Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Technology’ Category

Raman Raja: Science & Technology – New Inventions and Innovations: Research and Developments for Practical use

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

நெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை!

ராமன் ராஜா – தினமணிக் கதிர்

2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:

* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்!

* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது? இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும்! கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.

ஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)

* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.

* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்!

* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.

* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்!

ஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ?

* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.

*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான்! நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.

இந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.

ஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.

இப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.

Posted in Audio, Buildings, Chicago, Civil, computers, Computing, Conservation, Construction, Design, designers, Development, DSP, Electricity, energy, Environment, Find, Fuels, Hardware, Hitech, Innovations, Invent, Invention, M$, Microsoft, MP3, MS, music, Nano, Nanotech, Nanotechnology, Natural, Palm, Plastics, Pollution, Power, R&D, Recycle, Research, RnD, Science, Solar, Songs, structures, Surface, Tall, Tech, Technology, Touch, Touchscreen | Leave a Comment »

Backward Region Grant Fund: Appraisal of Panchayat Raj by Mani shankar Iyer – Failure of local governments

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

மக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி?

க. பழனித்துரை

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

பணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.

வாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை,

  • திருவண்ணாமலை,
  • கடலூர்,
  • விழுப்புரம்,
  • திண்டுக்கல்,
  • நாகப்பட்டினம்,
  • சிவகங்கை

ஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.
வட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இப்படி மத்திய அரசு தரும் நிதியை,

  • பஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,
  • இந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,
  • பாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,
  • புதிய கட்டடம் கட்டுதல்,
  • பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,
  • விளையாட்டு மேம்பாட்டிற்கு வசதிகள்,
  • கழிப்பறை,
  • சுற்றுச்சுவர்,
  • மேஜை, நாற்காலி வாங்குதல்
  • மதிய உணவு சமையலறைக் கட்டடம்

உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.
மத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.

இந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.

பின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.

கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.

ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.

அரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.

ஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.

இந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.

மாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.

—————————————————————————————————————————————————

ஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன?

 எம். ரமேஷ்

ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.
இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.
அந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.
10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.
இலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.
இதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.
தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.
மாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.
2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.
22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.
அனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.
தமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.
இதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.
அதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.
முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.

ஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.

எம். ரமேஷ்

Posted in 5, Administration, ADMK, Allocation, Appraisal, backward, Biz, BPO, Budget, Buildings, Caste, Census, Center, City, Community, Computer, Control, Council, Development, DMK, Economy, Education, Expenses, Exports, family, Finance, Fund, GDP, Governments, Govt, Grant, Growth, Homes, Housing, Hygiene, Improvements, Inaction, Income, Info, InfoTech, infrastructure, investments, IT, ITIS, JJ, Kalainjar, Karunanidhi, Kids, KK, local, Mani, Mani shankar, ManiShankar, Measures, Metrics, Money, NGO, Outsourcing, Panchayat, Panchayat Raj, Panchayath, parliament, Planning, Plans, Play, Playgrounds, Policy, Poor, Population, Progress, Refer, Reference, Region, Residences, Resources, Restrooms, Rich, Rural, Sanitary, Schools, Sector, Services, Software, Spend, Spending, Sports, Stalin, State, Statistics, Statz, Students, TamilNadu, Teach, Teachers, Technology, Telecom, TN, Toilets, Villages, Zones | Leave a Comment »

Longest-Lived Animal Found — Clam, 405

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

நானூறு வயதான சிப்பி

மிங் எனப் பெயரிடப்பட்டுள்ள சிப்பி
மிங் எனப் பெயரிடப்பட்டுள்ள சிப்பி

சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இந்த கடற்சிப்பிக்கு விஞ்ஞானிகள் ‘மிங்’ பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது, 1602 ஆம் ஆண்டு இந்த சிப்பி கடலில் பிறந்த போது, சீனாவில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையின் பெயரை விஞ்ஞானிகள் இந்த சிப்பிக்கு சூட்டியிருக்கிறார்கள்.

இந்த சிப்பி பிறந்தபோது இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் பேரரசி ஆட்சி செய்துகொண்டிருந்தார். இலக்கியவாதியான ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். இந்த சிப்பி பிறந்து 40 ஆண்டுகள் கழித்து தான் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பிறந்தார்.

இப்படி உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை தனது வாழ்நாளில் கண்ட இந்த அதிசய சிப்பி, சுமார் எட்டரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஓட்டிற்குள் முடங்கியிருந்தது. இந்த சின்னஞ்சிறிய ஓட்டில் இருக்கும் வளையங்களை வைத்து இதன் வயது கணக்கிடப்பட்டிருப்பதாக கூறுகிறார் கடலியல் பேராசிரியர் கிரிஸ் ரிச்சர்ட்சன்.

சிப்பியின் ஓட்டின் மேலிருக்கும் இந்த வருடாந்த வளையங்கள், இதன் வளர்ச்சி பற்றியும், அதற்கு கடலில் கிடைத்த உணவு, கடல் சார் தட்ப வெப்பம் ஆகியவை எப்படி இதன் வளர்ச்சியை பாதித்தது என்பது பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கிறது.

கடலின் கடந்த கால தட்ப வெப்பத்தை மட்டுமல்லாமல், விலங்குகள் நீண்ட காலம் உயிர் வாழ்வது குறித்த ஆராய்ச்சிக்கும் இந்த சிப்பிகள் பயன்படும் என்கிறார் ரிச்சர்ட்சன்.

405 ஆண்டுகள் ஆழ்கடலில் அமைதியாக உயிர்வாழ்ந்த இந்த கடற்சிப்பி, கடந்த வாரம் கடலை விட்டு வெளியில் எடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞானக்கூடத்தில் உயிர்விட்டது.

Posted in 405, ageing, Animal, Arctica islandica, Atlantic, Clam, Discover, Discovery, Eat, Fish, Food, Iceland, Live, Longest, Longevity, Ming, mollusk, News, Ocean, quahog, quahog clam, Research, Science, Scientific, Sea, seabed, Seafood, Shells, Tech, Technology, Water | Leave a Comment »

The Future of Public Sector Undertaking – Govt, Private Organizations & Management

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்காலம்

எஸ். கோபாலகிருஷ்ணன்
(முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

உணர்வுபூர்வமாக பொதுத்துறை நிறுவனங்களை உயர்த்திப் பிடித்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது, நிறுவனங்களின் செயல்பாடு, திறன், லாப – நஷ்டக் கணக்கு ஆகிய அம்சங்களைப் பொருத்துதான், அவற்றின் பயன்பாடு மதிப்பிடப்படுகிறது.

1931-ம் ஆண்டில் – இந்திய தேசிய காங்கிரஸின் கராச்சி மாநாடு ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது. “”பொதுத்துறை மூலமே, இந்தியா தொழில் வளம் பெற்றிட இயலும்” என்பதே அது.

இதற்கேற்ப, நாடு சுதந்திரம் அடைந்தபோது, தொழில் வளர்ச்சியிலும் அறிவியல், தொழில் நுட்பத்திலும் மிகவும் பின்தங்கியிருந்தது. தொழில், விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தேவையான சாதனங்களையும், தளவாடங்களையும் தயாரிக்க நம் நாட்டில் தொழிற்சாலைகள் அப்போது இல்லை. தனியாரிடம் அத்தகைய தொழில் கூடங்களை அமைப்பதற்கான முதலீடோ, அனுபவமோ இல்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, அரசுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார்.

கனரக இயந்திரங்கள் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண பொருள்கள்வரை, அனைத்தும் தட்டுப்பாடில்லாமல் நியாயமான விலைக்குக் கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

1951-ல் 5 நிறுவனங்களே பொதுத்துறையில் இருந்தன. முதலீடு ரூ. 29 கோடி. 1961-ல் 48 நிறுவனங்களாகவும், 1971-ல் 100 ஆகவும் 1983-ல் 209 ஆகவும் இவை வளர்ந்தன. இப்போது கிட்டத்தட்ட 250 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு சுமார் ரூ. 3 லட்சம் கோடி.

இந்நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சியும் கணிசமான அளவு வேலைவாய்ப்புகளும் பெருகின. 1970-களில் 27 சதவிகித வேலைவாய்ப்புகளும் 1980களில் 37 சதவிகித மேலைவாய்ப்புகளும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைத்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றோருக்கும் வேலைவாய்ப்பு அளித்து சமூக நீதி காப்பதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முன்னிலை வகித்தன.

இறக்குமதிப் பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், சுமார் 250 நிறுவனங்களில் 125 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன. மற்றவை நஷ்டத்தில் இயங்குகின்றன. இத்துறையில் அரசு செய்துள்ள மிகப்பெரிய முதலீட்டுத் தொகையிலிருந்து வெறும் 3.5 சதவிகித லாபம்தான் கிடைக்கிறது.

திறமையின்மை, மெத்தனப்போக்கு, ஊழல், ஊதாரித்தனம், தேவையற்ற தாமதம் ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களின் அடையாளங்களாக அமைந்துவிட்டன. பல நிறுவனங்கள் 75 சதவிகித உற்பத்தித் திறனுடன்தான் இயங்குகின்றன.

இவை போதாதென்று, அரசு அதிகாரிகளின் கெடுபிடி, அரசியல்வாதிகளின் தேவையற்ற குறுக்கீடுகள், உள்ளூர்ப் புள்ளிகளின் தலையீடு ஆகியவையும் பொதுத்துறை நிறுவனங்களின் செம்மையான செயல்பாட்டுக்குக் குந்தகமாக உள்ளன.

இவற்றையெல்லாம்மீறி மிகச்சில நிறுவனங்கள் திறம்படச் செயல்பட்டு “நவரத்தினங்களாக’ மிளிருகின்றன. ஆனால் அவை அனேகமாக ஏகபோக நிறுவனங்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

“”பவர் கிரிட் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா” (டர்ஜ்ங்ழ் எழ்ண்க் இர்ழ்ல்ர்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஐய்க்ண்ஹ) என்னும் நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகள், சில தினங்களுக்கு முன், பொதுச் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டன. இந்தப் பங்குகளை வாங்குவதற்கு, பங்குகளின் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் போல் 64 மடங்கு அதிகமாக தொகை வந்து குவிந்தது.

இதில் சரித்திரம் படைத்த விஷயம், இதுவரை வேறு எந்த இந்திய பங்குகளின் விற்பனைக்கும் இல்லாத அளவு வெளிநாடுகளிலிருந்து வந்து குவிந்த தொகைதான்! அதாவது 30 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் நூறு கோடி) இத்தனைக்கும் இந்த நிறுவனம் ஒரு முழு “”நவரத்தினம்” அல்ல; “”மினி நவரத்தினம்”தான்.

இந்நிறுவனத்தின் 14 சதவிகித பங்குகளின் விற்பனை மூலம் மத்திய அரசு கஜானாவுக்கு ரூ. 994.81 கோடி கிடைத்துள்ளது. இது இந்த நிறுவனத்தின் உள்ளார்ந்த வலுவைக் காட்டுகிறது.

பொதுத்துறை நிறுவனங்கள் திறம்படச் செயல்பட வேண்டுமெனில், சில வணிகரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்திப் பொருள்களை மாற்றி அமைத்தல்; உற்பத்தி முறைகளை நவீனமயமாக்குதல்; தாமதங்களைத் தவிர்த்து பணவிரயத்தைக் குறைத்தல்; தேவைக்கு அதிகமான மூலப்பொருள்களை இருப்பில் வைத்து கோடிக்கணக்கான பணத்தை முடக்குவதைத் தவிர்த்தல்; தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகம் செய்தல்; ஊழியர்களின் ஊதியத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்துகையில், கூடவே உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்கு வழிவகை காணுதல்; ஊழல் மற்றும் நிதி விரயத்தைக் களைவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட செயல்திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் கொண்டுவர வேண்டும்.

நிறுவனங்களின் தலைவர்களாக, சாதனை வேட்கை கொண்ட துடிப்பான நிர்வாகிகளையே நியமிக்க வேண்டும். அவர்கள் எம்.பி.ஏ. போன்ற மேலாண்மை படிப்பும் பயிற்சியும் கொண்டவர்களாக இருப்பது பொருத்தமாக இருக்கும்.

பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பணிஓய்வு பெற்ற பின், உடனுக்குடன் புதிய தலைவர்களை நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்தும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சிறப்பான சாதனைகளுக்கு பதவிஉயர்வு போன்ற ஊக்குவிப்பு; தோல்விக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்பு ( அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) என்ற நியதி, மூத்த நிர்வாகிகளுக்கும், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது தனியார் துறையில் மூத்த நிர்வாகிகளின் சம்பளங்கள் உச்சத்தில் உள்ளன. அந்த அளவுக்கு அரசுத்துறையில் கொடுக்க முடியாது எனினும், தகுதிமிக்க நிர்வாகிகளுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதில் சற்று தாராளம் காட்டலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அரசின் தேவையற்ற குறுக்கீடுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமற்ற குறுக்கீடுகளுக்கு அண்மைக்கால உதாரணம் – பி.எஸ்.என்.எல். நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். அதற்கு முன்பு ஓ.என்.ஜி.சி.யில் நிகழ்ந்ததையும் குறிப்பிடலாம்.

என்ன செய்தாலும், சில பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைக்க இயலாது. நஷ்டத்தையும் தவிர்க்க முடியாது. அவற்றால் எந்த பொதுநன்மையும் ஏற்படாது என்ற நிலையிருந்தால், அவற்றை மூடுவதில் தவறில்லை. அதேசமயம் லாபத்தில் இயங்கும் சிறப்பான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.

