Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Reviews’ Category

District Collectors: Sales Tax vs Income Tax – Loopholes, Corruption, Kickbacks in Local Administration

Posted by Snapjudge மேல் மார்ச் 10, 2008

புன்னகைக்கும் பொய் ரசீதுகள்

இரா. சோமசுந்தரம்

சில நாள்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகா அலுவலகம் சென்றபோது, அங்கே ஒரு வட்டாட்சியரிடம் ஒருவர் கடுமையான கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த வட்டாட்சியரோ, “”ஒண்ணும் ஆயிடாதுங்க” என்று சமாதானம் செய்து, பேசுபவரின் குரலை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இருந்தும்கூட, அடக்கமுடியாத கோபமும் அச்சமுமாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த அந்த நபர், “”இன்னும் எந்தெந்த டிபார்ட்மென்ட்லிருந்து எனக்கு என்கொயரி வருமோ? என் ரசீது புஸ்தகத்தை கொடுங்கய்யா” என்று கேட்டும் கிடைக்காததால், மறுபடியும் திட்டிக்கொண்டே வெளியேறினார்.

சுமார் அரைமணி நேரத்துக்கு அந்த அலுவலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் தெரியவந்தது இதுதான்:

2006-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது, இந்த தாலுகா அலுவலகம் சில படிவங்களை அச்சிட்டதாக சுமார் ரூ.80 ஆயிரத்துக்கு ரசீதுகள் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தணிக்கைத் துறை அலுவலர்கள் இதனைத் தணிக்கை செய்தபோது, யாரோ ஒரு நேர்மையான அலுவலர், இந்த செலவுக்கு ஆட்சேபக் குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் – “”எல்லா படிவங்களும் தேர்தல் ஆணையம் அச்சிட்டுத் தரும்போது, தாலுகா அளவில் எத்தகைய படிவம் அச்சிடப்பட்டது என்பதற்கான சான்றுகள் அளிக்கப்படவில்லை. வாக்காளர்களுக்கு அறிவுரை என்ற நோட்டீஸ் அச்சிடப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அதற்கு ரூ.2000-க்கு மேல் செலவாகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே இந்தச் செலவினத்தை ஆட்சேபிக்கிறேன்” என்று அந்தக் குறிப்பில் அவர் எழுதியுள்ளார்.

உள்ளாட்சித் தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வழக்கமாக உயர்அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அனுப்பப்படும் என்பதோடு, தலைமை கணக்கு தணிக்கை (ஏ.ஜி.) அலுவலகத்துக்கும் ஒரு நகல் அனுப்பப்பட வேண்டும்.

அப்படி அனுப்பப்பட்ட இந்த ஆட்சேபக் குறிப்பை கண்ட, தலைமை கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரி ஒருவர், “”சுமார் 15 நாள்களில் ரூ.80 ஆயிரத்துக்கு அச்சிடும் இத்தகைய அச்சகம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிக்கக்கூடும்! இந்த அச்சகம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை ஆய்வு செய்யலாம்” என்று மற்றொரு குறிப்புடன் வருமான வரித்துறைக்கு அனுப்பிவிட்டார்.

வருமான வரித்துறை இத்தனை விஷயங்களையும் குறிப்பிட்டு, மொத்தக் கணக்குகளுடன் நேரில் வரவும் என்று அச்சக உரிமையாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

வட்டாட்சியரிடம் கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவர் அச்சகத்தின் உரிமையாளர். அந்த அச்சகமோ அந்த நகரத்திலேயே மிகச் சிறிய அச்சு இயந்திரத்தை வைத்து, கல்யாணப் பத்திரிகை அச்சடித்து வருவாய் ஈட்டும் மிகச் சிறிய அச்சுக்கூடம். வருமானத்துக்கே திண்டாடும் அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வந்தால் எப்படி இருக்கும்?

இச்சம்பவம் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தது. நியாயம் செத்துப்போவதில்லை. உண்மைகள் கொஞ்ச காலம் உறங்கலாம். ஆனால் அது ஒரு நாள் விழிக்கவே செய்கிறது. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது’. ஆனால் அப்போதே, உடனே அல்ல. சரி, வாழ்க்கையொன்றும் திரைப்படம் அல்லவே, உச்சக் காட்சியில் நொடியில் தர்மம் வெற்றிபெற!

இது குறித்து மேலும் விசாரித்தபோது இன்னொரு தகவலும் தெரியவந்தது. இத்தகைய ரசீதுகள் தொடர்பான ஆட்சேபக் குறிப்புகளை, விற்பனை வரிப்பிரிவினர்தான் முதலில் கையில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை கையில் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது, மாநில அரசு, விழிப்புடன் இல்லை என்றாகிறது.

இத்தகைய போலி ரசீதுகள் உள்ளாட்சி முழுவதிலும் அதிக அளவில் இருக்கின்றன. விற்பனை வரித் துறை அதிகாரிகள் விசாரித்தால், பல பூதங்கள் வெளிக்கிளம்பும் என்கிறார்கள்.

உள்ளாட்சித் துறைகளில் ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் திசைமாறுகிறது. இதற்கு அடிப்படையான காரணம் மாவட்ட ஆட்சியர் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட விலைப்பட்டியல்தான்.
அரசுக்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போது கூட்டுறவுத் துறை நிறுவனங்கள் நீங்கலாக அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் எவை, அவற்றில் எந்தெந்த பொருள்களுக்கு என்ன விலை என்று மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கும் இந்த விலைப்பட்டியலை ஆதாரமாக வைத்துத்தான் தணிக்கை செய்யப்படுகிறது.

நிறுவனம் பட்டியலில் உள்ளதா, விலை சரியா என்பதை மட்டுமே தணிக்கை அலுவலர்கள் சரிபார்க்க முடியும். இந்த நிறுவனம் வெறும் “”ரசீது நிறுவனமா” என்பதை ஆய்வு செய்ய இயலாது.

பொதுச்சந்தையில் ஒரு பொருள் விற்கப்படும் விலையைக் காட்டிலும் குறைந்தது 10 சதவீதம் கூடுதல் விலையே இந்த அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதில் சந்தேகம் இருக்குமானால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரூ.10 செலுத்தி, அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தால் நிறுவனங்களும் விலைகளும் வெளிச்சமாகிவிடும் என்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத்தான் போறேன். வர்றீங்களா?

Posted in Administration, administrative units, Audit, Bribery, Bribes, Circle Inspector, Collections, Collector, Collectorate, Corruption, Departments, Dept, District, District Collectors, Elections, Govt, IAS, Income, Inefficiency, Inspection, Inspectors, Investigations, IT, kickbacks, local, Local Body, Local Body election, local body elections, Local Body Polls, Local Civic Body, Local Elections, Local Polls, Local self Governance, Loopholes, Notices, officers, Politics, Polls, revenue collection, Revenue District, Revenues, Reviews, sarkeel, Somasundaram, Somasundharam, Somasuntharam, ST, Tahsil, Taluk, Taluka, Taluq, Tax, Union, zilla collector | Leave a Comment »

Spring, summer, Fall, Winter and Spring – Korean Film Review: Thilagavathy – Cinema Express

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2008

வசந்தகாலம், கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் மற்றும் வசந்தகாலம்

(கொரியா)

அவளைப் படகில் ஏற்றி, கரையை நோக்கிச் செலுத்துகிறார். படகு போகிறது. அவன் வீட்டுக்குள் போய், புத்தர் சிலை முன் அமர்ந்து அழுதபடி பிரார்த்திக்கிறான். பிறகு ஓடி வந்து பார்க்கிறான். அவள் படகிலிருந்து இறங்கி நடக்கிறாள். மாஸ்டர் கரையிலிருக்கும் கதவை மூடுகிறார்.

இரவு. இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுக்கிறான். பிறகு மெதுவாக எழுந்து, ஒரு துணிப்பையில் புத்தர் சிலையைப் போட்டுக் கொள்கிறான். சேவலைத் தூக்கிக் கொண்டு படகில் ஏறி, படகைக் கரைக்கு விடுகிறான். மாஸ்டர் கண்களைத் திறக்கிறார். அமைதியாக அமர்ந்து பிரார்த்தனை செய்கிறார். அவன் கரையில் ஒற்றையடிப் பாதையில் நடக்கிறான். சேவலும் தனியே நடந்து போகிறது.

மழைக்காலம்

மாஸ்டர் எங்கோ வெளியில் போய்விட்டு, வீட்டுக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டு வருகிறார். பொருள்களோடு ஒரு பூனையையும் அவர் கொண்டு வந்திருக்கிறார். ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரிக்கிறார். அதைச் சுற்றியிருந்த செய்தித் தாளில் ஒரு குட்டிச் செய்தி: “”முப்பது வயது இளைஞன், மனைவியைக் கொன்றுவிட்டு ஓட்டம்.”

மாஸ்டர் அந்தச் செய்தியைப் படித்துவிட்டு, வீட்டுக்குள் வருகிறார். இளைஞனுடைய பழைய உடையை எடுத்துத் தைக்க ஆரம்பிக்கிறார்.

கரையில் அந்த இளைஞன் வந்து நிற்கிறான். ஆளே மாறிப் போயிருக்கிறான். ஜீன்ஸ் பேண்ட், கோட் அணிந்திருக்கிறான். முகம் முழுக்கக் கோபமும் வெறுப்பும் மண்டிக் கிடக்கின்றன. மாஸ்டர் அவனைப் பார்த்துவிட்டுப் படகை எடுத்துக் கொண்டு கரைக்கு வருகிறார்.

அவனைப் படகில் ஏற்றிக் கொள்கிறார். “”நீ ரொம்ப மாறிப் போயிட்டே” என்கிறார். அவனுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கிறார். அவன் வெறுப்போடு பேசுகிறான். வீட்டுக்கு வந்ததும், தான் கொண்டு வந்த பையைத் திறந்து புத்தர் சிலையை எடுக்கிறான். அந்தச் சிலையை அது இருந்த பழைய இடத்திலேயே வைக்கிறான்.

தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ரத்தக்கரை படிந்த ஒரு கத்தியை எடுக்கிறான். தரையில் அமர்ந்து, அந்த மரவீட்டின் தரையை ஆங்காரமாகக் குத்துகிறான். இரவு. மாஸ்டர் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்க, இளைஞன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறான்.

காலையில் படகை எடுத்துக் கொண்டு கரைக்குப் போகிறான். கரையில் இருக்கும் குட்டை நீரில் இறங்கி நின்று கொண்டு, ஆங்காரத்தோடு “தொப்! தொப்!’ என்று அடிக்கிறான். அமைதியில்லாமல் இங்குமங்குமாக அல்லாடுகிறான். வீட்டுக்கு வந்து பிரார்த்தனை செய்கிறான். வீட்டுக்கு வெளியே மாஸ்டர் பூனையைத் தடவியபடி அமர்ந்திருக்கிறார்.

பிரார்த்தனை முடிந்ததும், அவன் ஒரு பேப்பரில் “மூடு’ (நட்ன்ற்) என்று எழுதுகிறான். அந்தப் பேப்பரை எடுத்துக் கண், மூக்கு, வாய் ஆகியவற்றில் ஒட்டிக் கொண்டு, மூச்சை அடக்கித் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான்.

அவன் முனகும் சத்தம் கேட்டு மாஸ்டர் உள்ளே வருகிறார். அவன் தற்கொலைக்கு முயற்சிப்பதைப் பார்க்கிறார். ஒரு கம்பை எடுத்து அவனை அடி அடியென அடிக்கிறார். திட்டுகிறார்.
இளைஞன் கைகால்கள் கட்டப்பட்டு, உத்திரத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறான்.

அவனைக் கட்டியிருக்கும் கயிறு ஒரு மெழுகுவர்த்தி ஜ்வாலையில் பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டுக்கு வெளியே மாஸ்டர், மரத்தரையில் பூனையின் வாலை ஒரு கறுப்பு மையால் தொட்டுத் தொட்டு எதையோ எழுதுகிறார். மந்திரச் சொற்கள் போல இருக்கிறது.

இளைஞனைக் கட்டியிருந்த கயிறு ஜ்வாலை பட்டுப் பொசுங்கி அறுந்து போகிறது. இளைஞன் கீழே விழுகிறான். தன் கட்டுகளை அவிழ்த்துக் கொள்கிறான். அவனுடைய நீண்ட முடியை, ரத்தக் கரை படிந்த கத்தியால் அவனே வெட்டிக் கொள்கிறான். தன் பழைய ஆசிரம உடையை அணிந்து கொண்டு, வீட்டை விட்டு வெளியே வருகிறான்.

மாஸ்டர் அவனைத் திரும்பிப் பார்க்காமல், தரையில் எழுதியபடி சொல்கிறார்.

“”உன்னை நீயே கொன்னுக்கறது நடக்காது. நான் எழுதியிருக்கிற எழுத்து மேல அந்தக் கத்தியால செதுக்கு. ஒவ்வொரு எழுத்தை வெட்டும்போதும், உன்னைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாப் போயிடும்.”

அவன் மாஸ்டர் மரத்தரையில் எழுதியிருக்கும் எழுத்துகளை ஒவ்வொன்றாகத் தன் கத்தியால் அழகாக செதுக்க ஆரம்பிக்கிறான்.
கரையில் இரண்டு போலீஸ்காரர்கள் வந்து நின்று குரல் கொடுக்கிறார்கள். மாஸ்டர் படகில் வந்து அழைத்துப் போகிறார்.

அவர்கள் அந்த இளைஞனைக் கைது செய்ய வந்தவர்கள். அவனைப் பார்த்து இருவரும் துப்பாக்கியை உயர்த்த, அவனும் கத்தியைத் தூக்குகிறான். மாஸ்டர் அவனை அதட்டுகிறார். “”நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கே? ஒழுங்கா உக்காந்து எழுத்துகளை செதுக்கு.”

அவன் மறுபடியும் தரையில் அமர்ந்து எழுத்துகளைச் செதுக்க ஆரம்பிக்கிறான். மாஸ்டர், போலீஸ்காரர்களிடம் அவன் எல்லா எழுத்துகளையும் செதுக்கி முடித்த பிறகு, அவர்கள் அவனை அழைத்துப் போகலாம் என்கிறார்.

“”இது என்ன எழுத்து?”

“”பிரஜனபரமித சூத்ரம்.”

“”செதுக்கி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?”

“”நாளைக்குக் காலையில் முடிஞ்சுடும்.”

போலீஸ்காரர்கள் இருவரும் ஒரு ஓரமாக அமர்கிறார்கள்.

இளைஞன் தொடர்ந்து எழுத்துகளை செதுக்கியபடி இருக்கிறான்.
போலீஸ்காரர்கள், ஏரித் தண்ணீரில் ஒரு டப்பா மிதப்பதைப் பார்க்கிறார்கள். தங்கள் துப்பாக்கிகளை எடுத்து குறி பார்த்து மாறி மாறிச் சுடுகிறார்கள்.

ஆனால் டப்பாவைச் சுட முடியவில்லை. குறி தப்பிக் கொண்டே இருக்கிறது. துப்பாக்கி சத்தம் இளைஞனை, திடுக்கிட வைக்கிறது. அவன் மிரண்டு போய்க் கோபத்தோடு அவர்களைப் பார்க்கிறான். மாஸ்டர் ஒரு சிறிய கல்லை எடுத்து, வெகு சாதாரணமாக டப்பாவை நோக்கி எறிகிறார். கல் மிகச் சரியாக டப்பாவைத் தாக்குகிறது. போலீஸ்காரர்கள் பிரமித்துப் போய் பார்க்கிறார்கள்.

இரவு முழுக்க இளைஞன், தரையெங்கும் எழுதியிருக்கும் எழுத்துகளைக் கத்தியால் செதுக்குகிறான். போலீஸ்காரர்கள் உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞன் அப்படியே தரையில் சுருண்டு படுத்துத் தூங்குகிறான். போலீஸ்காரர் தன் கோட்டைக் கழற்றி இளைஞனுக்குப் போர்த்திவிடுகிறார்.

மாஸ்டர் படுக்கையிலிருந்து எழுந்து வருகிறார். அவன் செதுக்கிய மரத்தணுக்குகளைப் பெருக்குகிறார். மூலிகைகளில் பெயிண்ட் தயாரித்து, அவன் செதுக்கிய ஒவ்வொரு எழுத்திலும் வர்ணம் பூசுகிறார்.

இளைஞன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறான். போலீஸ்காரர்கள் இருவரும் மாஸ்டருடன் சேர்ந்து, எழுத்துகளுக்கு வர்ணம் பூசுகிறார்கள். உச்சிப் பொழுதில் எல்லா எழுத்துகளும் வண்ணம் பூசப்பட்டு ஒளிர்கின்றன. மாஸ்டர் இளைஞன் படுத்திருக்கும் இடத்துக்கு வருகிறார். அவனை எழுப்புகிறார். “”எந்திரி! போக வேண்டிய நேரம் வந்துடுச்சு!”

இளைஞனை போலீஸ்காரர்கள் படகில் ஏற்றுகிறார்கள். அவனை விலங்கு போடாமல் கெüரவமாக அழைத்துப் போகிறார்கள். படகில் ஏறி துடுப்புப் போடுகிறார்கள். மாஸ்டர் படகில் இருக்கும் இளைஞனை அன்பு ததும்பும், ஏக்கமாகப் பார்க்கிறார்.

போலீஸ்காரர்களுக்குத் திகைப்பு, எவ்வளவு தரம் துடுப்புப் போட்டும் படகு முன்னோக்கி நகராமல் அப்படியே நிற்கிறது.
“”படகு நகர மாட்டேங்குது” என்கிறார் ஒரு போலீஸ்காரர். வீட்டிலிருந்து மாஸ்டர் இளைஞனைப் பார்த்துக் கையசைக்க, இப்போது படகு நகர்கிறது.

அவர்கள் இறங்கியதும், கரையில் இருந்த கதவு தானாக மூடுகிறது. படகு தானாகவே வீடு நோக்கி வருகிறது. மாஸ்டர் வேதனையோடு வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார்.

மாஸ்டர் ஒரு பேப்பரில் Shut’ என்று எழுதுகிறார். படகில் சிதை அடுக்குவது போல சில விறகுகளை அடுக்குகிறார். தன் துறவி ஆடையையும், செருப்பையும், ஜபமாலையையும் சுழற்றி புத்தர் சிலை முன் வைக்கிறார்.

கண், காது, வாய், மூக்கில் Shut’ என்று எழுதிய பேப்பர் ஒட்டப்பட்டிருக்க, படகு துவாரத்தைத் திறந்து விட்டுவிட்டு, சிதையில் ஏறி அமர்ந்து தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறார். சிதை எரிகிறது.

அந்தப் படகிலிருந்து ஒரு பாம்பு வெளிவந்து, ஏரி நீரில் நீந்தியபடி வீட்டுக்குள் வருகிறது. மாஸ்டர் கழற்றி வைத்த ஆடையின் மேல் சுருண்டு படுத்துக் கொள்கிறது.

குளிர்காலம்

கதவு திறக்கிறது. இப்போது வீட்டைச் சுற்றி இருக்கும் ஏரித்தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து போயிருக்கிறது. பனி பொழிந்து கொண்டிருக்கிறது. ஜெயிலிலிருந்து இளைஞன் திரும்பி வருகிறான். உறைந்து போயிருக்கும் நீரின் மேல் நடந்து போகிறான். வீடு பூட்டியிருக்கிறது. சற்று தூரத்தில் பாதி மூழ்கிய நிலையிலிருக்கும் படகைக் கும்பிடுகிறான். வீட்டைத் திறக்கிறான்.

மாஸ்டரின் உடை மேல் படுத்திருக்கும் பாம்பு ஊர்ந்து போகிறது. இளைஞன், படகு மூழ்கியிருக்கும் பனியை வெட்டி, மாஸ்டரின் அஸ்தியை எடுக்கிறான். பனிக்கட்டியை வெட்டி ஒரு இடத்தில் ஊற்றுத் தோண்டுகிறான். ஊற்றுத் தண்ணீரில் முகம் கழுவிக் கொள்கிறான்.

புத்தர் சிலை முன் அமர்ந்து பிரார்த்தனை செய்கிறான். மேசை டிராயரைத் திறந்து, மாஸ்டர் வைத்துவிட்டுப் போன புத்தகத்தை எடுத்துப் படிக்கிறான். அதில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து உடற்பயிற்சி செய்கிறான். பனி கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பிக்கிறது.

இரவு. முகத்தைத் துண்டால் இறுகக் கட்டிய ஒரு பெண் கரைக்கு வருகிறாள். அவள் கையில் ஒரு கைக் குழந்தை. அவனிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு புத்தர்சிலை முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தபடி அழுகிறாள்.

இரவில் அவள் உறங்கும்போது, அவள் முகத் துணியை விலக்கப் பார்க்கிறான் இளைஞன். அவள் அவன் கையைப் பிடித்துக் கொள்கிறாள். இரவில் இளைஞன் உறங்கியதும், அந்தப் பெண் குழந்தையை விட்டுவிட்டு, வேகமாக வெளியே போகிறான். இளைஞன் ஊற்றுக்காகத் தோண்டிய குழியில் கால் வழுக்கி விழுந்து விடுகிறாள்.

காலை அந்தப் பெண்ணுடைய குழந்தை, அம்மாவைத் தேடி அழுதபடி, தவழ்ந்து தவழ்ந்து வெளியே வருகிறது. அவள் விழுந்த ஊற்றுக்குழிக்கருகே வந்து அழுகிறது. ஊற்று நீரில் அந்தப் பெண் அணிந்திருந்த ஒற்றைச் செருப்பு நீரில் மிதக்கிறது. இளைஞன் ஓடி வந்து குழந்தையைத் தூக்கிக் கொள்கிறான்.

இளைஞன் ஒரு பெரிய துரட்டுக் கோலைக் கொண்டு வந்து, குழிக்குள் விட்டு, அந்தப் பெண்ணின் சட்டையோடு சேர்த்து அவளைத் தூக்கிக் கரையில் இழுத்துப் போடுகிறான். அவள் முகத்தை மூடியிருக்கும் துணியை அவிழ்த்துப் பார்க்கிறான். ஒரு புத்தர் சிலையின் முகம் தெரிகிறது.

இளைஞன் அலமாரியிலிருந்து ஒரு போதிசத்வர் சிலையை எடுக்கிறான். ஒரு ஆட்டுக் கல்லை கயிற்றில் கட்டி, தன் இடுப்போடு சேர்த்துப் பிணைத்துக் கொள்கிறான். சிலையைத் தூக்கிக்கொண்டு, ஆட்டுக்கல்லை இழுத்தபடி நடக்கிறான்.

இழுத்து, இழுத்து, காடு, மேடு எல்லாம் கடந்து, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு மலை உச்சியில் ஏறி, தான் கொண்டு வந்த போதிசத்வர் சிலையை ஓர் இடத்தில் வைக்கிறான். அது அவன், தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தண்டனை. மீன், தவளை, பாம்பு ஆகியவற்றைத் துன்பப்படுத்தியதெல்லாம் இடையிடையே அவன் நினைவுக்கு வருகிறது.

வசந்தகாலம்

இப்போது அந்த இளைஞன்தான் மாஸ்டராக மாறியிருக்கிறான். அந்தப் பழைய மாஸ்டர் மாதிரியே தோற்றம். அந்தக் கைக்குழந்தை வளர்ந்து, நாம் ஆரம்பத்தில் பார்த்த சிறுவனாக மாறியிருக்கிறது. அதே முகம். சிறுவன் அமர்ந்திருக்க, மாஸ்டர் அவன் உருவத்தைப் படமாக வரைகிறார்.

சிறுவன் வீட்டுமேல் ஏறும் ஒரு ஆமையைப் பிடித்து விளையாடுகிறான். அதே பழைய குறும்புத்தனத்துடன் மலைமேல் இருக்கும் போதிசத்வர் சிலை மெüனமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

“சுழற்சி விதி’ என்பார்களே அதை நேரில் பார்த்ததுபோல ஒரு பிரமை படம் முடிந்ததும் தோன்றுகிறது. மனித வாழ்க்கைத் துளியைப் படமாக எடுத்திருக்கும் இயக்குனர் கீடக்கீம்மை (Ki-duk kim) எவ்வளவு பாராட்டினாலும் தகும். படத்தின் கதையும் இயக்குனருடையதுதான்.

இப்படி ஒரு அற்புதமான சூழலை, நாம் நேரில் பார்த்ததுபோல ஓவியமாக வரைந்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டாங் ஹையோன் பேக் (Dong-hyeon Back). ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான ஜி-ஆங் பார்க்கின் (Ji-Woong park) இசை.

கேள்விகளால் ஆனது உலகம். எத்தனையோ கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் மானுட மந்தை அலைவுற்றிருக்கிறது. இருந்தாலும் விடையைத் தேடிப் புதுப்புதுக் கேள்விகளுடன் மானுடப் பயணம் தொடர்ந்தபடி இருக்கிறது. அன்பு என்ற ஆயுதத்தை ஏந்தியபடி!

Posted in Cinema, Express, Films, Korea, Movies, Reviews, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy | Leave a Comment »

Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

முகங்கள்: இரண்டு மடங்கு பணி! நான்கு மடங்கு வேகம்!

அவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.

அவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.

பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.

ஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.

மீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

உங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

இதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்?

சமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.

நமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ?

உங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே?

தமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு? ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

கவிதையில் நாட்டம் ஏன்?

ஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.

எனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.

கவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.

மொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.

சிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி?

டெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது?

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.

என்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.

இதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.

படங்கள் : ஏ.எஸ். கணேஷ்

Posted in Anna, Authors, English, Essays, Fiction, Interview, Kamaladas, Kamaladoss, Kandasamy, Kandhasami, Kandhasamy, Kanthasami, Kanthasamy, Kasi Anandhan, Kasi Ananthan, Literature, Meena, Nakkeeran, Nakkiran, Ph.d, Poems, Researchers, Reviews, Story, Tamil Nadu, TamilNadu, Translations, Translators, Writer | Leave a Comment »

New Cinema Releases for Pongal – Tamil Film updates & Movie Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

பொங்கல் படங்கள் முன்னோட்டம்

இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு விக்ரம், மாதவன், சேரன், சிம்பு, பரத், அசோக், சத்யராஜ், வடிவேலு ஆகியோரின் எட்டு படங்கள் வெளியா கின்றன. அவற்றைப் பற்றிய முன்னோட்டம்…

காளை

சிம்பு, வேதிகா, நிலா நடித்துள்ள படம். “திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். காதல், ஆக்ஷன் கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது வழக்கம்போல சிம்புவுக்கும் இயக்குநருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அது ஒரு வழியாகத் தீர்க்கப்பட்டவுடன் தயாரிப்பாளரின் ஃபைனான்ஸ் பிரச்னை தொடங்கியது. இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

இசை -ஜி.வி.பிரகாஷ்குமார். பாடல்கள் -வாலி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல்கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -நிக் ஆர்ட்ஸ்.

பலம் -ஆக்ஷன்.

பிரிவோம் சந்திப்போம்

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு படம். சினேகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலுவான கதை, திரைக்கதையின் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் கரு.பழனியப்பன். “பார்த்திபன் கனவு’, “சிவப்பதிகாரம்’ படங்களுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் இது. முன்னது வெற்றியையும் பின்னது தோல்வியையும் சந்தித்ததால் இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முனைப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இசை -வித்யாசாகர். பாடல்கள் -யுகபாரதி, கபிலன், ஜெயந்தா. ஒளிப்பதிவு -எம்.எஸ்.பிரபு. தயாரிப்பு -ஞானம் ஃபிலிம்ஸ் (பி) லிட்.

பலம் -இயக்கம்.

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

“இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தையடுத்து வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் பிரமாண்டமான படம். இதில் பூலோகவாசி, இந்திரன், எமன் என வித்தியாசமான மூன்று வேடங்களில் நடித்துள்ளார் வடிவேலு. தீதா சர்மா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். பூலோகத்தில் வாழும் வடிவேலு இந்திரலோகத்துக்கும் எமலோகத்துக்கும் சென்று காமெடி கலாட்டா செய்வதுதான் கதை. படத்தை வடிவேலுவின் நண்பரும் அவருக்குக் காமெடி ட்ராக் எழுதுபவருமான தம்பி ராமையா இயக்கியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய பலம் தோட்டாதரணி உருவாக்கியுள்ள பிரமிக்க வைக்கும் அரங்குகள். “சிவாஜி’யில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா இந்தப் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இசை -சபேஷ்முரளி. பாடல்கள் -புலமைப்பித்தன். ஒளிப்பதிவு -கோபிநாத். படத்தொகுப்பு -ஹர்ஷா. தயாரிப்பு -செவன்த் சேனல் நிறுவனம்.

பலம் -புதுமையான நகைச்சுவை.

வாழ்த்துகள்

“தம்பி’ வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சீமான்-மாதவன் கூட்டணி சேர்ந்துள்ள படம். தன்னைப் போல பிறரையும் நேசிக்க வேண்டும்; பெற்றவர்களைக் காப்பாற்றாதவன் மற்றவர்களைக் காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து ஆபாசம், ஆங்கிலக் கலப்பில்லாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார் சீமான். “ஆரியா’ படத்துக்குப் பிறகு மாதவனுடன் பாவனா ஜோடியாக நடிக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பாளர் சிவா இந்தப் படத்தை சாய்மீரா நிறுவனத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறார். சிவாவின் “அரவிந்தன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

பாடல்கள் -நா.முத்துக்குமார். ஒளிப்பதிவு -பெ.லோ.சஞ்சய். படத்தொகுப்பு -கா.பழனிவேல். தயாரிப்பு -அம்மா கிரியேஷன்ஸ்.

பலம் -வலுவான கதை.

பிடிச்சிருக்கு

“முருகா’ படத்தில் நடித்த அசோக், புதுமுகம் விசாகா நடித்துள்ள படம். சம்பத், சரண்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லிங்குசாமியின் உதவியாளர் கனகு இயக்கியிருக்கிறார். காதலில் வெற்றி பெற கத்தியின்றி ரத்தமின்றி ஒரு புதுமையான வழியைக் காட்டும் படம். சண்டைக் காட்சிகள் இல்லாத குறையை இந்தப் படத்தின் திருப்பம் நிறைந்த திரைக்கதை நீக்கும் என்கிறார் இயக்குநர். இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மனு ரமேஷன் என்ற புதிய இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். கதாநாயகன் அசோக் மும்பையில் நடன இயக்குநராகப் பணியாற்றியதால் நடனக் காட்சிகள் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் -யுகபாரதி, விவேகா, ச.ரமேஷன் நாயர். ஒளிப்பதிவு -த.வீ.ராமேஸ்வரன். படத்தொகுப்பு -கு.சசிகுமார். நடனம் -காதல் கந்தாஸ். தயாரிப்பு -கூல் புரொக்ஷன்ஸ்.

பலம் -திரைக்கதை.

பழனி

“திருப்பதி’ படத்துக்குப் பிறகு பேரரசு இயக்கும் படம். பரத், புதுமுகம் காஜல் அகர்வால், குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர். அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து காமெடி, சென்டிமெண்ட் கலந்து படத்தை உருவாக்கியுள்ளார் பேரரசு. வழக்கம்போல இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள பேரரசு முதல்முறையாக இந்தப் படத்தில் சொந்தக் குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார். பரத் முதல்முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். பாடல் காட்சிகள், பிரமாண்டமான க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களைக் கவரும். வழக்கமான பரத் படங்களை விட இந்தப் படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்துள்ளார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.

வசனம் -ரவிமரியா. இசை -ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு -விஜய் மில்டன். படத்தொகுப்பு -வீ.ஜெய்சங்கர். சண்டைப் பயிற்சி -தளபதி தினேஷ். தயாரிப்பு -சினிமா பாரடைஸ்.

பலம் -ஆக்ஷன், சென்டிமெண்ட்.

பீமா

லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம்-த்ரிஷா நடித்துள்ள படம். பல பிரச்னைகளால் இரண்டு வருடம் தாமதமாக வெளியாகிறது. நிழல் உலக தாதாக்கள் பற்றிய இந்தப் படத்துக்காக சுமார் 15 கிலோ எடையைக் கூட்டி முரட்டு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ரம். த்ரிஷாவின் காஸ்ட்யூம்களுக்காகவே இந்தப் படம் பேசப்படும் என்கிறார்கள். ஹாலிவுட் தரத்துக்கு நிகரான சண்டைக் காட்சிகள் வித்தியாசமான கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. லிங்குசாமி, விக்ரம் ஆகியோரை விட படத்தின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

வசனம் -எஸ்.ராமகிருஷ்ணன். இசை -ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் -தாமரை, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி. ஒளிப்பதிவு -ஆர்.டி.ராஜசேகர். சண்டைப் பயிற்சி -கனல் கண்ணன். படத்தொகுப்பு -ஆண்டனி. தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ்.

பலம் -பெரிய கலைஞர்களின் கூட்டணி.

Posted in Actors, Actress, Alagappan, Ashok, Azhagappan, Barath, Bharath, Bhavana, Bhavna, Bhawana, Bhawna, Bheema, Cheran, Cinema, Films, INA, Indralogathil Naa Azhagappan, Kaalai, Kalai, Karu Pazhaniappan, Lingusami, Lingusamy, Madhavan, Mathavan, Movies, Nila, Palani, Palaniappan, Pazani, Pazhani, Pazhaniappan, Perarasu, Pidichirukku, Pongal, Privom Santhippom, Releases, Reviews, Sathyaraj, Satyaraj, Seemaan, Seeman, Seran, Simbu, SNEHA, Thambi, Thimiru, Thirupathi, Thirupathy, Thiruppathi, Thiruppathy, Thrisha, Trisha, Vaalthugal, Vaazhthugal, Vaazhthuhal, Vaazhthukkal, Vaazthukkal, Vadivelu, Vedhika, Vethika, Vikram | Leave a Comment »

Sun TV Top 10 Movies & Rights to a Cinema – Collusion, Mixing news with monetary interests

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சர்ச்சை: டாப் 10… 20… 30..!

உலக அதிசயங்களை ஏழு என்று வகைப்படுத்தியதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் “டாப் டென்’ என்று டி.வி. சானல்கள் வரிசைப்படுத்தியதற்கும். அதாவது ஏழு, பத்து என்பதெல்லாம் பழக்க தோஷம்தான். வார வாரம் டாப் டென் நிகழ்ச்சிகள் போக ஆண்டுக்கு ஒருமுறை டாப் டென் தேர்ந்தெடுக்கிறார்கள். சன் டி.வி., இப்போது கலைஞர் டி.வி. இரண்டிலும் இந்த வரிசைப்படுத்தல் நடக்கிறது.

சன் டி.வி.யில் நடக்கிற அரசியல் சுவாரஸ்யமானது. எப்போதும் விஜய் நடித்த படத்தை மட்டுமே டாப் டென்னில் முதலாவதாகக் கொண்டுவருவது அவர்கள் வாடிக்கை. வாரப் பட்டியலிலும் அவர்தான் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பார். அப்படியில்லை என்றால் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் முதலிடத்தைப் பிடிக்கும். அல்லது ரஜினி படம் வெளிவந்தால் அது முதலிடத்தைப் பிடிக்கும்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு “ஆட்டோகிராஃப்’ தேசிய விருது பெற்ற போது அதற்கு சன் டி.வி. போதிய விளம்பரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன். விளைவு அடுத்த ஆண்டில் அவர் இயக்கிய “தவமாய் தவமிருந்து’ திரைப்படம் ஆண்டு டாப் டென்னில் இடம்பெறவேயில்லை. அடுத்து வெளியான “மாயக் கண்ணாடி’ முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஒரு வழியாக சேரன் இறங்கிவந்து சன் தரப்பில் பேசி, பிறகு அந்தச் சானலிலும் அவருடைய பேட்டி இடம் பெற்றது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்டு இப்போது பேட்டி கொடுக்க வைக்கப்பட்டிருப்பவர் அஜீத்.

விஜய் நடித்த “வசீகரா’ படத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். காரணம் அதை ஜெயா டி.வி. வாங்கியிருந்தது.

அவர்கள் முடிவு செய்தால் அது பட்டியலில் இடம் பெறும். வேறு சானல்களில் வாங்கப்பட்ட படங்களை அவர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. ரஜினி, விஜய், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் போக அவர்களுக்குப் படம் விற்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

ஜெயா டி.வி.யில் இவர்களில் இருந்து விடுபட்ட மற்ற படங்கள் இடம் பெறும். உதாரணத்துக்கு அவர்களுக்கு “பில்லா’, “சென்னை -28′ உள்ளிட்ட படங்கள் அவர்களால் சிலாகிக்கப்பட்ட படங்கள்.

செய்திகளே அப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப உருவாக்கப்படுவதும் ஒளிபரப்பப்படுவதுமாக இருக்கும்போது டாப்டென்கள் எம்மாத்திரம்.

கலைஞர் டி.வி.க்குத்தான் தர்மசங்கடம் அதிகம். அவர்கள் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர திரைத்துறையினரை தம் வசம் வைத்திருப்பது அவர்களுக்கு மறைமுக ஆதரவாக நினைக்கிறார்கள். (கடந்த இரண்டாண்டு திரைத்துறை அரசு விருதுகள் பட்டியலிலேயே அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் கெüரவித்தவர்கள் ஆயிற்றே?)

வாங்கிய படங்கள், பெரிய நடிகர்கள்- பெரிய இயக்குநர்களின் படங்கள் என எல்லோரையும் டாப் டென்னில் இடம் பெறச் செய்ய வேண்டும். “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற “சன்’னால் புறந்தள்ளப்பட்ட படங்களுக்கு இங்கே ஆதரவு காட்ட வேண்டிய நெருக்கடி. கூட்டிப் பார்த்தால் படத்தின் பட்டியல் 17-ஐத் தாண்டியது. என்ன செய்வதென்று புரியவில்லை. எந்த ஏழு பேரை நீக்குவது என்று குழப்பம். இறுதியாக ஒரு உத்தி கண்டார்கள். ஏன் டாப் டென்? அது யார் போட்ட சட்டம்? இனி ஒரு விதி செய்வோம் என டாப்- 20 ஆக்கினார்கள். புத்தாண்டு படப்பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றன. புதிதாக இன்னொரு மூன்று படத்தைச் சேர்ப்பதுதானா கஷ்டம்?

ஆக, டாப் இருபது இப்போது மட்டும்தானா என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் “டாப் 25′, “டாப் 30′ என்று பெருகவும் வாய்ப்பு உண்டு.

இறுதியாக ஒரு கேள்வி… கலைஞர்களின் மனம் புண்படாத வண்ணம் இந்த ஆண்டு ரிஸீஸôன திரைப்படங்களின் பட்டியலை வாங்கி அத்தனை டாப்புகளையும் போட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகும் சானல் எது?

Posted in Actors, Actress, Ajith, Arrogance, Arts, Business, Cheran, Cinema, Corporate, Critic, Critique, deal, Distribution, Distributors, Economy, Films, Finance, Jaya, Jeya, K, K TV, Kalainjar, Lists, Maran, Media, Monetary, Money, Movies, MSM, News, Raj, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reviews, Seran, Star, Star Vijay, Sun, Sun TV, Sunday, Top 10, TV, Vijay | 2 Comments »

Book Review Ki Veeramani: Sarvam Stalin Mayam by Kizhakku Publications

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

தொண்டறத்தின் முன்னே கடமையா? காதலா?

புத்தகப் பிரியன்: : “சர்வம் ‘ஸ்டாலின்’ மயம்”

சென்னையிலும், வெளியூர்களிலும் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் சிலர் பூச்செண்டு கொடுத்து அன்பு செலுத்தும் முறைக்குப் பதிலாக நல்ல புதிய அல்லது கிடைத்தற்கரிய பழைய புத்தகங்களைக் கொடுத்து மகிழ்விப்பது உண்டு.
இதைவிட அறிவுக்கு உணவு அளிக்கும் கருத்து விருந்தோம்பல் வேறு ஏது?
கடந்த 21.12.2007 கோவையில் ஓர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு வசந்தம் கு. இராமச்சந்திரன் ஒரு பழைய நூல் – ஆங்கில நூலை தந்தார்.
அதுபோலவே, எப்போதும் புதிய புத்தகங்களைத் தரும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் கோவை மாவட்டச் செயலாளரும், சீரிய பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு கு. கண்ணன் அவர்கள் திரு. மருதன் எழுதிய சர்வம் ஸ்டாலின் மயம் என்ற புத்தகத்தைத் தந்தார்.
திரும்பி வந்த தொடர்வண்டி வழியில், மின்சார கம்பி வடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை வரவேண்டிய எல்லா வண்டிகளும் தாமதமாகவே (பல மணிநேரங்கள்) வந்தன. வழியில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, தடைபட்டே பயணம் தொடர்ந்த நிலை அன்று இருந்தது. காலை 7.30 மணிக்கு வந்து சேரவேண்டிய வண்டி, காலை 10.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்த நிலை!
அந்தப் பயணக் களைப்பினை – அயர்வினைத் தெரியாது செய்த வழித்துணை நண்பனாக இந்நூல் பெரிதும் பயன்பட்டது.
செய்தி அறிந்து அரக்கோணம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜீவன்தாசு, மாவட்ட கழகத் துணைத் தலைவர் எல்லப்பன் அவர்களும் காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வந்து கொடுத்து அன்புடன் உபசரித்தனர்.
எனவே, பசியும் தீர்ந்தது – நூலை விடாமல் படிக்க சுவையாகவும் இருந்தது!
ஸ்டாலின்பற்றி அந்த ஆசிரியர் மருதன் (அது கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு) மிகவும் விறுவிறுப்பு நடையில் எழுதியுள்ளார்!
ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவை வல்லரசாக்கி, முதலாளித்துவ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமான பொதுவுடைமை வீரர்!
தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின்மூலம், மதவாதத்தினை விரட்டி மகத்தான சோவியத் சோஷியலிசக் குடியரசுகளின் கூட்டாட்சியை வெற்றிகரமாக நடத்தியவர். புரட்சியாளர் லெனினால் சரியாக அடையாளம் காட்டப்பட்டவர்!
அவர் பற்றிய அரிய தகவல்கள் மிகச் சிறப்புடன் தரப்பட்டுள்ளன ஆசிரியரால்!
அதன் கடைசி அத்தியாயத்தைப் படித்தபோது, பொது வாழ்வில் உள்ள தலைவர்களின் பிள்ளைகளது உணர்வு, அத்தலைவர்களின் கடமை உணர்வின் முன் எப்படி தோற்றுப் போகும் காதலாகி விடுகிறது என்பது என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது!
குடும்பம் என்பது அத்தகைய தன்னல மறுப்பாளர்களுக்கு ஒரு குறுகிய வட்டமல்ல – நாடே ஏன் உலகமேகூடத்தான்.

ஸ்டாலின் மகள் ஸ்வெத்லானாபற்றியச் செய்திகள் – உணர்வுகளை அந்நூல் கூறுவதை இதோ படியுங்கள்:

அமைதி திரும்பி விட்டது என்று எல்லோரையும்போல் ஸ்வெத்லானாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
எப்படி முடியும்? தந்தையை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லை. எப்படிப் பார்க்க முடியும்? அவர் வீட்டுக்கு வந்தால்தானே! போர், பிரச்சினை, சிக்கல்கள். ஒன்று முடிந்தால் மற்றொன்று. அது முடிந்தால் இன்னொன்று.
எங்கோ இருக்கும் சர்ச்சிலை வீட்டுக்கு அழைத்து வந்து பேசுவதற்கு நேரம் இருக்கிறது. கட்சி, பொதுக்கூட்டங்கள் என்றால் நேரம் இருக்கிறது. ஆனால், வீட்டில் இருந்தபடி சிறிது நேரம் மனம்விட்டுப் பேசலாம் என்றால், அதற்கு மட்டும் நேரமில்லை.
சமீப காலமாக இன்னமும் மோசம். போர். போர். போர். வாயைத் திறந்தால் இதைப்பற்றித்தான் பேச்சு. ஜெர்மனி, ஹிட்லர், நேச படைகள், கூட்டு நாடுகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தம், லெனின்கிராட், மாஸ்கோ, சோவியத்.
ஆனாலும், ஸ்வெத்லானா தனது தந்தையைப்பற்றி நன்றாக அறிந்திருந்தாள். அதனால்தான் ஒவ்வொரு முறை அவருடன் கோபித்துக் கொள்ளும்போதும், அது பொய்ச் சண்டையாக மாறிவிடுகிறது.
அலுவலகத்தில் அவர் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங்கில் இருந்தபோது (அமெரிக்கப் பிரதிநிதி ஹாப்கின்ஸிம் உரையாடிக் கொண்டிருந்த சமயம் அது) ஸ்வெத்லானா தன் தந்தையை தொலைபேசியில் அழைத்தார்.
அப்பா, நான் டிப்ளமோ பட்டம் பெற்றுவிட்டேன்.
அப்படியா? சந்தோஷம். மகிழ்ச்சி. உன்னை இப்போதே பார்க்கவேண்டும்போல் இருக்கிறது.
நான் அங்கு கிளம்பி வரவா?
சரி, வாயேன்.

ஸ்வெத்லானாவிடம் நீண்ட நேரம் பேசினார் ஸ்டாலின்.

அடுத்து என்ன படிக்கப் போகிறாய்?
பல்கலைக் கழகம் போகவேண்டும். மேற்படிப்பு படிக்கவேண்டும்.
என்ன படிக்கப் போகிறாய்?
கவிதைகள், கதைகள், கட்டுரைகள். இலக்கியம் படிக்கப் போகிறேன்!
வேண்டாம் ஸ்வெத்லானா. இலக்கியம் படிப்பது வீண்.
அப்படியானால் நான் என்னதான் படிப்பது?

ஸ்வெத்லானாவின் தலையை புன்னகையுடன் கோதி விட்டார் ஸ்டாலின்.

வரலாறு படி. வரலாறு பல புதிய விஷயங்களை உனக்குக் கற்றுக் கொடுக்கும்!

தனது மூத்த மகன் யாகோப் விஷயத்தில் தந்தை காட்டிய அணுகுமுறை ஸ்வெத்லானாவை மிகுதியாகக் கவர்ந்தது.

விஷயம் இதுதான்.

1935-இல் ராணுவத்தில் சேர்ந்தான் யாகோப். 14 ஆவது படைப் பிரிவில் அவன் ஒரு லெஃப்டினெண்ட்.

பைலோரஷ்யப் போர் தொடங்கி மறுநாளே யாகோப் போர்களத்துக்குச் சென்று விட்டான். பிற கைதிகளுடன் சேர்த்து ஜெர்மனி, யாகோபையும் கைது செய்துவிட்டது. பின்னர், விசாரணையின்போது தான் பிடித்து வந்திருப்பது தங்க முட்டையை என்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

ஸ்டாலினுடன் ஜெர்மனி பேரம் பேசியது.

உங்கள் மகன் யாகோப் இப்போது எங்கள் கையில்! வில்லன் பாணியில் சொன்னது ஜெர்மனி.

இதயமே நின்றுவிடும்போல் இருந்தது ஸ்டாலினுக்கு. ஆனால், அடுத்த விநாடியே அவர் சுதாரித்துக் கொண்டார்.
சரி, சொல்லுங்கள்.
யாகோப்பை உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு நிபந்தனை. அதற்கு ஈடாக நீங்கள் சிறை வைத்திருக்கும் கைதிகளை விடுவித்துவிட வேண்டும். சம்மதமா?
மன்னிக்கவும். எனக்குப் பேரம் பேசி பழக்கமில்லை.
தொலைபேசியைத் துண்டித்துவிட்டார் ஸ்டாலின்.
தன் மகள் ஸ்வெத்லானாவிடம் பின்னர் இதுபற்றி பேசினார்.
நான் செய்தது தவறு இல்லைதானே?
இல்லை அப்பா.
**********
தன் தந்தையை ஒரு அறுபத்தைந்து வயது தாத்தாவாக ஸ்வெத்லானாவால் பார்க்க முடியவில்லை. ஆனால், உடல் தளர்ந்து படுக்கையில் அவர் சாயும்போதெல்லாம் அறுபத்தைந்து எனும் எண், அவள் நினைவுகளை அரிக்க ஆரம்பிக்கும்.
தேவைக்கும் அதிகமாகவே உழைத்துவிட்டார். இனி, அவர் நிச்சயம் ஓய்வெடுக்கவேண்டும் என்று கிரெம்ளின் மருத்துவர்கள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர் கேட்பதாக இல்லை. எத்தனையோ முறை சொல்லி விட்டாள், பலன் இல்லை.
**********
தன் தந்தை ஒரு கண்டிப்பான மனிதரும்கூட என்று ஸ்வெத்லானாவுக்கு நன்றாகவே தெரியும்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக அவர் தன்னைக் கடிந்து கொண்டதையும் அவள் அடிக்கடி நினைத்துப் பார்த்துக் கொள்வாள்.
உடலோடு ஒட்டிக்கொள்ளும்படியாக ஏன் ஆடைகள் அணிகிறாய்? வளர்ந்த பெண்தானே! தொதொளப்பான ஆடைகளை அணிய பழகிக் கொள். ஒரு போல்ஷ்விக் பெண்ணுக்கு கண்ணியம்தான் முக்கியம்!
தன்னடக்கம் போதாது. நீ இன்னமும் நிறைய வளர வேண்டியிருக்கிறது!
பல சமயம் நீ திமிருடன் பேசுகிறாய், நடந்துகொள்கிறாய். தவறு!
தன் முதல் கணவரை இறுதிவரை அவள் தந்தை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது ஒரு உறுத்தல்தான். அதேபோல், ஸ்வெத்லானாவின் இரண்டாவது திருமணத்தையும் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் என்ன? அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே ஆயிரத்தெட்டு மன விரோதங்கள் இருக்கும். ஆயிரத்தெட்டு சண்டைகள் மலரும். இதென்ன உலகப் போரா அடித்து வீழ்த்துவதற்கு? சண்டை போடுவார். ஆனால், விரைவில் ஓடிவந்து கட்டியணைத்துக் கொள்வாரா? மாட்டாரா? அதுதானே முக்கியம்.

– இப்படி முடிகிறது அந்நூல்!

Posted in abuse, Affection, Autocracy, Badri, Blind, Books, CCP, Churchill, Citizens, Culture, Dictators, Dictatorship, Dress, Dresscode, Faith, Germany, Kilakku, Kings, Kizakku, Kizhakku, Love, massacre, people, Power, publications, Religion, Reviews, Rulers, Russia, Stalin, USSR, Veeramani, Wars, WWII | Leave a Comment »

Charukesi: Ramanujar & Muthusamy Dikshithar – Dinamani Theater Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்

ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.

நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.

தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.

மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)

“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.

“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)

மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.

கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.

முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.

இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.

முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.

சாருகேசி

Posted in Authors, Books, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Dikshithar, Dinamani, Drama, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, IPaa, Literature, music, Muthusami, Muthusamy, Oxford, publications, Publishers, Ramanujam, Ramanujan, Ramanujar, Reviews, Saarukesi, Sarukesi, Shows, Stage, Tamil, Theater, Theatre, Translations, Works, Writers | Leave a Comment »

Book Review: TK Pattammal – Carnatic Legends – Nithya Raj (Kalki)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

பட்டம்மாள் போட்ட பாதை – கல்கி (கர்னாடக இசை சிறப்பிதழ்)

கர்நாடக சங்கீத மேடையில், இன்று அரை டஜன் ஐச்வர்யாக்கள், ஒரு டஜன் காய்த்ரிகள், கால் டஜன் அம்ருதாக்கள், சங்கீதாக்கள், இன்னும் சாருலதாக்கள்… வண் ணமும் வனப்பும் விஷயதானமும் வழங் கிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அஸ்திவாரம் போட் டவர், தமது எண்பத்தெட்டாவது வயதில் நம்மிடையே இசைபட வாழ்ந்து, சங்கீதக் கலையைக் கற்பித்து மகிழ்ந்துகொண் டிருக்கும் கான சரஸ்வதி டி.கே.பட்டம் மாள். பட்டம்மாளின் அம்மா ராஜம்மாள், ஒரு கல்யாணத்து நலங்கில் பாடியதைக் கூட பொறுக்காமல் அதட்டி நிறுத்தச் செய்துவிட்டார் அவருடைய மாமனார் – அதாவது டி.கே.பி. யின் தாத்தா. ‘குடும்பப் பெண்கள் சங்கீதம் பாடக்கூடாது – அதெல் லாம் தேவதாஸிகளின் பணி’ என்று ஆதிக் கமும் அனர்த்தமும் மிக்க சட்ட திட்டங்கள் நிலவிய காலம். ஆனால், குழந்தை பட்டாவுக்குப் பாட்டு வெகு இயல்பாக வந்தது.

பள்ளிக்கூட நாடகம், போட்டிகளில் பாடி, வெற்றி பெற, பட்டாவின் போட்டோ பேப்பரில் பிரசுரமானபோது, அப்பா தாமல் கிருஷ்ணசாமி அய்யர் வெல வெலத்துப் போனார்! ‘பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா?’

பட்டம்மாளுக்குக் கல்யாணமும் ஆயிற்று; அவரது சங்கீதமும் தழைத்து வளர்ந்தது. ஈசுவர அய்யரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் தாமல் கிருஷ்ண சாமி அய்யர் பட்டம்மாள் (டி.கே) என்றே அவரது பெயர் நீடித்தது.

அன்று பட்டம்மாள் போராடி மேடை ஏறியதனால்தான் இன்று சுதாக்களுக்கும் ஜெய்ஸ்ரீகளுக்கும் ஐச்வர்யாக்களுக்கும் பாதை சுலபமாகியிருக்கிறது.

சங்கீத உலகில் அழகும் அமைதியும் மிக்க ஒரு சகாப்தத்தைப் படைத்த டி.கே.பி. கடந்து வந்த பாதை என்ன? அதன் வளைவு – நெளிவுகள், ஏற்ற – இறக்கங்கள், சுக – துக்கங்கள் என்று ஆராய்ந்து அழகான நூல் ஒன்றை வெளியிட்டிருக் கிறது பாரதிய வித்யா பவன். அற்புதமான, அரிய புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவு களாக இடம் பெற்றுள்ள இந்நூல், உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுக் கரம் கூப்பிச் சிரிக்கும் டி.கே.பி.யின் கனிந்த முகத்தை அட்டையில் தாங்கி, உடனே எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது.

நாற்பத்து நான்கு ஆண்டுகளாக டி.கே.பி. வீட்டில் சமையல் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, மலேஷியா விலிருந்து வந்துள்ள சீன சிஷ்யர் சோங் சியூ சென் (இவ ருக்கு சாய் மதனா என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.கே.பி…) என்று குட்டி சுவாரஸ் யங்கள்…

டி.கே.பி.யுடன் பாடுவதற் காக, தம்பி டி.கே.ஜெயராமனும் மருமகள் லலிதா சிவகுமாரும் எவ்வாறு தங்கள் சுருதியை மாற்றிக்கொண் டார்கள் என்பது போன்ற தீர்க்கமான விஷயங்கள்…

புத்தகத்தைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நித்யா ராஜ். விஷய கனம் டி.கே.பி.யின் பல்லவி அளவுக்கு இருக்க, ஆங்கில மொழி நடைமட்டும் சர்வதேச தரத்தில் அமையாதது சற்றே நெருடல்.

(தொடர்புக்கு: பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் கேந்திரா, 352, ஈ.ஆ. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.)

Posted in Biosketch, Books, Carnatic, Faces, Females, Kalki, Ladies, Legends, Margazhi, Margazi, music, Nithiyashree, Nithiyasri, Nithyashree, Nithyasri, Pattammaal, Pattammal, people, Performers, Reviews, Shows, Singers, Stage, TKP | 2 Comments »

Tamil Books – Reviews, Listing from Dinamalar

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

மேடும் பள்ளமும் : ஆசிரியர் : நாஞ்சில் கி.மனோகரன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 18ரூ )

யுத்தம் வேண்டாம் : ஆசிரியர் : மாக்ஸிம் கார்க்கி , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 25ரூ )

அமெரிக்காவிலே : ஆசிரியர் : மாக்ஸிம் கார்க்கி , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 45ரூ)

லெனினுடன் சில நாட்கள் : ஆசிரியர் : மாக்ஸிம்கார்க்கி , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 24ரூ )

அம்பேத்காரும் தலித் மனித உரிமைப் போராட்டமும் : ஆசிரியர் : சி.என்.குமாரசாமி , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 122ரூ )

செய்திகளுக்கு அப்பால்…!:நுõலாசிரியர்: சோலை, வெளியீடு: தணல் பதிப்பகம் (பக்கம்:200. விலை:ரூ.60).

அரசியல் விமர்சனக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி தனக்கென ஒரு தனி இடம் கொண்ட பத்திரிகையாளர் சோலை எழுதிய சுமார் 48 அரசியல் விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம்.ராஜ்ய சபையில் ஒரு குறிஞ்சிப்பூ (மன் மோகன் சிங்), விதவிதமான அரசியல் அம்மணிகள், வாரிசு அரசியலை அகற்ற முடியுமா? ஆணிவேரைத் தோண்டியெடுங்கள், நேபாளத்தில் ஒரு பூபாளம் போன்றவை படிக்கச் சுவை கூட்டுபவை. ஒவ்வொரு கட்டுரையிலும் ஆசிரியரின் பரந்த அரசியல் அனுபவ அறிவு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது. அரசியல் மேடைப் பேச்சாளர்களுக்கும் பயன்படக் கூடிய நுõலிது.

நினைத்ததை செய்யுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள் : நுõலாசிரியர்: நாகை எம்.பி.அழகியநாதன். வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ் (பக்கம்: 68. விலை: ரூ.20)

சுய முன்னேற்ற வகைப் புத்தகம் இது. மிகச் சிறிய புத்தகம். சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருப்பதால் அலுப்பு தட்டவில்லை.


உழைப்பு

சேற்றில் மனிதர்கள் ( பாரதீய பாஷாபரிஷத், இலக்கிய சிந்தனை பரிசு) : ஆசிரியர் : ராஜம் கிருஷ்ணன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 68.00 )

கைத்தொழில் களஞ்சியம்: ஆசிரியர் : சூசை ராஜா, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 18.50)

விற்பனைக்கு எளிய வழிமுறைகள்:ஆங்கிலத்தில்: ஆரிசன் ஸ்வெட் மார்டன். தமிழில்: லயன் எம்.ஸ்ரீனிவாசன். வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம் (பக்கம்: 231. விலை: ரூ.90).

பொருளை விற்பவர் பல நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். பட்டப் படிப்புகள் பட்டயப் படிப்புகள் பல பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகின்றன. படித்து முடித்து விற்பனைத் துறைக்கு வருபவருக்கு எளிய வழிமுறைகளை எடுத்து இயம்புவது இந்நுõல். பேச்சு, விளக்கும் கலை, இனிய அணுகுமுறை, கவர்தல், உடை, நடை போன்ற இன்றியமையாத விஷயங்களைப் பற்றி உளவியல் அடிப்படையில் உதாரணங்களுடன் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் ஆசிரியர் வழங்கி உள்ளார்.தாய்மொழி தவிர்த்த வேற்று நாட்டவர் புத்தகங்களை படிப்பது இல்லை என்ற எண்ணத்தை விரட்ட வேண்டும். ஏனெனில், இந்நுõல் போன்ற மொழி பெயர்ப்பு நுõல்கள் விற்பவர் கையாளும் அணுகுமுறையால் எத்தனை எத்தனை நளினங்களை ஏற்படுத்தலாம்.நல்ல நுõல்! வரவேற்கப்பட வேண்டிய நுõல்.

சில்லறை வணிகர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்:ஆசிரியர்: எம்.ஆர்.ரகுநாதன், மணியன் பதிப்பகம் விலை ரூ.7

“ஆம்பூர் பிரியாணி, திருநெல்வேலி அல்வா’ ஆகிய பன்முகத் தன்மை அழிந்து ஒரு முகத்தன்மையாக பன்னாட்டு நிறுவனங்கள் வந்து கோலோச்சும் என்ற கருத்தைக் கொண்ட நுõல்.

ஒரு தொழிலாளியின் மூன்று தலைமுறைகள்:ஆசிரியர்: சிவப்பிரகாசம் (பக்கம்: 184, விலை ரூ.45)

அவ்வை சண்முகத்துடன் நாடக உலகில் பங்கேற்ற ஆசிரியர் இதில் கதைகளை எழுதியுள்ளார்.


தமிழ்மொழிமொழிபெயர்ப்பியல்:நுõலாசிரியர்: முனைவர் ச.ஈஸ்வரன். வெளியீடு: பாவை பப்ளிகேஷன் (பி) லிட் (பக்கம்: 130. விலை: ரூ.50).மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. சிந்தனையைத் துõண்டும் கலை. எனவே, மொழி பெயர்ப்புக் கலை பற்றிய உணர்வும், ஞானமும் நமது இன்றைய தேவை. ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். இப்புத்தகம் இந்த வகையில் பயனுள்ள பல தகவல்களை, வழிகாட்டுதல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள பல மேற்கோள்கள், சான்றுகள் பிரமாதமாக உள்ளன. இத்துறையில் இதுவரை வந்துள்ள நுõல்களின் வரிசையில் இப்புத்தகத்திற்கு தனி மரியாதையும் கவுரவமும் நிச்சயம் உண்டு.தமிழ் மண்ணே வணக்கம் :தொகுப்பு: த.செ.ஞானவேல். வெளியீடு: விகடன் பிரசுரம் (பக்கம்: 255. விலை: ரூ.95).
ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நுõல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது “தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் “ரியல் எஸ்டேட்’களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் துõண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நுõல். நல்ல முயற்சி.
பிரெஞ்சு ஆட்சியில் தமிழின் நிலை :நுõலாசிரியர்: செவாலியே பேராசிரியர் க.சச்சிதானந்தம். தமிழ்மணி பதிப்பகம், 127, ஈஸ்வரன் கோவில், தெரு, புதுச்சேரி605 001. (பக்கம்: 144. விலை: ரூ.60).
ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், தமிழின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி 36 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்து காட்டியிருக்கிறார்.”சொல்லதெழுதல்’ என்ற இலக்கணப் பயிற்சியை பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருந்தது (பக்.135). இதனால் தமிழ் மொழியில் செம்மை தென்பட்டது’ என்கிறார் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிப் பணியில் தமிழர்களோடு பிரெஞ்சு அரசாங்கத்தார் ஈடுபட்டது தெரிய வருகிறது. பிரெஞ்சிந்திய தமிழ் நிலைப் பள்ளி அறிய விழைபவருக்கு இந்நுõல் ஒரு விருந்து.

என் தமிழ் இயக்கம்7:ஆசிரியர்: முனைவர் இரா.திருமுருகன், ஏழிசைச் சூழல் (பக்கம்:181 விலை: ரூ.60.)

தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப்படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது.”இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?’ போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.

சில சந்திப்புகள்… சில பதிவுகள்…:ஆசிரியர்: நெல்லை சு.முத்து. வெளியீடு: ஐந்திணைப் பதிப்பகம் (பக் கம்:152 விலை: ரூ.70.)

சேர நாட்டு கேரளத்து மண்ணிலிருந்து செந்தமிழை வளர்க்கும் படைப்புகளைத் தரும், எழுத்தாளர் வரிசையில், இவரது நுõல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.அறிவியலில் தேசிய விருது பெற்ற ஆர்.வி.பெருமாள், ந.வேதாசலம் ஆகியோரைப் பற்றிய செய்திகள் அருமையானவை. சுவை தரும் தமிழ்க்கனி ரசக் கட்டுரைகள்!

அமுதசுரபி:(அறுபதாம் ஆண்டு தொடக்கச் சிறப்பிதழ்) விலை: ரூ.1000

தமிழறிஞர் ரா.பி. சேதுப் பிள்ளை சூட்டிய பெயர் அமுதசுரபி. இதழ் மட்டுமல்ல, இயக்கம்… என்ற கருத்தை வலுப்படுத்த அடுத்த 11 இதழ்களும் வெளிவரும் என்று ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் உறுதி கூறியிருக்கிறார்.

“இருண்மைக் கவிதைகள்’ பற்றி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கருத்து, “காயத்ரி மந்திரமே கண்’ என்ற ஈற்றடி கொண்ட வெண்பா போட்டியை தேர்வு செய்து கிரேசி மோகன் தன் மரபுக் கவிதை ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திரா பார்த்தசாரதி, ஜோதிர்லதா கிரிஜா என்று பல சிறப்பான படைப்புகளும் சிறப்பை சேர்க் கின்றன.

வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!:நுõலாசிரியர்: முனைவர் உலகநாயகி பழனி. வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பக்கம்: 122. விலை: ரூ.50).

மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநுõல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்.”ழ’ “ல’ “ள’ ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல “மிகை’யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நுõல்!

சொல்லாய்வுக் கட்டுரைகள் : ஆசிரியர்: இரா.மதிவாணன். வெளியீடு: திலகம் பதிப்பகம் (பக்கம்:191. விலை:ரூ.85)

பழந்தமிழ் சொற்கள் பண்டு தொட்டுத் திரிந்து, வளர்ச்சிப் பெற்று மருவி வழங்கும் நிலைகள் சிறப்பாக இதில் தெளிவாக்கப்பட்டுள்ளன. தமிழ்மொழி இலக்கண ஆய்வாளர்களுக்கு இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் உள்ளதாக அமையும்.

கலைச் சொல்லியல்:எழுதியவர்: டாக்டர் ராதா செல்லப்பன். வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட். (பக்கம்: 188. விலை: ரூ.70).

அறிவியலும் தொழில் நுட்பவியலும் நாளுக்கு நாள் அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. செல்வச் செழிப்பு மிக்க வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ரஷ்யா முதலிய நாடுகளில் மக்கள் தொழிற்கல்வியைத் தங்கள் தாய்மொழியில் அறிகின்றனர். தாய்மொழி வழிக் கற்பதால் தொழில் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளவும், ஆழமாகச் சிந்திக்கவும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடவும் அவர்களால் முடிகிறது.

இந்நுõலாசிரியர் அறிவியல் தொழிலியல் தமிழாக்க முறைகள், கலைச்சொல் ஒலி பெயர்ப்பியல் தோன்றும் சிக்கல்கள், வாக்கிய அமைப்பு முறைகள், அறிவியல், கலைச்சொல் உட்பட 12 தலைப்புகளில் மிக ஆழமாகவும், விரிவாகவும் இந்நுõலை எழுதியிருக்கிறார். நுõல்கள் அதிகமாக வெளிவராத குறை. அந்தக் குறையை நீக்க இதுபோன்ற நுõல்கள் இன்னும் அதிக அளவில் வரவேண்டும்.

தமிழ்க்கவிதைகளில் சந்த அமைப்பு வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார் சிறப்பாய்வு:நுõலாசிரியர்: டாக்டர் ஆலந்துõர் கோ.மோகனரங்கன். வெளியீடு: வசந்தா பதிப்பகம் (பக்கம்: 416. விலை: ரூ.150).

“”தமிழ் மொழிக்கு உயர்மொழி தரணியில் உண்டெனில், வெகுளியற்றிருப்போன் வெறுந்தமிழனே!” என்றும், “”மதுரத் தமிழை இகழ் தீயோர் மணிநா அறுத்துக் கனலில் இட” என்றும் பாடிய தண்டபாணி அடிகளாரின் பாடுபொருளாய் இறைவன், தமிழ், மனிதர், இயற்கை, புதுமை ஆகிய ஐந்து நிலைகளில் சந்தம் பாடியதை சிறப்புற ஆய்வு செய்துள்ளார் நுõலாசிரியர்.””சந்தங்களின் தோற்றமும் வளர்ச்சியும்”, “”தண்டபாணி அடிகளார் காலமும் சூழலும்”,””அடிகளார் பாடிய சந்தவகைகள்”, “”அடிகளார் பாடுபொருளும் சந்தங்களும்”, “”பாடல்களில் அழகு நலன்”, “”சந்தம் பாடுவோருள் அடிகளார் தனித்தன்மை’ என ஆறு இயல்களில் ஆய்வு செய்துள்ள நுõலாசிரியர் பாம்பன் சுவாமிகள் பாடியருளிய பாடல்களையும் ஒப்பு நோக்கியுள்ளது அருமை.””பண்ணில் ஓசை படித்தினில் இன்சுவை” என்னும் அப்பர் பாடலில் அறிமுகம் தொடங்கியுள்ளது. திறம்பட ஆய்வு செய்துள்ள ஆலந்துõர் மோகனரங்கத்தின் இத்தமிழ்ப்பணி, ஆய்வுப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு புதிய வழிகாட்டி இந்நுõலாகும்.

தமிழ் இலக்கண நுõல்கள் (மூலம் முழுவதும் குறிப்பு விளக்கங்களுடன்):பதிப்பாசிரியர்: முனைவர் ச.வே.சுப்பிர

மணியன். வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம் 608 001. (பக்கம்: 800. விலை: ரூ.400).

தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை நுõறு இலக்கண நுõல்களுக்கு மேல் தோன்றியுள்ளன. அவற்றில் 50 நுõல்கள் கடல்கோள்களாலும், கவனிப்பார் இல்லாமலும் மறைந்து விட்டன. இப்போது நமக்கு 50 நுõல்களுக்கு மேல் கிடைக்கின்றன. அவற்றைத் தொகுத்துத் தந்தால், தமிழ் மொழி வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும் என்ற நல்ல எண்ணத்தில் நுõலாசிரியர் ச.வே.சு., கடந்த 40 ஆண்டுகளாக மிகுந்த ஈடுபாட்டுடன் இந்நுõலைத் தயாரித்து அளித்துள்ளார். இந்நுõல் 49 இலக்கண நுõல்களை உள்ளடக்கியது. தமிழனின் இலக்கணப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் ஏற்றம் மிகக் கொண்ட தொல்காப்பியம் முதல் இருபதாம் நுõற்றாண்டில் வெளிவந்த விருத்தப்பாவியல் உட்பட அனைத்து இலக்கணங்களும் ஒரே தொகுப்பில் ஒரே இடத்தில் காணும் நிலை இத்தகைய தொகுப்பு. இதுவரை தமிழ் இலக்கண உலகில் வந்ததில்லை. இந்நுõல் புது வரவு புத்தம் புது வரவு. செம்மொழியாம் தமிழுக்கு பெருமை சேர்க்கும் பெருமை மிகு நுõல்.இந்நுõலை வெளியிட பதிப்பகத்தாருக்கு உலகத் தமிழர்கள் நன்றி கூற வேண்டும்.

மெய்யப்பன் தமிழ் அகராதி:பதிப்பாசிரியர்: முனைவர் ச.வே.சுப்பிரமணியன். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம் (பக்கம்: 1120. விலை: ரூ.225).

இவ்வகராதியில் “அரி’ என்ற சொல்லுக்கு 130 பொருட்கள் தரப் பட்டுள்ளன.பண்பாட்டு அடிப்படையில் இவ்வகராதி அமைக்கப் பெற்றுள்ளது. 63 நாயன்மார்களும், 64 கலைகளின் பெயர்களும் தரப் பெற்றுள்ளன.இந்த அகராதிக்கு பெரும்பான்மையான அடிப்படையாக அமைந்தது மு.சண்முகம் பிள்ளையின் தமிழ் தமிழ் அகர முதலி தற்காலத் தமிழ் அகராதிகள் பலவும் பார்க்கப் பெற்றுள்ளன.தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பும் நுõல்.

தமிழிசை ஆய்வு மாலை:நுõலாசிரியர்: முனைவர் இரா.ஜெகதீசன். முனைவர்: தி. சுரேஷ், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக் கல்வி அறக்கட்டளை, மதுரை. (பக்கம்: 196. விலை: ரூ.100).

தமிழிலக்கிய காலவெளியில் இலக்கிய அறிஞர்கள், ஆய்வாளர்கள் பண்ணிசையில் ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த மூன்றாண்டுகளாக மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தார் தொடர்ந்தார் போல் பல்வேறு இலக்கியப் பண்ணிசை ஆய்வாளர்களை வைத்து ஆய்வுக் கருத்தரங்கம் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் மூன்றாம் ஆண்டுக் கருத்தரங்கத்தில் வாசித்தளிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுõலே இந்நுõல். இதை முனைவர்கள் முறையே இரா.ஜெகதீசன், தி.சுரேஷ் போன்றோர் பதிப்பித்துள்ளனர். “கலித்தொகையில் உயிரினங்களின் வழி இசைக் குறிப்புகள்’ எனத் துவங்கி “தேவாரத்தில் பண் இசைத்த ஓவியங்கள்’ என 41 தலைப்புகளில் இந்நுõல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. துறை சார்ந்த முனைவர்களாலும், ஆய்வு மாணவர்களாலும் வாசித்தளிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பு இன்றைய நுõற்றாண்டின் தேவைக்கு ஏற்ப அமைந்திருப்பது ஒரு சிறப்பு. காப்பியங்களில் இசை, திருமுறைகளில் இசை, சங்கத் தமிழில் இசை எனக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.பண்ணாராய்ச்சி மட்டுமல்லாது இசைக் கருவிகள் இசையின் கால அளவு, நாடகங்களின் இசை எனக் குறிப்பிட்டு பலர் ஆய்வு செய்துள்ளனர். இறுக்கத்தைக் குறைக்கும் இசை (பக்.41), நாட்டுப்புறப் பாடல்களில் மரபிசை ஊடாடி இருக்கிறது (பக்.51), சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இந்துஸ்தானி இசையின் தாக்கம் இருந்தது (பக்.101), கல்வெட்டு சிற்பங்களில் கூட இசை ஒலிக்கிறது என்பதை “எட்டிற்கும் ஏழிற்கும் இவை உரிய’ என்ற குடுமியாமலைக் கல்வெட்டுச் செய்தியை (பக்.180) உறுதி செய்கிற ஆய்வுக் கட்டுரை ஒரு புதிய கோணத்தில் அமைந்துள்ளது. மொத்தத்தில் அனைத்து இசைவாணர்களும் படித்துணர வேண்டிய ஒரு அற்புதமான நுõல். இது ஒரு ஆவணம். எனவே நல்ல தாளில் கட்டமைப்போடு தயாரித்திருக்கலாமே.

தமிழ் ஈழம் ஏன்? (விலை: ரூ. 20) தமிழால் உயர்வோம் ( விலை குறிப்பிடவில்லை)மேற்கண்ட இருநுõல்களும் கிடைக்குமிடம்தாயகம்.

வினைச்சொல் அகராதி ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ்:ஆசிரியர்: குமார், ராம்ஜி பப்ளிகேஷன், 26/ஏ, 4வது குறுக்குத் தெரு, தாகூர் நகர், புதுச்சேரி 8. விலை: ரூ.250. பக்கங்கள்: 204.

ஆங்கிலத்தில் பேசினால் குற்றம் ஏற்பட்டு விடுமோ என்ற தாழ்வு மனப்பான்மை பலரை முன்னேற விடாமல் தடுத்து விடுகிறது. அத் தகையவர்களின் அச்சத் தைப் போக்கி ஆங்கிலத்தில் நன்கு எழுத, சரளமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே வினைச்சொல் அகராதி என்ற நுõல்.

அகராதி வரலாற்றில் இந்நுõல் முற்றிலும் புதுமையான முயற்சி.வழக்கமாக அகராதிகள் பெயர்ச் சொற்களுக்குப் பொருள் கூறும் தன்மை கொண்டவை. ஆனால் அவற்றில் இருந்து மாறி வினைச் சொற்களுக்குப் பொருள் கூறும் தனி சிறப்பு பெற்ற அகராதியாக இந்நுõல் அமைக்கப்பட்டுள்ளது.இந்த அகராதியில் வினைச் சொற்களுக்கு ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் என்ற அமைப்பில் பொருள் தரப்பட்டுள்ளது. இதில் 5076 சொற்களுக்கு பொருள் கூறப்பட்டுள்ளன. வினைச் சொற்கள் இல்லாமல் எந்த ஒரு அர்த்தமுள்ள வாக்கியத்தையும் உருவாக்க முடியாது. மேலும் பெயர்ச்சொல், உரித்தான பெயர்ச்சொல், பெயரெச்சம், வினையெச்சம், தொழிற்பெயர் போன்றவை வினைச் சொல்களிலிருந்து தான் உருவாக்கப்படுகிறது.இந்நுõலில் உள்ள வினைச் சொற்களைக் கொண்டு சிறுசிறு வாக்கியங்கள் அமைத்து, நாம் எளிதில் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.ஆங்கிலம் அறிவு பெற நினைக்கும் மாணவர்கள் மற்றும் நுõலகங்களில் அவசியம் இருக்க வேண்டிய நல்ல நுõல்.


வாழ்க்கை வரலாறு1 2மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்:நுõலாசிரியர்: அறந்தை மணியன். வெளியீடு: அநுராகம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 64. விலை: ரூ.25).மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அதன் நிறுவனர் திரையுலகிற்கு செய்த சேவை மறக்க முடியாத ஒன்று.அறந்தை மணியன் ஒவ்வொரு தகவல்களாக திரட்டி சிறிய புத்தகத்தில் பெரிய சரித்திரத்தை குறையின்றி சொல்லியுள்ளார்.எவ்வளவு பேர் புழங்கிய அந்த இடம் இன்று குடியிருப்புகளாகி உள்ளதை படிக்கையில் மனம் வேதனைப்படுகிறது.அன்னை தெரேசா : ஆசிரியர் : ஞா .யாக்கோபு வெளியீடு : கவிதா பப்ளிகேஷன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் :வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .( விலை :ரூ 150 )
பலரது பார்வையில் கண்ணதாசன் :வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .( விலை :ரூ 60 )
கணிதமேதை சீனிவாச ராமானுஜம் :வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .( விலை :ரூ 70 )
எனது வசந்த காலங்கள் : ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன் , கண்ணதாசன் பதிப்பகம் , .
எனது சுய சரிதம் : ஆசிரியர் : கவிஞர் கண்ணதாசன் , கண்ணதாசன் பதிப்பகம் , .
நெப்போலியன் ஹில் : வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .
உலகப் பேரழகி நுõர்ஜஹான்!:ஆசிரியர்: சி.நடராசன், வெளியிட்டோர்: நேதாஜி பிரசுரம், 56/92, அகிம்சாபுரம் 7வது தெரு, செல்லுõர், மதுரை2. விலை: ரூ.64, பக். 224.

பழைய வரலாறுகளைப் படிப்பதால், நிறைய விஷயங்களை அறிந்து கொள்வதோடு, ஒரு நாட்டின் வரலாற்றை புரட்டிப்போட்ட சம்பவங்களையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று நாயகர்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் வாழ்க்கை பாதையில் சந்தித்த இன்னல்களும், அதை அவர்கள் சமாளித்த விதமும், நமக்கு நல்ல பாடமாக அமைந்து, நம் பாதையை செம்மைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.இந்நுõலில், 26 தலைப்புகளில் பாபர், அக்பர், சத்ரபதி சிவாஜி, நுõர்ஜஹான் முதல் நேரு, படேல், ராஜாஜி, காமராஜர் என பல தலைவர்களைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை தொகுத்தளித்துள்ளார் நுõலாசிரியர்.

நெல்சன் மண்டேலா:நுõலாசிரியர்: தா.பாண்டியன். வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்து கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 256. விலை: ரூ.100).

தென் ஆப்ரிக்க விடுதலைக்குப் போராடிச் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவின் வரலாற்றைத் தெரிவிக்கிறது இந்நுõல். உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த தலைவராக விளங்கும் நெல்சன் மண்டேலாவைப் பின்பற்றத் தக்க பண்புகள் இந்நுõலில் வெளியிடப்பட்டிருக்கின்றன.நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிலாலா என்பது தான். அவர் படித்த பள்ளியின் ஆசிரியர் தான் அவருக்கு நெல்சன் மண்டேலா எனப் பெயர் சூட்டியுள்ளார். மண்டேலாவின் தந்தையாரின் மறைவுக்குப் பிறகு அவர் தெம்புப் பகுதியின் அரசப்பிரதிநிதியின் வீட்டில் வளர்ப்பு மகனாக வளர்ந்தது, அவரது கல்லுõரிக் கல்வி, போராட்ட வாழ்க்கை அனைத்தையும் இந்த நுõல் தெரிவிக்கிறது.எளிய நடையில் இந்த நுõல் எழுதப்பட்டிருப்பதால் அனைவரையும் படிக்கத் துõண்டும்.

ஜெயகாந்தன் ஒரு பார்வை: நுõலாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் ; வெளியீடு: கவிதா பப்ளிகேஷன், . (விலை: ரூ.150).
முஹம்மத் நபி:நுõலாசிரியர்: டாக்டர் இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ. தமிழாக்கம்: மவுல்வி அப்துல் ஹமீத் ஆமிர் உமரீ. வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை12. (பக்கம்: 463. விலை: ரூ.150).

முகம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை 14 அத்தியாயங்களில் இந்த நுõல் விரிவாகக் கூறுகிறது. திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் தகவல் களஞ்சியமாக இந்நுõல் விளங்குகிறது. முகம்மது நபி தமது 63வது வயதில் காலமானார் என்றும், அவர் காய்ச்சலினால் காலமானார் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு மொழிபெயர்ப்பு நுõல் என்னும் எண்ணம் தோன்றாத அளவுக்கு இந்த நுõல் எளிமையாக அமைந்துள்ளது இதன் சிறப்பு.

பெருந்தலைவர் 100 பெருகி வந்த பெருமைகள்:தொகுப்பாசிரியர்: சபீதா ஜோசப், வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 128. விலை: ரூ.60).

பண்புயர படிக்க வேண்டிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில், காமராஜர் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்.அவரது இனிய சமூக தேசிய வாழ்வில் இனிமையான 100 தகவல்கள், செய்திகள், நிகழ்ச்சிகள் இந்நுõலில் இடம் பெறுகின்றன. திருமணம் செய்யாதது ஏன்? (பக்.15), மதிப்பு கொடுப்பவர் (பக்.17), ஆகட்டும் பார்க்கலாம் (பக்.19), வாடகை வீட்டில் இருந்தவர் (பக்.49), இலவசக் கல்வி (பக்.98), ஏன் வரி போடுகிறேன் (பக்.108) போன்றவை சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்.வாசகர்கள் ஒருமுறை படித்து நிறுத்த மாட்டார்கள். ஒன்று இரண்டு சம்பவங்களை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளாமலும் இருக்க மாட்டார்கள்.

நெப்போலியன் வாழ்வில்…:நுõலாசிரியர்: செவல்குளம் ஆச்சா. வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, “ஜே’ பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை40. (பக்கம்: 42. விலை: ரூ.30).

நெப்போலியன் இளமைப் பருவம், ராணுவப் பணி, இல்லற வாழ்வு, அரசியல் சாணக்கியம், நீதி நிர்வாகம், பண்பு நலன்கள், ஆற்றிய பணிகள், தோல்வி ஏன்? கடைசி நாட்கள், அவர் ஒரு சகாப்தம் என சுவையாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஒரு புரட்சியாளர்:ஆசிரியர் முனைவர் ம.போ.குருசாமி, வெளியீடு: காந்திய இலக்கிய சங்கம், காந்தி மியூசிய வளாகம், மதுரை 625020.(பக்கம் 136; விலை ரூ.50 )

கர்ம யோகியாக வாழ்ந்த காந்தி கொள்கைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

உமார் கயாம்:நுõலாசிரியர்: நாரா நாச்சியப்பன். வெளியீடு: பிரேமா பிரசுரம், ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை24. (பக்கம்: 368. விலை: ரூ.78).

“ஒரு கோப்பையிலே என் குடி இருக்கும் எனத் தோன்றியவர் உமார் கயாம். தொடர்ந்தவர்கள் கண்ணதாசன், ஹரிவன்ஷ்ராய் பச்சன், கணிதம், ஜோதிடம், வானியல் என்றவற்றில் சிறந்தோங்கியவர் உமார். இவர் வரலாறு நாவலாக தவழ்ந்துள்ளது. ஒரு முறை படிக்கலாம்.

மகாகவி இக்பால்:நுõலாசிரியர்: ஆர்.பி.எம்.கனி. வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி) (பக்கம்: 208. விலை: ரூ.90).

“சாரே ஜகான் சே அச்சா’ எனத் தொடங்கும் இந்திய தேசியப் பாடலை எழுதிய இக்பாலின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறது இந்நுõல். மகாகவி எனப் போற்றப்படும் இக்பாலின் கவிதைகள் பலவற்றை அப்படியே மொழிபெயர்த்துத் தந்துள்ளது சிறப்பு.இக்பால் கேம்பிரிட்ஜில் படித்தவர் என்பதும் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதும் பலருக்குப் புதிய செய்திகள் ஆகும். எல்லாச் சமயங்களையும் பொதுமைப்படுத்தி இக்பால் பாடிய கவிதை ஒன்று.நான் கோவிலுக்கு மரியாதை செய்கிறேன் கஃபாவின் முன் அடி பணிகிறேன் என் மார்பில் பூணுõல் உண்டுஎன் கையில் ஜெபமாலை மிளிர்கிறதுஎன்று இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய மூன்று மத ஒருமையைப் பாடியுள்ளார்.

நான்:நுõலாசிரியர்: இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன். வெளியீடு: வேங்கடம் பதிப்பகம், 12, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், மதுரவாயல், சென்னை600 095. (பக்கம்: 400. விலை: ரூ.90).
கோவி. மணிசேகரன் நாடறிந்த சிறந்த எழுத்தாளர். இசைக் கலையில் வல்லவர். வட மொழியிலும், ஆங்கிலத்திலும், பண்டைத் தமிழ்ப் பண்பாட்டிலும், ஆழ்ந்த பயிற்சி உடையவர். இவர் 800 சிறுகதைகளையும், 100 உரைநடைக் காப்பியங்களையும் எழுதியவர். இத்தனைச் சிறப்புக்களையும் பெற்ற இவர் தான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கிறார், புதுக் கவிதை வடிவில்! மொழி அழகுக்காகவும், கருத்துச் செறிவுக்காகவும் படித்து இன்புற வேண்டிய வரலாற்றுக் கவிதை நுõல்.
சிந்தித்தனர் சாதித்தனர் (101அறிஞர்களின் சாதனை வாழ்க்கைக் குறிப்புகள்): ஆசிரியர் : ஜி.ஜி.ஆர்., வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 65.00)

நோபில் வென்ற இந்தியர்: ஆசிரியர் : ஜா.சுஜாதா, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 30.00)
ஸ்டீபன் ஹாக்கிங் :ஆசிரியர்: ஜி.அழகர் ராமானுஜம், வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்துõர்641 001. போன்: 0422239 9614 / 238 2614. (பக்கம்: 104, விலை: ரூ.30).
நம்பிக்கை உழைப்பு பிறர் மனதைப் புண்படுத்தாத மன வலிமை இவற்றோடு வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு, முன் நிற்கும் ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை மற்றும் அவரது ஆய்வு முடிவுகளை, உரசி பார்க்கும் விஞ்ஞான மெய்ஞான நுõல் இது.உடல் தேடுவது இரை; மனம் தேடுவது இறை (பக்: 20), நொறுங்கிய பின்பும் நிமிர்ந்து நிற்றல் (பக்: 45), கடவுளை நோக்கிதான் தத்துவமும் விஞ்ஞானமும் செல்கிறது (பக்: 51), கட்டிய மனைவி பக்கம் இருப்பின் வெற்றி (பக்: 65), முழுமையைத் தேடுகின்றவருக்கு முரண்பாடான மனைவி (பக்: 80) என்ற பல இடங்கள் சுவாரஸ்யமானவை.

மாபெரும் புரட்சியாளர் மாசேதுங்:நுõலாசிரியர்: எம்.ஏ.பழனியப்பன். வெளியீடு: ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பழைய எண்.24, கிருஷ்ணா தெரு (பக்கம்: 128. விலை: ரூ.45).
சீனப் புரட்சியின் தந்தையான மாசேதுங், சீனாவின் மாபெரும் தலைவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்கு மகத்தானது. அவரது வாழ்க்கை வரலாறு மிக அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. படித்துப் பயன் பெறலாம்.

சச்சின் நம்பர் 1 : வெளியீடு : ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன்ஸ், சென்னை. (விலை : 75.00)

வாழும்போதே ஒரு வரலாறானவர்கள் அரிதினும் அரிது. அவ்வவகையில் உலகிலேயே மிக அரியதொரு கிரிக்கெட் வீரராகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் வரலாறு.

மக்கள் நாயகன் அப்துல் கலாமுக்கு சலாம் : வெளியீடு : ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன்ஸ், சென்னை. (விலை : 65.00)

இந்திய அறிவியல் இளைஞர்களின் லட்சிய கனவு நாயகனாக விளங்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு இந்த மணமிக்க மலர் ஒரு இனிய காணிக்கை.

தலைவர்கள் காட்டிய வழி : ஆசிரியர் : டாக்டர். கே.என். சரஸ்வதி, வெளியீடு : ஜெய்ஷங்கர் பப்ளிகேஷன்ஸ், சென்னை. (விலை : 40.00)

காந்தி, நேரு, காமராஜ், அண்ணா ஆகிய தலைவர்கள் பற்றிய தொகுப்பு

அம்பானி சகோதரர்கள்:ஆசிரியர்; ஆலம் ஸ்ரீனிவாஸ் (ஆங்கிலம்) தமிழில் சுசி.திருஞானம். வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை17. (பக்கம்:216. விலை:ரூ.87).

குருநிலப் போர் மண்ணிற்காக, ரிலையன்ஸ் குரூப் போர் சொத்திற்காக திருபாய் அம்பானியின் திருக்குமாரர்கள் முகேஷ், அனில் இடையே மூண்ட சொத்து அதிகார பிரச்னை உலகளவிலே பேசப்பட்ட ஒன்று. ஆங்கிலப் பத்திரிகையில் தொடர்ச்சியாக செய்தியாளர் ஆலம் ஸ்ரீனிவாஸ் எழுதியவை ஒன்பது தலைப்புகளில் இந்நுõலில் தொகுக்கப்பட்டுள்ளது.நவம்பர் 2004ல் இருந்து ஜூன் 2005 வரை நடந்த ஒரு லட்சம் கோடி ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜிய உரிமைப் போர் எத்தனை எத்தனை கோடி மக்களின் வாழ்க்கைப் பிரச்னைக்கு கேள்விக்குறியானது என்பதை படம் பிடிக்கிறது. படிப்படியாக உண்மையை உடனுக்குடன் கண்டறிந்து தெரிவிக்க ஆசிரியர் பட்ட பாடு உண்மை வெளிப்பாடு. தனிப்பட்ட குடும்ப விஷயம் என விட்டுவிட முடியாமல், அரசியல், தேசிய பொருளாதார நல்லெண்ணம் கொண்டவர்கள் உட்பட பலர் தலையிட்டு சுமுக முடிவு வெளிப்பட்டதை பக்கத்திற்கு பக்கம் சுவைபட எழுதுகிறார் ஆசிரியர். “தி பாலியஸ்டர் ப்ரின்ஸ்’ திருபாய் அம்பானியின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு (பக் 175195) வளரத் துடிக்கும் இளைய சமுதாயத்திற்கு நற்பாடம்! வழிகாட்டி.
வியத்நாமின் வீரப்புதல்வன் ஹோ சி மின் :எழுதியவர்: எம்.ஏ.பழனியப்பன், வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பழைய எண் 24, கிருஷ்ணா தெரு (பக்கம்:டெமி128. விலை:ரூ.45).
பிரெஞ்சு, ஜப்பான், அமெரிக்க ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஒரு சின்னஞ்சிறு நாடான வியட்நாம் போராடி வெற்றி வாகை சூடியதற்குக் காரணம் ஆசியப் புரட்சியின் தலைவர் என்று கருதப்படும் ஹோசி மின். மாபெரும் புரட்சியாளரான இவரது வாழ்க்கை வெளிச்சத்திற்கு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. அந்தக் குறையைப் போக்கும் வண்ணம் அப்பெரும் புரட்சியாளரின் புரட்சிகரமான வாழ்க்கையைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
எம்.எஸ்., வாழ்வே சங்கீதம்:நுõலாசிரியர்: வீயெஸ்வி. வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, 2வது தளம், எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை600 018. (பக்கம்: 144. விலை: ரூ.60).
“பாடுவது என்பது ஒன்று. பாடும்போது தன்னையே மறந்து கடவுளிடம் கரைந்து விடுவது என்பது வேறு. சுப்புலட்சுமி இதில் இரண்டாம் ரகம்’ என்று காந்தியாலும் (49), “இந்த இசை அரசிக்கு முன்னால் நான் ஒரு சாதாரண பிரதம மந்திரி தானே’ என்று நேருவாலும் (பக்.67), “சுப்புலட்சுமி, பிருந்தாவனத்து துளசி மாதிரி’ என்று காஞ்சிப் பெரியவராலும் (89) பரிபூரண ஆசி பெற்ற சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை சுவையான சம்பவங்களுடன் சுவராஸ்யமாகப் படைத்துள்ளார் வீயெஸ்வி.தொழு நோயால் சுப்ரமணிய சிவா பாதிக்கப்பட்டபோது அவருக்கு ஆறு மாத சேவகம் செய்த துணிச்சல் மிக்க தன் கணவர் சதாசிவம் பற்றி, “எனக்கு எதுவுமே தெரியாது. உங்களை மாதிரி நானும் ஒரு குழந்தையாத் தான் இன்னமும் இருக்கேன். நான் எங்கே போகணும், என்ன பண்ணனும்னு என்னுடைய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்துக்கிட்டது மாமா தான். பாடறப்போ லயிச்சுப் பாடணும்னா அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சு பாடணும்னு எனக்குச் சொல்லித் தந்ததும் கூட அவர் தான்…’ (39).”மீரா’ புகழ் நடிகையான இவர் தான் இந்தியாவின் முதல் பத்மபூஷண் பெற்ற பெண்மணி, மியூசிக் அகடமியில் முதல் கச்சேரி செய்த பெண்மணி, ஐ.நா., சபையில் ஒலித்த கவிக்குயில். கணவனே கண்கண்ட தெய்வமாக வாழ்ந்த இந்த இசையரசி பற்றிய நுõலின் இறுதியில், “சிம்மம் அடங்கிவிட்டது. அதைத் தொடர்ந்து குயிலும் கூட்டுக்குள் ஒடுங்கிவிட்டது’ (131) என்னும் வரிகள் நம்மையும் அறியாமல் நம் கண்களைக் கலங்கச் செய்துவிடும். இசை மீது எம்.எஸ்.,க்கு எவ்வளவு பக்தியோ அந்த அளவு எம்.எஸ்., மீது தமக்கு பக்தி உள்ளது என்பதை வீயெஸ்வி இந்நுõல் வாயிலாக உணர்த்தியுள்ளார். நேர்த்தியான நடை, நிறைவான படைப்பு.
சங்கீத சக்ரவர்த்தி ஜி.ராமநாதன்:நுõலாசிரியர்: கலைமாமணி வாமனன். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை108. (பக்கம்: 304. விலை: ரூ.100).
நாற்பதுகளின் தொடக்கத்திலிருந்து அறுபத்து மூன்று ஆண்டு வரை திரையில் கர்நாடக இசையை மக்கள் இசையாக ஆக்கிய சங்கீத மேதையாக சங்கீத முடிசூடா மன்னராக விளங்கியவர் ஜி.ராமநாதன்.ஆர்யமாலா, உத்தமபுத்திரன், சிவகவி, ஹரிதாஸ் படங்கள் முதல் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் முதலிய நுõற்றுக்கணக்கான படங்களில் நல்ல கருத்துப் பாடல்களுக்கு நாத சுகம் தந்த இசைநாயகர் ஜி.ராமநாதன் குறித்து கலைமாமணி வாமனன் இந்த அற்புத வரலாற்று நுõலை எழுதியுள்ளார். பத்தாண்டுகளுக்கு மேல் தகவல்கள் பல சேகரித்து தரமான வரலாற்று நுõலாக வடித்துள்ளார்.சென்ற தலைமுறையின் மேதைகளை இனம் காட்டும் நல்ல முயற்சியாக இந்நுõல் எழுதியது பெரிதும் பாராட்டுக் குரிய நன் முயற்சி.
நவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர் : வெளியீடு : ஸ்ரீ அன்னை மீனாக்ஷீ பப்ளிகேஷன், சென்னை. (விலை :50.00)
ஸ்ரீ ராமகிருஷ்ணர், வீரத் துறவி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறறில், இதுவரை வெளிச்சத்துக்கு அதிகமாக வராத சில அற்புதங்களின் தொகுப்பு இது. ஒரு பகுத்தறிவு பிளம்பு, ஒரு ஞானப் பழமாக முதிர்ந்தவரின் நெஞ்சுறுக்கும் சில சம்பவங்கள் இதோ!.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்:ஆசிரியர்: மதிஒளி, கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்துõர், சென்னை600016. (பக்கம்: 100. விலை: ரூ.30) தொலைபேசி:22310805
சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு மறைக்கப்பட்டது என்ற கருத்து மேலோங்கி வரும்போது, சிறுவ, சிறுமியர் அறிந்து கொள்ள மதிஒளி சரஸ்வதி இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார். தேசபக்தியும் தெய்வபக்தியும் ஒன்று. ருஷ்யாவிற்கு அவர் தப்பிய விதம் அழகுறச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நல்ல நுõல்.

நபிகள் நாயகம்:ஆசிரியர்: எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம், வெளியீடு: யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2.வடக்கு உஸ்மான் சாலை. முதல்மாடி, தியாகராய நகர், சென்னை600017.
இறைத்துõதர் புகழ் மிகவும் நுணுக்கம் வாய்ந்தது. இஸ்லாமியக் காவியமாக இந்த நுõல் மலர்ந்திருக்கிறது. முன்னுரையில் சிலம்பொலி செல்லப்பன் கூறியது போல “தமிழுள்ள தமிழ்’ படைப்பாக மலர்ந்திருக்கிறது.

வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்:நுõலாசிரியர்: எஸ்.வி.ராமகிருஷ்ணன். வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை18. தொலைபேசி எண். 0442499 3448. (பக்கம்: 112. விலை: ரூ.65).
அரசாங்கத்தின் உயர்ந்த பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர், தம் இளம் பிராயத்தில் சந்தித்த, ரசித்த தெளிவுபெற நினைத்த பல விஷயங்களை 29 கட்டுரைகளாக இந்நுõலில் தொகுத்துள்ளார்.மவுன்ட்பேட்டன் சரியாக இரவு 11.58 மணிக்கு 14.08.1947 அன்று வெகு நாட்களாக நிலுவையில் வைத்திருந்த பாலன்பூர் நவாப் குறித்த மனுவை அனுமதித்துக் கையொப்பம் இட்டது (பக்.35) மிகவும் ரசிக்கத் தக்கதாக உள்ளது.அப்பா வக்கீலாக இருந்ததால் கிடைத்த மரியாதை (பக். 23), அக்பர் கங்கா ஜலம் மட்டுமே பருகி வந்தது (பக். 26), குடும்பத் தலைவனின் குறிப்புகள் (பக்.102) ஆகியவை வாசகர்களை வசீகரிக்கும்.
எம்.ஜி.ஆர்., ஒரு சகாப்தம்:ஆசிரியர்: கே.பி.ராமகிருஷ்ணன், எழுத்தாக்கம்: எஸ்.ரஜத், வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2.
“இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!’

எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல் வரிகள் இவை. அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து, அவர்களது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.எம்.ஜி.ஆர்., பற்றியும், அவரது வள்ளல் தன்மையையும், அவரது திறமைகளைப் பற்றியும் எத்தனையோ பேர், எத்தனையோ புத்தகங்கள் எழுதினாலும், படிக்கப் படிக்க திகட்டாதவை அவை. இதில், லேட்டஸ்ட் வரவான இந்த புத்தகத்தில், இதுவரை கேள்விப்படாத பல சுவையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதற்கு பக்கபலமாக வெளியாகியுள்ள அபூர்வ புகைப்படங்களும், புத்தகத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது!கே.பி.ராமகிருஷ்ணன், தன் நினைவு பெட்டகத்திலிருந்து கூறிய விஷயங்களை எளிய நடையில் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் தொகுத்தளித்துள்ளார் எஸ்.ரஜத்.தினமலர் வாரமலர் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுõலான இது, எம்.ஜி.ஆரை பற்றி அறிந்து கொள்ள உதவும் நுõல்களில் முன்னுரிமை பெறும் என்பது நிச்சயம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் *கோபால கிருஷ்ண கோகலே * பண்டித ஜவகர்லால் நேரு *சர்தார் வல்லபாய் படேல் *மூதறிஞர் ராஜாஜி *கவிக்குயில் சரோஜினி தேவியார் *வினோபா பாவே*லால்பகதுõர் சாஸ்திரி( ஒவ்வொரு புத்தகத்தின் விலை ரூ.25)வெளியீடு : சுரா புக்ஸ் (பிரைவேட் லிமிடெட்)1620, ஜெ., பிளாக் 16 வது மெயின் ரோடு, அண்ணா நகர். சென்னை600040.
இணையற்ற இந்தியத் தலைவர்கள் என்ற தலைப்பில் இந்த நுõல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. சிறந்த அச்சு, எளிமையான நடையில் சிறப்பாகத் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இராமலிங்க அடிகள் வரலாறு:நுõலாசிரியர்: ஊரன் அடிகள். வெளியீடு: சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், த.பெ.எண்.2, வடலுõர்607 303. கடலுõர் மாவட்டம். (பக்கம்: 720. விலை: ரூ.330).
அருட்பெருஞ்ஜோதியான வள்ளலாரின் வரலாற்றை, சன்மார்க்க தேசிகன் ஊரன் அடிகள் எழுதி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியிருக்கிறார். அடிகளார், தம்மை முழுவதுமாக சன்மார்க்க நெறிக்கும், அதன் அருமை பெருமைகளை உலகிற்கு உணர்த்தவும் ஈடுபடுத்திக் கொண்டவர். வள்ளலார் சுவாமிகளைப் பற்றி இவரைத் தவிர வேறு யாரால் மற்றவர்கள் புரிந்து கொள்ளத்தக்க வகையில் எடுத்துச் சொல்ல முடியும்? இந்த நுõல் எழுத முன்மாதிரியாக அவர் எடுத்துக் கொண்ட நுõல் பட்டியலில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வும், யாழ்ப்பாணத்து நல்லுõர் ஆறுமுக நாவலரும் என்று கூறியிருக்கிறார். இந்த இரு பெரும் அறிஞர்கள் தமிழுலகம் நன்கறிந்த மேதைகள்.இராமலிங்க அடிகள் எளிய குடும்பத்தில் பிறந்த உயர்ந்த ஆன்மிகவாதி. தெளிந்த சிந்தனை வழிப் பிறந்த துõய்மையான ஆன்மிகக் கருத்துக்கள், “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்’ என்ற பாரதியின் ஆவேசமும், “இடும்பை கூர் என் வயிறே’ என்ற அவ்வையின் எதிர்மறை ஓலமும் வள்ளல் இராமலிங்க அடிகளாரை எப்படி சிந்திக்க வைத்திருக்கும் என்பதற்கு “அணையாத அடுப்பு’ என்ற இரு சொற்களே போதுமல்லவா?திருவள்ளுவரின் “கொல்லாமை’ அதிகாரமும், சமண மதத்தின் ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற தத்துவமும், வள்ளல் பெருமானிடம் ஜீவகாருண்யமாக மலர்ந்து ஒளிர்வதை, அடிகளார் நமக்குத் தெளிவாகச் சொல்கிறார். சன்மார்க்கங்கள் உலகெங்கும் பல உண்டு. ஆனால், சமரச சன்மார்க்கம் என்றால் அந்த வடலுõரில் மட்டும் தான் உள்ளது.வள்ளலார் ஞானியா, யோகியா, சித்தரா, முனிவரா ஆன்மிகம் பேசும் பவுராணிகரா, கவிஞரா, சமூகப் பிரக்ஞை உள்ள ஆன்மிகச் சீர்திருத்தவாதியா எனப் பலவாறாக நம்மை சிந்திக்கத் துõண்டும் இந்த வரலாற்றுப் பதிவுகளை வாசிக்கிறோம். வரலாறு என்றால் தோற்றம் முதல் முக்தி வரை சொல்ல வேண்டுமல்லவா? வள்ளல் பெருமானாரின் “முக்தி’ என்பது ஜோதியுடன் கலந்து கரைந்து போய்விடுவதாக முடிகிறது. இந்தத் தகவலை ஆதாரப்பூர்வமாக, அதிகாரப்பூர்வமாக அடிகளார் இந்த நுõலில் பதிவு செய்திருக்கிறார்.வள்ளல் பெருமானாரின் குடும்பம், ராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறத்தை நினைவுபடுத்தும் இல்லற துறவறம், அவர் சென்று வணங்கிய இறைத் தலங்கள், ஆழ்ந்த சிந்தனைகளின் பலனாக அவருள் நிகழும் வியக்கத்தகு தெய்வ நம்பிக்கைகள், ஏற்றுக் கொண்ட பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்ய அவர் எதிர்கொண்ட சிரமங்கள்… என வரலாறு கங்கை நதியென பொங்கிப் பிரவாகமெடுத்துச் செல்கிறது.இந்த மூன்றாம் பதிப்பு, 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது. அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்துக்கு இந்த நுõலை அர்ப்பணம் செய்திருக்கிறார் அடிகள்.ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை ஊரன் அடிகள் செய்து முடித்திருக்கிறார். தமிழுக்கு கிடைத்த அரிய வழிகாட்டி நுõல்.
வ.வே.சு. அய்யர் : ( ஒரு புத்தகத்தின் விலை: ரூ.25)வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட் லிமிடேட்), 1620,ஜெ., பிளாக் 16 வது மெயின்ரோடு, அண்ணாநகர். சென்னை.600 040.
இணையற்ற இந்தியத் தலைவர்கள் என்ற வரிசைத் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சிறந்த அச்சு, எளிமையான நடையில் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இராஜேந்திர பிரசாத் : ( ஒரு புத்தகத்தின் விலை: ரூ.25)வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட் லிமிடேட்), 1620,ஜெ., பிளாக் 16 வது மெயின்ரோடு, அண்ணாநகர். சென்னை.600 040.
இணையற்ற இந்தியத் தலைவர்கள் என்ற வரிசைத் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சிறந்த அச்சு, எளிமையான நடையில் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
திருப்பூர் குமரன் * திரு.வி.க., * கர்மவீரர் காமராஜர் * பெரியார் ஈ.வெ.ரா.,* பேரறிஞர் அண்ணா * ஏ.பி.ஜே.அப்துல்கலாம்( ஒவ்வொரு புத்தகத்தின் விலை: ரூ.25)வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட் லிமிடேட்), 1620,ஜெ., பிளாக் 16 வது மெயின்ரோடு, அண்ணாநகர். சென்னை.600 040.
இணையற்ற இந்தியத் தலைவர்கள் என்ற வரிசைத் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சிறந்த அச்சு, எளிமையான நடையில் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
கர்மவீரர் காமராஜ் வாழ்வும் தியாகமும் : நுõலாசிரியர்: எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன். வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு<, பாண்டி பஜார் (பக்கம்: 144. விலை: ரூ.50).
பெருந்தலைவர் காமராஜ் என்றவுடன் எல்லாருக்கும் இலவசக் கல்வியும் இலவச மதிய உணவும் தான் முதலில் தோன்றும். எல்லாரும் படிக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கு ஆதாரமாகத் தான் அவற்றை அவர் செய்தார்.காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களும் காமராஜரை ஏற்றுக் கொண்டனர் என்றால் அது அவரது நேர்மைக்குக் கிடைத்த வெற்றி என்பதை நுõலாசிரியர் இந்த நுõலில் தெரிவித்துள்ளார். காமராஜரைப் பற்றி அறிந்து கொள்வதற்குரிய ஒரு கையேடாக இந்த நுõல் அமைந்துள்ளது.
எனது வானின் ஞானச்சுடர்கள்(வாழ்க்கையின் குறிக்கோள் குறித்த உரையாடல்)ஆசிரியர்கள்: ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், அருண் கே.திவாரி. தமிழில்: மு.சிவலிங்கம். வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம் (பக்கம்: 216. விலை: ரூ.75).
நமது நாட்டின் முதல் குடிமகன் அப்துல் கலாமும், அருண் கே.திவாரியும், இளைய சமுதாயத்தினர் முன்னேறவும், நல்வாழ்வு நடத்தவும் பல நுõல்கள் எழுதியுள்ளனர். இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போல் அமைந்துள்ள இந்நுõல், நமது நாட்டின் ஆன்மிக அடிப்படையில் வாழ்க்கை அணுகுமுறை, தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு வழிகாட்டிகள் மற்றும் இவற்றில் இருந்து அறிந்த சாராம்சம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.இந்நுõலில் உள்ள ஒவ்வொரு வரியும் படித்த உடன் சிந்தித்து, அதிலுள்ள ஆன்மிக ஆழத்தை அறிந்து சுவைக்க வேண்டிய ஒன்று. “முடிவில்லாமல்’ என்ற முதல் பகுதியில், நமது நாட்டின் அடிப்படைக் கலாசாரமான “ஆத்மாவைத் தேடுதல்’ என்பதை வெவ்வேறு பரிமாணங்களிலும், வெவ்வேறு மதக் கோட்பாடுகளிலும் இருந்து விளக்குகிறார். மனித ஜீவன் என்பதற்கு, “ஆன்மா’ என்ற வார்த்தை சிறந்த விளக்கம் தருவதாக அமைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி அதற்கு ஆதாரமாக “அஷ்டவக்ர கீதையில்’ அஷ்டவக்கிரர் கூறுவதை குறிப்பிடுகிறார் (பக். 21).மிகப் பெரிய தொழில்நுட்ப வல்லுனர் என்பதினால் அறிவியல் மூலமும் ஆன்மாவைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்பதை திவாரி எடுத்துரைப்பதன் மூலம், அறிவியலும், ஆன்மிகக் கருத்துக்களும் மாறுபட்டவை என்ற தவறான கருத்துக்களைத் தகர்க்கிறார். உருவகங்களைப் பற்றிக் கூறும்போது, “மகாபாரதத்தில் பெரிய யுத்த களமாகச் சித்தரிக்கப்பட்டு உள்ள குரு÷க்ஷத்திரம் நமது உடலுக்குள்ளேயே இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறார்.இந்நுõலுக்கு மேலும் மெருகு ஊட்டுவது, ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ள கலாமின் கவிதைகள், ஆழ்ந்து படித்து, சிந்தனை செய்து அனைவரும் சுவைக்க வேண்டிய ஒரு நுõல். இந்நுõலை அடிப்படையாகக் கொண்டு கல்லுõரிகளில் முக்கியமாக தத்துவத் துறையில் கருத்தரங்கங்கள் ஏற்பாடு செய்தால் அனைவரும் இதிலுள்ள ஆழமான கருத்துக்களை தெளிவாக புரிந்து கொள்ள இயலும்.
சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர்: நுõலாசிரியர்: எம்.கே.ஜமால் முகம்மது. வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ் (பக்கம்: 128. விலை: ரூ.60).
பதினேழாம் நுõற்றாண்டில் முகவை மாவட்டத்தில் முத்தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞானக் கவியாய் திகழ்ந்த பெருமகனார் ஜவாதுப் புலவர். “சரமம் கவிச்சக்கரவர்த்தி ஜவாது’ என எல்லாராலும் போற்றி வணங்கப்பட்ட மகான். தமிழ்க் கவிபாடி வாதில் வெல்லும் வல்லமை பெற்றவர். நபிகள் நாயகப் பெருமானின் பரிபூரண பரிசுத்த நெறியாம் “தீன்’ நெறிக் கொள்கைகளை மையக் கருவாய் அமைத்த பின்ளைத் தமிழ் நுõல் தான் இந்நுõல். மகான் ஜவாது புலவர் அந்தாதி, பிள்ளைத்தமிழ், பஞ்சரத்னமாலை, சீட்டுக்கவிகள், சித்திரக்கவிகள், தனிப்பாடல்கள், கலம்பகம், வண்ணக்கவி எனப் பல பா வகைகளில் பா வலிசுகளில் பாடுவதில் வல்லவர்.ஜவாது புலவரின் வாழ்வியலில் நிகழ்ந்த அற்புதங்கள், புலமை வெளிப்பாடு போன்ற தகவல்களோடு அவரது பிள்ளைத் தமிழையும் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். இவர் மகான் ஜவாதுப் புலவர் பெருமானின் வம்சாவளியில் வந்த பெயரர். இஸ்லாமின் பல நுணுக்கமான செய்திகளை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார்.
முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் : நுõலாசிரியர்: ஏ.ஆர்.பெருமாள். வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்துக்கிருஷ்ணன் தெரு (பக்கம்: 408. விலை: ரூ.150).
தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் தன் இரு கண்களாகக் கொண்டு, இல்லற வாழ்வை ஏற்காமல், சமூகத் தொண்டிற்காகவே வாழ்ந்து, என்றென்றும் நினைவில் நின்று வழிகாட்டும் தேவரின் இனிய வாழ்க்கை வரலாற்றைக் காட்டும் நுõல்.

நேதாஜியின் வீரப்போரில் தேவருக்கு இருந்த ஈடுபாடும், காங்கிரஸ் மேல் கொண்ட அன்பும், வீர சாவர்க்கரின் தீவிர தேசத் தொண்டுக்குத் துணை நின்றதும், தொழிலாளர், விவசாயிகளுக்காக போராடியதும் மிகவும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

எவரையும் ஈர்க்கும் மிடுக்கான தோற்றமும், எதற்கும் அஞ்சாத எடுப்பான பேச்சும், எவருக்கும் நியாயம் தேடித் தரும் எழுத்தாற்றலும் இந்த நுõலில் சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன. பாரதம், ராமாயணம் இரண்டையும் மேற்கோள் காட்டி பேசுவதுடன், முருகன் கையில் உள்ள வேல் அணுகுண்டை விட சக்திமிக்கது என்பது போலவும் பேசும் ஆற்றல்களை, இந்நுõலில் பல இடங்களில் காண முடிகிறது.

கொலை வழக்கில் சிக்கி, நிரபராதியாய் வெளிவந்து, டில்லி பார்லிமென்ட், தமிழக சட்டசபை ஆகியவற்றில் துணிவுடன் பேசியதும், தனது 54 வயது வரை பக்தியுடன் அவர் ஆற்றிய தொண்டும் இந்நுõலில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஒரு ஜாதியின் தலைவராக அவரை இன்று சிலர் ஆக்க நினைத்தாலும், தமிழ் ஜாதியின் மாபெரும் தலைவர் தான் அவர் என்றும் என்பதை இந்த நுõல் நின்று நிலைநாட்டும்.

கல்பனா சாவ்லா : ஆசிரியர்: கே.ஜீவபாரதி, வெளியிட்டோர்: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் மொத்த பக்கம்: 173, விலை: ரூ.50.
அமெரிக்க குடியுரிமை பெற்று, அங்கேயே வாழ்ந்து, பெண்களால் இயலாது என்று மற்றவர்கள் எண்ணியதை எல்லாம் இயலும் என்று வாழ்ந்து காட்டிய கல்பனா சாவ்லா பற்றிய வாழ்க்கை குறிப்பு நுõல். கல்பனா சாவ்லா பற்றி தமிழில் வெளியான முதல் நுõலும் இதுவே.

அறிவியல் அறிஞர் : ஆசிரியர்: தி.சு.கலியபெருமாள், வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், “கோனார் மாளிகை’ 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை14. (பக்: 70, விலை: ரூ.20)
மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை கண்டுபிடித்த டாக்டர் ஜேம்ஸ் சிம்சனின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கியுள்ளார் நுõலாசிரியர். டாக்டர் ஜேம்ஸ் சிம்சனின் கண்டுபிடிப்பை பற்றியும், அதற்காக அவர் எவ்வளவு பாடுபட்டார் என்பதைப் பற்றியும் அறியும்போது, மருத்துவ உலகிற்கும், மக்களுக்கும் எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

மகப்பேறு மருத்துவத்தில் பயன்படுத்துவதற்காக புதுவகை இடுக்கி ஒன்றையும், காயங்களைக் குணப்படுத்த “அக்குப்ரஷர்’ என்ற புதிய செயல்முறை உருவாவதற்கும் சிம்சன் பாடுபட்டுள்ளார்.

இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கையையும், அவர்களின் கண்டுபிடிப்புகளையும் நாமும் அறிந்து கொள்வதோடு, நம் குழந்தைகளும் அறிந்துகொள்ள செய்யவேண்டியது மிக அவசியம்.

நான் இவர்கள் : ஆங்கில மூலம்: ஆர்.எம்.லாலா. தமிழில்: ராணி மைந்தன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 312. விலை: ரூ.150).
“ஹிம்மத்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆர்.எம்.லாலா, அவர் சந்தித்த பிரபலமான 26 பேருடைய தரமான வாழ்க்கை பற்றி ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் தந்துள்ளார் ராணி மைந்தன்.
“நான் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன் சமூகத்திலிருந்து பெற்றதை சமூகத்திற்கே திருப்பித் தர வேண்டும் என்பது தான் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது’ அஸிம் பிரேம்ஜியின் உணர்வு இது.

“பிரார்த்தனையின் அழகிய விளைவு மவுனம். வாய் மவுனம் மட்டுமின்றி இருதயம், கண்கள், காதுகள், மணம் ஆகியவற்றின் மவுனம் பற்றியும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதை நான் ஐந்து மவுனங்கள் என்பேன்’ என உபதேசித்தார் அன்னை தெரசா.

“ஏழைகளுக்காக பணியாற்றுவது உள்பலம் தருகிறது. அவர்கள் குப்பையில் இருக்கும் மாணிக்கங்கள்’ என்பார் எம்.எஸ்.சுவாமிநாதன்.

“தினமும் காலையில் ஒரு நல்ல நுõலைப் படித்து விட்டு அந்த நாளைத் தொடங்கு’ நானி பல்கிவாலாவின் அறிவுரை இது. இவ்விதமாக உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்களின் வாழ்க்கை குறிப்புகளும் சிந்தனைகளும் அழகுற எழுதப்பட்டுள்ளன. இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள வாழ்க்கைக்கு வழிகாட்டும் நுõல்.

திருப்பூர் செதுக்கிய சிற்பிகள் : ஆசிரியர்: டாக்டர் அரிமா.சி.சுப்பிரமணியம். வெளியீடு: திருப்பூர் மக்கள் மன்றம், மங்கலம் சாலை, திருப்பூர்641 604. (பக்கம்: 408. விலை: ரூ.100)
திருப்பூர் எழுத்தறிவாலயம் வழியாக டாக்டர் அரிமா.சி.சுப்பிரமணியனாரால் தொகுப்பட்ட ஒரு அற்புதமான நுõல். தமிழகத்தின் தலை சிறந்த தொழில் வளம் நிறைந்த நகரங்களில் ஒன்று திருப்பூர். திருப்பூர் என்று உச்சரித்தாலே நமக்கெல்லாம் கொடி காத்த குமரன் தான் நமது நினைவலைகளில் நிழலாய் இருப்பார். இருந்தாலும் இந்நுõலைப் படித்துணர்ந்த பிறகு திருப்பூரின் சாதனையாளர்கள் பட்டியல் வாசகனை வியக்க வைக்கும். திருப்பூர் தியாகிகள் (50) விடுதலை வேள்வியில் பங்கு பெற்றோர் (34) இன்றைக்கும் வாழும் வரலாறாக நிற்கின்ற பெருமக்கள் (9) கல்விக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்கள்(6) அரசியல் அரங்கில் பங்கு பெற்று அப்பழுக்கற்ற நேர்மையையும் சத்தியத்தையும் கடைப்பிடித்து மக்கள் தொண்டே மகேஸ்வரன் பணி என பணியாற்றிய அரசியல்வாதிகள் (17) பொதுத் துறையிலே சாதனை செய்து திருப்பூர் நகரை வளம் கொழிக்கச் செய்த நல்லுள்ளங்கள் (4) திருப்பூரை அடுத்த தொழில் ஊரான வெள்ளை கோவிலில் உள்ள சாதனையாளர்கள் (7) என மிக மிக அற்புதமாக சுருக்கமாக மொத்த சாதனையாளர்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திக் காட்டியுள்ளார் ஆசிரியர். டாக்டர் அரிமா.சி.சுப்பிரமணியம் பதினெட்டு அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து மானுடத்தை உயர்த்திட நாளெல்லாம் உழைப்பதுடன் பல அறக்கொடைகளுக்குச் சொந்தக்காரர்.
இந்நுõலைப் படிக்கும் போது நம்மை பலரது வாழ்வியல் நிகழ்வுகள் வியக்க வைக்கிறது. குறிப்பாக 94 வயதிலும் தளராது நாட்டு நலம் விரும்பும் கல்வித் தந்தை ஆர்.ஜி.எஸ்., (பக். 83), தியாகி குமரன், (சென்னிமலை தியாகி குமாரசாமி) (பக். 112), தியாகி. சுந்தரம்பாள் (பக் 209). தியாகி பி.ராமசாமி (பக். 225) என பல சாதனையாளர்களது வாழ்வியல் நிகழ்வுகள் நம்மை நெகிழ வைக்கிறது. தனிமனித வரலாறு, சமுதாய வரலாறு, திருப்பூர் நகர் வளர்ச்சியென நுõற்றுக்கணக்கான செய்திகள் அடங்கியது இந்நுõல். திருப்பூர் கலைக்களஞ்சியம் எனப் பெருமையாகப் பேசப்படும் இந்நுõல் என்பது உறுதி. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இது போன்ற ஒரு நுõல் உருவாக வேண்டும். நல்ல கட்டமைப்பு,

வழவழப்பான தாள்கள். விலையோ மலிவு. ஒவ்வொருவரும் வாங்கி படித்துப் பயன்பெற வேண்டிய நுõல்.

ராஜாஜி வாழ்வில் சுவையான சம்பவங்கள் : ஆசிரியர்: கார்த்திகேயன். வெளியீடு:பாலா புக்ஸ், ஜி.4, பாலகிருஷ்ணா அபார்ட்மென்ட்ஸ், 8/97, பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை94. (பக்கம்: 40. விலை: ரூ.15)
மலிவு விலை நுõல் வரிசையில் வெளியான இந்நுõலில் ராஜாஜி வாழ்வின் 37 சுவையான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் ஸ்ரீ குருஜி : தொகுப்பு: டி.வி.லட்சுமி நாராயணன், வெளியீடு: மாதவ முத்ரா, 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை.600 031. தொலைபேசி: 28360874. (பக்கம் 144 விலை ரூ.30)
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இரண்டாவது தலைவர் ஸ்ரீ குருஜி. சொல்லும் செயலும் இணைந்த தலைவராக வழிகாட்டி அந்த அமைப்பைப் பெரிதாக வளர்த்தவர். அதேபோல இன்றைய பா.ஜ., வின் முன்னோடியான ஜனசங்கம், பாரதிய மஸ்துõர் சங்கம், விஸ்வ இந்து பரிஷத் என்று பல்வேறு இயக்கங்கள் உருவாக்கக் காரணமானவர். இன்று “சங்கபரிவார்’ என்று அழைக்கப்படும் இந்த இயக்கத்தலைவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் வேறு விஷயம்.
அவரது நுõற்றாண்டு விழாவை ஒட்டி இந்த நுõல் வெளியிடப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த அத்தலைவர் தமிழகத்திற்கு வந்த போது நிகழ்ந்த சில செய்திகள் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜி.டி.நாயுடு ஆகியோருடன் இருந்த அவரது நிழற்படங்களும் இதில் அடக்கம்.

இப்புத்தகத்தில் அவரது எளிமை, மற்றும் கூர்த்த அறிவு பற்றிய சில தகவல்கள் இருப்பதுடன் அவர் தமிழக அன்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் உள்ளன. அதில் , “தமிழ் வளமான மொழி: நமது கலாசார தலைமுறையின் அரும் பொக்கிஷம் அதன் இலக்கியத்தில் இருக்கிறது’ என்ற தகவலைக் (பக்கம் 115 ) காணலாம்.

எளிமை, துõய்மை, அதே நேரத்தில் தேசத்தை நேசித்துச் செயல்பட்டதில் முன்னோடியாக வழிகாட்டிய அவர் மறைந்தபோது பார்லிமென்ட்டில் அஞ்சலி செலுத்தினார் இந்திரா காந்தி என்பது வரலாறு.

ஆனால், இப்புத்தகத்தில் அவரது சிறப்புகள் பற்றிய வரலாற்றுக் கருத்துக்கள் கொண்ட சிறப்புத் தகவல்கள் சேர்க்கப்படக் காணோம். ஒட்டுமொத்தமாக ஸ்வயம் சேவகர்கள் என்ற அடைமொழியுடன் சேகரிக்கப்பட்ட தகவல் இருக்கிறதே தவிர, சமூகத்தில் அவர்களுக்குத் தனிப்பட்ட அந்தஸ்து என்ன என்ற விவரம் சரியாக இல்லாததும் தகவல்களின் திண்மையை ஒளி மங்கச் செய்து விடுகிறது. இதையடுத்த பதிப்பில் மாற்றுவார்கள் என நம்பலாம்.

செந்தமிழ் வளர்த்த திரு.வி.க., (வாழ்க்கைச் சுவடுகள்) : ஆசிரியர்: முனைவர் வே.க.வனசாட்சி, தமிழ்மண் பதிப்பகம், 2,சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர்,சென்னை17. ( தொலைபேசி: 24339030. விலை ரூ.15 )
“தமிழ்த் தென்றல் திரு.வி. க., வின் பெயர்த்தி நுõலாசிரியர். பற்றற்ற தன்மையும் ,குற்றமற்ற உள்ளமும் கொண்ட அறிஞர், பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, நிறைகுணத்தவர் என்ற பல்வேறு நற்குணங்களுக்குச் சான்றாக வாழ்ந்த மாமனிதர் திரு.வி.க.,வின் சிறப்பைக் கூறும் கையேடு.
வள்ளுவமாய் வாழும் வள்ளல்கள் : நுõலாசிரியர்: நல்ல. அறிவழகன். வெளியீடு: வானதி பதிப்பகம் (பக்கம்: 436. விலை: ரூ.200).
நம்மோடு இன்று வாழ்ந்து வரும் ஏழு அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகள் மிக அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த நுõலில். ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும், ஆற்றலையும், எளிய நிலையிலிருந்து உழைப்பால் மட்டுமே முன்னேறி சமுதாயத்தின் மிகப் பெரிய நிலையை இவர்களால் எப்படி எட்ட முடிந்தது என்பதை ஏராளமான இலக்கிய மேற்கோள்களுடன் சுவையாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த பெருமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பக்க பலமாய் திருக்குறள் மற்றும் பல அற நுõல்களின் கருத்துக்கள் விளங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி குறள் வழி நின்று வாழும் இவர்கள் வள்ளுவமாய் வாழும் வள்ளல்கள் என்று பாராட்டியிருக்கிறார். வாழ்க்கை வரலாற்றோடு ஆசிரியர் எடுத்தாளும் இலக்கிய மேற்கோள்களையும் ஒரு சேரப் படிக்கும்போது இனிய பல இலக்கிய மலர்களையும் நுகரும் இலக்கிய இன்பமும் கிட்டுகிறது.

இலட்சியப் போராளி நெல்சன் மண்டேலா : நுõலாசிரியர்: செவல்குளம் ஆச்சா. வெளியீடு: சுரா புக்ஸ் (பி)லிட்., 1620, “ஜே’ பிளாக், 16வது பிரதான சாலை, சென்னை40. (பக்கம்: 68. விலை: ரூ.30)
அகிம்சையை ஆயுதமாக ஏந்தி விடுதலைக் காற்றை சுவாசிக்க வைத்தவர் மகாத்மா காந்தி. அதே அறவழியில் தென்னாப்ரிக்காவில் செயல்பட்டவர் தியாகசீலர் நெல்சன் மண்டேலா. அந்த ஒப்பற்ற மனிதரின் போராட்ட வரலாற்றை சுருக்கமாக இந்நுõலில் தந்துள்ளார் ஆசிரியர்.
ஆசிரியரின் நுõறாவது நுõல் என்ற பெருமையும் இந்த நுõலுக்கு உண்டு.

சிந்தனையாளர் மாண்டெயின்: பக்கங்கள் 108; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
மனிதனின் மனதையும் வாழ்வின் இன்பத்தையும் பற்றிச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் கன்பூசியஸ்: பக்கங்கள் 148; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
அறநெறி வழியே உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும் பொது மனிதனாகவும் வாழ்வது எப்படி எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் சா அதி: பக்கங்கள் 148; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
நீதிநெறி நெறிகளையும் தத்துவங்களையும் கதைபோல் கூறிச் சிந்தனைக்கு ஒளி அளித்தவர். பக்கங்கள் 148

சிந்தனையாளர் அரிஸ்டாட்டில்: பக்கங்கள் 168; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
சிந்தனை ஏன் எனச் சிந்தித்தவர்
சிந்தனையாளர் ஐன்ஸ்டைன்: பக்கங்கள் 148; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து அற்புதக் கோட்பாடுகள் வகுத்தவர்.
சிந்தனையாளர் எமர்சன்: பக்கங்கள் 128; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.20
உலகமும் மனிதனும் ஏன் எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் ரூஸோ: பக்கங்கள் 112; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
மனிதன் சுதந்திரமாக எந்தவித சமுதாயத்தில் வாழ்வது எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் நியட்ஸே: பக்கங்கள் 208; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.33
மனிதனுக்கு அப்பால் மகாமனிதனின் வருகையையும் நன்மை தீமைகளுக்கு

அப்பால் வலிமையையும் பற்றிச் சிந்தித்தவர்.

சிந்தனையாளர் டார்வின்: பக்கங்கள் 144; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.24
உயிரினத்தில் மனித மூலம் எப்படி உண்டாயிற்று எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் பிளேட்டோ: பக்கங்கள் 108; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
மனிதன் எந்த அரசியலில் எந்த விதமாக எதற்காக வாழ்வது எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் கார்ல்மார்க்ஸ்: பக்கங்கள் 120; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.22
பொருளாதார விடுதலையே மனிதகுலம் மாண்படைய வழி எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் பெஞ்சமின் பிராங்ளின்: பக்கங்கள் 152; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.32
தனிமனிதனின் முன்னேற்றத்தையும் தேசமுன்னேற்றத்தையும் பற்றிச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் இங்கர்சால்: பக்கங்கள் 96; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.20
பகுத்தறிவு ஏன் எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் வால்டேர்: பக்கங்கள் 166; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.35
சிந்தனை சுதந்திரத்தையும் சிந்தனைகள் அனைத்தையும் பற்றிச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் மாக்கியவெல்லி: பக்கங்கள் 160; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.30
எந்த ஆட்சியும் நிலைபெறக் கூடிய வழி வகைகள் எவை எனச் சிந்தித்தவர்.
சிந்தனையாளர் ப்ராய்டு: பக்கங்கள் 160; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.28
கனவுகள், காதலுறவு, உள்ளுணர்வு, மன இயக்க ஆய்வு முதலானவற்றை பற்றிச் சிந்தித்தவர்.
அம்பேத்கர் ஒரு சகாப்தம்! : நுõலாசிரியர்: டாக்டர் வி.எம்.மவுரியா, வெளியீடு: ராஜகிரகம், 49, நாராயண மேஸ்திரி முதல் தெரு, வில்லிவாக்கம், சென்னை49. (பக்கம்: 128. விலை: ரூ.60)
இந்திய அரசமைப்பு சட்ட நிபுணர் டாக்டர் அம்பேத்கர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு நுõல். அம்பேத்கர், சமுதாய முன்னேற்றத்துக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும் எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளார் என்பதை விளக்கமாக எடுத்துரைக்கிறது இந்நுõல். அம்பேத்கர் பற்றி அறியாதவர்களும், மாணவர்களும், மற்றவர்களும் படித்து அறிய வேண்டிய நுõல்.
கலை உலக சக்ரவர்த்திகள் (பாகம்2): நுõலாசிரியர்: கலைமாமணி எஸ்.எம்.உமர். வெளியீடு: அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை4. (பக்கம்: 430. விலை: ரூ.200)
கலை உலகச் சக்ரவர்த்திகள் முதல் பாகத்தின் மூலம் நம்மைச் சிலிர்க்க வைத்த உமர், இந்த இரண்டாம் பாகத்தின் மூலமும் நம்மை பரவசப்பட வைத்திருக்கிறார்!

எம்.ஜி.ஆர்., சிவாஜி, பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், ரஞ்சன், கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.ராதா, கொத்தமங்கலம் சுப்பு, டி.ஆர்.ராஜகுமாரி, நடிகையர் திலகம் சாவித்திரி ஆகிய பதின்மரைச் சித்தரிக்கும் நுõல் இது.

பாகவதர் காலத்தில் இருந்தே, கலை உலகத் தொடர்பு உள்ளவர் உமர். அதனால், தான் நேரில் பார்த்த நிகழ்வுகளையும் இதில் சேர்த்திருக்கிறார். இவர் சொல்லும் பல தகவல்கள் புதுமையானவை.

உதாரணமாக, நிருபர் கேட்கிறார்: உங்க நாடகங்களில் அன்றாட அரசியலைப் பற்றி எல்லாம் அலசி எடுக்கறீங்களே, பத்திரிகை படிக்க உங்களுக்கு எங்கே நேரம் கிடைக்கிறது?

எம்.ஆர்.ராதா பதில் சொல்கிறார்: பத்திரிகையா? நான் பத்திரிகையே படிப்பதில்லை. எனக்கு படிக்கவே தெரியாது. எழுத்துக்களை கம்போஸ் செய்வேன். அதாவது கொட்டை எழுத்துக்களை எழுத்துக் கூட்டிப் படிப்பேன். நான் படிச்சதெல்லாம் உலக அனுபவம் என்ற படிப்பு தான் வேறே பள்ளிக்கூடத்துக்கே நான் போனதில்லே!

லிங்கம்: ஆசிரியர்: பா.ராஜநாராயணன்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ.85.
சாதாரண கபடி வீரனாக வாழத் துவங்கி பரபரப்பான தாதாவாக உருவெடுத்து கோரமான முடிவைச் சந்தித்த லிங்கத்தின் கதை. இந்த மண்ணில் வன்முறை பாதையைத் தேர்ந்தெடுக்கும் எவரும் ஒரு கணம் நிதானித்து நல்வழியில் திரும்ப இந்த கதை உதவும். இதை வாசிக்கும் எவரும் வன்முறையை நேசிக்க முடியாது.
நம்பர் 1: ஆசிரியர்: என்.சொக்கன்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ.50.
இந்த உலகம் ஜெயிப்பவர்களுக்கானது. இன்னும் நுணுக்கமாக சொல்வதானால் சாகசங்கள் செய்யத் துணிகிறவர்களுக்கானது. சம காலத்தில் உலக அளவில் அப்படி துணிந்து, சாதித்த நம்பர்1 வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவே இந்த புத்தகம். இந்த சாதனை சரித்திரம் நம்பர் ஒன் ஆக ஆசைப்படும் அத்தனை பேரையும் உற்சாகப்படுத்தும்.
நெருப்பு மலர்கள்: ஆசிரியர்: ஞாநி; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ.55.
பல்லாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டு கிடந்த பெண் சமுதாயத்திற்கு அடிப்படை உரிமைகளைப் பெருவதற்கு எண்ணற்ற இன்னல்களை சந்தித்த பெண்களின் பெயர்கள் நமது பாட புத்தகங்களில் கூட இல்லை. சரித்திரத்தில் தொலைக்கப்பட்ட அந்த சாதனை பெண்களின் தியாக வரலாறுகளின் தொகுப்பே இந்த நெருப்பு மலர்கள்.
என் கதையும் கீதமும்: ஆசிரியர்: சரசு தாமஸ்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. விலை: ரூ.60.

ஐந்து வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு கால்களின் இயக்கத்தை இழந்து, நாற்பது ஆண்டு காலமாக ஒற்றைப் படுக்கையே உலகமென வாழந்து கொண்டிருக்கும் சரசு தாமசின் இந்த சுய சரிதை மனதை வருடிச் செல்லும் ஓர் இனிய கீதத்தை கேட்ட அனுதாபத்தை உண்டாக்கும். உங்கள் கவனத்திற்கு ஒரு புதிய உலகம்
சிகரம் தொட்ட சச்சின்: ஆசிரியர்: ரமேஷ் வைத்யா/ வள்ளி; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை ரூ. 50

உலக அளவில் பிரபலமான இந்தியர்கள் வரிசையில், மிக இள வயதிலேயே அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து சிகரம் தொட்டவர் சச்சின். அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள், திருப்பு முனையாக அமைந்த ஆட்டங்கள், அவரது சாதனைகள் என எல்லாவற்றின் தொகுப்பு இது. உத்வேகம் ஊட்டும் அவரது வாழ்க்கை புத்தகம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
டூரிங் டாக்கீஸ்: ஆசிரியர்: சேரன்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ. 100.

எங்கிருந்தோ வாழ்க்கையைத் தேடி கனவுகளின் வாசலான சென்னைக்கு தினம் தினம் பலர் வந்து கொண்டே இருக்கிறார்கள். சுழன்றடிக்கிற யதார்த்த சூறாவளியில் அடித்துப் பிடித்து நீந்தி எதிர்நீச்சல் போட்டு கரையேறிய ஓர் இயக்குநரின் வாழ்ககையே இந்த டூரிங் டாக்கீஸ். இது நம் எல்லோருக்குமான நம்பிக்கை விதை.
கத்தியின்றி ரத்தமின்றி…!: ஆசிரியர்: லாரா கோப்பா; விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ.95.

ஏழ்மையில் கூலி வேலை செய்து வாழும் பலரின் வாழ்வில் ஒளியேற்ற தம் வாழ்வில் பல போராட்டங்களை செய்த சுதந்திர போராளிகளான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தம்பதியினரின் ஈரமும் வீரமும் மின்னும் வீர வரலாறு இது. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக காந்திய வழியில், அகிம்சை முறையில் போராடி வரும் இந்த தம்பதியின் வாழ்க்கை நமக்கான வழிகாட்டியாக இருக்கிறது. அவர்கள் முன்னால் செல்கிறார்கள்; நாம் பின்தொடர்ந்தால் போதும்.
ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு : நுõலாசிரியர்: ஒர்சே மா.கோபாலகிருஷ்ணன். வெளியீடு: நற்றமிழ் பதிப்பகம், எம்.55/12, எம்.ஐ.ஜி., அடுக்ககம், முதல் நிழற்சாலை விரிவாக்கம், இந்திரா நகர், அடையாறு, சென்னை20. (பக்கம்: 600. விலை: ரூ. 230)

நுõலின் தலைப்பில் உள்ள ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு என்பதற்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் விரிவான நாட்குறிப்பு என்று முன்னுரையில் நுõலாசிரியர் குறிப்பட்டுள்ளார். பாரிசில் தேசிய நுõலகத்தில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை வாசித்துப் பல புதிய தெரி வுகளை இந்நுõலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

கடந்த 1709 முதல் 1761 வரை புதுச்சேரி யில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் உருவப் படத்தையும் இந்நுõலில் வழங்கியுள்ளார். மேலும் பாரிசில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் ஒரு பக்கத்தை அப்படியே ஒளிப்படமாக இந்த நுõலில் வெளியிட்டுள்ளதும் சிறப்பு ஆகும்.

24.4.1752 முதல் 08.04.1753 வரை உள்ள ஓராண்டுக்குரிய நாட்குறிப்பு மட்டும் இந்த நுõலில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக நாட்குறிப்பில் இடம் பெறும் பெயர்களைத் தொகுத்து அவற்றின் பக்கங்களையும் குறிப்பட்டிருப்பது ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

1752 முதல் 1753 வரை தமிழகத்திலும் புதுவையிலும் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராய நினைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பிற ஆய்வாளர்களுக்கும் இந்த நுõல் உதவியாக இருக்கும். நுõலாசிரி யர், பொறியியல் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் வரலாற்று ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் சிறந்த முறையில் நுõலைப் பதிப்பித்திருக்கிறார்.

நுõலாசிரியர் இந்த நுõலுக்கு வழங்கியுள்ள விரிவான முன்னுரை அவரது உண்மை அறிந்து பதிப்பிக்கும் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.

மலரும் நினைவுகள்: நுõலாசிரியர்: இந்திரா காந்தி. தமிழாக்கம்: கி.வேங்கட சுப்ரமணியன். வெளியீடு: பூரம் பதிப்பகம், பு.எண்.2, ப.எண்.59, ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 106. விலை: ரூ.30).

இந்திரா காந்தி மலரும் நினைவுகளாக பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள். மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்வராஜ் பவனின் கதை, குழந்தைப் பருவம், தன் பதினாறாவது வயது, சாந்தி நிகேதனில் வாழ்க்கை, சிறை நினைவுகள், தாயாக இருப்பது பற்றி, பாபுவைப் பற்றிய நினைவுகள், ஜவகர்லால் நேரு என்ற தலைப்புகளில் தன் வரலாறு சுவைபட கூறப்பட்டுள்ளது. சில விளக்கங்களுக்கு விடைகள் மனதை தொடுகிறது. அனைவரும் படித்து மகிழத்தக்க சிறந்த நுõல். இந்திரா காந்தியை நேரில் சந்தித்து பேசிய உணர்வை இந்நுõலைப் படிப்பவர்கள் உணர முடிகிறது

தமிழ்நாட்டு பாரத ரத்தினங்கள்: ஆசிரி யர்: சூர்யா. வெளியீடு: சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், பழைய எண்.24, கிருஷ்ணா தெரு (பக்கம்: 124. விலை: ரூ.25).

ராஜாஜி, சர்.சி.வி.ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன், காமராஜர், சி.சுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அப்துல் கலாம், எம்.ஜி.ஆர்., ஆகியோரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரங்கள்! தமிழ்நாட்டில் பாரத ரத்னா விருது பெற்ற பெருமக்களின் சாதனைகளை இந்த நுõலில் சிறப்புற விளக்கியுள்ளார் ஆசிரி யர் சூர்யா. இந்த நுõல் மாணவ, மாணவியருக்குப் பெரி தும் பயன்படும் என்று நம்புகிறோம்!

வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்.,: நுõலாசிரி யர்: பொம்மை சாரதி. வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு தொலைபேசி: 2433 4397. (பக்கம்: 168. விலை: ரூ.60)

எம்.ஜி.ஆரைப் பற்றிய முழுமையான வரலாற்று நுõல் என்று கூற முடியாவிட்டாலும் வள்ளலாக வாழ்ந்த ஒரு பெருமகனின் வாழ்க்கையின் ஒரு பரிமாணத்தைச் சித்தரி க்கும் நுõல் என்று இதைக் குறிப்பிடலாம். பத்திரிகையாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். பக்கத்திற்கு பக்கம் அபூர்வப் புகைப்படங்கள். எம்.ஜி.ஆர்., அன்பர்களுக்கு இது ஒரு புதிய புத்தக விருந்து.

நின்ற சொல்: ஆசிரியர்: ஞானி அறிவன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 50ரூ)

சிற்பியின் விதி: ஆசிரியர்: ஞானி அறிவன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 50ரூ)

மரபும் ஆக்கமும்: ஆசிரியர்: ஞானி அறிவன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 100ரூ)

மணிக்கொடி சீனிவாசனின் எழுத்து: ஆசிரியர்: ஜயதேவ் சீனிவாசன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை :120ரூ)

என் வாழ்வே பேரானந்தம்: ஆசிரியர்: கலைமாமணி யோகா, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 50ரூ)

அன்பெனும் தோட்டத்திலே: ஆசிரியர்: கலைமாமணி யோகா, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 80ரூ)

ஞானச்சுரங்கம்: ஆசிரியர்: கோ.ஜெயபாலன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 60ரூ)

நீங்களும் மாஜிக் செய்யலாம்: ஆசிரியர்: பாலாஜி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 30ரூ)

1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்: ஆசிரியர்: வசந்தாதேவி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 30ரூ)

பத்திரிகைகளில் எழுதி புகழ்பெறுவது எப்படி? : ஆசிரியர்: ஓ.எ.ஊ.பழனிச்சாமி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 11ரூ)

நீங்களும் நிருபர் ஆகலாம்: ஆசிரியர்: வி.மணிமாறன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 7ரூ)

அரசியல் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் : ஆசிரியர்: முத்துச்செல்வி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 30ரூ)

பார் புகழும் பாரீஸ் (பயணக்கட்டுரை): ஆசிரியர்: கோ.தனபால், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 25ரூ)

பெயர் பிறந்தது எப்படி?: ஆசிரியர்: பூவை அமுதன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 17ரூ)

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு: ஆசிரியர்: அறிஞர் அண்ணா, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017.

தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?: ஆசிரியர்: கு.கீ.கோவிந்தராஜன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 40ரூ)

இந்திய விடுதலை போரில் தமிழக மகளிர்: ஆசிரியர்:வி.என்.சாமி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 35ரூ)

விடுதலை போராட்டத்தில் வெளிநாட்டு பெண்கள்: ஆசிரியர்: வி.என்.சாமி, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 20ரூ)

இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள்: ஆசிரியர்: மு.செல்வராசன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 50ரூ)

நிலைபெற்ற நினைவுகள் (பாகம் 1) : ஆசிரியர் : வல்லிக்கண்ணன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 100 ரூ )

நிலைபெற்ற நினைவுகள் (பாகம் 2) : ஆசிரியர் : வல்லிக்கண்ணன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 75 ரூ )

தமிழர் தலைவர் : ஆசிரியர் : சாமி சிதம்பரனார் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 100 ரூ )

லெனின் : ஆசிரியர் : ஆர்.ராமநாதன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

வான்கா : ஆசிரியர் : தமிழில் சுரா , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 100 ரூ )

ஆண்டன் செக்காவ் : ஆசிரியர் : புரசு. பாலகிருஷ்ணன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

கார்க்கி வரலாறு : ஆசிரியர் : அ.சிங்காரவேலு, வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

ஆல்பெர் காம்யு : ஆசிரியர் : வஸந்த் செந்தில் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 125 ரூ )

ரூஸோ வாழ்க்கை வரலாறு: ஆசிரியர் : சாமிநாத சர்மா , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 30 ரூ )

என் கதை : ஆசிரியர் : நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 160 ரூ )

கோதம புத்தர் : ஆசிரியர் : ஆனந்த குமாரசாமி , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 75 ரூ )

புராதன இந்தியாயவின் பழைய 56 தேசங்கள் (பாகம் 1 2 ): ஆசிரியர் : பி.வி.ஜகதீச அய்யர் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 125 ரூ )

கிரீஸ் வாழ்ந்த வரலாறு (சரித்திரம்) : வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 165 ரூ )

மறுமலர்ச்சி எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணன் : ஆசிரியர் :எதிரொலி விசுவநாதன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 80 ரூ )

மகாகவி பாரதியார் : ஆசிரியர் : வ.ரா , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

நடிகவேள் எம்.ஆர்.ராதா 100 நயமான தகவல்கள்: ஆசிரியர்: சபீதா ஜோசப், வெளியிட்டோர்: ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. விலை: ரூ.60, பக். 192.

படிக்காத மேதை, நாடகத்திற்கு வசனங்களை ஒருமுறை படித்துக் காட்டினால் போதும், அப்படியே நினைவில் ஏற்றி, ஒப்பிக்கும் திறன் படைத்தவர், பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கூறப்படும் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கைப் பாதையில் ஏற்பட்ட 100 சுவையான நிகழ்ச்சிகளை தொகுத்து அளித்துள்ளார் நுõலாசிரியர்.

பெருந்தலைவர் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் 110:நுõலாசிரியர்: இளசை சுந்தரம், வெளியீடு: புகழ் பதிப்பகம், நிர்மல், பி.எஸ்.3 அக்ரிணி குடியிருப்பு, ஆண்டாள்புரம், மதுரை 3.(பக்கம்: 244, விலை ரூ.65)

காமராஜரை பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்து விட்டன. என்றாலும் இப்புத்தகம் வித்தியாசமான முயற்சி. அவரது வாழ்வில் கொட்டிக் கிடக்கும் நுõற்றுக்கணக்கான சம்பவங்களை குவியலாக தராமல் எல்லாரும் படிக்கும் வகையில் 110 அத்தியாயங்களாக பிரித்து தந்து இருக்கிறார் இளசை. இவர் நல்ல பேச்சாளர் மட்டுமல்ல; இனிய தமிழ், எளிய தமிழ் எழுத்தாளர் என்பதற்கும் இந்த புத்தகம் சான்று. “சிறுவன் காமராஜ்’ முதல் “பெருந்தலைவர் காமராஜர்’ வரை வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் நகைச்சுவை உணர்வு மேலோங்க படிக்கும் ஆர்வத்துடன் எழுதப்பட்டுள்ளது. சில சம்பவங்களை குட்டி கதைகள் கூறியும், சிந்தனையாளர்களின் மேற்கோள்களை சுட்டிகாட்டியும் விளக்கியிருக்கிறார் நுõலாசிரியர். காமராஜரின் குணநலன்கள் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளது. உதாரணம்: தலைவர் தன்னை “கிறுக்கா’ என்று சொல்லி வாழ்த்த மாட்டாரா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு. ஏனெனில் தலைவர் தனது இதயபூர்வமான அன்பை அந்தச்சொல் மூலமே வெளிப்படுத்துவார்.

ஈடு இணையற்ற தேசத் தலைவர்கள்:நுõலாசிரியர்: செவல்குளம் “ஆச்சா’ (புலவர் அ.சா.குருசாமி). வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, “ஜே’ பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை40. (பக்கம்: 152. விலை: ரூ.65).

இன்றைய இளைய தலைமுறையினருக்கு நம் தேசத்தின் முக்கியமான தலைவர்களின் உயரிய வாழ்க்கை வரலாற்றை அறியச் செய்வது பல வகையிலும் பயன் விளைவிக்கக் கூடிய பணியாகும். முன்னேறும் முனைப்பு, அதேசமயம் பழுது படாத பண்பு நலன்கள், ஒழுக்கம், நேர்மை போன்ற அருங்குண நலன்களை அறிந்து கொள்ள இவை உதவும்.அத்தகு உயரிய நோக்குடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கோபாலகிருஷ்ண கோகலே, காமராஜர், வினோபா பாவே, ஜாகீர்உசேன் போன்ற தலைவர் பெருமக்களின் வாழ்க்கைச் சரிதத்தின் முக்கிய பகுதிகளைச் சுருக்கமாகவும், ஆழமாகவும் எளிய நடையில் எழுதித் தொகுத்துள்ளார் இந்த நுõலின் ஆசிரியர். தலைவர்களின் அழகிய வரைகோட்டு ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் சாதனைகள் :வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

சிவாஜியின் நடிப்பிலக்கணம்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

சகலகலா வல்லவன் கமலஹாசன்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

சிந்தித்தனர் சாதித்தனர் (101அறிஞர்களின் சாதனை வாழ்க்கைக் குறிப்புகள்): ஆசிரியர் : ஜி.ஜி.ஆர்., வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 65.00)
நோபில் வென்ற இந்தியர்: ஆசிரியர் : ஜா.சுஜாதா, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்(விலை : 30.00)

கர்ம வீரர் காமராஜ் வாழ்வும் தியாகமும் : எஸ்.எஸ். மாத்ரூபூதேஸ்வரன் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. (விலை: 50.00 )

40 தொழில் மேதைகள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள் : டி. வெங்கட் ராவ் பாலு , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 55.00 )

உலக சரித்திரம் படைத்த சாதனையார்கள் : எஸ். கமலா கந்தசாமி ,நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 75.00 )

சரித்திரம் படைத்த சாதனை பெண்மணிகள் : ப்ரியா பாலு , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 80.00 )

மறக்க முடியாத மனிதர்கள் : பி.எஸ். ஆச்சார்யா , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 35.00 )

கோடீஸ்வரன் பில்கேட் வெற்றி பெற்ற கதை : சி.எஸ்.தேவ்நாத் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 50.00 )

மகத்தான மன உறுதி மனிதர்களம் நிகழ்ச்சிகளும் : டாக்டர். கே.கே. இராமலிங்கம் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 40.00 )

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர் : கமலா கந்தசாமி , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 70.00 )

இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும் : தமிழ்ப்பிரியன் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 225.00 )

தமிழ் அறிஞர்களும் தமிழ் இலக்கியமும் 1767லிருந்து 1980 வரை : மு. அப்பாஸ் மந்திரி , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 120.00 )

வடலூர் இராலிங்க சுவாமிகள் (சுருக்கமான வரலாறு) : திரு. சம்பந்தம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 24.00 )

வள்ளலார் வாழ்க்கையும் தத்துவமும் : சுவாமி சரவணானந்தா , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 45.00 )

ஸ்ரீ இõரமானுஜர் : சாண்டில்யன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 60.00 )

ஒரு புதிய சிவானந்த லஹரி : ரா. கணபதி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

மாவீரன் நெப்போலியன் : பூவை அமுதன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 22.00 )

பாவேந்தரின் பாரதி : வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 27.00 )

பாரதி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் : கங்கா ராமமூர்த்தி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 25.00 )

காந்திஜி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் : கங்கா ராமமூர்த்தி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 35.00 )

மகாத்மா காந்தி : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

வல்லபாய் படேல் : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

காமராஜர் : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

அறிஞர் அண்ணாத்துரை : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

சுபாஷ் சந்திரபோஸ் : புலவர். நாக. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 12.00 )

பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு : அ. மறைமலையான் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 90.00 )

இந்திரா காந்தி (வரலாறு) : அ. வேதாசலம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

இந்திராவை சந்தித்தோம் : மா. வரதராஜன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 7.00 )

வீரபாண்டிய கட்டபொம்மன் : புலவர். செந்துறை முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 12.00 )

திருவள்ளுவர் : புலவர். செந்துறை முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

திருப்பூர் குமரன் : புலவர். செந்துறை முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

சுப்பிரமணிய பாரதியார் : புலவர். செந்துறை முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

எட்டயபுரத்து தங்கம் : ஆர். பொன்னம்மாள் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 9.00 )

இராஜராஜ சோழன் வரலாறு : ஆர். பொன்னம்மாள் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 30.00 )

ராஜாஜி வாழ்க்கை வரலாறு : கௌசிகன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

டாக்டர். ராதாகிருஷ்ணன் : கௌசிகன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 20.00 )

லால்பகதூர் சாஸ்திரி : சம்பந்தம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 20.00 )

மௌலானா ஆசாத் : நீதிபதி மு.மு. இஸ்மாயில் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

பொன்னியின் புதல்வர் (பேராசிரியர் கல்கியின் வாழ்க்கை வரலாறு) : சுந்தர் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 240.00 )

ஓச்டூடுடி அ டூடிஞூஞு குடுஞுtஞிட : குதணஞீடச் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 50.00 )

கதைச் சக்கரவர்த்தி கல்கி : வி.ர. வசந்தன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 35.00 )

அறவிளக்கு அரசர் முத்தையா : டாக்டர். ஆறு. அழகப்பன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 8.00 )

எனது நாடக வாழ்க்கை : அவ்வை. தி.க. சண்முகம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 60.00 )

சீர்த்திருத்தச் செம்மல் வை.க. சண்முகனார் : கவியரசு முடியரசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 20.00 )

ஜெயப்பிரகாஷ் நாராயணன் : எஸ். நடராஜன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 4.50 )

பேனாவீரர் பிரேம்சந்த் : க.கிருஷ்ணமூர்த்தி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 35.00 )

அன்புப்பணிக்கு ஓர் அன்னை தெரசா : நீலமணி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 30.00 )

நினைவு அலைகள் ஐஐஐ : நெ.து. சுந்தரவடிவேலு , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 95.00 )

நினைவில் நிற்பவர்கள் : நெ.து. சுந்தரவடிவேலு , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 11.00 )

கல்வி நெறிக் காவலர் நெ.து.சு. : அருண. நடராஜன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 12.00 )

எனது வாழ்க்கை அனுபவங்கள் : ஏ.வி.எம். , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் 1) : ஏவி.எம். சரவணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 55.00 )

மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் 2) : ஏவி.எம். சரவணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் 3) : ஏவி.எம். சரவணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 45.00 )

மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் 4) :ஏவி.எம். சரவணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 70.00 )

உலகச் சுடர்மணிகள் : தே.ப. பெருமாள் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

மருத்துவ மேதைகள் : ரா. பாலகிருஷ்ணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

தென்னாட்டுப் புரட்சி : பொன். முத்துரமாலிங்கம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 45.00 )

புனித போப் ஜான் பால் ஐஐ : டாக்டர்.பி.எம். ரெக்ஸ், வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 6.00 )

போராட்டங்கள் (சாண்டில்யன் வாழ்க்கை அனுபவங்கள்) : சாண்டில்யன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 32.00 )

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.: வித்வான். வே. லட்சுமணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 70.00 )

பெரியோர் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் : பி.சி. கணேசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 20.00 )

பாட்டுக்கொரு பாரதிதாசன் : பி.சி. கணேசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 30.00 )

புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை போதிப்பது என்ன? : பி.சி கணேசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 11.00 )

செயற்கறிய செய்த சான்றோர்கள் : பாணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

முன்னேற்றத்தின் முன்னோடிகள் (இரண்டு தொகுதிகள்) : வாண்டுமாமா ,வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 24.00 )

வானதி திருநாவுக்கரசு 60 (152 அறிஞர்களின் கட்டுரைகள்) :வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 50.00 )

சாதனைச் சக÷õதர்கள் : டி. மரியஜோசப் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 25.00 )

இசை நடனக்கலை உலகில் பிறவி மேதைகள் : சு.ரா. , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

இசை வானில் இளைய தலைமுறை : சு.ரா. , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 22.00 )

ஸ்ரீ தியாராஜ அநபவங்கள் : சுவாமிநாத ஆத்ரேயன் ,வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 15.00 )

நாதசுர சக்ரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளை : துமிலன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 12.00 )

உலக ஒளி விளக்குகள் : டாக்டர். ம. சேசையா , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 16.00 )

சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு : பா. கமலக் கண்ணன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

நினைவு அலைகள் : அரங்க. சீனிவாசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 50.00 )

மனித தெய்வம் காந்தி காதை : அரங்க சீனிவாசன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 90.00 )

வெற்றப் படிகள் (தன் வரலாறு) : வானதி திருநாவுக்கரசு , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 75.00 )

ண்tஞுணீண் tணி குதஞிஞிஞுண்ண் (அண ச்தtணிஞடிணிஞ்ணூச்ணீடதூ ணிஞூ ஙச்ணச்tடடி கூடடிணூதணச்திதடுடுச்ணூச்ண்த): அ கூணூச்ணண்ஞிணூஞுச்tடிணிண ஞதூ ஈணூ. கு. எணிணீச்டூடிஞு கட.ஞீ, , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 150.00 )

இசை உலகின் இமயம் எம்.எஸ். : சாரதி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

பெர்னாட்ஷாவின் வாழ்வும் வாக்கும் : நா. எதிராஜ் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 10.00 )

மாமனிதர் மகாலிங்கம் : பி.வி.கிரி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 40.00 )

பத்மா சுப்ரமணியனம் ஒரு சகாப்தம் : சுந்தரி சந்தானம் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 50.00 )

உழைப்பும் உயர்வும் (நீல்கிரிஸ் நிறுவனத்தின் வரலாறும், வளர்ச்சியும்) : மு. சன்னியப்பன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 100.00 )

அப்பச்சி (ஏவி.எம். வாழ்க்கை வரலாறு) :ராணி மைந்தன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 100.00 )

வெற்றித் திருமகன் அப்துல் கலாம் : நெல்லை சு. முத்து , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 70.00 )

கவிக்குயில் சரோஜினி தேவி : க. லலிதாம்பாள் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 30.00 )

நானும் இந்த நூற்றாண்டும் : கவிஞர். வாலி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 250.00 )

முதலாளி (டி.ஆர். சுந்தரம் வாழ்க்கை வரலாறு) : ரா. வேங்கடசாமி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 120.00 )

சிரித்து வாழ வேண்டும் (நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள்) : தொகுப்பு@ எஸ். சந்திரமௌலி , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை :100.00 )

ஒரு நீதியின் கலைப்பயணம் (நீதியரசர் திரு. கே.எஸ். பக்தவத்சலத்தின் வாழ்க்கை வரலாறு): தொகுப்பு @ கல்யானி ராஜாராமன் , வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 250.00 )

குணங்களால் உயர்ந்த செம்மல் க. முத்துக்கருப்பன் : தொகுப்பு @ தி. கோவிந்தராசு, வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017.( விலை : 100.00 )

ஜே.கே. (தனிவழி நடந்த அற்புத ஞானி) : வெ. நாராயணசாமி , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 30.00 )

ஜே.கே. வாழ்வும் வாக்கும் : கமலா பத்மகிரீஸ்வரன் , நர்மதா பதிப்பகம், 23, நானா தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை 600 017. ( விலை: 60.00 )

நெப்போலியன் வாழ்வில்…:செவல்குளம் “ஆச்சா’ (புலவர் அ.சா.குருசாமி)ஆசிரியர்: புலவர் அ.சா.குருசாமி, வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, “ஜே’ பிளாக், 16 வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை40. (பக்கம்: டெமி 48. விலை:ரூ.30).

“நெப்போலியனின் தோற்றம் நாற்பதாயிரம் போர் வீரர்களுக்குச் சமம்’ என்று, அவரை எதிர்த்துப் போரிட்டு, வாட்டர்லுõ களத்தில் தோற்கடித்த ஆங்கிலேயத் தளபதி வெல்லிங்டனாலேயே புகழப்பட்ட பெருமை மிக்க மாவீரன் நெப்போலியனின் வீர வாழ்வின் முக்கியமான சம்பவங்களைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரிக்கும் நுõல் இது. பத்து தலைப்புகளில் முத்து முத்தான வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மன உரம் பெற உதவும் நுõல்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். நுõலாசிரியர்: ஏ.கே.சேஷய்யா. வெளியீடு: தமிழ்ச்சோலை பதிப்பகம், பு.எண்.12, பழைய எண்.16, சத்யபுரி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 264. விலை: ரூ.80).

பாவேந்தர் பாரதிதாசனார். நுõலாசிரியர்: சுந்தர சண்முகனார். வெளியீடு: பிரபாத் புக் ஹவுஸ், 7, பிருந்தாவன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 128. விலை: ரூ.40).

பாரதிதாசனின் சிந்தனைக் களஞ்சியம். நுõலாசிரியர்: எஸ்.குலசேகரன். (பக்கம்: 108. விலை: ரூ.35)

பாரதியின் நீதிகள்: நுõலாசிரியர்: எஸ்.குலசேகரன். (பக்கம்: 80. விலை: ரூ.25). இரு நுõல்களையும் வெளியிட்டோர்: மகேஸ்வரி பதிப்பகம், பெரிய காஞ்சிபுரம்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை4. (பக்கம்: 54. விலை: ரூ.12).

கத்தியின்றி ரத்தமின்றி! கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்நுõலாசிரியர்: லாரா கோப்பா. தமிழில்: மகாதேவன். வெளியீடு: விகடன் பிரசுரம் (விலை: ரூ.95).

இந்நுõலின் முன்னுரையில் பதிப்பாளர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியர், சுதந்திரத்துக்குப் பின்பும், ஏழை மக்களின் நல்வாழ்வுக்கு எப்படி போராடினர் என்பதை ஆசிரியர் குறிப் பிட்டுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்டு, நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள் பலர் சுதந்திரத்துக்குப் பின் உலகமயமாக்கல் கொள்கையால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர் என்பதை உணர்ந்து, அவர்களுக்காகப் போராடி வெற்றி பெற்றவர்களில், குறிப்பிடத்தக்கவர்களில், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியர் . இந்நுõலின் சிறப்பு, இத்தம்பதியினர் தங்கள் அனுபவங்களை நேரடியாக ஆசிரியர் மூலம் பகிர்ந்து கொள்வது. ஆசிரியர் லாரா கோப்பா, இத்தம்பதியினருடன் எல்லா இடங்களுக்கும் சென்று கண்டவற்றை, உணர்ந்தவற்றை மட்டுமல்லாது, அவர்களின் வெற்றியையும் விவரித்துள்ளார்.

கிருஷ்ணம்மாள் ஒரு ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்தவர். அவரை சந்தித்த உடனே தன் வாழ்க்கைத் துணைவி இவர் தான் என ஜெகந்நாதன் உறுதி பூண்டதற்கான காரணங்களை, அவரே விவரித்துள்ளார் (பக்கம்:56).பூதான இயக்கம், இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டம் முதலியவற்றில் இத்தம்பதியினர் அடைந்த வெற்றி, அகிம்சை வழியில் எதையும் சாதிக்கலாம் என்பதை நிலை நிறுத்துகிறது.வினோபாபாவின் தனித்தன்மை, மக்கள் மனதில் அன்பின் சுனையை ஊற்றெடுக்கச் செய்யும் அழகு. அவருடன் பூதான இயக்கத்தில் இத்தம்பதியினர் அடைந்த அனுபவங்கள், இக்கால இளைய சமுதாயத்தினர் படித்து உணர வேண்டியது, மிக அவசியம். நம் நாட்டின் பழம் பெரும் புராணங்கள் இதிகாசங்கள் முதலியவற்றில் உள்ள இக்காலத்திற்குத் தேவையான உண்மைகள் மிகத் தெளிவாக, மகாத்மா காந்தி, வினோபாபாவே போன்ற தலைவர்கள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளன.கண்மூடித்தனமான உலகமயமாக்கலை தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளை இந்நுõல் தோல் உரித்துக் காட்டுகிறது.அனைவரும் தவறாமல் படித்துப் பயன்பட வேண்டிய ஓர் அரிய நுõல் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர்கள். (பக்கம்: 204. விலை: ரூ.80).* இமயத்தைத் தொட்ட இந்தியத் தலைவர்கள் (பக்கம்: 236. விலை: ரூ.90). இரு நுõல்களையும் எழுதியவர்: செவல்குளம் ஆச்சா. வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, “ஜே’ பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை40.

திருப்பூர் குமரன், திரு.வி.க., வ.உ.சி., ஈ.வெ.ரா., அண்ணாதுரை, வ.வே.சு.அய்யர், ஜீவா ஆகிய தமிழகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளும், நேதாஜி, நேரு, ராஜாஜி, லால்பகதுõர் சாஸ்திரி, சரோஜினிதேவி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், வல்லபாய் படேல் ஆகிய இந்தியத் தலைவர்கள் வாழ்க்கைச் சரிதங்களும் அருமையான நடையில் எழுதப்பட்டுள்ளன. இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படித்துப் பயன்பெற வேண்டிய நுõல்கள் இவை.

விலங்கொடித்த வீரர்கள்:நுõலாசிரியர்: சுனிதா பூபாலன். வெளியீடு: ஸ்ரீ ஐஸ்வர்யா பப்ளிகேஷன், 40, பெருமாள் செட்டித் தெரு, ஆரணிப்பாளையம், ஆரணி632 301. (பக்கம்: 132. விலை: ரூ.35).

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கும் பல இன்னல்களை மேற்கொண்ட பத்து தியாகிகளின் வாழ்க்கைச் சுருக்கம். சுபாஷ் சந்திரபோசும், பெருந்தலைவர் காமராஜர் உட்பட உன்னதமான வீர புருஷர்களைப் பற்றி நிறைய தகவல்கள்.

ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாறு:ஆசிரியர்: ஆர்.வி.பதி. வெளியீடு: சுரா புக்ஸ் பிரைவேட் லிட், சென்னை40 . (பக்கம்: 116 விலை: ரூ.50)

“தமிழுக்கு முதலிடம்’, “மும்மொழித் திட்டம்’, “அரிஜன முன்னேற்றம்’, ஆண்டாள் கோஷ்டி என்று பெண்களுக்கு சிறப்பிடம், ஆலயங்களில் சித்திரான்னங்கள், ஊனமுற்றோரிடம் தனிக்கவனம், ஜாதி ஜன வேறுபாடின்மை என்று பற்பல சமூக சீர்திருத்தங்களை இப்பூதலத்தில் தம் வாழ்நாள் நெடுக நிலை நிறுத்தியவர் ஸ்ரீராமானுஜர்.அப்பெருந்தகையின் புனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை எளிய நடையில் சுருக்கமாக 66 தலைப்புகளில் சிறுவர்களுக்கும் புரியும் வண்ணம் இந்நுõல் அமைந்துள்ளது. பிரபந்த காயத்ரி என போற்றப்படும் ராமானுஜ நுõற்றந்தாதியும் இடம் பெற்றுள்ளது.ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் அவர்களின் அபிமானிகளுக்கும் இந்நுõல் ஓர் வரப்பிரசாதம்.

எந்தைபிரான் கம்பன்:ஆசிரியர்: அமரர் சா.கணேசன். தொகுப்பாசிரியர்: வேலுõர் எஸ்.என்.குப்புசாமி முதலியார். வெளியீடு: கம்பன் பதிப்பகம், 2, நான்காவது குறுக்குத் தெரு, கோபாலகிருஷ்ண நகர், வேலுõர்632 006. (பக்கம்: 250. விலை: ரூ.125).

கம்பர் புகழையும், கம்ப ராமாயணத்தின் உயர்வையும் பட்டிதொட்டிகளில் எல்லாம் பலரும் வளர்த்து, நிலைக்கச் செய்த பெரியோர்களில் “கம்பன் அடிப்பொடி’ என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் காரைக்குடி சா.கணேசனும் ஒருவர். அவர் பல சமயங்களில் எழுதிய கவிதைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நுõல் வெளிவந்துள்ளது. இந்நுõலில் காணும் கவிதைகளில் இருந்து கம்பன் அடிப்பொடியின் கம்பர் பற்று தெளிவாகத் தெரிகிறது. கம்பர் பயன்படுத்திய பனையோலை, எழுத்தாணி, ஆடை, குடை எனப் பல பொருட்களாகவும் தான் ஆக வேண்டும் என்று விரும்புவது இதற்கு எடுத்துக்காட்டாகும் (பக்.1417).கம்பன் பாடல்களை பரத நாட்டியத்தின் விளக்கவுரையாக விவரிக்கும் “கம்பன் அருளிய ராமாவதாரம் என்ற கட்டுரை அனைவரும் படித்து மகிழ வேண்டிய ஒன்றாகும் (பக்.174192). பல ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பாசிரியரின் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்:நுõலாசிரியர்: கோடீஸ்வரன். வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை (பக்கம்: 518. விலை: ரூ.150).

இயற்கையின் ஆட்சியில் மட்டுமின்றி மனித வாழ்விலும் தொடர்புறவுத் தத்துவம் பெரிதும் பயன் தருவது ஆகும். ஒவ்வொருவரும் எல்லாரும் காண்பது ஏதாவது ஒரு வகையில் தொடர்புறவு கொண்ட ஒரே உண்மையின் பல பகுதிகளே ஆகும் (பக்.419) என்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாழ்க்கை வரலாற்றை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் கோடீஸ்வரன்.ஆடம்பரத்தை விரும்பாதவர், அணு ஆயுதத்தை எதிர்த்தவர், காந்தியைப் போற்றியவர். “பிரபஞ்சம் இயங்குவதற்கான தத்துவம் ஒன்று கட்டாயம் இருந்து தான் ஆகவேண்டும்! அதைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்’ என்று கூறி “ஒன்றியப் புலக்கொள்கை’ என்னும் தத்துவத்தை தந்த மேதையின் இவ்வரலாற்று நுõலை இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும். இத்தகைய நுõல்கள் தமிழில் வர வேண்டியது இன்றைய காலக்கட்டத்தின் அவசியமாகும்.

சாதனைப் பெருமக்கள் ஐம்பதின்மர் : நுõலாசிரியர்: முனைவர் இளமாறன். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம் (பக்கம்: 222. விலை: ரூ.60).

தமிழகத்து அறிஞர் பெருமக்கள் பலரில் சாதனையாளர்கள் சிலரைப் பற்றி உணர்வுப்பூர்வமாக சுருக்கமாக வாழ்க்கைக் குறிப்புடன் சாதனையையும் எடுத்துரைக்கும் நுõல் இது. முகம் மாமணியும், அவருடைய வலது கையாக விளங்கும் இளமாறனும் அரிய சேவையைப் புரிந்துள்ளனர்.

அரவாணி என்று தன்னைக் கூறிக் கொள்வதை வெறுத்து “திருமங்கை’ என்று அழைக்குமாறு வேண்டிய உலகப் புகழ் நர்த்தகி நடராஜ் ஆகியோரின் அரிய செய்திகளை சுவைபடக் கூறுவது இந்நுõல். வாங்கிப் படியுங்கள். நீங்களும் சாதனையாளராகலாம்.

புரட்சி வீரர் எர்னஸ்டோ சேகுவேரா : நுõலாசிரியர்: எம்.ஏ.பழனியப்பன். வெளியீடு: செண்பகா பதிப்பகம், ப.எண்.24, கிருஷ்ணா தெரு (பக்கம்: 152. விலை: ரூ.60).

மிகக் குறுகிய காலத்தில் உலகம் போற்றும் புரட்சிகர சாதனைகளைப் புரிந்த சேகுவேராவின் வாழ்க்கையை இந்நுõல் சுவைபட படம் பிடித்துக் காட்டியுள்ளது. புரட்சியாளர்கள் போற்றும் நுõல்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி : நுõலாசிரியர்: நரேந்திரன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 48. விலை: ரூ.15)

உலக மகாக் கோடீஸ்வரரான மைக்ரோ சாப்ட் பில்கேட்சுக்கு, நம் நாட்டு நாராயணமூர்த்திக்கும் உள்ள சில ஒற்றுமைகள்: இருவருமே பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்த, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடும் உழைப்பு என்ற மூலதனத்தினால் உயர்ந்தவர்கள். செல்வச் செழிப்பை பறைசாற்ற விரும்பாதவர்கள். தகவல் தொழில், கணிப்பொறி நுட்பத்தின் மென்பொருள் துறையில் இருவருமே மகோன்னத சாதனையாளர்கள், சிகரத்தை எட்டியவர்கள்!

இன்றளவும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நாராயணமூர்த்தி, தமது நிறுவனத்திற்கு அவ்வப்போது உருவாகும் சவால்களை தமது புத்திக்கூர்மை, துணிவு, ஆக்க சிந்தனைகளை முன்வைத்து, மற்ற தோழர்களுடன் இணைந்து, எதிர் கொண்டு மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

ஒரு இந்தியர் தொழில் துறையில் புதுமைகளைச் செய்திட இயலுமென்று உலகிற்கு நிரூபித்தவர். தனிப்பெரும் சிறப்புகள் அவரது மனித நேயம், சமூக மேம்பாட்டுக்கென அவர் ஆற்றிவரும் நற்பணிகள், ஊழியர்கள்பால் கொண்ட உண்மையான தோழமை, இவையே நிறுவனத்தின் பங்குகளை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள வைத்ததுடன், அவர்களைப் பகுதிச் சொந்தக்காரர்களாகவும் உயர்த்தியது. இந்தியத் தொழில் துறையில் இத்தகைய மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட பெருமை அவரைச் சார்ந்தது.

கல்லுõரி மாணவர்கள் முதல் ஆசிரியர் பெருமக்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தன்னம்பிக்கையை வளர்த்து, உற்சாகமூட்டும் முன்னேற்ற நுõலாகும். அவரைத் தேடி வந்த சில முக்கிய விருதுகளையும் அடுத்த பதிப்பில் ஆசிரியர் குறிப்பிட வேண்டும்.

சரித்திர நாயகர் எம்.ஜி.ஆரின் சாதனைகள்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 22.00

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.: வெளியீடு : மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை : 34.00

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 50.00

சிவாஜியின் நடிப்பிலக்கணம்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 65.00

அகிலம் போற்றும் அறிவியல் அறிஞர்கள் : நுõலாசிரியர்: கவிஞர் முகில்வண்ணன். வெளியீடு: சுப்ரபாத் பப்ளிஷர்ஸ், 104(3), பெரியார் பாதை, சென்னை94. (பக்கம்: 157. விலை: ரூ.35)

மக்களுக்கு மிகவும் தேவையான பயனுள்ள தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, மின்சக்தி, நீராவி இன்ஜின் போன்ற சாதனங்களுடன் அம்மை நோய் தடுப்புஊசி, ரேபீஸ் எனும் கொடிய நோய்க்கான மருந்து வகைகளையும் கண்டுபிடித்த 28 அறிவியல் மாமேதைகளின் வாழ்க்கை வரலாறு மிகச் சுருக்கமாக எளிய நடையில் எழுதி வழங்கப்பட்டுள்ளது. இதில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் சர்.சி.வி.ராமன் மற்றும் சர் ஜகதீஷ் சந்திரபோசை பற்றிய குறிப்புகளும் அடங்கும்.

உலகை உருவாக்கிய விஞ்ஞான மேதைகள் 50 பேர் : நுõலாசிரியர்கள்: வெங்கட்ராவ்பாலு, சி.தேவதாஸ் (ஓய்வு பெற்ற வட்டாட்சியர்). வெளியீடு: நற்பவி பிரசுரம், 5713, பசுல்லா சாலை (பக்கம்: 144. விலை: ரூ.50)

அரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய பல நாட்டு விஞ்ஞானிகளது வாழ்க்கை சுருக்கமும் அவர்களின் சாதனையையும் விளக்கும் இந்த நுõல் இளைய தலைமுறையினரின் உயர்வுக்கு உறுதுணையாய் இருக்கும். அந்த அறிஞர்களது விரிவான வாழ்க்கை சரிதத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலைக் கிளறிவிடும் இப்புத்தகம்

உலகத் திரைப்பட மேதை சார்லின் சாப்ளின் : நுõலாசிரியர்: பசுமைக் குமார். வெளியீடு: ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை600 017. (பக்கம்: 112. விலை: ரூ.30)

உலகத்து உயர்ந்த சினிமாப் படங்களைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில், முன்னணியில் இருப்பவர் பசுமைக்குமார். சாப்ளினைப் பற்றியும் அருமையான ஒரு நுõலைத் தந்திருக்கிறார். விலை மலிவான இந்த நுõலில் பல விலை மதிக்க முடியாத செய்திகள் உள்ளன. சார்லின் சாப்ளின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான சம்பவங்களைச் சொல்வதோடு அவரது முக்கியமான படங்களைப் பற்றியும் சிறப்பாகச் சொல்கிறார் பசுமைக் குமார். சினிமாப் பொக்கிஷம்.

உயர்ந்த மனிதன் : நுõலாசிரியர்: பெருதுளசி பழனிவேல். வெளியீடு: பிரஸ் உரிமை வெளியீடு, எண்.200, பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை94. (பக்கம்: 100. விலை: ரூ.30).

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வரலாற்றை சுவையாக எழுதி இருக்கிறார் துளசி பழனிவேல். சிவாஜியின் வாழ்க்கைப் பாதை கல்லும், முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதை தான்! அதன் சிராய்ப்புகளில் தான் அவர் தனது கலை உலகப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்று இருக்கிறார் என்பதை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு சினிமாப் பொக்கிஷம்.

ஙஐகுஐON க்NஃஐMஐகூஉஈ (ஆங்கில நுõல்) நுõலாசிரியர்: சுஜாய் குப்தா. வெளியீடு: ப்ளூ பென்சில் பதிப்பகம், கோல்கட்டா700 029. (பக்கம்: 321. விலை: குறிப்பிடப்படவில்லை)

கடந்த 1918ல் பிறந்து 2000ல் மறைந்த எம்.ஏ.சிதம்பரத்தின் வாழ்க்கை வரலாறு, 15 அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கும் முறை ஆச்சரியப்படும்படி அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண வாழ்க்கை வரலாறல்ல. ஒரு சிறந்த மனிதர், பன்முக மேதை, தொழிலதிபர் என்று நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் மறைந்து கொண்டிருக்கும் ஒரு மேதை வாழ்ந்த பாதை.

செட்டியார் பாரம்பரியத்தில் ஆரம்பித்து தொழில் மேதையாக, விளையாட்டார்வத்துடன் செயல்பட்டு, செல்வந்தரான போதிலும் எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடித்து, செல்வத்தைப் பெருக்கிக் கொண்டது மட்டுமின்றி, பல உன்னத செயல்களையும் செய்து வாழ்ந்த மனிதரைப் பற்றியது. அவரது தீர்க்க தரித்துவம், உன்னத நோக்கு முதலியவற்றை, குடும்பத்தைச் சாராத, ஏன் தமிழகத்தையே சாராத ஒரு மனிதர் அதிசயத்துடன் பார்க்கும் கண்காட்சி! அழகு என்னவெனில், நம்மையும் ஒரு அதிசயக் கண்ணோட்டத்தில் அவர் பார்க்க வைப்பது தான்! விமான ஓட்டியாகவும் பயிற்சி பெற்றிருந்த சிதம்பரம், அவரது முன்னோடிகளான சில சிறந்த செட்டியார்களைப் போல, கானாடு காத்தானைச் சிறப்பித்துள்ளார்.

பி.எஸ்., ஹைஸ் ஸ்கூலில் படிக்கையிலேயே அவருக்கிருந்த கிரிக்கெட் ஆர்வம், 1933ல் அடையார் கிரிக்கெட் கிளப்பின் தோற்றம், அவரது ஹாக்கி விளையாட்டு, வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரியிடம் கற்றுத் தேர்தல், சவுத் இந்தியா கார்ப்பரேஷனில் சேர்தல், இரண்டாவது உலகப்போரில் அவர்களது வங்கியும், பர்மாவில் அவர்களது இடங்களை இழந்து விட்டாலும், மனந்தளராது முன்னேறுதல் முதலிய விவரங்களை இந்நுõலில் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.

ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் ஆலோசனையுடன் சிதம்பரம் சவுதர்ன் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் ஆரம்பித்த விவரமும், அதில் அவரது முயற்சியும், பின்னர் அவரது வெற்றிகளும் தரப்பட்டுள்ள இந்நுõலின் முக்கிய அம்சம். அதனுள் தரப்பட்டுள்ள பல குறிப்புகள் தாம். தவிரவும் விவேக் தாஸ் என்ற ஒரு சிறந்த புகைப்பட நிபுணர் எடுத்துள்ள புகைப்படங்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. அவருடன் நாமும் சேர்ந்து “அடையார் ஹவுஸ்’க்கு போய் வந்த அனுபவம் ஏற்படும் வகையில் உள்ளது. சிதம்பரத்தின் குடும்பப் படங்கள் எளிமையும், நிறைவையும் காட்டுவதாக உள்ளன. போற்றப்பட வேண்டியவரைப் பற்றிய போற்றப்பட வேண்டிய முயற்சி!

அMஅகீஅ ஓஅஙஙுஅM (ஆங்கில நுõல்) யோகி ராம்சுரத் குமார் வரலாறு : நுõலாசிரியர்: எஸ்.பார்த்தசாரதி. பிரதிகள் கிடைக்குமிடம்: எஸ்.பார்த்தசாரதி, 246, திருவூடல் தெரு, திருவண்ணாமலை606 601. (பக்கம்: 445. விலை: குறிப்பிடவில்லை)

திருவண்ணாமலை திருத்தலத்திற்கு பல சிறப்புகள் உண்டு. “தொட்டது துலங்கும்’ சேஷாத்ரி சுவாமிகளும், “நான் என்பது என்ன, எது’ என்பதற்கு விளக்கமளித்த ரமண மகரிஷியும் நடமாடிய பூமி. அக்னி திருத்தலம். முக்தி திருத்தலம்.

இத்துணை சிறப்புக்களுக்குப் பிறகு, நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்தில், கையில் ஒரு விசிறியுடன், தன்னை ஒரு “பிச்சைக்காரன்’ என்று கூறியவாறு பல்லாயிரக்கணக்கான ஆன்மிக அன்பர்களுக்கு “மன திருப்தி’யை ஏற்படுத்திய, விசிறிச் சாமியார், யோகி ராம்சுரத் குமார் வாழ்ந்து வழிகாட்டிய, முக்தியடைந்த அற்புதம் நிகழ்ந்ததும் இங்கு தான்.

இவரைப் பற்றிய பூர்வாச்ரம தகவல்களைத் தெரிந்து கொள்வதில் அவருடைய அன்பர்களே கூட அதிகம் ஆர்வம் காட்டியதில்லை. யோகியும் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ள விரும்பாதவராக வாழ்ந்து வந்தார்.

இத்தகைய ஒரு அமானுஷ்யமான சுய விளம்பரத்தில் சிறிதும் ஆர்வமில்லாத ஆன்மிக புருஷனைப் பற்றி, அவருடன் நெருங்கியிருந்து, துணைபுரிந்து தொண்டாற்றிய எஸ்.பார்த்தசாரதி இந்த அமர காவியத்தை ஆங்கிலத்தில் உரைநடையாக நமக்கு வழங்கியிருக்கிறார். வணக்கத்திற்குரிய ஒரு யோகியின் வாழ்க்கையை, ஆன்மிக அனுபவத்தை, இத்துணை சிறப்பாக எழுத்தில் வடிக்க முடியுமா என்ற கேள்வி பிறக்கிறது. அற்புதமான வரலாறு.

உலகத் தரத்திற்கு இணையாக புத்தகத் தயாரிப்பு. மிகச் சிறந்த “பயாகிரபி’ வாழ்க்கை (வரலாறு) எழுதுபவர்களுடன் இணைத்துப் பேசத் துõண்டும், சம்பவக் கோர்வைகளின் சங்கிலித் தொடர்பு. யோகி, உ.பி., மாநிலத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியமும் ஆசிரியர் பயிற்சியும் படித்துத் தேறியவர். பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திருமணம் முடித்து குடும்ப வாழ்வில் ஈடுபட்டு மக்களின் மழலை கேட்டு மகிழ்ந்தவர். இருந்தும் அவருக்குள் ஒரு ஆன்மிகப் பொறி உயிர்ப்புடன் இருந்தது. பாரதத்தின் தெற்குப் பகுதிக்கு அவரை வழிகாட்டி அனுப்பி வைக்கிறார், ஒரு குருநாதன். திருக்கோவிலுõர் தபோவனம் சுவாமிகள், ரமண மகரிஷி, மகாயோகி அரவிந்தர் என அவருடைய ஆன்மிக வழிகாட்டிகளுடன் நேரில் சென்று பழகுகிறார். ஆன்மிகப் பக்குவம் கிடைக்கப் பெறுகிறது. அடக்கம் விண் முட்டும் அளவு அவரிடம் அடைக்கலமாகி முடங்கி விடுகிறது. ஒரு விசிறி “பிச்சைக்காரன்’ என்று தன்னைப் பற்றிய ஒரு பிரகடனம். எல்லாம் “என் அப்பன் செயல்’ என்று சதா சர்வ காலமும் அறிவுரை.

இந்த மகத்தான யோகியைப் பற்றி, இவருடைய ஆன்மிகப் பேராற்றலைப் புரிந்து கொண்ட தமிழறிஞர்களான தெ.பொ.மீ., கி.வா.ஜ., விஞ்ஞான வேதாந்தியான ஜே.கே., எனப் பல்துறை அறிஞர்களின் கருத்துக்களை நேர்த்தியாக இணைத்து தொகுக்கப்பட்ட வாடாத, இலக்கிய பூச்சரம் இந்த நுõல்.

எஸ்.பார்த்தசாரதியின் இந்த இமாலயப் பணிக்கு யோகியின் அன்பர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கின்றனர்.


பயண கட்டுரை1 2நான் கண்ட ரஷ்யா : ஆசிரியர் : அகிலன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்
மலேசிய, சிங்கப்பூரில்… : ஆசிரியர் : அகிலன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்
ஆஸ்திரேலியப் பயண அனுபவங்கள்:நுõலாசிரியர்: ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம் (பக்கம்: 96. விலை: ரூ.30).
சோமசுந்தரம் தன் குடும்பத்துடன் எட்டு நாட்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, பார்த்து ரசித்தவைகள் நுõல் உருவம் பெற்றுள்ளது. லேனா தமிழ்வாணன் நுõலுக்கு அணிந்துரை வழங்கி பெருமை சேர்த்துள்ளார். 16 பக்க வண்ணப் புகைப்படங்களும் உள்ளன.
இன்னொரு யுகசந்தி:நுõலாசிரியர்: இயகோகா சுப்ரமணியம். வெளியீடு: விஜயா பதிப்பகம் (பக்கம்: 264. விலை: ரூ.75).சுவைபட எழுதியுள்ள மேனாட்டுப் பயண நுõல்.ஆஸ்திரேலியாவில் தமிழர் நினைவுகள்:நுõலாசிரியர்: கலாநிதி ஆர்.கந்தையா. வெளியீடு: நடனாலயா பப்ளிகேஷன், 17, எட்வர்ட் தெரு ஸ்டிராத் பீல்டு சவுத், ஆஸ்திரேலியா. (பக்கம்: 182.)
“தமிழ் மொழியையும், அதன் பண்பையும், பாராட்டத்தக்க அதன் கலாசாரத்தையும் அதிகம் மதித்து, அதைப் போற்றிப் பாதுகாப்பவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்’ என்னும் கசப்பான உண்மைக்குச் சான்றானவர், இந்த நுõலின் ஆசிரியர்! இலங்கையில் பிறந்து, வளர்ந்து, தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய கந்தையா அவர்கள் ஓய்வுக்குப் பின் ஆஸ்திரேலியா சென்று அருந்தமிழில் நுõல்கள் எழுதி வருகிறார்.நான்கு இயல்களில் 49 தலைப்புகளில் அருமையான “ஆஸ்திரேலியா’ நாட்டையே நம் கண் எதிரில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். இங்கு 20 இந்துக் கோவில்களும், 31 தமிழ்ப் பள்ளிகளும் 24,067 தமிழர்களும் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் பலவற்றை அள்ளித் தெளித்துள்ளார்.பரதநாட்டியம், கர்நாடக இசைக்கு அவர்கள் தரும் மதிப்பு மிகப் பெரியதாக உள்ளது. இடை இடையே வண்ணமிகு படங்கள், வார்த்தைகளுக்கு உயிர் தருகின்றன. நம்மை அங்கேயே அழைத்துச் சென்று விடுகின்றன. விசா இல்லாமல் காசில்லாமல் ஆஸ்திரேலியாவைக் கண்டு ஆனந்தம் பெற வைக்கும் நுõல்.
ஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்:நுõலாசிரியர்: கி.ராகவசாமி. வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம் (பக்கம்: 256. விலை: ரூ.65).
தனது அமெரிக்கப் பயணத்தில் கண்டவைகளையும்; கேட்டவைகளையும்; படித்துணர்ந்தவைகளையும் தொகுத்து ஒரு நாவல் வடிவில் தந்துள்ளார் ஆசிரியர். ஆசிரியர் 30 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்கால் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராக இருந்து பல நல்ல அறச்செயல்களை தொடர்ந்து தொய்வில்லாது சேவை புரிபவர். ரோட்டரி சங்கம் துவங்கிய இடம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ என்ற நகரத்தில் தான். அங்குள்ள அடுக்குமாடி ஒன்றின் 711ம் எண் அறையில் தான் முதன் முதலில் ரோட்டரி சங்கம் துவக்கப்பட்டது. அந்த அறையை ஒரு தெய்வீக திருத்தலமாகவே கருதி, அந்த அறையை காண வேண்டும் என்ற வேட்கையின் விளைவு தான் இந்த அமெரிக்கப் பயணம் என மனம் லயித்துச் சொல்கிறார்.”அமெரிக்கர்கள் யாரையும் எதிலும் நம்பக் கூடிய சுபாவம் கொண்டவர்கள்’ (பக். 222), “முதலாளித்துவம் என்றால் திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்’ (பக். 205) என்ற பல செய்திகளைக் காணலாம்.
தாய்லாந்து தேவதைகள் ; இனிக்கும் 21 இரவுகள் : நுõலாசிரியர்: புஷ்பா தங்கதுரை. வெளியீடு: ஆர்.எஸ்.வி., பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜானிகான் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 96. விலை: ரூ.30).
உலகத்துப் பெண்களிலேயே பேரழகிகள் தாய்லாந்து தேசத்து நங்கையர். பொதுவாக கீழை நாடுகளில் இரவுக் களியாட்டங்களில் கிறங்க வைப்பவை. “இனிக்கும் 21 இரவுகள்’ பற்றி தான் கண்ட அனுபவங்களை தீட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்) : நுõலாசிரியர்: அமரர் கல்கி. வெளியீடு: வானதி பதிப்பகம் (பக்கம்: 220. விலை: ரூ.70)
ஆனந்த விகடன் ஆசிரியராக கல்கி பணியாற்றியபோது இலங்கை பயணத்தை மேற்கொண்டார். உடன் சென்றவர் இப்போது போல் போட்டோகிராபர் அல்ல. பிரபல ஓவியர் மாலி. இலங்கையை பொற்சித்திரமாக கல்கி தீட்டினார் என்றால் ஓவியர் மாலி இலங்கை மக்களின் உருவங்களை ஓவியமாகத் தீட்டித் கொண்டு வந்து விட்டார். கல்கி பிரியர்களுக்கு ஒரு கற்கண்டு. சுவைத்து மகிழலாம். அந்த நாள் நினைவுகளில் மூழ்கலாம்.
நினைத்தாலே இனிக்கும் மலேசியா சிங்கப்பூர் : நுõலாசிரியர்: சா .சுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்., (ஓய்வு), வெளியீடு: இராமானுஜம் வேளாண்மை மற்றும் மனித ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம்
குக்கிராமத்தில் பிறந்தவர் ஆசிரியர். மக்களுக்குச் சேவை செய்வதே இவர் தொழில். மலேசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த போது கண்டதைக் கேட்டதை எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஊழலில் வலம் வருபவர்களிடையே, எவ்வித பிரதி பிரயோஜனமும் எதிர்பார்க்காமல், சொத்து சேர்க்காமல், பிற்பட்டோரைக் காக்க முயன்றவர் என்று இவரைப் பற்றிய குறிப்பு நுõலின் தரத்தை உயர்த்துகிறது.

இன்னொரு யுகசந்தி :நுõலாசிரியர்: இயகோகா சுப்பிரமணியம், வெளியீடு: விஜயா பதிப்பகம் (பக்கம்: 264. விலை: ரூ.75.)

பாரீஸ், சுவிட்சர்லாந்து, லண்டன், இத்தாலி முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்ததைப் பயண நுõலாக்கியுள்ளார் ஆசிரியர். பயண நுõலைத் தொடங்கும்போது தனது தாயாரைப் பாரீசுக்கு அழைத்துச் சென்ற அனுபவத்துடன் தொடங்கியிருப்பது புதுமையை வழங்குவதால் தொடர்ந்து படிக்கத் தோன்றுகிறது.பயணம் சென்ற ஒவ்வோர் ஊரிலும் உள்ள கலைச் சிறப்புகளையும், தொழில் வளத்தையும் தெரிவித்திருப்பதுடன் அங்கங்கே நடைபெறும் திருட்டு முதலான குற்றங்களைத் தெரிவித்திருப்பதும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. பயண இலக்கிய நுõல்களில் படிக்கப்பட வேண்டிய நுõல் இது என்பது குறிப்பிடத்தக்கது.இயல்பாக அமைந்துள்ள கொங்குத் தமிழ் ஒரு நாவலைப் படிப்பது போன்ற எண்ணத்தை தருவதுடன் ஆர்வத்தைத் துõண்டுகிறது.

தேசாந்திரி:நுõலாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன். வெளியீடு: விகடன் பிரசுரம் (பக்கம்: 272. விலை: ரூ.110).

பயணம், எல்லாருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத் தன்மையும், கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும். அப்படிப் பயணத்தை விரும்பி ஊர் சுற்றி பலவற்றைப் பார்த்தும் பிரமித்த ராமகிருஷ்ணன், அந்த அற்புத அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.மலைகள், ஆறுகள், அருவிகள், பாலைவனம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையும் சாரநாத் ஸ்துõபி, சமணப் படுகைகள், ஆர்மீனிய தேவாலயம் போன்ற வரலாற்றுச் சின்னங்களையும் தன் எழுத்தால் ரசிக்க வைக்கிறார்.


அதிசய ஆலயங்கள் 60 (தமிழகத் திருக்கோவில்கள் தல வரலாறு):நுõலாசிரியர்: வே.ராமநாதன். வெளியீடு: தமிழ்ப் புத்தகாலயம், 34, சாரங்கபாணி தெரு (விலை: ரூ.60).திருத்தல உலா செல்பவர்களுக்காக 71 திருத்தலங்களைப் பற்றி விளக்கமாகவும், வரலாற்று குறிப்புகளுடனும் இந்நுõலில் விரிவாக தந்துள்ளார் ஆசிரியர்.இவர் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பணிபுரிந்த காலங்களில் பல விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றவர். சமயப் பணியிலும் ஈடுபாடு கொண்டு பலரும் அறிந்ததும் அறியாததுமான பல கோவில்களைப் பற்றிய விவரங்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் படைத்தளித்துள்ளது சிறப்பாக அமைந்திருக்கிறது.ரோமியோ ஜூலியட் : வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம் , .
வரலாற்றுப் பாதையில்… (கட்டுரைகள் புத்தகம்1):நுõலாசிரியர்: த.ஸ்டாலின் குணசேகரன். வெளியீடு: குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 208. விலை: ரூ.80).கட்டுரை ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல், இந்நுõலில் உள்ள 100 கட்டுரைகளும், நாட்டுப் பற்று, சமூக உணர்வு, தியாக சிந்தனை, கடின உழைப்பு, தன்னம்பிக் கை, மனித நேயம், உலகப் பார்வை ஆகியவை படிப்போர் நெஞ்சங்களில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளன.சுதந்திரப் போராட்டம், உலகப் போர், அறிவியல் அற்புதங்கள், நாட்டை உலுக்கிய புரட்சிகள் ஆகிய பல தரப்பட்ட விஷயங்கள், அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மனிதர்கள் பற்றி எல்லாம், சுருக்கமாக, அதே நேரத்தில் அவசியமான தகவல்கள் அனைத்தையும், சுவைபட, எளிய தமிழ் நடையில் தொகுத்து வழங்கியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் பாஷ்யம், கணித மேதை ராமானுஜன், சுவாமி விவேகானந்தர், ஜி.சுப்ரமணிய ஐயர், வ.உ.சி., டார்வின் ஆகியோர் பற்றிய கட்டுரைகளில் பல புதிய தகவல்கள் உள்ளன. பொது உடைமைக் கொள்கையாளரான ஆசிரியர் தனது சொந்தக் கருத்துக்களை புகுத்தாமல், உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்லியுள்ள நேர்மை பாராட்டுக்குரியது. கட்டுரைகள் மிகச் சிறியதாக இருப்பதால் வாசகர்கள் சிரமப்படாமல் நிறைய தகவல்களைப் படிக்கலாம். இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

இந்திய வரலாறு 1000 கேள்வியும் பதிலும் இலக்கியத் துறையில் 1000 கேள்வியும் பதிலும் (இரு நுõல்கள்) :நுõலாசிரியர்: சா.அனந்தகுமார். வெளியீடு: அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை4. (ஒவ் வொன்றும் பக்கம்: 96. விலை: 30).

இரண்டு நுõல்களுமே பயனுள்ள அரிய தகவல்கள் பலவற்றை அறிய வைக்கும் விதமாய் அமைந்துள்ளன. முதல் நுõலில் அலெக்சாண்டர் காலம் துவங்கி இன்றைய வரையிலான இந்திய வரலாற்றுச் செய்திகள் கேள்வி பதில் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நுõலில் சங்க இலக்கியம் முதல் சமீப கால இலக்கியம் மற்றும் இலக்கியவாதிகள் பற்றிய தகவல்கள் வரை முக்கியமான செய்திகள் உள்ளன. உலகளாவிய செய்திகளும் உண்டு. பொது அறிவுப் போட்டிகளில் பங்கு பெறுவோர் மட்டுமின்றி, மாணவர்களுக்கும் மிகப் பயன் அளிக்கும் நுõல் இது. வரலாறும் இலக்கியமும் அறிந்தால் வாழ்வு சிறக்கும் தானே!

தெலுங்கானா போராட்டம் : ஆசிரியர் : வி.பி.சிந்தன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 30ரூ )
புரட்சி : ஆசிரியர் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 12ரூ )
பகத்சிங்கும் புரட்சித் தோழர்களும் : ஆசிரியர் : சிவவர்மா , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 85ரூ )
ரஷ்யப் புரட்சியின் வரலாறு : ஆசிரியர் : வி.பி.சிந்தன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 22ரூ )
சமூகம் ஒரு மறுபார்வை : ஆசிரியர் : மைதிலி சிவராமன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 32ரூ )
இந்தியாவும் இந்து மதமும் : ஆசிரியர் : பி.ஆர்.பரமேஸ்வரன் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 35ரூ )
தூக்கு மேடைக் குறிப்பு : ஆசிரியர் : ஜூலிஸ் பூசிக் , வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 45ரூ)
வால்காவிலிருந்து கங்கை வரை : ஆசிரியர் : ராகுல் ஜி, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 75.00)
பொது உடைமைதான் என்ன ? ஆசிரியர் : ராகுல் ஜி, வெளியீடு : தமிழ் புத்தகாலயம்( விலை 30.00)

தந்திரோபதி:ஆசிரியர்: ஆங்கிலத்தில் டாக்டர் ஆர்.பி.உபாத்யாய். தமிழாக்கம்: இரா. சு.முத்து, வெளியீடு: சுரா புக்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. (பக்கம்: 216. விலை: ரூ.90).
பாரத நாடு பழங்காலத் தில் இருந்தே மனித குலத் தின் உடல் நலத்திற்கு, எத்தகைய பயிற்சிகள் தேவை என் பதை கலைகளின் மூலமும், யோகாசனங்கள் மூலமும் விளங்க எடுத்துரைத்துள் ளது. இந்த வரிசையில், சுராவின் “தந்திரோபதி’ ஒரு முக் கியமான மைல்கல் எனலாம்.கையினால் செய்யப்படும் முத்திரைகளையும், ஆசனங்களையும் விளக்கி அவற்றின் பயன்பாட்டையும், பாதிப் பையும் எடுத்துரைக்கிறார். முத்திரைகள் வெளிப்படுத் தும் உணர்ச்சியையும், அவற் றுக்கான ஸ்லோகங்களையும் பக்கம்11ல் தெளிவாக்கிறார். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரே வகையான அணுக்களின் கூட்டிணைவிற்கும், முத்திரைகளுக் கும் உள்ள தொடர்பை கூறி முத்திரைகளின் மூலம் வரும் தெய்வீக சக்தியையும் விளக் குகிறார். படங்கள் மூலம், எளிதாக முத்திரைகளைக் காண்பித்து அவற்றின் செயல் முறை, கால அளவு, பயன் கள் மற்றும் அவற்றை செய் யும்போது பின்பற்ற வேண் டிய எச்சரிக்கைகளையும் விரிவாக எடுத்துரைப்பது நுõலின் தனித்தன்மை ஆகும்.அத்தியாயம் 2ல் இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த தந்திரமார்க்கமானது, உன்னத மனித நிலைக்கு சிறந்த மார்க் கம் என்பதைக் கூறி யோகிகள் இதைத் தான் பின்பற்றி ஆன்மிக வளத்துடன் இருந்தனர் என்பதையும், ஆன்மிகம் என்பது மதமல்ல, அது கொள்கை மற்றும் கோட் பாடுகளின் அடிப்படையில் அமைந்த, அதே சமயம் அறிவியல் பூர்வமானது என்பதையும் எல்லாரும் புரிந்து கொள் ளும் வண்ணம் விளக்கப் பட்டிருக்கிறது.அறிவியல் அடிப்படையில் நமது கலாசாரத்தின் முக் கியத்துவத்தை விளக்கும் நுõல்.

இரண்டாம் உலகப் போர்:நுõலாசிரியர்: சுப்ரமணியம் சந்திரன். வெளியீடு: சாந்தி பதிப்பகம், சென்னை2. (பக்கம்: 336. விலை: ரூ.150).

உலகப் போர் வரலாற்று ஏடுகளில் நிலையாக இடம் பெறுவதாகும். கி.பி.1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போர், அகில உலகையும் கதி கலங்க வைத்தது. வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் உலக நிகழ்வுகள், தலைவர்களின் செயல்கள், ஜனநாயகம், சர்வாதிகாரத்தின் இடையே கிளர்ந்த போர் மோதல், விளைந்த 99 உடன்படிக்கையால் எழுந்த சர்ச்சை என்ற எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி நுõலாக ஆசிரியர் அரும்பாடுபட்டு சமைத்துள்ளார்.போலந்து படை எடுப்பில் தொடங்கி ரஷ்யா பின்லாந்து போர், நார்வே, டென்மார்க், ஹாலந்து படையெடுப்புகள், பிரான்ஸ் அடி பணிதல், மத்திய தரைக்கடல், மாஸ்கோ முற்றுகை, கசபிளாங்கா மாநாடு, பல்ஜ் மோதல், ரைன் ஊடுருவல், ஜெர்மனியின் சரண் அடைவு, அணுகுண்டு வீச்சு, ஜப்பான் சரணடைதல் என்று 36 தலைப்புகளில் நடந்தவற்றை வாசகர் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.போர் நாயகர்கள் என்ற பிற்சேர்க்கையில் ஹிட்லர், சர்ச்சில் ரூஸ்வெல்ட், ஸ்டாலின், முசோலினி, டோஷோ, டிகால், டிட்டோ, சுபாஷ் சந்திரபோஸ் என்று 74 பிரதான புள்ளிகளின் சிறு குறிப்பையும் தந்துள்ளார். உள்நாட்டுத் தளபதி ஸ்டாபன்பெர்க் ஹிட்லரைக் கொல்ல சதி செய்ததும் அதிலிருந்து ஹிட்லர் தப்பியதும் (பக்.206207) அழகாக விளக்கியுள்ளார். உலக வரலாற்றில் உலா காண விரும்புவோர் படிக்க வேண்டிய நுõல்.
தமிழகக் கோட்டைகள்:ஆசிரியர்: விட்டல் ராவ், வெளியீடு: அம்ருதா பதிப் பகம், சென்னை116. ( பக்கம்:198 விலை: ரூ .150)
நல்ல தொரு விமர்சகரும், ஓவியம், சிற்பங்களில் தேர்ந்தவர் என்ற முறையில் சிறப்பாக இந்த நுõல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாமக்கல் அனுமாரின் உச்சந்தலையில் கற்றைக் குடுமி, வேலுõர்க் கோட்டையில் அமைந்த கோவிலில் உள்ள ஜ்வரகண்டேச்வரர் கல்யாண மண்டபம் பற்றிய தகவல்கள், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் வசித்த மண்டபத்தின் எளிமை என்று பல விஷயங்கள் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள்.
சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்: நுõலாசிரியர்: மயிலை சீனி.வேங்கடசாமி, வெளியீடு: பாவை பிரின்டர்ஸ் (பி) லிட்., 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 156. விலை: ரூ.55).
ஆசிரியர் தமிழ் மொழி ஆர்வலர். 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1) தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள், (2)சங்க நுõல்களில் தமிழர் வாழ்க்கை, (3) சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டினமும், மதுரை மாநகரமும் என மூன்று தலைப்புக்களில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் நுõல் வடிவத்தில் வெளிவந்துள்ளது.சர்ச்சைக்குரிய, ஆதாரங்களைச் சேகரிப்பதில் மிகவும் சிக்கலும் சிரமமும் உள்ள கால ஆராய்ச்சியில் தனது அறிவாற்றலையும், சக்தியையும் நேரத்தையும் செலவிட்டிருக்கிறார். தமிழ் இலக்கியத்தைப் படிக்கத் தமிழனையே பக்குவப்படுத்த வேண்டும் என்று சொல்லத் துõண்டும் நுõல் இது.
இளையான்குடி வரலாறு : ஆசிரியர்: முகம்மது அனீபா, அமீர் அலி, சண்முகம். வெளியீடு: தணல் பதிப்பகம் 39/13, ஷேக் தாவூத் தெரு, சென்னை14. (பக்கம்: 320. விலை:ரூ.120)
பேர் பெற்றவர் தன் வரலாற்றை எழுதுவர். ஆனால் “ஊர்’ வரலாற்றை “ஊரும் பேரும்’ தலைப்பில் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோர் பெயர் ஆராய்ச்சியோடு மட்டும் எழுதியுள்ளனர்.
ஊரின் ஒட்டுமொத்தமான சமூக, பொருளாதார, இலக்கியப் பின்னணியுடன் எழுதப்படும் ஊர் வரலாற்று நுõல்களில் “இளையான்குடி வரலாறு’ குறிப்பிடத்தக்கதாகும்.

இளையான்குடி மாற நாயனார் பற்றி சேக்கிழார் எழுதியது ஜவ்வாது புலவரின் சிற்றிலக்கியங்கள், அப்துல் காதிறுப் புலவரின் பாடல்கள், சோழர் காலக் கல்வெட்டுச் செய்திகள், செப்பேட்டுச் செய்திகள்

இந்நுõலில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

500 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறிய கதை விளக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக முறைகள், அரசியல் தொடர்பு, விளையாட்டு வளர்ச்சி, மருத்துவமனைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

இன்றைய, “நிக்காஹ்’ ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுவதும், “தலாக்’ சொல்லி விலக்கி வைப்பதும், சுன்னத் முறைகளும், உணவுப் பழக்கங்களும், இரவில் நடக்கும் திருமணமுறைகளும் வீடியோ காட்சிகள் போல படிப்பவர் மனதில் ஓட வைக்கிறது இந்நுõல்! மலேசியா, பர்மா, போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள், மற்றும் வாழும் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான புள்ளி விவரப்பட்டியல் நீண்ட வரிசையில் தரப்பட்டுள்ளன.

ஒரு ஊரையே ஒரு நுõலில் அடக்கி விடலாம் என்பதற்கு “இளையான்குடி வரலாறு’ உதாரணமாகும்.

வேலுõர் புரட்சியில் (1806) வீரமிகு முஸ்லிம்கள் : எழுதியவர்: செ.திவான். வெளியீடு: சுகைனா பதிப்பகம், 106 எப்/4ஏ திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை627 002. (பக்கம்: 224. விலை:ரூ.125)
வர்த்தகம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தங்கள் ஆயுத பலத்தால் இந்தியாவை வளைத்த வெள்ளையர்கள் அந்த ஆயுத பலத்தாலேயே நாட்டைத் தொடர்ந்து ஆளத் தலைப்பட்டனர். அதே ஆயுதங்களின் துணையால் அவர்களை விரட்டிக் காட்ட முடிவு செய்து களமிறங்கிய சுதேசி ராணுவ வீரர்கள் சந்தித்த போர்க்களமே 1806ல் வேலுõரில் சிப்பாய்கள் நடத்திய வீரப்புரட்சி. இந்த வீரப்புரட்சியின் போது தங்கள் வீட்டை மறந்து நாட்டை நினைத்துத் தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்து வீரசுவர்க்கம் புகுந்த வீரர்களில் ஏராளமான தமிழக முஸ்லிம்களும் உண்டு. துரதிருஷ்டமாக அவர்களது துõய்மையான வீரமும் தியாகமும் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், வரலாற்று ஆய்வாளரான இந்நுõல் ஆசிரியர் அந்த மறைந்து போன, மறக்கடிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை ஆய்ந்து கண்டு சான்றாதாரங்களோடு வேலுõர் புரட்சியில் பங்கேற்ற வீரர்களைப் பற்றியும் குறிப்பாக முஸ்லிம் வீரர்கள் பற்றியும் விளக்கமாக எழுதியிருக்கிறார் இந்த நுõலில். வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது
ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு : நுõலாசிரியர்: ஒர்சே மா.கோபாலகிருஷ்ணன். வெளியீடு: நற்றமிழ் பதிப்பகம், எம்.55/12, எம்.ஐ.ஜி., அடுக்ககம், முதல் நிழற்சாலை விரிவாக்கம், இந்திரா நகர், அடையாறு, சென்னை20. (பக்கம்: 600. விலை: ரூ. 230)
நுõலின் தலைப்பில் உள்ள ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு என்பதற்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் விரிவான நாட்குறிப்பு என்று முன்னுரையில் நுõலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பாரிசில் தேசிய நுõலகத்தில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை வாசித்துப் பல புரிய தெரிவுகளை இந்நுõலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

கடந்த 1709 முதல் 1761 வரை புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் உருவப் படத்தையும் இந்நுõலில் வழங்கியுள்ளார். மேலும் பாரிசில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் ஒரு பக்கத்தை அப்படியே ஒளிப்படமாக இந்த நுõலில் வெளியிட்டுள்ளதும் சிறப்பு ஆகும்.

24.4.1752 முதல் 08.04.1753 வரை உள்ள ஓராண்டுக்குரிய நாட்குறிப்பு மட்டும் இந்த நுõலில் பதிப்பிக்கப்பட்டுள் ளது. பின்னிணைப்பாக நாட்குறிப்பில் இடம் பெறும் பெயர்களைத் தொகுத்து அவற்றின் பக்கங்களையும் குறிப்பிட்டிருப்பது ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

1752 முதல் 1753 வரை தமிழகத்திலும் புதுவையிலும் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராய நினைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பிற ஆய்வாளர்களுக்கும் இந்த நுõல் உதவியாக இருக்கும். நுõலாசிரியர், பொறியியல் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் வரலாற்று ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் சிறந்த முறையில் நுõலைப் பதிப்பித்திருக்கிறார்.

நுõலாசிரியர் இந்த நுõலுக்கு வழங்கியுள்ள விரிவான முன்னுரை அவரது உண்மை அறிந்து பதிப்பிக்கும் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.

தமிழ் நாட்டு பாரத ரத்தினங்கள்: ஆசிரியர்: சூர்யா. வெளியீடு: சூர்யா என்டர்பிரைசஸ், பழைய எண். 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 17. (பக்கம்: 124. விலை: ரூ. 25)
மிழ் நாட்டில் பாரத ரத்னா விருது பெற்ற மூதறிஞர் இராஜாஜி, சர்.சி.வி.ராமன், தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன், கர்மவீரர் காமராஜர், சி.சுப்பிரமணியம், இசைவாணி எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜனாதிபதி அப்துல் கலாம் போன்ற பெருமக்களின் வாழ்க்கையும் சாதனைகளையும் இந்நுõலில் சிறப்புற விளக்கியுள்ளார் ஆசிரியர் சூர்யா. இந்நுõல் தமிழ்மக்களுக்கு குறிப்பாக மாணவ, மாணவியருக்கு பெரிதும் பயன்படும்.

ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 60.00

சகலகலா வல்லவன் கமலஹாசன்: வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை 600 017; விலை: 25.00

தமிழ்ப்புலவர் கவி காளமேகம்: பக்கங்கள் 112; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
காளமேகப் புலவரின் வரலாறும், அவர் இயற்றிய தனிப்பாடல்களும்பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. புலமைப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் எனறத் தலைப்புகளில் மொத்தம்180 பாடல்களும் இவற்றின் எளிய விளக்க உரைகள் கவி காளமேகத்தின்தமிழ் புலமையை எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ்ப்புலவர் புகழேந்தி: பக்கங்கள் 112; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.25
வெண்பாவித்தகர் என புகழப்படும் புகழேந்திப் புலவரின் வரலாறு விரிவாகவும், தெளிவாகவும் தரப்பட்டுள்ளது. இவரின் சிறந்த புலமைக்குச்சான்றாக இருக்கும் நளவெண்பாவும், அவரால் இயற்றப் பெற்ற தனிப்பாடல்களும் தமிழ் அன்னைக்குச் சூட்டிய அணிகலன்களாகப்போற்றக்கூடிய பெருமையுடையனவாகும்.
வீரபாண்டிய கட்டபொம்மன்: பக்கங்கள் 448; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.80–
கட்டபொம்மனைப் பற்றி நாட்டு மக்களிடையே கூறப்படுகிற வீரப்பிரதாபங்களும், அந்தக் காலத்திய கவிஞர்களால் உணர்ச்சியோடு, ஓலைச் சுவடிகளில் வடிக்கப்பட்ட கும்மிகளும் கொண்டது. படிக்க ஆர்வமூட்டுவது. சரித்திரப் பின்னணியும் கொண்ட வரலாறு இது.
ராணி மங்கம்மாள்: பக்கங்கள் 288; வெளியீடு: பிரேமா பிரசுரம்; விலை: ரூ.55
ராணி மங்கம்மாள் அரசாண்ட காலம் மதுரையின் பொற்காலம் என்று புகழாரம் சூட்டப்பட்டது. ராணி மங்கம்மாவின் அரசாட்சி, அவரது சரிதம், நாயக்க மன்னர்களின் வரலாறு ஆகியவை சரித்திர குறிப்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளது.
சிவாஜியின் நடிப்பிலக்கணம்: நுõலாசிரியர்: நந்திவர்மன் ஜீவன். வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 340. விலை: ரூ.100)
என்ன வேடம் புனைந்தாலும், அந்த கதைப் பாத்திரமாக மாறாது, அவர் அவராகவே இருக்கும் நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால், சிவாஜி நடித்த படங்களில் கணேசன் என்பவர் மறைந்து அப்பாத்திரம் மட்டுமே வெளிப்படும்.

சிவாஜி ஹாலிவுட்டில் பிறந்து இருந்தால், ஹாலிவுட்டின் மாபெரும் நடிகர்கள் வேலை இழந்து போயிருப்பர் என்று மார்லன் பிராண்டோ கூறும் அளவுக்கு நடிப்பின் சிகரங்களைக் கண்டவர் சிவாஜி. அவரைப் பற்றிய சிறந்த ஆய்வு நுõல் இது.

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் இவை சொல்லும் நாடக இலக்கணம் பற்றியும் சிறப்பாகப் பேசுகிறார் ஆசிரியர். ஸ்தானிஸ்லாவங்கி சொன்ன நடிப்பு முறை பற்றியும் அலசுகிறார். அபூர்வமான புகைப்படங்கள், சிவாஜி நடித்த திரைப்படங்களின் பட்டியல், நடிகர் திலகம் பெற்ற பரிசுகளும், பட்டங்களும் என்று புள்ளி விவரங்கள் தரும் இந்த நுõல் ஒரு விரிவான ஆழமான ஆய்வு நுõல்!

மாவீரன் அலெக்சாண்டர் : நுõலாசிரியர்: கோடீஸ்வரன். வெளியீடு: சாந்தி பதிப்பகம், 27, அண்ணா சாலை, சென்னை2. (பக்கம்: 304. விலை: ரூ.125)
உலக வரலாற்றில் மாவீரர்கள் என்று மதிக்கப்படுபவர்களில் தலைசிறந்தவனாக போற்றப்படுபவன் கிரேக்க மன்னனான அலெக்சாண்டர். 20ம் வயதில் மன்னனாகி 33ம் வயதில் காய்ச்சலால் மரணம் அடைந்த அலெக்சாண்டர் கிரேக்க நாகரிகத்தைப் பிற நாடுகளிலும் பரப்ப விரும்பியே பல நாடுகளின் மீது படையெடுப்பு நடத்தினான். பல நாடுகளை வென்று வெற்றி மேல் வெற்றி பெற்றவனாய் இருந்தும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவன். இறக்கும் தருவாயில் “என் கல்லறையில் என்னை வைக்கும்போது என்னுடைய இந்த இரண்டு கைகளை வெளியே தெரியுமாறு புதைக்க வேண்டும். கல்லறையில், “இதோ இந்தக் கல்லறையில் உறங்குகிறவன் உலகத்தையே வென்றவன் தான்! ஆனால், அவன் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது வெறும் கையோடு தான் செல்கிறான்’ என்ற வாசகத்தைப் பொறிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் உயிர் நீத்தான்.
உலகின் மிகப் பெரிய பெரும் தத்துவ ஞானிகளில் ஒருவராகக் கருதப்படும் அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கு ஆசிரியராய் வாய்ந்தது அவரது அதிர்ஷ்டங்களில் ஒன்று. எனவே தான் மிகச் சிறந்த வீரனாக மட்டுமின்றி சிறந்த ராஜதந்திரியாகவும் நீதிமானாகவும் திகழ்ந்தான் அலெக்சாண்டர். ஆசிரியரின் அலங்கார நடை புத்தகத்திற்கு மேலும் சுவை கூட்டுகிறது.

கோட்டையும் கோடம்பாக்கமும்: ஆசிரியர்: அரூர்தாஸ்; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. விலை: ரூ.60
தமிழ் சினிமா இதுவரை 4 முதல்வர்களை தமிழகத்திற்கு அளித்துள்ளது. இந்த புத்தகம், கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்குள் நுழைந்த நுழைந்து கொண்டிருக்கும் கலைஞர்களைப் பற்றி நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ள உதவும்.
ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு : நுõலாசிரியர்: ஒர்சே மா.கோபாலகிருஷ்ணன். வெளியீடு: நற்றமிழ் பதிப்பகம், எம்.55/12, எம்.ஐ.ஜி., அடுக்ககம், முதல் நிழற்சாலை விரிவாக்கம், இந்திரா நகர், அடையாறு, சென்னை20. (பக்கம்: 600. விலை: ரூ. 230)
நுõலின் தலைப்பில் உள்ள ஆனந்தரங்கப்பிள்ளை விநாட்குறிப்பு என்பதற்கு ஆனந்தரங்கப் பிள்ளையின் விரிவான நாட்குறிப்பு என்று முன்னுரையில் நுõலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பாரிசில் தேசிய நுõலகத்தில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்பை வாசித்துப் பல புரிய தெரிவுகளை இந்நுõலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

கடந்த 1709 முதல் 1761 வரை புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் உருவப் படத்தையும் இந்நுõலில் வழங்கியுள்ளார். மேலும் பாரிசில் உள்ள ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பின் ஒரு பக்கத்தை அப்படியே ஒளிப்படமாக இந்த நுõலில் வெளியிட்டுள்ளதும் சிறப்பு ஆகும்.

24.4.1752 முதல் 08.04.1753 வரை உள்ள ஓராண்டுக்குரிய நாட்குறிப்பு மட்டும் இந்த நுõலில் பதிப்பிக்கப்பட்டுள் ளது. பின்னிணைப்பாக நாட்குறிப்பில் இடம் பெறும் பெயர்களைத் தொகுத்து அவற்றின் பக்கங்களையும் குறிப்பிட்டிருப்பது ஆய்வாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

1752 முதல் 1753 வரை தமிழகத்திலும் புதுவையிலும் நிகழ்ந்த நிகழ்வுகளை ஆராய நினைக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பிற ஆய்வாளர்களுக்கும் இந்த நுõல் உதவியாக இருக்கும். நுõலாசிரியர், பொறியியல் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் வரலாற்று ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் சிறந்த முறையில் நுõலைப் பதிப்பித்திருக்கிறார்.

நுõலாசிரியர் இந்த நுõலுக்கு வழங்கியுள்ள விரிவான முன்னுரை அவரது உண்மை அறிந்து பதிப்பிக்கும் தன்மைக்குச் சான்றாக அமைகிறது.

தமிழ் மக்கள் வரலாறு (அயல்மொழி, இன, மதத்தார் காலம்) : நுõலாசிரியர்: க.ப.அறவாணன். வெளியீடு: தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை29. (பக்கம்: 304. விலை: ரூ. 200)
தமிழ் மக்கள் வரலாற்றின் மூன்றாம் தொகுதியான இந்த நுõலில் வட இந்தியாவில் இருந்து வந்து பரவிய வைதிக மதம், சமண, பவுத்த மதங்களால் தமிழர் வாழ்வில் நிகழ்ந்த பாதிப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன் விளைவால் தமிழர் தம் வழிபாடு, தம் பண்பாடு, தம் மொழி ஆகியவற்றைப் பேரளவு இழத்தல், வர்ணாசிரம தருமத்தையும் ஜாதி பேதத்தையும் தமிழர் ஏற்க வேண்டிய நிலை, சமண பவுத்த மதங்களின் வீழ்ச்சி, கோவிற்கலை, சிற்பக் கலை ஆகியவற்றின் வளர்ச்சி, வட இந்தியாவில் குப்தர்கள் காலத்தில் நடந்த பிராமணியம் தழுவிய மாற்றங்கள் பல்லவர் வழியாகத் தமிழகத்தில் இறக்குமதியான வரலாறு ஆகியவை விரிவாகவும், உறுதியாகவும் நிறுவப்பட்டிருக்கின்றன.

தமிழ்ச் சமுதாயம் காலந்தோறும் மாறி வந்த போக்கிற்கான சூழல்கள் கூடியவரை முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளன. இச்சமுதாய மாறுதல்கள் யாரால் நிகழ்ந்தன என்று விளக்கும்போது ஆசிரியர் நடுநிலையான ஆய்வு முறையை மேற்கொண்டிருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது.

ஆசிரியர் தலைசிறந்த கல்வியாளர். ஆழ்ந்த புலமையும் ஆராய்ச்சித் திறனும் படைத்தவர். ஆனால், தம் புலமைக்கு ஏற்பப் பண்டித நடையில் வாசகர்களை மிரட்டாமல் அனைவரும் எளிதில் புரிந்து தெளியும் பொருட்டு இந்நுõலை எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. “அறநெறிகள் இக்

காலத் தமிழர்களிடம் பரவாமைக்கு காரணங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை (12ம் அத்தியாயம்) அனைவரும் படித்து சிந்திக்க வேண்டிய ஒன்று.

தமிழகம் ஊரும் பேரும்: நுõலாசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 420. விலை: ரூ.80).
தமிழகத்தில் பல ஊர்களின் இன்றைய பெயர் அவை ஆதியில் வழங்கப்பட்டபெயர்களில் இல்லை. காலப்போக்கில் சிதைந்தும், திரிந்தும் மருவியும், மாறியும் தத்தம் முதனிலையை இழந்திருக்கின்றன.

<உதாரணம்: பாண்டிநாட்டு கானப்பேர் மிக பழமையான ஊர். அங்கு குடிகொண்டுள்ள ஈசன் மீது சுந்தரர் மிகவும் காதலுற்றுப் பாடிய பத்துப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் “கானப்பேர் உறை காளை’ என்று இறைவனை குறிப்பிட்டார். சுந்தரர் வாக்கின் மேன்மையால் அவ்வூர் இறைவனைக் “காளையார்’ என்று மக்கள் அழைக்கத் தொடங்க அவர் இருந்த கோவில் காளையார்கோவில் ஆயிற்று. கோவிலின் பெயரே நாளடைவில் அந்த ஊர்ப் பெயராகவும் கொள்ளப்பட்டு விட்டது!

“கானப்பேர்’ காளையார்கோவில் ஆனது போல் தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் மாறியிருக்கின்றன. சொல்லின் செல்வர் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் நீண்ட நாள் உழைப்பு, ஆராய்ச்சியின் பயனாய் விளைந்த நுõல் “ஊரும் பேரும்.’

“பிள்ளையவர்கள் நிலம், மலை, காடு, வயல், ஆறு, கடல், நாடு, நகரம், குடி, படை, கோ, தேவு, தலம் முதலியவற்றை அடியாகக் கொண்டு நிகழ்த்தியுள்ள ஊர் பேர் ஆராய்ச்சியும், தந்துள்ள அடிக்குறிப்புகளும், இலக்கிய மேற்கோள்களும் தமிழ்ச் சரித்திர உலகுக்குப் பெருவிருந்தாகும்’ என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க., இந்நுõலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பிள்ளையின் மிடுக்கான தமிழ்நடை அழகு படித்துப் படித்துச் சுவைக்க வேண்டிய ஒன்று.

ங்கம்: நாணயங்களும் பண்பாட்டு வரலாறும் (முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களை வாழ்த்த தொகுக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்), தொகுப்பாசிரியர்: முனைவர் இரா.நாகசாமி, பதிப்பித்தோர்: நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ், தபால் பெட்டி எண்.8780. அடையார், சென்னை600 020. (பக்கம்: 236. விலை: ரூ.700). உட்ச்டிடூ: ணஞுதீஞுணூச்ணீதஞடூடிஞிச்tடிணிண@ணூஞுஞீடிஞூஞூட்ச்டிடூ.ஞிணிட்

சிறந்த நாணய ஆய்வாளரான முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தியை வாழ்த்தும் நோக்கில் இந்நுõல் வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி தம் வாழ்வின் முக்கிய பெரும் பகுதியை நாணயச் சேகரிப்புக்கும் அவற்றை ஆய்வு செய்வதிலுமே செலவிட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் நாணயப் புழக்கம் ஆரம்பித்த சங்க காலத்தோடு தொடர்புடைய முத்திரைக் காசுகள், சங்க கால அரசர்கள் வெளியிட்ட காசுகளை நுணுகி ஆய்ந்து புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்தார். அயல் நாட்டுக் காசுகளில், முக்கியமாக சங்க காலத்தோடு தொடர்புடைய மத்திய தரைக்கடல் நாட்டுக் காசுகள் தமிழகத்தில் கிடைப்பது பற்றிய பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிய வைத்தார். பல்லவர் காலக் காசுகளின் சிறப்பியல்புகளைப் பற்றியும் ஒரு முழு நுõல் எழுதியுள்ளார். பத்திரிகை துறையில் ஆழக்கால் பதித்திருந்தும், இவ்வகையான நுணுக்க ஆய்வுகளை மேற்கொண்ட இவரது செயல்கள் அகில உலகப் பாராட்டுகள் பலவற்றைப் பெற்றுத் தந்துள்ளது. இவரது சேவையைப் பாராட்டும் முகத்தான் உலக அறிஞர்கள் பலர் தம் ஆய்வுக் கட்டுரைகளை இந்நுõலில் காணிக்கையாக்கியுள்ளனர்.

இந்நுõலில் 19 ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. அயல்நாட்டு நாணய இயல் அறிஞர் களான பெர்காசு, மக் டொவால், வால் பெர்க், பார்பரா மியர்ஸ் ஆகியோருடன், இலங்கை வரலாற்று ஆசிரியர் பத்மநாதன் ஆகியோரின் படைப்புகளைத் தாங்கியுள்ளது இந்நுõல். முதுபெரும் பேராசிரியர் வ.அய்.சுப்ரமணியன், கல்வெட்டு அறிஞர்களான ஐராவதம் மகாதேவன், பத்மநாப சாஸ்திரி ஆகியோர் தம்முடைய ஆய்வுகளை இந்நுõலுக்கு அளித்து பெருமை சேர்த்துள்ளனர். ஏ.வி.நரசிம்ம மூர்த்தி, கே.வி.இராமன், ஷோபனா கோகலே, எஸ்.ஜே.மங்களம் போன்ற பேராசிரியர்களோடு, ராஜா ரெட்டி, எஸ்.ஜி.தோபடே, குல்கர்னி, ஜவகர் பாபு ஆகிய நாணய இயல் வல்லுனர்களும் தம் படைப்புகளால் இந்நுõலை அலங்கரித்துள்ளனர். அறிவியலில் பெரும் புலமை பெற்றுள்ள பலதேவ் ராஜ், வெங்கட ராவ் ஆகியோரின் படைப்புகளும் இந்நுõலுக்கு அணி சேர்க்கின்றன.

திருக்கோயிலுõரில் கண்டெடுக்கப்பட்ட உரோமானிய போலிக் காசுகள், உரோமானிய தங்கம் இந்தியா வை வந்தடைந்ததற்கான காரணிகள் அலசப்பட்டுள் ளன. தக்காணத்தை ஆண்ட சாதவாகனர்களின் தொடக் கம் பற்றிய புதுச் செய்திகள், சாதவாகன மன்னர்களின் உருவம் பொறித்த காசுகளில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்து வடிவங்களின் தன்மை, கோவாவில் கிடைத்த சாதவாகனர் காசுகள், ஜெர்மனி நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ள முத்திரைக் காசுகள், இவற்றோடு ஆந்திர ஜநபதம் வெளியிட்ட காசுகளின் சிறப்பியல்புகள் என பல புதுச் செய்திகள் விவாதிக்கப்பட்டுள்ளது நாணய ஆய்வாளர்கள் பலருக்கும் மகிழ்ச்சி தருவதாகும்.

புதிய காசுகளின் கண்டுபிடிப்புகள் வரிசையில், புதிய வரவான நுளம்பர் காசுகள், தஞ்சாவூர் மாவட் டம், பள்ளி அகரம் கிராமத்தில் புதையலாக கிடைத்த காசுகள், தென் கேரளப் பகுதிகளில் கிடைக்கப் பெறும் 1718 ஆம் நுõற்றாண்டைச் சார்ந்த சிறு காசுகள், என புதுச் செய்திகள் பலவும் விருந்தாக அளிக் கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் புழக்கத்தில் இருந்த காசுகள் பலவற்றைப் பற்றிய இலக்கியத் தரவுகள் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது கூடுதல் செய்தியாகும்.

காசுகளைக் கண்டெடுக்கும் வழிமுறைகள் போன்ற தேவையான தகவல்கள், பழங்காசுகளை அறிவியல் பூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்தும் போது எழுகின்ற பிரச்னைகள், அவற்றை அணுகும் முறைகள், காசுகளின் உலோகத் தன்மையை அறிவியல் பூர்வமாக கண்டு அறியும் முறைகள் என தற்கால ஆய்வாளர்

களுக்கு வேண்டப்படும் செய்திகள் ஒருசேர அளிக்கப்பட்டுள்ளன. தொல்பழங்காலத்தில், ஆதிச்சநல்லுõர் செம்பு, இரும்பு, தங்க கனிமங்களை வெட்டி எடுக்கும் களமாக இருந்தமை போன்ற புதுச் செய்திகள் அனைவருக்கும் பயன் அளிக்கும் விவரங்களாகும்.

சைவ சித்தாந்தத்தின் சேர நாட்டுப் பரிமாணங்கள், பல்லவர், பாண்டியர், சோழ அரசப் புலமையாளர்

களின் விவரங்கள், கீழைச் சாளுக்கிய அரசனான விஜயாதித்யன் செப்பேட்டு விவரங்கள் யாவும் புதிய கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இலங்கை பற்றி இந்திய நுõல்களில் காணப்படும் முக்கிய குறிப்புகள், அங்கு நிலவிய இந்திய மற்றும் புத்தமத கட்டடக் கலையின் சிறப்புத் தன்மைகள் ஆயப்பட்டுள்ளது மற்றொரு முக்கிய பண்பாகும்.

நுõலின் இறுதியில் தொகுத்தளிக்கப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தியின் புகைப்படங்கள் வரலாற்றுச் செய்திகள் பலவற்றைக் கொண்டு மிளிர்கிறது. கிருஷ்ணமூர்த்தியின் பல்வேறுபட்ட கோணங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. சிறந்த இத்தொகுப்பை ஆக்கி அளித்துள்ள தொகுப்பாளர்களான இரா. நாகசாமி, ஏ.வி.நரசிம்மமூர்த்தி, கே.வி.இராமன், ஐ.கே.சர்மா ஆகியோரை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. நன்கு வடிவமைக்கப்பட்டு, சிறந்த முறையில் அச்சிட்டுள்ள பதிப்பகத்தாரின் இத்தொண்டு பல காலம் தொடர வேண்டும். இந்நுõல் இந்திய நாணயவியல் ஆய்வாளர்

களுக்கு மட்டுமின்றி தொல்லியல், தொல் அறிவியல், வரலாறு, இலங்கை வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வு செய்வோருக்குப் பெரும் துணையாக இருக்கும்.

02. நாயக்க மன்னர்களும் சேதுபதிகளும்: நுõலாசிரியர்: ஜெகாதா. வெளியீடு: அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை600 014. (பக்கம்: 320. விலை: ரூ.100)

சமயப் பொறை மிக்க இந்து சமயப் பற்றாளர்க ளான நாயக்க மன்னர்கள் விஜய நகரப் பேரரசர்களின் பிரதிநிதியாகத் தமிழகத்தின் தென் பகுதிக ளை ஆண்டு வரலாற்றின் உன்னதப் பக்கங்களை ஆக்கத் துணை நின்றனர். சுதேச சிந்தனையும், தன்னாட்சி ஆர்வமும் மிக்க சேதுபதி மன்னர்கள் அந்த நாயக்க மன்னர்களுக்குத் துணை நின்றனர். வேற்று முகத் தானை வேரறுக்கும் பண்பு கொண்ட சேது வேந்தர்கள் அதன் பொருட்டே ஆங்கிலேயர்களையும், ஆங்கிலேய அடிவருடிகளையும் அலற அலற எதிர்த்து தாக்கி விடுதலைப் போருக்கு முதல் முழக்கம் இட்டு ஆர்ப்பரித்தனர்.

அவர்களது வீர வரலாற்றைக் கூறும் சுவையான நுõல்! சரித்திரப் பொக்கிஷம்!

அல் காயிதா (பயங்கரத்தின் முகவரி): நுõலாசிரியர்: பா.ராகவன். வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், (சென்னை4. பக்கம்: 134. விலை: ரூ.60).

“அல்காயிதா’ ஒரு பயங்கரவாத அமைப்பு, உலகம் முழுவதும் இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் பிதாமகன், ஒசாமா பின்லாடன். இந்த அமைப்பின் தோற்றம், பரப்பு, செயல், வளர்ச்சி, தளர்ச்சி என அனைத்து விவரங்களையும் அடி முதல் நுனி வரை ஒன்று விடாமல் அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு, வலைத்தளங்களின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் துணையுடன் பா.ராகவன் எழுதியுள்ள இந்தப் புத்தகம் தமிழர்களின் வாசிப்பு தளங்களை விரிவுபடுத்தி, அகலப் பார்வைக்கு வழி நடத்திச் செல்கிறது. ஏற்கனவே 9/11, பாலஸ்தீனம் போன்ற பல சர்வதேச நிகழ்வுகளை புத்தக வடிவில் வழங்கியுள்ள ஆசிரியரின் இந்தப் புத்தகமும் முன்னது போல் சிறப்பாகவே உள்ளது. சுவைபட, கோர்வையாக, வாசகனுக்கு அலுப்புத் தட்டாமல் எழுதப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பு.

கடல் வழி வணிகம்!: ஆசிரியர்: நரசய்யா, வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், “கோனார் மாளிகை’ 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை14. போன்: 2813 2863

“மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்’ என்ற மகா கவியின் வரியோடு “கடல் வழி வணிகம்’ என்ற இந்த நுõலைத் தொடங்குகிறார் ஆசிரியர் நரசய்யா. இது இரண்டு பாகமாக அமைந்துள்ளது.

முதல் பாகத்தின் முதல் நான்கு அத்தியாயங்கள் தமிழகத்தில் சங்க காலத்திலும், இடைக் காலத்திலும் நிகழ்ந்த கடற் பயணங்கள், கடல் வணிகங்கள் பற்றிச் சிறப்பாகவும், இந்தியத் தீபகற்ப முழுமை நிலையில் அவை பற்றிப் பொதுவாகவும் விளங்குகின்றன. அடுத்துவரும் ஐந்து அத்தியாயங்களும் ஐரோப்பியர் வருகையாலும், ஆட்சியாலும் நம் நாட்டுக் கப்பற் கலை, கடல் வணிக நிலை ஆகியவை அடைந்த பாதிப்புகளைத் தெளிவாகப் பேசுகின்றன.

இரண்டாம் பாகம் நம் நாட்டுத் துறைமுகங்கள் ஒவ்வொன்று பற்றியும் கூறும் விளக்க அறிக்கைகளாகவும் நமது நவீனக் கடற்படையின் விவரணங்களாகவும், 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

மேற்சொன்ன செய்திகளெல்லாம் வரிசையாக, முறையாக தொகுக்கப் பெற்றுள்ளன. இந்நுõலாசிரியர் இந்தியக் கடற்படையில் பல ஆண்டுகள் பணி செய்தவர். கப்பல் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்; வணிகக் கப்பல்களிலும் பணியாற்றியவர்; தன் கப்பல் பயணங்களின் போது உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று அனுபவம் பெற்றவர். இந்தத் தகுதிகளின் அடிப்படையில் இவர் எழுதியது இந்த நுõல்.

இந்த நுõலின் நடை எளிமையாகவும், புரிந்து சுவைக்கத் தக்கதாகவும் அமைந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.

“உலகத்திலுள்ள எல்லாச் சமுத்திரங்களையும் விட, மத்திய தரைக் கடலும் செங்கடலுந்தாம், சரித்திரத்தில் குறிப்பிட்டுப் புகழப்படும் இடங்கள். கடல்வழி வணிகத்தில் ஆரம்பமே இங்கு தான் நிகழ்ந்தது. இக்கடலைச் சுற்றித் தான் உலகின் சிறந்த நாகரிகங்கள் வளர்ந்தன. மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் மேம்பட்ட இவ்விடங்கள் சரித்திர ஆசிரியர்களை மிகவும் ஈர்த்தன. அதற்குப் பிறகு கடல்

வழிச் சரித்திரத்தை எழுதியதே அரபிக் கடலும் இந்து மகா சமுத்திரமுந்தாம்!’ (ப.27)

“முதலில் கரை வழியாக ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலேயே வணிகம் செய்து கொண்டிருந்தவர்களான ரோமர்கள், சிறிது சிறிதாய் முன்னேறிக் கரை வழியாய் இந்தியத் துணைக் கண்டத்தில் சிந்து முகத்துவாரம் வரை வந்து, பிறகு தமது வணிகத்தை குஜராத் கடற்கரையிலும் தொடர்ந்தனர்!’ (ப.28)

தனது நுõலின் செய்திகளுக்கு ஆசிரியர் இலக்கியச் சான்றுகளை மிகுதியாகத் திரட்டித் தந்துள்ளார். இவை, ரிக்வேதம், தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, புறநானுõறு, அகநானுõறு, பெருங்கதை, சிலப்பதிகாரம், மணிமேகலை, வால்மீகி ராமாயணம், கவுடில்யரின் அர்த்த சாஸ்திரம், மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, கம்பராமாயணம் முதலிய நுõல்களில் உள்ள குறிப்புகளும் செய்திகளும் ஆகும்.

தொல்பொருள் சான்றுகளுக்கும் பல நுõல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 1975ல் தமிழ்நாடு அரசு வெளியீடாக வந்த “தமிழ்நாட்டுத் தொல் பழங்கால வரலாறு’ எச்ணூணஞுt கதஞடூடிஞிச்tடிணிணண் வெளியீடாக வந்த டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் பல நுõல்கள் குறிப்பிடத்தக்கன.

இந்நுõலைப் படித்து முடித்த பிறகு, ஆசிரியர் தனது அணுகுமுறையிலும் நோக்கத்திலும் வெற்றி பெற்றுள்ளார் என்ற ஆணித்தரமான கருத்து ஏற்படுகிறது. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் “ஊணிணூஞுடிஞ்ண Nணிtடிஞிஞுண் ணிஞூ குணிதtட ஐணஞீடிச்’ நுõலின் பாணியில் இங்குத் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன என்று எண்ணத் தோன்றுகிறது.

இலக்கியப் பெரும்புகழ் பெற்ற 97 வயது “மணிக்கொடி’ச் சிற்பி “சிட்டி’ நுõலுக்கு வழங்கியுள்ள அணிந்துரை பற்றி இங்குக் குறிப்பிடுவது மிக அவசியம்.

இந்த நுõலை ஒரு புதிய முறையிலான வரலாற்றுப் படைப்பு என்று மதிப்பிடும் அவர், “கடல் வழி வணிகம் என்பது இப்புத்தகத்தின் தலைப்பாய் இருந்தாலும், இதில் வரலாற்றின் பல்வேறு துறைகள் சேர்ந்து நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு படிப்படியாய் உயர்த்தின என்பதும் சொல்லப்படுகிறது. நுõலின் ஒவ்வொரு வரியும், பலப்பல செய்திகளைக் கொண்டிருப்பதால் இது கலைக்களஞ்சியம் போல் தோன்றுகிறது.

“ஒரு முழுமையான பொருளியல் பங்களிப்பாக இந்நுõலை ஏற்கலாம்’ என்று நுõலின் உள்ளீட்டுச் சிறப்பை எடுத்துரைக்கிறார். மேலும், “நுõற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்ற நரசய்யாவின் மொழிநடையும், அவருடைய கப்பற்படை அனுபவமும், வணிகக் கப்பல் வாழ்வு நாட்களின் அனுபவமும் இந்தப் புத்தகத்தை ஒரு வசீகரமான வாசகமாய் தோற்றுவிக்கிறது’ என இவர் கூறியிருப்பது உண்மை.

நுõல் தரமான தாளில் மிக அழகான அச்சமைப்புக் கொண்டுள்ளது. இதன் கடைசி 12 பக்கங்களில் தரப்பட்டுள்ள வண்ண ஒளிப்படங்கள் அருமையாக உள்ளன. இவை நுõலின் செய்திகளுக்குத் தக்க ஆதாரங்களாகச் சந்தேகத்துக்கு இடமின்றி திகழ்கின்றன.

மலரும் நினைவுகள்: நுõலாசிரியர்: இந்திரா காந்தி. தமிழாக்கம்: கி.வேங்கட சுப்ரமணியன். வெளியீடு: பூரம் பதிப்பகம், பு.எண்.2, ப.எண்.59, ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 106. விலை: ரூ.30).

இந்திரா காந்தி மலரும் நினைவுகளாக பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள். மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்வராஜ் பவனின் கதை, குழந்தைப் பருவம், தன் பதினாறாவது வயது, சாந்தி நிகேதனில் வாழ்க்கை, சிறை நினைவுகள், தாயாக இருப்பது பற்றி, பாபுவைப் பற்றிய நினைவுகள், ஜவகர்லால் நேரு என்ற தலைப்புகளில் தன் வரலாறு சுவைபட கூறப்பட்டுள்ளது. சில விளக்கங்களுக்கு விடைகள் மனதை தொடுகிறது. அனைவரும் படித்து மகிழத்தக்க சிறந்த நுõல். இந்திரா காந்தியை நேரில் சந்தித்து பேசிய உணர்வை இந்நுõலைப் படிப்பவர்கள் உணர முடிகிறது.

உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் (பகுதி1 வரலாற்றியல். பகுதி2வாழ்வியல்): தொகுப்பாசிரியர்: முனைவர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள். வெளியீடு: வள்ளலார் அன்பு நிலையம், மலேசியா. (பக்கம்: 1150. விலை: ரூ.400).

உலகத் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் என்ற இந்நுõல் இரண்டு பாகங்களாக 1150 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நுõல். முதல் பாகம் வரலாற்றியல் என்றும், இரண்டாம் பாகம் வாழ்வியல் என வகுத்துத் தயாரித்துள்ளார் ஆசிரியர். முதற்பதிப்பு 1997ல் வந்துள்ளது. இப்பதிப்பு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பாக தற்போது வந்துள்ளது. புலம் பெயர்ந்த தமிழரால் மலாய் மண்ணிலிருந்து இவ்வறிய தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் உதயமாகியிருக்கிறது.

முதற்பகுதி வரலாற்றியல் என பண்பாட்டு முரசுகள் எனத் துவங்கி அதில் ஆறு ஆய்வுக் கட்டுரைகளும், ஒன்று முதல் ஐந்து இயல்களில் 56 கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் 620 பக்கங்களில் பல தமிழ் இலக்கிய ஆய்வாளர்களது ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று பதிவு செய்துள்ளார். தமிழர் வரலாறு, பண்பாடு, இலக்கியங்களில் பண்பாடு, நாட்டுப்புறவியல் பண்பாடு, அறக்கோட்பாடுகளில் தமிழர் பண்பாடு, சமய வாழ்வில் தமிழர் பண்பாடு என ஐந்து தலைப்புகளில் 56 கட்டுரைகள் உள்ளன. மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் முதல் தொகுப்பாசிரியர் முனைவர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள் வரை வரலாற்று ஆவணங்களின் குறிப்புகளோடு ஆய்வுக் கட்டுரைகள் தந்துள்ளனர் இந்நுõலில்.

இரண்டாவது பகுதி வாழ்வியல். இதில் ஐந்து இயல்கள், ஒப்பன்னக் கலையில் தமிழர் பண்பாடு, தமிழர் பண்பாட்டில் மீட்டுருவங்கள், தமிழர் பண்பாட்டில் ஊடாட்டங்களும் பின்னடைவுகளும், இல்லற வாழ்வில் தமிழர் பண்பாடு, தமிழர் வாழ்வில் புதிய பண்பாடு எனப் பொதுத் தலைப்பில் நாற்பத்தைந்து கட்டுரைகள் 513 பக்கங்களில் 45 முனைவர்கள் தந்துள்ளதைப் பதிவு செய்துள்ளார். உண்மையிலேயே தமிழனின் ஒட்டுமொத்தமான வாழ்வியல் ஆவணக் குறிப்பு. இந்நுõல்கள், தமிழகம், புதுவை போன்ற மாநிலப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகின்ற முனைவர்களிடத்திலே பெற்ற கட்டுரைத் தொகுப்பு நுõல். ஏறத்தாழ 17 ஆண்டுகள் உழைத்து திருத்திய செம்பதிப்பாய் இந்நுõலைக் கொண்டு வந்துள்ளார் முனைவர் தமிழ்க்குயில் கா.கலியபெருமாள்.

தமிழில் இதுநாள் வரை இதுபோன்ற ஒரு தொகுப்பு நுõல் வந்ததில்லை. நல்ல உயரிய தாளில் அச்சிட்டு, பிழைகள் இல்லாது தயாரித்துள்ளார். ஒவ்வோர் தமிழர் வீட்டின் நுõலகத்திலும் இருக்க வேண்டிய வரலாற்று ஆவணம், நாளைய தலைமுறையினருக்கு ஒரு வழி காட்டி நுõல்.

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு…: நுõலாசிரியர்: ஜி.எஸ்.எஸ்., வெளியீடு: கிழக்கு பதிப்பகம். (பக்கம்: 136. விலை: ரூ.60).

மிகப் பழமையான நாடு ஆப்கானிஸ்தான். யுத்தம், சோகம், நாசம் என அதன் சோக வரலாறு மிக நீளமானது. உலகின் மிகப் பெரிய வல்லரசாக முன்னர் இருந்த சோவியத் ரஷ்யாவும், இன்றைய வல்லரசாக உள்ள அமெரிக்காவும் அத்துமீறி நுழைந்து துவம்சம் செய்த பூமி. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கமான அல் கொய்தா இயக்கம் புகலிடம் தேடி வந்த நாடு. ஒசாமா பின்லாடனுக்கு ஏற்ற மறைவிடங்கள் நிரம்பிய பகுதி. இத்தனை சிறப்புகளுடன் கூடிய ஆப்கானிஸ்தான் பற்றிய பல தகவல்களைத் திரட்டி ஜி.எஸ்.எஸ்., எழுதியுள்ள இந்த புத்தகம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

கிழக்கு பதிப்பகம், பல நாடுகளைப் பற்றி நுõல்கள் எழுதி வெளியிட்டு வருகிறது. இந்த புத்தகங்களில் உலக வரைபடத்துடன் குறிப்பிட்ட அந்த நாட்டின் வரைபடத்தையும் வெளியிட்டால் வாசகர்களுக்கு மேலும் பயன்படும்.

தெய்வத்தமிழ் ஈழத்திலே…!: நுõலாசிரியர்: அமரர் கல்கி. வெளியீடு: வானதி பதிப்பகம் (பக்கம்: 176. விலை: ரூ.50).

ஐம்பதுகளில் அமரர் கல்கி, இலங்கைப் பயணம் மேற்கொண்டார். அந்த பயண அனுபவங்களை, “கல்கி’ வார இதழில் கட்டுரைகளாக எழுதியிருந்தார். இதை, இப்பொழுது புத்தகமாக வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இலங் கை வாழ் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம், அப்பொழுதே துவங்கி விட்டதை, இந்த கட்டுரைகளைப் படிக்கும்போது உணர முடிகிறது. அந்த மிகச்சிறிய தீவின் வளமைக்கும், செழிப் புக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் சிந்திய வியர்வையை மிகச் சிறப்பாக அமரர் கல்கி பதிவு செய்திருக்கிறார். சிங்கள இன வெறியர்களின் அடக்கு முறையை, அகிம்சை உணர்வுடனும், அமைதியுடனும் சகித்துக் கொண்ட அந்த நாளைய இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றி, தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் நம் கண் முன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் அமரர் கல்கி.

தமிழ்நாட்டு பாரத ரத்தினங்கள்: ஆசிரியர்: சூர்யா. வெளியீடு: சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், பழைய எண்.24, கிருஷ்ணா தெரு (பக்கம்: 124. விலை: ரூ.25).

ராஜாஜி, சர்.சி.வி.ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன், காமராஜர், சி.சுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அப்துல் கலாம், எம்.ஜி.ஆர்., ஆகியோரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரங்கள்! தமிழ்நாட்டில் “பாரத ரத்னா’ விருது பெற்ற பெருமக்களின் சாதனைகளை இந்த நுõலில் சிறப்புற விளக்கியுள்ளார் ஆசிரியர் சூர்யா. இந்த நுõல் மாணவ, மாணவியருக்குப் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம்!

சுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு: நுõலாசிரியர்: என்.ராமகிருஷ்ணன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., அம்பத்துõர், சென்னை98. (பக்கம்: 184. விலை: ரூ.50).

1927 முதல் 1947 ஆகஸ்ட் வரை நாடு விடுதலை பெற கம்யூனிஸ்டு தோழர்கள் மேற்கொண்ட தலைமறைவு, சிறைத் தண்டனை, நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் இந்நுõலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொண்ட நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள இந்த நுõல் பேருதவியாக இருக்கும்.
வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்.,: நுõலாசிரியர்: “பொம்மை’ சாரதி. வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு தொலைபேசி: 2433 4397. (பக்கம்: 168. விலை: ரூ.60)

எம்.ஜி.ஆரைப் பற்றிய முழுமையான வரலாற்று நுõல் என்று கூற முடியாவிட்டாலும் வள்ளலாக வாழ்ந்த ஒரு பெருமகனின் வாழ்க்கையின் ஒரு பரிமாணத்தைச் சித்தரிக்கும் நுõல் என்று இதைக் குறிப்பிடலாம். பத்திரிகையாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். பக்கத்திற்கு பக்கம் அபூர்வப் புகைப்படங்கள். எம்.ஜி.ஆர்., அன்பர்களுக்கு இது ஒரு புதிய புத்தக விருந்து.

சுயசரிதை ஜவஹர்லால் நேரு: தமிழாக்கம்: ஜெயரதன். வெளியீடு: பூரம் பதிப்பகம், 2(59), ராஜு நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 719. விலை: ரூ.300).

பண்டிதர் நேரு பெருமான், இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் (15.8.1947), திடீர் சீனத் தாக்குதல் ஆக்கிரமிப்பின் அதிர்ச்சி காரணமான மனவேதனையில் உயிர் நீத்த வரையிலுமாக (27.5.1964), தொடர்ந்து 17 ஆண்டு காலம், முதன் முதல் பாரதப் பிரதமராக முடிசூடா மன்னராகக் கோலோச்சியவர். நம் நாட்டுப் பிரதமராக இத்தனை நெடிய காலம் எவருமே இருந்ததில்லை.

சமத்துவம், சோஷலிசம், பொதுவுடமை போன்ற புரட்சிகரமான சித்தாந்தங்களினால் ஈர்க்கப்பட்டு, நாட்டை வெகு வேகமாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்ற முன்னோடிச் சிற்பி!

நேருஜி எழுதிய “உலக வரலாற்றின் காட்சிகள்,’ “கண்டுணர்ந்த இந்தியா,’ மற்றும் “ஒரு சுயசரிதை’ ஆகிய மூன்று நுõல்களும் அவரது சம காலத்திய இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயித்ததுடன், அனைத்துலக மக்களையும் எழுச்சியுறச் செய்திருக்கின்றன.

ஒருவரது வாழ்க்கை சரிதமானது அவராகவோ அல்லது பிறர் எழுதுவதின் நோக்கம், அவரது பன்முக ஆற்றல்கள், மகோன்னத சாதனைகளை படித்தறிந்து, மக்கள் அவர் தம் அடியொற்றிப் பயணித்து பயனுற வேண்டும் என்பதே ஆகும். சுய விளம்பரத்தை நாட முற்படாத சுயசரிதை நுõல் இருமுனைக் கூர் வாளையொத்தது. தன்னையும், தன்னைச் சார்ந்தோருக்கும் புகழாரம் சூட்ட மறுப்பதுடன், எதிரணியினரை எள்ளி நகையாடுதலும், இகழ்ச்சியாக உரைப்பதும் தவிர்க்கப்படுவது மரபு. இத்தகைய இலக்கணங்களை நன்கு அறிந்தவர் நேருஜி என்பதற்கு இந்நுõல் கட்டியம் கூறும்.

கடந்த 1940ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு நிகழ்வுகளை நினைவு கூர்ந்து (தமது இல்லத்தில்) எழுதியவற்றையும் இந்நுõலில் பிற்சேர்க்கையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மேலை நாட்டுப் பொருளாதாரம், அறிவியல், சரித்திரம் மற்றும் தத்துவ மேதைகளின் அரிய கருத்துக்கள் இந்நுõலில் நிரம்பி வழிவதை உற்று நோக்கும்போது நேருஜியுடைய விசாலமான, நுட்பமான அறிவுத் திறனும், பன்முக ஆற்றலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

இந்நுõலில் இடம் பெற்றுள்ள சில சுவையான மற்றும் அதிர்ச்சித் தகவல்கள்:

* ஜாலியன்வாலாபாக் படுகொலை அரக்கன் ஜெனரல் டயருடன் சேர்ந்து ரயில் பயணம் (பக்:4546).

* இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியவரும், துப்பாக்கி முனைக்குத் தன் நெஞ்சைத் திறந்து காட்டிய மாவீரருமான ஆரிய சமாஜத்தைச் சார்ந்த சுவாமி ஷ்ரத்தானந்தர் ஒரு இன வெறியனால் படுகொலை செய்யப்பட்டது (பக்:166).

* அன்றாட அத்தியாவசிய வீட்டுச் செலவுகளை முன்னிட்டு, உயர்ந்த வெள்ளி மற்றும் இதர விலை உயர்ந்த வீட்டுப் பொருட்களை விற்க நேரிட்டபோதும், தன் வசம் இருந்த விலை மதிப்பற்ற புத்தகங்களை விற்க முற்படவில்லை. புதிய புத்தகங்களை வாங்குவதையும் நிறுத்தவில்லை! (பக்:525). அத்தனை அறிவுத் தாகம்.

சினிமாக்காரர்களைப் போன்று அரசியல்வாதிகளும் (செயற்கை) “விக்’குகள் வைத்துக் கொண்டு நகர்வலம் வரும்போது, தன்னைப்பற்றி அவரே கூறியிருப்பது:

நான் மிடுக்காகவும், இளமைத் துடிப்புடன் காணப்பட்டாலும் (44 வயதில்) வழுக்கை விழுந்து, தலைமுடி நரைத்துப் போய் விட்டது! முகத்தில் சுருக்கங்கள் தோன்றி, கண்ணைச் சுற்றிக் கருவளையம் உருவாகி விட்டது (பக்.625)

ஏறத்தாழ இரண்டாண்டு காலம் எவரது உதவியும் இன்றி, மூலநுõலின் உயிரோட்டம் சிறிதும் சிதறாத வண்ணம் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ள ஜெயரதனின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதற்குரியது.

அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் நுõலகங்களில் இந்நுõல் தவறாது இடம் பெற வேண்டும். ஏனெனில், உலக அரங்கில் காந்திஜி நேருஜி போன்ற ஒப்பற்ற மாமணிகள், யுகபுருஷர்கள் ஒரே நாட்டில் ஒரே சமயத்தில் தோன்றியதும் இல்லை, இனித் தோன்றுவதென்பதும் மிக மிக அரிது!

குஐNஎஅகOகீஉ குகூOகீஙு ஙிஐகுஈOM குகஉஅஓகு ஃஉஉஓக்அN ஙுஉஙி (ஆங்கில நுõல் பக்கம்: 162. விலை: குறிப்பிடப்படவில்லை)

சிங்கப்பூரின் கதை வாலறிவு பேசுகிறது லீகுவான்யூ: ஆசிரியர்: டாக்டர் கே.சிவம், வெளியீடு: அண்டிச்ண tணூச்ஞீடிணஞ் ஏணிதண்ஞு கதிt ஃtஞீ., 115, Mஞுண்ண்ஞுணஞ்ஞுணூ குtணூஞுஞுt, இணிடூணிட்ஞணி12, குணூடிடூச்ணடுச். (பக்கம்: 200. விலை: குறிப்பிடப்படவில்லை)

ஒளிரும் வைரம் லீகுவான்யூ சிங்கப்பூர் என்று துவங்குகின்ற இப்புத்தகங்கள் உண்மையிலேயே ஒளிரும் வைரங்கள் தான். நல்ல கட்டமைப்பு, அழகான வடிவமைப்பு. உயரிய வழவழப்பான தாள், புத்தகத் தயாரிப்பு என அனைத்திலுமே அற்புதமாய் அழகாய் அறிவுக்கு விருந்தாய் ஆங்கிலத்திலும் தமிழிலும் தந்துள்ளார் டாக்டர் கே.சிவம். உலக அரங்கில் லீகுவான்யூவை அறியாதவர் யாருமிலர். உலக வல்லரசு நாடுகளே இன்றைய சிங்கப்பூரின் வளர்ச்சியைக் கண்டு வியந்து பேசுவதைப் பார்க்க முடிகிறது.

மலாய் நாட்டிலேயிருந்து விடுதலை வாங்கி தனி நாடாகப் பிரிந்து வந்த சிங்கப்பூர், குடிக்கத் தண்ணீர் கூட குழாய் வழியாய் மலாய் நாட்டிலிருந்து பெற்ற நாடு. ஒரு கால் நுõற்றாண்டிற்குள் அந்த நாட்டை ஒரு சொர்க்கலோகமாய் மாற்றி அமைத்த மாமனிதன் லீகுவான்யூ. உழைப்பு, உழைப்பு இது தான் இவனது மூலதனம். கட்டுப்பாடும், நேர்மையும், ஒழுக்கமுமே அவனது வாழ்வியல் வேள்வி. லீகுவான்யூ மனிதனல்ல. ஒரு சகாப்தம். 27 ஆண்டுகள் நிராகரிக்கப்படாத நேசமுடன் மக்களால் தேர்ந்

தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர், செயல்வீரன், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரன், ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பக்கூடிய உத்தமன். அந்த உலகச் சாதனையானது வியக்க வைக்கும் இமாலய சாதனைகளையும், வெற்றிகளையும், பயன்பாடுகளையும் அழகாய் நேர்த்தியான ஆங்கிலத்திலும் அமிழ்தினிய யாழ்ப்பாணத்துத் தமிழிலும் இருவேறு புத்தகங்களாக வடித்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர் . ஙிடிண்ஞீணிட் குணீஞுச்டுண் என்ற ஆங்கில சொற்றொடருக்கு “வாலறிவு பேசுகிறது’ என மொழிபெயர்த்துத் தந்துள்ள மொழியாக்கம் ஆசிரியரின் செந்தமிழ்ப் புலமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. முன் அட்டை முதல் பின் அட்டை வரை ஒரே பொழுதில் படித்து முடித்து வைக்கின்ற புத்தகம் எதுவோ அது தான் ஜீவனுள்ள புத்தகம் என்றான் கோல்ரிட்ஜ். அந்த வகையில் இப்புத்தகத்தைப் படைத்துள்ளார் நுõலாசிரியர்.

இது வாழ்வியல் சரிதை நுõல் அல்ல. தனிமனித ஆளுமை; ஒரு நாட்டையே நிமிர்த்தி நிற்க வைக்க முடியும் என்பதற்குரிய அத்தாட்சியான வரலாற்றுப் பதிவுகள். வைரத்தின் பல முகங்கள் எனத் துவங்கி சமயம், ஆன்மிகம் எனப் பத்தொன்பது அத்தியாயங்களில் 45 உள் தலைப்புகளில் வரலாற்று நாயகன் லீகுவான் யூவின் பேராற்றலையும், பெருமுயற்சியோடு இன்றைய சிங்கப்பூரை உருவாக்கிய ஆளுமையையும் ஒரு வரலாற்றச் சாசனம் போல பதிவு செய்துள்ளார். உலகின் பல மொழிகளில் லீகுவான்யூவைப் பற்றிய செய்திகள் வெளிவந்திருக்கின்றன. உலக அரசியல் அரங்கில் இந்த வரலாற்று சாதனை நாயகனை முன் உதாரணமாய் வைத்து பல நுõல்கள் வந்துள்ளன. ஆனால், இந்நுõல் அவைகளின்று வேறுபட்ட நுõல். ஆசிரியரே குறிப்பிடுவது போல இது ஒரு மீளாய்வு. ஒரு தேடல், ஒரு வரலாற்று ஆவணம்.

நுõலில் லீகுவான்யூவின் குணநலன்களை உலக நாடுகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு நிலைகளில் இவரைப் பற்றி வெளியிட்ட கருத்துக்களில் 108னைத் தொகுத்துத் தந்திருப்பது ஆசிரியரின் ஆய்வுப் புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

“எந்த விடயத்தையும் ஆரம்பிக்கும் முன்னர், அதைச் செய்வதனால் பலன் கிடைக்குமா என்பதை ஆராய்வேன்’ பக்கம்:15.

“அறியாமை, கல்வியறிவின்மை, வறுமை, பொருளாதாரப் பின்னடைவு என்பனவற்றை அழித்த பின்னரே, ஒவ்வொருவரினதும் பொருளாதார உன்னத நிலையையும், அவரது தேவைகளின் பூர்த்தியையும் நிச்சயிக்க முடியும்’ (பக்கம்:23)

“நிறைவேற்றப்படாத, பல பெருந்தன்மைகளைக் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. அதன் சக்தி வளம், உரிய முறையில் உபயோகிக்கப்படாது விரயமாக்கப்பட்டுள்ளது.’ (பக்கம்: 126)

“வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் உங்களது உச்சக்கட்ட சக்திக்குப்பட்ட வகையிற் செயலாற்றுங்கள். இதுவே ஜப்பானியர்களின் வெற்றிக்குக் காரணம்’ (பக்கம்: 147).

“அரசுத் தலைவர்கள், உதாரண புருஷர்களாக சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்’ (பக்கம்:161).

என லீகுவான்யூ வாய் பேசிய வைர வரிகளை ஒவ்வொரு பக்கத்திலும் கல்வெட்டுச் செய்தியாகப் பதிவு செய்து அந்த வரலாற்று நாயகனது செயல்திறனை ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஒரு ஓப்பீட்டு இலக்கியம் போல அற்புதமாய் படைத்துள்ளார் முனைவர் சிவம்.

இன்றைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தவறாது படித்துணர வேண்டிய ஒரு பாலபாடம் இந்நுõல்.

கண்டேன் சீனாவை!: ஆசிரியர்: தா.பாண்டியன், வெளியீடு: குமரன் பதிப்பகம், 3 முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 136, விலை: ரூ.50.)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலரான தா.பாண்டியன், இரண்டாம் முறையாக சீனா சென்று வந்த பயண அனுபவங்களை இந்தப் புத்தகத்தின் வாயிலாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். காந்தியவாதியும், சிறந்த பொருளாதார நிபுணருமான ஜே.ஸி.குமரப்பாவின் சீனப் பயணக் குறிப்பும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவுடைமைக் கொள்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் சீனா விலகி, தனியார் துறை மூலம் தொழில்கள் துவங்க முன்வந்துள்ள கால கட்டம் இது. முதலாளித்துவ நாடுகளுடன் வணிகம் செய்து வருகிறது சீனம். சைக்கிள் இருந்த இடத்தில் கார்கள், எல்லாமே அரசு தான் செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, தனி மனிதர்களே தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளத் துவங்கி விட்டனர். இத்தகைய இன்றைய பின்னணியில் இந்தப் புத்தகத்திற்குள் நுழைவது நல்லது.

சீனப் பெருஞ்சுவரையும் அகலமான நீண்ட நெடுஞ்சாலைகளையும், மக்கள் மனதில் காணும் மாற்றங்களையும், பாம்புக்கறி சாப்பிட ஆசைப்பட்டதையும், உப்பு இல்லா உணவு பற்றியும், தரம் பார்த்து அனுபவித்து உணர்ந்து பரவசப்பட்ட அனைத்து விவரங்களையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். சீனாவைத் தெரிந்து கொள்ள உதவும் நுõல்.

தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்: தொகுப்பாசிரியர்: த.ஸ்டாலின் குணசேகரன். வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 280. விலை: ரூ.120).

பாரதச் சுதந்திரப் பொன் விழாவை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை இளந்தலைமுறையினருக்கு நினைவுபடுத்தவும், உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவும் “ஜீவா முழக்கம்’ வார ஏடு பொன் விழா மலர் தயாரித்து வெளியிட்டது. மலர் தொடுக்கும் பொறுப்பை நுõலாசிரியர் ஏற்று நாடு முழுவதும் சுற்றி ஆய்வாளர்களிடம் இருந்து கட்டுரைகள் பெற்று மிகுந்த அக்கறையோடு மலரை உருவாக்கி அதில் வெளிவந்த கட்டுரைகளை நுõல் வடிவம் தந்திருக்கிறார்.

இதில், 36 கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. எல்லாமே தரமாக உள்ளன. குறிப்பாக தியாக சீலர் சுப்பிரமணிய சிவம், ஜீவாவும் இந்திய சுதந்திரப் போராட்டமும், திப்புசுல்தான் விடுதலைப் போரின் முன்னோடி ஆகிய கட்டுரைகள் சிறப்பானவை.

சுதந்திரப் போர்க்களத்தில் டி.கே.எஸ்., சகோதரர்களின் நாடகங்கள், கட்டுரையில் அறிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதிய “பாணபுரத்துவீரர்’ நாடகத்தைக் குறிப்பிடாமல் விட்டார். ஏனோ தெரியவில்லை!

வீரத் தியாகி விஸ்வநாத தாஸ், கட்டுரை உயிர் துடிப்போடு அமைந்து கண்களில் கண்ணீரை குளமாக்குகிறது. வழக்கறிஞராகிய நுõலாசிரியர் சொந்த நலன்களை உதறி விட்டு பொதுத் தொண்டு என்பது எவ்வளவு கடுமையானது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்து ஈடுபட்டதற்குப் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

இம்மாதிரியான நுõல்களே நாட்டுக்குத் தேவை.

கூடஞு கச்டூடூச்திச் இணிடிணண் ஆங்கில நுõல்; ஆசிரியர்: இரா.கிருஷ்ணமூர்த்தி. வெளியிட்டோர்: கார்னே பப்ளிஷர்ஸ், கூ7/1 2, காவேரி சாலை, பெசன்ட் நகர், சென்னை90. (பக்கம்: 196 அ4 அளவு) . விலை: ரூ.800)

தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி, கடந்த கால் நுõற்றாண்டுக்கு மேலாக நாணயவியல் பற்றி அனைத்துலகத் தரத்தில் ஆராய்ச்சி நிகழ்த்தி வருபவர். சங்க காலத் தமிழ் அரசர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்ற கருத்தை மாற்றிச் சங்க காலச் சேரர் (மலையமான்) சோழர், பாண்டியர் காலத்தில் வெளியிட்ட நாணயங்களை அரி தில் முயன்று கண்டுபடித்துத் தம் கட்டுரைகள் மூ லமும் நுõல்கள் வழியும் நிலை நாட்டியவர். குறிப்பாகப் பாண்டிய அரசன் பெருவழுதிப் பற்றிய கண்டுபடிப்பு சிறப்பாகச் சுட்டத்தக்கதாகும்.

அண்மையில், பல்லவர் காலத்து வெளியிடப்பட்ட நாணயங்களை ஆராய்ந்து இப்பெரிய நுõலை உருவாக்கியுள்ளார். பல்லவர் கால நாணயங்கள் பற்றி முன்பே சில கட்டுரைகள் அயல்நாட்டு அறிஞர்களாலும் இந்திய அறிஞர்களாலும் வெளியிடப்பட்டிருந்த போதிலும் பல்லவர் நாணயம், பற்றித் தனி முழுமையான ஆங்கில நுõல் முதன் முதலாகத் தற்பொழுது தான் ஆசிரியர் முயற்சியால் வெளிவந்துள்ளது. இவ்வாய்வை நிகழ்த்த இவர் பல காலம் தொகுத்து வந்த நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகத் தென்பெண்ணை, அமராவதி ஆற்றங்கரை ஓரங்களில் கண்டறியப்பட்ட நாணயங்கள் இவர் தம் ஆராய்ச்சிக்கு மிகப் பயன்பட்டுள்ளன. அன்றியும் லண்டன், கொழும்பு, புதுடில்லி, சென்னை அருங்காட்சியகங்களுக்கு நேரில் சென்று தம் ஆய்வை முழுமைப்படுத்தியுள்ளார். இவ்வாராய்ச்சி நுõல் கி.பி.4ம் நுõற்றாண்டு முதல் 9ம் நுõற்றாண்டு வரை பல்லவர்களைப் பற்றிப் பொது அறிமுகத்தை முதலில் நிகழ்த்துகிறது. முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் ஆகியோர் நிரல்பட அறிமுகப்படுத்தப் பெறுகின்றனர். இவ்வறிமுகத்தைத் தொடர்ந்து பல்லவர் நாணயங்களைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது. இவ்வாராய்ச்சி பக்கம் 41 முதல் 167 வரை அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மிக அரி ய செய்திகள் அடங்கிய நான்கு பின்னிணைப்புகள் இடம் பெறுகின்றன.பல்லவர் கால நாணயங்களை அறிமுகப்படுத்தும்போது நாணயத்தின் இரு பக்கங்களும் படங்களுடன் தனித்தனியாக அச்சிடப் பெற்றுள்ளன. அதை ஒட்டித் தனியே வரையப் பெற்ற கண் பிரதியும் அச்சிடப் பெற்றுள்ளது. ஆக, ஒவ்வொரு நாணயம் பற்றியும் துல்லியமாக அறியத் தெளிவாக இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நாணயப் படத்திற்கு முன்பும் நாணயம் உருவாக்கப்பட்ட உலோக விவரம், அதன் அளவு, எடை, முன்பக்கமும் பின்பக்கமும் அமைந்துள்ள உருவங்கள் பற்றிய விவரம், நாணயம் கிடைத்த இடம் ஆகியன நிரல்பட வழங்கப் பெற்றுள்ளன. நாணயங்களில் பொறிக்கப் பெற்றுள்ள உருவங்களான காளை, சிங்கம், யானை, குதிரை, பன்றி, மரம், கப்பல், ஸ்வஸ்திகம், சக்கரம், பறை, மீன், சங்கு முதலான சின்னங்கள் பற்றியும், அவற்றை ஒட்டித் தம் ஆராய்ச்சியையும் நிரல்பட நிகழ்த்தியுள்ளார். நாணயங்கள் சிலவற்றுள் பல்லவர் கிரந்த எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ள சொற்களையும் அரிதில் முயன்று, படித்து விளக்கம் நல்கியுள்ளார்.இவர் தம் விளக்கங்களில் குறிப்படத்தக்க சில செய்திகள் நம் கவனத்திற்கு உரி யவை:1. தொடக்கக் காலத்தில் பல்லவர் நாணயங்கள் ஈயத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பத்தளை, செம்பு ஆகியவற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. நில இயலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர் என்பதால் பல்லவர் நாணயத்தை அச்சிடப் பயன்படுத்தியுள்ள உலோகங்களை ஆழமாக ஆராய்ந்து அரி ய செய்திகளையும் வழங்கியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது:

1. தொடக்க கால ஈய நாணயங்களில் குரோமியம் இல்லாதிருப்பதும் வெள்ளித்தன்மை உடைய வெண்ணாகம் (ஙச்ணச்ஞீடிதட்), இருப்பதும் இவர் தம் ஆராய்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றன. பல்லவர்களுக்கு மூலவர்கள், ஆந்திராவை ஆண்டுக் கொண்டிருந்த சாதவாகன அரசர்கள் ஆவர். ரோமானியர்களுக்கும், சாதவாகனர்களுக்கும் தொடர்பிருந்தது. ஸ்பெயின் நாட்டிலிருந்து வெண்ணாகம் உள்ள ஈயத்தை இத்தாலி நாட்டு ரோமானியரிடமிருந்து சாதவாகன அரசர்கள் பெற்றுத் தம் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். கி.பி.54114 ஆண்டுகளில் சாதவாகனர் இந்நாணயங்களைத் தாம் வெற்றி கொண்ட காஞ்சிபுரத்திலும் புழங்கவிட்டிருத்தல் வேண்டும். தொடக்க காலங்களில் சாதவாகன அரசர்களின் பிரதிநிதிகளாக, ஆளுநர் பொறுப்பில் காஞ்சிபுரத்தைப் பல்லவர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.194ல் சாதவாகன அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. கவுதம் புத்திர யஞ்சின சாதகானி இறந்த பின், காஞ்சிபுரத்தை ஆளுநராக இருந்து ஆண்டு வந்த பல்லவர்கள் சுயாதிகாரம் உடையத் தனி அரசர்களாக மாறியிருக்க வேண்டும். சாதவாகனர் ஆட்சியில் புழங்கிய அதே நாணயங்களைப் புதிதாக அடித்துத் தம் சின்னங்களைப் பொறித்து பல்லவ அரச எல்லையில் புழங்க விட்டிருத்தல் வேண்டும். எனவே தான் பல்லவர் நாணயங்களில் வெண்ணாகம் இருக்கிறது. முன்னைய அரசை வீழ்த்திப் புதிய அரசு தோன்றும் போது முன்பு புழங்கிய நாணயங்களைச் செல்லாதவை என்று அறிவித்தது தம் சின்னம் பொறித்த நாணயங்களை வெளியிடுவது அரசர்களின் பொது மரபாகும். ஆக, இச்செய்திப்படி பல்லவர்கள் தமிழகத்தில் தனி ஆட்சி செய்யத் தொடங்கிய காலம் இரண்டாம் நுõற்றாண்டின் இறுதி அல்லது 3ம் நுõற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆசிரியர் வருகிறார். (பக்:174) பல்லவர் வரலாற்றில் இது புதிய செய்தியாகும்.

2. மகேந்திர வர்மன் (கி.பி.580636) மாமல்லபுரத்தை உருவாக்கிய மன்னன் ஆவான். இவன் காலத்து வெளியிடப்பட்ட கல்வெட்டுக்களிலிருந்து இவன் நுõற்று முப்பது விருதுகளைக் கொண்டவனாக இருந்தான் என்பது தெரி கிறது. இவற்றுள் பெரும்பான்மையானவை தெலுங்கு மொழியினவாக இருக்கின்றன. (பக்: 134) இந்தோ சீன நாடுகளை நினைவுப்படுத்தும் விருதுகளான ப்ளபு, வ்ளாசு, ம்லாயு, கடுஃதயு, கடும்தரம்பு ஆகியன பல்லவ அரசு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செல்வாக்கு பெற்றிருந்தமையைக் காட்டுகின்றன. மகேந்திரவர்ம பல்லவன் பெற்றிருந்த பட்டங்களுள் மாமாயன் என்பதும் ஒன்றாகும். இது திருமாலைக் குறிப்பதாகும். ஆண்டாள் தம் திருப்பாவையில் (8) மாயனை மன்னுவடமதுரை மைந்தனை என்று குறிப்பாள். ஆண்டாள் வாழ்ந்த கி.பி.8ம் நுõற்றாண்டிலும் அதற்கு முன்பும் திருமாலுக்குரி ய பெயராக மாயன் என்பது புகழ் பெற்றிருந்தது என்று இதனால் தெரிய வருகிறது. (பக்: 147) ஒரு நாணயத்தில் காளைக்கு வழங்கப் பெறும் ஏறு எனும் சொல் ஆளப் பெற்றிருப்பதாக இவர் யூகிப்பது சிந்தனைக்குரி யதாகும். (பக்: 152, 160).

3. பத்தளை நாணயம் (பக். எண்: 286) ஒன்றின் பின்பக்கம் பொறிக்கப்பட்டிருக்கும் உருவம் துறைமுகத்தைக் குறிப்பதாகலாம் என்பது மிகவும் புதுமையான செய்தியாகும். பல்லவர் காலத்தில் மாமல்லபுரம் சுறுசுறுப்பாக விளங்கிய துறைமுக நகரமாக விளங்கியது. முதல் நரசிம்மவர்மன் தன் கடற்படை கொண்டு இலங்கையை வெற்றி கொண்டான். 1992ல் இப்பகுதி ஆராயப் பெற்று கடலுக்குள் மூழ்கிய கல் கட்டட அமைப்பு தொல்பொருள் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக, பல்லவர் காலத்து மாமல்லபுரம் பெரும் துறைமுகமாக இருந்திருத்தல் வேண்டும். இதைக் காட்டுவதாகவே நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சுற்று வட்டமும் இன்ன பிறவும் அமைந்துள்ளன என்று ஆசிரியர் யூகிப்பது சிந்தனைக்குரி யது (பக்: 166)

4. ஒரு நாணயத்தின் பின்பக்கம் குதிரை உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டி அது பல்லவ அரசர் அசுவமேத யாகம் செய்ததைக் குறிப்பதாக இருத்தல் வேண்டும் என்பது அரி ய செய்தி. நாணயத்தில் இவ்வுருவம் தெளிவாக இல்லாவிடினும் கழுத்திலிருக்கும் மாலை எதிரே இருக்கும் யூபம், ஆசிரியர் தரும் செய்தியை உறுதி செய்வனவாக உள்ளன.

5. தாய்லாந்து நாட்டிலுள்ள த்துவாராவதி நாணயங்களில் பல்லவர் செல்வாக்கு இடம் பெற்றிருத்தல் வேண்டும் என்ற குறிப்பும் விளக்கமும், தென்னிந்தியர் தம் தென்கிழக்கு ஆசிரியர் தொடர்பை உறுதிப்படுத்துவதாக (பக். 123126) அமைந்துள்ளன.இந்நுõலின் மிகச் சிறந்த பகுதி நுõலில் இடம் பெற்றுள்ள அடிக்குறிப்புகளாகும். இக்குறிப்புகளை ஆசிரியர் மிக மிகக் கவனமாக வரைந்துள்ளார். இக்குறிப்புகளில் தென்னிந்திய வரலாறு, தமிழிலக்கியச் சான்றுகள் முதலானவை மிகுந்த கருத்தோடு பொறிக்கப் பெற்றுள்ளன. பின்னிணைப்பில் ஆசிரியர் நாணயம் ஒவ்வொன்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ள உலோக அளவைச் சதவீதப்படுத்திக் கொடுத்திருப்பது (பக்: 168, 170) ஆசிரியர் தம் கடும் உழைப்பைக் காட்டும் பகுதியாகும். நாணயவியல் ஆராய்ச்சியிலும், பல்லவ ஆராய்ச்சியிலும் இந்நுõல் ஒரு மைல் கல் என்று உறுதியாகச் சொல்லலாம். இந்நுõல் உயர்ந்த தாளில் அழகான அச்சில், நல்ல கட்டமைப்பல் வெளியிடப்பட்டிருப்பது கூடுதலான பாராட்டத்தக்க சிறப்பாகும்.

.
சதாம் மரணத்தின் நிழலில்: ஆசிரியர்: பி.ஜே.ராஜய்யா, வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை14. (பக்கம்: 192, விலை: ரூ.50)

உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லரசான அமெரி க்காவையே கொஞ்ச காலம் நடுநடுங்க வைத்த ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் பற்றி தமிழில் வெளிவந்துள்ள நுõல். அமெரிக்காவை எதிர்த்த பின்தான் சதாம் பற்றி பலர் தெரிய வந்திருந்தாலும், அவரது பிறப்பு வளர்ப்பு, சிறு வயது வாழ்க்கை, இளைஞனான பின்பு தேர்ந்தெடுத்த பாதை, ஆட்சியைக் கைப்பற்றிய முறை, எதிரிகளை கையாண்ட விதம் என அத்தனை பரிமாணங்களையும் தெரிய வைக்கும் புத்தகம் இது. நுõலாசிரி யர் ராஜய்யா ஒரு பத்திரிகையாளர் என்பதால் சதாமின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை ஒவ்வொருவரும் புரிய வைக்கும் நோக்கில் அழகான கதையாக சொல்லி இருக்கும் விதம் அருமை.

நெல்சன் மண்டேலா: நுõலாசிரியர்: இர.செங்கல்வராயன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.0

ஆப்ரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்திய நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையைச் சொல்லும் நுõல் இது. முதலில் வன்முறையில் நம்பிக்கை கொண்டிருந்த மண்டேலா, மகாத்மா காந்தியடிகளின் சாத்வீகப் போராட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு, அறவழிப் போர் முறைக்குத் தன்னை மாற்றிக் கொண்டவர். அவருக்கு 27 ஆண்டுச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டபோது, அவரின் வயது 46. நெல்சன் மண்டேலாவைப் பற்றிய பல நுõல்களுடன் அவரே எழுதிய தன் வரலாற்று நுõலையும் படித்து விட்டு, இந்த நுõலை இர.செங்கல்வராயன் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். அடிமைத்தனத்தில் இருந்து விடுபட, விடுதலை பெறப் போராடும் அனைத்து மக்களுக்கும் நெல்சன் மண்டேலா ஒரு வழிகாட்டி

உலகை உலுக்கியவர்கள்: ஆசிரியர்: த.இராமநாதன். வெளியீடு: திருமகள் நிலையம், எண்.16, வெங்கட் நாராயணா சாலை (பக்கம்: 30. விலை: ரூ.120)

ஹிட்லர், ஆப்ரகாம் லிங்கன், அம்பிகாபதி, பகத்சிங், பாரதியார், கிளியோபாட்ரா, கஜினி முகமது, காமராஜர், லைலா மஜ்னு, மேரி கியூரி, மாக்கியவெல்லி, பண்டித ரமாபாய், ரோமியோ ஜூலியட், ரசியா சுல்தான், ரூசோ, சாக்ரடீஸ், தாகூர், வ.உ.சிதம்பரனார் ஆகியோர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய நன்னுõல்.

பள்ளி மற்றும் கல்லுõரி மாணவர்களுக்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும். இதைப் படிப்பவர்களுக்கு நிச்சயம் தன்னைப் பற்றிய ஒரு கேள்வியும், நாமும் ஒரு சிறு சாதனையாவது படைக்க வேண்டும் என்ற எண்ணமும் நிச்சயமாக ஏற்படும்!

சிலம்பின் காலம்: நுõலாசிரியர்: முனைவர் செ.கோவிந்தன். வெளியீடு: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை78. (பக்கம்: 188. விலை: ரூ.80).

சிலப்பதிகாரம் எழுந்த காலம் பற்றி ஆய்வாளர்களுக்கு இடையே இன்றளவும் கருத்து மாறுபாடுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. 22 சுவடிகளை ஒப்பு நோக்கி, கானல் வரி நீங்கலாக ஊழ்சூழ் வரி முடிய 13 காதைகளை 1892ல் தொகுத்து சிலப்பதிகாரம் நுõலை வெளியிட்ட உ.வே.சா., முதல் இ.மு.சு., அவ்வை துரைசாமி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற சுமார் 15 அறிஞர்கள் சிலம்பின் காலம் கி.பி. இரண்டாம் நுõற்றாண்டெனவும், மு.ராகவையங்கார் ஐந்தாம் நுõற்றாண்டெனவும், வையாபுரிப் பிள்ளை எட்டாம் நுõற்றாண்டெனவும் கூறியுள்ள நிலையில், இந்நுõலாசிரியரோ “சோழ அரசர்கள் இல்லாத கி.பி. எட்டாம் நுõற்றாண்டில் அவர்களைப் பாத்திரங்களாகக் கொண்ட நுõல் தோன்றியிருக்க முடியாது. எனவே, 11ம் நுõற்றாண்டே சிலம்பின் காலம் என ஆய்வு செய்துள்ளார்.
“இளங்கோவின் உட்கோள் சமண தத்துவங்களைப் பரப்ப வேண்டுமென்பதே’ (பக்:35), “கோவலன் என்ற பெயர் தமிழ்ப் பெயரன்று’ (பக்:50), “இளங்கோவடிகள் காலத்தில் பதிற்றுப்பதிகங்கள் எழுதப்பட்டன’ (பக்:58), உரையாசிரியர் தாம் “கரிகாலன்’ என்னும் பெயரை எடுத்தாண்டுள்ளார் (பக்.103), அரும்பதவுரைகாரர் தாம் இளங்கோவைச் செங்குட்டுவன் தம்பியாக்கி விட்டார் (பக்:112), இளங்கோவடிகள் (மாசறுபொன்னே) தமிழ் வழக்காற்றை மாற்றிப் பிற்கால வழக்காற்றைப் பயன்படுத்தியுள்ளார் (பக்:155) போன்றவை சுவைபட ஆய்வு செய்யப்பட்டுள்ள போதிலும் சிலம்பின் காலத்தைஇந்நுõல் முழுமையாக வரையறுத்துள்ளதாக அறுதியிட்டுக் கூற முடியாது. எனினும், ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய நல்ல இலக்கிய வரலாற்று ஆய்வு நுõல். பெயர் மாற்றம் பெற்று இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.

பாலஸ்தீன வரலாறு (முதல் பாகம்): <நுõலாசிரியர்: எம்.எச்.ஜவாஹிருல்லாஹ். வெளியீடு: புத்தொளி பதிப்பகம், சென்னை600 001. (பக்கம்: 166. விலை: ரூ.50).

இறைத் துõதர்களின் போதனைகளை நிந்தித்த யூத கிறிஸ்தவர்களை விட ஜெருசலம் நகரத்திற்கு முஸ்லிம்களுக்கே உரிமை உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தி 18ம் நுõற்றாண்டு வரையிலான வரலாற்றுச் சுவடுகளை, ஆதாரங்களை ஆசிரியர் இந்நுõலில் வரைந்துள்ளார்.

இறைத் துõதுவர்களின் நகரம் ஜெருசலம். ஜெருசலத்தின் உமர் (ரஸி), சிலுவை யுத்தத் தொடக்கம். சிலுவைப் படையினரின் அரசாட்சி, அவ்வாட்சியை எதிர்த்த மாவீரர் இமாதுத்தின் ஜன்கி, நுõருத்தீன் ஜன்கி, ஸலாஹீத்தின் அப்யூபியின் எழுச்சி, அதைக் கைப்பற்றல், மூன்றாம் சிலுவை யுத்த ஆரம்பம், ஐரோப்பாவில் இருந்து வந்த சிலுவைப் படை ஸலாஹீத்தின் மரணத்திற்கு பிறகு பாலஸ்தீனம், மங்கோலியரின் காட்டு மிராண்டித்தனம், மங்கோலிய தர்த்தாரியர்களின் படுதோல்வி என 14 அத்தியாயங்களில் இந்நுõல் உருவாக்கப்பட்டுள்ளது.வரைபடம், பாலஸ்தீன புகைப்படம் இடம் பெற்றுள்ள இந்நுõல் வரலாற்றை கற்க, ஆராய விரும்புபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஹிட்லரின் யுத்த களங்கள்: நுõலாசிரியர்: ஜெகாதா. வெளியீடு: அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. ( பக்கம்: 176. விலை: ரூ.60).

ஓவியக் கனவுகளில் திளைத்தபடி வியன்னா நகரில் நுழைந்த 18 வயது இளைஞனுக்கு சேரி வாழ்க்கையும் பிச்சை எடுக்கும் நிலையும் தான் விஞ்சியது. யூதர்களின் செல்வம் கொப்பளிக்கும் சிங்கார வாழ்க்கை அந்த இளைஞனின் இதயத்தை இரும்பு ஆணி கொண்டு அறைந்தது, யுத்தம் ஒன்று தான் நிகழ்காலத் துயரங்களுக்குத் தீர்வு காணும் பாதையை உருவாக்கும் என்று எண்ணி யுத்தம் வருமானால் படையில் சேர்ந்து விட வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் தான் பின்னாளில் போலந்து, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சவாலாக விளங்கிய சர்வாதிகாரி ஹிட்லர்.கடந்த 1899ல், ஏப்ரல் 20ம் நாள் பிறந்து, 1945ல் ஏப்ரல் 30ம் நாள் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட, ஹிட்லர், மாவீரன் நெப்போலியனிடம் தீராத மதிப்பு கொண்டிருந்தார் என்பதையும் நுõலாசிரியர் எடுத்தாண்டுள்ளார். ஹிட்லரின் இறுதி நாட்களை இரங்கத் தரும் வகையில் சிறப்பாகப் படைத்துள்ளார்.வரலாற்று நாயகர்களாக சித்தரிக்கும் வகையில், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் வகையில் ஆற்றொழுக்க நடையில் இந்நுõல் எழுதப்பட்டுள்ளது. படித்துச் சுவைக்கலாம்.

நிமிர வைக்கும் நெல்லை: நுõலாசிரியர்: வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். வெளியீடு: பொதிகை பொருநை கரிசல் கட்டளை, திருவான்மியூர், சென்னை41. (பக்கம்: 200. விலை: ரூ.75).

தமிழுணர்வுக்கும், தேசிய உணர்வுக்கும், ஆன்மிக உணர்வுக்கும் ஒட்டு மொத்த புண்ணிய பூமியாக விளங்கும் வளம் நிறைந்த நெல்லை மாவட்டத்தின் அருமை பெருமைகளை இந்நுõலில் சேகரித்துத் தந்துள்ளார் நுõலாசிரியர்.

சங்க இலக்கியங்களில் தொடங்கி, ஆதிச்சநல்லுõர் அகழ்வாராய்ச்சி என்று வரலாற்றுத் தொன்மையும், சைவம், வைணவம், கிறிஸ்தவம், சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் என மத நல்லிணக்கத்தில் நெல்லையின் பங்கையும்,

பூலித்தேவன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தேசியக்கவி பாரதி, இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் கண்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., நாடகத் துறையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள், சிறுகதை பிதாமகன் புதுமைபித்தன், தேவநேயப் பாவாணர், தொ.மு.சி.ரகுநாதன் இப்படி ஏராளமான அரசியல், இலக்கியவாதிகளின் பிறப்பிடம் நெல்லை என்று தேசிய அரசியல் போராட்டத்தில் நெல்லையின் பங்கையும்,

பாஞ்சாலங்குறிச்சி போர், கட்டபொம்மு செப்பேடு, ஆஷ் கொலை வழக்கு போன்ற செய்திகள் மூலம் நீதித்துறையில் நெல்லையின் பங்கையும் படைத்துள்ளார். நுõலுக்கு பொருளடக்கம் தந்து, ஒவ்வொரு கட்டுரையையும் சரியாகத் தலைப்பிட்டு ஒவ்வொரு பிற்சேர்க்கைக்கும் உரிய பொருத்தமான குறிப்புகளைத் தந்திருந்தால் இன்னும் நுõல் வடிவம் நிறைவாக இருக்கும்.

தெரிந்த கோவை தெரியாத கதை: ஆசிரியர்: கவியன்பன் கே.ஆர்.பாபு, வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641 001. (பக்கம்: 216, விலை: ரூ.60)

சிறுவாணி மெயில் வார இதழில், ஆசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள், புத்தக வடிவில் தற்சமயம் வெளிவந்திருக்கிறது. கோவை நகர மக்கள் இந்தக் கட்டுரைத் தொகுப்பை மிகுந்த ஆர்வத்துடன் படிப்பர் என்பது நிச்சயம்.

ஆனால், கோவை நகரைப் பற்றித் தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் அனேகமானவர்களை இந்தப் புத்தகம் நிச்சயம் கவர்ந்து இழுக்கும். கவியன்பன் வரலாற்று பிரக்ஞையுடன் எழுதியுள்ள கட்டுரைகள் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. காடாகவும், கட்டாந்தரையாகவும் இருந்த நிலப்பரப்பு மெல்ல மெல்ல வளர்ந்து, எப்படி தொழில் நகரமாகவும், தொழிலாளர்களின் பிழைப்புக் களமாகவும் உருப்பெற்றது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்த நுõலைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் இதுபோன்ற மாவட்டத் தலைநகர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய புத்தகம் வெளிக் கொணர முயற்சி செய்யக் கூடும். படிக்கப் படிக்க ஆர்வத்தைத் துõண்டும் கோவை நகர வரலாற்று ஆவணம் இது.

வரலாறாய் வாழ்ந்த தந்தையர்: ஆசிரியர்: சுப்ர. பாலன். வெளியீடு: காமதேனு பப்ளிகேஷன்ஸ், ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 116. விலை: ரூ.40)

அரசியல், நாடகம், ஓவியம், கல்வி, சினிமா போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 18 தலைவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளன. கட்டுரையாளரால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, தற் போது நுõலாக்கம் பெற்றுள்ளது.

ராஜாஜி, வ.உ.சி., நாமக்கல் கவிஞர், டாக்டர் ராமசாமி ஐயர், கல்கி, மு.வ., அண்ணாமலை செட்டியார், எஸ்.வி.வி., கொத்தமங்கலம் சுப்பு, தமிழ்வாணன் உள்ளிட்ட 18 பேரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை அவர்களின் வழித்தோன்றல்களின் வழியாகக் கேட்டு கட்டுரைகளை உருவாக்கியுள்ளார் நுõலாசிரியர்.

மறைந்த அறிஞர்களின் மறக்க முடியாத சில நிகழ்வுகள் இந்த நுõலின் சிறப்பு.

இஏOஃஅ NஅஙஐஎஅகூஐON கஅஇஓஅஎஉ: அதtடணிணூ: கணூணிஞூ. ஆ.அணூதணச்ஞிடச்டூச்ட். கதஞடூடிண்டஞுணூண்: Mச்ணூடிtடிட்ஞு ஏடிண்tணிணூதூ குணிஞிடிஞுtதூ, Mதட்ஞச்டி400 005. (கச்ஞ்ஞு: 109. கணூடிஞிஞு: கீண்.250)

சோழா நேவிகேஷன் பேக்கேஜ்’ என்ற இந்த ஆங்கில நுõல் மும்பைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியல் பேராசிரியர் பி.அருணாசலம் என்பவரால் எழுதப்பட்டு, “மாரி டைம் ஹிஸ்டரி சொசைட்டி’ என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மேற்கு கடற்படைக் கமாண்டின் கீழ் செயல்படுகிறது. 1978ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் குறிக்கோள், இந்தியக் கடல் வழி செயல்பாடுகளைப் பற்றி ஆராய்ந்து, சிறந்த ஆசிரியர்கள் மூலம் அவற்றைப் பதிப்பிப்பது தான். இந்த சீரிய முயற்சிக்காகவே இந்த நிறுவனம் பாராட்டப்பட வேண்டியதாகும்.அவ்வகையில் எழுதப்பட்ட நுõல்களில் இந்த நுõல் ஆறாவது ஆகும். ஆசிரியர் அருணாசலம். நாற்பது ஆண்டுகள் புவியியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். கடலைப் பற்றியும், கடற்கரை பற்றியும், கப்பல் செலுத்தும் மாலுமிகளின் திறமை பற்றியும் பல ஆராய்ச்சிகளைச் செய்தவர். ஆகையால் இந்த நுõல் சிறப்பாக அமைந்துள்ளது என்பதில் ஆச்சரியமில்லை.
ஆனால், இப்படைப்பின் மூலம் கடல் வழி செல்லுகையில் பயன்படுத்தப்பட்ட சோழர் காலத்தியக் கருவிகளைக் குறித்து, ஆய்வுகள் செய்து அதைச் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ளும்படியாக விளக்கியிருப்பது தான் இந்த நுõலின் சிறப்பு அம்சம். அது ஆசிரியரின் திறமையைக் காட்டுகிறது.

எட்டு அத்தியாயங்களில், கருவிகளை பற்றியும், சோழர் காலத்து கப்பலோட்டும் திறமையைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். இவற்றில் அக்கால சில விஞ்ஞான முறைகள் கணித, வரைபட மூலமாக விளக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு. தமிழகத்துக்குப் பழைய துறைமுகங்கள் வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. விரல் கணக்கு என்ற முறையில் கடல் வழி துõரம் அளக்கப்பட்டதை துல்லியமாக விவரித்துள்ளார். கடலில் வழி காணும் முறையில் விண்மீன்கள் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன. ஒரு கயிற்றின் உதவியால் ஒரு முனையைப் பல்லில் கடித்துக் கொண்டு அதன் மற்றொரு முனை ஒரு தகட்டில் சொருகப்பட்டு, (ராப்பலகை) இன்றை செக்ஸ்டண்ட் போல பயன்படுத்தப்பட்டிருப்பது அனேகருக்குத் தெரியாத விஷயம். அதை படத்துடன் விளக்கியுள்ளார்.

இவற்றைத் தவிர அக்காலத்துச் சோழர்களின் கடல் வழி விவேகத்தைப் பல உதாரணங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார். பல்லவர் காலத்து கடல் வழி வணிகத்தைப் பற்றி ஏழாம் நுõற்றாண்டு சரித்திரத்தை நன்கு ஆராய்ந்துள்ளார். தாய்லாந்தில் படியெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுச் சாசனத்தைப் பற்றியும் விவரித்துள்ளார். இவை பல அறிஞர்களால் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட கருத்துக்களே. ஆயினும் இவர் எழுதியுள்ள முறை சிறப்பாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல விஞ்ஞான முறைகளைப் பரிசீலித்து, “நட்சத்திர சக்கரம்’ முதலானவையோடு ஒப்பிட்டு எழுதியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

இந்த நுõல் கட்டாயமாகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுத் தமிழ் சமுதாயத்திற்கு உதவ வேண்டும். இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொண்ட அருணாசலமும், பதிப்பித்த மேற்கு நேவல் கமாண்டும் போற்றப்பட வேண்டியவர்கள். இந்நுõல் எல்லா கல்லுõரிகளின் நுõலகங்களிலும் கட்டாயமாக இருக்க வேண்டியதாகும்.

முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்: கரைகண்டம் கு.நெடுஞ்செழியன், வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை12. (பக்கம்: 264, விலை: ரூ.80.)

இந்த புத்தகம் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் தலைப்புக்கும், உள்ளே உள்ள விஷயங்களுக்கும் ஏழரைப் பொருத்தம். முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் வடபுலத்தில் படையெடுத்து, சில குறுநில மன்னர்களைத் தோற்கடித்துச் செல்வங்களைக் கொள்ளையடித்து, ஆளும் காலம் வரை அக்கிரமம் செய்துவிட்டு, சுரண்டிய செல்வங்களுடன் சொந்த நாட்டுக்கு ஓடி போய்விட்ட சம்பவங்கள் புத்தகம் முழுவதும் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் 136வது பக்கத்தில் தைமூர் பதினைந்தே நாட்கள் ஆட்சியில் அமர்ந்து செய்த அட்டூழியங்களைப் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளதைப் படிக்கும்போது, வாசகனின் இதயம் ஆயிரம் மடங்கு வேகத்தில் இயங்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

தைமூர் ஓராண்டு காலம் இந்தியாவில் நடத்திய காட்டுத் தர்பாரில் லட்சக்கணக்கான மக்கள் காரணமின்றி கொல்லப்பட்டனர்.

சுல்தான் பைரோஜ் ஷா துக்ளக் நாற்பது ஆண்டுகால நகர (டில்லி) வளர்ச்சி குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போலவும், மத யானை புகுந்த கரும்புத் தோட்டம் போலவும் ஆயின. இவன் செய்த கொடுமைகளைச் சீர் செய்ய அடுத்து வந்த முஸ்லிம் மன்னர்களுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டன. மேலும், முகமது கஜினி கொள்ளையடித்தார்; கோயில்களை இடிக்கவில்லை என்ற தகவலும் உண்டு. அக்பர், ஹுமாயூன், ஜஹாங்கிர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், மிகக் குறைந்த, மிகச்சிறிய அளவு இந்திய மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய சில முன்னேற்றங்களை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். இருந்தபோதிலும், புத்தகத்தை படித்து முடித்தவுடன், முஸ்லிம் மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்தியா முன்னேற்றமடைந்ததாகச் சொல்ல இயலாது. அப்படியே ஏதேனும் முன்னேற்றம் என குறிப்பிடலாம் என்றால், அவையனைத்தும் முஸ்லிம் மன்னர்களின் சொந்த நலனும், சுயலாபமும் கலந்ததாக இந்தப் புத்தகத்தில் காணக் கிடக்கிறது.

அதனால்தான் கடந்தகால நிகழ்ச்சிகளின், அனுபவங்களின் தொகுப்பு இந்த நுõல் என்று முன்னுரையில் கூறப்பட்டுள்ளது போலும்!

பாகிஸ்தானிலிருந்து…: ஆசிரியர்: ம.ந.ராமசாமி. வெளியீடு: நிவேதிதா பதிப்பகம், 1, மூன்றாவது மாடி, புதுõர், 13வது தெரு, அசோக் நகர், சென்னை83. (பக்கம்: 239. விலை: ரூ.60)

நாடு பிரிவினை அடைந்த தருணத்தில் தற் செயலாக அகதியாக மாறிய ஒரு இந்திய முஸ்லிம் பெண்ணை, பாகிஸ் தானிலிருந்து பாதுகாப்பாக மீட்டு வருகிறான் மனிதாபிமானமுள்ள ஒரு சிவிலியன். இதுவே முதலாவதுமாகவும், நுõலின் தலைப்புக் கதையுமாக அமைந் துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் வெவ் வேறு இதழ்களில் வெளியான இருபது கதைகளின் தொகுப் பே இந்நுõல்!

பெரும்பாலான கதைகள் ஒரு குறிப்பிட்ட மரபினரை (அந்தணர்) மையப்படுத்தியது மட்டுமின்றி, மூன்று சி றுகதைகள் கனகதாரை (பக்:164), கெட்டவார்த்தை (பக்:184), ஒரு வேலைக்காக (பக்: 136) பெண் வாசகர்கள் படிக்கக் கூசும் விதமாக, விரசத்தின் எல்லைக் கோட்டையும் தாண்டி விட்டன.
தணிக்கை என்ற ஒரு நியதி இருப்பின் இவையெல்லாம் அச்சேறாது.

“ஆத்தங்கரை ஓரம்’: ஆசிரியர்: வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41.பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்துõர், சென்னை 98 (பக்கம்: 203; விலை: ரூ.55).

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சிந்துõர். நதிக் கரையோரம் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்திற்கு, அணைக்கட்டு வடிவில் வருகிறது ஆபத்து. தவழ்ந்து, வளர்ந்த தாய் மண்ணைப் பிரிய மனமில்லாமல், கோவிந்த் பாயி அவரது மகன் சிமன் தலைமையில் பழங்குடி மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.

சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளங்கள் சீரழிந்து போகும் என்பதால், சமுக ஆர்வலர்கள் ராதா, சந்தீப், நிதின், அரசு அதிகாரி சுதிர் அவரது மனைவி யூதிகா ஆகியோர் அணைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொள்கின்றனர்.

அரசை எதிர்த்துப் போராடி, அப்பாவி மக்கள் ஜெயிக்கத்தான் முடியுமா…? அழகிய சிந்துõர் கிராமம், கொஞ்ச கொஞ்சமாய் சூறையாடப்படுகிறது.சுயநலவாதிகளால், இயற்கை வளம் எந்தளவுக்கு சீரழிக்கப்படுகிறது என்பதை, பக்கங்கள் ஒவ்வொன்றும் படம் பிடித்துக் காட்டுகின்றன. முதல் பக்கம் துவங்கி… கடைசிப்பக்கம் முடியும் வரை முடிந்து சில நாட்கள் கழிந்தப் பிறகும் நம்மையும் சிந்துõர் கிராமவாசிகளுள் ஒருவராக்குவது நுõலாசிரியரின் எழுத்தாற்றலுக்குச் சான்று.

நாகரிக கசடுகள் எதுவும் அணுகாத அமைதியான பழங்குடி மக்களுக்கு எதிரான சமுக அவலங்கள் ஆணியடித்தது போல, மனதில் இறங்குகிறது… மனதை ரணமாக்குகிறது. கதையில் கை யாளப்பட்டிருக்கும் பாத்திரங்கள்… சம்பவங்கள், இயற்கை வளத்தை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கொஞ் சம் உரக்கவே சொல் கின்றன.

வாசிப்பை நேசிப்பவர்கள், தவற விட(வே) கூடாத நுõல்!

சிகரத்தை எட்டிய சி.ஆர்.ஆர்.,: ஆசிரியர்: கே.அய்யாத்துரை. வெளியீடு: எம்.டி.எஸ்., அகடமி, ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயா, மாங்கொல்லை, மயிலாப்பூர், சென்னை4. (பக்கம்: 124. விலை: ரூ.180)

சி.ஆர்.ராமகிருஷ்ணனை சி.ஆர்.ஆர்., என்று குறிப்பிட்டாலே தொழில் மற்றும் வர்த்தகத் துறையினரும், மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மதிப்பும் பிரபலமும் அடைந்துள்ளவர். 1938ம் ஆண்டில் ஒரு சிறு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட லார்சன் அண்டு டியூப்ரோ நிறுவனம் 40 ஆண்டு காலத்தில் ஒரு மாபெரும் நிறுவனமாக உயர்வதற்கும், இந்திய நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் கூட ஒரு மதிக்கத்தக்க நிறுவனமாக பிரபலம் அடைந்ததற்கும் சி.ஆர்.ஆரின் சிறந்த பணிகள் ஒரு முக்கியக் காரணம். ஊழியர் நலம் ஒன்றையே தன் கடமையாகக் கொண்டு, கண்டிப்புடன் நிர்வாகத்தை நடத்திச் சென்ற சிறந்த நிர்வாகியின் வாழ்க்கை நுõல் இது.

முன்னேறத் துடிக்கும் இளைஞர்களே! இதோ உங்கள் கையில் ஒரு முன்னேற்றத்திற்குரிய தத்துவங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்த உழைப்பாளிகளின் வாழ்க்கைச் சரித்திரம் ஒரு கையேடாகத்

திகழட்டும்!

உங்களுடன் ஒரு மாமனிதர்: நுõலாசிரியர்: செ.நல்லசாமி, செந்தமிழ்வாணன், வெளியீடு: உழவு அச்சகம், அரச்சலுõர், ஈரோடு மாவட்டம். (பக்கம்: 392. விலை: ரூ.100)

கொங்கு மண்டலத்தில் “ரா.கி.. “ஐயா’ என அன்புடன் அழைக்கப்பட்டவர் கோவை கணபதி ரா.கிருஷ்ணசாமி கவுண்டர். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், விவசாயப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் பல புதிய உத்திகளை மேற்கொண்டவர். “ஏர் உழவன்’ உட்பட விவசாயப் பத்திரிகைகளை சிறப்பாக நடத்தியவர்.

வேளாண் விளைப் பொருட்கள் மீது விலைக்கேற்ப வண்ணக் கோடுகள் போட்டு விற்கும் “பார் கோடு சிஸ்டம்’ முறையை அக்காலத்திலேயே ரா.கி., அறிமுகப்படுத்தினார் என்ற தகவல் இந்த நுõலில் உள்ளது.

கோவை நகரில் “மோரீஸ்’ வாழைப் பழத்தை அறிமுகப்படுத்தியதும், மாட்டு சாணத்தில் இருந்து “மீதேன்’ வாயு எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம் என கண்டு

பிடித்தவரும் இவரே ஆவார்.

கடந்த 1930ல் பஸ் போக்குவரத்து தொழிலில் ரா.கி., ஈடுபட்டபோது “அதிசய மனிதர்’ ஜி.டி.நாயுடுவுடன் ஏற்பட்ட பிணக்கு குறித்தும் பிறகு இவ்விரு துருவங்களும் நட்புணர்வு கொண்டது பற்றியும் நுõலில் சுவையாகவும், ஒளிவுமறைவின்றியும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஈ.வெ.ரா.,வுடன் கருத்தளவில் ஒன்றிப் போகாதவர், ஆனால், இருவரும் சந்தித்தது, பேசியது, ஈ.வெ.ரா.,வை மவுனம் ஆகச் செய்த செயல் (பக்:114) ஆகியவை ரா.கி.,யின் துணிச்சலையும் அறிவையும் படம் பிடிக்கும் தகவல்கள்.

தெளிவான நடை, “பளிச்’ அச்சு, நேர்த்தியான வடிவமைப்பு, ஆங்காங்கே குறள், புதுக்கவிதைகள், சினிமா பாடல் வரிகள் பொருத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

பன்முக மனிதராக நெறி தவறாது பண்பாளராக வாழ்ந்து மறைந்த ஒரு வெற்றியாளரின் வாழ்க்கை வரலாறு இது. முயன்று முன்னேற துடிப்பவர்கள் படிக்கலாம்.

பவுத்தநெறி டாக்டர் வி.எம்.மவுரியா வரலாற்றுச் சுவடுகள்: ஆசிரியர்: ரமாபாய் மவுரியா. வெளியீடு: தர்மா பப்ளிகேஷன்ஸ், 42, முதல் குறுக்குத் தெரு, 2வது முதன்மைச் சாலை, தாகூர் நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605 008. (பக்கம்: 98. விலை: ரூ.75)

பவுத்த நெறி உலகின் எல்லாத் தீமைகளையும், அழிப்பதற்கான விதையைத் தன்னில் கொண்டிருக்கிறது என்று கருதுகிற, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட இனத்தாரின் முன்னேற்றத்தையே தன் முன்னேற்றமாகக் கருதி வாழ்ந்து வருகிற சகாதேவன் என்ற வி.எம்.மவுரியா என்பவரின் வாழ்க்கைச் சுவடுகளைப் பதிவு செய்கிற நுõலாக இது அமைந்திருக்கிறது.

“சமர்பணம்’ என்று தொடங்குகிற முதல் பக்கத்திலிருந்து பக்கத்துக்குப் பக்கம் மலிந்து காணப்படுகிற அச்சுப் பிழைகள் (திருக்குறளைத் திரிக்குறள் என்று அச்சடிக்கிற அளவுக்கு) படிக்கிறவரை சலிப்படையச் செய்கின்றன.

எழுதிச் சென்றிருக்கிற பாங்கும் கோர்வையாக இல்லை. எடுத்துக்காட்டாக சகாதேவன் என்பவர் தாம் வி.எம்.மவுரியா என்பதே தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை.

நுõல் நெடுக மவுரியாவின் நிகழ்ச்சி குறிப்பு டைரியைப் படிக்கிற உணர்வு தான் மேலோங்கி நிற்கிறது. பவுத்தம் ஒரு அழியாத சகாப்தம் என்ற ஒரு கட்டுரையும் பெயருக்கு இடம் பெற்றுள்ளது.

“தீவிரவாதம் ஜாதி மத இனக் கலவரங்கள் யாவும் நீங்கிட பேரன்பை போதிக்கும் புத்த தம்ம கருத்தியல் நிறையப் பெற்ற இந்நுõல் உலக சமாதானத்திற்கு பெரிதும் உதவும்’ என்று நுõலின் தொடக்கத்தில் ஓர் ஆசிரியர் குறிப்பு இடம் பெறுகிறது. அப்படியானால் அது நல்லது தான்.

விடுதலை வேள்வியில் புதுச்சேரி: ஆசிரியர்: சி.எஸ்.முருகேசன். வெளியீடு: சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை49. (பக்கம்: 248. விலை: ரூ.100)

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இந்தியா அடிமைப்பட்டிருந்தபோது இந்தியாவின் நிலப் பகுதியில் மிகச் சிறிய பகுதிகள் பிரெஞ்சு வசம் இருந்தது. இதில், சாதக பாதகமும் கலந்து இருந்ததால், விடுதலை உணர்வு அல்லது சுதந்திர தாகம் பிரெஞ்சுப் பகுதியில் வாழ்ந்து வந்த “இந்தியர்களிடையே’ சற்று வேகம் குறைந்தே காணப்பட்டது. ஆனால், சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த உணர்வு மெல்ல தலையெடுத்தது. இருந்தபோதிலும் இந்தப் பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான “இந்தியர்கள்’ பிரெஞ்சுக் கலாசாரத்தையே இன்றளவும் விரும்புகின்றனர். பிரெஞ்ச் நாட்டுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் விருப்பம் கொண்டுள்ளனர். பிரெஞ்ச் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் அநேகம் இன்றும் இருக்கின்றனர். பிரான்சு அரசிடமிருந்து வந்து கொண்டிருக்கும் இத்தகைய “நிதி’ புதுச்சேரியின் பொருளாதாரத்தையே இன்றும் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது யதார்த்த நிலை.

இத்தகைய பின்புலனில் இந்த நுõலைப் படிக்கும்போது “விடுதலை’, “வேள்வி’ போன்ற சொற்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை. இந்தியாவுடன் இணைந்து விட சிறிய அளவில் அவ்வப்போது நடந்த பல்வேறு சம்பவங்களை ஆசிரியர் தொகுத்து வழங்கியிருப் பதை பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதில் ஆர்வம் காட்டாததையும் நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார்.

இன்றும் புதுச்சேரி ஒரு தனித்தன்மையுடன் தான் இந்திய பூகோள எல்லைக்குள் இயங்கி வருகிறது. இதுவே அதன் சிறப்பும் கூட. புதுச்சேரிக்கு பெருமை சேர்க் கக்கூடிய மேலும் பல நுõல்களை ஆசிரியர் எழுத வேண்டும்.

தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்: ஆசிரியர்: ஆர்.வி.பதி. வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 1620, “ஜெ’ பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை40. (பக்கம்: 112. விலை: ரூ.40)

தமிழகத்தில் தோன்றிய தலைவர்கள் அறிஞர்கள், ஞானிகள் சிலரைப் பற்றி விளக்கும் நுõலே இந்நுõல்.

இதில், வள்ளலார், உ.வே.சா., வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, மறைமலை அடிகள், ராஜாஜி, ஈ.வெ.ரா., பாரதியார், வ.வே.சு. அய்யர், காமராசர், பாரதிதாசன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது.எளிய நடையில் எல்லோரும் அறிந்து கொள்ளுமாறு நுõலைப் படைத்திருப்பது சிறப்பு.

உலக நாகரிகம்: வழங்கிய நாடுகளும், வரலாறும்: ஆசிரியர்: கமலா கந்தசாமி. வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 224. விலை: ரூ.70)

இந்த உலகம் என்று, எவ்வாறு தோன்றியது என ஆரம்பித்து இன்றைய கம்ப்யூட்டர் உலகத்தின் அறிவியல் நாகரிகம் வரை அனைத்து செய்திகளையும் இந்நுõல் எடுத்துக் கூறுகிறது.

பழந்தமிழர் நாகரிகம், இந்திய நாகரிகம், எகிப்து, சுமேரியா, சீனம், கிரேக்கம், ரோமானியம், அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் நாகரிகம் மற்றும் அவற்றின் பண்பாட்டு வரலாறு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

நாகரிக வளர்ச்சியில் மதங்களின் பங்கு என்ற தலைப்பில் புத்தரின் போதனைகள், எட்டு நல்ல கருத்துக்கள், சீனாவில் மதக் கருத்துக்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன தொழில் புரட்சி, அதனால் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அறிவியல் வளர்ச்சி, உலக நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் அதைத் தொடர்ந்து மக்கள் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள். அனைத்தும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. உலக நாடுகளின் நாகரிக வரலாறு மற்றும் பண்பாட்டை விளக்கும் சுருக்கமான வரலாற்று நுõல்கள்.

மருது பாண்டியர் வரலாறும் வழிமுறையும்: ஆசிரி யை முனைவர் கு.மங்கையர்கரசி, புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை. (பக்கம்: 320, விலை: ரூ.160.)

முன்னுரை, மருது சகோதரர்களும் சிவகங்கைப் பாளையமும், மருது சகோதரர்களின் எழுச்சி, அவர்களின் மேலாண்மை எதிர்ப்போர், அவர்களின் வீழ்ச்சி, அவர்களின் ஆக்கப்பணிகள், அவர்களைப் பற்றிய இலக்கியங்கள், அவர்களின் குடிவழி என எட்டு கட்டுரைகளாக இந்த ஆய்வடங்கல் வெளியிடப்பட்டுள்ளது.

சின்ன மருது ஜூன் 16, 1801ல், வெளியிட்டுள்ள திருச்சி அறிக்கை, மருது சகோதரர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அக்கால கட்டத்தில் ஆங்கிலேயரி ன் ஆதிக்க எதிர்ப்பைக் காட்டிய மற்றவர்கள் இத்தகைய அறிக்கையை வெளியிடாதபோது சின்ன மருதுவின் துணிச்சல் நம்மை நெகிழ வைக்கிறது.

மருது சகோதரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்குக் காரணம் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும், சிவகங்கையின் உண்மைக் குடிவழியை நிலை நிறுத்த விரும்பியதேயாம் (பக். 302).

வீரத்தின் விளை நிலமாக விளங்கிய இச்சகோதரர்கள், பல அறப்பணிகளைச் செய்துள்ளனர். அரண்மனைகள், கோட்டைகள் பல அமைத்து நன்கு ஆட்சி செய்துள்ளனர். இதை ஆசிரி யை நன்கு விளக்கி உள்ளார்.

போராட்டம் வாழ்க்கையில் ஓர் அங்கம். ஆனால், இச்சகோதரர்களுக்கு போராட்டமே வாழ்க்கையாக அமைந்தது என்பதை வாசகர்கள் உணரும் வண்ணம் ஆசிரி யை அழகுற விளக்கியுள்ளார். கருத்து வளமான நுõலை, வெகு சுவாரஸ்யமாக எடுத்துச் செல்லும் திறமைக்கு படிப்பவர் பாராட்டாமல் இருக்க முடியாது.

அந்த விடுதலை வானில்…: ஆசிரி யர்: புதுவை கோ.பாரதி (பாவேந்தர் பேரன்). வெளியீடு: குயில் வெளியீடு, எச்9, காந்தி நகர், புதுச்சேரி 605 009. (பக்கம்: 152, விலை: ரூ. 100)

பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி விடுதலை பெற்று 50 ஆண்டுகள் ஆகிறது. சமீபத்தில் தான் புதுவை தனது விடுதலை பொன் விழாவை கொண்டாடியது. பிரஞ்சு நாட்டின் பகுதியாக புதுவை இருந்தாலும், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நாடு முழுக்க எழுந்த பேரெழுச்சிக்கு ஊக்கமாக அமைந்தது இந்த மண்.

பாரதியார், பரலி சு.நெல்லையப்பர் போன்ற தேசிய நெஞ்சங்கள் இந்த மண்ணில் இருந்து கொண்டுதான் விடுதலைப் போரை நடத்தினர். சாவர்க்கர், நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற புரட்சி தளபதிகளின் படையில் வீரர்களாக பணியாற்றிய வா.வே.சு., அய்யர், மாடசாமி, வாஞ்சி நாதன் போன்றவர்களும் புதுவையில் பதுங்கிதான் தங்கள் தளத்தை விரி வுப்படுத்தினர்.

பொன் விழா கொண்டாடும் இந்த நேரத்தில், புதுவையில் நடந்த வரலாற்று சம்பவங்களை தொகுத்து புதுவை கோ.பாரதி எழுதியுள்ளார். இவர் பாரதிதாசனின் பேரன். வரலாற்றுச் சம்பவங்களுடன் மிக அரி ய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. அக்காலத்து புதுவையை காண விரும்பும் இக்கால தலைமுறைக்கு இந்த அபூர்வ புகைப்படங்கள் உதவும்.

சென்னை பி.எஸ்., அறக்கட்டளை நிர்வாகிகளும் காந்தி கல்வி நிலையத்தின் செயலாளர். டாக்டர் ச.பாண்டியனும் இணைந்து மேற்கொண்ட பெருமுயற்சியில் பலர் வாழ்வைத் திறந்த புத்தகமாக்கிய மகாத்மா காந்தியின் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த நுõலில் இடம் பெற்றிருக்கின்றன.

காந்தி பள்ளியில் படிக்கும் போது வயதுச் சான்றிதழில் மோகன் தாஸ் கரம்சந்த் என்பதற்கு பதிலாக மோனாதாஸ் என்றிருக்கிறது. காரணம் என்ன? (பக்கம் 13ல் படத்துடன் விளக்கம் காணலாம்).

தாய்க்கு அளித்த உறுதிமொழிப்படி லண்டனில் அவர் சைவ உணவகம் தேடிக் கண்டுபிடித்த மகிழ்ச்சி, ஜோகன்னஸ்பர்க்கில் கோட், சூட்டு சகிதமாக அவர் வாழ்ந்ததைப் படத்துடன் கண்டுகளிக்கலாம். சென்னையில் தலைசிறந்த சுதந்திரப் போராட்டத் தலைவர் சீனிவாச அய்யங்காருடன் சந்திப்பு, சென்னைக் கடற்கரையில் பேசியது ஆகியவை நம்மை அவர் காலத்திற்கு இட்டுச் செல்லும் தகவல்கள்.

காந்திஜியை நமக்கு அடையாளம் காட்டும் அவர் சொத்துக்கள் எவை என்பதைக் கடைசிப் படமாக அமைத்து அதற்கு எழுதப்பட்ட ஆங்கில தமிழ் விளக்கங்கள் காந்திஜியின் நினைவுகளைப் பசுமையாக்குகிறது. சிறந்த அச்சு, வரலாற்றைப் பேசும் கறுப்பு வண்ண போட்டோக்கள், நல்ல கட்டமைப்பு, ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எளிய விளக்கம் ஆகியவை இப்புத்தகத்தை பொக்கிஷமாக்குகின்றது.


வாழ்க்கை வரலாறுவரலாறு படைத்த நெப்போலியன்: ஆசிரியர்: மானோஸ், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 24ரூ)புகழ்பெற்ற இந்திய வரலாற்றுக் கதைகள்: ஆசிரியர்: ஜெகாதா, வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 60ரூ)வரலாறு போற்றும் தலைவர்கள்: ஆசிரியர்: முத்தரசன், வெளியீடு :கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8. மாசிலாமணி தெரு , பாண்டி பஜார், தி.நகர், சென்னை 600 017. ( விலை : 40ரூ)

நிலைபெற்ற நினைவுகள் (பாகம் 1) : ஆசிரியர் : வல்லிக்கண்ணன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 100 ரூ )

நிலைபெற்ற நினைவுகள் (பாகம் 2) : ஆசிரியர் : வல்லிக்கண்ணன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 75 ரூ )

தமிழர் தலைவர் : ஆசிரியர் : சாமி சிதம்பரனார் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 100 ரூ )

லெனின் : ஆசிரியர் : ஆர்.ராமநாதன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

வான்கா : ஆசிரியர் : தமிழில் சுரா , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 100 ரூ )

ஆண்டன் செக்காவ் : ஆசிரியர் : புரசு. பாலகிருஷ்ணன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

கார்க்கி வரலாறு : ஆசிரியர் : அ.சிங்காரவேலு, வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

ஆல்பெர் காம்யு : ஆசிரியர் : வஸந்த் செந்தில் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 125 ரூ )

ரூஸோ வாழ்க்கை வரலாறு: ஆசிரியர் : சாமிநாத சர்மா , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 30 ரூ )

என் கதை : ஆசிரியர் : நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 160 ரூ )

கோதம புத்தர் : ஆசிரியர் : ஆனந்த குமாரசாமி , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 75 ரூ )

புராதன இந்தியாயவின் பழைய 56 தேசங்கள் (பாகம் 1 2 ): ஆசிரியர் : பி.வி.ஜகதீச அய்யர் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 125 ரூ )

கிரீஸ் வாழ்ந்த வரலாறு (சரித்திரம்) : வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 165 ரூ )

மறுமலர்ச்சி எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணன் : ஆசிரியர் :எதிரொலி விசுவநாதன் , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 80 ரூ )

மகாகவி பாரதியார் : ஆசிரியர் : வ.ரா , வெளியீடு : சந்தியா பதிப்பகம், 57அ ( 77) 53 வது தெரு அசோக் நகர், சென்னை 600 083. ( விலை : 50 ரூ )

வரலாறு போற்றும் தலைவர்கள்: நுõலாசிரியர்:முத்தரசன் ; வெளியீடு: கவிதா பப்ளிகேஷன் . (விலை: ரூ.40).
உண்மை உழைப்பாளர்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

மலேசிய மண்ணின் வரலாறு:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

மலேஷியாவில் தமிழாசிரியர்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

வீர வணக்கம்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

அமைதிக்காக போர்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

இன்னொரு போர்வாள்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

ஒரு தியாகியின் கனவு:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

உணர்வுக்களம்:வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,.

முதுகுளத்துõர் கலவரம்: நுõலாசிரியர்: தினகரன். வெளியீடு: யாழ்மை, 134, மூன்றாம் தளம், தம்புச் செட்டித் தெரு, பாரிமுனை, சென்னை1. (பக்கம்: 120. விலை: ரூ.70).
தமிழ்நாட்டு வரலாற்றில் பதிவு பெற்ற நிகழ்ச்சி 1957ல் நடந்த முதுகுளத்துõர் கலவரம். அதைப் பற்றிய சாட்சியாகவும், காய்த்தல், உவத்தல் இன்றி ஒரு நடுநிலைக் கண்ணோட்டத்துடன் கூடிய ஆவணமாகவும் இந்த நுõலைச் சொல்லலாம். வரலாற்று ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் படிக்கலாம்.

மதராசபட்டினம்:நுõலாசிரியர்: கே.ஆர்.ஏ.நரசய்யா. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 235. விலை: ரூ.275).

இன்றைய சென்னை நகரின் வரலாற்றை விளக்கமாகக் கூறும் இந்த நுõல் பல்வேறு புதிய தகவல்களைக் கொண்டுள்ளது.சிறு சிறு கிராமங்களாக இருந்த மதராசும் சென்னையும் முதலில் ஓரிரு கிராமங்களை உட்படுத்தி நகரமாக்கப்பட்டதும், காலப்போக்கில் மேலும் பற்பல கிராமங்களை இணைத்து ஒரு பெருநகரமாக்கப்பட்டதும், வரலாற்று ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த நுõலில் நிறுவப்பட்டுள்ளன.மதராசுக்கு வந்த அயல்நாட்டார் அனைவரைப் பற்றியும், அவர்கள் இங்கு தங்கி கிராமங்களை இணைத்து நகரமாக்கி, முன்பே இங்கிருந்த மக்களுடனும் தலைவர்களுடனும் தேவைக்கேற்றவாறு உறவாடியும், எதிர்த்தும் அதிகாரம் பெற்றுப் படிப்படியாக ஆட்சி பெற்ற வரலாறு, நுõலின் முதல் மூன்று அத்தியாயங்களில் தரப்பட்டு உள்ளன.அந்த நாளில் நடந்த நிகழ்வுகளும், அங்கு வாழ்ந்த பெரியவர்கள் பற்றியும், ஆங்கிலேயர்கள் வகுத்துச் செயல்படுத்திய ஆட்சிமுறை, நிர்வாகம், கல்வி முறை போன்றவையும் 1600ம் ஆண்டு முதல் சுதந்திரம் பெறும்வரை எவ்வாறு இருந்தன என்பதை 4லிருந்து 9 வரை உள்ள அத்தியாயங்கள் பேசுகின்றன.இறுதி நான்கு அத்தியாயங்களில், அந்தக் காலக்கட்டங்களில் சென்னையைச் சுற்றி புகழ் பெற்றிருந்த இன்னும் இருந்து வரும் திருத்தலங்கள், கட்டடங்கள், நுõலகங்கள், மருத்துவமனைகள் எனப் பல்வேறு நிறுவன அமைப்புகள் பற்றிய விவரங்கள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.ஆங்காங்கே கல்வெட்டாதாரங்களாகவும் நுõலாதாரங்களாகவும், படங்களாகவும் பொலிகின்றன. இதனால், நுõலின் தரமும் சிறப்பும் உயர்கின்றது. நுõலின் நடை எளிமையாக தைல தாரை போல் உள்ளது.”மதராச பட்டினம்’ நுõல் உருவான நோக்கம் பற்றி, ஆசிரியர் தனது முன்னுரையில், “சாதாரண சராசரி தமிழனுக்கு சென்னை என்று அழைக்கப்படும் மதராச பட்டினம் பற்றிய ஆதாரப்பூர்வமான நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய காரணத்துக்காக மட்டும் (இந்த நுõல்) எழுதப்படுகிறது. நிகழ்வுகளின் முக்கியத்துவத்துக்கு மட்டும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்நிகழ்வுகளுக்குக் காரண கர்த்தாக்களாக அன்றிருந்த மனிதர்களும் அவர்களது நோக்கமும் விவரிக்கப்படுவதோடல்லாமல் நுõலைப் படிப்பதற்கு வேண்டிய ரசமான முக்கிய சம்பவங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தச் “சொல்லியலில்’ எந்தவிதமான உள்ளர்த்தங்களும் கிடையாது! சம்பவங்களின் சுவையே முக்கியமாக கருதப்பட்ட நிலையில் எழுதியுள்ளேன்’ என, விளக்கமாகப் பேசுகிறார்.குறிப்பாக அண்மையில் சென்னைப் பல்கலைக்கழகம் என்ற பெயரை மதராஸ் பல்கலைக்கழகம் என்று மாற்ற வேண்டும் என ஏற்பட்ட சர்ச்சையும் இங்கு இலைமறை காயாகப் புலப்படுவதுடன் இதற்குரிய தீர்வு நுõலின் பக்.41ல் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளதும், நுõலை ஆழ்ந்து படிக்கும்போது தெரியவரும்.நுõலின் பயன்பாட்டைக் குறிப்பிடும் வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா தனது அணிந்துரையில், “இந்நுõல் ஆளுமையின் கவனத்திற்கு வந்து கல்லுõரிகளில் சரித்திரப் பாடப் புத்தகமாகப் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாம் நமது மாநிலத்தின் தலைநகரத்தின் சரித்திரத்தில், அதன் பிறப்பிலும் வளர்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது என்பதை உணர வேண்டும்’ எனக் கூறுவது நம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.தற்போது பல நுõல்களிலும் பொதுவாக இறுதியில் சொல்லடைவு இருப்பதில்லை. இது மன்னிக்க முடியாத மிகப் பெருந்தவறு. ஆனால், இந்த நுõல் அதற்கு விதிவிலக்கு எனலாம்.

உயர்தரமான தாளில் அச்சிடப்பட்ட 235 பக்கங்களாலான இந்த நுõல் பெருமைக்குரிய படைப்பாகும்.

இந்திய விடுதலை போரில் வ.உ.சி.,: எழுதியவர்: என்.திரவியம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108. (பக்கம்: 144. டெம்மி விலை: ரூ.50)

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று பலவிதமாகப் போற்றப்படும் வாழ்க்கை வரலாறு போராட்டங்களே வாழ்க்கையாக அமைந்த வரலாறு 84 பக்கங்களில் சிறப்புறச் சொல்லப்பட்டுள்ளது. அவரது சிறைச்சாலை வாழ்க்கையும், தமிழ்ப் பணியும் நெஞ்சைத் தொடுவன.

பிற்சேர்க்கைப் பகுதியில் பலர் பல நேரங்களில் எழுதிய 20 சிறப்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

இந்நுõலில் அபூர்வப் புகைப்படங்கள், அவரது நினைவாகக் கட்டப்பட்ட மணிமண்டபம், புகைப்படங்கள் நுõலின் சிறப்பைக் காட்டுகிறது.

வ.உ.சி., அன்பர்களுக்கு ஓர் அற்புதமான நுõல்.

வீரவாஞ்சி: ஆசிரியர்: கே.ஜீவபாரதி, வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை17. (பக்கம்: 88, விலை ரூ.25)

வணிகம் செய்ய வந்த வெள்ளைக்காரன் இந்தியர்களின் பலவீனத்தையும், தங்களிடம் உள்ள ஆயுதங்களையும் நம்பி ஆதிக்க அரசாட்சியை அமைத்து, மக்களை அடிமைகளாக்கினர். வெள்ளையரின் ஆயுதத்தைக் கொண்டே அவர்களைத் திகைக்க வைக்க முடியும் என்று மெய்பித்தவன் வீர வாஞ்சிநாதன். அந்த வரலாற்றை நாடக வடிவில் எழுதியுள்ளார் ஜீவபாரதி. நுõலில் வாஞ்சிநாதனின் அரிய புகைப்படங்கள் அவருடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இடம்பெற்றுள்ளது ஒரு கூடுதல் சிறப்பு. பின்னிணைப்பாகவும் சில அரிய செய்திகள், புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்: நுõலாசிரியர்: முனைவர் இராசு. பவுன்துரை. வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2வது முதன்மைச் சாலை, தரமணி, சென்னை113. (பக்கம்: 280. விலை: ரூ.80)

வரைவுகள், வடிவங்கள், பழமங்கள் ஒன்றை ஒன்றைச் சார்ந்து எவ்வாறு மானுடம் பெற்ற ஆற்றல் அறிவுடன் இணைந்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதைக் கூறும் தொகுப்பு முயற்சியாக இந்நுõல் அமைந்துள்ளது.

தமிழக பாறை ஓவியங்கள் மற்றும் பாறைக் கீறல்கள், ஓவியங்கள் வரைமுறை, வடிவங்கள், வண்ணப் பூச்சு, மட்பாண்ட வரைவுகள், வண்ண வரைவுக் கல்மணிகள், முத்திரைக் காசுகள், குறியீடுகள், வரைவுகளுக்குரிய இடங்கள் என மிக விரிவாக உரிய விளக்கப் படங்களுடன் ஆங்காங்கே சங்க காலப் பாடல்களையும் தக்க சான்றுகளுடன் எடுத்தாண்டு படங்களை முறைப்படுத்தி சிறப்புடன் உருவாக்கியுள்ளார் நுõலாசிரியர்.

தமிழகப் பழங்குடிகளின் ஒரு சில குறியீடுகள் சிந்து சமவெளிக் குறியீடுகளுடன், அயலகப் பகுதிகளில் கண்டறியப்பட்ட குறியீடுகளுடனும் ஒத்திருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தொல் பழந்தமிழ் நாட்டின் வரலாற்றையும் பழந்தமிழர் பண்பாட்டையும் அறிந்து கொள்ள இத்தகைய ஆய்வு நுõல்கள் சான்றுகளாகும். அரிய சான்றுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்நுõல் பண்பட்ட பழந்தமிழர் நாகரிகத்தை ஆய்வு செய்ய பயன்படக்கூடிய ஆவணச் சான்றுகள் நிறைந்த நுõல்.

நேதாஜியின் வீர வரலாறு: ஆசிரியர்: கெம்பு ஆறுமுகம், வெளியீடு: சொர்ணவள்ளி பிரசுரம், 15, (ப.எண்.6) ஜெய்சங்கர் தெரு, சென்னை33. (பக்கம்: 128; விலை: ரூ.40)

கத்தியின்றி ரத்தம் இல்லாமல் அகிம்சை முறையில் இந்தியா சுதந்திரம் பெற நினைத்தார் காந்திஜி.

பெரும்படை திரட்டி ஆங்கிலேயருடன் போரிட்டு விரட்ட வேண்டுமென்ற நோக்கம் கொண்டு செயல்பட்டார் நேதாஜி. இந்நுõலில் நேதாஜியின் வீர வரலாறு 10 அத்தியாயங்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

நேதாஜியின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்: ஆசிரியர்: சுப நாராயணன். வெளியீடு: முல்லை நிலையம் (பக்கம்: 192. விலை: ரூ.45)

ஆடியும், பாடியும் ஆனந்திக்கும் இந்திய விடுதலைக்கு ஆகுதியானவர்கள் பலர். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு என்று இந்த விடுதலை வேள்வியில் தனி இடம் உண்டு.

நாராயண மேனனால் “ஆன் டூ டெல்லி’ என்று தொகுப்பட்ட 12க்கும் மேற்பட்ட நேதாஜியின் பேச்சுக்கள், அறிக்கைகள் 1944ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ஆசிரியர்.

நேதாஜியின் வீராவேசப் பேச்சு, நாடி நரம்புகளை முறுக்கேற்றும் எழுத்து இன்றைய இளைய சமுதாயத்திடம் நாட்டுப் பற்றை வளர்க்கும் வண்ணம் அமைந்துள்ளன. விவேகானந்தரின் ஆன்மிக சாத்விக பேச்சில் ஏற்படும் நிறைவு, நேதாஜியின் சொல் எழுத்து வெளிப்பாட்டில் கிடைக்கிறது.

வெளியே இருந்து விடுதலைக்கு உதவிய காரணம் (பக்.52). இறுதியில் வெற்றி உறுதி (பக்.60), விடுதலைக்கான விலை (பக்.74), தேசியப் போராட்டத்தில் பெண்களின் அவசியமான பங்கு (பக்.75) போன்ற பற்பல பகுதிகள் நுõலைப் படித்து முடித்த பின்னரும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

தேதி வாரியாக தொகுத்த பேச்சை, அறிக்கையை வெளியிட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமோ?

சாரண இயக்கத் தந்தை பேடன் பவல்: ஆசிரியர்: கே.குருமூர்த்தி. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், “கோனார் மாளிகை,’ 25, பீட்டர்ஸ் சாலை, ராயபுரம், சென்னை14. (பக்கம்: 88. விலை: ரூ.24)

பள்ளி செல்லும் சிறுவர்களின் உள்ளம் வெள்ளைச் சுவர். நல்லவற்றை எழுத வேண்டும், பதிக்க வேண்டும். “சாரண இயக்கம்’ “சாரணப் பயிற்சி’ சுயநம்பிக்கை, சூழ்நிலைகளை எதிர்கொள்ளல், சேவை என்ற பல விஷயங்களுக்கு வித்திட்டு வருகிறது.

சிறுவர்களும் புரியும் எளிய நடையில் 17 தனித் தலைப்புகளில் சாரண இயக்கத் தந்தை பேடன் பவல் பெருமகனாரின் வரலாறு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தாயின் மீது பவல் கொண்டிருந்த சிரத்தை (பக்.14), தேவைகளை குறைத்துக் கொண்டு சிக்கனமாக வாழ்ந்தது (பக்.25), உறுதிப்பாட்டோடு முற்பட்ட பாட்டு (பக்.37) நுõலைப் படிக்கும் ஆர்வத்தை மேம்படுத்துகிறது.

சாரணியம் அதன் பயிற்சி ஜனாதிபதி சாரணன் பகுதிகள் மாணவர்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கும். நுõலாசிரியரின் நோக்கம் வெற்றி பெற்றுள்ளது. சிறுவர் சிறுமியர் படிக்க வேண்டிய நுõல்; பள்ளி நுõலகங்களில் நிச்சயம் இடம் பெற வேண்டும்.

வல்லபாய் பட்டேல்: ஆசிரியர்: மா.கமலவேலன். 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை600 108. (பக்கம்: 144. விலை: ரூ.50)

இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலினால் தான் இன்று ஒருங்கிணைந்த இந்தியாவாகத் திகழ்கிறது. சுதந்திரத்திற்குப் பின் சமஸ்தானங்களை, ஒருங்கிணைந்த பெருமை பட்டேலையே சாரும்.

அவர் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்களுக்கும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடமாகும். இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இந்நுõலையும் படைத்துள்ளார்.

வாழ்க்கை வரலாற்றையே நாவல் படிப்பது போல் எளிமையாக சுவையாக எழுதியுள்ளார். வாழ்க்கை குறிப்பு பயனுள்ள பகுதி. இளமைப் பருவம் முதல் ஓய்வு பெற்றது முடிய 9 தலைப்புகளில் முழு வரலாறு. ஒவ்வொரு மாணவரும் அவசியம் படிக்க வேண்டிய நுõல்.

நெப்போலியன்: ஆசிரியர்: மு.சிவலிங்கம். வெளியீடு: சாந்தி பதிப்பகம், 27, அண்ணா சாலை, சென்னை2. (பக்கம்: 304. விலை: ரூ.125)

உலகம் இதுவரை உற்பத்தி செய்ததிலேயே நெப்போலியனின் மனம் தான் தலை சிறந்தது என்று கவி “கதே’யால் புகழப்பட்ட மாவீரன் நெப்போலியனின் வரலாற்றை மு.சிவலிங்கம் தனக்கே உரிய நடையில் சிறப்பாக வடித்துள்ளார்.

கடந்த 1769 ஆகஸ்ட் 15ல் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, புரட்சி வீரனாகி, 1793ல் “கோட் நெப்போலியன்’ என்னும் சட்டத் தொகுப்பை உருவாக்கி, படிப்படியாகப் பல போர்களில் வெற்றி பெற்று, “பிரான்ஸ் மக்களின் நலனையும், பெருமையையும் மகிழ்ச்சியையும் பாதுகாக்கும் வகையில் ஆட்சி நடத்துவேன்’ என்று உறுதி கூறி 1804ல் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டது வரை இந்நுõலில் நெப்போலியனது வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது.

நெப்போலியனது இளமைப் பருவ வரலாறு மாணவர்களுக்குப் பயன் தரக்கூடியது. வரலாற்றில் ஒரு பகுதி என்றாலும் செறிவாக இந்நுõல் உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கள் ரகுநாதன்: ஆசிரியர்: பொன்னீலன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை98. (பக்கம்: 152. விலை: ரூ.50)

சாகித்ய அகடமி, நேரு விருது என படைப்புக்குப் பல விருதுகள் பெற்ற தொ.மு.சி.ரகுநாதன் பற்றி சுமார் 23 பேரிடம் நேர்காணல் செய்து, அவர் ரொம்ப ஆழமானவர், தேடல் மிகுந்தவர், இனிய நண்பர், பல பரிமாணங்கள் கொண்டவர், புதுத் தடங்கள் பதித்தவர், இலக்கியமே அவர் உறவு, தேர்ந்த மொழிபெயர்ப்பாளர், ஆன்மாவை விலை பேசாத அபூர்வ எழுத்தாளர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், குருநாதர், புதுமைப்பித்தனைக் கொண்டாடியவர் இப்படிப் பல தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

சுமார் 75 ஆண்டு காலம் வாழ்ந்து படைப்பாளியாகவும், படிப்பாளியாகவும் விளங்கி பட்டாளி வர்க்கத்திற்காகப் பாடுபட்ட கவிஞர் ரகுநாதன் பற்றிய முதல் முழுமையான தகவல்கள் என்றே இதைக் குறிப்பிடலாம். படைப்பாளிகளைப் பற்றிய வரலாற்று நுõல் வரிசையில் புது வரவு. வரவேற்கப்பட வேண்டிய முயற்சி.

மகாவித்வான் ரா.ராகவையங்கார்: பதிப்பாசிரியர்: முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி. முனைவர் ச.சிவகாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை113. (பக்கம்: 96. விலை: ரூ.30)

தமிழறிஞர்களின் வாழ்வையும் பங்களிப்பையும் ஆவணப்படுத்தும் பாராட்டத்தக்க முயற்சியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பதினோராவது வெளியீடு மகாவித்வான் ரா.ராகவையங்கார் என்ற இந்தக் கட்டுரைத் தொகுப்பு நுõல் மகாவித்வான் ரா.ராகவையங்காரை மையமாகக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாறு, தமிழ்ப் பணி, வரலாற்று நோக்கில் பாரி காதை, பதிப்புப் பணி, சங்க இலக்கிய ஆய்வுகள், வரலாற்று நுõல்கள் ஆகிய தலைப்புகளில் வெவ்வேறு கட்டுரையாளர்களால் எழுதப்பட்ட ஆறு கட்டுரைகள் இந்நுõலில் இடம் பெற்றுள்ளன.

சேது நாடு என்று அழைக்கப்பட்ட ராமநாதபுரத்தில் தோன்றித் தொண்டு செய்து மறைந்தவர் ரா.ராகவையங்கார் பாஸ்கர சேதுபதி தொடங்கி அடுத்தடுத்துப் பட்டத்துக்கு வந்து மூன்று சேதுபதி மன்னர்களாலும் சேது நாட்டின் அவைகளப் புலவராக ஆதரிக்கப்பட்டவர். உ.வே.சா.,வின் ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு அடுத்து மகாவித்வான் என்று உவே.சா.,வினாலேயே அங்கீகரிக்கப்பட்டவர். செந்தமிழ், சமஸ்கிருதம் என்ற இருமொழிகளிலும் புலமை மிக்கவர். மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைக்கும் முயற்சியில் வள்ளல் பாண்டித்துரைத் தேவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தவர். தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான செந்தமிழ் இதழுக்கு ஆசிரியராக இருந்தவர். உரை நடையிலும் செய்யுள் நடையிலும் பல நுõல்களுக்கு ஆசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், மொழி பெயர்ப்பாசிரியர், வரலாற்று ஆய்வாளர். இப்படிப் பல முகங்கள் கொண்டவராகிய இவரை இந்நுõல் சரியாகவே அறிமுகப்படுத்துகிறது. இந்நுõலைப் படிக்கிறவர்களுக்கு ராகவையங்கார் எழுதிய “சேது நாடும் தமிழும்’, பாரி காதை ஆகிய நுõல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அதுவே இந்நுõலின் வெற்றி.

வெவ்வேறு ஆசிரியர்களைக் கொண்டு எழுதுவிக்கப்படும் இத்தகைய கட்டுரை நுõல்களில் உள்ள சிக்கல் சில செய்திகள் திரும்பத் திரும்ப எல்லாக் கட்டுரைகளிலும் இடம் பெறுவது. அதற்கு இந்த நுõலும் விலக்கல்ல.

காமராஜரின் பொற்கால ஆட்சி: ஆசிரியர்: க.சக்திவேல், வெளியீடு: அவ்வை, எண்.1, புதுõர் 13வது தெரு, அசோக்நகர், சென்னை83. (பக்கம்: 160, விலை ரூ.45.)

காமராஜரைப் பற்றி, அவரது ஆட்சியைப் பற்றி பல நுõல்கள் வெளிவந்துள்ளன. காமராஜர் ஆட்சியை புதிய கோணத்தில் பல பரிமாணங்களைக் காணும் வகையில் இந்நுõல் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை நாயக்கர் வரலாறு: ஆசிரியர்: டாக்டர் அ.கி.பரந்தாமனார். வெளியீடு: அல்லி நிலையம், விற்பனை உரிமை: பாரி நிலையம், 90, பிரகாசம் சாலை, சென்னை600 108. (விலை: ரூ.150).

மதுரை என்றவுடன் அன்னை மீனாட்சியின் அற்புத கோயில் தான் எல்லோர் மனத்திலும் எழும். இன்று உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அந்த அழகுத் திருக் கோயில், எத்தனையோ படையெடுப்புகளையும், அதன் காரணமாக நேர்ந்த சீரழிவுகளையும் கண் டது என்பதே வரலாற்று உண்மை. இன்று நாம் காணும் நிலையில் அக் கோயிலை மீண்டும் புனரமைத்து அளித்தவர், மன்னர் திருமலை நாயக்கர். மதுரை நாயக்க மன்னர்களின் அருஞ்சாதனைகளும், வரலாறும் ஒரு காலத்தில் வெறும் கர்ண பரம்பரைச் செய்திகளாகவே கருதப்பட்டன. தெளிவான வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஏசுகழகத் தொண்டர்கள் தங்கள் சமயப் பணி குறித்து ரோம் நகரப் பாதிரிமார்களுக்கு எழுதிய கடிதத் தொகுப்புகளில், ஆங்கிலத்தில் புதைந்து கிடந்த மதுரை நாயக்க மன்னர்களின் சரித்திரத்தை பேராசிரியர் ஆர்.சந்தியநாத ஐயர் முதன் முதலில் முக்கால் நுõற்றாண்டு காலத்திற்கு முன்னால் ஆங்கிலத்தில் தொகுத்து வெளிப்படுத்தினார். பின்னர் ஆய்வுகள் தொடர்ந்தன. புதிய செய்திகள் புலப்பட்டன. அ.கி.பரந் தாமனார், மதுரை நாயக்கர்களின் வரலாற்றை அருந்தமிழில் கருமுத்து தியாகராச செட்டியார் நடத்திய “தமிழ்நாடு’ ஞாயிறு மலரில் தொடராக எழுதி வெளியிட்டார். அரை நுõற்றாண்டு காலத்திற்கு முன் வெளியான அத்தொடரின் தொகுப் பே இந்நுõல். பதின்மூன்றாம் நுõற்றாண்டு துவங்கி, பதினேழாம் நுõற்றாண்டு வரையிலான தமிழ் நிலத்தின் மொத்த வரலாறும் சுமார் நானுõறு பக்கங்களில் விரிந்து கிடக்கிறது.

வரலாற்றில் மதகடிப்பட்டு: ஆசிரியர்: புலவர் ந.வேங்கடேசன். வெளியீடு: திருமுடி பதிப்பகம், சன்னதி தெரு, வில்லியனுõர், புதுச்சேரி10. (பக்கம்: 184. விலை: ரூ.53)

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மதகடிப் பட்டில் ஒரு சிவன் கோயில் உள்ளது. கலையழகுடன் திகழ்ந்த கற்றினிக்கோயில் இடைக் காலத்தில் சிதைந்து போயிற்று. இன்று இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது.

இக்கோயிலில் உள்ள (குண்டாங்குழி தேவர் திருக்கோயில்) 83 கல்வெட்டுகளில் பல்வேறு செய்திகள் காணப்படுகின்றன. சதுர்வேதி மங்கலங்களும், விளக்குத்தனங்களும், கொடைநிலம், சட்டிச்சோறு, நிலக்கொடை, திருவமுது படைத்தல், நிலத் தின் தரம் நிர்ணயித்தல், கல்வரிசை அமைத்தல், வேதங்கள், திருமேனிகள், அவர்கøøப் பற்றிய விளக்கங்களும் தருகிற கல்வெட்டு வாசகங்களும் இந்நுõலில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் அக்காலத்தில் பல செய்திகளை அறிய முடிகிறது.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் பயனுள்ள நுõல்.

திப்புசுல்தான்: ஆசிரியர்: சுந்தரபாண்டியன். வெளியீடு: காவ்யா வெளியீடு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை14. (பக்கம்: 156. விலை: ரூ.75)

வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தீரன் திப்பு சுல்தான் பற்றிய வரலாற்றுப் புதினம் இது. மது விலக்கை கொண்டு வந்ததும், மதவெறிகளைக் கண்டித்ததும், சாதிக் கொடுமைகளை நீக்கியதும், மலையாளப் பெண்களுக்கு உடைச் சீர்த்திருத்தம்செய்ததும், இஸ்லாமியனாக இருப்பினும் இந்து மற்றும் கிறிஸ்தவ கோயில்களுக்குக் கொடைகள் தந்ததும் திப்பு சுல்தானின் மகத்தான பண்பினை எடுத்துரைக்கும் சம்பவங்கள் என்கிறார் ஆசிரியர். தெளிவான கதைச் சம்பவங்கள், விறுவிறுப்பான நடை. சரித்திரப் பிரியர்களுக்கு நல்விருந்து.

பண்டிதமணி வரலாறும் தமிழ்ப் பணியும்: ஆசிரியர்: மீனாட்சி லட்சுமணன். வெளியீடு: ஏகம் பதிப்பகம், 3, பிள்ளையார் கோயில் 2ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை5. (பக்கம்: 128. விலை: ரூ.40)

பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் சிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்தவர். அவர் ஆற்றிய தமிழ்த் தொண்டு சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் ஆர்வலர்கள் படித்துப் பயன் பெறலாம்.

அட்டை, அச்சமைப்பு, புகைப்படங்கள், நுõலுக்கு அலங்காரங்களாக அமைந்துள்ளன.

என்.எஸ்.கே., நினைவுகள்: ஆசிரியர்: எஸ்.வி.ஜெயபாபு. வெளியீடு: ஜெயபாபு பதிப்பகம், 153, பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை94. (பக்கம்: 48. விலை: ரூ.10)

மக்களைச் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கே., என்.எஸ்.கே., பற்றிய சுவையான தகவல்களும், புகைப்படங்களும் அடங்கிய சிறந்த புத்தகம்! சினிமா பொக்கிஷம்!

அதியமான்களின் வரலாறு: ஆசிரியர்: சேலம் பா.அன்பரசு, வெளியீடு: விஜயம் பதிப்பகம், 30,சென்னகிருஷ்ணன் தெரு, சேலம். 636002. (பக்கம்: 168 விலை ரூ.8000.)

அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் மரபு பற்றி எழுதப்பட்ட ஆய்வு நுõல். இரண்டாம் பதிப்பாக மலர்ந்திருக்கிறது.

தமிழர் பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும்: ஆசிரியர்: டாக்டர் க.காந்தி. வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை113. (பக்கம்: 416. விலை: ரூ.100)

சமுதாயப் பண்பாட்டை அறிய மொழி இலக்கியங்கள் உதவுகின்றன.

திருமணம் பற்றிய செய்திகள் அகநானுõற்றுப் பாடல்களில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பழந்தமிழரின் மண முறையில் பெண்ணைக் கையால் பற்றித் தமர் தருதலே சிறப்பானதாகக் கருதப்பட்டதை நுõலில் விளக்கி இருக்கிறார்.

இப்படிப் பல சான்றுகள் காட்டி ஆய்வு செய்து சிறந்த நுõலாக்கி வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது.

தெரிந்த பிரபல தலங்கள்; தெரியாத செய்திகள்: நுõல் ஆசிரியர்: பா.அன்பரசன். வெளியீடு: நற்பவி பிரசுரம், ஆர்.ஜனார்த்தனம், 57பி, பசுல்லா சாலை (பக்கம்: 152. விலை: ரூ.45)

இந்நுõலில் சேலம், அயோத்தியாபட்டணம், பேரூர், திருச்செங்கோடு, தாடிக்கொம்பு ஆகிய இடங்களில் காணப்படும் சிற்ப அதிசயங்களை தெளிவாக விளக்கியுள்ளார். இந்நுõலில் உள்ள 16 திருத்தலங்களுக்கும், தல வரலாறு, சரித்திரகால தொடர்பு, கல்வெட்டுகள், கோயிலின் சிற்பச் சிறப்பு, கோயில் அமைப்பு ஆகிய அனைத்து செய்திகளையும் தெளிவாக விளக்கியிருப்பது நுõலாசிரியரின் ஆழ்ந்த புலமையைக் காட்டுகிறது.

குடப்பாய்ச்சல் தலம் குறித்த செய்திகளில் அங்குள்ள குதிரையின் சிற்பம் அமைக்கப்பட்டுள்ள விதம் அழகுற வர்ணிக் கப்படுகிறது. தரை மட்டத்திலிருந்து பீடத்துடன் 8 அடி உயரம், குறுக்கு நீளம் 6 அடி, உடல் பருமன் 2 அடி கொண்டது. கழுத்தில் பல அணிகலன்கள் செதுக்கப்பட்டுள்ளது கண் கொள்ளா காட்சியாகும். சேணமும், கடிவாளத்தின் கழுத்தின் கீழ் நோக்கித் தொங்கும் குஞ்சங்களும் வேறு எங்கும் காணக்கிடையா சிற்பக் கலைக் கருவூலமாகும் (பக்கம்: 71).

மேலும் அறப்பளிசுவரர், வெண்கனுõர், நஞ்சன்கூடு, நடுநாட்டில் ஒரு திருவரங்கம், வல்வில் ஓரியும், இலந்தை வனமும், கோசா பழங்கள் நிறைந்த மேச்சேரி என்று எண்ணிறந்த செய்திகள் நுõலெங்கும் நிறைந்துள்ளன. எனவே, சுற்றுலா விரும்பிகள் அவசியம் படிக்க வேண்டிய நுõலாகும்.

வரலாற்றுக்குப் புதிய வரவு: ஆசிரியர்: மு.முத்துச்சாமி. வெளியீடு: முருகாலயம் (பதிவு), 58, பரோடா தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 272. விலை: ரூ.75)

மாவீரன் பூலித்தேவன், பூலித்தேவரின் அரசியல் கூட்டாளிகள், விடுதலைப் போரில் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, வீரமங்கை வேலுநாச்சியார், மானங்காத்த மருது பாண்டியர், வங்கச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விடுதலை வேங்கை இராமுத் தேவன் ஐ.என்.ஏ., போன்ற கட்டுரைகள் நமது சுதந்திரப் போரின் வீர வரலாற்றைச் சொல்லி, தியாகத் தழும்பு ஏற்றுக் கொண்டவர்களின் சீலத்தைப் பறை சாற்றுகின்றன.

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், நாடகச் சக்கரவர்த்தி நவாப் ராஜமாணிக்கம், தமிழ் நாட்டின் தவநடிக பூபதி பி.யு.சின்னப்பா போன்ற கட்டுரைகள் தென் நாட்டின் அரும்பெரும் கலைஞர்களைப் பற்றிக் கூறுகின்றன.

அருமையான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புதையல்!

கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்: மொழியாக்கம்: பேராசிரியர் ந.சஞ்சீவி, பேராசிரியர் கிருஷ்ணா சஞ்சீவி, காவ்யா வெளியீடு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை24. (பக்: 448, விலை: ரூ.300.)

தென்பாண்டித் திருநாடு எனப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் முழு வரலாற்றையும் வரைமுறைப்படுத்தி முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் கால்டுவெல். பாண்டிநாட்டு வரலாறு மட்டுமல்ல, பழந்தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றின் அடிப்படை ஆதாரங்களுமே இந்த நுõலில் அடங்கியுள்ளன

எனலாம். ஆங்கிலேய ஆதிக்கம் கால் பதித்த காலகட்ட வரலாறுகளை இந்த நுõல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

கால்டுவெல் தமது 28ம் வயதில் 1838ம் ஆண்டு சென்னை வந்து, 53 ஆண்டுகள் தமிழ்நாட்டில் சமயப் பணியாற்றியவர். திருநெல்வேலி மாவட்ட இடையன்குடியை இருப்பிடமாகக் கொண்ட பிஷப், டாக்டர் கால்டுவெல் ஆற்றிய தமிழ்ப் பணியும் வரலாற்றுப் பணியும் மகத்தானவை. தமிழ்கூறு நல்லுலகம் என்றுமே இவரைப் போற்றிப் பெருமைப்படுகிறது. அவருடைய இந்த நுõல் மூலம் தான் கட்டபொம்மன், பூலித்தேவன், மருதநாயகம் எனப்படும் கான்சாகிப் கம்மந்தான், சந்தாசாகிபு ஆங்கிலேயருக்கு ஆலவட்டம் வீசிய ஆர்க்காட்டு நவாப் முகமதலி போன்றோர் சம்பந்தப்பட்ட எண்ணற்ற சரித்திரச் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

பிற்கால நாயக்கர்கள், பாளையக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என ஏராளமான வரலாற்று மாந்தர்களையும், சம்பவங்களையும் விவரிக்கும் மிகச்சிறந்த வரலாற்று ஆவணமான இந்த நுõல் 96 ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக தமிழில் வெளிவருகிறது என்பது தனிச்சிறப்பு. பேராசிரியர் ந.சஞ்சீவியும், அவரது துணைவியாரும் செய்துள்ள மொழியாக்கம் அருஞ்சிறப்புடன் திகழ்கிறது. தமிழ் மண்ணின் வரலாற்றை நேசிப்பவர்கள் அத்தனை பேரும் வாசிக்க வேண்டிய மகத்தான நுõல் இது.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்: ஆசிரியர்: ஜனாம்பிகன், வெளியீடு: சூர்யராமன் பதிப்பகம், 39, மூன்றாவது குறுக்குத் தெரு, கிழக்கு சி.ஐ.டி., நகர், சென்னை35. (பக்: 280, விலை: ரூ.90.)

“கனவு காணுங்கள், கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள். எண்ணங்க ளை செயல்கள் ஆக்குங்கள்’ என்ற நமது ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை, சிந்தனைகளை, தொலைநோக்கை ஆசிரியர் ஜனாம்பிகன் சுருங்கக் கூறி விளங்க வைத்துள்ளார்.

“மண்ணாசை, பெண்ணாசை, பொன் னாசை துறந்த மகான் விண்ணாசை கொண்டதனால் விண்ணளவு உயர்ந்துள் ளார்’ என்று வைரமுத்து பாராட்டியதை ஆசிரியர் இறுதியில் தந்துள்ளமை சாலப் பொருந்தும். இந்நுõலைப் படித்தால் நம்பிக்கை நாற்று விடும் என்பதில் ஐயமில்லை.

உடையார் (பாகம் 3): ஆசிரியர்: பாலகுமாரன், வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை17, (பக்: 512: விலை: ரூ.225)

தஞ்சை பெரிய கோயில் ஆன்மிக விஷயங்களையும் கடந்து, உலகம் இன்றும் வியந்து, நிமிர்ந்து பார்க்கும் ஒரு பொறியியல் அற்புதம்… அதிசயம்! கோயில் கட்டுவதையே லட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்தவர் சோழ மன்னர் ராஜராஜன். பெரிய கோயில் உருவான கதை, உடையாராக… மூன்றாம் பாகமாக இன்னும் ஒரு படி வளர்ந்து வந்திருக்கிறது (நான்காம், ஐந்தாம் பாகங்களும் உண்டாம்)

சோழ மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று, பண்பாட்டு அற்புதங்களை அள்ளித் தருகிறார் பாலகுமாரன். வழக்கமான தனது சமூக, ஆன்மிகக் களங்களில் இருந்து மாறுபட்டு, சரித்திரக் களத்திலும் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கிறார். கையில் எடுத்துக் கொள்ளும் கதைக் களத்தை அப்படியே பிரதிபலிப்பது பாலகுமாரன் சிறப்பு.

பெரிய கோயிலை பார்த்து ரசித்தவர்கள், அந்தக் கோயில் வளர்ந்த விதம், அதற்காக சோழ மன்னன் ராஜராஜனின் அரும் பெரும் முயற்சிகளை அறிந்து கொள்ள… உடையார் படிக்கலாம்… பாதுகாக்கலாம்!

பிடல் காஸ்ட்ரோ: ஆசிரியர்: தா.பாண்டியன், வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், சென்னை 600 017. பக்: 240, விலை: ரூ. 100

விடுதலை உணர்வை மக்களிடையே பரப்பிய பல தலைவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, அடக்குமுறைகளுக்குப் பணியாமல் போராடியவர்களின் அனுபவங்கள் முற்றிலும் வித்தியாசமானதாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக, அமெரிக்க ஆதிக்க சக்திக்குப் பணிந்து விடாமல், போராடி வெற்றி பெற்ற பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாறும் போராட்ட அனுபவங்களும் சுவாரஸ்யமானதாகும்.

பிடல் காஸ்ட்ரோ, ஆதிக்க சக்தியிலிருந்து கியூபாவை மீட்டெடுத்தார் என்பதைவிட, அந்த நாட்டை, சுய சார்புள்ள, வலிமையான நாடாக உருவாக்கினார் என்பதில் தான் அவருடைய வெற்றியின் பரிமாணம் பளிச்சிடுகிறது. மார்க்சிய சித்தாந்தத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டிருந்த பிடல் காஸ்ட்ரோ ஒரு தலைசிறந்த தேசியவாதியாக திகழ்ந்து கியூபாவை உலக அரங்கில், அனைத்து நாடுகளின் கவனிப்புக்கும் உள்ளாக்கினார்.

சிறந்த கல்வியாளரும், நேர்மையான அரசியல்வாதியுமான தா.பாண்டியனின் இன்னொரு பரிமாணம், எழுத்தாளர் என்பதை அனைவரும் அறிவர். பிடல் காஸ்ட் ரோவைப் பற்றிய இந்த புத்தகம் மூலம், அவர் தமிழக மக்களுக்கு சிந்தனை விருந்து படைத்திருக்கிறார்.

தொன்மைத் தடயம்: ஆசிரியர்: நடன.காசிநாதன், வி.வீரராகவ ன், வெளியீடு: திருக்குறள் பதிப்பகம், 66/1, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 600 078, (பக்: 236: விலை: ரூ.65)

தமிழர்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல் கடந்து சென்றுள்ளனர். பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். கடல் வாணிபத்தில் தமிழர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனர்.

இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடைப்பட்ட அமைதியான கடற்பகுதியில் ஆய்வு செய்தால் புதைந்து போன தமிழர்களின் பெருமைகள் மேலும் தெரிய வரும்.

கி.மு.மூன்றாõம் நுõற்றாண்டிலேயே கிரேக்கர்களுடன், சேரநாட்டுத்தமிழர் வணிகத்தொடர்பு கொண்டதை சேரநாட்டு நாணயங்கள் கூறுகின்றன என்று நாணய இயல் அறிஞர் தினமலர் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தரங்கத் துவக்க உரை இந்த நுõலின் முகப்பில் தரப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 3ம் நுõற்றாண்டு என, கல்வெட்டறிஞரும், இந்த நுõலின் ஆய்வுக்கும், பல்வேறு கருத்தரங்கங்கட்கும் காரணமாய் இருந்த நடன.காசிநாதன் விளக்கியுள்ளார்.

அசோகன் கல்வெட்டு எழுத்துக்கும், தமிழ் எழுத்துக்கும் உள்ள வேறுபாடுகளை “தென்னிந்திய பிராமி’ மொழிகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.

மாங்குளம், புகழூர், ஜம்பைக் கல்வெட்டுகள் கொண்டு தமிழ் எழுத்துக்களின் வடிவ மாற்றத்தை ஆய்ந்துள்ளார். திருச்செங்கோடு வேட்டுவர் செப்புப் பட்டயம் தரும் 155 வரிச் செய்திகள் அப்படியே தரப்பட்டுள்ளன. செப்புப் பட்டயங்களின் வழியே “”வில்லுக்கு விசையன் மல்லுக்கு வீமன், அறிவுக்கு அகத்தியன், பொறுமைக்கு தர்மன், புகழுக்குக் குமணன், கொடைக்கு கர்ணன், சத்தியத்துக்கு அரிச்சந்திரன், அழகுக்கு மன்மதன், வரமுக்கு அபிமன்யு,” (பக் 47) போன்ற அற்புதமான முத்திரைச் செய்திகள் நம் கண்ணை முத்தமிடுகின்றன.

ரெட்டணைச் செப்பேடு, அப்படியே புகைப்படமாக்கி இந்நுõலில் தரப்பட்டுள் ளது.

செம்பரபாக்கம் கல்வெட்டு, கி.பி.,962ல் மூன்றாம் இராட்டிர கூட மன்னன் கிருட்டிணனின் காலத்தில் செம்பரபாக்கம் சக்தீசுவரர் ஆலய சிவனுக்கு மூன்று கால வழிபாட்டிற்கு மத்தளம், சேகண்டி, தாளம் வாசிக்க ஊழியர்களுக்கு வருவாய் ஏற்பாடு செய்ததைத் தெரிவிக்கிறது.

ஏரிக் கல்வெட்டுகள், நெய்த்தோர் பட்டி நடுகற்கள், கங்கர் காலத்து வீரக்கற்கள், சம்புவராயரின் புதிய கி.பி., 12ம் நுõற்றாண்டுக் கல்வெட்டுகள், ஆதனுõர்ப் பெருமாள் கோயில் கி.பி.,1684 ஆண்டு பாடல் கல்வெட்டு, ஆகியன புதிய பல செய்திகளை இந்நுõலில் பட்டியலிடுகிறது.

திருக்கைவளம், உப்பு வேலுõர் திருமுகீஸ்வரர் ஆலய சிற்பங்கள், நடுநாட்டில் நாளந்தா, கல்வெட்டில் சுவையான செய்திகள் என, பழமைத் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது இந்த அருமை நுõல்.

அதியமான் நெடுமான் அஞ்சி: ஆசிரி யர்: கி.வா.ஜகந்நாதன், வெளியீடு: அமுத நிலையம், 17, ஸ்ரீபுரம் இரண்டாவது தெரு, ராயப்பேட்டை, சென்னை14. (பக்: 152, விலை ரூ.40.)

ஏழு பெரு வள்ளல்களில் ஒருவனும், அவ்வைக்கு நெல்லிக்கனியை வழங்கியவனுமாகிய அதியமான் நெடுமான் அஞ்சியின் வரலாறு சுவையானது.

ஆராய்ச்சி முறையில் எழுதியதன்று. படிப்பவர்கள் நெஞ்சில் அதியமான் உருவமும், செயல்களும் ஓவியமாக நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்ட நுõல். நிகழ்ச்சிகளுக்கான ஆதாரங்களையும் நுõலில் அளித்துள்ளது ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும்.

கி.வா.ஜ.,வின் இனிய தமிழ்நடையை இந்த நுõலில் படித்து மகிழலாம். அவரது நுõற்றாண்டுவிழாக் காலம் நடக்கும் போது இதைப்படித்து மகிழலாம்.

சுல்தானா (ஒரு சவூதி இளவரசியின் சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கை): ஆசிரி யர்: ஜீன் ஸஸான். தமிழில்: ராணி மைந்தன். வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 256. விலை: ரூ.70)

இளவரசி என்றதும் நம் நினைவுக்கு வருவது மாட மாளிகை, உப்பரி கை, பணியாளர் வரி சை, உடம்பெங்கும் நகையின் சுமை, கற்பனைக்கும் எட்டாத ஆடம்பரம். இளவரசி சுல்தானாவுக்கும் இவையெல்லாம் வாய்த்திருந்தது. சவுதி அரேபிய அரச குடும்பத்துப் பெண்ணான சுல்தானாவின் வாழ்க்கையில் நடந்த சோகங்கள், உண்மைச் சம்பவங்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நுõல். தமிழ் மொழி பெயர்ப்பாக வந்துள்ளது.

படித்து சுல்தானாவின் சோகத்தை நாமும் பகிர்ந்து கொள்வோம்.

மானங்காத்த மருதுபாண்டியர்: ஆசிரி யர்: பேராசிரி யர் ந.சஞ்சிவீ வெளியீடு: காவ்யா 14, முதல் குறுக்குத் தெரு டிரஸ்ட்புரம் கோடம் பாக்கம் சென்னை 600 024 போன்: 2480 1603(பக்கங்கள்: 231, விலை: ரூ.125)

ஆங்கில ஆதிகத்திற்கு எதிராக முதல் குரல் எழுப்பயதில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்களை ஆட்டம் காணச் செய்த முதல் இந்திய சுதந்திர போர் (1857) நடைபெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்து மாவீரர்கள் தென்னிந்திய புரட்சியில் குதித்தனர்.

பூலித்தேவர், கட்டபொம்மன், என இன்னும் எத்தனையோ வீரர்கள் ஆங்கில அடிமைத் தளையை அறுக்க இன்னுயிர் ஈந்தனர். ஆனால் மருது சகோதரர்களின் வீர வரலாறு தனிச் சிறப்பு மிக்கது. ஏனெனில் கட்டபொம்மன் உட்பட முதலாவது சுதந்திரப்போர் துவங்கியதற்கு முன்பே வெள்ளைய அரசை நடுங்க வைத்த மாமன்னன். மருது ஆண்ட பகுதிகளில் வெள்ளையர் நுழையாமல் இருந்தது உண்டு. மருது மேற்கொண்ட போராட்டத்தை விரி வாக விளக்கியுள்ளார் பேராசிரி யர் சஞ்சீவி. மருது பாண்டியர்களின் வாழ்க்கை, நல்லாட்சி, <உரி மைப் போர், ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து போராடி வீர மரணம் எய்திய தியாகம் என அனைத்தையும் விரி வாக குறிப்பட்டுள்ளார் நுõல் ஆசிரி யர். பற்சேர்க்கையாக மருது சகோதரர்களுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றை விரும்புவோர் படிக்க வேண்டிய நுõல்.

தமிழக வரலாறு: ஆசிரி யர்: முனைவர் முத்தமிழ்ச் செல்வன். வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை (பக்கம்: 368. விலை: ரூ.80)

வரலாற்றுக்கு முற்பட்ட காலம், குமரி க் கண்டம் நிலவிய காலம், சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பயர் காலம் என்று பகுத்துக் கொண்டு இந்நுõலாசிரி யர் 105 தலைப்புகளில் சுருக்கமாக அளித்திருக்கிறார்.

மக்கள் எளிதில் புரி ந்து கொள்ளும் விதத்தில் எளிமை நடையில் சுருக்கமாக வரலாற்றை படைத்தமைக்கு பாராட்டுதல்கள்.

இந்திய வரலாறு: ஆசிரியர்: டாக்டர் ந.சுப்பரமண்யன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி சிட்கோ இண்டஸ்ட்ரி யல் எஸ்டேட், அம்பத்துõர், சென்னை 600 098. (பக்கங்கள்: 800, விலை: ரூ. 245) வரலாற்று மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்திய வரலாற்றை விரி வாக எழுதியுள்ளார் ஆசிரி யர். வரலாறு படிக்கும் கல்லுõரி மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களும் படிக்கும் வண்ணம் எளிமையாகவும் ஏராளமான தகவல்களுடன் அதே சமயம் முழுமையாக இந்திய வரலாற்றை கொண்டுள்ளது இப்புத்தகம்.

அமரர் பி.சீனிவாசராவ் மங்காத வான்சுடர்: தொகுப்பு: எம்.ஏ.பழனியப்பன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி சிட்கோ இண்டஸ்ட்ரி யல் எஸ்டேட், அம்பத்துõர், சென்னை 600 098. (பக்கங்கள்: 79, விலை: ரூ.25) தமிழக கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரும், பிரபல விவசாய சங்கத் தலைவருமான பி. சீனிவாசராவின் மறைவுக்கு பின் அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக ஜனசக்தி இதழில் இடதுசாரி தலைவர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது.

அமர்த்தியா சென் ஓர் அறிமுகம்: ஆசிரி யர்: டி.ரமேஷ். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்துõர், சென்னை 600 098. (பக்கங்கள்: 113, விலை: ரூ.30) அமர்த்தியா சென் என்ற பெயரை மட்டுமே நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். அவரது வாழ்க்கை பற்றி நமக்கு தெரி ந்திருக்க வாய்ப்பில்லை. பொருளாதாரத்திற்காக நோபல் பரி சு பெற்ற அமர்த்தியா சென்னின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது.

தொலைந்த நேரங்கள்: ஆசிரி யர்: பி.ஆர்.ரமேஷ். வெளியீடு: வைகை ஸ்ரீ மீனாட்சி பவுண்டேஷன், எச்.ஐ.ஜி., 50, 80 அடி சாலை, அண்ணாநகர், மதுரை 20. (பக்கங்கள்: 167, விலை: ரூ.100) பல்வேறு குற்றங்களுக்காக பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த இப்புத்தகத்தின் ஆசிரியர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், தனது கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புகளையும் இப்புத்தகத்தில் தொகுத்துள்ளார்

திருமணம் செல்வக் கேசவராய முதலியார்: பதிப்பாசிரி யர்: முனைவர் சா.கிருட்டிண மூ ர்த்தி, முனைவர் ச.சிவகாமி. வெளியீடு: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை113. (பக்கம்:112. விலை: ரூ.30)

தமிழ் அறிஞர்களாய் வாழ்ந்து மறைந்தவர்களின் வரலாறு மக்களிடையே தெரி யாமல் போய்விடும். அத்தகு தமிழ் அறிஞர்களின் வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் தமிழ் அறிஞர் வரி சை என்ற தலைப்பில் கருத்தரங்கங்களை உருவாக்கி பல தமிழ் அறிஞர்களின் தமிழ்ப் பணிகளை ஆய்வுக் கருத்தரங்கங்களாகத் தோற்றுவித்து முதன் முதலில் 16 அறிஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இந்நுõலில் முதல் கட்டுரை செல்வக் கேசவராய முதலியாரி ன் வாழ்க்கை வரலாறு பற்றியும், இரண்டாவது கட்டுரை அவருடைய படைப்புத் திறன் பற்றியும், மூ ன்றாவது கட்டுரை கம்ப நாடர் பற்றியும், நான்காவது கட்டுரை அவருடைய பதிப்புத் திறன் பற்றியும், ஐந்தாவது கட்டுரை அவருடைய உரைநடைத் திறன் பற்றியும் விளக்குகின்றன.

புகழ் பெற்ற அறிஞர்களாய் திகழ்ந்த தெ.பொ.மீ., சொல்லின் செல்வர் ரா.ப.சேதுப்பள்ளை இவருடைய மாணாக்கர்கள்.

அரி ய செய்திகளை ஆற்றல்மிகு கட்டுரைகளால் காட்டியிருப்பது மிகச் சிறப்பாக மிளிர்கின்றது. ஆய்வு நுõல்கள் வரி சையில் தரமான இடம் வகிக்கிறது இந்த நுõல்.

நீங்களும் மகாத்மா ஆகலாம்: ஆசிரி யர்: அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார். வெளியீடு: புதுமலர் புத்தக ஆலயம், 5/105, பெரி யார் பாதை மேற்கு, ‘ளைமேடு, சென்னை94. (பக்கம்: 104. விலை: ரூ.10)

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் பன்னணியில், ஆசிரி யர் தன் அனுபவங்களை ஆக்கப்பூர்வமாக எடுத்துரைக்கின்றார்.

நுõல் அளவில் சிறியது; விலை மலிவு என்றாலும், இதில் தெரி விக்கப்பட்டுள்ள கருத்துக்கள் புதுமையாகவும், புரட்சிகரமாகவும் சொல்லப்பட்டுள்ளன.

பெருந்தேவி: ஆசிரியர்: காவியப் பாவலர் பண்ணன். கிடைக்கும் இடம்: எல்.25/3, 26ம் குறுக்குத் தெரு, பெசன்ட் நகர், சென்னை90. (பக்கம்: 400, விலை: ரூ.120.)

கல்கி பாணியைக் கையாண்டு, இந்நுõலாசிரியரும் சேர சோழ பாண்டிய மன்னர்களை முன்னிறுத்தி, வரலாற்றுப் புதினம் படைத்துள்ளார்! கண் கவர் அழகு நாயகியான பொன்னியின் செல்வி பெருந்தேவி அங்கங்கே <உலா வந்திட சந்திரகுப்தனுக்கு ஒரு சாணக்கியன் வாய்த்தது போன்று பாண்டியப் பெருநாட்டு இளவல் செழியனுக்கு, தீஞ்சுவைத் தமிழுடன் அரசியலையும் புகட்டும் ஆசான் புலவர் பெருமான் மாங்குடி மருதனாரே சகலகலா வல்லவனாக, நாயகராக பரிமளிக்கிறார்.

மதுரை சங்கத் தமிழ் இந்த (குண்டு) நுõலெங்கிலும், குண்டு மல்லியாகக் கமகமக்கிறது!

ஆராய்ச்சி மணி (மனு நீதிச்சோழன் வரலாறு): ஆசிரி யர்: தஞ்சை வி.நாராணசாமி, வானதி பதிப்பகம் (பக்கம்: 136, விலை: ரூ.40)

மனுநீதிச் சோழனின் வாழ்க்கை வரலாற்றை கண் முன் காட்டும் நுõல்.

வேலுõர்ப் புரட்சி: ஆசிரியர்: பேராசிரியர் ந.சஞ்சீவி. வெளியீடு: காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை24. (பக்கம்: 104. விலை: ரூ.50)

ஒன்றரை நுõற்றாண்டுகளுக்கு முன் உலகமே கண்டு திகில் கொள்ளும்படியான வீரப்புரட்சி ஒன்று வேலுõர் கோட்டையில் நடைபெற்றது. பத்ராசலத்து ரெட்டியார் கட்டிய அந்தக் கோட்டை, ஏகாதிபத்திய வெறியர்களுக்குக் கல்லறையாக மாறிய வீர வரலாற்றையும், சுதந்திர வீரர்களின் பாசறையாகவும் அமைந்த வரலாற்றையும் தெளிவாக விவரிக்கும் ஆராய்ச்சி நுõல் இது. இதை மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார் பேரறிஞர் ந.சஞ்சீவி. வரலாற்றை முறையாக அறியும் ஆர்வலர்களுக்கு உதவும் அரி ய நுõல்.

ஜீவாவும் நானும்: ஆசிரியர்: தா.பாண்டியன். வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்து கிருஷ்ணன் தெரு (பக்கம்: 192. விலை: ரூ.80) இரும்பு நெஞ்சம் கொண்ட தலைவர் ஜீவானந்தம் சிறந்த பேச்சாளர். சொந்த வீட்டுவாசலை விடவும் அதிகமாக சிறைவாசலையும், தொழிற்சாலை வாசலையும் உரிமையோடு மிதித்த மாபெரும் தலைவர். அந்தத் தலைவர் தம் வரலாற்றை எழுதவில்லையே என்ற குறையைப் போக்குகின்றன தா.பாண்டியனின் நினைவுக் குறிப்புகள்.ஜீவாவை கட்சி எல்லைகளுக்கு அப்பால் நின்று எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, அண்ணாதுரை, காமராசர், டி.கே.சண்முகம் ஆகியோர் பாராட்டிய பாராட்டு மொழிகளையும் ஆசிரி யர் பதிவு செய்கிறார்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளக்க நேர்ந்த காரணங்களும் அலசப்பட்டுள்ளன.

தியாகச் செம்மல் திருப்பூர் குமரன்: ஆசிரி யர்: பட்டத்தி மைந்தன், வெளியீடு: செந்துõரான் பதிப்பகம், நெ.15, ஜெய்சங்கர் தெரு, சென்னை33. (பக்கம்: 136, விலை: ரூ.42.) கையில் தேசியக் கொடி, உள்ளத்தில் உறுதி இவையே குமரன் என்னும் குமாரசாமியிடம் இருந்தன. கொடிகளைப் பிடுங்க போலீஸ் தடிகளைப் பிரயோகித்தன. ரத்த வெள்ளத்தில் குமரன் சாய்ந்தபோதும் கொடியை சாய்க்காமல் இறுகிப் பற்றியிருந்தார். கொடி காத்த குமரன் என்ற பெயர் பெற்று அமரர் ஆனார் (10.01.1932). தேசியப் போராட்ட வரலாறு.

சிறைப்பறவை: தமிழில்: துறவி. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 135. விலை: ரூ.55)

“சுதந்திரம் என்பது நமது விலங்குகளை இழப்பதல்ல; அடுத்தவர் சுதந்திரத்தை மேம்படுத்தி மரியாதையுடன் அதை அங்கீகரிக்கும் விதமாக அமைகின்ற வாழ்வில் நாம் வாழ்வது தான் உண்மையான சுதந்திரம்’ என்று சுமார் 10 ஆயிரம் நாட்கள் சிறையில் இருந்து, தமது 71ம் வயதில் விடுதலையான கருப்புச் சூரியன் நெல்சன் மண்டேலா ஆங்கிலத்தில் எழுதிய “எ லாங் வாக் டு ப்ரீடம்’ நுõலின் ஒரு சிறிய பகுதியை மொழிபெயர்த்துள்ளார் நுõலாசிரியர் துறவி.

ரோபன் தீவுச் சிறைச்சாலையில் இருந்து கொண்டே சுதந்திரப் போராட்டம் நடத்திய மண்டேலாவின் உரிமைக் குரலை எளிய தமிழில் அறியும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது இந்நுõல்.

சமூக நலனில் நால்வர்: ஆசிரியர்: பேராசிரியர் பால.அர்த்தநாரீசுவரர். வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேசய்யர் தெரு (பக்கம்: 160. விலை: ரூ.40).

பாரத சமுதாயத்திற்கு உழைத்து, இதன் வளமைக்காக தனது நலனை எல்லாம் தியாகம் செய்த நால்வரை இந்த நுõல் நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

விடுதலைக்கு உழைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல், சிறுவயதில் தன் வகுப்பறையில், தாமதமாக வந்த ஆசிரியரை தட்டிக் கேட்டதும், பள்ளிக்குள் வியாபாரம் செய்து வந்த ஆசிரியர் வியாபாரத்தை தடுத்ததும் படிப்பவருக்கு ஒரு பாடமாக உள்ளது.

மூதறிஞர் ராஜாஜி ஜாதியை ஒழிக்கப் பாடுபட்ட செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டனர். ஆனால், இந்த நுõல் அதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அனாதைப் பிணம் ஆற்றில் குளிக்கும்போது தலையில் வந்து இடிக்க, அதை எந்த ஜாதி என்று தெரியாது தானே அடக்கம் செய்தார். இதனால் இவரை பிராமண ஜாதியினர் ஜாதியிலிருந்து விலக்கி வைத்து விட்டனர். இப்படிச் செய்தவர் ராஜாஜி தந்தை நல்லான் சக்கரவர்த்தி. ராஜாஜியும் தன் பிள்ளைகளுக்குக் கலப்புத் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு கொண்ட பெரியாருடன் கனிவோடு பழகினார். கள்ளுக்கடையை மறியல் செய்து மூடினார். உப்பு சத்தியாக்கிரகம் வேதாரண்யத்தில் நடத்தினார். மூதறிஞர் என்று யாவராலும் போற்றப்பட்டார். காந்தியடிகள், “தன் மனசாட்சி ராஜாஜி’ என்று போற்றினார். இதுபோன்ற பல செய்திகளை இந்த நுõல் தங்கு தடையின்றி சொல்லிச் செல்கிறது.

தீண்டாமையை ஒழித்த டாக்டர் அம்பேத்கரின் திறமைகளையும், தியாகங்களையும் தெளிவாகக் கூறுகிறது இந்நுõல்.

உடன் கட்டை ஏறுவதை உடனே தடுத்து நிறுத்திய ராஜாராம் மோகன்ராய், இந்தியாவுக்கு புது வழி காட்டிய இந்திரா பிரியதர்சினி இப்படிப் பலரை இந்த நுõல் படிக்க வைத்து, நமது மனதில் தேசபக்தியை விதைத்து விடுகிறது.

ஆனால், அவசர கோலத்தில் நுõல் உருவானதால் நுõலில் ஏராளமான எழுத்துப் பிழைகள், வேகத் தடையாக படிப்புப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விடுகின்றன.

சமூக நலனில் நால்வர் என்ற தலைப்பும் நால்வர் படமும் அட்டையில் நிற்க, உள்ளே ராஜாராம் மோகன்ராய், ஓடிவந்து ஐந்தாவதாக ஒட்டிக் கொண்டுள்ளாரே ஏன்?

ஆப்ரிக்க காந்திநெல்சன் மண்டேலா: ஆசிரியர்: இராம சுந்தரம், வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, சென்னை17. (பக்கம்: 128, விலை: ரூ.32.)

மகாத்மா காந்தியைப் பின்பற்றி அவர் கொள்கை வழி நடந்து ஒடுக்கப்பட்ட கருப்பு நிற சகோதர சகோதரிகளை வெள்ளையர்களின் கொடுமைகளிலிருந்து விடுவித்து சுதந்திரமாக வாழ செய்த பெருமகனார் நெல்சன் மண்டேலா ஆவர். அவர் தென் ஆப்ரிக்க ஜனாதிபதியாக சில காலம் பதவி பெற்று ஓய்வு பெற்றார். அவர் வாழ்க்கைச் சரிதம், படிப்பவர்களை மகிழச் செய்யும்; பாராட்டவும் செய்யும்.

பதிப்புச் செம்மல் ஓர் நினைவுக் களஞ்சியம்: ஆசிரியர்: கமலவேலன். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை108. (பக்கம்: 96. விலை: ரூ.25).

பதிப்புச் செம்மல் மெய்யப்பன் மறைந்த ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி இந்நுõல் 25 தலைப்புகளில் மெய்யப்பனாரின் வாழ்க்கையில் வெற்றி பெற்ற வரலாற்றுத் துணுக்குகளைத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

காலத்தை தன்வசப்படுத்தி வென்றவர்; குருதி முழுவதும் சுருதி மாறாத உழைப்பு; உணவு வேளையும் தமிழ் உணர்வு வேளை தான் அவருக்கு, அறிவு ஜீவி அதோடு அல்லும் பகலும் உழைக்கும் தொழிலாளி; குழந்தை உள்ளம் கொண்டவர்; கவிஞராக மலர்ந்திருக்க வேண்டியவர்; உயிர் மூச்சே வள்ளுவம் தான்; தனித்த சிந்தனையாளர். நிறைய பாராட்டுகளும் வாழ்வின் சுவையான நிகழ்ச்சிகளும் இந்நுõலாசிரியர் எடுத்துரைப்பது இந்நுõலின் சிறப்பு.

தமிழ் ஆர்வலர்கள் இந்நுõலை அவசியம் படித்துப் பயன் பெறலாம்.

தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம்: பதிப்பாசிரியர்: முனைவர் கா.கிருட்டிணமூர்த்தி, முனைவர் ச.சிவகாமி. வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை113. (பக்கம்: 104. விலை: ரூ.30).

இராய. சொக்கலிங்கத்தின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் தம் தமிழ்ச் சிந்தனையையும், காந்தியச் சிந்தனையையும், காப்பிய ஆய்வுகளையும், பதிப்புப் பணியையும், இதழாசிரியர் பணியையும் உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆய்வுகள் அமைந்துள்ளன. இவர் “தமிழ்க் கடல்’ என்று பாராட்டப்பட்டவர்.

தமிழ்க்கடலின் பன்முகத் திறன்களையும், இந்நுõல் எடுத்துக் காட்டியுள்ளது அருமை.

வீரத் தாய் வேலு நாச்சியார்: ஆசிரியர்: கே.ஜீவபாரதி. வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்து கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார் (பக்கம்: 96. விலை: ரூ.30).

வெள்ளையரை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட வேலு நாச்சியாரின் வீர வரலாற்றைச் சொல்லும் சிறந்த நாடகம்!

நாட்டு நடப்புகளில் நம் கவனம்: ஆசிரியர்: எம்.ஆர்.ரகுநாதன். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்., சென்னை98. (பக்கம்: 148. விலை: ரூ.45).

நாட்டுக் குடிமகனுக்கு தேசப் பிரக்ஞை அவசியம். உலகளாவிய விஷயங்களின் அறிவும் அவசியம். உழன்று கொண்டுள்ள பிழம்புச் செய்திகளை கட்டுரையாக்கி வெளியிடுகின்றன பத்திரிகைகள். “ஜனசக்தி’ என்ற நாளிதழில் ஆசிரியர் எழுதி வந்த 25 கட்டுரைகள் இந்நுõலில் இடம் பெற்றுள்ளன.

தமிழகம், பாரதம், உலகம் என பரவியுள்ள நடப்புகளில் நம் கவனத்தை ஒன்றச் செய்கிறார் ஆசிரியர். ஆறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளில் அமெரிக்கா, ஈரான், ஈராக் அடிபடுகிறது.

பொது சிவில் சட்டம், பசு வதைச் சட்டம், வதோராவில் பெஸ்ட் பேக்கரி தீ வைப்பு, என்கவுன்ட்டர் சாவு, ரஜினி ஸ்டைலில் லக்னோவில் வாஜ்பாய் போஸ், இந்தியா ஒளிர்கிறது என்ற மோசடி விளம்பரம், சுனாமி சீற்றம், ஹிட்லர் வாரிசுகள் என பரபரப்பான பல நிகழ்ச்சி சம்பவங்களில் சமூக பிரக்ஞையோடு ஆசிரியர் தம் கருத்தை வெளியிட்டுள்ளார்.

பசு வதையை நியாயப்படுத்தும் முயற்சி (பக்.14) தொன்று தொட்டு வளர்ந்து வரும் பாரம்பரியத்திற்கு எதிரானது. தனி மனிதக் கருத்து குறிப்பிட்ட சாராரை தாக்குவதாக அமைகிறது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஆதரவு ,மனித வர்க்க தீமைகளுக்கு கண்டனம் போன்ற பல முக்கிய இடங்கள் சம்பவங்கள் நிகழ்ந்து செய்தி சரித்திரம் ஆன பின்னரும் சிந்திக்க வைக்கின்றன.

விளையும் பயிர் முளையிலே தெரியும்: பேராசிரியர்: சுந்தர சண்முகனார், வெளியீடு: பிரபாத் புக் ஹவுஸ், 7, பிருந்தாவனம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33. (பக்கம்: 108. விலை: ரூ.30).

ஆர்க்கி மிடீஸ் முதல் பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் முடிய 15 விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறும் அவர்கள் கண்டுபிடித்த அறிவியல் சாதனங்களும் நுõலில் விரிவாக சுவைபடச் சொல்லப்பட்டுள்ளன.

“விடுதலைப் போரில் வேலு நாச்சியார்’: ஆசிரியர்: முனைவர் ம. நடராசன், வெளியீடு: தமிழ் அரசிப் பதிப்பகம், 189, டி.டி.கே. சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை 18 (பக்கம்: 100; விலை: ரூ.50).

வீரம் விளைந்த மண் இது. வேறு பக்கம் திசை திரும்பிக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களை மீண்டும் தெளிவான பாதைக்குத் திசை திருப்புவதற்கு, கடந்த காலங்களில் வாழ்ந்து, மறைந்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை சுட்டிக் காட்டவேண்டியது அவசியம். அந்த வகையில், வெள்ளையருக்கு எதிராக வாளெடுத்து வீரப் போர் புரிந்த வேலு நாச்சியாரை, அவரது வீரம் பொதிந்த வாழ்க்கையை அழகாக தொகுத்திருக்கிறார் ஆசிரியர்.

சுதந்திர தாகம் கொண்டு வாளெடுத்த வேலு நாச்சியாரை, “தமிழகத்தின் ஜான்சி ராணி’ என்று போற்றுவதை விட, ஜான்சி ராணியை, “வட நாட்டு வேலு நாச்சியார்’ என்று புகழ்வதே பொருத்தமாக இருக்கும் என்கிறார் ஆசிரியர். புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது, அவரது கருத்தை தயக்கமின்றி நமது மனது சரியென்றே ஏற்றுக் கொள்கிறது.

காந்தி நினைவில் நிற்கும் நிகழ்ச்சிகள்: ஆசிரியர்: பி.சி.கணேசன், வெளியீடு: சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட், 1620, ஜேபிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை 40, (பக்கம் 123; விலை ரூ.40/)

மகாத்மா காந்தி தன் வாழ்க்கையை “சத்திய சோதனை’ என்று அவரே கூறினார். வாழ்நாளின் இறுதிக் காலம் வரை தொடர்ந்து எத்தனையோ “சோதனைகள்’ வந்தபோதும் அவர் மனம் தளரவில்லை. காந்தியின் வாழ்க்கையிலிருந்து பல உண்மைகள் நமக்கு கிடைக்கின்றன. இந்த புத்தகத்தை படித்தால் காந்திஜி என்கிற மாமனிதனின் எல்லா அம்சங்களையும் தெரிந்து கொண்ட திருப்தி ஏற்படும்.

சீர்திருத்தச் செம்மல்கள்: ஆசிரியர்: முனைவர் சுபாசு. வெளியீடு: நிவேதிதா நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை, 15, வங்கியர் குடியிருப்பு, குமரன் நகர், திருச்சி620 017. (பக்கம்: 144. விலை: ரூ.60).

சீர்த்திருத்தங்கள் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன. இச்சீர்த்திருத்தங்கள் இயக்கங்களாக செயல்படுகையில் எண்ணற்ற அல்லல்கள் நேர்கின்றன.

ஆசிரியர், இவ்வழியில் ராஜாராம் மோகன்ராய், மகாத்மா ஜோதிராவ்புலே, அயோத்திதாச பண்டிதர், கந்துகூரி வீரேசலிங்கம், ஸ்ரீநாராயணகுரு, பண்டித ரமாபாய், ஈ.வெ.ரா., அம்பேத்கர் என 17ம் நுõற்றாண்டில் இருந்து 20ம் நுõற்றாண்டிற்கு இடைப்பட்ட எட்டு சீர்த்திருத்தச் செம்மல்களின் வாழ்க்கை வரலாற்றை எட்டு கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

“ஈஸ்வரன் எந்த துõதரையோ அவதார புருஷரையோ உலகிற்கு அனுப்பவில்லை” (பக்.31) என்று கூறிய ராஜாராம் மோகன்ராயின் சதி எதிர்ப்பு, பெண் விடுதலை, உருவ வழிபாட்டுக் கண்டனம், பலி எதிர்ப்பு, பலதாரத் திருமணம், சாதி முறை தெரிந்து கொள்ள வேண்டியவை.

இளம் விதவைகளின் ரகசிய பிரசவத்திற்கும், அதனால் பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்புக்கும் ஜோதிராவ் புலேயின் இயக்கம் (பக்.17), மகப்பேறு இல்லை என்பதால் மறுமணம் புரியாமை (பக்.62), சத்திய சோதக் சமாஜின் பணிகள், பார்ப்பன எதிர்ப்பு என்பனவற்றை புலேயின் சீர்த்திருத்தங்களாக பட்டியலிடுகிறார் ஆசிரியர். நல்ல முயற்சி.

தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் தமிழ்த் தொண்டும் மொழியியல் பங்களிப்பும்: ஆசிரியர்: பேராசிரியர் கோ.சீனிவாச வர்மா. வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். (பக்கம்: 80. விலை: ரூ.25).

இருபதாம் நுõற்றாண்டின் தலைசிறந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.

தெ.பொ.மீ., பெயரால் ஒரு அறக்கட்டளையை நிறுவி பல அறிஞர்களின் ஆய்வுச் சொற்பொழிவை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் மக்கள் அறியும்படிச் செய்திருக்கிறார் பேராசிரியர் மது.ச.விமலானந்தம்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகோர் அனைவரும் தெ.பொ.மீ., பற்றித் தெரிந்து கொள்ளப் பெரிதும் உதவும் நுõல்.

குமரி க்கண்டம்: ஆசிரியர்: முனைவர் கு.மங்கையர்க்கரசி. வெளியீடு: புத்தா பப்ளிகேஷன்ஸ், (பக்கம்: 144. விலை: ரூ.70)குமரி க் கண்டத்தில் நிலவிய நாகரி கம் தமிழ் நாகரி கமே. திராவிட இந்தியாவின் தொல்குடியினரே முதன் முதலில் மரக்கலம் செலுத்தியவர்கள். கடலில் மூ ழ்கிய குமரி க் கண்டத்தை இலக்கிய, சாஸ்திர சரி த்திர, ஆராய்ச்சி ரீதியாக பரிசீலிக்கப்பட்ட கருத்துக்கள் இந்நுõலில் உள்ளன.

வீரத்தலைவர் பூலித்தேவர்: ஆசிரி யர்: பேராசிரியர் ந.சஞ்சீவி, வெளியீடு: காவ்யா வெளியீடு, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம். (பக்கம்: 80. விலை: ரூ.40) இந்த நுõலில் இரு பெரும் வரலாற்று நாயகர்கள் பற்றிய கட்டுரை நெடுந்தொடர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டுரை இந்தியாவில் வெள்ளையருக்கு எதிரான சுதந்திரப் போரை முதலில் நிகழ்த்திய விடுதலை வீரர் பூலித்தேவர் பற்றியது. அடுத்தது, அதே பூலித்தேவரை வெள்ளையரிடம் பிடித்து ஒப்படைக்கப் பல போர்கள் நடத்தி முயன்று தோற்று, பிறகு வெள்ளையருக்கு எதிராக முழக்கமிடுபவனாக மாறிய கான்சாகிப் கம்மந்தான் எனப்படுகிற மருதநாயகம் பற்றிய கட்டுரை இவ்விரு கட்டுரைகளுமே 1958, 59 காலக்கட்டத்தில் கலைமகள் மாத இதழில் தொடராக வெளிவந்தவை. இன்று யார் யாரோ இவ்விரு வீரர்களையும் பற்றிப் பேசுகின்றனர். அனைவருக்கும் முன்னோடியாக பேராசிரியர் சஞ்சீவி இவ்வீரர்களின் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளை ஆதாரப்பூர்வமாக இக்கட்டுரைகளில் விவரி த்துள்ளார்.

இந்திய பெண்மணிகள் (பகுதி 2): ஆசிரியர்: சுவாமி விமூர்த்தானந்தர். ஓவியம்: என் ராஜேஷ் குமார். வெளியீடு: ஸ்ரீராம கிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை4. (பக்கம்: 23, விலை: ரூ.25) நாடு, சமூ கம், ஆன்மிகத்திற்கு தொண்டாற்றிய பெண்களின் வாழ்க்கை வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கதை சொல்ல ஏற்ற வகையில் மிக எளிமையாக கதைகள் எழுதப்பட்டுள்ளது. ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்: பதிப்பாசிரியர்: முனைவர் சா.கிருட்டிணமூ ர்த்தி. முனைவர் ச.சிவகாமி. வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை113. (பக்கம்: 144. விலை: ரூ.45) ஆங்கிலம், இலக்கியம், கல்வெட்டு ஆகிய துறைகளில் மூதறிஞராய்த் திகழ்ந்தவர் சதாசிவ பண்டாரத்தார். (மறைவு: 2.1.1960). 1. களப்பரர் ஆட்சியின் தொடக்கத்தில் கடைச்சங்கம் அழிவுற்றது. 2. கி.பி.13, 14, 15ம் நுõற்றாண்டில் பாண்டியர்களின் வலிமை குன்றியது. சோழர்கள் விஜயநகரப் பேரரசர்கள் ஆண்டனர். 3. மாணிக்கவாசகர் காலம் எட்டாம் நுõற்றாண்டின் இறுதிக்கும் ஒன்பதாம் நுõற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலம். இதுபோன்ற சான்றுகளுடன் கூடிய உண்மைகளை எடுத்துக் கூறுவதில் பண்டாரத்தார் சிறந்து விளங்கினார். தமிழ் ஆராய்ச்சிகளில் நாட்டம் கண்போர், இந்நுõலை விரும்பி வரவேற்பர்.

குஷ்வந்த்சிங் வாழ்வெல்லாம் புன்னகை: ஆசிரியர்: என்.சொக்கன். வெளியீடு: கிழக்கு பதிப்பகம் (பக்கம்: 136. விலை: ரூ.45) சுறுசுறுப்பான மொழிநடைக்குச் சொந்தக்காரரான குஷ்வந்த் சிங், பெரும்பாலான மக்களிடம் ஒரு நகைச்சுவை எழுத்தாளராக மட்டுமே அறியப்பட்டிருப்பது துரதிர்ஷடம். அரை நுõற்றாண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த எழுத்தாளராக, திறமையான பத்திரிகையாளராக தனி முத்திரை பதித்தவர் சிங், அவரது எழுத்துலகச் சாதனைகளை எளிய தமிழில் சுவையாகச் சொல்கிறார் நுõலாசிரி யர் என்.சொக்கன். குஷ்வந்த் சிங்கின் வாழ்க்கை, கடந்து வந்து பாதை மற்றும் அவரது படைப்புகள் பற்றிய அறிமுகமாக மட்டுமே அல்லாமல், திறனாய்வு அம்சமும் கலந்து சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம்.

குமாரன் ஆசான்: ஆசிரியர்: கு.வெ.கி.ஆசான், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம் பக்கங்கள்: 224, விலை: ரூ.60.

தாழ்த்தப்பட்ட கேரள ஈழவர் சமூகத் தலைவர் நாராயணகுரு எஸ்.என்.டி.பி. யோகம் என்னும் அறநிலையத்தைத் தொடங்கினார் என்பது பலருக்குத் தெரியும். அன்னாரின் உற்ற சீடர் தான் பாட்டாளிக் கவிஞர் குமாரன் ஆசான். இளமையில் திருமணம் புரியாமல், தமது 40 வயதில் 17 வயது மாணவியை மனைவியாக்கிக் கொண்டார். விசித்ர விஜயம், வீண பூவு (விழுந்த மலர்), நளினி, லீலா, பிரரோதனம் (ஆற்றாமை) போன்ற கவிதை நுõல்களைப் படைத்து மக்களின் தொண்டனாகப் பணியாற்றினார். இவருடைய வாழ்க்கை வரலாறு இந்நுõலில் சிறப்பாக ஒளிவுமறைவின்றி சொல்லப்பட்டுள்ளது. படகு விபத்தில் ஆசான் பலியானார். தமிழ் ஆர்வலர்கள் குறிப்பாக கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுõல்.

அரசியல் ஞானி ராஜாஜி: நுõலாசிரியர்: பி.சி.கணேசன். வெளியீடு: அருந்ததி நிலையம், 19, கண்ணதாசன் சாலை (பக்கம்: 144. விலை: ரூ.50).

இந்நுõல் ராஜாஜி பற்றியது. மூதறிஞர் ராஜாஜி பற்றிய நுõல்கள் பல வெளிவந்திருக்கின்றன. நுõலாசிரியர் பி.சி.கணேசன் 13 தலைப்புகளில் பல்வேறு கோணங்களில் பார்த்து அறிந்ததை தெளிவாக இதில் கூறியிருக்கிறார்.

சச்சின் ஒரு புயலின் பூர்வ கதை: ஆசிரியர்: என்.சொக்கன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 16. கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை 600 004. (பக்கம்: 160. விலை: ரூ.50.) சச்சின் என்ற பெயரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது அதிகப்பிரசங்கித்தனம். உலக மக்கள் வியந்து ரசிக்கும் ஒரு சாதனையாளரி ன் குழந்தைப் பிராயத்தில் இருந்து, இன்றைய விஸ்வரூப நிலை வரை, படிக்கப் படிக்கச் சுவையான புத்தகம். விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்கும் உணர்வைத் தருவது நுõலாசிரியர் என்.சொக்கனின் எழுத்தாற்றலுக்குக் கிடைத்த வெற்றி. சச்சின் என்ற கிரிக்கெட் வீரரை, இன்னும் அதிகமாக, நெருக்கமாக அறிய விரும்பும் அவரது ரசிகர்கள் தவற விடக் கூடாத நுõல். அவரது பல்வேறு சாதனைகளைப் படிக்கும் போது (இதற்கு முன் அதிகம் அறியப்படாத சாதனைகள் நிறைய பட்டியல் இடப்பட்டிருக்கின்றன) மூச்சு முட்டுகிறது— ஆச்சர்யத்தில். சாதிக்க விரும்பும் ஒவ்வொருவருக்குமான நுõல்!

கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை: நுõலாசிரியர்: மதிஒளி. வெளியீடு: கங்கை புத்தக நிலையம் (பக்கம்: 124. விலை: ரூ.40). “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்னும் பாடல், சுதந்திரப் போராட்ட நாட்களில் தமிழ் நிலம் முழுக்க ஓங்கி ஒலித்தது வரலாறு. 1930ல் காந்தியடிகளால் துவக்கப்பட்ட உப்பு சத்தியாக்கிரகப் போர், தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் நிகழ்ந்தபோது, வேதாரண்யம் நோக்கி தியாகிகள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு தான் வீரநடை போட்டனர். ராஜாஜி இப்பாடலைக் கேட்டு உளம் பூரித்து, “மகாகவி பாரதியின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை இக்கவிஞர் தான் நிரப்புகிறார்’ என்று பாராட்டினாராம். அக்கவிஞர் தான் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. இவர் மகாத்மா காந்தி, மகாகவி பாரதி போன்றோரை நேரில் சந்தித்து, அவர்களால் பாராட்டப்பட்டவரும் கூட. அற்புதமான ஓவியராகத் தம் வாழ்வைத் துவக்கி, பின் மிகச் சிறந்த தேசிய கவிஞராகப் பரிமாணம் கண்டவர் நாமக்கல்லார். இவருடைய ஓவியங்களை ஆங்கிலேயர் பலரும் பாராட்டிப் பரிசளித்ததுண்டு. ராமலிங்கம் பிள்ளை எழுதிய கதை தான் எம்.ஜி.ஆருக்குப் பெரும் புகழ் சேர்த்த திரைப்படமான “மலைக்கள்ளன்’ படக்கதை. இக்கவிஞரின் அரிய வரலாற்றை மிக எளிமையான நடையில், விறுவிறுப்பாக எழுதியுள்ளார் கவிதாயினி மதிஒளி அம்மையார். ஒரு நவீனம் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது நுõல். வெறும் சம்பவங்களாக மட்டுமல்லாமல், நாமக்கல் கவிஞரின் ஒப்பற்ற உள்ளத்தைப் பிரதிபலிக்கும் அவரது கொள்கைகளைக் கூட ஆங்காங்கே அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் மதிஒளி அம்மையார். தேசிய உணர்வும், தமிழுணர்வும் உள்ள ஒவ்வொருவரும் தவறாது படிக்க வேண்டிய நுõல் இது

இளம் வயதில் இஸ்லாமிய பெரியார்கள்: நுõலாசிரியர்: எம்.ஆர்.எம்.முகம்மது முஸ்தபா. வெளியீடு: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, முதல் மாடி, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் (பக்கம்: 144. விலை: ரூ.35). இளையவர்கள் நம் முன்னோர்கள் இளவயதில் எப்படி இருந்தனர், பெரியவர்கள் இள வயதிலேயே நம் முன்னோர்கள் இப்படி இருந்திருக்கின்றனரே என உணர்ந்து அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு உயர்வதற்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நுõல் எழுதப்பட்டுள்ளது. அண்ணல் எம்பெருமாள் முகம்மது (ஸல்) முதல் அப்துல் கபூர் மவுலானா ஈறாக நீண்ட நெடும் காலச் சாலையில் கால் வைத்து நடந்தவர்களின் இளவயது சம்பவங்கள் நிறைந்திருக்கின்றன. கல்வியில் எப்படிக் கருத்தைச் செலுத்தினர், வீரத்தில், ஒழுக்கத்தில் எப்படிச் சிறந்து விளங்கினர் என்பதை இந்நுõல் எடுத்துக் காட்டுகிறது. இக்கால இளைஞர்களுக்கு இந்நுõல் ஒரு பாடம் என்றால் மிகையில்லை.

அயோத்தி, நேற்று வரை : நுõலாசிரியர்: என்.சொக்கன். வெளியீடு: கிழக்குப் பதிப்பகம். (பக்கம்: 215. விலை: ரூ.90)

இந்நுõலின் நோக்கம், சார்பற்ற முறையில் அயோத்திப் பிரச்னையை அணுகி சரித்திர உண்மைகளைத் தருவதே என்று பதிப்பாசிரியர் கூறுகிறார்.

கி.பி.1526ல் பாபர் இந்தியாவுக்குள் வந்த காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறார் ஆசிரியர். பாபரின் தினசரி நாள் குறிப்பான பாபர் நாமாவில் அயோத்தியில் மசூதி கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற பகுதி தொலைந்து போய்விட்டது. அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக ஓர் இந்து கோவில் இடிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை (பக்.22).

பிரிட்டிஷார் காலத்திலும் கலவரங்கள் தொடர்ந்தன. இதை ஒத்த விஷயங்களை துல்லியமாக வெளிப்படுத்தி அத்துடன் அயோத்தி நகரைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய இலக்கியங்கள், புராணங்கள் முதலியவைகளைப் பற்றித் தெளிவாகவும் முழுமையாகவும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்துக் காட்டியுள்ளார்.

ராமரின் வாழ்க்கை சரிதத்தைப் பற்றிப் பல அறிஞர் களின் கருத்துக்களை ஆசிரியர் தொகுத்துக் கொடுத்துள் ளார் (பக்.7478).

நடந்த சம்பவங்களை, ஒரு வரலாற்று ஆவணத்தை ஒத்த வகையில், ஆசிரியர் நடந்தபடியே எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியா மதச்சார்பற்ற நாடு. பாபர் மசூதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்தார்.

1992 டிசம்பர் 6ம் தேதி சம்பவத்தை படம் பிடிக்கிறார்.

மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகளை லீபர்ஹான் கமிஷன் விசாரித்து வருகிறது எந்த முடிவுக்கும் வர முடியாமல் நீதிமன்றங்கள் திணறுகின்றன என்கிறார் ஆசிரியர். இத்துடன் மும்பைக் கலவரம் பற்றியும் விளக்கிய பாங்கும் ஆசிரியரின் கடின முயற்சியைக் காட்டுகிறது.

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள் : ஆசிரியர்: வி.என்.சாமி, வெளியீடு: சுவாமி நிலையம், பிளாட் எண்.10, கிருஷ்ணமணி நகர், அனுப்பானடி, மதுரை625 009. (பக்கம்: 176, விலை: ரூ.60.)

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் 1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சிக்கு முன்பும், அதற்கு பின்பும் வெள்ளையனை எதிர்த்து பல போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மக்கள் தொடர்பின்றி காடுகளைச் சார்ந்து வாழ்ந்த பழங்குடி மக்களும் இந்த விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று பல தியாகங்கள் செய்திருக்கின்றனர் என்பது பலருக்கு தெரியாத ஒரு விஷயம்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் என்னும் பழங்குடியினரில் இருவரும், மலைக்குறவர் என்ற பழங்குடியினரில் நால்வரும் பங்கேற்று ஆண்டுக்கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கின்றனர். அந்த தேச பக்தர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் பல சான்றுகளை மிக முயன்று தேடி இந்த நுõலை எழுதியிருக்கிறார் இதன் ஆசிரியர்.

திப்புசுல்தான் : திகைப்பூட்டும் வரலாற்றுப் பார்வை : நுõலாசிரியர்: ஜெகாதா. வெளியீடு: அன்பு இல்லம், கே.கே.பி., காம்ப்ளக்ஸ், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 255. விலை: ரூ.80)

ஆங்கிலேய அடக்குமுறை ஆதிக்கத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவன் திப்புசுல்தான்.

திப்புவின் ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை பரங்கியர்கள் படையினால் தகர்க்கப்பட்டு திப்புவின் மாளிகை தரைமட்டமாக்கப்பட்ட நிலையிலும் விடுதலை முழக்கமிட்ட திப்பு எதிரியின் படைகளோடு இயன்றவரைப் போர் புரிந்து வீரமரணம் அடைகிறான். இறப்பிற்குப் பிறகு அவனது பதிமூன்று ஆண்பிள்ளைகளையும் பன்னிரெண்டு பெண் பிள்ளைகளையும், அவனது குடும்பத்தின் அறுநுõற்றுக்கும் மேற்பட்ட பெண்களையும் கொண்டு வந்து வேலுõர் கோட்டையில் சிறை வைத்தனர் என்ற வரலாற்று நிஜங்கள் நுõலைப் படிக்கின்றவர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பாங்கில் உருக்கமாக எழுதியுள்ளார்.

தமிழக வரலாறு புதிய பார்வை : ஆசிரியர்: வே.தி.செல்லம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை600108. (பக்கம்: 462. விலை: ரூ.125)

உலகில் நெடுங்காலத்தில் தோன்றிய நாகரிகங்களில் மறைந்தன போக எஞ்சியிருப்பவை இரண்டு. ஒன்று சீன நாகரிகம்; மற்றொன்று தமிழர் நாகரிகம்.

கடல் கடந்த நாடுகளுடன் தமிழர் வாணிபம் செய்தனர். வெளிநாட்டார் தமிழகம் நாடி வந்தனர். மூவேந்தர்கள் தனித்தனியாக நாணயங்களை வெளியிட்டனர். இம்மாதிரி பல சிறப்பு செய்திகள், அரிய புகைப்படங்கள், இந்நுõலில் தரப்பட்டுள்ளன. உண்மையான வரலாற்று ஆதாரங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் ஆசிரியர் குறிப்பிடும் போது தவறான கருத்துக்கள், வாதங்களையும் எடுத்துரைத்துள்ளார்.

ஆசிரியரின் கடுமையான உழைப்பு, ஆராய்ச்சித் திறன் இந்நுõலை அரிய கருவூலமாக உருவாக்கியுள்ளது.

உண்மையான வரலாறுகளை அறிந்து கொள்ள இந்நுõல் பெரிதும் உதவும்.


Posted in Books, Dinamalar, Listing, Lit, Literature, Reviews, Tamil, Thamizh | 3 Comments »

La Sa Ra: Lalgudi Saptharishi Ramamirtham: Anjali, Memoirs, Reviews

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

——————————————————————————————————————————————

எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்

சென்னை, அக். 30: “லாசரா’ என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் (92) சென்னை அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.30) அதிகாலையில் காலமானார். அவர் இரு தினங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

அவருக்கு மனைவி ஹேமாவதி, எழுத்தாளர் லா.ரா. சப்தரிஷி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

பெங்களூரில் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த லா.ச.ரா.வின் பூர்விகம் லால்குடி.

ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய 5 கதைகள் “மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகி சிறப்புப் பெற்றன.

மனித மனத்தின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதி, எழுபதாம் ஆண்டுகளில் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்த லா.ச.ரா. தனது 92-வது பிறந்த நாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • லா.ச.ரா. எழுதிய “சிந்தாநதி’ நாவலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
  • உலகக் கவிஞர்கள் மன்றத்தின் கெüரவ விருது (1982),
  • தமிழக அரசின் கலைமாமணி விருது,
  • காஞ்சி சங்கராசாரியார்கள் இணைந்து அளித்த “கதாரஸன் சதுரஹ’ என்ற விருது,
  • இலக்கியச் சிந்தனை விருது (1995),
  • அக்னி அட்சர விருது (1992),
  • 1997-ல் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சிறப்புகள்.

17 வயதில் அவர் “தி எலிபென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதைதான் முதலில் பிரசுரமானது.

லா.ச.ரா. எழுதிய 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் “அமுதசுரபி’ இதழில் “தி பாய் ப்ரெண்ட்’ என்று எழுதியதே அவரது கடைசி கதையாகும்.

மத்திய அரசின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றவர் லா.ச.ரா.

அவரது மகன் சப்தரிஷியின் வீட்டு முகவரி: ஏ 6, அட்சயா ஹோம்ஸ், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயல் (சேகர் ஸ்டோர்ஸ் அருகில்), சென்னை -62. தொலைபேசி: 26375470, செல்: 94444 97502.
——————————————————————————————————————————————

சிந்தாநதி சகாப்தம்: – அசோகமித்திரன்

சென்ற திங்கள்கிழமை 29-ம் தேதி மறைந்த லா.சா.ராமாமிர்தம், 1916-ல் லால்குடியில் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக் கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதரிசம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்க்வே. ஆனால், விரைவில் அவருடைய உண்மையான சாதனம் “தமிழ்’ என்று தெரிந்து விட்டது.

அதன்பின் 50 ஆண்டு காலம் லா.சா.ரா. வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.

சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர’ என்ற நாவல் எழுத வைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.

அவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.

ஒரு விதத்தில் லா.சா.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகிவற்றுடன் கோபம், சாபம், ரெüத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.

தமிழ் வரையில் இந்து மத தெய்வங்களை அவர் போல இலக்கியக் குறியீடாக பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர் போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது. இக் குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெüனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளுடன் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்தி விடும்.

லா.சா.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகையில் படித்து அவரைத் தேடிப் போய் அவரை நூல் வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்தப் பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.சா.ரா.வைக் கெüரவிக்கும் விதத்தில் அவருடைய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. லா.சா.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்கு பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை.” சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருது கூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு.

லா.சா.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா’ செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.சா.ரா.வைக் கருதினார்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.சா.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய “பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர’ மற்றும் “அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி’ அவருடைய இயல்பானக் குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.சா.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீன தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும் கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காதது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
——————————————————————————————————————————————

தூக்கமே! நீ அதிருஷ்டசாலி! – லா.ச.ராமாமிருதம் :: appusami.com

தூக்கமே, நீ இலாதுபோனால் துக்கங்களுக்கு முடிவு ஏது? மறதி எனும் மருந்து தந்த மாபெரும் மருத்துவம் அல்லவா நீ?

உன் வருகை தெரிகிறது; ஆனால் நீ வந்தது அறியேன்; அறிய நீ விடுவதில்லை.

நான் விழித்திருக்கையிலேயே நீ இழைத்த மருந்தை என் கண் சிமிழில் எப்போது வழித்தாய்? இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ? வந்து அங்கு நீ என் செய்கிறாய் என்று நான் அறிய முடியுமா?

உன்முகம் ஆசைமுகம். எப்போதும் மறைவு முகம் எதிர்ப்பட்டு விட்டால் உண்மை உரு தெரிந்துவிடும் என்ற பயமா?

நான் தேடியோ, நீயாக வந்தோ, எப்படியோ நேர்ந்து விடுகிறாய்.

நினைவோடு உன்னை நான் சிந்திக்க நேர்கையில் உன்மை நான் நினைப்பது எப்படி எப்படியோ. தினப்படி உன் மடியில் என்னைத் தாலாட்டு மறுதாய்.

ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண், நினைவுக்கு வைப்பாட்டி நீ மானம் அறியாதவரேயில்லை.

மரணத்தின் தன்மையைக் கரணத்தில் ஊட்டும் உபதேச மோனகுரு.

உயிருக்கு காவல். மரணத்தின் தாதி.

என் துயரங்கள் மறக்க உன்னைத் தேடுகிறேன். ஆனால் நீ வந்ததும் உன்மை மறந்து விடுகிறேன். நீ வந்ததும் என்னையே எனக்கு நினைப்பில்லை. உன்னை நினைவில் நிறுத்துவது எப்படி? உன் நன்றி நான் உன்னை மறந்தாலும் என்னை நீ மறப்பதில்லை. இதுவே என் பெருமை, என் வாழ்வு. நன்மையின் தன்மையே இதுதான். இருவர் ஞாபகத்தை அது நம்பியில்லை, ஒருவர் செய்கையில் வேரூன்றி விட்டபின்.

உனை நான் மறந்தாலும், உனக்கு என் நினைவிருக்க, நீ என் சுமைதாங்கி.

நினைவும் மறதியும், விழிப்பும் தூக்கமும் மாறி மாறி இரவு குவிந்த கண் மலரிதழ், செம்முலாம் உன் கண்டு விரிகையில், இன்றைய விழிப்பில் பிறந்த வண்ணங்கள் கூட்டி நேற்றைய நினைப்பில் வரைந்த சித்திரம் ஒளியும் நிழலுமாய் உலகம் தக தக அழகுகள் வீசி காக்ஷ¢ விரியுதம்மா. எல்லாம் இன்பமயம். உடலும் மனமும் லகுவும் லயமுமாய் சிறுத்தையின் சோம்பல் முறித்தெழுகின்றன.

– நன்றி கணையாழி
——————————————————————————————————————————————

லா.ச.ராமாமிர்தம்

– மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2002

தமிழ்ப் புனைகளத்தில் ‘லா.ச.ரா’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.

”பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்” என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.

லால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.

‘சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்’ என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.

சூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.

லாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.

நானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
இதற்கு எழுத்து எனக்கு வழித்துணை
ஒருவனுக்கு அவன் பக்தி
ஒருவனுக்கு அவன் ஞானம்
ஒருவனுக்கு அவன் குரு
அதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை
ஒரு சமயம் அது என் விளக்கு
ஒரு சமயம் சம்மட்டி
ஒரு சமயம் கம்பு
ஒரு சமயம் கத்தி
ஒரு சமயம் கண்ணாடி

இவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.

லாசராவின் சில படைப்புகள்:

சிறுகதைகள்: ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா

நாவல்கள்: அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா

நினைவுகள்: சிந்தாநதி, பாற்கடல்

கட்டுரைகள்: முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்

மதுசூதனன்
———————————————————————————————————————————-

தனிமையின் நிறம்
எஸ். ராமகிருஷ்ணன்
குற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள்? நீங்கள் சாமியாரா?’’ என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே!’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…
ÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்!ÕÕ

அருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.

தனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா? நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே!

சில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.

நம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்!

நாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே! சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன்.

பறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா?

தனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே! கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம்? ஆறடிக்குள்தானே? அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.

பௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை?’ என்று கேட்டேன்.

அவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா? அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா? இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம்! அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.
ஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.
அவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது! மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன? அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது? அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.

‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா?’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது? பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.
பிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை? தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன?

புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை! தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.

தனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.

ஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.

வாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.

கதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.

மூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.
அவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.

அதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ!’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.

கிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.
சில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது! அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ?

‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

விகடன் ——————————————————————————————————————————————

லா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்

வெங்கட் சாமிநாதன்

லா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம் காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.

அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.

டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”

ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள் கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.

திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக்கிடக்கிறது.

லா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான்.

ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.

முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.

கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா?” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டது.

ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப் பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.

லா.ச.ராமாம்ருதம் பிதிரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம் லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி யிருக்கிறார்.

அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.

லா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாகப் பதிபவர்கள்.

அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு கின்றன.

இவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது.

மற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச் சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத் தெரியாது.

ஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப் படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.

இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.

ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை. வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும் இருக்கும்.

எல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.

இந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.

தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’ என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி.

அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.

அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.

பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள் விரைந்துகொண்டிருப்பார் கள்.

ராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.

ஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.

அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான்.

அவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாம்ருதமும்.

என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.

அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள்.

ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.

ராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.

ராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.

ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு நிலைக்கு உயர்கிறது.

குறிப்பாக ரிக் வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும். ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப் பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.

ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.

ராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப் போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.

(ஆங்கில மூலம்: Cultural Encapsulation, Indian Literature, No. 138, July-August 1990, Sahitya Akademi, New Delhi.)

——————————————————————————————————————————–

Thinnai: “லா.ச.ரா என்கிற கைவினைஞர் :: மலர்மன்னன்”
———————————————————————————————————————————
Thinnai: “லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி :: எஸ். ஷங்கரநாராயணன்”

(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்தான். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.

சிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)


மு ன் னு ரைஇந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.>>

எழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.

பொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.

இவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’

உலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. சுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

இன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கியில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராதிருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.

பிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.

இந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.

‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத்துடன் வெளியாகின்றன.

எத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ? அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது?” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.

தன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.

கதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா? ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்?” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.

வாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.

அவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.

‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வருகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்துகிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.

லா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.

லா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையாய்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.

இந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.

‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.

‘கஸ்தூரி’, ‘மண்’ திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.

‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.

‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா?” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.

‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா? அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா? இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்கட்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.

கொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூடத் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.

‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை?” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன? இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா? கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)

லா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.

எங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.

2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.

3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.

எஸ். ஷங்கரநாராயணன்
சென்னை 101
10.12.1986
(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)

>>>

லா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)
————————————————————————————————————————

By Era Murugan in RKK:
ஒரே கதையைத்தான் லா.ச.ர வெவ்வேறு நடைகளில் எழுதுகிறார் என்று கு.அழகிரிசாமி ஒரு தடவை சொன்னார்

இந்தக் குற்றச்சாட்டு கி.ராஜநாராயணனைக் குறித்தும் உண்டு. பிரபஞ்சன் சொன்னதாக நினைவு.

லா.ச.ராவை ‘அழுகுணிச் சித்தர்’ என்பார் க.நா.சு.

இ.பா சார் சொன்னபடி, அவர் ஒரு தலைமுறையின் கல்ட் ஃபிகர். ‘புத்ர’வும் ‘சிந்தாநதி’யும் அவர் பெயரை எக்காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் – கல்ட் பிகர்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துப் போகப்படுவதில்லை என்றாலும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் (1998 என்று நினைவு) அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “கதை நன்றாக வரும்வரை அதை விடாதே. திரும்பத் திரும்ப சோம்பல்படாது எழுது. என் வீட்டுக்கு வா, காண்பிக்கிறேன், புத்ரவுக்கு எத்தனை டிராப்ட் ட்ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று”.

அவர் பட்ட கஷ்டம் நாம் படத்தேவையில்லாமல் செய்துவிட்டது டெக்னாலஜி. கம்ப்யூட்டரில் எழுதுவதால், அடித்தலும் திருத்தலும் ஒட்டுதலும் வெட்டுதலும் புதிதாக நுழைத்தலும் நாலே கீபோர்ட் விசைகள் மூலம் நடத்திவிட முடிகிறது. ஆனால் அந்த ‘சிரமத்தை’க்கூட எடுத்துக்கொள்ள எத்தனை எழுத்தாளார்கள் முயல்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

புத்ர-வை நாவலோடு அங்கங்கே அவர் டூடுல்ஸாகக் கிறுக்கிச் சேர்த்த படங்களுக்காகவும் நினைவு வைத்திருக்கிறேன்.வாசகர் வட்டம் (லட்சுமி கிருஷ்ணமூர்த்தி) கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் நூல் பதிப்பில் செய்த அழகான புதுமை அது.

அன்புடன்
இரா.மு

Thinnai: “லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும் :: பா. உதயகண்ணன்”

Thinnai: “லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக.. :: மகேஷ்.”

Thinnai: “லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி :: ம.ந.ராமசாமி”

————————————————————————————————————————————————–

முகங்கள்: எழுத்தையே சங்கீதமாக்க முயற்சித்தவர்!

ந.ஜீவா

“எழுத்து எனது சொந்த ஆத்மார்த்தம்’, “எனக்காகவே நான் எழுதுகிறேன், அதில் பிறர் தன்னை அடையாளம் காண முடிந்தால் அதுவே பெரிய விஷயம்’ என்றெல்லாம் கூறியவர் மறைந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்த எழுத்தாளர் லா.ச.ரா.வுக்கு வயது 91.

அவரைப் பற்றிய ஓர் ஆவணக் காட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

அவள் அப்படித்தான், ஏழாவது மனிதன், கருவேலம்பூக்கள், மோகமுள் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் பணியாற்றியவர் அருண்மொழி. காணிநிலம், ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.

தற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டிவி அகாதெமியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரைச் சந்தித்தோம்.

லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?

நான் லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்குக் காரணம் அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய கவித்துவமான நடை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருடைய “கழுகு’ கதையை தொலைக்காட்சிக்காகப் படமாக்க வேண்டும் என்று 1992 இல் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு எனக்கு ஆர்வம் வந்ததற்கு இன்னொரு காரணம் அவரது சொந்த ஊரான லால்குடிக்கு அருகேதான் எனது சொந்த ஊரும்.

அவருடைய “கழுகு’ கதையைப் படமாக்கினீர்களா?

நான் கழுகு கதையைப் படமெடுக்கலாம் என அவரை அணுகிய போது அதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.

“என் கதையைப் படமெடுக்காதீங்க…என் கதையைப் படமெடுத்து நஷ்டம் அடையாதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். அவருடைய கதை படமாகும்போது மாறிவிடும் என்பதனால் அப்படிக் கூறுகிறாரோ என்று நினைத்தேன். அவரும், “கதையின் ஜீவன் படமாக்கும்போது வீணாகிவிடும்’ என்றார். நான் திரைக்கதையை அவரிடம் காட்டுகிறேன் என்றெல்லாம் கூறிப் பார்த்தேன். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு அந்த ஆண்டு அந்தக் கதையைப் படமாக்குவதற்கான அப்ரூவல் தூர்தர்ஷனில் கிடைக்கவில்லை.

ஆனால் அந்தக் கதையை வேறொருவர் எடுத்தார். ஆனால் லா.ச.ரா., “அந்தப் படத்துக்கும் தனது கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்றார்.

லா.ச.ரா.வுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் இருந்தனவா? உங்களைப் படமெடுக்க எப்படி அவர் அனுமதித்தார்?

எனக்கும் எல்லாருக்கும் தெரிந்த லா.ச.ரா. ஓர் எழுத்தாளர் என்பதுதான். ஆனால் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் உலகத்தரம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களின் ரசிகர் என்பது தெரியவந்தது. 1940 – 50 காலகட்டங்களில் வெளிவந்த தரமான படங்களின் ரசிகர் அவர். ஃபிராங் காப்ராவின் படங்களை எல்லாம் பார்த்து அணுஅணுவாக ரசித்திருந்தது தெரிய வந்தது.

உலகத்தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து ரசித்த லா.ச.ரா.விற்கு தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. லா.ச.ரா. தொலைக்காட்சியில் கூட தமிழ் சினிமா பார்க்கமாட்டார் போலிருக்கிறது. 96 – 98 ஆம் ஆண்டில் கமல்ஹாசனைப் பற்றி அவரிடம் பேசினேன். அதற்கு அவர், “கமல்ஹாசனா? யார் அவர்? என்ன பண்றார்?’ என்று கேட்டார். இத்தனைக்கும் கமல்ஹாசன் லா.ச.ரா.வின் தீவிர ரசிகர். அதற்குப் பின் கமல்ஹாசனோடு அவருக்குத் தொடர்பிருந்ததா என்று எனக்குத் தெரியாது. வயோதிகத்தின் காரணமாக ஒருவேளை அப்படி அவர் பேசினாலும் பேசியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

அவரை ஆவணப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போது, “உங்களுக்காக நான் நடிக்க எல்லாம் முடியாது. வேண்டுமானால் இயல்பா நான் இருக்கறதை படம் எடுத்துக்கங்க’ என்றார்.

லா.ச.ரா.பற்றிய ஆவணப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன?

அதற்குப்பின் பலமுறை க்ருஷாங்கினியுடன் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். டைனிங் டேபிள் முன் உட்கார்ந்து க்ருஷாங்கினிக்கு அவர் அளித்த பேட்டிகளைப் படமெடுத்தேன். அதன்பின் லா.ச.ரா. பங்கெடுத்த ஐந்து இலக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்தேன். அக்கூட்டங்களில் சிட்டி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் லா.ச.ரா.வைப் பாராட்டிப் பேசிய நிகழ்வுகளைப் படமெடுத்தேன். இதுதவிர வண்ணநிலவன், ஞானக்கூத்தன் ஆகிய இருவரையும் லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து அதையும் படமாக்கியிருக்கிறேன். லா.ச.ரா.வை அவர் வீட்டில் படமெடுக்கும் போதெல்லாம் அவருடைய துணைவியாரும், மகளும் ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்துப் படமெடுக்க உதவினார்கள்.

தான் ஓர் எழுத்தாளனாக இருப்பது பற்றி அவர் எண்ணம் எப்படி இருந்தது?

“நான் சம்பாத்தியத்துக்குத் தொழில் வச்சிருக்கேன். எழுத்தை வியாபாரம் பண்ணலை. முத்திரைக் கதையெல்லாம் எழுதமாட்டேன். நான் எழுத்தில் பரிசோதனைகள் பண்றேன்’ என்பார்.

எழுத்தாளர் தி.ஜானகிராமனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உடையவராக இருந்தார் லா.ச.ரா. “தி.ஜானகிராமன் சங்கீதக்காரனைக் கதாபாத்திரமாக வைத்து எழுதுகிறார். நான் எழுத்தையே சங்கீதமாக்க முயற்சிக்கிறேன்’ என்பார்.

லா.ச.ரா.விடம் உங்களைக் கவர்ந்த பண்பு?

பணத்தைப் பெரிதாக எண்ணாத மனிதர். 1996 இல் இருந்து 2000 க்குள் அவர் மூன்று வாடகை வீடுகள் மாறிவிட்டார்.

அவர் ஒருவரிடம் ஏதோ பேசணும் என்பதற்காகப் பேசமாட்டார். நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரைப் பார்க்கப் போனால் அது பற்றி மட்டுமே அவர் பேசுவார். அதுபோல அவரின் ரசிகர் யாராவது நம்மோடு வந்து அவருடன் பேச ஆவலாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளமாட்டார். அவருடன் பேச அவர் இன்னொரு நாள்தான் வரவேண்டும். நேரம் பற்றிய அப்படியொரு விழிப்புணர்வு அவருக்கு இருந்தது.

மேலும் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி அவரைப் பாராட்டிவிட முடியாது. வாசகர்கள் யாராவது அவரை அரைகுறையாகப் படித்துவிட்டுப் பாராட்டினால் லா.ச.ரா.கேட்கும் நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்க நேரிடும்.

பிற எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் எதுவும் எடுத்திருக்கிறீர்களா?

நான் லா.ச.ரா.வை மட்டும் ஆவணப்படம் எடுக்கவில்லை. நகுலனைப் பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன்.

எப்படி லா.ச.ரா.வை நீண்டகாலமாகப் பதிவு செய்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேனோ அதைப் போல பிற எழுத்தாளர்களையும் பதிவு செய்துவருகிறேன்.

கோவை ஞானியை நிறையப் பதிவு செய்திருக்கிறேன். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், இன்குலாப், இலங்கை இலக்கிய விமர்சகர் கா.சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன. மேலும் சில காட்சிகளை எடுத்தால் இவற்றையெல்லாம் ஆவணப்படங்களாக மாற்றிவிடலாம்.

கவிஞர் பழமலய், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரையும் படமெடுக்க ஆசை உள்ளது.

ந.ஜீவா

Posted in 2437706, Academy, Anjali, Author, Awards, Biography, Biosketch, Blogs, Books, Critic, Critique, dead, Dhinamani, Dinamani, Faces, Fiction, Kadhir, Kathir, La Sa Ra, Lalgudi, Lalkudi, LaSaRa, Life, Literature, Manikkodi, Manikodi, Memoirs, Novels, people, Poems, Poet, Prizes, Puthra, Putra, Raamamirtham, Ramamirtham, Reviews, Sahithya, Sahithya Academy, Sahitya, Sahitya Academy, Saptharishi, Sindhanathi, Sindhanathy, Sinthanathi, Tamil, Tamil Blogs, Thinamani, Writer | 8 Comments »

British novelist Doris Lessing wins Nobel Literature Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

பிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் கூறியுள்ளது.

1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.

தி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் அவரது படைப்புகளில் இருக்கும்.

டோரிஸ் லெஸ்ஸிங்

ஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.

பண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.

சாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.

1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.

“தி கிராஸ் இஸ் சிங்கிங்’

1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.

“தி கோல்டன் நோட்புக்’

1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்

காட்டியது. இந்த நாவல் ஒரு பெண்

எழுத்தாளரின் கதை. பணி, காதல்,

அரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.

“தி ஃபிப்த் சைல்ட்’

1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.

Posted in africa, Award, Bio, Biography, Biosketch, Books, Britain, British, Commonwealth, Doris, England, Female, Feminism, Icon, Label, Lady, laureate, Lessing, Literature, London, manuscript, names, Nobel, Novel, novelist, people, Politics, Prize, Read, Reviews, Rhodesia, She, Synopsis, UK, Woman, Women, Zimbabwe | Leave a Comment »

Book Introductions in Jeya TV by A Ku Njaanasambandhan

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

படித்த புத்தகம்

ஜெயா டி.வி.யில் தினமும் காலையில் ஒளிபரப்பாகி வருகிறது “படித்த புத்தகம்’ பற்றிய செய்தியை சொல்லும் நிகழ்ச்சி.

இதில் அ.கு.ஞானசம்பந்தன் கூறும் நூல்கள், நூல் பற்றிய பின்னணி விளக்கங்கள், நூலாசிரியர் குறிப்புகள் எல்லாம் மிக்க உபயோகமாக உள்ளன.

“பார்க்கும் ஆவல்’ அதிகரித்து, “படிக்கும் ஆவல்’ குறைந்து விட்டதை சமன்படுத்த முயலும் தூண்டுகோலாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

சென்ற வாரம், த.நா. குமாரசாமி பற்றியும், அவரது சகோதரர் த.நா. சேனாபதி பற்றியும் கூறினார். த.நா. குமாரசாமியின் மொழித்தேடல், வடமொழிப் புலமை பெற்றது, ரவீந்தரநாத் தாகூருடன் பழகியது போன்ற தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. மொத்தத்தில் தொலைக்காட்சிகளில் வரும் சில உருப்படியான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!

Posted in A Ku Njaanasambandhan, AK Njaanasambandham, AK Njaanasambandhan, Book, Books, Chenapathi, Chenapathy, Coomarasami, Coomarasamy, Introductions, Jaya, Jaya TV, Jeya, Jeya TV, Kumarasamy, Literature, Njaanasambandham, Njaanasambandhan, Njaanasambantham, Njaanasambanthan, Njanasambandham, Njanasambandhan, Njanasambantham, Njanasambanthan, Programme, Reader, Reviews, Senapathi, Senapathy, Television, TN Kumarasami, TN Kumarasamy, TV | Leave a Comment »

Ka Naa Su’s Translation – Mirugangalin Pannai (Animal Farm by George Orwell) – Book Review

Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007

நூல் அறிமுகம்: க.நா.சு.வின் மொழிபெயர்ப்பில் ஜார்ஜ் ஆர்வெலின் மிருகங்கள் பண்ணை

– ந. கவிதா

பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெலின் Animal Farm நாவலின் மொழிபெயர்ப்பே ‘மிருகங்கள் பண்ணை’. இலக்கிய விமர்சகரும் படைப்பாளியுமான க.நா. சுப்பிரமணியம் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். மூலம் 1946இல் வெளியானது. சென்னை அம்ருதா பதிப்பகம் தனது ‘Heritage Collection’ பதிப்பு வரிசையில் இம்மொழிபெயர்ப்பை 2006இல் மறுபதிப்புச் செய்திருக்கிறது.

ஆர்வெல் இந்தியாவில் பிறந்தவர். பர்மாவில் போலீஸ் அதிகாரியாகவும் இங்கிலாந்தில் ஆசிரியராகவும் பிரான்சில் பத்திரிகை ஆசிரியராகவும் பணிசெய்த பல்துறை அனுபவம் மிக்கவர். இவரது 1984, Burmese Days, Down and Out in Paris and London, The Road to Wigan Pier, Homage to Catalonia, Inside the Whale போன்ற நூல்கள் சிறப்பான கவனம் பெற்றவை. மிருகங்களின் பண்ணை விற்பனையிலும் மிகப் பெரிய சாதனை செய்தது. முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல், ஆங்கிலத்தில் மட்டும் பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது

இந்நாவல் ஒரு முதலாளியை வீட்டை விட்டும் பண்ணையை விட்டும் வெளியேற்றிவிட்டுத் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டிய மிருகங்களின் கதை. ஆனால் முழுக்க முழுக்க அரசியல் பேசும் நாவல்.

முதலாளி ஜோன்ஸின் பண்ணையில் பன்றி, குதிரை, நாய், கோழி, ஆடு, வாத்து, காகம், நாய் என்று பல வித மிருகங்களும் பறவைகளும் இருக்கின்றன. அவற்றில் மூத்த பன்றியான கிழட்டு மேஜர்தான் விலங்குகளின் மனதில் புரட்சி விதையை விதைக்கிறது. உணவிற்காகப் பகலெல்லாம் ஜோன்சிற்கு உழைத்து ஓய்ந்துபோவது குறித்தும் அடிமைகளாக இருப்பது குறித்தும் விலங்குகளிடம் விழிப்புணர்வு ஏற்படுமாறு பேசியது இந்த மேஜர்தான். சில நாட்களில் இந்த மேஜர் இறந்துபோகிறது.

அதற்குப் பின்பு நெப்போலியன், ஸ்நோபால், ஸ்குவீலர் போன்ற பன்றிகள் பிற விலங்குகளிடம் இந்தப் புரட்சி மனப்பான்மையை வளர்க்கின்றன. எதிர்பார்த்தது போலவே மிஸ்டர் ஜோன்ஸைப் பண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றிப் பண்ணையைக் கைப்பற்றுகின்றன விலங்குகள்.

புரட்சி வெற்றியடைந்த பின் பன்றிகள் பிற விலங்குகளுக்குத் தலைமை ஏற்கின்றன. குறிப்பாக நெப்போலியனும் ஸ்நோபாலும். பண்ணை மிருகங்களின் எதிரி மனிதன்தான், அவனுக்கு அடிமையாக ஒருபோதும் இருக்கக் கூடாது; ஒரு விலங்கு இன்னொரு விலங்கைத் தாக்கக் கூடாது; மது அருந்தக் கூடாது; எல்லா மிருகங்களும் சரிசமம்; மிருகங்கள் துணி அணியக் கூடாது; படுக்கையில் படுத்துறங்கக் கூடாது என்று பல்வேறு விதிகளை வகுத்துக்கொள்கின்றன மிருகப் பண்ணை விலங்குகள். எல்லா விலங்குகளும் கல்வியறிவு பெறவும் ஏற்படாயிற்று.

பண்ணை வேலைகளில் அந்தந்தப் பருவ காலத்திற்குரிய அத்தனை வேலைகளையும் இந்த விலங்குகள் செய்தன. விலங்குகள் மிகக் கடினமான உழைத்தன. சுதந்திரமாக இருப்பதில் அவை வேலைப் பளுவை உணரவில்லை. சுதந்திரமாக இருப்பதில் அவை வேலைப் பளுவை உணரவில்லை. தலைமைப் பொறுப்பு வகிக்கும் பன்றி இனம் மட்டும் சில சிறப்புச் சலுகைகளை அனுபவித்தது. புத்திசாலி இனம் என்பதால் இந்தச் சலுகை என்று காரணம் சொல்லப்படுகிறது.

ஸ்நோபாலுக்குக் காற்றாடிக் கட்டிடம் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் யோசனை வருகிறது. அதற்குப் பண்ணைக் காரியங்களில் செய்யும் வேலையைவிடக் கூடுதலாக வேலை செய்ய வேண்டி வரும் என்றும் உணவுத் தன்னிறைவுதான் முதல் தேவை என்றும் நெப்போலியன் தரப்பில் கூறப்படுகிறது. விலங்குகளுக்கு மின்சார விளக்கொளியும் வெதுவெதுப்பான நீரும் ஆசையைக் கிளப்புகின்றன. ஆனால் நெப்போலியன் அதை மறுக்கிறது. அதோடு வேட்டை நாய்களின் உதவியோடு ஸ்நோபாலைப் பண்ணையை விட்டு விரட்டுகிறது. அதிர்ச்சியடைந்த பிற மிருகங்களிடம் ஸ்நோபால் ராஜதுரோகம் செய்தது என்று அதன் துரோகச் செயல்கள் கதைகளாகக் கூறப்படுகின்றன. அதை விலங்குகளும் ஏற்றுக்கொள்கின்றன.

நெப்போலியன் அதிகாரத்தின் மொத்த உருவாக மாறியது. சில மாதங்களில் காற்றாடிக் கட்டிடம் கட்டும் யோசனையை நெப்போலியன் முன்வைக்கிறது. மேலும் ஸ்நோபால் தனது திட்டத்தைத் திருடியது என்றும் குற்றம் சாட்டுகிறது நெப்போலியன். பசுக்கள் கறக்கும் பால் முழுவதும் பன்றிகளின் உணவில் கலக்கப்படுகின்றன. உதிர்ந்த ஆப்பிள்கள்கூட பிற விலங்குகளுக்குக் கொடுக்கப்படவில்லை. காரணம் மூளை வேலை செய்யும் இனம் என்பதனால் சலுகை.

விலங்குகள் கடினமாக உழைத்து நெப்போலியனின் கட்டளைப்படி காற்றாடிக் கட்டிடம் கட்டுகின்றன. நிறைவுறும்போது புயல் காற்று கட்டிடத்தைச் சிதைத்தது. பழி ஸ்நோபால்மீது போடப்பட்டது. மீண்டும் கட்டிடம் கட்டப்பட்டது. மனித எதிரிகள் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். உழைப்பு வீணாணது. விலங்குகளுக்கு உழைப்பிற்கேற்ற உணவு கிடைக்கவில்லை. நெப்போலியன் வேட்டை நாய்களோடு வலம் வந்துகொண்டிருக்கிறது. துரோகம் செய்த விலங்குகள் கொல்லப்படுகின்றன. பிற விலங்குகள் பயத்தால் தலைவனின் ஆணைப்படி நடந்துகொள்கின்றன.

நெப்போலியன் விதிகளை மீறி மனிதர்களோடு நட்பு கொள்கிறது. படுக்கையில் படுத்துத் தூங்குகிறது. பன்றி இனம் குடிக்கிறது. விதிகள் மாற்றி எழுதப்படுகின்றன. சில விதிகள் தளர்த்தப்படுகின்றன. பிற விலங்குகள் கேள்விகள் கேட்க முடியாமல் வாயடைத்துப்போகின்றன. கடின உழைப்பாளியான பாக்ஸர் குதிரை கொல்லப்படுகிறது.

கேள்வி கேட்பதற்கு இயலாமையால் பிற மிருகங்கள் தவிக்க, பன்றி இனம் மனிதர்களோடு வியாபாரம் பேசிக்கொண்டு சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. குடிபோதையில் இருவருக்கும் சண்டை வலுக்கிறது. மனித முகத்திற்கும் பன்றி முகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மனித முகம் பன்றியாகவும் பன்றி முகம் ம