Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன், 2008

Russia-EU seek common energy pact: Russia’s President Dmitry Medvedev Discuss Security – Agree to work on partnership agreement

Posted by Snapjudge மேல் ஜூன் 30, 2008

ரஷ்யா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய உடன்பாடு

ஐ. ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜாவியர் சொலோனா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ்
ஐ. ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜாவியர் சொலோனா மற்றும் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ்

ரஷ்யாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தமக்கு இடையேயான ஒரு புதிய உடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்படுத்தியுள்ளன. நீண்ட காலமாக தாமதமான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

சைபீரிய நகரமான காண்டி மான்சியிஸ்கில் ரஷ்ய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே நடைபெற்ற ஒரு உச்சி மாநாட்டிலேயே முட்டுக்கட்டை நீங்கி இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டது.

விளாடிமிர் புடினை அடுத்து ரஷ்யாவின் அதிபராக பொறுபேற்ற டிமிட்ரி மெட்வடேவ் பங்கு பெறும் முதல் உச்சி மாநாடு இதுவே.

போலந்து மற்றும் லித்துவேனியா நாட்டுடன் ரஷ்யாவுக்கு எழுந்த சர்ச்சைகளின் காரணமாக புதிய பேச்சுவார்த்தைகள் தடைபட்டிருந்தன.

ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் பழைய பிரச்சினைகள் பின்புலத்தில் இருந்து கொண்டுதான் உள்ளன என்று மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

Posted in Economy, Finance, Govt, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Philippines: Ferry salvage team to remove toxic cargo, fuel – No ‘significant’ release of toxic chemical yet: Endosulfan retrieval from ‘Princess’ to commence Monday

Posted by Snapjudge மேல் ஜூன் 30, 2008

மூழ்கிய படகில் இருக்கும் விஷ இரசாயனத்தை அகற்றுவதற்கான முயற்சி

மூழ்கிய கப்பலின் அருகே மீட்புப் பணியாளர்கள்
மூழ்கிய கப்பலின் அருகே மீட்புப் பணியாளர்கள்

பிலிப்பைன்ஸில் அண்மையில் மூழ்கிய ஒரு படகிலிருந்து நூற்றுக்கணக்கான சடலங்களை மீட்கும் பணியைச் செய்யத் தடையாக அப்படகிலிருந்த விஷ இரசாயனத்தை அகற்றுவதற்கு தற்போது ஒரு சிறப்பு நிபுணர் அணி முயற்சித்துவருகிறது.

கடந்த சனிக்கிழமை சூறாவளியில் சிக்கி மூழ்கிய அப்படகின் அடித்தளத்தில் இருந்து பத்து டன்கள் அளவிலான பூச்சிக்கொல்லி மருந்தை பாதுகாப்பாக வெளிக்கொணர இந்த நிபுணர் அணி முயலும்.

இந்தப் படகு மூழ்கிய சமயத்தில் அதில் எண்ணூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர்; ஆனால் 60 பேருக்கும் குறைவானவர்களே உயிர்பிழைத்ததாகத் தெரியவருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமைதான் படகில் இரசாயனம் இருப்பது தெரியவந்து சடலங்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Sex allegations: Malaysia’s Anwar Ibrahim seeks refuge at Turkish embassy after sodomy claim – Denounces new sex charges as ‘fabrication’

Posted by Snapjudge மேல் ஜூன் 30, 2008

முன்னாள் மலேஷியப் பிரதமர் துருக்கியத் தூதரகத்தில் தஞ்சம்

முன்னாள் மலேஷியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் அவர்கள் கோலம்பூரிலுள்ள துருக்கியத் தூதரகத்தில் அடைக்கலம் தேடியுள்ளார்.

தகாத பாலுறவுக் குற்றச்சாட்டுகளுடன் அவர் மீது புதிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தன்னைப் பிடித்து தடுத்து வைத்திருக்கும் சமயத்தில் ஏற்படக் கூடிய தனக்கு ஆபத்து குறித்து தான் அஞ்சுவதாக பி.பி.சி.யிடம் தெரிவித்த அன்வர் அவர்கள், தான் துருக்கியிடம் அரசியல் தஞ்சம் எதுவும் கேட்கவில்லை என்றும், மாறாகத் தன்னுடைய பாதுகாப்புக்கு மலேசிய அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதத்தையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தன் மீது மீண்டும் அபாண்டமாகப் பழிசுமத்த அரசாங்கம் குற்றச்சாட்டுகளைச் சோடிக்கிறது என்றார்.

ஆனால் மலேசியப் பிரதமர் அப்துல்லா படாவி அவர்கள் அதை மறுக்கிறார்.

1998இல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட அன்வர் அவர்கள் முறையற்ற பாலுறவு மற்றும் ஊழல் தொடர்பாக ஐந்தாண்டு சிறைவாசம் கண்டவர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவரும் அவர், அவை அரசியல் காரணங்களுக்காகத் தன் மீது சுமத்தப்பட்டவை என்று தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இவ்வாண்டு முற்பகுதியில் மீண்டும் வெளி அரசியலில் பெரிதாகப் புகுந்து கொண்டார்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | Leave a Comment »

Naxalites target cops on boat; 54 security men feared drowned in Maoist attack in Orissa

Posted by Snapjudge மேல் ஜூன் 30, 2008

ஒரிஸ்ஸாவில் மாவோயியவாதிகள் தாக்குதலில் ஐம்பது பொலிசார் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் மாவோயியவாதிகள் நடத்திய ஒரு தாக்குதலில் ஒரு படகு ஏரியில் கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் ஐம்பது பொலிசார் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கிளர்ச்சிக்காரர்களுடன் மோதுவதற்காக விசேட படையணி ஒன்று படகில் சென்றுகொண்டிருந்ததாகத் தெரிகிறது.

மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் ஏரி ஒன்றில் படகு சென்றிருந்த வேளை அருகிலிருந்த மலைக் குன்றுகளிலிருந்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

படகில் இருந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே நீந்திக் கரையேறியதாகத் தெரிகிறது.

Posted in India, Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , | Leave a Comment »

LTTE’s Parappakkadantan Stronghold Falls – June 27: Tamil Eelam, Sri Lanka, War Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஜுலை, 2008

விடுதலைப்புலிகள் பகுதியில் 8 விமானங்கள் ஒரே நேரத்தில் குண்டு வீச்சு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் மாங்குளத்திற்கு வடகிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை இலங்கை அரசாங்க விமானப்படைக்குச் சொந்தமான 8 குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் வான்படையினர் போன்ற விசேட அணியினருக்கான இந்தப் பயிற்சி நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தத் தாக்குதல் பற்றியோ, இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஓமந்தையில் இருந்து ஐ சி ஆர் சி மீண்டும் விலகல்

ஓமந்தை சோதனைச் சாவடி
ஓமந்தை சோதனைச் சாவடி

இதற்கிடையில், ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அந்தச் சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபடுவதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதற்கு முடிவு செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவல் அதிகாரி சரசி விஜேரட்ண தெரிவித்தார்.

இந்தச் சோதனைச்சாவடி ஊடாகப் பயணம் செய்யும் பிரயாணிகளினதும், தமது ஊழியர்களினதும் பாதுகாப்பு தமக்கு முக்கியமானது என்பதனால், இந்தப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டதும் தமது பணியாளர்கள் திரும்புவார்கள் என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் தகவலதிகாரி தெரிவித்தார்.

எனினும் அங்கு நடைபெற்ற சம்பவம் என்ன என்பது தொடர்பான விபரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இதனிடையில், நாளை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் ஓமந்தைக்கு கடமைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்ற தகவல் அந்தக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா அரசாங்க அதிபர்களுக்கு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்த அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே ஓமந்தையில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை விலகச் செய்யும் வகையில் இன்று என்ன சம்பவம் நிகழ்ந்தது, என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனிவாவில் உள்ள பேச்சாளர் கார்லா ஹடட் அவர்களிடம் பிபிசி சிங்கள சேவையின் சார்பில் கேட்டதற்கு பதிலளித்த அவர், அது ஒரு வெடிப்பு சம்பவம் என்றும், இருந்த போதிலும் அது குறித்த தெளிவான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும், இது குறித்து தாம் சம்பந்தப்பட்ட தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.


ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டர் தொடரணியை சேர்ந்த வாகனத்தின் மீது தாக்குதல்?

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயணித்த ஹெலிக்கொப்டர் தொடரணியைச் சேர்ந்த ஒரு ஹெலிக்கொப்டர் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சேன சுரவீர அவர்கள் பாதுகாப்புக்கான ஹெலிக்கொப்டர் ஒன்றே மோட்டார் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், அதற்கு சிறிய சேதம் மாத்திரமே ஏற்பட்டதாகவும் கூறினார்.

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் அறுகம்பை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பாலம் ஒன்று மீளமைக்கப்பட்டதை அடுத்து அதனைத் திறப்பதற்காக அங்கு சென்ற ஜனாதிபதி அங்கிருந்து திரும்பிய வேளையில், அவர் சென்ற ஹெலிக்கொப்டருடன் கூடச் சென்ற ஹெலிக்கொப்டர் ஒன்றே இவ்வாறு விடுதலைப்புலிகளின் ராக்கட் தாக்குதலுக்கு உள்ளானதாக தாம் கேள்விப்பட்டதாக பொத்துவில் பகுதிக்கான சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்து, தரையிறக்கப்பட்ட ஹெலிக்கொப்டர் சேதமடைந்திருந்ததை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


வவுனியா சுற்றிவளைப்பில் பலர் கைது

கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்
கைது செய்யப்பட்டவர்களை மீட்க காத்திருப்போர்

இலங்கையின் வடக்கே வவுனியாவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையையடுத்து நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற திடீர் தேடுதலின் போது பெருமளவானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை வவுனியா பொலிஸார் இரவு முழுதும் தடுத்து வைத்ததையடுத்து உறவினர்கள் அச்சமடைந்தனர். பதற்றமும் நிலவியது.

இன்று காலை பெரும் எண்ணிக்கையான உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தின் எதிரில் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட 91 பேரில் இருவரைத் தவிர ஏனையோரை பொலிஸார் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திப் பெட்டகத்தில் கேட்கலாம்.


பரப்புக்கடந்தானை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரைக்குளத்திற்கு வடக்கே உள்ள பரப்புக்கடந்தான் கிராமப்பகுதியை இராணுவத்தினர் இன்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான கடும் சண்டைகளின் பின்னர் இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்டான்குளம் பகுதியில் மேலும் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான நிலப்பகுதியை இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

மன்னார், வவுனியா, வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது வெள்ளிக்கிழமை நடத்திய வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 44 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

மன்னார் ஆண்டான்குளம், பாப்பாமோட்டை, நெடுவரம்பு மற்றும் வவுனியா வெலிஓயா போர்முனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளின்போதே விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டிருக்கின்றது.