கடந்த ஜூலை மாதம், பிரதமர் மன்மோகன் சிங், ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுய அதிகாரம் வழங்கி, அவை சிறப்பாகச் செயல்பட வழி செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். பிரதமரின் இந்த யோசனை பரவலாக வரவேற்கப்பட்டது. ஆனால், பிரதமர் அவ்விதம் கூறி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில், இந்த இலக்கில், மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாடு வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

Posted in acquisition, Assets, Balance, Commerce, Compensation, Consultant, Contractors, Corporations, Corruption, Economy, employees, Employment, Fulltime, GDP, Govt, Growth, Hire, Industry, Investment, Jobs, kickbacks, Lethargy, Loss, Machinery, Management, markets, ONGC, Organizations, Permanent, Power, Private, Productivity, Profits, PSU, PSUs, Public, Reservation, rights, Science, Shares, Society, Stocks, Tamil, Tech, Technology, Undertaking | Leave a Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

INTEL to provide internet based content for 1800 HS Schools

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

தமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி, மருத்துவ வசதி

தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் இணைய தள வசதி மற்றும் மருத்துவத் திட்டங்களுக்கு இன்டெல் நிறுவனத்தின் தலைவர் கிரையக் ஆர்.பேர்ரைட்டு டன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி. உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

சென்னை, செப். 4:தமிழகத்தில் இணையதளம் மூலம் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்க இன்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்நிறுவனத் தலைவர் கிரெய்க் ஆர் பாரெட் தெரிவித்தார்.

சென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை திங்கள்கிழமை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

தமிழகத்தில் உள்ள 1,800 அரசு பள்ளிகளில் இணையதளம் மூலமான கல்வி வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவதோடு, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும் மேம்படும்.

முதல் கட்டமாக கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு நகரங்களில் உள்ள 50 பள்ளிகளுக்கு இணையதள வசதியை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, இன்டெல் நிறுவனம் 500 கம்ப்யூட்டர்களை அரசு பள்ளிகளுக்கு இலவசமாக அளிக்கவும் முன்வந்துள்ளது என்றார் கிரெய்க்.

முதல்வருடனான சந்திப்பு குறித்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசும், இன்டெல் நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் இணையதள இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. பின்னர் படிப்படியாக அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இன்டர்நெட் மூலமான இணைப்பை விரிவுபடுத்தி, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஆண்டுதோறும் 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்டெல் நிறுவனம் பயிற்சியளிக்கும். அத்துடன் டிடிஇஎஸ் திட்டத்தின் கீழ் கூடுதலாக 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

டெலிமெடிசின் திட்டத்தின் ஒரு கட்டமாக இன்டெல் நிறுவனம் திண்டிவனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சோதனை அடிப்படையில் உருவாக்கி குறைந்த கட்டணத்தில் செயல்படுத்த உள்ளது. இருதய சிகிச்சை மற்றும் பார்வை சார்ந்த நோய்களுக்கு இம்மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வசிக்கும் 2.85 லட்சம் மக்கள் மருத்துவ வசதி பெறுவர்.

முதல்வருடனான சந்திப்பின்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

Posted in content, HS Schools, Intel, Internet, Net, School, sites, Students, Technology, Web, Website, Websites, www | Leave a Comment »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

Titanium dioxide, titanium(IV) oxide or titania – Seashore Wealth

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

டாட்டா டைட்டானியம்

Thinnai – Tata, Sathankulam, Titanium Di Oxide Project: “நேற்று அரேபியா! இன்று தேரிக் காடு!! அசுரன், இரா.இரமேஷ், கு.காமராஜ்”

1. “Titanium – How it is made?” http://www.madehow.com/Volume-7/Titanium.html

2. “Titanium”, 2005 Minerals Yearbook, United States Geological Survey http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/titanium/

3. “Mineral Sands – Fact Sheet 10” www.doir.wa.gov.au/documents/gswa/GSD_Fact_Sheet_10.CV.pdf

4. ” Advancing Development of Kwale Project in Kenya” TIOMIN Resources Inc., June 2006 www.tiomin.com/i/pdf/Tiomin_Facts_Sheet.pdf

5. “Zircon Development in Coburn Mine, Western Australia” www.gunson.com.au/files/reports/ABN%20AMRO30.1.06.pdf

6. ” THE NEW MINERAL SANDS PLANT OF THE 3rd MILLENNIUM… HOW DIFFICULT-TO-TREAT FEEDSTOCKS CAN GET A NEW LEASE ON LIFE” J.M. ELDER, and W.S. KOW Outokumpu Technology Inc, Jacksonville, FL, www.outotec.com/28719.epibrw

7. “TITANIUM TETRACHLORIDE PRODUCTION BY THE CHLORIDE ILMENITE PROCESS”, Office of Solid Waste U.S. Environmental Protection Agency http://www.epa.gov/epaoswer/other/mining/minedock/tio2/

8. “Titanium Di Oxide”, www.tidco.com/images%5CTITANIUM%20DIOXIDE.doc

9. ” Project Profile on Titanium Tetrachloride / Titanium Dioxide ” – Mott MacDonald http://www.vibrantgujarat.com/project_profile/chemicals_petrochemicals_pharmaceuticals/chemicals-petrochemicals/titanium-dioxide23.pdf

10. “Opportunities in the Electrowinning of Molten Titanium from Titanium Dioxide” http://doc.tms.org/ezMerchant/prodtms.nsf/ProductLookupItemID/JOM-0510-53/$FILE/JOM-0510-53F.pdf?OpenElement

11. http://webmineral.com/data/

12. http://blonnet.com/2002/11/24/stories/2002112401310200.htm

கடற்கரையில் டைட்டானியப் புதையல்!

சிங்கநெஞ்சன்

1791ஆம் ஆண்டு~இங்கிலாந்தில் வில்லியம் க்ரீகர் எனும் புவி அறிவியல் ஆர்வலர், ஆற்றோரம் படிந்திருந்த மணலில் கறுப்பு நிற மணலை மட்டும் பிரித்து ஆராய்ந்தார். காந்தத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட அந்த கறுப்பு மணலில் இரும்பு ஆக்ûஸடு மட்டுமல்லாமல் வேறொரு உலோக ஆக்ûஸடும் சேர்ந்திருந்தது. அதுவரை அறியப்பட்ட உலோகங்களிலிருந்து அந்த உலோகம் வேறுபட்டிருந்தது – அதுதான் டைட்டானியம். அந்த கறுப்பு மணலின் பெயர் இல்மனைட்.

ஆனால் அதற்கு டைட்டானியம் என்று பெயர் வைத்தவர் மார்ட்டின் க்ளாப்ராத் எனும் ஜெர்மானிய வேதியியல் அறிஞர். 1795-ல் இவர் ரூட்டைல் எனும் மற்றொரு கனிமத்திலிருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுத்தார். டைட்டன் என்ற சொல்லுக்கு “வலிமையானவன்’ என்னும் பொருள் உண்டு.

டைட்டானியம் ஓர் உலோகத் தனிமம். இயற்கையில் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் சேர்மமாகக் கிடைக்கிறது. பூமியின் மேற்பகுதியில் அதிக அளவில் உள்ள தனிமங்கள் என்று பார்த்தால் டைட்டானியத்திற்கு 9-வது இடம். பெரும்பாலான தீப்பாறைகளிலும் சில வகை உருமாற்றுப் பாறைகளிலும், இப்பாறைகள் சிதைந்து அதன் விளைவாக உருவான படிவுப்பாறைகளிலும் டைட்டானியம் சிறிதளவு உள்ளது.

இந்த உலோகம் அலுமினியத்தைப்போல் இலேசானது. ஆனால் எஃகுவைப்போல் உறுதியானது. அதிக வெப்பம், வேதியியல் அரிமானங்களைத் தாங்கக்கூடியது.

இத்தனை சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த டைட்டானியம் உலோகத் தனிமத்தை டைட்டானியம் – டை – ஆக்ûஸடு எனும் அதன் சேர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சி வணிக ரீதியில் வெற்றி பெற்றது 1946}ல் தான். அதன்பிறகும் கூட டைட்டானியத்தின் உபயோகங்கள் முழுமையாக உணரப்படவில்லை.

1950-களிலும் 1960-களிலும் நடந்து கொண்டிருந்த பனிப்போரின்போது அன்றைய சோவியத் யூனியன், டைட்டானியத்தை போர் விமானங்களிலும் மற்றைய போர் தளவாடங்களிலும் பயன்படுத்தத் தொடங்கியது. அதன்பின்னரே டைட்டானியத்தின் போர்க்கால முக்கியத்துவம் முழுமையாக உணரப்பட்டது.

டைட்டானியம் கலந்த எஃகு தற்போது உயர் தொழில்நுட்ப விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், விண்வெளி ஓடங்கள், மருத்துவ அறுவை சிகிச்சைக் கருவிகள், மின் சாதனங்கள் மற்றும் பல உயர் தொழில் நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் உள்ளதால் கடல் நீரைக் குடிநீராக மாற்றப் பயன்படுத்தப்படும் சாதனங்களிலும் இந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது.

டைட்டானியம் டை ஆக்ûஸடு பெரும்பாலும் பெயின்ட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறத்தில் மாவுபோல் இருக்கும் டைட்டானியம் டை ஆக்ûஸடு நிறமியிலிருந்து தயாரிக்கப்படும் வர்ணப்பூச்சுகள் தரமானவை. சிறந்த ஒளிர்தன்மை, நிறைந்த உழைக்கும் திறம், தூய வெண்மை நிறம், ஒளியை உள்ளே புகவிடா தன்மை இவையெல்லாம் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு நிறமிக்கு உரித்தானவை.

சாதாரண ஈய வர்ணப் பூச்சுகளிலுள்ள நச்சுத்தன்மை டைட்டானியம் டை ஆக்ûஸடு பூச்சுகளில் இல்லை. இந்த நிறமிகள் ரப்பர் தொழில், பிளாஸ்டிக் தொழில், தோல் மற்றும் துணி உற்பத்தி, அழகு சாதனத் தயாரிப்பு மற்றும் காகித ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பற்பசைகளிலும் டைட்டானியம் – டை – ஆக்ûஸடு பயன்படுகிறது.

இல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள். ரஷியாவின் “இல்மன்’ மலை மற்றும் ஏரிப் பகுதிகளில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் கனிமத்திற்கு “இல்மனைட்’ என்று பெயரிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் கிடைக்கும் இல்மனைட் கருமணலில் 55 சதவிகிதம் டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.

“ரூட்டைல்’ எனும் கனிமத்தில் 92 சதவிகிதம் முதல் 96 சதவிகிதம் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது.

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாகிய பாறைகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வெப்பத்தில் விரிந்தும் குளிரில் சுருங்கியும் சிறிது சிறிதாகச் சிதைவுறத் தொடங்குகின்றன. இந்தச் சிதைவுறுதலின்போது பாறைகளில் உள்ள கனிமங்கள் உதிர்கின்றன. இவ்வாறு உதிர்ந்த கனிமத்துகள்கள் மழைநீரால் அரிக்கப்பட்டு சிற்றோடைகள் வழியே ஆறுகளை அடைகின்றன. ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரப்படும் இக் கனிமங்கள் ஓரளவிற்கு ஆற்றங்கரைகளிலும் ஆற்றுப்படுகைகளிலும் வண்டல்களாகப் படிகின்றன. கணிசமான அளவு கனிமங்கள் கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடிப்பகுதியில் பல மீட்டர்கள் கனத்திற்குப் படிவங்களாகப் படிந்து போகின்றன.

கடற்கரையை ஒட்டியுள்ள கடலின் அடியில் படிந்த இப் படிவங்களில் உள்ள இல்மனைட், ரூட்டைல் போன்றவை அவைகளுடன் சேர்ந்து படிந்துள்ள குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்ற கனிமங்களை விட அடர்த்தி அதிகமானவை. எனவே இவை அடர் கனிமங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

கரையோரமுள்ள கடலின் கீழ் படிந்த மணலும், கடற்கரையோரமுள்ள மணலும் அலைகளில் சிக்கி முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படும்போது அடர்த்தி மிகுந்த இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்ற கனிமங்கள் கரையோரம் படிந்து அளவில் மிகுகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் பல லட்சக்கணக்கான டன்கள் அளவிற்கு இக் கனிமங்கள் சேர்ந்து விடுகின்றன.

இதுபோன்று உருவாகும் படிவங்களை புவி அறிவியல் வல்லுநர்கள் ஒதுங்கு படிவங்கள் (ப்ளேசர் டெபாசிட்) என்று அழைக்கிறார்கள். தாய்ப்பாறைகளில் ஒரு சதவிகிதம் அளவிற்கே இருக்கும் இந்த அடர் கனிமங்கள் ஒதுங்கு படிவங்களில் 30 முதல் 35 சதவிகிதம் வரை இருப்பது இயற்கையின் விளையாட்டால் ஏற்பட்ட இனிய விளைவே ஆகும்.

இந்த ஒதுங்கு படிவங்கள் தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமல்லாது, கடற்கரையை ஒட்டியுள்ள தேரி மணற்திட்டுப் பகுதிகளிலும் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இல்மனைட் மற்றும் ரூட்டைல் அடர் கனிமங்கள் கிடைக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. கேரளம், ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரக் கடற்கரைப் பகுதிகளிலும் ஒதுங்கு படிவங்கள் உள்ளன.

இந்தப் படிவங்கள் குறித்து பூர்வாங்க ஆய்வுகளை இந்திய புவி அறிவியல் ஆய்வுத்துறையினர் (ஜி.எஸ்.ஐ.) மேற்கொண்டனர். தொடர்ந்து மத்திய அணுக் கனிம ஆய்வு இயக்ககம் விரிவான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வு இந்தியக் கடற்கரையில் சுமார் 2,400 கி.மீ. நீளத்திற்கு நடத்தப்பட்டது.

