Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘candidates’ Category

Election Mela in Karnataka: Tracking Poll Expenses and Party Expenditure

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

கர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு! * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

மூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.

தரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.

குமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.

பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.

நேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.

கர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.

கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.

22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.

பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

Posted in Accord, Allegations, Alliance, Balance, Bangalore, Bengaluru, BJP, candidates, Clean, CM, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Coomarasami, Coomarasamy, Corruption, Crores, deal, Devegowda, EC, Economy, Election, Elections, Expenditure, Expenses, Forecasting, forecasts, Gowda, Income, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JD, Karnataka, kickbacks, Kumarasami, Kumarasamy, Lakhs, Mela, Minister, MLA, MLC, MP, P&L, parliament, Party, Politics, Poll, Polls, Profit, Projections, Rich | 1 Comment »

Tamil Nadu Cooperative Elections – Malpractices & Power Abuse (Savithri Kannan)

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

கொள்ளையடிப்பவர்களின் கூடாரமா கூட்டுறவுகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே :: சாவித்திரி கண்ணன்

குமுதம் 

25.07.07  தொடர்கள்   

வேறு வழியின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன கூட்டுறவு சங்கத் தேர்தல்கள்.

ஆளும் கட்சியினரைத் தவிர, வேறு யாரும் மனுதாக்கல் செய்ய முடியாமை, மீறி போட்டியிட்டால் அடிதடி, வெட்டுக்குத்து, தேர்தல் நடந்த ஒரு சில இடங்களிலும் ஓட்டுச் சீட்டுகளை கிழித்தெறிந்தது, ஓட்டுப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியது, வாக்கு எண்ணிக்கையில் தகராறு என ஏக களேபரம்.

இரண்டு மாத காலத் தேர்தல் ஏற்பாடுகள், கோடிக்கணக்கான பணம், நேரம், உழைப்பு அத்தனையும் விரயமானது.

கோடிகோடியாய் பணம் ஈட்டிவிட்ட கட்சித் தலைமைகள் எந்த வகையிலாவது கட்சிக்காரர்களுக்குச் சம்பாதிக்கும் வழியை சாத்தியப்படுத்தாவிட்டால் கட்சி நடத்த முடியாதென்று உருவாகிவிட்ட சூழலில், தள்ளிப்போடப்பட்ட தேர்தல் என்பது தாமதப்படும் அநீதியே அன்றி தடுக்கப்பட்ட அநீதியாகிவிடாது.

‘‘சுயக்கட்டுப்பாடு இல்லாத தன்னாட்சியையும், சுதந்திரத்தையும் நினைத்தும் பார்க்க முடியாது’’ என்றார் மகாத்மா காந்தி. நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இன்றைய அரசியல்.

கூட்டுறவு என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ, இடத்திலோ வாழும் மக்கள் ஒன்றாக இணைந்து தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களாலேயே அமைத்துக் கொள்ளப்படுவதே கூட்டுறவாகும். இங்கே அரசியல் கட்சிகளுக்கோ, அரசாங்கத்திற்கோ வேலையே இல்லை.

1904ல் கூட்டுறவு அமைப்புகள் உதயமானபோது பிரிட்டிஷ் அரசு, ‘‘அரசாங்கத்தின் அனுசரணை மற்றும் உதவிகள் இருக்குமே தவிர, தலையீடு இருக்காது’’ என்று தெளிவுபடுத்தியது.

கூட்டுறவு என்பது முழுக்க, முழுக்க மக்களின் தன்னிச்சையான கூட்டிணைந்த செயல்பாடு. இதில் அரசு தலையிடாமல் ஆதரவு அளித்தாலே போதுமானது. அது நாட்டை அகில உலக வல்லரசாக்கும் என்பதை விவசாயக் கூட்டுப் பண்ணைகளின் விஸ்வரூப வளர்ச்சியில் நிரூபித்தது சோவியத் யூனியன்! அப்படிப்பட்ட கூட்டுறவைத்தான் தமிழ்நாட்டில் தழைத்தோங்க விடாமல் கழக ஆட்சிகள் மாறி மாறி களங்கப்படுத்திவிட்டன.

கூட்டுறவுத் துறை வளர்ச்சி என்பது சோசலிஷ சமுதாயத்தின் அடித்தளம் என்பதை அறிந்திருந்த ஜவஹர்லால் நேரு, அரசு மற்றும் அரசியல் தலையீடுகளை அடியோடு ஒழித்து, கூட்டுறவு அமைப்புகளை கோயிலாகப் புனிதப்படுத்தினார். இதனால்தான் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி கூட்டுறவுத் துறையின் பொற்காலமாகப் பொலிந்தது. அன்றைய தினம் தமிழக கூட்டுறவு அமைப்புகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன் மாதிரியாய் விளங்கின.

