* எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை.

* பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் இலவச மாதாந்திர சீசன் டிக்கெட்.

* பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைப்பு.

* 53 ஜோடி புதிய ரெயில்கள் அறிமுகம்.

* புதிதாக 10 ஏழைகள் ரதம் அறிமுகம்.

* மும்பை புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவை.

* சென்னை பெரம்பூர், ஜமால்பூர், லில்லுவா, அஜ்மீர் ஆகிய இடங்களில் உள்ள பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

* விரைவு வண்டிகளில் எவர்சில்வர் தகடுகளாலான நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

* கேரளாவில் புதிய ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும்.

* ரெயில்வேயின் ஆண்டு திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி.

* ரூ.1,730 கோடி செலவில் புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்படும்.

* அகலபாதையாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.2,489 கோடி ஒதுக்கீடு.

* மின்மயமாக்கல் திட்டத்துக்கு ரூ.626 கோடி ஒதுக்கீடு.

* ரெயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.852 கோடி ஒதுக்கீடு.

* சரக்கு போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.52,700 கோடி. பயணிகள் போக்குவரத்தின் மூலம் வருவாய் ரூ.21,681 கோடி.

* 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்ற ரூ.5,000 கோடி ஒதுக்கீடு.

———————————————————————————————————————————————————————–

கட்டண குறைப்பு எவ்வளவு?

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள படி புறநகர் அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் குறைக்கப்பட்டுள்ள 2-வது வகுப்பு கட்டண விகிதம் கிலோ மீட்டர் வாரியாக வருமாறு:-

தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு

100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1

200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2

300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3

400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4

500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5

700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7

900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8

குறிப்பு: மேற்கண்ட கட்டணங்களில் முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவை சேர்க்கப்படவில்லை.

———————————————————————————————————————————————————————–

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை
செல்போன் மூலமே, டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

புதுடெல்லி, பிப்.27-

ரெயில் டிக்கெட்டுக்காக இனிமேல் நீண்ட வரிசையில் நிற்க தேவை இருக்காது என்றும், செல்போன் மூலம் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்கலாம் என்றும் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத் தெரிவித்துள்ளார்.

நேற்று ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது அவர் இது பற்றி கூறியதாவது:-

நீண்ட வரிசை இருக்காது

இன்னும் 2 ஆண்டுகளில் ரெயில் டிக்கெட் பெறுவதற்காக நீண்ட கிï வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமையை முற்றிலும் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2010-ம் ஆண்டில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படாது.

பயணிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே கம்ப்ïட்டர், செல்போன், வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் ஆகியவை மூலம் எளிதாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எந்திரங்கள் அதிகரிப்பு

முன்பதிவு இல்லாமல் டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர்கள் 3 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்கப்படும். அத்துடன் செல்போன்கள் மூலமும் முன்பதிவு டிக்கெட்டுகளையும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் 250-லிருந்து 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

இப்போதுள்ள ஜன்சதாரன் டிக்கெட் வசதி அனைத்து மண்டலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெருவார்கள். அத்துடன் மக்களும் எளிதில் டிக்கெட் பெற முடியும்.

கம்ப்ïட்டர் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோர் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் பெற முடியாது. இனிமேல் அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானாலும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் `இ-டிக்கெட்’ பெருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அதிகரிக்கும்.

இவ்வாறு லாலுபிரசாத் தெரிவித்தார்.

———————————————————————————————————————————————————————–

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

Railway Budget: India to invest billions in rail revamp – Fares slashed, freight untouched as profits rise

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2008

சென்ற வருடம்:
Laloo Prasad Yadav – Railway Budget 2007-08: Information, Analysis, Schemes & Opinion « Tamil News
Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely « Tamil News

2008022752331701.jpgஇந்திய ரயில்வே பட்ஜெட்

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட, ரயில்வே பட்ஜெட்டில், ரயில் பயணிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெண்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

2008-2009 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று தாக்கல் செய்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் அவர் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஐந்து சதம் குறைக்கப்பட்டுள்ளது. ஐம்பது ரூபாய் கட்டணம் வரை உளள இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு ஒரு ரூபாய் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே
லாபத்தில் இயங்கும் இந்திய ரயில்வே

குறைந்த கட்டண விமான சேவையால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கும் வகையில், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஏழு சதவீதமும், இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணிகளுக்கான கட்டணம் நான்கு சதவீதமும் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், முக்கிய ரயில்களுக்கும், நெரிசல் மிகுந்த நேரங்களிலும் இந்த சலுகை 50 சதம் மட்டுமே கிடைக்கும்.

மூத்த பெண் குடிமக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சத ரயில் கட்டண சலுகை, இனி 50 சதமாக அதிகரிக்கப்படுகிறது. மூத்த ஆண் குடிமக்களுக்கான சலுகை தொடர்ந்து 30 சதமாக இருக்கும்.

12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கும், 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர இலவச சீசன் டிக்கெட், இனி மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையிலும் வழங்கப்படும்.

ஏழைகள் ரதம் என்று அழைக்கப்படும், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட மேலும் 10 புதிய ரயில்களும், 53 புதிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

 

எப்போதும் இல்லாத அளவாக, இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு 37,500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிடெண்ட் தொகை வழங்குவதற்கு முன்னதாக, ரயில்வேயின் வருவாய் உபரி 25 ஆயிரம் கோடியாக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையை இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வழங்கும் கவுன்டர்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக அதிகரிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் தொலைபேசி மூலமாகவும் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுவருவதாக லாலு பிரசாத் தெரிவித்தார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக செல்லும்போது, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 50 சதம் கட்டண சலுகை வழங்கப்படும்.

2008022752680101.jpgஆள் இல்லாத ரயில்வே சந்திப்புக்களில் ஆட்களை நியமிக்க ரயில்வே முடிவு செய்துள்ள நிலையில், அந்தப் பணிகளுக்கு, உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் ஒரு தரம் மட்டுமே அமல்படுத்தும் வகையில் இது இருக்கும் என்றும் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

ரயில் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நிறுவனம்

லாலு பிரசாத் யாதவ் பட்ஜெட் தாக்கல் செய்த அதே நேரத்தில், பாஜக, சமாஜவாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்த பட்ஜெட் மிகவும் பாரபட்சமானது என்று ஆட்சேபம் தெரிவித்து கூச்சலிட்டார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இந்த பட்ஜெட்டில், சாதாரண மக்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டினார்

ரயில்வே பட்ஜெட்டின் முக்கியத்துவம் குறித்தும், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் பலன்கள் குறித்தும், ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு செய்தியாளர்களிடம் விளக்கினார். நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 53 புதிய ரயில்களில் தமிழகத்துக்கு 12 ரயில்கள் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு 25 சதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வேலு தெரிவித்தார்.


தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள்2008022752530601.jpgபுது தில்லி, பிப். 26: தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் மேம்பட்ட வசதி அளிக்கும் வகையில் 10 ஏழை ரத ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

ஏழைகளுக்கான குளிர்சாதன வசதி கொண்ட 10 ரயில்களும், 53 ரயில்களும் புதியதாக அறிமுகப்படும். புதியதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஏழை ரத ரயில்களில் யஷ்வந்த்பூர்-புதுச்சேரி ரயில், பெங்களூர்-கொச்சுவேலி ரயில் ஆகியவையும் அடங்கும். இந்த ரயில்கள் இரண்டும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும்.

2008022752600701.jpgபுதிய ரயில்கள் விவரம்: 1.சென்னை-திருச்செந்தூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

2.வாரணாசி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

3.கயா-சென்னை விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

4.சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் (தினசரி) (அகலப்பாதை பணிகள் முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை காரைக்குடி வழியாக இயக்கப்படும்)

5.சென்னை-திருச்சி விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும்)

6.சென்னை-சேலம் விரைவு ரயில் (தினசரி)

(அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும்)

7.மதுரை-தென்காசி பாசஞ்சர் (தினசரி)

8. (அகலப்பாதை பணி முடிவடைந்த பிறகு இயக்கப்படும்) 8.விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் (தினசரி)

9.திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர் (தினசரி)

2008022756941201.jpg10.கொச்சி வேலி-டேராடூன் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

11.அமிர்தசரஸ்-கொச்சிவேலி விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

12.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

13.யஷ்வந்தபூர்-ஜோத்பூர் விரைவு ரயில்( வாரம் ஒரு முறை)

14.நியூ திப்ருகர் டவுன்-யஷ்வந்தபூர் விரைவு ரயில் (வாரம் ஒரு முறை)

நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் விவரம்: 1.பெங்களூர்-கோயமுத்தூர் விரைவு ரயில் எர்ணாகுளம் வரை

2.சென்னை-பெங்களூர் விரைவு ரயில் ஸ்ரீ சத்தியசாயி பிரசாந்தி நிலையம் வரை

3.மதுரை-மன்மாட் விரைவு ரயில் ராமேஸ்வரம் வரை ஒருபுறமும், ஒக்கா வரை மறுபுறமும்

4.கோயமுத்தூர்-கும்பகோணம் ஜன சதாப்தி விரைவு ரயில் மயிலாடுதுறை வரை ( அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

5.பெங்களூர்-சேலம் பாசஞ்சர் நாகூர் வரை (அகலப்பாதை பணி நிறைவடைந்த பிறகு)

6.தூத்துக்குடி-திருநெல்வேலி பாசஞ்சர் திருச்செந்தூர் வரை

நிஜாமுதின்-திருவனந்தபுரம் ராஜ்தானி விரைவு ரயில் வாரத்திற்கு இருமுறைக்கு பதிலாக மூன்று முறை இயக்கப்படும்.
—————————————————————————————————————————————-
பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம்: லாலு

புதுதில்லி, பிப். 26: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

பயணிகளின் லக்கேஜ்களை சோதனையிட நவீன ஸ்கேனிங் முறை முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

022708_07.jpgபயங்கரவாதிகள் மற்றும் நக்ஸலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் ஒன்றை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி, உரிய நிதியும் ஒதுக்கப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 5700 காவலர் பணியிடங்களும் 993 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் இந்த ஆண்டு மே மாதம் நிரப்பப்படும்.

இதில் காவலர் பணியிடங்களில் 5 சதவீதமும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 10 சதவீதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
—————————————————————————————————————————————-
என்னுடைய கணவர் தான் “பெஸ்ட்’

பாட்னா, பிப். 26: “இதுவரை ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்களிலேயே என்னுடைய கணவர்தான் பெஸ்ட்’ என்று மனதாரப் பாராட்டினார் ராப்ரி தேவி. பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தனது மகள்கள், மாப்பிள்ளை ஆகியோருடன் பார்வையாளர் மாடத்திலிருந்து, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதைப் பெருமிதத்துடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.

2008022757960101.jpg“என்னுடைய கணவரை பிகாரின் ரயில்வே அமைச்சர் என்றே மட்டம்தட்டிப் பேசுகின்றனர்; 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே அதிக வருவாயை ரயில்வேக்கு பெற்றுத்தந்து மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்கிறார்.

நஷ்டத்தில் நடந்துகொண்டிருந்த ரயில்வேதுறையை லாபகரமாக்கிக் காட்டியிருக்கிறார்.