தென் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9 மீட்டர் ஆழம்வரை இந்தக் கனிமங்கள் உள்ளதாக அணுக் கனிம இயக்கக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலில் சுமார் 13 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை அடர் கனிமங்கள் உள்ளன. அணுசக்தித் துறையில் பயன்படும் தோரியம் அடங்கியுள்ள மானோசைட், தொழில்துறைகளில் பயன்படும் கார்னெட், சில்லிமினைட் மற்றும் ஜிர்க்கான் கனிம மணல்களும் இப் பகுதிகளில் கிடைக்கின்றன.

தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சுமார் 9.8 கோடி டன் இல்மனைட்டும் சுமார் 0.5 கோடி டன் ரூட்டைலும் உள்ளதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன. இவை இயற்கை அன்னை நமக்கு அளித்துள்ள பெருங்கொடை. அந்த இயற்கை அன்னைக்கு ஊறு விளைவிக்காமல், இயற்கைச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் இந்த அரிய செல்வத்தை அதற்கென வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி அளவோடு எடுத்துப் பயன்பெறுவதே அறிவுடைமை ஆகும்.

(கட்டுரையாளர்: புவி அறிவியலாளர்)

——————————————————————————————————————————–

டைட்டானியம் டை ஆக்ஸைடு-வரமா, சாபமா?

டி .எம். விஸ்வநாத்

டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ஸைடு ஆலை – செய்தி ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மாநிலம் தழுவிய அளவில் இந்த விஷயம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் அரசியல் கட்சியும் தனது குழுவை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு அனுப்பி அப்பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் பதிலளித்தே மாய்ந்து போகிறார்கள். ஆனால் இவ்வாறு கட்சிகள் கருத்து கேட்பதால் அப்பகுதி மக்கள் ஒரு தெளிவுக்கு வந்து விட்டார்கள். பொட்டல் காடு என்று தங்களது நிலப்பரப்பை நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அங்கு டைட்டானியம் டை ஆக்ûஸடு என்ற விலைமதிக்க முடியாத கனிமம் உள்ளது என்ற தெளிவுதான் அது.

எனவே இனிமேல் ரத்தன் டாடாவே நேரில் வந்து கேட்டாலும்கூட நிலத்திற்குக் கூடுதல் விலை கேட்க அப்பகுதி மக்கள் தயங்க மாட்டார்கள். டைட்டானியம் டை ஆக்ûஸடின் மதிப்பு அப்படி!

நமது பகுதிகளில் உள்ள மணலில் ஒருவித கருப்பு மணல் இருக்கும். இந்த மணலில் உள்ள ஒருவித கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. மணலைச் சூடுபடுத்தி அதில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்கும்போது ஒருவித வெள்ளை நிறப்பொடி கிடைக்கிறது. அதுதான் டைட்டானியம் டை ஆக்ûஸடு. இது வெப்பத்தைத் தாங்கக்கூடியது. சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக்கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை படைத்தது.

இக்கனிமம் “அலாய்’ உலோக வகையைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுடையது. குறிப்பாக, விமான என்ஜின்கள், ராக்கெட் மற்றும் ராணுவப் பயன்பாட்டுக்கு இன்றியமையாதது. அதுமட்டுமல்லாமல் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மற்றும் முகத்தில் தடவும் லோஷன்களிலும் இந்த டைட்டானியம் டை ஆக்ûஸடு உள்ளது. இது ஒரு விஷயம்.

மற்றொரு விஷயம், மணலைச் சூடுபடுத்தி அதில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போதே தோரியம் போன்ற பிற கனிமங்களும் கிடைக்கும். இந்த தோரியம் அணு உலைகளுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியது. எனவே டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலை என்பது சாதாரண விஷயம் அல்ல; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. எனவேதான் இந்த விஷயத்தில் இவ்வளவு எதிர்ப்பு.

பலன்கள் என்கிற ரீதியில் பார்த்தால் – டாடா நிர்வாகம் சொல்லும் பலன்கள் இவைதான் – அதாவது, ஆண்டுக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டன் வரை டைட்டானியம் டை ஆக்ûஸடை நாம் இறக்குமதி செய்து வருகிறோம். இங்கு ஆலை அமைத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்ûஸடை நாமே உற்பத்தி செய்ய முடியும்; இந்த ஆலையால் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். மேலும் அப்பகுதிகளில் பள்ளி, பூங்கா, தண்ணீர் தொட்டி அமைத்தல் போன்ற “சமூக’ சேவைகளையும் செய்து அப்பகுதி மக்களுக்குத் தங்களால் உதவ முடியும் என்பது டாடா நிறுவனத்தின் வாக்குறுதிகள்.

ஆனால், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கையகப்படுத்தி அதில் உள்ள லட்சக்கணக்கான தென்னை, பனை மரங்களை வெட்டி வித்து, அப்பகுதிகளில் உள்ள மணலை எடுத்து அதில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுத்து பின்னர் மீண்டும் அந்தக் குழிகளை நிரப்பினால், அதன் பிறகு அந்த நிலத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியுமா? அவ்வாறு பயன்படுத்த வேண்டுமானால் ரசாயன உரங்களைப் போட்டு அந்த நிலத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவினங்களை யார் ஏற்பது? மேலும் அவ்வாறு ரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் நிலத்தின் தன்மை, விவசாயத்திற்கு உகந்ததாக இருக்குமா?

ஏனெனில் கனிமங்களைப் பிரித்தெடுத்தபின் அந்த மணல் கனிம வளங்கள் உறிஞ்சப்பட்ட வெறும் சக்கையாகத்தான் இருக்கும். மேலும் அதில் புவி ஈர்ப்பு விசையும் குறைந்துபோய் பலமிழந்து இருக்கும். அதில் தண்ணீரே நிற்காது. கனிம வளங்களோடு இருக்கும் மணல் பிரதேசத்தில் 4.5 என்ற அளவில் புவி ஈர்ப்பு விசை இருக்கும். கனிமத்தை எடுத்துவிட்டால் வெறும் 2 என்ற அளவில்தான் ஈர்ப்பு விசை இருக்கும். இதுமட்டுமல்லாது இதற்குப் பிறகு இந்த நிலங்களால் டாடா ஆலைக்கு எந்தவிதப் பிரயோஜனமும் கிடையாது. அப்படிப்பட்ட சூழலில் அந்த நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படுமா?

இதுதவிர, மணலில் இருந்து டைட்டானியம் டை ஆக்ûஸடைப் பிரித்தெடுக்கும்போது அதில் கதிர்வீச்சு ஏற்படும். அது ஆலைகளில் பணிபுரிவோருக்கும், ஆலையைச் சுற்றி வசிப்பவர்களுக்கும் உடல் ரீதியான பாதிப்பை உண்டாக்கும். கொல்லத்தில் உள்ள சவரா பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு ஆஸ்துமா, சரும வியாதிகள், மனநோய், பெண்களுக்கு கருச்சிதைவு ஆகியவை அதிக அளவில் ஏற்படுவதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. மீன்வளம் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கை முறை தலைகீழாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. டைட்டானியம் ஆலையால் பாதிப்பு பன்மடங்காக இருக்கும்.

வேலைவாய்ப்பு என்கிற ரீதியில் பார்த்தாலும்கூட, இந்த ஆலை பெரும்பாலும் இயந்திரங்கள் மூலம்தான் இயக்கப்படும். ஏனெனில் மனித உழைப்பு என்பது குறைவுதான். எனவே வேலைவாய்ப்பு என்பதும் வெறும் கண்துடைப்பு நாடகம்தான். கடற்கரைப் பகுதிகளில் கடல் அரிப்பு மற்றும் கடல் நீர் நிலத்தடி நீரோடு கலப்பது போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தைச் சுட்டிக்காட்டி, டைட்டானியம் ஆலைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள், டைட்டானியம் டை ஆக்ûஸடு தயாரிப்பில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, ஐரோப்பிய கமிஷனின் அறிக்கையின்படி முகத்தில் பூசும் லோஷன்கள் வாயிலாக டைட்டானியம் டை ஆக்ûஸடு உடலுக்குள் ஊடுருவுகிறது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த “டைட்டானியம் டை ஆக்ûஸடில்’ உள்ள நுண்பொருள் புற்றுநோயை உருவாக்கக்கூடியது என்றும் ஐரோப்பிய கமிஷன் அறிக்கை கூறுகிறது.

இதனையெல்லாம் நாங்கள் கருத்தில்கொண்டுதான் ஆலையை அமைக்கிறோம் என்று டாடா நிர்வாகம் சொல்லுமானால், டாடா நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது யார்? ஏனெனில் ஒரு மணல் குவாரியைக் கூட அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லை. ஒதுக்கப்பட்ட பகுதிகளில் 3 அடி ஆழத்திற்கும் மேல் மணலை எடுக்கக்கூடாது என்ற விதிமுறை இருந்தாலும்கூட அது நடைமுறையில் உள்ளதா என்றால் இல்லை. பல இடங்களில் மணல் அள்ளுபவர்கள் ஒதுக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, அதுவும் பல மீட்டர் ஆழம் வரை மணலைச் சுரண்டி வருகிறார்கள். இதனால் பல ஆறுகளின் படுகைகள் வறண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி செலவில் டாடா நிறுவனம் அமைக்கும் ஆலையில் எந்த அளவுக்கு மணல் அள்ளுகிறார்கள், எந்த அளவு இயற்கை வளம் சுரண்டப்படுகிறது என்பதைக் கண்காணிப்பது யார், அவ்வாறு முறைகேடுகள் நடந்தாலும்கூட அதனைத் தட்டிக்கேட்பது யார்? என்ற கேள்வி எழுகிறது.

நீண்டகாலத்திற்கு அப்பகுதி நிலங்களில் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார ரீதியான பாதிப்புகளைப் பற்றி கணக்கிடாமல் டைட்டானியம் ஆலை அமைக்கப்படுமானால், அது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு வரம் அல்ல; சாபமாகத்தான் அமையப்போகிறது!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்).

———————————————————————————————————————————————————-

டைட்டானியம் ஆலை யாருக்கு லாபம்?

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, அக். 10: டைட்டானியம் ஆலை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கும் அங்கு கிடைக்கும் கனிம வளத்தின் பண மதிப்புக்கும் இடையிலான இடைவெளி மிக அதிக அளவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், சாத்தான்குளம் பகுதியில் இருந்து எடுக்கப்படும் கனிம வளத்தைப் பயன்படுத்தி என்ன வகையான பொருள்கள் தயாரிக்கப்பட உள்ளன என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் “டைட்டானியம் டை ஆக்ûஸடு’ ஆலைகளுக்கு தேவையான “இல்மனைட்’ உள்ளிட்ட கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு இங்கு “ரூடேல்’ அதிக அளவில் இருக்கும் இல்மனைட் கனிமத்தைப் பயன்படுத்துவதற்கான ஆலையை அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து இங்குள்ள சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனம் கையகப்படுத்த (வாங்க) உள்ளது.

ஏழை மக்களின் நிலத்தை டாடா நிறுவனத்துக்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய பல்வேறு அரசியல் கட்சியினர் சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று அதன் அடிப்படையில் அறிக்கைகளையும் அரசுக்கு அளித்தன.

அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் கருத்துகளைப் பெற்று அது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அளித்தது. இந் நிலையில் டாடா நிறுவனமே மக்களிடம் நேரடியாக நிலங்களை வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இல்மனைட் பயன் என்ன?: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் டைட்டானியம் டை ஆக்ûஸடு ஆலைக்குத் தேவையான இல்மனைட் அதிக அளவில் இருக்கிறது. இதிலிருந்து பெயின்ட் தயாரிக்க உதவும் “ரூடேல்’, “அனடேஸ்’ உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் கிரிஸ்டல் வடிவில் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வெளிப்புற பூச்சுகளுக்கான பெயின்ட்களில் மிக அதிக அளவு பளபளப்பு தருவது, நீடித்து உழைக்கும் தன்மை ரூட்டேலில் அதிகம். தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே பயன்படுத்தப்படுவதால் இதன் விலையும் அதிகம்.

இந்தியாவில் இதில் சின்தடிக் ரூடேல் கேரளத்தில் உள்ள ஒரு ஆலையில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. அதுவும் வெளிப்புறப் பூச்சுக்கான பெயின்ட்களில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் டாடா ஆலைக்கு முக்கியததுவம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

தோரியம் இல்லை: இல்மனைட்டில் அணுசக்தி உற்பத்திக்கு தேவையான தோரியம் இருப்பதாக கூறப்படுவது தவறு. தோரியம் மானசைட்டிலிருந்துதான் கிடைக்கும். இதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடைவெளி அதிகமா? இந்த ஆலை அமைக்க கையகப்படுத்தப்படும் 9 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் கிரயமாக வழங்க டாடா நிறுவனம் முன் வந்து அதற்கான பணிகளிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் மொத்தம் 10 கோடி டன் இல்மனைட் இருப்பதாகவும், சாத்தான்குளம், குட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 65 முதல் 70 சதவீதம் இல்மனைட் இருப்பதாக தமிழக அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதில் இருந்து சுமார் 50 லட்சம் டன்கள் வரை ரூடேல் கிடைக்கும். இந்த பகுதியில் சில இடங்களில் ரூட்டேல், அனடேஸ் ஆகியவை தனியாகவும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

உத்தேச சந்தை மதிப்பின் படி சர்வதேச சந்தையில் ஒரு டன் ரூடேல் ரூ. 40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் ரூடேல் உற்பத்தியில் வேறு பெரிய நிறுவனங்கள் இல்லாததால் டாடா நிறுவனம் வைப்பதே இறுதி விலையாக இருக்கும். இதன் மூலம் ரூடேல் உற்பத்தியில் டாடா நிறுவனம் முற்றொருமை சக்தியாக உருவெடுக்கும்.

இந்த மதிப்பின்படி பார்த்தால் டாடா நிறுவனம் இந்த திட்டத்துக்காக ஒதுக்கியுள்ள மொத்த தொகையான ரூ. 2,500 கோடியில், நிலத்துக்காக ரூ. 50 கோடி மிகவும் குறைவான தொகை என கூறப்படுகிறது.

