Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘parents’ Category

Chiranjeevi’s second daughter weds secretly

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்

தெலுங்கு திரைப்பட உலகின் “சூப்பர் ஸ்டார்” சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா (19), வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலர் சிரிஷ் பரத்வாஜை (22) புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

செகந்திராபாதில் போவென்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் ஸ்ரீஜாவின் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்ரீஜா கூறியதாவது:

சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பயின்றுவந்தபோது கடந்த நான்கு ஆண்டுகளாக பரத்வாஜுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக என்னை வீட்டில் அடைத்து வைத்தனர்.

எங்கள் காதல் சமாசாரம் குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன், வலுக்கட்டாயம் செய்து எனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். என்னை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தனர்.

இந்நிலையில் என் நண்பர்கள் உதவியுடன் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து தப்பிவந்து, பரத்வாஜை கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டேன்.

தற்போது எனது தந்தை குடும்பத்தார் மூலம் எங்களது உயிருக்கு மிரட்டலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. போலீஸôரும் பத்திரிகை நண்பர்களும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

நாங்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். அதனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும்.

என்னுடைய பெற்றோர் என் கணவரை என்னிடமிருந்து பிரிக்கக்கூடாது. அதற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது போலீஸின் கடமை என்றார்.

Posted in Affair, Andhra, AP, Baradhwaj, Baradwaj, Barathvaj, Begumpet, Bharadhwaj, Bharadvaj, Bharadwaj, Bharathvaaj, Bharathvaj, Brahmin, CA, Chiranjeevi, Chiru, Cinema, CLP, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), consent, daughter, Engineering, Films, Gossip, hyd, Hyderabad, Janardhan Reddy, Love, Marriage, Movies, P. Janardhan Reddy, parents, Reception, Reddy, Rumor, Rumour, secret, Shreeja, Shrija, Shrijha, Sireesh, Sirish, Sreeja, Sreejha, Srija, Srijha, Telugu, Tollywood, Wedding | Leave a Comment »

Female Infanticide – Gender selections & Abortions in India: Law

Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007

பிறப்பது எங்கள் பிறப்புரிமை!

உ . நிர்மலா ராணி, வழக்கறிஞர்

கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு தம்பதி பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற தாய், மூன்றாவது ஆண் குழந்தை பெற விரும்புவதில் என்ன தவறு என்று வினவியிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கண்டனக் குரல்களையும் எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு போடப்பட்ட ஓரிரண்டு தினங்களுக்குள் ஹைதராபாதின் ஒரு பகுதியில் தனது எட்டாவது மகளுக்குப் பிறந்த பெண் குழந்தையைச் சுமையாகக் கருதி அதை, அப்துல் ரஹீம் என்பவர் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் நடந்திருக்கிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் கை வெளியே தெரிந்ததைப் பார்த்து, விவசாயி ஒருவர் காப்பாற்ற, அக்குழந்தை அதிசயமாய் உயிர் பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது சம்பவத்தில் குற்றம் நடந்து விட்டது. முதல் சம்பவத்தில் குற்றம் செய்ய கோர்ட் அனுமதி கேட்கப்படுகிறது. இவை இரண்டிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் – மக்கள்தொகையில் பெண்ணினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் காரணிதான் அது.

மக்கள்தொகையில் ஆண் பெண் விகிதம் என்பது 103:100 இருக்க வேண்டும். அதாவது 1000 ஆண் குழந்தைகளுக்கு 971 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஏனென்றால், ஆண் கரு, பெண் கருவை விட பலவீனமானது. உருவான ஓர் ஆண்டுக்குள் வியாதிகளால் இறந்துவிடக் கூடியது. அவ்வாறு இறந்துவிட்டால் ஆண் – பெண் விகிதம் சமநிலையை அடையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் நமது நாட்டில் மக்கள்தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 1901-ல் 1000 ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் இருந்தன. 1991-ல் 945 ஆக குறைந்து 2001-ல் 927-க்கு சரிந்துவிட்டது. பெண்களுக்கெதிராக இந்நாட்டில் நிலவும் பாரபட்சத்தால் அவர்கள் இறந்து போகிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கான சர்வதேச நிறுவனமாகிய யூனிசெஃப்பும் இதை உறுதி செய்கிறது. இந்தியாவில் இவ்வாறு மாயமான பெண்களின் எண்ணிக்கை 5 கோடியாம்.

“லான்செட்’ என்ற இதழுக்காக இந்திய மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவிலுள்ள 11 லட்சம் குடும்பங்களில் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுக்கு 5 லட்சம் பெண் குழந்தைகள் கருக்கொலை காரணமாகவும், கருவுறுவதற்கு முன்பே பாலினத்தைத் தேர்வு செய்யும் முறையாலும் அழிந்து போகின்றனர் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கொள்ளை நோய்களாகக் கருக்கொலைகளும், சிசுக்கொலைகளும் சமுதாயத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன. இந்த நோய்களை உற்பத்தி செய்யும் விஷக்கிருமிகள் நமது ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் புரையோடிப் போயிருக்கின்றன.

வரதட்சிணை என்ற பெயரிலும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரிலும், பெண்கள், பெற்றோர்களால் ஒரு பொருளாதாரச் சுமையாகவே கருதப்படுகிறார்கள். சொத்துரிமையும் பெற்றோருடனே வாழும் உரிமையும், இறுதிச்சடங்கு செய்யும் உரிமையும், ஆண்களுக்கே அளிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பெண்களைப் புறக்கணிக்கும் போக்கும் ஆண்குழந்தைகளை விரும்பும் மனப்பாங்கும் நியாயப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்து, இரண்டாவது கருவும் பெண்ணாக உருவாகிவிட்டால் ஆண் குழந்தை வேண்டி கருக்கொலை செய்வதில் என்ன தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முதல் குழந்தை ஆணாக உருவானால் யாரும் பெண் குழந்தை வேண்டி ஆண் கருவை அழிப்பதில்லையே? “லான்செட்’ ஆய்வின்படி, முதல் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் இரண்டாவது பெண் குழந்தைகளின் விகிதம் 759 ஆகவும் மூன்றாவது பெண் குழந்தைகள் விகிதம் 719 ஆகவும் குறைந்து விடுகின்றன. ஆனால் இதுவே முதல் குழந்தை ஆணாக இருந்துவிட்டால் அதன்பிறகு ஆண் பெண் விகிதம் சமமாகவே இருக்கிறது என்று அந்த ஆய்வு பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பெண் கருக்கொலை, சிசுக்கொலை என்பது ஏதோ படிக்காத பாமர மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் அதிகம் என்பதில்லை. நாட்டின் வளமான மாநிலங்கள் என்று போற்றப்படும் பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், குஜராத்தில்தான் மிகக் குறைந்த பாலின விகிதத்தில் பெண்கள் பிறக்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ள தில்லியில் பெண்களின் விகிதம் 868. மகாராஷ்டிரத்தில் 1991-ல் 946 ஆக இருந்த விகிதம் இன்று 913 ஆக மாறிவிட்டது. மகாபாரதப் புகழ் குருஷேத்ரத்தில் பாலின விகிதம் 770. எங்கெல்லாம் ஸ்கேன் மையங்கள் அதிகமிருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் விகிதம் குறைந்தே காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

“”பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் தொழில் நுட்பம் (முறைப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்துதலைத் தடுக்கும்) சட்டம்” 1994-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஸ்கேன் மையங்கள் அரசிடம் பதிவு செய்யப்பட வேண்டும். கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இதைப் பற்றி விளம்பரம் செய்தாலும் அது குற்றம். முதல் 10 ஆண்டுகளுக்கு எவ்வித அசைவுமில்லை. உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகு ஓரளவு முன்னேற்றம் உள்ளது. இந்நிலையில்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போடப்பட்டுள்ளது.

“”ஆணும் பெண்ணும் சமம்” என்கிறது அரசியல் சட்டம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்கிறது சமூகச் சட்டம். நீதி பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியல் சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டுமே தவிர சமூகச் சட்டத்தை அல்ல. ஒரு சட்டம் எந்தப் பின்னணியில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதை உணராமல் எதிர்மறையான கருத்துகளைக் கூறும்போது சமூகத்தில் குற்றத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு அவை ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.

சீனாவிலும் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2020-க்குள், திருமணம் செய்ய முடியாத 3 கோடி ஆண்கள் இருப்பர் என்று கூறப்படுகிறது. அங்கும் பாலினத் தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த “”நாமிருவர் நமக்கொருவர்” போன்ற திட்டங்களைக் கடைப்பிடித்ததில் பெண் கருக்கொலைகள் அதிகரித்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை விரும்பும் போக்கு மக்களிடம் இல்லாததால் பிரச்னை இல்லை. கரு உருவாவதற்கு முன்னரே பாலினத்தைத் தேர்வு செய்து உருவாக்கிக் கொள்ளும் முறைப்படி, வர்ஜினியாவில் 11 பெற்றோர்களில் 10 பேர் பெண் குழந்தையைத்தான் தேர்வு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பல, பாலினத் தேர்வு செய்யும் முறையைத் தடை செய்துள்ளன.

சமூகவியலாளர், அமித்தாய் எட்ஸியோனி கூறுகிறார்: “”பாலினத் தேர்வு என்பது பாலின விகிதாசாரத்தில் ஒரு கடுமையான அசமத்துவ நிலையை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான ஆண்களைப் பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளாக்கும் அல்லது பிரம்மசாரிகளாக்கும்.” ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவாள்; கடத்தப்படுவாள்; மறுத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவாள்.

இந்நிலையில், இந்தியாவில் பெண் குழந்தைகளின் சமூக அந்தஸ்து உயர்த்தப்பட வேண்டும். பாதகமான சமூகப் பழக்கவழக்கங்களை, சடங்கு சம்பிரதாயங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்க, அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை கருவிலே அழிக்கப்பட்டாலும், பூமிக்குள் புதைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் எழுவோம் – ஃபீனிக்ஸ் பறவைகளாய்!

———————————————————————————————————————————————–

ஆண்டுக்கு 10 லட்சம் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன: மத்திய சமூகநல வாரியத் தலைவி தகவல்

புதுச்சேரி, நவ. 4: இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர் என்று மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில சமூக நல வாரியம் சார்பில் பெண் கரு பாதுகாப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை புதுவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மத்திய சமூக நல வாரியத் தலைவி ரஜனி பாட்டீல் பேசியது:

21-ம் நூற்றாண்டில் நாம் இதுபோல் ஒரு கருத்தரங்கம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுவது குறித்து மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும் பெண் ஆணா, பெண் என்பதை கண்டறிவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வந்தும், அதிலிருந்து தப்பிக்க டாக்டர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் என்று கூறுகின்றனர். பெண் விகிதம் 50 சதவீதம் இல்லாமல் இந்தியா வல்லரசாகி என்ன பயன்? தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் ஓரளவு உயர்ந்துள்ளது. ஆனால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெண்கள் விகிதம் உயரவில்லை என்றார்.

புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் 1000 ஆண்களுக்கு 1001 பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்துக்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் நிறுவனங்களை நிறுவினால் 25 சதவீதம் மானியம் அளிக்கிறோம். தலித் பெண்களின் முன்னேற்றத்துக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம் என்றார்.

சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி பேசும்போது, பெண்கள் கருவுறும் நாளில் இருந்து இறக்கும் வரை அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு நாளாக அறிவிக்க உள்ளோம். அந்த நாளில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என்றார்.

இக் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்எல்ஏ ஆர்.விசுவநாதன், புதுச்சேரி சமூக நல வாரியத் தலைவி ழான் பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பொறுப்பும் செயல்திறனும் கொண்ட தன்னார்வ அமைப்புகளை அரசு தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் பெண் குழந்தை பிறப்பை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். கிராமப் புறங்களில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் கொல்லப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறந்தது முதல் பெண் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டம் இயற்றிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் கல்வியுடன் இணைந்த வாழ்க்கை கல்வியை பள்ளிகளில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியே 8-ம் வகுப்பு முதல் கற்றுத்தர வேண்டும்’ உள்ளிட்ட கருத்துக்கள் இக் கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டன.

———————————————————————————————————————————————————–

ஆடாமல் நிற்குமா அரசுத் தொட்டில்?

எஸ். ஜெய்சங்கர்

உள்ளாட்சி முதல் உலக அளவில், பல நிலைகளில் பெண்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் எனப் பல துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர். வர்த்தக நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளனர். பாரத நாட்டின் முதல் குடிமகள் முதல் நாட்டின் பல்வேறு பொறுப்புகளைப் பெண்கள் வகித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்றாலும், பாரதியின் கனவை நனவாக்க, விண்கலமேறி விண்வெளிக்குப் புறப்பட்ட கல்பனா சாவ்லா, திரும்பி வரும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், காற்றோடு கலந்தார். அவரது வரிசையில் சுனிதா வில்லியம்ஸ், தொழில்நுட்பத்தையும் தாண்டி வெற்றி பெற்றார். இந்திய நாடே அவரைப் போற்றுகிறது. இது பெண்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் செய்தி.

அண்டவெளியில், காற்றில்லா இடத்தில், காலடி எடுத்து வைத்து, நடைபழகிய பெண்கள் நம் பாரதப் பெண்கள் என எண்ணி மகிழ்ந்தாலும், தாயின் கருப்பை எனும் இருண்ட பிரதேசத்தில் தோன்றி, வெளிச்சத்தைப் பார்த்தும், பார்க்காமலும் கருகிய மொட்டுகள் நம் தமிழகத்தில் ஏராளம்.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில், 1999 ஆம் ஆண்டு 657 பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன. 2000 ஆம் ஆண்டு 439 பெண் சிசுக்கள் உயிரிழக்க நேரிட்டது. மற்ற மாவட்டங்களிலும் இச்சம்பவங்கள் நிகழ்ந்தன.

தமிழகத்தின் ஆண் -பெண் குழந்தைகளின் விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதல், பெண் சிசுக்கொலை ஆகியவை தமிழக அரசை கவலையடையச் செய்தது.

இதன் விளைவாக, 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், முழுவீச்சில் 2001 ஆம் ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. திட்டம் தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகும், தருமபுரியில் 2001 ஆம் ஆண்டு 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளன எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண் சிசுவைக் கொல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதை அறிந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, விரும்பாத பெண் சிசுக்களை அரசுத் தொட்டிலில் போட்டுச் சென்றுவிட்டனர். அக்குழந்தைகளைப் பராமரிக்கும் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம், விரும்புவோருக்குத் தத்து கொடுக்கிறது.

மேலும், 2-வது பிரசவத்தைக் கண்காணிப்பது, பெண் குழந்தை பிறந்தால் பெற்றோருக்குக் கவுன்சலிங் தந்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு அறிவுறுத்துவது போன்றவற்றால் பெண் சிசுக்கொலைகள் படிப்படியாகக் குறைந்தன.

பெண் சிசுக்கொலை குறைந்தாலும், தொட்டிலுக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அண்மையில் 1000-மாவது தொட்டில் குழந்தையைப் பெற்றுள்ளது தருமபுரி அரசுத் தொட்டில் குழந்தைகள் மையம். இதில் சுமார் 120 குழந்தைகள் மட்டுமே ஆண் சிசுக்கள். ஆண் சிசுக்கள் தொட்டிலுக்கு வந்ததற்கும் சமுதாயச் சீர்கேடே காரணம்; தவறான உறவால் பிறந்த குழந்தைகளை வெளிக்காட்ட முடியாமல், அவை தொட்டிலில் போடப்பட்டன.

பெண் குழந்தை விஷயத்தில், அவர்களைப் படிக்க வைத்து, வரதட்சிணை, நகை எனச் செலவு செய்து திருமணம் செய்து வைக்க வேண்டும்; ஆண் குழந்தையாக இருந்தால், மாற்றான் வீட்டுப் பெண் மூலம் குடும்பத்துக்கு வரவு என வரவு- செலவு கணக்கு பார்க்கும் எண்ணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களிடமும், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகம். அதனால், பெண் குழந்தை என்றால் வளர்ப்பது கடினம் என்ற சலிப்பு. தொட்டில் குழந்தைகள் மையம் தொடங்கப்பட்டு, தருமபுரியில் மட்டுமே 1000 குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறோம் எனும் தகவல் பெண்ணினத்துக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. காரணம், பெண் சிசுவைக் கொன்றால் சிறைத்தண்டனை உறுதி என்ற பயம் மட்டுமே, சிசுக்கொலைகளைக் குறைத்து, அவற்றை அரசுத் தொட்டிலில் போடச் செய்திருக்கிறது.

சிசுக்கொலைகளைத் தடுக்கவும்; பெண் குழந்தைகளைத் தத்து பெறவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் முதல்கட்ட நடவடிக்கைகளே. பெண் குழந்தைகளைத் தத்து பெறுவதோடு தனது கடமை முடிந்தது என அரசு ஒதுங்கிக்கொள்ளாமல், அரசுத் தொட்டிலுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான, ஆக்கபூர்வ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கான அடுத்தகட்ட திட்டங்கள் தேவை.

மேலும், பெண் குழந்தைகளை அரசுத் தொட்டிலில் போடுவதைத் தவிர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு வர வேண்டும். இதற்கு, சமூக, பொருளாதார மாற்றம் மிக அவசியம். பொருளாதார வசதி கொண்ட எவரும் தங்களது பெண் சிசுக்களைக் கொல்வதும், அரசுத் தொட்டிலில் போடுவதும் கிடையாது. வருவாயற்ற ஏழைகளே பெரும்பாலும் இச்செயலில் ஈடுபடுகின்றனர்.

அரசின் முயற்சியாலும், பொதுமக்களிடையே ஏற்படும் மன மாற்றத்தாலும், “அரசுத் தொட்டிலுக்கு பெண் சிசுக்கள் வருவது நின்று 1000 நாள்களாகின்றன’ என்ற அறிவிப்பு வெளியாகுமானால், அது நிச்சயமாக பெண் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.

Posted in Abortion, Analysis, Backgrounders, Birth, Census, Child, Childbirth, Children, Conservative, Culture, Disease, Equal, Female, Feminism, Gender, Growth, Health, Infanticide, Insights, Kids, Law, Liberal, male, Malnutrition, Needy, Op-Ed, Opportunities, Opportunity, Order, parents, Poor, Population, ratio, Rich, rights, Sex, solutions, State, Stats, Statz, Values, Wealthy | Leave a Comment »

Understanding & nurturing Kids – Child development

Posted by Snapjudge மேல் மே 3, 2007

Thozhi.com

உங்கள் குழந்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ள அவர்களின் உணர்வுப் போக்குகளை இனம் காணுங்கள்

– டாக்டர் எஸ். யமுனா

குழந்தை மருத்துவத்தில் குழந்தை வளர்ச்சி என்பது பிரமிப்பூட்டும் ஒரு பிரிவு. அதில் புதிய சிந்தனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. உயிரியல், உளவியல், மற்றும் சமூகக் காரணிகளே குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன என்று சமீப காலங்களில் சொல்லப்படுகிறது.

ஒரு குழந்தையின் வளர்ச்சியின் மீதுள்ள உயிரியல் ரீதியான தாக்கங்களைப் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. மரபணு உட்பொருள், குரோமோசோம் ஒழுங்குவரிசை, கருவறைக்குள் இருக்கும் சூழல், கர்ப்ப காலத்தின்போது தாய்க்கு ஏற்படும் ஜெர்மன் மீஸில்ஸ் அல்லது ருபெல்லா போன்ற தொற்றுநோய்கள், கர்ப்பத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்; குறைப் பிரசவம், மிகத் துரிதப் பிரசவம் (precipitate labour), நெடுநேரப் பிரசவம் (இதில் குழந்தையின் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையக்கூடும்) போன்ற நிகழ்வுகள், பிறக்கும்போது குழந்தையின் அழுகை பலவீனமாக இருத்தல் ஆகியவை இந்தக் காரணிகளில் அடங்கும்.

குழந்தைகள், உணர்வுப் போக்குகளுடன் (temperamental traits) பிறக்கின்றன. குழந்தைகள் அன்றாட வாழ்க்கையின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்த உணர்வுப் போக்குகள். இவை குழந்தைகளுக்குள் ஆழமாகப் பொதிந்திருக்கும். பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் குறிப்பிட்ட சில நடத்தைகள் மரபணு அமைப்பினால் வந்தவையே தவிர, தாங்கள் வளர்க்கும் முறையினால் ஏற்பட்டவை அல்ல என்று தெரிந்துகொண்டு ஆறுதல் அடைகிறார்கள்.

பெற்றோர்கள் என்ற முறையில் நமக்கு நம் குழந்தைகளின் உணர்வுப் போக்கைப் பற்றித் தெரிந்திருப்பது அவசியம். உணர்வுப் போக்குகள் ஒன்பது வகைப்பட்டவை.

செயல்பாடு: சில குழந்தைகள் பிறந்ததிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கைகளையும் கால்களையும் வெவ்வேறு விதமாக அசைத்துக்கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் பிறந்தது முதல் மிகவும் சோம்பலாக இருக்கிறார்கள்.

ஒழுங்கு: சில குழந்தைகளுக்குப் பசி, தாகம், தூக்கம் எல்லாம் கச்சிதமான ஒழுங்கில் இருக்கும். ஆனால் சில குழந்தைகளுக்கு இந்தத் தேவைகள் வெவ்வேறு நேரங்களில் ஏற்படும்.

அணுகுமுறை: புதிதாக ஒரு பொருள் கொடுக்கப்படும்போது சில குழந்தைகள் உடனே கை நீட்டி வாங்கிக்கொள்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள் அந்தப் புதிய பொருளை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.

சூழலுக்கேற்ப மாறும் திறன்: அதே போல, சில குழந்தைகளால் புதிய சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மாற முடிகிறது. ஆனால் சில குழந்தைகளுக்குப் புதிய இடத்திற்கு ஏற்ப மாற முடிவதில்லை.

எதிர்வினையாற்றுதல்: ஒளி, ஒலி, காற்று, வெப்பம் போன்றவை குழந்தைகளிடம் வெவ்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகளுக்கு உரத்த ஒலிகள் பிடிக்கும், சில குழந்தைகள் உரத்த ஒலிகளைக் கேட்டால் அலறுகிறார்கள்.

எதிர்வினையின் தீவிரம்: ஊசி போடப்பட்ட பின் சில குழந்தைகள் வெகு நேரம் அழுதுகொண்டிருக்கும். இன்னும் சில குழந்தைகள் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திவிடுகின்றன.

மனநிலையின் தன்மை: சில குழந்தைகள் கலகலப்பாக, உற்சாகமாக, சிநேகமாக இருக்கிறார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் ‘உர் என்று’, சோகமாக, உதட்டைப் பிதுக்கியபடி இருக்கிறார்கள்.

கவனம் சிதறும் தன்மை: மின்விசிறி சுற்றும் ஒலி, யாராவது கடந்து செல்வது என்று சுற்றுப்புறத்தில் சிறு சலனம் ஏற்பட்டால்கூட சில குழந்தைகளுக்கு கவனம் சிதறக்கூடும்.

கவனம் நீடிக்கும் காலம்: ஒரு கதையைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது சில குழந்தைகளுக்கு மணிக்கணக்கில் ஆழ்ந்து கேட்க முடிகிறது. ஆனால் சில குழந்தைகளால் எதையும் நீண்ட நேரம் உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.

குழந்தைகளின் உணர்வு பெற்றோரின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போனால் இருவருக்கும் இடையிலான மோதல்கள் குறைவாக இருக்கின்றன. இது “Goodness of Fit” எனப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கே உரிய உணர்வு என்பதையும் குழந்தைகளை ஒப்பிடக் கூடாது என்பதையும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

டாக்டர் யமுனா, சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நல சிறப்பு மருத்துவர். இவரை dryamunapaed@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Advice, Child, Children, Development, Growth, Kids, Parenting, parents, Tips | Leave a Comment »

Protecting the elderly – How to avoid the parents becoming homeless by law

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

பெற்றோரைப் பாதுகாக்க…

வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி, 60 வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான ஒருவர் அதைக் தட்டிக் கழித்தால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்ட வழிகளில் தீர்வு காணவும் ஏற்பாடு செய்யப்படும். உத்தேச சட்டத்தை மதிக்காவிட்டால் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்நிலை மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

கிராமப் பகுதிகளைப் பொருத்தவரை முதியோரின் புகார்களை விசாரித்துத் தீர்வு காண குறைதீர் மன்றம் அமைக்க வகை செய்யப்படுகிறது. இதன்படி துணை டிவிஷனல் அதிகாரிகள் தலைமையில் குழு விசாரித்து வாரிசுகளின் வருவாய் அம்சத்தைக் கணக்கில் கொண்டு பராமரிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு பராமரிப்புத் தொகை கோர 1973ம் ஆண்டு கிரிமினல் நடைமுறைச் சட்டம் இருந்தாலும், தீர்வு காண அதிக காலம், அதிக செலவு ஆகும் என்பதால் எளிமையான, செலவில்லாத, விரைவான தீர்வுக்கு மசோதா கொண்டு வரப்படுகிறது என்று சமூக நீதித்துறை அமைச்சர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா சட்டமானால், உள்ளூர் போலீஸ் நிலையங்கள் தங்கள் பகுதிக்குள் வசிக்கும் அனைத்து மூத்த குடிமக்கள் குறித்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படும். மேலும் தனியே வசிக்கும் முதியோர் மற்றும் தம்பதிக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதும் அவசியமாகும்.

நாட்டில் சாத்தியமான இடங்களில் மூத்த குடிமக்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்களைக் கட்டவும் முதியோர் இல்லம் போதிய அளவில் இல்லையென்றால் அவர்களுக்குப் பராமரிப்புச் செலவை மாநில அரசுகள் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச மருத்துவம், போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகளும் செய்து தரப்படும்.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள முதியோரின் எண்ணிக்கை 7 கோடியே 66 லட்சத்து 22 ஆயிரத்து 321 ஆகும். இது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன்படி 2016ல் இது மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா துறையில் இருந்ததால் ஓய்வூதியம் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உதவி கிடைக்க வழியில்லை.

சொந்த வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளின் பேரில் முதியோர்க்குக் கடன் வழங்கும் திட்டத்தை கிராமப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடனை அவர்கள் வாழும் வரை பயன்படுத்தவும் அவர்களுக்குப் பிறகு வாரிசுகள் கடனைத் திருப்பிச் செலுத்தி மீட்கவும், மீட்க இயலாவிட்டால் சொத்தை விற்று கடனைக் கழித்து எஞ்சிய தொகையை அவர்களிடம் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது

கோலாகலமாக விளங்கிய கூட்டுக் குடும்பங்கள் நாளாவட்டத்தில் சிதைந்து தனித்தனிக் குடும்பங்களான பிறகுதான் முதியோர் தொடர்பான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. மேலும் குறைந்து வரும் சகிப்புத் தன்மை, மனத்தை விட பணம், பகட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியனவும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

மசோதா ஒருபுறம் இருக்க, பணத்தை விட பாசத்தையே பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். பெற்றோரைப் புறக்கணிப்போருக்கு இந்த மசோதா ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா என்பது காலப்போக்கில்தான் தெரியும்.

Posted in 401(k), Annuity, Care, Child, Children, City, Complaints, Elders, family, Finance, Fine, Home, Homeless, House, in-laws, Income, Individual, IRA, Judge, Justice, Kids, Law, Life, Money, Nursing, Nursing homes, Order, parents, pension, Planning, Preotect, Preotection, Retirement, Rural, Suburban, Village, Wife | Leave a Comment »

Jothika & Surya to become parents – Kid expected around August

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும் 

சென்னை, ஜன.31-

பூ வெல்லாம் கேட்டுப்பார்’ படம் மூலம் தமிழிலில் அறிமுகமான ஜோதிகா ஏராளமான ஹிட்படங்களில் நடித்தார்.

அவரும் சூர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கல்யாணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். திருமணத்துக்கு முன்பே நடித்து கொடுத்த `பச்சைக் கிளி முத்துச்சரம்,’ `மொழி’ ஆகிய இரு படங்கள் பிப்ரவரியில் ரிலீசாகிறது.

ஜோதிகா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும்.

தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவும் ஜோதிகாவும் தோழிகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருந்தபோது மருத்துவம் பார்த்த டாக்டரிடம் ஜோதிகாவும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். டாக்டர் ஆலோசனைப்படி உணவு மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்.

நட்சத்திர தம்பதிகள் பொதுவாக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது வழக்கம். ஆனால் சூர்யாவும் ஜோதிகாவும் அதை விரும்பவில்லை. உடனே குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினர்.

ஜோதிகா, சூர்யா பெற்றோர் பேரக் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Posted in Child, Jothiga, Jothika, Jothikaa, Kid, Mozhi, Nagma, Pachaikili Muthucharam, Pachaikkili Muthucharam, parents, Paruthi Veeran, Sivakumar, Soorya, Sooryaa, Surya, Suryaa | 8 Comments »