Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sentence’ Category

State of the Justice system & Judiciary process in Tamil Nadu – Law & Order perspectives

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

ஏன் இந்த பாரபட்சம்?

மற்ற விஷயங்களில்தான் தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றால் நீதித்துறையிலும் தமிழகம் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் நீதிநாள் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷாவே இதைத் தெரிவித்திருக்கிறார் எனும்போது, நமது கோபத்தில் நியாயம் இருப்பது புரியும்.

அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால்தான் வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலைமை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமையிலும் இருக்கும் பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனும் இந்த விஷயத்தில் நமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்தைத்தான் புதுதில்லியில் நடந்த “நீதி நாள்’ விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவின் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரையிலான அத்தனை நீதிமன்றங்களையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை வெறும் 14,477தான். அதிலும் 2,700 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் நீதி வழங்குவது என்பது இயலாத விஷயம் என்று பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?

மற்ற எல்லா துறைகளுக்கும் ஆயிரம் கோடிகளில் நிதி ஒதுக்கித் தரும் மத்திய அரசு, நீதித்துறைக்கு கடந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கித் தந்திருக்கும் நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 700 கோடி. அதாவது, மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 0.078 சதவீதம். போதிய நிதி வசதி இல்லாதபோது நீதிபதிகளை நியமிப்பது எப்படி, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவது எப்படி, தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்குவது எப்படி?

கடந்த பத்து ஆண்டுகளாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும்தான் முடிவெடுக்கின்றன என்றாலும், தாங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலை அந்தந்த மாநில முதல்வர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவது என்கிற வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அரசியல் மனமாச்சரியங்கள் பல தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளின் தலையெழுத்தை மாற்றும் துர்பாக்கியம் எல்லா மாநிலங்களிலும் தொடர்கிறது. இதற்கு யார் முடிவு கட்டுவது என்று தெரியவில்லை.

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,58,900 முக்கிய வழக்குகளும், 1,27,060 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் இருந்ததுபோய், இப்போதைய நிலவரப்படி, 2,05,194 முக்கிய வழக்குகளும், 2,15,736 சிறு குற்றங்களுக்கான வழக்குகளும் நமது தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இத்தனைக்கும், அகில இந்திய சராசரியைவிட அதிகமான அளவுக்குத் தமிழக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையான 49 பேரில் தற்போது நியமிக்கப்பட்டிருப்பது என்னவோ 45 நீதிபதிகள்தான். இன்னும் நான்கு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் இதுவரை தமிழகத்தைப் பொருத்தவரை நியாயம் கிடைத்தபாடில்லை.

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கருத்தில்கொண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மற்ற உயர் நீதிமன்றங்களைப்போல, சென்னை உயர் நீதிமன்றமும் கோரிக்கை வைத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 49-லிருந்து 69 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய நீதித்துறைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைத்தும் எந்தவிதப் பயனும் இல்லை.

மும்பை, தில்லி, அலகாபாத், கேரளம் போன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி உத்தரவு பிறப்பித்த மத்திய சட்ட அமைச்சகம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கோரிக்கையை மட்டும் பரிசீலிக்காமல் இருப்பது ஏன்? இத்தனைக்கும் மத்திய அரசில் சட்டத்துறையின் இணையமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அதுதான் வேடிக்கை!

———————————————————————————————————–

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி

கே.வீ. ராமராஜ்

குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குற்றவாளிகளும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பிரகடனங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், மனித உரிமைச் சட்டம் போன்றவற்றின் மூலம் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு இணையாக குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதில் மேம்பாடு அடையாமல், அவர்கள் மறக்கப்பட்ட மக்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்டோருக்கு உறுதியாக உதவும் வகையில் குற்றவியல் விசாரணைச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முதலாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையம், நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நல்ல முறையில் கவனிப்பதோடு பாதிக்கப்பட்டோருக்கான நீதி எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டோரின் உடைமைகள் கிடைக்கப்பெறுதல் உள்பட எல்லா அம்சங்களிலும் அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.

மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ இழப்பீடு கிடைக்க வேண்டும்.

நான்காவதாக, மருத்துவ உதவி, பொருள் உதவி, உளவியல் ரீதியில் உதவி உள்ளிட்ட சமூக உதவிகள் கிடைக்க வேண்டும்.

நமது நாட்டைப் பொருத்தவரை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுப்பவர்களாக, நீதிமன்றத்தில் சாட்சிகளாக மட்டுமே உள்ளனர். அவர்கள் குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. இந்திய குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 357-வது பிரிவு குற்றவாளி என தீர்ப்பு செய்யப்படுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதியை பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கலாம் எனத் தெரிவிக்கிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் போகும்போதும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.

குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைச் சிறப்பாக வழங்க மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை 1998-ல் “”பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கையேடு” ஒன்றையும் அதனை அமலாக்க “”கொள்கைகள் உருவாக்குபவர்களுக்கான வழிகாட்டியையும்” வெளியிட்டது. இதைப் பின்பற்றி பாதிக்கப்பட்டோர் நீதிக்கான கொள்கைகள் இந்தியாவில் வகுக்கப்பட வேண்டும்.

குற்றங்களால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்கான மாதிரி சட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் இந்திய பாதிக்கப்பட்டோரியல் கழகம் மத்திய அரசிடம் பத்தாண்டுகளுக்கு முன்பே சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே முதன்முறையாக பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆதரவோடு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டோரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.

குற்றம் நிகழும்போது பாதிக்கப்பட்டவர் எவ்வாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்? முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காவல் துறையினர் தாமதம் செய்தால் என்ன செய்ய வேண்டும்? புலன் விசாரணை செய்வதில் காவல் துறையினர் கவனக்குறைவாகச் செயல்பட்டால் என்ன செய்வது, போன்ற வழிகாட்டுதலை மேற்கொள்ள பாதிக்கப்பட்டோர் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.

காவல் துறையினர் கைப்பற்றிய பாதிக்கப்பட்டோரின் சொத்துகளை அவர்கள் எளிதில் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெறவும், குற்றவியல் விசாரணை முறைகளைப் பாதிக்கப்பட்டோர் அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டோரும் சாட்சிகளும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம் அளிப்பதில் உள்ள பிரச்னைகளைக் களையவும் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்கள் பணியாற்ற வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞருடன் பாதிக்கப்பட்டவர் தாமோ அல்லது தமது வழக்கறிஞர் மூலமோ இணைந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும்போதும் குறைந்த தண்டனை வழங்கப்படும்போதும் மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியற்றவர்களுக்கு அரசே வழக்கறிஞரை அமர்த்தித் தர வேண்டும். இதுகுறித்து மாலிமத் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

தேசிய அளவிலும் மாநில அளவிலும் “”பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியம்” ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் ஆணையாளர் (ஆம்புட்ஸ்மேன்) அலுவலகங்களை அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி, அதன் கீழ் பாதிக்கப்பட்டோர் உதவி மையங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இவை அனைத்தும் இலவச சட்ட உதவிகள் வழங்கும் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் மேற்பார்வையில் செயல்படலாம்.

மேலை நாடுகளில் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ தன்னார்வ அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்று உதவ தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.

Posted in Accused, Allegations, Allocations, Attorney, Bench, Budget, Cabinet, Center, Convicts, Courts, Criteria, Culprits, Economy, Funds, Govt, HC, HR, Judgements, Judges, Judgments, Judiciary, Jury, Justice, Law, Lawyers, Ministry, Numbers, Op-Ed, Order, Perspectives, quantity, rights, SC, selection, Sentence, Sentencing, Tamil Nadu, TamilNadu, Verdicts | Leave a Comment »

Sanjay Dutt sentenced to 6 years in prison – Film fraternity rallies behind & to appeal against verdict

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெற்றிக்கண்: சஞ்சய் தத் – கோடே

IdlyVadai – இட்லிவடை: சஞ்சய் தத்துக்கு 6 ஆ�

சற்றுமுன்…: பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

சற்றுமுன்…: சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

சிவபாலன்: நீயூஸ் மீடியாக்களை எத


பாதியில் சினிமா படம்: சஞ்சய்தத்தண்டிக்கப்பட்டால் ரூ. 100 கோடி இழப்பு மும்பை, ஜுலை. 31-மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். அவருக்கு இன்று மும்பை தடா கோர்ட்டு தண்டனை என்ன என்பதை அறிவிக்கிறது. அந்த தீர்ப்பை மும்பைபட உலகம் மிக, மிக ஆர்வமாக எதிர்பார்த்து உள்ளது.சஞ்சய்தத் கைவசம் தற்போது

  1. மெகபூபா,
  2. தாமால்,
  3. கிட்நாப்,
  4. அலிபாக்,
  5. மிஸ்டர் பிராடு

ஆகிய 5 படங்கள் உள்ளன. இதில் மெகபூபா படம் தீபாவளிக்கு வர உள்ளது. தாமால் படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன.
மிஸ்டர் பிராடு, அலிபாக், கிட்நாப் ஆகிய 3 படங்களும் தற்போது பாதி முடிந்த நிலையில்தான் உள்ளன. சஞ்சய்தத் தண்டிக்கப்பட்டால், இந்த 3 படங்களும் முடிவடை வதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் இந்த 3 படத் தயாரிப்பாளர்களும் கையை பிசைந்தபடி உள்ளனர். சஞ் சய்தத் ஜெயிலில் அடைக்கப் பட்டு விடுவாரோ என்று இவர்கள் 3 பேரும் கவலையில் உள்ளனர்.

மிஸ்டர் பிராடு படத்தின் சூட்டிங் 50 சதவீதமே முடிந் துள்ளது. அது போல கிட்நாப்படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் இருக்கிறது.

இந்த 3 படங்களையும் திட்டமிட்டப்படி முடிக்காமல் போனால் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் தண்டனை விதிக்கப்பட்டா லும் அப்பீல் செய்ய இருப்ப தாக சஞ்சய்தத் தரப்பில் கூறப் பட்டுள்ளது. எனவே குறிப் பிட்ட கால அவகாசத்துக்குள் 3 படத்தையும் முடித்துக் கொடுத்து விடுவேன் என்று சஞ்சய்தத் கூறி உள்ளார்.

இந்த 3 படங்கள் தவிர வேறு எந்த பட வாய்ப்பை யும் சஞ்சய்தத் ஒத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டு தீர்ப்பை எதிர் நோக்கியுள்ள அவர் சொந்தமாக “பீகேட்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
———————————————————————————————————-

14 ஆண்டுகளாக நடந்த விசாரணை

எதிர்பாராத திருப்பங்களையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்த 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை 1994 ஆம் ஆண்டில் தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு வரை நீதிபதி ஜே.என்.படேல் இந்த வழக்கை விசாரித்து வந்தார். பிறகு நீதிபதி பி.டி.கோடே வழக்கு விசாரணையை ஏற்றார்.

257 உயிர்களை பலிகொண்ட இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 100 பேர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டது. இவர்களில் 47 பேர் மீது ஆயுதங்களை கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்ட டைகர் மேமனின் சகோதரர் யாகூப் மேமன் உள்ளிட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த 10 மாதங்களுக்குப் பிறகு புலன் விசாரணை மேற்கொண்ட சிபிஐ போலீஸôர் யாகூப், எஸ்ஸô, யூசுப் உள்ளிட்ட 44 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரினர். ஆனால் எஸ்ஸô, யூசுப் ஆகியோர் உடல் நலமில்லாமல் இருப்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளின் 13 ஆயிரம் பக்க வாக்கு மூலங்களும், 7 ஆயிரம் பக்க ஆவணங்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் 6,700 பக்க வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

684 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். அப்போது 38,070 கேள்விகள் கேட்கப்பட்டன.

குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட 100 பேருக்கான தண்டனைகள் மே 18 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டன.

———————————————————————————————————-
சோதனை மேல் சோதனை முன்னாபாய்க்கு!

சுநீல் தத், நர்கீஸ் என்ற நட்சத்திர தம்பதிகளின் ஒரே புதல்வர்தான் சஞ்சய் தத். செல்வச் செழிப்பிலே, ஏவலாளிகளின் அரவணைப்பிலே வளர்ந்தாலும் சிறு வயது முதலே சாதுவாகவும், சில வேளைகளில் அடக்கவே முடியாத விஷமக்காரராகவும் இருந்திருக்கிறார்.

பாசத்தைப் பொழிய இரு சகோதரிகள் பிரியா, நம்ரதா. நெருக்கடி நேரத்தில் துணை நிற்க மைத்துனர் குமார் கெüரவ். அன்பு செலுத்த அமெரிக்காவில் உள்ள மகள் திரிஷலா என்று உறவினர்கள் அளிக்கும் ஆதரவினால் மனம் தளராமல் இருக்கிறார் சஞ்சய் தத் (48).

சிறு வயதிலேயே கெட்ட சகவாசத்தால் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டார். தந்தை சுநீல் தத்தின் அன்பான அரவணைப்பு காரணமாக அதிலிருந்து மீண்டார்.

பிறகு ரிச்சா சர்மாவை காதலித்து மணந்தார். அவர் புற்றுநோய் காரணமாக இறந்தார். அதற்கும் முன்னதாக தாய் நர்கீஸ் தத்தை அதே புற்றுநோய்க்குப் பலி கொடுத்தார்.

தாயின் மரணம், மனைவியின் மரணம் ஆகியவற்றால் மிகவும் மனம் உடைந்துபோன சஞ்சய் தத், ரியா பிள்ளையை மணந்தார். ஆனால் அந்த மண வாழ்க்கையில் நிம்மதி கிடைப்பதற்குப் பதிலாக நிம்மதி தொலைந்தது. இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது.

இந் நிலையில்தான், மும்பையில் வகுப்புக் கலவரம் வெடித்தபோது சஞ்சய் தத்தை வினோத பயம் கவ்வியது. நிழல் உலக தாதாக்களின் மிரட்டல் காரணமாக தங்களுடைய குடும்பத்தாருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய சஞ்சய், யார் மூலமோ பிஸ்டலையும் ஏ.கே. 56 ரக துப்பாக்கியையும் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டார். சட்டவிரோதமாக ஆயுதத்தை வாங்கிய குற்றத்தோடு, அதை சமூகவிரோத கும்பலிடமிருந்து வாங்கியதே இந்த வழக்கில் அவரைச் சேர்க்கக் காரணமாக இருந்துவிட்டது.

அதன் பிறகு கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தந்தை சுநீல் தத் பக்கபலமாக இருந்து அவரைத் தேற்றினார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் எல்லா தலைவர்களையும் சந்தித்து தமது மகனின் விடுதலைக்கு பாடுபட்டார். அதற்குப் பலனும் கிடைத்தது. அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு சுநீல் தத் மரணம் அடைந்தார். சகோதரி பிரியா தத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மைத்துனர் குமார் கெüரவ் வீட்டிலேயே தங்கி அவருக்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்.

முன்னாபாய்: அவருடைய திரை வாழ்விலும் மீண்டும் வசந்தம் துளிர்விட்டது. “”முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.” என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்பும் வேடமும் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வசூலில் சக்கைபோடு போட்டது. அடுத்த படமும் அந்தக் கதையையொட்டியே வெளியானது. திரைவாழ்க்கையில் சாதனையின் உச்ச கட்டத்துக்கு சென்றுவிட்டார் சஞ்சய் தத். இந் நிலையில்தான் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

இப்போது சஞ்சயின் குடும்பத்தார் மட்டும் அல்ல, முன்னா பாயின் ரசிகர்களும் துணைக்கு இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும் மன வலிமையையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

———————————————————————————————————-

கண்டிப்பான நீதிபதி, கனிவான கனவான்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள தடா நீதிமன்ற நீதிபதி பிரமோத் தத்தாராம் கோடே (54) கண்டிப்பான நீதிபதி, கனிவான மனிதர்.

ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் விசாரித்தது, ஒரே வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது, ஒரே நீதிமன்றத்தில் நீண்ட நாள்கள் நீதிபதியாக பணியாற்றியது போன்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டும் அல்ல, அவரைப் பற்றிய பல தகவல்கள் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் அவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரையும்கூட கவர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

இசட் பிரிவு பாதுகாப்பு:

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தது முதலே அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. உருது மொழியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் அனைத்துமே, குற்றம்சாட்டப்பட்டவர்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பித்தன. எனவே அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது. எனவே அவருடைய நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவருடைய உயிரை 25 லட்ச ரூபாய்க்கு அரசே இன்சூர் செய்துள்ளது.

ஆர்தர் சாலையில் உள்ள சிறையில், பலத்த பாதுகாப்புக்கு உள்பட்ட கட்டடத்திலேயே இந்த விசாரணை முழுக்க 1996 முதல் நடந்து முடிந்துள்ளது. ஜே.என். படேல் என்ற நீதிபதியிடமிருந்து பொறுப்பை ஏற்றது முதல் விடாமல் விசாரித்து வந்தார்.

வேலையில் அக்கறை உள்ளவர்.

விடுமுறை எடுக்காதவர். 13,000 பக்கங்கள் வாய்மொழி சாட்சியங்களையும், 7,000 பக்கங்கள் ஆவண சாட்சியங்களையும், 6,700 பக்க வாக்குமூலங்களையும் படித்துப் பார்த்தும் 686 சாட்சிகளை விசாரித்தும் இந்தத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

100 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் 67 பேருக்கு வெவ்வேறு விதமான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறையே எடுக்கமாட்டார்:

விசாரணையை ஏற்றது முதல் விடுப்பு எடுத்ததே இல்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால் சில நாள்கள் மட்டுமே வராமல் இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கோடேவின் தந்தை இறந்தார். இறுதிச் சடங்கை முடித்துவிட்டு நேராக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். தாயார் இறந்த அன்று விடுப்பு எடுக்காமலேயே இறுதிச் சடங்கைச் செய்து முடித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் நோய்ப்படுக்கையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க வேண்டும் என்றாலோ, இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினாலோ, அந்த நாள் விடுமுறையாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து விசாரித்து, அவருடைய கோரிக்கையை ஏற்று அனுமதி தருவார். எனவே பல எதிரிகள் அவரை வாழ்த்திப் பாராட்டுகின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்த பிறகு நடந்த விசாரணைக்கு நடிகர் சஞ்சய் தத் வரவில்லை. அவருக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி கோடே, ஏன் வரவில்லை என்று கேட்டார். அமெரிக்காவிலிருந்துவர விமானம் கிடைக்காததால் தாமதம் ஆனது என்று கூறி வருத்தம் தெரிவித்தார் சஞ்சய் தத்.

சாய் பாபாவின் பக்தரான கோடே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கோரியபோது உடனே அளித்து அனுப்பிவைத்திருக்கிறார்.

ஹிந்தி திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார். கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது பிடிக்கும். ஆனால் மரண தண்டனை அளித்தபோது, இதைவிட பெரிய தண்டனை தர முடியாது என்பதால் மரண தண்டனை அளிப்பதாகக் கூறியிருக்கிறார்.

மும்பை அரசு சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். 1987-ல் அரசு வழக்கறிஞரானார். பிறகு சிவில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியானார். நேர்மை, திறமை காரணமாக 1993-ல் முதன்மை நீதிபதியானார். 1996 மார்ச் முதல் சிறப்பு தடா நீதிமன்ற நீதிபதியானார்.

———————————————————————————————————-

சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல்

பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.25,000 அபராதம் ஆகியவற்றை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. பிறகு அவர் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவரும் “தடா’ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோடே இந்தத் தண்டனைகளை விதித்தார்.

“காவல்துறையின் உரிய அனுமதியின்றி ஆயுதச் சட்டத்துக்கு விரோதமாக, “பிஸ்டல்’ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கியையும், “”ஏ.கே. 56” ரக தானியங்கி இயந்திரத் துப்பாக்கியையும் வைத்திருந்தது, பிறகு அவற்றை 3 நண்பர்கள் மூலம் அழித்தது, மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்புகள் மூலம் மிகப்பெரிய நாசவேலைகளை நடத்திய சமூக விரோதி அனீஸ் இப்ராஹிமுக்கு நண்பனாக இருந்தது, அவருடைய சகோதரரான தாவூத் இப்ராஹிமை துபையில் நடந்த விருந்தின்போது சந்தித்தது போன்ற குற்றங்களைச் செய்ததாக சஞ்சய் தத் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மும்பை கலவரத்தின் முக்கிய சதிகாரர்களிடமிருந்து ஆயுதங்களை சஞ்சய் தத் வாங்கியிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அவர் 18 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார்; அதன் பிறகு அவருடைய நடத்தை கண்காணிக்கப்பட்டு நல்ல நடத்தையுடன் இருப்பதாக சான்றும் பெறப்பட்டது. அத்துடன் சமூகத்தின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள 4 பிரமுகர்கள், அவருக்கு நற்சான்றுப் பத்திரங்களை வழங்கியிருந்தனர். இவ்வளவுக்குப் பிறகும் அவருக்குத் தண்டனை விதிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

தவறு செய்துவிட்டேன்: நீதிபதி இத் தீர்ப்பை வாசித்தபோது சஞ்சய் தத்தின் உடல் லேசாக நடுங்கியது. முகத்தில் அச்சம் தெரிந்தது. கண்களில் கண்ணீர் திரள, தான் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புவதாக நீதிபதியைப் பார்த்துக் கூறினார். அதை நீதிபதி அனுமதித்தார்.

குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்ற சஞ்சய் தத், நீதிபதியை நோக்கி கூப்பிய கைகளுடன், “”14 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தவறு செய்துவிட்டேன்; சரண் அடைய எனக்கு அவகாசம் தாருங்கள்” என்று உடைந்த குரலில் கூறினார். நீதிபதி கோடே அவரைப் பார்த்து, “”எல்லோருமே தவறு செய்கிறார்கள்” என்றார்.

நீதிமன்றத்தில் சரண் அடைய என்னுடைய கட்சிக்காரருக்கு (சஞ்சய் தத்) கால அவகாசம் தரக்கோரி விரிவான மனுவைத் தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார் சதீஷ் மணிஷிண்டே. அதுவரை சஞ்சய் தத்தைப் போலீஸôர் கைது செய்யவோ, சூழ்நது நிற்கவோ கூடாது என்று வேண்டிக்கொண்டார்.

அதை நீதிபதி ஏற்று, சஞ்சய் தத் அருகில் செல்ல வேண்டாம் என்று போலீஸôருக்கு அறிவுறுத்தினார். பிறகு வாதங்களைக் கேட்டுவிட்டு, அவ்விதம் ஜாமீன் தர சட்டத்தில் வழி இல்லை என்று கூறி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க வேண்டும் என்று சஞ்சய் கோரினார். அதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார்.

நீதிபதி கோடே, சஞ்சயின் அந்த கோரிக்கையைத் தாற்காலிகமாக ஏற்பதாகக் கூறி, ஆர்தர் சாலை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டார்.

சஞ்சய் தத்துடன் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரூசி முல்லா என்ற அவருடைய நண்பரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் அவரை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு சொத்து ஜாமீன் அளிக்குமாறு கூறினார்.

யூசுப் நல்வாலா, கேர்சி அடஜானியா என்ற வேறு இரு நண்பர்களுக்கு சிறைத் தண்டனை விதித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததற்காக 5 ஆண்டுகளும், வழக்கின் முக்கிய சாட்சியமான அதை அழித்ததற்காக 2 ஆண்டுகளும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று யூசுப் நல்வாலா என்பவருக்குத் தண்டனை விதித்தார். இவ்விரு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார்.

கேர்சி அட்ஜானியாவின் பட்டறையில்தான் பிஸ்டலும் ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அழிக்கப்பட்டன. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நல்வாலா, அட்ஜானியா ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. நல்ல நடத்தையின் பேரில் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் சஞ்சய் தத் கோரியிருந்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்தார்.

சட்டவிரோதமாக ஒன்றல்ல, இரண்டு ஆயுதங்களை வைத்திருந்தீர்கள், அதிலும் ஏ.கே. 56 ரக துப்பாக்கி தற்காப்புக்கானது அல்ல, மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தக்கூடிய நவீன கொலைக் கருவி; இவற்றை வைத்திருப்பது தவறு என்று தெரிந்தவுடன் போலீஸôரிடம் ஒப்படைக்காமல் 3 பேரை இதில் ஈடுபடுத்தி அவர்களிடம் தந்து அழித்திருக்கிறீர்கள். இதைச் சாதாரணமான செயலாகக் கருதிவிட முடியாது என்று நீதிபதி கோடே சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஜ்வல் நிகமைப் பார்த்து, உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.

“3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கும்படியான குற்றத்தைச் செய்த எவரையும் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்ய சட்டத்தில் வழி இல்லை’ என்று உஜ்வல் நிகம் அவருக்குப் பதில் சொன்னார்.

வழக்கு முடிந்ததும் நடிகர் சஞ்சய் தத், உஜ்வல் நிகமிடம் சென்று, “”நன்றி ஐயா” என்று கூறி கையை குலுக்கினார்.

———————————————————————————————————-

சஞ்சய்தத்துக்கு ஜெயில் இந்தி சினிமா உலகில் ரூ.80 கோடி இழப்பு

மும்பை, ஆக. 1-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய்தத் கைதாகி முன்பு ஜெயலில் இருந்த போது இந்தி சினிமா உலகில் பல கோடி இழப்பு ஏற்பட்டது.

இப்போது 6 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் அதே போன்ற இழப்பை மீண்டும் இந்தி சினிமா உலகம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சஞ்சய்தத் வாழ்க்கை யில் சோகமே தொடர் கதை யாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் போதை பழக்கம் தொற்றிக் கொண்டது. இதில் அடிமை யாகி கஷ்டப்பட்ட அவர் அதில் இருந்து ஒரு வழியாக மீண்டு வெளியே வந்தார்.

இந்த நிலையில் திருமணம் நடந்தது. நடிகை ரிச்சாசர்மாவை திருமணம் செய்தார். அவர் இறந்து விட்டார். அடுத்து 2-வதாக ரீனா பிள்ளையை திருமணம் செய்தார். இந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. ரீனா பிள்ளை விவாகரத்து ஆகி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவரது ஆரம்ப கால வாழ்க்கை அவரை மோசமாகவே சித்தரித்தது.

ஆனால் அவருடைய படங்கள் வெற்றிக் கொடி காட்டியதால் அவருக்கு இருந்த கெட்டப் பெயர் மறைந்து நல்லவர் என்ற இமேஜை ஏற்படுத்தியது.

இந்தி சினிமா உலகில் அவரது படங்களுக்கு என்று ஒரு மவுசு ஏற்பட்டது. ரசிகர்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதன் விளைவு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய்களை சம்பாதித்து கொடுத்தது.

இடையில் குண்டு வெடிப்பு வழக்கில் அவர் கைதாகி ஜெயிலில் இருந்த போது கூட அவர் மவுசு குறையவே இல்லை.

முதலில் அவருடைய கல்நாயக் படம் பெரும் வெற்றி பெற்றது போல மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி தவித்த நேரத்தில் நடித்த முன்னா பாய் படமும் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் மட்டும் ரூ.70 கோடி வரை லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.

சஞ்சய்தத் படம் என்றால் எத்தனை கோடி வேண்டு மானாலும் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். அவர் நடித்த விளம்பர படங்களுக்கும் நல்ல மவுசு இருந்தது. இப்போது கூட அவர் விளம்பரம் என்றால் அதற்கு தனி மரியாதை இருக்கிறது என்று விளம்பர நிறுவனம் ஒன்றின் தலைவர் சந்தோஷ் தேசாய் கூறினார்.

அவரால் இன்னும் 10 வருடங்களுக்கு இந்தி சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இப்போதைய 6 ஆண்டு ஜெயில் தண்டனை பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

தற்போது அவர் மிஸ்டர் பிராடு அலிபங்க், கிட்னாப் ஆகிய 3 படங்களில் நடித்து வந்தார். ஜெயிலில் அடைக்கப்பட்டதால் இந்த படங்கள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.70 கோடியில் இருந்து 80 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

ஒரு வேளை ஜாமீன் கிடைத்து வெளியே வந்தால் இழப்பை சரிகட்ட வாய்ப்பு உள்ளது.

இப்போதைய 3 படங் களையும் முடித்த பிறகு முன்னாபாய் சலே அமெ ரிக்கா என்ற படத்தில் நடிக்க இருந்தார். இதை பிரமாண் டமான முறையில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். அதற்கும் ஆபத்து ஏற்பட் டுள்ளது.
—————————————————————————————————–
கடும் குற்றவாளி என்பதால் சஞ்சய் தத்துக்கு ஜெயிலில் வேலை: தினசரி ரூ.40 சம்பளம்

முப்பை, ஆக. 2-

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மும்பை தடா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடிகர் சஞ்சய்தத் அடைக்கப்பட்டார். முதலில் அவருக்கு சிறைக்குள் 10-ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. அதே பகுதியில் தீவிரவாதிகள் உள்ளதால், பாதுகாப்பு கருதி ஒன்றாம் நம்பர் செல்லுக்கு சஞ்சய்தத் மாற்றப்பட்டார்.

ஒன்றாம் நம்பர் செல் “புத்தர் செல்” என்றழைக்கப்படுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சஞ்சய் தத் சரியாக தூங்கவில்லை. மிக, மிக கவலையான முகத்துடன் இருந்த அவருக்கு ஜெயில் அதிகாரிகள் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

யாருடனும் பேசாமல் வாடியபடி இருந்த சஞ்சய்தத் உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்து விடக்கூடாது என்பதற்காக அவரது அறைமுன்பு 4 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் சஞ்சய்தத்தை கண்காணித்தப்படி இருந்தனர். சஞ்சய்தத் தனக்கு பிடித்தமான மார்ல்போரோ லைட்ஸ் சிகரெட்டுகளை தொடர்ந்து பிடித்துக்கொண்டே இருந்தார்.

நேற்று காலை அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டது. கண்கலங்கியபடி அதை வாங்கி சஞ்சய்தத் அணிந்து கொண்டார். காலையில் டீ, பிஸ்கட், ரொட்டி, ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட்டார். காலை நேர ஜெயில் உணவை வேண்டாம் ன்று கூறி விட்டார். வழக்கமாக ஆர்தூர் ஜெயில் கைதிகளுக்கு தினமும் காலை யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது. நேற்றும், இன்றும் சஞ்சய்தத் யோகாசன வகுப்புக்கு செல்லவில்லை.

நேற்று மதியம் சஞ்சய்தத்துக்கு 4 ரொட்டி, அரிசி உணவு, பருப்பு வகைகள் வழங்கப்பட்டது. அவற்றை சாப்பிட்ட பிறகு மதியம் அவர் சிறிது நேரம் தூங்கினார். மனச்சோர்வுடன் காணப்பட்ட அவர் தூங்கி முழித்த பிறகும் பதட்டமான நிலையில் தான் இருந்தார்.

நேற்று மாலை அவரை சகோதரிகள் பிரியா, நம்ரதா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். உடைகள், டவல், சோப்பு, சீப்பு, பற்பசை, பவுடர், போன்றவற்றை கொடுத்தனர். சுமார் 15 நிமிடம் அவர்கள் சஞ்சய் தத்திடம் பேசி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். அவர்களிடம் சஞ்சய்தத், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

நேற்றிரவு சஞ்சய்தத் சற்று சகஜ நிலைக்கு திரும்பினார். நேற்று மதியம் வரை சஞ்சய்தத்துக்கு அவரது நண்பர் ïசுப் பேச்சுத் துணையாக இருந்தார். நேற்றிரவு சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த செல் அருகே உள்ள பிரவீன் மகாஜன், சஞ்சய்தத்துக்கு கம்பெனி கொடுத்தார். பா.ஜ.க. தலைவர் பிரமோத்மகாஜனை கொன்ற வழக்கில் சிறைக்குள் இருக்கும் பிரவீன் மகாஜன் நேற்றிரவு சஞ்சய் தத்துக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

நேற்று இரவு அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். பிறகு தூங்கச் சென்ற போது சஞ்சய்தத் கண் கலங்கினார். அவர் வாய் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.

அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் மின் விசிறி வசதி இல்லை. கொசுவர்த்தியும் கொடுக்க வில்லை. பாய், தலையனை மட்டுமே கொடுக்கப்பட்டது. அதை ஒதுக்கி விட்டு சிமெண்ட் பெஞ்சில் அவர் நேற்றிரவு தூங்கினார். அவர் சரியாக தூக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

சஞ்சய்தத் தற்போது அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்சாலை ஜெயில், விசாரணை கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கக் கூடிய ஜெயிலாகும். எனவே அவரை அந்த சிறையில் தொடர்ந்து வைத்து இருக்க இயலாது என்று கூறப்படுகிறது. அவரை வேறு ஜெயிலுக்கு மாற்றுவது குறித்து தடா கோர்ட்டு இன்று உத்தரவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் உள்ள வேறு ஜெயிலுக்கு அவர் மாற்றப்படுவார் என்று தெரிகிறது. சஞ்சய்தத்துக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் ஜெயிலுக்குள் கண்டிப்பாக ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்பது விதியாகும்.

கடுங்காவல் தண்டனை கைதிகள் சமையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி பணிகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை தேர்வு செய்து செய்ய வேண்டும். சஞ்சய்தத் என்ன வேலை செய்யப்போகிறார் என்பது இன்னமும் தெரிய வில்லை. இப்படி வேலைபார்ப்பதற்கு சஞ்சய்தத்துக்கு தினசரி கூலியாக 40 ரூபாய் வழங்கப்படும்.

சஞ்சய்தத் அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய உள்ளார். அதில் அவருக்கு விடுதலை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது. எனவே ஜெயில் அதிகாரிகள், மற்ற வழக்கமான கைதிகளை நடத்துவது போல சஞ்சய்தத்தையும் நடத்த தொடங்கி உள்ளனர்.

சஞ்சய்தத் அடைக் கப்பட்டுள்ள சிறைக்குள் தற்போது மேலும் 2 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரே கழிவறைதான். இது சஞ்சய்தத்துக்கு பெரும் அவதியை கொடுத்துள்ளது.

நள்ளிரவுக்கு பிரகே தூங்கி பழக்கப்பட்டவர் சஞ்சய்தத். ஆனால் நேற்றிவு 8 மணிக்கு சிறை விளக்குகள் அனைக்கப்பட்டதும் அவர் மிகவும் அவதிக்குள்ளானார்.
—————————————————————————————————–

சிறையில் என்ன செய்கிறார் சஞ்சய் தத்?

01 ஆகஸ்ட் 2007 – 14:43 IST

இதுவரை விசாரணைக் கைதியாக சிறையில் பல சலுகைகளை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத், தற்போது தண்டனை கைதியாகிவிட்டதால் அவற்றை இழக்கிறார்.

பாலிவுட் உலகில் கொடிகட்டு பறந்து, அகில இந்திய அளவில் பிரபலமானவராக திகழ்ந்த நடிகர் சஞ்சய் தத் தற்போது மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடிக்கணக்காண ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பெயரை உச்சரித்து சந்தோஷப்பட்ட நிலையில், சிறையில் சஞ்சய் தத் இனி அவருக்குறிய கைதி எண்ணால் மட்டுமே அழைக்கப்படுவார்.

பொதுவாக சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கும், தண்டனை கைதிகளுக்கும் அளிக்கப்படும் சலுகைகளில் வேறுபாடுகள் உள்ளன.

விசாரணை கைதிக்கு வீட்டில் இருந்து வரும் உணவு, உடைகள், வாரம் ஒருமுறை உறவினர்களை சந்திப்பது உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்படும். இந்த சலுகைகளை தண்டனைக் கைதியான சஞ்சய் தத் இனி எதிர்பார்க்க முடியாது.

இரண்டு ஜோடி சிறை சீருடை மட்டுமே இனி அணிவதற்கு சஞ்சய் தத் அனுமதிக்கப்படுவார். மாதம் ஒருமுறை மட்டுமே உறவினர்கள் சந்திக்க முடியும்.

விசாரணை கைதிகள் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஆடைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால் தணடனை கைதிகள் தங்கள் உடைகளை தாங்களே துவைத்துக் கொள்ள வேண்டும்.

சிறையில் செலவிடும் காலத்தில் தச்சு வேலை, தோட்ட பராமரிப்பு, மெக்கானிக் வேலை உட்பட சில தொழில்களில் ஏதாவது ஒன்றை தண்டனை கைதி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கு தினசரி சம்பளமாக துவக்கத்தில் ரூ.12ம் பின்னர் இது ரூ.20 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இந்த வகையில் சேரும் தொகை, தண்டனை காலம் முடிந்து கைதி விடுதலையாகும்போது அவருக்கே வழங்கப்படும்.

தண்டனை கைதிக்கு காலை ஒரு கோப்பை டீ மற்றும் காலை உணவாக சிற்றுண்டி மற்றும் பழம் வழங்கப்படும். காலை 8 மணிக்கு பின் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மாலை 4 மணி வரை இவர்கள் செய்ய வேண்டும்.

மதிய உணவு 12 மணிக்கு வழங்கப்படும். சப்பாத்தி, அரிசி உணவு வகைகள் மற்றும் காய்கறி இதில் இடம்பெறும். இரவு உணவு மாலை 6 மணிக்கு முன்னதாகவே வழங்கப்படும். இதுவும் மதிய உணவு வகைகளை ஒத்தே இருக்கும்.

—————————————————————————————————–

என்ன வேலை தேர்ந்தெடுப்பார் சஞ்சய் தத்…?

புணே, ஆக. 4: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு அவரது விருப்பத்துக்கு ஏற்ற வேலை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் (48) வியாழக்கிழமை புணே “ஏர்வாடா’ சிறைக்கு மாற்றப்பட்டார்.

சிறை விதிகளின்படி,

  • ஜவுளி,
  • சலவை,
  • பேக்கரி,
  • பேப்பர் பிரிண்டிங்,
  • தச்சு வேலை,
  • பெயிண்டிங் ஆகியவற்றில்

ஏதாவது ஒரு கூலி வேலையை அவர் செய்தாக வேண்டும்.
“பொதுவாக கைதிகளின் விருப்பத்தைக் கேட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலை ஒதுக்கப்படுவது சிறை வழக்கம். சஞ்சய் தத்திடமும் அவரது விருப்பம் கேட்கப்படும்’ என்றார் உயரதிகாரி ஒருவர்.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக, மும்பை சிறையிலிருந்து புணே சிறைக்கு சஞ்சய் தத் மாற்றப்பட்டுள்ளார்.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் பெரும்பாலும் விசாரணைக் கைதிகளே அதிகம் பேர் இருக்கின்றனர். எனவே அங்கு சஞ்சய் தத்துக்கு கட்டாயப் பணி அளிக்க முடியாது.

இரண்டாவது நடிகரின் பாதுகாப்பு. முட்டை வடிவிலான மும்பைச் சிறையில் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக அந்தச் சிறையில் கடுமையான விதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

எனவே சஞ்சய் தத்தை அங்கு வைத்திருக்க முடியாது என்பதால், புணே சிறைக்கு மாற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரந்து விரிந்து காணப்படும் புணே சிறையில் தண்டனைக் கைதிகள் அதிகம் பேர் உள்ளனர். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களை வெளிச்சந்தையில் விற்பது மூலம் நல்ல வருவாய் ஈட்டப்படுகிறது.

—————————————————————————————————–

ஜெயிலில் வேலை: பிரம்பு நாற்காலி செய்யும் நடிகர் சஞ்சய்தத்

புனே, ஆக. 8-

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் புனே ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஜெயிலில் கொடுக்கப்படும் ஏதாவது வேலைகளை செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது.

இதற்காக பல வேலைகள் உண்டு. இதில் எந்த வேலை செய்ய விருப்பமோ அதை தேர்ந்தெடுத்து கொள்ள லாம்.

அவரை தச்சு வேலை செய்யும்படி ஜெயில் அதிகாரி கள் கேட்டுக் கொண்டனர். அதில் அவருக்கு விருப்பம் இல்லை. பிரம்பு நாற்காலி செய்யும் வேலையும் அந்த ஜெயிலில் உள்ளது.

அதை செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதாக சஞ்சய்தத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் பிரம்பு நாற்காலி செய்ய அனுமதிக் கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அவருக்கு தின மும் ரூ.40 சம்பளம் வழங்கப்படும்.

இந்தியின் முன்னணி நடிக ராக இருந்த அவர் பலகோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். இன்று அவர் 40 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
———————————————————————————————————————–

சல்மான்கான், சஞ்சய்தத் கைது: இந்திபட உலகில் ரூ.200 கோடி முடக்கம்

மும்பை, ஆக. 30-

ஒரே நேரத்தில் இந்தித் திரையுலகமான பாலி வுட்டின் முன்னணி நடிகர் கள் இருவர் சிறை தண்டனை அடைந் திருப்பது அப்பட உலகை ஸ்தம்பிக்க செய்துள்ளது.

இரண்டு பேரையும் ஹீரோ வாக வைத்து தயாரிப்பில் உள்ள 10 படங்களின் தயாரிப் பாளர்கள் தாங்கள் போட்ட முதலீடு என்னாவாகுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். தூக்கம் இல்லாமல் தவிக்கின்றனர். சஞ்சய்தத், சல்மான்கான் கைதானதால் பாலிவுட்டில் சுமார் ரூ.200 கோடி முடங்கிப் போய் உள்ளது. அவர்களால் 10 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நூற்றுகணக்கான தொழிலாளர்கள் வேலை யின்றி தவிக்கின்றனர் என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள் இந்தித்திரையுலகின் பெரும் புள்ளிகள். சஞ்சய்தத்தை கதாநாயகனாக வைத்து டஸ்கஹானியன், முன்னாபாய் சாலே அமெரிக்கா, அலிபாக், கிட்நாப், மிஸ்டர் பிராட் ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.

சல்மான்கான் நடிப்பில் மேராபாரட் மஹான், மெயின் யுவ்ராஜ், வாண்டட் டெட்அன்ட் அலைவ் (போக்கிரி ரீமேக்), ஹலோ, ஹாட்டுஸ்ஸி கிரேட் ஹோ ஆகியபடங்கள் தயாரிப்பில் உள்ளன.

இதில் வாண்டட் டெட் ஆர்அலைவ் படத்தை தயாரித்து வரும் பட வேலைகள் ஆரம்ப கட்டத்தில் இருந் தாலும் அதன் தயாரிப் பாளர் போனிகபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) சல்மான்கானை அந்த படத்திலிருந்து நீக்க தயாரில்லை. “போக்கிரி ரீமேக் படத்தின் கதா நாயகன் வேடத்திற்கு சல்மான்கான் தான் பொருத்தமாக இருப்பார். எனவே படத்திலிருந்து அவரை நீக்கும் எண்ணம் இல்லை” என்கிறார் போனிகபூர்.

இரண்டு பாலிவுட் ஹீரோக்களும் ஒரே நேரத்தில் ஜெயில் தண்டனை பெற்றிருப்பதும் அவர்கள் படங்கள் முடங்கிப்போய் கிடப்பதும் இந்திய சினிமாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“இது பாலிவுட்டிற்கு கெட்ட நேரம். சோனிபிக்ஸர்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற பிரபல ஹாலிவுட் பட நிறுவனங்கள் இந்திய படஉலகில் முதலீடு செய்ய நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி ஹீரோக் கள் சிறை தண்டனை பெற்றிருப்பது அந்நிறு வனங்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கும் என்கிறார் இந்திப் படஉலகின் வர்த்தகத் துறையை சேர்ந்த டாரன் அதார்ஷ்.

Posted in abuse, Acquaintance, Actors, Actress, AK-47, AK47, Arms, Black, Blast, Bollywood, Bombay, Bombs, Bullets, cancer, Capital, case, Cash, Celebrity, Cinema, Cocaine, Compensation, Corrections, Cost, Courts, Crime, Currency, dead, Drugs, Dutt, Economy, Extremism, Extremists, Fame, Father, Films, Finance, Gode, Godey, guns, HC, Income, Jail, job, Judge, Justice, kalashnikov, Kodey, Kote, Law, Loss, Misa, Movies, MP, Mumbai, Munnabai, Munnabhai, Nargees, Nargis, Order, Police, POTA, Prison, Producer, Production, Profits, Punishment, release, revenue, Rifles, Rupees, Salary, Sanjai, Sanjay, SC, Sentence, Son, Sunil, Sunil Dutt, TADA, terror, Terrorism, terrorist, Terrorists, verdict, Violence, Weapons, Work | Leave a Comment »

State of the Justice System in India (BMW case: NDTV exposes prosecution-defence nexus)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வழக்கறிஞர்களுக்கு “தண்டனையே’ கிடையாதா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

ஒரு சாலை விபத்து (பி.எம்.டபிள்யூ.) வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், எதிரியின் வழக்கறிஞரும் சேர்ந்து சாட்சியத்தைக் குலைப்பது பற்றி பேசிக்கொண்டதை என்.டி.டி.வி. சில வாரங்களுக்குமுன் அம்பலப்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சாலை விபத்து பற்றியது. கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் குடிபோதையில் காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலரைக்கொன்றது பற்றியது அந்த வழக்கு. அவர் ஓட்டிய கார் பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டுக் கார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி குல்கர்னி என்பவர். அரசுத் தரப்பு ஏதோ காரணத்துக்காக அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றவே இல்லை!

எதிரியின் வழக்கறிஞர் (பிரபலமான வழக்கறிஞர், காங்கிரஸ்காரரும் கூட), அரசுத் தரப்பு வழக்கறிஞர் (இவரும் பிரபலமான வழக்கறிஞர்தான். ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே போதும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவேன் என்று தானாக முன்வந்தவர்) இருவரும், முக்கிய சாட்சியுடன் ஏதோ அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததை என்.டி.டி.வி.யின் ரகசிய கேமரா படம் பிடித்துக் காட்டியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், சாட்சியாக இருப்பவருக்கு “”புளூ லேபிள்” ஸ்காட்ச் விஸ்கியைக் காட்டி, குடிக்கிறீர்களா என்று கேலியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதிரியின் வழக்கறிஞரோ, அந்த சாட்சியை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகள் பல வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. வழக்கறிஞர்கள், பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவை உணர்த்தின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லி பார் கவுன்சில் தலைவர் மனான் அறிவித்தார். அதெல்லாம் நடக்காது, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை இருக்காது, எல்லாவற்றையும் பூசி மெழுகிவிடுவார்கள் என்று அதே நிகழ்ச்சியில் நான் முடிவுரையாகத் தெரிவித்தேன். அந்த இருவரையும் சில நாள்களுக்கு மட்டும் “சஸ்பெண்ட்’ செய்து, மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதித்துவிட்டனர்.

அந்த வழக்கின் முழு விவரமும் என்னிடம் கிடையாது – இரு வழக்கறிஞர்களும் அவர்களுடைய பதவிக்குப் பொருந்தாத எதையும் செய்தார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வரக்கூடும். இப்போது நம்முடைய கவலை இந்த வழக்கு எப்படிப் போகிறது என்பதல்ல.

நம் நாட்டில் எந்தத் தொழில் செய்கிறவர் ஆனாலும் அவர் மக்களால் அலசப்படுகிறார். அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள் என்று அனைத்து தரப்பாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதே போல வழக்கறிஞர்கள் சமூகத்தை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. வழக்கறிஞர்களின் குணாதிசயங்கள், தொழில்நடத்தும் விதம், பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவை குறித்து ஊடகங்களும், பொதுவிஷயங்களில் அக்கறை உள்ள அமைப்புகளும் வெகு நெருக்கத்திலிருந்து ஆராய வேண்டும்; அந்த ஆய்வு முடிவை மக்கள் அறிய வெளியிட வேண்டும்.

என்னுடைய இளவயதில் மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்டுகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் வழக்கறிஞர்கள் பற்றிச் சொன்னதன்மூலம் பல விஷயங்கள் தெரிந்தன. வட இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வீடு, நிலம் தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. ராணுவத்திலோ, நகரில் கிடைக்கும் சிறு வேலைகளிலோ கிடைத்த சொற்ப வருவாயை மக்கள் இந்த வழக்குகளுக்காகச் செலவிட்டனர். அதாவது அவை வழக்கறிஞர்களின் பைகளை நிரப்பின.

சாதாரண வழக்குகூட ஆண்டுக்கணக்கில் நீடித்தன, அல்லது நீட்டிக்கப்பட்டன. சில வழக்குகளில் வாதி, பிரதிவாதியின் மறைவுக்குப் பிறகு கூட வழக்குகள் பைசலாகாமல் நீடித்தன. உள்ளூர் போலீஸôர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இவற்றில் பங்கு இருந்தது. நம் ஜனநாயகத்தில் எல்லா துறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள சாபக்கேடு இதற்கும் வந்து சேர்ந்தது, அதாவது பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன.

வழக்குகளில் வாய்தா வாங்குவதிலேயே திறமைசாலியான ஒரு வழக்கறிஞர் குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிபதியே சுட்டிக்காட்டினாராம்; அதையே அவர் தனக்கு அளித்த சான்றிதழாகக் கருதி பிற வழக்கு விசாரணையின்போதும் குறிப்பிட்டு வாய்தா வாங்கிவிடுவாராம். இதை அந்த தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய தில்லி பார் கவுன்சில் தலைவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டு நீதிமுறை குறித்து எழுதிய புத்தகத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வழக்கில் சம்பந்தப்படும் ஏழைகளுக்குத் தரப்படுவதில்லை.

தில்லி தந்தூர் வழக்கில், முக்கிய எதிரிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியபோது மக்களிடம் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கொலை நடந்து 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரே சாட்சி ஒரு போலீஸ்காரர்தான். அவருக்கு சம்பளம்கூட அதிகம் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியிருக்க முடியும், அல்லது தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் நீதிக்காக நிலைகுலையாமல் நின்ற அந்த ஒரே சாட்சி காரணமாகத்தான் எதிரிக்கு தண்டனை விதிக்க முடிந்தது. இதில் கேள்வி என்னவென்றால், எப்படி ஒரு சாதாரணமான வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்பதுதான்.

அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் மீது பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அரிசோனா மாநிலத்தில் இந்திய சீக்கியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை நடந்து முடிந்து தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. நம் நாட்டிலும் இப்படி ஏன் விரைந்து வழக்குகளை முடிக்கக் கூடாது? கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? மூத்த அரசியல்வாதி அல்லது அதிகாரி என்றால் அவர் மீதான லஞ்ச, ஊழல் வழக்கையும் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதை ஏற்பீர்களா?

வழக்கறிஞர்களை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை என்ற எண்ணமே சில வேளைகளில் தோன்றுகிறது. பார் அசோசியேஷன் என்பது வழக்கறிஞர்களுடன் தோழமை உள்ள அமைப்பு. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் பணி சட்டத்துடன் தொடர்புள்ளது. அது வழக்கறிஞர்களின் வேலையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர எப்போதாவது முயற்சி செய்துள்ளதா? வழக்கறிஞர்களைக் கண்காணிப்பதை நீதிமன்றங்கள் செய்ய முடியும், ஆனால் அவையும் அப்படி எதையும் செய்வதில்லை.

1960கள் வரை நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தனித்தனியே பிரிக்கப்படவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் வழக்குகளைக் கண்காணித்து வந்தது. எத்தனை வழக்குகள் தாக்கலாகின, எத்தனை விசாரிக்கப்பட்டன, எத்தனையில் இறுதித் தீர்ப்பு வந்தது என்று தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டவுடன் நிர்வாகம், கண்காணிப்பு வேலையை விட்டுவிட்டது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் நீதித்துறையின் கீழ் நிலையில் ஊழல் இருக்கிறது, இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி என்று தெரிவித்தது.

வழக்கறிஞர் தொழிலில் என்ன நடக்கிறது என்று அக்கறை காட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது வழக்கறிஞர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. சூரிய வெளிச்சம் எங்கு பாயவில்லையோ அங்கு பாச்சைகளும் கரப்பான்களும் பெருகி வளர்கின்றன. சூரிய ஒளி பட்டால் இவையெல்லாம் விலகி அங்கே தூய்மை நிலவும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

——————————————————————————————–

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்

உ .ரா. வரதராசன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தெரிவித்துள்ள கருத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

“”தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நீதிபதிகளை வசைபாடுவது, சிலரது பொழுதுபோக்காக உள்ளது. இத்தகைய அறிக்கைகள் நீதிமன்றங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, அவற்றின் எதிர்காலத்தை மதிப்பிழக்கச் செய்ய முற்படுகின்றன; இவற்றை அனுமதிக்கவே முடியாது”, என்று கூறி, சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பைச் செய்த நபருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையை அந்த நீதிபதிகள் வழங்கினர். அதே தீர்ப்பில், கண்ணியமான வார்த்தைகளில் ஒரு நீதிமன்றத்தின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் தெளிவுபடச் சொல்லப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, நாளிதழ்களில் வெளியான அதே நாளில், உலக ஊழல் அறிக்கை – 2007 என்ற ஓர் ஆவணத்தை இணையதளத்தில் காண நேரிட்டது. சர்வதேச ஊடுநோக்கி ( பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ஸ்ரீஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்) என்ற அமைப்பின் அறிக்கை நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றியது.

உலகில் இன்று நிலவும் ஊழலின் பரிமாணம் மலைக்க வைப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஊழலில் கசிந்து விரயமாகும் நிதியைக் கணக்கிட்டால் அது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் கோடி டாலர்கள் என்ற வரம்பைத் தாண்டுகிறது என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, நீதி ஆகிய அனைத்துத் துறைகளையும் இந்த ஊழல் கரையான் செல்லரித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை கசப்பானதும் கவலைக்குரியதுமாகும்.

இதில் நீதித்துறையில் ஊழல் என்பது, மற்ற அனைத்துத் துறைகளையும்விட அபாயகரமானது. மற்ற துறைகளில் நிலவும் ஊழலால் பாதிக்கப்படுகிற எவரும், அவற்றுக்கு எதிராக நீதித்துறையின் தலையீட்டையே நாடுவது இயல்பானது. ஆனால், பரிகாரம் தேடிப் போகும் நீதி தேவதையின் சன்னிதானமே ஊழல் கறை படிந்து காணுமானால், வேறு புகலிடம் ஏது?

ஒருவர் தமக்களிக்கப்படும் அதிகாரத்தைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஊழலேயாகும். அந்த ஆதாயங்கள் பணமாகவோ, பொருளாகவோ, வேறுவகைப்பட்டதாகவோ இருக்கலாம். நீதித்துறை ஊழல் என்பது நீதி பரிபாலன முறைமைக்கு உள்ளிட்டு செயல்படும் எவரும், அதன் பாரபட்சமற்ற செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் செல்வாக்கு செலுத்துவதன் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதே! இதை அளவிட்டு அறிவதற்காக 62 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளே இந்த உலக ஊழல் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நீதித்துறையில் ஊழல் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, நீதித்துறையின் செயல்பாட்டில் அரசியல் தலையீடுகளால் நிகழ்வது; மற்றது, நீதித்துறையின் பல மட்டங்களில் புகுந்துவிடும் லஞ்ச லாவண்யம் காரணமாக நடைபெறுவது. நீதித்துறையை அணுகும்போது, நியாயமான பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெறுகிற அடிப்படை மனித உரிமையை இந்த இருவகை ஊழலும் மறுக்கிறது. எந்த ஒரு நாட்டிலும் நீதித்துறையில் ஊழல் மலிந்தால், அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாததாகி விடும். “”ஊழலா, அது எங்கள் நாட்டில் வாடிக்கையாகிப் போய்விட்ட விவகாரம்” என்று மக்கள் சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.

தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லையானால், அங்கே நீதித்துறையில் நாணல்போல் வளைந்து, ஊழலுக்கு இடமளிக்கும் நீதிபதிகள் இடம்பெறுவது இயல்பாகிவிடும்.

நீதிபதிகளுக்கான சம்பளம், ஊதிய நிலைமைகள், பாதுகாப்பற்ற சூழல், இடமாற்றல் அச்சுறுத்தல் போன்றவையும் நீதிபதிகளையும் நீதிமன்ற அலுவலர்களையும் ஊழல் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.

தவறிழைக்கும் நீதிபதிகளைத் தண்டனைக்கு உட்படுத்தவோ, பதவிநீக்கம் செய்யவோ உரிய ஏற்பாடுகள் இல்லையென்றாலும், நீதித்துறை ஊழலுக்கு உறைவிடமாகி விடும்; நேர்மையாகச் செயல்படும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் விருப்பம்போல் பந்தாடும் சூழலும் அதே நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிவு மறைவு அற்றதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற ஏற்பாட்டுக்கு இடமில்லாமலும் அமையும் நிலை, நீதித்துறையை ஊழல் அரிப்பதற்கு வாய்ப்பாகி விடும்.

இந்த நான்கு அம்சங்களிலும், நீதித்துறையில் ஊழல் பரவாமல் தடுக்க, பல்வேறு பரிந்துரைகளை உலக ஊழல் அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நீதித்துறை ஊழல் பற்றிய ஓர் ஆய்வும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் வெளிவந்த சில விவரங்களை இந்த அறிக்கை தொகுத்தளிக்கிறது.

“நீதித்துறை ஊழலின்றி செயல்படுகிறதா?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்று பதிலளித்தவர்கள் 85 சதவிகிதம் பேர்! நீதித்துறை ஊழல் காரணமாகக் கைமாறும் தொகை ஆண்டுக்கு ரூ. 2,360 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீதித்துறை ஊழலுக்குப் பிரதான காரணங்களாக அமைவது, வழக்கு விசாரணையில் நேரிடும் காலதாமதம், நீதிபதிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளேயாகும்.

2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகள்; உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகள்; நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து – “”இனி புதிதாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் பிடிக்கும்” என்பதாகும்!

இந்த நிலைமையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதற்கான குறுக்கு வழியாக ஊழல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவில் சராசரியாக பத்து லட்சம் நபர்களுக்கு 12 அல்லது 13 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையிலேயே, நீதித்துறை நியமனங்கள் உள்ளன. இதே பத்து லட்சம் நபர்களுக்கு, அமெரிக்காவில் 107 நீதிபதிகள்; கனடாவில் 75; பிரிட்டனில் 51 என்ற அளவில் உள்ளனர். இதனால் தீர்ப்புகள் தாமதமடைகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“தாமதித்து வழங்கிடும் நீதி, மறுக்கப்படும் நீதி’. ஆனால், சட்டத்தை மீறுகிறவர்களுக்கும், குற்றங்களைத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கும், வழக்குகளின் தாமதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது! நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான்! 2002ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உருவான இந்தக் கோட்பாடுகள்தான், பின்னர் 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கோட்பாடுகள் நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டுமே.

இதுமட்டுமல்ல, நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான குழு அறிக்கைக்கும், நீண்ட நெடிய விவாதங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அறிகுறியே தென்படவில்லை!

நீதிமன்ற அவமதிப்பு அனுமதிக்கப்பட முடியாததுதான்; ஆனால், நீதித்துறையின் மதிப்பை உயர்த்துவது எப்படி, எப்போது?

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

————————————————————————————————–

நீதிதேவன் மயக்கம்
Dinamani – Op-ed (September 05 2007)

“”மக்களுக்கு நீதித்துறையின் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதித்துறை மீதான நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு நீதிபதிகள் மீதும் நீதித்துறையின் மீதும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வழக்குகள் அதிக காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்”~இப்படி சொல்லியிருப்பது அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ, பத்திரிகையாளரோ அல்ல; நீதிபதிகள்.

வித்தியாசமான, அதேசமயம் மக்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நிகர் அவர்தான். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு வழங்குபவர் என்கிற பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. 1957ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மாத்தூரின் முன் விவாதத்துக்கு வந்தபோதுதான் மேற்கண்ட கருத்தை அவர்கள் தெரிவித்தனர்.

அரை நூற்றாண்டு காலம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பது என்பது, நமக்கே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சுமார் 30 லட்சம் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இரண்டரைக் கோடிக்கும் அதிகமான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்திலும் சரி, நிலைமையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சுமார் 39,780 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2006-ம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4,06,958. கடந்த ஆண்டு கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இது. தமிழக விசாரணை நீதிமன்றங்களில் சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில் இருப்பதாகவும், இவற்றில் 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குற்றவாளிகள் பலர் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வராமல் வழக்கைத் தள்ளிப்போட்டுத் தப்பிக்க முயல்வது சகஜமாகிவிட்டது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மரணம்வரை தீர்ப்பு வழங்கப்படாமல் தப்பித்த சரித்திரங்கள் ஏராளம். இதனால், நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

அதேபோல, நிரபராதிகள் விடுவிக்கப்படாமல், அடிக்கடி நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும்போது அது தர்மத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான செயல்பாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் அவலநிலைக்கு நிகரானதுதான் இதுபோன்ற அலைக்கழிப்பு. நிரபராதி, தீர்ப்பு வழங்கப்படாமல் குற்றவாளி என்கிற களங்கத்துடன் காலவரையறையின்றித் தொடர்வது என்பது நீதிதேவனுக்கே அவமானம்.

உடனடி நீதி கிடைக்குமேயானால், லஞ்சமும் ஊழலும்கூடப் பெரிய அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவன் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், காலதாமதமின்றி அதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசீலித்துத் தீர்ப்பளிக்குமேயானால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பயமும் பொறுப்புணர்வும் ஏற்படும்.

தாமதமாகக் கிடைக்கும் நீதி என்பது கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்கிற கதையைப் போன்றதுதான். பொதுமக்களை மட்டும் வருத்திக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை இப்போது நீதிபதிகளையும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது என்பது ஆறுதலைத் தருகிறது. நீதிதேவன், மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!

——————————————————————————————————————–
நாட்டின் தேவை 5 ஆயிரம் புதிய கோர்ட் : தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை : “நாடு முழுவதும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை துவக்கினால் தான் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்’ என்று இந்திய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஜுடிசியல் அகடமி நடத்திய, “உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

தலைமை நீதிபதிபேசியதாவது :

நீதிபதிகள் தங்களுக்கு முன்பாக எந்த மாதிரியான வழக்குகள் வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்காமல், அது போன்றவற்றில் நீதிபதிகளே ஆர்வம் எடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். மிகச் சாதாரணமான வழக்குகளை விரைவாக தீர்த்து விட வேண்டும்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில நீதிபதிகள் மிகவும் மதிக்கப்படுவதோடு, தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர். சமுதாயத்துடன் நாம் செல்ல வேண்டும். வழக்கு தொடருபவர் நேரடியாக நம்மிடம் வருகிறார். அவர்களது பிரச்னையை நாம் அணுக வேண்டும். எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்த்து வைக்கிறோமோ, அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியடைவர். வழக்கு

மூலம் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அவர்கள் மகிழ்வர். எனவே, பிரச்னைகளை அறியும் கலையை நாம் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகளால் நீதிபதிகள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறவும், அனுபவங்களை பற்றி பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கு தெரியாமலேயே இதனால் நாம் பயனடைகிறோம்.

தமிழக அரசு 72 புதிய கோர்ட்டுகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநில அரசுகளிடம் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில முதல்வர்கள் உறுதியளிப்பர், ஆனால், விரைவில் நடைமுறைக்கு வராது.

புதிய கோர்ட்கள் :

வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் புதிய கோர்ட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இந்தியாவில் 14 ஆயிரத்து 600 கோர்ட்டுகள் உள்ளன. மேலும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை நாடு முழுவதும் அமைத்தால் தான், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் வழக்குகள் குவிந்து கொண்டு தான் இருக்கும். மக்கள், நீதிபதிகள் மீது தான் குற்றம் சாட்டுவர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
மாதத்துக்கு நுõறு வழக்குகள் நீதிபதிகள் உத்தரவாதம் : சென்னை:

“மாதத்துக்கு நுõறு வழக்குகளை முடிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்’ என்று, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.

நீதிபதிகளுக்கான பயிற்சி கருத்தரங்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது: நீதிபதிகளுக்கான கற்பித்தல் பணிமனைகளை மாவட்ட வாரியாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறு விவகாரங்களுக்கான நீதிபதிகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதிகளிடம், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சராசரியாக எடுக்கப்படும் கால அளவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. எவ்வாறு இவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகளிடம் எந்தளவு தங்களது செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று கேட்ட போது, மாதத்துக்கு தற்போது 50 வழக்குகளை முடித்து வருவதற்கு பதிலாக நுõறு வழக்குகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஐகோர்ட்டில் இரண்டு நிரந்தர, “லோக் அதாலத்’கள் அமைக்கப்படும். இதுதவிர, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாதத்துக்கு இரண்டு, “லோக் அதாலத்’கள் தனியாக நடத்தப்படுகின்றன.

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில், 143 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1.54 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இது ஒரு சாதனை. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து மாலைநேர கோர்ட்டுகள் செயல்படத் துவங்கிய பின், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒன்பதாயிரத்து 245 வழக்குகள் முடிக்கப்பட்டன.

ஐகோர்ட்டின் மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம் கடந்த ஜூன் முதல் மிக தீவிரமாக செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னையில் 140 மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்’ வழக்கை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்ததற்காக கடந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இரண்டாயிரத்து 196 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ரூ.70 கோடி மதிப்பிலான இந்த வழக்கு தான் இந்தியாவிலேயே மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு. இவ்வாறு ஏ.பி.ஷா பேசினார்.

Posted in 5000, AA, abuse, Accident, Alcoholism, Arms, Attorney, Balakrishnan, Blood, BMW, Bribery, Bribes, Capital, case, Congress, Corruption, Courts, dead, Delhi, Driver, Driving, Drunk, DUI, escape, Expose, Free, Guilty, HC, Hit, I U Khan, industrialist, Jail, Jethmalani, Judges, Justice, Launch, Law, Lawyer, legal, MP, Nanda, Nandha, NDTV, New, Order, Party, Police, Politics, Poor, Power, Prison, Prosecution, Punishment, R K Anand, Rich, Sanjeev, Sanjeev Nanda, Sanjiv, SC, Sentence, Sunil Kulkarni, Suspension, testimony, Wealthy, Witness | 1 Comment »