ரயில்வே வேலையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அதை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்படவுள்ளன. ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். பெண் பயணிகள் பயணிக்க இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

ரயில் பெட்டிகளில் வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் நல்லவிதமாக பிரசவிக்க, போதிய மருத்துவ உதவிகள் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

மாணவியர்கள் மேல்படிப்பு படிக்க உதவியாக ரயில் கட்டணச் சலுகை அளித்திருப்பதும், வேலைவாய்ப்புக்காக போட்டித் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் இலவசமாக ரயிலில் செல்லலாம் என்று அறிவித்திருப்பதும் பாராட்டத்தக்க நடவடிக்கைகள்’ என்றார் ராப்ரி தேவி.

—————————————————————————————————————————————-
ரூ.25 ஆயிரம் கோடி லாபம்

புதுதில்லி, பிப். 26: 2007-08 ஆம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது.

வரும் ஆண்டில் ரயில்வே சரக்கு போக்குவரத்து இலக்கு 850 மில்லியன் டன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதன் அளவு 790 மில்லியன் டன்களாகும்.

அடுத்த நிதியாண்டில் சரக்கு கட்டண வருமானம் 10.38 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நிகர சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.52,700 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

பயணிகள் கட்டணம் குறைப்பு மற்றும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு கட்டணம் குறைப்பு போன்றவை அறிவிக்கப்பட்டபோதிலும் அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர வருமானம் 12 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் ரயில்வேயின் நிகர போக்குவரத்து வருமானம் ரூ.81,801 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வருமானத்தை விட இது ரூ.9146 கோடி அதிகமாகும்.

பயணிகள் கட்டண வருவாய் எட்டு சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ.21,681 கோடியாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் இதன் அளவு ரூ.20,075 கோடியாகும்.

ரூ.2.50 லட்சம் கோடி

முதலீடு

ரயில்வே நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,50,000 கோடியை முதலீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை தனது சொந்த நிதியிலிருந்து ரயில்வே நிர்வாகம் முதலீடு செய்ய இயலாது.

எனவே ரயில் நிர்வாகம்-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டத்துக்கான முதலீடு அமையும். முதல்கட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய முறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும்.

11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 36 ஆயிரம் ரயில் பெட்டிகளில் நவீன “பசுமை கழிவறைகள்’ ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் 15 ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.

ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை அறிவிப்பதற்காக ரயில் நிலையங்களில் எல்.சி.டி. திரை நிறுவப்படும்.

இணையதளம் மூலம் பெறப்படும் “இ-டிக்கெட்களிலும்’ காத்திருப்போர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். செல்போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்படும்.

—————————————————————————————————————————————-
ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

ரயில்வேக்கு வெற்றி: லாலுவின் கவிதை!

புது தில்லி, பிப். 26: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் திறமையான பேச்சாளர். எதிரிகளைக்கூட தனது நகைச்சுவையான பேச்சால் சிரிக்க வைத்துவிடுவார். இந்த ரயில்வே பட்ஜெட்டிலும் அது தொடர்ந்தது.

நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்த “”சக்-தே இந்தியா”வுக்குக் கிடைத்த வெற்றியைக் கவனித்து வந்த லாலு, அதே சுலோகத்தைக் கையாண்டு கலகலப்பு ஊட்டினார். “சக்தே ரயில்வே’ என்று அவர் அறிவித்தபோது அவையே அதிர்ந்தது. தன்னுடைய துறையும் அத் திரைப்படத்தில் வரும் இந்திய ஹாக்கி அணியைப் போல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலுக்கு மேல் கோலாகப் போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அதைக் குறிப்பிடும்போது உருது மொழியில் முதலில் கவிதை வாசித்தார். உருது தெரியாத உறுப்பினர்களுக்கும் புரியட்டும் என்று அதை தனக்கே உரித்தான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவருடைய தனித்துவமான ஆங்கிலம், கவிதைக்கு மேலும் நகைச்சுவையை ஊட்டியது. அதுவும் புரியவில்லை என்றதும் ஹிந்தியில் அதை விளக்கி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

“”சப்கா ரஹே ஹை ஹம்நே கஜாப் கியா ஹை

கர்தோன்கா முனாஃபா ஹர் ஏக் ஷாம் தியா ஹை

பால் சலோன் மே அப் தேகா பெüதா ஜோ லகாயா ஹை

சேவா கா ஸ்மரண்கா ஹம்நே ஃபர்ஸ் நிபாயா ஹை”

இதுதான் அந்தக் கவிதை.

—————————————————————————————————————————————-
முக்கிய அம்சங்கள்

ரயிலில் அனைத்து வகுப்புகளிலும் கட்டண சலுகை

சரக்கு கட்டணம் உயர்வு இல்லை

பெண்கள் மற்றும் வயோதிகர்களுக்கு கூடுதல் வசதிகள்

இரட்டை ரயில் பாதைகளுக்கு முன்னுரிமை

தாய்சேய் நல விரைவு ரயில் தொடங்கப்படும்

முக்கிய ரயில் நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 ரயில்கள் அறிமுகம். மேலும் 53 புதிய ரயில்கள் அறிமுகம்.

வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்களில் சிறப்பு கவனம்

காமன்வெல்த் போட்டிகளுக்காக தில்லி-புணே இடையே சிறப்பு ரயில்.

ஓடும் ரயில்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் சரக்குகளை கொண்டு செல்ல

சதவீத கட்டண சலுகை

—————————————————————————————————————————————-
லாலுவின் ஐந்தாவது பட்ஜெட்: பெட்டி பெட்டியாக சலுகைகள்

உயர்வகுப்பு, 2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு
சரக்கு கட்டண உயர்வு இல்லை
பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச பாஸ்

புதுதில்லி, பிப். 26: நீண்டதூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உயர்வகுப்பு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

சரக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகை 6 சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரயில்வே துறை ரூ.25 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சாதனை அளவாகும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 5-வது ரயில்வே பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவனங்களின் குறைந்த கட்டணத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியை சமாளிக்க கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் லாலு பிரசாத் சாதனை படைத்து வருகிறார்.

புறநகர் அல்லாத ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான ரூ.50-க்கு உள்பட்ட கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.

புறநகர் அல்லாத சாதாரண, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ரூ.50-க்கும் அதிகமான இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. முதல்வகுப்பு பயணிகள் கட்டணத்தில் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏ.சி. இரண்டடுக்கு பயணிகள் கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகுப்புகளிலும் மூதாட்டிகளுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் முதியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் 30 சதவீத கட்டணச் சலுகை தொடர்ந்து அமலில் இருக்கும்.

பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கும் தற்போது இலவச மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரையும் மாணவிகளுக்கு பட்டப்படிப்பு வரையும் இலவச பாஸ் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

53 ஜோடி புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.

குளிர்சாதன வசதி கொண்ட ஏழைகளுக்கான 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.

தமிழகத்துக்கு 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இயங்கிவரும் 16 ரயில்கள் நீண்டதூரம் நீடிக்கப்படும்.

2008-09 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ரயில்வே திட்ட மதிப்பீடு ரூ.37,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

ரூ.1730 கோடி செலவில் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். ரூ.2489 கோடி செலவில் அகலப்பாதை மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். ரூ.626 கோடி செலவில் ரயில்பாதைகள் மின்மயமாகும்.

பயணிகளுக்கு ரூ.852 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்துதரப்படும்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண்களுக்கு 5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்களில் பெண் பயணிகளுக்கு பெண் போலீஸôரே பாதுகாப்பு அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

பெண் பயணிகள் பயணம் செய்ய இனி தனி பெட்டிகள் ஒதுக்கப்படும். அதில் பெண் போலீஸôரே காவலுக்கு இருப்பார்கள்.

எய்ட்ஸ் பயணிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.

தாய்-சேய் நல சுகாதார விரைவு ரயில் ஒன்று விரைவில் இயக்கப்படும். 7 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ சேவை செய்வதற்கான வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

“இது எனது கடைசி பட்ஜெட் அல்ல’

இது எனது கடைசி பட்ஜெட் அல்ல என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறினார்.

தங்கள் பகுதிக்கு மேலும் பல ரயில் திட்டங்கள் தேவை என்று கோரிய உறுப்பினர்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், இது எனது கடைசி பட்ஜெட் என்று நினைத்துவிடக் கூடாது. அடுத்து வரும் ஆண்டுகளில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். இந்திய ரயில்வே வரலாறு காணாத அளவில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் எட்டி உள்ளது. ரயில்வே போக்குவரத்து மூலம் இந்த ஆண்டு ரூ. 72,755 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அடுத்த ஆண்டு வருமான இலக்கு ரூ. 82,000 கோடி என்றார் லாலு.

—————————————————————————————————————————————-
“ரயில்வே 2025′ தொலைநோக்கு அறிக்கை: 6 மாதத்தில் தயாராகும்-லாலு

புதுதில்லி, பிப். 26: வரும் 2025-ல் ரயில்வேயின் திட்டங்கள் என்னென்ன என்பதை தற்போதே விவரிக்கும் “ரயில்வே 2025′ அறிக்கை இன்னும் 6 மாதத்தில் தயாராகி விடும் என அத் துறைக்கான அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே பட்ஜெட்டில் அவர் கூறியது:

17 ஆண்டுகளுக்குப் பிறகு (2025-ல்) இந்திய ரயில்வேயின் திட்டங்கள், வளர்ச்சிகள், முதலீடு ஆகியன குறித்து தற்போதே தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டு வரும் அறிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவுபெறும்.

எதிர்காலத்துக்கும் ஏற்ற வகையில் பல்வேறு புதிய யோசனைகள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கும், பணியாளர்களுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

—————————————————————————————————————————————-
வட்டார நோக்கிலான, பாரபட்சமான பட்ஜெட்: இடதுசாரிகள், பாஜக, சமாஜவாதி
புது தில்லி, பிப். 26: பிகாரையும் தமிழ்நாட்டையும் மட்டும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட குறுகிய வட்டார நோக்கிலான, பாரபட்சமான ரயில்வே பட்ஜெட் என்று இடதுசாரிகள், பாரதிய ஜனதா கூட்டணியினர், சமாஜவாதி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கண்டித்தனர்.

மக்களவை பொதுத் தேர்தலின்போது மக்களுடைய வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்று கட்டண உயர்வு இல்லாமல் போடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு நல்ல திட்டங்கள் ஏதும் இல்லாததால், மிகப்பெரிய அரசியல் விபத்தை (தேர்தலில் தோல்வி) சந்திக்கப் போகிற பட்ஜெட் இது என்று அவர்கள் சபித்தனர்.

தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கிவிட்டது என்று சாடினார் முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சித் தலைவர் மோகன் சிங்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எந்தப் பலனும் போய்விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக போடப்பட்ட பாரபட்சமான, குறுகிய நோக்குடைய பட்ஜெட் இது என்று சாடினார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.

இந்த பட்ஜெட்டை ப. சிதம்பரம் போட்டாரா, லாலு பிரசாத் போட்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது என்று பூடகமாகத் தாக்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா.

“ஏ.சி. வகுப்புகளில் பயணிக்கும் பணக்காரர்களுக்கும், மத்திய தர வர்க்கத்தில் மேல் தட்டைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித்தந்துள்ள பட்ஜெட் இது.

மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கிக் கொண்டு புறநகர் ரயில்களில் செல்லும் ஏழை மக்களுக்கும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் சாமானியர்களுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகள் ஏதும் இல்லாத பட்ஜெட் இது’ என்றார் குருதாஸ் தாஸ் குப்தா.

“குறுகிய வட்டார நோக்கில் போடப்பட்ட பட்ஜெட்; எல்லா ரயில்களும் பாட்னாவில் தொடங்கி சென்னையில் முடிகின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுடைய கட்சிக்கு செல்வாக்குள்ள இடங்களுக்கு மட்டும் பயன்கள் கிடைக்குமாறு பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்’ என்று சாடினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதாகர் ரெட்டி.

குஜராத், உத்தரப்பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக பிஜு ஜனதா தள கட்சியின் பிரஜ்கிஷோர் மொஹந்தி கூறியதை அப்படியே ஆமோதித்தார் சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி).

மக்களவையின் அனைத்து தரப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி ஆட்சேபித்ததும், வெளி நடப்பு செய்ததுமே இந்த பட்ஜெட் எவ்வளவு குறுகிய அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுகிறது என்று பொருமினார் மக்களவை பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் நடுநிலையாக இருந்து பயன்பட வேண்டிய பட்ஜெட் இப்படி வோட்டுக்காக சீரழிக்கப்பட்டிருப்பது வேதனையைத்தான் தருகிறது என்றும் மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, ஏதும் இல்லாமல் பெருத்த ஏமாற்றமாக முடிந்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்தார் மனோகர் ஜோஷி (சிவ சேனை).

தனியார் மயத்துக்கு அச்சாரம்: “லாலு பிரசாத் இதைப்போல இன்னும் 5 பட்ஜெட்டுகளைப் போட்டால், அதற்குப் பிறகு ரயில்வேக்கு என்று பட்ஜெட் போட வேண்டிய அவசியமே இல்லாமல் எல்லாம் தனியார் கைக்குப் போய்விடும். ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும்போது, அந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடாமல் பட்ஜெட்டைத் தயாரித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தனியார் -அரசு நிறுவன கூட்டு என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார்வசம் பெரிய அளவில் ஒப்படைப்பதற்கான தொடக்க கட்ட வேலைகளை அறிவித்திருக்கிறார் லாலு பிரசாத்’ என்று மோகன் சிங் (சமாஜவாதி), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கண்டித்தனர்.

காங்கிரஸ் பாராட்டு: கட்டணத்தில் 5% குறைத்து சாமானியர்களுக்குச் சலுகை அளித்திருக்கிறார் லாலு பிரசாத் என்று பாராட்டினார் ஏக்நாத் கெய்க்வாட் (காங்கிரஸ்). மும்பை மாநகரைச் சேர்ந்த புறநகர் ரயில் பயணிகளின் நலனுக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பாராட்டினார்.

—————————————————————————————————————————————-

டிக்கெட் மையங்களில் நெரிசலை தவிர்க்க 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்கள்

புதுதில்லி, பிப். 26: வரும் 2010-க்குள் ரயில்வே டிக்கெட் மையங்களின் பயணிகளின் நெரிசலை தவிர்க்க புதிதாக 5,750 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பது:

ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க தற்போது நாடு முழுவதும் 250 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றை வரும் 2 ஆண்டுகளுக்குள் (2010-க்குள்) 6 ஆயிரம் தானியங்கி இயந்திரங்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் மையங்களில் கூட்டம் குறைந்து விடும். மேலும் அலுவலகம், வீடு ஆகியவற்றில் இருந்தவாறே செல்போன் மூலமாக டிக்கெட் பதிவு செய்யும் முறையும் தீவிரமாக செயல்படுத்த புதிதாக 12 ஆயிரம் மையங்கள் திறக்கப்படும் எனவும் லாலு அறிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————-
ரயில் கட்டணச் சலுகை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவுமா?

சென்னை, பிப். 26: எய்ட்ஸ் மருந்து வாங்க 50 சதவீத ரயில் கட்டணச் சலுகை அறிவிப்பு உண்மையில் பலன் தருமா என எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து (ஏ.ஆர்.வி.) மையங்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“”இச் சலுகையை ரயில்வே துறை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் தங்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதை நோயாளியோ அல்லது அவர்களுக்கு உதவும் நண்பர்களோ பகிரங்கப்படுத்த விரும்ப மாட்டார்கள். எனவே சலுகையை நடைமுறைப்படுத்தும்போது இந்த விஷயத்தை ரயில்வே துறை கருத்தில் கொள்வது அவசியம்” என்று எச்ஐவி பாதித்த பெண்களுக்கு உதவும் அமைப்பின் (“எச்ஐவி பாசிட்டிவ் உமன் நெட்வொர்க்’) தலைவர் டி. பத்மாவதி கூறினார்.

காச நோயாளிகள், ரத்தப் புற்று நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி 50 முதல் 75 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே துறை அளிக்கிறது.

இந் நிலையில் மருந்து வாங்கும் மையங்களுக்குச் சென்றால் மட்டுமே எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சலுகை என அறிவித்திருப்பதை மாற்றி எந்தவித நிபந்தனையும் இன்றி அனைத்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என சில தன்னார்வ அமைப்பினர் கூறினர்.

ஊக்கம் அளிக்கும்: “”இருப்பிடத்திலிருந்து நீண்ட தொலைவுக்கு மருந்து வாங்கச் செல்லும் ஏழை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இந்த கட்டணச் சலுகை பலன் அளிக்கும். இதன் மூலம் அவர்களது ஒரு நாள் தினக் கூலி இழப்பு சரிக்கட்டப்படும்.

மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற ஊக்கத்தை இச் சலுகை தரும். எனவே இந்தச் சலுகை வரவேற்கத்தக்கது. நோயாளிகளின் ரகசியத் தன்மையை காக்கும் வழிமுறைகளை உருவாக்குவது ரயில்வே துறைக்கு கடினமாக இருக்காது” என்றார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் சுப்ரியா சாகு.

—————————————————————————————————————————————-

AN EYE TO THE HUSTINGS

CUTS

FREIGHT

5% Petrol/diesel
14% Fly ash
6% Traffic to north-east
5% 2nd class fares for tickets >Rs 50
Re 1 Fares for tickets <Rs 50
7% AC 1st class
4% AC 2nd class
The Pay Commission’s impact
Operating ratio
07-08* 76.3
08-09** 81.4

Cash surplus

07-08* Rs 25,065 cr
08-09** Rs 24,782 cr
* Revised estimate ** Budget Estimate
 
 

Posted in Avadi, billions, Biz, Budget, Business, Congress, Economy, Fares, Finance, Freight, Govt, ICF, Income, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loss, Manmohan, Perambur, Profits, Rail, Railway, Railways, Sonia, Tamil, Trains, Travel, Traveler, Visit, Visitor | 1 Comment »

1.5 mn Commercial (lorry) vehicles keep off roads in Karnataka – Truckers strike enters second day

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

3-வது நாளாக லாரி ஸ்டிரைக்: பல கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், பிப். 23: தமிழகம் மற்றும் கேரளத்தில் 3-வது நாளாக நடைபெறும் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. இதனால், வட மாநிலங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் தீப்பெட்டி, ஜவுளி, மஞ்சள், இரும்பு, உதிரிப் பாகங்கள், தொழிற்சாலை பொருள்கள் என அனைத்தும் மூன்று நாள்களாக வட மாநிலங்களுக்கு செல்லாமல் அப்படியே தேங்கி உள்ளன வட மாநிலங்களில் இருந்து வரும் கோழித் தீவன மூலப் பொருள்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், மார்பிள்ஸ், பர்னிச்சர்கள், காய்கறிகள், பழங்கள் வரத்தும் தடைபட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நீடித்தால் கோழித் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை மேலும் உயரும் அபாயமுள்ளது.

கர்நாடகத்தில் தமிழக லாரிகளை தடையின்றி இயக்கலாம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

சென்னை, பிப். 23: கர்நாடக மாநிலத்தில் தடையின்றி தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தமிழக லாரி உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கும், கர்நாடகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை திரும்பப் பெற வலியுறுத்தி, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து கர்நாடகத்துக்கு செல்லும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தமிழக லாரிகளை தடையின்றி கர்நாடக மாநிலத்தில் இயக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, இணைப் போக்குவரத்து ஆணையர் டி.நாராயணமூர்த்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கர்நாடகத்தில் இயக்கும் போது, வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை வற்புறுத்தப்பட மாட்டாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழக லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எந்தவித தடையுமின்றி கர்நாடக மாநிலம் வழியாக தங்கள் லாரிகளை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி
தமிழ்நாட்டில் பலகோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

சென்னை, பிப்.24-

கர்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன.

லாரிகள் வேலைநிறுத்தம்

கர்நாடகத்தில் ஓடும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்று அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாநிலத்தில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அங்கு லாரிகள் ஓடவில்லை.

இந்த போராட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருப்பதால், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மற்றும் கர்நாடகத்தின் வழியாக செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே கர்நாடகத்துக்கு புறப்பட்டு சென்ற லாரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

பல கோடி ரூபாய் பொருட்கள் தேக்கம்

மேலும் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து கர்நாடகத்துக்கு செல்ல வேண்டிய லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள பார்சல் அலுவலகங்களில் பார்சல்கள் குவிந்து உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பெட்டி, தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, மஞ்சள் போன்ற பொருட்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. லாரி உரிமையாளர்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தக்காளி, கோஸ், கேரட், பீன்ஸ் போன்ற முக்கியமான காய்கறிகள் அங்கிருந்துதான் வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காய்கறி வரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜிடம் கேட்டபோது, “தினமும் 50 லாரிகளில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். நேற்றைய தினம் வழக்கமாக வரும் அனைத்து காய்கறிகளும் வந்து விட்டன. இன்றைய தினம் தான் வழக்கமாக வரும் லாரிகளில் காய்கறிகள் வருமா என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்றார்.

விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு எம்.எம்.சி. உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சவுந்திரராஜன் கூறும்போது, “தக்காளி தவிர 60 லாரிகளில் மற்ற காய்கறிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருகின்றன. நேற்றைய தினம் வழக்கமாக வரவேண்டிய காய்கறிகள் வந்தன. இன்றைய தினம் குறைந்த அளவில்தான் காய்கறிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி குறைந்த அளவு காய்கறிகள் வருகின்ற பட்சத்தில் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து கூறியதாவது:-

வழக்கமாக ஈரோட்டில் இருந்து ஜவுளி, மஞ்சள், எண்ணை போன்ற பொருட்கள் கர்நாடகம் மற்றும் மராட்டியம், அரியானா, டெல்லி உள்பட பல வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கர்நாடகத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் சுமார் 200 லாரிகள் மற்றும் கர்நாடகம் வழியாக செல்லும் லாரிகள் உள்பட சுமார் 1,500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ஈரோட்டில் பல கோடி போய் மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கே.எஸ்.கலியபெருமாள் கூறுகையில், கோவை மாவட்டத்திலிருந்து கர்நாடகத்திற்கு லாரிகள் செல்லாததால் தினமும் ரூ. 25 கோடிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

சேலம்

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் கூறியதாவது:-

லாரிகளுக்கு வேககட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவு தமிழக லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் போகக்கூடாது என்றால், காய்-கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அழுகும் பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் லாரியில் கொண்டு செல்லமுடியாமல் பாதிப்பு ஏற்படும். கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கால், சேலம் மாவட்டத்தில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சரக்குகள் ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பில் தேக்கம் அடைந்து உள்ளன.

