Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘PC’ Category

Nothing macho about India’s forex reserves – Impact on growth and prices: Varadharajan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?

உ .ரா. வரதராசன்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.

1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.

  • 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
  • ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
  • நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
  • இது டாலர் கணக்கில் 944 கோடி.
  • இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
  • டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.

கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.

இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)

இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!

சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.

இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.

இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.

நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.

இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!

இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!

இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!

இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)

இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.

1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.

சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!

எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

Posted in ADR, Agflation, America, APR, Balance, Balance sheet, Balancesheet, Banks, Benefits, Budget, Conversion, Currency, Deficit, Deflation, Dollar, Economy, Exchange, Exports, FDR, Finance, financial, forex, Funds, GDP, Growth, Imbalance, IMF, Impact, Imports, Index, India, Indices, Inflation, Interest, investments, Loans, Loss, markets, MNC, Monetary, Numbers, PC, Policy, Prices, Profit, Rates, RBI, reserves, Return, ROI, Shares, Statistics, Statz, Stocks, Tariffs, Tax, US, USA, Varadharajan, Varadharasan, WB | Leave a Comment »

Cheating the state – Income Tax, Black Money, Business folks

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

வாட்டுது வருமான வரி!

“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.

மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உள்நாட்டிலேயே

  • வியாபாரிகள்,
  • தரகர்கள்,
  • சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
  • என்ஜினீயர்கள்,
  • வக்கீல்கள்,
  • ஆடிட்டர்கள்,
  • விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
  • லாரி உரிமையாளர்கள்,
  • சொந்தத் தொழில் செய்பவர்கள்,
  • வியாபாரிகள்,
  • சேவைத்துறையில் இருப்பவர்கள்

என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.

விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.

வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.

———————————————————————————————————

தமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்

சென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.

2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.

தமிழ்நாட்டில்

  • 2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,
  • 2004+05+இல் ரூ.8,344 கோடி,
  • 2005+06+இல் ரூ.10,861 கோடி,
  • 2006+07+இல் ரூ.14,891 கோடி.

இந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.

செய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.

———————————————————————————————————

 

Posted in Biz, Bonds, Bribery, Bribes, Budget, Bureaucracy, Business, Cheats, Chidamabram, Chidambaram, Chidhambaram, Commerce, Compensation, Corruption, Economy, Employment, Finance, Govt, Homes, Houses, Incentives, Income, Income Tax, Industry, IT, Jobs, Money, NCC, NSS, PC, Personal, Private, Rajini, Rajni, Sankar, Savings, Shankar, Shivaji, Sivaji, Small scale, SSI, Tariffs, Tax, Work, Worker | Leave a Comment »

State of Tamil Nadu Congress Party – Internal Politics

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

காங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி

சென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்

  • மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,
  • கட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,
  • மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,
  • கே.வீ. தங்கபாலு,
  • ஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.

அப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.

ஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.

கட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

காமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  • மூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,
  • மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,
  • வி.ராஜசேகரன்,
  • சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,
  • காரைக்குடி சுந்தரம்,
  • முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,
  • கிருஷ்ணசாமி வாண்டையார்,
  • சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Posted in Analysis, Backgrounders, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Divisions, Elangovan, Elankovan, Elections, Faction, Fights, Ilangovan, Ilankovan, Internal, Jayanthi, Jayanthy, Jeyanthi, Jeyanthy, Kaarthi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthi, Krishnasaamy, Krishnasami, Krishnasamy, Krishnaswamy, Leaders, Madurai, Manmohan, Members, MLAs, MPs, Party, PC, Petty, PMK, Politics, Polls, Sonia, Thangabaalu, Thangabalu, Thankabalu, TMC | Leave a Comment »

The rise and fall of Dayanidhi Maran – Biosketch

Posted by Snapjudge மேல் மே 14, 2007

பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் பதவி இழப்பு

சென்னை, மே 14: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 3 ஆண்டுகளில் தனது பதவியை இழக்கிறார்.

முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தயாநிதி மாறன். 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை சன் டி.வி. நிர்வாகத்தின் அங்கமான சுமங்கலி கேபிள் விஷன் இயக்குநர்களில் ஒருவராக இருந்தார் தயாநிதி மாறன்.

அரசியலுக்கு முதன்முதலில் அடியெடுத்து வைத்த அவருக்கு, அமோக வெற்றியை மத்திய சென்னை வாக்காளர்கள் அள்ளித் தந்தனர்.

தொடர்ந்து, மத்தியில் அமைந்த கூட்டணி அமைச்சரவையில், மிக முக்கிய பொறுப்பான தகவல் தொழில்நுட்பத் துறை இவருக்கு வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதியின் ஆசியுடன் மிகக் குறுகிய காலத்தில் இவர் அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக வளர்ந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மட்டுமின்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியிடமும் மிகுந்த செல்வாக்குப் பெற்றவரானார்.

ஒரு கருத்துக்கணிப்பின் விளைவாகத் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்சிக் குழப்பத்தில் நாலாவது நாளில் பதவி பறிக்கப்படுகிறார் தயாநிதி மாறன்.
———————————————————————————————————-

கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளேன்.

கடந்த 26 மாதங்களில் என் துறை மூலம் நம் நாட்டுக்கு 2 லட்சத்து 66 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. இதில் பெரும் பகுதி நமது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் என் தலைவரும், பிரதமரும், சோனியா காந்தியும் அளித்த வாய்ப்புதான்.
———————————————————————————————————-
தயாநிதி மாறன் பதவி யாருக்கு கிடைக்கும்?:

அழகிரிக்கோ அவரது ஆதரவாளருக்கோ கிடைக்கலாம் ::

பா. ஜெகதீசன்

சென்னை, மே 14மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜிநாமா செய்துவிட்டார்.

இந் நிலையில், இதுவரை அவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலா வரத் தொடங்கி உள்ளன.

தயாநிதிக்கு பதிலாக அவர் வகித்த பதவிக்கு திமுகவின் மத்திய அமைச்சர்களான டி.ஆர். பாலு, அ. ராசா ஆகியோரில் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு தரப்படலாம் என அக்கட்சியின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

மன்னிப்பு கிடைக்குமா:

Mallikaதயாநிதி மாறனின் தாய் மல்லிகா மாறன் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் சென்னைக்கு திரும்பியதும் அவரும், தயாநிதி மாறனும், சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனும் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நடைபெற்ற சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் வாய்ப்பும் உள்ளது.

அப்படி நடைபெறும்போது இப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்படக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது தயாநிதி மாறன் மீண்டும் மத்திய அமைச்சராக தொடர்ந்து நீடிக்கும் சாத்தியம் உள்ளது.

இதற்கு ஒரு முன்னுதாரணமாக, திமுகவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூருகின்றனர்.

கடந்த 2001-ல் சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் செயல்பட்டனர்.

இதனால், தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக தோல்வியைத் தழுவியது.

அப்போது கட்சியில் அழகிரிக்கு எதிரான நிலை எடுக்கப்பட்டு அவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றுகூட திமுக தலைமை கூறியது. ஆனால், சிலமாதங்கள் சென்றபின் நிலைமை மாறியது.

2002 பிப்ரவரியில் ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வைகை சேகரை ஆதரித்து அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

இன்னும் சொல்லப்போனால் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து அழகிரி பிரசாரம் செய்தார். அத்தேர்தலில் தனது மனைவியுடன் வீடு வீடாகச் சென்று அழகிரி வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து திமுகவில் தனக்கு இருந்த செல்வாக்கை அழகிரி வலுப்படுத்திக் கொண்டார் என்பதை திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அழகிரிக்கு சாதகம்:

இதற்கிடையே அழகிரியோ அல்லது அவர் சுட்டிக்காட்டும் அவரது ஆதரவாளர் ஒருவரையோ தயாநிதி மாறன் வகித்த பதவியில் நியமிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி மத்திய அமைச்சராக நியமிக்கப்படுபவர் வரும் ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

நாடார் சமுதாயத்துக்குப் பிரதிநிதித்தும் கிடைக்குமா?

மத்திய அமைச்சரவையில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையிலும், சமீபத்தில் காமராஜரின் பெயரை முன்னிறுத்தி நடிகர் சரத்குமார் மேற்கொண்டுள்ள பிரசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் திமுக செயல்பட வாய்ப்பு உள்ளது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள

  • தினகரன் பத்திரிகையின் முன்னாள் உரிமையாளர் குமரன்,
  • வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரில் ஒருவருக்கு தயாநிதி மாறன் வகித்த பதவி கிடைக்கக் கூடும்.

குமரன், சண்முகசுந்தரம் ஆகிய இருவரின் பதவிக்காலமும் வரும் ஜூலையுடன் முடிகிறது. இருந்தாலும் மத்திய அமைச்சராக, இருவரில் எவர் நியமிக்கப்படுகிறாரோ அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் சாத்தியமும் உள்ளது.
———————————————————————————————————-
அப்பாவைப் போல இல்லையே பிள்ளை!

சென்னை, மே 14: திமுக தலைவர் கருணாநிதிக்கு உற்ற நண்பனாகவும், அவர் இடும் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுத்தும் தொண்டராகவும், சிக்கலான கட்டங்களில் ஆலோசனை கூறும் மதியூகியாகவும், அரசியல்ரீதியான சந்திப்புகளுக்கு முக்கியத் தலைவர்களை அணுகக்கூடிய நம்பத்தகுந்த தூதராகவும் செயல்பட்டவர் முரசொலி மாறன்.

கருணாநிதியின் சகோதரி மகன் என்ற உறவு இருந்தாலும் பிற தலைவர்களைப் போலவே அவரிடம் பழகி, அவருடைய முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். தில்லியில் திமுகவின் செல்வாக்குள்ள பிரதிநிதியாகத் திகழ்ந்த போதிலும் அதில் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு தேடாமல் அனைத்தையும் கட்சிக்கென்றே பயன்படுத்தினார் முரசொலி மாறன். அவருடைய மறைவு திமுக தலைவருக்கு தாங்கமுடியாத பேரிழப்புதான்.

இந் நிலையில்தான், வயதில் இளைஞராக, அரசியல் அனுபவம் ஏதும் இல்லாதவராக, பார்ப்பதற்கு விளையாட்டுப் பிள்ளையாக இருந்த தயாநிதியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க கருணாநிதி முடிவு செய்தார். அதில் வெற்றி கண்டாலும், முரசொலி மாறனைப் போல அல்ல தயாநிதி மாறன் என்பதை விரைவிலேயே உணர்ந்துகொண்டார்.

தனக்கென்று அதிகார மையத்தை ஏற்படுத்த முரசொலி மாறன் விரும்பியதில்லை, ஆனால் தயாநிதியோ அப்படியல்ல. தயாநிதியின் அண்ணன் கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகையில் வெளியான கருத்துக்கணிப்புகள், அவருடைய பதவி ஆசையைக் காட்டுவதாகவே கருதப்பட்டன. கழகக் குடும்பத்தின் மூத்த தலைவர் வாழும் காலத்திலேயே இப்படி என்றால் எதிர்காலத்தில் எப்படி நடப்பார் என்ற கேள்வி பிறக்கிறது. எனவே அவரைத் தண்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக தில்லியில் நிறைவேற்ற வேண்டிய வேலைகளுக்கு தயாநிதியை, கருணாநிதி மிகவும் நம்பியிருந்தார். இப்போது அவருக்குப் பதிலாக, அதே போல நம்பிக்கைக்குரிய ஒருவர் தேவை. முன்னர் டி.ஆர்.பாலு இந்த வேலைகளைச் செய்துவந்தார். ஆனால் கருணாநிதி “”முழு நம்பிக்கை” வைக்கும் அளவுக்கு ஒருவர் தேவைப்படுகிறார். அந்த இடத்தை நிரப்பக்கூடியவர் அவருடைய மகள் கனிமொழி. பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட அவருக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் கருணாநிதி. மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு ஜூன் அல்லது ஜூலை தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திமுக வேட்பாளர்களில் ஒருவராக கனிமொழி இருந்தால் வியப்பதற்கு ஏதும் இல்லை.
———————————————————————————————–
கட்சிக்கும், ஆட்சிக்கும் பகையை வளர்த்ததால் தான் இந்த கதி: தயாநிதி நீக்கத்தின் பின்னணி நமது சிறப்பு நிருபர்

அனைத்து தரப்பையும் பகைத்துக் கொண்டது, கட்சியில் ஆதிக்கம் செலுத்த நினைத்தது, டில்லி செல்வாக்கை தவறாக பயன்படுத்தியது போன்றவையே தயாநிதி நீக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்துள்ளன.

கடந்த 2004 லோக்சபா தேர்தலின் போது அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட தயாநிதி, முதல் முறையாக எம்.பி.,யானதும் மத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையை இவருக்காக தி.மு.க., தலைவர் கேட்டுப் பெற்றார். மத்திய அமைச்சராக்கியதோடு மட்டுமன்றி, பிரதமர், சோனியா மற்றும் தேசிய தலைவர்களுடன் தி.மு.க., சார்பில் பேசுவதற்கும் தகவல்களை பரிமாறுவதற்கும் தயாநிதியை பயன்படுத்தினார். இதனால் டில்லி வட்டாரத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு தயாநிதிக்கு கிடைத்தது. ஆனால், ஆரம்பம் முதல் இவரது செயல்பாடு பல்வேறு பிரிவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

குறிப்பாக,

  • சட்டசபைத் தேர்தல் சமயத்தில் தயாநிதியின் செயல்பாட்டை விமர்சித்தே தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் அமைந்தது.
  • பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை மிரட்டிய விவகாரம்,
  • தமிழகத்தில் உள்ள மீடியாக்களை பகைத்துக் கொண்டது போன்றவை அ.தி.மு.க.,
  • கூட்டணி 69 இடங்களை பெறுவதற்கு காரணமாக அமைந்தன.

தி.மு.க., ஆட்சி அமைந்த பின் கட்சிக்குள்ளேயே இவர் மீது அதிருப்தி அதிகரிக்க துவங்கியது. குறிப்பாக, முதல்வரின் வாரிசாக கருதப்படும் ஸ்டாலினுக்கும், தயாநிதிக்கும் இடையே பல சந்தர்ப்பங்களில் மறைமுக மோதல் நடந்தது. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்களுக்கு எதிராக அவர்களது பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது, ஸ்டாலினின் செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது போன்றவை கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முறையிட்ட போதெல்லாம் முதல்வர் சமரசப்படுத்தி வந்துள்ளார்.

கடைசியாக, கடந்த மார்ச் முதல் தேதியன்று ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடிய போது தி.மு.க.,வின் அனைத்து நிர்வாகிகளும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த போதிலும், கலாநிதியோ, தயாநிதியோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் மதுரையில் இருந்து தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்த அழகிரியுடன் இதுபற்றி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இது தவிர கீழ்மட்ட கட்சித் தொண்டர்களுடன் தயாநிதி பழகாமல் இருந்ததுடன், மூத்த தலைவர்களை கண்டுகொள்ளாமல் அரசியல் நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க., சார்பாக மத்தியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களிடையே தயாநிதி ஆதிக்கம் செலுத்தி வந்ததாகவும் புகார்கள் வந்தன

. டி.ஆர்.பாலு, ராஜா, பழனிமாணிக்கம் போன்றவர்களை பல சந்தர்ப்பங்களில் ஓரங்கட்டும் விதமாக செயல்பட்டதால், இவர் மீது அவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தயாநிதியை கட்சியில் முன்னிலைப்படுத்தி முதல்வர் கருணாநிதிக்கு பின்னர் கட்சியை கைப்பற்ற முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன.

மாவட்ட செயலர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் “கேபிள் டிவி’ நடத்தும் உரிமை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். தயாநிதிக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டுவதற்காகவே கருத்து கணிப்பு ஒன்றையும் நடத்தியதாக தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் தயாநிதியே முதலிடத்தில் உள்ளதாக வெளியிடப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு தி.மு.க., கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்களை களங்கப்படுத்தியதாக அக்கட்சியினர் கருதினர். அன்புமணியை வேண்டுமென்றே மட்டம் தட்டியிருப்பதாக ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

————————————————————————————————-

தி.மு.க.,வில் தயாநிதி ஆதரவாளர்களுக்கு கல்தா!: அனுகூலம் பெற்ற அதிகாரிகள் சிக்குகின்றனர்

தயாநிதிக்கு குறுகிய காலத்தில் கட்சியில் தரப்பட்ட முக்கியத்துவம் காரணமாக கட்சியின் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட பலரும் தயாநிதியின் ஆதரவாளர்களாக மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், தென் மாவட்டங்களில் அழகிரியின் செல்வாக்கை மீறி, தயாநிதிக்கு, அங்கு, ஆதரவாளர்கள் கிடைக்கவில்லை. அதே போல, மூத்த அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களிலும் தயாநிதி ஆதரவாளர்கள் உருவாகவில்லை.

இதை மீறி

  • கோவை,
  • நீலகிரி,
  • திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர், தங்களை தயாநிதியின் ஆதரவாளராக முன்னிறுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி செயல்பட்டனர். சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் தி.மு.க.,விற்கு ஏற்பட்ட பெரும் சரிவால் கட்சித் தலைமை பொங்கலுõர் பழனிச்சாமி மேல் கடும் கோபத்தில் இருந்தது. அமைச்சர் பதவி தராமல் அவரை புறக்கணித்தது. தலைமையின் கோபத்தை உணர்ந்த ஸ்டாலின், இவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க விரும்பவில்லை.

இந்நிலையில், தயாநிதியின் மூலமாக கட்சித் தலைமையை திருப்திபடுத்தி, உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை காரணம் காட்டி அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க தயாநிதி தான் காரணம் என்பதால், முழுமையாக அவரது ஆதரவாளர் போல் பழனிச்சாமி செயல்பட்டார். மாதத்திற்கு இரு முறை தயாநிதி கோவைக்கு வந்ததால், இந்த உறவு மேலும் பலப்பட்டது. கோவையில் அமையவுள்ள டைடல் பார்க்கை சுற்றியுள்ள நிலங்களை வளைப்பதில் பொங்கலுõர் பழனிச்சாமி பெரிதும் உதவியுள்ளார்.

பழனியின் மகன் பைந்தமிழ் பாரியை கோவை மேயராக்க, ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான வீரகோபாலை மாநகராட்சித் தேர்தலில் தோற்கடிக்க, “உள்ளடி வேலை’களைச் செய்தார். இதை தெரிந்து கொண்ட கட்சித் தலைமை, தயாநிதி வற்புறுத்தியும், மேயர் பதவியை பாரிக்கு வழங்க ஒப்புக் கொள்ளவில்லை.

மண்டலத் தலைவராக பொறுப்பேற்ற பாரி, தனது அறையில் தயாநிதியின் போட்டோவை மாட்டியதோடு, இதர கவுன்சிலர்களின் அறைகளிலும் தயாநிதி படம் மாட்ட வேண்டும் என்று வற்புறுத்தி, மாட்டி வைத்து, நன்றி விசுவாசம் காட்டினார்.

