Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Book’ Category

Book Introductions in Jeya TV by A Ku Njaanasambandhan

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

படித்த புத்தகம்

ஜெயா டி.வி.யில் தினமும் காலையில் ஒளிபரப்பாகி வருகிறது “படித்த புத்தகம்’ பற்றிய செய்தியை சொல்லும் நிகழ்ச்சி.

இதில் அ.கு.ஞானசம்பந்தன் கூறும் நூல்கள், நூல் பற்றிய பின்னணி விளக்கங்கள், நூலாசிரியர் குறிப்புகள் எல்லாம் மிக்க உபயோகமாக உள்ளன.

“பார்க்கும் ஆவல்’ அதிகரித்து, “படிக்கும் ஆவல்’ குறைந்து விட்டதை சமன்படுத்த முயலும் தூண்டுகோலாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

சென்ற வாரம், த.நா. குமாரசாமி பற்றியும், அவரது சகோதரர் த.நா. சேனாபதி பற்றியும் கூறினார். த.நா. குமாரசாமியின் மொழித்தேடல், வடமொழிப் புலமை பெற்றது, ரவீந்தரநாத் தாகூருடன் பழகியது போன்ற தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. மொத்தத்தில் தொலைக்காட்சிகளில் வரும் சில உருப்படியான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!

Posted in A Ku Njaanasambandhan, AK Njaanasambandham, AK Njaanasambandhan, Book, Books, Chenapathi, Chenapathy, Coomarasami, Coomarasamy, Introductions, Jaya, Jaya TV, Jeya, Jeya TV, Kumarasamy, Literature, Njaanasambandham, Njaanasambandhan, Njaanasambantham, Njaanasambanthan, Njanasambandham, Njanasambandhan, Njanasambantham, Njanasambanthan, Programme, Reader, Reviews, Senapathi, Senapathy, Television, TN Kumarasami, TN Kumarasamy, TV | Leave a Comment »

Supreme Court upholds ban on Kannada book

Posted by Snapjudge மேல் மே 7, 2007

புத்தகங்களையும் பத்திரிகைகளையும் தடை செய்ய அரசுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புது தில்லி, மே 7: பொதுநலனைச் சீர்குலைக்கும் வகையில் உள்ள புத்தகம், பத்திரிகை ஆகியவற்றைத் தடை செய்யவும், பறிமுதல் செய்யவும் அரசுக்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் பி.பி. சிங், எச்.எஸ். பேடி இந்த வழக்கை விசாரித்தனர்.

வழக்கு என்ன? கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பி.வி. நாராயணா என்பவர், “தர்மகாரணா” என்ற நாவலை எழுதியிருந்தார். அது கர்நாடகத்தில் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்த பசவேஸ்வரர் என்ற அவதார புருஷரைப் பற்றியது. பசவண்ணா என்றும் அவரை அழைப்பர். அதில் இருந்த சில பகுதிகள் பசவண்ணாவின் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து கர்நாடக அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95-வது பிரிவின் கீழ், அந்த புத்தகத்துக்கு தடை விதித்தது. நாராயணாவும் வேறு சிலரும் இந்தத் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அரசின் முடிவு சரியே என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. பிறகு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசியல் சட்டம் தங்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான எழுத்துரிமை, கருத்து உரிமை ஆகியவை இத் தடையால் மறுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டனர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: “தடை செய்யப்பட்ட புத்தகத்தைப் படித்துப் பார்த்தோம். தேவை இல்லாமலும், போதிய ஆதாரம் இல்லாமலும் சில விஷயங்கள் நாவலில் கூறப்பட்டுள்ளன.

தனி மனித உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்பது உண்மையே என்றாலும், பொது நலனை கட்டிக்காக்க வேண்டிய முக்கிய கடமையும் அதற்கு இருக்கிறது. எனவே பொது நலனை காப்பதற்காக, தனி நபர் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதும் தடுப்பதும் தவிர்க்க முடியாததாகிறது.

இந்த நாவலையே திருத்தி எழுதினால் வெளியிட அனுமதிக்கத் தயார் என்று கூறிய பிறகும், நாவலாசிரியர் செய்த மாற்றங்கள் வெறும் ஒப்புக்காகத்தான் என்பது புலனாகிறது. எனவே புத்தகத்துக்கு அரசு விதித்த தடை செல்லும்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

Posted in Akkanagamma, Ban, Basavana, Basavanna, Book, Censor, Channabasaveshwara, Court, Criminal, Culture, Dharmagaarana, Dharmakaarana, Dharmakarana, Freedom, Government, Govt, Judges, Jury, Justice, Kannada, Karnataka, Law, minority, Moral, Newspapers, offense, Offensive, Order, Police, Protest, publications, SC, Secular, Tharmagarana, Tharmakaarana, Tharmakarana, Values | Leave a Comment »

Dinamani Kathir Weekly Variety: Book, Computer User, Gadam, Traffic, Helmets

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

படித்ததில் கிடைத்தது

சலூர், ஆரிகரு, நிகமா, கொரூலா, பொதுகே, மனார்பா – இதெல்லாம் என்ன என்கிறீர்களா? ஒரு வேளை ஜப்பானிய வார்த்தைகளோ என்று குழம்புகிறீர்களா? குழப்பம் வேண்டாம்.

சலூர் அல்லது சாலூர் என்றால் சேலம்.

ஆரிகரு என்றால் திருச்சி உறையூர்.

நிகமா என்றால் நாகப்பட்டினம்

கொரூலா என்றால் காரைக்கால்.

பொதுகே என்றால் பாண்டிச்சேரி.

மனார்பா என்றால் சென்னை மயிலாப்பூர்.

இப்படி நம்ம ஊர்ப் பெயர்களை வாய்நிறைய அழைத்தவர் தாலமி. கி.பி.119 – 161 ஆண்டுகளில் எகிப்தில் வாழ்ந்த அறிஞர். அவர் எழுதிய புவியியல் புத்தகம் ஏழாம் தொகுதியில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன.

(வி.எஸ்.வி.இராகவன் எழுதிய “தாலமி’ என்ற நூலிலிருந்து கிடைத்த தகவல்)

ஆராய்ச்சி: கம்ப்யூட்டர் – கீ போர்டு – கைகள்!

ந.ஜீவா

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருடைய வீடுகளிலும் ரேடியோ கூட இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருடைய வீடுகளிலும் டி.வி.இல்லை. ஆனால் இப்போது குடிசைகளின் கதவைத் தட்டி டி.வி. நுழைந்துவிட்டது. இன்னும் பத்தாண்டுகளில் கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்குக் காலம் மாறிவருகிறது.

கம்ப்யூட்டர் படிப்பும் அந்தத் துறையில் வேலைவாய்ப்பும் பெருகிவிட்டதைப் போலவே அது தொடர்பான பிரச்சினைகளும், உடல் நலக் குறைபாடுகளும் அதிகரிப்பது இயல்பானதே.

ஒரு நாளைக்குப் பத்து, பன்னிரண்டு மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி, கழுத்து வலி, கண்ணில் பிரச்சினைகள், தலைவலி போன்றவை ஏற்படுவது சாதாரணம்.

மணிக்கட்டில் வலியும் அதைத் தொடர்ந்து விரல்களில் பாதிப்பும் பின்னர் கம்ப்யூட்டரில் வேலை செய்ய முடியாத அளவுக்குக் கைகள் பாதிக்கப்படுவதும் வெளிநாடுகளில் எப்போதோ ஏற்பட்டுவிட்டன. நமது நாட்டில் அவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்துள்ளனர் தஞ்சை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கே.முகம்மது அலியும் சென்னை ஸ்ரீஇராமச்சந்திரா மெடிக்கல் காலேஜைச் சேர்ந்த டாக்டர் சத்தியசேகரனும். போலந்தில் இருந்து வெளிவரும் Intertnational journal of JOSE occupational safety and Ergonomics என்ற உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழில் அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரை வெளிவந்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் பாதிப்புகள் ஏற்படாமல் எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பது பற்றியும் டாக்டர் முகம்மது அலியிடம் பேசினோம்.

டாக்டர் கே. முகம்மது அலி

நம்முடைய நாட்டில் குறிப்பாகச் சென்னையில் கடந்த பத்தாண்டுகளாகவே ஐ.டி. கம்பெனிகள் அதிகரித்துவிட்டன. நிறையப் பேர் கம்ப்யூட்டர் படித்துவிட்டு இரவும் பகலும் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்கின்றனர். இந்த ஐ.டி.கம்பெனிகளில் வேலைசெய்யும் பலர் ஒரு நாளைக்கு பத்துமணி நேரம், பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்கிறார்கள். அது தவிர, வீட்டுக்கு வந்தும் அலுவலக வேலைகளைச் செய்பவர்களும் உள்ளனர். போதாக் குறைக்கு இன்டர்நெட் கனெக்ஷன் வேறு வாங்கி வைத்திருப்பவர்கள் வீட்டிற்கு வந்து மேலும் இரண்டுமணி நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருப்பார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். கழுத்து வலி, முதுகு வலி, கண்எரிச்சல், தலைவலி, உடல்பலவீனமாக உணர்தல், மன இறுக்கம் எல்லாம் சாதாரணம் என்று சொல்லக் கூடிய அளவில் மணிக்கட்டில் வலி ஏற்படும். மணிக்கட்டுப் பகுதியில் உள்ள மீடியன் நரம்பில் ஏற்படும் பாதிப்பினால் இது ஏற்படுகிறது. இதனால் கைவிரல் மரத்துப் போகும். இரவுநேரத்திலும் காலையில் எழும்போது கைவிரல்களில் வலி அதிகமாகத் தெரியும். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனிக்கவில்லையென்றால் பின்னர் கைத் தசைகள் பாதிக்கப்பட்டு கைகளினால் வேலையே செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த நோய்க்கு Carpal tunnel syndrome என்று பெயர்.

நமது நாட்டில் கம்ப்யூட்டர் வேலை வாய்ப்புகள் பெருகி வரும் சமயத்தில் இந்த மாதிரியான பாதிப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைப் பற்றி அறிய ஆராய்ச்சி மேற்கொண்டோம். நானும் டாக்டர் சத்தியசேகரனும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோம்.

சென்னையில் உள்ள சுமார் 33 கம்பெனிகளில் இந்த ஆராய்ச்சிக்காக ஏறி இறங்கினோம். ஆராய்ச்சி செய்வதற்கான அனுமதி வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பெரும்பாலான கம்பெனிகள் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளாக இருப்பதால் அதன் தலைமையகங்கள் வெளிநாடுகளில் உள்ளன. அவர்கள் முறைப்படி அனுமதி பெற வேண்டியிருந்தது. கடைசியில் எங்கள் ஆராய்ச்சிக்கு உட்பட்ட கம்பெனிகள் வெறும் 21 தான். அதில் மொத்தம் பணிபுரியும் 4276 பேரில் 648 பேரை “ராண்டம் சாம்பிளிங்’ என்கிற முறையில் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.

ஆராய்ச்சியின் முடிவில் எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன. கம்ப்யூட்டரில் வேலைசெய்பவர்களில் எட்டுப் பேருக்கு ஒருவருக்கு இந்த மணிக்கட்டு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

எங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் தாம். அதிலும் ஆண்களே அதிகம். பொதுவாகப் பெண்களைவிட இந்தத் துறையில் ஆண்களே அதிக நேரம் வேலை செய்வதும் எங்கள் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது. ஆண்கள் சராசரியாக 12 மணி நேரம் செய்தால் பெண்கள் 8 மணிநேரம்தான் வேலை செய்வது தெரிந்தது. இதனால் ஆண்களுக்கு இந்தப் பாதிப்புகள் அதிகம். மேலும் ஆண்கள் வீட்டிற்குப் போயும் இன்டர்நெட்டில் மூழ்கிவிடுவதும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் காரணம்.

டாக்டர் சத்தியசேகரன்

இந்தப் பிரச்சினை வருவதற்கு முக்கியக் காரணம், கம்ப்யூட்டரில் கீ போர்டில் டைப் செய்யும் போதும், மெüûஸப் பயன்படுத்தும் போதும் மணிக்கட்டு அருகே கை மடங்கியிருக்கும்படி வேலை செய்வதுதான். அதனால் மீடியன் நரம்பு பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க முழங்கையும் மணிக்கட்டும் நேர்கோட்டில் இருக்கும்படி வைத்து வேலைசெய்ய வேண்டும். இதற்கு உட்காரும் இருக்கை வேலை செய்பவரின் உயரத்திற்குத் தக்கபடி ஏற்றி இறக்கி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி இருக்க வேண்டும்.

பலர் வீடுகளில் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள். ஆனால் அதற்கேற்ற பொருத்தமான மேஜையோ, நாற்காலியோ வாங்கமாட்டார்கள்.

அதற்கடுத்து தொடர்ச்சியாக வேலை செய்யாமல் அரை மணிநேரத்துக்கு ஒரு தடவை 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். 2 – 3 மணி நேரங்கள் தொடர்ந்து வேலை செய்தால் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும்.

மானிட்டருக்கும் கைக்கும் உள்ள தூரத்தைப் பொருத்தமான அளவில் வைக்க வேண்டும். மணிக்கட்டு ஒரு போதும் மடங்கவே கூடாது.

2004 ல் நாங்கள் செய்த இந்த ஆராய்ச்சியை நாங்கள் போலந்தில் உள்ள ஆராய்ச்சி இதழுக்கு அனுப்பி வைத்தோம். அந்த இதழ் சர்வதேச தொழிலாளர் அமைப்பாலும் (ILO), சர்வதேச எர்கானமிக்ஸ் அமைப்பாலும் (IEA) அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. எந்த ஆராய்ச்சிக் கட்டுரையை அனுப்பி வைத்தாலும் அவர்கள் உடனே “ஓகே’ சொல்லிவிடமாட்டார்கள். இத்துறை சார்ந்த பல நிபுணர்களின் பார்வைக்கு கட்டுரை அனுப்பி வைக்கப்படும். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே கட்டுரை பிரசுரிக்கப்படும். அது 2006 டிசம்பர் மாதம் பிரசுரிக்கப்பட்டது.

எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் இணையதளமான www.pubmed.com ் இலும் எங்களுடைய கட்டுரை வெளிவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியை இந்தியாவிலேயே நாங்கள்தான் முதன் முறையாகச் செய்துள்ளோம்.

2004 இல் சண்டிகாரில் நடந்த IAPSM – இன் தேசியமாநாட்டில் இந்தக் கட்டுரைக்கு “இளம் ஆண்விஞ்ஞானிகளின் சிறந்த ஆராய்ச்சிக்கான விருது கொடுத்தார்கள்.

இந்த ஆராய்ச்சியைச் செய்து உண்மையைக் கண்டுபிடிப்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. கம்ப்யூட்டரில் தொடர்ந்து பணிபுரிபவர்களுக்கு இம்மாதிரியான பிரச்சினைகள் இனியும் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

எனவே இதுகுறித்து கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் வேலை செய்யும் கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளைச் சொல்கிறோம். குறிப்பாக ஸீட்டிங் அரேன்ஜ்மென்ட் பற்றிச் சொல்கிறோம். அரசுக்கும் இந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தெரிவிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.

முகங்கள்: நீதியின் ஏ.கே.47!

ஞாயிறு

ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் டிராஃபிக் ராமசாமி (74) அநீதிகளுக்கு எதிரான ஓர் ஏ.கே.47!

பொதுமக்கள், போலீஸ், அரசியல்வாதி, வக்கீல், முதல்வர் என யார் தவறு செய்தாலும் “பொது நல வழக்கு’ மூலம் தட்டிக் கேட்பவர்! வெற்றி பெறுபவர்!

லேட்டஸ்ட் வெற்றி -“ஹெல்மெட் கட்டாயம்!

இந்த டிராஃபிக் ராமசாமி தன் டெரிஃ”பிக்’ பயண அனுபவத்தை அவரே இங்கு சொல்கிறார். நோ டிராஃபிக் “ஜாம்’!

“”ஏப்ரல் ஒண்ணு முட்டாள்கள் தினம். அன்னைக்குதான் நான் பிறந்தேன். வருஷம் 1934. முட்டாள்கள் தினத்தில் பிறந்தவர்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள் என்பதை மாற்றவேண்டும் என்கிற எண்ணம் எனக்குச் சின்ன வயதிலிருந்தே உண்டு. அதை இப்போது நான் அறிவாளிகள் தினம்னு மாற்றியிருக்கிறேன் என்று கூடச் சொல்லுவேன். தனக்குச் சரியென்று பட்டதைச் சரியென்றும் தவறென்று பட்டதைத் தவறு என்றும் சொல்வது தவறே இல்லை. இந்த எண்ணமும், இந்தக் கொள்கையும்தான் என் மூச்சே. இதை நான் சின்ன வயதிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்.

பச்சையப்பன் கல்லூரியில் ஃபெல்லோ ஆர்ட்ஸ் முடிச்சிட்டு பி.அண்ட்.சி மில்லுல படிப்படியா முன்னேறி அதிகாரியா வேலை செஞ்சேன். எங்க அப்பாவும் அங்க வேலை பார்த்தார். எனக்குக் கல்யாணம் செய்து வைக்க அப்பா முடிவு செய்தார். பொண்ணு பார்த்து நிச்சயதார்த்தம் முடிச்சு கல்யாணப் பத்திரிகையும் அடிச்சாச்சு. எனக்குத் தெரியாமலேயே எங்கப்பா பொண்ணு வீட்டாரிடம் வரதட்சணை கேட்டிருக்கிறார். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரதட்சணை. இந்த விஷயம் தெரிந்ததும், வரதட்சணை வாங்கக்கூடாதுனு சொன்னேன். எங்கப்பா ஒத்துக்கல. வாங்கியே ஆகணும்னு ஒத்தக் கால்ல நின்னாரு. வாங்கக்கூடாதுனு நான் ரெட்டைக் கால்ல நின்னேன். இது ரெண்டு பேருக்குள்ளேயும் பெரிய எதிர்ப்பா கிளம்பிடுச்சு. பத்திரிகை அடிச்சு கொடுத்தப் பிறகும் கல்யாணத்தை நிறுத்துவதற்கு அப்பா முயற்சித்தார். பி.அண்ட்.சி மில்லுல எனக்கு மேல இருந்த அதிகாரிகளிடம் சொல்லி வேலையைவிட்டுத் தூக்கிடுவதாக மிரட்டினார். நான் அஞ்சவில்லை. எதிர்ப்புகளை மீறி வரதட்சணை வாங்காம நிச்சயம் செய்த பெண்ணையே மணம் முடித்தேன். வீட்டைவிட்டு தனியாகவும் வந்துவிட்டேன். எங்கூட பிறந்தவங்க பத்துபேரு. கூட்டுக் குடும்பமா இருந்தோம். அதோடு பிரிந்ததுதான், இன்று வரை சேரவில்லை. சில காலத்திற்கு பிறகு பி.அண்ட்.சி மில்லு வேலைய உதறிவிட்டு வந்து, சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்பதுதான் என் வேலை என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.

ஆரம்பத்தில் தவறு செய்கிற ஊழியர்கள் மீது பெட்டிஷன் போட்டு நடவடிக்கை எடுத்தேன். அப்போது அதிகாரிகளும் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுத்தார்கள். போகப் போக பெட்டிஷனுக்கு மதிப்பு இல்லாமல் போனது. போட்ட பெட்டிஷன்கள் குப்பைக் கூடைக்குத்தான் போயின. இதன்பிறகுதான் பொதுநல வழக்குப் போடத் தொடங்கினேன்.

முதல் வழக்கு ஐகோர்ட்டு பகுதியில் உள்ள ஒரு ரோட்டை ஒன்வேயாக மாற்றியது தொடர்பானது. ஐகோர்ட்டு உள்ள பாரிமுனை பகுதி நெரிசல் மிகுந்த பகுதி. ஒன் வே மாற்றிய பிறகு பல விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். ஒன் வேயாக மாற்றிய முதல்நாள் ஒரு கண்டக்டர் உயிரிழந்தார். ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு ரோடைக் கிராஸ் செய்கிறபோது வேனில் அடிபட்டு இறந்துபோனார். இப்படி ஒன்றரை வருடத்தில் 28-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது இருவழிச் சாலையாக இருந்தபோது விபத்தில் இறந்தோர் எண்ணிக்கையைவிட அதிகம். இந்தப் புள்ளிவிவரங்களுடன், இறந்தவர்கள் போட்டோ உட்பட அனைத்து விவரங்களையும் சேகரித்து பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் என் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை. கோர்ட்டில் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி, “”ஐகோர்ட்டு உள்ள பாரிமுனை பகுதியை ஜெர்மனியில் உள்ள சாலை அமைப்புகள் போல மாற்றி அமைக்கப்போகிறோம். இதில் ஒரு கட்டம்தான் ஒன் வே. இது இங்கு அவசியமானது” என்றார். அதற்கு நான் “”இந்த அதிகாரி ஜெர்மனிக்குதான் லாயக்கு… தமிழ்நாட்டுக்கு லாயக்கில்லை. அவரை அங்கேயே மாற்றிவிடுங்கள்”என்று சொன்னேன். இதன் பிறகு நீதிபதிகள் விசாரித்து பாரிமுனை பகுதிக்கு ஒன் வே சரிவராது என்று தீர்ப்பு வழங்கினர். இந்த வழக்கில் ஒரு சோகச் சம்பவம் என்னவென்றால். எந்த அதிகாரி பாரிமுனை பகுதியை ஜெர்மனியாக மாற்றி அமைக்கிறேன் என்று சொன்னாரோ அவருடைய சகோதரி கணவர் தீர்ப்பு வருவதற்கு முதல்நாள் விபத்தொன்றில் அதே சாலையில் இறந்துபோனார். அதன் பிறகு மீன்பாடி வண்டிகள் குறித்து வழக்குத் தொடர்ந்தேன். சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களின் நலனின் அக்கறை கொண்டு, .25 குதிரை திறனுள்ள மோட்டாரை சைக்கிள் ரிக்ஷாவில் பொருத்திக்கொள்ள அனுமதி கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் போகப்போக சைக்கிள் ரிக்ஷா என்ற பெயரில் மீன்பாடி வண்டியில் மோட்டார் வாகனங்களுக்குப் பொருத்தக்கூடிய மோட்டாரைப் பொருத்தி ஓட்டி வந்தனர். இந்த மீன்பாடி வண்டியில் அடிபட்டு இறந்தால் எந்த நஷ்ட ஈடும் பெற முடியாது. இதைக் கருத்தில்கொண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். முதல்கட்டமாக சென்னைக்குள் மீன்பாடி வண்டிக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. புறநகர் பகுதிகளில் மட்டும் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. அங்கேயும் இதற்கு தடைவிதிப்பது தொடர்பாக வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

அதைப்போல அடுக்ககங்கள் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தேன். 85 அடிகள் கொண்ட சாலையில் 3 மூன்று மாடிக் கட்டடங்கள்தான் கட்டலாம். ஆனால் அனுமதி பெறாமல் பலர் பலமாடி கட்டடங்கள் கட்டியுள்ளனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னையில் 32 அடுக்ககங்களை இடிக்கச் சொல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி பல தரப்பிலும் இருந்து மிரட்டல் வந்தன. 30 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் கூறினார்கள். நான் வாங்க மறுத்துவிட்டேன்.

இந்த வழக்கில் மட்டுமல்ல பல வழக்குகளில் மிரட்டப்பட்டுள்ளேன். ஒருமுறை ஐகோர்ட்டு அருகில் போக்குவரத்துகளைச் சரிசெய்துகொண்டிருந்தேன். வழக்கு போடுவது மட்டும்தான் என் வேலை என்று நினைக்கக்கூடாது. போக்குவரத்துகளைச் சரிசெய்கிற பணியிலும் ஈடுபடுவேன். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரமும் செய்கிறேன். ஐகோர்ட்டு அருகில் போக்குவரத்தைச் சரிசெய்து கொண்டிருக்கும்போது மாலை நேரம். கூட்டம் அதிகம். எனக்கு ஒரு கண் சரியாகத் தெரியாது. அதற்காகக் கண்ணாடி போட்டிருப்பேன். இதைத் தெரிந்துகொண்ட ஒருவன் கண்ணாடியைத் தட்டிவிட்டு கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டான். இத்தனைக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் சிறிது தூரத்தில்தான் நின்றிருந்தார். அவரிடம் புகார் கொடுத்தேன் அவருக்குத் தெரிந்துதான் இந்தச் சம்பவம் நடந்தது. ஒரு நடவடிக்கையும் இல்லை. ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். அவர்கள் உத்தரவின்பேரில் எனக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. போலீஸ் பாதுகாப்பு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல. மக்களும் கேட்டுப் பெறலாம் என்பதற்காகத்தான் போலீஸ் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டேன். என்னைப் போல என் வீட்டாருக்கு எந்தவித தொந்தரவும் வரக்கூடாது என்பதற்காக நான் அவர்களோடு இல்லை. கோடம்பாக்கத்தில் ஒரு நண்பர் வீட்டில் இருக்கிறேன். நாளுக்குநாள் எதிரிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். வக்கீல்கள், அரசியல்வாதிகள், முதல்வர்கள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது எனக்குச் சந்தோஷத்தையே அளிக்கிறது. என் ரோல் மாடல் இராஜாஜி. தவறென்றால் எங்கும், யாரையும் தட்டிக் கேட்பேன்.” என்று கையில் கேமரா எடுத்துக்கொண்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் சகிதம் எங்காவது தவறுகள் நடக்கிறதா என்று பஸ்ஸில் ஏறி பயணிக்கத் தொடங்குகிறார் டிராஃபிக்!

மேடை: இங்கே கடம்; அங்கே க்ளே}டிரம்!

ரவிக்குமார்

கர்நாடக இசை உலகில் மூத்த தலைமுறை, சமகாலத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் தலைமுறை, வளர்ந்து வரும் இளந்தலைமுறை, இந்த மூன்று தலைமுறை இசைக் கலைஞர்களும் தங்களின் கச்சேரிக்கு கடம் வாசிப்பதற்கு ஃபர்ஸ்ட் சாய்ஸôக விரும்புவது, “கடம்’ சுரேஷ்!

“”கடவுள் அனுக்கிரகத்தோடு, அனுசரிப்புடன் கூடிய வாசிப்பு முறையை நான் பின்பற்றுவதுதான், மூத்த தலைமுறை கலைஞர்கள் முதல் இளந்தலைமுறை கலைஞர்கள் வரை பலரும் நான் பக்கவாத்தியம் வாசிக்கவேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம்” என்கிறார் அடக்கத்தோடு சுரேஷ்.

கடம் தவிர மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங் போன்ற வாத்தியங்களை இசைப்பதிலும், கொன்னக்கோலிலும் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் சுரேஷ், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடந்த இரண்டாவது உலகளாவிய தாள வாத்தியக்காரர்கள் பங்கேற்ற இசைத் திருவிழாவில் பங்கேற்று கடம் வாசித்திருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்த ஒரே இந்தியக் கலைஞர் “கடம்’ சுரேஷ் என்பதால், இந்தியர்கள் “காலரை’த் தூக்கி விட்டுக் கொள்ளலாம்! இனி அவரின் இசைப் பயணத்திலிருந்து சில ஞாபகத் துளிகள்!

நான் இன்றைக்கு இசையுலகில் நல்லதொரு நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனக்குக் கிடைத்த குரு பரம்பரையினர்தான். லய மேதை ஹரிஹர சர்மா தான் எனக்கு முதல் குரு. இவர் விக்கு விநாயகராமின் தந்தை. விக்கு விநாயகராமிடமும் என்னுடைய பாடத்தைத் தொடர்ந்தேன். அதன்பின், உமையாள்புரம் நாராயணசுவாமியிடம் அவரின் கடைசி காலத்தில் அவரிடமிருந்த மிகப்பெரிய பொக்கிஷத்தை நான் அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அது, அவரின் தந்தை கோதண்டராம ஐயர் கடம் வாசிப்பில் தனக்கென உண்டாக்கியிருந்த பாணி. கையின் விரல்களைப் பயன்படுத்தித்தான் பெரும்பாலும் கடம் வாசிப்பார்கள். ஆனால் அவரது பாணி, கையின் விரல்கள், விரல் நகங்கள், விரல் மூட்டுகள்..என அனைத்தையும் பயன்படுத்தி வாசிக்கும் முறை. அதேபோல் டி.வி. கோபாலகிருஷ்ணனிடமும் இருபது வருடங்கள் வரை லயப் பயிற்சி பெற்றேன். 1980-லேயே டி.வி.ஜி.யுடன் இணைந்து கர்னாடிக் ஜாஸ் இசை நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கி விட்டேன். அப்போது திலீப் கீ-போர்டு வாசிப்பார். சிவா டிரம்ஸ் வாசிப்பார். அதன்பின் ஒவ்வொருவரும் தனித் தனி டிராக்கில் பிஸியாகிவிட்டோம். சிவா- டிரம்ஸ் சிவமணியாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார். திலீப், ஏ.ஆர். ரஹ்மானாக புகழ்பெற்ற இசையமைப்பாளராகி விட்டார். நானும் பிரபல வித்வான்களுக்கு கடம் வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.

வீணை எஸ். பாலசந்தர் சீனாவில் இசை நிகழ்ச்சி வழங்கும் போது அவருக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மூத்த இசைக் கலைஞரான உமையாள்புரம் சிவராமன் ஜப்பானில் வழங்கிய இசை நிகழ்ச்சிக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் பெருமையை எனக்கு அளித்தார்.

பொதுவாக நடனத்துக்கு கடம் வாத்தியத்தைப் பயன்படுத்துவது அரிது. ஆனால் மறைந்த நாட்டிய மேதை சந்திரலேகா “மகா காளி’ என்னும் பெயரில் மரபும், நவீனமும் கலந்த நாட்டிய நிகழ்ச்சியை ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிகள் முழுவதிலும் நான் கடம் வாசித்தேன்.

கொல்கத்தாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞரான விக்ரம்கோஷ் தலைமையில் உருவான “ரிதம்ஸ்கேப்’ என்ற குழுவில் நானும் இடம்பெற்றேன். நாங்கள் 2004-ல் பார்சிலோனாவில், ஓர் இசை நிகழ்ச்சியை அளித்தோம்.

இன்றைக்கு பல உலக நாடுகளிலும் என்னுடைய கடத்தின் ஒலி கேட்பதற்குக் காரணம், மிருதங்க மேதையான காரைக்குடி மணிதான். அவரின் “ஸ்ருதிலயா’வின் மூலமாக மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

தற்போது நான் பங்கேற்ற பார்சிலோனா இசை விழாவில், இரண்டு நாட்கள் என்னுடைய மியூசிக் கன்ஸர்ட் நடந்தது. என்னுடன் சேர்ந்து பெüலோ சிமினோ என்பவர் “ஃபிரேம் டிரம்’ என்ற தாள வாத்தியத்தை வாசித்தார். இந்த வாத்தியம் நம்மூரில் வாசிக்கப்படும் “டேப்’ மாதிரி இருக்கும். ஆனால் இதை கையில்தான் வாசிக்கவேண்டும். கடம் வாத்தியக் கலைஞர்களுக்கு மேற்கத்திய நாடுகளில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது. அங்கு கடத்திற்குப் பெயர் க்ளே-டிரம்! அதன் நாதத்திற்கு மயங்காத மேற்கத்தியர்களே கிடையாது எனலாம். ஃபிரேம் டிரம் வாசிக்கும் பெüலோ சிமினோ கூட என்னிடம் கடம் வாசிக்கக் கற்றுக் கொள்கிறார். எப்படி என்கிறீர்களா? எல்லாம் இ-மெயில், சாட்டிங், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான்!

நான் இங்கிருந்து கடம் வாசித்து அதை ஒரு ஃபைலில் பதிவு செய்து, இ-மெயிலில் அனுப்பி விடுவேன். அந்த ஃபைலில் ஒரு மாதத்துக்கு தேவையான பாடம் இருக்கும். சந்தேகம் என்றால், சாட்டிங்கில் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வார். இப்படி என்னிடம் இணையத்தின் வழியாக இசை படிப்பவர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் பெரும்பாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள். பெüலோ சிமினோ போன்று சில வெளிநாட்டவர்களும் உண்டு. தாகா என்ற ஜப்பானியருக்கு எப்படியோ நான் கடம் வாசித்திருக்கும் சி.டி. கிடைத்திருக்கிறது. அதில் கடத்தின் நாதத்தில் மனதைப் பறிகொடுத்த தாகா ஆகி குனோ, இந்த வாத்தியத்தைக் கற்றுக் கொண்டே தீருவது என்ற முடிவோடு இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னைச் சந்தித்தார். அவருடைய ஆர்வம் எனக்குப் பிரமிப்பூட்டியது. மடமடவென்று கடம் வாசிப்பில் இருக்கும் நுணுக்கங்களைத் தெரிந்து கொண்ட தாகா, இன்றைக்கு மானாமதுரைக்குச் சென்று கடம் வாத்தியங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கும் அளவுக்குத் தேறிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

குரு, சிஷ்ய பாணிதான் இசையைக் கற்றுக்கொள்வதற்கான சரியான முறை. வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம்முடைய கலாசாரத்தின் வேரை இழக்காமல், கலை வடிவங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது இன்றைய தொழில்நுட்பம். இதை நான் தவறென்று சொல்லமாட்டேன். ஆனால் உள்ளூரில் இருப்பவர்கள் எல்லாம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இசையைக் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தால் அவர்களை நான் ஆதரிப்பது கிடையாது. அவர்கள் நேரடியாகக் கற்றுக் கொள்வதுதான் நல்லது.

நமது மதத் தத்துவங்களின்படி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உடன் வருவது பானை. இப்படிப் பானை தொடர்பான தத்துவங்களை, சிந்தனைகளை தனது (ஒரு குயவன் அரை கடவுள்)‘அ ல்ர்ற்ற்ங்ழ் ஹ க்ங்ம்ண் எர்க்’ என்ற நூலில் 1960-ம் ஆண்டு எழுதியுள்ளார் பிரெஞ்ச் எழுத்தாளரும், தத்துவவியலாளருமான ழான் கேன்டீன். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு ராஃப்பேல் ஓப்ரியான் என்னும் பிரெஞ்ச் குறும்பட இயக்குனர் “யதி’ என்னும் பெயரில் 45 நிமிடங்கள் ஓடும் ஒரு குறும்படத்தை 1996-ல் எடுப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். அந்தக் குறும்படத்தின் பின்னணி இசையில் முழுக்க முழுக்க நான் கடம் வாசித்திருந்தேன். இந்தக் குறும்படத்துக்கு சிறந்த குறும்படத்திற்கான பரிசும் கிடைத்தது.

எந்த வேளையில் சிவதாண்டவமாடினாலும் அப்போதெல்லாம் வாசிக்கப்படும் பெருமையைப் பெற்ற இசை வாத்தியம் கடம். அதன் புகழ் வெளிநாட்டவர்களின் இந்தக் குறும்படத்தில் வெளிப்படுகிறது என்றால் அது மகிழ்ச்சியான விஷயம்தானே!” என்கிறார் சுரேஷ்.

-கடத்தின் நாதத்திற்கு நிகரேது!

Posted in Book, Computer, Dinamani, Everything, Gadam, Helmets, Junk, Kathir, Traffic, User, Variety | Leave a Comment »

Musharraf – In the Line of Fire : Memoirs Criticism

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

யோசனைகள் இலவசம்

பாகிஸ்தான் அதிபர் முஷாரப் எழுதி வெளியாகியுள்ள “நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு‘, இந்தியா – பாகிஸ்தான் – காஷ்மீர் பற்றிய பல்வேறு விவாதங்களைப் “பற்ற’ வைத்துள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக “தனிப்பட்ட முறையில் தனது யோசனை’ என்று அவர் நான்கு விஷயங்களை அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

1. பாகிஸ்தானும் இந்தியாவும் உரிமைகோரும் பகுதிகளைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம்

2. இப்படியாகத் தீர்மானிக்கப்படும் பகுதியில் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.

3. இப்பகுதிக்கு தன்னாட்சி அளிக்கவேண்டும்.

4. அந்தத் தன்னாட்சியைப் பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர் ஆகிய மூன்று பகுதியினரையும் கொண்ட குழு அமைத்து கண்காணிப்போம்.

பிரச்சினைக்குரிய பகுதிகளை விட்டுக் கொடுத்துத் தீர்மானிக்க முடிந்தாலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை முடிந்துபோகிறது. அதன் பின்னர் அவரவர் பகுதியில் அவரவர் ஆட்சி தானே அமைந்துவிடும்.

ஆனால் முஷாரப், அதற்கும் மேலே போய், தன்னாட்சி வழங்க வேண்டும், வாருங்கள் மூவரும் ஒன்றாகக் கண்காணிப்போம் என்கிறார். அதாவது – இரண்டு வீடுகளுக்கு இடையில் எல்லைப் பிரச்சினையா? குறுக்கே சுவர் எழுப்பு! இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினையா? குறுக்கே ஒரு நாட்டை எழுப்பு!

முஷாரப் சொல்லும் நான்கு யோசனைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு புதிய நாடு முளைப்பதை உணரலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் உறவு என்பது வெறும் காஷ்மீர் எல்லைப் பிரச்சினை என்பதாக இல்லை. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுப்பதுதான் இந்திய நட்புக்கு பாகிஸ்தான் அளிக்கக்கூடிய முதல்மரியாதையாக இருக்க முடியும். ஆனால் அதைப் பற்றி முஷாரப் தனது “சர்வதேச உறவுகள்‘ அத்தியாயத்தில் விவாதிக்கக் காணோம்.

“பாகிஸ்தானில் பயங்கரவாதிகள்’ என அமெரிக்கா, இந்தியா இரு நாடுகளும் குற்றம் சாட்டும்போது இரு நாடுகளுக்கும் இரண்டு விதமான எதிர்வினைகளைத் தருகிறது பாகிஸ்தான்.

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றதற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள்தான் காரணம் என்று இந்தியா சொன்னபோது வெளியுறவுத்துறை அமைச்சர் மூலம் பாகிஸ்தான் அளித்த கோபமான பதில்: “”இந்தியாவில் எங்கே குண்டு வெடித்தாலும் பாகிஸ்தான் காரணம் என்கிறார்கள்”.

ஆனால், இதே குற்றச்சாட்டுக்கு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் விதம் அலாதியானது. நியூயார்க்கில் உலக வர்த்தகக் கட்டடம் அல் காய்தாவால் தாக்கப்பட்டதும், “”பயங்கரவாதத்தை ஒழிக்க (அல்லது பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க) ஒத்துழைக்காவிட்டால் நாட்டையே குண்டுபோட்டு அழிப்போம். கற்காலத்துக்குப் போய்விடுவீர்கள்” என்று மிரட்டிய விஷயத்திற்காக, அமெரிக்கா செல்லும் லண்டன் விமானங்களில் குண்டுவெடிக்க நடத்தப்பட்ட சதியை முறியடிக்கத் “துப்பு’ கொடுத்து “நடமாடும் நாயகருக்கு நல்லபிள்ளை நானே’ என்று பேர் வாங்கிக் கொண்டபின்னர், இப்போதுதான் அந்த மிரட்டல் பற்றி மூச்சு விடுகிறார் முஷாரப்.

ஆகையால், பேசிப் பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே என்று இந்தியா கவலை கொள்ளத் தேவையில்லை. உலகம் தோன்றிய நாள் முதலாய் “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’.

கெஞ்சினால் மிஞ்சுவர், மிஞ்சினால் கெஞ்சுவர்.

Dinamani Editorial – March 5, 2007

காஷ்மீரில் துருப்புகள்

காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க இப்போதைக்குத் திட்டம் எதுவும் கிடையாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஒருபுறம் ஹுரியத் மாநாட்டுக் கட்சியும் மறுபுறம் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியும் வீணாகக் கிளப்பியுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறு அறிவிக்க வேண்டியதாயிற்று. ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் பரூக், காஷ்மீரில் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் கூறினார். காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியோ துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்று தீவிர இயக்கமே நடத்தி வருகிறது.

இக் கட்சியின் தலைவரான மெஹபூபா, சில நாள்களுக்கு முன்னர் தில்லியில் பல தலைவர்களைச் சந்தித்து துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தவிர, காஷ்மீரில் ராணுவப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரி வருகிறார். காஷ்மீரில் நிலைமை முன்னேறியுள்ளதால் துருப்புகளைக் குறைக்கலாம் என்பது அவரது வாதம். இப்படிக் குறைத்தால் தீவிரவாதிகளின் தாக்குதல் குறையும் என்றும் அவர் வாதிக்கிறார். இக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சய்யீத், காஷ்மீரில் துருப்புகள் குறைக்கப்பட வேண்டும் என்பது தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கை என்று வர்ணித்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸýம் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகிறது. இக் கட்சிகள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி 2002-ம் ஆண்டிலிருந்து முதல் மூன்று ஆண்டுக்காலம் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முப்தி முகமது சய்யீத் முதல்வராக இருந்தார்.

2005-லிருந்து காங்கிரஸின் குலாம்நபி ஆசாத் முதல்வராக இருந்து வருகிறார். காஷ்மீர் சட்டமன்றத்தின் ஆயுள்காலம் 6 ஆண்டுகளாகும். ஆகவே, அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தாக வேண்டும். இதை மனத்தில்கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சியினர் துருப்புகள் எண்ணிக்கைக் குறைப்பை ஒரு தேர்தல் கோஷமாக ஆக்க, இப்போதிருந்தே குரல் எழுப்ப முற்பட்டுள்ளதாகக் கூறலாம்.

ஆளும் கூட்டணிக்குள்ளாக இருந்துகொண்டு அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவது சரியா என அக் கட்சியினர் சிந்தித்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில், துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க காலம் இன்னும் கனியவில்லை என முதல்வர் குலாம் நபி ஆசாத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வருகிற நாள்களில் மக்கள் ஜனநாயகக் கட்சியினர் தங்களது சுருதியை மாற்றிக் கொள்வார்களா அல்லது மேலும் உரத்தகுரல் எழுப்புவார்களா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் தங்களது இயக்கத்தை முடுக்கிவிட்டால், அது கூட்டணி அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஊறு விளைவிக்கலாம்.

உள்ளபடி காஷ்மீரில் ராணுவப் படையினர் இரண்டுவிதப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லையிலிருந்து ஊடுருவல் நடைபெறாதபடி எல்லையைக் காப்பது முதல் பணி. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளால் காஷ்மீர் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படாதபடி பாதுகாப்பது இரண்டாவது பணியாகும்.

காஷ்மீரில் பயங்கரவாதம் அடியோடு அகன்று விட்டதாகக் கூற முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பற்றி இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும் காஷ்மீரில் இன்னும் முழு அமைதி ஏற்பட்டுவிடவில்லை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்ட பிறகே படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க முடியும். பிரதமர் இதைத்தான் எடுத்துக் கூறியுள்ளார்.

Posted in Army, Azad Kashmir, Bomb Blasts, Book, Criticism, Critique, defence, Defense, External Affairs, Foreign Affairs, In the Line of Fire, India, Kashmir, Military, Mumbai, Musharraf, Pakistan, POK, Prime Minister, Relations, review, Tamil, Terrorism | Leave a Comment »

Venkat Saminathan reviews PK Sivakumar’s Atlanticukku Appaal

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

பி.கே.சிவகுமாரின் அட்லாண்டிக்குக்கு அப்பால்

வெங்கட் சாமிநாதன்

சில நல்ல விஷயங்களும் தமிழில் நடந்து விடுகின்றன. தமிழ்நாட்டுத் தமிழரால் அல்ல. தமிழ்ச் சூழல் அப்படியெல்லாம் ஒன்றும் அவர்களை உருப்பட விட்டுவிடாது. தமிழ்நாட்டுச் சூழýன் சங்கிýகளை அறுத்துக்கொண்டு வெளிநாட்டில் வாழும் தமிழர்களால். அல்லது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களால். மலேசியாவிýருந்தோ, கனடாவிýருந்தோ அல்லது அமெரிக்காவிýருந்தோ. இணையம் மூலம் தமிழ் கூறும் நல்லுலகை ஒரு குடைக்கீழ் ஒன்றுபடுத்தியிருப்பது சமீபத்தில் நடந்துள்ள நல்ல விஷயங்களில் ஒன்று. இணையம் என்ற ஒன்று இல்லையெனில், அதிலேயே தன் குரலைப் பதிவு செய்து வரும் பி.கே சிவகுமார் என்ன செய்திருப்பார்? அவர் குரலைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் மூலம் கேட்டிருக்க முடியுமா? இங்கிருக்கும் குழுக்கள் ஒன்றில் அவர் தன்னை இணைத்துக்கொண்டிருப்பாரா, எந்தக் குழுவும் அவரை ஏற்றிருக்குமா? சந்தேகம்தான். அநேகமாக அவர் தம் அலுவலகத்திற்கும் வீட்டிற்குமாகப் பந்தாடப்பட்டிருப்பார். தன் வீட்டு அலமாரிப் புத்தகங்களுடனேயே அவர் உலகம் வேýயிடப்பட்டிருக்கும்.

இணையத்தில் பதிவான அவரது கட்டுரைகள் அட்லாண்டிக்குக்கு அப்பால் என்று தொகுக்கப்பட்டுள்ளது. புத்தகமாக வந்த பிறகுதான் பி.கே. சிவகுமாருடன் எனக்குப் பரிச்சயமாகிறது. இணையத்தில் படித்ததில்லை. என்னுடைய சிரமங்களும் படிந்துவிட்ட பழக்கங்களும் எனக்கு. பழங்காலத்து மன அமைப்பு. இப்போது இத்தொகுப்பு பரிச்சயப்படுத்தும் சிவகுமார் என்னையும் அவரையும் பிரிக்கும் ஒரு தலைமுறைக்கும் மேலான இடைவெளியையும் மீறி ஒரு இதமான சிநேகபூர்வமான மனிதராக அருகில் உணர வைக்கிறது. தமிழ்ச் சூழல் அவரைக் கெடுத்து விடவில்லை. அமெரிக்கா அவரை, ஆளுமையை தமிழரல்லாது வேறெதாவதாகவும் ஆக்கிவிடவில்லை.

தொகுப்பில் உள்ள சிறிதும் பெரிதுமான 45 கட்டுரைகள், இலக்கியம், அரசியல், அமெரிக்க வாழ்க்கை, கவிதை, விவாதங்கள், தமக்குப் பிடித்த கவிஞர்கள் என்று பல விஷயங்கள் பற்றிப் பேசுகின்றன. இப்படி எது பற்றிப் பேசினாலும், சிவகுமாரை மிக அருகில் அடக்கம் என்ற பாவனையில்லா அடக்கத்தோடும் தோழமையோடும் சம்பாஷிக்கும் ஒருவராக உணரலாம்.

அவரது தாத்தா நீதிக் கட்சிக்காரர். திராவிட இயக்க அபிமானி. ஆனந்த போதினி பஞ்சாங்கம் வருடா வருடம் மறக்காமல் வாங்குபவர். அவரிடம் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை எழுதிய கம்பராமாயணம் முழுதும் அவர் வாசித்த குறிப்புகளுடன் இருந்தது. தந்தையார் தீவிர காங்கிரஸ்காரர். அமெரிக்காவிýருக்கும் பேரன் கேட்க, இரண்டே பாகங்கள்தான் அப்பாவால் அனுப்பப்படுகிறது. “எல்லாவற்றையும் அனுப்பிவிட்டால் தாத்தா ஞாபகத்தில் இங்கு என்ன இருக்கும்?” என்று சொல்கிறார் அப்பா. பேரன் அமெரிக்காவில் இருந்துகொண்டு சிவ வாக்கியர் பாடல்களிலும் கம்பனிலும் ஆழ்கிறார். சிவ வாக்கியரின் நாஸ்திகத்திற்கும் பகுத்தறிவுப் பகலவர்களின் நாஸ்திகத்திற்கும் இடையே உள்ள குணவேற்றுமை சிவகுமாருக்குத் தெரிகிறது. திராவிடக் கட்சிகளின் பொய்மைகளை அமெரிக்காவிýருக்கும் பேரன் உணரமுடிகிறது. தனித் தமிழின் போýத்தனமும், சங்கராச்சாரியாரின் கைது பற்றிக் கருணாநிதியின் சாமர்த்தியமான வார்த்தை ஜாலங்களின் சந்தர்ப்பவாத அரசியலும் தெரிகிறது. தமிழக இடதுசாரிகள் வெளிப்படுத்தும் அரசியýன் இரட்டை நாடகங்கள், ஜெயலýதாவை எதிர்க்கும் தேர்தல் பிரசாரத்தில் வீரப்பனின் கருணாநிதி ஆதரவுப் பேச்சைப் பயன்படுத்திய சன் டிவி, இப்படி இங்கு நடக்கும் எல்லா மாய்மாலங்களையும் மாய்மாலங்களாகவே அவரால் பார்க்க முடிகிறது.

உமாமகேஸ்வரியின் கவிதை அவரை ஈர்த்துள்ளது. தன் ரசனையை அவர் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். படிமமும் உருவகமும் அனுபவத்திýருந்து பிறப்பது எங்கு, யோசித்து அடுக்கி ஒட்டவைத்திருப்பது எங்கு எனச் சிவகுமாருக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டுக் குழுச் சார்புகள், அரசியல் சார்புகள் அவரது வாசிப்பைப் பாதிக்கவில்லை. அவரது ரசனை அவரதே. இது பெரிய விஷயம்.

ஜெயகாந்தனிடம் சிவகுமார் கொண்டுள்ள உணர்வை பக்தி என்று தான் சொல்ல வேண்டும். அரவிந்தன் எழுதிய விமர்சனம் சிவகுமாரை நிறைய கோபப்படுத்தியிருக்கிறது. அரவிந்தன் ஜெயகாந்தனைத் தேர்ந்தெடுத்ததும், எழுதியதும், தன்னிச்சையாக அல்லவே, தூண்டப்பட்டதல்லவா, என்ற சந்தேகம் சிவகுமாருக்கு. ஜெயகாந்தனிடமும் இரைச்சலும் உண்டு, நிசப்தங்களும் உண்டு என்பதும், பல கால கட்டங்களில், பல முறை ஜெயகாந்தன் அசாத்திய துணிவையும், தன் கருத்துச் சுதந்திரத்தையும் உரத்த குரýல் வெளிக்காட்டியிருக்கிறார், என்பதும் உண்மை. அதே சமயம் கருத்துகளையே அனுபவங்களாகவும், பாத்திரங்களாகவும், அவர் எழுத்தில் காண்பதும் உண்மை. சிவகுமாருக்கு, ஜெயகாந்தன் ஒரு நிர்மல, நிர்குண பிரும்மம். மிகுந்த சிநேக பாவத்தோடு நம் அருகே குரல் எழுப்பாது உரையாடிக்கொண்டிருக்கும் சிவகுமார், மூக்கு சிவந்து உதடு துடிப்பது, ஜெயகாந்தன், நேசகுமார் இருவர் பற்றித்தான்.

நேசகுமார் விஷயத்தில், நேசகுமாரின் கிண்டலுக்கும் கோபத்துக்கும் தூண்டுதலாக இருந்த காரணிகளைச் சிவகுமார் மறந்து விடுகிறார். அந்தக் காரணிகளில் சில நேற்று முளைத்தவை எனவும் உண்டு. நூற்றாண்டுகள் பல நீளும் வரலாறும் உண்டு. “உண்மை 7ஆம் நூற்றாண்டு இறைவாக்கிலேயே சொல்லப்பட்டு விட்டது. அதன் பிறகு முற்றுப் புள்ளிதான்” என்று ஒரு குரல், மொராக்கோவிýருந்து ஃபிýப்பைன்ஸின் தெற்குப் பகுதி வரை கேட்கப்பட்டால், என்ன செய்வது? இதை ஒப்புக்கொள்ளாதவர் எல்லாம் காஃபிர், அதற்கு அடுத்த நடவடிக்கை ஜிஹாத் தான் என்றால் என்ன செய்வது? இந்த காஃபிர்களை ஒழித்துக் கட்டினால், ஜன்னத்தில் மதுக்குடத்துடன் தேவகன்னிகைகள் சூழ்ந்துவிடுவார்கள் என்று நம்பினால் என்ன செய்வது? ஸøன்னிகளுக்கு ஷியாக்களும் காஃபிர், அஹ்மதியாக்களும் காஃபிர், முஜாஹித்துகளும் காஃபிர், என்றால் என்ன செய்வது? இவர்கள் எல்லோருக்கும் ஸøஃபிகள் காஃபிர் என்றால் என்ன செய்வது? அப்படி இருக்க செக்யூலரிசம் போதிக்கப்படும் ஒரு ஹிந்துவாகத் தற்செயலாகப் பிறந்துவிட்டவன் என்ன செய்வான்? ஒரு முஸ்லீம் நண்பரைக் கண்டால், ‘ஸôகேப்’, ‘”ஜனாபேவாý, ஸலாம் ஆலே கும்” என்று வாழ்த்த நான் தயார்தான். விடிகாலையில்; ஒரு நாள் எம்.எஸ் சுப்புலட்சுமியின் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டால், மறு நாள் காலை அபீதா பர்வீனின் ஸøஃபி பாட்டுகள் கேட்க நான் தயார். கேட்கிறேன். விரும்பி, ரசித்துக் கேட்கிறேன். ஆனால் “அது பத்தாது, உன் பெயரை அப்துல் ஸமத் என்று மாற்றிக் கொள். கல்மா சொல்லு “லா இல்லாஹ் இல்ýல்லாஹ், முகம்மது ரஸ÷ல் அல்லாஹ்”, சுன்னத் பண்ணிக்கோ” என்று மிரட்டினால் என்ன செய்வது? பாரதி “அல்லா அல்லா” என்று அரற்றினான். பாடினான். அதெல்லாம் சரி, ஆனால், “எங்கள் குழந்தைகள் பள்ளியில் வந்தே மாதரம் பாடாது. அது எங்கள் மதத்திற்கு விரோதம்” என்று சொல்லும் மதத் தலைவரை, அரசியல் தலைவரை என்னென்பது? செக்யூலரிஸம் ஒரு புறம் அடைக்கப்பட்ட பாதையாகாதே (ஸ்ரீன்ப்þக்ங்þள்ஹஸ்ரீ).

ஆனால் சிவகுமார் கோபம் கொள்ளும் இந்த இடங்களில் எல்லாம், வகுப்பு வாத்தியாரிடம் “அவன் மட்டும் என்னைச் சீண்டலாமா சார்?” என்று மூக்கு விடைக்க புகார் செய்யும் இரண்டாம் வகுப்புப் பையனாகத்தான் தோன்றுகிறார். மறுபடியும் ஒரு ஆனால்: “தமிழில் விமர்சனத் துறை வளரவே இல்லை என்று சொல்லலாம்” என்று ஒரு கட்டுரையை ஆரம்பிக்கிறார் சிவகுமார். அப்படி ஒரு பார்வை மிக உயர்ந்த தளத்தில் இருந்து பார்த்தல் சாத்தியமே. அந்த உயர்ந்த தளம் நமக்கு எல்லாம் ஒரு லட்சியமாக இருக்கவேண்டும் என்றும் நாம் விரும்புவேன். ஆனால், அந்த சிகரத்தின் உச்சியிýருந்து பார்த்தால், கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன் போன்றவர்கள் எல்லாம் தூரதிருஷ்டிக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும், ஊறும் எறும்புகளாகவாவது தென்படுவார்களோ?

அப்படியிருக்க, சிவகுமார் சொல்வது போல “அவர்கள் விமர்சனத்தைக் கலையாக வளர்க்க முயன்றவர்களாகத்” தோன்றுவார்களோ? ரகுநாதன் கட்சி சேவகம் செய்து கெட்டவர் என்றால், கைலாசபதி கலை, இலக்கிய உணர்வு கிஞ்சித்தும் இல்லாத, தானும் புரிந்துகொள்ளாத கொள்கை வாய்ப்பாடுகள் மட்டுமே படித்த பணக்கார வீட்டில் பிறந்த வெற்றுப் பண்டிதர். சிவத்தம்பியோ, கைலாசபதி இருந்த வரை அவர் அடி ஒற்றி ஒத்து ஊதிய, இப்போது அதை நியாயப்படுத்தும் பண்டிதர். கலை, இலக்கியத்துக்கும் இவர்களுக்கும் என்ன உறவு? கம்யூனிஸ்டுகளின் இரட்டை நிலை பற்றியும், திராவிட இயக்கங்களின் அடுக்குத் தொடர் வார்த்தை ஜாலங்கள் பற்றியும் நியூஜெர்ஸியிýருந்து உணரக்கூடிய சிவகுமாருக்கு இவர்களின் போýத்தனம் உணரமுடியவில்லையா?

இம்மாதிரிதான் வல்ýக்கண்ணனின் ‘உற்சாகப்படுத்தும்’ விமரிசனம் பற்றியும். சர்வ ஜீவ தயை பாவிப்பவர் வல்ýக்கண்ணன். ஆண்டவன் படைப்பில், ஈ, கொசு, கரப்பான், பல்ý, கள்ளி, கத்தாழை எல்லாமே ஜீவன்கள்தான்; அவை ரக்ஷிக்கப்படவேண்டும் என்று நினைப்பவர் அவர். அவரது பாராட்டுக் கார்டு இல்லாமலேயே அவை உயிர் வாழும் தான். ஆனால் வைக்கோலுக்கும் சேமியாவுக்கும் வித்தியாசம் தெரியாத ரட்சகரை என்ன என்று சொல்வது? என் நண்பர் சொன்னார்: “என் கவிதைத் தொகுப்பை வல்ýக்கண்ணனுக்கும் கொடுக்கலை, தி.க.சி.க்கும் கொடுக்கலை. எதுக்குங்க? ரெண்டு கார்டு உடனே வந்துடும் பாராட்டி”. சிவகுமார், ஆனந்த போதினி பஞ்சாங்கம் பற்றிக் குறிப்பிட்டார். ஆனந்த போதினி, பாம்புப் படம் போட்ட பஞ்சாங்கங்கள் எல்லாம் ஸ்ரீர்ம்ல்ப்ண்ம்ங்ய்ற்ஹழ்ஹ் ஸ்ரீர்ல்ண்ங்ள் அனுப்புவதில்லை. இல்லையெனில் அவற்றிற்கும் வல்ýக்கண்ணன் தன் உற்காகப்படுத்தும் கார்டுகளை வருடா வருடம் அனுப்பியிருப்பார்.

சிவகுமார் தன் அமெரிக்க வாழ்க்கைக் காட்சிகளும் சில தந்துள்ளார். தான் எப்படி கால்பந்து கோச் ஆனார், தன் அலுவலகக் காண்டீன் செஃப், ஜமாய்க்காவில் வந்தவர் எல்லோருடனும் காட்டும் அக்கறையும் அன்னியோன்னியமும், தன் குழந்தையின் பிடிவாதத்தில் அவர் புரிந்துகொண்டது எல்லாவற்றையும் படிக்கும் போது, தமிழ்ச் சமூகத்தையும் அரசியலையும் இலக்கியத்தையும் பற்றிப் பேசும் அதே சிவகுமார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லாம் சொன்னபிறகு, நான் முதýல் சொன்னேனே, ஒரு உண்மையும், சிநேக பாவமும் கொண்ட நண்பருடன் உரையாடுவது போன்ற மன நிறைவு, சிவகுமாரின் புத்தகத்தில் கிடைக்கிறது என்று. அதில் மாற்றமில்லை. இடையிடையே நாம் சொல்ல மாட்டோமா, “இல்லீங்க நீங்க தெரியாம பேசறீங்க. வெளியூரிலேர்ந்துகிட்டு உள்ளூர் நிலவரம் தெரியாம இருக்கீங்க” என்று? அப்படித்தான் அவர் எழுத்து சில இடங்களில் இருக்கிறது.

தன்னைத் தலைக்குப் பின்னால் ஒரு சுழலும் ஒளிவட்டம் கொண்டவரான ஒரு நினைப்பு, சிவகுமாருக்கு இல்லை. தன்னையே கேý செய்துகொள்ளும் இயல்பினர். தயக்கமில்லாமல், திட்டமிடாமல், பலாபலன் கருதாது மனத்தில் நினைப்பதைச் சொல்ýவிடுகிறார். இந்தக் குணம் எதுவும் அவரைத் தமிழ்ப் புண்ணிய பூமியில் வாழும் தமிழ் எழுத்தாளராக அடையாளம் காட்ட மறுக்கிறது.

நான் நினைத்துப் பார்க்கிறேன். இணையம் என்று ஒன்று இல்லாவிட்டால், சிவகுமாரை நம் ஊடகங்கள் அறிய விட்டிருக்குமா?

þþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþþ

அட்லாண்டிக்குக்கு அப்பால்: (பி.கே.சிவகுமார்) கட்டுரைத் தொகுப்பு: எனி இண்டியன் பதிப்பகம், 102, 57, ட.ங.எ. காம்ப்ளெக்ஸ், தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னைþ17 விலை ரூ 120.

Posted in Atlanticukku Appaal, Book, Books, Literature, PK Sivakumar, review, Tamil, Venkat Saminathan | Leave a Comment »