இவ்வாறு சென்னகேசவன் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம் தொடரும்

இதற்கிடையே கர்நாடக லாரி உரிமையாளர் மற்றும் ஏஜெண்டுகள் சங்க நிர்வாகிகள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் கவர்னரின் ஆலோசகர் தாரகன் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தங்கராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பில் எந்த ஒரு உறுதி மொழியும் கொடுக்கப்படாததால் வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜி.ஆர்.சண்முகப்பா கூறினார்.

கர்நாடகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.100 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் பஸ், வாடகை கார், சுற்றுலா வேன் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Posted in Accidents, Biz, commercial, Dangerous, dead, Death, drivers, DUI, DWI, Economy, Employment, Erode, Exports, Finance, Food, Freight, Goods, Impact, Jobs, Karnataka, Law, Limits, Lorry, Loss, Operators, Order, Parcel, Perishable, Profit, Salem, Services, Speed, Strike, Transport, Transporters, Truckers, Trucks, Vegetables | Leave a Comment »

Dyslexia & Taare Zameen Par – Raman Raja

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்!


எலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.

பச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்!)

டிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது!

சொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.

சொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு! இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.

சொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம்? படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம்? அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. (  reading disability) என்று கூப்பிடலாமே?” என்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:

விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், எடிசன்?

பிரதமர் சர்ச்சில்?

எழுத்தாளர் அகதா கிறிஸ்டி?

ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்?

போதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

டிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்!) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே?”

Posted in +2, 10, Aamir, Aamir Khan, Achievements, Achievers, Arts, Biz, Books, Business, Challenged, Child, Children, Cinema, Cognition, Colleges, Commerce, Communication, disability, Dyscalculia, Dyslexia, English, entrepreneurs, entrepreneurship, Fashion, Films, Fun, Games, Grades, IIM, IIT, Innovation, Ishaan, Ishan, Khan, Kids, Learn, Learning, Marks, Maths, Merit, Movies, Painting, Professors, Raman Raja, Rank, Reading, Schools, Shrewd, Sports, Students, Teachers, Value | 2 Comments »

Companies slash prices to sell cement in Tamil Nadu at Rs 200/bag: Tamil Nadu Cement Corporation (TANSEM)

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

பாவம், பொதுஜனம்!

கட்டுமானத் தொழில் என்று சொல்லும்போது, அதில் தொழிற்சாலைகள், அரசின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் என்று அனைத்துமே அடங்கும். இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தியில் 40 சதவிகிதம் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கும், ஏனைய 60 சதவிகிதம் வீட்டு வசதித் துறைக்கும் பயன்படுகிறது.

ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 200 ஆக இருந்தது. கடந்த ஆறே மாதங்களில் நாளொரு விலையும், பொழுதொரு தட்டுப்பாடுமாகக் குதித்தெழுந்து இப்போது ரூ. 260 என எட்டாத உயரத்தை எட்டிப் பார்த்திருக்கிறது. தங்கமும் சிமென்டும் போட்டி போடுவதைப் பார்த்தால், சராசரி மனிதனுக்கு மயக்கம் வராத குறை.

சிமென்ட் விலையைக் குறைக்கும் எண்ணத்தில், கடந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு மூட்டை ரூ. 190க்கும் குறைவாக விற்பனை செய்யும் சிமென்டிற்கான கலால் வரியை டன்னுக்கு ரூ. 50 குறைத்தது என்பது மட்டுமல்ல, அதற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யும் சிமென்டுக்கு டன்னுக்கு ரூ. 200 கலால் வரி உயர்த்தப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள், சிமென்ட்டின் விலையை ரூ. 190க்கும் குறைவாக வைத்திருப்பார்கள் என்ற நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துவிட்டது.

சுமார் ஒரு லட்சம் டன் சிமென்ட்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இறக்குமதி செய்து பொது விநியோகத் துறை மூலம் ரூ. 20 குறைத்து விற்பனை செய்யலாம் என்பது அரசின் முடிவு. இதேபோல அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுமானால், தமிழகத்திலுள்ள சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வேறு பலமாக எழுப்பப்படுகிறது. ஒரு சில தனியார் சிமென்ட் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூட முடியாத அரசு, இந்த நிறுவனங்களை எப்படி நிர்வாகம் செய்யும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தி தற்போது 160 மில்லியன் டன்கள். கூடுதலாக இந்த ஆண்டு 13 மில்லியன் டன் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தும் தட்டுப்பாடு தொடர்வது ஏன் என்பது புரியவில்லை. சிமென்ட் விலை உயர்வால் பல வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டிருப்பதாகவும், திட்டமிட்ட முதலீடு போதவில்லை என்றும் நிறுவனங்களும், அரசுத் துறைகளும், வீடு கட்டும் சராசரி மனிதர்களும் அலறும் நிலை. கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் மத்திய அரசு, சிமென்ட் விலை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகரிப்பதை ஏன், எதற்காக வேடிக்கை பார்க்கிறது? மாநில அரசுகள் பழியைச் சுமக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி மௌனம் சாதிக்கிறது சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம். அது ஏன்?

பொது விநியோகம் மூலம் மாதம் ஒன்றிற்கு 20 லட்சம் மூட்டைகள் சிமென்ட்டை மூட்டை ஒன்றிற்கு ரூ. 200 வீதம் விற்பதற்கு ஆலை அதிபர்கள் ஒப்புக்கொண்டிருப்பதால், தட்டுப்பாடு முற்றிலும் விலகிவிடும் என்று எப்படி நம்புவது? அரசு அதிகாரிகள் வழங்கும் பர்மிட் என்பது, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் லாபமடைய வழிகோலாது என்பது என்ன நிச்சயம்?

இதற்கு உடனடித் தீர்வு இறக்குமதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தரநிர்ணயங்கள் தளர்த்தப்பட்டு இறக்குமதி என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சிமென்ட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, இறக்குமதி செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது யாருக்கு லாபமோ இல்லையோ, நிச்சயமாக சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சாதகமான விஷயம். இறக்குமதி சிமென்ட்டின் தரத்துக்கு நாங்களும் சிமென்ட் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

சிமென்ட் விலை குறைவதும், தட்டுப்பாடு நீங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல் இருப்பது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த அமெரிக்காவிலேயே பாலங்கள் இடிந்து விழுகின்ற நிலையில், தரத்தைத் தளர்த்துவது ஆபத்து.

முதலில் மணல். இப்போது சிமென்ட். யார் காட்டில் மழை பெய்யப் போகிறது என்று யார் கண்டது? பாவம், பொதுஜனம்!

Posted in ADMK, Biz, Building, Cement, Chettinad, Chettinad Cement Corporation, Companies, Construction, Dalmia, Dayanidhi, DMK, Duopoly, Economy, Finance, Grasim, India Cements, Industries, Industry, Kalanidhi, Madras Cements, manufacturers, Maran, Monopoly, Muthiah, Oligopoly, Poor, Private, Ramco, Rich, Tamil Nadu, TANSEM, Ultratech | 1 Comment »

Worldwide tentacles of the nexus between Politics, Bribery & Corruption

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்

டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.

கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.

சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.

இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.

அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.

ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.

தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.

இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.

மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.

எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.

மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

இரா. சோமசுந்தரம்

திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!

இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.

இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.

அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!

பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!

சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.

தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.

ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.

அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.

விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.

பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?

இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.

எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.

“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.

எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.

எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.

இப்போது சொல்லுங்கள்…

லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »

TR Baalu, Ram Sethu Project and Subramaniam Swamy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

டி.ஆர். பாலுவின் மகன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: சுப்பிரமணியன் சுவாமி திடீர் புகார்

சென்னை, டிச. 6: சேது சமுத்திரத் திட்டத்தில் மண் அள்ளும் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகனால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும்.

இந்த திட்டத்தில் கடலில் மண் எடுத்து ஆழப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் டி.ஆர்.பி. செல்வம் & கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனுக்கு சொந்தமானது. எனவே, தனது மகனின் நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக அரசின் ரூ. 2,500 கோடியை வீணாக்க அனுமதிக்க முடியாது.

சேது திட்டம் கைவிடப்பட வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு 1999-ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால், 2005-ல் இதே அமைச்சகம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த கருத்து மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை, நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

இதேபோல 2002-ல் ராமர் பாலம் குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து பொய்யான விவரங்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

சட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த பிரச்னையில் மத்திய அரசு இனியும் மெüனமாக இருக்காமல் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

சேது சமுத்திர திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியக் கடலோர காவல்படை ஆய்வு.

பாக் ஜலசந்தி
இந்தியா இலங்கையிடையேயான பாக் ஜலசந்தி

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது ஏற்படும்
பாதுகாப்பு ஆபத்து தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர் தெரிவித்தார்.

இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்,

“பெரிய அளவில் இந்தத் திட்டம் உருவாகி வருவது உங்களுக்குத் தெரியும். இது, கடல்சார் பிரச்சினைகளைக் கொண்டதால், கடற்படை மற்றும் கடல்சார் அமைப்புக்களின் கருத்துக்களை அரசு கேட்டது. திட்டம் செயல்படுத்தப்படும்போது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்லும்போது, அங்கு ஏதாவது நடக்கலாம். அதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார் வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்.

சேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரும். பனாமா, மலாக்கா மற்றும் சூயஸ் கால்வாய்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கான்ட்ராக்டர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் இந்தியக் கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் கான்ட்ராக்டர் தெரிவித்துள்ளார்.

Posted in Adams Bridge, Allegations, Allege, Baalu, Balu, Biz, Bribery, Bribes, Bridge, Business, Company, Corrupt, Corruption, Defamation, Defame, DMK, Economy, Environment, Finance, God, Hindu, Hinduism, Hindutva, kickbacks, Law, Lawsuit, Money, Nature, nexus, Ocean, Order, Pollution, Project, Ram, Ram Sethu, Rama, Raman, Ramar, Religion, Saami, Sami, Sea, Selvam, Selvan, Sethu, Setu, Shipping, Ships, Subramaniam, Subramaniam Swamy, Swami, Swamy, TR Baalu, TR Balu, Transportation, TRB, TRB Selvam | Leave a Comment »

Probing the rice seizures in Tamil Nadu – AK Venkatasubramanian

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

இரண்டு ரூபாய் அரிசி
மின்சார அதிர்ச்சி
அதிரடித் தகவல்கள்

கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று புதுச்சோரி மாநில உணவுக் கடத்தல் தடுப்புப் பி¡ரிவு போலீஸார், புதுச்சோரி ரயில் நிலையத்தில் வழக்கமான கண்காணிப்பை மேற்கொண்ட போது, 40 வேகன்களில் அ¡ரிசி ஏற்றப் பட்டு, ஒரு சரக்கு ரயில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. அனுப்பப்படும் சரக்கு, அ¡ரிசி என்றதும் சற்று விழித்துக்கொண்டது போலீஸ். ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் 2,400 டன் அ¡ரிசி அந்த வேகன்களில் ஏற்றப்பட்டு, ஆந்திராவில் உள்ள பிக்காவொலு என்ற இடத்துக்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்டது தொரிய வந்தது.

“யார் பதிவு செய்தது; பதிவு செய்தவர்களுக்கு அ¡ரிசி எப்படி வந்தது; முறையான அத்தாட்ச யுடன் அ¡ரிசி செல்கிறதா?” என்று கேள்விகள் தொடர்ந்தன. விசாரணையில் பெங்களூரூவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் பதிவு செய்ததாகத் தொரிய வந்தது. ஆனால், விதி முறைகளுக்கு உட்பட்டு எடுத்துப் போகப்படும் அ¡ரிசி’ என்று சொல்லும் ஆவணங்கள், ரயில்வே துறையிடம் இல்லை.

