Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஏப்ரல், 2008

Director Vittalacharya: Jeganmohini – Tamil Movie History

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2008

திரைப்பட வரலாறு :(910)
“மாயாஜால மன்னன்” விட்டலாச்சாரியா
“ஜெகன்மோகினி” மூலம் சாதனை படைத்தவர்

மாயாஜாலப் படங்கள் எடுத்து, பெரும் புகழ் பெற்றவர் விட்டலாச்சாரியா. இவர் தெலுங்கில் எடுத்த “ஜெகன்மோகினி”, தமிழில் “டப்” செய்யப்பட்டு நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படத் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கிய விட்டலாச்சாரியா, 1920-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி அருகில் உள்ள பெல்லே என்ற ஊரில் பிறந்தார்.

தந்தை பெயர் பத்மநாபா ஆச்சாரியார். இவர் ஆயுர்வேத வைத்தியர்.

தாயார் பெயர் சீதம்மா.

தெருக்கூத்து

கர்நாடக மாநிலத்தில், கிராமங்களில் “பைலாட்டா” என்ற கலை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இது, நம் ஊர் தெருக்கூத்து போன்றது. இதில் பங்கேற்பவர்கள், ஒப்பனையிலும் ஆட்டத்திலும் `கதகளி’ நடனக் கலைஞர்கள் போலத் தோன்றுவார்கள்.

இந்த கலை நிகழ்ச்சியில், விட்டலாச்சாரிக்கு மிகுந்த ஆர்வம். விடிய விடிய வேடிக்கை பார்ப்பார். இது, அவரது தந்தைக்கு கொஞ்சமும் பிடிக்காது.

பெல்லே கிராமம், கடற்கரைக்கு அருகே இருந்தது. விட்டலாச்சாரி 10வயது சிறுவனாக இருக்கும்போதே, மீனவர்களுடன் கட்டு மரத்தில் ஏறி கடலுக்குள் போய் விடுவார். மாலையில்தான் வீடு திரும்புவார்.

ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த தன் மகன் இப்படி தெருக்கூத்தில் ஆர்வம் காட்டுவதும், மீனவர்களுடன் சேர்ந்து கொண்டு அபாயகரமான கட்டுமரப்பயணம் மேற்கொள்வதும், தந்தைக்கு கோபத்தை அளித்தன. விட்டலாச்சாரிக்கு அடிக்கடி அடி-உதை விழும். ஆனாலும், அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

150 மைல் நடந்தார்!

ஒருநாள் தந்தை கடுமையாகத் திட்டிவிடவே கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார், விட்டலாச்சாரியா. கட்டிய வேட்டி – சட்டையுடன் புறப்பட்டவர், உடுப்பியிலிருந்து மைசூருக்கு 150 மைல் தூரம் நடந்தே போய்விட்டார்! அப்போது அவருக்கு வயது 18 இருக்கும்.

விட்டலாச்சாரியாவுக்கு சிறு வயது முதலே உடற்பயிற்சிகளில் ஆர்வமுண்டு. உடம்பை கட்டுமஸ்தானாக வைத்திருப்பார். மைசூருக்குப் போய், அங்கு தனக்குத் தெரிந்த நண்பர்களைச் சந்தித்தார்.

மைசூரில் அவர் நண்பர்கள் 8 பேர் சேர்ந்து டூரிங் டாக்கீஸ் நடத்தி வந்தார்கள். தங்கள் கூட்டணியில் இவரையும் சேர்த்துக் கொண்டார்கள். எதற்காக இவரைச் சேர்த்துக் கொண்டார்கள் தெரியுமா? அப்போதெல்லாம் அந்த டூரிங் டாக்கீஸ் நடமாடும் திரையரங்காக பல பகுதிகளுக்கு இடம் பெயரும் – சர்க்கஸ் மாதிரி.

ஒவ்வொரு நாளும் வசூலாகும் பணத்தை, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நள்ளிரவில் கொண்டு போகும் பணத்துக்கு, பாதுகாப்பாக ஓர் ஆள் இருக்கட்டும் என்றுதான் விட்டலாச்சாரியாவை சேர்த்துக் கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல; படத்தை திரையிடும்போது ஏற்படும் பிரச்சினைகள், கூட்டத்தில் நடக்கும் தகராறுகள் ஆகியவற்றை சமாளிக்கும் பொறுப்பையும் இவர் ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே கலை ஆர்வம் கொண்டவர் ஆதலால், திரையரங்கில் ஓடிய படங்களை ஒன்று விடாமல் பலமுறை பார்த்து, தன் ரசனையை வளர்த்துக் கொண்டார்.

அந்த 8 பேர் கூட்டணியில் விட்டலாச்சாரியா சேர்ந்ததும், வசூல் குவிந்தது. ஒரு டூரிங் டாக்கீஸ், மூன்றாக வளர்ந்தது. ஒரே சமயத்தில் வெவ்வேறு 3 இடங்களில் படங்கள் ஓடும். வசூலின்போது, விட்டலாச்சாரியா பணப் பாதுகாப்பு பொறுப்பில் இருப்பார். இப்படி ஊர் ஊராக இடம் பெயர்ந்து, ஆங்காங்கே 1 மாதம், 2 மாதம் என்று முகாம் இட்டு படங்களை திரையிட்டு வந்தார்கள்.

வி.சாந்தாராம்

ஒருமுறை மைசூருக்கு பிரபல இந்திப்பட இயக்குனர் வி.சாந்தாராம் வந்திருந்தார். தன் “ஜனக் ஜனக் பாயல் பாஜே” படத்தின் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற இடங்களை பார்க்க அவர் வந்திருந்தார்.

அவரை விட்டலாச்சாரி யா பல இடங்களுக்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினார். இத னால் சாந்தாராமுடன் நெருக்கமானார். படப்பிடிப்பு நடந்தபோது அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றார்.

ஏற்கனவேசினிமா ஆர்வம் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பை கண்கூடாக பார்க்கும் வாய்ப்பு அவருக்கு பெரிய ஈடுபாட்டை தூண்டியது. திரைப்படம் உருவாகும் முறையை கண்டு, கேட்டு, உற்று நோக்கி, விசாரித்து அறிந்து கொண்டார்.

டூரிங் டாக்கீஸ் தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில், `எத்தனை நாள்தான் எப்படி ஊர் ஊராக சுற்றுவது’ என்று யோசித்த நண்பர்கள் ஒரு முடிவெடுத்தனர்.

சினிமா ஸ்டூடியோ

தியேட்டர்களை நல்ல லாபத்துக்கு விற்றனர். இந்த 9 பேரும் சேர்ந்து “நவஜோதி ஸ்டூடியோ” என்று மைசூரில் ஒரு ஸ்டூடியோவை தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் அதிலிருந்து விட்டலாச்சாரியாவும், அவரது நண்பர் சங்கர்சிங் என்பவரும் வெளியேறி, “மகாத்மா பிக்சர்ஸ்” என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார்கள்.

அப்போது சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. காந்தி மீது ஈடுபாடு கொண்டதால் அவரது பெயரை தங்கள் நிறுவனத்துக்கு வைத்தார்கள்.

காந்தியின் கொள்கையில் பற்றும், ஆர்வமும் கொண்ட விட்டலாச்சாரியா, சுதந்திரப் போராட்ட மறியல்களில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டுச் சிறை சென்றார். சிறையில் 6 மாதங்கள் இருந்தபின், விடுதலையானார். `வன்முறை கிளர்ச்சிகள் கூடாது’ என்று மகாத்மா காந்தி சொன்னதால் வன்முறை போராட்டங்களை தொண்டர்கள் கைவிட்டனர். விட்டலாச்சாரியாவும் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கினார்.

முதலில் எடுக்கப்பட்ட படம் `சீனிவாச கல்யாணம்’ என்கிற கன்னடப்படம். அதைத்தொடர்ந்து 7 படங்கள் தயாரித்தார். பிறகு, சங்கர்சிங்கை விட்டுப் பிரிந்தார்.

அதன் பிறகு, யாருடனும் கூட்டு சேர்வது தனக்குச் சரி வராது என்று முடிவெடுத்து, 1951-ல் தன் பெயரில் “விட்டல் புரொடக்ஷன்ஸ்” தொடங்கினார்.

அவருக்கு 25 வயதில் திருமணமானது. சொந்தப்பட நிறுவனம் ஆரம்பித்தபோது அவரது வயது 30.

தந்தை இறந்து விடவே, வீட்டுக்கு மூத்த பிள்ளையான இவர் மீது குடும்பப் பொறுப்பு விழுந்தது. தங்கைகள் நால்வர். ஒரு தம்பி. எல்லாரையும் கவனித்துக் கொண்டார்.

திரைப்பட வரலாறு 911
என்.டி.ராமராவை வைத்து 18 படங்கள் எடுத்தார்

தெலுங்குப்பட உலகின் சூப்பர் ஸ்டார் என்.டி. ராமராவை வைத்து, 18 படங்கள் எடுத்தவர், விட்டலாச்சாரியா.

இவர் முதன் முதலாக எடுத்த படம் “ஜெகன்மோகினி” (கன்னடம்).

முதல் படத்திலேயே இவருக்கும் டைரக்டருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. எனவே தான் தயாரிக்கும் படங்களை தானே இயக்குவது என்று முடிவெடுத்தார்.

பிரம்மாண்டமான அரங்க அமைப்புகள் அலங்காரமான உடைகள், தந்திரக் காட்சிகள் ஆகியவை விட்டலாச்சாரியாவின் படங்களின் சிறப்பு அம்சங்கள்.

சமூகக் கதைகள்

ஆரம்ப காலத்தில் `கன்னியாதானா’, `மனே தும்பிதே ஹென்னோ’ போன்ற சமூகக் கதைகளை இயக்கினார். விருதுகள் கூட கிடைத்தன. ஆனால், வெற்றி கிட்டவில்லை. எனவே, சரித்திரப் பின்னணியுடன் பிரமாண்ட கதைக்களமே தன் பாணியென்று முடிவு செய்தார்.

கன்னடப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் கவனம் செலுத்தினார். என்.டி.ராமராவை வைத்து நாகிரெட்டி `பாதாள பைரவி’யை தெலுங்கில் எடுத்தார். அதை கன்னடத்தில் “டப்” செய்ய, தொழில் நுட்பம் சார்ந்த பொறுப்புகளை விட்டலாச்சாரியா ஏற்றுக்கொண்டார். என்.டி.ராமராவுக்கு கன்னடத்தில் குரல் கொடுத்தவர் ராஜ்குமார். அப்போது ராஜ்குமார் நடிக்க ஆரம்பிக்கவில்லை.

இந்த டப்பிங் வேலைகள், சென்னை ஸ்டூடியோக்களில்தான் நடைபெற்றன. விட்டலாச்சார்யாவின் ஈடுபாடும், உழைப்பும் தெலுங்குத் திரையுலகில் பலரையும் கவர்ந்தன.

கன்னடத்தில் வெற்றி பெற்ற சில சமூகக் கதைகளை தெலுங்கில் இயக்கினார். அவை வெற்றி பெறவில்லை. பெயர் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார்.

1959 முதல், தெலுங்கில் காலூன்றினார். முதலில் காந்தாராவ் நாயகன். கிருஷ்ணகுமாரி (சவுகார்ஜானகியின் தங்கை) நாயகி என வைத்து `ஜெயவிஜயா’ என்றொரு படம் இயக்கினார். சரித்திரப் பின்னணியும் மாயாஜாலக் காட்சிகளும் கொண்ட படம் இது. இதே ஜோடியை வைத்து `கனகதுர்கா பூஜாமஹிமர்’ இயக்கினார்.

பிறகு `வரலட்சுமி விரதம்’, `மதனகாமராஜ கதா’ என காந்தாராவை வைத்து பல படங்களை எடுத்தார்.

என்.டி.ராமராவ்

காந்தாராவைத் தொடர்ந்து என்.டி.ராமராவை வைத்து முதலில் `பந்திபோட்டு’ என்றொரு படம் இயக்கித் தயாரித்தார். இதே கதையை ஒரே நேரத்தில் கன்னடத்தில் ராஜ்குமாரை வைத்து `வீரகேசரி’ என்று உருவாக்கினார். இன்றும்கூட “வீரகேசரி” படம், கர்நாடக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த படமாகும்.

என்.டி.ராமராவுக்கு இவரது திறமையின் மீது மதிப்பு வரவே, தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார்.

`அக்கிப்பிடுகு’, `அக்கிப்பராட்டா’, `கந்திகோட்ட ரகஸ்யம்’, `அக்கி வீருடு’, `அரிபாயா நலபை தொங்கலு’ போன்ற 18 படங்களில் ராமராவ் நடித்தார். இதில் ஜெயலலிதா இணைந்து நடித்தவை 4 படங்கள். சரோஜாதேவி, தேவிகா, கே.ஆர்.விஜயா போன்ற முன்னணி நடிகைகள் பலரும் நடித்தார்கள்.

ராமராவ் படம் முடிந்து, கிடைக்கும் இடைவெளி காலத்தில், காந்தாராவ் நடித்து குறுகிய காலத் தயாரிப்பில் படங்கள் வரும். “வீரத்திலகம்”, “மாயமோதிரம்”, “மந்திரிகுமாரன்” போன்றவை அப்படி வெளிவந்தவைதான்.

வீரத்திலகம்

1964-ல், பொங்கலன்று எம்.ஜி.ஆர். நடித்த “வேட்டைக்காரன்”, சிவாஜிகணேசன் நடித்த “கர்ணன்” ஆகிய படங்கள் ரிலீஸ் ஆயின. அதே நாளில் வெளிவந்த விட்டலாச்சாரியாவின் “வீரத்திலகம்” படமும், அந்தப் படங்களைப்போல் நூறு நாட்கள் ஓடியது.

வரலாறு படைத்த படம்

முதன் முதலாக கன்னடத்தில் எடுத்த “ஜெகன்மோகினி” கதையை 1978-ல் தெலுங்கில் எடுத்தார். மாயாஜாலங்களும், விசித்திரமான வேதாளங்களும் கொண்ட இப்படத்தில் நரசிம்மராஜ×, ஜெயமாலினி ஆகியோர் நடித்தனர்.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற இப்படத்தை தமிழில் அதே பெயரில் “டப்” செய்து வெளியிட்டார்.

“ஜெகன்மோகினி” மாபெரும் வெற்றிப் படமானது. சென்னையிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலை குவித்தது. தினமும் “ஹவுஸ்புல்” காட்சிகள்!

தொடர்ந்து, விட்டலாச்சாரியாவின் “கந்தர்வக்கன்னி”, “நவமோகினி”, மோகினி சபதம்” ஆகிய டப்பிங் படங்கள் தமிழ்நாட்டில் சக்கை போடுபோட்டன.

நேரடி தமிழ்ப்படம்

விட்டலாச்சாரியா டைரக்ட் செய்த நேரடி தமிழ்ப்படம் ஒன்றே ஒன்றுதான்.

“பெண் குலத்தின் பொன் விளக்கு” என்ற பெயர் கொண்ட இப்படத்தில் ஜெமினிகணேசன், எம்.என்.ராஜம், ஸ்ரீரஞ்சனி, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்தனர். 10-7-1959-ல் இப்படம் வெளிவந்தது.

டப்பிங் படங்களில் வெற்றி பெற்ற விட்டலாச்சாரியா, நேரடி தமிழ்ப்படத்தில் வெற்றி பெற முடியாமல் போனது பெரிய ஆச்சரியமே!

திரைப்பட வரலாறு 912
சிங்கத்தைக்கண்டு அஞ்சாத விட்டலாச்சாரியா
வீட்டில் புலிக்குட்டிகளை வளர்த்தார்!

விட்டலாச்சாரியா, காட்டு மிருகங்களுக்கு அஞ்சாதவர். அவருடைய படங்களில் சிங்கம், புலி, கரடி, பாம்பு போன்றவை நிறைய இடம் பெற்றன. 2 புலிக்குட்டிகளை வீட்டில் வளர்த்தார்.

வீரசாகசங்களில் ஆர்வம் உள்ளவர், விட்டலாச்சாரியா. தன் நண்பர்களுடன் வேட்டையாடச் செல்வதுண்டு.

புலி வேட்டை

ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடப் போனபோது, ஒரு புலியை வேட்டையாடினார். அந்தப் புலி போட்டிருந்த
2 குட்டிகளை தூக்கிக்கொண்டு வந்தார். வீட்டில் வளர்த்தார். அந்தப் புலிக்குட்டிகள் நன்றாகப் பழகின. நாய்க்குட்டி போலவே செல்லமாக வைத்திருந்தார்.

குட்டிகள் வளர்ந்ததும் அவற்றின் குணத்தைக் காட்ட ஆரம்பித்தன. வீட்டிலிருந்த பூனைகளை அடித்துச் சாப்பிட்டன. வீட்டில் உள்ளவர்கள் பயந்தார்கள்.

எனவே, 2 புலிக்குட்டிகளையும் மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு கொடுத்துவிட்டார்.

விலங்குகளைப் பயன்படுத்தி நிறைய படங்கள் எடுத்தார். கொடிய விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை நடிக்கும் போதெல்லாம், எல்லாரும் அச்சப்படுவார்கள். படப்பிடிப்புக்குழுவே பயந்தாலும் இவர் மட்டும் அஞ்சாமல் இருப்பார்.

ஒருமுறை `நவகிரகபூஜை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. காந்தாராவும் வாசந்தியும் நடித்த படம்.

ஒரு குழிக்குள் சிங்கம் இருக்கும். அதில் கதாநாயகனின் மகன் தள்ளப்பட வேண்டும். கதாநாயகன் தன் மகனைக் காப்பாற்ற குழிக்குள் இறங்கி, சிங்கத்துடன் சண்டையிட வேண்டும். இதுதான் எடுக்கப்படவேண்டிய காட்சி.

சிங்கம் வந்தது

பையனும் சிங்கமும் சேர்ந்து இருப்பது மாதிரியான காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டன. அதன்பிறகு கதாநாயகன் குழிக்குள் இறங்கிச் சண்டையிட வேண்டும்.

எல்லாரும் அடுத்த காட்சி எடுக்க ஆயத்தமானார்கள். ஆனால், திடீரென்று சிங்கம் அந்தப் பள்ளம் போன்ற செட்டை விட்டு குதித்து மேலே வந்துவிட்டது! படப்பிடிப்புக் குழுவினர் அலறியடித்து சிதறி ஓடினர்.

ஆனால், விட்டலாச்சாரியா மட்டும் பதற்றப்படாமல் ஒரு நாற்காலியில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். மேலே சிங்கம் வந்ததைப் பார்த்தவர், தன்னருகே இருந்த சிகப்பு மின் விளக்கை அதன் பக்கம் திருப்பி வைத்தார். ஒளி அதன் கண்களை கூசச் செய்ததால், சிங்கம் அப்படியே அசையாமல் நின்றது.

தூரமாக நின்று பார்த்தவர்கள் வியந்து போனார்கள். மெல்ல மெல்ல நெருங்கி வந்தார்கள். மீண்டும் பள்ளத்தில் சிங்கம் விடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.

“எப்படி உங்களால் பயப்படாமல் இருக்க முடிந்தது?” என்று எல்லாரும் கேட்டபோது, “எனக்கு விலங்குகளின் மனோதத்துவம் தெரியும். பிரகாசமான ஒளி கண்ணில் படும்போது, சிங்கம் அப்படியே நின்றுவிடும். நகராது. அதைத்தான் நான் செய்தேன். நீங்கள் பயந்து ஓடினீர்கள். அது ஒன்றும் செய்யாது என்று எனக்குத் தெரியும். என் சிகரெட்டைப் பாருங்கள். அதன் சாம்பல்கூட உதிரவில்லை” என்று தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டைக்காட்ட, எல்லாரும் அசந்துவிட்டார்கள்.

விட்டலாச்சாரியா படங்களில் அவர் மட்டும் (அதாவது டைரக்டர்)தான் கதாநாயகன். கப்பலின் மாலுமி போல மொத்த குழுவினருக்கும் அவரே தலைவராக இருப்பார். சகல கட்டுப்பாடுகளும் அவர் கையில்தான் இருக்கும்.

படம் தயாரிக்கத் தொடங்கியதிலிருந்து கடைசிவரை துணிவையே மூலதனமாகக் கொண்டிருந்தார். “ஒன் மேன் ஆர்மி”யாகவே கடைசிவரை இருந்தார்.

படப்பிடிப்பில் பரபரப்பு பெரிய சத்தம் என்று இருப்பவர், வீடு சென்றுவிட்டால் அமைதியாக இருப்பார். இவரது வருகைக்குப்பின் வீடு நிசப்தமாகிவிடும். வீட்டிலிருக்கும் போது எந்நேரமும் யோசனையில் ஆழ்ந்து இருப்பார். அப்போது யாராவது குறுக்கிட்டால் கோபம் வரும். எனவே, அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது யாரும் அருகில் வரமாட்டார்கள்.