குறிப்பிட்ட ஆண்டுகள் வரையே இங்கு தாதுப் பொருள் எடுக்கப்படும் என்பதால் இங்கு மக்களிடம் குத்தகை அடிப்படையில் நிலங்களைப் பெற்று ஆலை திட்டம் முடிந்தவுடன் நிலத்தை அவர்களிடமே அளிக்கலாம் என்ற யோசனையும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது.

ஆனால், டாடா நிறுவனம் இறக்குமதி தரத்திலான “ரூடேலை’ தயாரித்தால் மட்டுமே, இந்த திட்டம் மதிப்பு மிக்கதாக இருக்கும் என ரசாயன ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இங்கு எடுக்கப்படும் இல்மனைட்டிலிருந்து டைட்டானியம் ஆக்சைடு பிரித்தெடுக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும் இரும்பு ஆக்ûஸடு நிலத்தில் விடப்பட்டால் இப் பகுதி நிலங்கள் எந்த காலத்திலும் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

டைடானியம் ஆலை முற்றிலும் தனியார் நிறுவனமாக லாப நோக்கத்தில் செயல்பட உள்ளதால் இதற்கு நிலம் அளிப்பவர்களுக்கு உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்.

இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை விலையைவிட, அதில் கிடைக்கும் லாபத்தில் நிலத்தின் பங்களிப்பு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.

Posted in ADMK, Alloy, Arms, cancer, carcinogen, Chemical, Chemistry, CPI, CPM, Discovery, DMK, Effects, Employment, Engg, Engineering, Explore, Factory, Fighter, Flights, Jobs, Manufacturing, medical, Medicinal, Mine, Mineral, Missiles, Nadar, Ocean, Planes, Plant, PMK, Project, Sathankulam, Science, Sea, Shore, surgery, TATA, Technology, titania, titanium, Titanium dioxide, Uses, Value, War, Weapons | 1 Comment »

Nuclear Power & Technology – Hiroshima, Nagasaki, Destruction

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 6, 2007

ஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை!

என். ரமேஷ்

1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.

அந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’

நகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.

ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.

அணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

ஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.

எனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,

  1. அமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.
  2. ரஷியா – 16,000,
  3. பிரிட்டன் – 200,
  4. பிரான்ஸ் – 350,
  5. சீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத
  6. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
  7. இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.

இவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.

1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

கதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.

அணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.

ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.

——————————————————————————————————————-
போர் இன்னும் முடியவில்லை!

உதயை மு. வீரையன்

புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்?…”

அதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”

இதன் பொருள் என்ன? மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்?

அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.

ஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.

அணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.

ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.

இலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.

நாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.

விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.

ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.

அதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

கதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.

இவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

அணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.

அணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?

“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா? எப்போது தீரும்? என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”

போர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.

வெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை!

(கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்).

Posted in Agni, America, Arms, Atom, Baikonur, bhopal, Bombs, Britain, China, dead, Death, Deficiency, Deformity, Destruction, Effects, Electricity, England, Enriched, Enrichment, Fights, France, Hiroshima, Impact, International, Israel, Japan, Killed, leak, London, medical, Missile, Mohawk, Nagasaki, Nuclear, Pakistan, Palestine, Peace, Power, Russia, Technology, Tragedy, UK, Ukaraine, Ukraine, Uranium, US, USA, USSR, War, Weapons, World | 1 Comment »

Education as basic right

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

அடிப்படை உரிமையாகுமா கல்வி?

எஸ். சையது இப்ராஹிம்

“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.

கல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.

கரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.

பண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.

இவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.

ஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.

இதன் விளைவு என்ன? பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.

ஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.

——————————————————————————————————————-
உயர்கல்வியில் குளறுபடி!

தமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.

எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.

அரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.

அவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.

அரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.

அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது? அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.

தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன? தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும்? இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.

பயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது!

—————————————————————————————————————-
மனித உரிமைக் கல்வி!

ஆர். நடராஜ்

வழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.

“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.

கட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.

சம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரிவு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

தமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.

தரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவர்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.

இவர்களது எதிர்காலம் என்ன? இவர்களின் நிலை உயர்வது எப்போது? இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.

திசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.

கல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.

உள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.

மனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையினரே மனித உரிமைகளை மீறினால் எப்படி? சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.

காவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.

எழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.

பொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.

மக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே!

(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).

Posted in Allocation, Analysis, BE, Bihar, Boards, Budget, Colleges, Doctor, DOTE, Education, Engg, Engineering, Expenses, Fees, Finance, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, MBBS, medical, Medicine, Planning, Price, Professors, Rajasthan, rights, Sarasvathi, Sarasvathy, Saraswathi, Saraswathy, Schools, Slates, Statistics, Stats, Statz, Students, Study, Teachers, Tech, Technology, University | 1 Comment »

Raman Raja – Triple Play, VOIP, Apple iPhone, Wi-fi: State of the art Technologies

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

நெட்டில் சுட்டதடா…: மூவாட்டம் என்று ஒரு போராட்டம்!

ராமன் ராஜா

இந்த வாரம் கொஞ்சம் டெக்னாலஜி பேசுவோமா? டெலிகாம் எனப்படுகிற தொலைத் தொடர்புத் துறையில் லேட்டஸ்ட் முன்னேற்றம் என்ன என்று அடிக்கடி என்னிடம் உசாவுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் செல்போன்களின் எண்ணிக்கை மழைக்காலக் கொசுக் கூட்டம் மாதிரி பெருகியிருப்பதுதான் ஆச்சர்யமான செய்தி. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சம் பேர் புது செல்போன் வாங்குகிறார்கள். உலகத்திலேயே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் செல்போன் மார்க்கெட் அமெரிக்காவோ, ஜப்பானோ அல்ல; இந்தியாதான்!

சமீபத்தில் மயிலாப்பூர் கோவில் போயிருந்தபோது, குளத்தங்கரையில் பட்டைச் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சாமியாரின் காவித் துணி மூட்டைக்குள்ளிருந்து சுப்ரபாதம் ரிங் டோன் ஒலித்தது. சாமியார் இடது கையால் மூட்டைக்குள் துழாவி, அருமையான பன்னிரண்டாயிரம் ரூபாய் எரிக்ஸன் போன் ஒன்றை எடுத்துப் பேச ஆரம்பித்தார்; என் பழைய கறுப்பு வெள்ளை நோக்கியா வெட்கித் தலை குனிந்தது.

தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாமம் என்னவென்றால் ஆங்கிலத்தில் Convergence என்ற வார்த்தையால் குறிப்பிடப்படுவது. தமிழில் குவிப்பு, குவிமம், குவியாட்டம் என்று ஏதாவது வைத்துக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால், இந்நாள் வரை டெலிபோன், டி.வி. கம்ப்யூட்டர் எல்லாம் தனித் தனியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன; இனிமேல் இவை எல்லாமே ஒரே டப்பா வழியாக வரப் போகின்றன. நாம் ஒரே பில்லில் பணம் அழப் போகிறோம். அதுதான் குவிமம். இப்போதே இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குவிய ஆரம்பித்து விட்டதை டெக்னாலஜி ஆர்வலர்கள் கவனித்திருக்கலாம். உதாரணமாக எட்டணா செல்போன்களில் கூட எஃப்.எம். ரேடியோவும் இருக்கிறது, எம்.பி-3 பாட்டும் கேட்க முடிகிறது. ஒரு அவசரம் என்றால் போட்டோவும் பிடிக்கலாம். அதை உடனே மல்ட்டி மீடியா எஸ்.எம்.எஸ். வழியே யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஆப்பிள் நிறுவனம் ஐ-போன் என்று அகலமான செல்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் பயங்கர ஹிட்! ஐ-போனில் பாட்டு, வீடியோ, காமிரா, இண்டர்நெட் எல்லாம் உண்டு; கொசுறாக செல்போனும் பேசிக் கொள்ளலாம். ஆஸ்துமா மீன் வைத்தியத்துக்கு ஹைதராபாத்தில் கூட்டம் கூடுகிற மாதிரி எல்லாரும் கியூ வரிசையில் நின்று வாங்கினார்கள். சட்டைப் பைக்குள் நெட் இணைப்பு இருந்தால் என்னென்ன சாத்தியங்கள் திறக்கின்றன என்று பாருங்கள். செல்போனிலேயே சென்னை தியேட்டர்களின் வலை மனைகளை அலசி, ஸ்ரேயா நடித்த படம் எங்கே ஓடுகிறது என்று தேடலாம். அதிலேயே படத்தின் வீடியோ ட்ரெய்லரை வரவழைத்துப் பார்த்து, கொடுக்கிற காசு செரிக்குமா என்று முடிவு செய்யலாம். ஆம் எனில் ஒரு பட்டனை அழுத்தி டிக்கெட்டை முன் பதிவு செய்துவிட்டு, கடன் அட்டை மூலம் பணமும் செலுத்தலாம். கடைசியில் நண்பர்கள் கேங்கிற்கு “”எல்லாரும் சாயங்காலம் பால் காவடி எடுத்துக்கிட்டு தியேட்டருக்கு வந்துடுங்கப்பா” என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் சுலபம்.

வரும் வருடங்களில் நாம் அதிகம் கேள்விப்படப் போவது, ஐ.பி. ( IP) என்ற ஒரு வி.ஐ.பி. பற்றித்தான். இண்டர்நெட் வழியே கம்ப்யூட்டர்கள் பேசிக் கொள்வதற்காக ஏற்பட்ட சில சுலபமான விதி முறைகளுக்குத்தான் ஐ.பி. என்று பெயர். நெட்டில் இணைக்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும்- அது கம்ப்யூட்டரோ, காப்பிக் கொட்டை அரைக்கும் மிஷினோ- ஒரு தனிப்பட்ட ஐ.பி. முகவரி தேவை. நம் டெலிபோனுக்கும் ஒரு ஐ.பி. எண் கொடுத்து அதை நெட்டில் இணைத்துவிட்டால் என்ன என்ற கில்லாடி சிந்தனை, பொல்லாத சிலருக்குத் தோன்றிவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்துக்கு “வாய்ப்’ ( VOIP) என்று பெயர். ஆரம்பித்த புதிதில் அசட்டுப் பிசட்டு என்றுதான் இருந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் லைன் கட் ஆகிவிடும். அல்லது எதிர்முனையில் பேசுபவரின் குரல்வளைப் பிசையப்படுகிறதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு வெட்டி வெட்டி இழுக்கும். இப்போது மிகவும் உடல் நலம் தேறி, சாதாரண போன் போலவே ஒலிக்கிறது. “வாய்ப்’ அளித்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்கைப் போன்ற கம்பெனிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டன. இதில் செüகரியம், நீங்கள் எந்தக் குக்கிராமத்தில் இருந்தாலும் உலகின் எந்த ஊர் டெலிபோன் நம்பரையும் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக சென்னையில், என் அலுவலக மேஜை மேல் இருக்கும் டெலிபோனுக்கு அமெரிக்க நம்பர்தான். அதில் அமெரிக்காவில் யாரைக் கூப்பிட்டாலும் லோக்கல் கால்! பேசுவதற்கு ஆகும் செலவோ, தூசு!

வாய்ப் தொழில்நுட்பம், திரேதா யுகத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த மாதிரி ஒரு யுத்தத்தையே ஆரம்பித்து வைத்து விட்டது: உலகத்தில் பாரம்ரியமாக டெலிபோன் கம்பெனிகள்தான் இண்டர்நெட் இணைப்பும் கொடுப்பது வழக்கம். கேபிள் டி.வி. நிறுவனங்கள் மெகா சீரியல்களை மட்டுமே வழங்கி வந்தன. பிறகு அவர்கள் “”நாங்களே உங்கள் வீட்டுக்கு இண்டர்நெட்டும் கொடுக்கிறோமே” என்று மெல்ல ஒட்டகம் போல் மார்க்கெட்டில் தலை நீட்டினார்கள். கேபிள் மோடம் என்ற சிறு கருவியை வாங்கி வைத்துக் கொண்டு நெட்டை மேய்கிற வசதி இது. (நம் ஊரிலும் வந்துவிட்டது). இதற்குப் பிறகு டெலிபோன்காரர்களுக்கு அவர்கள் அடித்ததுதான் பயங்கர டபுள் ஆப்பு!

திடீரென்று ஒரு காலைப் பொழுதில், “”இனி நாங்களே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு “வாய்ப்’ மூலம் டெலிபோன் பேசும் வசதியும் கொடுத்து விடுகிறோம். எனவே நீங்களெல்லாம் கடையை மூடிக்கொண்டு நடையைக் கட்டலாம்” என்று அறிவித்துவிட்டார்கள். ஆடிப்போய்விட்டார்கள் டெலிபோன்காரர்கள். Triple play  (மூவாட்டம்) எனப்படுவது இதுதான்: போன், நெட், வீடியோ மூன்றையுமே ஒரே கேபிள் வழியே அனுப்புவது.

எதிரி தட்டியில் நுழைந்தால் கோலத்தில் நுழைகிற டெலிபோன்காரர்கள், கேபிள் டிவியை வேரறுக்க அவசரமாக என்ன செய்யலாம்? என்று யோசித்தார்கள். கடப்பாறையை எடுத்துக் கொண்டு தெருவெல்லாம் பள்ளம் தோண்டி வீட்டுக்கு வீடு ஒயர் இழுத்தார்கள். ஃபைபர் எனப்படும் கண்ணாடி இழைகளை வீட்டு வரவேற்பறை வரை நீட்டிவிட்டார்கள். இதில் கேபிளை விட நல்ல தரத்தில் வீடியோ கொடுக்க முடியும். “”நீ என் வியாபாரத்தில் கை வைக்கிறாயா, நான் உன் பிளக்கையே பிடுங்கி விடுகிறேன்” என்று தாங்களும் போட்டிக்கு மூவாட்டம் ஆட ஆரம்பித்தார்கள். வார்னர், டிஸ்னி போன்ற சினிமா கம்பெனிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான சானல்களை வெள்ளக் காடாக வீட்டுக்குள் பாய்ச்சினார்கள்; குழந்தைகள் படிப்பு மேலும் குட்டிச் சுவராகியது. இதுதான் குவிமம் பிறந்த கதை.

இப்போது ஒயர்மெஸ் தொழில் நுட்பத்தையும் இதில் கலந்து நாலாட்டம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். டிவி அல்லது கம்ப்யூட்டர் முன்னால் ஆணி அடித்த மாதிரி உட்கார்ந்திருக்கத் தேவையில்லாமல் அவற்றைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டில் எங்கே வேண்டுமானாலும் சுற்றலாம். இதற்குத் தேவையானது “வை-ஃபை’ ( wi-fi்) எனப்படும் வாண வேடிக்கை. கொத்தவரங்காய் மாதிரி ஒரு சின்னஞ் சிறிய ஆண்டென்னாவை வைத்துக் கொண்டு கம்பிகள் இல்லாமலே கம்ப்யூட்டர், டிவி, ஆட்டுக்கல் எதை வேண்டுமானாலும் இணைக்க முடியும்.

சமீபத்தில் சுந்தர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் மனைவி “”உக்காருங்க. இவர் யாருக்கோ ஈ-மெயில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்” என்றாள். ஆனால் வீட்டில் சுந்தர் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்கே அவன் என்று கேட்டேன். மனைவி பதில் சொல்லாமல் தலையில் அடித்துக் கொண்டு “”கல்லுக் குடல். ஒருமணி நேரமாக உட்கார்ந்திருக்கிறார்” என்று புரியாமல் ஏதோ சொன்னாள். கடைசியில் சுந்தர் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தான். அவன் கையில் ப்ளாக் பெர்ரி எனப்படும் சின்னஞ் சிறிய கம்ப்யூட்டர்! வை-ஃபை தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஒய்ஃபை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறான்.

இனிமேல் சுந்தரிடமிருந்து எந்த மின்னஞ்சல் வந்தாலும் பினாயில் ஊற்றி அலம்பி விட்டுத்தான் படிக்க வேண்டும்.

Posted in Apple, broadband, Browser, Browsing, cable, Calls, computers, Dish, DSL, Entertainment, fiber, fibre, Information, InfoTech, International, Internet, iPhone, IT, Kathir, LD, Mobile, Net, Optical, Optics, phone, Raman Raja, Ramanraja, Technologies, Technology, Telecom, Television, Triple Play, TV, Voip, Web, Wi-fi, Wifi | Leave a Comment »

Computer Keyboard for the Visually Challenged – Contest Winner details

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

இது புதுசு: புதிய வெளிச்சங்கள்!

அருவி

கருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்?

புதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:

“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.

கம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து

வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.

மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.

இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும்? அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.

பார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

ஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.

ஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்!

அருவி

Posted in America, Blind, Braille, Challenged, College, Competition, Computer, Contest, Details, Development, Disabled, Dvorak, Engg, Eyes, Feel, Gadget, Handicapped, Indicators, Information, InfoTech, Invention, IT, Keyboard, Keyboards, Keys, Mice, Mouse, Physically, Professors, Project, QWERTY, Research, School, Shorthand, Sight, Steno, stenographers, Student, Tamil, Teachers, Technology, Touch, University, US, USA, Vision, Winner | 2 Comments »

Director Tharani – Story behind the silver jubilee

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

ஒரு படம் கிடைக்க 18 வருஷம் டைரக்டர் தரணியின் போராட்டக் கதை

எத்தனை போராட்டங் களுக்குப்பிறகு ஒருவர் டைரக்டராக முடிகிறது- உதாரணம் `தரணி’

தில், தூள், கில்லி என மூன்று மெகா ஹிட்’ படங்களை கொடுத்தவர். ஆக்ஷன், கமர்சி யல் என்பது இவரது `ஸ்பெஷாலிட்டி’ என்பது தவிர ஒரு கால் ஊனமுற்றவர். கைப்பிடியுடன் தான் நடக்க முடியும்.

“ஒரு வித வைராக்கியத் தோட உழைச்சுக் கிட்டே இருக்கணும். ஓடி, ஓடி உழைச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு கூலி கிடைக்கும். 60 வயசுக்கு பிறகு பறவை முனியம்மாவுக்கு கிடைக்கலையாப என்கிற டைரக்டர் தரணிக்கு ஒரு படம் கிடைக்க 18 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

தரணி உங்களிடம் மனம் திறந்து பேசுகிறார்.

சின்ன வயசுலியே எனக்கு இந்த கால் ஊனம் வந்துட்டுது. போலியோ அட்டாக். இருந்தாலும் ஒரு கால் இல்லியேன்னு நான் நினைச்சு பார்த்தது கிடையாது. ஓடுவேன், ஆடுவேன் யாராவது பார்த்து “என்ன வரத்து வர்றான்னு” கேட்கிறப்ப தான் ஞாபகத்துக்கு வரும்.

விவரம் தெரிஞ்சப்பவே நான் பாரதிராஜா ரசிகன். ஒரு படம் விடமாட்டேன். அவ ரோட படங்கள் தான் எனக்கு `இன்ஸ்பிரேசன்’.

சினிமாவுல நுழையனும்னா எடிட்டிங், இசை, தொழில் நுட்பம் தெரிஞ்சிருக்கனும். அதுக்காக பிலிம் இன்ஸ்டிïட்ல சேர்ந்து படிச்சேன். மெயினா கத்துக்கிட்டது எடிட்டிங் தான்! செல்வமணி சாரோட முதல் படத்தை எடிட்டிங் செய்தது நான் தான்.

மணிரத்னம், ஆர்.வி.உதய குமார், திருப்பதி சாமின்னு நிறைய பேர்கிட்ட நான் ஒர்க் பண்ணினேன். நமக்கு ஒரு படம் கிடைக்காதான்னு ஒவ்வொரு படக்கம்பெனியா ஏறி, இறங்கினேன். எக்கச்சக் கத்துக்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.

அசிஸ்டென்ட் டைரக்டராக மட்டுமே 18 வருஷத்துக்கு வேலை பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் படாத கஷ் டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாம எவ்வளவோ திண்டாடி இருக்கேன். கல் யாணம் கட்டிக் கிட்ட மனைவி, கூடவே அம்மா, அப்பா, குடும்பம்னு எப்படியும் வாழ்ந்தாகனுமேப

இதுக்காகவே கீ போர்டு வாசிக்கிறது, மேடையில பாடுறதுன்னு கத்துக்கிட்டு `லைட் மிïசிக்’ ஆரம்பிச்சேன். என்னோட மேடையில தான் உன்னிகிருஷ்ணன், சுரேஷ் பீட்டர் லாம் முதன் முதலா மைக் பிடிச்சது.

ஸ்டேஜ்ல நான் பாடுறப்போ 250 ரூபா சம்பளம் கிடைக்கும். ஏதாவது விளம்பரம் படம் கிடைச்சுதுன்னா அங்க போய் `ஒர்க்’ பண்ணுவேன். இந்த வேலைதான் இல்லை. ஏதாவது கண்ணுக்கு தெரிஞ்சா ஓடிக்கிட்டே இருப்பேன்.

ஒரு வழியா 18 வருஷம் கழிச்சு ஒரு படம் கிடைச்சது. “எதிரும், புதிரும்”. அப்ப கூட நேரம் விடலை. ஆக்சிடென்ட் ஆகி கால் முறிஞ்சு போய், 4 மாசம் படுத்த படுக்கையில இருந்தேன். பிரகாஷ்ராஜ் சாரும், நெப்போலியன் சாரும் அப்ப உதவி செஞ்சாங்க.

இப்படி கால் முறிஞ்சு போச்சே. எங்கே சினிமா கனவு தகர்ந்து போகுமோன்னு நான் நினைக்கலை. உட் கார்ந்துக்கிட்டே `ஸ்கிரிப்ட்’ ஒர்க்” பண்ணலாமேன்னு நினைச்சேன்.

`எதிரும், புதிரும்’ படத்தை பல வருஷமா எடுத்தோம். மாயாவி வீரப்பனோட கதைய வச்சு எடுத்தோம். ஒரு செட்ïல் முடிச்சு வர்றத்துக்குள்ளே வீரப்பன் அடுத்த ஆளை கொன்னுருப்பான். கதையே மாறிடும். இப்படி படாதபாடு பட்டு ஒரு வழியா அந்த படத்துக்கு அரசு விருது கிடைத்தது மிகப் பெரிய ஆறுதல்.

நடக்க முடியாம கையில 2 `கிளட்ச்’ வச்சுக் கிட்டு இருந்த கால கட்டத்துல, என் ப்ரண்ட் ரவி மூலமா லட்சுமி புரொடக்ஷன்ஸ்சில படம் எடுக்க கதை கேட்கிறாங் கன்னு சொல்லி, நான் கதை சொல்லப் போனேன்.

பூர்ணசந்திரராவ், அஜய் குமார், டி.ராமராவ் மூன்று பேருமே எனக்கு தெய்வங்கள். கதை சொல்லப்போன என்னை டைரக்டராகவும் ஆக்கிட்டாங்க. அந்தப் படம் தான் `தில்’.

என்னை மாதிரி ஆளுக்கு 10 ரூபா கடன் தந்தாலே திருப்பித்தர முடியாது. என்னை நம்பி ஒரு படமே தந்தாங்களே!

லயோலா காலேஜ்ல நான் படிக்கும் போது விக்ரம் என் கிளாஸ்மேட். “டேய் நீ ஹீரோவாயிடு. நான் டைரக்டரா வந்துடறேன்’னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அது `தில்’லில் நடந்தது.

அவரும் என்னை மாதிரியே நிறைய போராடினவர். எந்தப் போராட்டத்தையும் நிறுத்த மாட்டார். எதிலும் ஜெயிக்கனும். எவ்வளவு நாளானாலும் சரின்னு நினைப்பார்.

`தில்’லுக்கு பிறகு ஏ.எம்.ரத்தினம் சார் `தூள்’ படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். மீண் டும் விக்ரமும், நானும் கூட்டணி.

எனக்கு ரொம்ப பயம். ஏதோ ஒரு படம் ஓடிருச்சு. இந்தப் படம் எப்படி வரும்னுப நேரா கும்பகோணம் போய் குலதெய்வத்த வேண்டிக் கிட்டு வந்தேன். அப்புறமா `கில்லி’ படம் வந்து அதுவும் அமோக வெற்றி.

எல்லோருமே ஜெயிக்க னும்னு நினைக்கிறவங்க தான். உழைப்பை தேடி ஓடிக்கிட்டே இருக்கிறவங்க தான் அதிர்ஷ் டம்ங்கிறது தானா ஒரு நாள் தேடி வரும் என்கிற தரணி ஆர்.வி.உதயகுமாருடன் `எஜமான்’ படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்த போது ஒரு நிகழ்ச்சி.

அந்தப் படத்தில் ரஜினி அங்க வஸ்திரத்தை ஸ்டைலாக தோளில் போட்டு நடை போட்டு வருகிற ஐடியாவைக் கொடுத்தது இந்த தரணிதான்! அதுவே இன்றுவரை ரஜினிக்கு ஒரு தனி இமேஜ் என்பது விசேஷம்.

Posted in Backgrounder, Barathiraja, Bharadhiraja, Bharathiraja, Biography, Biosketch, Chat, Chennai, Cinema, DFTech, Dharani, Dhil, Dhool, Dil, Editing, Editor, Ejamaan, Ejaman, Esamaan, Faces, Filmmaker, Films, Gilli, Institute, Interview, jubilee, Killi, Kodambakkam, Kollywood, Life, Manirathnam, Maniratnam, Movies, people, Rajini, Rajni, RV Udhayakumar, RV Uthayakumar, Selvamani, Story, Student, success, Technology, Telugu, Tharani, Thil, Thirupathisami, Thirupathysamy, Thool, Tollywood, Vikram | Leave a Comment »

Reading e-books in Cell phone – Mobile Technology for Tamil

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

இது புதுசு: செல்போனில் கலந்த “செம்புலப் பெயல்நீர்’!

அருவி

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே’

-“குறுந்தொகை’ பாடலான இதில் வரும் “செம்புலப் பெயல்நீர்’ என்கிற உவமைநீர் தரும் ஈரம் மட்டும் இன்னும் காய்ந்தபாடில்லை. வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுத்து பலவற்றோடு கலந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

இலக்கியவாதிகளின் இதயங்களோடு கலந்து, கட்டுரை, கவிதை எனப் பலவற்றிலும் ஓடி, இப்போது கலந்திருப்பது செல்போனில்!

சங்கப் பாடல்களைப் படித்துப் புரிந்தவர்கள் பலாச்சுளையைச் சுவைத்ததுபோல மகிழ, புரியாதவர்கள் ஊமத்தங்காயைச் சாப்பிட்டதுபோல வருந்தி நிற்பதுதானே இன்றைய நிலை?

இது சற்று பெரிய அரிய விஷயம்தான். ஆனால் ஒன்றும் புரியாத விஷயமில்லை. செல்போனிலும் புத்தகங்கள் படிக்கிற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது “மொபைல்வேதா’ நிறுவனம். கோயமுத்தூர் உடுமலைபேட்டையைச் சேர்ந்த கே.ஆர்.கணேஷ்ராம்தான் இதன் நிறுவனர். முதலில் சங்கப் பாடல்களை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொடுத்து இருக்கிறார்கள். போகப் போக வாரஇதழ், மாத இதழ், நாளிதழ், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என எல்லாப் புத்தகங்களையும் வெளிக்கொண்டு வரவும் இருக்கிறார்கள்.

இதைப்பற்றி முழுவிவரத்தையும் சொல்கிறார் கணேஷ்ராம்:

“பி.காம் படித்திருக்கிறேன். முதலில் கோவை பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகளை மட்டும் தெரிவிக்கும் வெப்சைட் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் வேலைவாய்ப்பு வெப்சைட்டைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டேன். இந்தத் தருணத்தில்தான் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் புதுமை தொழில்நுட்ப ஆய்வுகளைக் கண்டறியும் முகாம் ஒன்றை நடத்தியது. இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டோம். இதில் பதினைந்து பேரின் ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெப்2.0 மற்றும் செல்போன் தொடர்பாக நான் செய்த ஆய்வும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெப்சைட்டில் வெப்1.0-தான் இப்போது இருக்கிறது. இதற்கு மாற்றாக வெப்2.0-வெர்ஷனை அமைப்பது குறித்து ஆய்வு செய்திருந்தேன்.

இதனையடுத்து வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் அடைகாப்பு மையம் சார்பில் நாலு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு லோனாகக் கொடுக்கப்பட்டது. இதைக் கொண்டு “மொபைல்வேதா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்கலைக்கழக வளாகத்திலேயே இது இயங்கி வருகிறது. மொபைல் மதிப்பு கூட்டு சேவைத் துறையில் (value added services) புதிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதுதான் இந்நிறுவனத்தின் பணி. முதல் பணியாகத்தான் செல்போன் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தச் சிந்தனை முழுக்க முழுக்க எங்களுடையது என்று சொல்ல முடியாது. செல்போன் புத்தகங்கள் ஜப்பான், சீனாவில் அமோக வரவேற்புப் பெற்று, புத்தகங்கள் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு நான் முயற்சித்தேன். முடிந்தது.

பெரியார் இயக்கத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத்தான் முதலில் செல்போனில் வெளியிட்டோம். இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனையடுத்து “பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ என்ற தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்டோம். இதற்கும் கிடைத்த வரவேற்பையடுத்துதான் சங்க இலக்கியங்களை செல்போன் புத்தகங்களாக மாற்றித் தருகிறோம்.

குறுந்தகவல் சேவை போன்றுதான் இதுவும் என இதனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. 165 வார்த்தைகள்தான் குறுந்தகவல் சேவையில் இருக்கும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் இதில் கொண்டு வரமுடியும்.

செல்போனில் புத்தகங்களை வடிப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் புத்தகமாக்குகிறோம். செல்போனில் கேம்ஸ் அமைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சாதாரணமாக நாம் படிக்கிற புத்தகங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அட்டை, அழகான படங்கள் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

சங்க இலக்கியத்தை முதலில் நாங்கள் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணம் பழந்தமிழரின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இரண்டாவது, ராயல்டி இல்லாமல் வெளியிடக்கூடிய ஒன்றாக இருப்பதும் ஒரு காரணம். தற்போது சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொழிப்புரை தருவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகங்களைப் பெறுவது சிரமமான காரியம் ஒன்றுமில்லை. இதற்காகவே www.thinnai.info ் என்ற வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் வைத்திருப்பவர்கள் அப்படியே செல்லிலேயே இன்டர்நெட் ஓப்பன் செய்து எங்கள் வலைத்தளத்திலிருந்து நேரடியாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். இன்டர்நெட் வசதி இல்லாமல் ப்ளூ டூத், இன்ஃபராரெட், டேட்டாகேபிள் வசதி உள்ளவர்கள் கணிப்பொறியில் எங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகவே இதை வழங்கி வருகிறோம். இந்தச் செல்போன் தமிழ்ப் புத்தக வெளியீட்டை கடந்த 22-ந்தேதிதான் தொடங்கினோம். அதற்குள் 250-க்கும் மேற்பட்டோர் சங்க இலக்கியப் புத்தகத்தை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இதன் அடுத்தகட்டமாக நாவல், சிறுகதை தொகுப்புகள், கட்டுரை புத்தகங்கள் என எல்லாவகையான புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இதைப்போல பரபரப்பாக விற்கும் வார இதழ், மாத இதழ், நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம். இது தொடர்பாக எல்லாப் பத்திரிகை நிறுவனங்களோடும் எழுத்தாளர்களோடும் பேச இருக்கிறோம். இதை இலவசமாக வழங்க முடியாது.

ஓர் உதாரணத்துக்கு “ஹிந்து’ ஆங்கில நாளிதழை அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறோம் என்றால், அதற்கான கட்டணத்தை செல்போன் ரீடர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள திட்டம் வைத்திருக்கிறோம். ஒரு சினிமாப் பாடலை ரிங்டோனாக வைத்துக்கொண்டால் செல்போன் ஆபரேட்டார் அதற்காகும் கட்டணத்தைப் பிடித்துக் கொள்வதுபோல நாளிதழுக்காகும் கட்டணத்தையும் ஆபரேட்டார்களையே பிடித்துக்கொள்ள சொல்லலாம். வார இதழ்கள், மாத இதழ்கள், பெரிய எழுத்தாளர்களின் நாவல் என எல்லாப் புத்தகங்களையும் இந்த முறையில் வெளியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். எழுத்தாளர்களுக்கு முழுப் பணமும் கிடைக்கும். செல்போன் வழியாக சிற்றிதழ்கள் நடத்த விரும்புகிறவர்களும் நடத்தலாம்.

கம்ப்யூட்டரிலேயே படித்தால் கண் கெட்டுப் போய்விடும் என்ற கவலையும் இல்லாதளவு செல்போனிலேயே “கூல் டெக்ஸ்ட்’ தொழில்நுட்பமெல்லாம் வந்திருக்கிறது. இதனால் கண் கெட்டுப் போகாததுடன், செல்போன் புத்தகமும் தெளிவாகத் தெரியும்” என்கிறார் கணேஷ்ராம்.

செல்போன் புத்தகம் பற்றி பேசியபோது ஒரு கல்லூரி மாணவி சொன்னாள்:

“”ஐ… பரீட்சைக்குப் புத்தகத்தையே செல்போனில் கொண்டு போயிடலாமே”

“”என்ன கொடுமை சார் இது”

Posted in Author, Books, Cellphone, Display, Fonts, iPhone, Magazines, Magz, Mobile, Newpapers, News, Reader, service, SMS, SOA, Software, Tamil, Technology, Tools, Unicode, Utility, Zines | 1 Comment »

State of MBBS – Analysis on Medical education

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

எம்.பி.பி.எஸ். -தேவை அவசர சிகிச்சை

ஜே. ரங்கராஜன்

கம்பவுண்டர்களை டாக்டர்களாக மக்கள் மதித்த காலம் உண்டு. ஆனால் இன்று குறைந்தபட்சம் எம்.டி. பட்டம் பெற்றிருந்தால்தான் ஒருவர் டாக்டராகவே பொதுமக்களால் மதிக்கப்படுகிறார். எம்.பி.பி.எஸ்., எம்.டி. அல்லது எம்.எஸ்., உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். அல்லது எம்.சிஎச். என மொத்தம் 11 ஆண்டுகள் படித்தால்தான் மருத்துவத் துறையின் சிகரத்தை ஒருவர் எட்டும் நிலை உருவாகி விட்டது.

இந் நிலையில் டாக்டர் என சொல்லிக் கொள்வதற்கான குறைந்தபட்ச எம்.பி.பி.எஸ். கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் உள்பட எல்லா மாநில அரசுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி தொடங்க அங்கீகாரம் அளிக்கும் பணியை தில்லியில் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்லா மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்து தொடர்ந்து நடத்தும் அனுமதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமானால், ஒரே வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவு இடம், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியர்கள் -கூடுதல் பேராசிரியர்கள் -உதவிப் பேராசிரியர்கள், அவர்களுக்கு குறிப்பிட்ட பரப்பளவில் அறை, 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் உள்பட மருத்துவ சோதனைக் கருவி வசதிகள், சோதனைக்கூட வசதி, உரிமம் பெற்ற வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி, துறை வாரியான நூலகம், மத்திய நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என மருத்துவக் கல்விக்குத் தேவையான கடுமையான விதிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை

  • 1835-ல் தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி,
  • அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (1838),
  • வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (1942),
  • மதுரை அரசு மருத்துவக் கல்லூரி (1954),
  • தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி (1959),
  • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (1960),
  • திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • கோவை அரசு மருத்துவக் கல்லூரி (1966)

ஆகியவை மிகவும் பழமையானவை. இந்தக் கல்லூரிகளைக் காலம் காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து அவ்வப்போது எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து வருகின்றனர்.
போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல், 1992-ல் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டபோதுதான் பிரச்னை தொடங்கியது. அரசியல் லாபத்துக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளை ஏமாற்றும் வேலையை அரசே செய்தது. அதாவது, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நிலையில் சென்னை உள்பட வேறு இடங்களிலிருந்து டாக்டர்களைத் திருச்சிக்குக் கடத்தி கணக்குக் காண்பிப்பது, அவர்கள் திருச்சியில் வசிப்பது போன்று தாற்காலிக ரேஷன் அட்டையை அவசர அவசரமாகப் போலியாகத் தயாரிப்பது, ஓய்வு பெற்றோரின் பெயரில் தாற்காலிகமாகப் பணியிடங்களை உருவாக்கி நியமன உத்தரவுகளை அச்சடித்துத் தருவது என மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து மோசடி வேலைகளையும் அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.

இந்த மோசடி வேலைகளை ஒருங்கிணைத்துச் செய்து ஆய்வுக்கு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளைத் திருப்திப்படுத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அந்தஸ்தில் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த மோசடி வேலைக்கு உடன்படாத நியாயமான டாக்டர்களைப் பணி இடமாற்றம் செய்து அரசு பழிவாங்கியது.

1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு உரிய இடத்தைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், 2000-ம் ஆண்டில் போதிய வசதிகள் இல்லாமல் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை தொடர்ந்தது.

2001-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அரசியல் அறிவிப்பு செய்யப்பட்டு 2003-ல் கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற சென்னையிலிருந்து பஸ்ஸில் டாக்டர்கள் கடத்தப்பட்டனர். இதே போன்று அதிமுக ஆட்சியில் தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2005-ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

வேலூர், தேனி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. முந்தைய காலங்களைப் போல் டாக்டர்களை இப்போது கடத்தி பொய்க் கணக்கு காண்பிக்க முடியாது. ஏனெனில் அரசின் நிர்பந்தம் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக பொய் சொன்ன 25 டாக்டர்களின் பெயர்ப் பட்டியலை இணையதளத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் இத்தகையோர் இனி ஆசிரியர்களாகப் பணியாற்ற அது தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க 12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 7,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,398தான். இந் நிலையில் வேலூர்-தேனி-கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 300 எம்.பி.பி.எஸ். இடங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. ஆக, இந்த 300 இடங்கள் கிடைக்காமல் போனால் மிஞ்சும் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,098தான்.

இவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் தர மறுப்பதற்கான முழுமையான காரணம் சுகாதாரத் துறை செயலர் பதவி வகித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரியில் “அனாடமி’, “பிசியாலஜி’, “பயோகெமிஸ்ட்ரி’, “ஃபாரன்சிக் மெடிசின்’ உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் ஒரு பேராசிரியர், இரண்டு கூடுதல் பேராசிரியர்கள், மூன்று உதவிப் பேராசிரியர்கள் இருந்தாக வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதுமே இந்தத் துறைகளில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் பேராசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக “அனாடமி’ துறையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 10 பேராசிரியர்கள்-கூடுதல் பேராசிரியர்களே உள்ளனர்.

அரசுப் பணியில் 20 ஆண்டுகள் டாக்டர்கள் இருந்தாலும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அளவுக்கே சம்பளம் கிடைக்கும். ஆனால், முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்ற அடுத்த நாளே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசியராகச் சேரும் நிலையில் மாதச் சம்பளம் ரூ.45 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் போதிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, முதுநிலைப் பட்டப் படிப்புக்கு டாக்டர்களைச் சேர்க்கும் நிலையில் அரசுப் பணியில் கட்டாயம் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் உதவிப் பேராசிரியராக நியமிக்கும்போதே பணியாற்ற விரும்பும் இடம், அதிக சம்பளம் ஆகியவற்றையும் அரசு அளிப்பது அவசியம்.

இந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தை அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் பெறுவதில் பிரச்னை ஏற்படாது. விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தர்மபுரி, திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அரசியல் மத்தாப்பூ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து முடிக்காமல் வெற்று அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மாறாக மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

————————————————————————————————

அட்மிஷனுக்கு முன்பே விலைபோகும் பி.இ. சீட்டுகள்

சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன் நடைமுறை தொடங்கும் முன்பாகவே குறிப்பிட்ட சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சீட்டுகள் “கொழுத்த தொகைக்கு’ விலைபோகின்றன.

பிரம்மாண்டத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு மாணவரும், பெற்றோரும் இதுபோன்ற கல்லூரிகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டாய நன்கொடைக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் ஆகியவை குறித்த வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை காலையில் பிறப்பித்தது.

இதன்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பி.இ., பி.டெக். படிப்புகளில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும். 35 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் தாங்களே நிரப்பிக் கொள்ளலாம். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகள் 50 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதுவரை 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள அனைத்து இடங்களையும், அண்ணா பல்கலை. மூலம் நிரப்பிக் கொள்ள அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதுபோல், அரசிடம் அனைத்து இடங்களையும் ஒப்படைப்பது குறித்த விருப்பத்தைத் தெரிவிக்கும்படி கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே சில தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பி.இ. படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

“நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே.. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா?’ என்று கேட்டதற்கு, அதன் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்றும், “சேர்க்கப்பட்ட’ மாணவர்களுக்குப் பாதிப்பு வராது என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கல்வியை வியாபாரம் ஆக்கும் பொருட்டு சில சுயநிதி கல்லூரிகள் இது போல் செய்து வருவதை மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் ஆதரிக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனையான உண்மை. அதனால்தான், ஒற்றைச் சாளர முறைக்குக் காத்திருக்காமல், அட்மிஷன் நடைமுறை தொடங்கு முன்பே பல கல்லூரிகளில் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.

பிரம்மாண்டமான கட்டத் தோற்றம், மயக்கும் பேச்சு மற்றும் மாணவர்கள் படிக்கும்போதே அக்கல்லூரிகளில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற “கவர்ச்சி’க்கு மாணவர்களும், பெற்றோரும் மயங்குகின்றனர்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சோர்ந்த பின்னர், அம்மாணவருக்கு ஒற்றைச் சாளர முறையில் அட்மிஷன் கிடைக்கும் போது அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கல்லூரி நிர்வாகம் முழுமையாகத் திருப்பித் தருவதில்லை.

தகுதியுடைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதே முறையானது. இதில் அரசின் நிலையே சரியானது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

——————————————————————————————————

“ஏழை’ எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்

சென்னை, ஜூலை 9: சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவரை ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே “ஏழை’ என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.
——————————————————————————————————————————–

எகிறியது தனியார் எம்.பி.பி.எஸ். – அரசு சீட் விலை

சென்னை, ஜூலை 9: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கான கட்டணம் ரூ. 1.30 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரே ஆண்டில் எம்.பி.பி.எஸ். கட்டணம் தனியார் கல்லூரி மொத்த இடத்துக்கு ஏற்ப ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே.

  • சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி,
  • கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி,
  • கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி,
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி

என நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

  1. செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும்,
  2. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  3. ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  4. பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் 60 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.

கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மேலே கூறப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 410 இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது; மீதமுள்ள 35 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் எனக் கூறியது.

கட்டணம் உயர்ந்தது ஏன்? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் சென்னையில் நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.1.30 லட்சத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.4 லட்சத்தை கட்டணமாக வசூலித்தன.

இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களிடம் வாங்கிய கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, தனியார் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். கட்டணம் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி ராமன் கமிட்டியை கேட்டுக் கொண்டது.

புதிய கட்டணம் என்ன?

இந் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டுக்கான இடத்துக்கான கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி மூலம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரே கட்டணமாக ரூ. 1.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியின் இடங்களுக்கு ஏற்ப தனித் தனியே கீழ்க்கண்ட கட்டணங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி (98 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – ஆண்டு கல்விக் கட்டணம் தலா ரூ. 3 லட்சம் (ஏழை மாணவர்களுக்கு 15 சதவீத சலுகை அளிக்க வேண்டும்).

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி (65 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – தலா ரூ. 2.25 லட்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (50 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.) – தலா ரூ. 2.40 லட்சம்.

பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 66,000.

————————————————————————————-

தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். : வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவர்களுக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கிறது.

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடைபெறும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் சேத்துப்பட்டு கிளை அதிகாரிகள் கடனுதவி ஆலோசனை மையத்தை அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000-மாக உள்ளது. சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கட்டணமாகவும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.2.25 லட்சம் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 5 ஆண்டுப் படிப்புக்கும் சேர்த்து எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.4 லட்சம் வரை 12.5 சதவீத வட்டிக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கும். ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை உத்தரவாதம் இன்றி 13 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கும். கடன் தொகை ரூ.7.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அசையாச் சொத்துகள், டெபாசிட் பத்திரங்கள் உள்பட கடன் தொகைக்குச் சமமாக 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; வட்டி விகிதம் 13 சதவீதம். படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகு கடன் தொகையை மாணவர் திருப்பிச் செலுத்தினால் போதும்.

———————————————————————————————————-

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் மறுப்பு

சென்னை, ஜூலை 20: உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் எதிரொலியாக தமிழக அரசு அனுமதிக் கடிதம் அளித்த 25 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மறுத்து விட்டது.

இதனால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக் கடிதம் பெற்ற 25 மாணவர்கள், வியாழக்கிழமை நடந்த கவுன்சலிங்கில் இக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் என மொத்தம் 97 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் (150), 65 சதவீதத்தை (97 இடங்கள்) அரசின் ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்; செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கில், அக் கல்லூரியில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணப் பிரச்சினையுடன் (ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சம்) தற்போது 97 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தடை உத்தரவும் சேர்ந்து மாணவர்களை பெரும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் கடந்த ஆண்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக் கல்லூரியின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 150; இதில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 97.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 15, 16-ம் தேதி கவுன்சலிங் நடைபெற்றபோது, இந்த 97 இடங்களில் 25 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு இக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது. அவர்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மீதம் இருந்த 62 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மீண்டும் வியாழக்கிழமை (ஜூலை 19) கவுன்சலிங் நடந்தது. இந்த இடங்களுக்கு 62 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; ஆனால் உச்ச நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இந்த 62 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை.

பிஎஸ்ஜி பிரச்சினை இல்லை: “”செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சலிங்கில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; அதில் பிரச்னை இல்லை. இதேபோன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரியின் 39 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்கள் சேருவதில் பிரச்சினை இருக்காது” என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டணப் பிரச்சினை:

ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணத்தை (சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி – ரூ.3 லட்சம்; கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி – ரூ.2.25 லட்சம்) எதிர்த்து இக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளன.

இந் நிலையில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் கிடைத்த மாணவர்களிடம், ஆண்டுக் கல்வி கட்டணமாக ரூ.4,05,000 செலுத்துமாறு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. இதனால், கவுன்சலிங்கின்போது ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2.25 லட்சமாக இருக்கும் என எதிர்பார்த்து கோவை பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்த 65 மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

————————————————————————————————–

கொள்ளை போகும் உயர் கல்வி
குமுதம்
சாவித்திரி கண்ணன்
18.07.07 கவர் ஸ்டோரி

‘‘நீ பெரியவனாயிட்டா டாக்டராவியா? இன்ஜினீயராவியா?’’ என்று, நம் குழந்தைகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதோ இந்த இரண்டைத்தவிர அடையவேண்டிய உச்சம் வேறொன்றுமேயில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்த அபத்தத்தினால் உண்டான ஆபத்தாகத்தான் தமிழ்நாட்டில் தேனீர் கடைகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் பிறப்பெடுத்துக் கொண்டுள்ளன.

இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலேயே, தமிழ்நாட்டைப் போல் இவ்வளவு சிறிய நிலப்பரப்பிற்குள் 251 இன்ஜினீயரிங் கல்லூரிகள் கிடையாது. ‘ஆஹா எவ்வளவு வளர்ச்சி!’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள்! ஏனெனில், இதில் அரசு சார்ந்த 13 கல்லூரிகள்தான் உருப்படியாகச் செயல்படுகின்றன.

அடுத்ததாக சொல்ல வேண்டுமெனில், 238 சுயநிதிக்கல்லூரிகளில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான கல்லூரிகளையே வேலைவாய்ப்பு தரும் கல்வி நிலையங்கள் முதல் தர வரிசையில் அங்கீகரித்துள்ளன. அதாவது வருடாவருடம் வெளியேறும் 70,000 மாணவர்களில் சுமார் 10 சதவிகிதத்தினருக்குத்தான் சரியான வேலைக்கு உத்தரவாதமுள்ளது. ஆக இப்படியான கழிசடைக் கல்வியைத்தான் பெரும்பாலான சுயநிதிக்கல்லூரிகள் தந்து கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமெனில், நம்ம ரயில்வேயில் ‘கலாசி’ எனப்படும் கடைநிலை ஊழியர் பணிக்கு 2000 பேரைத் தேர்ந் தெடுக்க 2004_ல் ஒரு விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு 20,000 இன்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த லட்சணத்திலான கல்வியைப் பெறுவதற்காகத்தான் நமது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வீட்டையோ, நிலத்தையோ, நகைகளையோ விற்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வித்துறை வியாபாரமாகிவிட்டதே என்று சிலர் கோபப்படுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் வியாபாரம் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். ஒரு பொருளுக்குரிய விலை வைத்து விற்பனை செய்து, அதன் தரம், பயன்பாடு, நியாயமான விலை இவற்றில் வாங்குபவரை திருப்தியடைய வைப்பதே வியாபாரம். இந்த வகையில் பார்த்தால், சுயநிதிக் கல்லூரிகள் நடத்துவது வியாபாரமல்ல, சுரண்டல்.

அடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு, தகுதியற்ற ஆசிரியர்கள், மோசமான கல்வித்தரம்… போன்றவற்றோடு மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகள் குறித்த மக்களிடமுள்ள மாயையையே முதலீடாகக் கொள்கின்றன, சுயநிதிக் கல்லூரிகள்.

மாயைகளை உருவாக்குவதிலும், மாயைகளில் பலனடைவதிலும் வேறெவர்களையும் விட, அரசியல்வாதிகளே அதிக அனுகூலமடைகின்—றனர். இந்த வகையில் தமிழகத்தில் 1984_ல் தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கல்விச் சுரண்டலை கைகோர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ம.க. இதுவரை பார்ட்டனராகவில்லை. ஆகவேதான், ‘‘அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

கல்வி அமைச்சரும், முதல்வரும், ‘‘அடடா அப்படியா! எங்களுக்கொன்றும் புகார்கள் வரவில்லை. ஆதாரம் தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்கிறார்கள். எல்லோருக்கும் புரிந்த உண்மை, கல்வித்துறையை ‘பொன்’ முட்டையிடும் வாத்தாகப் புரிந்து வைத்திருக்கும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் புரியவில்லை… பாவம்!

‘ஆதாரம் திரட்டும் அருகதை ஆட்சி நடத்து பவர்களுக்கு இல்லையா?’ என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அன்றைய மன்னர்கள் மாறுவேஷமிட்டுச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டார்களாம். இன்றைய ஆட்சியாளர்களோ நிஜத்திலேயே வேஷம் போடுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி, பிரபல பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக கோட்டாவிற்கான அனைத்து இடங்களும் ஜனவரி, பிப்ரவரியிலேயே 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுவிட்டன.

மற்றொரு புறம் விலை போகாத கல்லூரிகளோ எஜிகேஷன் எக்ஸிபிஷன் நடத்தி, 80,000_தான். ஒரு லட்சம்தான். ஹாஸ்டல் வசதி இருக்கு. வாங்க வாங்க என்று கையைப் பிடித்திழுக்காத குறையாகக் கெஞ்சுகிறார்கள்.

நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் 32,500 முதல் 40,000 ரூபாய் வரைதான். எனில் தனியார் கல்லூரிகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எப்படி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்க முடிகிறது? பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை! இப்படி படித்துவிட்டு வருகிறவர்கள் நாளைக்கு மனிதாபிமானத்தையே விலை பேச மாட்டாங்களா?

1992_ல் கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் வந்தது. இதுவரை இதில் ஒரு கல்லூரி அதிபர்கூட கைதாகவில்லை.

இந்தச் சட்டம் ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள ஆயுதம் என்பது, அந்த அதிபர்களுக்கும் தெரியும். அதேசமயம் உரிய வர்களுக்கு பங்கு தரா விட்டால்தான் இது தங்கள் மீது பாயும் என்பதும் புரியும்.

‘‘அரசாங்கத்திற்கு புகார்கள் தந்ததால் கல்லூரியை விட்டே நீக்கப்பட்டவர்களையும், அர சிடமா புகார் செய்தாய் அபராதம் கட்டு என இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டி யலையும் தரட்டுமா என்கிறது இந்திய மாணவர்கள் சங்கம். இவ்வளவு ஏன்? தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் கொதித்துக் குமுறுகிற வகையில் இதுவரை கறை படியாதிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தையே இந்த ஆட்சி களங்கப்படுத்திவிட்டது. ‘ஸ்பெஷல் ஸ்கீம்’ என்று பகி ரங்கமாகவே 15 லட்சத்திற்கு இன்ஜினீயரிங் சீட்டை விற்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோல் 60 சீட்டுகள் அதிகார பூர்வமாக சில நிறுவனங்களுக்கு விற்றார்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது. ஏழை எளிய திறமையான மாணவர்களுக்கு கருணை காட்டவென ஒதுக்கப்பட்ட முதல்வர் கோட்டா, கவர்னர் கோட்டா வெல்லாம்கூட கல்விச் சந்தையில் காசாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன.

1948_ல் தாராசந்த் கமிட்டி தொடங்கி, சமீபத்திய ராமன் கமிட்டி சுப்பிரமணியன் கமிட்டி வரை எத்தனையோ கமிட்டிகள், என்னென்னவோ ஆய்வுகள், கட்டண வரைமுறைகள், அட்மிஷன் வரைமுறைகள், எந்த நியாயத்தை நாம் எடுத்துச் சொன்னாலும் நடைமுறையில் கேட்கப்படுகிற கட்டணத்தைக் கொட்டிக் கொடுக்க மக்கள் திரளின் ஒரு பகுதி தயாராக இருக்கிறது என்பதே நிதர்சனம். அப்படி கொட்டுபவர்கள் எங்கேயோ போய்கொட்டாமல் அரசாங்க கஜானாவிலேயே கொட்டிவிட்டுப் போகட்டுமே! மதுக்கடைகளை அரசாங்கமும், கல்வி நிலையங்களை தனியாரும் நடத்துவது அவலம், அநீதி.

மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள்கூட ஒரு கல்லூரி துவங்கி காசுபார்க்க முடியுமெனில் அரசாங்கம் மேலும் சில கல்லூரிகளை நடத்தினால் என்ன? வசதியானவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏற்றம் பெற பயன்படுத்தலாமே!

—————————————————————————————————————————-
சுயநிதி கல்லூரி இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்காமல் போகும் அபாயம்: ஜெயலலிதா எச்சரிக்கை

சென்னை, ஜூலை 25: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரி இடங்கள் இனி அரசு ஒதுக்கீட்டு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் தவறான உயர் கல்விக் கொள்கையால் இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன், சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை தேவையில்லை என்று சட்டம் இயற்றப்பட்டது.

ஒற்றைச் சாளர முறையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெறாத வகையில் உரிய முறையில் இச் சட்டம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை திமுக அரசு தற்போது கொண்டுவந்தது. அதன்படி சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில்தான் இருக்க வேண்டும்.

தமிழக அரசின் இச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சுயநிதிக் கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் செல்லாது என்று அறிவித்து இந்த கல்வி ஆண்டு மட்டும் இச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்க அனுமதி அளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் இக்கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை என்றும் அனைத்து இடங்களையும் அக் கல்லூரியே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கூறியது.

மொத்தம் உள்ள 240 சுயநிதி கல்லூரிகளில் 160 கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன் வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ள இக் ல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அதைத் தான் அக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு தர முன்வந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தர முன்வராத 80 கல்லூரிகள் மாணவர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய முன்னிலை கல்லூரிகளாகும்.

எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ளன எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தர முன்வரவில்லை என்பதை திமுக அரசு தெளிவுபடுத்தாத காரணத்தால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அரசின் அலட்சிய போக்காலும் முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டதாலும் சுய நிதி கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்து வந்த இடங்கள் அனைத்தும் இனிமேல் கிடைக்காது போகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
—————————————————————————————————————————-
ஏழை மாணவர்களின் நலனை கெடுக்க ஜெயலலிதா சூழ்ச்சி: பொன்முடி

சென்னை, ஜூலை 25: சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலிலதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் தவறான கொள்கையால் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை:

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 70 சதவீதமாகவும் அரசாங்க ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்தது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீத நிர்வாக ஒதுக்கீடும், அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் இருந்தது.

திமுக அரசு பொறுப்பேற்றதும் சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைப் போல சிறுபான்மை அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் ஒற்றைச் சாளர முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதற்கு சட்டம் கூட இயற்றப்படவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு ஒதுக்கீட்டை அதிகம் பெற்றதுடன் நிர்வாக ஒதுக்கீட்டையும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

மேலும் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இன்னமும் ஒப்புதல் பெறப்படவில்லை. அந்தச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் இதுவரை செய்யப்படவில்லை.

2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஒற்றைச் சாளர முறை தேவையில்லை என்று கூறியிருப்பதாகச் சொல்லும் ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா?

நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே இல்லை.

2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திலும் 2007-ம் ஆண்டைய சட்டத்திலும் சொல்லியிருப்பது ஒற்றைச் சாளர முறையே தவிர வேறு அல்ல.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

மாணவர்களின் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவரது கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கூட செய்யலாம்.

மேலும் இதுவரை உச்சநீதிமன்றம் பொறியியல் கல்லூரிகளுக்கு எவ்வித தடையாணையோ, தீர்ப்போ சொல்லாத நிலையில், சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு ஜெயலலிதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பொன்முடி.
—————————————————————————————————————————-

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி: ஜெயலலிதா குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 25: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது, மாணவர்கள் நலன் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களுடன் கூடிய பிரகடனத்தில் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் மற்ற தொழிற்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்ற வாசகம் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில விண்ணப்பித்து இடமும் பெற்றிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் சில வார்த்தைகள் உள் நோக்கத்துடன் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது பொறியியல் உள்ளிட்ட வேறு தொழில் கல்வி படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தது தவறு. பழைய நடைமுறைப்படியே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் உயர் நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றிருக்கிறார்கள். கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் இவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும். இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.

———————————————————————————————————————————
Monday November 26 2007

மக்களுக்காக மருத்துவம்சார் கல்வி

எஸ். மணிவாசகம்

மருத்துவத்தில் வியத்தகு சாதனை புரிந்து வரும் நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்விகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.

மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) போன்ற படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றளவும் உள்ளன.

தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அனைவராலும் முடிவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1545 இடங்களும், தனியார் கல்லூரிகள் 5-ல் மொத்தம் 420 இடங்களும் மட்டுமே உள்ளன.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவம், பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இயலாத மாணவர்கள் பயனடைவதற்கு ஏற்றவகையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை அதிக இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.

ஓராண்டு சான்றிதழ் படிப்புகள், 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்புகள் போன்றவற்றை உருவாக்கி ஏழை மாணவர்களும் மருத்தும் சார்ந்த கல்வி பயில வழிவகுக்க வேண்டும். இதற்கு ஏதுவாக பாடத்திட்டம், கல்விக் கட்டணம் அமைய வேண்டும். குறைந்தபட்சக் கல்வித்தகுதியையும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போதும் சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து மருத்துவம்சார் படிப்புகள் பயில்வதற்கு 27 சான்றிதழ், டிப்ளமோவும், தொலைதூரக் கல்வி முறையில் பயில்வதற்கு 12 சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை போதாது. இன்னும் பல படிப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

மருத்துவத் துறையில், செவிலியர், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், கண் மருத்துவம், மருந்து தயாரிப்பு, அறுவைச் சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பிசியோதெரபி தாய்மை மற்றும் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரித்தல், நரம்பியல் புற்றுநோய், இதய நோய், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரிழிவு நோய், சருமநோய் போன்ற பற்பல துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ பட்டப்படிப்புகள் தொடங்க தீவிரம் காட்ட வேண்டும்.

பல் மருத்துவத்தில் கூட, முகச்சீரமைப்பு, பல் உருவாக்குதல் மற்றும் பொருத்துதல், பல் நோய்களிலிருந்து விடுபடுதல், அறுவைச் சிகிச்சை தொழில் நுட்பங்கள், பல் நோயாளிகளைப் பராமரித்தல் போன்ற துறைகளில்கூட சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடலாம். மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறப்பான பணியும், ஊதியமும், வாழ்க்கை வசதியும், குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு அன்னிய மொழியை அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக அமையும்.

கிராமப்புறங்களில் சுகாதாரம் பேணவும், அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் கிராமப்புற மருத்துவப் பணியாளர்களையும் உதவியாளர்களையும் உருவாக்க வேண்டும்.

கிராமப்புறக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், தாய்மையடைந்தோர், குழந்தை பெற்றவர்கள், கண் நோயாளிகள், சரும நோய் உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் காச நோயாளிகள், வயதானோர், வறுமைக் கோட்டிற்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க உதவியாளர்கள் தேவை. இத்தகைய பணியாளர்களைத் தயார் செய்ய சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்புகள் தொடங்க வேண்டும்.

இந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. விரைவில் உலகிலேயே முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையை எட்டிவிடும். இந்த முதியவர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் உதவி செய்தல் வேண்டும்.

பிழைப்புக்காக தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, முதியவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களை நாடுகிறார்கள். இந்த முதியவர்களுக்காக, அவர்களின் கடைசி கால வாழ்க்கை சுகமாக இருக்க, முதியோர் காப்பகம் சம்பந்தமாக மருத்துவ ரீதியில் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை உருவாக்க சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற பல நோயாளிகள் தமிழகத்துக்கு வருகின்றனர். இதன்மூலம் தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது.

செவிலியர்களின் அன்னை, கைவிளக்கேந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பெயரில் செவிலியர் மற்றும் மருத்துவம் சார் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் தொடங்கி ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். செவிலியர் படிப்பில் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம்.

அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ அமைய வேண்டுமெனில் மருத்துவம்சார் அறிவியல் படிப்புகள் அவசியம்.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக எட்டமுடியாத மருத்துவ வசதிகளை இனியாவது ஏற்படுத்த வழிவகுக்க வேண்டும். இந்த நூற்றாண்டிலாவது அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ என்ற இலக்கை எட்ட மருத்துவ அறிஞர்களும், கல்வி நிலையங்களும், மத்திய, மாநில அரசுகளும், மருத்துவர்களும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இதற்கு மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகள் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

—————————————————————————————————————————-

“கிராமப்புற சேவை’யின் மறுபக்கம்

சி. கதிரவன்

இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள்தான். ஆனால், கிராமங்களில் வசிக்கும் 72 சதவீத மக்களுக்கு நாடி பிடித்துப் பார்க்க ஆளில்லை என்கிறது ஓர் ஆய்வு.

கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அண்மைக்காலமாக பெரிய அளவில் இந்த விஷயம் பேசப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால், பேச்சு ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

உண்மையில், கட்டாய கிராமப்புற மருத்துவ சேவையின் மறுபக்கம்தான் என்ன?

மருத்துவம் ஓர் இன்றியமையாத தேவை. மருத்துவக் கொள்கையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. பிரிட்டன் மருத்துவத் துறையைத் தன் முழுப் பொறுப்பில் வைத்திருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை மிகச் சிறப்பானது. பொது மருத்துவத்துக்கான மொத்தச் செலவில் அந்நாட்டு அரசு 94 சதவீதத்தை தானே செலவிடுகிறது.

அமெரிக்கக் கதையோ வேறு. காப்பீட்டுத் திட்டங்கள் சார்ந்த மருத்துவ சேவை அங்கு பின்பற்றப்படுவதால் அரசுக்கும், பொது மருத்துவத்துக்கும் கிட்டத்தட்ட தொடர்பே இல்லை.

நம் நிலைதான் பரிதாபத்துக்குரியது. மொத்த ஆண்டு வருவாயில் மத்திய அரசு 1.3 சதவீதமும், மாநில அரசு 5.5 சதவீதமுமே மருத்துவத்துக்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவை இரண்டும் மருத்துவத்துக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகையில் கால் பகுதியே ஆகும்.

இந்நிலையில், இந்திய மருத்துவத்துறை வேகமாக தனியார்மயமாகி வருகிறது. மக்கள்தொகைப்படி நமது நாட்டில் 40 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 14 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலிப் பணியிடங்கள். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகள் பேராசிரியர்கள் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பகத்தில் 15 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்து, வாய்ப்பின்மையால் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆயிரம் கிராமங்களில் மக்களின் நாடி பிடித்துப் பார்க்க மருத்துவர் இல்லாத நமது நாட்டில், நகரங்களை நோக்கிய தொலை மருத்துவ மையங்களின் வருகையின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மருத்துவத்தை அமெரிக்கப் பாணியில் முழுவதும் தனியார்மயமாக்குவதன் தொடக்கமே “கார்ப்பரேட் கிளினிக்குகள்’ நகரங்களை நோக்கி வருவதும் நகரங்களிலிருந்து மருத்துவ மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுவதும்.

கட்டாய கிராமப்புற சேவைத் திட்டம் என்றால் என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அந்த ஓர் ஆண்டில் 4 மாதம் ஆரம்பச் சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் என சுழற்சி முறையில் மாணவர்கள் பணியாற்றுவதுதான்.

இதில் முதல் முரண்பாடு என்னவென்றால், ஆண்டில் 8 மாதங்கள் கிராமப்புறம் அல்லாத இடங்களில் பணியாற்ற வைக்கப்படுவதுதான். இத்திட்டம் எப்படி கிராமப்புற சேவையாகும்?

உண்மை என்னவென்றால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைப் பெயரளவில் நிரப்பும் அரசின் குறுக்கு வழியே இது. உள்ளபடியே இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவத் துறையும் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நான்கு முறை நடைபெற்றது. இது இதுவரை மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும். இதில் முதலாமாண்டு மாணவர்களில் 131 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பை விட்டுவிட்டு மற்ற தொழிற்படிப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.

வேலூர், கன்னியாகுமரி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியையே பெற முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 21 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இதே நிலைதான். நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படும் தமிழகத்தின் நிலையே இது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கொண்டு வர முனையும் திட்டத்தை நாம் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. 2006-ல் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 800 மருத்துவர்களைப் பணி நியமனம் செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. அதற்கு 12,000 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதிலிருந்தே மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் தயங்குகிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

உள்ளபடியே கிராமப்புற மருத்துவ சேவைதான் அரசின் பிரதான நோக்கம் என்றால் அதற்குச் செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் நிறையவே இருக்கின்றன.

எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவுடன் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பட்ட மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். எந்தெந்த ஆரம்பச் சுகாதார நிலையங்ளுக்கு மருத்துவர்கள் இல்லையோ அப் பணியிடங்களுக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும்.

மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆரம்பச் சுகாதார மையங்களும் மக்கள்தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். தொடக்க நிலை சுகாதார மேம்பாட்டுக்கென கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் வாழ்வுரிமையைப்போல அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மருத்துவச் சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்து சட்டமியற்ற வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் மீது கட்டாய கிராமப்புற சேவையைத் திணிப்பது ஒன்றே இப்பிரச்னைக்குத் தீர்வு என திசை மாற்றுவதைவிடுத்து அரசு உண்மையாக, ஆக்கபூர்வமான செயலில் இறங்க வேண்டும்.

Posted in abuse, Admissions, ADMK, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Anna, Anniyan, Assets, BE, Bribes, BTech, Caste, Chemical, Chennai, Chettinaadu, Chettinadu, Civil, Coimbatore, Colleges, Combatore, Community, computers, Corruption, DMK, Doc, doctors, Donations, DOTE, ECE, Education, EEE, Electrical, Electronics, Engg, Engineering, Expense, Exploit, Gentleman, Healthcare, IIT, Instru, Instrumentation, Interest, kickbacks, Kovai, Kulasegaram, Kulasekaram, Kumudam, Kumudham, Loans, MBBS, MD, medical, MMC, Moogamibigai, Moogamibikai, Mookamibigai, Mookamibikai, Operation, Perundhurai, Perundurai, Perunthurai, PMK, Poor, professional, PSG, Quota, Ramadas, Ramadoss, Rates, RBI, REC, Rich, SBI, Schools, service, Shankar, Sivaji, Software, Students, Study, surgery, Technology, University, Wealthy | 2 Comments »