Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Yoga’ Category

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Steroids

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உயிர் காக்கும் உயர்ந்த மருந்துகள்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

அலோபதி மருத்துவத்தில் உயிர்காக்கும் மருந்தான STEROID இருப்பது போல், ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளதா?

ருக்வேதம் நோய் பற்றிய வர்ணனையில் இருவகையான நோய்களைப் பற்றி குறிப்பிடுகிறது. தோன்றும் வகையறிய முடியாதபடி ஊடுருவிப் பாய்ந்து முழு உருவம் பெற்ற பின்னரே உணரப்படுபவை, ரக்ஷஸ் எனும் பெயர் கொண்டவை. மீண்டும் மீண்டும் தலை தூக்குபவை, அமீவா எனப் பெயர் உடையவை.

இந்த இருவகையான நோய்களும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றில் தோன்றும் அறிகுறிகளால் மனிதன் வேதனையுறும் போது STEROID மருந்துகள் அந்த அறிகுறிகளை அமுக்கி மனிதனை முடக்கிவிடாமல் அவனை நடக்கும்படி செய்கின்றன. அறிகுறிகளை மட்டுமே அமுக்கி விடுவதால் நோய் நீங்கி விட்டது என்று உறுதியாகக் கூற இயலாது. தடாலடி வைத்திய முறைகளால் நோய் நீங்கி நிரந்தர இன்பத்தை ஒருவரால் பெற இயலாது. ஒரு நோயை ஏற்படுத்தும் காரணம், உடலில் தனக்கு ஏதுவான காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், அந்தக் காலநிலை தனக்கு அனுகூல நிலையை அடைந்ததும், அந்தக் காரணத்திற்கு தக்கபடி நோயின் சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது. உடலில் தென்படும் அறிகுறிகளை வைத்து அந்தச் சீற்றத்தை ஏற்படுத்தும் தோஷ நிலைகளை நன்கு கணித்து, அந்த தோஷம் எதனால் கெட்டது என்ற காரணத்தையும் ஒரு மருத்துவனால் கூற இயலுமானால் அந்த மருத்துவர் ஒரு சிறந்த மருத்துவ நிபுணராகவே கருதப்படுகிறார். ஏனென்றால் அவர் நோய்க்கான காரணத்தை நிறுத்தச் சொல்லி, கெட்டுள்ள தோஷத்தை அறிகுறிகளின் வாயிலாக அறிந்து அதைச் சீர்படுத்தும் நோக்கில் உணவும், நடவடிக்கையும், மருந்தையும் உபதேசிக்கிறார். இந்த நல்உபதேசம் நபஉதஞஐஈ மருந்துகளைவிட சிறந்தவை.

மனிதனின் உயிரைக் காப்பவை மட்டுமே மருந்தல்ல. உடலுக்கும் மனதிற்கும் நலம் தரும் உணவையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டவன், செயலைச் செய்வதற்கு முன் நிதானித்துச் செயலாற்றுபவன், புலன்களால் உணரப்படும் பொருள்களில் நப்பாசை காரணமாக ஈடுபடாதவன், பொறுமை உள்ளவன், உண்மையான நற்செயல்களைத் தயங்காமல் கூறி அதன்படி நடக்கத் தூண்டும் உயர்ந்த நண்பனைப் பின்பற்றுபவன் நோயற்றிருப்பான் என்று ஆயுர்வேத நூலாகிய சரகஸம்ஹிதையில் காணப்படுகிறது.

“”இதையெல்லாம் நான் கடைபிடிக்காது போனதினால்தான் ரக்ஷஸ் வகை வியாதியும், அமீவா வகையும் என்னைப் பீடித்துள்ளன; STEROID மருந்துகளால்தான் காலம் தள்ளுகிறேன். இதிலிருந்து விடுபடுவதற்கான உயிர் காக்கும் மருந்து உள்ளதா” என ஒரு நோயாளி ஆயுர்வேத மருத்துவரை அணுகி கேட்பாரேயானால், அதற்கான தீர்வை அவரால் இருவகையில் மட்டுமே தர இயலும்.

அவை சோதனம் மற்றும் சமனம் எனும் இரு வைத்திய முறைகளேயாகும். உடலின் உட்புறக் கழிவுகளை அகற்றும் பஞ்சகர்மா எனும் ஐவகைச் சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா, நஸ்யம் எனும் மூக்கில் மருந்து விட்டுக் கொள்ளும் முறை மற்றும் ரத்தக் குழாய்களைக் கீறி, கெட்ட ரத்தத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை சோதனம் எனும் வைத்திய முறைகளாகும். நோயும் பலமாக இருந்து நோயாளியும் பலசாலியாக இருக்கும் நிலையில் மட்டும் இந்தச் சிகிச்சை முறையைச் செய்ய இயலும்.

நோயின் தாக்கம் குறைவாகவும், நோயாளியும் பலமின்மையினால் வருந்துபவராக இருந்தால் சமனம் எனும் 7 வகை சிகிச்சை முறைகளே போதுமானது.

1. உணவைப் பக்குவம் செய்யக்கூடியது.

2. பசித்தீயை வளர்ப்பது.

3. பட்டினியால் உடல் கெடுதியை அகற்றுவது.

4. தண்ணீர் தாகத்துடன் இருக்கச் செய்வது.

5. உடற்பயிற்சி.

6. வெயிலில் அமர்ந்திருப்பது.

7. எதிர்காற்றை உடலில் படும்படி செய்வது.

மேற்கூறிய சிகிச்சை முறைகளை STEROID மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்குத் தகுந்தவாறு உபயோகித்து அவரை அதிலிருந்து விடுபடச் செய்து, நோயின் தாக்கத்தையும் குறைத்து அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆயுர்வேதத்தால் தர இயலும் என்பதே தங்கள் கேள்விக்கான விடை.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Body, Diet, Good, Habits, Health, Medicines, Natural, Nutrition, Physical, steroids, Swaminathan, Yoga | Leave a Comment »

Ayurvedha Corner – Pranayamam: Breathing Techniques

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அறிவுக் கூர்மைக்குப் பிராணாயாமம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

வயது 32. சுமார் பத்து ஆண்டுகளாக ஓடும்போதும் சைக்கிள் மிதிக்கும்போதும் மாடிப்படி ஏறும்போதும் மூச்சு வாங்குவதுடன் மார்புப் பகுதியில் கடுமையாக வலியும் ஏற்படுகிறது. மேலும் நடுமுதுகுப் பகுதியில் தொடர்ந்து வலி ஏற்படுகிறது. அதிகமாக வியர்க்கிறது. குதிகால் வலி, பாத வெடிப்பு உள்ளது. தகுந்த மருந்து கூறவும்.

மனித உடலில் ஐந்து வகையான வாயுக்கள் உயிர் உள்ளவரை செயலாற்றுகின்றன. அவற்றுக்கு பிராணம்- உதானம்- வியானம்- ஸமானம்- அபானம் என்று பெயர். பிராணவாயு தலையைத் தங்குமிடமாகக் கொண்டது. தொண்டையிலும் மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலை நிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட் செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும்.

உதான வாயு மார்பில் இருந்து கொண்டு தொண்டை மூக்கு முதல் தொப்புள் வரை உலவும். பேசுதல், செயலில் முயற்சி, புஷ்டி, வலிவு, நிறம், உடல் உட்புறக் குழாய்களை தெளிவாக வைத்திருத்தல், அறிவு, தைரியம், நினைவாற்றல், மனதிற்கு உணர்வுகளைத் தெரிவித்தல் ஆகியவை இதன் செயல்களாகும்.

இந்த இருவாயுக்களும் தங்கள் விஷயத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளன என்று தாங்கள் கூறும் அறிகுறிகள் மூலம் தெரிகிறது. சரியான முறையில் பிராணாயாமம் செய்பவர்களுக்குப் பிராணவாயுவின் செயல்திறன் மேம்பட்டு அவர்களின் அறிவுக் கூர்மை, மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற திடமான உள்ளத்தை அவர்கள் அடைந்திருப்பதைக் காண முடிகிறது.

பிராண- உதான வாயுக்களின் போக்குவரத்துக்குத் தடை ஏதும் ஏற்படா வண்ணம் நீங்கள் தலை மற்றும் மார்புப் பகுதியை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும். அதற்கான சில எளிய வழிகள்-

1. காலையில் பல் துலக்கியதும் வாயை வெதுவெதுப்பான தண்ணீரால் சுத்தப்படுத்தவும், அணுதைலம் எனும் மூக்கில் விடும் மூலிகை எண்ணெய்யை இரண்டு சொட்டு விட்டுக் கொள்ளவும். அதன்பிறகு வாயினுள் வரும் இந்த எண்ணெயைத் துப்பிவிடவும். வெதுவெதுப்பான நல்லெண்ணெய் இரண்டு காதுகளிலும் விட்டுக் கொண்டு பஞ்சால் காதை அடைத்து வைக்கவும். பிறகு காதினுள் உள்ள அழுக்கைத் துடைத்து விடவும். மூளைப் பகுதியை இணைக்கும் இந்த இரு துவாரங்களைச் சுத்தப்படுத்துவதன் விளைவாக பிராண வாயுவின் சஞ்சாரம் தங்கு தடையின்றி நடைபெறும்.

2. யோகாசனப் பயிற்சிகளை தகுந்த ஒரு குருவின் கீழ் கற்றுணர்ந்து, பிராணாயாமத்தை ஆசனப் பயிற்சிகளுக்குப் பிறகு செய்யவும். நுரையீரல் பகுதி வலுப்பட பிராணாயாமம் உதவுவதால் மார்புப் பகுதியைச் சார்ந்த உதான வாயுவின் ஓட்டமும் சீராக இருக்கும்.

தலை மற்றும் மார்புப் பகுதிகளை இணைக்கும் நரம்புகளும் தசைப் பகுதிகளும் வலுப்படுவதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த உபாதை நீங்க வழி உள்ளது. ஒவ்வொரு பிடிச் சோற்றுடன் மருந்தைக் கலந்து உண்பது ஸ்க்ராஸம் என்ற முறையாகும். க்ராஸôந்தரம் என்பது ஒரு பிடிச்சோற்றுக்கும் மற்றொரு பிடிச் சோற்றுக்கும் நடுவில் மருந்து அருந்தும் முறை. இந்த இருமுறைகளும் பிராண வாயுவின் கோளாறினால் ஏற்பட்ட நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் நீங்கள் காலை பலகாரம் சாப்பிடுவதற்குப் பதிலாகச் சூடான சாதத்துடன் ஹங்கு வசாதி எனும் சூரணம் 1/2 ஸ்பூன் அளவில் கலந்து 1 டீ ஸ்பூன் (5மிலி) இந்து காந்தம் கிருதம் எனும் நெய் மருந்தையும் கலந்து ஒவ்வொரு பிடியாகச் சிறிய அளவில் சாப்பிடவும். ஒவ்வொரு பிடி சோற்றுக்கும் நடுவில் விதார்யாதி கிருதம் எனும் நெய் மருந்தை 5 மிலி அளவில் வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிடவும்.

உதான வாயுவின் செயல்திறன் மேம்பட மாலை உணவுக்குப் பிறகு மருந்து சாப்பிட மிகவும் நல்லது. அந்த வகையில் நீங்கள் தசமூலாரிஷ்டம் 30 மிலி, தான்வந்திரம் குளிகை எனும் மாத்திரை இரண்டுடன் சாப்பிட உகந்தது.

இவ்விரு வாயுக்களின் சீற்றத்தை அதிகப்படுத்தும் வாயுப் பண்டங்களாகிய கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு, மொச்சக் கொட்டை, அவரைக்காய், வேர்க்கடலை, கொத்தவரங்காய், காராமணி போன்றவற்றை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டாம். குளிப்பானங்களைத் தவிர்க்கவும். தசமூலரஸôயனம் எனும் லேகியத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட தலை மற்றும் தசைப்பகுதிகள் நன்கு வலுப்படும். குதிகால் வலி, பாதவெடிப்பு நீங்க பிண்டதைலம் எனும் எண்ணெய்யை வெது வெதுப்பாகக் கால்களில் தடவிவிடவும்.


(பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771)

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Breath, Diet, Exercise, Food, Gayathri, Gayatri, Healing, Medicine, Morning, Natural, Nature, Pranayama, Pranayamam, Therapy, Walk, Yoga | Leave a Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – Konrai

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

மூலிகை மூலை: தோல்-வியாதிகளைத் துரத்தும் மூலிகை!

விஜயராஜன்

நீளமான சதுர வடிவில் சிறகுக் கூட்டு இலைகளையும் சரம்சரமாய் தொங்கும் மஞ்சள் நிறத்தில் பளிச்சிடும் பூங்கொத்துளையும் கொண்டது கொன்றை. நீண்ட உருளை வடிவத்தில் காய்களையும் உடைய இலையுதிர் மர இனமாகும். பட்டை, பூ, காய் வேர் மருத்துவக் குணம் உடையது. நோயை அகற்றி உடலைத் தேற்றி காய்ச்சலைத் தணிக்கும். வாந்தியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கி உடலிலுள்ள தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும். நுண்புழுக்களைக் கொல்லும். மலச்சிக்கலைப் போக்கும். காயிலுள்ள சதை மலச்சிக்கலைப் போக்கும் குணம் உடையது. தமிழகம் எங்கும் பரவலாகத் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள் : கொன்றை, கொண்ணை, பெருங்கொன்றை, கிருதாமல், தாமம், இதழி, கடுக்கை, ஆக்குவதம்.

வகைகள்: கருங்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, நரிக்கொன்றை, புலிநகக் கொன்றை, மந்தாரக்கொன்றை, முட்கொன்றை, செம்மயிர்க்கொன்றை, பொன்மயிர்க்கொன்றை.

ஆங்கிலப் பெயர் : Cassie fistula, linn, caesalpiriaceae

மருத்துவக் குணங்கள் : சரக்கொன்றைக் கொழுந்தை கைப்பிடியளவு எடுத்து அவித்துப் பிழிந்த சாறு 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்துக் குடிக்க வயிற்றில் உள்ள நுண்புழுக்கள், பூச்சிகள் வெளியேறும்.

சரக்கொன்றை பூவை எலுமிச்சப்பழச் சாறுவிட்டு அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் வைத்து இருந்து குளிக்கச் சொறி, கரப்பான் தேமல் குணமாகும்.

சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சம அளவாக எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கிக் குடித்து வர பிரிமியம், வெட்டை, காமாலை, பாண்டு குணமாகும்.

சரக்கொன்றைப் பூவை வதக்கித் துவையலாக்கி உணவுடன் உண்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுப் பூச்சிகள் வெளியேறி நோய் அகலும். நீடித்துக் குடித்து வர மதுமேகம் குணமாகும்.

சரக்கொன்றை வேர்ப்பட்டை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் திரிகடுகுச் சூரணம் 5 கிராம் சேர்த்து 2 வேளை 100 மில்லியளவு குடித்து வரக் காய்ச்சல் தணியும். இதய நோய் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர மேக நோய்ப் புண்கள், கணுச்சூலை குணமாகும். (ஒருமுறை மலம் கழியுமாறு மருந்து அளவைத் திட்டப்படுத்திக் கொள்ள வேண்டும்.)

சரக்கொன்றை காயில் மேலுள்ள ஓட்டைப் பொடியாக்கி, குங்குமப்பூ சர்க்கரை சமஅளவாக எடுத்து பன்னீரில் அரைத்துப் பெரிய பட்டாணி அளவுகளாக மாத்திரைகளை உருட்டி உலர்த்தி, மகப்பேறின்போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் பத்து நிமிடத்திற்கு ஒரு மாத்திரை வீதம் கொடுத்து வர இறந்த குழந்தையை வெளியே தள்ளிவிடும்.

சரக்கொன்றை காயிலுள்ள சதைப்புளியை உணவுக்குப் பயன்படுத்துகின்ற புளியுடன் சேர்த்து உணவு செய்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.

சரக்கொன்றை சமூலத்தை பாலில் அரைத்து எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்து வர சொறி, கரப்பான், தேமல் குணமாகும்.

சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் அரைத்து எலுமிச்சப்பழம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர பிரிமியம், வெட்டை, காமாலை, பாண்டு குணமாகும்.

சரக்கொன்றை இலையைத் துவையல் செய்து சாப்பிட மலங்கழியும்.

சரக்கொன்றை இலையை அரைத்து தடவி வர படர்தாமரை, அழுக்குத் தேமல் போன்ற தோல் வியாதிகள் மறையும்.

சரக்கொன்றை பூவை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வயிற்று வலி, குடலைப் பற்றிய நோய்கள் குணமாகும்.

சரக்கொன்றைப் பூவை பாலுடன் கலந்து காய்ச்சி குடிக்க உள்ளுறுப்புகளை வன்மைப்படுத்தும். மெலிந்தோர்க்கும் தக்க பலன் தரும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, Doc, Herb, Herbs, Konrai, Medicine, Mooligai, Moolikai, Nammalvar, Nammalwar, Nammazhvar, Nammazhwar, Natural, Naturotherapy, PAK, Therapy, Tigerclaw, Tigerclaw tree, Yoga | Leave a Comment »

Q&A with Doctor on Shoulder Pain – Medical Options (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

இது புதுசு: முதுகு வலிக்கு இனி முற்றுப்புள்ளி!

ந.ஜீவா

மூக்குள்ளவரை சளி இருக்கும் என்பார்கள்.

இனி முதுகு இருக்கும் வரை முதுகு வலி இருக்கும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது.

அந்த அளவுக்கு முதுகுவலி இன்றைய நவீன உலகில் பரவலான நோயாகிவிட்டது. அதுவும் நாள் முழுக்க நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு முதுகுவலி உடன்பிறவா சகோதரன் போல ஆகிவிட்டது. அலுவலகத்திற்கு லீவு எடுப்பவர்கள் பலமுறை பாட்டியைச் சாகடித்த பின்னால் இப்போது சொல்லக் கண்டுபிடித்திருக்கும் லேட்டஸ்ட் காரணம், “”பேக் பெயின் தாங்க முடியலை சார். டாக்டர்ட்ட போகணும்.”

முதுகுவலி பிரச்சினையை ஆப்ரேஷன் இல்லாமல், ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் தீர்க்க வந்திருக்கிறது ஓர் அதிசய இயந்திரம். ஆசியாவிலேயே… அதுவும் இந்தியாவிலேயே… முதன்முறையாக ஹைதராபாதிலும் இப்போது சென்னையிலும் வந்திருக்கிறது. முதுகுவலி பற்றியும் அந்த இயந்திரத்தின் “மகிமை’ பற்றியும் நம்மிடம் விரிவாகப் பேசினார் சென்னை அண்ணாநகர் தி பேக் அன்ட் நெக் கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் ஹரிஹரன்.

முதுகு வலி இன்று பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?

இன்றைக்கு 13 வயது குழந்தை முதல் 60 வயது தாத்தா வரை முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்குக் காரணம் உடலுழைப்பு இல்லாததே.

என்னுடைய தாத்தா 10 மைல் 15 மைல் என்றாலும் நடந்தேதான் பள்ளிக்குப் போய் படித்தார். வேலைக்கும் போய்வந்தார். என்னுடைய அப்பா சைக்கிளில்தான் எப்போதும் சென்றார். நான் ஒரு கி.மீ. தூரம் என்றாலும் நடந்து செல்லாமல் வாகனங்களில்தான் சென்றேன். உடல் உழைப்பு இவ்வாறு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது.

கிராமப்புறங்களில் நாள் முழுக்க குனிந்து நடவு செய்யும் பெண்களுக்கு முதுகுவலி வருவது கிடையாது. அரிசி குத்துவதும், ஆட்டுரலில் மாவு அரைப்பதும், ஏன் அம்மியில் மிளகாய் அரைப்பதுமே இல்லாமற் போய்விட்டது. இவ்வாறு உடல் உழைப்பு இல்லாததே முதுகுவலி வர முக்கியக் காரணம்.

உடல் உழைப்பு எதுவும் செய்யாமல் நாம் முதுகை இன்சல்ட் பண்ணுகிறோம். பதிலுக்கு முதுகு நமக்குத் தொல்லை கொடுக்கிறது.

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி வராமல் இருக்க அதற்கெனச் சேர்கள் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும் இதனால் பெரிய அளவுக்குப் பயனில்லை. ஏனெனில் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் எப்போதும் முதுகைப் பொருத்தமாகச் சாய்த்து வைத்திருப்பது கிடையாது. பல நேரங்களில் சீட்டின் நுனியில் உட்கார்ந்துதான் வேலை செய்கிறார்கள். இதனால் முதுகு வலி மட்டுமல்ல, கழுத்து வலியும் சேர்ந்து வரும்.

நமது மூளையில் இருந்து வரும் நரம்புகள் தண்டுவடம் என்கிற பெயருடன் முதுகெலும்பின் உள்ளே இருக்கின்றன. இந்த முதுகு எலும்பு 33 சிறிய எலும்புகளால் ஆனது. இந்த எலும்புகள் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். இரண்டு எலும்புகளுக்கு இடையே மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் இருக்கிறது. தண்டுவடம் முதுகு எலும்பின் நடுவில் பாதுகாப்பாக இருக்கிறது. இந்த நரம்புகள் இரண்டு குட்டி எலும்புகளுக்கு நடுவில் இருந்து வெளியேறுகின்றன. இந்த நரம்புகள்தான் தோள்பட்டை முதல் கால்கள் வரை உள்ள அனைத்துத் தசைகளையும் இயக்குகின்றன.

30 – 40 வயதுள்ளவர்களுக்கு ஜவ்வில் நரம்புகள் உராயும். அதனால் கழுத்தின் பின்பக்கத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். கால்களில் வலி ஏற்படும். கால்கள் மரத்துப் போகும்.

50 – 60 வயதுள்ளவர்களுக்கு முதுகு எலும்புகள் ஒரு எலும்பிற்கு மேல் இன்னொரு எலும்பு ஏறிக் கொள்ளும். இதனால் இந்த இரண்டு எலும்புகளையும் இணைக்கும் ஊஹஸ்ரீங்ற் த்ர்ண்ய்ற் லூஸ் ஆகி உடைந்து போய்விடும். இதனால் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, கடுமையான வலி உண்டாகும்.

சிலருக்கு வேறு ஏதாவது ஆப்ரேஷன் செய்வதற்காக மயக்க ஊசியை முதுகில் போடுவார்கள். இந்த ஊசி முதுகில் உள்ள டிஸ்க்கில் பட்டுவிட்டால், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வலி இருக்கும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குக் குழந்தையின் வெயிட் அதிகமாவதால் முகுகெலும்பில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதுகெலும்பு ஜவ்வில் நரம்பு அழுந்தும். வலி ஏற்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ரத்தம் செல்வது குறைவாக இருப்பதால் முதுகில் வலி ஏற்படும். இப்படி முதுகுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதுகுவலிக்கு என்ன சிகிச்சை?

பல்வேறு காரணங்களால் முதுகு வலி வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவரிடம் சென்றால், முதலில் பெட் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். பிஸியோதெரபி வைத்துக் கொள்ளலாம் என்பார்கள். இடுப்பில் பெல்ட் (ட்ரேக்ஷன்) போட்டுக் கொள்ளலாம் என்பார்கள். வலி தெரியாமல் இருக்கவும் உடலுக்கு ஊக்கம் தரவும் ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடச் சொல்வார்கள். கடைசிக்கும் கடைசியாக ஆப்ரேஷன் பண்ணச் சொல்வார்கள். ஸ்டீராய்டு மாத்திரைகள் அந்த நேரத்தில் வலியைக் குறைத்தாலும் மீண்டும் வலி வந்துவிடும். தவிர இந்த மாத்திரைகள் உடலுக்கு மிகவும் தீங்கானவை.

ஆனால் இம்மாதிரி ஊசி, மருந்து, மாத்திரை, ஆபரேஷன் என்ற வழக்கமான மருத்துவம் எதுவுமில்லாமல் முதுகுவலியை இப்போது தீர்க்க முடியும்.

அது எப்படி?

முதுகு வலி பிரச்னையைத் தீர்க்க வந்திருப்பதுதான் ஈதல9000 என்ற இயந்திரம். சுமார் எண்பத்து ஐந்து லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரத்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறோம்.

இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதின் பின்னணி சுவையானது. இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விஞ்ஞானிகள்தாம்.

விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆறுமாதம் ஒரு வருடம் என்று போகிற விண்வெளி வீரர்களை அவர்கள் திரும்பி வந்ததும் பரிசோதித்துப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முதுகு எலும்பு ஓர் அங்குலம் வரை வளர்ந்திருப்பது தெரிய வந்தது. இதற்குக் காரணம் புவியீர்ப்பு விசை விண்வெளியில் இல்லாததும், அங்கு நிலவும் குறை மண்டல அழுத்தமும்( Negative Pressure)தான். இந்தக் குறை மண்டல அழுத்தமானது முதுகின் மேல் உள்ள தசைநார்களை விரிவடையச் செய்கிறது. காய்ந்து சுருங்கிய நிலையில் உள்ள டிஸ்க்குகளைப் பதப்படுத்தி விரிவடையச் செய்கிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் எவ்வளவு நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்?

டிஆர்எக்ஸ் 9000 இயந்திரத்தில் 20 நாட்களில் இருந்து ஒரு மாதம் வரை சில நிமிடங்கள் ஒருவர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஜவ்வுப் பகுதி விரிவடைகிறது. ஜவ்வுப் பகுதியில் அழுத்திக் கொண்டு இருக்கும் வலிக்குக் காரணமான நரம்புகள் விடுபடுகின்றன. இதனால் முதுகு வலி அடியோடு போய்விடுகிறது.

இந்த சிகிச்சை செய்ததற்குப் பின் திரும்பவும் ஜவ்வு, தசைகள் சுருங்கி மீண்டும் முதுகு வலி வராதா?

இந்தச் சிகிச்சையின் போது நாங்கள் தசைகள் இறுகவும் மீண்டும் பழைய நிலையை அடையாமல் இருக்கவும் உடற்பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். அந்த உடற்பயிற்சியைத் தினமும் தவறாமல் செய்வதால் முதுகு வலி திரும்பவும் வரவே வராது.

முதுகு வலிக்காக ஏற்கனவே ஆபரேஷன் செய்தும் வலி தீராதவர்கள் எங்களிடம் சிகிச்சைக்காக வருகிறார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிற இந்த இயந்திரம் இந்தியா உட்பட 16 நாடுகளில்தான் உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையில் முதன்முதலாக எங்களிடம்தான் இருக்கிறது.

Posted in Auto, Backpain, Bed, Bike, Bodyache, Chat, Comfort, Computer, Deskjob, Diet, Doc, Doctor, Driver, Exercise, Injury, Interview, Long distance, medical, Medicine, Options, Pain, Pillow, Posture, Seating, Shoulder, Sleep, Sofa, Software, Spinal, Traction, TV, Two-wheeler, Tylenol, Yoga | 2 Comments »

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »

Madhya Pradesh Begins Surya Namaskar Amid Muslim Opposition: Is Rule on Yoga Constitutional?

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

ம.பி. மாநில பள்ளிகளில் பலத்த எதிர்ப்பையும் மீறி சூரிய நமஸ்காரம் அமல்

போபால், ஜன.26-

மத்தியப் பிரதேச மாநில பா.ஜனதா அரசு, பலத்த எதிர்ப்பையும் மீறி பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம் செய்யும் திட்டத்தை நேற்று அமல்படுத்தியது. இருப்பினும் சூரிய நமஸ்காரம் கட்டாயமில்லை என்று அறிவித்து உள்ளது.

போபாலில் டி.டி.நகர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு, சூரிய நமஸ்காரம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது யோகாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1 லட்சம் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். மாநில அளவிலும், மாவட்டங்கள் அளவிலும் நடந்த இந்த நிகழ்ச்சியில் 3 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தனர். மாவட்ட அளவில் மந்திரிகள் கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். ஷாடால் என்ற இடத்தில் சூரிய நமஸ்காரம் செய்த 6-ம் வகுப்பு மாணவன் உத்தம் புஜ்ஜியா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தை அமல்படுத்தியது சட்டவிரோதமானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய மாநில பிரிவு கூறி உள்ளது. இது கல்வியை காவிமயமாக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. போபாலில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சூரிய நமஸ்காரம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்த காட்சி.

Posted in bhopal, BJP, Congress, Constitution, Constitutional, Education, Fanatics, Hinduism, Hindutva, Islam, Jamait-e-Hind, Law, Madhya Pradesh, MP, Muslim, Politics, Politics & Religion, Pranayam, Propaganda, Religion, RSS, Schools, Shivraj Singh Chouhan, Sun, Surya Namaskar, Tamil, Worship, Yoga | Leave a Comment »