கடந்த வியாழக்கிழமை மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் கொல்லப்பட்ட 25 விடுதலைப் புலிகளின் சடலங்களையும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.வை.எம்.இஸடீன், வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு விசாரணை நடத்தியதையடுத்து, இந்தச் சடலங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சடலங்கள் நாளை சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இதேவேளை, யாழ்ப்பாணம் பருத்தித்துறை கலிகை சந்திக்கருகில் நேற்றிரவு 8 மணியளவில் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட வீதியோரக் குண்டுத் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மல்லாவி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் நேற்றிரவு 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். கொல்லப்பட்டவர் வவுனியா நகரில் புடவைக் கடையொன்றில் பணியாற்றி வந்ததாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 ஜூன், 2008


வட இலங்கை மோதல்களையடுத்து விடுதலைப்புலிகளின் 25 சடலங்களை மீட்டதாக இராணுவம் அறிவிப்பு

இலங்கையின் வடமேற்கே மன்னார், வவுனியா முன்னரங்க பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 25 சடலங்களை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்தச் சடலங்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியா பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்தச் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சடலங்கள் அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர், இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலின் போது கண்டெடுக்கப்பட்டதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

மன்னார் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சண்டையின் போது 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், வவுனியா பாலமோட்டை பகுயில் இடம்பெற்ற இன்னுமொரு மோதலின்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், வவுனியா நவ்வி என்ற இடத்தில் இராணுவத்தினர் மேலும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் சடலத்தைக் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள்

இந்தச் சண்டைகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தங்களால் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சி முகாம் ஒன்றினை விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் இன்று காலை குண்டுவீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) உறுப்பினரொருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

28 வயதான காளியப்பன் குணசீலன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபர், கடந்த 19ஆம் திகதி கறுவாக்கேணியிலுள்ள காரியாலயத்திலிருந்து தண்ணீர் எடுக்க வெளியே சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது.

விநாயகபுரம் காட்டுப் பகுதியில் புதையுண்ட நிலையில் இவரது சடலம் வெள்ளி நண்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இந்நபர் கடத்தப்பட்டு காணாமல் போனமைக்கு டி.எம்.வி.பி அமைப்பினரே பொறுப்பு என ஈ.பி.டி.பி. யினர் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் ரி.எம்.வி.பி அமைப்பினர் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.


புலர்ந்தும் புலராத விடியல் – பாகம் 4

மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை
மீளக்கட்டப்பட்ட வாகரை மருத்துவமனை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் மீள் குடியேற்றப் பகுதிகளில் மோதல்களுக்குப் பின்னர் பொருளாதார மீட்சி மந்தகதியிலேயே நடந்துவருகிறது.

வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது; விலைவாசிகள் மிக வேகமாக உயர்ந்துவருகிறன.

சாலைகள், பொதுக் கட்டிடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றை சீரமைக்கும் பணிகளும் மந்தமாக நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டை பொது மக்கள் பலர் கூறுகின்றனர்.

மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அவர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் தேவை என்றபோதிலும், அட்டையைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர்களைப் போலவே விவசாயிகளும் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.

கிழக்கிலங்கையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பொருளாதார நிலை குறித்த பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 28 ஜூன், 2008

விடுதலைப் புலிகளிடம் இருந்து விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய விடத்தல்தீவு பகுதி வரை இராணுவம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம அறிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த் தாக்குதல்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மன்னார் – பூனகரி பிரதான வீதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தைக் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார்.

உயிலங்குளம் – அடம்பன், உயிலங்குளம் – ஆண்டான்குளம் ஆகிய விடுதலைப் புலிகளின் முக்கிய விநியோக வீதிகள் உட்பட சுமார் 120 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசம் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள அம்பலப்பெருமாள்குளத்திற்கும் கோட்டைகட்டினகுளத்திற்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் கொல்லப்பட்டுள்ளதாய்த் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நாகலிங்கம் மீதான தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தினர்; ஆனால் இராணுவத் தரப்பில் இருந்து இதுகுறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தவிர வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 25 சடலங்களும் இன்று சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.


பிள்ளையான் – விமல் வீரவன்ஸ சந்திப்பு – ஓர் அலசல்

விமல வீரவன்ஸ
சிவநேசத்துரை சந்திரகாந்தன்





கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் ஜே.வி.பி. அதாவது மக்கள் விடுதலை முன்னணி கட்சியிலிருந்து பிரிந்து சென்று தேசிய விடுதலை முன்னணி என்ற ஒரு புதுக் கட்சியைத் தொடங்கியுள்ள விமல வீரவன்ஸ இடையில் நேற்று சனிக்கிழமையன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விரு புதிய கட்சிகளும் தங்களுடைய நீண்டகால அரசியல் நலன்களுக்கு ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டும் என்பதை உணருவதால் ஏற்பட்ட ஒரு அரசியல் நகர்வாக இச்சந்திப்பு கருதப்படுகிறது.

இச்சந்திப்பின் அரசியல் பின்புலம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இலங்கை அரசியல் விவகார ஆய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தமிழோசையில் கருத்து வெளியிட்டார்

டி.எம்.வி.பி. போன்ற அமைப்புகள் ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்கிற விவகாரத்தில் ஜே.வி.பி. தலைமைத்துவத்தின் நிலைபாட்டிலிருந்து விமல வீரவன்ஸ சற்று முரண்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளிடம் இருந்து அச்சுறுத்தல் நிலவுகின்ற சூழலில் டி.எம்.வி.பி. போன்ற அமைப்பினர் ஆயுதக் களைவு செய்வது சாத்தியமாகாது என்ற கருத்தை வீரவன்ஸ கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் கட்டாயம் உடனடியாக ஆயுதக் களைவு செய்ய வேண்டும் என்பது ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் நிலைப்பாடாக இருந்தது. இந்த முரண்பாடானது ஜே.வி.பி. கட்சியிலிருந்து வீரவன்ஸா விலகியதன் காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டிருந்தது. ஆகவே வீரவன்ஸவுக்கு ஆதரவு வழங்குவதென்பது பிள்ளையானுடைய தார்மீகப் பொறுப்பாக கூட இருக்கலாம் என்று பேராசிரியர் தங்கராஜா தெரிவித்தார்.

அவரது பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 ஜூன், 2008

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகிறார்கள்: இலங்கை இராணுவம்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரச படைகளிடம் தோல்வியடைந்துவருகிறார்கள் என்று அந்நாட்டின் இராணுவத் தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் சரத் ஃபொன்சேகா கூறியுள்ளார்.

நாட்டின் வட பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துவருவதாகவும் பதுங்கு குழிகளிலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களையும் ஆர்ட்டிலரி குண்டுகளையும் சமாளித்து அரச படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மென்மேலும் முன்னேறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரபு வழியில் சண்டையிடும் வல்லமையை புலிகள் இழந்துவிட்டார்கள் என்று சரத் ஃபொன்சேகா கூறினார்.

2006ஆம் ஆண்டு போர்நிறுத்தம் முறிந்ததிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஒன்பதாயிரம் பேரை இராணுவத்தினர் கொன்றிருப்பதாகக் கூறிய தளபதி ஃபொன்சேகா, இராணுவத் தரப்பில் இந்த காலகட்டத்தில் 1700 பேரை தாம் இழந்துள்ளதாகக் கூறினார்.

புலிகள் தற்போது கட்டாய ஆட்சேர்ப்புக்களைச் செய்துள்ள நிலையில் இப்போது அந்த இயக்கத்தில் நான்காயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை இன்னும் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் குறைந்த அளவிலான கெரில்லா யுத்தம் என்பது நீடித்துகொண்டே போகலாம் என்றும் அவர் கூறினார்.

இது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


தெற்காசியாவிலேயே மிக அதிக பணவீக்கம் இலங்கையில்

இலங்கையின் வருடாந்திர பணவீக்கமானது 28.2 விழுக்காட்டை எட்டியுள்ளதாக திங்களன்று வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகவும் அதிகமான பணவீக்கம் இதுதான்.

உலகமெங்குமே பணவீக்கம் ஒரு பிரச்சினைதான்; ஆனால் இலங்கை மற்றெந்த நாடுகளையும் விட மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது. நுகர்வுப் பொருட்களின் விலைகள் ஒரு ஆண்டுக்கு முன்னர் இருந்ததை விட சுமார் 30 சதவீதம் அதிகரித்துவிட்டன.

இதற்கு உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததும், நாட்டில் எரிபொருட்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் பொருளாதாரம் தவறாக நிர்வகிக்கப்ப்டுகிறது என்றும் அரசாங்கம் மிகவும் அதிகமாக செலவு செய்கிறது என்றும் வேறு சிலர் கூறுகிறார்கள்.

எதிர்வரும் மாதங்களில் பணவீக்க நிலை சீராகும் என்று மத்திய வங்கி நம்பிக்கை தருகிறது. ஆனால் இதுபோன்ற நம்பிக்கைகள் இதற்கு முன்னாள் பலமுறை பொய்த்துப்போயுள்ளன.

விலைவாசி தொடர்ந்து ஏறிக்கொண்டுதான் வந்துள்ளது. கோபம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சில தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் பொது வேலை நிறுத்தமொன்றுக்கு திட்டமிடுகின்றன.


Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Kumudam Cartoons: Congress Govt & BJP Election Campaign Strategy – Inflation, Nuclear Accord

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , | Leave a Comment »

Malaysian Indian challenges dead brother’s conversion: Hindu family in court to reclaim relative’s body set to be buried as Muslim

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008

மலேசியாவில் “சடலமும் சர்ச்சையும்”

மலேசியாவில் தொடரும் மத சர்ச்சைகள்
மலேசியாவில் தொடரும் மத சர்ச்சைகள்

மலேசியாவில் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் சடலத்துக்கு இறுதி கிரியைகளை செய்வது தொடர்பில், இந்து மதத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கும், அந்த நாட்டின் இஸ்லாமிய மத திணைக்களத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இலங்கேஸ்வரன் என்னும் பிறப்பால் இந்துவான, 34 வயதுடைய, தற்கொலை செய்துகொண்ட இந்த நபர், தனது குடும்பதுக்கு தெரியாமலேயே இஸ்லாத்துக்கு மாறி விட்டதாகக் கூறும் இஸ்லாமிய திணைக்களம், அவரது இறுதி அடக்கத்துக்காக, சடலத்தை தம்மிடம் தர வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால், அவரது மத மாற்ற சான்றிதழில், அவரது கையெழுத்தோ அல்லது விரலடையாளமோ இல்லாத காரணத்தால், அவரது மதமாற்றத்தை ஏற்க முடியாது என்று கூறும் அவரது குடும்பத்தவர், அவரை தமது இந்து முறைப்படி அடக்கம் செய்ய சடலத்தை தம்மிடம் தரவேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இஸ்லாமிய நாடான மலேசியாவில், சிறுபான்மையினத்தவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் மத விவகாரத்தில் தொடருகின்ற முறுகலான உறவினை வெளிப்படுத்தும் அண்மைய சம்பவம் இதுவாகும்.