கடத்தவிருந்த சரக்கு பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் இன்னமும் துருவியபோது அம்பலமானதுதான், இப்போது தமிழகம் மற்றும் புதுவையில் அலசப்படும் மெகா அ¡ரிசிக் கடத்தல் விவகாரம்.

தொடர்ந்து மேற்கொண்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. கடத்தப்படவிருந்த அ¡ரிசி பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட, முன்பே நான்கு முறை புதுச்சோரி ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது! கடந்த செப்டம்பர் மாதம் முதல் முறையாக 39 வேகன்களில் 2,340 டன் அ¡ரிசி வங்க தேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அடுத்து, அதே செப்டம்பர் மாதம் 20 வேகன்களில் 1,247 டன் அ¡ரிசி அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்ற இடத்துக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மொத்தம் 60 வேகன்களில் 3,765 டன் அ¡ரிசி அஸ்ஸாம் கவுகாத்திக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்தக் கிடங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது என்று புலனாய்வு செய்ததில், புதுவையில் உள்ள மா புட்ஸ் மற்றும் ஜே.ஆர். புட்ஸ் என்ற நிறு வனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சேகாரிக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்தக் கிடங்குகளைச் சோதனை செய்ததில் 3,500 டன் அ¡ரிசி சிக்கியது.

சென்னை சேத்துப்பட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அன்னம்மாள் காசி எக்ஸ்போர்ட்ஸ். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் போலியான முகவாரியைக் கொடுத்து நடத்தி வந்த நிறுவனமாம் இது. ஆறுமுகம் ‘ஓஹோ’ வென்று அ¡ரிசி வியாபாரம் செய்வதாகச் சொல்லி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் 2005ஆம் வருடம், நவம்பாரில், பத்து கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். அவர் பெயருக்கு ஐந்து கோடி, நிறு வனத்துக்கு ஐந்து கோடி!

2006-ஆம் வருடம், மார்ச் மாதம், பத்து கோடியையும் வழங்கிவிட்டது வங்கி. ஆனால், மாதத் தவணை திருப்பிக் கட்டப்படாததால் கவலையடைந்த வங்கி, ஒரு கட்டத்தில், இந்த நிறுவனம் சேகாரித்து வைத்திருந்த அ¡ரிசியைக் கைப்பற்றி ஏலம் விட்டு விட்டது.

ஏலத்தில் அ¡ரிசியை எடுத்த பி.ஆர்.எஸ். டிரேடர்ஸ் ரயிலில் அனுப்பும்போதுதான் மாட்டிக்கொண்டது. இந்த முக்கியக் கதையில் சில கிளைப் பாத்திரங்களும் உண்டு. வங்கிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டது, மும்பையைச் சேர்ந்த நேஷனல் கொலட்ரல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம். அ¡ரிசிக் கடத்தல் விவகாரத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு குறித்துத் தீவிர விசாரணை நடக்கிறது. தவிர, விசாரணை வலை இறுகும்போது ரயில்வே ஊழியர்களும் சிக்குவார்கள் என்று தொரிகிறது; இதுவரை ஆறு பேர் கைதாகியிருக்கிறார்கள்.

ரயில்வே ஊழியர்கள் சரக்கைப் பதிவு செய்யும்போது, உ¡ரிய ஆவணங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஒரு பொருளை ரயிலில் அனுப்பப் பதிவு செய்யும் போது, அந்தப் பொருள் அனுப்பும் நபருடையதுதான் என்று நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் கொடுக்க வேண்டும். அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பும் போது, ரயில்வேயிடம் வழங்கும் மனுவில் உ¡ரிய அதிகா¡ரியின் அத்தாட்சி குறிப்பிடப்பட வேண்டும். அ¡ரிசி, கோதுமை என்றால் வட்டார வழங்கல் அதிகா¡ரி அல்லது வரு வாய்த்துறை அதிகா¡ரிகளிடம் அத்தாட்சி பெற்றிருக்க வேண்டும். ரயில்வே அதிகா¡ரிகள் துணையில்லாமல் இந்தக் கடத் தல் நடந்திருக்க முடியாது.

இப்போது மற்றொரு முக்கியக் கேள்வி எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. கடத்தப்பட்ட அ¡ரிசி எந்த மாநிலத்தை சேர்ந்தது? “பிரச்னையில் சிக்கிய நிறுவனம் சென்னை முகவாரியைக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறது. எங்கள் மாநிலத்தில் பொது விநியோகத்துக்கு வெளி மார்க்கெட்டிலிருந்து அ¡ரிசி வாங்குகிறோம். எனவே, தமிழ்நாட்டிலிருந்து தான் இந்த அ¡ரிசி கடத்தி வரப்பட்டிருக்கக்கூடும்” என்று உறுதியாகச் சொல்கிறார்கள் புதுவை அதிகா¡ரிகள். ரேஷனில் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப் படும் அ¡ரிசி, கடத்தப்பட்டு வடகிழக்கு மாநிலங்களை அடையும்போது கிலோ இருபது ரூபாயாக எகிறுகிறது. இந்தத் தகவலே மின்சார அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த விவகாரமும் 2006-ஆம் வருடம் மே மாதத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இருந்தாலும், ‘முழு உண்மையைக் கண்டறிய சி.பி.ஐ. விசாரணை கோ¡ரியிருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது தமிழக அரசு. சி.பி.ஐ. விசாரணை கோ¡ரினாலும், தமிழக அரசின் சிவில் சப்ளை போலீஸ் துறை தனியாக, தீவிரமாக விசாரணை நடத்தி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளைக் கண்டறிந்துள்ளதாக, கோட்டை வட்டாரம் சொல்கிறது.

“2006ம் வருடம் மே மாதத்துக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பொது விநியோகத் துறை முடுக்கிவிடப்பட்டது. உணவு அமைச்சரே மாநிலம் முழுவதும் இரவும், பகலும் சுற்றி ரேஷன் அ¡ரிசி கடத்தல்காரர்களை வேட்டையாடினார். இதுவரை 45 கடத்தல்காரர்கள் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் குண்டர்கள் சட்டத்தில் இருக்கிறார்கள். நிறைய லா¡ரிகள் கைப்பற்றப் பட்டன.

கடத்தலுக்குத் துணைபோன ஊழியர்கள், அதிகா¡ரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்தப் போலி கார்டுகள் மூலம் வாங்கப்பட்ட அ¡ரிசியே சேகாரிக்கப் பட்டுக் கடத்தப்பட்டது. ஒரு கோடியே 94 லட்சம் கார்டுதாரர்களுக்கு முறையே மாதம் 20 கிலோ அ¡ரிசி தவறாமல் வழங்கிவிடுகிறோம்.

அதேசமயம் முன்பு, அ.தி.மு.க. ஆட்சியில் உணவுக் கழகத்திடம் கொள்முதல் செய்த அ¡ரிசியின் அளவு மூன்று லட்சம் டன். நியாயமான கார்டுதாரர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்த போதும் இப்போது கொள்முதல் செய்யும் அளவு இரண்டேமுக்கால் லட்சம் டன்தான்.

இதில் இடைப்பட்ட அளவு உள்ள அ¡ரிசியே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடத்தப்பட் டது. இப்போது உணவுக் கழகத்திட மிருந்து அ¡ரிசி கொள்முதல் செய்த லா¡ரி, எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதையும் மானிட்டர் செய்யும் வசதி இருக்கிறது. கடந்த ஆட்சியில் ஓர் அமைச்சரே தினசாரி 20 லா¡ரிகளில் ரேஷன் அ¡ரிசியைக் கடத்தியிருக்கிறார் என்பது தொரிய வந்திருக்கிறது” என்ற திடுக் தகவலுடன் முடித்தார் அந்தத் துறை சார்ந்த இந்நிலையில், அதிகா¡ரி ஒருவர்.

புதுவையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கிடங்குகள் ஒரு வருடத்துக்கு முன்புதான் எடுக்கப்பட்டதாக ஜெயலலிதா சொல்கிறார். இப்போதைய தி.மு.க. ஆட்சியில் கடத்தல் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுவது எந்த வகையில் சமாதானமாக அமைய முடியும்!

யாருமே அ¡ரிசி கடத்தல் அதிகாரித்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பொதுவிநியோகம் என்றாலே ஊழலுடன் கைகோத்துக்கொண்டு தான் நடக்கிறது. ஒன் றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்பான விவகாரம் இது. சி.பி.ஐ. விசாரணை, ‘கடத்தல் நடந்த கால கட்டத்தை’ கண்டு பிடித்து வெளியிடும்போது, யார் யார் தலை உருளுமோ?

– ஸ்ரீநி
——————————————————————————————————–

“பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் அ¡ரிசி கடத்தப்பட்டு, வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது ஒரு தொடர்கதையே” என்று சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகா¡ரி, அ.கி.வேங்கட சுப்பிரமணியம். பல ஆண்டுகள் உணவு மற்றும் பொது விநியோகத் துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர் இவர்.

“நமது நாட்டில் ஏறத்தாழ ஐந்து லட்சம் நியாய விலைக் கடைகள் மூலம், 20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 20,000 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசி, கோதுமை, மண் ணெண்ணெய் ஆகியவை தீய சக்திகளால் கடத்தப்படுவது பல்லாண்டுகளாக நடந்து வரும் ஒரு விஷயம்.

1998-ஆம் வருடம் நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது குறித்த ஆய்வை எடுக்குமாறு டாடா நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அந்த ஆய்வின்படி தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்துக்காக வழங்கப்படும் அ¡ரிசியில் மூன்றில் ஒரு பாகம் கடத்தப்படுகிறது என்பது தொரிய வந்தது. மாதம் ஒன்றுக்கு விநியோகிக்கப்படும் சுமார் மூன்று லட்சம் டன் அ¡ரிசியில், ஒரு லட்சம் டன் அ¡ரிசி கடத்தப்படுகிறது என்ற அடிப்படையில் பார்த்தால், கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் லாபம் அடிக்கும் பட்சத்தில், வருடம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி, கடத்தல்காரர்களின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.

கடத்தலைக் கண்டுபிடிக்க சிவில் சப்ளை போலீஸ் இருக்கிறது. ஆனால், ஒரு கடத்தல் லா¡ரியைப் பிடித்து விட்டால் அதிலுள்ள ஆட்களைக் கைது செய்து, லா¡ரியைப் பறி முதல் செய்து வழக்குப் பதிவு செய்கிறார்களே தவிர, அந்தக் கடத்தலுக்கு மூலம் யார்? அ¡ரிசி எங்கு போகிறது என்றெல்லாம் ‘பல காரணங்களால்’ ஆய்வு செய்வதில்லை.

கடத்தலுக்கு முக்கிய காரணம் போலி ரேஷன் கார்டுகளும், அ¡ரிசி வாங்காத கார்டுகளும்தான். இதைக் கண்டுபிடிப்பது எப்படி? 1997-ஆம் ஆண்டு தமிழக அரசின் உணவுத் துறை (எ..225) ஆணை ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி ஒருவர், ரேஷன் கடைக்குச் சென்று கார்டுதாரர்கள் பட்டியலைக் கொண்ட ¡ரிஜிஸ்டரைப் பார்வையிட்டு, நகல் எடுக்கலாம். அதே போல் ஸ்டாக் ¡ரிஜிஸ்டரையும் சோதிக்கலாம். பேட்டை ரவுடிகள், அரசியல்வாதிகள் மிரட்டல் மற்றும் அராஜகம் காரணமாக, தனி மனிதர்கள் இந்த வேலைகளில் ஈடுபடத் துணிய மாட்டார்கள். கார்டுதாரர்களின் பட்டியலை எடுத்து ஏ¡ரியாவில், வீடு, வீடாகச் சோதனைச் செய்து, போலி கார்டுகளின் பட்டியலை உ¡ரிய அதிகா¡ரிக்குக் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம். இதனால் ஊழல் ஒழிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அ.கி.வேங்கடசுப்ரமணியம்.

