Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட், 2008

Amid war, United Peoples Freedom Alliance – Rajapaksa’s coalition, Sri Lankan ruling party wins local elections: North Cenral and Sabaragamuwa Polls

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008


புத்தபிக்குகள் குழுவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் கண்டனம்

தனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பி ஒலிமாசடைதல் நடவடிக்கையில் ஈடுபட்டார்  என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த மதகுரு ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்கக்கோரி சக மதகுருமார் குழுவொன்று சமர்பித்திருந்த விண்ணப்பத்தினை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்திருப்பதோடு, நீதிமன்றத்திற்கு அந்த சக மதகுருமார் குழு அபகீர்த்தி விளைவித்தனரென்றும் அவர்கள் மீது தனது  கண்டனத்தையும்  அதிருப்தியையும் வெளியிட்டிருகிறது.

இலங்கை உயர்நீதிமன்றம்
இலங்கை உயர்நீதிமன்றம்

கொழும்பின் புறநகர்பகுதியான ராஜகிரியவில்  அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றின் பன்னல பஞ்ஞாலோக தேரரே இவ்வாறு தனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பினார்  என்ற குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கினை பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மன்றே விசாரணை செய்தது.

உயர் நீதிமன்ற வட்டாரங்களின் தகவல்களின்படி, இவரது பிணை மனுவை இன்று விசாராணைக்கு எடுத்துக்கொள்ள பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர்நீதிமன்றத்திற்கு வருகைதந்தபோது பிணைமனுத்தாக்கல் செய்யவந்திருந்த சுமார் நூறு பௌத்தபிக்குகள் ஆசனத்திலிருந்து எழுந்துநிற்கவில்லை என்றும் இது நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தும் செயல் என்று கூறிய பிரதம நீதியரசர் இவர்களை நீதிமன்றக்கட்டிடத்திற்கு வெளியே சென்று மீண்டும் உள்நுழையும் படி அவர்களது சட்டத்தரணி மூலமாக அறிவுறுத்தல் விடுத்திருக்கிறார்.

ஆனால் பிரதம நிதியரசரின் இந்த அறிவுறுத்தலை இந்த பௌத்த பிக்குமார்கள் உதாசீனம் செய்தனர். இந்தச் செயல் உயர் நீதிமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலென்றும் இதனால் இவர்கள் சார்பில் முன்வைக்கப்படும் பிணை மனுவினை ஏற்க முடியாது என்று தெரிவித்த  பிரதம நீதியரசர்,  பன்னல பஞ்ஞாலோக தேரரை எதிர்வரும் 15ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


வன்னி, யாழ் மோதல்களில் 36 புலிகள், 5 ராணுவத்தினர் பலி, 16 ராணுவத்தினர் காயம்

இலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் களமுனைகளில் வியாழக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் முப்பத்தி ஆறு விடுதலைப் புலிகளும், ஐந்து இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் எட்டு சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

வன்னிக் களமுனைகளில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் மேலும் பதினாறு படையினர் காயமடைந்திருப்பதாகவும்
இராணுவ தலைமையகம் தனது இணைய தள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சடலங்களில் நான்கு சடலங்கள் நேற்று மாலை வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

வடக்கே கடும் மோதல்கள் இடம் பெறுகின்றன
இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் தொடர்கின்றன

இதற்கிடையில் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த 48 மணிநேர காலப்பகுதியில் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் இராணுவத்தினரின் முப்பது சடலங்களை ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் உள்ள படை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், கடந்த நான்கு தினங்களாக கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பிரதேச களமுனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உக்கிரச் சண்டைகளில் காணாமல் போயிருந்த படையினர் சிலரது சடலங்களும் இவற்றிலிருந்து அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.

இரண்டாவது தொகுதியாக நேற்று மாலை ஓமந்தை படையதிகாரிகளிடம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் கையளிக்கப்பட்டிருந்த பதினோறு சடலங்களும் அடையாளம் காண்பதற்காக அனுராதபுரம் மாவட்டம் பதவியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்தச் சடலங்களில் பல உருக்குலைந்தும், சிதைந்தும் இருப்பதனால் உரிய இராணுவத்தினரை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தனது இணைய தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

வடபகுதி மோதல்களில் பலரை காணவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுடன் நடக்கும் கடும் மோதல்களில் மேலும் 18 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

நாச்சிகுடாப் பகுதியில் இடம் இடம்பெற்றுவரும் மோதல்களில் பல இராணுவத்தினரை காணவில்லை என்றும் அவர்கள் விரைவில் தமது சக்காக்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இவ்வாறு காணாமல் போயுள்ள இராணுவத்தினருக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது இன்னமும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாகர்கோவில், முகமாலை போர் முனைகளில் மூன்று விடுதலைப் புலிகள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் பலியாகியுள்ளதாகவும் இராணுவம் கூறுகிறது.

முறிகண்டிப் பகுதிக்குள் இராணுவம் முன்னேறியுள்ளதாகத் தகவல்

வடக்கே கடும் மோதல்கள்
வடக்கே கடும் மோதல்கள் இடம் பெறுகின்றன

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கடும் எதிர் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் வன்னிப்பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக முன்னேறி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இத்தகைய முன்னேற்றத்தின் மேலும் ஒரு படியாக முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இன்று இராணுவத்தினர் முன்னேறியிருப்பதாகவும் அந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் 4 விடுதலைப் புலிகளின் சடலங்களைப் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இராணுவம் அக்கராயன்குளம் பகுதியில் ஏற்கனவே நிலைகொண்டிருப்பதாகவும், அக்கராயன்குளத்தின் தெற்கில் உள்ள முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இராணுவம் இன்று முன்னேறியிருப்பதாகவும் கூறினார்.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


வன்னிப் பகுதியில் பல பாடசாலைகள் திறக்கப்படவில்லை

ஆளில்லா பாடசாலை
ஆளில்லா பாடசாலை

இலங்கையில் இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைக்காலம் முடிவடைந்து, மூன்றாம் தவணைக்காக இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், இலங்கையின் வடக்கே போர்ப் பதட்டம் நிலவுகின்ற வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகள் முழுமையாக இன்று ஆரம்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னிப்பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளும் சுமார் 40 ஆயிரம் வரையிலான மாணவர்களும் இடம்பெயர்ந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் வடக்கு கல்வி வலயத்தில் 55 பாடசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தஞ்சம் புகுந்திருப்பதனால் இந்தப் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகவில்லை என வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அருளம்பலம் வினாயகமூர்த்தி கூறுகின்றார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 2000 குடும்பங்கள் 32 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்விட வசதிகள் செய்து கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் முடிவடைந்ததும் இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்றும் கூறுகிறார் கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள்.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


பதுளைப் பகுதியில் பல சிறுவயதுப் பெண்கள் கர்பம்

ஒரு இளம் கர்பிணி
ஒரு இளம் கர்பிணி

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் பாடசாலை செல்லும் மாணவ பருவத்துடைய சுமார் 30 இளவயது பெண்கள் கர்பமாக இருப்பதாகவும், இது அப்பகுதியில் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறிவருவதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண திசாநாயக்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரச் சூழல் காரணமாக இவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என்பது மட்டுமல்லாமல், சிறுவயதிலேயே காதல் வயப்பட்டு மதுப்பழக்கத்துக்கும் அடிமையாவதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பல வகையான ஊடகங்கள் மூலமும் இவர்கள் வழிதவறிச் செல்வதைக் காணக் கூடியதாகவும் இருப்பதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் சுகாதர அமைச்சகம் மற்றும் இதர அரச நிறுவனங்கள், போலீசார் ஆகியோருடன் இணைந்து ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹன திசாநாயக்க கூறினார்.


இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள்: இருதரப்பிலும் பெரும் இழப்புகள் என்று அறிவிப்பு

இலங்கையின் வடக்கே இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் கடும் மோதல்களில் இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செவ்வாய்கிழமை நடைபெற்ற மோதல்களில் மட்டும் 46 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது.

இதனிடையே திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இருதினங்களில் இராணுவத்தரப்பில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள்.

வடக்கே நடைபெறும் மோதல்களில் இறந்தவர்களின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக இருதரப்பினராலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் 22 சடலங்களும், இராணுவத்தினரின் 19 சடலங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் அதிகாரியான சரசி வியேரட்ண தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.


வன்னிப் பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என ஐ நா கூறுகிறது

வன்னி மக்களுக்கு உதவ ஐ நா முன்வந்துள்ளது
வன்னி மக்களுக்கு உதவ ஐ நா முன்வந்துள்ளது

இலங்கையில் வடக்கே கடுமையான மோதல்கள் நடந்துவருகின்ற வன்னி பெருநிலப்பரப்பில் தங்கியிருப்போருக்கும், அங்கிருந்து வெளியேறுவோருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய சகல முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவினை வழங்க ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐ.நாவின் அலுவலகம் புதன்கிழமையன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

வன்னிப் பகுதியிலிருந்து பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நகர்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிவித்துள்ளதையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வரவேற்றுள்ளது.

புலிகளுக்கும் கோரிக்கை

இட்ம பெயர்ந்த நிலையில் ஒரு குடும்பம்
இடம் பெயர்ந்த நிலையில் ஒரு குடும்பம்

பொதுமக்கள் சகல தருணங்களிலும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சுதந்திரமாக செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் பற்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடமும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தனது அவசரமான கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பிற்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆயுத நெருக்கடியில் சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளின்படி, தாம் எங்கெங்கே உதவிகளையும் பாதுகாப்பினையும் தேடவேண்டும் என்பதனை மக்களே தனிப்பட்டரீதியிலும் சுதந்திரமாகவும் தேர்வு செய்ய அனுமதிப்பது என்பது மிகமுக்கியமானது என்பதனையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது.


‘மல்லாவியை கைப்பற்றியது இலங்கை இராணுவம்’

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க மல்லாவி நகரப்பகுதியை இலங்கை இராணுவத்தினர் செவ்வாயன்று முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

பல வாரங்களாக விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று மல்லாவி நகரப்பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும், கடந்த மாதம் 22ஆம் திகதி துணுக்காய் பகுதியைக் கைப்பற்றியதன் பின்னர் இராணுவத்தினர் அடைந்துள்ள முக்கிய வெற்றியாக இதனைக் கருதுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மல்லாவி கைப்பற்றப்பட்டது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

ஆயினும் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினரை எதிர்த்து நேற்று பிற்பகல் 2 மணிமுதல் இன்று அதிகாலை 2 மணிவரையில் தாங்கள் நடத்திய கடும் தாக்குதல்களில் 34 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களில் 7 சடலங்களும் இராணுவ தளபாடங்களும் தங்களால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

எனினும், கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா உட்பட்ட வன்னிக்களமுனைகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 44 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. நாச்சிக்குடா பகுதியில், விடுதலைப் புலிகளுடன் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இன்று அந்தப் பகுதியில் விமானக்குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

இதற்கிடையே இலங்கையின் கிழக்கே அப்பாறை மாவட்டத்தில் பொத்துவில்- பாணமை வீதியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.


இலங்கையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு தண்டனை

பிரிகேடியர் உதய நாணயக்கார
பிரிகேடியர் உதய நாணயக்கார

இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடிய முன்னூறுக்கும் மேற்பட்டோருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 106 பேர் செவ்வாய்கிழமை தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமையன்று மேலும் 199 பேர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

இராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் மீண்டும் தங்களுடைய ராணுவ ரெஜிமெண்டுகளுக்கே வந்து சரணடையக் கூடிய ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர்கள் சரணடையாததன் காரணமாக இராணுவமும் போலீசாரும் அவர்களைக் கைதுசெய்து இராணுவ சட்ட நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை தண்டிப்பது இது முதல் முறையல்ல என்றாலும் கிட்டத்தட்ட 300 பேர் ஒரே நேரத்தில் தண்டிக்கப்படுவது இது தான் முதல் முறை என்றும் பிரிகேடியர் உதய நாணயகார தமிழோசையிடம் தெரிவித்தார்.

இராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் தங்களுடைய ரெஜிமெண்களுக்கு வந்து சரணடைந்தால் அவர்களை வரவேற்கப்படுவார்கள் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

இன்று தண்டிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் இருந்து ஒடியவர்கள் என்றும் அவர் கூறினார்.


மல்லாவியின் முக்கால்வாசியை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தின் முக்கால் வாசிப்பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், கடந்த ஒருவாரமாக நடத்தப்பட்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையின் மூலம் இது நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.

மல்லாவி ஒரு சிறிய நகரந்தானே, அதில் முக்கால் வாசியைப் பிடித்ததாகக் கூறுகிறீர்களே என்று கேட்டதற்கு பதிலளித்த, பிரிகேடியர் உதய நாணயக்கார, அது ஒரு பெரிய நகரம், அங்கு மல்லாவி ஆதார வைத்தியசாலை சில வங்கிகள், பீங்கான் தொழிற்சாலை, பெரிய வெதுப்பகம் மற்றும் புலிகளின் முக்கிய அலுவலகம் ஒன்று ஆகிய அனைத்தும் அங்கு இருக்கின்றன என்று கூறினார்.

விடுதலைப்புலிகளின் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகள் பற்றிய அரசாங்க அறிவிப்பு குறித்துக் கேட்டதற்கு பதிலளித்த பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், தற்போதைக்கு பொதுமக்கள் வவுனியாவுக்கு வரவேண்டுமானால், ஏ 9 பாதையூடாகத்தான் வரவேண்டும் என்றும், ஆனால், தற்போது தாம் பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவை பூர்த்தியானதும் அதுபற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.


வட இலங்கையில் தொடரும் மோதல்கள்

இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)
இடம்பெயரும் மக்கள்(ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மிகவும் மும்முரமான மோதல்கள் இடம்பெறும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எறிகணைத்தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாக வவுனியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

வவுனியா ஓமந்தைக்கு வடக்கே ஏ9 வீதியில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் ஞாயிறு மாலை இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் 53 வயதுடைய சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த எறிகணைத் தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

ஆனால், இதனை இராணுவத்தினர் மறுத்திருக்கிறார்கள்.

இராணுவ சடலங்களைக் கையளித்ததாக புலிகள் அறிவிப்பு

வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 4 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக இராணுவத்தினரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இதனிடையே, வன்னிப்பகுதியில் தற்போது பெய்யத் தொடங்கியுள்ள மழை காரணமாக வீதியோரங்களில் கொட்டில்களிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடம்பெயர்ந்த மக்களை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பிரதேசத்திற்குள் வருமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்ற போதிலும், அந்த அழைப்பையேற்று எவரும் வவுனியா அல்லது மன்னார் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வந்ததாக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

பதுங்கு குழிகளை அமைக்குமாறு புலிகள் வலியுறுத்தல்

அதேவேளை, வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை ஒன்று கோருகிறது.

அனைத்து இடங்களிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற அந்த அறிக்கையில், எறிகணைவீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல் நிகழும் சந்தர்ப்பங்களில் உடனடியாகவே மக்கள் பதுங்குகுழிகளில் பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கையின் வடக்குக் களமுனைகளில் நேற்று இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 42 விடுதலைப்புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 17 படையினர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.

எனினும் வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 12 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இலங்கை கிளிநொச்சியில் எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் பலி

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் புதுமுறிப்பு என்னுமிடத்தில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில், குழந்தைகள் உட்பட 5 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி நகரில் இருந்து சுமார் 4 கிலோ மீ்ட்டர் தொலைவில் இடம்பெற்றிருப்பதாகக் கூறியிருக்கும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், பொதுமக்கள் மீதான இந்த எறிகணை தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றது.

இந்த குற்றச்சாட்டுக்கான பதிலை இலங்கை இராணுவத்தினரிடம் இருந்த பெற முடியவில்லை.

மன்னார் மாவட்டம் மடு பிரதேசத்தில் உள்ள பரப்புக்கடந்தான் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் தஞ்சமடைந்திருந்த இடத்திலேயே இநத அசம்பாவித சம்பவம் நடைபெற்றிருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.

பலியானவர்களின் உடல்கள் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கொழும்பு குண்டுவெடிப்பில் 45 பேர் காயம்

கொழும்பு குண்டுவெடிப்பு
கொழும்பு குண்டுவெடிப்பு

இலங்கையின் சனசந்தடி நிறைந்த கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் 45 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட புறக்கோட்டை பொலிசார், இன்று சுமார் 12.15 மணியளவில் புறக்கோட்டைப் பாதையோரத்தில்  அரசமரதடிப்பகுதிக்கு சற்றுத்தொலைவில் அமைந்துள்ள கடிகாரம் விற்கும் சிறிய கடையொன்றில்  இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 45 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் ஒரு சிலருக்கே பாரிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வைத்தியசாலையின் விபத்துக்கள் சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.


புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் பிரசுரங்களை கிளிநொச்சியில் வீசியுள்ளனர் விமானப் படையினர்

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இரவு நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் தாழப்பறந்து ஆயிரக்கணக்கான இந்த துண்டுப்பிரசுரங்களை வீசியதாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சியிலிருக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.

தமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த துண்டுப்பிரசுரங்களில், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருவதாகவும், எனவே பொது மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு அரசு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்வதன் மூலம் தங்களின் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


மட்டக்களப்பு சிறையில் குண்டுவெடிப்பு

மட்டக்களப்பு சிறை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 5 பேர் உட்பட 7 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தனியாக வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்திற்குள் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறும் பொலிசார், அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மற்றுமொரு கைக்குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தைக் கைதிகள் தப்பியோடுவதற்கான முயற்சியாகவே தாம் சந்தேகிப்பதாகக் கூறும் சிறைச்சாலை அத்தியட்சகரான லால் விக்கிரமசிங்க, சிறைச்சாலைக்குள் குண்டுகள் எப்படி கொண்டு வரப்பட்டன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஈ.பி.டி.பி குற்றம்சுமத்துகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அதனை மறுத்துள்ளனர்.



நளினி விடுதலையை எதிர்ப்பது ஏன்? – தமிழக அரசு விளக்கம்

நளினி – பழைய படம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் நளினி விடுதலை செய்யப்படுவதற்கு எதிரான ஆட்சேபணைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றின் மூலம் விளக்கியிருக்கிறது.

ஆயுட்தண்டனை என்பதை பொதுவாக 14 ஆண்டுகள் என்ற ரீதியில் புரிந்துகொண்டு, தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருவதை சுட்டிககாட்டி, நளினி விடுதலை கோரி மனுதாக்கல் செய்தார்.

மாநில ஆலோசனை வாரியம் முதற்கட்டத்தில் அவரது கோரிக்கையினை நிராகரித்தது. அந்நிராகரிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நளினி மனுச்செய்தார்.

இந்நிலையில் தமிழக அரசு ஆலோசனை வாரியத் தீர்ப்பில் தனக்கு முழு உடன்பாடுதான் என்றும், நளினி விடுதலையை கோரப்போவதில்லை என்றும் கூறியது. அது குறித்த விளக்கமான மனு இன்று தாககல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்க்லாம்.

இன்று நீதிபதி நாகமுத்து முன் நளினியின் மனு பரிசீலனைககு வந்தபோது விளக்கமான மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்தது.


திருகோணமலை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுவீசியுள்ளது

இலங்கையின் கிழக்கே திருகோணலை துறைமுகத்தை இலக்குவைத்து விடுதலைப் புலிகளின் விமானம் செவ்வாய் இரவு ஒரு தாக்குதலை நடத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை வீசி விட்டுச் சென்றதில் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல படையினர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.

இந்த தாக்குதல் குறித்து இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கருத்து வெளியிடுகையில், “விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் திருகோணமலை துறைமுகப் பகுதியில் இரண்டு குண்டுகளை வீசியது. இரண்டு குண்டுகளும் வெடித்தன. இதில் பத்து கடற்படையினர் காயமடைந்தனர். ஆனால் கப்பல் தளத்தில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித சேதமும் இல்லை” என்றார்.

“சிறிய விமானத்தில் வந்து குண்டுகளை வீசுவது என்பது பெரிய அச்சுறுத்தல் கிடையாது. விடுதலைப் புலிகளின் நோக்கம் நாட்டு மக்களை பீதியடையச் செய்வதுதான்.ஆனால் இந்த தாக்குதல்களில் அவர்கள் இலக்குகளை அழிக்கமுடியவில்லை.” என்றும் அவர் குறிபிப்பிட்டார்

அவர் தெரிவித்த பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கையில் கடும் மோதல்கள் நீடிக்கின்றன

இலங்கை படையினர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் குறைந்தது 32 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கையின் படைத்துறைத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

வவுனியா, முல்லைத்தீவு, வெலிஒயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்க்கு வடக்கிலும் இராணுவத்தினர் தமது பகுதிக்குள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள விடுதலைப் புலிகள், இங்கு இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலத்தையும் ஆயுதத் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் புத்துவெட்டுவான் பகுதியில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லபட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை கடற்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம், கடற்படைத்தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் விடுதலைப்புலிகளின் விமானங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் அந்தத்தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கூறியுள்ளது.

அதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் பீரங்கி வேட்டுக்கள் ஆகியன தொடர்ந்து வெடித்ததாகவும் திருகோணமலை வாசிகள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயத்துக்கு இலக்கான கடற்படையினர் குறைந்தது 10 பேர் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலையடுத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் விமானங்களை தேடியழிப்பதற்காக வன்னி பிரதேசத்துக்கு விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் சென்று வந்ததாக வடபகுதியிலிருக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் படையின் இந்த வான்வழித் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.


கிழக்கிலங்கை பல்கலைக்கழக பாதுகாப்பு பொலிஸாரிடம்

கிழக்கு பல்கலைக்கழகம்
கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பொலிஸாரின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் சிங்கள மாணவரொருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பும் இன்று முதல் பொலிசாரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்றுக் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸாரால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் 60 பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் காவல் நிலையமொன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது

பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் சகலரும் இனிமேல் சோதனையின் பின்பே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இப் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்

இப்புதிய பாதுகாப்பு நடைமுறையின் கீழ் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதன் திருகோணமலை வளாகம் அம்பாறை தென் கிழக்கு பல்கலைகழகம் ஆகியவற்றின் பாதுகாப்பை இன்று முதல் பொலிஸார் பொறுப்பேற்றூள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



வட இலங்கை மோதல்களில் 7 இராணுவத்தினர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதி மோதல்களில் இலங்கை இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 18 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தமது படையினர் அங்கு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், விடுதலைப்புலிகள் தரப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

முல்லைத்தீவின் மேற்கு முனை, கிளிநொச்சியின் தென்பகுதி, நாச்சிக்குடா, முல்லைத்தீவு கிழக்கு, ஆண்டான்குளம் ஆகிய இடங்களில் பல மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணைய அறிக்கையில் கூறியுள்ளது.

இருந்தபோதிலும், இவை குறித்து விடுதலைப்புலிகளின் கருத்துக்களை உடனடியாகப் பெறமுடியவில்லை.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களை வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள வேறு பல்கலைக்கழகங்களுடன் தற்காலிகமாக இணைக்க உயர் கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பல்லைக்கழக வளாகத்திற்குள் சிங்கள மாணவரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலையையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப் படுகொலைச் சம்பவமானது துரதிர்ஷ்டவசமானது என பி.பி.சி தமழோசைக்கு கூறிய உயர் கல்வி அமைச்சரான பேராசிரியர் விஸ்வ வர்ணபால, அங்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதாகவும், இதன் காரணமாகவே பெற்றோர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில் தற்காலிகமாக இம் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மற்றும் வெலிஓயா பிரதேச போர்முனைகளில் ஞாயிற்றுகிழமையன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா பிரதேசத்தில் ஞாயிறு காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 10 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இந்தப் பிரதேசத்தில் வேறோரிடத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.



இலங்கையில் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி

இலங்கை ஜனாதிபதி
மக்களுக்கு கிடைத்த வெற்றி – இலங்கை ஜனாதிபதி

இலங்கையின் சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சனிக்கிழமை இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு வெற்றி பெற்று இரண்டு மாகாணசபைகளிலும் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

ஞாயிற்றுகிழமை தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம், இருமாகாணங்களிலுமாக மொத்தமுள்ள 77 இடங்களில் 45 இடங்களை ஆளும் கூட்டணி கைப்பற்றியுள்ளது. வெற்றி பெறும் கட்சிக்கும் வழங்கப்படும் போனஸ் இடங்களும் இதில் அடங்கும். ஆளும் கூட்டணி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 7,80,246.

இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மொத்தம் 29 இடங்களையும், ஆளும் கூட்டணியின் முன்னாள் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. 38,425 வாக்குகளை மாத்திரம் பெற்று மூன்று இடங்களையும் மட்டும் பெற்றன.

இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தோல்விபெற்றிருக்கின்ற போதிலும், கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது, இம்முறை அந்தக் கட்சி நான்கு மேலதிக இடங்களை பெற்றுள்ளது.அதேவேளை, ஆளும் கட்சி நான்கு இடங்களை இழந்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் வெற்றி குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இந்தத் தேர்தல் வெற்றியானது நாட்டுமக்கள் அனைவரிற்கும் கிடைத்தவெற்றியென்றும், இந்த வெற்றியானது பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு அளவிடமுடியாத சக்தியினையும், ஊக்கத்தினையும் வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.


இலங்கையின் மட்டக்களப்பில் தேசிய நல்லிணக்க செயலகம்

செயலகம் திறப்பு
செயலகம் திறப்பு

இலங்கையில் மூவினங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில், மாகாண முதலமைச்சரின் கீழ் அமையவிருக்கும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான இன நல்லிணக்கச் செயலகத்தின் முதலாவது செயலகத்தை, மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தார்

மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து சமய, சமூக தலைவர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் முன்னிலையில் இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண முதலமைச்சர், காணி, மீள் குடியேற்றம், தொழில் மற்றும் கல்வி உட்பட பல்வேறு விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை அரசியலுக்கு அப்பால் காண்பதே இச்செயலகத்தின் நோக்கம் என்றார்.

மூவினங்களையும் சேர்ந்தவர்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியாக செயல்படவிருக்கும் இந்த இன நல்லிணக்கச் செயலகத்தில் அங்கம் வகிப்பார்கள் என்றும், முதலமைச்சரின் செயலகத்தில் இதற்கென தனியான நிறைவேற்றுப் பணிப்பாளரொருவர் நியமிக்கப்ப்டுள்ளார் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டு இது பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது.


இலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெலிஓயா பிரதேசத்திலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 28 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவி்த்திருக்கின்றது. இந்த மோதல்களில் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாக இராணுவம் கூறியிருக்கின்றது.

வவுனியா பாலமோட்டை – கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்திய எதிர்த்தாக்குதல்களில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் யாழ்குடாநாட்டில் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 833 இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவது என இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உயர் மட்டக்குழு முடிவு செய்துள்ளது.


இலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு

கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள்

இலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.

அக்குண்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.


துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.

பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள்

மறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



மௌலவி ஆசிரியர்களை நியமிக்க இலங்கை அரசு மீண்டும் முயற்சி

இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு சுமார் 15 வருடங்களின் பின்பு மௌலவி ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் முடிவுசெய்து அதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு முக்கியமான நியமனம் என கருதப்படும் இந்நியமனம் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளினாலும் அமைப்பகளினாலும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் தற்போது தான் இது தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளது.

இஸ்லாம் என்பது அரபு மொழியுடன் தொடர்புடையது என்பதால், அரபு மொழியை உச்சரிக்கக் கூடியவர்களே அப்பாடத்தை கற்பிக்க வேண்டும் என ஜாமியத்துல் உலமா சபைகளின் பொதுவான கருத்தாகும்.

மௌலவி அல்லாத ஏனைய பாட ஆசிரியர்கள் இஸ்லாம் கற்பிப்பதால், அரபு மொழியை சரியாக உச்சரிக்க தவறுவதாக கூறும் அரபு மொழி உதவிக் கல்விப் பணிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.எம்.முபாரக் மௌலவி.

இதன் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் கூட பாதிக்கப்படுகின்றது என்கிறார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும் சுமார் 425 ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க செயலாளரான எம்.அனஸ் சுட்டிக் காட்டுகின்றார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

சாருகேசி :: நதிகளை இணைக்கும் நாரத கான சபா!

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

வருடா வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நாட்டிய விழா நடத்துவது நாரத கான சபாவின் குறிப்பிடத் தகுந்த பணிகளில் ஒன்று.

சென்ற ஆண்டு “úக்ஷத்திர பரதம்’ என்ற தலைப்பில் சுமார் ஒரு டஜன் புண்ணிய úக்ஷத்திரங்களை பரதநாட்டிய வடிவத்தில் பாடல்களுடனும், பஜன்களுடனும் நாட்டிய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த ஆண்டு கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சி போல, “தீர்த்த பரதம்’ என்ற தலைப்பில், ஏழு புண்ணிய நதிகளைப் பற்றி பரதநாட்டிய வடிவில் ஒரு வாரவிழா நடத்துகிறது நாரதகான சபா.

நடனக் கலைஞர்கள் நடனம்தான் ஆடமுடியும். நதி எங்கே தோன்றுகிறது. எங்கே முடிகிறது. வழியில் என்னென்ன úக்ஷத்திரங்கள் இருக்கின்றன. எந்தெந்தப் பாடல்கள் எந்தெந்தப் பின்னணிகளில் பாடப்பட்டன, புராண-சரித்திர விவரங்கள், தகவல்கள் என்னென்ன என்று அவர்கள் எப்படி அறிவார்கள் என்று கேள்வி எழும்.

இந்தச் சிக்கலைச் சமாளிக்க நாரதகான சபா ஏற்கெனவே ஒரு வழியைக் கண்டுபிடித்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வந்திருக்கிறது.

ஆராய்ச்சிக் கட்டுரைகளில் திறமையும், ஆர்வமும் உள்ள நிபுணர்களை அணுகி அவர்களிடம் நாட்டியக் கலைஞர்களுக்குத் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் கொடுத்து, நிகழ்ச்சிக்குத் தேவையான பாடல்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்த வருடம் நாட்டியரங்கம் வழங்கிய “தீர்த்தபரதம்’ நிகழ்ச்சிக்கு இப்படிக் கைகொடுத்து உதவ முன்வந்தவர்கள் அவரவர் துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல; சொற்பொழிவாளர்களும்கூட.

லலிதா ராமகிருஷ்ணா கர்நாடக இசை பற்றிய நுணுக்கமான தகவல்களைச் சேகரித்து புத்தகங்கள் எழுதியவர். இவர் பிரம்மபுத்திரா நதி பற்றியும், அதன் கிளை நதிகள், வழித்தடங்களில் உள்ள கோயில்கள், அந்தப் பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் பரம்பரை பாடல்கள் என்று ஓர் ஆராய்ச்சியே செய்திருக்கிறார் இந்த நதி பற்றி. பிரம்மபுத்திரா மட்டுமே ஆண் நதி என்று உங்களுக்குத் தெரியுமோ?

யமுனை பற்றி, கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் அவர்கள் முக்கியமான குறிப்புகளையும் தகவல்களையும் பொறுக்கி எடுத்துக் கொடுத்திருக்கிறார். (கங்கை நதிதான் ரொம்பவும் உயர்ந்தது என்று சொல்லுபவர்கள், கிருஷ்ணர் ஆடிக்களித்த யமுனைதான் மிக உயர்ந்தது என்று இவர் சொல்லுவதைக் கேட்டு புருவம் உயர்த்தக் கூடும்!)

டாக்டர் சுதா சேஷய்யன், தமது சொற்பொழிவுக்கே சாதாரணமாக எக்கச்சக்க ஆதாரங்களையும் பாடல்களையும் மடை திறந்த மாதிரி சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்.

(நர்மதா நதி பற்றி அவர் செய்த ஆராய்ச்சியை வைத்துக்கொண்டு, வடக்கத்திய நடனக் கலைஞர் வைபவ் அரேக்கர் நடனம் ஆடப் போகிறார்!)

டாக்டர் பிரேமா நந்தகுமார் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் புலமை பெற்ற எழுத்தாளர், பேச்சாளர். கோதாவரி நதி பற்றி இவர் தொகுத்துக் கொடுத்திருக்கும் செய்திகளும், பாடல்களும் நடனக் கலைஞர் நளினி பிரகாஷுக்கு உதவியிருக்கின்றனவாம்.

டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியம் தமிழ் வாசகர்களுக்கும், சரித்திர ஆராய்ச்சி ஆர்வலர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். காவிரி நதி பற்றி அவர் தொகுத்து அளித்திருக்கும் தகவல்களும், பாடல்களும்தாம் இந்த நாட்டிய விழாவில் நடனக் கலைஞருக்கு உதவப் போகின்றன.

டாக்டர் சித்ரா மாதவன் சரித்திர ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல; தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளரும்கூட. இவருடைய ஆங்கிலச் சொற்பொழிவுகள் எங்கெல்லாம் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் இவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டு வருவது ஒன்றே இவருடைய திறமையை உணர வைக்கும். (இவர் இந்த நடன நிகழ்ச்சிக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, கண்ணால் காண்பதே மெய் என்று, நேரடியாக தாமிரபரணி நதி பாயும் இடங்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்கோயில்கள் மற்றும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய பாடல்களையும் அறிந்து வந்திருக்கிறார்!)

இத்தனை ஆதாரங்கள், தகவல்கள் எல்லாம் ஒரு நடன நிகழ்ச்சியோடு போய் விடக்கூடாதே என்று நாரதகான சபா இந்த ஏழு நதிகள் பற்றிய ஏழு கட்டுரைகளையும் ஓர் அழகான தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

கங்கை பற்றி சுஜாதா விஜயராகவன் எழுதியிருக்கும் முதல் கட்டுரை தொடங்கி, டாக்டர் சித்ரா மாதவன் தாமிரபரணி பற்றி எழுதியிருக்கும் அத்தனை கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.

நடனத்தை மட்டும் கண்டு ரசித்துச் செல்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, இவை போன்ற நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளில் ஆர்வம் காண்பிக்கும் ரசிகர்களுக்காகவே இந்த நூல் வெளியிடப்படுகிறது. பிரதி வேண்டுவோர் சபாவைத் தொடர்பு கொள்ளலாம்.

நடன நிகழ்ச்சி பற்றி விரிவாக அடுத்த வாரம் பார்ப்போம்!

எந்தப் பெற்றோராவது, பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு, “இவங்க எதிர்காலத்தை நினைச்சாலே பயங்கரமா இருக்கு!’ என்று சொன்னால், அவர்களை உடனே எஸ்.பி.காந்தன் இயக்கி, நடிகர் மாது பாலாஜி தயாரித்திருக்கும் “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்’ என்ற குறும்படத்தை வாங்கச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்.

திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன் பத்திரிகையாளர், பல பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர் மட்டுமல்ல. சிறந்த கல்விச் சிந்தனையாளர். அவரும் அவர் துணைவி ராதா ஸ்ரீதரனும் அமர்ந்து குழந்தைகளின் கல்வி, அவர்கள் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி உரையாடும் டிவிடி-தான் இது. ஆனால் ஒரேயடியாக டிவி உரையாடல் மாதிரி இல்லாமல், அங்கங்கே படங்களையும், சித்திரங்களையும் பொருத்தமாகச் சேர்த்திருக்கிறார் காந்தன்.

உரையாடல் மிக இயல்பாக அமைந்திருக்கிறது என்பதோடு, தெளிவாக இருக்கிறது. வளரும் குழந்தைகளின் கல்வி சார்ந்த அத்தனை விவரங்களையும் ஒவ்வோர் அம்சமாக எடுத்துக்கொண்டு 3 நிமிடம், 5 நிமிடம், 8 நிமிடம் என்று பிரித்துக்கொண்டு சுவாரசியமாகத் தயாரித்திருக்கிறார்.

“தாரே ஜமீன்பர்’ திரைப்படத்திற்குப் பிறகு பரவலாகப் பேச்சில் அடிபடும் டிஸ்லெக்சியா பற்றியும் ஒரு பகுதி இருக்கிறது. (அது நோயல்ல; கவனக் குறைவுதான்!) கூடவே டிஸ்க்ராஃபிலியா, டிஸ்காங்குலியா போன்ற சிறு குறைபாடுகள் பற்றியும் உரையாடலில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதரன்.

வலது மூளை -இடது மூளை, யோகாவின் அவசியம், படிக்கும் பழக்கம் எவ்வாறு உதவுகிறது, குழந்தைகள் எப்படி சரளமாக ஆங்கிலம் பேசலாம், எட்டு வகை புத்திசாலித்தனங்கள் என்று வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது டிவிடி. பெற்றோர் மட்டுமல்ல, ஒவ்வொரு பள்ளிக்கூட ஆசிரியரும் அவசியம் கவனமாகப் பார்க்க வேண்டிய பல அம்சங்கள் கொண்ட இந்தக் குறும்படம், பலருக்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Interview with Sirpi Award winner Kavinjar Sugumaran – Dinamani

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

காகிதம் காலியாக…உண்மையை எழுதுகிறேன்!

ஜி.மீனாட்சி

இந்த ஆண்டுக்கான (2008) “சிற்பி இலக்கிய விருது’ பெற்றுள்ளார் கவிஞர் சுகுமாரன். கவிஞர் என்ற முதன்மை முகத்துடன், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர் சுகுமாரன்.

நவீன தமிழ்க் கவிதையில் தனக்கென தனித்த மொழி நடையும், சொற்செட்டும் கொண்டவர். வருணனைகள் அதிகமின்றி நதியின் இயல்பில் நகரும் படகுபோல் இயல்பாய், நேருக்கு நேராய் பேசக்கூடியதுபோல அமைந்தவை அவரது கவிதைகள்.

35 ஆண்டுகளாக சுகுமாரன் பெரும்பாலும் பென்சிலால் எழுதி வந்துள்ள கவிதைகளின் தொகுப்பான “பூமியை வாசிக்கும் சிறுமி’ என்ற புத்தகமே அவருக்கு சிற்பி இலக்கிய விருதைப் பெற்றுத் தந்துள்ளது. விருது பெறுவதற்காக பொள்ளாச்சி வந்த கவிஞர் சுகுமாரனிடம் பேசியதிலிருந்து…

உங்கள் எழுத்துலகப் பிரவேசம் எந்த வயதில் நிகழ்ந்தது?.

பள்ளி செல்லும் பருவத்தில் எல்லோரையும்போல் கிறுக்குத்தனமாக எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். பிரசுரமான முதல் கவிதை என்றால், என்னுடைய 16-வது வயதில் “கண்ணதாசன் இதழில்’ வெளிவந்த கவிதையைக் கூறலாம். தொடர்ந்து “தாமரை’, “கணையாழி’, “காலச்சுவடு’ போன்ற இதழ்களிலும் எனது கவிதைகள், சிறுகதைகள் வெளிவந்தன. ஆரம்ப காலத்தில் என்னுடைய தமிழாசிரியர்கள் என் கவிதைகளைப் படித்துப் பார்த்து ஊக்குவித்தார்கள்.

உங்களின் முன்னோடியாக யாரைக் கருதுகிறீர்கள்?

இலக்கியத்தை விரும்பும் எல்லோரையும்போல சுப்பிரமணிய பாரதியார்தான் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். புதுமைப்பித்தனின் படைப்புகளில் மனதைப் பறி கொடுத்திருக்கிறேன். சுந்தரராமசாமி, பிரமிள், விக்கிரமாதித்தன், கலாப்ரியா ஆகியோரின் படைப்புகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பலரது படைப்புகளும் என்னைபப் பாதித்திருந்தாலும், எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், என்னுடைய படைப்புகள் யாருடைய சாயலும் இல்லாதவை. எனக்கென தனி மொழி, என் அனுபவத்தின் வெளிப்பாடு போன்றவையே என் கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. எல்லோரும் செய்வதையே நாமும் செய்வோம் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.

இதுவரை நீங்கள் எழுதியுள்ள படைப்புகள் பற்றி…

35 ஆண்டுகளாக நான் எழுதி வந்திருந்தாலும்கூட, குறைந்த எண்ணிக்கையிலான கவிதைகளையே எழுதியுள்ளேன். 4 பக்கத்தில் சிறுகதை எழுதுவதற்குப் பதிலாக ஒரே கவிதையில் என் கருத்துக்களைச் சொல்லிவிடலாம் என்பதால், கவிதைக்கே நான் முன்னுரிமை கொடுத்தேன். “உயிர்மை’ சிற்றிலக்கிய இதழில் “தனிமையின் வழி’ என்ற தொடர் எழுதியுள்ளேன். நிறைய நூல்களை மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன். மலையாளத்தின் மூத்த கவிதாயினி சுகதகுமாரி முதல் புதிய தலைமுறைக் கவிதாயினி கவிதா பாலகிருஷ்ணன் வரை 10 பெண் கவிஞர்களின் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து “பெண் வழிகள்’ என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளேன். பாப்லோ நெரூடா கவிதைகள் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். உலகக் கவிஞர்கள் எட்டு பேரைப் பற்றி “கவிதையின் திசைகள்’ என்ற புத்தகமும் வெளிவந்துள்ளது.

என்னுடைய படைப்புகளும் இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பத்திரிகைத் துறையில் உங்கள் அனுபவம்…

குங்குமம் பத்திரிகையின் துணையாசிரியராகவும், சூர்யா தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியராகவும் இருந்துள்ளேன். இரண்டு ஊடகங்களிலுமே எனக்கு நிறைய சுதந்திரம் இருந்தது. என் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லும், எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.

தற்போது கிழக்குப் பதிப்பகத்தின் நியூ ஹொரைசான் மீடியாவின் தலைமைப் பதிப்பாசிரியராக திருவனந்தபுரத்தில் பணியாற்றுகிறேன்.

எழுத்தாளனுக்கு பத்திரிகைப் பணி என்பது ஒரு சாபக்கேடாகக்கூட இருக்கலாம். நாம் சார்ந்திருக்கும் பத்திரிகையின் கொள்கைகளுக்கேற்ப எழுத வேண்டி இருக்கும். வர்த்தக அடிப்படையில் செயல்படுவது, பத்திரிகையின் குணம். அதற்கேற்ப பத்திரிகையாளன் இயங்க வேண்டி உள்ளது.

இதுவரை பெற்றுள்ள விருதுகள் பற்றி…

இப்போது கிடைத்துள்ள சிற்பி இலக்கிய விருதுதான் நான் பெற்ற முதல் விருது. என் படைப்புகளை நானே அனுப்ப, அதைச் சிலர் தேர்ந்தெடுத்து விருது தருவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. விருது தர விரும்புபவர்கள் தாங்களாகவே சிறந்த படைப்பைத் தேர்ந்தெடுத்து வழங்கும் விருதுதான், படைப்பாளிக்குக் கிடைக்கும் உண்மையான அங்கீகாரம் எனக் கருதுகிறேன்.

கவிதை எழுதுவது, மற்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்ப்பது… எது கடினமானது?

சொந்தமாகக் கவிதை எழுதுவதுதான் என்னைப் பொருத்தவரை கடினமானது. உணர்வைச் சொற்களாக்குவதில் சிக்கல்கள் தோன்றலாம். மொழிக்குள் நான் இயங்கினால்தான் கவிதை பிறக்கும். எதையும் வலிந்து செய்ய முடியாது. மொழிபெயர்ப்பில் சிக்கல் இல்லை. அந்த மொழி நமக்குத் தெரிந்தால்போதும். கலாசார இடர்பாடுகள் வேண்டுமானால் சில நேரங்களில் வரலாம்.

பத்திரிகையாளன்… கவிஞன்… எப்படிச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறீர்கள்?

நான் பத்திரிகையாளன் ஆனது தற்செயல் நிகழ்வு. வாழ்வின் நோக்கமல்ல; பிழைப்பின் நோக்கம். ஆனால், பத்திரிகைத் துறையில் ஈடுபட்டபோது, அதற்குத் தகுதியான ஆள் நான் என்பதை உணர்ந்தேன். 12 வயதில் பிடித்த பேனா, அதே உற்சாகத்துடன், ஆர்வத்துடன் என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கிறது. எழுத்தைச் சார்ந்து நான் இருக்கிறேன். ஒரு முகம்தான் எனக்கு.

பத்திரிகைகளின் பக்கத்துக்குப் பக்கம் ஒரு காலத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த புதுக் கவிதைகளில் தற்போது பெருத்த தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறதே..

1945-ல் பிச்சமூர்த்தி எழுதிய “காதல்’ என்ற கவிதைதான் தமிழின் முதல் புதுக்கவிதை வடிவம். அதற்கு முன்பு பாரதி, புதுமைப்பித்தன் எழுதியவை வசன கவிதைகளாகக் கருதப்பட்டன. ஆரம்பத்தில் புதுக்கவிதைக்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. எந்தப் புது விஷயமும் ஆரம்பத்தில் எதிர்ப்புக்குள்ளாவது இயல்புதானே? பின்னர் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பழங்காலக் கவிதைகள் செய்யுள் வடிவத்தில் இருந்தன. மொழியும், மொழி சார்ந்த இலக்கணமும் அவற்றுக்கு ஆதாரமாக இருந்தன.

காலப்போக்கில் புதுக்கவிதையை ஜனநாயகப்படுத்தும் முயற்சியாக அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

உண்மையில் புதுக்கவிதையில் புதிய பரிமாணங்கள் இப்போதுதான் பிறந்துள்ளன. பெண் குரல், தலித் குரல், குழந்தைகள் குரல் என்று பல குரல்கள் புதுக்கவிதையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

புதிய தலைமுறைக் கவிஞர்களில் யாருடைய படைப்பு தங்களை அதிகம் கவர்ந்துள்ளது?.

பெண் கவிஞர்கள் சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி, தேன்மொழி போன்றவர்களின் படைப்புகள் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளன. ஆண்களில் முகுந்த் நாகராஜன், ராஜ்குமார், அழகிய பெரியவன் என்று பெரிய பட்டியலே உள்ளது.

இளம் தலைமுறைக் கவிஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது…?

அறிவுரை என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. என் அனுபவத்தை, என் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்வதற்கான பொது வெளிதான் -எழுத்து. சமூகத்தின் மீதான என் வருத்தத்தை, கோபத்தை என் எழுத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன், அவ்வளவுதான். பாரதியார் கூறியிருப்பதுபோல “தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்’ என்பதே என் கருத்தும். லத்தீன் அமெரிக்கக் கவிஞர் நிக்கோனர் பாஹாவின் கருத்துப்படி, காகிதம் காலியாக இருக்கிறது. அதில் உண்மையை எழுதி நிரப்புகிறேன். பொய்யை எழுத முடியாது அல்லவா?

உங்கள் சாதனையாகக் கருதுவது…?

35 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருவதே சாதனைதான். எல்லோரையும்போல சாதாரண வாழ்க்கைதான் என்னுடையதும். வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே கவிதை எழுதும் ஆர்வத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பதே சாதனைதானே?.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

வரலாற்று இல்லங்கள்! — சாருகேசி

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

“சென்னை வாரம்’ தொடர்பாக நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், மெட்ராஸ் புக் கிளப் நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், சரித்திர-தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சித்ரா மாதவன் சென்னையில் அதிகம் அறியப்படாத ஆலயங்கள் பற்றிய உரையும் குறிப்பிடத்தகுந்தவை.

வி.ஸ்ரீராம் எழுதி, கலம்க்ரியா பதிப்பித்திருக்கும் “சென்னையின் வரலாறு படைத்த இல்லங்கள்’ வெளியீட்டு விழா ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது. இடப்புறம் ஓவியர் விஜயகுமார் வரைந்த கட்டடமும், வலப்புறம் ஆங்கிலப் பகுதியோடு பத்மா நாராயணனின் தமிழ் மொழிபெயர்ப்பும் அச்சிடப்பட்ட இந்த நூலில் வரலாறு படைத்த 50 வீடுகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் நிறைய இருக்கின்றன.

கல்கி கார்டன்ஸ், அன்னை இல்லம், ப்ராடீகாஸில், செட்டிநாடு மாளிகை, பாரதி இல்லம், சி.வி.ராமன் இல்லம். “ஜலதரங்கம்’ ரமணய்ய செட்டி இல்லம். டாக்டர் ராதாகிருஷ்ணன் வீடு, வீணை தனம்மாள் வீடு, உட்லண்ட்ஸ், திருவொற்றியூர் தியாகய்யர் இல்லம், ஓவியர் ராஜம் வீடு என்று தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டிக்கிறது.

நூல் ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நூல்.

சித்ரா மாதவன், கபாலி கோயில் தொடங்கி, சுமார் முப்பது கோயில்களைப் பற்றி பேசும்போது, குடமுழுக்கு என்ற பெயரில் அக்ரிலிக் வர்ணத்தைப் பூசி பழைமையை மாற்றுவதையும், தொல்பொருள் ஆய்வாளர்களுக்குத் தேவையான கல்வெட்டுக்களை முழுமையாக மறைத்துவிடுவதுபோல பாத்ரூம் டைல்களைப் பதிப்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அழகான சிற்பங்கள் சில தூண்களில் இருப்பதைப் பலரும் காணாமலே இருந்து விடுவதைச் சுட்டிக்காட்டினார். அனாவசியமாகப் புதிய கட்டுமானங்கள் கட்டி பழைமையை அழிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்.

“சேமியர்ஸ்’ விடுதியில் நடந்த இந்தச் சொற்பொழிவுக்குப் பின், பலரும் இந்தக் கோயில்களைப் பார்க்க ஒரு முழு நாளை ஒதுக்கவும், சித்ரா மாதவனுடன் சென்று பார்க்கவும் விருப்பம் தெரிவித்தனர்.

மியூசிக் அகடமி, அறக்கட்டளைச் சொற்பொழிவுகளையும், இசை நிகழ்ச்சிகளையும் மாதம்தோறும் நடத்தி வருகிறது.

தேவார மூவர் பற்றி கபாலி ஓதுவார் வழங்கிய உரையில் அவர் தெளிவாக எடுத்துரைத்த நிகழ்ச்சிகளும், அவர் பாடிய தேவாரப் பாடல்களும் மனத்தைத் தொட்டன. அப்பர், சுந்தரர், சம்பந்தர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி, அவர்கள் அந்த சந்தர்ப்பங்களில் பாடிய பதிகங்களைப் பாடினார் கபாலி ஓதுவார். “மடையில் வாளை பாய மாதரார், மறையுடையாய் தோலுடையாய், மாதர் மடப்பிடியும், கொட்டமே கமழும், அவ்வினைக்கு இவ்வினையாம், மட்டிட்ட புன்னையும், தொழுது தூமலர் தூவி’ என்று பதிகங்களையும், திருத்தாண்டகத்தையும் பாடி நெகிழ்வித்தார். ராகங்களை அந்தக் காலப் பண் பெயரில் எப்படி வழங்கினார்கள், அதற்கு இணையான இன்றைய ராகம் எது என்று கூடுதல் தகவல்களையும் அளித்தார். (உதாரணத்துக்கு, மாதர் மடப்பிடியும் என்ற பதிகம் மேகராகக் குறிஞ்சியில் அமைந்திருக்கிறது என்றும், அடாணா என்ற இன்றைய ராகப் பெயரையும் குறிப்பிட்டார். ஆனால் இதை யாழ்முறி அமைப்பு என்றும் அன்றைக்குக் குறிப்பிட்டார்கள்)

ஜானகி ராமானுஜம் வழங்கிய சமஸ்கிருத சாகித்தியங்கள் நிகழ்ச்சியும் வித்தியாசமாக இருந்தது. அரங்குகளில் அதிகம் பாடப்படாத பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினார் ஜானகி ராமானுஜம். (நடுவே பந்துவராளி ஆலாபனைக்குப் பிறகு “ஞான மொசகராதா’ என்ற தியாகராஜரின் தெலுங்கு கிருதியைப் பாடியபோது தூக்கி வாரிப் போட்டது! ஆனால் அகடமி செயலர்களில் ஒருவரான பப்பு வேணுகோபால் ராவ் மளமளவென்று ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பு எழுதி மேடைக்கு அனுப்பியதைப் பாராட்ட வேண்டும்.)

மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் பத்ராசலம் ராமதாசர் இயற்றிய தெலுங்குப் பாடல்களைக் கோட்டப்பள்ளி வந்தனா என்ற பாடகி பாடினார். நல்ல உச்சரிப்பு, இனிமையான குரல் இரண்டும் இவருடைய ப்ளஸ் பாயின்ட்டுகள்.

ஒரு குறிப்பிடத் தகுந்த அம்சம், இந்த மூன்று நாட்களுமே அயல்நாட்டு (அமெரிக்க, ஜப்பானிய) இசை ரசிகர்கள் வந்திருந்து அமர்ந்து ரசித்ததுதான்.

தென்மண்டல கலாசார மையம் ஏற்பாடு செய்து, பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிகார் மற்றும் ஹரியாணா மாநில நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடலைப் பாடி, அவற்றுக்கு அந்த மாநிலக் கலைஞர்கள் நடனமும் ஆடினர்.

கணவர் மகிழ்ச்சியாக இருக்க மனைவி பாடி ஆடும் நடனம் பிகார் கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சி. குஜராத் மாநில கர்பா நடனம் போல இது இருக்கும் என்று அறிவித்தாலும், குழு நடனம் என்பதைத் தவிர, அப்படி ஒன்றும் பெரிய ஒற்றுமையைக் காண முடியவில்லை. ஹரியாணா கலைஞர்களின் நடனம் கிட்டத்தட்ட பஞ்சாப் மாநில பங்க்ரா போல இருந்தாலும், அறுவடை முடிந்து ஆடும் நடனம் என்ற வகையில் அதன் தனித்தன்மை வெளிப்பட்டது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சாலையோர பிரம்மாக்கள்!

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008

என். சுரேஷ்குமார்

வெள்ளி நிறத்திலும், பொன் நிறத்திலும் ஜொலிக்கும் குபேர சிலைகள், வீரமுடன் சுதந்திர தேவி சிலை, சரஸ்வதி,

முருகன், சிவன் என்று தெய்வங்களின் சிலைகள் அனைத்தும் நம் கண் முன் மிகவும் தத்ரூபமாக… இன்னும் கூடுதலாக, இன்னும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு வருகின்றன விநாயகர் சிலைகள்.

வரும் செப். 3 விநாயகர் சதுர்த்தி. வரும் பண்டிகைக்காக உயரம் வாரியாக உருவாக்கப்பட்டு வருகின்றன விநாயகர் சிலைகள்.

இச்சிலைகளை வடிக்கும் சிற்பக் கலைஞர்களைச் சந்தித்தோம்.

“”நாங்கள் ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம் ராஜ்பூரா என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய குலத்தொழிலே சிலை செய்வதுதான். தேங்காய் நார் மற்றும் சில பொருள்களுடன் அச்சு வார்த்து அதில் பிளாஸ்டர் ஆப் பாரிûஸக் கலந்து சிலை வடித்து வருகிறோம்.” என்றார் திருநெல்வேலிக்கு வந்து சிலை செய்து பிழைப்பு தேடும் சிற்பக்கலைஞர் மோகன்லால்.

“”தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற இடங்களில் எனது சொந்தங்கள் குடும்பத்துடன் தொழில் செய்து வருகிறார்கள். இது தவிர வெவ்வேறு மாவட்டங்களில் எங்கள் மாநிலத்திலிருந்து அதிகமான குடும்பத்தினர் இத்தொழிலை மட்டுமே நம்பி கூடாரம் அமைத்து தங்கியிருந்து சிலை வடித்து வருகிறார்கள்.

வருடந்தோறும் சிலை செய்கிறோம். செய்த சிலைகளை உயரம், வண்ணங்களுக்குத் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து கொள்வோம். அதில் சிலைக்கு ரூ. 40-லிருந்து ரூ. 500 வரைக்கும் விலை வைத்து

விற்போம். ஆனால், விலை குறைந்த சிலைகள் மட்டுமே ஓரளவு விற்பனையாகின்றன.

முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூட்டை ஒன்று ரூ. 250-லிருந்து 280 வரை இருந்தது. ஆனால், தற்போது ரூ. 400 வரை உயர்ந்து விட்டது. இந்த விலை உயர்வை நாங்கள் வடிக்கும் சிலையில் சுமத்தினால் வாடிக்கையாளர்கள் வாங்கத் தயாராக இல்லை.

தற்போது இங்கு எனக்கு உதவியாக என்னுடைய மகன் மட்டும் உள்ளான். தினமும் காலையிலும், இரவிலும் மட்டுமே சாப்பிடுவோம். மதிய நேரம் பெரும்பாலும் பட்டினிதான்.

மற்ற குழந்தைகள், என்னுடைய மனைவி அனைவரும் கேரள மாநிலம், கோட்டயத்தில் சிலை செய்து விற்பனை செய்து வருகிறார்கள்” என்று சொல்லும் மோகன்லாலுக்கு வயது 38. மனைவி கமலா. குழந்தைகள் மொத்தம் 7.

தற்போது மோகன்லாலுடன் இருக்கும் அவரது மூன்றாவது மகனின் வயது 12. வயதைக் கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சி. படிக்கும் வயதில்… என்று நாங்கள் கேள்வி கேட்கும் முன்பே முந்திக்கொண்டார் மோகன்லால்.

“”எங்க சமுதாயத்துலே பிள்ளைங்கள படிக்க வைக்கறது இல்ல. நான், எனது மூத்த சகோதரர்கள் எங்களது தந்தையாருக்கு உதவியாக இருந்தோம். அதேபோல எனது பிள்ளைகள் எனக்கு உதவியாக இருக்காங்க. குடும்பத்தோட உழைச்சாதான் இரண்டு வேளை சாப்பாடாவது கிடைக்கும். பிள்ளைங்கள படிக்க அனுப்பிச்சா வேலையை பார்க்கிறது யாரு? விநாயகர் சதுர்த்திக்குன்னு ஸ்பெஷலா செய்ற சிலை 5 அடியிலிருந்து 12 அடி வரை செய்வோம் ஒரு சிலை ரூ.5000-லிருந்து 12 ஆயிரம் வரை விற்பனை ஆகும்.

போனவாரம்தான் கேரளத்திலிருந்து ஒரு ஆர்டர் வந்திச்சு. 12 சிலைக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க. இந்த வருமானம்தான் எங்களுக்கு அடுத்த வருஷம் வரைக்கும். அந்த பணத்துலதான் ஏதாவது கொஞ்சம் காசு சேத்துவச்சு பிள்ளைங்களுக்கு புது துணி வாங்கி கொடுப்போம். தினமும் கடவுள் சிலைகளதான் செய்யறோம். இந்த கடவுள் எங்க குழந்தைகளைத் தெருவில் விட்டுட மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது!” என்று இந்தி கலந்த தமிழில் மோகன்லால் சொல்லும்போது, நம் மனது கனத்தது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

நெட்டில் சுட்டதடா…: பச்சக்கென்று ஒட்டிக்கொண்ட பெரிய மனிதர்கள்!

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 24, 2008


ராமன் ராஜா

சதித் திட்டம் தீட்டியது சாமிநாதன்தான். அவன்தான் மாஸ்டர் மைண்ட். சதியில் என்னுடைய பங்கு மிகச் சிறியது: போஸ்ட் ஆபீசிலிருந்து கொஞ்சம் கோந்து திருடிக் கொண்டு வரவேண்டும்; அவ்வளவுதான். மாவீரன் சாமிநாதன், அதை எஸ்.வி.வி. வாத்தியாரின் நாற்காலியில் பூசப்போகிறான். பள்ளிக்கூடமே ஆவலுடன் காத்திருந்த அந்தப் பொன்னாளும் வந்தது. கையும் கோந்துமாக எஸ்.வி.வி.யிடம் மட்டும் பிடிபட்டு விட்டால் மரணதண்டனை நிச்சயம் என்பதால் வராந்தா முழுவதும் ஒற்றர்களை நிறுத்தி வைத்துக்கொண்டு, அவசரமாக வேப்பங் குச்சியால் அந்த நாறும் கறுப்பு கோந்தை நாற்காலியில் பூசினோம்… பிறகு நடந்ததைக் கடைசியில் சொல்கிறேன்.

இன்றைக்குப் பசை, கோந்து என்றாலே ஐரோப்பிய அரசியல்வாதிகளும் பெரிய கம்பெனி முதலாளிகளும் அலறுகிறார்கள். அவர்களை அலற வைத்துக் கொண்டிருப்பது சூப்பர் க்ளூ எனப்படும் ஹை டெக் கோந்து. சயனோ அக்ரிலேட் என்ற ரசாயனத்தால் தயாரிக்கப்படும் ஒருவித பாலிமர் பசை. மரம், கண்ணாடி, தோல் எதை வேண்டுமானாலும் இரண்டே வினாடியில் பிரிக்க முடியாமல் ஒட்டி விடும். காப்பிக் கோப்பையின் உடைந்த கைப்பிடியை சூப்பர் க்ளூவால் ஒட்ட முயற்சித்து, கை விரலுடன் சேர்த்து கப்பை ஒட்டிக்கொண்டு அசடு வழிந்தவர்கள் பலர். பலமாக இழுத்தால் தோல் பிய்ந்து வந்துவிடும்! சூப்பர் க்ளூவை நீக்க ஒரே வழி அசிடோன் திரவத்தை ஊற்றி மெல்லக் கரைப்பதுதான்.

மேலை நாடுகளில் சுற்றுச் சூழலைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபடும் குழுக்கள் அவ்வப்போது பல நூதனமான போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். அவர்கள் கையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஆயுதம், இந்த சூப்பர் பசை. தங்களுக்குப் பிடிக்காத வி.ஐ.பி.களை சந்திக்கும்போது சட்டைப் பையில் மறைவாக ஒரு சின்ன சூப்பர் க்ளூ டியூபை எடுத்துப் போவார்கள். உள்ளங்கையில் அதைத் தடவிக்கொண்டு அழுத்திக் கை குலுக்கினால் போதும். வி.ஐ.பி. பிரமுகரும் போராளியும் சப்பக் என்று ஒட்டிக் கொண்டு விடுவார்கள்! பெரிய மனிதருக்குத் தர்மசங்கடம். போராளிக்கோ உற்சாக வெள்ளம். சயாமிய இரட்டையர்கள் போல் அவர்கள் ஒட்டிக் கொண்டு தள்ளி, இழுத்து அவஸ்தைப்படுவதை மீடியா மூலம் உலகமே நேரடியாக வேடிக்கை பார்க்கும். செக்யூரிட்டி அதிகாரிகள் பரபரத்து நாலா புறமும் ஓடுவார்கள். அசிடோன் தேடிக் கொண்டு வந்து இவர்களுடைய அன்புப் பிணைப்பை விடுவிப்பதற்குள் மணிக்கணக்கில் கூட ஆகிவிடும். அத்தனை நேரமும் போராட்டத்திற்கு சரியான விளம்பரம்தான்! போன வாரம் இவர்களிடம் மாட்ட இருந்து மயிரிழையில் தப்பித்தவர், பிரிட்டிஷ் பிரதமர் பிரவுன். ஆர்வத்துடன் தன்னிடம் கை குலுக்க வருவது மிகவும் பசையுள்ள கை என்பதைக் கவனித்துக் கடைசி நிமிடத்தில் எகிறிக் குதித்து உதறித் தப்பித்து விட்டார். இல்லாவிட்டால் அன்று உலகம் முழுவதும் இதுதான் தலைப்புச் செய்தியாகியிருக்கும்.

சுற்றுச் சூழலுக்காகப் போராடும் க்ரீன் பீஸ் போன்ற அமைப்புகளுக்கு நிறைய நன்கொடை வருகிறது. மனோகர் நாடகத்துக்கு செட் போடுவது போல் பிரம்மாண்டமான முறையில் தங்கள் போராட்ட அரங்கத்தைத் தயாரிக்கிறார்கள். அப்போதுதான் மீடியா கவனம் அவர்கள் பக்கம் திரும்பும். தசாவதாரத்தைத் தோற்கடிக்கும் வகையில் விதவிதமான மேக்கப்கள் , முகமூடிகள், காஸ்ட்யூம்கள், வட துருவத்தில் எண்ணெய்க் கிணறு தோண்டக் கூடாது என்று போராட வேண்டுமா? உடம்பெல்லாம் சடை மயிருடன் வெண் கரடி வேடத்தில் வந்தார்கள். 2006-ல் ஜப்பான் நாட்டில் திமிங்கில வேட்டையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி ஒரு போராட்டம். இருபது டன், அறுபது அடிக்கு இருந்த செத்த திமிங்கிலத்தை கிரேன் வைத்து நகரின் நடுவே இறங்கி வைத்துக்கொண்டு “”அநியாயமாக இந்தக் குஞ்சு மீனைக் கொன்னுட்டீங்களே” என்று மாரடித்து அழுதார்கள்.

அமெரிக்காவின் நாயுடு ஹால் எனப்படும் விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனம், வருடா வருடம் வழவழ காகிதத்தில் தங்கள் உள்ளாடை, நைட்டி வகைகளை அச்சடித்து “காடலாக்’ புத்தகம் வெளியிடுகிறது. இந்த மாதிரி பல கம்பெனிகள் அனுப்பும் விலைப் பட்டியல் விளம்பரங்களுக்குக் காகிதம் தயாரிக்க எண்பது லட்சம் டன் மரம் தேவைப்படுகிறது. இவர்களின் பேப்பர் பசிக்குத் தீனி போடுவதற்காக கனடாவின் அருமையான போரியல் காடுகள் ஒரு நிமிடத்துக்கு இரண்டு ஏக்கர் என்ற வேகத்தில் அழக்கப்படுகின்றன. இருபத்து நாலு மணி நேரமும் ரம்பம் ஓய்வதே இல்லை! இதை எதிர்த்துப் பெண்மணிகள் உள்ளாடைகளுடன் தெருவில் நின்று போராட்டம் நடத்தினார்கள். என்ன இது, அசிங்கமாக இருக்கிறதே என்று கேட்டால், “”காடுகள் அழிந்து கொண்டிருக்கிறதே என்று நாங்கள் கரடியாய்க் கத்தினாலும் ஒருத்தனும் கண்டுகொள்வது இல்லை. இப்போது பாருங்கள், உடை துறந்து போராட்டம் என்றதும் உலகத்து டி.வி. சானல்கள், பத்திரிகைகள் அத்தனையும் தூக்கம் துறந்து இங்கே வந்து குவிந்து விட்டன” என்கிறார்கள்.

உண்மைதான். போராளிகளுக்கும் வேறு வழியில்லை. எண்ணெய்க் கம்பெனிகளும் அனல் மின்சார நிறுவனங்களும் காடு வெட்டும் மாஃபியாக்களும் பண பலம் மிகுந்தவை. கத்தரிக்காய் வாங்குவது போல் சல்லிசாக எம்.பிக்களை வாங்கிப் போட்டுத் தங்களுக்கு வேண்டிய மாதிரி சட்டங்களை வளைத்து வளைத்து எழுதிக் கொள்கிறார்கள். காட்டிலாகா அதிகாரிகளுக்கு அரை பாட்டிலும் ஒரு சிக்கன் மன்சூரியனும் வாங்கிப் போட்டால் கண் காதெல்லாம் அடைத்துப் போய்விடும். எதிர்ப்பாரே இல்லாமல் பூமியை உரித்த கோழி மாதிரி உரித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் இவர்களைத் தட்டிக் கேட்பது யார்? அப்படிக் கேட்க முன்வரும் மிகச் சில வின்சென்ட் பூவராகன்களுக்கு மீடியா தரும் இடம் என்ன? பதினாறாம் பக்கத்து மூலையில் இரண்டு இன்ச்! அதனால்தான் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தங்களுடைய ஒவ்வொரு போராட்டத்தையும் ஒரு பிரம்மாண்டமான நிஜ நாடகம் மாதிரி யோசித்துத் திட்டமிட்டு வடிவமைத்து ஒத்திகை பார்த்து டைரக்ட் செய்கிறார்கள்.

காட்டு தர்மம்(Forest ethics) என்ற அமைப்பினர் கொசு மருந்து பூசிக்கொண்டு மாதக் கணக்கில் காட்டுக்குள்ளேயே சென்று வசிக்கிறார்கள். காட்டை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து என்னென்ன விதமாக மரங்களும் பறவைகளும் மிருகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்று ஆராய்கிறார்கள். “ஆபத்தில் இருக்கும் வனப் பகுதிகள்’ என்று ஒரு லிஸ்ட் தயாராகிறது. இவற்றை அழிப்பவர்கள் யார், இங்கே வெட்டப்படும் மரமெல்லாம் கடைசியில் எங்கே பயன்படுகிறது என்று ரிஷி மூலம் வரை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார்கள். பிறகு, அந்தந்த நிறுவனங்களிடமே போய்ப் பேசுகிறார்கள். “”உங்கள் பணத்தால் நாசமாகும் இயற்கைச் செல்வங்கள் இவை” என்று ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள். அவர்களாகத் திருந்தி நல்ல வழிக்குத் திரும்பினால் சரி. இல்லாவிட்டால், போராட்டம்தான், ஆர்ப்பாட்டம்தான், பச்சக் என்று ஒட்டும் பசைதான்!

கம்பெனியின் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களுக்கெல்லாம் மின்னஞ்சல் அனுப்பி “”இப்படிப்பட்ட கிராதகக் கம்பெனியுடன் சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று வற்புறுத்துவார்கள். நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அக்கிரமங்களைப் பட்டியலிட்டுப் பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரம். கம்பெனிக்கு ஃபைனான்ஸ் செய்யும் பாங்க் வாசலில் போய் ஒரு மறியல் போராட்டம். பாங்க் சேர்மனுக்கு சூப்பர் க்ளூ வைத்தியம்! பப்ளிக்காக மானத்தை வாங்கிவிட்டுத்தான் மறு வேலை!

“”காடுகளைக் காப்பாற்றுவதற்கு, காட்டிற்கே போய்ப் போராட வேண்டியதில்லை. காட்டை அழிக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு நகரத்தில் ஏதோ ஒரு ஏ.ஸி. அறையில்தான் எடுக்கப்படுகின்றன. அங்கே கண்டு பிடித்துப் போய் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். குறிப்பாக, நுகர்வோர் எல்லோரும் சேர்ந்து “நுகர மாட்டோம்’ என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் போதும்; இவர்களெல்லாம் தன்னால் வழிக்கு வந்துவிடுவார்கள்” என்று சொல்லும் எதிக்ஸ் அமைப்பினர், இதுவரை தென் அமெரிக்காவில் மட்டுமே ஒன்றேகால் கோடி ஏக்கர் காடுகளைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம். எங்கள் பள்ளிக் கூடத்தில் கோந்து தடவிய தினத்தன்று நடந்த கூத்துதான் ஆண்ட்டி க்ளைமேக்ஸ் எனப்படுவது: அன்றைக்கென்று ஏனோ எஸ்.வி.வி சார் வகுப்புக்கு வரவே இல்லை. அவருக்குப் பதிலாக வந்த சாது ட்ராயிங் மாஸ்டர் சபக்கென்று நாற்காலியில் உட்கார்ந்ததையும், திருதிருவென்று விழித்த அவர் முகம் ஆர்.கே. லட்சுமணன் கார்ட்டூன் மாதிரி அவலச் சுவை காட்டியதையும், மாஸ்டர் சுவர் ஓரமாகப் பின் பக்கத்தை வைத்துக் கொண்டு நடந்து அவசரமாக பாத்ரூமில் சென்று மறைந்ததையும் தமிழகமே இன்று வரை பேசுகிறது.

இந்த நிகழ்ச்சியை இருபத்திரண்டு வருடம் கழித்து ஒரு நாள் எஸ்.வி.வி சாரைச் சந்தித்தபோது வெட்கத்துடன் ஒத்துக் கொண்டேன். அவர் சிரித்துக் கொண்டே “படவா ராஸ்கல்’ என்று அன்புடன் காதைத் திருகியது மிகவும் இன்பமாக வலித்தது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , | Leave a Comment »

Attorneys threaten to paralyse courts, besiege parliament: Top lawyers Anand & Khan debarred for bribing witness: Guilty of contempt – BMW hit-and-run expose verdict: Bar associations, Lawyers on strike, protest

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 22, 2008

நீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை

இந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.

புதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.

அந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

சஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

9 babies die during clinical trials at AIIMS-India-The Times of India

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 19, 2008

இந்தியாவில் மருத்துவ சோதனையில் இறந்த குழந்தைகள்

இந்தியாவின் முன்னணி மருத்துவ ஆய்வு நிலையம் ஒன்றில் கடந்த இரண்டரை வருடங்களில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றின்போது குறைந்தது 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

நோய்த்தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு விடை காணும் முகமாக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளின்போது இந்த மரணங்கள் இடம்பெற்றதாக, அனைத்து இந்திய மருத்துவ விஞ்ஞான ஆய்வு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், நடந்த அனைத்து உயிரிழப்புகளுக்கும் மருத்துவ சோதனையைக் காரணம் கூறமுடியாது என்றும், சில குழந்தைகள் உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இறந்தவற்றில் பல ஏழைக் குழந்தைகள் என்றும், இந்த மருந்துவ சோதனையின் பிரதிபலன்களை புரிந்துகொள்ள முடியாதவர்களைக் கொண்ட, படிப்பறிவு இல்லாதவர்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவை என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


BBC News | HEALTH | Unicef denies Assam vaccine deaths (19 November, 2001)

The United Nations says it is confident that reports that several children have died in the Indian state of Assam as a result of a UN-sponsored anti-blindness campaign are false.

Hundreds of thousands of children in Assam were given syrup containing Vitamin A in a campaign organised by the UN’s children’s organisation, Unicef, to prevent blindness.

Shortly after, thousands of children were reported to fallen ill because of the syrup and now the Assam state government says at least 16 children have died.

India Gets $521 Million World Bank Funding For Polio, Malaria (Friday, August 1, 2008)

India was given almost $521 million of funding from the World Bank to fight infectious diseases, including polio and malaria, which kill thousands of people in the South Asian nation and risk spreading overseas.

The funding will help the government and UN agencies prevent, diagnose and treat parasitic infections and increase polio vaccination, the Washington-based bank said in a release yesterday. …

India, along with Nigeria, Pakistan and Afghanistan, remains the only country still affected by the scourge of polio that shatters the future of hundreds of people, mostly young children,’ said Isabel Guerrero, World Bank Vice President for South Asia, in the release. ‘With this operation, we hope India will take the final step towards eradicating polio.’ …

The National Vector Borne Disease Control and Polio Eradication Support Project aims to help India cut illness from malaria by 50 percent and eliminate Kala azar, a parasitic infection transmitted by sand flies that infects about 40,000 Indians annually, by 2010. The project plans to improve malaria prevention and provide treatment for more than 100 million people. … The World Bank and government of India spent seven months reviewing past health projects marred by fraud and graft, mostly related to the procurement of goods, to adopt measures that safeguard against corruption, yesterday’s release said.” [Bloomberg]

R.C. Deka to be new director of AIIMS- Hindustan Times: “Deka’s two years’ as dean of AIIMS and also in a senior administrative post at the Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research, Puducherry, went in his favour.”

49 babies die during clinical trials at AIIMS-India-The Times of India: “Nod from ethics panel: AIIMS”

Responding to a Right to Information (RTI) query on clinical trials on babies, the AIIMS administration admitted that of the 4,142 babies — 2,728 of whom were below the age of one — who were enrolled for clinical trials by the institute’s department of paediatrics, 49 had died since January 1, 2006. The department conducted 42 sets of trials on babies during this period.

In its reply, AIIMS said the deaths amounted to a 1.18% mortality rate. The RTI query was filed by Rahul Verma of Uday Foundation for Congenital Defects and Rare Blood Groups, an NGO.

India recently pipped China to become Asia’s most popular destination for conducting clinical trials. According to the Planning Commission, 139 new trials were outsourced to India recently compared with 98 in China.

The cost of conducting trials in India is 20% to 60% of the cost in industrialized countries. The RTI query also digs out information on the top drugs (according to volume of consumption) made in a foreign country that were used during the trials on the babies.

AIIMS has said five foreign-manufactured medicines were tested during the trials. They were zinc tablets for treating zinc deficiency and serving as a nutritional supplement, olmesartan and valsartan for treating blood pressure-related problems, rituximab for treating chronic focal encephalitis and gene-activated human glucocerebrosidase for treating Gaucher’s disease, which affects the liver. AIIMS said it had taken clearance for the trials from its own ethics committee, the health ministry steering committee (HMSC) on ethics and the national ethics committees of ICMR and DBT.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | 5 Comments »

Aug 16,17: Russia vs Georgia – South Ossetia Conflict

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 18, 2008

ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யா மீதான விமர்சனத்தை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது

ரஷ்ய அதிபர் அலுவலகம் மிரட்டி அச்சுறுத்துவதாக அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான சொற்போர் தீவிரமடைந்துள்ளது.

21ஆம் நூற்றாண்டில் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் முறை இதுவல்ல என்று கூறிய அதிபர் புஷ், ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் படையை வாபஸ் பெறவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அந்தப் பிராந்தியத்தில் ரஷ்யாவால் மாத்திரமே அமைதியை உறுதிப்படுத்த முடியும் என்று கூறியுள்ள, ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வெடேவ் அவர்கள், ரஷ்ய மக்களும், படையினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், ரஷ்யா இதே பாணியில்தான் மீண்டும் பதிலளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேற்குலகுடனான உறவுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதை ரஷ்யா தவிர்க்க விரும்புகிறது என்று வலியுறுத்திய அவர், பிரான்ஸினால், மத்தியஸ்தம் செய்யப்பட்ட அமைதித் திட்டத்தில், ஜோர்ஜியாதான் இதுவரை கைச்சாத்திட மறுத்ததே ஒழிய, ரஷ்யா அல்ல என்றும் கூறியுள்ளார்.

ஜோர்ஜியா விடயத்தில் ரஷ்யாவின் நடவடிக்கை அளவுக்கு அதிகமானது என்று விமர்சித்த, ஜெர்மனியின், தலைவி அங்கேலா மெர்கெல் அவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் ரஷ்ய அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.


அமெரிக்க அரசுத் துறை செயலருடன் ஜோர்ஜிய அதிபர் சந்திப்பு

அமெரிக்க அரசுத்துறை செயலருடன் ஜோர்ஜிய அதிபர்

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலீஸா ரைஸ் அம்மையாருடன் பேச்சு நடத்திய ஜோர்ஜிய அதிபர் மிகாயல் சாகாஷ்விலிப் பின்னர் கருத்துவெளியிடுகையில், தங்களுடைய நாட்டில் எந்தப் பகுதியும் அந்நிய ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதை தன்னால் ஒருபோதும் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறியிருக்கின்றார்.

ஜோர்ஜியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் ரஷ்யா மதித்து நடக்க வேண்டும் என்று கொண்டலீஸா ரைஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையில் ஜோர்ஜியா தற்போது கையெழுத்திட்டுள்ளது என்றும் கொண்டலீஸா ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.


ஜோர்ஜிய நிலப்பரப்பில் ரஷ்யப் படைகளின் இருப்பு நீடிக்கிறது

ஜோர்ஜியாவில் ரஷ்ய டாங்கிகள்

ஜோர்ஜியாவின் நிலப் பகுதிக்குள் மூன்று முக்கிய நகரங்களின் உட்பகுதிகளின் இன்னமும் ரஷ்யப் படைகள் நிலைகொண்டுள்ளன.

ஜோர்ஜியாவின் மேற்கு பகுதியிலிருந்து பிரிந்து சென்ற அப்காஸியாப் பிரதேசத்திலுள்ள போட்டி என்ற நகரிலிருக்கும் பிபிசியின் செய்தியாளார், அங்குள்ள கடற்படைகளின் கப்பல்களை நிறுத்தும் இடத்தில் ரஷ்யாவின் துருப்புக்களை ஏற்றிச் செல்லும் படகுகள், கவச வாகனங்கள் மற்றும் அதிவேக படகுகள் நிலை கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

அங்குள்ள இராணுவத் தளவாடங்களை அழிப்பதே ரஷியாவின் நோக்கமாக இருக்கக்கூடும் என்று தோன்றுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கிறார்.

இவை மட்டுமில்லாமல், இன்னும் உள்ளே செனாக்கி நிலப்பகுதியில், பெரிய அளவில் ரஷிய இராணுவப் படைகள் இருக்கின்றன. அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து பெருமளவில் ஜோர்ஜியாவின் தளவாடங்களை கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதேவேளை, கோரி நகரின் கட்டுப்பாட்டை மீண்டும் கையளிப்பது தொடர்பில் ஜோர்ஜிய போலீசாருடன் ரஷ்யர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள்.


ஏவுகணை பாதுகாப்புத் திட்டம்: போலந்து-அமெரிக்க உடன்பாட்டை ரஷ்யா விமர்சித்துள்ளது

ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை விளக்குகிறார் அமெரிக்க அரசு அதிகாரி

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதிக்கான தளத்தை தமது நாட்டில் வைத்துக்கொள்ள உடன்படுவதன் மூலம், போலந்து, ஒரு தாக்குதல் இலக்காகிறது என்று ரஷ்ய கூறுகிறது.

ரஷ்ய இராணுவ படையின் துணைத் தலைவரான ஜெனரல், அனடோலி நொகொவிட்சின் அவர்களால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்கிரி நாடுகள் என்று தாம் கூறிக்கொள்ளும் நாடுகளிடம் இருந்துவருகின்ற ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாத்துக்கொள்ளவே இந்த பாதுகாப்புக் கவசத்திட்டம் வடிவமைக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.

ஆனால், இது ரஷ்யாவை இலக்கு வைத்தது என்றே ரஷ்யா இதனைப் பார்ப்பதாக, ரஷ்ய அதிபர் மெட்வெடேவ் அவர்கள் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத்திட்டத்தின்படி, வழி மறித்துத் தாக்கும் ஏவுகணைகளை பால்டிக் கடற்கரையோரம் அமெரிக்கா நிறுவ, போலந்து அனுமதிக்கும். அதற்குப் பதிலாக, போலந்தின் இராணுவத்தை நவீனமயப்படுத்த அமெரிக்கா உதவுவதுடன், போலந்தின் விமானப்படையில், பாட்ரியட் ஏவுகணைகளை இணைப்பதன் மூலம் அதனை வலுப்படுத்தவும் உதவும்.


ஜோர்ஜியாவில் இருந்து ரஷ்யத் துருப்புகள் திங்கட்கிழமை முதல் வெளியேறும் – ரஷ்ய அதிபர்

ஜோர்ஜியாவிலிருந்து ரஷ்யத் துருப்புகள் வெளியேறுவது தொடர்பில் சற்றுக் குழப்பம் எழுந்த நிலையில், ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வியதேவ் பிரஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோஸியிடம் ரஷ்ய துருப்புகளின் வெளியேற்றம் வரும் திங்கட்கிழமை நன்பகலிலிருந்து ஆரம்பிக்கும் என்று கூறி தெளிவுபடுத்தியுள்ளர்.

ஏற்படுத்தப்பட்டுள்ள சமரச உடன்படிக்கையை ரஷ்யா நடைமுறைப்படுத்தத் தவறினால் கடும் பின்விளைவுகளை அது எதிர்கொள்ள நேரிடும் என்று சர்கோஸி ரஷ்ய அதிபரிடம் எச்சரித்திருந்ததாக பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே ஜெர்மனியின் சான்செல்லர் அங்கெலா மெர்க்கெல் அவர்களும் தன் பங்கில் ரஷ்யா துருப்புகளை வேகமாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிபிலிஸியில் ஜோர்ஜிய அதிபருடன் பேச்சுநடத்திய பின்னர் கருத்து வெளியிட்ட அங்கேலா மெர்க்கெல் ஜோர்ஜியாவின் நில ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டுமென்றும் அகதிகளுக்கு உதவிகள் கிடைக்க இடமளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஜோர்ஜியா விரும்பினால் இனியும் கூட அதனால் நேட்டோ உறுப்புரிமையைப் பெற இயலும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜோர்ஜியாவில் வன்முறைகள் தொடர்வதாக ஜோர்ஜியா அதிபர் குற்றச்சாட்டு

ஜோர்ஜியாவில் ரஷ்ய துருப்புகள்
ஜோர்ஜியாவில் ரஷ்ய துருப்புகள்

ஜார்ஜியாவில் வன்முறைகள், சூறையாடல்கள் தொடர்வதோடு, பாதிப்புகள் பல இடங்களுக்கு பரவியிருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்ஸ்விலி தெரிவித்துள்ளார்.

இது ரஷ்யாவின் இன ஒழிப்பு செயல் என்று கூறியுள்ள அவர், ஜார்ஜியா ஒரு போதும் தனது பகுதியை விட்டு கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கோரி நகரத்தின் நுழைவு வாயில்களை ரஷ்யப் படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன, அத்தோடு கோரி மற்றும் தலைநகர் டிபிலிஸிக்குப் இடையில் சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர்.

கோரி நகரத்திற்கு மனிதாபிமான உதவிகளை ரஷ்ய படையினர் அனுமதித்துள்ளனர். இந்த நகரத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை மக்கள் வழிமறித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


ஜோர்ஜியாவில் தாக்குதல்கள் தொடருவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்

ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் பிரான்ஸ் நாட்டின் மத்தியஸ்தத்தின் ஊடான போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு பல மணிநேரத்தின் பின்னரும் கூட ஜோர்ஜிய நகரான கோரியிலும் மற்றும் அதனைச் சுற்றவரவுள்ள கிராமங்களிலும் சூட்டுச் சம்பவங்களும் கொள்ளையடிப்புச் சம்பவங்களும் இடம்பெற்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள தளத்தில் இருந்த ஜோர்ஜியப் படையினரின் இராணுவத் தளபாடங்களை, ரஷ்ய தாங்கிகள் நிர்மூலம் செய்துவிட்டதாகத் தென்படுவதாக அந்த நகருக்கு வெளியேயுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு அசட்டியாவின் பிரிவினைவாதிகளால் பெருமளவு கொள்ளைகள் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து வெளியேறிவருகின்ற மக்கள் கூறுகிறார்கள்.

துப்பாக்கி முனையில் மக்கள் சூறையாடப்படுவதுடன், வீடுகளும் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.

கோரியில் இருந்து தெற்காக, ஜோர்ஜிய தலைநகர் திபிலிசியை நோக்கி ரஷ்ய கவச வாகனங்கள் முன்னேறிவருகின்றன. ஆனால், பின்னர் பிரதான வீதி மூடப்பட்டுவிட்டது.

கோரிக்கு வெளியே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்ற ஜோர்ஜியத் தளங்களில் இருந்து இராணுவ தளபாடங்களையும், வெடிபொருட்களையும் ரஷ்யப் படையினர் அகற்றி வருவதாக ரஷ்ய இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Aug 17, 18 – SriLanka Updates: LTTE, Eezham

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 18, 2008

இலங்கையில் மாகாணச் சபைத் தேர்தல்கள்

மாகாண சபைத் தேர்தல்கள்
மாகாண சபைத் தேர்தல்கள்

இலங்கையின் சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தல்கள் சனிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இதில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

சுமார் 21 லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில், சுமார் 65 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 77 பிரதிநிதிகளை தேர்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 1698 வேட்பாளர்கள் பங்கேற்றனர். இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான வன்முறையில் ஈடுப்பட்டதாக சுயாதீன தேர்தல் அமைப்புகள் கருத்து வெளியிட்டு இருந்தன.


இலங்கையின் வடக்கே தொடரும் இடம்பெயரல்கள்

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் வடக்கே – மன்னார் மாவட்டத்தின் வடபகுதியிலிருந்தும் – முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்திலிருந்தும் – கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் ஜெயபுரம் வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் அக்கராயன் ஸ்கந்தபுரம் போன்ற பகுதிகளிலிருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார்.

இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை 22 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதம் 8 ஆம் திகதி 3 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தக் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி வேறிடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டிருப்பதாகவும் கிளிநொச்சி அரசாஙக அதிபர் கூறியிருக்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்களுக்குரிய நிவாரண உதவிகளைச் செய்வதற்குத் தேவையான எரிபொருள் மற்றும் அவர்களுக்கான நிவாரண உணவு போன்றவற்றிற்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையே, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் திடீரென பொது நிர்வாக அமைச்சுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒரு மாதகாலத்தில் எஸ்.சண்முகம் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பதும் – வவுனியா மாவட்டத்தில் சுமார் நான்கு வருடங்கள் அரசாங்க அதிபராகப் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

துணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.

பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள்

மறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



இலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு

கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள்

இலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.

அக்குண்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை: யாழ் ஆயர்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் காரணமாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட யாழ் ஆயர், விரைவில் மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், ஆதரவற்று திறந்தவெளியில் இருக்கும் மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்து தருவது உடனடித் தேவை என்று குறிப்பிட்டார்.

உணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடையற்ற முறையில் கொண்டுவருவதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற அம்னேஸ்ட்டி இன்டர்னேஷனலின் குற்றச்சாட்டு குறித்து கூறுகையில், இக்குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதாக கூறிய ஆயர், அதேநேரத்தில் இருதரப்பினரும் இச்செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குடும்பத்தில் ஒருவர் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதால், அந்தப் பகுதிகளில் இருந்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் அனைவரையும் புலிகளாக அரசு சந்தேகிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் நிலவும் சூழல் குறித்து யாழ் ஆயர் வெளியிட்ட கருத்துக்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


துணுக்காயைச் சுற்றிவளைத்துள்ளோம்: இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய துணுக்காய் நகரப்பகுதியை புதன் அதிகாலை முதல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

துணுக்காய் நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குத் திசைகளில் இருந்து நகர்ந்துள்ள படையினர், புதன் காலை இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதியில் அமைந்துள்ள துணுக்காய் நகர் விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய இடமாகக் கடந்த 25 வருடங்களாகத் திகழ்ந்து வந்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஓமந்தை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது உலங்கு வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

ஓமந்தைக்கு வடமேற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் புதன்கிழமை விடுதலைப் புலிகளின் நான்கு இலக்குகள் மீது விமானப்படையினர் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் நேற்றைய சண்டைகளில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் போர்முனைகளிலும், வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளிலும் இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா நீதிமன்றத்தில் சரண்

இலங்கை நீதிமன்றம் ஒன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா வியாழனன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றில் அவர் மீது கடந்த வாரம் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டுவதாக குற்றஞ்சாட்டியும், அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யக் கோரியும் செய்தியாளர்களின் அமைப்புகள் வியாழனன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

ஆயினும் அந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே அமைச்சர் நீதிமன்றில் சரணடைந்துவிட்டதாக கொழும்பில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.


இலங்கையின் வடமத்திய மற்றும் சப்ரகமுவ தேர்தல் பிரச்சார இறுதி தினத்தில் வன்முறைகள்

இலங்கையின் தென்பகுதியில் எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல் நடக்கவிருக்கின்ற இரண்டு மாகாண சபைகளான வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன.

அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் தமது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டிருந்த அதேவேளை, அந்த மாகாணங்களில் இன்று பல்வேறுபட்ட வன்முறைகள் குறித்தும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி தினத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட கணிசமான வன்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரும் மற்றும் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், தீவைப்புகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் என்பன உட்பட கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் பத்துக்கும் அதிகமான வன்செயல்கள் இந்த இரு மாகாணங்களிலும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக அநுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்காவின் இணைப்பதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.

”தமிழர்களில் கணிசமானோரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றச்சாட்டு”

இதேவேளை இலங்கையின் தென்பகுதியில் தமிழர்களை வாக்காளர்களாக பதிவதில் காட்டப்படும் பாரபட்சத்தின் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியினர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இதன்காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அந்த கட்சியின் உபதலைவரான கணபதி கனகராஜ்

தேர்தல் திணைக்களம் இந்த விடயத்தில் காட்டும் அசிரத்தையும், தோட்டத்தொழிலாளர்களின் அக்கறையீனமுமே இதற்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


வவுனியாவில் சமுர்த்தி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி பணியாளர்கள்
ஆர்ப்பாட்டத்தில் சமுர்த்தி பணியாளர்கள்

இலங்கையில் மக்கள் மத்தியில் வறுமையைத் தணித்து வாழ்க்கையை மேம்படுத்தும் சமுர்த்தி அதிகார சபையின் கீழ் பணியாற்றும் வவுனியா மாவட்ட சமுர்த்தி அலுவலர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.

இதில் வவுனியா மாவட்ட தமிழ் சிங்கள நிர்வாக பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இது பற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்


மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்

அமைதிப் போராட்டத்தில் மாணவர்கள்
அமைதிப் போராட்டத்தில் மாணவர்கள்

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்ல மறுத்த தென்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத நிலையில், தமக்கு தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் அனுமதி வழங்குமாறு பெரும்பாலான சிங்கள மாணவ, மாணவிகள் கோரியிருந்தனர்.

ஆயினும், இதுவரை அவர்களுக்கு இதுகுறித்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களின் நலனுக்கான சட்டமூலம்

இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு குறித்த சட்டமூலம் ஒன்றினை வரைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அதனை சட்டமாக்குவதற்காக உரிய அமைச்சரிடம் கையளித்துள்ளது.

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதனை ஒரு சட்டமூலமாக்குவதற்கான முயற்சிகளில் மனித உரிமைகள் ஆணையகம் ஈடுபட்டிருக்கின்றது.

பல வருடங்களாகத் தொடரும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமித் தாக்கம், இயற்கை அனர்த்தங்கள், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களில், போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்திருப்பவர்கள், நாட்டில் உள்ள ஏனைய மக்களைப் போன்று கௌரவமிக்க சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியாதவர்களாக இருப்பதாகவும், மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிடுகின்றது.

இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்குமான சட்டமூலம் ஒன்றை அது வரைந்திருக்கின்றது.

இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் அதனைக் கையளித்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்திருக்கின்றது.

இடம்பெயருகின்ற மக்களின் உரிமைகளைப் பல்வேறு நிலைகளிலும் பாதுகாத்து, சமூக பொருளாதார அடிப்படையில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதே இந்த சட்ட வரைவின் முக்கிய நோக்கமாகும் என்றும், இந்த வரைவு குறித்து பொது மக்களின் கருத்துகளைத் திரட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஆணையகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வடக்கு அகதிகளுக்கு உதவுவது என்று கிழக்கு மாகாண சபை முடிவு

கிழக்கு மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

இலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் கிளிநொச்சி மற்றும் அதனருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது என்றும் கிழக்கு மாகாண சபை முடிவெடுத்துள்ளது.

இவை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேசுவது என்றும் அங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

எத்தகைய உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து பேசிய பின்னரே முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.


கட்புல வலுவிழந்தோருக்கான கிரிக்கட்

இந்திய கிரிக்கட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணியுடன் விளையாடிவரும் நிலையில் போர்மேகம் சூழ்ந்துள்ள இலங்கையின் வடக்கே வவுனியாவில் பார்வையிழந்தவர்களுக்கான கிரிக்கட் விளையாட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக இந்தப் பயிற்சியை வழங்கிய கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியை வவுனியா வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் வி.சுப்பிரமணியம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.

”ஒருவர் பார்வை இழந்திருக்கின்றார் என்பதற்காக அவரது – விளையாட்டுத்துறை சார்ந்த திறமைகள் பண்புகள் என்பன பாதிக்கப்படக் கூடாது, அவ்வாறு கட்புல வலுவிழந்தவர்களை ஊககுவிக்க வேண்டும்” என்பதே தமது கழகத்தின் நோக்கம் என்றும் கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் கூறுகின்றார்.


வட இலங்கை நிலவரம் தொடர்பில் புலிகள் பொய்ப் பிரச்சாரம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் வடக்கில் யதார்த்த நிலை வேறு விதமாக இருக்க, வெளியுலகுக்கு பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இலங்கை அரசின் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிழக்கில் செய்தது போலவே மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை களைவதில் அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போது வடக்கு பகுதியில் ஆயிரக்காண ஏக்கர்கள் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கையும் தடைபட்டுள்ளது குறித்து கொழும்பிலிருந்து கொண்டு அரசால் மட்டுமே பெரிய அளவில் எதுவும் செய்துவிடமுடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.


விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர்: அனைத்துலக அபய ஸ்தாபனம்

விடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சட்டங்களை மீறுவதாக மனித உரிமை அமைப்பான அனைத்துலக அபய ஸ்தாபனம் கூறுகிறது.

இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வகையில், விடுதலைப்புலிகள் மக்களை பலவந்தமாக தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுத்து வைத்துள்ளது குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக அபய ஸ்தாபனத்தின் ஆய்வாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கமும் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் மோதலில், இராணுவ இலக்குகளை எட்டுவதற்காக இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற இரண்டு தரப்பினரும் பொதுமக்களை ஆபத்தில் விடுவதாக அபய ஸ்தாபனம் கூறியுள்ளது.

அபய ஸ்தாபனத்தின் தற்போதைய அறிக்கை குறித்து அந்நிறுவனத்தின் இலங்கை விவகார ஆய்வாளர் யோலாண்டா ஃபாஸ்டர் தமிழோசைக்குத் தெரிவித்தக் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



மன்னார் மடு ஆலயத்தில் ஆவணித் திருவிழாவை ஒட்டி திருப்பலி பூசை

இலங்கையின் வடமேற்கே இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருநாளையொட்டி வெள்ளியன்று எளிமையான முறையில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கின்றது.

நான்கு மாதங்களின் பின்னர் இந்த ஆலயத்தை திருச்சபையினரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் இங்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஆயினும் வெள்ளிக்கிழமை விசேட தினமாதலால் நாட்டின் தென்பகுதியில் இருந்து 700 பேர் அங்கு வந்திருந்ததாக மடு பரிபாலகர் அருட்திரு எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வடபகுதியில் இருந்து யாத்திரிகர்கள் எவரும் இன்று வரவில்லை என்றும் அவர் கூறினார்.

சேதமடைந்திருந்த மடுக்கோவிலின் கட்டிடங்கள் திருத்தப்பட்டுள்ள போதிலும், பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியிலேயே தாங்கள் அங்கு தங்கியிருப்பதாக அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவிக்கின்றார்.


விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சித் தளத்தை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஜீவன் தளம் எனப்படும் முக்கிய பயிற்சித் தளத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பிரசித்தி பெற்ற தளமாகிய ஒன்ஃபோர் தளம் எனப்படும் முகாமின் முக்கிய பகுதிகளில் ஜீவன் தளமும் ஒன்று என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.

கைப்பற்றப்பட்டுள்ள இந்த தளத்தில் 1250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நான்கு கட்டிடங்களும், 100 பதுங்கு குழிகளும், 35 கழிப்பறைகளும் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் 69 பேரின் கல்லறைகள் காணப்பட்டதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்iயில் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

வவுனியா பாலமோட்டை, துணுக்காய், வெலிஓயா ஆகிய களமுனைகள் உட்பட்ட வன்னிப் போர்முனைகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 38 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள் இங்கு இராணுவத்தினருடன் இடம்பெற்ற சண்டைகளில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.


வன்னியில் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அல்லப்படுவதாக புகார்

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அந்தப்பிரதேசத்தினுள் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வீதியோரங்களில் மர நிழல்களில் பொது இடங்களில் தங்கியுள்ள இவர்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவது கடினமாகியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவும் வேறு பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வன்னிப்பிரதேசத்து நிலைமைகள் குறித்து அவர் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகத்திடம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வன்னி பகுதிக்கு மனிதாபிமான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம்

இலங்கையில் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்விற்குள்ளாகியிருக்கும் மக்களின் துயர் துடைக்க, கிழக்கு மாகாண சபை அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை முன் வைத்து கடிதமொன்றை தமிழ் ஜனநாயக தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரத்தினம் அனுப்பி வைத்துள்ளார்.

வன்னிப் பிரதேசத்தில் ஏற்கனவே இடம் பெயர்ந்தவர்களும், நிரந்தர வசிப்பாளர்களும் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்விற்கு உள்ளாகி அல்லல்படுவதாகவும், உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா உட்பட இவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பது குறித்து அக் கடிதத்தில் தான் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

அத்தோடு மக்களை வெளியேறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்து மனிதக் கேடயமாக பயன்படுத்துவார்களானால் அது கண்டிக்க வேண்டியது என்றும்,
அதே போல மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது அரசாங்கத்தினால்
மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாயம்

பெரும்போக விவசாயத்திற்கு இலக்கு
பெரும்போக விவசாயத்திற்கு இலக்கு

இலங்கையின் கிழக்கு மாகாணப் பகுதியில் தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கை முடிவடைந்து, பெரும்போக விவசாயச் செய்கையினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.

இந்த நிலையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒரு இலட்சம்
ஹெக்டேர் விவசாய விளைநிலத்தில் விவசாயம்
செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு விவசாயிகளுக்கு நிதி உதவி, விதை நெல் உதவி, நில மேம்பாடு மற்றும் இதர வசதிகளை விவசாய அமைச்சு செய்து கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விளைப்பொருட்களை சந்தைபடுத்தல் என்பது சுலபமான விஷயமாக தான் இருக்கும், என்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.

கல்விளான் மற்றும் முழங்காவில் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்விளான் சிற்றூரையும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள முழங்காவில் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து அரச படைகள் இன்று கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய துணுக்காய்க்கு தென்மேற்கில் உள்ள கல்விளான் பகுதியை நோக்கி முன்னேறிய படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கடுமையான பலநாள் எதிர் தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நேற்று இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

ஆயினும் வவுனியா நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் நேற்று இராணுவத்தினருக்கு எதிராக தாங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

ஆனால், வவுனியா பாலமோட்டை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகளில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

வவுனிக்குளம் மற்றும் வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களில் 5 விடுதலைப் புலிகளும், 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

நலன்புரி நிலையத்தில் மீண்டும் தீ

இரண்டாவது தடவையாக தீ விபத்து
இரண்டாவது தடவையாக தீ விபத்து

வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இன்று பகல் ஏற்பட்ட தீயினால் அந்த நலன்புரிநியைத் தொகுதியின் இரண்டு பிரிவுகளில் உள்ள 80 வாழ்விடங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் 70 குடும்பங்கள் வசிப்பிடங்களை இழந்துள்ளதாகவும், சுமார் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த மாதம் 17 ஆம் திகதியும் இதே இடத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதும், அதிலும் நூற்ருக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும், இந்த நலன்புரிநிலையத் தொகுதியில் உள்ள பாடசாலை மண்டபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு இந்த குழும்பங்களுக்குத் தேவையான அடுத்த கட்ட உதவிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.



கிழக்கு இலங்கையில் ஆட்கடத்தல்கள், கொலைகள்

அம்பாறை மாவட்டம் கல்முனையில் ஒரு தாயும் மகனும் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் மட்டக்களப்பு கொத்தியாவளை கிராமத்தில் புதன் நள்ளிரவு கடத்தப்பட்ட விவசாயியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும் இக்கடத்தல்கள் மற்றும் கொலைக்கான பின்னனியோ, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியில் உள்ள காட்டுப் பிரதேசத்தில், புதன் மாலை விறகு வெட்டச் சென்ற இருவர் சுட்டுக்கொல்லபட்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகளே இவர்களை சுட்டுக்கொன்றதாக ஆரம்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இது குறித்து கருத்துக்கள் எதுவும் வரவில்லை.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Olympics quickly marred by tragedy: Relative of US volleyball coach killed – Father of former Olympian killed in Beijing

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

பீய்ஜிங்கில் அமெரிக்கப் பயணி கொலை

கொலை நடந்த பீய்ஜிங் நகர மேளக் கோபுரம்

பீய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று, அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவரை சீனர் ஒருவர் கொன்றுள்ளார். கொல்லப்பட்டவர், அமெரிக்க வாலிபால் அணியுடைய பயிற்சியாளரின் உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த அமெரிக்கரும், ஒரு பெண் உறவினரும் அவர்களுடைய சீன வழிகாட்டியும் பீய்ஜிங் நகர மையத்திலுள்ள பழங்காலக் கோபுரத்தில் இருக்கையில், சீனர் தாக்கியுள்ளார்.

அமெரிக்கரைக் கொன்ற பின்னர் அந்த சீனரும் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பெண்ணும், வழிகாட்டியும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இந்தக் கொலையின் காரணம் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. சீனாவில் வெளிநாட்டினர் தாக்குதலுக்குள்ளாவதென்பது அரிதாக நடக்கும் விஷயம்.


Posted in Law, Order | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Conflict between Georgia and South Ossetia

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

தெற்கு ஒஸ்ஸெட்டியாவில் சண்டையை நிறுத்தும்படி ஜோர்ஜியா தமது துருப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறது

ஜோர்ஜியா, தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலுள்ள தமது படையினருக்குப் போரை நிறுத்தும்படி ஆணையிட்டிருப்பதாக திப்லிசியிலுள்ள ரஷ்யத் தூதரகத்துக்குத் தெரிவித்துள்ளது.

அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை தொடங்கத் தாங்கள் தயார் என்று ரஷ்யாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் ஜோர்ஜியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜோர்யியப் படைகள் தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலிருந்து விலகிவிட்டன என்றும், தற்போது அந்த நகரம் ரஷ்யப் படைகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் ஜோர்ஜியா கூறுகிறது.

ஆனால் பெரிய பீரங்கிகள் விலகியதைத் தாங்கள் கண்டிருந்தாலும், ஜோர்ஜியப் படைகள் இன்னமும் அப்பகுதியில் உள்ளன என்று சீனா கூறுகிறது. கூடவே ஜோர்ஜயிப் படைகள் முழதாக விலகாது போர்நிறுத்தப் பேச்சுக்கு வாய்ப்பில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

இதற்கிடையே ஜோர்ஜியாவின் தலைநகர் திப்லிசியின் புறநகர் பகுதியிலுள்ள படை விமானத் தளம் மீது ரஷ்ய விமானம் குண்டுவீசியதாக ஜோர்ஜியா கூறியுள்ளது.

படைக் குவிப்பு செய்வதாக அப்காஸிய அதிகாரிகள் கூறுகின்றனர்






ஜோர்ஜியாவிடமிருந்து பிரிந்துபோன இன்னொரு பகுதியான அப்காஸியாவின் அதிகாரிகள் தாங்கள் முழு அளவில் படைகளைக் குவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமது வட பகுதி நகரான கொடோரிப் பள்ளத்தாக்கிலிருந்து ஜோர்ஜியப் படைகளை விரட்ட சுமார் ஆயிரம் துருப்பினரை அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அப்பகுதியில் இருக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கண்காணிப்புப் படையினரை விலக்கிக்கொள்ளும்படி ரஷ்யா ஐ.நா.வைக் கேட்டுள்ளது.

அப்பகுதிக்கு ரஷ்யா ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பியுள்ளது என ஜோர்ஜியா முறைப்பட்டுள்ளது.

அமெரிக்கா ரஷ்யாவைக் கடிந்துள்ளது

ஜோர்ஜியாவுடன் நடக்கும் மோதலில் ரஷ்யா எடுத்துள்ளது அளவு மிஞ்சிய ஆபத்தான நடவடிக்கை என அமெரிக்க அதிபர் தரப்புக் கடிந்துள்ளது.

அதிபர் புஷ் அவர்களோடு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் சீனாவில் இருக்கின்ற அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேம்ஸ் ஜெஃப்ரி அவர்கள், ரஷ்யாவின் நடவடிக்கைகள் அடங்காமல் அதிகரிக்கும் பட்சத்தில் அவை அமெரிக்கா, ரஷ்யா இடையிலான நீண்டகால உறவுகளைக் கணிசமாகப் பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு அதிபர் சர்க்கோசி அவர்களோடு தொலைபேசியில் பேசியிருந்த ஜெர்மனியின் சான்சல்லர் அஞ்செலா மெர்க்கல் அவர்கள், நிபந்தனைகள் எவையுமின்றி அப்பகுதியில் போர் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றுள்ளார்.

போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்களும் போரை நிறுத்தும்படி கேட்டுள்ளார்.


ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் யுத்த நிலை பிரகடனம்

ஜார்ஜியாவிலே பிரிவினை கோரும் தெற்கு அஸ்ஸெட்டியா பிராந்தியத்தின் அருகில் அமைந்துள்ள கோரி நகரில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஜார்ஜியாவில் யுத்த நிலையை பிரகடனம் செய்யும் அதிபரின் ஆணைக்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜார்ஜியத் துருப்புகள் குவிக்கப்பட்டுவருகின்ற இராணுவ நிலைகளை இலக்குவைத்து ரஷ்ய விமானங்கள் தாக்கின என்றாலும், ஒரு தாக்குதலில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். தங்களது விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதையும் ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

தெற்கு அஸ்ஸெட்டியாவின் தலைநகர் ஷின்வாலியைக் முற்றுகையிட ஜார்ஜியர்கள் செய்த முயற்சிக்குப் பின்னர், அந்நகரின் கட்டுப்பாட்டை ரஷ்யத் துருப்பினர் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அப்காஸியப் பிரிவினைவாதிகளும் ஜார்ஜியப் படைகள் மீது தாக்குதல்

ஜார்ஜியாவில் இருக்கின்ற மற்றுமொரு பிரிந்துபோன பிராந்தியமான அப்காஸியாவில் இருக்கின்ற பிரிவினைவாதிகள், கொடொரி கோர்ஜில் உள்ள ஜோர்ஜியப் படைகள் மீது தாம் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

கோர்ஜில் இருக்கின்ற ஜார்ஜியப் படைகளை அங்கிருந்து விரட்டுவதே தமது நோக்கம் என்று, அப்காஸியாவில் சுய-அரசாங்கத்தை பிரகடனம் செய்துள்ள ஆட்சியாளர்களின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த கோர்ஜ் பகுதிதான் அங்கு, ஜார்ஜிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பகுதியாகும்.

ஜார்ஜியா நிலவரம்: புஷ் கவலை

அதிபர் ஜார்ஜ் புஷ்

ஜார்ஜியாவில் உருவாகியுள்ள நெருக்கடி குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அதிபர் புஷ் கூறுகின்றார்.

ஒலிம்பிக் துவக்கவிழாவில் கலந்துகொண்டிருந்த அதிபர் புஷ் பீய்ஜிங்கிலிருந்து கருத்து வெளியிடுகையில், ஜார்ஜிய நிலப்பரப்பின் ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, குண்டுவீசுவதை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் ரஷ்யா, தனது முன்னாள் சோவியத் ஒன்றியப் பகுதிகளின் நிலப்பகுதிகளை அபகரிக்கும் எண்ணம் கொண்டிருக்கிறது என்ற குற்றம்சாட்டின் மூலம் ரஷ்ய நடவடிக்கையை ஜார்ஜியா ஊதிப்பெரிதுபடுத்துகிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜார்ஜியத் துருப்பினருக்கு இராக்கில் சண்டையில் ஈடுபடுதற்கு பயிற்சியளித்துவந்த அமெரிக்க இராணுவக் குழுவினர் ஜார்ஜியத் தளங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

NorthEast Secretariat on Human Rights (NESoHR): 70,000 new Internally Displaced People (IDP) in Vanni in 60 days; SLA shelling targets another hospital zone in Vanni, IDP killed; Sri Lankan Soldiers Kill 15 Tamil Tigers; Jets Raid Rebel Bases

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

வட இலங்கை மோதல்களில் விடுதலைப் புலிகள் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், வன்னிக் களமுனைகளிலும், யாழ்ப்பாணத்தில் கிளாலி களமுனைகளிலும் சனியன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பாலமோட்டை முன்னரங்க பகுதிகளிலும், வெலிஓயா பகுதியிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நேற்று நடத்திய தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் விபரம் வெளியிட்டுள்ளது. பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் கிளாலி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்களோ, வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம், நவ்வி ஆகிய பகுதிகளில் இருந்து மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


மடு தேவாலயம் திரும்பியது மாதா திருச்சொரூபம்

மாதா திருச்சொரூபம்
மாதா திருச்சொரூபம்

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலுக்கு, மன்னார் ஆயர் இல்லத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், சனிக்கிழமை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டு கொலுவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களாக உரிய பராமரிப்பின்றி இருந்த மடுக்கோவிலின் திருத்த வேலைகள் முடிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மடுக்கோவிலை பூஜை வழிபாட்டுக்குரிய புனிதமாக்கும் சமய வைபவங்களை மேற்கொள்வதற்காக கத்தோலிக்க மதகுருமார்கள் திங்கட்கிழமை அங்கு செல்லவிருப்பதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்தார்.


வட இலங்கையில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை இலங்கை அமைச்சர் உறுதி செய்துள்ளார்

அமைச்சர் ரிசாத் பதியுதீன்
அமைச்சர் ரிசாத் பதியுதீன்

இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் இலங்கையின் வட பகுதியில் தொடரும் மோதல்கள் காரணமாக அப்பகுதியில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் சபையின் முகவராண்மை கூறியதை இலங்கையின் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இருந்த போதிலும், அங்குள்ள மக்களுக்கான நிவாரண உதவிகள் ஆகஸ்டு மாதம் 15 திகதி வரைக்குமான அளவுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனாலும், அங்குள்ள அரசாங்க அதிகாரிகளை தற்போதைய சூழ்நிலையில் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவை குறித்து அமைச்சர் ரிசாத் பதியுதீனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விமானக் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் தளங்கள் அழிக்கப்பட்டதாக இராணுவம் கூறுகிறது- பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் அறிவிப்பு

விமானக் குண்டு வீச்சு( ஆவணப்படம்)
விமானக் குண்டு வீச்சு( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை காலையிலும் விமானப்படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ள விஸ்வமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது சனிக்கிழமை காலை 10 மணிக்கும், புதுக்குடியிருப்புக்கு வடக்கே உள்ள இரணைப்பாலையில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு தளம் ஒன்றின் மீது இன்று காலை 9.55 மணிக்கும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தளங்களை அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

பூநகரி பகுதியில் உள்ள நாகதேவன்துறைக்கு அருகில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு நிலையத்தையும், அதனோடு இருந்த படகுகள் நிறுத்துமிடத்தையும் விமானப்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் குண்டு வீசி தாக்கி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இரணைப்பாலை பகுதியில் இன்று காலை விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீதே குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஆசிரியர் ஒருவர் உட்பட 2 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆனால், அக்கூற்றினை விமானப்படையினர் மறுத்துள்ளனர். இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Stampede at Naina Devi Temple in Bilaspur HP: 145 Dead, 30 Injured – ‘Police cane-charged us’: Stampede survivors

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2008

இந்தியக் கோவிலில் கூட்ட நெரிசல்; குறைந்தது 140 பேர் பலி

வட இந்தியாவில் ஒரு இந்துக் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தபட்சம் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறுகின்றனர். தவிர ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஒரு குன்றின்மேல் அமைந்துள்ள நைனா தேவி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிராவண மாத நவராத்திரி சிறப்புப் பூஜைக்காக சென்றுகொண்டிருக்கையில், பாதையின் விளிம்பி உள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழ, ஜனநெரிசல் ஏற்பட்டததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.

இறந்தவர்களில் சுமார் நாற்பது பேர் சிறார்

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

சென்னை விமான நிலையத்தில் கார்களுக்கு தடை

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2008

பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலைய பிரதான சாலையில் கார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களின் கார்களுக்கு மட்டுமே வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மற்றும் அகமதாபாத் தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதல் லிஸ்டில் சென்னையும் இடம் பெற்றிருப்பதால் சென்னை மாநகர் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. ஆனால் அதில் வெறும் துணிகளும், வாட்ச் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் அங்கு அமைதி திரும்பியது.

முழுவதும் வாசிக்க: தட்ஸ்தமிழ்

மேலும் விவரங்களுக்கு:
1. Navhind Times on the Web: India: “Unclaimed suitcase creates scare at Chennai airport”

2. The Hindu News Update Service: “Tiffin box at Chennai airport causes flutter”

Posted in Tamil | Leave a Comment »