Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர், 2006

Padma Subramaniyam – Maanpumigu Manithargal

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

ஒரு படத்தின் படப்பிடிப்பு… ஒரு குழந்தை படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்து அழுகிற மாதிரி காட்சி. குழந்தை பயந்து, தயங்கியது. அந்தக் குழந்தையின் தந்தையே படத்தின் இயக்குநர்.

அவரே தைரியம் கொடுத்து குழந்தையை மாடிப் படிகளில் தள்ளிவிடுகிறார். குழந்தை படிகளில் உருண்டு விழும் காட்சி மிக இயல்பாக அமைந்து பலராலும் பாராட்டப்பட்டது.

அந்த இயக்குநர் கே. சுப்ரமணியம். குழந்தை நட்சத்திரம் பத்மா சுப்ரமணியம். அவருக்கு அப்போது வயது நான்கு. எதையும் பர்ஃபெக்டாகச் செய்ய வேண்டும் என்பது அந்தச் சிறுவயதிலேயே தனது தந்தையிடமிருந்து பத்மா கற்றுக் கொண்டது.

இயக்குநர் கே. சுப்பிரமணியம் _ மீனாட்சி, இவர்களது ஒன்பது வாரிசுகளில் நான்கு பேர் பெண்கள். அவர்களில் கடைக்குட்டிதான் பத்மா.

பத்மா பிறப்பதற்கு முன்பே மைலாப்பூரில் பிரமாண்டமான தனது வீட்டின் ஒரு போர்ஷனில் நிருத்யோதயா என்ற பெயரில் நாட்டியப்பள்ளி நடத்திவந்தார் சுப்பிரமணியம். இங்கு பரதம் உட்பட பல்வேறுவிதமான நடனங்களும் சொல்லித் தரப்பட்டன.

கருவிலிருந்த போது, தாயின் கருப்பையில் இருந்து கொண்டே அபிமன்யு சக்கர வியூகத்தைக் கற்றதுபோல், பத்மாவும் நிருத்யோதயா மாணவிகளின் ஜதி ஒலிகேட்டு, கருவறையிலேயே பிஞ்சு மலர்ப்பாதம் உதைந்து நடனம் கற்றிருப்பாரோ? அதனால்தானோ என்னவோ, சிறுவயதிலேயே நாட்டியத்தின் மீது பத்மாவுக்கு அலாதிப் பிரியம்.

அம்மா மீனாட்சி ஓர் இசைக் கலைஞர். வீணை, வயலின் வாசிப்பார். நல்ல குரல் வளம் கொண்ட பாடகியும் கூட. தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நிறைய பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். கணவர் எடுத்த சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

வழுவூர் ராமையாப்பிள்ளை

பத்மா சிறு வயதிலிருந்தே சூட்டிகை. அழகான வட்ட நிலா முகம். நிலவின் நடுவே இரண்டு நட்சத்திரங்கள் போல் மின்னும் அகன்ற கண்கள். எதையும் ஒருமுறை பார்த்தால் உடனே பற்றிக் கொள்வார். எதிலும் தீவிர ஆர்வம். அவரது நடன ஆர்வம் கண்டு தந்தை சுப்பிரமணியம் பரதம் கற்க ஒப்புதல் அளித்தார். மைலாப்பூரில் வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்க அனுப்பினார்கள். அப்போது அவரது வயது ஆறு.

அந்த நேரத்தில், பரதத்தில் பிரபலமாயிருந்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரிடம் பரதம் பயின்ற முத்திரை மாணவிகள். பத்மா நடனம் கற்றுக்கொண்டபோது, உடனிருந்து உதவியவர் நடிகை ஈ.வி. சரோஜா. நடனத்தில் நடைமுறை இலக்கணங்களை மீறி ஜதிகளின் புதிய விதிகளைக் காற்று வெளியில் எழுதத் தொடங்கியது பத்மாவின் தங்க மலர்ப் பாதங்கள்.

அரங்கேற்றம்!

வழுவூர்ப் பாணி நாட்டியத்தில் அழகுச்சுவை அதிகம். லயசுத்தம், அங்க சுத்தம் ஆகியவற்றில்தான் அதிகப்படி கவனம் இருக்கும். அழகுப் பெண்ணான இவருக்கு அவை மிக எளிதாகக் கைவந்தன.

பதினொரு வயதிலேயே அரங்கேற்றம்_மைலாப்பூர் ஆர்.ஆர். சபாவில். எப்போதும், அரங்கேற்றத்தின்போது புதிதாக சலங்கை கட்டிக் கொள்ளமாட்டார்கள். ராசியான ஒருவரின் சலங்கையைக் கட்டிக் கொண்டு மேடையேறுவதுதான் அன்றைய மரபு. இவர் அணிந்து ஆடியது நாட்டியப் பேரொளி பத்மினியின் காற்சலங்கைகளை.

மேடையின் முன் வரிசையில் நடிகர் திலகம், ராஜரத்னம் பிள்ளை, எஸ்.வி. சகஸ்ரநாமம் என்று ஜாம்பவான்களின் ஜமா. அனைவரின் பார்வைகளும் பத்மாவின் மீதே. ஆடத் தொடங்கினார் பத்மா. நடனம் கண்டு மெய் சிலிர்த்தனர் பார்வையாளர்கள். பாராட்டு மழை குவிந்தது.

பி.யூசி. படித்து முடித்ததும் பத்மாவுக்கு டாக்டருக்குப் படிக்க ஆசை. ஆனால், அப்பாவுக்கோ மகள் பெரிய நடனக் கலைஞராக வேண்டும் என்று விருப்பம். அப்போது, கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் பத்மாவிடம், ‘டாக்டர்கள் பலபேர் கிடைக்கலாம். ஆனால், உன்னை மாதிரி டான்ஸர் கிடைக்க மாட்டா. டாக்டர் படிப்பு வேணாம்..’ என்று கூற, அவரது பதிலில் நியாயம் இருந்ததால், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பு. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பிரபல நடனக் கலைஞராகப் புகழ் பெற்றிருந்தார் பத்மா.

ரசவாதம்!

கல்லூரியில் படிப்பு; வீட்டில் நடனம். இரண்டிலுமே பத்மா சிறந்தார். நாட்டிய உடையணிந்து பத்மா மேடையேறினால், ஆண்டாள் மீண்டும் பிறந்து வந்தாளா என்று வியக்க வைக்கும். நவரச முத்திரைகள் ஒரு ரசவாதம் போல், அவரது முகங்களில் மாறி மாறி உணர்வுகள் ஆட்டம் போடும். ஜதிக்கு இவர் ஆட்டமா? அல்லது இவரது ஆட்டத்துக்கு ஜதியா என்று தீர்மானிக்க முடியாத நுணுக்கப் பிறழ்வுகள் இல்லாத இயைந்த நடனம் இவருடையது.

பத்மா கல்லூரி படித்துக்கொண்டிருந்த பருவம். இந்திய எல்லை லடாக்கில் போர்வீரர்களுக்காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி. அங்கு பனி அதிகம். ஆக்ஸிஜன் அளவு 40 சதவிகிதம் இங்கிருப்பதைவிட குறைவு. அங்கு போய் சூழ்நிலையைப் பழகிக் கொள்ளவே ஐந்து நாட்கள் ஆனது. கொஞ்சநேரம் ஆடினாலே மூச்சு வாங்கியது. ஒரு வழியாக வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திவிட்டுத் திரும்பினார் பத்மா.

‘எவ்வளவோ தடவை வெளிநாடுகளுக்குப் போய் ஆடியிருக்கேன். ஆனால், தாய்நாட்டு எல்லையில் ஆடியது மறக்க முடியாத அனுபவம்’ என்கிறார் பத்மா.

அண்ணன்!

உலகின் பல்வேறு நாடுகளின் மேடைகளை பத்மாவின் சலங்கைகள் அதிர வைத்திருக்கின்றன. நடனத்தில் புதுமை விரும்பியான இவர், ரஷ்ய மியூசிக் கம்போஸர் ஒருவரின் இசைத்தொகுப்பில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி, ராமாயண ஜடாயு மோட்சத்தை ரஷ்யாவில் நடத்திக் காட்டியபோது, நடனப் பிரியர்கள் ஆனந்த உச்சமெய்தினர். இது ஓர் உதாரணம்தான். பத்மாவின் சாதனைப் பேரேட்டில் இதுபோல் புதுமைகள் ஏராளம் … ஏராளம்!

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் கால நீட்டம் கொண்டது பத்மாவின் சலங்கை ஒலி. நடனத்தையே உயிர் மூச்சாகவும், உணர்வாகவும் கொண்டதால், திருமணத்தைப் பற்றி நினைக்கவே அவருக்கு நேரமிருந்திருக்காது போலும். பத்மா இப்போது இருப்பது தனது அண்ணன் பாலகிருஷ்ணன் வீட்டில். இன்னொரு தாயாக இருந்து பத்மாவைக் கவனித்துக்கொண்டவர் அண்ணி சியாமளா. ‘இவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா, நான் சாதிச்சிருக்க முடியாது’ என்று பெருமைப்படுகிறார் பத்மா. அண்ணி சியாமளா மறைந்தபோது, ஆறாத் துயரில் வீழ்ந்தார் பத்மா.

நடிப்பு!

எம்.ஜி.ஆர். உட்பட பல முன்னணி நடிகர்கள் இவரைக் கதாநாயகியாக நடிக்க அழைத்த போதும் மறுத்தார். அவரது முழுக் கவனமும் நடனக்கலையின் மீதே பதிந்திருந்தது. ஓயாத நடனம், அப்பா ஆரம்பித்த நிருத்யோதயா நடனப் பள்ளியை அண்ணன் பாலகிருஷ்ணனுடன் இருந்து கவனித்துக்கொள்ளுதல் என்று கடிகார முட்களைப்போல் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பத்மாவின் வாழ்க்கை.

கண்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி பத்மாவுக்கு சலங்கை. நாட்டியத் தாரகை, பாடகி, இசையமைப்பாளர், ஆராய்ச்சியாளர், நடனகுரு என்று பன்முகத் தன்மை கொண்டது பத்மாவின் சாதனைச் சங்கிலி. பத்மஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத நாடக அகாதமி விருது உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் இந்த நடனத் தாரகையால் பெருமை கொண்டன.

‘‘என்னோட அப்பா காலமானபோது, இந்தக் கலையை வசதியற்ற ஏழைகளுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கணும்னார். அதைத்தான் நான் பண்ணிக்கிட்டிருக்கேன்’ என்று கூறுகிறார் பத்மா.

பரத முனிவர் இன்றிருந்தால் பத்மாவை நினைத்துப் பெருமைப்பட்டிருப்பார்; ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்.

_பெ. கருணாகரன்

Posted in Biography, Biosketch, dancer, Kumudam, Padma Subramaniam, Padma Subramaniyam, people, profile, Tamil | Leave a Comment »

Harish Raghavendra – Kumudam Coverage of his Marriage Life

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

பேட்டி : சந்துரு

மனைவியிடம் வரதட்சணை கேட்டுக் கொடுமை; இன்னொரு பெண்ணுடன் தொடர்பு என்றெல்லாம் மனைவி உமாதேவியின் அதிரடிப் புகார்களால், ஆறாத துன்பத்திலிருக்கிறார் பின்னணிப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா.

‘‘கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’’ என்று பாடியவர், இன்று வாழ்க்கையின் போக்குப் புரியாமல் கோர்ட் படிகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்.

என்னதான் பிரச்னை? ஹரீஷ் ராகவேந்திராவிடம் கேட்டோம்.

‘மலேசியா _ கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பாட நான் போயிருந்த போதுதான், உமாதேவியைச் சந்தித்தேன். நான் இங்கு வந்த பிறகும் போனிலும் ஈ_மெயிலிலும் பேசிக்கொள்வோம். உமாதேவி அங்குள்ள ஒரு கம்பெனியில் உயர் பதவியில் இருந்ததால், கம்பெனி புராஜெக்ட் ஒர்க்கிற்காக சென்னை வரும்போது, என் வீட்டிற்குக் கூட்டிப் போயிருக்கேன். மலேசியா போனால் நானும் அவர் வீட்டிற்குப் போவேன். இப்படியாக வளர்ந்த எங்கள் காதல் திருமணத்தில் வந்து நின்றது.

2003 ஆகஸ்ட் 20_ம் தேதி எங்களுக்கு அண்ணாநகரிலுள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. வடபழனியிலுள்ள ஒரு ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்து, அவர் ஆசைப்படியே தனிக்குடித்தனம் போனோம்.

மலேசியாவில் அவங்க வீட்டு கலாசாரம் எப்படின்னா மூன்று வேளையும் ஹோட்டலுக்குப் போய்விடுவார்கள். இதனால் நான் சமைக்கச் சொன்னால், வேண்டா வெறுப்பாகச் செய்வார். சம்பாதிப்பது போதும், வீட்டைப் பார்த்துக்கொள் என்று நான் எவ்வளவோ சொல்லியும், ‘வேலைக்குப் போயே தீருவேன்’ என்று பிடிவாதமாக இருந்தார்.

நான் ரெக்கார்டிங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால், வீடே அலங்கோலமாக இருக்கும். இரண்டு நாள் முன்பு குடித்த காபி கப் ஈ மொய்த்துக் கொண்டு அங்கேயே இருக்கும். அதை எடுத்துக் கழுவிப் போடமாட்டார். அது பற்றிக் கேட்டால், உடனே காச்மூச்னு சத்தம் போட்டுக் குதிப்பார். ‘எனக்கு இங்குள்ள சட்டம் தெரியும். நீங்க வரதட்சணை கேட்டு என்னை டார்ச்சர் பண்றீங்கன்னு, போலீஸ்லே புகார் செய்துவிடுவேன்’னு மிரட்டுவார்.

உமாவின் இன்னொரு மோசமான குணம் _ சந்தேகம். எனக்கு ரசிகைகள் யாராவது செல்போனில் மெஸேஜ் அனுப்பினால் போதும். உடனே என் போனை வாங்கி, ‘யார் இவள்? எதுக்காக உங்களுக்கு அனுப்பணும். நீங்க எதுக்குப் பதில் மெஸேஜ் அனுப்பறீங்க’ என்றெல்லாம் கேட்பார். இதுவரை, அவரது செல்போனை வாங்கி என்ன மெஸேஜ் வந்திருக்கு, யார் அனுப்பியிருக்கான்னு நான் பார்த்ததேயில்லை. காரணம், எனக்கு அவர் மேலே நம்பிக்கை இருந்தது. அவருக்குத்தான் என் மேலே நம்பிக்கை இல்லை.

உமா பிரசவத்திற்காக மலேசியா போனபிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது. என்னை, ‘நீங்கள் மலேசியாவிற்கு வந்துடுங்க. இங்கே ஏதாவது வேலை பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஓயாமல் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தார். நான் அதற்கு, ‘பாட நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லா மியூசிக் டைரக்டர்களும் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருக்காங்க. மலேசியாவில் மியூசிக் இன்டஸ்ட்ரி கிடையாது. நான் அங்கு வந்து நைட் கிளப்பிலா பாட முடியும்? அதனால், அங்கு வருவது, என்னோட கேரியருக்குச் சரிப்பட்டு வராது’ என்றேன்.

உமாவுக்குக் குழந்தை பிறந்த பிறகு, தொடர்ந்து என்னை மலேசியா வரச்சொல்லி வற்புறுத்திக்கிட்டே இருந்தார். நான் ஒரு கட்டத்தில், ‘வர முடியாது’ என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.

நான் மறுத்து விட்டேனே என்ற ஆத்திரத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக , சென்னை ஹைகோர்ட்டில் வழக்குப் போட்டார். என்னுடைய நல்ல நேரம், எங்கள் திருமணத்தை விருகம்பாக்கம் ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்து இருந்தோம். அப்போ… அவரே ‘வரதட்சணை கொடுக்கவுமில்லை; வாங்கவுமில்லை’ என்று அதிகாரிகள் முன்பு கையெழுத்துப் போட்டிருந்தார். அதை வைத்து நான் கோர்ட்டில் மனு போட்டதும், உமா போட்ட மனு தள்ளுபடி ஆகிவிட்டது. எப்போது என் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்குப் போட்டு என்னை ஜெயிலில் தள்ள நினைத்தாரோ, அப்போதே அவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பிரியமும் அடியோடு போய்விட்டது. உடனே நான் டைவர்ஸ் கேட்டு மனு போட்டேன்.