அவர் அதிகமாக யோசிப்பது பிரமாண்ட காட்சிகள் சம்பந்தமாக மட்டுமல்ல. `நகைச்சுவை காட்சிகளுக்காகவும்தான் இந்த சிந்தனை’ என்பார். தன் படங்களில் மாயாஜால அம்சங்கள் போல, நகைச்சுவைக் காட்சிகளும் பேசப்படும்படி இருக்க விரும்புவார்.

ரசிகர்கள் ஆர்வம்

ராஜ்கபூரின் “பாபி” இந்திப்படம் சென்னை மிட்லண்ட் திரையரங்கில் ஓடியபோது, வெளிïர் ரசிகர்கள் தபால் மூலம் பணம் அனுப்பி டிக்கெட் எடுத்துக்கொண்டு படம் பார்த்தது வரலாறு.

இதேபோல, விட்டலாச்சாரியாவின் “வீரகேசரி”, “ஜெகன் மோகினி” ஆகியவை வெளியானபோது, கிராமப்புற ரசிகர்கள் மாட்டு வண்டி, கட்டுச்சோறு என்று பயணமாக வந்து, படம் பார்த்தனர்!

“ஓரளவுக்கு மேல் பணம் சேர்க்கக்கூடாது. எவ்வளவு தேவையோ அதையே வைத்துக் கொள்ள வேண்டும். பணம் அதிகம் வந்தால், மனிதனின் குணம் மாறிவிடும்” என்று அடிக்கடி கூறுவார்.

விருதுகள், விழாக்கள் என்று எவ்வளவோ வந்தபோதும் எல்லாவற்றையும் மறுத்தார். `புனே திரைப்படக் கல்லூரி’யின் தலைவர் பதவிகூட தேடி வந்தது. இவர் விரும்பவில்லை. “எனக்கு சினிமா ஒரு தொழில். என் பிழைப்புக்காகப் படம் எடுக்கிறேன். நான் என் வியாபாரத்துக்காக – வருமானத்துக்காகவே படம் எடுக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்” என்றே கூறுவது வழக்கம்.

குடும்பம்

விட்டலாச்சாரியாவின் மனைவியின் பெயர் ஜெயலட்சுமி. 14 வயதில் வாழ்க்கைப்பட்டவர். இவர்களுக்கு 4 மகன்கள், 4 மகள்கள்.

கடைசிவரை யாரையும் சாராமல் இருந்து திரையுலகில் சாதனை படைத்த விட்டலாச்சாரியா, தன் 79-வது வயதில் 28-5-1999-ல் காலமானார்.

மரணத்தைக் கண்டு அவர் அஞ்சவில்லை. முழு வாழ்க்கை வாழ்ந்த திருப்தியுடன் இறந்தார். தன் கடைசி நிமிடங்களில் குடும்பத்தினரை அருகில் அழைத்து, “நான் முழுமையான வாழ்க்கை வாழ்ந்தேன். திருப்தியாக வாழ்ந்த சந்தோஷத்துடன் போகிறேன்” என்று கூறி, தனக்குப் பிடித்த பஜனைப் பாடல்களைப் பாடச் சொன்னார். குடும்பமே பரவசத்தில் பாட, ஒரு புன்னகை உதட்டில் தவழ உயிர் பிரிந்துவிட்டது.

விட்டலாச்சாரியா இயக்கித் தயாரித்த படங்கள், மொழி மாற்றம் செய்த படங்களின் எண்ணிக்கை 80. இதில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டவை 20.

மகன்கள்

தந்தையின் மறைவுக்குப்பின் 4 மகன்களில் மூத்தவர் பி.வி.சீனிவாசன் மட்டும் திரைப்படத்துறையில் ஆர்வம் காட்டினார். தமிழில் “பெண்ணை நம்புங்கள்”, “தாய்ப்பாசம்”, “அவள் ஒரு அதிசயம்” என்று 3 படங்களையும், தெலுங்கில்
4 படங்களையும் இயக்கினார். “ஜெய் வேதாளம்” என்கிற படத்தை இயக்கித் தயாரித்தார். இந்தியாவின் 2-வது முப்பரிமாண (`3டி) படம் அது. அதன்பின் படங்கள் இயக்கவில்லை. மைசூரில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

தன் தந்தையுடன் தயாரிப்பு பணியில் இருந்த இன்னொரு மகன் பத்மநாபன் சென்னையில் வசிக்கிறார். 1973 முதல் தந்தையுடன் இருந்து வந்தவருக்கு படம் தயாரிக்க ஆர்வம் உண்டு. ஆனால் திரையுலகின் தற்போதைய சூழ்நிலை அவருக்கு ஒத்து வராததால், திரையுலகை விட்டு விலகியிருக்கிறார்.

இன்னொரு மகன் சசிதரன் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறார்.

முரளிதரன் “மல்டி நேஷனல் கம்பெனி” ஒன்றில் மண்டல நிர்வாகியாக இருக்கிறார்.

இப்படி நான்கு மகன்களுமே திரையுலகில் சம்பந்தப்படாமல் இருக்கிறார்கள்.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | 1 Comment »

Notorious rowdy ‘bomb’ Balaji dies in police encounter

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 29, 2008

ரௌடி “பாம்’ பாலாஜி காவல்துறையினரால் சுடப்பட்டு சாவு

திருச்சி, ஏப். 28: தஞ்சாவூரைச் சேர்ந்த ரௌடி “பாம்’ பாலாஜி திருச்சி சர்க்கார்பாளையத்தில் திங்கள்கிழமை அதிகாலை போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திருவெறும்பூர் போலீஸôர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதால், பாலாஜியை போலீஸôர் சுட்டதாக திருச்சி சரக டிஐஜி அசோக்குமார் தாஸ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை சுந்தரம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த தனபதியின் மகன் “பாம்’ பாலாஜி (32). இவர் மீது 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளன.

திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு தொடர்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பாலாஜி திருச்சி மத்திய சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டிருந்தார்.

வெளியே வந்த பாலாஜி அதன் பின்னர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை திருச்சியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

இந்தச் சம்பவம் குறித்து திருச்சி சரக டிஐஜி அசோக்குமார் தாஸ் அளித்த பேட்டி:

“”திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் கபிலன், உதவி ஆய்வாளர் உதயகுமார், காவலர்கள் முத்துசாமி, முருகானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது “நம்பர் பிளேட்’ இல்லாமல் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அவர்கள் வழிமறித்த போது நிற்காமல் சென்றதால் போலீஸôர் பின்தொடர்ந்தனர்.

சிறிது தொலைவு சென்றதும் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் அதில் வந்த நபர் கீழே குதித்துத் தப்பியோட முயன்றார். அந்த நபர் ரௌடி “பாம்’ பாலாஜி எனத் தெரிய வந்தது.

போலீஸôர் அவரைத் துரத்திய போது அவர்கள் மீது பாலாஜி நாட்டு வெடிகுண்டை வீசினார். ஆனால், அந்தக் குண்டு வெடிக்கவில்லை.

தொடர்ந்து ஆய்வாளர் கபிலனை நோக்கி, தான் வைத்திருந்த கைத் துப்பாக்கியால் பாலாஜி சுட்டார். ஆனால், கபிலன் விலகியதால் அவருக்குக் காயம் ஏற்படவில்லை. உடனே உதவி ஆய்வாளர் உதயகுமாரை நோக்கிச் சுட்டதில் அவரது இடது கையில் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து, பல முறை எச்சரிக்கை விடுத்தும் பலனில்லாததால் ஆய்வாளர் கபிலன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் பாலாஜியை நோக்கிச் சுட்டார்.

மார்பில் காயமடைந்த ரௌடி பாலாஜியையும், உதவி ஆய்வாளர் உதயகுமாரையும் ஆய்வாளர் கபிலன் திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பாலாஜி சிறிது நேரத்தில் இறந்தார். உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார் அசோக்குமார் தாஸ்.

ரௌடி பாலாஜி சுடப்பட்ட இடத்தை திருச்சி டிஐஜி அசோக்குமார் தாஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். அங்கு, ரௌடி பாம் பாலாஜி வீசிய நாட்டு வெடிகுண்டு, அவர் வைத்திருந்த கைத் துப்பாக்கி, பாலித்தீன் பை ஆகியவை சிதறிக் கிடந்தன. அந்தப் பையில் ஒரு நாட்டு வெடிகுண்டும், மாலைப் பத்திரிகையும், சில காகிதங்களும் இருந்தன.

பாலாஜி மீதான வழக்குகள்: கடந்த 2003 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் அன்பழகன், 2006 ஆம் ஆண்டு கரூர் பசுபதிபாளையத்தில் சிவக்குமார், 2008 ஆம் ஆண்டு வேலூர் சத்துவாச்சாரியில் சுரேஷ், திண்டுக்கல்லில் ராஜா, தஞ்சாவூர் பெரிய கோயிலில் ரவிச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் “பாம்’ பாலாஜி.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு கத்தியைக் காட்டி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி கே.கே.நகர் போலீஸôரால் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் சிறையில் இருந்தார்.

பாலாஜிக்கு லதா (27) என்ற மனைவியும், ஆண்- பெண் என இரு குழந்தைகளும் உள்ளனர்.

Posted in Law, Order, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: | 1 Comment »

Apr 27 – LTTE, Eezham, Sri Lanka: News & Updates from BBC

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 28, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 மே, 2008

வட மாகாணத்துக்கு சிறப்புச் செயற்பாட்டுக்குழு

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கென்று புதிய சிறப்பு செயற்பாட்டுக்குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் முன்வைத்த பிரேரணை ஒன்றுக்கு, நேற்று புதன்கிழமை கூடிய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்தக் குழுவில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெறுகிறார்கள்.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால பரிந்துரைகளில் வட மாகாணத்திற்கு என்று ஒரு இடைக்கால சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்ற பரிந்துரைப்படி, நிறுவப்படக் கூடிய இடைக்கால நிர்வாக சபைக்கான ஒரு முன்னோடியாக இந்தக் குழு அமையும் என்று இந்தக்குழுவின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசைக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட பல பணிகளை இந்தக்குழு நிறைவேற்றும் என்றும் அவர் கூறினார்.

இவை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எதிர்ப்பு

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த பிரதேச குடியிருப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

2006 ஆம் ஆண்டு அந்த பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருக்கின்றார்கள்.

தாங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், தமது குடியிருப்புப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் இவர்கள், இந்தியா இதற்கு உதவுவது குறித்து இந்தியா மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்கள்.

விசேட நிபுணர்களின் குழுவின் தீர்மானத்தின் படியே இந்த இடத்தை தாம் தெரிவு செய்ததாகக் கூறும் இலங்கை மின்சக்தி எரி பொருட்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த பகுதி, தற்போது சுற்றுலாப் பயணத்துறைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அது பொருத்தமற்றது என்கின்றார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


‘இலங்கை விவகாரத்தில் இந்தியா மீண்டும் தலையிட வேண்டும்’- பண்ருட்டி ராமச்சந்திரன்

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங் அவர்கள் கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயெ ராமச்சந்திரன் அவர்களின் இந்தக் கருத்தும் வந்துள்ளது.

இன்று இலங்கையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடக்கும் நிலையில், அங்கு ஒரு அரசாங்கமே மக்களின் மீது தாக்குதலை நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டும் ராமச்சந்திரன் அவர்கள், இந்த விடயத்தில் தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூட பிரச்சினையின் முழுமையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக இல்லை என்று கூறியுள்ளார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008


வட இலங்கையில் கடுமையான மோதல்

இரு தரப்பாலும் கடுமையான எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன
இரு தரப்பாலும் கடுமையான எறிகணை வீச்சுகள் நடத்தப்பட்டுள்ளன

இலங்கையின் வடக்கே மன்னார், வெலிஓயா பகுதிகளில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மற்றும் எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாகவும் மன்னார் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகவும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் -18 எனப்படும் முக்கிய தளம் உட்பட்ட வேப்பங்குளம், கள்ளிக்குளம் பிரதேசம் முழுமையாக இராணுவத்தினரால் இன்று கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 40 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இப்பகுதியில் இராணுவத்தினருக்கு உதவியாக எம்.ஐ தாக்குதல் உலங்கு வானூர்திகளும் விடுதலைப் புலிகள் மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இதேவேளை, வெலிஓயா எனப்படும் மணலாறு பகுதியில் இன்று காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான எறிகணை வீச்சு மோதல்கள் இடம்பெற்றதாக இரு தரப்பினரும் தெரிவித்திருக்கின்றனர்.

இதன்போது, விடுதலைப் புலிகளினால் சிறிபுர பகுதிமீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் நெடுங்கேணி பகுதி மீது நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இளம் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

யுஎன்டிபி ஊழியர் கைத்துப்பாக்கியுடன் கைது

இதனிடையில் யுஎன்டிபி எனப்படும் ஐநாவின் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் ஊழியர் எனக் கூறுப்படும் ஒருவர் இன்று மாலை வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் மைக்ரோ பிஸ்டலுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் கிளிநொச்சியில் இருந்து மட்டக்களப்பிற்குச் செல்லும் வழியில், ஈரப்பெரியகுளம் வீதிச்சோதனையில் இவரை சோதனையிட்ட பொலிசார் இவரிடமிருந்து இந்த கைத்துப்பாக்கியைக் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவரை வவுனியா பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.


பிரபாகரன் திரைப்பட வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை

பிரபாகரன் திரைப்படத்தின் இயக்குனர்
பிரபாகரன் திரைப்படத்தின் இயக்குனர்

பிரபாகரன் திரைப்படத்துக்கான தடை குறித்த வழக்கை சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னதாக விசாரிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் படச் சுருள்களை ஜெமினி கலர் லாப் நிறுவனத்தில் இருந்து எடுத்துச் செல்லவும், அந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்கவும் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் சென்னை முதலாவது உரிமையியல் உதவி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஜூன் மாதம் 9 ஆம் திகதி விசாரிக்கப்படும் என்று முன்னர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதுவரை படச்சுருள்களை எடுத்துச் செல்லவும் அது தடை விதித்திருந்தது.

ஆனால், அந்த வழக்கை முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று அந்த திரைப்படத்தின் இயக்குனரான துஷார பீரிஸ் பதில் மனு தக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், வழக்கை இன்று ஏப்ரல் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கவிருந்தது. ஆனால், அதனை எதிர்த்து திருமாவளவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து திருமாவளவனின் சார்பிலான வழக்கறிஞர் ஆர்வலனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


நளினிக்கு முதிரா விடுதலை கோரி மனுத்தாக்கல்

தனது கணவர் முருகனுடன் நளினி
தனது கணவர் முருகனுடன் நளினி

ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது.

வழமையாக ஆயுட்தண்டனைக் குற்றவாளிகள், 14 வருட சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் நளினி ஏற்கனவே 17 வருடங்களை சிறையில் கழித்த நிலையில், அவர் தற்போது விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனக்கு முதிரா விடுதலை வழங்கப்பட வேண்டும் என்று 2005ஆம் ஆண்டு முதல் நளினி அரசாங்கத்தைக் கோரி வந்துள்ளார். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டு விட்டன. ஆனால், அவ்வாறு நிராகரித்தமை தவறு என்று கூறியே தற்போதைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவை குறித்து நளினியின் சார்பிலான வழக்கறிஞரான துரைசாமி அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2008


திருகோணமலை பிரச்சாரக் கூட்டத்தில் ரணில்

பிரச்சார மேடையில் ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்
பிரச்சார மேடையில் ரணில் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர்

திருகோணமலை மாவட்டத்தில், இந்திய உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் அனல் மின்நிலையத்தை, சம்பூரில் அல்லாமல், ஏற்கனவே திட்டமிட்டபடி பவுல் பொயிண்டில் அமைக்க முயற்சி எடுக்கப்போவதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இந்த மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்திய அதிகாரிகளுடன் பேசி ஏற்கனவே திட்டமிட்டபடி அனல் மின்நிலையத்தை பவுல் பொயிண்டில் அமைப்போம் என்றும், சம்பூரையும் அதனை அண்டிய 23 கிராமங்களையும் சேர்ந்த இடம்பெயர்ந்த பதினேழாயிரம் மக்களையும் அவர்களது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்வோம் என்றும் கூறினார்.

அத்தோடு, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அனைத்து சமூகங்களும் ஏற்கக் கூடிய ஒரு தீர்வையே தாம் முன்வைப்போம் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் களம்

இலங்கையின் கிழக்கு மாகாண தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளன.

தமது கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம், கட்சியின் கொள்கை உட்பட தமது பலவிதமான கருத்துக்களையும் அந்த பிரச்சாரங்களின் போது அந்தந்தக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

இவை குறித்து எமது மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


பிரிட்டனில் விடுதலைப்புலிகள் குறித்த விசாரணைக்காக மூவர் கைது

படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
படிங்டன் கிறீன் போலிஸ் நிலையத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாக மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் இருவர் வேல்சில் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது நபர் லண்டனில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

வெளிநாடுகளில் தீவிரவாதச் செயல்களை, ஏற்பாடுகளை செய்ய முற்பட்டது, தீவிரவாத செயல்களை தூண்டியது அல்லது தீவிரவாத செயல்களுக்காக தயார் செய்தது போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு 2001 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஏப்ரல், 2008

மடு தேவாலயப் பகுதி சமாதான வலயமாக அறிவிக்கப்படுகின்ற உத்தரவாதம் கிடைத்த பின்னரே மடு மாதா திருச்சொரூபம் ஆலயத்துக்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட குருமார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு பகுதியை ராணுவம் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியதை அடுத்து, மடு மாதா தேவாலயத்திலிருந்து சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்ட மடுமாதாவின் திருச்சொருபத்தை மீண்டும் அங்கு கொண்டுவரவேண்டும் என்ற பிரச்சினை குறித்து ஆராய திங்களன்று மன்னார் மறை மாவட்ட குருக்கள் மன்னாரில் கூடினர்.

மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக அறிவித்து, அங்கு இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வதற்கு அனுமதியளிக்க இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் எழுத்துமூல உத்தரவாதம் வழங்கிய பின்னரே மாதா சிலையை மீண்டும் மடுவுக்கு கொண்டுவருவது என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படையினர் அனுமதிக்கும் பட்சத்தில் தற்போதைக்கு மூன்று குருமார்களை ஆலயத்திற்கு அனுப்பி அதனை மீண்டும் வழிபாட்டுக்குரிய ஒரு இடமாக ஒழுங்கு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தமிழோசையிடம் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் மழை, வெள்ளம், மண் சரிவுக்கு குறைந்தபட்சம் 7 பேர் பலி

இரத்னபுரியில் மழை வெள்ளம்

இலங்கையில் பல்வெறு பகுதிகளில் இன்று கடுமையான மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி, மாத்தறை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் இந்த அனர்த்தங்கள் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளன.

இரத்தினபுரி பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன், அங்கு பல பகுதிகளில் அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, யட்டியாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்து மகாசமுத்திர பிரந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த கடுமையான மழை பெய்வதாகவும், களுகங்கைப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், கரையோரத்தில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் இலங்கை வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.


விடுதலைப் புலிகள் மீண்டும் வான்தாக்குதல்

வான் தாக்குதல்
வான் தாக்குதல்

இலங்கையின் வடக்கே வெலிஓயா எனப்படும் மணலாறு இராணுவ முன்னரங்க பகுதிகள் மீது விடுதலைப் புலிகள் ஞாயிற்றுகிழமை அதிகாலை விமான குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இந்தத் தாக்குதல் குறித்து தகவல் வெளியிட்ட இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள்,
ஞாயிற்றுகிழமை அதிகாலை 1.43 மணியளவில் விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் வெலிஓயா பகுதியில் உள்ள இராணுவ முன்னரங்குகள் மீது 3 குண்டுகளை போட்டதாகவும், அங்கு தரையில் இருந்த படையினர் அந்த விமானங்களை நோக்கித் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறினார்.

விடுதலைப்புலிகளின் விமானங்களை ராடர் கருவிகளும் காட்டியதையடுத்து, விமானப்படையினர் விடுதலைப்புலிகளின் விமானங்களைத் தடுத்து தாக்கும் தமது விமானங்களைச் செலுத்தினார்கள் என்றும், எனினும் விடுதலைப்புலிகளின் விமானங்கள் முல்லைத்தீவு பகுதியை நோக்கித் தப்பிச் சென்று விட்டதாகவும், இந்த சம்பவத்தில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.


மடு மாதா ஆலய நிர்வாகத்தை திரும்ப எடுப்பது குறித்து திங்கட்கிழமை ஆலோசனை – மன்னார் ஆயர்

மடுமாதா தேவாலயம்
மடுமாதா தேவாலயம்

மடுமாதா ஆலயத்தின் நிர்வாகத்தை ஏற்குமாறு இலங்கை இராணுவம் தங்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தப்போதிலும், இது குறித்து திங்கட்கிழமை நடைபெறவுள்ள குருமார்களின் ஆலோசனைக் கூட்டத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் கூறியுள்ளார். அத்தோடு இராணுவத்தின் இணையத்தளம் கூறுவது போல தாங்கள் இன்னும் ஆலயத்தின் பொறுப்பை ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆலயத்தை பொறுப்பேற்பதும், மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு ஆலயத்தில் நிறுவுவது ஆகியவை இரண்டு வெவ்வேறு விடயங்கள் என்றும், திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலயத்தை பொறுப்பேற்பது மட்டுமே ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி தமிழோசையிடம் பேசிய அவர், ஆலய வளாகத்திற்குள் சீருடையில் ஆயுதம் தாங்கிய துருப்புகளின் நடமாட்டத்தை தாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும், ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவிக்க இராணுவம் முயற்சி எடுத்தால் அதற்கு தாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என்றும் கூறினார்.

அனுராதபுரம் மற்றும் காலி ஆயர்களுடன் தாம் விடுதலைப் புலிகளை சந்தித்து மடுமாதா ஆலயத்தில் மீண்டும் மாதாவின் திருச்சொரூபத்தை நிறுவுவது தொடர்பாக பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் எந்த வழியாக எடுத்து வருவது என்பது இருதரப்பாரின் நிலைப்பாடு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்தே அமையும் என்றும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

Food crisis and blame-game: DMK vs Communist Parties – Protests against price rise

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 23, 2008

வாங்கும் சக்தி உயர்ந்தால் விலைவாசி உயர்வு தெரியாது

சென்னை, ஏப். 17: சாதாரண மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால் விலை வாசி உயர்வு சுமையாக இருக்காது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித் தார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் தமிழக சட்டப் பேரவையிலிருந்து வியாழக்கிழமை, வெளிநடப்பு செய்தன.
அதற்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால் அதன் சுமை தெரியாது. ஒரு காலத்தில் பவுன் விலை ரூ. ஆயிரமாக இருந்தது. இன்று ரூ. 10,000 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
சாதாரண மக்களை வாங்கும் சக்தி கொண்டவர்களாக மாற்றிவிட்டால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். தேர்தலில் பயன்படுத்த மட்டும்தான் விலை உயர்வு என்ற பிரச்னை பயன்படும்.
எனவே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் விலைவாசி உயர்வினால் பெரும் பாதகம் ஏற்படாது எது முக்கியம்?: மதவாத சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றக் கூடாது. அது தற்போது காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். மதவாத சக்தி வளர்ந்தால் பரவாயில்லை. விலைவாசி உயர்வைத் தடுக்காமல் இருந்த காங்கிரûஸ ஆள விடமாட்டோம் என்று கம்யூனிஸ்ட்டுகள் சொல்ல மாட்டார்கள். மதவாத மற்ற, மனித நேயமிக்க ஓர் ஆட்சி வரவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.
மீண்டும் ஒரு அயோத்தி வர வேண்டாம்: மதவாதத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டும். மீண்டும் ஒரு அயோத்தி, மீண்டும் ஒரு ராம ரதம், மீண்டும் அத்வானியின் புயல் வேகச் சுற்றுப் பயணம் என்று நாட்டில் ஏற்பட்டால் நாடு காடாகி விடும். அப்படி ஏற்படாமல் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை நமக்கும் இருக்கிறது.
அந்தக் கருத்துகளின் ஒற்றுமையில் தான் இந்தியா வாழ முடியும். வெல்ல முடியும். அப்படிப்பட்ட ஒற்றுமையை நாம் உருவாக்க வேண்டும்.
வெளிநடப்பு முறையல்ல: மத்திய அரசு தவறு செய்கிறது என்பதற்காக, மாநில அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தது முறையல்ல. வெளிநடப்பு ஜனநாயக முறை என்பதால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.
ஆளுங்கட்சியான திமுக வெளிநடப்பில் கலந்து கொள்ளக் கூடாது. நாம் அனைவரும் சேர்ந்துதான் ஓர் அணியை உருவாக்கி இருக்கிறோம். மதவாத சக்திகளுக்கு எதிரான இந்த அணியில் பிணி வந்துவிடக் கூடாது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள் ளும் பெரும் பணியை நான் மேற்கொண்டேன். அந்த உண்மையை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அந்த செய்திகள் பத்தி ரிகைகளில் வந்துள்ளன என்றார் முதல்வர் கருணாநிதி

Posted in Economy, Finance, Govt, India, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | 1 Comment »

Pa Raghavan’s Terrorist & Extremist Organizations series – Root of all Evils

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 17, 2008

மாயவலை #200
குமுதம் ரிப்போர்ட்டர்
பா ராகவன்
17.04.08 தொடர்கள்

இன்றைய தேதியில் உலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் இயக்கங்கள் என்று 42 இயக்கங்களைச் சொல்லலாம். அவற்றுள் இருபத்தாறு இயக்கங்கள் மத்தியக் கிழக்கைச் சேர்ந்தவை. சிறியதும் பெரியதுமாக. வீரியம் மிக்கதும் வீரியம் குறைந்ததுமாக. எட்டு இடதுசாரி இயக்கங்கள். ஐந்து வலது சாரி இயக்கங்கள். ஒன்றிரண்டு உதிரிகள்.

இவை அனைத்தைக் குறித்தும் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இணையத்தில் பல கட்டுரைகள் இருக்கின்றன. அமெரிக்க உளவுத்துறையின் தளத்தில் ஒவ்வொன்றினைக் குறித்தும் நீண்ட அறிமுகமும் ஜாதகமும் ராகு கேது இடங்களும் இன்னபிறவும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட இயக்கங்களில் சில தங்களுக்கென்று இணைய தளங்கள் அமைத்து தமது கொள்கை கோட்பாடுகளைப் பட்டியலிட்டிருக்கின்றன. அல் காயிதா போன்ற சூப்பர் ஸ்டார் இயக்கங்களுக்கென பல ரசிகர் மன்றங்களே இருக்கின்றன. வெளியார் நுழையமுடியாத றிணீssஷ்ஷீக்ஷீபீ றிக்ஷீஷீtமீநீtமீபீ தளங்களில் இவர்கள் பேசிக்கொள்கிறார்கள். விவாதம் செய்கிறார்கள். ஆவணங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

தீவிரவாதம் தனது அடுத்த பரிமாணத்தை இணையத்தில் பெற்றிருக்கிறது. ஒருசில மின்னஞ்சல் முயற்சிகளில் இன்றைக்கு எந்த ஓர் இயக்கத்தையும் அணுகிவிட முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் அவற்றின் முக்கியஸ்தர்களுடனேயே நேரடியாகப் பேசவும் முடியும். பல மாத தாடியுடன் அழுக்கு ஆடையில் காட்டுப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்தி அலைந்து திரியும் தீவிரவாதிகளின் காலம் மலையேறிவிட்டது. இது தொழில்நுட்ப உலகம். தீவிரவாதம் ஒரு தொழில்நுட்பமாகிவிட்டது. அந்த இயக்கங்களின் தலைவர்கள் கோட் சூட் அணிந்து லேப் டாப்பில் திட்டங்களை வகுக்கிறார்கள். சாட்டிலைட் டெலிபோனும் இண்டர்நெட்டும் இன்ன பிறவும் சர்வசாதாரணம்.

அரசாங்கத்தை நம்பிப் பலனில்லை என்ற முடிவுக்கு வந்த பெரும் தொழிலதிபர்கள், இவர்களுக்கு ஆண்டுத் தவணையாகப் பல கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிறார்கள். அரசு கொடுக்காத பாதுகாப்பை இந்த இயக்கங்கள் அளிக்கும் என்கிற நம்பிக்கை. மத்தியக் கிழக்கு தேசங்களில் செயல்படும் ஒவ்வோர் இயக்கத்துக்கும் குறைந்தது நூறு நிறுவனங்களாவது ஆண்டுதோறும் பெரிய அளவில் நன்கொடைகள் அளிக்கின்றன. மிரட்டிப் பெறப்படும் நன்கொடைகளல்ல இவை. தாமாகவே விருப்பப்பட்டு அளிக்கப்படுபவை. மிரட்டல் மூலமும் பெறப்படுவதுண்டு. ஆனால், இன்றைய தேதியில் அப்படிப் பெறப்படும் தொகை பெருமளவுக் குறைந்துவிட்டது.

தவிர்க்க முடியாத தொந்தரவுகளை ஏற்று வாழப் பழகும் அடிப்படை மனித குணாதிசயமன்றி இது வேறில்லை. ஒரு கட்டத்தில் இது தொந்தரவு என்பதே மறந்து அல்லது மரத்துப் போய்விடும் போலிருக்கிறது. மனிதன் பழக்கங்களின் அடிமை.

ஈ.டி.ஏ.வுக்கு ஐரோப்பிய தொழில் நிறுவனங்கள் நிதியளிக்கின்றன என்றால் ஹிஸ்புல்லாவுக்கு இரானிலும் லெபனானிலும் உள்ள நிறுவனங்கள் அள்ளிக்கொடுக்கின்றன. ஹமாஸ§க்கு அனைத்து மத்தியக் கிழக்கு தேசங்களிலும் உதவி புரியும் நிறுவனங்கள் உண்டு. அவர்களே வசூலில் ஈடுபட்டுக் குவித்ததும் உண்டு. அல் காயிதாவுக்கு உலகம் முழுதும் ஏஜெண்டுகள். உலகம் முழுதும் வருமான வாய்ப்புகள். ஜமா இஸ்லாமியாவுக்குத் தென்கிழக்கு தேசங்கள் அனைத்திலும் பணம் விளைகிறது. காஷ்மீர் இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவுகிறது. எல்லா இயக்கங்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் அமெரிக்கா உதவுகிறது.

தீவிரவாதம் என்பது அதிருப்தியில் பிறக்கும் குழந்தை. போதாமைகளின் விளைவு. வெறுப்பு மற்றும் விரக்தியின் விபரீத விளைவு. இல்லாமை, ஏழைமை, கல்விக்குறைபாடு, வேலைவாய்ப்பின்மை போன்ற எளிய காரணங்களுக்குள் இதனை வரையறுத்துவிட முடியாது.

அவையும் காரணங்களே. ஆனால் ஓரெல்லை வரை மட்டும்தான். அடிப்படையில் சுதந்திர தாகமும் வேகமும், அதற்காக உயிரையும் கொடுக்கத் துணியும் மனோநிலையும் கைவரப்பெற்றவர்கள்தான் போராளிகளாகிறார்கள். போராளியாக மலரும் பொழுதில் அற்ப வெற்றிகளிலும் எளிய சுகங்களிலும் மனம் பறிகொடுத்து, இலக்கு மாறியவர்கள் தீவிரவாதிகளாகத் தேங்கிப் போகிறார்கள்.

இந்த வகையில் ஒரு தாவூத் இப்ராஹிமையோ சார்ல்ஸ் சோப்ராஜையோ நம்மால் தீவிரவாதி என்றுகூடச் சொல்ல முடியாது. அவர்கள் வெறும் கிரிமினல்கள்.

இந்தத் தொடரில் மேற்சொன்ன நாற்பத்திரண்டு இயக்கங்களில் அதி முக்கியமாக கவனித்தாக வேண்டிய சில இயக்கங்களைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். இந்த இயக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கின்றன, எப்படி இயங்குகின்றன, என்ன லட்சியத்தை முன்வைத்துத் தமது செயல்பாடுகளை வகுத்துக்கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் கண்டோம். ஒவ்வோர் இயக்கத்தின் செயல்பாட்டுக்கும் பின்னால் இருந்து இயக்குகின்ற அந்தந்த தேசங்களின் அரசியல் சூழலையும் பார்த்தோம்.

என்ன புரிந்துகொண்டோம்?

ஸ்திரமற்ற அரசியல் சூழலும் அச்சுறுத்தல்களும் மேலாதிக்கமும் புறக்கணிப்பும் அதன் விளைவான துக்கமும் அரசாங்கங்களுக்கு எதிராக மக்களை ஆயுதமேந்தச் செய்கின்றன. ஒரு மறுமலர்ச்சியை உத்தேசித்தே பெரும்பாலான போராளி இயக்கங்களும் தீவிரவாத அமைப்புகளும் தமது பயணத்தைத் தொடங்குகின்றன.

வசதி மற்றும் வாய்ப்புகளைப் பொறுத்து அவர்களுடைய லட்சியம் நிறைவேறுவதும் தோல்வியுறுவதும் அமைகிறது. சமயத்தில் சில புத்திசாலித்தனமான முடிவுகளும்.

தொண்ணூறுகளில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுத்து கொஞ்சம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்திராவிட்டால், பி.எல்.ஓ.வும் ஹமாஸ§ம் பிறகு ஆட்சி அதிகாரத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்திருக்க முடியாது என்பதை இங்கே நினைவுகூரலாம். அராஃபத்தின்மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது அந்த முடிவு செயல்படுத்தப்படாது போயிருந்தால், இன்றைக்குவரை பாலஸ்தீனில் முஸ்லிம்கள் தீராப்பிரச்னையுடன்தான் காலம் தள்ள வேண்டியிருந்திருக்கும்.

இப்போது பிரச்னையில்லை என்பதல்ல விஷயம். முன்னளவுக்கு அதன் தீவிரம் இல்லை என்பதுதான் கவனிக்கப்படவேண்டியது.

யோசித்துப் பார்த்தால், அல் காயிதாவுக்கு மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட தேசம் என்றில்லாமல் உலகு தழுவிய பிரச்னையின்பால் அக்கறையும் ஆர்வமும் இருக்கிறது. மற்ற இயக்கங்களின் நோக்கம் எல்லாம் தத்தமது தேச எல்லையுடன் முடிவடைந்துவிடக்கூடியவை. பாலஸ்தீன் ஒரு சுதந்திர, தனி தேசமாக இஸ்ரேலின் இடையூறே இல்லாத தேசமாக ஆகிவிட்டால், பாலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கு அதன்பின் என்ன வேலை? தனி ஈழம் அமைந்துவிட்டால் எல்.டி.டி.ஈ. எதற்காகப் போராடவேண்டும்? பாஸ்க் தேசம் உருவாகிவிட்டால், ஈ.டி.ஏ.வின் பணி என்ன?

அல் காயிதாவையே கூட இந்தவகையில், மத்தியக் கிழக்கிலிருந்து அமெரிக்கா முற்றிலும் வெளியேறிவிட்டால் செயல்பட விஷயமில்லாத இயக்கமாகச் சொல்லிவிட முடியும். அல்லது சர்வதேச முஸ்லிம் மக்களுக்கு எதிராக அத்தேசத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்படுமானால், அல் காயிதா செயல்பட என்ன அவசியம் இருக்கிறது?

தொன்னைக்கு நெய்யும் நெய்க்குத் தொன்னையும் ஆதாரம். மாயவலையின் முதல் கண்ணியைத் தேடிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் முழுக்கண்ணியையும் பிணைக்கும் ஆதாரப்புள்ளியை ஆராய்வதே சாலச்சிறந்தது.

ஒரு காலத்தில் வல்லரசு என்பது கையிலிருந்த பணத்தைக் கொண்டு தீர்மானிக்கப்பட்ட பதவியாக இருந்தது. பிறகு அதுவே, ஆயுத பலத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. இன்றைக்குத் தொழிலும் வர்த்தகமும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையும் தேசத்தின் கட்டுக்கோப்பும் அதனைத் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சர்வதேச அரங்கில் உள்ள கவனத்தையும் முக்கியத்துவத்தையும் நினைவு கூர்ந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். திபெத் விஷயத்தில் என்னதான் அதன் நியாயங்கள் உலகு முழுமைக்கும் புரிந்தாலும் சீனாவுக்கு எதிராக ஏன் யாரும் ஒருவார்த்தை பேச பயப்படுகிறார்கள்? யோசிக்கலாம். யோசிக்கத்தான் வேண்டும்.

நவீன உலகில் ஆயுதமேந்திப் போராடுபவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம் என்பது உலகம் முழுதும் பல இடங்களில் அடிக்கடி நிரூபணமாகியபடியேதான் இருக்கிறது. இது பேச்சுவார்த்தைகளின் காலம். நல்லுறவுகளின் காலம். புரிந்துகொள்ளல் மற்றும் விட்டுக்கொடுத்தலின் காலம். வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு செயல்பாடும் எடுபடாது என்பதே நவீன யுகத்தின் தாரக மந்திரமாக இருந்துவருகிறது.

இதனை முழு விழிப்புணர்வுடன் புரிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. சண்டையிட்டுக்கொண்டு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த தேசங்களையும் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஐரோப்பிய தேசங்கள் தமக்குள் பொதுவாக ஒரு நாணயத்தையே உருவாக்கிக்கொண்டு வாழ்வதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம். யார் வளர்கிறார்கள்? யார் தேங்குகிறார்கள்?

அந்தந்த தேசங்களின் சூழலும் பிரச்னையும் வேறு வேறு என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஒவ்வொரு காலத்துக்குமென்று ஆதாரமாகச் சில வாழ்வியல் சூத்திரங்கள் இயல்பாக அமைந்துவிடுகின்றன. புறக்கணிக்க முடியாத, புறக்கணிக்கக்கூடாத சூத்திரங்கள். அது மீறப்படும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாகிவிடுகின்றன. உலகில் போர்களும் தீவிரவாதச் செயல்பாடுகளும் தலையெடுக்கின்றன. அவற்றில் சிலர் குளிர் காய்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ளாமல் இயக்கங்கள் மேலும் மேலும் படுகுழியில் விழுகின்றன.

இதற்குமேல் பேச இதில் என்ன இருக்கிறது? முடித்துக் கொள்ளலாம்.

இருநூறு இதழ்களாக இதனை ஆர்வம் குறையாமல் வாசித்து, அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வந்திருக்கும் வாசகர்களுக்கு நன்றி கூறவேண்டிய தருணம் இது. உலகம் முழுவதிலுமிருந்து இந்தக் காலகட்டத்தில் எனக்கு வந்த கடிதங்களும் மின்னஞ்சல்களும் ஏராளம்.

ஒரு கட்டத்தில் சில வாசகர்களே தமக்குத் தெரிந்த தீவிரவாத இயக்கங்கள் குறித்தும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் நான் மறந்த காரணத்தால் விடுபட்ட செய்திகள், தகவல்கள் குறித்தும் எனக்கு எடுத்துச் சொல்லி உதவத் தொடங்கினார்கள். இந்த அனுபவம் மிகவும் புதிது. அனைவருக்கும் நன்றி. பெயர் குறிப்பிட்டு மாளாத நூற்றுக்கணக்கான முகமறியாத நண்பர்களின் உதவியின்றி இந்தத் தொடர் இத்தனை பெரிய அளவில் வளர்ந்து நிறைவடையச் சாத்தியமில்லை.

இத்தொடரில் இடம்பெற்ற மிக மிக முக்கியமான இரண்டு ஆவணங்கள் அல் காயிதாவின் பயிற்சிக் கையேடு மற்றும் தாலிபன்களின் சட்டப்புத்தகம் இரண்டையும் எனக்கு அனுப்பியவர் சவூதி அரேபியாவில் வசிக்கும் நண்பர் ஜாஹிர் ஹ§ஸைன்.

‘ஜெருசலேம் போஸ்ட்’ இதழின் செய்தியாளர்கள் இருவரும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் பணிபுரியும் உதவியாசிரியர் ஒருவரும் (இவர்கள் யாவரும் வலைப்பதிவுகளின்மூலம் அறிமுகமானார்கள்) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகள் தொடர்பான பல விஷயங்களை விவாதித்துத் தெளிவுபெற உதவியாக இருந்தார்கள்.

அனைத்துக்கும் மேலாக, இத்தனை நீண்ட, சீரியஸான தொடரைப் பொறுமையுடன் வாசித்து அவ்வப்போது கருத்துச் சொல்லி, என்னை ஊக்குவித்த வாசகர்களுக்கு நன்றியைச் சொல்லவேண்டுமா என்ன? அது என்றுமிருப்பது.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »

Sri Lanka Updates: Apr 13 – Minister of Science and Technology Professor Tissa Vitharana

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 26 ஏப்ரல், 2008

குண்டுவெடிப்பை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே பிலியந்தளை என்னும் இடத்தில், பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துவிட்டது. தற்போதைய நிலவரம் தொடர்பாக இலங்கை துணை பொலிஸ்மா அதிபர் இலங்க கோன் அவர்கள் கூறும் போது, இந்த சம்பவம் தொடர்பாக இது வரையில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் அவர்கள் யார் என்பது குறித்து தற்போது கூற முடியாது என கூறினார்.

அத்தோடு இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளால் தான் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்று தாங்கள் தெளிவாக நம்புவதாகவும், புதிய பாதுகாப்பு திட்டங்கள் உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும், இதற்கு காரணம் நீதவான் தாமதமாக வந்ததே என கொழும்பு கலுபோவில் மருத்துவமனையில் உள்ள குண்டுவெடிப்பில் சிக்கியவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.


உரிய பொருட்கள் இருந்தால் மடுமாதா தேவாலயத்தை விரைவில் சீரமைக்கலாம் – பாதிரியார்

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

மன்னார் மடு வளாகத்தை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவந்து விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ள நிலையில், மடு கோயில் வளாகத்துக்கு இன்று சென்ற மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை அங்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட அவர், தேவாலயம், குருக்கள் வாழும் இடங்கள் ஷெல் வீச்சினால் சேதம் அடைந்திருப்பதாகவும், குறிப்பாக திருஇருதய ஆண்டவர் ஆலயம் முற்றாக சேதம் அடைந்திருப்பதாக கூறினார்.

மேலும் இராணுவத்தின் காவலரண்கள் எதுவும் தேவாலய வளாகத்திற்குள் இல்லை என்றும், இன்னும் ஒரு சில நாட்களில் தேவாலயத்தை சீரமைக்க சில மதகுருமார்களையும், பணியாளர்களை அனுப்புவதை பற்றி தாங்கள் யோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு உரிய பொருட்கள் கிடைத்தால் விரைவாக சீரமைக்க கூடிய நிலையிலே தேவாலயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு தேவாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை பாதுகாப்பு வலயமாக அறிவித்து விடுதலைப்புலிகளும், இராணுவத்தினரும் எப்போது செயற்படுகின்றார்களோ அப்போது மடுமாத திருச்சொரூபத்தை தேவாலயத்தில் மீண்டும் வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை தெரிவித்தார்.


இலங்கையில் பெண்கள் பிரசவிக்கும் போது அவர்களது கணவரும் உடனிருக்க ஏற்பாடு

பச்சிளங்குழந்தை
பச்சிளங்குழந்தை

இலங்கையில் பெண்கள் பிரசவிக்கும் போது அவர்களது கணவரும் உடனிருப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அறிவித்துள்ள இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இது தொடர்பாக வைத்திய சேவை அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபடும் என்றும் கூறியுள்ளார்.

இது ஒரு வரவேற்க்கதக்க திட்டம் என கூறியுள்ள பிரபல டாக்டர் ராணி சிதம்பரப்பிள்ளை, ஆனால் இலங்கையில் உள்ள 99 சதவீதமான தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் இதற்கான வசதி கிடையாது என கூறினார்.

இது குறித்து கொழும்பு செய்தியாளர் பி.கருணாகாரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 ஏப்ரல், 2008

இலங்கை பேருந்து குண்டு வெடிப்பில் 24 பேர் பலி

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே பிலியந்தளை என்னும் இடத்தில், பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்ததாகவும் அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து நிலையம் ஒன்றை இந்தப் பேருந்து அடைந்தவேளை அதிலிருந்த பார்சல் குண்டு வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது, இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நானயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் வெளியேறியதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் முதல் அங்கு வன்செயல்கள் அதிகரித்துள்ளன.


இலங்கை இராணுவத்தினர் வசம் மன்னார் மடுக்கோவில்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க மடுக்கோவில் பகுதி தற்போது இராணுவத்தின் வசமாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

மோதலில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அரசியல், இராணுவ ரீதியில் முக்கியத்துவம் மிக்க கேந்திர தளமாக விளங்கிய மடுக்கோவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தின் கைகளுக்குத் தற்போது மாறியிருக்கின்றது.

வடக்கில் தீவிரமடைந்த சண்டைகளினால் இந்த ஆலயத்திற்குப் பேரழிவு ஏற்படும் என்று பலராலும் அச்சம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்த மாதா சொரூபம் பாதுகாப்பு கருதி ஆலய குருக்களினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த இராணுவத்தின் தரப்பில் பேசவல்ல அதிகாரியாகிய பிரிகேடியர் உதய நாணயக்காரா, இராணுவத்தினர் சென்றபோது விடுதலைப் புலிகள் ஆலய வளாகத்தில் இருக்கவில்லை எனக் கூறினார்.

மடுக்கோவில் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து புலிகள் தரப்பிலிருந்து கருத்து எதுவும் வெளியாகவில்லை.

மடுமாதாவின் திருச்சொரூபம் மீண்டும் மடுக்கோவிலுக்கு எப்போது கொண்டுவரப்படும் என்பது குறித்து மன்னார் ஆயர் ராயப்பு ஜோசஃப் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


யுத்த சேதம் செய்தி வழங்க ஊடகவியலாளருக்கு மறைமுகத் தடை: சுதந்திர ஊடக இயக்கம் குற்றச்சாட்டு

அண்மைய காலமாக மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன

இலங்கையில் மோதல்களில் காயமடைந்த இராணுவத்தினர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைகள் மற்றும் உயிரிழந்த படையினர் வைக்கப்பட்டுள்ள மலர்ச் சாலைகள் ஆகியவற்றுக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் செல்வதை அரசாங்கத்தினர் தடுத்துள்ளனர் என்று இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் மீது அரசாங்கத்தினர் விதிக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக நடந்துவரும் யுத்தம் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்துகொள்வது தொடர்பில் மக்களுக்கு இருக்கும் உரிமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவ்வியக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கொல்லப்பட்டோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டு யுத்தம் குறித்து துல்லியமான செய்திகளை பக்கச்சார்பற்ற ஊடகங்கள் வழங்க அரசாங்கத்தினரும் விடுதலைப் புலிகளும் இடம்தர மறுக்கிறார்கள் என்று சுதந்திர ஊடக இயக்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பின் சார்பாகப் பேசவல்ல சிவகுமார் மற்றும் இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயகார ஆகியோர் தமிழோசைக்கு தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வெளியேற்றத்தை நினைவுகூரும் மூதூர் அகதிகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னமும் 2 வாரங்கள் இருக்கும் இவ்வேளையில், திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கிலிருந்து 2006ம் ஆண்டு யுத்த அகதிகளாக வெளியேறிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வெளியேற்றத்தின் 2வது ஆண்டு நிறைவை வெள்ளியன்று அகதி முகாம்களிலும் உறவினர்கள்-நண்பர்கள் வீடுகளிலும் நினைவுகூர்ந்தனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் இடம்பெயர்வின்போது உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்காகவும் தீபங்கள் ஏற்றப்பட்டு சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட அமைதிப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

மட்டக்களப்பு சாகிரா முகாமில் பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதான வைபவத்தில் உரையாற்றிய இடம்பெயர்ந்தோருக்கான நலன் புரி சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன், 2006ம் ஆண்டு இதேநாளில் மது பிரதேசத்தை நோக்கி ஏவப்பட்ட எறிகணை வீச்சுக்களும் விமானக் குண்டு தாக்குதல்களுமே தமது இடப்பெயர்வுக்கு அடித்தளமாக அமைந்ததாகக் கூறினார்

சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்கு தமக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு உதவியுடன் அனல் மின் உற்பத்தி நிலையமொன்று அங்கு அமைக்கும் முயற்சியை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஏப்ரல், 2008


இலங்கையின் வடக்கே நடைபெற்ற மோதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தகவல்கள்

செஞ்சிலுவை சங்கத்திடம் உடல்கள் ஒப்படைப்பு
செஞ்சிலுவைச் சங்கத்திடம் உடல்கள் ஒப்படைப்பு

இலங்கையின் வடக்கே நேற்று(புதன்கிழமை) முகமாலை-கிளாலி முன்னரங்க பகுதிகளில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம் பெற்ற கடுமையான மோதல்களில் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இந்த மோதல்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 28 உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இராணுவத்தினரும் செஞ்சிலுவைச் சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளன.

கடைசியாக கிடைத்த தகவல்களின்படி இந்த மோதல்களில் இராணுவத் தரப்பிலிருந்து 43 கொல்லப்பட்டுள்ளதாகவும், 33 பேரை காணவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார். விடுதலைப் புலிகள் தரப்பில் 149 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 196 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கிறார்.

வடக்கே கடும் மோதல்கள்
வடக்கே கடும் மோதல்கள்

தாம் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் ஆறு உடல்கள் இன்னமும் யாழ்ப்பாணத்திலேயே இருக்கின்றன எனவும் அவை இன்னமும் கையளிக்கப்படவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகிறார்.

இதனிடையே நேற்று தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே அவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேறியுள்ளதாக தமிழோசையிடம் தெரிவித்தார்.


இலங்கையின் வடக்கே தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது

இலங்கை மருத்துவமனை ஒன்றில் தாதிகள்
இலங்கையின் வடக்கே தாதிகளுக்கு பற்றாக்குறை

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச பொது மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரச வைத்தியசாலைகளில் தாதியர்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுவதாக அரச தாதியர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இந்தக் குறைபாடு காரணமாக இந்த வைத்தியசாலைகளில் நோயாளர்களைச் சரியான முறையில் பராமரிக்கவும் அவர்களுக்குச் சரியான சிகிச்சையளிக்க முடியாமலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

வவுனியா வைத்தியசாலையில் மாத்திரம் 170 தாதியர்கள் தேவையாக இருக்கின்ற போதிலும் 64 பேரே தற்போது கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பற்றாக்குறை காரணமாக மேலதிகக் கடமையில் ஈடுபடும் தாதியர்கள் 16 மணித்தியாலங்கள் வரையில் கடமையாற்ற நேர்ந்திருப்பதாகவும் இதனால் அவர்கள் உள-உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிட்டிருப்பதாகவும் தாதியர் சங்கத்தின் வன்னிப்பிராந்திய இணைப்பாளர் எஸ் பாலநாதன் கூறுகின்றார்.

இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 ஏப்ரல், 2008

முகமாலை மோதலில் இரு தரப்பிலும் பலத்த இழப்பு

இலங்கையின் வட போர்முனையில், முகமாலைப் பகுதியில் நடந்த மோதல்களில் இரு தரப்பிலும் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

முகமாலை முன்னரங்கப் பகுதியை ஒட்டி நடந்த இந்த மோதல்களில் இரு தரப்பிலுமாக 90 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறுகின்ற இலங்கை இராணுவத்தினர், அதில் 52 பேர் விடுதலைப்புலிகள் என்றும், 38 பேர் இராணுவத்தினர் என்றும் தெரிவித்துள்ளனர். 84 இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இந்த மோதல்களின் போது விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலைகளை இலங்கை விமானப்படையினர் அழித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களை உறுதி செய்துள்ள விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், ஆனால், அதில், நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், விடுதலைப்புலிகள் தரப்பில் 16 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபை தீர்மானம்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி
தமிழக முதல்வர் மு. கருணாநிதி

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் சுமூகத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோருகின்ற தீர்மானம் ஒன்று இன்று தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக முதல்வர் மு. கருணாநிதியே அந்த தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார். இலங்கையில் மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்புக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தையை இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோருகிறது.

ராஜிவ் கொலையாளிகளுக்கு சோனியா காந்தியும், அவரது குடும்பத்தினரும் காட்டிய மனித நேயத்தை, மத்திய அரசு இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காண்பிக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய கருணாநிதி கூறியிருக்கிறார். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்தை குறைகூறிப் பயனில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இலங்கை தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புக்களிடையில் ஒற்றுமை இல்லாத காரணத்தினாலேயே, அந்தப் போராட்டம் வெற்றிபெறாமல் போய்விட்டது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 22 ஏப்ரல், 2008


கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமான தேர்தலுக்கான சூழ்நிலை இல்லை: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், அங்குள்ள நிலைமையை அவதானிக்கும்போது, சுதந்திரமான நியாயமான தேர்தலொன்ரை நடத்தக் கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என “கஃபே” எனப்படும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நிமல்க்கா பெர்னான்டோ கூறுகின்றார்.

தேர்தல் கண்காணிப்பிற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கஃபே இயக்கத்தின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட நிமல்க்கா பெர்னான்டோ, “மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், அங்கு ஓரு வித மோசடி நிலை உள்ளது. ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் உள்ளது. இரு தரப்பு மோதல் நிலமையும் காணப்படுகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.

“பல கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளதால், பிரச்சார நடவடிக்கைகளின் போது சகலருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. ” என்றும் நிமல்க்கா பெர்னான்டோ கூறினார்.

பெர்னான்டோ அம்மையார் தெரிவித்த கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 ஏப்ரல், 2008

இலங்கையில் அரசின் அரிசி விலைநிர்ணயத்திற்கு இணங்குவதென வியாபாரிகள் முடிவு

இலங்கையில் கடந்த புதன்கிழமை திடீரென அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதிஉச்ச விலை நிர்ணயத்தினை அரசாங்கம் அறிவித்ததனை அடுத்து கொழும்பிலுள்ள அரிசி மொத்த வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததோடு, கதவடைப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் இன்று அவர்கள் அரசின் நிர்ணயவிலையின் அடிப்படையில் அரிசி விற்பனையில் எதிர்காலத்தில் ஈடுபடத் தயாராகவிருப்பதாக இணக்கம் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து சற்றுமுன்னர் பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட கொழும்பு அத்தியாவசியப் பொருட்க்கள் இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. சாமி, திங்கள் மாலை வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில், நிதியமைச்சில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்திலேயே, அரிசி ஆலை உரிமையாளர்களும், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளும் பரஸ்பரம் அரசின் விலைநிர்ணயத்திற்கு இணங்கியதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் இன்று தமது கையிருப்பிலிருந்த அரிசியை வழமைபோல, ஆனால் நிர்ணயவிலையின் அடிப்படையில் விற்பனை செய்தனர். ஆனாலும் அவர்கள் இருப்பு பற்றாக்குறை காரணமாக மிகவும் குறைந்த அளவு தொகை அரிசியையே தமக்கு விற்பனை செய்ததாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கொழும்பு செய்தியாளர் பி.கருணாகரன் தயாரித்து வழங்கும் செய்திப் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 ஏப்ரல், 2008

இலங்கையின் வடக்கே இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் அருட்தந்தை பலி

இலங்கையின் வடக்கே மாங்குளம் மல்லாவி வீதியில் இன்று இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சியில் செயற்பட்டு வரும் வடக்குகிழக்கு மனித உரிமைகள் பிரதேச செயலகத்தின் தலைவராகிய அருட்தந்தை கருணரத்னம் அடிகளார் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தகவல் யாழ் ஆயர் இல்லத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். ஆனால் தங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் அவர்களே இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


அரசாங்கத்தின் உத்தரவை பின்பற்ற தயார் – அரிசி வியாபாரிகள்

இலங்கையில் அரிசியின் உச்ச விலையை இலங்கை அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளதை அடுத்து கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து கதவடைப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது அரசின் நிர்ணயவிலையின் அடிப்படையில் அரிசி விற்பனையில் ஈடுபடத் தயார் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட கொழும்பு அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. சாமி, அரசாங்கம் நாட்டின் நன்மை கருதி எடுக்கும் முடிவிற்கு ஆதரவு கொடுக்கவேண்டியது பொறுப்புள்ள வியாபாரிகளின் கடமையென்றும், அரசினால் விதிக்கப்படும் சட்டவரம்புகளை மீறுவதென்பது அசாத்தியமான விடயம் என்றும் தெரிவித்தார்.

பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.பழனியாண்டி, இவ்வாறு பிறிதொரு வியாபாரிகள் சங்கம் எடுத்த முடிவினை தாமும் பிற்பற்றவேண்டிய நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இது குறித்த விரிவான செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 ஏப்ரல், 2008

வியாபாரம் செய்ய மறுத்த அரிசி வியாபாரிகள் மீது இலங்கை நடவடிக்கை

இலங்கையில் அரிசியை வியாபாரம் செய்ய மறுத்த சில வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு, வணிக மற்றும் நுகர்வோர் நலன் அமைச்சின் செயலாளரான ஆர். எம். கே. ரட்ணாயக்கா தெரிவித்துள்ளார்.

அரிசி விற்பனைக்கு உச்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், எந்த வியாபாரியும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த ரட்ணாயக்கா அவர்கள், எந்த வியாபாரிக்கும் நட்டஈடு வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் விவசாயிகளுக்கு உர மானியம் போன்றவை வழங்கப்படுவதாகவும், ஆகவே இதனால், விவசாயிகளுக்கும் இதனால், எந்த விதமான பாதிப்பும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

அரிசியை குறித்த விலைக்கு விற்க வேண்டும் என்று அரசாங்கம் நிர்ணயித்திருக்கின்ற வேளையில், ஆலை உரிமையாளர்கள் அவற்றை தாம் விரும்புகின்ற வெவ்வேறு விலைகளுக்கு விற்க விரும்புவதாகக் குற்றஞ்சாட்டுகின்ற ரட்ணாயக்கா அவர்கள், புறக்கோட்டையில் இருக்கின்ற கடைக்காரர்கள் அவர்களது தரகு முகவர்களாகவே செயற்படுவதாகவும், புறக்கோட்டையில் இருக்கின்ற சில கடைகளில், வெள்ளியன்று விற்பனை செய்ய மறுக்கப்பட்ட அரிசி இன்று பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.


விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மருந்துகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஒரு தொகுதி மருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் மருந்துப் பொருட்களுக்கு பெரிய அளிவில் தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக தமிழோசையில் கருத்து வெளியிட்ட கிளிநோச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் டி.சத்யமூர்த்தி, பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தினால், மூன்று மாதங்களாக மருந்துகளைக் கொண்டுவர முடியாத நிலை உருவானது என்றார். இதன் விளைவாக மருந்து தட்டுப்பாடு நிலவியது என்றும் அச்சமயம் தனியார் மருந்துக் கடைகளிலிருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்க முடியாத சூழ்நிலைகூட நிலவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது ஒப்புதல் கிடைத்து ஒரு தொகுதி மருந்துகள் எடுத்துவரப்பட்டுள்ள நிலையில், அவை உடனடியாக விநியோகிக்கப்படும். இதனால் மருந்து தட்டுப்பாடு நீங்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

டாக்டர்.சத்யமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

கே. இராமகிருஷ்ணன்

உலக சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையிலும் பெற்றோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும்படி இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை விற்பனைசெய்துவரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

உலக சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பிற்கேற்ப இலங்கையில் தற்போது நிலவும் டீசலின் விலையை சுமார் 31 இலங்கை ரூபாய்களினால் உடனடியாக உயர்த்தும்படி தாம் கோரியிருப்பதாகவும், இல்லாவிடில் அடுத்த மாத முடிவில் தமது நிறுவனம் சுமார் 750 மில்லியன் ரூபாய்கள் நட்டத்தினைச் சந்திக்கவெண்டியிருக்கும் என்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. இராமகிருஷ்ணன் பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இவருடனான செவ்வியினை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


அம்பாறையில் ஜே.வி.பி. வேட்பாளர் தாக்குதல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் ஒருவரும் இரண்டு ஆதரவாளர்களும் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் வியாழன் இரவு தாக்குதலுக்கு இலக்கானதாக ஜே.வி.பி. கூறுகின்றது

தமது கட்சியின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வேட்பாளரான எம்.ஐ.அபு சகீத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தனக்கு தெரியாது என்று கூறும் அவர், தாக்குதலுக்கு இலக்காகிய தானும் 2 ஆதரவாளர்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

சம்பவம் தொடர்பாக விசாரனைகள் நடைபெற்றுவருவதாகக் கூறும் அக்கரைப்பற்று பொலிசார் தேர்தல் வன்முறைகளை தடுப்பதற்குரிய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 ஏப்ரல், 2008

புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

இலங்கையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக, வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செஞ்சிலுவவைச் சங்கம் கூறியுள்ளது.

வடபகுதிகளுக்கு தொடர்ந்து பொருட்களை எடுத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம், அரசுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி தேவையானவற்றை கொண்டுவரும் நடவடிக்கையை ஓரளவு செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆட்பற்றாக் குறையும் ஒரு முக்கியமான விடயம் எனவும், இதன் காரணமாக வழக்கமாக வரும் நோயாளர்களுடன் நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக காயமடைந்தவர்களையும் கூடுதலாக கவனிக்க வேண்டியிருப்பதால் மருத்துவமனைகள் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது எனவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை கூறுகிறது.


இலங்கை அரசு நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

சோனகத்தெருவில் மூடப்பட்டுள்ள கடைகள்
சோனகத்தெருவில் மூடப்பட்டுள்ள கடைகள்

இலங்கையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதிஉச்ச விலை நிர்ணயத்தினை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதனை கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு மொத்த அரிசி வியாபாரிகள் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருப்பதோடு, கதவடைப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

அரசின் இந்த நள்ளிரவு அதிரடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு நீதி வழங்கவேண்டுமென்றும் அவர்கள் அரசிடம் கோரியிருக்கிறார்கள். கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரக் கடைகள் பல இன்று மூடப்பட்டிருந்தன.

இதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட கொழும்பிலுள்ள பழைய சோனகத்தெரு அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் கே.பழனியாண்டி, அரசாங்கம் இவ்வாறு முன்னறிவித்தல், கலந்துரையாடல் ஏதுமின்றி அரிசி விலைநிர்ணயம் செய்திருப்பது தவறான நடவடிக்கை என்றும், இதற்கு ஒரு சுமுகமான தீர்வினைக்காணும் வரைக்கும் மொத்தவியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அரிசி விற்பனையில் ஈடுபடுவதில்லை என்றும் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் இந்தத் தொழிலின் இணைத்தொழிலில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களும் தொழிலில்லாது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு இவ்வாறு விலைநிர்ணயத்தினை புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலிற்கு கொண்டுவருவதாக அறிவித்திருந்த போதிலும், இதனை மீறுவோர் மீது நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று எச்சரித்திருந்தபோதிலும் இன்று கொழும்பிலுள்ள சில்லறைக் கடைகளில் அரிசி மிகவும் அதிகமாக பழையவிலைப்பட்டியல்களின் அடிப்படையிலேயே விற்கப்பட்டது.

இது குறித்து கொழும்பிலிருந்து செய்தியாளர் பி.கருணாகரன் வழங்கும் செய்திப் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


BBCTamil.com: “போர்நிறுத்தம்: சாதனைகள், பின்விளைவுகள்”

BBCTamil.com: “கிழக்கு மாகாண சபை தேர்தல்”

BBCTamil.com: “ஜே.வி.பி.யில் உட்கட்சிப் பூசல்”

BBCTamil.com: “இலங்கை- 60 ஆவது சுதந்திர தினம்”

BBCTamil.com: “முஸ்லிம்கள் வெளியேறி ஒர் ஆண்டு நிறைவு”

BBCTamil.com: “தமிழர் விவகாரத்தில் ஜேவிபியின் நிலைப்பாடு குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி”

BBCTamil.com: “கர்ணல் கருணாவுக்கு சிறைத் தண்டனை”

BBCTamil.com: “இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் 20 வருடங்கள்”

புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஏப்ரல், 2008


அரிசி விற்பனைக்கு அதிகபட்ச விலையை இலங்கை அரசு நிர்ணயித்துள்ளது

இலங்கைத் துறைமுகத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது
இலங்கைத் துறைமுகத்தில் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது

இலங்கையில் அதிகரித்து வரும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அரிசியை வியாபாரிகள் விற்கக்கூடிய அதி உச்சபட்ச விலையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி சம்பா அரிசி ஆகக்கூடுதலாக கிலோ ஒன்றுக்கு 70 ரூபாவாகவும், நாட்டரிசி 65 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 65 ரூபாவாகவும், வெள்ளைப் பச்சை 55 ரூபாகவும் மாத்திரமே ஆகக்கூடுதலாக விற்பனை செய்ய முடியும் என்று இலங்கையின் வணிக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதனை எவரும் மீறும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று பிபிசியின் சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மடு பகுதியை மோதலுக்குள் இழுத்து விட்டது மஹிந்த அரசுதான் என்று ஜயலத் ஜயவர்த்தன குற்றம் சாட்டுகிறார்

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

இலங்கையில் மடு தேவாலயப் பகுதியை மோதலில் இழுத்துவிட்டது மஹிந்த ராஜபக்ஷவின் அரசுதான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன குற்றங்சாட்டியுள்ளார்.

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயப் பகுதியை அமைதிப் பிராந்தியமாக பேண வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், புனித பாப்பரசரும், மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்களும் கேட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

தமது கட்டுப்பாட்டில் மடு தேவாலயம் இருக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகள் அந்த ஆலய வளாகத்தில் இருக்கவில்லை என்பதை தன்னால் கூறமுடியும் என்று தெரிவித்த ஜயலத் அவர்கள், ஆனால், அரச படைகளின் தாக்குதலுக்கான எதிர்வினை நடவடிக்கையாகவே அவர்கள் அங்கு சென்று சண்டையிடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மடு தேவாலயம் அனைத்து இன மக்களின் மதிப்பைப் பெற்ற ஒரு வழிபாட்டிடமே ஒழிய, அதற்கு இராணுவ ரீதியாக எந்தவிதமான முக்கியத்துவமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



அனைத்துக் கட்சிக் குழுவின் 90 சதவீதப் பணிகள் பூர்த்தியாகிவிட்டன: இலங்கை அமைச்சர் திஸ்ஸ விதாரண

அமைச்சர் திஸ்ஸ விதாரண

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்ற சர்வகட்சிக் குழு தனது 90 வீதமான பணிகளை பூர்த்தி செய்துவிட்டதாகவும், நிலைமை சுமூகமாகச் செல்லுமானால், இன்னும் சில மாதங்களில் தமது பணி முழுமையாக பூர்த்தியடைந்துவிடும் என்றும், அந்த குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

லண்டனுக்கு விஜயம் செய்திருந்த அவர், இன்று தமிழோசைக்கு நேரடியாக வந்து வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அனைத்துக்கட்சி குழுவின் நடைமுறைகளில் இருந்து விலகிச் சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகியவை குறித்து கருத்துக் கூறிய அவர், ஏற்கனவே அதிகாரபூர்வமற்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் இந்த நடைமுறைகளில் இணைய வரும்போது, ஜே.வி.பி.யையும், அதில் இணைந்துகொள்ள வருமாறு தான் அழைப்புவிடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடரும் நிகழ்வுகளால் விடுதலைப் புலிகள் அமைதி நடைமுறைகளுக்குள் வர முன்வராத நிலை ஏற்படுமானால், அப்போது ஒருவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்த அனைத்துக் கட்சி குழுவில் இணைந்து செயற்படுவதற்கான அவசியம் குறித்து ஆலோசிக்கலாம் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் திஸ்ஸ விதாரண அவர்கள் கூறினார்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

Row erupts over Tamil rebel film: Tushara Peiris, LTTE Supremo Velupillai Prabhakaran, Foreign Minister Rohitha Bogollagama

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

ஒரு சிங்களப் படம் சர்ச்சையாகிறது!

துஷாரா பெய்ரிஸ் என்ற இலங்கை நாட்டுச் சிங்கள இயக்குநர் பிரபாகரன் என்ற பெயரில் எடுத்த திரைப்படம் பெரும் சர்ச்சைச் சகதிக்குள் சிக்கிக்கொண்டு மூச்சுத் திணறு கிறது. இப்படம் இலங்கை எல்லையைத் தாண்டி வராமல் இருந்திருந்தால், இந்த அளவுக்குப் பிரச்சினையின் தாக்குத லுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் என்று சொல்ல முடியாது.

இலங்கையில் இந்தச் சிங்களப் படம் திரையிடப்படும் பட்சத்தில், சிங்கள மக்களின் வெறியை மேலும் கொம்பு சீவிவிட்டிருக்கும்.
இந்த இயக்குநரின் குருநாதர் ஜீவன் குமாரதுங்கா என்ற சிங்களவர் – படம் எப்படியிருக்கும் என்பதற்குச் சாட்சியங்கள் தேவைப்படவில்லை.

சிறுவர்களை இராணுவத்தில் ஈடுபடுத்தக்கூடாது; பெண்களை தற்கொலைப் படைக்குத் தயாரிக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்வது நல்ல விஷயம்தானே என்று பெரும் போக்காக விமர்சிக்கக் கூடும்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஈழப் போராளிகள்மீது வைக்கப்பட்டதுண்டு – ஒரு திரைப்படத்தின்மூலம் வெளிப் படுத்துவதில் ஒரு பெரிய உள்நோக்கம் இருக்கிறது.

உலகம் முழுவதும் சிங்கள அரசின் இனவாத வெறியைத் திட்டமிட்டு மறைத்து, அவர்களின் மனிதநேயம், போர் தர்மம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிக்கும் கேவலத்தைப் பின்னுக்குத் தள்ளி உள்நாட்டுத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்திக் காட்டும் தீய நோக்கம் இந்த திரைப்படத்தின் உருவாக்கத்தில் உண்டு என்பது இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டு விட்டது.

படம் எடுத்த இயக்குநரின் நோக்கம் என்ன என்பது திரைப்படத்தின் ஒரு காட்சி அம்பலப்படுத்தி விட்டது. 2006 ஆம் ஆண்டில் செஞ்சோலையில் சிங்கள இராணுவம் தொடுத்த தாக்குதலில் குழந்தைகளும், பெண்களும் கொல் லப்பட்டதாக யுனிசெஃப் அமைப்பே வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சிங்களப் படம் அதுபற்றி என்ன கூறுகிறது? அது ஒன்றும் அனாதைகளின் விடுதியல்ல; போராளிகளின் முகாம் என்று சிங்கள அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் குரலை எதிரொலிக்கிறது இந்தத் திரைப்படம்.

இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகளை மையப் படுத்தி எடுக்கப்பட்டது இந்தத் திரைப்படம் என்று ஒரு சினிமா பார்வையில் முலாம் பூச ஆசைப்படுபவர்கள் கேள்வி ஒன்றுக்கு நாணயமாகப் பதில் சொல்லக் கடமைப்பட் டுள்ளனர்.

இலங்கை இராணுவம் நடந்துகொண்ட அத்துமீறல், போர் தர்மத்துக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையாவது காட்சியில் வைத்திருக்கவேண்டாமா? இலங்கை இராணு வம் செய்தது எல்லாம் சரியானது; தங்கள் மக்களைப் பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்தான் அநியாயக்காரர்கள் என்று காட்டுவதற்காக ஒரு திரைப்படமா?

பூனைக்குட்டி வெளியில் வந்தது என்கிற பழமொழிக்கு ஏற்ப – இந்தச் சிங்களத் திரைப்படம் இலங்கை இராணுவத் தளபதிக்குப் போட்டுக் காட்டப்பட்டுப் பாராட்டுதலையும் பெற்று இருக்கிறது.

வெலிக்கண்டா, தொட்டிசலா, மியான்குலமா முதலிய இடங்களில் நடந்த போர்களை இலங்கை இராணுவ உதவி யுடன் படமாக்கப்பட்டுள்ளதும், அதற்காக இராணுவத் தளபதி ஃபொன்சேகா முதலியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு இருப்பதும், இந்தத் திரைப்படம் எந்தப் பின்னணியில் யாருக்காக, எந்தப் பிரச்சாரத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அப்பட்டமாகவே தெரிந்துவிட்டது.

இந்தச் சிங்கள படத்தினை தமிழிலும் டப்பிங் செய்து, தமிழர்கள் மத்தியிலும் தமிழர்களுக்காகப் போராடுபவர் களைப்பற்றிக் கொச்சைப்படுத்தி, சிங்கள இராணுவத்தின் கொடுமைகளுக்கு நியாயம் கற்பிக்கும் கெட்ட எண்ணம் இந்தத் திரைப்படத்தின் பின்புலத்தில் முதன்மையான தாகவே இருக்கிறது.

இலங்கை சிங்கள அரசின் பாசிசத்துக்கு இந்த ஏற்பாடும் கூட ஒரு முக்கிய ஆதாரமாகும் என்பதில் அய்யமென்ன? இலங்கை அரசின் முயற்சி எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது!

Posted in Law, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | 1 Comment »

Mayavati factor in Karnataka Assembly elections 2008 – Dalit-Brahmin coalition

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கன்சிராமைக் கைகழுவுகிறார் மீண்டும்!

மாயாவதி கட்சியின் 20 வேட்பாளர்கள் பார்ப்பனர்கள்

பெங்களூரு, ஏப். 9- வெகுமக்க ளாக இருக்கிற தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டு அவர்களை ஆட்சி அதிகா ரத்தில் பங்கு பெறச் செய்திட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான் பகுஜன் சமாஜ் கட்சி என்பது. இந்தக் கட்சியை வட நாட்டில் தொடங்கும்போது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா புலே ஆகிய தலைவர்களின் படங் களை கட்சித் தலைமையகத் தில் சிறப்பாக வைத்துத் தொடங்கியவர் கன்ஷிராம். அவரது கட்சியைச் சேர்ந்த மாயாவதி தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வ ராக இருக்கிறார்.

மறைந்த கன்ஷிராமின் கொள் கைகளுக்கு விரோதமாகப் பார்ப்பனர்களுடன் கூட்டு வைத்துத் தேர்தலில் வெற்றி பெற்று அவர்களை அமைச்சர வையிலும் இடம்பெறச் செய்து கன்ஷிராமின் கொள்கை களைக் கைகழுவிவிட்டார். இந்நிலையில், கருநாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தலி லும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. அந்தக் கட்சி வேட்பாளர்களாகப் பார்ப்பனர்களும் நிறுத்தப் படப் போகிறார்களாம்.

எந்தக் கட்சியுடனும் கூட்டு வைக்காமல் தனித்துப் போட் டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி 224 தொகுதிகளிலும் போட்டி போடப் போகிறது. இவற்றில் 20 தொகுதிகளில் பார்ப்ப னர்கள் அக்கட்சியின் வேட் பாளர்களாக நிறுத்தப்படுகி றார்கள். இந்த அளவுக்கு அதிக வேட்பாளர்களை வேறு எந்தக் கட்சியும் நிறுத்தவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள் கிறார் அக்கட்சியின் மாநிலத் தலை வர் முனியப்பா.

கார்வார் பகுதியில் 3 ஆயி ரம் பார்ப்பனர்கள் அக்கட்சி யில் புதிதாகச் சேர்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் தாழ்நிலைக் குப் பார்ப்பன வல்லாண்மை தான் காரணம் என்று உணர்ந்து கட்சி தொடங்கிப் பார்ப்பனர்களை எதிர்த்து வந்தார் கன்ஷிராம். அவரது சீடர் மாயாவதி தம் கட்சியின் கொள்கையைக் குழிதோண் டிப் புதைத்துவிட்டார் என்ப தற்கு இச்செய்தி மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.


மாயாவதி சிலை: திறந்தார் மாயாவதி

மாயாவதி சிலை

இந்தியாவின் வடக்கிலுள்ள உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வரான மாயாவதி குமாரி, தலைநகர் லக்னோவில் இன்று தனது சிலையை தானே திறந்துவைத்துள்ளார்.

இந்து சாதிய அமைப்பில், தலித் மக்களின் மேம்பாட்டுக்காக செயல்படும் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியான மாயாவதி, அந்தக் கட்சியை நிறுவிய காலஞ்சென்ற கன்ஷி ராம் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே தமது சிலை நிறுவப்பட்டதாகக் கூறுகிறார்.

தனது சிலை நாட்டின் தலைநகரான புதுடில்லியிலும் நிறுவப்படும் எனவும் மாயாவதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தமக்கு தாமே சிலை வைத்துக் கொள்வது அசாதாரணமான ஒன்று என செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Viduthalai Editorials: The skimming of the creamy layer – Complains against stringent parameters

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கிரீமிலேயரா?

உச்சநீதிமன்றம் நேற்று (10.4.2008) அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படாத பொருளாதார அளவு கோலைத் திணித்ததுமூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு இடியைப் போட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதா இல்லையா? என்று தீர்மானிப்பதுதான் நீதிபதிகளின் பணியே தவிர, அரசமைப்புச் சட்டத்தின் எல் லைக்கு வெளியே குதித்து, தம் மனப்போக்கில் ஆணைகளைப் பிறப்பிப்பது மிகவும் ஆபத்தானதாகும். இது வேலியே பயிரை மேயும் செயலாகும்.

இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட் டோருக்கும் தனித்தனியே அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அளவுகோல் என்று வரும்பொழுது இரு தரப்பினருக்கும் ஒன்றுபோலவே அமையக்கூடியது.
ஆனால், இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு அளவு கோலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னொரு அளவுகோலும் வைத்திருப்பது அசல் பிரித்தாளும் தன்மையுடையதாகும்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள கிரீமிலேயர் என்ற வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது – மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு நியாயம்போல இடமாறு தோற்றப் பிழையாகத் தோன்றலாம்.

ஆண்டாண்டுகாலமாகக் கல்வியையும், உத்தியோக வாய்ப்புகளையும் தங்கள் வசமே வைத்துக்கொண்டுள்ள ஆதிக்க ஜாதியினருடன் எதிர்த்துப் போட்டியிடக் கூடிய பகுதியினரை கிரீமிலேயர் என்று கூறி வெளியே தள்ளி விடுவதன்மூலம் ஏற்கெனவே அத்துறைகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர்களுக்குப் பேருதவி செய்ததாக ஆகாதா என்பதை மெத்த படித்த நீதிபதிகள் சிந்திக்காமல் போனது வருந்தத்தக்கதே!

அவர்கள் சொல்லும் அந்த விவாதத்தையே எடுத்துக்கொள் வோம். மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் முதலிய ஆகிய நிறுவனங் களில் சேர்ந்து படிக்க ஆகும் செலவு என்ன?

எடுத்துக்காட்டாக அகமதாபாத் அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்கும் ஒரு மாணவனுக்கு ஆகக்கூடிய செலவு 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழை, எளிய மக்களுக்காகத்தான் இந்தக் கிரீமிலேயர் நீக்கம் என்பது உண்மையானால், பிற் படுத்தப்பட்ட மக்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அய்.அய்.எம். நிறுவனத்தில் சேர்ந்து படிக்க முடியுமா? என்ற பொது அறிவு கேள்விக்கு நீதிபதி கள் தரப்பில் என்ன நியாயமான பதிலை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பொருளாதார அளவுகோலைக் கொண்டே பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்களையும் முட்டித்தள்ளி, பொருளாதாரத்தில் ஏழை, எளிய பகுதியைச் சேர்ந்தவர்களையும் உள்ளே புக முடியாமல் செய்த – ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்திய ராஜதந்திரத்தை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியாகிய பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான ஆணை யினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிறப்பித்தார். அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் (ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட ஆயம்) கிரீமி லேயர் என்ற பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து திணித்தது. அதன் விளைவு என்ன தெரியுமா?

மத்திய அரசுத் துறையில் 12.5 விழுக்காடு அளவுக்கு இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பத்து ஆண்டுகளில் 5.3 விழுக்காடாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

இந்த அனுபவத்துக்குப் பிறகும்கூட, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயர்களை வெளியேற்றுவது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமுண்டோ?

பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசமைப்புச் சட்டப்படி இட ஒதுக்கீடு பெற உரிமை உண்டு என்ற வகையில், உச்சநீதிமன் றம் நடந்துகொண்டது என்பதிலே ஒரு வகையில் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு வகையிலே அதனைத் தட்டிப் பறிப்பது என்பது மகிழ்ச்சிக்குரியதல்ல என்று தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தின் அடிப்படையில், இந்தியா முழுமையும் உள்ள சமூகநீதிச் சக்திகள் அணிதிரண்டு போராடுவது அவசியமாகும்.

சமூகநீதிக்காக இன்னும் எத்தனை எத்தனைக் களங் களைச் சந்திக்க வேண்டுமோ தெரியவில்லை. என்றாலும், போராடுவோம் – வெற்றி பெறுவோம் – வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!

இடைநிலையில் மட்டும் ஏன் கிரீமிலேயர்?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் கிரீமிலேயர் என்பதை வலியுறுத்தும் உச்ச நீதிமன்றம் இதை ஏன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் வலியுறுத்த வேண்டும்?

மேலே உள்ள, திறந்த போட்டியில் பங்கேற்கும் முன்னேறிய ஜாதியினருக்கும் (Forward Communities)பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அடுத்துள்ள S.C., S.T சமுதாயப் பிரிவினருக்கும் வைக்கப்படாத கிரீமிலேயர் – இடையில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மட்டும் வைக்கப்படுவது எவ்வகையில் நீதி, நியாயம், நேர்மை?

இக்கேள்வியின் அடிப்படை, அவர்களுக்கும் கொண்டு வரப்படவேண்டும் என்பது அல்ல; மாறாக, அவர்களுக்கு வைக்கப்படாதது போல் இடைத் தட்டாக உள்ள பிற்படுத்தப் பட்டவர் களுக்கும் அதை ரத்து செய்ய வேண்டும் என்பதற் காகவே!

வருமானம் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களால் தங்கள் பிள்ளைகளை அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் படிக்க வைக்க இயலுமா?


அரசமைப்புச் சட்ட முதல் திருத்தத்திலேயே நிராகரிக்கப்பட்டது பொருளாதார அளவுகோல்

1. இந்திய அரசியல் சட்டத்தின் முதலாவது அரசியல் சட்டத் திருத்தமே, தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஏற்பட்ட கிளர்ச்சியின் விளைவாக வந்தது என்பது அன்றைய பிரத மர் நேரு அவர்களால் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்யப்பட் டுள்ளது!

1951 இல் நிறைவேறிய அந்த முதலாவது அரசியல் சட்டத் திருத் தத்தின்மூலம் 15(4) என்ற புதுப்பிரிவு இணைக்கப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காட்டும் வகையில், “சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்” (Socially and Educationally) என்ற சொற்றொடர்களைப் போட்டு திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது சட்ட அமைச்சர், டாக்டர் அம்பேத்கர், பிரதமர் நேரு முதலியோர் அங்கம் வகித்தனர்.

(பழைய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைந்த அவை அது. முதலாவது பொதுத் தேர்தல் 1952 இல் தான் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்).

Founding Fathers of Constitution அரசியல் சட்டத்தை உருவாக் கிய கர்த்தாக்களையே கொண்டது அந்த அவை என்பது உச்சநீதி மன்றம் போன்றவைகளால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

நேருவும் – அம்பேத்கரும் ஏற்கவில்லை

அன்று சிலர், பொருளாதார ரீதியாக “Economically” என்ற சொற்றொடரும் இடம்பெறுவது அவசியம் என்று சில திருத்தங் களைத் தந்தனர். அதை சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரோ, பிரதமர் நேருவோ ஏற்கவில்லை.


இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல!

2. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; சமூக நீதிக்கான வாய்ப்பினை காலங்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஓர் ஏற்பாடு என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

நரசிம்மராவ் அரசு உயர்ஜாதியினரில் 10 சதவிகிதம் ஏழை களுக்கு அளித்த இட ஒதுக்கீட்டினை உச்சநீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்தது இந்த அடிப்படையில்தான்!

3. இதைவிட முக்கியமான ஒரு கருத்து, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு மத்தியக் கல்வி நிலையங்களில் கதவே இதுவரை திறக்கப்படவில்லை; இப்போதுதான் திறக்கப்படவிருக்கிறது. அதற் குள்ளே, ஏதோ 27 சதவிகிதத்தினை உயர் வருமான வசதி படைத் தோர் அபகரித்துவிட்டனர் என்ற கூச்சலுக்கு அடிப்படை உண்டா?

பந்திக்கு உட்கார வைப்பதற்கு முன்பே, இதை மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர்; எனவே, இதைத் தரம் பிரிக்க வேண்டும் என்று கூறுவது நியாயமா? தேவையா? மோசடி அல்லவா?


‘கிரீமிலேயர்’ அளவுகோலுக்கு உச்சநீதிமன்றம் வைத்திருக்கும் ஆதாரம் என்ன?

உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதே! இடஒதுக்கீடு என்பதே அரசியலமைப்புக் சட்டத்துக்கு விரோதம் என்பதுபோல உருவாக்கப்பட்ட கருத்து இந்தத் தீர்ப்பு மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது வரவேற்கத்தக்க தீர்ப்பேதான்.

கிரீமிலேயர் என்ற ஒன்றைப் புதிதாகக் கொண்டு வந்து திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கமே தகர்க்கப்பட்டுள்ளது. மண்டல் குழு பற்றி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட தீர்ப்பில் திணிக்கப் பட்ட ஒன்றாகும் இந்தக் கிரீமிலேயர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாதது இது. பொருளாதார அளவுகோல் என்பது 1951-இல் நடைபெற்ற விவாதத்திலேயே நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதார அளவுகோல் பற்றி விவாதிக்கப் பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, ஏற்காமல் தள்ளுபடி செய்யப்பட்ட ஒன்றைக் கொண்டு வந்து உச்சநீதிமன்றம் திணிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகும்.

பொருளாதார அளவுகோல் என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறக் கூடியது. இந்த ஆண்டு வருமானம் அடுத்த ஆண்டு இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒரு வீட்டுக்குள்ளேயேகூட ஒருவர் பிற்படுத்தப்பட்டவராகவும் இன்னொருவர் அது அல்லாதவராகவும் ஆக்கப்படக் கூடிய ஒரு நிலைமையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் என்பதில் நிரந்தர வருமானக்காரர்கள் உண்டு – அவர்கள் அலுவலர்கள்; விவசாயத் தொழிலில் ஈடுபடக் கூடியவர்களை நிரந்தர வருமானக்காரர்களின் பட்டியலில் சேர்க்க முடியாது. இயற்கைத் தொல்லைகளால் பாதிக்கப்படக் கூடியது விவசாயத் தொழில்; இன்னும் சொல்லப் போனால் இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமும் அல்ல. இந்தக் கருத்து மண்டல் குழுவின் அறிக்கையிலே தெளிவுபடுத் தபட்டுள்ளது.

ஏழையாக இருப்பவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்யலாமே தவிர கல்வியில் கொண்டு வந்து அதனைத் திணிக்கக் கூடாது.
பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் வசதி வாய்ப்புள்ளவர்கள் எல்லாம் கல்வியில் முன்னேறியுள்ளனர் என்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் ஆதாரமோ புள்ளி விவரமோ இருக்கிறதா? எந்த அடிப்படையில் கிரிமீலேயரை வெளியேற்ற வேணடும் என்று கூறுகிறார்கள்?

முதன் முதலாக மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இப்பொழுதுதான் பிற்படுத்தப்பட்டோர் நுழைகிறார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் கல்வியில் வளர்ந்து விட்டார்கள் என்று அவர்களில் ஒரு பிரிவினரை வெளியேற்றுவது நியாயமாக இருக்க முடியுமா?
வாய்ப்பைக் கொடுத்து விட்டு அதற்குப் பிறகு 5 ஆண்டு கழித்தோ, பத்தாண்டு கழித்தோ ஆய்வு செய்யலாமே – 20 ஆண்டுகள் கழித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றுதான் மண்டல் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பந்தியிலேயே உட்காரவில்லை; அதற்குள்ளாகவே அவர்கள் தின்று தீர்த்து விட்டனர் என்று நீதிமன்றம் கூறுலாமா? இதில் இன்னொரு கருத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது – என்று புகார் செய்ய வேண்டியவர்கள் யார்? பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள்தானே! அவ்வாறு யாரும் வழக்குத் தொடுக்கவில்லையே! உயர்ஜாதிகாரர்கள்தானே வழக்குத் தொடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் இன்னொரு ஆபத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களில் சேர தகுதியானவர்கள் பிற்படுத்தப்பட்டோரிலிருந்து கிடைக்கவில்லையானால் அந்த இடங்களை திறந்த போட்டிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுவது – யாருக்கு லாபம்? உயர் ஜாதிக்காரர்களுக்குத் தானே இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குகிறது?

பிற்படுத்தப்பட்டோர் பட்ட மேற்படிப்புக்குச் செல்லக் கூடாதா
பட்ட மேல் படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என்று ஒரு சில நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது தீர்ப்பா? கருத்தா? கட்டாயமா? என்பவை தெளிவாக் கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பட்ட மேற் படிப்புக்கு செல்லக் கூடாதா? இது சமூகநீதியின் அடிப் படையைத் தகர்க்கக் கூடியதாகும்.

– செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி (சென்னை 12.4.2008)


இடஒதுக்கீடு வசதி படைத்தவர்கள் யார்?

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பிற்படுத்தப் பட்டவர்களில் வசதி படைத்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது.
மண்டல் ஆணைய வழக்கில் கடந்த 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்கள் பிரிவு முதன் முதலாக அறிமுகப் படுத்தப்பட்டது.

அரசியல் சட்ட அதிகார பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய பொதுத் தோர்வாணைய உறுப்பினர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் ஏ, பி அல்லது குரூப் 1, குரூப் 2 அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவன அதிகாரி களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டு இருந்தது.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் பணியில் சுலோனியல் அல்லது அதற்கு மேல் பதவி வகிக்கும் அதிகாரிகளின் குழந்தைகளும் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அத்துடன் வழக்கறிஞர்கள், சார்ட்டர்டு அக்கவுண்டண்ட், மருத்துவர்க,ள நிதி மற்றும் நிர்வாக ஆலோசகர்கள், பல்மருத்துவர்கள், கட்டடக் கலைஞர்கள், கணினி பொறியாளர்கள், வசனகர்த்தா, விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத் துறை பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் ஊடக அதிகாரிகள், வசதி படைத்த பிரிவினர் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது.

பொதுவாக ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. விவசாயத்தில் ஈடுபட்டவர்களில், நில உச்சவரம்பு சட்டப்படி ஒருவர் வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ள பாசன வசதியுள்ள நிலத்தில் 85 விழுக்காடும் அதற்கு மேலும் உள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வசதி படைத்தவர்கள் பட்டியல் பற்றி மத்திய அமைச்சரவை இறுதி முடிவெடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | 2 Comments »

Tamil Book Review: Naan Oru Manu Virodhan – Aadhavan Dheetchanya: Viduthalai

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

நான் ஒரு மநு விரோதன்! – ஓர் பார்வை!

Snap Judgement: Aadhavan Dheetchanya Book Release: Naan oru Manu Virodhan – Interviews, Sujatha, Sundara Ramasamy, SuRa, Kings, Chola, Pandiyan, Cheran, Chozhan

கவிஞர் ஆதவன் தீட்சண்யா வின் நேர்காணல்கள் நூலாக வெளிவந்துள்ளன. அந்நூலின் பெயர் நான் ஒரு மநு விரோதன்.

நேர்காணல்களில் அரிய சில மட்டுமே நூலாக வந்துள்ளன. அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய நூலாக இதைக் கருத லாம்.தாழ்த்தப்பட்ட சகோதரனின் உண்மையான வலிகள் குறித்தும், காரணங்கள் குறித்தும் விரிந்து பேசுகிறார். மிகக் கனமான செய்திகளையும், நகைச்சுவையால் மக்களின் உள்ளத்தைத் தொடும் பிரகதீஸ் வரன் இந்நூலின் தொகுப்பாசிரி யராக உள்ளார்.

இந்நூலுக்கு அறிமுகவுரை எழுத வந்த தோழர் நீல கண்டன், மார்க்சியத் தளத்தில் இயங்கி வரும் தோழர் ஆதவன் தீட்சண் யாவிடம் இவ்வளவு கூர்மையை எதிர் பார்க்கவில்லை என்கிறார். அதையே நாமும் வழிமொழிய வேண்டியுள்ளது.

இந்தியச் சமூகம் வர்க்கமாக இருந்ததா இல்லையா? என்ப தற்கு முன்னாடியே அது ஜாதி யாக இருந்திருக்கிறது, அது ஒன்றுதான் எல்லாவற்றையும் வழி நடத்தியது என வர
லாற்றை எடுத்துக் கூறி, வருத் தப்படுகிறார்.

அடுத்தவன் மலத்தை வாரிச் சுமக்கிற அவலத்திலிருந்து, மீளத்துடிக்கும் ஒரு அருந்ததி யனாக ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்கிறார். தான் இந்த ஜாதி எனத் தெரிந்து, தன்னோடு பழகாமல் போய் விடுவார்களோ என்கிற பயமிருக்கே அது மிகவும் கொடுமையானது எனத் தாழ்த்தப் பட்ட சகோதரனின் உணர்வை நம்முன் வைக்கிறார். ஒரு சராசரி மனிதராக இயல்பாக வாழ முயற்சி செய்தாலும், தாம் பிடிபட்டு விடு வோமோ என்கிற அச்சம் அவனுக் குள் இருப்பதைச் சக மனிதனுக்கு எடுத்துக் கூறுகிறார்.

இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் பார்ப்பனர்களே எனச் சரியான புரிதலோடு முரசொலிக் கிறார். உடல் உழைப்பைக் கேவலப் படுத்தும் பார்ப்பனர்கள் தகுதி, திறமை, அறிவு குறித்துப் பேசு கிறார்கள். அதனால் இச்சமூகத் திற்கு ஏற்பட்ட பயன்தான் என்ன? எனப் பகுத்தறிந்து வினா வீசு கிறார். என்னை ஒடுக்க நினைக் கும் ஒவ்வொருவரையும் நான் மனிதன், நீ யார்? எனக் கேட் பேன் என்கிறார். இப்போது எல்லாம் மாறிவிட்டது என்கிறார்கள் சில போலிகள். இங்கே ஒவ் வொரு தாழ்த்தப்பட்டவனும் கேவலத்தோடு அல்லவா சுமக்க வேண்டியுள்ளது என உள்ளத்திற்குள் ஊடுருவி உண்மையை உணர வைக்கிறார்.

என் பையன் அமெரிக்கா போனாலும் நான் பார்க்கிற பெண்ணையே திருமணம் செய் வான் என்பதும், நான் கழிப்பதை அவன் அள்ளுவான் என்பதும் ஜாதித் திமிர்தானே? ஒரே அலு வலகத்தில் வேலை பார்த்து, ஒரே மேசையில் சாப்பிடுவதாலேயே ஜாதி போய்விடாது. நானெல்லாம் ரொம்ப சோஷியல் சார், ஜாதி யெல்லாம் பார்ப்பதில்லை என் கிறார்கள். ஜாதியைக் கைவிடாம லேயே சமதர்மவாதி யாக உலாவர இங்கே எல்லா வாய்ப்புகளும் இருப்பதாக ஆதவன் வருத்தப் படுகிறார்.

இவற்றுக்கெல்லாம் காரண மாக நான் நினைக்கிறது மனு, மனு என் எதிரி, நான் ஒரு மனு விரோதன், என் விமர்சனத்திற் கும், கண்டனத்திற்கும் உரியவர் கள் அவர்கள்தான் என அறுதி யிட்டுச் சொல்கிறார். விண்ணை யும், மண்ணையும் இணைக்கிற அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டதாக பீற்றிக்கொண்டாலும் ஊரும், சேரியும் பிரிந்தே கிடப் பதற்கு மனுதானே காரணம் எனத் தெளிந்து பேசுகிறார்.

3 விழுக்காடு கூட இல்லாத பார்ப்பனர்கள் எப்படி இந்தி யாவை தவறாக வழி நடத்த முடியும் என்கிறார்கள் சிலர்? 30 கோடி இந்தியர்களை அடக்க 30 கோடி வெள்ளையனா வந்தான்? என வினா கேட்டவர்களின் விலா எலும்பை உடைக்கிறார்.

எப்படி ஒரு பெண்ணின் துயரத்தை ஆணால் உணர முடியாதோ, அதேபோல தீண்டா மைக் கொடுமையை அனுபவிக் காதவர்களால் எழுத முடியாது. கோபி செட்டிப்பாளையத்தில் நகராட்சித் தலைவராக இருந் தவர் இலட்சுமண அய்யர். இவர் தான் இந்தியாவில், கையால் மலம் அள்ளும் முறையை, முதன் முதலில் கோபி நகராட்சியில் ஒழித்தவர். இதற்குக் காரணம் கேட்ட போது, சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற போது, அங்கே மலம் அள்ள நேர்ந்தது. அதனால்தான் அம்முறையை ஒழித்தேன் என்றாராம்.

ஆக அவமானத்தைச் சந்திக்க முடியாதவரால் எதையும் உணர முடியாது. அனுமானம் வேறு; அனுபவம் வேறு! இரண்டும் ஒன்றல்ல எனத் தெளிவாய் பாடம் எடுக்கிறார் கவிஞர் ஆதவன். பேச்சுத் தமிழே, இந்நூலின் வாசிப்புத் தமிழாக உள்ளது. அதனால்தான் என்னமோ மொழி யின் ஊடாக ஏராளமான கற்கள். அதனைத் தவிர்த்திருக்கலாம். அவசியம் வாங்கிப் படியுங்கள்.

(பூபாளம் புத்தகப் பண்ணை, 2027/ 6 வடக்கு ராஜவீதி, புதுக் கோட்டை – 622 001)

– கியூபா

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Reservations: Supreme Court upholds 27 per cent quota for OBCs – In pursuit of inclusive education

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பின்படி 64 மத்திய அரசின் உயர்கல்வி நிலையங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படவிருக்கிறது.

  1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
  2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்
  3. தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள் (20)
  4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு,
  5. இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (சுரங்கங்கள்)
  6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி மற்றும் ஆராய்ச்சி
  7. ஸ்கூல் ஆஃப் பிளானிங் மற்றும் ஆர்கிடெக்சர்
  8. அய்.அய்.அய்.டி.,கள்

முதலிய பல்வேறு நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.
சென்ற ஆண்டு இந்த நிலையங்களில் 1,24,377 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இடைக்காலத் தடை இல்லாமல் இருந்திருந்தால், பிற்படுத்தப்பட்டவர்கள் 33,581 பேர்கள் சேர்ந்து படித்துக் கொண்டிருக்க முடியும். இதே எண்ணிக்கை மாணவர்கள் இந்த ஆண்டு படிக்கக் கூடிய வாய்ப்பு இந்தத் தீர்ப்பினால் கிடைத்துள்ளது.


இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி
அய்.அய்.டி., அய்.அய்.எம்.களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும்

27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அய்.அய்..டி., அய்.அய்.எம். உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 1,500 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. சென்னை அய்அய்..டி.யில் மட்டும் 150 பேர் சேரலாம். மண்டல் கமிஷன் பரிந் துரைப்படி மத்திய அரசு பணியிலும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு பணியில் இந்த 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், அய்.அய்.டி., அய்.அய்..எம். உள் ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இதை அமல்படுத்து வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றம் ஏராளமான வழக் குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு 27 சதவீத இடஒதுக் கீட்டை அமல்படுத்த உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகை யில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் இந்த கல்வி ஆண்டில் 27 சதவீத ஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்தும் சூழநிலை உருவாகி இருக் கிறது.

இந்தியாவில் சென்னை, மும்பை, டில்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, கவுஹாத்தி ஆகிய 7 இடங்களில் அய்அய்.டி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பி.டெக். படிப் பில் சுமார் 4,000 இடங்கள் உள்ளன. ஜெ.இ.இ. என்று அழைக்கப்படும் சிறப்பு நுழை வுத்தேர்வு மூலம் ஐ.ஐ.டி.க்கு மாணவர்கள் சேர்க்கப்படு கிறார்கள்.

அய்.அய்..யைப் போல இந்தியாவில் அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, கோழிக்கோடு, இந்தூர், லக்னோ ஆகிய 6 இடங்களில் ஐ.ஐ.எம். மேலாண்மை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி களில் 1,500 எம்.பி.ஏ. இடங்கள் இருக்கின்றன. இதற்கான மாணவர் சேர்க்கை கேட் என்ற பொது நுழைவுத்தேர்வு அடிப் படையில் நடைபெறுகிறது.

27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன் றத்தை அடுத்து அய்அய்.டி., அய்.அய்..களில் பிற்படுத்தப் பட வகுப்பினருக்கு சுமார் 1500 சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அய்.அய்..டி கல்வி நிறுவனங்களில் 1080 இடங் களும், அய்.அய்.எம்.களில் 405 இடங்களும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு கிடைக்கும். சென்னை அய்.அய்.டி.யில் மொத்தம் 550 சீட்டுகள் உள் ளன. எனவே, இங்கு மட்டும் 150 ஓ.பி.சி. மாணவர்கள் சேர முடியும்.

அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களிலும், பெங்க ளூரில் உள்ள அய்.அய்.எஸ்சி. (இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்) எம்.எஸ்சி., எம்.டெக். உள்ளிட்ட முதுநிலை படிப்பு களும் வழங்கப்படுகின்றன. இவற்றிலும் ஓ.பி.சி. வகுப் பினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்.

அய்.அய்.டி.,யில் ஆதி திராவிடர்களுக்கு 15 சதவீத மும், பழங்குடியினருக்கு 7 சதவீதமும், உடல் ஊனமுற் றோருக்கு 3 சதவீத இடஒதுக் கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலிருந்து பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக் கும் இடஒதுக்கீடு வழங்குவ தால் இந்த வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் அய்.அய்.டி. கல்வி நிறுவனங்களில் சேருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

What is in a Name? – Everything is symbolic: EVR Periyar, Icons, Chennai Landmarks

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 14, 2008

கலைஞரின் ஈரோட்டுக் கண்ணாடி!

தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசும்போது, பண்பாட்டு ரீதியான ஒரு பிரச் சினையை எடுத்து அலசியுள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தின் பெயரை ஜெமினி மேம்பாலம் என்று எழுதுவதும், தியாகராயர் நகரை தி.நகர் என்று எழுதுவது குறித்தும் முக்கியமானதொரு கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

பெயர்தானே – அதில் என்ன இருக்கிறது – முதலமைச்ச ருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று சில மே(ல்) தாவிகள் சொல்லக்கூடும். இது ஒன்றும் சின்ன பிரச்சினை யல்ல – இதில் ஒரு திராவிட – ஆரியப் போராட்டமே அழுத்த மாக இருக்கிறது.
அண்ணாசாலை என்றும், அண்ணா மேம்பாலம் என்றும் அரசு அறிவித்து எத்தனை ஆண்டுகள் ஆயின?

இதற்குப் பிறகும் மறைந்துபோன ஜெமினி மேம்பாலத்தை மறக்காமல் மனதில் வைத்துக் கொண்டு அதனைக் குறிப்பிடுகிறார்கள் என்றால், இது ஏதோ எதேச்சையாக நடப்பதல்ல – திராவிட இயக்கச் சிந்தனையாளரான – தந்தை பெரியார்தம் மாணாக்கரான – ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது;
சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் வழங்கியது

போன்ற ஆரிய மறுப்புகளைச் சட்ட ரீதியாகச் செய்தவரான அண்ணாமீது கொண்ட காழ்ப்பு உணர்வு இதற்குள் பதுங்கியிருப்பது என்பதாலேயே மான மிகு கலைஞர் அவர்கள் இதனைச் சுட்டிக்காட்ட நேர்ந்தது.

திராவிட இயக்கத் தோற்றுநர்களுள் மிகவும் முன்னோடி யான பிட்டி தியாகராயர் பெயரால் அமைந்த பகுதியை தி.நகர் என்று குறிப்பிடுவது குறித்தும் மானமிகு கலைஞர் கூறத் தவறவில்லை – பெயர் நீளமாக இருக்கிறது என் பதற்காக பேருந்துகளில் அவ்வாறு எழுத நேர்ந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களின் சமாதானமானால், திருவல்லிக் கேணியை தி.கேணி என்று எழுதுவதில்லையே – ஏன்? என்ற கலைஞர் அவர்களின் அறிவார்ந்த கேள்விக்குப் பதில் என்ன?

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், மவுண்ட் ரோடு – அண்ணா சாலையானதும், பூந்தமல்லி நெடுஞ் சாலை – பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை ஆனதும் 35 ஆண்டுகளுக்கு மேலாகும். இன்னும்கூட விளம்பரப் பலகைகளில் மவுண்ட் ரோடு என்றும், பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றும் குறிப்பிடுகின்றனர் என்றால், இதன் பின்னணியில் இருக்கும் உணர்வுக்குப் பெயர் என்ன?

இதனை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் அறிவிப்பைக் கொடுத்த நேரத்தில், (14.8.1996) சென்னைப் பெருநகரக் காவல்துறையால் விரைவில் சரி செய்யப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்னும் மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலைகள் இருக்கத்தான் செய்கின்றன. மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் இந்த நிலை தொடரலாமா? தொழிலாளர் துறை அல்லது விற்பனை வரித்துறையிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் 24 மணிநேரத்தில் மாற்றப்பட்டு விடுமே!

அதேபோல, சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக விளங்கிய ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார் பெயரில் விளங்கும் பகுதி பாண்டிபஜார் என்று அழைக்கப்பட்டு, மக்கள் மத்தியிலும் நிலை நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கும் முடிவு கட்டப்பட்டு சவுந்தரபாண்டியனார் அங்காடி அல்லது கடைவீதி என்று எல்லோர் கண்களிலும் படும் வண்ணம் பெரிய பெரிய விளம்பரப் பலகைகளைப் பொருத்தவேண்டு மாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

கலைஞர் கருணாநிதி நகரை கே.கே. நகர் என்று குறிப்பிடுவதும், இந்தப் பட்டியலில் சேரும்.

அண்ணா சாலையில் உள்ள பார்ப்பன ஏடுகள் அந்தப் பெயரைப் போட மனமில்லாமல், சென்னை-2 என்று போட்ட நிலையும் உண்டு.
தமிழ், தமிழர்கள், திராவிட இயக்கம், அதன் தலைவர் கள் மீது ஆரியத்திற்கு இருக்கும் ஆத்திரமும், வெறுப்பும், வஞ்சக வண்ணமும் ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்ப்பவர்களுக்கே துல்லியமாக விளங்கும்.

இந்த நிலையில், மானமிகு கலைஞர் அவர்களுக்குப் புரியாமல் போகுமா?

Posted in DMK, Govt, Order, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Tamil: Classical Language Requirements – Va Se Kuzhandhaisamy (Dinamani)

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 10, 2008

செவ்வியல் மொழிக்கான தகுதிகள் } ஒரு விளக்கம்

வா.செ. குழந்தைசாமி

தமிழ் மொழியின் செவ்வியல் தகுதியை மத்திய அரசு அங்கீகரித்து 12-10-2004-இல் ஆணை பிறப்பித்த நாள் முதல் செவ்வியல் மொழியின் தகுதிகள் பற்றிய விமர்சனங்கள், குறிப்பாக அதன் பழமை பற்றிய விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அண்மையில் தமிழகத்தின் சட்டமன்றத்தில்கூட இப்பிரச்னை இடம்பெற்றது. எனவே, இத்தலைப்புத் தொடர்பாகச் சில அடிப்படைக் கருத்துகளை முன் வைப்பது பயன் தரும் என்று நம்புகிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) உருவாக்கிய முப்பது அம்சத் திட்டத்தில், தமிழ் மொழியின் செவ்வியல் தன்மையின் அங்கீகாரமும் ஒன்று, அதில் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்பிரச்னை பற்றி ஆய்ந்து அறிக்கை தர மத்திய அரசின் உள்நாட்டு அமைச்சகம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. சாகித்ய அகாதெமியின் தலைவரின் தலைமையில் அக்குழு 2-9-2004 அன்று கூடியது.

மத்திய அரசின் வல்லுநர் குழு முதலில் சந்தித்த கேள்வி, செவ்வியல் மொழிக்கான தகுதிகள் யாவை என்பதுதான். அக்குழு தனது விவாதத்தில் பதிவு செய்திருக்கும் தகவல்கள் பின்வருமாறு.

1. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவும் இல்லை.

2. செவ்வியல் மொழிக்கான தகுதிகள் எவை என்பதும் எங்கும் வரையறுக்கப்படவில்லை.

எனவே முதலில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இந்தச் சமயத்தில் தமிழகத்தில் பலர் ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) அங்கீகரிக்கப்பட்ட பட்டியலும், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் இருப்பதாகவும், அதில் 2000 ஆண்டு பழமை தேவை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எழுதியும், பேசியும் வருகின்றனர். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உச்ச நிலை அங்கமான ஆட்சிக் குழுவின், தற்போதைய செயலராக இருப்பவரும் மோரிஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமனுக்கு, விளக்கம் வேண்டி ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் பின்வருமாறு.

1. UNESCO நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட செவ்வியல் மொழிகள் பட்டியல் என எதுவுமில்லை.

2. UNESCO நிறுவனம் செவ்வியல் மொழிக்கான தகுதிகள் என எதையும் நிர்ணயம் செய்யவில்லை.

3. அவர் அறிந்த அளவில் இந்தப் பிரச்னை UNESCO நிறுவனத்தின் அதிகாரத்திற்கும், கடமை வரம்புகளுக்கும் புறம்பானது. எனவே இந்தப் பிரச்னை தொடர்பாக UNESCO நிறுவனத்தை மேற்கோள் காட்டுவது முழுவதும் தவறான செயலாகும். திசைதிருப்பும் செயலுமாகும். மீண்டும் வல்லுநர் குழுவுக்கு வருவோம்.

வல்லுநர் குழுவினர் செவ்வியல் மொழியின் தகுதிகள் எவை என்பது இதுவரை அதிகாரபூர்வமாக எந்த ஒரு நிறுவனத்தாலும் நிர்ணயிக்கப்படாததால், கிரேக்கம், லத்தீன், வடமொழி போன்ற மொழிகளைச் செவ்வியல் மொழிகள் என அங்கீகரிப்பதில் உலக அளவில் அறிஞர் மத்தியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அம்சங்களை மனதில் கொண்டு கீழே காணப்படும் தகுதிகளை நாங்கள் நிர்ணயிக்கிறோம் என்று கூறி பின்வரும் தகுதிகளை அக்குழு பதிவு செய்திருக்கிறது.

1. மிகப் பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமையான நூல்கள் / பதிவு பெற்ற வரலாறு.

2. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கியம் / நூல்கள்.

3. அம்மொழிக்கே உரியதாகவும், மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன் பெறாததுமான, இலக்கியப் பாரம்பரியம்.

4. செவ்வியல் மொழி என்பதும் அதன் இலக்கியமும் அம்மொழியின் நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட்டு இருக்கும். ஆதலால், ஒரு செவ்வியல் மொழிக்கும் அதன் நவீன வடிவத்திற்கும் அல்லது அதிலிருந்து பிறந்த மொழிகளுக்கும் இடையே ஒரு தொடர்பின்மை இருக்கக்கூடும்.

இந்த நான்கு விதிகளும் செவ்வியல் மொழி எனும் தகுதிக்கான பொது விதிகள். எந்த மொழிக்காகவும் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்த விதிகளைத் தமிழ் நிறைவு செய்கிறதா என்பதைப் பொருத்துத்தான், தமிழின் தகுதி பற்றிய பரிந்துரை அமைய முடியும். தமிழ் இவற்றை நிறைவு செய்கிறது என முடிவு செய்த குழு கீழ்க்காணும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது.

“மத்திய அரசு செவ்வியல் மொழிகள் பற்றி ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்த ஆணையில் ஒரு மொழி செவ்வியல் தகுதி பெற, இந்தக் குழு பரிந்துரை செய்திருக்கும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட வேண்டும். இறுதியாக இந்திய மொழிகளில் இந்தத் தகுதிகளை நிறைவு செய்யும் மொழிகளான வடமொழியும், தமிழும் செவ்வியல் மொழிகள் என அறிவிக்கப்பட வேண்டும்.” எனவே, குழுவினரால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பொதுவாகச் செவ்வியல் மொழிகளுக்கான தகுதிகளேயன்றிக் குறிப்பிட்டு எந்த ஒரு மொழிக்காகவும் கூறப்பட்ட தகுதிகள் அல்ல.

செவ்வியல் மொழி என்பதற்கு அடிப்படை அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள் தாம். அந்த இலக்கியங்கள் பழமையும் கிரேக்கம், லத்தீன் மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கியங்களை ஒத்த லட்சியம், கண்ணியம், பொதுமை, பகுத்தறிவு, ஒழுங்கு போன்ற பண்புகளும் கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகளில் பழமை என்று வரும்பொழுது அதற்கான ஆண்டுகள் நிர்ணயிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே பழமையான இலக்கியம் என்பதற்கு எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பழமையான மொழி என்பதற்கு உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கணம் இருக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உலகின் பழமையான மொழிகள் கலைக்களஞ்சியம் (Encyclopaedia of World’s Ancient Languages) என்ற நூல் பழமையான மொழி என்பதற்கான அடிப்படைகள் பற்றி அறிஞர் கருத்துகளை ஆய்ந்து, கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகளைப் பழமையான மொழிகளாகக் கருதலாம் என்று வரையறுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் 45 மொழிகளைப் பட்டியலிட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை வடமொழி, தமிழ், பாலி, பிராக்கிருதம் ஆகிய மொழிகள் இடம்பெற்றிருக்கின்றன. செவ்வியல் மொழி என்ற தகுதியைப் பெறுவதற்கு மொழியின் பழமை மட்டும் போதாது. செவ்வியல் இலக்கியம் என்று கூறும் தகுதியுள்ள, 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடைய இலக்கியமும் வேண்டும். அப்படிப் பார்க்கும்பொழுது பழமையான இந்திய மொழிகள் நான்கில் வடமொழியும், தமிழும் மட்டும் செவ்வியல் மொழிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன.

மேலே கூறிய விளக்கத்திலிருந்து 1500 முதல் 2000 ஆண்டுகள் பழமை என்பது பொதுவாகச் செவ்வியல் தன்மை எனும் தகுதிக்கு வகுக்கப்பட்ட தகுதியே தவிர, தமிழின் பழமை பற்றிய பிரச்னை அங்கு எழுவதில்லை. செவ்வியல் தன்மைக்கென நிர்ணயிக்கப்பட்ட தகுதியை விட, மிக அதிகமான பழமை உடையது தமிழ் என்பது தான் நிலை. ஒரு தேர்வில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்ச மதிப்பெண் 50 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், 90 மதிப்பெண்கள் பெற்றுத் தேறும் மாணவன் போன்ற நிலையில் வடமொழியும் தமிழும் இருக்கின்றன என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்வதில் நியாயம் இருக்கிறது. தமிழின் பழமையைக் குறைத்துவிட்டதாக எழுதுவதும், பேசுவதும், பிரச்னையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாததும், தவறான கருத்துகளைப் பரப்புவோரின் எழுத்தையும், பேச்சையும் நம்புவதும் அல்லது தமிழுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வரலாற்றுப் பெருமை மிக்க தகுதியைக் குறைத்து மதிப்பிட வேண்டுமென்ற குறுகிய மன நிலையும்தான் காரணமாக இருக்க முடியும்.

வல்லுநர் குழுவின் பரிந்துரையை மத்திய அரசின் அமைச்சர்கள் கூட்டத்தின் (Cabinet Meeting்) ஒப்புதலுக்கு வைத்த பண்பாட்டு அமைச்சகம், 1500 – 2000 என்றிருந்த பரிந்துரையை 1000-க்கு மேலான பழமை என நாணயக் குறைவான முறையில், சில காரணங்களைக் கூறி மாற்றி இருந்தது. இந்த மாற்றத்தின் உள் நோக்கத்தை ஆழமாக ஆராயாது முதலில் மத்திய அரசின் அமைச்சர் குழு (Cabinet ) ஏற்றுக் கொண்டுவிட்டது.

இந்தக் காலநிர்ணயத்தைத் தமிழக முதல்வரும், மொழிகளின் செவ்வியல் தன்மையை நிர்ணயிப்பதற்காக மத்திய அரசு அமைத்திருந்த வல்லுநர் குழுவும் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக, 1000 ஆண்டுகளுக்கு மேலாக என்பது திருத்தப்பட்டு, மீண்டும் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப 1500 முதல் 2000 என மாற்றப்பட்டது. மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு, செவ்வியல் மொழிகளுக்கு, உலக அளவில் பொது விதிகளாக உருவாக்கியதில் இலக்கியங்களுக்குக் குறிப்பிட்டிருக்கும் குறைந்தபட்சப் பழமை, எந்த மொழியின் பழமையையும் குறைப்பதில்லை. பழமைக்கு கி.பி. 500-க்கு முற்பட்ட மொழிகள் என வரையறுத்திருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கலைக்களஞ்சியத்தில் உள்ள 45 மொழிகளில் பல கி.மு. 2500-க்கு முற்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

(கட்டுரையாளர்: தலைவர், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம்)

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

State of local bodies – Functioning of elected officials in Civic, Panchayats

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2008

களையப்பட வேண்டிய களைகள்!

ஜி. மீனாட்சி

கோவை மாவட்டத்திலுள்ள குக்கிராமம் ஒன்றுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் தீவிர வரி வசூல் முகாம் நடந்து கொண்டிருந்தது.

கால அவகாசத்தைக் கடந்தும், பல தடவை நோட்டீஸ் அனுப்பியும், இறுதி எச்சரிக்கை விடுத்தும் சரிப்பட்டு வராத நிலையில் கடைசி முயற்சியாக வரி செலுத்தாதவர்களின் இல்லத்திற்குச் சென்று குடிநீர்க் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார் அந்த ஊரின் பெண் பஞ்சாயத்துத் தலைவி.

“”அரசுக்குச் சேர வேண்டிய வரியை வசூலிப்பதில் எத்தனை கஷ்டம் பார்த்தீர்களா? அரசு அதிகாரிகள்கூட இதற்கு ஒத்துழைப்பதில்லை. பல முறை அழைத்த பிறகுதான் வருகிறார்கள். இந்நிலையில், வரி செலுத்தாதவர்களின் கோபம் முழுவதும் பஞ்சாயத்துத் தலைவர்களின் மீதுதான் பாய்கிறது…” என்றார் வருத்தத்துடன்.

அவரது வார்த்தைகளை நிரூபிப்பதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு பெண் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்துள்ளனர்.

சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், ஊராட்சித் துணைத் தலைவர்களும் தங்களை சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

சட்டப் பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அமலுக்கு வராத நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த இடஒதுக்கீடு தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரியது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகள், சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா என்பது கேள்விக்குறியே.

பல ஊராட்சிகளில், ஊராட்சிக் குழுக் கூட்டம் நடக்கும்போது பெண் உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை என்பதே உண்மை. அவர்களுக்குப் பதிலாக, அவர்களின் கணவன்மார்களோ அல்லது குடும்பத்து ஆண்களோ கூட்டத்துக்கு வருவதாக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி ஒருவரே வருத்தம் தெரிவித்திருந்தார்.

படிப்பறிவற்ற, கிராமத்து, தலித் பெண்களில் பலர் வெற்றி பெற்றும், தங்களின் உரிமைகளை உணர முடியாதவர்களாகவே உள்ளனர். படித்த பெண்களில் பலர் கிராம மக்களுக்குச் சேவை செய்யும் உன்னத உணர்வுடன், உள்ளாட்சி அமைப்புகளில் முக்கியப் பதவி வகித்து வருகின்றனர். ஆனால் அந்தப் பெண் தலைவிகள், தங்கள் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாதபடி ஏகப்பட்ட குறுக்கீடுகள்.

எல்லாவற்றையும் திறமையாகச் சமாளித்து மக்கள் பணிகளை நிறைவேற்றும்போது, நிதிப் பற்றாக்குறை, சக ஊழியர்களின் ஒத்துழைப்பின்மை என்று தொடரும் நெருக்குதல்கள்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் உரிய முக்கியத்துவம் அளித்ததுடன் அரசின் பணி முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. உள்ளாட்சிப் பெண் பிரதிநிதிகளுக்கு, உள்ளாட்சி நிர்வாகம் குறித்து தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு அவ்வப்போது பயிற்சி அளித்தல், அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி கருத்துப் பரிமாற்றம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்களில் ஈடுபட வழிவகை செய்தல் போன்றவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். முக்கியமாக, நிதியைக் கையாளும் முறை குறித்தும் பயிற்சியளிக்க வேண்டும்.

சொந்த ஊரில் பஞ்சாயத்துத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும், மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் கைகள் கட்டப்பட்டுத் தவிக்கும் பெண்கள் ஏராளம். எல்லாவற்றையும் மீறி, ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, நேர்மையாய் பணியாற்றும் பெண் தலைவிகளுக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் என்று தொடர்கிறது வன்முறை.

இந்திய அரசியல் அமைப்புச் சட்ட 73-ம் திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டு முன்னேற்றத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பொருளாதார மேம்பாடு, சுகாதாரம் போன்றவற்றை ஊராட்சிகளில் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சிகளுக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் அளிக்க அரசமைப்புச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவற்றை குறைவின்றி நிறைவேற்றும் பொறுப்பும், கடமையும் ஊராட்சித் தலைவிகளுக்கு உள்ளது. அவர்கள் பணியை தடையின்றி நிறைவேற்ற அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் ஒத்துழைப்புத் தரவேண்டும்.

பல கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்களை சுதந்திரமாக நடத்தும் உரிமைகூட ஊராட்சித் தலைவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. சொந்த கிராமத்தின் அத்தியாவசியத் தேவைகளை நன்கு அறிந்தவர்கள், ஊராட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே. ஆனால் கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படவேண்டிய தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்து முன்கூட்டியே ஆட்சியர் அலுவலகமே ஆணை பிறப்பிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதுபோன்ற பல காரணங்களால், பதவியில் இருந்தும் கடமை ஆற்ற முடியாத நிலைக்கு ஊராட்சித் தலைவிகள் தள்ளப்படுகிறார்கள்.

அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவற்றில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வைத்ததுதான் சட்டம். காவல் துறையும் அவர்கள் பின்னே பக்கபலமாய் நிற்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள். தமிழகத்தில் இன்னும் அந்த நிலை வரவில்லை.

குறைகள் களையப்பட்டு, சுதந்திரமாக, நேர்மையாகச் செயல்படும் வகையில் ஊராட்சிப் பெண் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரமும், அங்கீகாரமும் வழங்கினால் மட்டுமே ஊராட்சியை உவகை மிக்க ஆட்சியாக மாற்ற முடியும்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

April 06 Week – LTTE, Viduthalai Pulikal, Sri Lanka, Eelam: BBC Tamil – News, Attacks

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 7, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஏப்ரல், 2008

இலங்கையின் மடு மற்றும் மாந்தை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் சண்டைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தைச் சேர்ந்த மடு மற்றும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து 6500 பாடசாலை மாணவர்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வெள்ளாங்குளம் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உயிலங்குளம் ஊடான மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கான பாதை மூடப்பட்டிருப்பதனால், மன்னார் நகரில் அமைந்துள்ள அந்த மாவட்டத்தின் அரச செயலகத்திற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் இடையிலான நிர்வாக ரீதியிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை கூறுகின்றார்.

ஆசிரியப் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அரசாங்கம் வழங்கும் இலவச பாட நூல்கள் சென்று கிடைக்காமை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இந்த மாணவர்கள் முகம் கொடுக்க நேரிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.


இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடபகுதியில் தற்போது நடந்துவரும் சண்டை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிவருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் எழுபது பேர் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அண்மித்த முன்னரங்கப் பகுதிகளில் பெரும்பாலும் நடந்த மோதல்களில் அரச படைத் தரப்பில் பத்து பேர் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் சார்பாகப் பேசவல்லவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் விடுதலைப் புலிகளோ, தமது தரப்பில் மூன்று பேரை மட்டுமே இழந்திருப்பதாகவும், இராணுவத்தினர் முப்பது பேருக்கும் அதிகமானோரை தாங்கள் கொன்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் சித்திரையே தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாட இந்துமா மன்றம் முடிவு

அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ்
அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ்

இந்தியாவில் தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பிற்குப் பதிலாக தைப்பொங்கல் தினத்தையே அங்குள்ள தமிழர்கள் தமது வருடப்பிறப்பாகக் கடைப்பிடிக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை இந்துமா மன்றம் அண்மையில் கொழும்பில் ஒரு கருத்தரங்கு ஒன்றினை நடத்தியிருந்தது. இதில் பிரபல சிவாச்சாரியார்கள், ஆலய அறங்காவலர்கள், தர்மகர்த்தாக்கள், சோதிடர்கள் என்று பலரும் கூடி தமிழ்வருடப்பிறப்பு தையிலா அல்லது சித்திரையிலா என்பது குறித்து தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் சமுதாயக்கட்டமைப்பில் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வந்த சித்திரை வருடப் பிறப்பே தொடந்தும் வருடப்பிறப்பாகக் கொண்டாட வேண்டுமென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக கொழும்பு செய்தியாளர் பி. கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 12 ஏப்ரல், 2008


இலங்கை போர்முனைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாறுப்பட்ட கருத்து வெளியிடல்கள்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கை அரசப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில், இந்தாண்டில் மட்டும் சுமார் 2000 விடுதலைப் புலிகளை கொன்றுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

போர்முனைகளுக்கு செல்வதற்கு வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் சொல்லும் எண்ணிக்கையை சரி பார்க்க முடியாத நிலை உள்ளது.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக இருத்தரப்பும் மாறுப்பட்ட கருத்துக்களை கூறுகின்றனர். இது தொடர்பாக பிபிசியின் இலங்கை செய்தியாளர் ரோலண்ட் பேர்க் அவர்கள் அனுப்பியுள்ள செய்தி குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 ஏப்ரல், 2008


சிங்கள மீனவர்கள் 10 பேரை தமிழக மீனவர்கள் சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர்

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கடலில் மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலைத் தொடர்ந்து 10 சிங்கள மீனவர்களை சென்னை மீனவர்கள் சிறைபிடித்து அவர்களை சென்னை காசி மேடு மீனவர் துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தமிழக காவல் துறை தெரிவித்திருக்கிறது.

சிங்கள மீனவர்கள் வந்த இரண்டு படகுகளும் தமிழக மீனவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மோதலில் சிங்கள மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல் துறை கூறுகிறது. மீனவளத் துறை அதிகாரிகளால் சிங்கள மீனவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 ஏப்ரல், 2008


ஜேவிபியில் மோதலுக்கு என்ன காரணம்-ஆய்வு

உறவும் பிரிவும்
உறவும் பிரிவும்

இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்கள் காரணமாக அந்தக் கட்சி பிளவுபடும் நிலையில் இருக்கிறது என்பது தொடர்பான செய்திகள் தமிழோசையில் ஏற்கனெவே ஒலிபரப்பகியிருந்தன.

ஜே வி பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியானது மார்க்ஸிய சித்தாந்தம் மற்றும் சிங்கள தேசியவாதம் ஆகிய இரு கொள்கைகளையுமே கடைபிடித்து வருகிறது என்றும். அவர்களின் அடிப்படை கொள்கை திட்டங்களான போரை முன்னெடுத்துச் செல்வது மற்றும் தனியார் மயமாதலை நிறுத்துவது போன்ற செயல்களை தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷாவே செய்து வருவதால், எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும், அரசை எதிர்ப்பதற்கு எந்த விடயமும் அதன் கையில் இல்லை என்று ஜேவிபி குறித்த ஆய்வை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர் ராஜேஷ் வேணுகோபால் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரசை எதிர்ப்பதற்கு எந்த விடயமும் அவர்களிடத்தில் இல்லாத நிலையில் கட்சியில் ஒரு பிரிவினர் ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் பெரும்பான்மையாக இருக்கும் குழுவினர் ஜனாதிபதியை மேலும் கடுமையாக எதிர்க்கும் நிலையையும் எடுத்துள்ளார்கள் எனவும் தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

கட்சி மாநாட்டில் தொண்டர்கள்-ஆவனப்படம்
ஜேவிபி மாநாடு ஒன்றில் தொண்டர்கள்-ஆவனப் படம்

கட்சியில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவானது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வலு சேர்க்கும் எனக் கூறும் அவர், வரக்கூடிய தேர்தல்களில் சிங்களவாத கட்சிகளான ஜேவிபி மற்றும் ஜேஹெச்யூ போன்ற கட்சிகளுக்கான ஆதரவுக் குறையக்கூடும் எனவும் கூறுகிறார்.

கட்சிக்குள் தொண்டர்களின் ஆதரவு, போட்டிக் குழுவின் தலைவரான விமல் வீரவன்ச அவர்களுக்கே அதிகம் இருக்கக் கூடும் என தான் கருதுவதாக ஆராய்ச்சியாளர் ராஜேஷ் வேணுகோபால் கூறினார்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 ஏப்ரல், 2008

புனித இருதயநாதர் ஆலயத்தை தாம் சேதப்படுத்தவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது

இலங்கையின் வடக்கே மடு மாதா தேவாலய வளாகத்தில் உள்ள புனித இருதயநாதர் தேவாலயத்தை இலங்கை இராணுவம் எறிகணைகளை ஏவி சேதப்படுத்தியதாக விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

தேவாலய வளாகத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் வகைதொகையின்றி எறிகணைகளை ஏவியதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அந்த வளாகத்தில் உள்ள ஒரு தேவாலயம் மிகவும் கடுமையாக சேதமடைந்திருப்பதை அண்மையில் வந்த ஒரு புகைப்படம் காண்பிக்கிறது.

மடு தேவாலயத்தின் மூலத் திருச்சொரூபம் ஏற்கனவே ஆலயத்தில் இருந்து அகற்றப்பட்டு வேறு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மடுவை அண்மித்த பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெறுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

மடு தேவாலயம்
மடு தேவாலயம்

இந்த புனித இருதயநாதர் ஆலயம் சேதமடைந்ததா,இல்லையா என்பது குறித்து தமக்கு இதுவரை பக்கசார்பற்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்கிறார் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வரான அருட்தந்தை விக்டர் சூசை. ஊடகங்கள் மூலமே தாமும் அந்த தகவலை அறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு பாதிரிமாரோ, அல்லது கன்னியாஸ்திரிகளோ எவரும் இல்லாத காரணத்தினால் அந்தத் தகவலை தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயினும் போர் மோதல்கள் நடக்கின்ற பரப்பாங்கண்டல், வடமுனை பகுதிகளில் உள்ள பல ஆலயங்கள் சேதமடைந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தமக்கு தகவல் தந்ததாகவும் அவர் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கட்சியில் இருந்து தான் விலக்கப்பட்டதாகக் கூறுகிறார் வீரவன்ச

இலங்கையின் அரசியல் களத்தில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாகக் கருதப்படும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளரும், அதன் பாராளுமன்றக் குழுத்தலைவருமான விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றியுள்ள உரையொன்றில் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற தலைமைப்பீடம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் கட்சியின் இந்த முடிவானது எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவிருப்பதாகவும் அவர் இன்று பாராளுமன்றில் தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஜே.வி.பிக்குள் உட்கட்சிப்பூசலினால் பிளவு ஏற்பட்டிருப்பதாக அண்மையில் வெளியான செய்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதேவேளை, கட்சியின் இந்த முடிவுக்கு எதிப்புத் தெரிவித்தும், வீரவன்சவிற்கு ஆதரவு தெரிவித்தும் அந்தக் கட்சியின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களில், சுமார் 11 உறுப்பினர்கள் இன்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடொன்றினைக் கூட்டி, கட்சியின் தலைமைப் பீடத்திலுள்ள சில உறுப்பினர்கள் ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சியின் வலையில் சிக்கி, கட்சியின் பிரதான கொள்கைகளிற்கு எதிராகச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டினர்.

இவை குறித்து மேலதிக செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஏப்ரல், 2008

விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளை தாக்கி அழித்துள்ளோம்: இலங்கை விமானப் படை

இலங்கையின் வடக்கே மாங்குளம் மற்றும் முகமாலை பகுதிகளில் விமானப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தளம் ஒன்றும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான பின்னணி தளம் ஒன்றும் அழிக்கப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, வவுனியா, மன்னார் வெலிஓயா எனப்படும் மணலாறு ஆகிய போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

இந்தப் பகுதிகளில் ஞாயிரன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 50க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஒரு சில இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் இது குறித்து உடனடியாக கருத்து எதனையும் வெளியிடாத போதிலும், மன்னார் போர்க்கள முனைகளில் இந்த மாதத்தின் முதல் 5 தினங்களிலும் இடம்பெற்ற சண்டைகளில் 35 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் போன்றவற்றில் சிக்கியவர்கள் உட்பட இந்தக் காலப்பகுதியில் 120 படையினர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள். எனினும் இந்த விபரங்கள் குறித்து படைத்தரப்பிடமிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


அமைச்சர் ஜெயராஜ் படுகொலைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்

படுகொலை செய்யப்பட்ட அமைச்சர் ஜெயராஜ்

இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகே கடந்த ஞாயிறன்று நடந்த ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே உட்பட சுமார் 14 சிவிலியன்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினை அமெரிக்கா மிகவும் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கொடூர பயங்கரவாதச் சம்பவத்தினை மேற்கொண்டவர்கள் இலங்கை மக்களுக்கு மேலும் இன்னல்களை விளைவித்திருப்பதனைத் தவிர வேறெதனையும் அடையவில்லை எனத் தெரிவித்திருப்பதோடு, தொடர்ச்சியான வன்முறைகளால் அல்லாது, அரசியல் தீர்வொன்றினைக் காணுவதே இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காண்பதற்கான ஒரேவழி என்றும் தெரிவித்திருக்கிறது.

கனடா, பிரான்ஸ், ஐரோப்பியன் ஆணையம் ஆகியவையும் இந்தத் குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.


மடு பிரதேசத்தில் சண்டைகள் முடிவுக்கு வரவேண்டும் எனக் கோரி விசேட பிரார்த்தனை

அரசாங்க அதிபரிடம் மகஜரைக் கையளிக்கிறார் மன்னார் ஆயர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்கின்ற உக்கிரச் சண்டைகளில் சிக்கியிருக்கும் மடுமாதா ஆலயப் பகுதியை யுத்த சூழலற்ற சமாதான வலயமாக்க வேண்டும் எனக் கோரி வவுனியாவில் இன்று விசேட வழிபாடு நடைபெற்றுள்ளது.

இந்த வழிபாட்டையடுத்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வவுனியா அரசாங்க அதிபரிடம் மன்னார் ஆயர் தலைமையிலான கத்தோலிக்க மதகுருக்களினால் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பூஜை வழிபாடு இன்று வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மடு பிரதேசப் பகுதியில் இடம்பெறுகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்புக்காக அங்கிருந்து வேறிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது

மடுமாதாவும் யத்தச் சூழலினால் பாதிக்கப்பட் பொதுமக்களைப் போன்று இடம்பெயர்ந்துள்ளமையானது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையைத் தோற்றுவித்திருக்கின்றது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


இலங்கை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் உட்பட 12 பேர் பலி

அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையின் மேல்-மாகாணத்திலுள்ள கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு காலை இடம்பெற்ற சக்திவாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலொன்றில் இலங்கை அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே உட்பட சுமார் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஞாயிறு காலை கம்பஹா மாவட்டத்தில் வலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்த சிங்கள-தமிழ் புத்தாண்டையொட்டிய மராதான் ஓட்டப்போட்டியொன்றில் பிரதான விருந்திரனாக கலந்துகொண்டிருந்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே, அந்த ஓட்டப் போட்டியினை தொடக்கிவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இதில் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயுடன், இலங்கையின் முன்னாள் தடகளவீரரும், தெற்காசிய மராதான் ஓட்டப் போட்டியில் தங்கப்பதங்கம் வென்றிருந்தவருமான கே.எஸ் கருணாரட்ண மற்றும் தேசிய தடகளப் பயிற்றுவிப்பாளருமான லக்ஸ்மன் டீ அல்விஸ் உட்பட சிவிலியன்களும் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 90க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா மாவட்டத்தின் மூத்த பொலிஸ் அதிகாரியான எஸ்.எஸ்.பி. ஹெக்டர் தர்மசிறி உட்பட காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கம்பஹா, மற்றும் ராகம தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களில் மிகவும் மோசமான நிலையிலிருந்த நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூர் தொலைக்காட்சிகளில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுவதற்கு சில மணித்துளிகளுக்கு முன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவதையும், அதன் பின்னர் மராதான் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையும் விசேட செய்தி அறிவித்தல்களின்போது காண்பிக்கப்பட்டன.

பாதுகாப்புத்தரப்பினர் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனாலும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து இந்தக் குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைக் குண்டுதாரியே காரணம் என்று ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தேசிய தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குண்டுத்தாக்குதலையும், அமைச்சரின் படுகொலைச் சம்பவத்தையும் விடுதலைப்புலிகளின் மிருகத்தனமான செயலெனக் கண்டித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் பயங்கரவாதத்தினை முற்றாக அழிக்கும் தனது அரசின் நடவடிக்கைகளிலும், திடசங்கற்பத்திலும் எவ்வித மாறுதல்களையும் இது ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியுடன், அமைச்சர் ஜெயராஜ்
இலங்கை ஜனாதிபதியுடன், அமைச்சர் ஜெயராஜ்

55 வயதான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஒரு சட்டத்தரணி ஆவார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆளும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததோடு, தனது அரசியல் வாழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து, கிறிஸ்தவ விவகாரங்கள், இனவிவகாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பல துறைகளில் பலவருடங்கள் அமைச்சராகவும் பதவிவகித்திருக்கிறார்.

இறக்கும்போது இவர் ஆளும் கட்சியின் பிரதான கொறடாவாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், பொருளாளராகவும் கடமையாற்றியிருந்ததோடு, அடுத்தமாதம் கிழக்கு மாகாணசபைக்காக இடம்பெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிய வருகிறது.

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் பின்னர் தென்னிலங்கையில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8ம் திகதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற தேசநிர்மாண அமைச்சர் தஸ்ஸநாயக, ஜா-எல பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக செய்திகளை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அமைச்சர் கொல்லப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து தடைகள்

ஏ9 பாதை
ஏ9 பாதை

இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, வவுனியாவுக்குத் தெற்கே ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதவாச்சி சோதனைச்சாவடியை பொலிசார் உடனடியாக மூடியதாகவும். இதனால் பல மணித்தியாலங்கள் இந்த சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதாகவும் மதவாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதவாச்சி சோதனைச்சாவடி மூடப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சோதனைச்சாவடியின் இருபக்கங்களிலும் வந்து குவிந்த பயணிகள் பிற்பகல் ஒரு மணியளவிலேயே சோதனைச்சாவடியைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் இந்தச் சோதனைச்சாவடி பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்டு, பொதுமக்கள் போக்குவரத்து மாலை 5 மணிவரையில் தடுக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையில் பயணத் தடை காரணமாக மதவாச்சி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் ஒரு மணித்தியாலம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் மன்னார், வவுனியா, மணலாறு ஆகிய இடங்களில் உள்ள போர்முனைகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் வெளியேற்றம்

விவசாய வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் வெளியேற்றம்
விவசாய வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் வெளியேற்றம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடைக்காக வெளிமாவட்டங்களில் இருந்து சென்றிருந்த விவசாயத் தொழிலாளர்கள் அங்கு தங்கியிருப்பதற்கு இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, கடும் மழையினால் அழிந்ததன் பின்னர் எஞ்சியுள்ள சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலத்திலான நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக மன்னார் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடைக்கான இயந்திரங்களை மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகக் கொண்டு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்துள்ள போதிலும், வயல்களில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் அவற்றைப் பயன்படுத்தி நெல் அறுவடை செய்ய முடியாத நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பதாக நானாட்டான் பிரதேச செயலாளர் திருஞானசம்பந்தர் அவர்கள் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் வவுனியா பிரதேசங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்திருந்த விவசாய தொழிலாளர்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் வெளியேறுமாறு கூறியிருப்பதை மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை உறுதி செய்தார். இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் நேயர்கள் கேட்கலாம்.


மடுமாதாகோவில் பிரதேசத்தை மோதல்கள் அற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை

மடுமாதா
மடுமாதா

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் மோதல்கள் காரணமாக மடுக்கோவிலில் இருந்து எடுத்துச செல்லப்பட்டுள்ள மடுமாதா திருச்சொரூபத்தைத் தற்காலிகமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டியில் தொடர்ந்து வைத்திருப்பது என்றும், மடுக்கோவில் பகுதியை மோதல்களற்ற சமாதான பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி அதனை அமைதி வலயமாக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் நேரடியாக வலியுறுத்துவது என்றும், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார் ஆயர் தலைமையில் அமைக்கப்படுகின்ற விசேட குழு, கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து தமது கோரிககை குறித்து வலியுறுத்தி எடுத்துக் கூறுவது என்றும், அதேவேளை, இலங்கை ஆயர் மன்றத்தின் ஊடாக மடுக்கோவில் சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கத்திடம் வலியுறுத்துவது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சூசை அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட
அருட்தந்தையர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், மடுக்கோவிலில் இருந்து மடுமாதாவின் சொரூபம் தேவன்பிட்டியில் உள்ள தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து மடுக்கோவில் நிலைமைகள் குறித்து அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மடுக்கோவில் பிரதேசத்தில் தொடரும் உக்கிரச் சண்டைகளின் பின்னணியில் மடுக்கோவில் பற்றிய உண்மையான நிலைமை குறித்து அறிக்கையொன்றின் மூலம் வெளிக்கொணர்வது என்றும், மடுக்கோவில் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்துக்களைச் சேகரிப்பது என்றும், வவுனியாவில் பேரணியொன்றை நடத்துவதுடன், மன்னார் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட கத்தோலிக்கத் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமைகள் தோறும் உண்ணா நோன்பிருந்து விசேட வழிபாடுகள் நடத்தி பிரார்த்திப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் மன்னார் குருமுதல்வர் விக்டர் சூசை அவர்கள் கூறினார்.


Posted in Eelam, Eelam People's Democratic Party, Eelam People's Revolutionary Liberation Front, Eelam Revolutionary Organisation, Eezam, Eezham, LTTE, Srilanka, Velupillai Prabhakaran, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal | Leave a Comment »