பொங்கலுõர் பழனிச்சாமி பல்வேறு தொழில்களை நடத்தி வரும் தொழிலதிபர் என்பதால், “தொழில் ரீதியாக’ தயாநிதியோடு நெருக்கம் காட்டினார். சமீபத்தில் கோவையில் நடந்த மேம்பால திறப்பு விழாவில், டி.ஆர்.பாலுவை புறக்கணித்து, தயாநிதியைக் கொண்டு விழா நடத்தினார் பழனிச்சாமி.

நகரின் பல இடங்களில் தயாநிதியின் கட் அவுட்டுகள், ஆயிரக்கணக்கான வரவேற்புத் தட்டிகள் என ஆடம்பரமாக இந்த விழாவை நடத்தினார். மற்ற தி.மு.க., பிரமுகர்கள் தயாநிதியை நெருங்க விடாமல், தாங்களே ஒட்டுமொத்த ஆதரவாளர் என காட்டிய பெங்கலுõர் பழனிச்சாமி, இப்போது கட்சித் தலைமையின், “ப்ளாக் லிஸ்ட்’டில் இடம் பெற்றுள்ளார்.

அடுத்ததாய், “ப்ளாக் லிஸ்ட்’டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கதர் துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் இடம் பிடித்துள்ளார். இவரும் தயாநிதி ஆதரவாளராக தன்னை முன்னிறுத்துவதில் ஆர்வம் காட்டியவர். கோத்தகிரியில் இருக்கும் தயாநிதியின் மாமனாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் குடும்பத்தினர் செய்து வந்தனர். இதைவிட ஒரு படி மேலாக, ஊட்டியில் தயாநிதி முகாமிடும்போதெல்லாம், கூடவே இருந்து குணசேகரன் என்பவர் உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.

இந்த குணசேகரன் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகனின் சகோதரர். தயாநிதி மேலான அமைச்சரின் பாசம் இப்படி நீடித்து வருகிறது.

அடுத்ததாய், தயாநிதி ஆதரவாளராக, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் இருந்துள்ளார். மறைந்த மாறனின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், ம.தி.மு.க.,விற்கு போய்விட்டு வந்த நிலையில், தி.மு.க., அமைச்சரவையில் இடம் பிடிக்க தயாநிதி தான் காரணம். இதனால், செல்வராஜ் பெயரும் தயாநிதி ஆதரவாளர் பட்டியலில் உள்ளது.

இது தவிர, சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தி.மு.க., சார்பில் நிதி சப்ளை செய்தவர் என்ற முறையில் தயாநிதிக்கு பல எம்.எல்.ஏ.,க்களின் அறிமுகம் உண்டு. அது தொடர்பான கணக்க வழக்கு விவகாரங்களையும் தயாநிதியே கவனித்ததால், அவர்களின் தொடர்பும் இருப்பதாக கட்சித் தலைமை கருதுகிறது. குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.,க்களின் மீதும் கட்சித் தலைமையின் பார்வை பதிந்துள்ளது.

அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளைக் காட்டிலும் தயாநிதியின் விசுவாசிகளாக இருந்த அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் தி.மு.க., தலைமை தயாரித்து வருகிறது. இந்த பட்டியலை தயாரிக்கும் நோக்கோடு, உளவுத் துறையில் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி ஜாபர்சேட் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய அமைச்சராக தயாநிதி பணியாற்றியபோது, டில்லி தொடர்பு மூலம் தமிழகத்தில் பணியாற்றும் பல வடமாநில அதிகாரிகள், தங்களுக்கு விருப்பமான பதவிகளைப் பெற்றுள்ளனர். இவ்வாறு பதவி பெற்றவர்களை தயாநிதியின் ஆதரவாளர்களாக அரசு கருதுவதால், எப்போது வேண்டுமானாலும் டிரான்ஸ்பர் செய்யப்படலாம் என்ற கலக்கத்தில் இவர்கள் உள்ளனர்.

கட்சியின் கீழ்நிலை பொறுப்புகளில் உள்ள தயாநிதி விசுவாசிகள், காவல்துறை, அரசுத் துறையில் உள்ள கீழ் நிலை அதிகாரிகள் வரை முழுமையான பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. “டிவி’ நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தயாநிதி விசுவாசிகளை கட்டம் கட்டும் பணியை கட்சித் தலைமை தீவிரமாக மேற்கொள்ளுமானால், 50க்கும் மேற்பட்ட, “அதிரடி டிரான்ஸ்பர்’கள் நடக்க வாய்ப்புள்ளது.

————————————————————————————————————

பதவி பறிப்பு – BBC

 

பத்திரிகை எரிப்பில் ஈடுபட்ட மதுரை மேயர்
மதுரையில் மேயர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பத்திரிகை தாக்குதலும் பதவி பறிப்பும்

தமிழகத்தில் மதுரையிலுள்ள தினகரன் அலுவலகம் மீது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் அழகிரியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர்.

இந்தத் தாக்குதலுக்கு பிறகு எழுந்த சர்ச்சையை அடுத்து மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பதவி பறிக்கப்பட்டதும் நேயர்கள் அறிந்ததே

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தமிழோசை ஒலிபரப்பிய பேட்டிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றை இந்தத் தொகுப்பில் நேயர்கள் கேட்கலாம்.

தினகரன் நாளிதழ் தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து கருத்துக் கணிப்பை வெளியிட்டது. இதில் ஸ்டாலினுக்கு பெரும் ஆதரவும், அழகிரிக்கு மிகக் குறைந்த அளவே ஆதரவு இருப்பதாகவும் கூறியிருந்தது.

எரிக்கப்பட்ட தினகரன் அலுவலகத்தின் ஒரு பகுதி
எரியூட்டப்பட்ட தினகரன் அலுவலகம்

இதையடுத்து மதுரையிலுள்ள தினகரன் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது. இதில் மூவர் பலியாயினர்.

நடைபெற்ற தாக்குதல் குறித்து தினகரன் பத்திரிகையின் மதுரைப் பதிப்பின் ஆசிரியர் முத்துப் பாண்டியனின் பேட்டி.

முத்துப்பாண்டியன் பேட்டி

ஆனால் இந்தத் தாக்குதலில் தமக்கு சம்பந்தம் இல்லை எனக் கூறுகிறார் மதுரை மேயர் தேன்மொழி. தங்களது எதிர்ப்பை காட்ட பத்திரிகையை எரித்ததாக மட்டுமே அவர் கூறுகிறார்.

தேன் மொழி பேட்டி

இது தினகரன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதனை விட பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறுகிறார் தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ்.

 

ரமேஷ் பேட்டி

காவல் துறை தனது கடமையைச் செய்யும் எனவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கிறார் தமிழக காவல்துறை தலைவர். இது தொடர்பாக கைதுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

காவல்துறை தலைவர் பேட்டி

கோபத்தின் வெளிப்பாடும் பத்திரை எரிப்பும்
கோபத்தின் வெளிப்பாடும் பத்திரிகை எரிப்பும்

இது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினை அல்ல, தமிழகத்தை ஆளும் திமுகவின் தலைவரான கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடைபெற்ற அதிகாரப் போட்டியினால் எழுந்த பிரச்சினை என்றும் கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் ஞானி

ஞானி பேட்டி

இந்தச் சமபங்களுக்கு பிறகு நடைபெற்ற திமுகவின் நிர்வாகக் குழு கூட்டத்தில், தயாநிதி மாறனை மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தது. இது குறித்து எமது செய்தியாளர் கோபாலனின் செய்திக் குறிப்பு

கோபாலன் செய்திக் குறிப்பு

உறவும் பிரிவும்
உறவும் பிரிவும்

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தம்மை நீக்க கட்சி எடுத்த முடிவை அடுத்து தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். தான் எப்போதுமே திமுக விசுவாசிதான் என்றும் கருணாநிதியே தனது தலைவர் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் கட்சி விரோத நடவடிக்கைகள் எதிலும் தாம் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தயநிதி மாறன் பேட்டி

———————————————————————————————————-

07.06.07  கவர் ஸ்டோரி
குமுதம் ரிப்போர்ட்டர்
தயாநிதியின் புதிய அவதாரம்
கலாநிதியின் அதிரடி வியூகம்

அசுரவேகத்தில் கலைஞர்
உஷார்படுத்திய ஜோதிடம்

1997_ல் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார் முரசொலிமாறன். அப்போது லண்டன் சென்று, இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேருடன் வர்த்தக உறவுகள் பற்றி மாறன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

தனது பயணத்திற்கு முன்பாக குஜ்ராலைச் சந்தித்து ஆலோசனை பெறப் போனார், மாறன். ‘நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் சொல்வதுதான் நம் பாலிஸி’ என்று சொல்லி, அவரை வழியனுப்பி வைத்தார் குஜ்ரால். ஒரு பிரதமருக்குரிய அந்தஸ்துடன் அந்தச் சந்திப்பை நிகழ்த்தப் போனார் மாறன்.

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான எண்:10, டவுனிங் தெரு மாளிகைக்குள் நுழையும் முன்பாக, தன்னம்பிக்கைக்காக ‘ஆத்தா! தாத்தா!’ (கலைஞரின் பெற்றோர் அஞ்சுகம் மற்றும் முத்துவேலர்) என்று முனகிக் கொண்டேதான் உள்ளே போனார் மாறன். முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சந்திப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு, லண்டனில் இருந்தே கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

”இங்கிலாந்து பிரதமரைச் சந்திக்கும் முன்பாக, உங்கள் வாழ்த்துக்கள் கிடைக்கும் என்று நினைத்தேன். கிடைக்கவில்லை. இதற்காக நான் அழுதேன். (இருவருக்கும் கொஞ்சம் ஊடல் இருந்த நேரம் அது…!) நேற்று உங்கள் கடிதம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் அழுதேன். இது ஆனந்தக் கண்ணீர். என்னுடைய இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. என்னாலேயே இதை நம்ப முடியவில்லை. நான் உங்கள் தயாரிப்பல்லவா!

என் சிந்தை_அணு ஒவ்வொன்றிலும் குடியிருந்து என் இதயத் துடிப்புகளாக இருந்து என்னை ஆட்டுவிக்கும் உங்கள் காலடிகளில் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்! நீங்களும் நானும்தான் இப்படி கண்ணீர்ப் பெருக்கோடு உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். ஏனெனில், இது ரத்த பாசம்!” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் மாறன்.

கலைஞர் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் ஒருசில கடிதங்களில் இதுவும் ஒன்று.

இது நடந்து மிகச் சரியாக பத்தாண்டுகள் கடந்து விட்டன. அதே கலைஞர்… அதே ரத்த உறவுகள். ஆனால், காட்சியும் களமும் மாறிவிட்டன. ஊடல்களைத் தாண்டி உறுதியுடன் நீடித்த மாறனுடனான உறவுபோல அவரது வாரிசுகளுடன் அப்படி இருக்க முடியவில்லை கலைஞரால்! அப்பாவின் ரத்தம்தான் என்றாலும், அவர் போலவே ஓர் உறவை கலைஞருடன் தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள் மாறனின் வாரிசுகளான கலாநிதியும், தயாநிதியும்! தனி சாம்ராஜ்யமாக வளர்ந்துவிட்ட மாறனின் வாரிசுகள், தங்களின் தொழில் கட்டமைப்பைக் காப்பாற்றுவது… எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டியிருப்பது என அவர்களுக்குள்ள நிர்ப்பந்தங்களும் இதற்குக் காரணம்.

இந்தப் பின்னணிதான் கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் சமீப காலமாக ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டு வராமல் விரிசலை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இளமையும் துடிப்பும் நிறைந்த மாறனின் வாரிசுகளுக்கு எதிராக, இந்த வயதிலும் கலைஞர் காய் நகர்த்தும் விதமும் வேகமும் அசாத்தியமானவை. பரபரப்புக்கும் ஆச்சர்யங்களுக்கும் பஞ்சமில்லாதவை…!

இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான மனஸ்தாபங்கள் மறைய, மே_28 அன்று நடைபெற்ற மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்த்தார்கள், இருதரப்புக்கும் வேண்டப்பட்ட சிலர். ஆனால், இந்நிகழ்ச்சியை கலைஞரும், ஸ்டாலினும் புறக்கணித்தார்கள். இருந்தபோதும், ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். சமாதான முயற்சிகளுக்கு இவர்களின் வருகை ஒரு சிறு துளியளவுக்கு நம்பிக்கை தந்தது என்பதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள் சில நலம் விரும்பிகள்.

இதெல்லாம், கலைஞர் தனது டெல்லி விசிட்டை முடித்துக் கொண்டு மே_29 அன்று இரவு சென்னை திரும்பும் வரையில்தான்! அன்றிரவு கோபாலபுரத்தில் இருந்த கலைஞரைச் சந்திக்க ஸ்டாலினின் மகன், மகள் உள்ளிட்ட சிலர் போயிருக்கிறார்கள். இவர்கள் வந்திருக்கும் விஷயத்தைக் கேள்விப்பட்ட கலைஞர், ‘அவர்களை அங்கேயே போகச் சொல்லுங்க. இங்கு அவர்களுக்கு என்ன வேலை?’ என்று கோபமாகக் கேட்டிருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்குத் தாங்கள் போனதுதான் தாத்தாவின் கோபத்திற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்ட ஸ்டாலின் வாரிசுகள், ‘நாங்கள் போனதற்கான காரணம் சமாதானத்திற்காக அல்ல… விரும்பி அழைத்ததை மறுக்க முடியவில்லை. தவிர, இது ஒரு சுபநிகழ்ச்சி…’ என்றெல்லாம் சொல்லிச் சமாதானப்படுத்திய பிறகே அமைதியாகியிருக்கிறார் கலைஞர்.

” ‘என்னை மீறி யாரும் சமாதான முயற்சிகளில் இறங்கக் கூடாது. அத்தகைய முயற்சிகளை நான் விரும்பவுமில்லை’ என்பதை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இதன் மூலம் உணர்த்தினார் கலைஞர்” என்கிறார் அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு பிரமுகர்.

கொஞ்சம் ஆறப்போட்டால் வேகம் குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, கலைஞரின் இந்த வேகம் ஆச்சர்யத்தைத் தரத் தவறவில்லை. மாறாக, எதிர்ப்பு வேகமும் அதிகரித்ததில் அவர்களுக்கு அதிர்ச்சிதான். இதற்குப் பின்னணியாக, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் சிலர்.

2005 நவம்பரில் சன் டி.வி.யில் தனது பெயரில் இருந்த 20 சதவிகிதப் பங்குகளை மாறன் சகோதரர்களுக்கே விற்றார், கலைஞரின் மனைவி தயாளு அம்மாள். சன் டி.வி.யின் மொத்த மதிப்பு சுமார் ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டு, அதனடிப்படையில் தயாளு அம்மாவின் 20 சதவிகிதப் பங்குகளுக்கான பணம் (சுமார் 200 கோடி) தரப்பட்டது என்றொரு தகவல் உண்டு. பண விவரங்களை வெளியிடாவிட்டாலும், இந்தப் பரிவர்த்தனை விஷயத்தை அப்போதே பத்திரிகையாளர்களிடம் சொன்னார் கலைஞர்.

இது நடந்து இரண்டாண்டுகள் ஆகவுள்ள நிலையில்தான், இப்போது மீண்டும் அந்த விஷயம் கிளறப்பட்டிருக்கிறது. ‘நமது பங்குகளுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து, அதைத் தந்து நம்மை விலக்கி விட்ட பிறகு, சன் டி.வி.யின் மதிப்பு சுமார் ஆறாயிரம் கோடி என்று நிர்ணயித்து பங்குகளை வெளியிட்டார்கள். இந்த விஷயத்தில் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம்’ என்று கலைஞரின் ரத்த உறவுகள் சிலர் கலைஞரிடம் குமுறியிருக்கிறார்கள்.

”இதில் ஓரளவு நியாயமிருப்பதாக உணர்ந்த கலைஞர், சமீபத்தில் மகாபலிபுரத்திற்கு ஓய்வுக்காகச் சென்றபோது, சன் குழுமத்தின் ஆடிட்டரை வரவழைத்து சில விவரங்களைக் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பிறகே கலைஞரின் கோபம் இன்னும் அதிகமானது” என்கிறார் இந்த சம்பாஷணைகளின் பின்னணிகளை அறிந்த ஒருவர்.

‘பங்குப் பரிவர்த்தனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை. நியாயப்படியே எல்லாம் நடந்தது’ என்று சன் குழுமத்தினர் தங்கள் தரப்பை மீண்டும் வலியுறுத்திய போதும், தங்கள் ஆடிட்டரையே அழைத்து விசாரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகத்தில் இருந்த சில கணக்கு வழக்கு விவரங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, பிரபல பத்திரிகை அலுவலகம் ஒன்றில் கொண்டு போய் வைத்தார்கள்.

இந்த விஷயத்தைப் பிறகு பார்க்கலாம் என்று நினைத்தோ என்னவோ… புதிதாக தாங்கள் தொடங்கவுள்ள கலைஞர் டி.வி.க்கான ஏற்பாடுகளை முடுக்கி விடும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் கலைஞர். சன் டி.வி. தொடங்கப்பட்ட காலத்தில் ஒரு பங்குதாரராக கலாநிதியுடன் இணைந்து பணியாற்றி, பின்பு பிரிந்துவிட்ட சரத் ரெட்டிதான், கலைஞர் டி.வி. நிர்வாகத்திற்காக கலைஞர் தேர்வு செய்திருக்கும் நபர். இவரைத் தேர்வு செய்த போதே கலைஞரின் வேகமும், கோபமும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள் தி.மு.க. முன்னோடிகள். இதே வேகத்தில் கலைஞர் டி.வி.க்கும் சரத்திற்கும் தனித்தனியே அறிவாலயத்தின் கீழ்த்தளத்தில் அறைகளும் ஒதுக்கப்பட்டன.

இவ்வளவு அரசியல் பணிகளுக்கிடையிலும் தினசரி ஓரிரு மணி நேரங்களாவது சரத்துடன் ஆலோசனை நடத்துகிறார். இதுதவிர, புதிய டி.வி.யில் பொழுதுபோக்கு அம்சங்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலசந்தர், ராதிகா உள்ளிட்ட சின்னத்திரை ஜாம்பவான்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார் கலைஞர்.

இது ஒருபுறம் இருக்க, தங்களின் புதிய சேனலை ஒளிபரப்ப, மாறன் சகோதரர்களின் ஆதிக்கத்தில் உள்ள சுமங்கலி கேபிள்ஸை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதால், தனியாக ஒரு கேபிள் நெட்வொர்க்கைத் தொடங்கவும் யோசனை செய்திருக்கிறார்கள். ஆற்காட்டாரின் தம்பி தேவராஜ் இதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

சமாதான முயற்சிகளைத் தடுப்பது மட்டுமல்ல… அதைச் செய்ய முனைவோர் மீதும் கலைஞர் கோபம் காட்டுகிறார் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள் தயாநிதியும் கலாநிதியும். இளமையும், மூளையும் கைகொடுக்க… அவர்களும் சில காய் நகர்த்தல்களைச் செய்யத் தயாராகிறார்கள்.

இதில் முதல் ஸ்டெப் எடுத்து வைத்திருப்பவர் தயாநிதிமாறன். இதற்காக ‘தினகரன் நாளிதழின் நிர்வாகி’ என்ற அடையாளத்தோடு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் தயாநிதி! மே_28 அன்று தனது தங்கையின் வளைகாப்பு முடிந்த உடனேயே, அன்று காலை தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார். ‘இனி நான்தான் நிர்வாகத்தைக் கவனிக்கப் போகிறேன். நாம் இனி தினசரி சந்திக்கலாம்’ என்று ஆசிரியர் குழுவினரிடம் அவர் சொன்னபோது, அங்கிருந்தவர்களால் ஆச்சர்யத்தை மறைக்க முடியவில்லை.

சர்ச்சைக்குரிய தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பு வெளியான சமயத்தில், ‘எனக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று சொன்ன தயாநிதிமாறன், இன்று இப்படி வெளிப்படையாக வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதாகச் சொன்னது சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

”எந்த வகையிலும் தலைவருடன் (கலைஞர்) மோதல் போக்கு வேண்டாம். நாம் மூன்று மாதங்களுக்கு (ஆகஸ்ட் வரை) அமைதியாக, நமது வேலைகளைக் கவனிப்போம். கொஞ்சம் பொறுமையாக இருந்து செயலாற்றத் தவறிவிட்டோம். மதுரை வன்முறைச் சம்பவம் நடந்த நாளில் நாம் அமைதியாக இருந்திருந்தாலே அல்லது இவ்வளவு வேகமாக அழகிரி மீது விமர்சனம் செய்யாமல் இருந்திருந்தாலே மற்ற பத்திரிகைகள் தாங்களாகவே அழகிரியின் செயலை விமர்சித்திருப்பார்கள். ஆனால், நாம் முழுவேகம் காட்டவும் மற்றவர்கள் அமைதியாகி விட்டார்கள். நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம். இங்கேதான் தவறு நடந்து விட்டது. பரவாயில்லை. நம்பிக்கையோடு பணியாற்றுங்கள். மூன்று மாதம்தான். எல்லாம் சரியாகிவிடும்!” என்று நம்பிக்கையளிக்கும் வகையில், தனது கருத்துக்களை அப்போது சொல்லியிருக்கிறார் தயாநிதி.

அன்றிலிருந்து தினசரி தினகரன் அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது சில செய்திகள் எப்படி வரவேண்டும் என்று ஆலோசனை சொல்லவும் தவறுவதில்லை. இந்தப் பணிகளுக்கிடையே தாத்தாவை எப்படியும் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தயாநிதிக்குத் தீவிரமாக இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இது ஒருபுறம் இருக்க… பலரது பார்வையும் இப்போது திரும்பியிருப்பது கலாநிதி மாறனை நோக்கித்தான். அதற்குக் காரணம் இருக்கிறது. தயாநிதி வெளி உலகிற்கு அறிமுகம் ஆனதே அரசியலை வைத்துத்தான். அந்த அரசியல் அங்கீகாரம், தனது தந்தை விட்டுச் சென்ற மத்திய சென்னை எம்.பி. பதவியில் ஆரம்பித்து, தி.மு.க. தலைவரான தனது தாத்தாவின் அரவணைப்பால் கிடைத்ததுதான் தயாநிதிக்கு.

கலாநிதி மாறன் இதற்கு நேர்மாறானவர். தனது சொந்த வாழ்க்கையாகட்டும், தனது தொழிலாகட்டும், அதில் அரசியலையும், அரசியல்வாதிகளையும் கொஞ்சம் தள்ளிவைத்தே பழக்கப்பட்டவர் அவர்.

”நான் கூச்ச சுபாவம் உள்ளவனும் அல்ல. நெருங்கிப் பழகுபவனும் அல்ல. நான் சாதாரண ஒரு நபர். அவ்வளவுதான். எனது தேவைகளுக்காக எனது குடும்பப் பின்னணிகளைச் சொல்லி அவற்றைப் பூர்த்தி செய்து கொள்வது எனக்கு உடன்பாடான விஷயமல்ல. நம்புங்கள்… நான் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தபோது, எனது பணத்தேவைக்காக ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை பார்த்தேனே தவிர, என் குடும்பத்தை எதிர்பார்க்கவில்லை” என்று அடிக்கடி சொல்வார் கலாநிதி மாறன்.

இப்போது அரசியல் சூறாவளி தன்னையும் தன் குடும்பத்தினரையும் மையமாக வைத்துச் சுழலும்போதும் அதே மனநிலையில்தான் இருக்கிறார் கலாநிதி. ‘தனது டி.வி. சாம்ராஜ்யத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தனது மூளையை மட்டுமே பயன்படுத்தி சிலவற்றைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார் கலாநிதி’ என்கிறார்கள் சன் நெட்வொர்க் வட்டாரத்தில்.

கலைஞர் டி.வி.க்காக தனியாக கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கப் போகிறார்கள் என்பது மட்டுமல்ல… ஏற்கெனவே உள்ள சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கின் கேபிள்களை ஆங்காங்கே சிலர் வெட்டிவிடுவதாகவும் கலாநிதிக்குத் தகவல்கள் வருகின்றன. ‘கேபிள் டி.வி. சர்வீஸை’ அரசே எடுத்து நடத்தலாம் என்று லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான மக்கள் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டி கலைஞர் வெளியிட்ட கருத்துக்களும், கேபிள் டி.வி. விரைவில் அரசுடைமை ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்ற செய்தியும் கலாநிதியை நிறையவே யோசிக்க வைத்திருக்கிறது.

இனியும் தனது டி.வி. ஒளிபரப்புக்கு கேபிளை நம்பிப் பயனில்லை என்ற யதார்த்தத்தை உணர்ந்துள்ள கலாநிதி, இன்னும் மூன்று மாதங்களுக்குள் சன் நெட்வொர்க்கின் சார்பில் செயற்கைக் கோள் மூலம் (சிறிய ஆண்டெனா உதவியுடன்) வீடுகளுக்கே நேரடியாக டி.வி. நிகழ்ச்சிகளைக் கொண்டு சேர்க்கும் DTH  சேவையைத் தொடங்க முடிவெடுத்து, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறாராம்! இதை நிறைவேற்றிவிட்டாலே சன் டி.வி.யின் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் நம்புகிறாராம் கலாநிதி.

‘தனது இந்த நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டு, சன் டி.வி.க்கு DTH  சேவைக்கான உரிமத்தை வழங்கக் கூடாது என்று டெல்லியில் இப்போது சிலர் காய் நகர்த்துவதையும் உணர்ந்துள்ள கலாநிதி, அதை எதிர்கொண்டு சமாளித்து, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தனது நோக்கத்தை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்!’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இப்படி… மூன்று மாதங்கள் அமைதியாக இருங்கள் என்று தினகரன் ஊழியர்களுக்கு தயாநிதி ஆலோசனை சொல்கிறார்… கலாநிதி, மூன்று மாதத்திற்குள் DTH  சர்வீஸைத் தொடங்கி, எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்…. கலைஞர் குடும்பத்திலும் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக கனிமொழிக்கு ஏதாவது செய்யுங்கள்… ஸ்டாலினை ஆட்சி பீடத்தில் அமர்த்துங்கள்… என்றும் கலைஞருக்கு நெருக்கடி தந்திருக்கிறார்கள். அதனால்தான் இவ்வளவு விரைவாக கனிமொழி எம்.பி.யாக்கப்பட்டிருக்கிறார். ஸ்டாலினும் மிக விரைவில் பதவி உயர்வு அடைவார் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

”ஏன் எல்லோரும் ஆகஸ்டையே குறிவைக்கிறார்கள்…?” என்ற கேள்வியோடு கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்களை வலம் வந்தால், ‘எல்லாம் ஜோதிடம்தான் காரணம்!’ என்ற பதில் வந்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

கலைஞர்_மாறன் இருவர் குடும்பத்திலும் உள்ள பெண்கள் கோயில், குளம் என்று போவதை வழக்கமாகக் கொண்டுள்ளவர்கள் என்பது தவிர, ஜோதிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள் என்பதும் உள்வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த இரண்டு தரப்பும் தங்களுக்கு நெருக்கமான ஜோதிடர்களை ஆலோசித்ததில் ஒரே மாதிரியாக அவர்கள் சொன்ன தகவல், ‘வரும் ஆகஸ்ட் 5_ம் தேதியன்று நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அதனால் ஆட்சி அதிகாரம் கைமாறும். எதிரும் புதிருமானவர்கள் ஒன்றுசேரும் வகையில் விநோதமான அரசியல் மாற்றங்களும் நிகழும்!’ என்பதுதான்!

”ஜோதிட ரீதியாக மட்டுமல்ல, யதார்த்தமும் அதை நோக்கித்தான் போகிறது என்பதால்தான் ஆகஸ்டுக்குள் சிலவற்றைச் செய்யச் சொல்லி கலைஞர் குடும்பத்தினர் வற்புறுத்த…. ‘ஆகஸ்ட் வரை பொறுத்திருங்கள். அதன்பிறகு நமது திட்டங்களைச் செயல்படுத்தலாம்’ என்று மாறன் சகோதரர்களும் அணை போடுகிறார்கள்” என்கிறார்கள் பிரச்னையின் இந்தப் பரிணாமத்தை உணர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர்!

இப்படி, பகுத்தறிவைத் தாண்டி ஜோதிடம் தனது பங்களிப்பைச் செய்ய…. அரசியல் அனுபவம் கொண்ட கலைஞரும், இளமை ரத்தம் துள்ளும் மாறன் சகோதரர்களும் தங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் தர முனைந்திருக்கும் இந்த இரண்டாவது காண்டத்தின் முடிவை அறிந்துகொள்ள இரு குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டுமல்ல; அதிர்ச்சி கலந்த, உணர்ச்சிகள் நிறைந்த மனநிலையோடு கழக உடன்பிறப்புகளும் காத்திருக்கிறார்கள்! ஸீ

சில மாதங்களுக்கு முன்பு, போயஸ் கார்டனுக்குள் காரில் தனது நண்பரோடு போய்க் கொண்டிருந்தார் தயாநிதி மாறன். அங்கே ஜெயலலிதாவின் வீட்டிற்குப் பாதுகாப்பாக இருக்கும் போலீஸார், ஷிப்ட் மாறும் நேரத்தில் கும்பலாக ஒரு வேனில் இருந்து இறங்குவதைப் பார்த்தார் தயாநிதி. அதன்பிறகு ‘முன்னாள் முதல்வருக்கு எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கேள்விகள் எழ, அடுத்த சில நாட்களிலேயே ஜெ.வின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதையடுத்து, எழுந்த விமர்சனங்களை அரசியல்ரீதியாக கலைஞர் சமாளித்தார் என்பது வேறு விஷயம்.

இப்போது காட்சிகள் மாறிவிட்டன. மத்திய அமைச்சராக இருந்தபோது இருந்த பாதுகாப்புடனேயே இப்போதும் வலம் வருகிறார் தயாநிதி. ‘பதவி போன பின்பும் எதற்கு இவ்வளவு பாதுகாப்பு?’ என்று கோபாலபுரத்திலிருந்து குரல் கேட்கிறதாம் இப்போது! அதனால், எந்த நேரத்திலும் தயாநிதியின் பாதுகாப்பு வாபஸாகும் என்கிறார்கள் கோபாலபுரத்தின் குரலை அருகில் இருந்து கேட்டவர்கள்.

– எஸ்.பி. லட்சுமணன்

—————————————————————————————-

Posted in Alagiri, Alakiri, Analysis, Anbumani, Andipatti, Arcot, Astrology, Azhagiri, Azhakiri, Backgrounder, Balachander, Balu, Belief, Biosketch, CB-CID, CBI, Chidamabram, CID, Coimbatore, Congress, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Devaraj, Devraj, Dhinakaran, Dinagaran, Dinakaran, DMK, Faces, Gujral, History, IAS, IPS, Jaffer sait, Jaffer seth, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kavithalaya, Kovai, Kumaran, Lok Saba, LokSaba, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mallika, Manmohan, Maran, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli, Nagma, Nilagiri, Nilgiris, officers, P Chidamabram, Pa Chidamabram, Palanichami, Palanisami, Palanisamy, Pazanisamy, Pazhanisami, Pazhanisamy, PC, people, PMK, Police, Pongaloor, Pongalur, Radaan, radan, Radhika, Ramadas, Ramadoss, RAW, Sarath, Sarath Reddy, Sarathkumar, SCV, Selvaraj, Shanmugasundaram, Shanmukasundaram, Shanmukasundharam, Shanumugasundaram, Shanumughasundaram, Sharath, Sharath Reddy, Sharathkumar, Simran, Sonia, Sumangali, Sumangali Cable, Sumangali Cable Vision, Sumankali, Sun, Temple, Thevaraj, Thinakaran, Thiruchi, Thiruchirappalli, Thiruchy, TR Balu, Transfer, Trichirappalli, Trichy, TV, Veeragopal, Veerasami, Veerasamy | 4 Comments »