அதன்பிறகு, எங்களுக்குள் எந்தத் தொடர்புமில்லாத நிலையில், இப்போது சமீபத்தில் சென்னை வந்தபோது, மீண்டும் நான் வரதட்சணை கேட்டதாகவும், என் அம்மா அப்பா அடித்துத் துன்புறுத்தினார்கள் என்றும் போலீஸில் மறுபடியும் புகார். இது தவிர, கல்யாணத்திற்குப் பதினைந்து லட்சம் அவர்கள் செலவு செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். திருமணம் நடந்தபோது, செலவில் பாதியை நானும் செய்துள்ளேன் என்பது தான் நிஜம். எங்கள் வக்கீலை அழைத்துச் சென்று போலீஸிடம், ஏற்கெனவே இது கோர்ட் தள்ளுபடி செய்த புகார் என்பதை எடுத்துச் சொன்ன பிறகுதான், அந்தப் பெண் தங்களை ஏமாற்றிவிட்ட விஷயம் போலீஸாருக்கு புரிந்தது.

இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். என் அம்மாவும் அப்பாவும் அடித்தார்கள், உதைத்தார்கள் என்று அவர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறாரே… அதில் ஒரு துளியும் உண்மையல்ல. உமா மீது என் அம்மாவுக்குக் கொள்ளைப்பிரியம். சாலிக்கிராமத்திலுள்ள என் வீட்டில் ஓர் ஊஞ்சல் உண்டு. அதில் உமா உட்கார்ந்து ஆடுவார். ஒரு குழந்தைக்குச் சோறு ஊட்டுவது போலவே, கையில் சோற்றுக் கிண்ணத்தை வைத்துக் கொண்டு ஆடும் ஊஞ்சலின் பின்னேயே ஓடி ஓடி உமாவுக்குச் சோறு ஊட்டுவார், என் அம்மா.

ஒரு முறை உமா மசக்கை வாந்தி எடுத்தபோது, அதைக் கைகளில் ஏந்தியவர் என் அப்பா. என்னைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவர்களையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்வது என்ன நியாயம்?

குழந்தை பிறந்து ஒன்றே முக்கால் வருடமாகப் போகிறது. நானாவது என் மகனை ஒரே ஒரு தடவைப் பார்த்திருக்கிறேன். என் பெற்றோர் அந்தக் குழந்தையைப் பார்த்ததே இல்லை. கருப்பா, சிவப்பா என்றுகூடத் தெரியாது.

என்னைப் பழிவாங்கும் நோக்கத்துக்காக இந்தியாவிற்கு வரும் போதெல்லாம், புதுப்புது புகாரைக் கொடுக்கிறார். தேவையில்லாமல் எங்கள் குடும்ப நண்பரான பிரதிபா ஹரியை, என்னுடன் தொடர்புபடுத்தி சமீபத்தில் புகார் கொடுத்திருக்கிறார். பிரதிபா ரொம்ப ரொம்ப நல்ல பெண். என்னை ஃபாரின் சேனல் ஒன்றிற்குப் பேட்டி எடுத்திருக்கிறார். அவர் ஏற்பாடு செய்த மேடைக் கச்சேரியில் பாடியிருக்கிறேன்.

அடுத்த மாதம் அந்தப் பெண்ணிற்குத் திருமணம். பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்ததும் குடும்பத்தோடு வந்து எங்களிடம் ரொம்ப வருத்தப்பட்டார்’’ என்று கூறும் ஹரீஷ் தொடர்ந்து, ‘‘செப்டம்பர் 11ஆம் தேதி எங்களுக்கு விவாகரத்து கிடைக்குமென்ற சூழ்நிலையில், இப்படி உமாவைத் தூண்டிவிட்டு மீண்டும் மீண்டும் எனக்கு டார்ச்சர் கொடுக்க வேண்டுமென்று யோசனை சொல்வது அவருடைய அக்காதான்.

உமா எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி, ‘உன் வாழ்க்கையைக் கெடுத்து உன்னை நடுத்தெருவில் நிற்க வைக்கிறேன் பார்’ என்று சவால்விட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் செயலை நினைத்து சிரிப்புதான் வருகிறது’’ _ வேதனையுடன் சிரிக்கிறார் ஹரீஷ் ராகவேந்திரா.

ஹரீஷ் ராகவேந்திராவின் குற்றச்சாட்டுகள் குறித்து உமாதேவி என்ன சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள அவரைத் தொடர்பு கொள்ள முயன்றோம். இதுவரை அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. றீ

பேட்டி : சந்துரு

Posted in Tamil | 35 Comments »

Ponvandu – Meendum Thoondil Kathaigal : Sujatha

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

காலையிலேயே நந்திதாவை மேரி குளிப்பாட்டி பவுடர் அப்பி கூந்தலை இரட்டைப் பின்னி வாசனையாக அழைத்து வர பைஜாமாவும் சண்டே ஹிண்டு வுமாக ராஜேஷ் ‘‘கன்னுக்குட்டி சக்கரக்கட்டி நந்தும்மா’’ என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

‘‘என்னப்பா இப்பதான் குளிச் சேன். எச்சப் பண்ணிட்ட’’ என்ற அதட்டலில், கொஞ்சம் சங்கீதாவின் தோரணை தெரிய திடுக்கிட்டான்.

அவன் பாசாங்காக முகத்தைச் சுளித்துக் கொள்ள ‘போனாப் போறது’ என்று குழந்தை மறு முத்தம் கொடுத்தது. ஐந்து வயசுக்கு என்ன சாமர்த்தியம். தாயில்லாத வாழ்க்கைக்கு இப்போதே செய்து கொள்ளும் ஏற்பாடா? என்ன பேச்சு பேசுகிறாள். இவளை விட்டுவிட்டு நான் எப்படி வாழப் போகிறேன்? என்ன நியதி இது? தாய் இறந்தபின் பெண் குழந்தை தந்தையிடம் வாழக்கூடாதா?

‘‘காலைலயே எல்லாத்தையும் எடுத்து வெச்சிக்கிட்டாங்க’’ என்றாள் மேரி.

‘‘காட்டு?’’

தரையில் வைத்து சிறிய அலுமினிய பெட்டியைத் திறக்க நந்திதாவின் சகல உடமைகளும் அதில் இருந்தன. கலர் பாக்ஸ், நூல் பந்து, ஐந்து வித கைகுட்டைகள், ஹேர்பின், ப்ருச், ப்ளாஸ்டிக் வளையல், பீச்சில் வாங்கின இருட்டில் ஜொலிக்கும் பம்பரம், ஜிலுஜிலு கண்ணாடி நகை, குட்டி டயரி, தீப்பெட்டி!

‘‘இது எதுக்கு கண்ணு?’’

‘‘இதுக்குள்ள தங்கராசு இருக்கான்.’’

‘‘பொன்வண்டுங்க… வெளிய விட்டுரும்மா. மூச்சுவிட முடியாம செத்துப்போய்டும் கண்ணு.’’

‘‘திறந்தேன், போகமாட்டங்கறது.’’

இந்நேரம் செத்திருக்கலாம்.அதை ஏன் சொல்லவேண்டும்? அழ ஆரம்பித்து விடுவாள் ராகம் போட்டு. அற்ப காரணத்துக்கெல்லாம் அரைமணியாவது அழுவாள்.

டாக்டர் சாந்தா சொன்னபடி ‘தாய்க்கு ஏங்கிருக்கு. அதான் காரண மில்லாம அழுது.’

‘‘என்ன செய்யணும் டாக்டர்?’’

‘‘உங்க மனைவிக்கு தங்கச்சி இருக்காங்களா?’’

‘‘வினோதா.’’

‘‘அவங்க மாதிரி இருப்பாங் களா?’’

‘‘ஆமாம். ரெண்டு குழந்தைங்க இருக்கு.’’

‘‘அவங்க ஹஸ்பண்டு.’’

‘‘இந்திக்காரர், ராஜஸ்தான்.’’

‘‘ஓ! கேட்டுப் பாருங்களேன்.’’

‘‘நான்கூட யோசிச்சேன்.’’

‘‘அவங்க புருசன் ஒப்புத்துப் பாரா?’’

‘‘அவர் ஒண்ணும் சொல்லமாட்டார். ஜாலி யான டைப். கொஞ்சம் பாஷை ப்ரச்னை. அவ்வளவு தான்.’’

‘‘யோசிக்காதிங்க. தாய் இறந்துபோன மனநிலையில் ஒரு தாய்போல ஒரு பதில் பிம்பம் இவளுக்குத் தேவைப்படுது. குழந்தைக்கு இதுதான் நல்லது. கஸின்ஸ் கூட கலகலப்பா இருக்கறதும் மறக்கறதுக்கு உதவும்.’’

நந்திதா சமர்த்தாக டி.வி.யில் ‘போகோ’ பார்த் துக் கொண்டிருந்தாள்.

அவள் பெட்டியில் மேலாக இருந்த பொம்மை புத்தகத்தில் சங்கீதாவின் கன்னத்தோடு ஒட்டியபடி போட்டோ இருந்தது. கண்ணீரைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு ‘‘இது எப்ப எடுத்தது?’’ என்றான்.

‘‘நீதாம்பா. டிஸிவேர்ல்டு போயி ருந்தமே. நான்கூட ஷர்ட்ல வாந்தியெடுத்திட்டேனே. நீகூட கோவிச்சுண்டியே.’’

‘‘இத்தனை விவரங்கள் வேண்டாம்டா கண்ணு. வெரிகுட் எல்லாம் ரெடியாக்கும். அப்பாவை விட்டுட்டுப் போகப் போறியாக்கும். வினோதா சித்தி வந்துண்டே இருக்கா.’’

‘‘அய்யா!’’

‘‘என்ன மேரி?’’

‘‘நந்துக் கண்ணுவை நீங்களே வெச்சுக்கலாமே, தினம் குளிப்பாட் டிர்றேன். சட்டைகவுனு போட்டு ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்து ஸ்கூல்ல கொண்டு விட்ருவேன். சாயங்காலம் நீங்க வர்றவரைக்கும் பாத்துக்கறேன்!’’

‘‘இல்லை மேரி. வினோதாம்மா கிட்ட இருக்கறதுதான் இப்போதைக்கு சரியான முடிவு. அவங்க வீட்டில நிறைய கஸின்ஸ் இருக்காங்க. அவங்ககூட இருந்தாத்தான் மெல்ல மறப்பாங்க.’’

‘‘மறக்கணுங்கறிங்களாய்யா?’’

அவன் சற்று திகைத்தான்.

‘‘அவங்க நல்லா பாத்துப்பாங்க. படிக்க வெப்பாங்க. அதான் எதிர் காலத்துக்கு நல்லது. பொம்பளைப் பிள்ளையில்லையா? ஏன் உங்கிட்ட ஏதாவது சொல்லித்தா?’’

‘‘இல்லைங்க ஆனா முகம் வாடியிருக்குதுங்க. பாப்பா முன்ன மாதிரி இல்லை. உங்க மேல ரொம்ப உசிரு, ஒட்டுதல்ங்க.’’

‘‘அடிக்கடி போய் பார்த்துக்கப் போறேனே. இதபாரு… ஏற்பாடெல் லாம் செய்தாச்சு. டி.சி. வாங்கி ஸ்கூல் மாத்தியாச்சு. இப்ப என்னைப் போட்டுக் குழப்பாதே. எதுக்கு நீ அழுவறே?’’

ஸ் ஸ் ஸ்

வாசலில் கார் வந்து நிற்க, வினோதாவும் குழந்தைகளும் உள்ளே ஓடிவந்து நந்திதாவை அணைத்துக் கொள்ள ‘‘நந்து நீ என் ரூம்லதானே படுத்துக்கப் போறே?’’

‘‘இல்லை என் ரூம்ல. அவ கர்ள்.’’

‘‘மாத்தி மாத்தி படுத்துப்பா.’’

வினோதா நந்திதாவின் நெற்றியில் படிந்த கீற்றைப் பரிவுடன் தள்ளியபடி ‘‘என்ன மேரி எல்லாம் ரெடியா?’’ என்றாள்.

‘‘உங்க வூட்டுக்காரரு வரலிங் களா?’’

‘‘கார்ல இருக்கார்.’’

‘‘காலைலிருந்தே ரெடிம்மா.’’

வினோதா அவனைக் கண்ணுக்குக் கண் பார்த்தாள். ராஜேஷ் அவள் பார்வையைத் தவிர்த்தான்.

‘‘ப்ரகாஷை உள்ள கூப்பிடேன்.’’

‘‘அது அங்கயே இருக் கட்டும். செல்போன் பேசி முடிக்கலை இன்னும். கவலைப்படாதீங்க. எல்லாருக்கும் இதுதான் நல்லது அத்திம்பேர்!’’

‘‘உங்களுக்குத்தான் நல்லது நடக்கணும்னு அம்மா சொன்னா… சீக்ரமா…’’

‘‘அந்தப் பேச்சே இல்லைன்னு சொல்லு.’’

‘‘எத்தனை நாள் தனியா இருப்பீங்க அத்திம்பேர்?’’

‘‘அந்தக் கவலையை நீங்க படவேண்டாம்.’’

‘‘உங்களுக்கு இருக்கற அந்தஸ்துக்கு தயக்கமில்லாம குடுப்பா. அப்பவே பலபேர் விசாரிச்சிண்டிருந்தா.’’

‘‘நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா? சம்மதிக்கறேன்.’’

‘‘எனக்குக் கல்யாணம் ஆய்டுத்தே. கொஞ்சம் லேட்டு அத்திம்பேர்.’’

‘‘ப்ரகாஷ்ட்ட கேட்டுப் பாக்கறேன்’’ என்று கண் சிமிட்டினான்.

‘‘கேட்டா ‘லே ஜாவோ’ன்னுடுவார்’’ என்று சிரித்தாள்.

இரண்டு பேருக்கும் ஒரே குரல். ஒரே முகஜாடை. ஒரே வாசனை! நந்து சீக்கிரம் பழகிவிடுவாள்.

‘‘சித்தி! நீ அம்மா மாதிரியே இருக்கே!’’

‘‘அம்மாதாண்டி நான். சித்தினு கூப்டாதே. இவங்க மாதிரி ‘வின்னு’ன்னு கூப்பிடு.’’

‘‘பேர் சொல்லியா?’’

‘‘அதான் எனக்குப் பிடிக்கும்.’’

‘‘வின்னு!’’

‘‘என் செல்லமே!’’

‘‘நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. இதோ இரண்டு நாள்ள பழகிடுவா. பாரு மூக்கு ஒழுகறது பாரு’’ என்று டிஷ்யுவால் அவள் மூக்கைத் துடைத்து விட்டாள்.

‘‘போலாமா?’’

சோபாவில் உட்கார்ந்து நந்திதாவை மடிமேல் வைத்துக் கொண்டு மெல்லப் பேசினான். ‘‘நந்து நீ வின்னு சித்தியோட இருக்கறது உன் நல்லதுக்குத்தான். அம்மாவும் சந்தோஷப்படுவா.’’

‘‘அம்மாதான் செத்துப் போய்ட் டாளே!’’

‘‘பெருமாள்ட்ட போய்ட்டா’’

‘‘திட்டினியாப்பா?’’

‘‘இல்லைமா திட்டலை.’’

‘‘ரகுவை கிள்ளாம இருக்கச் சொல்லு.’’

‘‘சேச்சே! நான் அந்த வழக்கத்தை எப்பவோ நிறுத்திட்டேன் பெரியப்பா.’’

புறப்படும்போது நந்திதா ஒரு முறை திரும்ப அவனருகில் வந்து, ‘‘அப்பா நான் இங்கயே இருக்கேனே’’ என்றாள்.

கண்ணீரை அடக்கிக்கொண்டு ‘‘நீ எங்கயும் போகலைமா. தினம் வந்து உன்னைப் பார்ப்பேன்.’’

‘‘பெங்களுர்க்கா…? பொய்!’’

‘‘தினம் போன்ல பேசுவேன். ஏய் யாராவது ஏதாவது எங்க நந்திதாவைச் சொன்னா உடனே எனக்கு போன் பண்ணிடுவா. அடுத்த நிமிஷம் ஏரோப்ளேன்ல வந்து…’’

‘‘போப்பா பொய்ப்பா.’’

வினோதாவின் கணவன் ஆரனை பொறுமையில்லாமல் அழுத்த ‘‘கமிங் கமிங்’’ என்று கூவினாள்.

வினோதாவுடன் வாசலுக்கு வந்தான்.

‘‘ஹாய் ப்ரகாஷ்!’’

இவனைப் பார்த்து ‘‘ஹாய் பார்ட்னர் சப்குச் டீக் டாக்’’ என்று காரில் இருந்தபடியே கையசைத்தான். செல்போனில் பேசிக் கொண்டிருந்தான் ப்ரகாஷ். ‘‘கமான் டியர் லேடி’’ என்று நந்திதாவை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான். ‘‘வின் வின், நாட் டு வொர்ரி… நாட் டு வொர்ரி.. எவ்ரிதிங் ஃபைன்’’ என்றான்.

‘‘இன்னிக்கே பங்களுரா? மெல்ல ஓட்டச் சொல்லு.’’

கார் புறப்பட்டது.

‘‘அத்திம்பேர் வரேன். வா நந்து எதாவது வேணும்னா…’’ என்று பாதியில் நிறுத்தினாள்.

ஸ் ஸ் ஸ்

அவர்கள் போனதும் ப்ரேமலதா வந்தாள். வந்த உடன் இரைந்துகிடந்த செய்தித்தாள்களையும் பத்திரிகைகளை யும் அடுக்கி வைத்தாள். கூடத்தைப் பெருக்கினாள், திண்டுகளைத் தட்டிப் போட்டாள்.

‘‘இதெல்லாம் எதுக்கு ப்ரேம்? மேரி வருவா.’’

கிச்சனுக்குச் சென்று காபி போட்டுக் கொண்டு வந்தாள்.

‘‘ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிங்க.’’

‘‘நான் செய்தது சரியா ப்ரேம்?’’

‘‘நிச்சயம். குழந்தைக்கு நல்லதுதான் செய்திருக்கீங்க.’’

‘‘போறப்ப என்னைத் திரும்பிக்கூட பார்க்கலை ப்ரேம்.’’

‘‘கமான்! ஆண்பிள்ளை அழக் கூடாது.’’

அவன் கன்னத்தில் உருண்ட கண்ணீரைத் தன் துப்பட்டாவால் துடைத்துவிட்டாள். ‘‘பிட்ஸா எதாவது ஆர்டர் பண்ணட்டுமா? உங்களுக்குப் பிடிக்குமே.’’

‘‘ஒண்ணும் வேண்டாம்.’’

‘‘ஆர் யு ஓகே. உடம்பு சரியில்லையா?’’ நெற்றியில் தொட்டுப் பார்த்தாள்.

‘‘ஒரு பாராஸிட்டமால் போட்டுக்கறீங்களா? எங்கருக்கு?’’

‘‘காலைலருந்து சஞ்சலம். கொஞ்ச நேரம் தூங்கினா சரியாய்டும்.’’

‘‘சரி பெட்ரூம்ல போய் படுத்துக்கங்க. டின்னர் ரெடி பண்றேன்’’

‘‘வேண்டாம் ப்ரேம். எனக்கு சாப்படற மூடு இல்லை.’’

‘‘ராத்திரி தனியா இருப்பிங்களா? கலீக்ஸ் யாராவது வந்து படுத்துக்க சொல்லிருங்கீங்களா?’’

‘‘தேவையில்லை.’’

‘‘ஐ கேன் ஸ்டே. உங்களை தனியா விட்டுட்டுப் போறதுக்கு எனக்கு பயமா இருக்கு. சங்கீதாவைப் பத்திப் பேச விரும்பறீங்களா?’’

‘‘இல்லை. மறக்க விரும்பறேன் முடியலை.’’

‘‘லைஃப் கோஸ் ஆன்.’’

‘‘ஆமாம்.’’

‘‘எப்ப முதல்ல சந்திச்சீங்க?’’

‘‘ஆகஸ்ட் 98, எட்டே வருஷம்.’’

‘‘அநியாயம்’’ என்றாள். தன்னை விடுவித்துக் கொண்டு புறப்பட்டாள்.

ஸ் ஸ் ஸ்

போகும்போது குழந்தைகள் ஐஸ்க்ரீமுக்குப் பிடிவாதம் பிடித்தன. வினோதா வழியில் ஒரு கடையில் நிறுத்தச் சொன்னாள்.

நந்திதாவை ‘‘வா கண்ணு ஐஸ்க்ரீம் சாப்டலாமா?’’

நந்திதா தலையை ஆட்டி ‘‘வேண்டாம்’’ என்றாள்.

‘‘ப்ரகாஷ் பாத்துக்க. இந்தப் பிசாசுங்களுக்கு ஐஸ்க்ரீம் கப்பம் கட்டியாகணும். இதோ வந்துர்றன்’’ என்று தன் குழந்தைகளுடன் இறங்கிச் சென்றாள்.

‘‘வின், அப்படியே எனக்கு ஒரு பிஸ்தா கப்பு’’ என்றான் ப்ரகாஷ்.

அவர்கள் ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் கோனை நாக்கால் தடவிக்கொண்டு திரும்பி வந்தபோது, நந்திதா காரில் இல்லை.

ஸ் ஸ் ஸ்

‘‘நல்லா பாடுவா, அபசுரம் இல்லாம பாடுவா… சமைப்பா… எல்லாத்துக்கும் புன்னகை. திட்டினா கூட புன்னகை. யாரோடயும் சண்டை போடாம என்ன குடும்பம்? என்ன ஃபேமிலி? சே! எங்கிட்ட கடவுள் சொல்லியிருக்கலாம். எட்டு வருஷம்தாண்டா இந்த தேவதைன்னு… நாடு நகர மெல்லாம் சுத்தாம இன்னும் கொஞ்சம் அதிக நேரம் வீட்ல இருந்திருப்பேன்.’’ நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.

‘‘ஆர் யு ஆல் ரைட்?’’ அவள் தோளில் சாய்ந்து கொண்டான். ப்ரேமா அவன் தலையை நிமிர்த்தி ஆழ்ந்து பார்த்தாள். ‘‘ப்ரேம் என்னைக் கல் யாணம் பண்ணிப்பியா?’’ அவள் தலையை அசைத்து ‘‘நாளைக்குக் காலைல இதே கேள்வி இருக்கான்னு பார்க்க லாம் ராஜேஷ்.’’ ‘‘உன் கூட வரலை?’’ என்றான் ப்ரகாஷ்.

‘‘நாசமாப் போச்சு. உன்னை ஒரு நிமிஷம் பாத்துக்கச் சொன்னா இப்டி கோட்டை விட்டுட்டியே… இப்ப எங்க போய்த் தேடுவேன்? அத்திம்பேருக்கு என்ன பதில் சொல்வேன்? பாழாப் போற செல்ஃபோனை காதை விட்டுப் பிடுங்கு முதல்ல.’’

திகைத்துபோய் ‘‘நந்திதா நந்து..’’ என்று இங்குமங்கும் தேடினாள்.

ப்ரேமா புறப்படும்போது, ராஜேஷ் கூடவே சென்று அவளை அப்படியே அணைத்துக் கொண்டு, திரும்ப அழைத்துவந்து விளக்கை அணைத்து அவளைப் படுக்கையில் வீழ்த்தினான்.

¬¬¬

ப்ரகாஷ் ‘நாட் டு வொர்ரி. அந்தப் பொண்ணு ஒரு மாதிரி மோரோஸா இருந்திச்சு. திரியும் வூட்டுக்குத்தான் போயிருக்கும். கிட்டக்கத்தானே. இந்தா முதல்ல அங்க போன் போடு. டியர்! நாட் டு வொர்ரி… நோ ப்ராப்ளம்.’ என்றான்.

¬¬¬

‘‘ராஜேஷ் ராஜேஷ்! உணர்ச்சிவசப் படாதீங்க.’’

டெலிபோன் மணி அடித்தது.

‘‘போன் போன்’’ என்றாள் மூச்சுத் திணறலிடையே…

‘‘அடிக்கட்டும்’’ என்றான்.

‘‘ப்ளீஸ்! எடுங்க அத்திம்பேர். எடுங்க போனை’’ என்று வினோதா பதறினாள்.

¬¬¬

பிரிவா சோகமா காமமா தன்னிரக்கமா எது அந்தக் கணத்தில் அவனைச் செலுத்தியது என்று தெரியாமல் அவசர அவசரமாக அவளைக் கலைத்தான். பட்டென்று ஸ்விட்ச் தட்டப்பட்டு ஒளிவெள்ளம் பரவியது. ‘‘நந்திதா!?’’ அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

‘‘நந்திதா ‘‘ய்யென்ன?, என்ன வேணும் கண்ணு?’’

‘‘அம்மா போட்டோ.’’

Posted in Kumudam, Sujatha, Tamil, Thoondil Kathaigal | 1 Comment »

Thanga Vettai compere Actress Vijayalakshmi Suicide – Background Details

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

சின்னத்திரை சீரியல் கதையை விட மகா சோகமானது நடிகை விஜயலட்சுமியின் நிஜக் கதை.

ஃபிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகம். அதன் பிறகு ஒரு சில தமிழ்ப் படங்கள். ஆனால், எதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி பேர் கிடைக்கவில்லை.

மீண்டும் கன்னட பட உலகிற்குப் படையெடுத்தார். ஆனால், அங்கும் சினிமா வாய்ப்புகள் இவருக்குச் சரிவர கிடைக்கவில்லை. பிறகு, டி.வி. பக்கம் தாவினார். விதி அங்குதான் விளையாடிவிட்டது.

ரேடான் டி.வி. தயாரிக்கும் ‘தங்க வேட்டை’யின் கன்னட மொழி நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இவர்தான்.

நல்ல உயரம்… சுண்டி இழுக்கும் வடிவம்… முகத்தில் மாறா புன்னகை. கலகலப்பான பேச்சு… இத்தனை இருந்தும், அவரிடம் ஒன்று மட்டும் இல்லை. அது சினிமா உலகின் ‘நெளிவு, சுளிவு’ குணம். திரையுலகில் அட்ஜஸ்ட் என்றொரு வார்த்தை உண்டு. அ ந்த விஷயத்தில்தான் விஜயலட்சுமிக்குப் பிரச்னை. சினிமா உலகில் பிழைக்கத் தெரிந்தவர்களின் தாரக மந்திரமான இந்த விஷயத்தை, அவரால் ஏற்க முடியவில்லை. இதுதான், அவரை தற்கொலைவரை அழைத்துச் சென்றிருக்கிறது.

விஜயலட்சுமி சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பேட்டி எடுக்க முயன்றோம். ஆனால், பலத்த பாதுகாப்பு. டிரிப் கையில் ஏறிக் கொண்டிருக்க, வாடிய கொடிபோல், சுருண்டு படுத்துக் கிடந்தார் விஜயலட்சுமி. முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது.

அவரிடம் இருந்து உண்மையான பிரச்னையை எப்படி தெரிந்துகொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், நமது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தோம். ஒரு நடுத்தர வயதுக்காரர். ‘‘என்ன பிரஸ்ஸா?’’ என்றார்.

‘‘ஆம்’’ என்று தலையசைத்தோம். தன் பின்னால் தொடர்ந்து வரும்படி சைகை காட்டினார். ஆஸ்பத்திரியின் ஒதுக்குப்புறத்திற்குச் சென்றபிறகு, ‘‘நான் விஜயலட்சுமியை நன்கு தெரிந்தவன். நல்ல அருமையான பெண். சினிமாக்களில் நடிக்கும்போது நட்சத்திர ஹோட்டல்களில் தங்கினார். சினிமா வாய்ப்பு குறைந்து டி.வி. சீரியலில் தோன்ற ஆரம்பித்த பிறகு, அவருடைய ஆடம்பர வாழ்க்கை மாறி சாதாரண வீட்டில் குடியிருக்க வேண்டிய நிலை.

அப்பா, அம்மா அவருடனே இருந்தார்கள். சமீபத்தில் அவருடைய அப்பா இறந்துவிட்டார். இப்படி விஜயலட்சுமி வாழ்க்கையில் அடி மேல் அடி விழ ஆரம்பித்து விட்டது. இந்த நேரம் டி.வி. நிகழ்ச்சிதான் அவருக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. அப்போதுதான் ரேடான் நிறுவனத்தின் புரொடக்ஷன் மானேஜர் ரவிராதா மீது விஜயலட்சுமிக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி காதலித்தார்கள். ரவிராதா ராதிகாவுக்கு ஒருவகையில் தம்பி முறை வேண்டும்.

இவர்களுடைய காதல் ராதிகாவிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் ஒரு நாள் இவர்கள் இருவரையும் அழைத்து, ‘‘இங்க பாரும்மா… அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சி, குழந்தையும் இருக்கு… அவரை நம்பி உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதே’ என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறார்.

அதிலிருந்து விஜயலட்சுமிக்கும் ரவிராதாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ரவி ராதாவை விட்டு விஜயலட்சுமி விலகிவிட்டார்.

கடந்த இரண்டு மாதமாக இவர்கள் பேசிக் கொள்ளவில்லை, என்பதைப் புரிந்து கொண்ட, இயக்குநர் ரமேஷ், விஜயலட்சுமிக்குக் காதல் தூதுவிட்டுப் பார்த்தார். நடக்கவில்லை. பின்னர் மிரட்ட ஆரம்பித்து விட்டார். அதுவும் நடக்கவில்லை.

நிகழ்ச்சியை ஷ¨ட் பண்ணும்போது விஜயலட்சுமி நன்றாகத் தொகுத்து வழங்கினாலும் ஒன் மோர் ஷாட் என்பார். இப்படி பல முறை ரீடேக் வாங்குவார். ஒரு முறை 20 தடவைக்கு மேல் ஒரே ஷாட்டை ரீ டேக் வாங்கி டார்ச்சர் பண்ணியிருக்கிறார். கேமிராமேனே நல்லா இருக்குது சார். ஓகே என்றாலும், உன் வேலையைப் பாருடா என்பார்.

அந்த டைரக்டர் வைத்ததுதான் சட்டம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கும் எண்ணற்ற பார்வையாளர்கள் மத்தியில், தான் அவமானப்பட்டதாலும், தன் குடும்ப சூழ்நிலையையும் நினைத்துதான் அந்த அப்பிராணி பெண், தற்கொலைக்கு முயன்று விட்டார். உண்மையைச் சொன்னால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார், பாவம் சார்!’’ என்று கலங்கிய கண்களோடு சொன்னார் அந்த நபர்.

அவர் இப்படி சொன்னதைத் தொடர்ந்து, ராதிகாவிடம் பேச முயற்சித்தோம். முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த டி.வி. நடிகைகளின் தற்கொலை முயற்சிகள் ஒரு மெகா சீரியல் போல தொடர்ந்து கொண்டே போகிறது. எங்கு முற்றுப்புள்ளி விழும் என்றுதான் தெரியவில்லை.

_ திருவேங்கிமலை சரவணன்

Posted in Actress, Backgrounders, Details, Kannada, radaan tv, radan, Radhika, Ramesh, ravi radha, Suicide, Tamil, Thanga Vettai, Vijayalakshmi | 1 Comment »

Kavikko Abdul Rehman – Manpumigu Manithargal

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

_ பெ. கருணாகரன்

மதுரை மண் வீரம் செறிந்தது; அங்குப் பிறந்த சிறுவன் அப்துல்ரகுமானின் மனமோ காதல் கொண்டுஅலைந்தது. அது, தமிழ்க் காதல்! ஆனால், இவரது தாய்மொழியோ உருது.

அப்துல்ரகுமானின் பரம்பரையே கவிதைப் பரம்பரை. இவரது தந்தை சையத் அஹமத். உருதுவில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். தாய் ஜைனப்பேகம். தாத்தா சையத் அஷ்ரஃப் உருது மற்றும் பாரசீக மொழிகளிலும் கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். அந்தக் கவிதை ரத்தம் இவருக்குள்ளும் ஓடியது.

மதுரை _ கீழச்சந்தைப் பேட்டையில் வைகைக் கரையை ஒட்டி வீடு. வற்றிப் போனாலும் வற்றாத ஜீவ கற்பனைகளை இவருக்குள் விதைத்தது. வைகை நதிக்கரையில் நாகரிகம் வளரும்; கவிதை? வளர்ந்தது இவரது மனதில்.

அப்துல் ரகுமானின் வீட்டுக்கு அருகில் ஒரு சேரி உண்டு. குறவன் குறத்தி நடனம் ஆடும் குழு ஒன்று அங்கிருந்தது. அவர்களது நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் போய்விடுவார். நடனத்தைவிட அவர்கள் பாடும் பாடல்களின் மீதுதான் இவரது கவனம். காரணம், அந்தப் பாடல்கள் காவடிச் சிந்து வடிவத்தில் அமைந்தவை. அந்தச் சந்தம், இவர் மனதை மயக்கியது. இலக்கணம் தெரியாத சிறுவயதிலேயே, அதுபோல் எழுத முயன்றார். வெற்றியும் பெற்றார்.

மரபுக் கவிதையில் மகுடம்!

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், கல்லூரி செல்ல இவருக்கு விருப்பமில்லை. தனது சித்தப்பா கடையில் அமர்ந்து வணிகம் செய்து கொண்டிருந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் தமிழை மட்டுமே சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பதையறிந்த அப்துல்ரகுமானுக்குப் பலத்த மகிழ்ச்சி. தமிழ்ப் படிப்பதற்காகவே கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் பயின்ற தமிழ் இலக்கியங்களும், இலக்கணங்களும் அவரது தமிழ்ப் பசியைப் போக்கவில்லை; அதிகரிக்கச் செய்தன.

இங்கு இவர் கற்ற யாப்பருங்கலக் காரிகை, மரபுக் கவிதையில் இவர் மகுடம் சூட்டக் காரணமானது. யாப்பிலக்கணத்தைக் கற்பித்தவர், தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார்.

தமிழில் கம்பனும் கம்பதாசனும் சுரதாவும் இவர் மனம் கவர்ந்த கவிஞர்கள். கம்பனின் கவிதைச் சந்தம். இவர் மனதுடன் சொந்தம் கொண்டாடின. கவிதையின் உட்பொருள் மனதைக் கிறங்கடித்தன. இலக்கணமும் கற்பனையும் சம விகிதத்தில் கலந்திருந்த அந்தக் கவிதைகள் போல், தானும் எழுத ஆரம்பித்தார்.

இடைநிலைப் படிப்பு முடித்து இளங்கலை வகுப்பு. தமிழையே சிறப்புப் பாடமாக எடுத்தார். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழிலக்கியம் தவிர, ஆங்கில இலக்கியத்தின் மீதும் காதல் வந்தது. ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிஞர்களின் கவிதைகள் மனசுக்குப் புதிய ருசியையும் உணர்வையும் ஊட்டின. கற்பனைகளில் புதிய ரசாயன மாற்றமும், அயல் மகரந்தச் சேர்க்கையும் நடந்தது.

கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டிகளில் எப்போதும் இவருக்குதான் முதல் பரிசு. தீவிர மரபுக் கவிஞராக இருந்த அப்துல்ரகுமான், முதுகலை படிக்கும்போது, வசனக் கவிதையின் கவர்ச்சிக்கு ஆளானார். அப்போது, இவர் படித்த நூல்களே இதற்குக் காரணம். பாரசீகக் கவிஞர் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்)யின் கவிதைகளும் இக்பாலின் கவிதைகளும் தாகூர், கலீல் ஜிப்ரான் கவிதைகளும் அவரைப் புது உலகுக்கு அழைத்துச் சென்றன. வசன வடிவில் ஒப்பனைகளற்று இருந்த அவற்றைப் போல அவரும் எழுத ஆரம்பித்தார்.

இந்தச் சூழலில், சர்ரியலிசம் இவரது மனதுக்குள் குடி கொண்டது. சர்ரியலிச அடிப்படையில் சோதனை முயற்சியாகப் பல கவிதைகள் புனைந்தார். இவரது முதல் கவிதைத் தொகுதியான ‘பால்வீதி’யில் இடம் பெற்றிருக்கும் பல கவிதைகள் சர்ரியலி விதையில் எழுந்த மலர்கள். எல்லாமே தமிழுக்குப் புதியவை.

பாசறை!

அந்தக் காலத்தில் மதுரை தியாகராசர் கல்லூரி அரசியல், இலக்கியப் பாசறையாகத் திகழ்ந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மிக முக்கியமானவர்களை உற்பத்தி செய்த இடமும் இந்தக் கல்லூரிதான்.

  • விருதுநகர் பெ.சீனிவாசன்,
  • கா.காளிமுத்து,
  • பழ. நெடுமாறன்,
  • நா.காமராசன்,
  • இன்குலாப்,
  • மீரா,
  • சாலமன் பாப்பையா,
  • ஏ.எஸ்.பிரகாசம் போன்றவர்கள் இவரது கல்லூரி நண்பர்கள்.

முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்தது. இவரது, வகுப்பு என்றால், மாணவர்கள் தவமிருப்பார்கள். சுவையான விஷயங்களைப் புதுப்புது விதமாகக் கூறுவார். ஒரு மணி நேர வகுப்புக்காக நான்கு மணி நேரத்தைக் கூட தயாரிப்புக்காகக் செலவிடுவார். அவரது உழைப்புக்குப் பலனிருந்தது. கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதத்துக்குள்ளேயே’ இவர் புகழ் கல்லூரியிலும் வெளியிலும் பரவலானது.

மற்ற வகுப்புகளில் அட்டகாசம் செய்யும் மாணவர்கள், இவர் வகுப்பில் மகுடி நாகமாய் மயங்கிக் கிடந்தார்கள். மற்ற வகுப்பு மாணவர்களும் இவர் பாடம் நடத்தும்போது, வந்து அமர ஆரம்பித்தனர். பிறகு, பேராசிரியர்களே கூட வரத் தொடங்கினார்கள்.

கலைஞரும் கவிஞரும்

கலைஞர் மீது இவருக்குத் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் உண்டு. மதுரை எழுத்தாளர் மன்றம் 11.6.1967_ல் ஒரு கவியரங்கம் நடத்தியது. வகுத்தல் என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் அதில் கவிதை பாடினார். விழாவுக்குச் சிறப்புரையாற்ற வந்த கலைஞர், அப்துல்ரகுமானை அருகில் அழைத்துக் கவிதையைப் பாராட்டினார். இது நடந்து சில மாதங்கள் கழித்து சென்னையில் நடந்த அண்ணா கவியரங்கில் அப்துல்ரகுமானும் கலந்துகொள்ள வேண்டுமென்று கலைஞர் அழைப்பு விடுத்தார்.

அந்தக் கவியரங்கில் அப்துல்ரகுமானின் கவிதைக்கு நல்ல வரவேற்பு. அதன்பிறகு நடந்த ஒவ்வொரு அண்ணா கவியரங்கமும் அப்துல்ரகுமான் இல்லாமல் நடந்ததில்லை. தன் தலைமையில் நடக்கும் கவியரங்கம் எதிலும் அப்துல்ரகுமானை தவிர்க்க மாட்டார் கலைஞர். அவரே ஒரு மேடையில் ‘அப்துல்ரகுமான் என் சபையின் ஆஸ்தானக் கவிஞர்’ என்று குறிப்பிட்டார்.

இவர் அரசியலுக்கு வர வேண்டு மென்பது கலைஞரின் விருப்பம். வாணியம்பாடி தொகுதியில் நிற்கச் சொல்லி வலியுறுத்தியதுண்டு. ‘எனக்கு அரசியல் வேண்டாம். உங்கள் அன்பு மட்டும் போதும்’ என்று ஒதுங்கிக் கொண்டார்.

பாடலாசிரியர்

திரைப்படப் பாடல் எழுத வைக்கப் பலரும் முயன்றனர். ஆனால், இவர் நழுவிக்கொண்டே வந்தார். காரணம், அங்குச் சுதந்திரமாக எழுத முடியாதென்பதுதான். பட்டிமன்றப் பேச்சாளர் சத்தியசீலன் இயக்குவதாக இருந்த ஒரு படத்தில், இவரைப் பாட்டெழுதச் சொன்னார். முழுக் கதையையும் கூறி, ‘எங்கள் தலையீடு இருக்காது. உங்கள் விருப்பம் போல் சுதந்திரமாக எழுதிக் கொடுங்கள். நாங்கள் மெட்டுப் போட்டுக் கொள்கிறோம்’ என்றார்.

இவர் இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். ஒரு பாடலின் பல்லவி: ‘என்னடி கோபமா? _ உன் பக்தனுக்கு நீ தருவதென்ன சாபமா?’_ பாடலைக் கேட்ட சவுண்ட் இன்ஜினீயர், ‘முதல் பாடல் ரெக்கார்டிங்கிலேயே சாபம்னு வருதே’ என்று இழுத்தார். ‘அப்படின்னா இதை ரெண்டாவது பாடலா பதிவு செய்யுங்கள்’ என்றார் கவிஞர் அமைதியாக.

இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா, ‘கண்ணியமான வித்தியாசமான பாடல்’ என்று பாராட்டினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

‘சினிமா பல மூட நம்பிக்கைகள் கொண்ட உலகம். அங்கு பெரிய படிப்பு தேவையில்லை. உயர்ந்த விஷயங்களை எழுத முடியாது. எழுதினாலும் யாராவது அதை மாற்றச் சொல்வார்கள். அங்கு எனக்குச் சரிப்பட்டு வராது’ என்கிறார் அப்துல்ரகுமான்.

உலக இலக்கியம்!

வாணியம்பாடியில் முப்பது வருடங்கள் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பணிபுரிந்து ஐந்து ஆண்டுகள் சர்வீஸ் இருக்கும் போதே, 1991_ல் விருப்ப ஓய்வு வாங்கிவிட்டார். கல்லூரிப் பணி, படைப்புப் பணிக்கு இடையூறாக இருந்ததே காரணம். இவரது கம்பீரத் தேன் தமிழுக்காக சாகித்ய அகாதெமி உட்பட ஏராளமான விருதுகளும், பரிசுகளும் தேடிவந்தன.

  • ஹோமரின் ‘இலியத்’,
  • தாந்தேவின் ‘டிவைன் காமெடி’,
  • கதேவின் ‘ஃபாஸ்ட்’,
  • ஷேக்ஸ்பியர் எழுதிய பல நல்ல நாடகங்கள் போன்று உலகளவில் பேசும் விதமாகத் தமிழில் எந்தப் படைப்பும் இல்லையே என்ற ஆறாத வருத்தம் இவருக்குண்டு.

‘தமிழ்ப்படைப்புகளை உலகம் போற்றும்படிச் செய்ய வேண்டும். அந்த வகையில், பெருங்காப்பியம் ஒன்றைப் படைக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான தகவல்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். உலகம் வியக்கும் உலகளாவிய ஒரு மனித நேயப் படைப்பாக அது இருக்கும். அதற்கான நேரத்தைத்தான் என்னால் ஒதுக்கிக்கொள்ள முடியவில்லை’ என்கிறார் அப்துல் ரகுமான் றீ

_ பெ. கருணாகரன்

Posted in Abdul Rehman, Biography, Biosketch, Kavikko, Kumudam, Literature, people, Poet, Tamil | 2 Comments »

Sujatha – Thoondil Kathaigal : Status

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

வாசலில் ஒரு டெம்போ வந்து நிற்க, அதிலிருந்து ஃப்ரிஜ்ஜும் டி.வி.யும் இறக்கப்பட்டதை ப்ருந்தா வேடிக்கை பார்த்தாள். யார் வீட்டிலேயோ புதுப் பணம் வந்திருக்கிறது போலும் என்று எண்ணினாள்.

காதில் பென்சில் வைத்துக் கொண்டிருந்தவன், அவளிடம் வந்து ‘‘மிஸ்டர், ராஜாராம்ங்கறவரு ஃப்ளாட் எதுங்க?’’

‘‘எங்க வீட்டுக்காரர் பேரு ராஜாராம். எதுக்கு கேக்கறீங்க?’’

‘‘ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து டெலிவரி பண்ண வந்திருக்கோம்.’’

‘‘தப்பா வந்திருக்கிங்க. நாங்க எதும் ஆர்டர் பண்ணலைப்பா.’’

அவன் தன் டெலிவரி சலானை மறுபடி பார்த்தான். செல்போனில் எண்களை ஒத்தினான்.

‘‘பார்ட்டி ஆர்டர் இல்லைங்கறாங்க. கருமாதிங்களா விலாசம் தப்பா?’

‘‘….’’

‘‘பேசுங்க’’ என்று அவளிடம் கொடுத்தான்.

‘‘அம்மா நான் ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து மேனேஜர் முத்துராகவன் பேசறேன். மிஸ்டர் ராஜாராமன் ஒரு டீலக்ஸ் ஃபேமிலி மாடல் ப்ரிஜ்ஜும், ஒரு 28 இன்ச் டிவியும் ஆர்டர் செய்திருக்கார். நீங்க டெலிவரி நோட்ல கையெழுத்துப் போட்டு பொருளை வாங்கிட்டா போதும். கேயரண்டி கார்டுங்களும் மேன்யுவலும் கொடுப்பாங்க.’’

‘‘இத பாருப்பா! எங்கயோ தப்பு நேர்ந்திருக்கு. நாங்க யாரும் எதும் ஆர்டர் செய்யலை.’’

இதற்குள் ராஜு டூவீலரில் வந்து இறங்கினான். ‘‘இங்க பாருங்க என்னவோ சொல்றான். ஃப்ரிஜ்ஜாம் டி.வி.யாம்’’.

ராஜு அவளைக் கவனிக்காமல், ‘‘ஓ வந்தாச்சா! இந்த வீடுதாம்பா உள்ள கொண்டு போங்க.’’

ப்ருந்தாவுக்குத் திக்கென்றது.

இரண்டு சாதனங்களும் ரொம்ப பெரிசாக இருந்தது.

‘‘பழைய டி.வி.யை இப்பவே எடுத்துக்கிட்டு போயிர்றிங்களா, இடம் இல்லை.’’

அந்தப் பத்துக்குப் பன்னிரண்டு அறையில் ப்ளாஸ்டிக் உறைகளும் தர்மகோல் அட்டைப்பெட்டி எல்லாம் நிறைந்து உட்கார இடம் இல்லாமல் ப்ருந்தாவுக்கு எதும் புரியவில்லை. ஏது காசு இவருக்கு? மாசம் பதினெட்டாயிரத்தில் இருபதாம் தேதி தாண்டவே சிங்கியடிக்கிறதே.

‘‘ஏ.சி எப்பப்பா வரும்?’’

‘‘கோடவுன்ல சொல்லிருக்குங்க.’’

‘‘இதுக்கெல்லாம் பணம் எப்படி வந்தது?’’

‘‘இவாளை முதல்ல கையெழுத்து போட்டுட்டு அனுப்பிச்சுர்றேன்.’’ தாங்கஸ்ப்பா…

‘‘நலுங்காம நசுங்காம கொண்டாந்திருக்கோம். ஏதாவது போட்டுக் கொடுங்க, ரெண்டுபேர் இருக்கோம்.’’

அவளை அடுத்த அறைக்கு அழைத்தான். ‘‘ப்ரு! அம்பது ரூபா இருக்கா?’’

‘‘பத்து ரூபாதான் இருக்கு. காப்பி பொடி வாங்கணும்.’’

‘‘சரி அதைக் குடுத்துடு.’’

‘‘இந்தாங்க காப்பி சாப்பிடுங்க.’’

அவன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு முகம் இறுகி முணுமுணுத்துக் கொண்டே, ‘‘லட்ச ரூபாய்க்கு பொருள் வாங்குவீங்க. பத்துரூபா தருவீங்களாம்மா…. வச்சுக்கங்க. எச்சக்கையால காக்கா ஓட்டமாட்டீங்க’’ என்று புறப்பட்டான்.

றீ றீ றீ

‘‘என்னங்க இதெல்லாம்?’’

‘‘பாத்தா தெரியலை ஃப்ரிஜ், டீ.வி…’’

‘‘ஏது காசு?’’

‘‘காசா? லோன்மேளா, ப்ரமிளா ஏஜென்சி கூவிக்கூவி, கூப்ட்டு கூப்ட்டு குடுக்கறான். ஒரே ஒரு டோக்கன் பேமெண்ட் வாங்கிண்டு சாலரி சர்டிஃபிகேட் காட்டினா போதும். மாசா மாசம் கட்டி கழிச்சுக் கட்டிருவேன்.’’

‘‘மாசம் எத்தனை?’’

‘‘ஆறாயிரம்… அந்த டிடெய்ல்ஸ் எல்லாம் உனக்கு எதுக்கு?’’

‘‘எப்படிங்க நம்ம சம்பளத்தில் இதெல்லாம் நமக்குத் தேவைதானா? மது ஸ்கூல் பீஸ் கட்டியாகணும்’’

‘‘உனக்கு எதுவுமே தேவையில்லை. தினம் தேங்கா தொவையலும் சீராமிளகு ரசமும் போறும்.’’

‘‘ஆறாயிரம் சம்பளத்தில கழிச்சுட்டா… எப்படி நான் குடித்தனம் நடத்தறது?’’

‘‘பயப்படாதே உனக்கு மாசாமாசம் கொடுக்கற எட்டாயிரத்தைக் குறைக்கமாட்டேன்.’’

‘‘எட்டாயிரமா, பன்னண்டாயிரங்க.’’

‘‘கவலையை விடு. எனக்கு அரியர்ஸ் வரவேண்டியிருக்கு. அப்புறம் உத்தண்டி ப்ராபர்ட்டிக்கு பஞ்சாயத்துல என்ஓசி வந்துட்டா, சுளையா நம்ம ஷேர் முப்பது லட்சமாவது வரும். நம்ம ஸ்டேட்டஸ் எங்கயோ போய்டும்.’’

‘‘ஆமாம். பதினெட்டு வருஷமா வராதது…’’

அவன் முகம் சுருங்கி ‘‘எல்லாத்தையும் நெகட்டிவ்வாவே பார்க்காதே… லைஃப்ல பாசிட்டிவ்வா யோசி. இங்கிலீஷ்ல கில்ஜாய்ம்பா. அது நீதான். எதுக்கெடுத்தாலும் நொள்ளை…’’

அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

அவன் தொடர்ந்து, ‘‘மனுசனுக்கு மனைவி உற்சாகம் தரணும். நம்பிக்கை தரணும். எல்லாத்தையும் கலைக்கிறதில கெட்டிக்காரி நீ!’’

‘‘இல்லை, கூட்டிக் கழிச்சு பாத்தா கணக்கு சரியாவே வரலையே. எனக்கு நீங்க செய்யற காரியம் வயத்தைக் கலக்கறது.’’

‘‘நாளைக்கு ஏ.சி.காரன் வருவான் க்ரில் போட.’’

மது மரக்கட்டை பேட்டுடன் உள்ளே வந்து ‘‘ஐ! டீ.வி. ஏதுப்பா? அவ்வளவு காசு நம்ம கிட்ட?’’ என்றான்.

‘‘அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கியேடா. மதுக்கண்ணா உங்கப்பா ஒண்ணும் அத்தனை புவர் இல்லை. முதல்ல இந்த லோகிளாஸ் லொகாலிட்டியை விட்டு ஓடணும். எம்.ஆர்.சி. நகர்ல பெரிய வீடு பாத்துண்டிருக்கேன்.’’

றீ றீ றீ

ராஜாராமன் ஆபிஸ் போயிருந்தான். பெரிய டி.வி.க்கும் குளிர்பெட்டிக்கும் இடம் பண்ணிக் கொடுத்து மிச்சமிருந்த இடத்தில் பிரம்பு நாற்காலி போட்டு மத்யானம் அணில்கள் ஓய்ந்துவிட்ட வேளையில், நடிகை பார்த்துக் கொண்டிருக்க… நாட்டுக்கோழி பிரியாணி செய்வது பற்றி ஒரு கிராம மாது விளக்கிக் கொண்டிருந்தாள்.

மது ‘‘கோழிக்கு வலிக்காதாம்மா?’’ என்று கேட்டான்.

‘‘வலிக்காம கழுத்தை திருகுவா உங்கப்பா மாதிரி.’’ பால்கனியிலிருந்து விளையாடி விட்டு வந்தான். ‘‘அம்மா அந்தாளு இங்கயே பாத்துண்டிருக்கான்ம்மா. அப்பாவைக் கூப்பிடறார்.’’

‘‘யாருப்பா’’ என்றாள் பால்கனியிலிருந்து.

வாட்டசாட்டமாக இருந்தான். காலர் இல்லா சட்டையை மீறி புலிநகம் போட்ட சங்கிலி தெரிந்தது. முழங்கைவரை முறுக்கிவிட்ட புஜத்தில் தாயத்து கட்டிய இடத்தில் தசைநார்கள் பீறிட்டன. மீசை கன்னம்வரை வழிந்திருந்தது. ஜிம்மிலிருந்து வந்தவன் போலத் தோன்றினான்.

‘‘ப்ரமிளா ஏஜென்சிலருந்து வர்றன். உன் புருசன் ராஜாராமனைப் பார்க்கணும்.’’

‘‘ஆபீஸ் போயிருக்காரே!’’

‘‘ஆபீஸ்ல வீட்டுக்குப் போயிருக்கறதா சொன்னாங்க…’’

‘‘இல்லையே ஒரு வேளை வருவாரா இருக்கும்.’’

‘‘சரி காத்துட்டிருக்கேன்.’’

‘‘என்ன விஷயம்?’’

‘‘உன் புருசன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு. அதை அவர்கிட்ட காட்டி உடனே ஆபீசுக்கு வந்து கேஷ் கட்டு. இல்லை பொருளை எடுத்துட்டுப் போயிருவோம்னு சொல்லு.’’

‘‘சரிப்பா, அவர் வந்த உடனே சொல்றேன்.’’

‘‘ஒண்ணும் பிரச்னை இல்லை. அரை மணியில மறுபடி வரேன் சொல்லிவை.’’

அவன் போனதும் ராஜு பெட்ரூமிலிருந்து வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்தான். ‘‘போய்ட்டானா?’’

‘‘நீங்க எப்ப வந்தீங்க? ஆபீஸ் போகலை?’’

‘‘அப்பவே வந்துட்டேனே. கிச்சன்ல பிசியா இருந்தே.’’

‘‘என்னவோ செக்குங்கறான்… பவுன்ஸ்ங்கறான். ஒண்ணும் புரியலை. வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுண்டேன்’’

‘‘அது ஒண்ணுமில்லை கண்ணு. பன்னண்டு போஸ்ட் டேடட் செக் பன்னண்டாம் தேதி போடுறான்னா, பத்தாம் தேதியே போட்டிருக்கான். பேங்க்ல ஆனர் பண்ணலை போல இருக்கு. இத்தனைக்கும் சேஷாத்ரிகிட்ட சொல்லியிருந்தேன். ஒருவேளை சிக்னேச்சர் மேட்ச் ஆகலையோ என்னவோ… நான் உடனே பேங்க் போய் அதைச் சரி பண்ணிடுவேன். நீ ஒண்ணும் கவலைப்படாதே.’’

ப்ருந்தா அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

றீ றீ றீ

ராஜு மத்யானம் திரும்ப வந்தபோது ‘‘எல்லாம் சரியாய்டுத்து. அவன்கிட்ட போய் சத்தம் போட்டுட்டு வந்தேன். படவா ராஸ்கல்! ரவுடிகளைல்லாம் அனுப்பறயே… என்ன கம்பெனி நீ, கன்சூமர் கோர்ட்ல கேஸ் போட்டுருவேன்னு. அவன் பயந்துண்டு மன்னிப்பு கேட்டு, இனி அந்த மாதிரி நடக்காதுன்னான். ஜாக்கிரதை, ஆர்.ஏ.புரத்தைவிட்டே உன் கடை இல்லாம பண்ணிடுவேன். கபர்தார் என்னை என்னன்னு நினைச்சிண்டிருக்கே பத்மாஷ்னு…’’

‘‘பணம் கொடுத்தாச்சா?’’

‘‘கட்டியாச்சுடி மூதேவி சனியனே!’’

‘‘நவம்பர் 14.

வைதேகியின் பெண் சீமந்தத்துக்கு தங்க வளையலும் ரெட்டை வடசங்கிலியும் எடுத்துக்கொள்ள பீரோவைத் திறந்தபோது, சங்கிலியைக் காணோம். வேலைக்காரியைக் கூப்பிட்டு ‘‘செவலா! நீ வீடு பெருக்கி துடைக்கறப்ப பீரோ திறந்திருந்தது. எதையாவது தெரியாம எடுத்தேன்னா சொல்லிடு’’ என்றாள்.

அவள் தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள், இத்தனை வருசம் உங்கிட்ட வேலை செய்யறேன். இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட பத்தியா? நாங்க ஏளைங்கதாம்மா, திருடங்க இல்லை.’’

‘‘இப்ப நான் என்ன கேட்டுட்டேன். எடுக்கலைன்னா எடுக்கலைன்னு சொல்லிட்டுப் போயேன்.’’

நவம்பர் 15

வேலைக்காரி நின்று விட்டாள்.

ராஜுவிடம் சொன்னபோது, அவளை அப்படி கேட்டிருக்கக் கூடாது, ‘‘நான் ஆர்.ஏ.புரம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துர்றேன். சாவியை வேலைக்காரி பார்க்கறமாதிரி கண்ட கண்ட இடத்தில வெக்கக்கூடாது. இது ஒரு பாடம். போனாப் போறது… நா உனக்குப் புதுசு வாங்கித்தரேன்’’ என்றான்.

சாயங்காலம் மது ‘‘அப்பா பீரோ சாவியை அம்மா எங்க வெப்பான்னு கேட்டிண்டிருந்தாம்மா. தலைகாணிக்கு அடிலன்னு சொன்னேன்’’

டிசம்பர் 12

சாயங்காலம் டெலிபோன் ஒலித்தபோதே அதில் மிரட்டல் இருந்தமாதிரி தோன்றியது, ப்ருந்தாவுக்கு. எடுக்கலாமா வேணாமா என்று யோசித்தாள். ராஜு வேறு இல்லை. அடித்து நின்றுவிட்டு உடனே மறுபடி அடிக்கத் தொடங்கியது.

‘‘அலோ.’’

குரலே கன்னத்தில் அறைந்தது. ‘‘என்ன மாதிரி டுபாக்கூர் பார்ட்டிம்மா நீங்க… உன் வீட்டுக்காரரு… இந்த முறையும் செக் பவுன்ஸ் ஆய்டுச்சாம். நீங்க சோறு திங்கறீங்களா, வேற எதாவதா… மானம், வெக்கம், சூடு, சுரணை வேண்டாம்? ஆபீஸ§க்கு போன் போட்டா எடுக்கறதே இல்லை. தபாரு டி.வியையும் ப்ரிஜ்ஜையும் எடுத்துட்டு வரும்படி முதலாளி ஆர்டர். அரைமணியில டெம்போ வரும். ஒயரை எல்லாம் புடுங்கி தயாரா வச்சிரு. காசில்லைன்னா ஏன் பொருள் வாங்கறீங்க? வாயையும்… பொத்திகிட்டு தயிர் சாதம் தின்னுகிட்டு, படுத்துக் கிடக்கிறதுதானே உங்க மாதிரி ஆளுங்கள்ளாம்..’’ ‘சரி உட்டுரு துரைராஜ்’ என்ற மற்றொரு குரல் கேட்க… ‘‘வந்துகிட்டே இருக்கோம்’’ என்று முடித்தான்.

உடம்பெல்லாம் வியர்த்தது. நாக்கு வறண்டு நடுங்கும் விரல்களுடன் ராஜுவுக்குப் போன் செய்தாள்.

‘‘எங்க போய்த் தொலைஞ்சிட்டீங்க..? அவன் பாட்டுக்குப் போன்ல கண்டகண்டபடி திட்டறான். அப்படியே உடம்பெல்லாம் கூசறது. அரைமணில டெம்போ எடுத்துண்டு வரானாம்.’’

‘‘அப்டியா? நீ என்ன பண்றே.. அவா வரதுக்குள்ள கதவைப் பூட்டிண்டு உங்க அக்காவாத்துக்கு போய்டு. நான் அந்த முட்டாள் பசங்களைப் போய் பாத்து ஒண்ணுல ஒண்ணு தீர்த்துட்டுத்தான் மறுகாரியம்.’’

‘‘உடனே வாங்க… எனக்குப் பதர்றது, பயத்தில புடவைல…’’

‘‘எல்லாம் வரேன். நீ கதவைப் பூட்டிண்டு வைதேகி வீட்டுக்குப் போயிடு. என்ன அசடு அசடு! நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதே. அவனுக்கு ஒரு லாயர் நோட்டீஸ் அனுப்பிருக்கேன். ஃப்ரிஜ் சரியா வேலை செய்யலை. ஐஸ் க்யுப் பார்ம் ஆறதில்லை. டி.வி. க்ளாரிட்டி இல்லை. அதனால பேமெண்டடை நிறுத்தி வச்சிருக்கேன்னு… அப்படியே கதிகலங்கிப் போய்டுவான். ஒரு மசுத்தையும் பிடுங்க முடியாது. என்னன்னு நினைச்சிண்டிருக்கான். ஸ்கவுண்ட்ரல்.’’

‘‘எப்ப வர்றீங்க?’’

‘‘எம்.ஆர்.சி. நகர் போய்ட்டு வந்துர்றேன்.’’

‘‘எம்.ஆர்.சி. நகர்ல என்ன?’’

‘‘சொன்னனே ஒரு புது ஃப்ளாட் பாத்துண்டிருக்கேன். அப்படியே உண்டாய் கம்பெனி ஷோ ரூமுக்குப் போய்ட்டு மத்யானம் உங்கக்கா வீட்டுக்குச் சாப்பிட வந்துர்றேன். பருப்பு உசிலி பண்ணி வைக்கச் சொல்லு. உங்கக்கா நன்னா பண்ணுவா.’’

‘‘உண்டாய் கம்பெனியா?’’

‘‘ஆமாம்… டூவீலர் நம்ம ஸ்டேட்டஸ்க்குச் சரியில்லை. ஒரு கார் வாங்கப் போறேன்’’ என்றான்.

Posted in Kumudam, Status, Sujatha, Tamil, Tamil Story, Thoondil Kathaigal | 14 Comments »

Aachi Manorama – Maanpumigu Manithargal

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

பெ.கருணாகரன்

‘மாலையிட்ட மங்கை’யில் ஆரம்பித்து ஏகப்பட்ட வெற்றிமாலைகள் தோளில் விழ நில்லாத சினிமா சாதனைப் பயணம் மனோரமாவுடையது.

சொந்த ஊர் தஞ்சை மாவட்டம்_ ராஜமன்னார்குடி. இயற்பெயர் கோபிசாந்தா. பெற்றோர் காசி கிளாக்குடையார்_ராமாமிர்தம்.

தந்தை வெள்ளையர் ஆட்சியில் பெரிய காண்ட்ராக்டர். அதனால் வளமைக்குப் பஞ்சமில்லை. மனோரமாவின் தாயார், தனது தங்கையையே கணவருக்கு இரண்டாவது தாரமாக திருமணம் செய்து வைக்க, அவரது வாழ்வில் புயலடிக்க ஆரம்பித்தது.

விளைவு_ கணவரைப் பிரிய நேர்ந்தது. மகள் கோபிசாந்தாவை அழைத்துக்கொண்டு, காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூருக்குக் குடிவந்தார். உழைத்தால்தான் சாப்பாடு என்ற வறுமைநிலை. பலகாரம் சுட்டு விற்றார் ராமாமிர்தம். அப்போது, மனோரமாவுக்கு இரண்டு வயது. அந்த வயதிலேயே திருநீலகண்டர் படத்தில் பாகவதர் பாடிய ‘உன்னழகைக் காண இருகண்கள் போதாதே…’ பாடலை இனிய மழலையில் பாடுவார்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை இது கவர்ந்தது. எல்லோரும் அந்த இரண்டு வயது சிறுமியின் ரசிகர்களானார்கள்.

பள்ளிநாட்களிலும் இவரது பாட்டுக் கச்சேரி தொடர்ந்தது. பள்ளி விழாக்கள், தெரிந்தவர் வீட்டு விஷேசங்களில் இவரை அழைத்துச் சென்று தவறாமல் பாட வைத்தார்கள்.

பள்ளியில் படிப்பு; வீடு திரும்பியதும் தியேட்டர்களுக்குச் சென்று அம்மா சுட்டுத் தரும் பலகாரங்களை விற்பது என்று நாட்கள் நகர்ந்தன. தியேட்டர்களில் பலகாரம் விற்கும்போது, சினிமாப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டு இவரது இசை ஞானம் விரிவடைந்தது.

ஒரு கட்டத்தில் மனோரமாவின் தாயாருக்கு உடல்நிலை கடுமையாய் பாதிக்கப்பட பலகாரம் சுடமுடியாத நிலை. எனவே பள்ளத்தூரில் வசதி படைத்த ஒருவரின் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணி மனோரமாவுக்கு.

இந்தக் காலகட்டத்தில்தான் கோட்டையூரில் ஏகாதசி விழா. அன்று இரவு ‘அந்தமான் காதலி’ என்று ஒரு நாடகம். இதில் பெண் வேடம் போட்டவருக்குப் பாடவும் ஆடவும் வராது. அவருக்காக பாடவும் நடு நடுவே ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு, மனோரமாவுக்குக் கிடைத்தது. இந்த நாடகத்தில்தான் இவருக்கு மனோரமா என்ற பெயர் சூட்டப்பட்டது.

‘அந்தமான் காதலி’க்குப் பிறகு, மனோரமாவுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வரத் தொடங்கின.

விவாகரத்து!

சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக் கொண்டிருந்தபோது, அதில் முக்கியப் பொறுப்பிலிருந்த எஸ்.எம். ராமநாதன் மனோரமாவைக் காதலித்தார். அந்தக் காதலுக்கு மனோரமாவும் நாணத்துடன் பச்சைக்கொடி காட்ட, இவர்கள் திருமணம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்தது.

திருமணத்தைத் தொடர்ந்து கர்ப்பமான மனோரமா, ஒன்பதாவது மாதத்தில் பிரசவத்துக்காக தாய் வீடு சென்றார். அதன்பிறகு, கணவர் அவரை வந்து பார்க்கவே இல்லை.

குழந்தை பிறந்த பதினைந்தாவது நாளிலேயே மனோரமாவின் வீட்டுக்கு வந்த ராமநாதன், மனோரமாவை நடிக்க அழைத்தார். ‘குழந்தை பிறந்து கொஞ்ச நாள் தானே ஆகிறது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்’ என்றார் மனோரமா. இதனால் கோபம் கொண்ட ராமநாதன் திரும்பிச் சென்றார். அவரிடமிருந்து வந்தது விவாகரத்து நோட்டீஸ். அதிர்ந்தார் மனோரமா.

இல்லற வாழ்வில் இடி விழுந்தாலும் அதற்காக தளர்ந்துவிடாமல் மனோரமா நாடகங்களில் நடிப்பதைத் தொடர்ந்தார்.

  • கலைமணி நாடக சபா,
  • வைரம் நாடக சபா,
  • எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகமன்றம்,
  • கே.ஆர்.ராமசாமி நாடக மன்றம் என்று பெரிய பேனர் நாடகங்களில் தொடர்ந்து நடித்தார்.

சினிமாப் பிரவேசம்!

சினிமாவில் மனோரமா முதலில் புக் செய்யப்பட்ட படம் ‘இன்ப வாழ்வு.’ வாங்கிய முன் பணம் நூறு ரூபாய். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது.

1958_ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் ‘மாலையிட்ட மங்கை’ படத்தை தயாரித்த போது, காமெடி வேடத்தில் நடிக்க மனோரமாவை ஒப்பந்தம் செய்தார்! ‘காமெடி வேடமா?’ என்று மனோரமா மலைத்தபோது, தைரியம் தந்து நடிக்க வைத்தார் கண்ணதாசன். அந்தப் படத்தில் மனோரமாவுக்கு நல்ல பேர். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதிலும் நாடகங்களில் நடிப்பதை மனோரமா நிறுத்திவிடவில்லை. அறிஞர் அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் காகபட்டராக அண்ணா நடித்தார். இதில் கதாநாயகி இந்துமதியாக அண்ணாவின் தெள்ளு தமிழ் வசனங்களைப் பேசி நடித்தார் மனோரமா.

கதாநாயகன் கருணாநிதி!

கலைஞர் கருணாநிதி எழுதிய ‘உதய சூரியன்’ நாடகத்தில் கதாநாயகியாக ஐம்பது தடவைக்கு மேல் மேடையேறியிருக்கிறார் மனோரமா. நாடகத்தின் கதாநாயகன் கலைஞர் கருணாநிதி!

1963_ல் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கொஞ்சும் குமரி’ படத்தில் கதாநாயகி வாய்ப்பு. தொடர்ந்து, அலங்காரி, அதிசயப்பெண், பெரியமனிதன் ஆகிய படங்களிலும் கதாநாயகி! நடுவில் சில இந்திப் படங்களிலும் வாய்ப்பு. என்றாலும், தனது உயிர்நாடியான குணசித்திர, காமெடி வேடங்களை மனோரமா மறந்துவிடவில்லை. அவைதான் மனோரமாவின் சினிமா வாழ்க்கையில் அழியாத சித்திரங்களாய் நிலைத்து நிற்கின்றன.

ஜில்ஜில் ரமாமணி!

1968_ல் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ மனோரமா வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் இவர் ஏற்று நடித்த ‘ஜில்ஜில் ரமாமணி’ பாத்திரம் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 1971_ல் ‘கண்காட்சி’ என்ற படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்தார் மனோரமா. ஒவ்வொரு காரெக்டரிலும் ஒவ்வொரு விதமாக நடித்து மெருகூட்டினார்.

காமெடி வேடங்களில் கலக்கிய மனோரமா, பிற்காலத்தில் தாய்வேடங்கள் ஏற்று தனிமுத்திரை பதித்தார்.

ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை மனோரமாவுக்கு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியுடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.டி.ராமாராவ் ஆகியோருடன் சினிமாவிலும் மனோரமா நடித்துள்ளார்.

இரண்டு வயது மழலையிலேயே பாட ஆரம்பித்து விட்ட மனோரமா, இதுவரை நூறு பாடல்களை தனது சொந்தக் குரலிலேயே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோரமா, இதுவரை 1300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். உலக சினிமா சரித்திரத்தில் யாரும் தொடாத எண்ணிக்கை இது. இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அவரது இந்தச் சாதனையை ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும். அந்த ஒருவர் வேறு யார்? மனோரமாவேதான். ஆம்… அவர் வெல்ல முடியாத அதிசய மனுஷி! றீ

ஆச்சி

எல்லோரும் மனோரமாவை அன்புடன் அழைப்பது ‘ஆச்சி’ என்று. இதற்குப் பின்னணி உண்டு. இவர் வளர்ந்தது செட்டி நாட்டில். 1962ல் சுகி. சுப்பிரமணியத்தின் ‘காப்பு கட்டி சத்திரம்’ என்ற ரேடியோ நாடகம் 66 வாரம் ஒலிபரப்பப்பட்டது. இதில் மனோரமா நடித்தார். நாடகத்தில் இவர் செட்டிநாட்டுப் பாணியில் பேசுவார். இதனால் ஏவிஎம் ஸ்டூடியோவின் மேக்அப் மேன் இவரை விளையாட்டாக ‘ஆச்சி’ என்று அழைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு எல்லோரும் இவரை ‘ஆச்சி’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

_பெ.கருணாகரன்

Posted in Biography, Biosketch, Kumudham, manorama, Pe Karunakaran, people, profile, Tamil, Women | Leave a Comment »

Maanpumigu Manithargal – Chinnapullai

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

பெ. கருணாகரன்,  ப. திருமலை.
டெல்லி… ஸ்ரீசக்தி டிரஸ்கார் விருது வழங்கும் விழா. அந்தப் பெண்ணின் பெயர் படிக்கப்பட்டவுடன் அவர் மேடையேறி அங்கிருந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாயைக் கும்பிட்டார். அடுத்த நொடி, யாரும் எதிர்பாராத சம்பவம். வாஜ்பாய் அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து வணங்கினார்.

பிரதமர் காலில் விழுந்து வணங்கிய அந்தப் பெண் _ சின்னப்பிள்ளை. ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். சுய உதவிக் குழுக்கள் மூலம் ஏராளமான பெண்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவிளக்கு ஏற்றியவர்.

மதுரை மாவட்டம் சுள்ளந்திரி கிராமம்தான் சின்னப்பிள்ளை பிறந்த ஊர். அப்பா, பெரியாம்பாளை. அம்மா, பெருமி. தாழ்த்தப்பட்ட சமுதாய விவசாயக்கூலிகள். இவர்களுக்கு நான்கு வாரிசுகள். கடைசி வாரிசுதான் சின்னப்பிள்ளை. இவருக்கு மூன்று வயதிலிருக்கும்போது, அம்மா இறந்துவிட, மறுமணம் செய்துகொள்ளாமலே நான்கு பேரையும் பெரியாம்பாளை வளர்த்திருக்கிறார்.

வசதியில்லாததால் யாரையும் படிக்க வைக்க முடியவில்லை. நான்கு வாரிசுகளுக்கும் விவசாயக் கூலி வேலைதான். ஏழு வயதிலேயே சின்னப்பிள்ளைக்கு மாடு மேய்க்கும் வேலை.

திருமணம்!

பத்து வயதில் பெரிய மனுஷி; பன்னிரண்டு வயதில் திருமணம். கணவர் பெருமாள் _ தாய்வழி உறவு. இவருக்கும் விவசாயத் தொழில்தான்.

இரண்டு குழந்தைகள் பிறந்தநிலையில் கணவருக்குத் தீராத வயிற்றுவலி. வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இந்தச் சூழலில் சின்னப்பிள்ளையின் தந்தையும் காலமாகிவிட, குடும்பச்சுமை சின்னப்பிள்ளையின் மீது.

அசரவில்லை. விவசாயக் கூலி வேலைக்குச் சென்றார். கடுமையாய் உழைத்தார். ஆனால், வருகிற கூலியெல்லாம் கணவரின் வைத்திய செலவுக்கே போனது.

வர்க்கப் பார்வை!

வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபிறகு, இவருக்குள் வர்க்கப் பார்வை தலைதூக்கியது. விவசாயக் கூலிகளின் சிக்கல்களை உணர்ந்தார். செய்த வேலைக்கு சரியான கூலி கிடைக்காதது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் ஏராளமானோருக்கு வேலையில்லாத நிலை. இதைச் சரி செய்யவேண்டும் என்ற கோபமும், அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கமும் அவரை தினமும் துன்புறுத்தின. விளைவு… அவருக்குள் அதற்கான திட்டங்கள் தோன்றின.

நில உடைமையாளர்களைச் சந்தித்தார். ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் நிலத்துக்குத் தேவையான ஆட்களை காண்ட்ராக்ட் முறையில் மொத்தமாகப் பேசி, பலருக்கும் வேலையைப் பகிர்ந்தளித்தார். நிலவுடைமையாளர்களிடம் கண்டிப்பாகப் பேசி, கூலியை நியாயமாய் வாங்கிக் கொடுத்தார். வயதானவர்கள், ஊனமுற்றோர்கள் ஆகியோருக்கும் இவர் வேலை வழங்கத் தவறவில்லை. இதனால் மக்களுக்கு சின்னப்பிள்ளை மீது நம்பிக்கை வந்தது.

இந்த நேரத்தில்தான் மாதர் சங்கத்தினர் சிலர், மான்யத்துடன் வீடு வாங்கித் தருவதாகக் கூறி வந்தனர். சின்னப்பிள்ளை தலைமையிலான விவசாயக் கூலிகளிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்தார்கள். ஆனால், கிடைத்தது வீடு அல்ல, ஏமாற்றம்தான்! பணம் கொடுத்தவர்களெல்லாம் சின்னப்பிள்ளை சொல்கிறாரே என்ற நம்பிக்கையில் கொடுத்தவர்கள். இது சின்னப்பிள்ளைக்குப் பெரிய உறுத்தலாயிற்று.

சுய உதவி!

இந்த நிலையில்தான் தானம் அறக்கட்டளையின் தலைவர் வாசிமலை தனது குழுக்களுடன் சின்னப்பிள்ளையை அணுகி, கடன், சுயஉதவிக் குழுக்கள் என பேசினார். ஏற்கெனவே ஏற்பட்ட ஏமாற்றத்தால் சின்னப்பிள்ளைக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. தொடர்ந்து அவர்கள் விடாமல் பேசிக்கொண்டேயிருக்கவே, சிறிது சிறிதாக அவர்கள் மீது நம்பிக்கை வந்தது. ஆனால், மக்களிடம் சின்னப்பிள்ளையால் நம்பிக்கை ஏற்படுத்தமுடியவில்லை. இதனால், பில்லுச்சேரி கிராமத்தில் முதலில் துவங்கப்பட்ட சுயஉதவிக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் பதினான்கு பேர் மட்டுமே.

இந்தக் குழுவினர் போட்ட பணம் இவர்களுக்குள்ளேயே சுழன்றது. தானம் அறக்கட்டளையின் நிதிஉதவியும் ஆலோசனையும் குழுவை மேலும் வலுவாக்கியது. சின்னப்பிள்ளைக்கு இந்தத் திட்டம் பிடித்துவிட, அக்கம் பக்கத்துக் கிராமத்து விவசாய பெண்களையும் திட்டத்துக்குள் இழுத்துப்போட ஆரம்பித்தார். சுயஉதவிக் குழுக்கள் கிராமத்துக்குக் கிராமம் வேர்விடத் தொடங்கின.

முதலில் பதினான்கு பேருக்குத் தலைவியாக இருந்த சின்னப்பிள்ளை, மூன்றே ஆண்டுகளில் முந்நூறு பேருக்குத் தலைவியானார். அடுத்த மூன்றாண்டுகளில் அது ஐந்தாயிரம் ஆனது. இவரது கடின உழைப்பு இவரை ஏழு மாநில களஞ்சிய சுயஉதவிக் குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக்கியது. இந்தப் பொறுப்பு ஏழாண்டுகளுக்கு. இப்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுநாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி. இந்தக் கூட்டமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை மூன்று லட்சம்.

இவ்வளவு பெரிய பொறுப்பு வகித்தாலும் கூட, இவருக்கு இன்னும் எழுதப்படிக்கத் தெரியாது என்பதுதான் ஆச்சரியம். எப்படிச் சமாளிக்கிறாராம்? ‘‘வாசிக்கச் சொல்லி உன்னிப்பா கவனிச்சிக்கிடறேன். கணக்கு வழக்கு பார்க்க படிச்ச புள்ளைகளை வேலைக்கு வைச்சிருக்கேன். செக்கில் மட்டும்தான் நான் கையெழுத்துப் போடுவேன்…’’ என்கிறார். இவருக்கு இந்தியா முழுக்க பயணம் செய்த அனுபவமுண்டு.

தனக்குக் கிடைக்கும் விருதுகள், பணம் எதையும் தனக்காக இவர் வைத்துக்கொள்வதில்லை. தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைக் கொண்டு ஓர் அறக்கட்டளையை அமைத்திருக்கிறார். இதிலிருந்து கிடைக்கும் வட்டி, சிறுசிறுமகளிர் சுயஉதவிக் குழுக்களின் தலைவிகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பயன்படுகிறது.

சாதனை!

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சாதித்ததென்ன? இவரிடமிருந்து பணிவாக பதில் வருகிறது. ‘‘கந்துவட்டியை அடியோடு ஒழிச்சுட்டோம்ல. நூறு ரூபாய் கடன் வாங்கிட்டு அதுக்கு வட்டியாக ஒரு மூட்டை நெல் அளந்து கொடுத்த அந்தக் காலம் மலையேறிடுச்சி. இப்ப எங்களுக்குள்ளேயே கடன் கொடுத்துக்கிறதாலே அநியாய வட்டி என்கிற பேச்சுக்கே இடமில்லே… இது தவிர, மூணு வேளையும் வயிறார பட்டினியில்லாம எங்க பெண்கள் சாப்பிடறாங்க….

தவிர, எங்க குழுக்களில் சுயதொழிலை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்திக்கிட்டு வர்றோம்…’’

பெரிய தலைவியாகியும் வசதியாக வாழ வாய்ப்பிருந்தும் கூட, சின்னப்பிள்ளை இன்னும் கிராமத்திலேயேதான் இருக்கிறார். தலித்துகளுக்கு வழங்கப்படும் ஒரே அறை கொண்ட சிறிய வீடுதான் இவர் குடியிருப்பது. அதைப் பெறவே இவர் போராட வேண்டியிருந்ததாம். இந்த வீட்டிலிருந்துதான் இவரது மக்கள் பணி தொடர்ந்து நடக்கிறது. ‘ரோடு இல்லை… ரேஷன் கார்டு இல்லை… விளக்கு எரியவில்லை…’ என்று மக்கள் குறைகளுக்காக தொடர்ந்து அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

‘எங்க சனங்க பாவம்ங்க…. அவங்களுக்கு ஏதாவது செஞ்சுக் கொடுங்க…’ என்ற இவரது வெள்ளந்தியான பேச்சை அதிகாரிகளால் தட்ட முடிவதில்லை.

‘வாழ்க்கையிலே நம்மால அடுத்தவர்களுக்குப் பயன் இருக்கணும். நல்லது செஞ்சோம்கிற திருப்தி இருக்கணும். இதுதான் மனுஷ ஜென்மத்தின் முழுமையா இருக்கமுடியும்.’’ என்கிறார் அந்தக் கறுப்பு வைரம்.

_ பெ. கருணாகரன், ப. திருமலை.

Posted in Achievers, Biography, Biosketch, Chinnapullai, Kumudham, people, profile, sinna pulla, Tamil | Leave a Comment »

Actor Pandu’s Embarassment

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

பாண்டு
ஓவியக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நண்பன் ஒருவன் என் ரூமிற்கு அடிக்கடி வருவான். அறுவைனா அப்படியரு அறுவை. ஒரு நாள் அவன் வருவதை பார்த்துவிட்டு எப்படியாவது இவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எதுவும் புரியாமல், அங்குமிங்கும் ஓடி கடைசியில் பாத்ரூமில் உள்ள ஒரு பரன்மீது ஏறி உள்ளே போய் கால்களை குத்தவைச்சு உட்கார்ந்து கொண்டேன். ரூமில் ஒரு கால் மணி நேரமாக என்னை அங்கும் இங்கும் தேடினானே தவிர, சரி காணவில்லை கிளம்புவோம் என்று அவன் போகவில்லை. எனக்கோ அது சின்ன இடமென்பதால் மூட்டுக் கால் வலித்தது. திடீரென்று பாத்ரூம் பக்கம் வந்தவன் பரணில் இருந்த எண்ணை பார்த்துவிட்டு ‘டேய் பாண்டு இங்கியாடா உட்கார்ந்திருக்க’’ அவன் கேட்க பதிலுக்கு

‘‘டேய் நீ பெரிய கெட்டிக்காரண்டா நீ கண்டுபிடிச்சுடுவன்னு தெரியும்டா’’ என்று நான் சமாளித்த சமாளிப்பு எனக்குத்தான் தெரியும்.

பாண்டு

Posted in Actor, Comedy, Fun, Incident, Joke, Kumudam, Life, Pandu, Personal, Story, Tamil | Leave a Comment »

Arasu Pathilgal – Kumudam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

தி.ராஜு,
திருநெல்வேலி டவுன்.

தமிழ்நாடு இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறிக்கொண்டு வருவது போல் தெரிகிறதே?

கரெக்ட். சிக்குன் குனியா பரவுவதில்தானே?

 ஜி.மாரியப்பன்,
சின்னமனூர்.

நமீதா போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் காட்சியை டி.வி.யில் பெரும் பரபரப்பு செய்தியாகக் காட்டியது அவசியமா?

நீர் பார்த்தீரா இல்லையா? அதைச் சொல்லும் முதலில்.

 இரா. பார்த்திபன்,
வயலூர்.

சமீபத்தில் படித்த புத்தகம்?

1973ம் வருடம் வெளியிடப்பட்ட, அ.தட்சிணாமூர்த்தி என்கிற தமிழ்ப்பேராசிரியர் எழுதிய ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்கிற அரிய புத்தகம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வரலாறும் வாழ்க்கையும் எப்படி சிறப்புற்று இருந்தன என்பதை உணர்ச்சிவசப்படாமல், இலக்கிய, தொல்லியல் ரீதியாக அழகாக விவரிக்கும் புத்தகம்.

  • போர் முறைகளில் தமிழர்கள் கொண்டிருந்த நேர்மை,
  • புதிய கண்டுபிடிப்புகளில் காட்டிய ஆர்வம் (முக்கியமாக உணவு, உடை, வாத்தியங்கள் தயாரிப்பில்),
  • வாணிபத்தில் இருந்த உலகநோக்கு,
  • புலவர்களை மதித்த பணிவு,
  • உழவுக்குத் தலை வணங்கிய மாண்பு,
  • இறந்தவர்களைப் பெருமைப்படுத்தும் நன்றி மறவாமை,
  • வானிலையிலும்,
  • மருத்துவத்திலும்,
  • விருந்தோம்பலிலும்,
  • இலக்கியத்திலும்,
  • ஆன்மிகத்திலும்,
  • ஆடற் பாடல், இசைக் கலையிலும்,
  • தத்துவத்திலும்,
  • கலாசாரத்திலும் வாழையடி வாழையாக தமிழும், தமிழர்களும் செழித்தோங்கி வளர்ந்ததைப் படிக்கப் படிக்க, ஆஹா, எத்தனை சிறப்புமிக்க வரலாற்றில் நாம் பிறந்திருக்கிறோம் என்கிற செருக்கே வந்துவிட்டது. இத்தனை மகத்தான பின்னணியை எப்படி இளம் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பது என்கிற பிரமிப்பும் வந்தது.

ச.சிவகாமி சுந்தர்,
சென்னை_94.

சென்னையில் பெருகி வரும் டிராஃபிக் ஜாமைச் சமாளிக்க ஒற்றைப் படை எண் வாகனங்களை ஒரு நாளும் இரட்டைப் படை எண்ணுள்ள வாகனங்களை மறுநாளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாமே?

எனக்கு முன் ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை. உங்கள் கேள்வியைப் படிக்கும்போது தாங்கள் முற்பிறவியில் துக்ளக் மகாராஜாவாகப் பிறந்திருப்பீர்களோ என்று தோன்றுகிறது.

Posted in A Thatchinamoorthy, Arasu, Books, Chikun Kunya, Culture, Kumudham, Namitha, Q&A, Tamil, Thuglaq | Leave a Comment »

A Marx on Gandhi, Dalits, Varnasramam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

சாதியத்தை எதிர்த்தாரா மகாத்மா?

அ. மார்க்ஸ்

இந்த ஆண்டு காந்தி பிறந்த நாள், “சத்தியாக்கிரகம்’ என்கிற போராட்ட முறையை அவர் உலகுக்குத் தந்த நூற்றாண்டில் அமைகிற வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது. காந்தியின் அகிம்சை, சத்தியாக்கிரகம் முதலியன அரசுக்கு எதிராக ஒருவர் தன்னை வகுத்துக் கொண்டு அழிந்து போகிற முட்டாள்தனமான ஒரு காரியமல்ல. பரந்துபட்ட பெருந்திரளான மக்களைச் சட்டத்தை மறுக்க வைக்கிற, மீற வைக்கிற, அதன் மூலம் அரசைப் பணிய வைக்கிற போராட்ட வடிவம் அது.

சட்டம் மீறுகிற போராட்ட வடிவங்கள் என்பன ஆயுதம் தாங்கிய சிறு முன்னணிப் படையால் நடத்தப்படுவன என்கிற நிலையை மாற்றியமைத்தவர் அவர். மக்களின் மீது அதிகாரமுள்ள முன்னணிப்படை (Vanguard ) என்கிற கருத்தாக்கம் இதன் மூலம் அழிந்தது. அனைவரும் அதில் படைவீரர்கள். துயரைத் தாங்குதல், அதே நேரத்தில் அதிகாரத்தை எதிர்த்தல் என்பதே காந்தியடிகளின் கொள்கை.

காந்தியின் தென் ஆப்பிரிக்க வாழ்க்கை (1893 – 1914) நிறவெறித் தீண்டாமைக்கெதிரான போராட்டக் களமாக மட்டுமன்றி சுயநலமற்ற நேர்மையான அரசியலுக்கான சோதனைக் களமாகவும் இருந்தது. அங்கு அவர் உருவாக்கிய ஃபீனிக்ஸ் பண்ணை மற்றும் டால்ஸ்டாய் பண்ணைகள் என்பன மார்க்ஸியர்கள் கனவு கண்ட ஒரு “கம்யூன்’ வடிவத்தின் மிகச் சிறந்த மாதிரியாக இருந்தது. பண்ணையிலுள்ள அனைவரும் தமது வருமானங்களைப் பொதுவாக்கி, கூடி உழைத்துப் பகிர்ந்து கொள்ளுதல் அங்கே கடமையாக்கப்பட்டன. தனது பெரும் வருமானம் அனைத்தையும் அவர் பண்ணையில் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தில் அவருக்கு நேரடியான பங்கில்லை என்றபோதிலும் இது ஒரு “மதச்சார்பற்ற குடியரசாகப்’ பிரகடனப்படுத்தப்பட்டதில் காந்தியின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. “மதச் சார்பின்மை’ (Secularism) என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஓர் அரசியல் சொல்லாடலாக மாற்றியமைத்ததில் காந்தியின் பங்கை இன்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண் விடுதலை குறித்துச் சனாதனமான கருத்துகளைப் பேசியதாகவே நாம் அவரை அறிந்து வந்துள்ளோம். ஆனால் பெண்களைக் குடும்பத்திற்குள் சிறைப்படுத்தாமல் ஆசிரம வாழ்விற்கும், அரசியல் களத்திற்கும் ஈர்த்தவர் அவர். அவரளவிற்குப் பெண்களைப் போராட்டக் களத்தில் இறக்கியவர்கள் யாருமில்லை. உப்புச் சத்தியாக்கிரகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

காந்தியை விமர்சிப்பவர்களில் பலர் அவரை முழுமையாக வாசித்ததில்லை. எனவே அவர் குறித்த தவறான புரிதல்கள் பல இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று,

“அவர் தீண்டாமையை எதிர்த்தபோதும் சாதியத்தை எதிர்க்கவில்லை; வருணாசிரமத்தை ஆதரித்தார்”

என்பது. இன்று உலகெங்கிலும் காந்தி மறுவாசிப்பிற்குள்ளாகிக் கொண்டுள்ளார். இத்தகைய மறுவாசிப்பாளர்களில் ஒருவரான அனில் நவுரியா கருத்தை ஆதாரபூர்வமாக மறுக்கிறார்.

1927-ல் சிங்களவர்கள் மத்தியில் பேசும்போது, “”மகிந்தரையும் பவுத்தத்தையும் உங்களுக்குத் தந்ததற்காக இந்தியா பெருமைப்படும் அதே நேரத்தில் சாதி வேறுபாடு எனும் சாபத்தையும் உங்களுக்கு அறிமுகம் செய்ததற்காக அது வெட்கப்படுகிறது” என்றார். சாதியை “”முன்னேற்றத்திற்குத் தடையானது” எனவும் “”சமூகக் கொடுமை”, “”காலத்திற்கு ஒவ்வாதது”, “”ஒழிக்கப்பட வேண்டியது” என்றும் தொடர்ந்து கூறி வந்தார்.

தொடக்க காலங்களில் அவர் வருணாசிரமத்தை ஆதரித்துக் கருத்துகள் கூறிய போது கூட தனது ஆசிரமங்களில் “வருணவியவஸ்தா’விற்கு இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். “”தீண்டாமை ஒழிப்போடு சேர்ந்து சாதியும் ஒழிந்தால் நான் ஒரு சொட்டுக் கண்ணீர் கூடச் சிந்த மாட்டேன்” என்றார் (1927). வருண முறையை ஆதரித்தபோதும்கூட அவர் பிறவியால் வருணமும், தொழிலும் தீர்மானிக்கப்படுதல் என்பதை ஏற்கவில்லை.

மதங்களில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். என்னுடைய மதத்தில் எனக்குக் கீழான ஒருவர் என்கிற கருத்து சாத்தியமில்லை என்றார். தலித்களுக்கும் மற்றவர்களுக்குமான திருமண உறவை வலியுறுத்தினார். “”இறுதியில் ஒரே சாதிதான் இருக்க வேண்டும். “பங்கி’ (துப்புரவாளர்) என்கிற அழகிய பெயருக்குரியது அது. அதாவது எல்லா அழுக்குகளையும் நீக்கிச் சீர்திருத்துபவர். அந்நிலை விரைவில் வர வேண்டுமென நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம்” என்றார் (1946).

சுதந்திர நாள் நெருங்கிய போது பிரார்த்தனைக் கூட்டமொன்றில் (ஜூன் 1, 1947) “”பங்கிகளின் ஆட்சி” இங்கே உருவாக வேண்டும் என்றார். தீண்டாமைக் கொடுமைக்குள்ளானவர்களிலும் ஆகக் கீழாக ஒதுக்கப்பட்டவர்களின் மீது அவரது கரிசனம் கூடுதலாக இருந்ததையே இது வெளிப்படுத்துகிறது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசும்போது (ஜூன் 14, 1947) சுதந்திர இந்தியாவில் சவர்ண ல அவர்ண வேற்றுமை ஒழிய வேண்டும் என்றார். சூத்திரர், தீண்டத்தகாதோர், ஆதிவாசிகள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றார். மற்றொரு பிரார்த்தனைக் கூட்டத்தில் (ஜூன் 2, 1947) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஒரு “”தலித் பெண்ணாக” இருக்க வேண்டும் என்றார்.

“தலித்’ என்கிற சொல்லையும் காந்தி 1927, 1931ம் ஆண்டுகளிலேயே பயன்படுத்தினார் என்பது நம்மை வியக்க வைக்கும் ஒரு செய்தி. “தலித்’ என்னும் சொல் “மிகச் சரியாகவே’ பயன்படுத்தப்படுகிறது எனக் கூறிய காந்தி, ஏனெனில் அம் மக்கள் (தானாக) “”அழுந்தியவர்கள்”(depressed) அல்ல; மாறாக “”அழுத்தப்பட்டவர்கள்” (Suppressed) என விளக்கமும் அளித்தார். எனினும் இத்தகைய சொற்கள் சுட்டும் சமூக நிலை ஒழிக்கப்பட்டு, இத்தகைய சொற்களே தேவையற்றதாகிவிட வேண்டும் எனவும் அவர் சொல்லத் தயங்கவில்லை (பார்க்க: தொகுப்பு 33, பக். 196 மற்றும் தொகுப்பு 46, பக். 342).

“”வருணாசிரமத்தை நம்புபவர்களாயினும் தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கக் கூடியவர்களையும் இணைத்து ஒரு கூட்டுப் போராட்டமாக” நடத்த நேர்ந்த அவசியத்தை அவர் விளக்கியுள்ளார் (1933). “”இப்போதைக்கு தீண்டாமை ஒழிப்போடு இது வரையறைப்படுத்தப்பட்டாலும், இறுதியில் வருணாசிரமம் தொடர்ந்து அவலட்சணமாகத் தோன்றினால் மொத்தமுள்ள இந்தச் சமூகமும் சேர்ந்து அதையும் எதிர்க்கும்” என்றார்.

காந்தியின் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் வருணாசிரம ஆதரவாளர்களிடமிருந்து உருவாகியது (1933-34). பிஹாரில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது கற்கள் வீசப்பட்டன. காசியில் கருப்புக் கொடிகள் காட்டப்பட்டன. பூனாவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் பலர் காயமடைந்தனர். தமிழகத்தில் காந்தியை வசைபாடி “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்‘ முதலிய நூற்கள் வெளியிடப்பட்டன (1932).

காந்தி கொல்லப்பட்டதற்கான காரணம் அவர் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்தது மட்டுமன்றி, தீண்டாமை, சாதி வேறுபாடு, வருணாசிரமம் ஆகியவற்றிற்கு எதிராக இருந்ததும் ஒரு காரணம் என இன்றைய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சாதி, வருணப் பிரச்சினையில் அவர் தொடர்ந்து தன்னை வளர்த்துக் கொண்டவராகவே காட்சியளிக்கிறார். “”நான் ஒரு கருத்தை ஏற்பது என்பது ஒன்று. சமூகத்திலுள்ள எல்லோரையும் அக் கருத்தை ஏற்பவர்களாகச் செய்வது என்பது வேறு. என் மனம் தொடர்ந்து முன்னோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். எல்லோரும் அதே வேகத்தில் என்னைப் பின்பற்றுவார்கள் எனச் சொல்ல இயலாது. எனவே நான் அதிகபட்சப் பொறுமையைக் கடைப்பிடித்து மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது” என்கிற அவரது தன்னிலை விளக்கம் குறிப்பிடத்தக்கது (1946).

மகாத்மா காந்தியின் இந்த முற்போக்கான நகர்வுக்கு அவரது சொந்த அரசியலனுபவங்கள் மட்டுமன்றி சம காலச் சிந்தனையாளர்களான அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஈ.வெ.ரா ஆகியோருடன் அவர் மேற்கொண்ட உரையாடல்களும், விவாதங்களும் ஒரு பங்கு வகித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Posted in A Marx, crimes, Dalit, Freedom, Gandhi, Harijans, Independence, Liberation, Mahathma, MK Gandi, Satyagraha, Tamil, Untouchability, Varnasramam | 3 Comments »

Dinamani Editorial on Eezham – Sri Lanka Situation

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

மற்றொரு முயற்சி

இலங்கையில் மீண்டும் லேசான நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது. அண்மைக்காலத்தில் நிகழ்ந்து வரும் ரத்தக்களரி ஓய்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

இலங்கையில் அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜூலை 22 லிருந்து செப்டம்பர் 26 வரை நடந்த சண்டையில் 200க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். இது, இலங்கைத் தீவில் மனிதாபிமானத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் சோதனையை வெளிப்படுத்துகிறது என்று அங்கு போர் நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நார்வே தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள பாசனக் கால்வாயை மூடியதால் ஆத்திரமடைந்த இலங்கை ராணுவம் கடும் தாக்குதல் தொடுத்தது. புலிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். அதே சமயம், திரிகோணமலை மாவட்டத்தில் ஏற்கெனவே புலிகள் வசம் இருந்த பகுதியை ராணுவம் கைப்பற்றியதால் சண்டை தொடர்ந்தது. இதன் மூலம் இரு தரப்பினருமே சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரலிலிருந்து அவ்வப்போது நடைபெறும் மோதல்களால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைக் காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று விட்டனர். இது நாட்டின் கிழக்கு வடக்குப் பகுதிகளில் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய நெடுஞ்சாலை ஒன்று கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் நாட்டின் இதர பகுதிகளிலிருந்து யாழ். நகரும், யாழ்ப்பாண தீபகற்பப் பகுதியும் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன. உணவுப்பொருள், மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல், இலங்கை செலாவணிப்படி ரூ. 500க்கு உயர்ந்து விட்டது. 10,000 பேர் கொழும்பு வழியாக திரிகோணமலை செல்ல அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். மேலும் நிதி நிறுவனங்களிலிருந்து பணம் எடுக்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வன்னி பகுதியில் பெரும்பாலான பொருளாதார, உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கியுள்ளன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2002 ல் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்த உடன்பாடு அர்த்தமில்லாததாகி விட்டது. எனவே, இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை முலம் தீர்வு காண இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமைதிப் பேச்சைத் தொடங்குவது குறித்து விவாதிக்க நார்வே தூதர் ஜான் ஹான்சன் பாயர் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வருகிறார். அமைதிப் பேச்சைத் தொடங்க புலிகள் தலைவர் பிரபாகரன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் முதலில் அரசுத் தலைவர்களையும் பின்னர் கிளிநொச்சி சென்று பிரபாகரனையும் சந்தித்துப்பேச திட்டமிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில் பிரபாகரனை நார்வே தூதர் சோல்ஹைம் சந்தித்துப் பேசினார். இதையடுத்து வன்முறை ஓய்ந்து அமைதிப் பேச்சு தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இரு தரப்பினரும் சந்தித்துப் பேச கடந்த 7 மாதங்களாக மேற்கொண்ட முயற்சி ஏதாவது ஒரு காரணத்தால் தள்ளிப்போடப்பட்டது. இப்போது அக்டோபர் 2 வது வாரத்துக்குள் பேச்சு தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை இரு தரப்பினரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான அடிப்படையை உருவாக்க வேண்டும்.

Posted in Dinamani, Editorial, Eezham, Ilanagai, Kilinochi, LTTE, Negotiation, Norway, Peace, Situation, Sri lanka, Tamil, Triconamalee, War | Leave a Comment »

Thyagi B Srinivasa Rao – R Nallakannu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

உழவர்களை ஒன்றுதிரட்டியவர்

ஆர். நல்லகண்ணு

உருகும் வேளையிலும் – நல்ல

ஒளி தரும் மெழுகு வர்த்தி

ஒளிதரும் வேளையிலும் – தியாக

உணர்வினைத் தூண்டி விடும்

உழவுத் தொழிலாளர்களின் உரிமைக்குப் போராடிய தியாகி பி. சீனிவாசராவ் (பிஎஸ்ஆர்) வாழ்க்கையை இப்பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது. கல்லூரிப் படிப்பின்போதே அன்னிய ஆட்சியை எதிர்த்து விடுதலை வேட்கையில் ஈர்ப்பு ஏற்பட்டது. பர்மா, ரங்கூன் நகருக்குச் சென்றவர், 23வது வயதில் சென்னை வந்தார்.

1930களில் அன்னியத் துணிப் புறக்கணிப்பு (பகிஷ்காரம்) பேரியக்கமாகப் பரவியது; சென்னை நகரத்தில் பூக்கடை பஜாரில் லங்காஷயர் மல்துணி விற்கப்பட்ட கடையில் நாள்தோறும் மறியல் செய்வார் பி.எஸ்.ஆர்.

ஒருநாள் கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் இறந்து விட்டாரென்று கால்வாயில் போட்டுச் சென்று விட்டனர்; இறந்துவிட்டதாக நாளேடுகளிலும் செய்தி வந்துவிட்டது; அவர் உயிர் பிழைத்து மீண்டும் களத்தில் இறங்கியதே உயிரோவியமான நிகழ்வாகும்.

ஓயாத சிறைவாசம்; சென்னை மத்திய சிறையிலிருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கான் ஆகியோரும் கைதிகளாக இருந்தார்கள். அமீர் ஹைதர்கான் கொடுத்த கம்யூனிஸ்ட் அறிக்கையைப் படித்து, விளக்கம் கேட்டுத் தெளிந்தார்; சென்னை சிறையிலிருந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு – விடுதலைப் போராளியாக மட்டுமல்லாமல், புரட்சியாளராகவும் வெளியே வந்தார்.

1940-ல் 2வது உலகப் போர் நடந்த போதும் யுத்த எதிர்ப்பில் பி.எஸ்.ஆர். கைது செய்யப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டம்; 1946ல் பம்பாய் துறைமுகத்தில் கடற்படையினர் நடத்திய போராட்டமும் அதை ஆதரித்து நடந்த நாடு தழுவிய எழுச்சியும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு சாவு மணியடித்தது; இப் போராட்டத்திலும் பி.எஸ்.ஆர். மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குப் பிடிவாரண்ட் போடப்பட்டது; பி.எஸ்.ஆர். தலைமறைவானார். தலைமறைவு அனுபவம் நூலாக வெளிவந்தது; இது கடித இலக்கியமாகக் கருதப்பட்டது.

சுதந்திர இந்தியாவிலும் பி.எஸ்.ஆருக்கு 1961 வரை போராட்டமே வாழ்க்கையாக இருந்தது. 1943ல் தமிழ்நாடெங்கும் கிராமப்புற உழவர் பெருமக்களை ஒன்று திரட்டும் பொறுப்பை ஏற்றார்.

பரம்பரை ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் சிதறிக் கிடந்த கிராமப்புற மக்களை ஒன்றுதிரட்டுவதில் சீனிவாசராவ் பெரும் பாடுபட்டார்; மக்களோடு இரண்டறக் கலந்து, மக்களின் குறைகளைக் கேட்டுத் தெரிந்து, ஏழை விவசாய மக்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் சங்கமாகத் திரட்டுவதில் முன்னணித் தலைவராக விளங்கினார்.

1947ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பண்ணையாட்களான விவசாயத் தொழிலாளர்களின் விடுதலைக்கான கிளர்ச்சியும் சாகுபடி விவசாயிகளின் உரிமைப் பாதுகாப்புக்கு நடத்த இயக்கங்களும் – பெரும் கலகமாகச் சித்திரிக்கப்பட்டன; இதை மறுத்து சீனிவாசராவ் “தஞ்சையில் நடப்பதென்ன?’ என்ற நூலை எழுதினார்.

சாதியால் சிதறுண்டு கிடந்த ஏழை விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் செங்கொடி இயக்கத்தின் கீழ் அணி திரட்டப்பட்டார்கள்; உரிமைக்காகப் போராடினார்கள்.

சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, பாதுகாப்புக்கான சட்டங்கள் இல்லாத காலத்தில், உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட சக்தியினால் தஞ்சை மாவட்ட மிராசுதாரர்களைப் பணிய வைக்க முடிந்தது; சவுக்கடி – சாணிப்பால் ஊற்றி அடிக்க மாட்டோம் என்று 1944ல் மிராசுதாரர்களைக் கையெழுத்திடச் செய்ய முடிந்தது.

  • சாகுபடியாளர்கள் நில வெளியேற்றத் தடைச் சட்டம்,
  • 60:40 நியாயவாரச் சட்டம்,
  • குடியிருப்பு மனைச் சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டு வரச் செய்ததோடு, அமலாக்குவதற்கும் தொடர்ந்து போராடுவது செங்கொடி இயக்கங்களாகும்.

1961ல் நில உச்சவரம்பு மசோதாவை அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது; ஒருவரோ – குடும்பமோ – 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் வைத்துக் கொள்ளும் உரிமையைக் கொடுத்தது. மிச்ச நிலமே கிடைக்காத அளவு மக்களை ஏமாற்றும் அந்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேரியக்கத்தை நடத்தியது; பி.எஸ்.ஆர். தலைமையில் கோவையிலிருந்தும், மணலி கந்தசாமி தலைமையில் மதுரையிலிருந்தும் 30 நாள் நடைப்பயணமாகச் சென்னை நகர் வந்தடைந்தனர்.

செப்டம்பரில் எல்லா மாவட்டங்களிலும், மசோதாவைத் திருத்தக் கோரி அறப்போர் நடந்தது. 16,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; சிறையிலேயே 4 தோழர்கள் இறந்தார்கள். சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர மாநில அரசு இசைந்தது.

முப்பது நாள் போராட்டம் முடிவுக்கு வருவதாக 1961 செப்டம்பர் 29ல் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டார் பி.எஸ்.ஆர்.

ஏற்கெனவே, ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த அலுப்பும், தொடர்ந்த சிறைவாசமும், அடக்குமுறையில் பெற்ற விழுப்புண்களும், ஆஸ்த்மா நோயும் அந்த மாவீரனின் உயிரைப் பறித்து விட்டது, செப்டம்பர் 30ல்.

பி.எஸ்.ஆர். பிறந்தது 1907 ஏப்ரல் 10.

கர்நாடக மாநிலம் படகாரா;

தந்தை பெயர் இராமச்சந்திர ராவ்.

54 ஆண்டுகளே வாழ்ந்த பிஎஸ்ஆரின் நூற்றாண்டு இவ்வாண்டு.

Posted in Ameer Hyderkhan, B Srinivasa Rao, BSR, Civil Disobedience, Communist, Farm Laborers, Farmers, Fighter, Freedom Fight, Independence, Movements, Nallakannu, Reform, Struggles, Subash Chandra Bose, Tamil | Leave a Comment »

Cheeta Military Helicopter crashes – Pilot and Two Trainees Dead

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பைலட், 2 பயிற்சியாளர் சாவு

நாசிக், செப். 30: நாசிக் அருகே ராணுவ ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய விபத்தில் பைலட் மற்றும் 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர்.

சீட்டா‘ ரக வகையை சேர்ந்த இந்த ஹெலிகாப்டர், சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸôர் தெரிவித்தனர்.

Posted in Aamir Khan, Cheeta, crash, dead, Helicopter, Madhavan, Military, pilot, Rang De Basanti, Tamil, Trainees | Leave a Comment »

The ills of Indian Agriculture – RS Narayanan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

புல்லும் ஓர் ஆயுதம்

ஆர்.எஸ். நாராயணன்

இருபத்தி ஐந்து மாடுகளை வைத்துக்கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் எங்களுக்குத் தீவனத் தட்டுப்பாடு வந்தது. இதைச் சரி செய்யப் புல் வளர்க்க யோசித்தோம். மானாவாரியாக எதைப் பயிர் செய்யலாம், பாசனமாக எதைப் பயிர் செய்யலாம் என்று திட்டமிட்டு புல்விதை விலைகளை விசாரித்தோம். மயக்கம் வந்துவிட்டது. குதிரை மசால் விதையின் விலை கிலோ ரூ. 200. கொழுக்கட்டைப்புல் விதை ரூ. 90. நெல் விதை 6 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

இந்தியாவின் விவசாயப் பிரச்சினைகளை நெல்லால் தீர்க்க முடியாதபோது, புல்லால் தீர்த்து விடலாம் என்று தோன்றுகிறது. மாடுகளையும் பட்டினி போட வேண்டாம். பச்சைப்புல்லைக் கொடுத்தால் பாலும் நிறையக் கிடைக்குமே. பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்த்தபோது டாக்டர் ராமசாமி, ஐ.ஐ.ங. பேராசிரியர் (ஓய்வு), கூறிய கருத்து மனத்தில் பளிச்சிட்டது. அவர் இவ்வாறு கூறுகிறார்: காளை மாடுகளை உழவுக்கும், பாரம் சுமக்கும் வாகனமாகவும் பயன்படுத்தினால் 60 லட்சம் டன் பெட்ரோலியத்தை மிச்சப்படுத்தலாம்.

இதன் மதிப்பு ரூ. 20,000 கோடி. நவீன முறையில் வண்டிகளைத் திருத்திச் சில மாற்றங்களைச் செய்தல், கால்நடைகளுக்கு நல்ல தீவனம் வழங்கிப் பராமரித்தல் ஆகிய தொழில்கள் மூலம் கிராமங்களில் 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கலாம். நாட்டுக்கும் நன்மை. ராமசாமியின் கருத்துப்படி இந்தியக் கால்நடைத்துறை – கால்நடைகள் மூலம் பெறும் வருமான மதிப்பு – மொத்த எசட யில் ஏழு சதவீதம். ஆனால் கால்நடை மேம்பாட்டுக்கும் புல் வளர்ப்புக்கும் செலவுத்திட்டம் (  allocation) 0.3 சதவீதமே என்று நொந்து கொள்கிறார்.

மீளுமா இந்திய வேளாண்மை? என்று எஸ். ஜானகிராமன் ஒரு கொக்கி போட்டுள்ளார் (22-8-06 துணைக்கட்டுரை). அரசு வழங்கும் மானியங்களைக் கால் பங்காகக் குறைத்து விட்டு வேளாண்மைப் பொது முதலீட்டை நான்கு பங்காக உயர்த்தக் கோரியுள்ளார். மானியங்களைக் குறைக்க வேண்டாம். இந்த மானியங்கள் நிஜமாகவே விவசாய உற்பத்திக்கு வழிவகுத்துள்ளதா என்று யோசித்து இதனால் யார் பயனடைகிறார்கள் என்று பார்ப்பது நல்லது.

  • உர மானியம் என்பது மண் வளத்தை அழிக்கும் ரசாயன உரக் கம்பெனிக்கு வழங்கப்படுகிறது.
  • கருவிகள் – இயந்திர மானியம், டிராக்டர் கம்பெனிக்கு வழங்கப்படுகிறது.
  • இதே மானியத்தை இயற்கை இடுபொருள்களுக்கும், கால்நடை – தீவனப் பராமரிப்புக்கும் மாற்றியமைத்துவிட்டாலே போதும். இந்தியா ஒரு வல்லரசாக மாறிவிடும்.

உலகில் பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா செலவிடும் மானியம் குறைவுதான். உலகளாவிய அளவில் ஒரே சட்டம் அமல் செய்து விவசாயிகளுக்கு இவ்வாறு மறைமுகமாக வழங்கப்படும் மானியம் நிறுத்தப்பட்டு விட்டால், முதலில் அழிவது அமெரிக்காதான். அமெரிக்காவில் சிறு விவசாயி என்பவருக்கு 1,000 ஹெக்டேர் நிலம் இருக்கும். எல்லா அமெரிக்க விவசாயிகளும் ஹைடெக் . அங்கு தேச வருமானத்தின் பெரும்பகுதி இந்த ஹைடெக் விவசாயத்திற்குச் செலவாகிறது. இந்த ஹைடெக் விவசாயம் முழுக்க முழுக்க மானியத்தை நம்பியுள்ளது. ஓர் இந்திய விவசாயி மானியத்தை நம்பாமல் தனித்து இயங்கும் வாய்ப்பு இங்கு உள்ளதுபோல் வேறெங்கிலும் இல்லை. அடித்தளமே இல்லாத அமெரிக்க விவசாயத்தை விடவும் ஒரு பலமான வாழ்வியல் அடித்தளத்துடன் இயங்கும் இந்திய விவசாயத்தை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள, விவசாயம் பற்றி மகாத்மா காந்தியும் ஜே.சி. குமரப்பாவும் எழுதியுள்ளதைப் படித்தாலே போதுமானது. தீர்க்க தரிசனம் புலப்படும்.

இந்தியாவில் விவசாயப் பொருளாதார மேம்பாட்டுக்குத் திட்டமிடும் வல்லுநர்கள், அடித்தளம் இல்லாத அமெரிக்காவை மாடலாக வைத்து உருவாக்கிய திட்டத்தில் ரசாயன உரங்களுக்கும் – டிராக்டர் போன்ற இயந்திரங்களுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.

அமெரிக்காவில் கிராமங்களே இல்லை. இரண்டு ஏக்கர் திட்டமும் இல்லை. இருக்கும் இரண்டு ஏக்கரில் 8 துண்டு. “”துண்டு” என்று நான் அதைச் சொல்லவில்லை. 25 செண்டு என்ற sub division Fragmentation  என்று கூறப்படும் துண்டான நிலத்தை நினைவில் கொள்ள வேண்டும். இதையே “”இந்திய விவசாயத்தைப் பற்றியுள்ள நோய்”   என்று மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். குமரப்பாவும் காந்தியும் இதை நோயாகப் பார்க்காமல், “”காளை உழவுக்கு ஏற்ற கால்காணியே விவசாயிகளை வாழ வைக்கும்” என்று புரிய வைத்தும் நாம் புரிந்து கொள்ளாமல், சந்தைப் பொருளாதாரத்திற்கு ஏழை விவசாயிகளை அடிமைகளாக்கி, நகரத்துச் சேரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்.

“”முத்ரா ராக்ஷசம்” என்ற சம்ஸ்கிருத நாடகத்தை மையமாக வைத்து ஆர்.எஸ். மனோகரின் நாடகமான சாணக்கிய சபதத்தில் ஒரு காட்சி வரும். சாணக்கியர், “”அர்த்த சாஸ்திரம்” எழுதியவர். அதாவது “”பொருளாதார விஞ்ஞானம்”. அப்படிப்பட்ட அறிஞர், ஒரு புல் தடுக்கி விழுந்துதான் சபதம் செய்தாராம். இந்தியாவுக்கு முதல் பொருளாதாரத் திட்டத்தை வகுத்துக் கொடுத்த மாபெரும் ராஜதந்திரியை ஒரு புல் வீழ்த்தியுள்ளது. புல்லை நாம் அலட்சியப்படுத்த முடியாது. வல்லவர்களான இந்திய விவசாயிகளுக்கு இன்று நெல்லைவிடப் புல்லே நல்ல ஆயுதமாகப்படுகிறது.

Posted in Agriculture, Budget, Farmer, Finance, Grants, India, Policy, Strategy, Subsidy, Tamil, USA | Leave a Comment »