1967ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., கூட்டுறவு அமைப்புகளின் ஆணி வேரையே அசைக்கத் துணிந்தது.

1976ல் கூட்டுறவு அமைப்புகளைக் கலைத்தார் கருணாநிதி. அப்போது கலைத்த கூட்டுறவு அமைப்புகளை இன்றுவரை தட்டியெழுப்ப முடியவில்லை.

‘கூட்டுறவு அமைப்புகள் கட்சிக்காரர்களின் வேட்டைக் களமாக மாறலாகாது’ என்ற பயத்தில் எம்.ஜி.ஆர்., அதிகாரிகளைக் கொண்ட கூட்டுறவுகளை நடத்தினார். இதனால் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக அதிகாரிகள் ஆட்டம் போட்ட அவலம் அரங்கேறியது! ஜெயலலிதா ஆட்சியிலும் இந்தச் சீர்கேடுகளே தொடர்ந்தது. இவையாவும் வெளியார் தலையீடுகள் கூட்டுறவுக்கு விரும்பத்தக்கவையல்ல என்பதை அப்பட்டமாய் நிரூபித்தன.

89ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ‘அதிகாரிகள் பிடியிலிருந்து கூட்டுறவை விடுவித்து, அதற்கு ஆக்ஸிஜன் ஏற்றி உயிர்ப்பிக்கிறேன்’ எனக் கூட்டுறவுத் தேர்தல்களை அறிவித்தார். கூட்டுறவு அமைப்புகளைக் கொள்ளையடிக்கத் துடித்த கட்சிக்காரர்களின் அளவற்ற பசி அந்தத் தேர்தலையும் அடிதடியில் ஆழ்த்தி அரைகுறையோடு நிறுத்தியது.

1996ல் மீண்டும் கருணாநிதி ஆட்சியில் கூட்டுறவுத் தேர்தல்கள் ரத்தக்களரிகளோடு அரங்கேறின. உடன்பிறப்புகள் உறிஞ்சிக் கொழுக்கும் வேட்டைக்களமாகின கூட்டுறவுகள்.

ஜெயலலிதா அணுகுமுறை, வெளிப்படை சர்வாதிகாரமாயிருந்தது என்றால், கருணாநிதி அணுகு முறை,ஜனநாயகத்தின் பெயரிலான சர்வாதிகாரமாக உணரப்பட்டது.

இதனால் இந்திய அளவில் அரசு மற்றும் அரசியல் தலையீட்டிலிருந்து கூட்டுறவை விடுவிக்கும் சிந்தனைகள் வலுப்பெற்றன. 1987ல் அர்த்தநாரீஸ்வரன் கமிட்டியும், 1990ல் பிரேம்பிரகாஷ் கமிட்டியும் கூட்டுறவுத் துறையை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கக் கோரின. இதன்படி 1991லேயே கூட்டுறவு அமைப்புகளுக்கான மாதிரி சட்டம் வடிவமைக்கப்பட்டது. இன்று ஆந்திரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் நவீன கூட்டுறவு சட்டத்தின்படி கூட்டுறவு அமைப்புகள் சிறப் பாகச் செயல்படுகின்றன. மத்திய அரசும் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்றவேண்டும் என்றது. இதை அமல்படுத்தினால் கட்சிக்காரர்களின் கை கட்டப்பட்டுவிடும் என்பதால், கருணாநிதியும் இதை இன்றுவரை அமல்படுத்த மறுக்கிறார். வற்புறுத்த வேண்டிய காங்கிரஸோ வாய்மூடி மௌனிக்கிறது. இனியும் அரசியல்வாதிகளின் அதிகார எல்லைகளை வரையறுக்காவிட்டால், ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றுக்குமே சாவு மணியடிக்கப்பட்டுவிடும். ஆகவே, மத்திய அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தும் தற்சார்பு கூட்டுறவு சட்டம் என்பது தமிழ்நாட்டிற்குத் தவிர்க்க முடியாததாகும்.

நடிப்புச் சுதேசிகள்!

கூட்டுறவுக்கு ஐந்து கட்ட தேர்தல்களை அறிவித்த முதலமைச்சர் கருணாநிதி, ‘‘கூட்டுறவுத் தேர்தல்கள் அரசியல் அடிப்படையில் நடைபெறக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு’’ என்றவர் அடுத்த வாக்கியத்திலேயே, ‘‘எனவே தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை ஜனநாயக மரபுப்படி தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி போட்டியிடுவது நல்லது’’ என்றார்.

அந்தந்த மாவட்டத்து அமைச்சர்கள் அதிகாரிகளை, ‘‘சொன்னபடி கேளு, இல்லாவிட்டால் விடுமுறை போட்டு வீட்டுக்குப் போ’’ என்று மிரட்டிய சம்பவங்கள் நடந்தேறின. இதனால் தி.மு.க.வினரின் விண்ணப்ப மனு மட்டுமே ஏற்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட 1921 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களில், 1,338 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து சுமார் 10,000 பேர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தினசரிகளில், ‘தகுதி படைத்த வேட்பாளருக்கு வேட்புமனு கிடைக்கவில்லை என முதல்வர் கவனத்திற்கு வந்துள்ளது. அப்படிக் கொடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அரசே விளம்பரம் வெளியிட்டது. 90 சதவிகித இடங்களில் அதிகாரிகள் அராஜகமாக நடந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஜனநாயகத்தின் பெயராலேயே ஜனநாயகத்தைக் கொல்லும் கலை, தி.மு.க.வினரைத் தவிர வேறு யாருக்கு வரும்?.

Posted in abuse, Analysis, Backgrounders, candidates, Coop, Cooperative, DMK, Elections, Electorate, Justice, Kumudam, Kumudham, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malpractices, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Op-Ed, Order, Polls, Power, Savithri Kannan, solutions, Tamil Nadu, voters | Leave a Comment »

MBBS, BDS merit list released – Details, Statistics, Admission results

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு “கட்-ஆப் மார்க்’ 197: மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200

சென்னை, ஜூன் 28 : தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு

‘கட்-ஆஃப் மார்க்’ விவரம்:

  1. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான “கட்-ஆஃப் மார்க்’ 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 194.50;
  3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 191.75;
  4. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – 187.25;
  5. பழங்குடி வகுப்பினர் – 179.

மாவட்டங்களுக்கே சிறப்பிடம்:

ராசிபுரம், நாமக்கல், ஓசூர், கோவை, மார்த்தாண்டம் (கன்னியாகுமரி), பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கி முதல் ஏழு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஏழு பேரும் எம்.பி.பி.எஸ். ரேங்க்கை நிர்ணயம் செய்யும் இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200-க்கு 200 பெற்றவர்கள்.

14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்டுக் கூறியதாவது:-

1,552 எம்.பி.பி.எஸ். இடங்கள்:

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேலே சொன்ன மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 154 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,552 இடங்களுக்கு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி வழக்குத் தொடர்ந்துள்ளதால், அந்தக் கல்லூரியில் உள்ள 98 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்த ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

பி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு):

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு 326 பி.டி.எஸ். இடங்களுக்கும் சேர்த்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்”” என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.

———————————————————————————————–

2004-ல் பிளஸ் 2; 2007-ல் எம்.பி.பி.எஸ்.: பொள்ளாச்சி மாணவர் சாதனை

பொள்ளாச்சி, ஜூன் 28: நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக, தான் கனவு கண்டபடி மூன்று ஆண்டுகள் கழித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்பிடம் பெற்று நுழைந்துள்ளார் பொள்ளாச்சி மாணவர் ஜி.கே. அஸ்வின்குமார்.

பிளஸ் 2 முடித்த பிறகு பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதில் சேராமல் 3 ஆண்டுகள் காத்திருந்தார் இவர்.

சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று 7-வது சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது மகன் ஜி.கே.அஸ்வின்குமார். கடந்த 2003-04-ல் பொள்ளாச்சியில் உள்ள பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.

அப்போது அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1169.

சம்ஸ்கிருதம் 196, ஆங்கிலம் 183, கணிதம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 200. ஆக, மருத்துவ படிப்புக்கான கூட்டு மதிப்பெண்ணாக 200-ஐ வைத்திருந்தார்.

இதில் கடந்த 2 முறை நுழைவுத் தேர்வு எழுதியதில் ஒருமுறை பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது.

ஆனால் அஸ்வின்குமார் அதில் சேரவில்லை. ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதவில்லை.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்தாகி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் அஸ்வின்குமார் தமிழக அளவில் 7-வது ரேங்க் பெற்றுள்ளார். மருத்துவக் கல்வியில் முன்னோடியாக விளங்கும் சென்னை மருத்துவக் கல்லூரியை கவுன்சலிங்கில் அவர் தேர்வு செய்யும் நிலையில் இடம் கிடைக்கும்.

மருத்துவப் படிப்பு முடித்து இதய அறுவைச் சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவராவதுதான் தனது எதிர்காலத்திட்டம் என்று அஸ்வின்குமார் தெரிவித்தார்.

வயது வரம்பு கிடையாது:

நுழைவுத் தேர்வு ரத்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்பதால் அஸ்வின்குமார் போன்று கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக கூட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த ஆண்டு பலன் அடைந்துள்ளனர்.

இத்தகைய மாணவர்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அதிகமாக எடுக்காததால் கடந்த ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியவில்லை.

எம்.பி.பி.எஸ்.-ஐப் போன்று பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. எனவே நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பலர் பி.இ. ரேங்க் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உண்டு எனக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

———————————————————————————————–
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்: பயன் தராத ரேண்டம் எண்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் மூலம் அளிக்கப்பட்ட சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) எந்தப் பயனையும் அளிக்கவில்லை.

நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டதால், மாணவர் அட்மிஷனுக்கு புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களிலும் சமமான மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது பிறந்த தேதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், கம்ப்யூட்டர் சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்காக, விண்ணப்பித்தோருக்கு சில வாரங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மூலம் சிறப்பு எண் தரப்பட்டது. இவர்களில் யாருடைய எண் பின்னால் வருகிறதோ அவருக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசு அறிவித்திருந்தது.

“”இரு மாணவர்கள் மட்டுமே சமமான மதிப்பெண்ணைப் பெற்றிந்தனர். எனினும், அவர்கள் இருவரும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்ததால், அரசுக் கல்லூரியில் அவர்களுக்குத் தாராளமாக இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் ரேண்டம் எண் அடிப்படையில் அவர்களை மதிப்பிடத் தேவையே ஏற்படவில்லை” என்று மருத்துவக் கல்வி வட்டாரம் தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் 14 அரசுக் கல்லூரிகளிலும், 3 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மொத்தம் 1,552 இடங்கள் உள்ளன.

———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 பேர்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியலில் கூட்டு மதிப்பெண் 200-க்கும் 199-க்கும் இடையே 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மருத்துவப் படிப்பில் சேர

  • 200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • இதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.
  • ஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி எஸ். ரம்யாவின் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 198.25. எனவே அவர் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197 என்பதால், கூட்டு மதிப்பெண் 196.5, 196, 195 என வாங்கியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : முதல் 7 ரேங்க் பெற்றவர்கள்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.

ஒரு சென்னை மாணவர்கூட 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிறப்பிடத்தைப் பெறவில்லை.

ரேங்க் வாரியாக சிறப்பிடம் பெற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளி குறித்த விவரம்:

1. பி. பிரவீண்குமார், எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

2. ஆர். நித்யானந்தன், குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்;

3. எம். கார்த்திகேயன், மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்;

4. எச். மீனா, அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வெங்கிடாபுரம், கோவை;

5. சி. ஜெரீன் சேகர், குட் ஷெபர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி;

6. எஸ். தாசீன் நிலோஃபர், எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

7. ஜி.கே. அஸ்வின் குமார் (படம்), பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி.
———————————————————————————————–

Posted in Admission, backward, BC, BDS, candidates, Caste, Chennai, Colleges, Competition, Cut-off, Cutoff, Dental, Dentist, Details, Doctor, Education, eligibility, Evaluation, FC, Health, Healthcare, Info, IRT, Madras, Marks, MBBS, MD, medical, Medicine, Merit, MMC, Moogambigai, Moogambikai, Mookambigai, Mookambikai, OBC, OC, Perunthurai, Porur, PSG, Ramachandra, Random, Rasipuram, Reservation, Results, SC, selection, self-financing, ST, Statistics, Statz, Students, Study, University | Leave a Comment »

The Rich, The Filthy Rich, The Politicians – Justice, Education, Electorate

Posted by Snapjudge மேல் மே 10, 2007

மாம்பழக்கூடையும் அரசியல் பீடையும்!

க.ப. அறவாணன்

இப்போது மாம்பழக் காலம்.