மரணத்தின் போதான பிணக்குகளை தவிர்ப்பதற்காக, மதம் மாறும் எவரும் அது பற்றி தமது குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் இந்த வருட முற்பகுதியில் கூறியிருநந்தார்.

ஆனால், இந்த அறிக்கை பின்பற்றப்படுவதில்லை என்றும், ஒருவரது சடலம் அவருக்கு முன்பின் தெரியாதவர்களால் உரிமை கோரப்படும் சம்பவம் ஒன்று மீண்டும் நிகழ்ந்துள்ளது என்றும் மத நல்லிணக்கு குழு ஒன்று கூறியுள்ளது.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

BBC shuts down Romanian service

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008

பிபிசியின் ருமேனிய சேவை நிறுத்தப்படுகிறது

கடந்த 69 ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவரும் பிபிசியின் ருமேனிய மொழி வானோலி சேவை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் திகதியுடன் மூடப்படும் என்று பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது.

உலக சேவையின் இயக்குனர் நைஜல் சேப்மேன், தடையற்ற, சுதந்திரமான தகவல்களை தருவதில் ருமேனிய சேவை முன்னணியில் இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.

ருமேனியாவில் அதிகரித்துள்ள ஊடகங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் ருமேனிய சேவை கேட்கும் நேயர்கள் குறைந்தமை, உலக சேவையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் போன்றவைதான் இந்த முடிவுக்கு காரணங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூடப்படும் ருமேனிய சேவையின் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேஷ்னல் யூனியன் ஆப் ஜேர்னலிஸ்ட் அமைப்பு இந்த முடிவு ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளது.

Posted in Economy, Finance | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , | Leave a Comment »

Northern Province Athletic Meet (NPAM) – Maharagama Teacher Training College: Jaffna peninsula students stranded in Trincomalee

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 26 ஜூன், 2008

இலங்கையின் வடக்கே கடும் மோதல்கள்

வடக்கில் கடும் மோதல்கள்
வடக்கில் கடும் மோதல்கள்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மன்னார் – பூனகரி வீதியில் உள்ள பாப்பாமோட்டைக்குத் தென்பகுதியிலும், பாப்பாமோட்டைக்குக் கிழக்குப் பகுதியில் மராட்டிகன்னாட்டி, மின்னியறைஞ்சான் ஆகிய இடங்களில் இன்று அதிகாலை 6 மணிமுதல் இராணுவத்தினர் பின்தள எறிகணை சூட்டு ஆதரவோடு, மும்முனைகளில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் படையினர் முன்னேறி வருவதாகக் கூறும் பாதுகாப்பு அமைச்சகம் இப்பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் குறைந்தது 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.

பாப்பாமோட்டைக்குத் தெற்கே பல இடங்களில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் சமர் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

புலிகளுக்கு இழப்பு என்று இராணுவம் கூறுகிறது
புலிகளுக்கு இழப்பு என்று இராணுவம் கூறுகிறது

இப்பகுதியில் இன்று காலை முதல் இடம்பெற்று வரும் கடும் மோதல்களையடுத்து, படையினருக்கு உதவியாக மன்னார் நகரப்பகுதியில் உள்ள தள்ளாடி பிரதான இராணுவ தளம் உட்பட முக்கிய இராணுவ முகாம்களில் இருந்து பாப்பாமோட்டை பகுதியை நோக்கி எறிகணை தாக்குதல்களும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களையும் படையினர் நடத்தியதாக மன்னாரிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஜூன், 2008


மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்காக வந்த யாழ் மாணவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

வவுனியாவில் நடைபெறவிருந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்திலான விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கப்பல் மூலம் வந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருகோணமலையில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டே அவர்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக, அவர்களது வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி இந்த விளையாட்டுப்போட்டி வவுனியாவில் நடைபெறவிருந்த போதிலும், யாழ் மாவட்ட மாணவர்கள் அங்கிருந்து இதில் கலந்து கொள்வதற்கு ஆளுனர் அனுமதி மறுத்திருந்தார்.

இதனையடுத்து இந்தப் போட்டிகள் யாழ் மாவட்ட மாணவர்களின்றி நடைபெறுவதாக இருந்தது. எனினும் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, நேற்று இந்த மாணவர்கள் கப்பலில் புறப்பட்டு இன்று திருகோணமலையை வந்தடைந்தனர்.

இருந்த போதிலும் இந்த மாகாண மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள் பிறிதொரு தினத்தில் நடத்தப்பட்டு வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட மாணவர்களும் அதில் பங்கேற்க வழி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


ஆங்கில மூல ஆசிரியர் பயிற்சி இடைநிறுத்தம்

இலங்கையின் தெற்கே மஹரகம மற்றும் களுத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் மறு அறிவித்தல்வரை ஆங்கில மூல ஆசிரியர் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு பயிற்சி பெற்று வந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மீண்டும் தாம் கடமையாற்றிய பாடசாலைகளுக்கு திரும்பியுள்ளனர்.

மஹரகம ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று வந்த வடபகுதியைச் சேர்ந்த, 2 பெண்கள் உட்பட 4 பேர் கொழும்பில் 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு வேறு இடங்களில் ஆசிரியர் பயிற்சியை தொடர்வதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பணிப்பாளர் கே. மொகமட் தம்பி தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது

இலங்கைக்கான அமெரிக்க தூதரக வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமான பவுடர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தூதரக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த சந்தேகத்துக்குரிய பவுடர் ஆய்வுகூடப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவு வரும் வரை தூதரகம் பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டிருக்கும் என்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இருந்த போதிலும், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளின் நலன்கருதி, தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு தொடர்ந்தும் திறந்திருக்கும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

Kuselan snapshots: Super Star Rajniknath, Pasupathy, Meena, Nayanthara

Posted by Snapjudge மேல் ஜூன் 26, 2008

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

C Vezhavendhan: The need for quality Instructors – Teacher Training Schools

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தேவை தரமான ஆசிரியர்களின் சேவை

சி. வேழவேந்தன்

தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.

எனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.

இதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.

மீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.

அரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

போட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.

ஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.

எனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.

இதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.

இதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.

பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.

ஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.

மேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.

இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.

மேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.

Posted in Economy, Finance, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Pazha Nedumaran: DMK & Tamil Nadu Politics of Alliances – Coalition Government & PMK

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

மாற்று அணி காலத்தின் கட்டாயம்

பழ. நெடுமாறன்

அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பா.ம.க.வை தி.மு.க. வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல.

பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை. தி.மு.க. தலைமையின் இழிசொல்லுக்கும், பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக்கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும், குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை. மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக் கொண்டதில்லை.

1967ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழகத்தில் நடைபெற்று இருக்கிற பல்வேறு பொதுத் தேர்தல்களிலும் கொள்கை வழி நின்றோ, குறைந்தபட்சத் திட்ட அடிப்படையிலோ கூட்டணிகள் அமைக்கப்படவில்லை. சந்தர்ப்பவாத அடிப்படையில் பதவிப் பங்கீடு செய்து கொள்வதற்காகக் கூட்டணிகள் உருவாக்கப்பட்டன.

1967ஆம் ஆண்டு ஒருபுறம் சுதந்திரா கட்சியுடனும், மறுபுறம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கூட்டணி அமைத்தார் அண்ணா. காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கூட்டணி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.

1971ஆம் ஆண்டு அண்ணாவின் அருமைத் தம்பி கருணாநிதி, அண்ணன் வகுத்த காங்கிரஸ் எதிர்ப்புப் பாதையில் இருந்து மாறி காங்கிரசுடனேயே கூட்டணி வைத்துக் கொண்டார். ஜஸ்டிஸ் கட்சிக் காலம் முதல் தி.மு.க. காலம் வரை காங்கிரஸ் எதிர்ப்பிலேயே ஊறி வளர்ந்த ஒரு கட்சி, காங்கிரசுடன் கைகோர்க்கக் கொஞ்சமும் தயங்கவில்லை. காமராஜரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா – கருணாநிதி கூட்டு உருவானது.

ஆனால், இந்த கூடாத நட்பு நெடுநாள் நீடிக்கவில்லை. 1976ஆம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் கருணாநிதியின் ஆட்சியை இந்திரா பதவி நீக்கம் செய்தார். தி.மு.க.வுக்கு எதிராகக் கொடிய அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க “சர்க்காரியா கமிஷனை’ இந்திரா அமைத்தார்.

1977ஆம் ஆண்டு காங்கிரசை எதிர்க்க ஜனதா கட்சியுடன் கருணாநிதி கரம் கோர்த்தார்.

1978ஆம் ஆண்டு அக்டோபரில் மதுரைக்கு இந்திராகாந்தி வந்தபோது அவருக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல் நடத்த தி.மு.க. தயங்கவில்லை.

ஆனால், மறு ஆண்டே நிலைமை மாறியது. 1979 இறுதியில் அதே இந்திராவின் தலைமையில் உள்ள காங்கிரசுடன் கருணாநிதி கூட்டுச் சேர்ந்தார். “”நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என முழங்கினார். 1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1989ஆம் ஆண்டு வி.பி. சிங் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய தி.மு.க. ஆதரவு அளித்தது. 1991இல் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1998இல் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது. 1999இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கைகோர்த்தது. 2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்தது.

மத்தியில் ஆளும் கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர இரு கழகங்களும் தமக்குள் போட்டியிட்டன. 1979இல் சரண்சிங் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இரு அ.தி.மு.க.வினர் அமைச்சரானார்கள். 1989இல் வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. 1998ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது. 1999ஆம் ஆண்டு பா.ஜ.க. அமைச்சரவையில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கேற்றனர். மீண்டும் 2003ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியேற்றனர்.

தில்லியில் ஆளுங்கட்சி எதுவோ அதனுடன் கூட்டுச் சேர்ந்து தமிழகத்தில் தாங்கள் நடத்தும் ஊழல் ஆட்சிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொள்ளவே இரு கழகங்களும் இவ்வாறு செய்தன. ஆனால் மத்திய ஆட்சிகளில் அங்கம் வகித்தும் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீர்ப் பிரச்னைகள் சேதுகால்வாய்த் திட்டம் எதனையும் தீர்க்க இரு கழகங்களாலும் முடியவில்லை.

தமிழ்நாட்டில் தற்போது தி.மு.க. அரசு சிறுபான்மை அரசே ஆகும். பலமான கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும் தி.மு.க.வுக்கு தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி நடத்துகிறது. ஆனாலும் தனது ஏதேச்சாதிகாரப்போக்கை அது கைவிட மறுக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்களில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் கூட ஆளும் கட்சியினரின் வன்முறைத் தாக்குதல்களுக்கு இரையானார்கள். தேர்தல் முறைகேடுகள் பகிரங்கமாக நடத்தப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியிலும் இவ்வாறே நடத்தப்பட்டன.

இரு கழகங்களின் ஆட்சியிலும் மணல் கொள்ளை வெளிப்படையாகவே தொடர்கிறது. கள்ளச்சாராயம் ஆறாகப் பெருகி ஓடுகிறது.

இரு கழக ஆட்சியிலேயும் காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மோதல் சாவுகள், காவல் நிலையப் படுகொலைகள், தங்கு தடையின்றித் தொடர்ந்தன.

ஜனநாயக உரிமைகள் அப்பட்டமாகப் பறிக்கப்பட்டன. எதிர்க்கருத்துகளை நசுக்கும் முயற்சி தொடர்ந்தது.

இரு கழகங்களின் ஆட்சியிலேயும் சாதி மத மோதல்கள் தடுக்கப்படவில்லை.

எல்லையற்ற ஊழலும், லஞ்சமும், நிர்வாகச் சீர்கேடுகளும் தலைவிரித்து ஆடின. ஆடுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சருக்கு மிக நெருக்கமான குடும்பத்தின் தலையீடு நிர்வாகத்தில் இருந்தது.

தி.மு.க. ஆட்சியிலும் முதலமைச்சரின் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அதிகார மையங்களின் தலையீடு அரசின் சகல மட்டங்களிலும் இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுவது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்ந்தது.

முக்கியமான பிரச்னைகளில்கூட கூட்டணிக் கட்சிகளை இரு கழகத் தலைமைகளும் ஒருபோதும் கலந்து ஆலோசிப்பது கிடையாது.

அரசின் தவறான நடவடிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகள் விமர்சிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ கூடாது. அவ்வாறு எதிர்க்கத் துணிந்த பிற கட்சித் தலைவர்களை முதலமைச்சரும், அக்கட்சியைச் சார்ந்த பலரும் பண்பாடற்ற முறையில் திட்டித் தீர்ப்பார்கள். கூட்டணிக் கட்சிகள் என்றால் கொத்தடிமைக் கட்சிகளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இரு கழகத் தலைமையிடமும் இப்போதும் நீடிக்கிறது.

ஆட்சி அரியாசனத்தில் அமர்வதற்காகத் தங்களுக்குப் பல்லக்குத் தூக்கிகளாகக் கூட்டணிக் கட்சிகள் இருக்க வேண்டும் என இரு கழகத் தலைமைகளும் எதிர்பார்க்கின்றன.

1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்கள் எல்லாவற்றிலும் கூட்டணிக் கட்சிகளின் உதவியின்றி இரு கழகங்களும் வெற்றி பெற்றதே இல்லை. தனித்துநின்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் இரு கழகங்களுக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் தங்களின் தயவினால்தான் கூட்டணிக் கட்சிகளுக்குச் சில பதவிகள் கிடைக்கின்றன. தங்களின் கடைக்கண் பார்வை இல்லாமல் போனால் கூட்டணிக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என இரு கழகத் தலைமைகளும் இறுமாப்புடன் நினைக்கின்றன.

கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பலமான கூட்டணி இருந்தும்கூட தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 இடங்களே கிடைத்தன.

அ.தி.மு.க.வுக்கு 60 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. இரு கழகங்களும் தனித்துப் போட்டியிட்டு இருக்குமானால் 10 முதல் 20 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்காது என்பது திண்ணம்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகப் பொதுவாழ்விலும் – சமுதாயப் பண்பாட்டுத் தளங்களிலும் மிகப்பெரிய சீரழிவை இரு கழகங்களும் ஏற்படுத்திவிட்டன.

இவற்றிலிருந்து தமிழகத்தை மீட்கும்பணி இமாலயப் பணியாகும். தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய மகத்தான கடமை இன்று நம்முன் நிற்கிறது. அந்தக் கடமையைச் செய்ய முன்வருமாறு ஜனநாயகக் கட்சிகளை வேண்டிக் கொள்கிறேன்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுநீர்ப் பிரச்னைகளிலும் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சேதுக்கால்வாய் பிரச்னையிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால் உறுதியுடன் போராடும் துணிவுகொண்ட மாற்று அணியால்தான் முடியும்.

ஜனநாயக நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும், பாசிச சர்வாதிகாரத்தை எதிர்த்து வீழ்த்துவதிலும் நம்பிக்கை கொண்ட கட்சிகள் தமக்குள் ஒன்றுபட்டு குறைந்தபட்ச திட்ட அடிப்படையில் மாற்று அணி உருவாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதற்கான தேவை அதிகரித்துள்ளது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறினால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

Posted in DMK, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Asin’s Vogue cover appearance: Dasavatharam, Ghajini Movie Star in the Lead Image of the Fashion Magazine

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

Posted in India, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

One fatal accident every five minutes on Indian roads: Motor Vehicles Amendment Bill

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்

உலகில் வாகன விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்ககொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்தியச் சாலைகளில் அகால மரணம் அடைகின்றனர். இருபது லட்சம் பேர் மோசமாக காயமடைகின்றனர்.

இந்தச் சாலை விபத்துகளினால் சமூகமும் பொருளாதாரமும் சந்திக்கும் இழப்பு மிகப்பெரியது.

ஆனால் இப்போதுதான் இந்திய அரசு இவ்விவகாரத்திற்கு முக்கியத்துவம் தருவதாகத் தெரிகிறது

தேசிய சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள உயர்- அதிகார ஆணையம் ஒன்று பரிந்துரைத்துள்ளது.

சாலை பாதுகாப்பு, பாதுகாப்புமிக்க சாலைகள் பாதுகாப்புமிக்க வாகனங்கள் தொடர்பான பொறுப்பு அனைத்தையும் ஒருங்கிணைக்கிற ஒரு முயற்சி இது.

மலேரியா, காசநோய், எய்ட்ஸ் இவை எல்லாமும் சேர்ந்து பலிகொள்ளும் உயிர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆதலால் இவ்விவகாரத்தை இனியாவது கண்டுகொள்வதே இந்தியாவுக்கு நல்லது.

Posted in Economy, Finance, Govt, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

June 23, 24: Eezham, Sri Lanka, LTTE, Refugees in Tamil Nadu, Batticaloa Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தமிழகத்தில் சொத்து வாங்கிய இலங்கை அகதிகளின் விவரம் திரட்டப்படுகிறது

தமிழகத்தில் நிலம், வீடு அல்லது மோட்டார் வாகனங்கள் வாங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு சேகரிக்கத் தொடங்கியிருககிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி, அகதிகள் இவ்வாறு சொத்துகள் வாங்குவது குற்றம், அனுமதிக்கப்படக்கூடாது, உண்மையான அகதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யலாம், ஆனால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார்.

ஆனால், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழக நிறுவனர் சந்திரஹாசன், இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சொத்துகளை சில நியதிகளுக்கு உட்பட்டு வாங்கமுடியும் என்கிறார்.

ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை அகதிகள் பெறுவதாகக் கூறப்படுவது தவறு என்ற அவர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் இலங்கைத் தமிழர்கள் நலனை பாதிக்கும் வகையில் தமிழக அரசு நடந்துகொள்ளாது என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கிளேமோர் தாக்குதலில் பொலிசார் 3 பேர் பலி

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியில் திங்கள் மாலை இடம்பெற்ற கிளெமோர் குண்டுத் தாக்குதலில் 3 பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மற்றுமொரு பொலிஸ்காரர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகிறார்கள்.

ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இந்தப் பொலிஸ்காரர்கள் அங்குள்ள நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றுக்கு குளிக்கச் சென்றிருந்தபோது, குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் இந்தக் குண்டு அங்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இலங்கைப் படையினரால், கடந்த ஆண்டில் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் காவலிலிருந்த சந்தேக நபரொருவர் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்

ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடமொன்றை காட்டுவதற்காக இன்று அதிகாலை கிளாலிவெட்டைக்கு இந்நபர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு விடுதலைப் புலிகளுக்கும் பொலிசாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது துப்பாக்கிச் சூட்டில் இவர் கொல்லப்பட்டதாக சமப்வம் தொடர்பாக பொலிசார் கூறுகின்றனர்.


வட இலங்கை மோதல்கள்

இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் போர்முனைப் பிரதேசங்களில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரண்கள் மீது ஞாயிறன்று மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 33 விடுதலைப் புலிகளும், 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இராணுவச் சிப்பாய் ஒருவரைக் காணவில்லை என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

இதேவேளை, வவுனியா பாலமோட்டை பகுதியில் ஞாயிறு காலை 3 முனைகளில் தமது பிரதேசத்தினுள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இந்தச் சண்டைகளின்போது 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.

இராணுவத்தினரின் 3 சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். நல்ல நிலையில் இருந்த ஒரு சடலம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இராணுவத்தினரால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 7 விடுதலைப் புலிகளின் சடலங்களை இன்று பிற்பகல் புளியங்குளம் சோதனைச்சாவடியில் விடுதலைப் புலிகளிடம் தாங்கள் கையளித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளிடம் இருந்து பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.


பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இடைக்காலத் தீர்வுக்கான ஆயத்தங்களைச் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் சர்வ மதத்தலைவர்கள் வேண்டுகோள்

இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்
இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தும் மதத்தலைவர்கள்

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை ஆராய்கின்ற சர்வகட்சிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை ஒரு இடைக்காலத் தீர்வாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சர்வமத தலைவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்தக் குழுவில் இடம்பெற்ற மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு கூறியுள்ளார்.

இலங்கையில் நடக்கின்ற மனித உரிமை மீறல்கள், கொலைகள், காணாமல் போதல்கள், குறிப்பாக வெள்ளை வான் கடத்தல்கள் போன்றவை குறித்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சர்வமதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் பொதுமக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் சிக்கி துன்பப்படுகின்ற நிலைமைகளை அறிந்து, மக்களுக்கு நிவாரணம் செய்ய வேண்டும் என்று மதத்தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரியதாகவும் மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.


Posted in Govt, India, Law, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »