Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Saravana’ Category

Saravana Bhawan Annachi Rajagopal lawsuit: Justice System & Power – Law and Order

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

நீதிக்குச் சவால்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. ஆனால், அதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, பத்திரிகைகளும் பெரிய முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீது தொடரப்பட்ட கொலை வழக்கில் அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது செஷன்ஸ் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார் சரவணபவன் அதிபர் ராஜகோபால். மேல்முறையீடு பரிசீலனையில் இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தனது தண்டனையை எதிர்த்து ராஜகோபாலனும், அவரது தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி அரசும் தொடர்ந்திருக்கும் மேல்முறையீடு மனுக்கள் மீது விசாரணை நடைபெறாமல் தள்ளிப் போடப்படுகிறது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? எந்த நீதிபதிகளிடம் இந்த முறையீடுகள் விசாரணைக்கு வந்தாலும், அவர்கள் மிரட்டப்படுவதால் நீதிபதிகள் வழக்கை விசாரிக்க முன்வருவதில்லை என்பதுதான்.

இதற்கு முன்பு நீதிபதிகள் டி. முருகேசன் மற்றும் கே.என். பாஷா ஆகியோரால் மறுக்கப்பட்டு, நீதிபதிகள் பி.டி. தினகரன், ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு மாற்றப்பட்டு அவர்களும் விசாரிக்க மறுத்துவிட்ட நிலையில், இப்போது நீதிபதிகள் டி. முருகேசன், பெரிய கருப்பையா இருவரின் நீதிமன்றத்தில் மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

மிகுந்த தயக்கத்துடன் இந்த வழக்கை விசாரிக்க முன்வந்த தங்களுக்குப் பல வழிகளில் மிரட்டல்கள் வருவதால், தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்றும், வேறு நீதிபதிகளை வைத்து விசாரித்துக் கொள்ளும்படியும் தலைமை நீதிபதிக்கு அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். “”இந்த வழக்கைச் சுதந்திரமாக விசாரிக்க முடியவில்லை. நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து என்று மிரட்டல் வரும்போது நாங்கள் எப்படிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும்? அதனால், இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை” என்று நீதிபதிகள் டி. முருகேசனும், பெரிய கருப்பையாவும் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

சுதந்திரமாக நீதிபதிகள் செயல்பட முடியவில்லை என்று நீதிபதிகளே கூறும்போது, அதில் நிச்சயமாக உண்மை இருக்கும். இதற்கு முன் இரண்டு நீதிமன்றங்கள் இதே வழக்கைத் தங்களால் விசாரிக்க இயலவில்லை என்று ஒதுங்கிக் கொண்டதற்குக் காரணம் அச்சுறுத்தல்கள்தான் என்று கருத இடமுண்டு. உயர் நீதிமன்ற நீதிபதிகளே அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று சொன்னால், அந்த அளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தமா?

உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மிரட்டல் கடிதங்களை எழுதுவது, தொலைபேசியில் அச்சுறுத்துவது என்று துணிந்து செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்குப் பணபலம் மட்டுமல்லாமல், அதிகார வர்க்கத்தின் முழுமையான ஆசியும், ஆதரவும் இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம். ஆட்சியாளர்களின் ஆதரவுடன், நீதிபதிகளை மிரட்டத் தொடங்கும் இத்தகைய போக்கு வளர்ந்தால் அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

இதுவரை பல வழக்குகளில் சாட்சிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடு காவல்துறையினரும், நீதிபதிகளும் அச்சுறுத்தப்படும் சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது நிழல் நிஜமாகிறதோ என்கிற ஐயப்பாட்டை சமீபத்திய சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

நீதிபதிகளை அச்சுறுத்தியது யார் என்பதை உடனடியாகக் கண்டறிந்து அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படாவிட்டால், இத்தகைய போக்கு நீதித்துறையை சீர்குலைத்து தமிழகத்தில் தாதாக்கள் சாம்ராஜ்யம் ஏற்பட வழிவகுத்துவிடும். ஆட்சியாளர்களின் அசட்டை அவர்களுக்கேகூட ஆபத்தாக முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தேவை, நீதிக்கும், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு!

Posted in Annachi, Bribery, Bribes, Corruption, Courts, Jeevajothi, Jeevajothy, Justice, kickbacks, Power, Restaurant, Saravana, Saravana Bhavan, Saravana Bhawan | 1 Comment »

Chennai Ranganathan Street – Infrastructure, Safety & Traffic issues due to Illegal Construction

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

விதிமுறை மீறல்கள்!

ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.

இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?

உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?

உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?

இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?

  • கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
  • உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
  • ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
  • ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்

ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.

இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.

Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »

Saravana Stores – Buy stuff & get beaten up: Intrusive surveillance

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

குமுதம் ரிப்போர்ட்டர்

சரவணா ஸ்டோர்ஸ் பயங்கரம்

ீஇங்கே  பொருள்களோடு அடி, உதையும் கிடைக்கும்

29.07.07  ஹாட் டாபிக்

தி.நகர் ரங்கநாதன் தெரு என்றாலே அங்கே திருவிழாக் கூட்டம் போல திரளும் மக்கள் நெரிசல்தான் நம் நினைவுக்கு வரும். அந்த ரங்கநாதன் தெருவில் பலதரப்பட்ட கடைகள். ‘எங்கள் கடையில் இல்லாத பொருட்களே இல்லை. எல்லாமே கிடைக்கும்’ என்று அங்குள்ள சில பிரபல கடைகள் பெரிதாக நீட்டி முழக்கும். அந்த, ‘எல்லாமே கிடைக்கும்’ என்பதில் ‘அடிஉதை’ என்பதையும் இனிமேல் சேர்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

அண்மையில் தி.நகர், ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள், இலங்கைத் தமிழர் ஒருவர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி, அவரை கை, மற்றும் முதுகுப் பகுதியில் ரத்தக் கட்டுகளை ஏற்படுத்தி, மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டனர். இந்த விவரம் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த, இதுபற்றி நாமும் விறுவிறு விசாரணையில் இறங்கினோம்.

சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் தாக்கப்பட்ட இலங்கைத் தமிழரின் பெயர் இளஞ்செழியன். கடந்த பத்தாண்டுகளாக லண்டனில் குடும்பத்துடன் வசிக்கும் இவர், ‘விடுமுறையில் சென்னைக்கு வந்த இடத்தில்தான் இப்படியரு விபரீதம்.

மருத்துவமனையில் இளஞ்செழியனை சந்தித்துப் பேசினோம். நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார் அவர்.

‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன்.

லண்டனில் கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறேன். விடுமுறையைக் கழிக்க கடந்த ஜூன் மாதம் 25_ம் தேதி மனைவி சுதர்ஷினி, மகள்கள் நளாயினி, சிந்து ஆகியோருடன் சென்னை வந்தேன். கடந்த 21_ம் தேதி (சனிக்கிழமை) மீண்டும் லண்டன் கிளம்ப ஆயத்தமானோம். விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்க 20_ம் தேதியன்று, இரவு ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ§க்குச் சென்றோம்.

குழந்தைகளுக்கு பொம்மை, துணிமணிகள் உள்பட பத்தாயிரம் ரூபாய் வரை பொருட்கள் வாங்கினோம். அப்போது என் மூன்று வயது மகள் நளாயினி கடையில் இருந்த ஒரு பந்தைக் காட்டி அதைக் கேட்டாள். அங்கிருந்த ஊழியர் என் மகள் கையில் பந்தைக் கொடுத்தார்.

அந்தப் பந்துக்கான பத்து ரூபாயைச் செலுத்தி ரசீதையும் என் மனைவி வாங்கிக் கொண்டாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கீழ்த்தளத்துக்கு வந்தோம்.

அப்போது என் மகளை நான் தூக்கி வைத்திருந்தேன். அவள் கையில் இருந்த பந்தைப் பார்த்து ஓர் ஊழியர் எங்களை வழிமறித்து ‘குழந்தையின் கையில் இருக்கும் பந்துக்குப் பணம் செலுத்தி விட்டீர்களா?’ என்று கேட்டார். என் மனைவி பணம் செலுத்தி விட்டதைக் கூறி கையில் இருந்த ரசீதையும் காட்டினாள். அப்போது திடீரென அங்கு வந்த மற்றொரு ஊழியர் என் மகளிடம் இருந்த பந்தை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்.

பந்து பறிபோனதால் என் மகள் சத்தமிட்டு அழுதாள். உடனே ‘‘ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? குழந்தையிடம் பந்தை திருப்பிக் கொடுங்கள்!’’ என்று நான் சத்தம் போட்டேன்.

மறுநிமிடம் என் பின்னால் இருந்து ஓர் ஊழியர் என்னை ‘மடேர்’ என்று தலையில் அடித்து விட்டார். நான் மகளை கீழே இறக்கி விட்டுத் திரும்ப முயன்றேன். அதற்குள் மற்றொரு ஊழியர் என்னைக் கீழே தள்ளினார். நான் எழுந்திருக்க முயல்வதற்குள் பத்துப்பேர் கும்பலாகச் சேர்ந்து என்னை நையப் புடைத்தார்கள். கையில் கிடைத்த எவர்சில்வர் பாத்திரங்களை எடுத்து என் கை, முதுகு, கழுத்து என அடிக்க ஆரம்பித்தனர். நான் தாக்கப்படுவதைப் பார்த்து என் மகள் நளாயினி பயத்தில் வாந்தியெடுத்து விட்டாள்.

என் மேல் விழுந்த அடிகளைத் தடுக்க முயன்ற என் தந்தையும், மருத்துவருமான சண்முகநாதனை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் தள்ளி விட்டனர். அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து எங்களை மீட்டனர்.

கடைக்கு வெளியே என்னை அவர்கள் அழைத்து வந்தனர். முதுகில் கடுமையான வலி இருந்ததால் சட்டையைக் கழற்றிப் பார்த்தேன். ரத்தக்கட்டுகளும், காயங்களும் இருந்தன. அதைப் பார்த்து சக வாடிக்கையாளர்கள் கொதித்துப் போய்விட்டனர். என் மனைவி ஏறத்தாழ மயக்கம் போட்டுவிழும் நிலைக்கு வந்துவிட்டாள். உடனே நான் செல்போன் மூலம் போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னேன். சற்று நேரத்தில் மாம்பலம் போலீஸார் அங்கே வந்து என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

என் காயங்களைப் பார்த்த போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அதற்குள்ளாக போலீஸாருக்கு எங்கிருந்தோ போன் வந்துவிட ‘இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இப்படியே விட்டுவிடுங்கள்’ என்று போலீஸார் என்னிடம் காம்ப்ரமைஸ் செய்ய முயன்றார்கள்.

அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ‘இனிமேல் தமிழ்நாட்டில் யாருக்கும் இப்படியரு சம்பவம் நடக்கக்கூடாது. வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கண்டிப்பாகக் கூறினேன். அதன் பிறகுதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார்கள்.

இந்தச் சம்பவம் மீடியாக்களில் வெளிவந்த பிறகு ஏராளமானோர் என்னைத் தொடர்பு கொண்டு ‘நாங்களும் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களால் இப்படி பாதிக்கப்பட்டுள்ளோம்’. ஆனால் நீங்கள்தான் தைரியமாக போலீஸ்வரை போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள்’’ என்று எனக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

பத்தாயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கும் நான், பத்து ரூபாய் கொடுத்து பந்து வாங்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் பந்து திருடுபவன் மாதிரியா இருக்கிறது? அப்படியே இருந்தாலும் எடுத்த எடுப்பில் ஒருவர் மீது கை வைக்கலாமா? லண்டனில் ஒரு போலீஸ்காரர் கூட சாதாரண ஆளை இப்படிப் போட்டு துவைத்து விட முடியாது. அப்படித் தாக்கினால் நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழும்’’ என்றார் அவர் வேதனையுடன்.

இளஞ்செழியன் அளித்த புகாரைத் தொடர்ந்து அவரைத் தாக்கியதாக கடை மேலாளர் லிங்கராஜன், ஊழியர்கள் வைகுண்ட பெருமாள், மூர்த்தி, சிவக்குமார், பாலமுருகன், ஜெகன், தம்பிராஜ் என்ற ஏழு பேரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சரவணா ஸ்டோர் சம்பவம் பற்றி சென்னையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவரிடம் பேசினோம். பெயர், விவரம் வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பேசிய அவர், ‘தி.நகரில் உள்ள ஒரு சில கடைகளில் இது போன்ற அடிஉதை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்தக் கடைகளுக்கு வரும் எல்லோரையும் தராதரம் இல்லாமல், திருடர்களாகவே பார்க்கிறார்கள். பெண் வாடிக்கையாளர்கள் மீது சந்தேகம் வந்தால் அவர்களை சோதனை போடவேண்டும் என்று ஆண் ஊழியர்கள் மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன.

பெரிய கடைகளில் பொருட்கள் திருட்டுப் போவதைத் தடுக்க நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. ஆனால் அவற்றின் விலை அதிகம் என்பதால் இந்த மாதிரி கடைகள் வாங்குவதில்லை.

‘மாம்பலம் காவல் நிலையமும் இதைக் கண்டுகொள்வதே இல்லை. இந்த காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு மாதச் சம்பளத்தைவிட பலமடங்கு அதிக பணம் மாமூலாகக் கடைகளில் இருந்து கிடைத்து விடுகிறது. அதோடு விசேஷ நாட்கள் வந்தால் வீட்டுக்குத் தேவையான இனிப்பு, டிரஸ் எல்லாம் இலவசமாகக் கிடைத்துவிடுகிறது. அப்புறம் அவர்கள் ஏன் கடைக்காரர்களைத் தட்டிக்கேட்கப் போகிறார்கள்?

இப்படிப்பட்ட சில போலீஸாரின் துணை இருப்பதால்தான் கடை ஊழியர்கள் தெனாவெட்டாக நடந்து கொள்கிறார்கள். பூனைக்கு மணி கட்டும் வேலையை லண்டனில் இருந்து வந்த ஓர் இலங்கைத் தமிழர் செய்துள்ளார். இனியாவது இந்த அத்துமீறல்களுக்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டும்’’ என்றார்.

இளஞ்செழியன் விவகாரம் பற்றி தி.நகர் துணை ஆணையர் லட்சுமியிடம் கேட்டோம்.

‘‘நடந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி ஏழு பேரைக் கைது செய்துள்ளோம். தி.நகர் கடைகளுக்கு போலீஸார் ஆதரவாகச் செயல்படுவதாக இனி புகாரே வராது. அதன் ஆரம்பமாகத்தான் இளஞ்செழியனைத் தாக்கியவர்களைக் கைது செய்திருக்கிறோம்’’ என்றார் அவர்.

சரவணா ஸ்டோர் தரப்பிடம் பேச முயன்றோம். அவர்கள் சர்வ மௌனமாகி விட்டார்கள். நம்மிடம் எதுவும் பேச முன்வரவில்லை.

‘எங்கள் கடையில் எல்லாம் கிடைக்கும்’ என்பதற்கு அடி உதைகளும் உண்டு என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.

படங்கள்: ஞானமணி.
– வே. வெற்றிவேல்

Posted in Annaachi, Annachi, Chennai, Kumudam, Kumudham, Law, Madras, Maligai, Malikai, Mambalam, Order, Ranaganathan, Ranaganathan st, Ranaganathan street, Ranganathan street, Renaganathan, Renganathan street, Reporter, Saravana, Saravana Stores, SNEHA, Surveillance, T nagar, TNagar | Leave a Comment »

Saravana Bhawan Rajagopal Annachi vs Jeevajothi saga – Details, History

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

IdlyVadai – இட்லிவடை: ஜீவஜோதி, அண்ணாச்சி ப

சற்றுமுன்…: ஓட்டல் அதிபர் ராஜகோ�: ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு: ஜீவஜோதி கடத்தல் வழக்கு

நாகப்பட்டினம், ஜூலை 7: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்காக ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் நாகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கணவரை இழந்த ஜீவஜோதி, நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 7.7.2003 -ம் தேதி ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் தேத்தாகுடிக்கு வந்து சாந்தகுமார் கொலை வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு ஜீவஜோதியை வற்புறுத்தியுள்ளனர்.

ஜீவஜோதி மறுத்ததால் அவரை கடத்திச் செல்ல முயற்சித்தனர். தடுக்க முற்பட்ட கிராம மக்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதுடன் தாக்குதலிலும் ஈடுபட்டனர். தன்னை கடத்திச் சென்று கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் மனு அளித்தார். கொலைமுயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. நீதிபதி தங்கராஜ் இந்த வழக்கை கொலைமுயற்சி பிரிவுக்குப் பதிலாக கொலை மிரட்டல் பிரிவாக மாற்றி விசாரணை மேற்கொண்டார்.

இதனை அரசு தரப்பில் ஆட்சேபித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொலைமுயற்சி பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் இந்த வழக்கு கடந்த ஏப். 27 -ம் தேதி நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, நீதிபதி ரவீந்திரன் உத்தரவின் பேரில் இந்த வழக்கை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சேதுமாதவன் விசாரித்து வருகிறார்.

வரும் 23 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதாகவும் அன்றைய தினத்தில் இருந்து சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் நீதிபதி சேதுமாதவன் அறிவித்தார்.

தினமணி

————————————————————————————————————

ஓட்டல் அதிபர் ராஜகோபால் மீதானகொலை முயற்சி வழக்கில் ஜீவஜோதி `திடீர்’ பல்டி

நாகை, ஜுலை.24-

நாகை மாவட்டம் வேதாரண்யம் தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இந்தநிலையில் ராஜகோபால் உள்பட 6 பேர் கடந்த 15.7.2003-ம் தேதியன்று தேத்தாகுடியில் தங்கியிருந்த தன்னை கொலை செய்ய முயன்றதாக வேதாரண்யம் போலீசில் அவர் புகார் செய்தார்.

இதன்பேரில் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு 2005-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் நடந்தபோது அப்போதைய மாஜிஸ்திரேட்டு கொலை முயற்சி வழக்கிற்கு பதிலாக கொலை மிரட்டல் வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக் கப்பட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கொலை முயற்சி வழக்காக நடத்த வேண்டும் என்றும், வேறு கோர்ட்டில் விசாரிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு நாகை முதன்மை குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கடந்த 6-ந்தேதி முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜகோபால் உள்பட 6 பேர் மீதும் 7 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஜுலை 23-ந்தேதி 1 முதல் 10 வரையிலான சாட்சிகள் விசாரணை நடக்கும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ராஜகோபால் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜராயினர்.

இதேபோல் சாட்சிகளான ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தம்பி ராம்குமார் தந்தை ராமசாமி மற்றும் கோபால்சாமி, தஞ்சை போலீசார் பாலாஜி, மதிவாணன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் ஜீவஜோதியின் மாமா தசமணி ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் தசமணிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

ஜீவஜோதி 9 மாத கர்ப்பிணி யாக உள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தார். அப்போது சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தினத்தன்று என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. நாகை மாவட்டத்தில் எந்த போலீஸ் நிலையத்திலும் ராஜகோபால் குறித்து புகார் கொடுக்கவில்லை.

புகார் மனுவில் உள்ள கையெழுத்து என்னுடையது தான். ஆனால் அதில் எழுதி உள்ள வாசகங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என கூறினார்.

மேலும் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய ஜீவஜோதி இந்த வழக்கு குறித்து நாங்கள் சமரசமாக பேசி தீர்வு கண்டு கொள்கிறோம் என கூறி மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தார்.

ஆனால் சாட்சி விசாரணை அன்று இதுபோல் மனுதாக்கல் செய்யக்கூடாது எனக்கூறிய மாஜிஸ்திரேட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல் ஜீவஜோதி தம்பி ராம்குமார், தந்தை ராமசாமி உள்பட அனைவரும் ராஜகோபாலுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற சாட்சிகள் விசாரணை இன்று நடக்கிறது.

—————————————————————————————————

ஜீவஜோதி கடத்தல் வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் விடுவிப்பு

நாகப்பட்டினம், ஆக. 1: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை, சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்குமாறு, வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடியில் தங்கியிருந்த ஜீவஜோதியின் வீட்டுக்கு ராஜகோபால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் வந்து வற்புறுத்தினர். ஜீவஜோதி மறுக்கவே அவரை கடத்த முயற்சித்தனராம்.

இது தொடர்பாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளித்தார். இதன்பேரில் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், வழக்கறிஞர் ஜி. ராஜேந்திரன், கணேசன் (எ) சகாதேவன், சுப்ரமணியன், கார்த்தீசன், ஸ்ரீநிகநாஜன் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாகை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி சேதுமாதவன் தனது தீர்ப்பில், “புகார் கூறிய ஜீவஜோதி மற்றும் அரசுத் தரப்பில் காவல் துறையைத் தவிர அனைத்து சாட்சியங்களும் பிறழ் சாட்சியமளித்ததால் குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாகத் தெரிவித்தார்.

Posted in Annaachi, Annachi, Backgrounders, Biosketch, case, Chain, Developments, Eatery, Faces, Franchise, Franchisee, History, Hotel, Inn, Issues, Jeevajothi, Jeevajothy, Jivajothi, Jivajothy, Judge, Justice, Law, Lawsuit, Order, people, Price, Raajagopal, Rajagopal, Restaurant, Rich, Santhakumar, Saravana, Saravana Bhavan, Saravana Bhawan, Society, Stuff, TN | Leave a Comment »