கூடை நிறைய மாம்பழங்கள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் நிறைந்த சுவை தருபவை. மாம்பழ வியாபாரி, கூடையிலுள்ள மாம்பழம் ஒவ்வொன்றையும் எடுத்துத் துடைத்து அக்கூடையிலேயே வைக்கிறார்.

நடுவே, ஒரு மாம்பழம் சிறிதாக அழுகத் தொடங்கி இருக்கிறது. அழுகல் வாடையும், மூக்கைத் தொடத் தொடங்கி விட்டது. நன்கு துடைத்துக் கூடையின் நடுவேயே வைத்து மேலும், கீழுமாக ஏனைய நல்ல மாம்பழங்களை அடுக்கிக் கூடையோடு அப்படியே விற்றுவிடலாம் அல்லது அழுகத் தொடங்கிய மாம்பழத்தை அகற்றி வீசி வெளியே எறிந்துவிட்டு, புதிய நல்ல மாம்பழமொன்றைக் கூடைக்குள் வைத்து விற்று விடலாம்.

நல்ல வியாபாரி இரண்டாவதையே செய்கிறார். காரணம், அழுகிய ஒரு மாம்பழம், ஓரிரு நாளில், தானும் முழுமையாக அழுகிக் கெடுவதுடன் ஏனைய மாம்பழங்களையும் அழுக வைத்துவிடும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் அழுகிய மாம்பழம் என்று அறிந்தவுடனேயே அதனை மறைக்காமல் எடுத்து எறிந்துவிடுகிறார்.

இப்படித்தான் நாமும் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யத் தவறியதால் கூடை மாம்பழங்களே அழுகத் தொடங்கிவிட்டன. நாற்றம் மூக்கைத் துளைக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மூன்று தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்பனவற்றுள் நாடாளுமன்ற அரசியல் அழுகத் தொடங்கிவிட்டது. அதனை மறைத்தோம். பொருள்படுத்தவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நம்பினோம். ஆனால் நடந்தது என்ன?

நாடாளுமன்ற அரசியலைத் தொடர்ந்து நிர்வாகமும், அழுகத் தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து நீதித்துறையும் அழுகத் தொடங்கிவிட்டது. இன்று இந்தியாவின் மெய்யான நிலை இதுதான்.

நம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் குற்றவாளிகள் (கிரிமினல்கள்) என்பது வேதனைக்குரிய விஷயம்.

உ.பி., சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாற்பது சதவீதம் பேர் குற்றவாளிகள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எந்த இடம் தூய்மையாக இருக்க வேண்டுமோ, அந்த இடம் தூய்மைக்கேடாக இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு மாம்பழங்கள் அழுகிவிட்டால், ஏனைய மாம்பழங்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே வேண்டாம்.

நம் நாட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நிர்வாக முறை பற்றி நிறைய வெளிச்சத்திற்கு வராத செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. அரசு நிர்வாகப் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்பு ஓய்வுபெறும் வயதுவரை தன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது – இடம் மாற்றம் தவிர! என்று அறிந்துகொண்ட நம் அதிகாரிகள் பதவிக்காலத்தில் தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலும், சாதிச்சங்கத்தை அமைப்பதிலும், பதவியில் உள்ள கட்சியினருடன் ஒட்டிக் கொள்வதிலும் இன்ன பிறவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி நாடு முழுக்க வழக்குகள் உள்ளன.

கடந்த அறுபது ஆண்டுகளில் இந்திய நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்பதை விவாதிக்க வேண்டியதே இல்லை. அது வெளிப்படையானது. ஏழை ஒருவன் விண்ணப்பம் போட்டால் அந்த மனு எத்தனை மேசைக்கு ஆமைபோல் ஊர்ந்துசென்று அடைய வேண்டிய இடத்தை அடைய முடியாமல் தவிக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். ஆனால் இதை வெளிப்படையாக தெரிவிக்காதவர்களே மிகுதி என்பதுதான் உண்மை. வெளியே சொல்லிப் புலம்ப முடியாத அளவிற்கு நம் அதிகாரவர்க்க முறையும், சிவப்புநாடா முறையும் கடந்த அறுபது ஆண்டுகளில் கோப்புக் கோபுரமாகத் தடித்து விட்டன. அரசு நிர்வாகம் அனைத்தும் ஒருவழிப்பாதை என்பதால் நியாயத்தை ஒருவர் பெறவே முடியாது.

வெளிப்படை சட்டம் வந்துவிட்டாலும், எல்லாராலும் வழக்கு மன்றத்திற்குச் செல்ல முடியுமா? படிக்காதவர்கள் மிகுந்த நாட்டில், பணமும் செல்வாக்கும் இல்லாத ஏழை நாட்டில்!

இங்கேதான் நம் நீதிமன்றங்கள் வருகின்றன. வழக்கறிஞர் என்பவர் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் பணம் பிடுங்குபவராகச் செயல்படுகிறார். ரிட் மனு, ஜாமீன், தள்ளிவைப்பு (வாய்தா), மேல்முறையீடு என்பனவற்றின் பெயரால் நீதி நிலைநாட்டப் பெறுகிறதா, நீட்டப்படுகிறதா என்பது இந்திய நீதித்துறை சட்டதிட்டத்தை வகுத்த அரசியல் சாசன அமைப்பாளருக்கே வெளிச்சம். ஏறத்தாழ நானூறு கோடி வழக்குகள் நிலுவையில் ஆண்டுக்கணக்கில் தூங்குகின்றனவாம்.

அரசியல்வாதிகள், துணிந்து தவறு செய்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கிறார்கள். அவர்களைப் பற்றி முறையீடு செய்து நீதி பெற வேண்டிய ஒரே இடம் நீதித்துறை. அந் நீதித்துறையும் நெறி மாறிவிட்டால் யாரிடம் சென்று முறையிடுவது என்று கதறுகிறோம். சிலர், ஊழல் சகஜம்தான், லஞ்சம் சகஜம்தான், அனுசரித்துப் போக வேண்டியதுதான் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்தச் சிலரும், பலராகி விட்டார்கள்.

மாணவர்கள் சேர்க்கை, அரசுப் பணிகளில் நியமனம், இடமாற்றம், உரிமம், பர்மிட் போன்ற அனைத்திற்கும் இத்தனை ஆயிரம், இத்தனை லட்சம் என்று பட்டியல் போடாததுதான் பாக்கி. ஆனால், இப்படிப் பட்டியல் நீர்மேல் எழுத்தாகவும், வான்மேல் கல்வெட்டாகவும் இடைத்தரகர்கள் நாவில் கையெழுத்து இடாத தாளில் நாளும் நடமாடுகிறது. இந்நாட்டை இனி யார் காப்பாற்றுவார்? ஒவ்வொன்றுக்கும் காசு தர முடியாத ஏழை, தம் பிள்ளைகளை எப்படிப் படிக்க வைக்கப் போகிறார்? தன் பிள்ளைகளுக்கு எப்படி வேலை வாங்கப் போகிறார்? அவரிடம் ஆயிரக்கணக்கிலோ, லட்சக்கணக்கிலோ கொடுக்கப் பணமில்லையே. அவர் அன்றாடங்காய்ச்சி.

இந்த நிலைமை இப்படியே தொடர வேண்டியதுதானா? இதற்கு முடிவே இல்லையா?

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in abuse, Admin, Assembly, Attorney, candidates, Citizen, Convicts, Corruption, Courts, Criminals, EC, Election, Govt, Judge, Jury, Justice, kickbacks, Law, Lawyer, Mango, MLA, MLAs, MP, MPs, Order, Politics, Polls, Poor, Power, Rich, Seller, Students, UP, Vote, voter | Leave a Comment »

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »

Mayors announced by M Karunanidhi

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

சென்னை மேயர் மா.சுப்பிரமணியம்: கருணாநிதி அறிவிப்பு 

சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய நான்கு மாநகராட்சி மேயர், துணை மேயர் பெயர் விவரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மதியம் அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

சென்னை

மேயர்-மா.சுப்பிரமணியம்
துணை மேயர்-ஆர்.சத்தியபாமா

மதுரை
மேயர்-தேன்மொழி கோபிநாதன்
துணை மேயர் – பி.எம்.மன்னன்

நெல்லை
மேயர்-ஏ.எல். சுப்பிரமணியம்
துணை மேயர்-கா.முத்துராமலிங்கம்

சேலம்
மேயர்-ரேகா பிரியதர்ஷினி
துணை மேயர்-பி.பன்னீர் செல்வம்

கோவை
துணை மேயர்-ந.கார்த்திக்

திருச்சி
துணை மேயர்-மு.அன்பழகன்

Posted in candidates, Chennai, civic elections, Coimbatore, Deputy Mayors, DMK, Kovai, Local Body Polls, M Karunanidhi, Madras, Madurai, Mayors, Nellai, Salem, Tamil Nadu, Thiruchirappalli, Thirunelveli, Trichy | 1 Comment »