————————————————————————————————————————-
விலைக் கொள்கையில் நெல்லும் கோதுமையும்

ஆர்.எஸ். நாராயணன்

தேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணயக் கொள்கை விவசாய உற்பத்தி வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

ஏனெனில் விலை என்பது கேள்வியின் ஆற்றலுக்கும் வழங்கலின் விளைவுக்கும் இடைப்பட்ட ஒரு சமரசக்குறியீடு. இது வளர்ச்சியைக் கண்காணிக்கும் குறியீடும் ஆகும். கேள்வியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த விலைக்குறைப்பை ஏற்படுத்தியும், விலையை உயர்த்தி வழங்கலையும் பெருக்க வேண்டும்.

திட்ட நிர்ணயப்படி விளைபொருள் உற்பத்தி உயரும்போது வழங்கல் அதிகமாகும். வழங்கல் கூடினால் விலை வீழ்ச்சியுறும். விலை வீழ்ச்சியுற்றால் உற்பத்தி குறையும். திட்டமிட்டபடி உற்பத்தியை உயர்த்த விலை நிர்ணயம் தேவை. எனவே, உணவு உற்பத்தியை உயர்த்தும் ஒரு மார்க்கமாகவே விலை நிர்ணயக் கொள்கை உதவி வந்துள்ளது.

இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு – குறிப்பாக நமது பொதுவிநியோகத்துக்கு வழங்கும் நெல், கோதுமை விவசாயிகளுக்கு – மத்திய அரசு வழங்கி வரும் ஊக்க விலைக்கும் மொத்தவிலைக்குறியீட்டு எண் காட்டும் விலைக்கும் உள்ள சமச்சீர்மை என்றோ தொலைந்துவிட்டது.

நெல் அல்லது அரிசியில் வெளிஅங்காடி வழங்கல் கூடுதலாகவும் கோதுமையில் வெளிஅங்காடி வழங்கல் குறைவாகவும் உள்ளது. அரிசியில் ஏற்றுமதி உள்ளது. கோதுமையில் இறக்குமதி உள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு 2007 – 08-க்கான அரசின் நெல், கோதுமை விலைகளால் இரு தரப்பு விவசாயிகளும் நொந்து போயுள்ளனர்.

வடக்கே – குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உ.பி. ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அரிசி மற்றும் கோதுமைகளை மத்தியத் தொகுப்புக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றனர். இம்மாநில விவசாயிகளின் கோரிக்கைகளை வைத்துத்தான் மத்திய அரசின் விலைநிர்ணயம் உருப்பெருவதாகத் தோன்றுகிறது.

கடந்த 9-10-2007 அன்று நடப்புப் பருவத்திற்குரிய வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அமைச்சரவைக்குழு அறிவித்தது.

அதன்படி, கோதுமைக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,000, “ஏ’ ரக நெல் ரூ. 725 என நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த பருவத்தைவிட நடப்புப் பருவத்திற்கு (2007 – 08) கோதுமைக்கு ரூ. 150 உயர்த்தப்பட அதேநேரம் நெல்லுக்கு ரூ. 30 மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்த வித்தியாசம் ஒருபுறம் இருக்கட்டும்.

கோதுமையுடன் நெல்லை ஒப்பிடும்போது கோதுமையை அப்படியே மாவாக (ஆட்டாவாக) மாற்றி சமைத்து விடலாம். கழிவும் அற்பமே. ஆனால் நெல்லை அரிசியாக மாற்றித்தான் சமைக்க முடியும். நெல்லில் மூன்றில் ஒரு பங்கு உமியாகவும் தவிடாகவும் மாறிவிடும். எனினும் தவிட்டுக்கு விலை உண்டு. குருணைக்கும் விலை உண்டு.

நெல்விலை என்றால் 66.6 சதவீத அரிசி விலைக்குச் சமம். 100 சதவீதம் அரிசி என்பது ரூ. 966 என்றாலும் ரூ. 34 குறைகிறது.

நெல் விலையையும் கோதுமை விலையையும் சமவிகிதத்தில் உயர்த்தாமல் விலை நிர்ணயம் செய்துள்ள விவசாய விலை மதிப்பீட்டு விலைக்குழு பாரபட்சம் காண்பிப்பது ஏன்?

மத்திய அரசின் மத்தியத் தொகுப்புக்கு குறைந்த அளவுக்கு வழங்கல் செய்யும் தமிழ்நாட்டு விவசாயிகள் இப்போது கிளர்ந்தெழுந்துள்ளனர். அதேசமயம் விலைநிர்யணமாவதற்கு முன்பே வடக்கில் பாரதிய விவசாயிகள் சங்கம் கிளர்ந்தெழுந்துவிட்டது.

பொதுவாக ஒப்பிடும்போது கோதுமை விலையில்தான் பிரச்னை அதிகம். உலகச் சந்தையில் கோதுமையின் விலை ரூ. 1,600. மத்திய அரசு (உணவுக் கார்ப்பரேஷன்) இவ்வளவு அதிகமான விலை கொடுத்து சுமார் 10 லட்சம் டன் வரை கோதுமையை இறக்குமதி செய்துள்ளது.

கோதுமையில் உள்ள பற்றாக்குறை அரிசியில் இல்லை. அரிசி ஏற்றுமதியாகிறது. கோதுமையோ இறக்குமதியாகிறது. கோதுமை உள்ளூர் வியாபாரத்திலும் உணவுக் கார்ப்பரேஷன் ஏகபோகம் செய்கிறது.

கோதுமையின் வெளிச்சந்தைக்கும் உணவுக் கார்ப்பரேஷனே வழங்கல் செய்கிறது. அரிசியில் வெளிச்சந்தை தெளிவாக உள்ளது.

ஆகவே, பாரதிய விவசாயிகள் சங்கம் கோதுமைக்கு உலகச் சந்தையில் உள்ள விலையை வழங்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தும் கிடைத்த விலை ரூ. 1000 மட்டுமே.

இப்போது கோதுமை விவசாயிகள் ரூ. 1,240 தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்கின்றனர். கோதுமை விலையை மொத்த விலைக்குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யாததால் கடந்த 25 ஆண்டுகளில் கோதுமை விவசாயிகளின் இழப்பு ரூ. 20,000 கோடி என்று பாரதிய விவசாயிகள் சங்கம் ஒரு புள்ளிவிவரத்தை மத்திய அரசின் அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பியுள்ளது.

பாசுமதி அரிசி தவிர்த்த இதர ரக அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபில் குருதாஸ்பூர், பெரோஸ்பூர், அமிருதசரஸ் மாவட்டங்களில் விளையும் சர்பதி, பூசா சன்னரகம் ஏற்றுமதி காரணமாக ரூ. 1,600 என விற்ற விலை இன்று ரூ. 1,200-க்கு இறங்கிவிட்டது.

ஆகவே பாசுமதி சாராத இதர அரிசி ரகங்களின் ஏற்றுமதித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கூடியுள்ளது.

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கிரிக்கெட் போதையில் உள்ளார். விவசாயப் பிரச்னையைவிட வெங்சர்க்கார் விலகல் பிரச்னைதான் இப்போது அவருக்கு முக்கிய விஷயமாகிவிட்டது!

கடந்த பல ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்தி மதிப்பு சரிந்துவிட்ட சூழ்நிலையில் கொள்முதல் விலைக்கும் சாகுபடிச் செலவு மதிப்புக்கும் இடைவெளி மிகவும் குறுகிவிட்டது.

எனினும், விவசாய விலை மதிப்பீட்டுக் குழு பின்வரும் பத்து விலை நிர்ணய ஆக்கக் கூறுகளை, ஜா கமிட்டி பரிந்துரைத்தபடி பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. அவையாவன:

1. சாகுபடிச் செலவு மதிப்பு.

2. பயிர் முதலீடுகளின் விலை மாற்றம்.

3. பயிர் முதலீட்டுப் பொருள் விலைக்கும் உள்ள இணைவீதம்

4. அங்காடி விலைகளின் போக்கு.

5. கேள்வியும் வழங்கலும்

6. சகபயிர் விலைகள்

7. தொழில்துறை செலவு மதிப்பின் மீது ஆதரவு விலை ஏற்படுத்தும் விளைவு.

8. பொதுவான விலைவாசி ஏற்படுத்தும் விளைவு.

9. வாழ்க்கைச் செலவு மீது ஏற்படுத்தும் விளைவு.

10. அகில உலகச் சந்தை விலை.

இவற்றில் முதல் ஐந்து ஆக்கக் கூறுகளுடன் வாழ்க்கைச் செலவு – விவசாயிகளின் வாழ்க்கைச் செலவையும் – ஒட்டிப் பின்பற்றினால் வேளாண் உற்பத்தி மதிப்பு உயர வழி உள்ளது.

சரி. இதில் தமிழக அரசின் பங்கு என்ன? வேளாண்மை, உணவு எல்லாம் அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று கூறி, திமுக அரசு உணவுக் கார்ப்பரேஷனுக்கு இணையாக தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷனைத் தோற்றுவித்து உணவுக் கார்ப்பரேஷன் வரம்பைக் கட்டுப்படுத்தியுள்ளது.

இதே மனஉணர்வை மனத்தில்கொண்டு உயிர்ப்பாதுகாப்புக்கு உறுதுணையாயுள்ள உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு உயர்ந்தபட்சமாக நெல் விலையை ரூ. 1200க்கு உயர்த்தத் தமிழ்நாடு அரசு முன்வருமா?

நெல் கொள்முதலில் ஏகபோகம் செய்வது தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் சப்ளை கார்ப்பரேஷன் என்பதால் நெல் விலையை உயர்த்தும் ஒரு கடமை மாநில அரசுக்கு இல்லையா?

(கட்டுரையாளர்: இயற்கை வேளாண்மை பொறியியல் நிபுணர்)

Posted in abuse, ADMK, Agriculture, Ask, Bid, Biz, Black markets, Bribery, Bribes, Business, Capture, Commodites, Commodity, Consumption, Contracts, Corruption, Council, Deflation, Demand, Distribution, DMK, Economy, Exports, FAO, Farming, Food, Futures, GDP, godowns, Govt, Growth, Hijack, Illegal, Imports, Inflation, Investigation, kickbacks, Law, Loss, markets, Options, Order, organic, P&L, Paddy, PDS, PnL, Policy, Power, Prices, Production, Profit, Reliance, retail, retailers, rice, seize, Shipments, Storage, Supply, Wheat | Leave a Comment »

‘Abhirami’ Ramanathan: Dinathanthi Biosketch – Tamil Movie History – Notable Faces

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(801)
படத்தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்
3 துறைகளில் `அபிராமி’ ராமநாதன் சாதனை

தியேட்டர் அதிபர், திரைப்பட வினியோகஸ்தர், சினிமா தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட `அபிராமி’ ராமநாதன், பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

திரை உலகில் பல முக்கிய பொறுப்புகளை வகிக்கும் `அபிராமி’ ராமநாதனின் சினிமாப் பிரவேசம், எடுத்த எடுப்பில் நிகழ்ந்து விடவில்லை. என்ஜினீயருக்கு படித்து விட்டு தொழில் துறையில் அடியெடுத்து வைத்தவர், அடுத்து தியேட்டர் நிர்வாகத்துக்கு வந்தார். பட வினியோகத் தொழிலை ஆரம்பித்தார். பட அதிபராகவும் ஆனார்.

அபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி. தந்தை சிவலிங்கம் செட்டியார். தாயார் மீனாட்சி ஆச்சி.

திரை உலகுக்கு வந்தது எப்படி என்பது பற்றி அபிராமி ராமநாதன் கூறியதாவது:-

அபிராமி ராமநாதன்

“என் கலை உலக வாழ்க்கையை, அப்பாதான் ஆரம்பித்து வைத்தார். அப்பா 1956-ம் ஆண்டில் பல படங்களுக்கு `பைனான்ஸ்’ செய்து வந்தார். படங்களை வாங்கி வெளியிடும் வினியோகத் துறையிலும் இருந்து வந்தார்.

அப்பா இப்படி வினியோக முறையில் வாங்கி வெளியிட்ட முதல் படம் அப்போது ஜெமினியின் “வஞ்சிக்கோட்டை வாலிபன்” இந்தப் படத்தை சென்னை நகர உரிமைக்கு அப்போதே
2 லட்சம் ரூபாய்க்கு `அவுட் ரேட்’ முறையில் வாங்கினார் அப்பா. ஒரு லிட்டர் பெட்ரோல் 14 பைசாவாக இருந்த நாளில், ஒரு படத்தின் மீது நம்பிக்கை வைத்து 2 லட்ச ரூபாய்க்கு உரிமை வாங்கியிருந்தார் என்றால் தனது தொழிலின் மீது அப்பாவுக்கு எவ்வளவு நம்பிக்கை!

சென்னையில் வெலிங்டன், பிரபாத், சரசுவதி ஆகிய தியேட்டர்களில் படத்தை திரையிட்டார். அப்போதெல்லாம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நாலணா, எட்டணாதான். ஆனால் வெலிங்டன் தியேட்டரில் மட்டும் 21/2 ரூபாய் கட்டணம். அந்த தியேட்டர் “பால்கனி” அமைப்புடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்ததே இதற்குக் காரணம்.

அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே அப்பா வினியோகம் செய்த படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். ரசிகர்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனிப்பேன். இப்போது ஒரு படத்தை பார்த்ததும் அது எப்படி ஓடும் என்று என்னால் கணிக்க முடிகிறது என்றால், அது அன்றே எனக்குள் விழுந்த விதை.

விவேகானந்தா கல்லூரியில் “பி.ï.சி” முடித்து விட்டு, கிண்டியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.

ஓமியோபதி மருத்துவப் படிப்பிலும் சேர்ந்து தேறினேன்.

வருமானம்

பள்ளியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு எழுதுவதில் ஆர்வம் வந்துவிட்டது. பத்தாவது படிக்கும்போது `ஸ்டூடண்ட்’ என்ற மாணவர் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனேன்.

கல்லூரிக்கு வந்த பிறகு ஹாஸ்டலில் தங்கிப் படித்தேன். அப்பா என் கைச்செலவுக்கு மாதம் 30 ரூபாய் அனுப்பி வைப்பார். என் தேவைகளுக்கு இன்னும் சம்பாதிக்க விரும்பியபோது எனக்கு கைகொடுத்தது ஒரு கேமரா. நான் ஏழாவது படித்த நேரத்தில் ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அப்போது சினிமா ஸ்டில் போட்டோ கிராபராக இருந்த `அப்பர்’ என்பவரிடம் கேமரா இயக்க கற்றுக்கொண்டேன்.

இந்த கேமரா அனுபவம் எனக்கு கைகொடுத்தது. கல்லூரி விழாக்களை நான்தான் படம் எடுப்பேன். நண்பர்கள் வீட்டு திருமணங்களில் நான்தான் ஆஸ்தான போட்டோகிராபர்!

இப்படி படிப்போடு, வருமானமும் எனக்கு உயர்ந்து வந்தது. என் சொந்த வருமானத்தில் ஒரு மோட்டார் பைக் வாங்கினேன்.

இதெல்லாம் போதாதென்று நான் இருந்த ஹாஸ்டலிலும் பெட்டிக்கடை வியாபாரம் செய்தேன்! என் ரூம் ஜன்னல் வழியாகத்தான் வியாபாரம். சிகரெட், பாக்கு, பீடா, கடலை மிட்டாய் எல்லாம் கிடைக்கும்!

சின்ன வயதில் அப்பா என்னிடம் “நேர்மையான முறையில் எதை வேண்டுமானாலும் செய்” என்று கூறினார். எனவேதான் போட்டோகிராபர், பெட்டிக்கடை என்று என் `வியாபாரத்தை’ விஸ்தரித்ததில், 1970-ல் என் பேங்க் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயை தொட்டது. படிப்பிலும் நன்றாகவே தேறினேன்.

சொந்தத் தொழில்

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு அப்பா என்னை தொழில் துறையில் பழக்குவிக்க நினைத்தார். கீரனூரில் எங்களுக்கு ஆயில் மில் இருந்தது. அதில் என்னை சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் என்னிடம், “வேலைக்கு போகிறாயா? கம்பெனியில் சேருகிறாயா?” என்று அப்பா கேட்டார்.

சொந்தமாய் தொழில் செய்ய விரும்புவதாகக் கூறினேன்.

உன்னிடம் “முதல் (பணம்) இருக்கிறதா?” என்று கேட்டார்.
“10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது” என்று பெருமையாக கூறினேன்.அப்பா மறுபேச்சு பேசவில்லை. “சரி! செய்” என்றார்.

சென்னை அசோக் நகரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தேன். எனக்கு அனுபவமில்லாத அந்த தொழிலில் சறுக்கல் ஏற்பட, ஆறே மாதத்தில் 10 ஆயிரமும் நஷ்டம்.

விஷயத்தை அப்பாவிடம் சொல்லியாக வேண்டுமே. சொன்னேன்.

“பூரா பணமும் போய்விட்டதா?” என்று அப்பா கேட்டார்.

“ஆமாம்” என்று நான் தலையசைத்ததும், “தொழிலை ஒழுங்காக கற்றுக்கொள்” என்று சொல்லி விட்டு கீரனூரில் உள்ள எங்கள் ஆயில் மில்லுக்கு என்னை அனுப்பினார். அங்கு ஒரு வருடம் இருந்தேன். சமையல்காரர்கூட கிடையாது. என் தேவைகளை நானே கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அப்பா கண்டிப்பாக இருந்தார்.

சோதனையில் தேறிவிட்டதால், அடுத்தபடியாக ஆந்திராவில் இருந்த எங்கள் காட்டன் மில்லுக்கு என்னை அப்பா அனுப்பி வைத்தார். அங்கே ஜுனியர் என்ஜினீயர் என்ற நிலையில் ஆரம்பித்து, புளோர் என்ஜினீயர், புளோர் சூப்பர்வைசர், உதவி மானேஜர், மானேஜர், டைரக்டர் என்று படிப்படியாக உயர்ந்தேன்.

`அபிராமி’ உதயம்

இந்த நேரத்தில்தான் அப்பா சென்னை புரசைவாக்கத்தில் ஒரு இடத்தை வாங்கி, அங்கே தியேட்டர் கட்ட முடிவு செய்தார். என்னை அழைத்த அப்பா, “நீ என்ஜினீயருக்குத்தானே படிச்சே. நீயே தியேட்டர் வேலையை கவனி. சைட் என்ஜினீயரா இரு” என்று கூறினார். அதனால், புரசைவாக்கத்தில் “அபிராமி”, “பாலஅபிராமி” என 2 தியேட்டர்களைக் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன்.

1974-ல் ஆரம்பித்த தியேட்டர் கட்டும் பணி 1976-ல் முடிந்தது. 1976 ஜுலை 2-ந்தேதி “அபிராமி”யை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார்.

Posted in Abhirami, Abirami, Biosketch, Biz, Cinema, Dinathanthi, Distributor, Enetrtainment, Faces, Films, History, Industry, Movie, Movies, Producer, Rajni, Ramanadhan, Ramanathan, Sivaji, Theaters, Theatres | Leave a Comment »

Backward Region Grant Fund: Appraisal of Panchayat Raj by Mani shankar Iyer – Failure of local governments

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

மக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி?

க. பழனித்துரை

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

பணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.

வாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை,

  • திருவண்ணாமலை,
  • கடலூர்,
  • விழுப்புரம்,
  • திண்டுக்கல்,
  • நாகப்பட்டினம்,
  • சிவகங்கை

ஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.
வட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இப்படி மத்திய அரசு தரும் நிதியை,

  • பஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,
  • இந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,
  • பாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,
  • புதிய கட்டடம் கட்டுதல்,
  • பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,
  • விளையாட்டு மேம்பாட்டிற்கு வசதிகள்,
  • கழிப்பறை,
  • சுற்றுச்சுவர்,
  • மேஜை, நாற்காலி வாங்குதல்
  • மதிய உணவு சமையலறைக் கட்டடம்

உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.
மத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.

இந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.

பின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.

கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.

ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.

அரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.

ஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.

இந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.

மாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.

—————————————————————————————————————————————————

ஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன?

 எம். ரமேஷ்

ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.
இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.
அந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.
10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.
இலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.
இதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.
தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.
மாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.
2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.
22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.
அனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.
தமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.
இதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.
அதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.
முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.

ஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.

எம். ரமேஷ்

Posted in 5, Administration, ADMK, Allocation, Appraisal, backward, Biz, BPO, Budget, Buildings, Caste, Census, Center, City, Community, Computer, Control, Council, Development, DMK, Economy, Education, Expenses, Exports, family, Finance, Fund, GDP, Governments, Govt, Grant, Growth, Homes, Housing, Hygiene, Improvements, Inaction, Income, Info, InfoTech, infrastructure, investments, IT, ITIS, JJ, Kalainjar, Karunanidhi, Kids, KK, local, Mani, Mani shankar, ManiShankar, Measures, Metrics, Money, NGO, Outsourcing, Panchayat, Panchayat Raj, Panchayath, parliament, Planning, Plans, Play, Playgrounds, Policy, Poor, Population, Progress, Refer, Reference, Region, Residences, Resources, Restrooms, Rich, Rural, Sanitary, Schools, Sector, Services, Software, Spend, Spending, Sports, Stalin, State, Statistics, Statz, Students, TamilNadu, Teach, Teachers, Technology, Telecom, TN, Toilets, Villages, Zones | Leave a Comment »

Chennai Ranganathan Street – Infrastructure, Safety & Traffic issues due to Illegal Construction

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

விதிமுறை மீறல்கள்!

ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.

இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?

உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?

உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?

இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?

  • கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
  • உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
  • ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
  • ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்

ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.

இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.

Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »

When Sparklers Light Up Diwali Sky – Sivakasi Fireworks & Manual Labor: Need for the automation in Industrialization

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2007

பட்டாசுத் தயாரிப்பில் இயந்திரமயம் காலத்தின் கட்டாயம்

சிவகாசி, நவ. 5: பட்டாசுத் தயாரிப்புத் தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் இழப்பைத் தடுக்க அந்தத் தொழிலில் இயந்திரமயமாக்குவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முழுவதும் தனிநபர்களின் முதலீடுதான் உண்டு. சிறுசிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வர்த்தகத்தின் அளவு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

சிவகாசியில் தொடக்க காலத்தில் கலர் மத்தாப்பு தயாரிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தொழில் வளர்ச்சி அடைந்து இப்போது ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

சுமார் 600-க்கும் மேல் பட்டாசு ஆலைகள் இங்கு உள்ளன. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1.30 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த 25 சதவீத தொழிலாளர்கள் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொழிலில் சுமார் 70 சதவீதம் பெண்கள் பணிபுரிகின்றனர். திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஆலைகளில் 18 வயது முதல் 22 வயது வரை உள்ள பெண்களை பணியில் அமர்த்தி 3 ஆண்டு கழித்து ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுப்பதால் இங்கிருந்து பலர் அங்கு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர் பற்றாக்குறையால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு பட்டாசு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையும் அதிகரித்துவிட்டது.

பட்டாசு முழுக்க கையினால் தயாரிக்கப்படுகிறது. தீப்பெட்டித் தொழிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இது போன்ற தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து பல ஆலைகள் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி பெருகியதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. எனவே இப்போது தொழில் நலிவடைவதைத் தடுக்க பட்டாசு ஆலையில் இயந்திரமயமாக்கல் காலத்தின் கட்டாயம் என்றாகிவிட்டது.

சரவெடி பின்னுவதற்கு தொழிலாளர் கிடைக்காததால் இப்போது சரவெடி பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. சீனாவில் பட்டாசு தயாரிப்பில் இயந்திரம் புகுத்தப்பட்டு தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சீனத் தொழில்நுட்பத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே போல பட்டாசு ஆலைகளிலும் ஒரு சில பணிகளுக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தினால் தொழில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் திப்பெட்டி தொழிலாளர் சிஐடியு சங்கத் தலைவர் ஜே.லாசர் கூறியது:

பல தொழிலாளர்கள் வேறுபணிக்கு சென்றுவிட்டனர் என்பது உண்மைதான். பட்டாசு தொழிலாளர்களுக்கு கூலி குறைவாகக் கிடைக்கிறது. ஆண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ. 40, பெண்களுக்கு ரூ.30 தான் கிடைக்கிறது.

பட்டாசு தயாரிப்பில் ஒப்பந்தமுறை உள்ளது. பணிப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே தொழிலாளர் தங்கள் தேவையை நிறைவேற்றும் பணிக்கு செல்லத் தொடங்கிவிட்டனர் என்றார்.

பட்டாசு ஆலை அதிபர் சீனிவாசன் கூறியது:

தீப்பெட்டி ஆலைகளில் இயந்திரம் வைக்க சட்டதிட்டங்கள் கடுமையாக இல்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.

எனவே நினைத்தவுடன் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த இயந்திரத்தை அமைக்க ஆலையின் உள்கட்டமைப்பை மாற்ற வேண்டும். இது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு முடியாத காரியம். எனினும் படிப்படியாக இயந்திரமயமாக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.

Posted in Activists, Automation, Ban, Biz, Business, Child, Compensation, Crackers, Deepavali, Deepavalli, Diwali, Economy, employees, Factory, Fire works, Fireworks, Govt, Hours, Industrialization, Industry, Inhumane, Jobs, Labor, rules, Sector, Sivagasi, Sivakasi, Sparklers, Work, workers | Leave a Comment »

State of Job Growth in India – Employment & Business Opportunities

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2007

வேலைவாய்ப்பு: துளிர் விடும் நம்பிக்கை!

எஸ். கோபாலகிருஷ்ணன்


இந்தியா அடைந்து வரும் அபரிமிதமான வளர்ச்சி ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை. ஏற்கெனவே பண வசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும், படித்த, நகர்ப்புற இளைஞர்கள் நல்ல வேலைகளைத் தேடிக் கொள்வதற்குமே இந்த வளர்ச்சி உதவுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவில்லை என்கிற நியாயமான கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ச.ந.ந.ஞ. எனப்படும் “”தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு” வேலைவாய்ப்புகள் குறித்து அண்மையில் வெளியிட்டுள்ள தனது 61வது சுற்று ஆய்வு முடிவுகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன.

1993ம் ஆண்டுமுதல் 1999ம் ஆண்டுவரை, இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 0.98 சதவிகிதமாக அதிகரித்து வந்த நிலை இப்போது மறைந்துவிட்டது. மாறாக, 1999 – 2000 முதல் 2004 – 05 வரையிலான காலத்தில், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் 2.89 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை.

இங்கு நாம் சுமார் 24 ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தோமேயானால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கத்தையும் அதற்கான காரணங்களையும் அறியலாம்.

முதலாவதாக, 1983 முதல் 1993 – 94 வரையிலான காலகட்டத்தை எடுத்துக் கொள்வோம். அப்போது, என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வின்படி வேலைவாய்ப்பு ஆண்டுதோறும் 2 சதவீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. பொதுமக்களின் கருத்துப்படியும், அந்த காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடியதாகச் சொல்ல முடியாது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே இலாகா உள்ளிட்ட பல அரசுசார்ந்த துறைகள் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல், சிறுதொழில்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து ஊக்குவிப்பு கிடைத்து வந்தது. வங்கிகளும் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்குவதில் முனைப்பு காட்டின. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 40 சதவிகிதம் சிறுதொழில்கள் மூலம் கிடைத்தன. அதேபோல், விவசாயமும் குறிப்பாக, சிறு விவசாயிகள், முன் உரிமை அடிப்படையில் ஓர் அளவு கடனுதவி பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே, தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின்படி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதமாக அப்போது இருந்தது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

இரண்டாவதாக, 1993 – 94 முதல் 1999 – 2000 வரையிலான காலத்தில் என்ன நேர்ந்தது? வேலைவாய்ப்பு ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக, அதாவது 0.98 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்தது. 1992-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. அப்போதுதான், பொருளாதாரத் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் அறிமுகமாயின. சிறு தொழில்களுக்கும், விவசாயத்துக்கும் அரசு அளித்து வந்த ஊக்குவிப்பும் உதவிகளும் சுணக்கம் அடைந்தன. எங்கும், எதிலும் கணினிமயம் என்ற நிலை ஏற்படத் தொடங்கியது. ஆனால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொய்வடைந்தது. இதை உறுதி செய்வதாகவே தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை தெரிவித்தபடி வேலைவாய்ப்பு வளர்ச்சி 2 சதவிகிதத்திலிருந்து வெறும் 0.98 சதவிகிதமாகச் சரிந்தது.

மூன்றாவதாக, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, 1999 – 2000 முதல் 2004 – 05 காலத்தில், முந்தைய சரிவு சரிசெய்யப்பட்டு, 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, உண்மையிலேயே ஒரு மைல் கல் வளர்ச்சி என்பது தெளிவு. இந்த ஆறு ஆண்டு காலத்தில் மக்கள்தொகையில், வேலைக்குப் போகக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கை, முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. அப்படி அதிகரித்த பின்னரும், வேலைவாய்ப்பு வளர்ச்சி முந்தைய 0.98 சதவிகிதத்திலிருந்து 2.89 சதவிகிதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது ஓரளவு ஆறுதல் தரக்கூடிய ஒன்று என்றாலும், கவலை அளிக்கும் அம்சங்களும் உள்ளன. துறைவாரியாகப் பார்க்கும்போது, விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி, 59.8 சதவிகிதத்திலிருந்து 58.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பதே அது.

அதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் 3 கோடி பேருக்கு விவசாயத்துறையில் புதிய வேலைகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை புதிதாக அதிகரித்துள்ள வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையில் சரி பாதி எனலாம்.

நகர்ப்புறம், கிராமப்புறம் என்னும் வித்தியாசம் இல்லாமல், பரவலான அடிப்படையில், சுயவேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டவர்களின் எண்ணிக்கை முன்எப்போதையும்விட கணிசமாக அதிகரித்துள்ளது. இப்படி சுயவேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டுள்ளவர்கள் 26 கோடி பேர்.

அதேநேரம், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில், வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும், போதிய ஊதியம் மற்றும் குறைந்தபட்ச வசதிகள் கிடைக்கவில்லை என்பது வெளிப்படை.

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் பசிக்கொடுமையைக் குறைத்திட இந்தியா செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி அமைப்பு தயாரிக்கும் “உலகளாவிய பசிக்கொடுமை குறியீடு’ (எகஞஆஅக ஏமசஎஉத ஐசஈஉல) என்னும் தரப்பட்டியல் அடங்கிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சர்வதேச அமைப்பு, சில தினங்களுக்குமுன், ஒரு தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது, பசிக்கொடுமையால் வாடும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்திட முயலும் 118 நாடுகளைக் கொண்ட பட்டியல் அது. அதில், இந்தியா 94வது இடத்தில்தான் உள்ளது என்பது வேதனை தரும் விஷயம். மிகவும் பின்தங்கிய நாடாகிய எத்தியோப்பியாகூட நம்மைவிட முன்னேறிய நிலையில், 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 88வது இடத்திலும் சீனா 47வது இடத்திலும் உள்ளன. நாம் தினமும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

நமது வளர்ச்சி வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சியாக மாறுவது எப்போது? இதற்கு விடையளிக்கும்வகையில், மிகவும் மதிக்கப்படும் பொருளாதார நிபுணரும், பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்ட குழுவின் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன் அண்மையில் எழுதியுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

1999 – 2000 முதல் 2004 – 05 காலகட்டத்தில் என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வில் காணப்படும், அதே சாதகமான அம்சங்கள் நீடிக்கும்பட்சத்தில், ஜி.டி.பி. 9.1 சதவிகிதமாகத் தொடர்ந்து இருக்குமேயானால், விவசாயத்துறை வளர்ச்சி சற்று குறைந்தால்கூட, 2009ம் ஆண்டு முடிவிற்குள், வேலைவாய்ப்பு வளர்ச்சி நமது முழு தேவையை பூர்த்தி செய்துவிடும் என்கிறார்.

ஒருவேளை, இது நிறைவேறாதபட்சத்தில் டாக்டர் ரங்கராஜன் முன்வைக்கும் இன்னொரு சாத்தியக்கூறு வருமாறு:

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 8.5 சதவிகிதமாகவே இருந்து, விவசாய வளர்ச்சி வீதம் 2 சதவிகிதமாக மட்டுமே இருக்குமானால், வேலைவாய்ப்பு வளர்ச்சி நாட்டின் முழுத்தேவையையும் பூர்த்தி செய்வதற்கு 2017ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்கிறார்.

ஆக ஊரக மேம்பாட்டுக்கு திறவுகோல் விவசாய வளர்ச்சியே. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அணுகுமுறை ஆவணத்தில் (Approach Paper) விவசாய மேம்பாட்டுக்கும், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்துக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. காலம் தாழ்ந்தேனும், இந்த அவசியத்தை அரசு உணர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏழ்மை மற்றும் பசியை ஒழிப்பதற்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டும் போதாது. அந்த வேலைகளுக்கான – அதிலும் குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உருவாக்கப்படும் வேலைகளுக்கான – ஊதியம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

Posted in Biz, Business, City, Commerce, Compensation, Divide, Economy, employee, Employers, Employment, GDP, Growth, Industry, Jobs, Loans, Metro, Poor, Rich, Rural, Self-employed, Small Business, unemployment, Village, Villages | Leave a Comment »

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »