Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Bonds’ Category

Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2008

நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்துப் பேசினாலும் பிர சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்ற மாகும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்திலும் வெளியி லும் இடைவிடாது கூறி வருகிறார்.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன் றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புக ளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக ஜெயலலிதா விளங்குகிறார். ஜெயலலிதா வால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாள்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒரு வன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகி றேன்.

13.4.2002 அன்று சென்னை ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் மற்றும் நண்பர்களும் பிர பாகரனின் நேர்காணல் குறித்துப் பேசினோம்.

ஆனால் 26.4.2002 அன்று முதல்வர் ஜெயலலிதா தலை மைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பின்வருமாறு அறிவித்தார். “”விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்த பின்னர் சென்னையில் ஆனந்த் திரையரங்கத்தில் கூட்டம் நடத்தப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அன்றைக்கு சட் டவிரோதமாக எந்த நடவடிக்கையிலும் கூட்டம் நடத்திய வர்களோ அல்லது பேசியவர்களோ ஈடுபடவில்லை என்று அரசுக்குத் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

(தின மணி 27-4-2002) கூட்டம் நடந்தது ஏப்ரல் 13-ஆம் தேதி. அதற்கு 13 நாள் கள் கழித்து ஏப்ரல் 26-ஆம் தேதி இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசியதற்காக எங்கள் மீது ஆகஸ்ட் முதல் தேதி பொடா சட்டம் ஏவப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஜெயலலிதா அரசு சிறையில் அடைத் தது. ஆனந்த் திரையரங்கக் கூட்டத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை என அறிவித்த முதலமைச்சரே அது சட்டவிரோதமான கூட்டம் என்று கூறி எங்களைச் சிறையில் அடைக்கிறார்.

பொடா சிறையில் ஓராண்டு காலம் நாங்கள் இருந்த பிறகு எங்களைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டு மென்று பொடா நீதிமன்றத்தில் மூன்று முறை நாங்கள் தாக்கல் செய்த மனுக்களை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத் தில் பிணை கேட்டு நாங்கள் மேல்முறையீடு செய்தோம்.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் பொடா சட்டம் குறித்து ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வை.கோ. மற்றும் தோழர்கள், நெடுமாறன் மற்றும் தோழர் கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம், மனித உரி மைகள் மற்றும் சமூக நீதிக்கான அனைத்திந்திய முன்னணி, ஜே.சாகுல் அமீது ஆகியோர் பெயரில் தாக்கல் செய்யப் பட்ட 5 மனுக்கள் குறித்து 16.12.2003 அன்று உச்ச நீதிமன் றம் விசாரித்தது.
இந்திய அரசு சார்பில் வாதாடிய அடர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி, “”திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசி யதும் அமைச்சர் கண்ணப்பன் விடுதலைப் புலிகளை ஆத ரித்துப் பேசியதும் பொடா சட்டத்தின் கீழ் வராது” என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் எஸ். இராசேந்திரபாபு, ஜி.பி. மாத்தூர் அடங்கிய ஆயம் நடத்திய விசாரணையின் இறுதியில் தங்கள் தீர்ப்பில் பின்வ ருமாறு அறிவித்தனர். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தெரிவித்து வெறுமனே பேசுவது பொடா சட்டப் படி குற்றம் ஆகாது. பொடா சட்டத்தின் கீழ் கைது ஆகி ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை வழக்க மான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம்” என்று குறிப்பிட்டனர்.

இந்தத் தீர்ப்பு குறித்து 3-1-2004 அன்று தினமணி எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது. “”நமது நாட் டில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றுக்கு வாய் மொழி ஆதரவு தெரிவித்து பேசுவதற்காகப் பொடா சட் டத்தை ஒருவர் மீது பயன்படுத்தக் கூடாது என்ற பொருள் செறிவு உடைய விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்து தனது கனிந்த விசாலமான சட்டநெறிப் பார்வையைப் புலப் படுத்தியது.” நாங்கள் சிறைப்பட்ட ஓர் ஆண்டிற்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எங்களுடைய பிணை மனுவை நீதியரசர் சிர்புர்கர், தணிகாசலம் ஆகியோர் அடங் கிய ஆயம் விசாரித்தது. அதன் பிறகு அவர்கள் அளித்த தீர்ப் பில் பின்வருமாறு கூறினார்கள். “”தீவிரவாத இயக்கத்திற்கு தார்மிக ஆதரவு தருவது, வெறுமனே பேசுவது பொடா சட் டப்படி குற்றம் ஆகாது என்றும் பொடா சட்டத்தில் கைதாகி ஓர் ஆண்டிற்கு மேலாகச் சிறையில் இருப்பவர் களை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நெடுமாறன் உள்பட நான்கு பேரை பிணை யில் விடுதலை செய்கிறோம்” என்று அறிவித்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் எனது பேச்சு முழுவதையும் ஆங் கிலத்தில் மொழி பெயர்த்து தரச்சொல்லி நீதியரசர் சிர்புர் கர் முழுமையாகப் படித்திருக்கிறார். அதைப் பற்றியும் நீதி மன்றத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “”பிர பாகரன் தந்த பேட்டியைப் பற்றித் தான் தனது பேச்சில் முழுக்க முழுக்க நெடுமாறன் பேசியிருக்கிறார்.
பிரபாகரன் பேட்டி பற்றிய பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் பொடா வழக்கு போடுவதாக இருந்தால் அந்தப் பேட் டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், செய்தியை வெளி யிட்ட பத்திரிகைகள் என எல்லோர் மீதும் வழக்குப் போட் டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை” என்று அர சுத் தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி அவர் கேட்டார்.

“”வெறுமனே கூட்டத்தில் பேசினார் இளைஞர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் நெடு மாறன் பேச்சைக் கேட்டு இந்த ஊரில் வன்முறையில் ஈடு பட்டனர். கலவரம் நடந்தது என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி யைச் சுட்டிக்காட்ட முடியுமா?” என்றும் நீதியரசர் சிர்புர் கர் கேட்டபோது அரசுத் தரப்பு வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தது.

“”நெடுமாறன் ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்திருக்கி றார். சட்டப்படி ஓர் ஆண்டில் பிணை வழங்கப்பட வேண் டும். அவர் ஓர் அரசியல்வாதி. அரசியல் கருத்துகளைக் கூட கூறக்கூடாது என்கிறீர்கள். பொடா சட்டத்தைப் பயன்ப டுத்தி தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள். இது போல் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந் தப் பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியது குறித்து நெடுமாறனின் மனு விசாரணைக்கு வரும்போது அரசு நடத்தை பற்றியெல்லாம் நாங்கள் விசாரிப்போம்” என்று காட்டமாகக் கூறினார்கள்.

பொடா சிறையில் நான் இருந்த காலகட்டத்தில் என் மீது திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஆலந்தூர், வண்ணம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்க ளில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினேன், பிரி வினை வாதத்தைத் தூண்டினேன் எனக் குற்றங்கள் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாவற் றிலும் எனக்குப் பிணை அளிக்கப்பட்டால் தான் உயர் நீதிமன்றம் அளித்த பிணையின்படி நான் வெளியில் வரமு டியும். ஆகவே இந்த வழக்குகளில் எனக்குப் பிணை கிடைத்து விடாதபடி தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு மேற்கொண்டது.

மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட பொடா மறு ஆய் வுக் குழுவில் நீதியரசர் உஷாமித்ரா தலைவராகவும், கே.இராய்பால், ஆர்.சி.ஜா ஆகியோர் உறுப்பினர்களாக வும் இருந்து தமிழக பொடா வழக்குகள் குறித்து விசார ணையை நடத்தினார்கள். 15.4.2005 அன்று அவர்கள் அளித்த தீர்ப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் கள்.
“”13.4.2002 அன்று ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்கள் அரசியல் ரீதியா னவை. பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதோ அல்லது ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு வாயினால் ஆதரவு தெரிவிப்பதோ தடை செய் யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவதாகாது. மக்கள் பிரச் சினைகளுக்காகச் ஜனநாயக ரீதியில் போராடுவதாகவும் நெடுமாறன் தனது பேச்சில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் ஈழத் தமி ழர்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல உல கெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு விடிவைக் கொண்டு வரும் போராட்டமாக அவர்கள் அதைக் கருதுகிறார்கள்.

எனவே, இந்தப் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது தங்கள் வாழ் நாள் கடமை என்றும் அதற்காக அடக்குமுறைகளைச் சந் திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் படும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோ அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோ அதைப் புரிந்து கொள்ளுமாறு மற்றவர்களை வேண்டுவதோ பயங்கரவாதம் ஆகாது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நடவடிக் கைக்கு ஆதரவு தருவதாகாது. எனவே, பொடா சட்டம் 21- வது பிரிவின் கீழ் அவர்களின் பேச்சுக்களைக் குற்றமாகக் கரு தமுடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சுக்களின் விளைவாக எத்தகைய வன்முறையும் எங்கும் நிகழவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தோற்றம் (டழ்ண்ம்ஹ ஊஹஸ்ரீண்ங்) எதுவும் இல்லை. பொடா நீதிமன் றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் திரும்பப் பெற்ற வையாகக் கருதப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட 5 நபர்களுக்கும் எதிராக முன்தோற்றம் எதுவும் இல்லையென பொடா மறு ஆய்வுக்குழு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, பொடா சட்டத்தின் பிரிவு 2(3) ஆகியவற்றின் கீழ் உடனடி யாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அர சுக்கு இக்குழு ஆணை பிறப்பிக்கிறது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை மிகத் தெளிவாகவும் விளக்கமாக வும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசு வது பொடா சட்டப்படி குற்றம் இல்லை என்பதை தெளிவு படுத்திய பிறகும் முதலமைச்சராக இருந்த ஒருவர் எதையும் மதிக்காமல் திரும்பத் திரும்ப தவறான வாதங்களையே முன் வைப்பது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.

பொடா சட்டத்தை முன்தேதியிட்டு, முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இச்சட்டத்தினால் பாதிக் கப்பட்டவர்கள், சட்ட வல்லுநர்கள், மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்திலும் பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து தெளிவான உத்தரவாதம் அளிக்கப்பட் டிருந்தது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற் றிய பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொடா சட்டத்தைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தியது. அது மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியை யும் பறித்ததுபோல் பொடா சட்டத்தை முன்தேதியிட்டு திரும்பப் பெறப்போவதில்லை என்றும் பொடா சட்டத் தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிதிகளின் படியே நடத்தப்படும் என்று முடிவு செய்தது. நாடெங்கும் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் பொடா சட்டத் தைத் திரும்பப் பெற முடிவு செய்து மன்மோகன்சிங் அரசு அதிலுள்ள பல கடுமையான பகுதிகளை இந்திய குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தில் இணைத்துவிட்டது. பொடா சட் டம் திரும்பப் பெறப்பட்ட போதிலும் அதனுடைய கொடும்கரங்கள் மறையவில்லை.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டு, தி.முக. ஆட்சி பீடம் ஏறிய பிறகும் கூட பலரின் மீதுள்ள வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க பொதுச் செய லாளர் வைகோ மற்றும் அவரது கட்சி தோழர்கள் எட்டு பேர், நான் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தோழர்கள், நக்கீரன் கோபால் மற்றும் முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 21 பேர் ஆக மொத்தம் 42 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். இவர்களில் நான் உட்பட எங்கள் 4 பேர் மீது உள்ள பொடா வழக்கு மட்டுமே தி.மு.க. ஆட்சி வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதுவும் பொடா மறு ஆய் வுக் குழு ஆணையை ஏற்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் அது நடந்தது.

ஆனாலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், வைகோ மற்றும் தோழர்கள், நக்கீரன் கோபால், முற்போக்கு இளை ஞர் அணியைச் சேர்ந்த
… (Sunday Dinamani)
——————————————————————————————————————————————————————

உண்மையை மறைக்க முயல்கிறார் கருணாநிதி: பழ.நெடுமாறன் பதில்

சென்னை, மார்ச் 17: பொடா வழக்குகள் தொடர்பாக, நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், உண்மையை மூடி மறைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

என்னுடைய கட்டுரையில் பொடா சட்டத்தில் யார் யார் கைது செய்யப்பட்டார்கள் என்பதை விவரமாகக் கூறியிருந்தேன். இறுதியாக, முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 பேர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், “42 பேரில் 4 பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு மீதி 21 பேர் தானா என்பதை அவரது கட்டுரையை படித்தவர்களே பார்த்துச் சிரிப்பார்கள்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறார். எந்தப் பிரச்னையையும் ஆழமாக அலசிப் பார்க்காமல் நுனிப்புல் மேயும் கலை அவருக்கே உரியது.

பொடா வழக்குகளை தமிழக அரசே நேரடியாகத் திரும்பப் பெற்று விட முடியாது. வழக்குகளை திரும்பப் பெறுவதாகச் சிறப்பு நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்த பிறகும், நீதிமன்றத்தில் அவை நிலுவையில் இருப்பதற்கு அரசு என்ன செய்ய முடியும் என்று முதல்வர் உண்மைக்கு மாறான தகவலைக் கூறியிருக்கிறார்.

வைகோ மற்றும் தோழர்கள் வழக்கில் மறு ஆய்வுக் குழுவின் ஆணைப்படி, அரசு வக்கீல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக கொடுத்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இது நடந்தது.

வைகோ சார்பில் இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அளித்த முறையீடு நிலுவையில் உள்ளது. எனவே, திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறுவதற்கான மனுவை அளித்தால் வைகோ மீதான வழக்குகள் முடிவுக்கு வரும். ஆனால், இதைச் செய்ய திமுக அரசு முன்வரவில்லை.

முன்தேதியிட்டு, பொடா சட்டம் திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அத்தனையும் முடிந்திருக்கும். மத்திய அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில் இதுகுறித்து தெளிவாகக் கூறப்பட்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இதற்கு நேர்மாறாக மத்திய அரசு நடந்து கொண்டது.

பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தான் பாடுபட்டதாகக் கூறும் முதல்வர், தான் பதவியேற்ற பிறகும் அதைச் செய்யவில்லை என்பதுதான் என் கேள்வி.

உண்மைகளை தெரிந்து இருந்தும் அவற்றை மறைப்பதற்கு செய்யப்படும் முயற்சியாக இருக்க வேண்டும் அல்லது நிர்வாகம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆத்திரப்பட்டு அவதூறுகளை அள்ளி வீசுவதால் உண்மைகளை மறைத்துவிட முடியாது.

Posted in Arrest, Bail, BJP, Bonds, Congress, Correctional, Criminal, Eelam, Eezham, expression, Freedom, Gopal, Imprison, Independence, Inquiry, Jail, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Jeyalalithaa, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Law, Liberation, LTTE, MDMK, Misa, MuKa, Nakkeeran, Nakkiran, Nedumaran, Order, POTA, Prison, Sri lanka, Srilanka, TADA, Tigers, VaiGo, VaiKo, Veerappan | 2 Comments »

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

Cheating the state – Income Tax, Black Money, Business folks

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

வாட்டுது வருமான வரி!

“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா?” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந்து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.

மாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.

உள்நாட்டிலேயே

  • வியாபாரிகள்,
  • தரகர்கள்,
  • சொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,
  • என்ஜினீயர்கள்,
  • வக்கீல்கள்,
  • ஆடிட்டர்கள்,
  • விமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,
  • லாரி உரிமையாளர்கள்,
  • சொந்தத் தொழில் செய்பவர்கள்,
  • வியாபாரிகள்,
  • சேவைத்துறையில் இருப்பவர்கள்

என்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
இந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டும் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.

விவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.

வருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.

———————————————————————————————————

தமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்

சென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.

2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.

தமிழ்நாட்டில்

  • 2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,
  • 2004+05+இல் ரூ.8,344 கோடி,
  • 2005+06+இல் ரூ.10,861 கோடி,
  • 2006+07+இல் ரூ.14,891 கோடி.

இந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.

செய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.

———————————————————————————————————

 

Posted in Biz, Bonds, Bribery, Bribes, Budget, Bureaucracy, Business, Cheats, Chidamabram, Chidambaram, Chidhambaram, Commerce, Compensation, Corruption, Economy, Employment, Finance, Govt, Homes, Houses, Incentives, Income, Income Tax, Industry, IT, Jobs, Money, NCC, NSS, PC, Personal, Private, Rajini, Rajni, Sankar, Savings, Shankar, Shivaji, Sivaji, Small scale, SSI, Tariffs, Tax, Work, Worker | Leave a Comment »

Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.

அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.

இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!

ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.

அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?

அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.

மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.

உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.

ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.

சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.

அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).

ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.

இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.

தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.

கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது

மேலாளர்.)

Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »

Waiver of dues a fillip to civic works: Mayor

Posted by Snapjudge மேல் மே 8, 2007

நகராட்சிகளின் கடன் தள்ளுபடியால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினை இருக்காது: அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை, மே 8: நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நகராட்சி மன்றங்களின் கடன் தொகைகளைத் தள்ளுபடி செய்ததற்காக தமிழ்நாடு நகர் மன்றத் தலைவர்கள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் பேசியது:

நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களின் கடனுக்கான வட்டி வீதத்தை 13.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தபோது, வட்டியை மட்டுமல்லாமல் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். இதன்படி அனைத்து நகராட்சி மற்றும் 5 மாநகராட்சிகளின் கடன் தொகையான ரூ.793 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.

உள்ளாட்சி அமைப்பில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடே கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சிகளின் சுமை குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு சிறப்பாக செயலாற்றி அரசுக்கு நற்பெயரை நகராட்சிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நகராட்சி மன்றங்களின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் உள்ளாட்சித் துறைக்கு இனி நிதிப் பிரச்சினையே இருக்காது.

மத்திய, மாநில அரசுகளால் ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகப் பயன்படுத்தினாலே நகராட்சிகளின் தேவைகள் இனி நிறைவேற்றப்பட்டுவிடும் என்றார் அவர். விழாவில் தமிழ்நாடு நகர்மன்றத் தலைவர்கள் பேரவைத் தலைவர் ஆர்.எஸ். பாரதி, மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் நகர் மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.

Posted in Bonds, Budget, Civic, CMDA, Corporation, Councillor, CRR, Development, DMK, Economy, Finance, Funds, Government, Govt, Home, Interest, Internal Affairs, Loans, Local Body, Mayor, Metropolitan, MLC, Municipality, Public, Rajesh Lakhoni, Rates, Services, Stalin, Subramaniam, Subramanian, Tiruchi, Trichy, Waiver | Leave a Comment »

National Rural Employment Guarantee Act – 23 Districts in TN to receive funds

Posted by Snapjudge மேல் மே 8, 2007

முழு கிராம வேலை வாய்ப்புத் திட்டம் தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களுக்கு ரூ. 47.16 கோடி: மத்திய அரசு அனுமதி

புதுதில்லி, மே 8: இந்த நிதியாண்டில் மத்திய அரசின் முழு கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களுக்கு ரூ. 47.16 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது.

2007- 08-ம் ஆண்டுக்கான முதல் தவணையாக 19 மாவட்டங்களுக்கு ரூ. 26.60 கோடி வழங்கப்படும்.

  1. காஞ்சிபுரம்,
  2. திருவள்ளூர்,
  3. வேலூர்,
  4. சேலம்,
  5. நாமக்கல்,
  6. தருமபுரி,
  7. கிருஷ்ணகிரி,
  8. ஈரோடு,
  9. கோவை,
  10. திருச்சி,
  11. பெரம்பலூர்,
  12. புதுக்கோட்டை,
  13. மதுரை,
  14. தேனி,
  15. ராமநாதபுரம்,
  16. தூத்துக்குடி மற்றும்
  17. கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 3-வது கூடுதல் தவணையும் அடுத்த ஆண்டுக்கான முதல் தவணையும் வழங்கப்படுகிறது.
  1. தஞ்சாவூர்,
  2. திருவாரூர்,
  3. கரூர் மற்றும்
  4. திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அடுத்த ஆண்டுக்கான முதல் தவணை பின்னர் வழங்கப்படும்.

Posted in Allocation, Bonds, Budget, City, Districts, Economy, Employment, Finance, Funds, Growth, Help, Jobs, Loan, National Rural Employment Guarantee Act, NREGA, Rural, Suburban, Tamil Nadu, TamilNadu, TN, Village | Leave a Comment »

Reserve Bank of India’s Loan Policy – Updates, Analysis, Options

Posted by Snapjudge மேல் மே 7, 2007

ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை

எஸ். கோபாலகிருஷ்ணன்

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதி மற்றும் கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி ஏப்ரல் 24-ம் தேதி அறிவித்தார்.

நிதித்துறையில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுவது ரிசர்வ வங்கியின் கடன் கொள்கையே. இது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தொழில் துறையினரின் தேவைகள், விலைவாசி நிலவரம், பணவீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, கடன் கொள்கையில் உடனுக்குடன் சிறு, சிறு மாற்றங்களை அறிவித்து விட்டு, தொலைநோக்கு மாற்றங்களை மட்டுமே அரையாண்டு நிதி மற்றும் கடன் கொள்கையில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், இப்போது நிதிக் கொள்கை அறிவிப்பில் பரபரப்பான அம்சங்கள் இடம்பெறுவதில்லை.

நிதி மற்றும் கடன் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டு, தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடன் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

தற்சமயம், உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அவசரத் தேவை. எனினும் அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கியின் பிரதானமான விகிதங்கள் மாற்றப்படவில்லை.

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் 6 சதவிகிதமாகவே தொடர்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு 6.5 சதவிகிதமாகவே இருக்கும்.

அதேபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால அவசரக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவிகிதமாகவே உள்ளது.

மாறாக, இந்த விகிதங்கள் உயர்த்தப்பட்டிருந்தால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். சி.ஆர்.ஆர். எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் அரை சதவிகிதம் உயர்த்தி இருந்தாலும், வங்கிகளின் நிதி ஆதாரத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முடக்கப்பட்டிருக்கும்.

அதே அளவுக்கு பொது மக்களுக்குக் கடன் கொடுப்பது குறைந்திருக்கும். ஆக, கடன்களுக்கு வட்டி விகிதம் உயராமலும், கடன்தொகை குறையாமலும் புதிய கடன் கொள்கை பார்த்துக் கொண்டது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், வளர்ச்சியின் வேகம் தடைபட்டுவிடக் கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சி.ஆர்.ஆர். மற்றும் ரெப்போ விகிதம் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால அவசரக் கடனுக்கான வட்டி விகிதம்) கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உயர்த்தப்பட்டது. எனவே அவற்றை மேலும் உயர்த்திக் கடன் பெறுவோர்களின் சுமையை இன்னும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்பது கண்கூடு.

அப்படியானால், இந்தப் புதிய நிதிக் கொள்கையில் என்னதான் சிறப்பு அம்சம்? நிதிக் கொள்கையில் அனைவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது ஒன்று உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து ரிசர்வ வங்கியின் கணிப்பு என்ன என்று அறிந்து கொள்வதுதான் அது. அந்தவகையில், ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 2007 – 08-ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அத்துடன், தற்சமயம் 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள பணவீக்கம், 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதே ரிசர்வ் வங்கியின் குறிக்கோள்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஜி.டி.பி. 9 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இலக்கு. எனினும், ரிசர்வ் வங்கி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று அடக்கி வாசிப்பதற்கு காரணம் என்ன?

உலக அளவில், நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்து, இந்தியாவில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளின் பலன் வெளிப்பட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வங்கி டெபாசிட்டுகள் 20 சதவிகிதமாகவும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே இப்படி அதிகரித்துள்ள விரிவான அடித்தளத்தில், மேலும் இதே அளவு வங்கி டெபாசிட்டுகள் அதிகரிக்கும் என்றும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. வங்கிக்கடன் 24 அல்லது 25 சதவிகிதமே உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். நல்லவேளையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக் கடன்களுக்கு வட்டி உயராது. மாறாக, குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், முதல்முறையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக்கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் இதற்காக பெருமிதம் கொள்ளக்கூடும்.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட நமது இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைந்த ரூபாய் கொடுத்தால் போதுமானது. ஆனால், இன்னொரு பக்கம், ரூபாயின் மதிப்பு வலிவடைவதால், நமது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். காரணம், அவர்களுக்குக் கிடைக்கும் டாலர்களின் மதிப்பு குறைகிறதல்லவா?

இது நமது ஏற்றுமதியை இரண்டு வகையில் பாதிக்கக் கூடும். ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். இரண்டாவதாக, நஷ்டப்பட்டுக் கொண்டு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற மனநிலை ஏற்படக்கூடும். இதனால் ஏற்றுமதி அளவு சரியும். ஏற்றுமதி குறைந்தால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்.

இன்னொரு பக்கம், ஏற்றுமதியாகும் ஒரு பகுதி பண்டங்களின் மூலப்பொருள்கள் இறக்குமதி செய்தவை. இவற்றின் விலை குறைவதால் ஏற்றுமதியாளருக்கு வேறு ஒருவகையில் ஆதாயம் கிடைக்கத்தான் செய்கிறது. ஆகவே, ஏற்றுமதியையும், இறக்குமதியையும் இருவேறு கூறுகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

எப்போது ரூபாயின் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் உயரும்போது, மேற்கூறிய காரணங்களுக்காக, ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதனைச் சீர்படுத்த முனைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படிச் செய்வதற்கு இதுவரை முன் வரவில்லை. இன்னும் காலம் கனியவில்லை என்று ரிசர்வ் வங்கி கருதுகிறதுபோலும்.

அன்னியச் செலாவணி தளத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது போன்ற மிகச் சிறிய அளவிலான செயல்பாடுகளை காண முடிகிறது. அதேபோல், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லாமல், விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதே புதிய நிதிக் கொள்கையின் நோக்கம் என்பது வெளிப்படை.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் செனட் உறுப்பினர்.)

================================================

ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம்: குருமூர்த்தி வலியுறுத்தல்

திருப்பூர், மே 9: டாலர் வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். டாலர் வீழ்ச்சி காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், தொடர்ந்து இந்நிலையில் ஏற்றுமதி செய்வதில் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் கையாளவேண்டிய உத்திகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எஸ்.குருமூர்த்தி ஆலோசனை வழங்கினார்.

குருமூர்த்தி கூறியது: டாலர் வீழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை என ஏற்றுமதியாளர்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நம்நாட்டில், கடந்த ஒரு ஆண்டாக விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு பெட்ரோல் விலை உயர்வும் காரணமாக உள்ளது. நமது தேவையில் முக்கால் பங்கு பெட்ரோல் இறக்குமதி செய்கிறோம். பஸ் கட்டணம், உரம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பெட்ரோல் விலை உயர்வு பாதிக்கிறது.

ஆதாரமான பொருளாக இருக்கும் பெட்ரோல் விலை அதிகரிக்கும்போது, அது பொருளாதாரத்தை முழு அளவில் பாதிக்கிறது. பெட்ரோல் விலை 5% உயர்ந்தால், மற்ற பொருள்களின் விலை 10% வரை உயர்ந்துவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்த நிலையிலும், நமது பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருந்தது. ஆனாலும் அரசு சரியாக நிர்வாகிக்காத காரணத்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. விலைவாசி உயரும் என ரிசர்வ் வங்கிக்கு முன்கூட்டியே தெரியும்.

கடந்த 2 மாதங்களில் டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்நாட்டில் முதலீடு செய்வதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தாலும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகமாக உள்ளது.

ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வாங்கியதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தது. தொழிலுக்கு தேவையான பணத்திற்கும் கூடுதலாக பணம் வரும்போது, அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி, ரூ.2.60 லட்சம் கோடி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி அதிகம் இருப்பதால், அதை அமெரிக்காவிற்கு 2% அல்லது 2.5% என மிகக் குறைந்த வட்டிக்கு கடனாக தருகிறோம். இதனால் ரிசர்வ் வங்கிக்கு நஷ்டம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அரசை சார்ந்திருக்கும் நிலை இனி இருக்கக்கூடாது. ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடும் நிலை மாறி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசுக்கு ஆலோசனை சொல்கின்ற நிலைக்கு வரவேண்டும். இதற்காக, ஏற்றுமதியாளர்கள் சிந்தனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகத்தை டாலர் மதிப்பில் நிர்ணயித்து வர்த்தகம் செய்வதைவிட ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்து ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றார்.

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Biz, Bonds, Business, Central Bank, Commerce, Commodity, CRR, Currency, Deflation, Deposits, Dollar, Economy, Employment, Exchange, Export, Exports, FDI, Finance, Foreign, GDP, Growth, House, Housing, Imports, Industry, Inflation, Insurance, Interest, job, Loans, markets, MNC, Money, NRI, Planning, Policy, RBI, Real Estate, Recession, Reserve Bank, Rupee, Rupees, Scheme, SEZ, Shares, Stagflation, Stocks, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tirupur, Value, workers | Leave a Comment »

Irama Srinivasan – Refinancing, Retirement Planning, Pension Income

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

மறுதலை அடமானம்

இராம சீனிவாசன்

ஒவ்வொருவருக்கும் பணி ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் பணத் தேவைக்காக 30 வயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதற்காகவே பிரத்தியேக சேமிப்புக் கணக்குகள் அரசாலும், வங்கிகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்களில் பலர் ஏழ்மையில் வாடும்போது அவர்களின் பொருளாதாரத் தேவைக்காக அரசு பல திட்டங்களை தீட்டியிருந்தும், அத்திட்டங்களால் பயன் பெற முடியாத சூழலில் பலர் உள்ளனர்.

இந்திய சமூகச் சூழலில், வீடு என்ற சொத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போதுமான வருமானம் இல்லாத முதியோர் பலர் உள்ளனர். உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களால் இவர்கள் பொருளாதார ஆதரவு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களால் வீட்டை விற்று / அடமானம் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனெனில் வாழ்ந்து வந்த வீட்டின் மீது உள்ள பற்று, பிள்ளைகளுக்குத் தன் சொத்தின் ஒரு பகுதியையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக பல முதியோர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் “மறுதலை அடமானம்’ மிகப் பெரிய கொடையாக வந்துள்ளது.

வீடு போன்ற நிலையான சொத்துரிமை உள்ளவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் வீட்டை “மறுதலை அடமானம்’ என்ற முறையில் அடமானம் வைத்து 15 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசின் “பட்ஜெட் 2007 – 08’ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தை “தேசிய வீட்டு வங்கி’ செயல்படுத்தப் போவதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வழங்கும் பல வங்கிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனையலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாதாரண அடமானத்தில் கடன் பெறுபவர், கடன் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை சிறுகச் சிறுக மாதம்தோறும் செலுத்துகிறார். மறுதலை அடமானத்தில் கடன் பெறுபவர் கடன் தொகையைச் சிறுகச் சிறுக மாதம்தோறும் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் கடைசியில் திரும்பச் செலுத்துகிறார்.

தற்போது உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 40 லட்சம். உங்களுக்கு வயது 60. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் வீட்டை மறுதலை அடமானமாக வங்கியில் வைக்கிறீர்கள்.

வங்கி உங்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் தருவது எனவும், இதற்கான வட்டி 10 சதவீதம் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. 10 ஆண்டுகளின் முடிவில் நீங்கள் ரூ. 12 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். இதற்கான வட்டி ரூ. 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். எனவே 10 ஆண்டு முடிவில் ரூ. 27 லட்சம் வங்கிக்குச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று உயர்ந்திருந்தால், வீட்டை விற்று, ரூ. 27 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 33 லட்சத்தை உங்களுக்குக் கொடுக்கும். மாறாக, நீங்கள் மீண்டும் ரூ. 33 லட்சத்திற்கு உங்கள் வீட்டை மறுதலை அடமானத்திற்கு வைக்கலாம் அல்லது எனக்குப் பணம் வேண்டாம், நான் இருக்கிறவரை, இவ்வீட்டில் இருக்கிறேன், நான் இறந்த பிறகு இவ்வீட்டை விற்றுக் கடனையும், வட்டியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் வங்கியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்.

அடமான காலம் முடியும் முன்பே, வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால், அதுவரை வழங்கப்பட்ட முதல் மற்றும் அதற்கான வட்டியை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதம் உள்ள தொகை அவரின் வாரிசுகளுக்குக் கொடுக்கப்படும்.

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை “மறுதலை அடமானம்’ வைத்தால், இதில் ஒருவர் இறந்தால், மற்றவர் அடமானம் காலம் வரை தொடர்ந்து பணம் பெறலாம். அதற்குப் பிறகும் அவர் அவ்வீட்டில் வசிக்கலாம். இவ்விருவரின் இறப்புக்குப் பிறகே வீட்டை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, மீதியை அவர்களின் வாரிசுகளுக்கு அளிக்கும்.

ஏற்கெனவே வீட்டின் மீது கடன் வாங்கியவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற முடியுமா? முடியும். ஏற்கெனவே பெற்ற கடன் மற்றும் வட்டிக்கான தொகையை முதல் தவணையாகப் பெற்று, அதனை அடைக்க வேண்டும். அதன் பின்னர் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். ஆனால், முதல் தவணைக்கான வட்டியும், மாதம்தோறும் கணக்கிடப்பட்டு கடைசியில் பெறப்படும். மறுதலை அடமானத்தில் ஒருவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அவர் சொத்தின் மதிப்பு, வயது, வட்டிவீதம் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். ஒருவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பின், அவரின் வயது அதிகமாக இருப்பின், (ஏனெனில், அவருக்கு மிகக் குறைந்த ஆண்டுகள் மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருக்கும்), வட்டிவீதம் குறைவாக இருப்பின் அவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் வாழ்நாள் நீட்டிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பணி ஓய்வுக்குப் பிறகு பலர் நீண்ட நாள்கள் வாழ்கின்றனர். இன்றைய சூழலில் வீடு மட்டுமே ஒருவரின் வாழ்நாள் சேமிப்பாக உள்ளது. பணி ஓய்வூதியம் கூட போதுமானதாக இல்லை.

எனவே, “மறுதலை அடமானம்’ முறையை மிக முக்கியத் திட்டமாக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தில் கடன் பெறும் முதியவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தால் மட்டுமே அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

(கட்டுரையாளர்: மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்).

Posted in 401(k), Aging, Annuity, Banking, Bonds, Economy, Elderly, Expenses, Finances, Funds, Health, House, Income, Interest, IRA, Loan, MF, Mortgage, Mutual Funds, NCC, NSS, Nursing, pension, Planning, Poor, Rent, Retirement, Rich, Savings, Shares, Stocks | Leave a Comment »

Chennai Municipality Corporation Budget – No new Taxes

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சென்னை மாநகராட்சி: வரி உயர்வு இல்லாத உபரி பட்ஜெட்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த வரி விதிப்பு, நிதி நிலைக்குழு தலைவர் ராதா சம்பந்தம்.

சென்னை, மார்ச் 13: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட எந்த வரி உயர்வும் இல்லாத 2007-08ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை வரி விதிப்பு மற்றும் நிலைக்குழுத் தலைவர் ராதா சம்பந்தம் தாக்கல் செய்தார். இதன்படி புதிய வரிகள் இல்லை. பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு பட்ஜெட்டில் ரூ. 2.67 கோடி உபரி நிதியாக காட்டப்பட்டுள்ளது.

சென்னையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும், மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் குறித்து அவர் பேசியது: வரும் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை, தற்போது நடைமுறையில் உள்ள சொத்து வரி உள்பட எந்த வரி விகிதங்களும் உயர்த்தப்படவில்லை.

2007-08ம் நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மொத்த வருவாய் 702.03 கோடியாக இருக்கும். செலவு 699.36 கோடியாக இருக்கும்.

புதிய திட்டங்கள்: சென்னை மாநகராட்சியில் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் உள்ள 296 கிலோ மீட்டர் சாலைகள் ரூ. 90 கோடியில் சிமென்ட் சாலைகளாக மேம்படுத்தப்படும். மக்கள் வசதிக்காக பஸ் நிறுத்தங்களில் உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன நிழற்குடைகள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 350 நிறுத்தங்களில் இத்தகைய நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.

எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள்: சென்னையில் பெருகிவரும் பாதசாரிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 15 இடங்களில் இத்தகைய நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதிநவீன நிழற்குடை, நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் முறையில் (பி.ஓ.டி.) தனியார் மூலம் மேற்கொள்ளப்படும்.

சாலைகள் மேம்பாடு: மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பேருந்து சாலைகள் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி பழுதடைவதைத் தவிர்க்க ரூ. 4 கோடியில் மாஸ்டிக் ஆஸ்பால்ட் கான்கிரீட் அமைக்கப்படும்.

அனைத்து உட்புறச் சாலைகளும் ரூ. 73 கோடியில் தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.

புதிய மேம்பாலங்கள்: சென்னை எழும்பூர் ஆன்டர்சன் பாலம் அருகில் எத்திராஜ் சாலை- கிரீம்ஸ் சாலையையும் இணைக்கும் வகையில் கூவத்தின் குறுக்கே பாலம் கட்டப்படும்.

வில்லிவாக்கம் ரயில்வே கேட் பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு அருகில் எல்.சி. 1 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும்.

வேளச்சேரி, அரும்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு: 1,146 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள சமையலறைகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

அனைத்து வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார மையம்: சென்னையில் தற்போது 115 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மேலும் 40 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டம் நடத்த ஒவ்வொரு மண்டலத்திலும் தனியான கட்டடம் கட்டித்தரப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களில் முதல் 25 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

கலை, அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அவர்களின் படிப்பு முடியும் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தனியார் மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

முதியோர், ஊனமுற்றோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். மாநகராட்சி தாய்சேய் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதிகள் அமைக்கப்படும் என்றார் மேயர்.

Posted in Anganvadi, Anganwadi, Bonds, Budget, Chennai, Child, Children, Civic, Coporation, DMK, Economy, Education, Expenses, Finance, Flyovers, Healthcare, Income, IT, Kids, Loans, Local Body, Loss, Ma Subramanian, Maintenance, Mayor, MK Stalin, Municipality, Planning, Profit, Radha Sambandham, Revenues, Rippon, Rippon Building, Roads, Schemes, Schools, Stalin, Streets, Surplus, Tax, Taxes, TN, Welfare, Women | 1 Comment »

‘There are no plans in the budget to solve the woes of the Farmers’ – Gurumurthy

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

விவசாயிகளின் நெருக்கடியைத் தீர்க்க பட்ஜெட்டில் திட்டம் இல்லை: குருமூர்த்தி கோவை, மார்ச் 8: விலைவாசி உயர்வுக்கும் வேளாண் துறை சந்தித்து வரும் நெருக்கடிக்களுக்கும் தீர்வு காணும் திட்டம் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று கட்டுரையாளர் எஸ். குருமூர்த்தி கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோவையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் குறித்த கூட்டத்தில் அவர் பேசியது:

இந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை. வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதுபோல நிதியமைச்சர் கூறியுள்ளார். வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இடம் பெற்றுள்ளன.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்து கொண்டே போகும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசின் முதலீடு குறைந்து கொண்டே செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை குறித்து பட்ஜெட்டில் முழுமையாக விளக்கவே இல்லை.

நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பார்க்காமல் வெறும் ஆண்டுச் சடங்காக பட்ஜெட்டை மாற்றிவிட்டார்.

நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கு நிதியமைச்சர் கூறும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை.

கிராமப்புற சமூக பாதுகாப்புத் திட்டமும் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வரவேற்கத்தக்கவை. அதிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. குழப்பமே அதிகம் காணப்படுகிறது.

நாட்டில் ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் 10 சதவீதம் உயர்வு காணப்படுகிறது என்றார் குருமூர்த்தி.

உலகமயமாதல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல: பத்திரிகையாளர் குருமூர்த்தி பேச்சு

சென்னை, மார்ச் 9: உலகமயமாதல் என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பன்முகத் தன்மை கொண்டது என்று பத்திரிகையாளரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்டார்.

துரைப்பாக்கம் எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் “உலகமயமாதலும் எதிர்கொள்ள வேண்டிய உத்திகளும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் குருமூர்த்தி ஆற்றிய சிறப்புரை:

உலகமயமாதல் பிரச்சினைக்கு உளவியல், பண்பாடு, அரசியல் எனப் பல பரிமாணங்கள் உண்டு. இப்பிரச்சினையை நிபுணர்களோ, வணிகர்களோ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

நம் நாட்டில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்களுக்கு உலகமயமாதல்தான் காரணம் என்றும் சித்திரிக்கப்படுகிறது. அது சரியல்ல. உண்மையில் தொழில் நிறுவனங்களின் மீது அரசு கொடுத்த அழுத்தம் தளர்த்தப்பட்டதே காரணம்.

மேலை நாடுகளில் வலிமையான அரசு உண்டு. வலிமையற்ற சமுதாயம் உள்ளது. இந்தியாவில் வலிமையற்ற அரசு இருக்கிறது. ஆனால், நம் சமுதாயம் வலிமையானது.

இந்தியாவில் பண்பாட்டின் அடிப்படையிலான சமுதாயமே உலகமயமாதலை எதிர்கொண்டு வெற்றி பெறப் போகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் தங்கிய இந்தியர்கள் இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்தனர்.

போக்ரனில் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியது உலக நாடுகளை உலுக்கிவிட்டது. அதன் விளைவாக ஜப்பான் உள்பட அனைத்து நாடுகளும் இந்தியாவிலிருந்து பொருளாதார ரீதியில் மிரட்டின.

அதுவரை இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து மொத்தம் 58 லட்சம் டாலர் அளவுக்கு முதலீடு வந்து குவிந்தது.

ஒவ்வொரு நாட்டுக்கும் மென் சக்தி என்றும் வன் சக்தி என்றும் உண்டு. நாட்டின் வளமை, கல்வியறிவு, அறிவியல் வளர்ச்சி ஆகியவை மென் சக்தி. ஆனால், ராணுவ வலிமை, படைபலம் என்பது வன் சக்தி.

மென் சக்தி அபரிதமாக உள்ள ஜப்பானுக்கு உலக அளவில் போதிய மரியாதை கிடைக்காததற்கு வன்சக்தி இல்லாததே காரணம் என்றார் குருமூர்த்தி.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்த இந்தோ ஜப்பான் தொழில் வர்த்தக சபைத் தலைவர்என்.கிருஷ்ணசாமி: உலகமயமாதல் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகவே “வசுதேவ குடும்பகம்’ என்ற கோட்பாடு இதைத்தான் வலியுறுத்துகிறது.

உலகமயமாதலை எதிர்கொள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும்.

உலகமயமாதலின் பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமானால், நாடுகள் நீங்கி, நாம் அனைவரும் உலகப் பிரஜைகளாக வேண்டும் என்றார்.

கருத்தரங்கை ஒட்டி, கல்லூரியின் மேலாண்மையியல் ஆய்வுத் துறை தயாரித்த மலரை கல்லூரிச் செயலர் ஹரிஷ் எல்.மேத்தா வெளியிட்டார். முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால் பங்கேற்றார்.

கல்லூரி முதல்வர் வி.கே.ஆர்.ஜெயசிங் தலைமை வகித்தார். மேலாண்மையியல் துறைத் தலைவர் கே.எஸ். மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். துணைப் பேராசிரியர் ரூபி செல்வின் நன்றி கூறினார்.

முரசொலி மாறனின் உறுதி

“”தோஹா மாநாட்டில் உலக வர்த்தக சபை முன் வைத்த தீர்மானங்களை இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அப்போதைய தொழில் அமைச்சர் முரசொலி மாறன் ஏற்கவில்லை.

அத்தீர்மானத்தை வடிவமைத்தவர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்க உலக வர்த்தக சபையினர் திணறினர். வளரும் நாடுகளைப் பாதிக்கும் அத்தீர்மானத்தில் கையெழுத்திட முரசொலி மாறன் உறுதியாக மறுத்து விட்டார்.

இறுதியில் அமெரிக்கா மெüனமாக தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. மாறனுடன் எனக்குப் பல சில முரண்பட்ட கொள்கைகள் இருந்தாலும் அவர் காட்டிய உறுதி மிகவும் பாராட்டத்தக்கது. அதுதான் இந்தியாவின் வலிமை” என்றார் குருமூர்த்தி.

வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும்: ப.சிதம்பரம் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச்.8-

இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் சார்பில் மத்திய பட்ஜெட் பற்றிய கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்ஜெட் அம்சங்கள் பற்றி பேசினார். அப்போது வரி விலக்குகளை அரசு படிப்படியாக வாபஸ் பெறும் என்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

வரி விலக்குகள் காரணமாக 2006-007-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 191 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு வகைக்கு வழங்கப்படும் வரி விலக்கும் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் கூறி இருக்கிறார். எனவே வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும். எந்தெந்த வகைக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை விலக்கிக் கொள்ளலாமோ அந்த வரி விலக்குகளை அரசு வாபஸ் பெறும்.

என்றாலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, அறிவுசார் துறைகள், மூத்த குடிமக்கள் தொடர்பான வரிவிலக்குகள் நீடிக்கும்.

ஆபத்து மிகுந்த தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரச்சினையில் எந்தெந்த தொழில்கள் மீதான முதலீடு என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான்.

வேளாண்மை துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை பொருட்களின் இறக்குமதியால் அவற்றின் சப்ளை அதிகரித்து விலை குறையும். என்றாலும் வேளாண்மை பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதுதான் இதற்கு நீண்டகால தீர்வு ஆகும். எனவே நெல், கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணை ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனப்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனமாக்கும் முயற்சியில் அரசுடன் தொழில் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை இணையதளம் மூலம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்து ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:-

பொருளாதார வளர்ச்சி 8.5 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உற்பத்தி வளர்ச்சியும் இரு இலக்கமாக உள்ளது. ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் வளர்ச்சி விகிதம் அமையாதது ஆச்சரியமாக உள்ளது. கம்பெனிகளின் வருமான வரி, சேவை வரி வசூல் அதிகரித்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் உயரவில்லை. உற்பத்தி வரி ஏய்ப்பு நடைபெறுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் அது நீண்டகால போக்கில் கம்பெனிகளை பாதிப்பதாக அமையும். கம்பெனிகள் உற்பத்தி வரியை குறித்த காலத்தில் முறைப்படி செலுத்த வேண்டும். இது நல்ல தொழில் அணுகுமுறை ஆகும்.

இந்த நிதி ஆண்டில் உற்பத்தி வரி வசூல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 266 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி வரி வசூலில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

“மத்திய விற்பனை வரி 3 ஆண்டுகளில் ரத்தாகும்’

புதுதில்லி, மார்ச் 10: மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) விதிப்புமுறையை ரத்து செய்யும் நோக்கிலான மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய விற்பனை வரி 4 கட்டங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

இதையடுத்து “ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மசோதாவை’, 2010- ஏப்ரல் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வழியேற்படும்.

“1956 சிஎஸ்டி சட்டத்தை’ திருத்தும் நோக்கில் இந்த வரிவிதிப்பு சட்ட (திருத்த) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிஎஸ்டி வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மூன்றிலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்; அதற்கு அடுத்த ஆண்டு (2009) இரண்டிலிருந்து ஒரு சதவீதமாகவும், 2010 மார்ச் 31-ம் தேதி முழுவதுமாகவும் ரத்து செய்யப்படும். மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

சிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பலமுறை கூடி ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே இதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பால், எண்ணெய், உரம் விலையை குறைக்க நடவடிக்கை: ப.சிதம்பரம்

புதுதில்லி, மார்ச் 10: நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, பால், எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரம் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பணவீக்க விகிதம் 5-5.5 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த பிப்ரவரி 24-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் முந்தைய 6.05 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக அதிகரித்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்களுடனான பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் கூறியது:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தானிய மற்றும் பருப்பு வகைகள் மீது கவனம் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரத்தின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும்.

பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதத்தில், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

========================================================

விளைநிலம் காப்போம்

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அறிவிப்புகளும், இதற்கு விளைநிலங்கள் ஒதுக்கப்படக்கூடாது என்ற எதிர்வினைகளுமாக பரபரப்படைந்திருக்கும் இவ்வேளையில், வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்: “சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்’.

வளமான நிலங்களைப் பாதுகாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இது அவசியமான ஒன்று. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களை நகர் விரிவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக இழந்துவிட்ட இன்றைய நிலையிலும்கூட, காப்பாற்றப்பட வேண்டிய விளைநிலங்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.

சிறப்பு வேளாண்மை மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை கொஞ்சம் காலதாமதமானது என்றாலும் மிக அவசியமானது. விவசாய நிலங்களைக் குறைந்த விலையில் வாங்கி, அவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கி, மனைகளாக மாற்றுவதற்கு அங்கீகாரம் பெற்று, பல நூறு மடங்கு லாபம் சம்பாதிக்கும் நிலைமை உள்ளவரையிலும், விவசாய நிலங்களைக் காப்பாற்றுவது எளிதல்ல.

முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக தற்போது வேளாண்மை நிலம் எவை என்பதை அரசு அறிவிக்க வேண்டும். வேளாண்மை நிலங்கள் குறித்த விவரங்களை மாவட்டம், ஊர், கிராமம், சர்வே எண் விவரங்களுடன் இணைய தளத்தில் வெளியிட்டு இந்த நிலங்கள் குடியிருப்புகளாகவோ தொழிற்கூடங்களாகவோ மாறும் வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இத்தகைய வெளிப்படையான அறிவிப்பு இருந்தால், அரசு அறிவிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கூட விளைநிலத்தில் அமையாத நிலைமை உருவாகும். நகர் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்கள் மறையாமல் இருக்க உதவும்.

இந்தியாவில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. 60 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழில்களை நம்பி வாழ்கின்றனர். இருந்தபோதிலும் வேளாண்மை பற்றிய தெளிவு அரசிடம் இல்லை. விவசாயிகளும் ஆர்வம் இழந்தவர்களாக இருக்கின்றனர்.

தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதற்குத்தான் எந்த அரசும் ஆர்வம் காட்டுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடும் ஆர்வம், அக்கறை வேளாண்மைக்கு காட்டப்படுவதில்லை.

இன்றைய மிகப்பெரிய சோகம், இரண்டு தலைமுறைகளாக பாரம்பரிய விவசாயத்தை முற்றிலுமாக மறந்துவிட்ட இளம் தலைமுறை விழிபிதுங்கிக் கிடக்கிறது. இயற்கை வேளாண்மையில் மீண்டும் ஈடுபட மனத்தளவில் ஆசை இருந்தாலும், பாரம்பரிய விவசாயம் குறித்த அனுபவ அறிவோ, வழிவழித் தகவல்களோ இல்லாமல் இன்றைய இளம் விவசாயிகள் தயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்படும்போது அவற்றுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பாரம்பரிய விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும்.

வேளாண்மை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்குப் போகாமல் காப்பதுபோலவே, இந்த மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் பரவலாக விளைவிக்கும் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. தாவர விதைகள் மற்றும் செடிகொடிகளைக் கொண்டு எளிய முறையில் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கும் முறை, எரு தயாரிக்கும் பாரம்பரிய முறைகளை மீண்டும் நம் வயல்களில் புகுத்த வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. அந்தந்த நிலத்தில் விளையக்கூடிய பயிர்களைப் பயிரிடுவதும், அந்த நிலத்திற்கு அருகில் கிடைக்கும் பொருளையே உரமாக மாற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மேற்கொள்வதும் மட்டுமே இன்றைய வேளாண்மையின் செலவைக் குறைத்து, விவசாயிக்கு ஓரளவாகிலும் வருவாய் கிடைக்கச் செய்யும்.

வானிலை, மண்வளம், பயிர் வளர்ச்சி, நீர் பயன்பாடு என எல்லாவற்றிலும் தகவல்தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவும் தகவல்தொழில்நுட்பம் உதவும்.

=================================================
மேலும் 50 உழவர் சந்தைகள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 4: புதிதாக 50 உழவர் சந்தைகள் ரூ. 12.5 கோடியில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

உழவர் சந்தைக்கு என நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட 28 உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அறுவடைக்குப் பின் விளை பொருளை நேர்த்தி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி ரூ. 50 லட்சம் செலவில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

வட்டி குறைப்பு: விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடன் தொகைக்கு வட்டி 8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். பொருளீட்டு கடன் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 2.75 கோடியில் 100 உலர் களங்கள் அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை மூலிகைப் பயிர்கள் மற்றும் மலைப் பயிர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய தனி சந்தைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மண்டலங்களில் மேம்படுத்தப்பட்ட நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.

வேளாண் பல்கலையில் ரூ. 50 கோடியில் வசதிகள்: மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 50 கோடி நிதியைக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த பரிசோதனை ஆய்வுக் கூடம் உள்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

சென்னை நந்தனத்தில் வேளாண்மை பள்ளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்ததை ஆங்கிலேயர்கள் கோவைக்கு மாற்றம் செய்தனர். இவ்வாறு மாற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி வேளாண் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு கட்டடம் ரூ. 5 கோடியில் கட்டப்படும்.

தருமபுரியில் வேளாண் அறிவியல் மையம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 100 சதவீத நிதி உதவியுடன் தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையம் ரூ. 1 கோடி 10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இம் மையத்தில் விவசாயிகள், பண்ணை மகளிர், இளைஞர்களுக்கு வேளாண் தொழில்களில் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 560 ஹெக்டேர் பரப்பில் ரூ. 5.56 கோடியில் துல்லிய பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும்.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலமாகவும் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாகவும் 390 ஹெக்டரில் ரூ. 4 கோடியில் துல்லிய பண்ணைத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஏற்றுமதிக்கு உகந்த வாழையில் 150 ஹெக்டேர் பரப்பில் ரூ. 2 கோடியில் துல்லியப் பண்ணை அமைக்க தேசிய தோட்டக் கலை வாரியத்தின் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்.
=================================================
வேளாண் துறை இரண்டு அடுக்காக மாற்றப்பட்டு சீரமைக்கப்படும்: அமைச்சர்

சென்னை, ஏப். 4: வேளாண் துறையில் மூன்று அடுக்கு முறை மாற்றப்பட்டு இரண்டு அடுக்கு முறை செயல்படுத்தப்படும். அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடையவும் ஒரே இடத்தில் கிடைத்திடவும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனைத்துறை, விதைச்சான்று துறை ஆகிய துறைகளின் விரிவாக்கப் பிரிவுகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் ஒன்றிய அளவில் அனைத்து தகவல்களையும் பெற ஏற்பாடு செய்யப்படும்.

அதன் பொருட்டு தற்போது தாலுகா அளவில் பணியாற்றி வரும் பணியாளர்களின் பணி நிலை பாதிக்காதவாறு ஒன்றிய அளவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

நிர்வாகம் மாவட்ட அளவிலிருந்து ஒன்றிய அளவில் நேரடியாகச் செயல்படும்.

பயணப்படி உயர்வு: வேளாண் துறையில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் நிரந்தர பயணப்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 140 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் எரிபொருள் செலவினங்கள் உயர்ந்துள்ள நிலையில் பயணப்படியை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

அங்கக நடைமுறைகள் கடைப்பிடித்து உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு சான்று அளிக்கும் வகையில் தற்சமயம் இயங்கி வரும் வேளாண்மை விதைச் சான்று துறையானது “விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

அங்கக வேளாண்மை சான்றிதழ் பயிற்சி பெறவும் அதற்கென ஒரு தனிப் பிரிவு தொடங்கவும் தில்லியில் உள்ள அபிடா நிறுவனத்தில் பயிற்சி பெற உயர் அலுவலர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

தரிசு நில மேம்பாடு: சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலங்களை 50 ஏக்கருக்கு மேல் ஒரு தொகுப்பாக உள்ள இடங்களில் நிலத்தின் உரிமையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கை வைத்தால் அரசு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக சீர் செய்து கொடுக்கப்படும்.

அதோடு தேவையான அளவு நிலத்தடி நீரும், சாதகமான புவியியல் நிலையும் இருக்கும் இடங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி கொடுத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய மானிய உதவிகள் வழங்கப்படும். நிலத்தடி நீர் போதுமான அளவு இல்லாத தொகுப்பு நிலங்களில் மரப் பயிர்கள் நடவுசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

=================================================

வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி திட்டம்: பிரதமர் அறிவிப்பு

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய போது பிரதமர் மன்மோகன் சிங் இத் திட்டத்தை அறிவித்தார்.

வேளாண்மைத் துறையின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் இந் நிதி வழங்கப்படும் என்றார்.

இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மைத் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந் நிதியை வழங்கும். இது தொடர்பான திட்டத்தை அடுத்த இரு மாதங்களில் திட்டக் குழு மற்றும் மத்திய வேளாண்மை அமைச்சகம் இறுதி செய்யும்.

வேளாண்மைத் துறை அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அரசுகளை ஊக்குவிக்கும் வகையில் இத் திட்டம் இருக்கும்.

கோதுமை, நெல், தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உணவுப் பாதுகாப்பு இயக்கம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. உணவு தானியப் பொருள்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கிலும் இத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

கடுமையான முடிவுகள் எடுத்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை அடைய முடியும்.

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

முன்னதாக, தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் கோதுமை உற்பத்தியை 80 லட்சம் டன்களாகவும், நெல் உற்பத்தியை 1 கோடி டன்களாகவும், தானிய உற்பத்தியை 20 லட்சம் டன்களாகவும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உணவு பாதுகாப்பு இயக்கம்: மன்மோகன் சிங் யோசனை

பற்றாக்குறை காரணமாக அண்மையில் கடுமையாக விலை உயர்ந்த கோதுமை, நெல், தானியங்கள் மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உணவுப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த 53-வது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தவகையில் உதவி செய்யலாம் என்பதை வரையறுக்க திட்டக்குழு உரிய பரிந்துரைகள் அளிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார், திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் பேசினர்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி. ராஜசேகரன், திட்டக் குழு உறுப்பினர் செயலர் ராஜீவ் ரத்னா ஷா, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

11-வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான வேளாண்மைக் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக இக் கூட்டம் நடைபெற்றது.

—————————————————————————————–
வேளாண்மைத் துறை மானியங்களை குறைக்க வேண்டும்: சரத்பவார் குழு பரிந்துரை

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறையை மேம்படுத்த மானியங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரையில் மேலும் கூறியிருப்பது:

நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

வேளாண்மைத் துறைக்கு மாநில அரசுகள் அளித்து வரும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பாசனத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உணவுப் பதப்படுத்தல் துறையில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.

வேளாண் மண்டலங்கள்

வேளாண்மைக் கடன் வசதியை மேம்படுத்தவும், கடன் வசூலை விரைவு படுத்தவும் சிறப்பு மையங்கள் கொண்ட மண்டலங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும். கடன் வசூலிப்பு மையங்களின் தலைவர்களாக சுயேச்சையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம்.

இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுû

தற்போது நடைமுறையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கொண்டு வர வேண்டும். அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பில்லாத பயிர்களை இத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

4 சதவீத வளர்ச்சி

11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், வேளாண்மைத் துறையின் வளர்ச்சி வீதம் 4 சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

மானியங்களை குறைக்க வேண்டும்

உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மைத் துறை சார்ந்த கொள்கையைப் பின்பற்றி, மானியங்களை குறைக்க வேண்டும். மானியமாக அளிக்கப்பட்டு வரும் நிதியை ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதி மற்றும் வேளாண்மை இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

உற்பத்தி குறைவுக்கு கவலை

கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மைத் துறையில் உற்பத்தி குறைந்து கொண்டே வருவது கவலையளிக்கிறது. புதிய விளைநிலங்களை அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லாத நிலையில், உற்பத்தியும் குறைந்து வருவது நாட்டின் உணவு பாதுகாப்புக்கு ஆபத்தானது.

1980-களில் 3.1 சதவீத வளர்ச்சியில் இருந்த கோதுமை உற்பத்தி 1990-களில் 1.83 சதவீதமாகவும், 2004-05-ம் ஆண்டில் 0.11 சதவீதமாகவும் உள்ளது. அதே போல் அரிசி உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று துணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

————————————————————————————————-

உழவுக்கு வஞ்சனை!
June 1, 2007 Dinamani Editorial

விவசாயத்திலிருந்து நாட்டின் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே 2%-க்கும் குறைவாக இருப்பதால் இம் முறை அரசின் முழுக் கவனமும் அத்துறை மீது திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே ஒதுக்கியிருக்கும் நிதியுடன் கூடுதலாக ரூ. 25,000 கோடி ஒதுக்க மத்திய அரசு தயார், மாநிலங்கள் தங்களுடைய சூழல், தேவைகளுக்கேற்ப திட்டங்களைத் தீட்டி எங்களை அணுகினால் போதும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தில்லியில் கூடிய தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் சமீபத்தில் கூறியிருக்கிறார்கள்.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. விவசாயத்தின் “”உண்மையான பிரச்னைகளை”த் தீர்க்க யாருக்கும் மனது இல்லை. இப்போது விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. 15 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். ஜமீன்தாரி முறையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்பு சட்டம் இப்போது விவசாய உற்பத்திக்கே உச்சுருக்காக இருக்கிறது. விவசாய நிலங்கள் பாகப்பிரிவினை காரணமாக, பல துண்டுகளாகச் சுருங்குவதால் திட்டமிட்ட வகையிலோ, கட்டுப்படியாகும் வகையிலோ சாகுபடிகளை மேற்கொள்ள முடிவதில்லை. பருப்பு வகைகள், சிறு தானியம், எண்ணெய் வித்துகள் சாகுபடி குறைந்ததற்கு இது முக்கிய காரணம்.

நேரடி நெல் விதைப்புக்கும், நாற்று நடுவதற்கும், அறுவடைக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. அவற்றை வாடகைக்கு வாங்கித்தான் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். விவசாய வேலைக்கு இப்போது கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. அருகில் உள்ள தொழிற்பேட்டையில் மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு (ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி!) எவர்சில்வர் டப்பாவில் “டிபன்’ எடுத்துச் செல்லும் கலாசாரம் கிராமத் தொழிலாளர்களிடையே பரவி வருகிறது. (தஞ்சை டெல்டா போன்ற பகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம்.) “”விவசாயத்தை நம்பினால் பிழைக்க முடியாது, இது நிரந்தரமான தொழில் அல்ல” என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

கரும்பு பயிரிட்டால் காசு அள்ளலாம் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கதையாகி வருகிறது. “”சர்க்கரை ஆலையில் கரும்பை வெட்ட அனுமதி தரவில்லை, காய்ந்த கரும்பை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்” என்ற செய்திகள் ஏன் வருகின்றன?

விவசாய இன்சூரன்ஸ் திட்டம் என்பது, விவசாயத்தை மக்கள் அனைவரும் கைவிட்ட பிறகுதான் நல்ல நிலையில் அமலுக்கு வரும் என்று தோன்றுகிறது.

விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல்லா இடுபொருள்களும் கடன் வசதியும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். விவசாய விளைபொருள்களைச் சேமித்துவைக்க கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டித்தரும் திட்டம் இன்னமும் ஏட்டளவிலேயே இருக்கின்றன.

உழவர் சந்தை திட்டம் ஓரிரு இடங்களில் மட்டுமே துடிப்பாகச் செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பு, பால் பெருக்கம் போன்ற திட்டங்கள் மக்களுடைய சுய முயற்சியாலும், ஊக்கத்தாலும் மட்டுமே நடைபெறுகிறது. அரசு தரப்பில் முனைப்பு காணப்படுவதில்லை. தரிசு நிலங்களில்கூட காட்டாமணக்கு, கருவேலம் சாகுபடிதான் கண்ணில்படுகிறது.

விவசாயத்தை வளப்படுத்துவது எப்படி என்று விவசாயிகளைத் தவிர “”நிபுணர்கள்” கூடிப்பேசி முடிவெடுப்பதால் இன்னமும் அந்தத்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

எதை எடுத்தாலும் இறக்குமதி என்கிற முடிவு எடுப்பதும், வெளிநாட்டிலிருந்து எப்போது கப்பல் வரும், மக்களின் பசி தீரும் என்கிற நிலைமை ஏற்படுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து. உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத எந்தவொரு நாடும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகக் கருத முடியாது. விவசாயத்துக்காகச் செலவிடப்படும் மானியம், நாட்டின் பாதுகாப்புக்காகவும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் செலவிடப்படும் அடிப்படைச் செலவு என்றுதான் கருத வேண்டும்.

விவசாயத்தை வஞ்சனை செய்து தொழில்வளத்தைப் பெருக்குவது தேசத்துக்கே செய்யும் வஞ்சனை!

Posted in Agriculture, Allocation, Analysis, Biz, BJP, Bonds, Budget, Business, Central Sales Tax, Chidambaram, Commerce, CST, Dharmapuri, Doha, Economy, Exports, Farmers, Farming, Finance, Funds, Garden, Globalization, GST, Gurumurthy, Instructor, Interest, Japan, Loans, Maran, Murasoli, Options, Plan, Planning, Professor, Rates, RSS, Sales Tax, SEZ, Small Biz, solutions, Subsidy, Teacher, University, Water | 1 Comment »

Global markets slide in reaction to Shanghai Stock Exchange plunge

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

சீனப் பங்குச் சந்தை விலையில் பாரிய வீழ்ச்சி

பங்குச் சந்தையின் அடிப்படை இன்னமும் பலமாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
பங்குச் சந்தையின் அடிப்படை இன்னமும் பலமாகவே இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பாரிய விலை வீழ்ச்சியை அடுத்து உலகெங்கும் பங்கு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீனப் பங்குச் சந்தையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சி இதுவாகும்.

ஷாங்காய் பங்குச் சுட்டெண்ணில் ஏற்பட்ட 9 வீத வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு 100 மில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் தடவையாக இந்தச் சுட்டெண்கள் 3000 புள்ளிகளை விட அதிகமாக வளர்ந்த மறுதினம், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு இந்தச் சுட்டெண்கள் தற்போது சென்றுள்ளன.

Posted in Bonds, BSE, China, Currency, DJIA, Economy, Exchange, Finance, Futures, Global markets, Hongkong, Index, Indices, markets, NSE, Options, plunge, Prices, Profits, Shanghai, Shares, Shenzhen, Stock Exchange, Stocks, World | 1 Comment »

Pension Funds for Industrial workers & union Labourers – PF Interest Rates

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2007

பி.எப். வட்டி

நாட்டிலுள்ள 4 கோடி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஆகியோரின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதிக்கு (பி.எப்.) எவ்வளவு வட்டி அளிப்பது என்ற பிரச்சினை வழக்கம்போல இந்த ஆண்டும் இழுபறியாக உள்ளது.

இந்த வட்டிவிகிதத்தை 8 சதவீதமாகக் குறைக்க அரசு விரும்புகிறது. இவ்விதம் குறைக்கக் கூடாது என்று தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

வருங்கால வைப்புநிதித் திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டதாகும். தொழிலாளர்களும், ஊழியர்களும் தாங்களாக முன்வந்து எதிர்கால நலன் கருதி, சேமிப்பில் பணம் போட இயலாதவர்கள்.

ஆகவே அவர்கள் ஓய்வு பெறும்போது கணிசமான பணம் கிடைக்கச் செய்ய இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வைப்புநிதி வகையில் பிடிக்கப்படும் தொகை ஒவ்வொருவர் கணக்கிலும் சேர்ந்துகொண்டே போகிறது. இதற்காகக் கணக்கிடப்படும் வட்டித்தொகை ஏற்கெனவே உள்ள தொகையுடன் ஆண்டுதோறும் சேர்க்கப்படுகிறது.

ஒருகாலகட்டத்தில் இதற்கான வட்டித்தொகை 12 சதவீதமாக இருந்தது. ஆனால் 2000-ம் ஆண்டில் தொடங்கி இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு இப்போது 8.5 சதவீதமாக உள்ளது. ஆனால் இதைக் கொடுப்பதே பெரும்பாடு என்பதுபோல அரசு சித்திரிக்க முற்பட்டுள்ளது. வைப்புநிதிக்காகப் பிடித்தம் செய்யப்படுகிற தொகையுடன் நிர்வாகம் சம அளவில் அளிக்கின்ற தொகையும் சேர்ந்து மொத்தப் பணம் பெருகிக் கொண்டே போகிறது. 2004 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி மொத்த வைப்புநிதித் தொகையில் உள்ள பணம் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் கோடியாகும். இது தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் உரியது. ஆகவே இது அரசுக்கு அவர்கள் அளித்துள்ள கடன் போன்றதே.

கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிற அதேநேரத்தில், வைப்புநிதிக்கு அரசு அளிக்கும் வட்டித்தொகை குறைந்து கொண்டே வருகிறது. நாட்டில் பணவீக்க விகிதம் 5 சதவீத அளவை எட்டியுள்ள நிலையில் வைப்புநிதிக்கு அளிக்கப்படுகிற வட்டி மிகக் குறைவே. இதை மேலும் குறைப்பது என்பது எந்தவகையிலும் நியாயமற்றது. இந்தியாவில் யாராவது பல ஆயிரம் கோடி ரூபாயை 8.5 சதவீத வட்டியில் நீண்டகாலக் கடனாக அளிப்பார்களா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். ஆனால் வைப்புநிதித் திட்டத்தின் கீழ் வருகிற தொழிலாளர்களும், ஊழியர்களும் மட்டும் அப்படி குறைந்த வட்டியில் கடன் தர வேண்டுமென அரசு எதிர்பார்ப்பது எப்படி என்பது புரியவில்லை.

வருங்கால வைப்புநிதிக்கான வட்டிவீதத்தை இப்போதுள்ள அளவில் நீடித்தால் அல்லது உயர்த்தினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்று வாதிக்கப்படுகிறது. இது பொருளற்ற வாதமாகும். வருங்கால வைப்புநிதி வகையில் பெறப்படும் தொகையில் 79 சதவீதம் சிறப்பு டெபாசிட் திட்டத்தில் போடப்படுகிறது. இத் திட்டத்துக்கு உண்டான வட்டி 8 சதவீதமே என்றும் ஆகவே அதற்கு மேல் கொடுத்தால் நஷ்டம் என்றும் வாதிக்கப்படுகிறது. சிறப்பு டெபாசிட் திட்டத்துக்கான வட்டி 8 சதவீதம் என்பதை நிர்ணயித்தது யார்? அதாவது அரசு தானாக ஒரு வட்டி வீதத்தை நிர்ணயித்துவிட்டு அதற்கு மேல் கொடுத்தால் நஷ்டம் என்று கூறுவது விசித்திரக் கணக்கு ஆகும்.

வருங்கால வைப்புநிதிக்கான வட்டிவீதம், முன்பு இருந்த அளவுக்காவது உயர்த்தப்பட வேண்டும். அதற்கு தொழிற்சங்கங்கள் போராட வேண்டும். 8 சதவீதமாகக் குறைக்கும் திட்டத்தை முறியடித்துவிட்டோம் என்று பெருமைப்படுவதோடு நின்று விடலாகாது.

Posted in 401 K, Bonds, Dinamani, Economy, Finance, India, Industry, Interest, Interest Rates, Labor, Labourers, markets, Pension Funds, PF, Security, Share, Society, Stocks, Union, workers | Leave a Comment »